"ஆஹான் அப்படிலாம் தப்பிக்க முடியாது நீ... நான் ஊட்டி விடுறேன் மெல்ல எழுந்துக்கோ... வழமை போல சண்டே உனக்கு ரசம் செஞ்சு தரேன்... டெய்லி சாப்டா நைட்ல மூச்சு விட முடியலன்னு நீதான் கஷ்டபடுவ, இன்னைக்கு இத சாப்பிடு.." என்று அவருக்கு ஒவ்வொரு கவலமாய் ஊட்டி விட்டுக்கொண்டே பேசி கொண்டிருந்தாள்....
"டேய் அப்பு இங்க எல்லா வேலையும் முடிச்சிட்டு நானும் உன்கூடவே வந்துடவாடா..." என்று சொன்னது தன் தாத்தா தானா என அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..
"தாத்தா நிஜமாவா சொல்லுற..." என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்..
"ஆமாடா கண்ணா.. அந்த ரம்யா புள்ள பத்தி நீ சொன்னதும் தான் இந்த கிழவனுக்கு புத்தி வந்திருக்கு... என் குற்ற உணர்ச்சிக்கு உன்ன பழி ஆக்குனது எல்லாம் போதும், இனி என் மீதி வாழ்க்கைய இன்னொரு பெண்ணுக்காக வாழ போறேன்... இன்னும் எத்தனை நாள் எனக்கு இருக்குனு தெரியல.. இருக்குற வர உன்கூட தான்.."
"தாத்தா ஐ எம் சோ ஹாப்பி..." என்று சந்தோச கூச்சளிட்டவள் "தாத்தா இதுல உனக்கு முழு விருப்பம் தான எனக்காக ஒன்னும் சொல்லையே..." என்றாள்
"அந்த பாவி உன்ன ஏதும் பண்ணிடுவானோனு தான் சின்ன புள்ளைல உன்ன இங்க இருந்து அனுப்பி வெச்சேன்... இந்த நரகத்துல வாழுறது தான் எனக்கு தண்டனைனும் நினைச்சேன்.. ஆனா உனக்கு ஒரு துணையா உன்கூட இல்லாம போய்ட்டேனு இப்போ தோணுதுடா... உன் விருப்பப்படியே உன்கூடவே வறேன்... நாம போய்டலாம் இங்க இருந்து... எனக்கு இதுல முழு சம்மதம் தான்.." என்று அவர் சொல்லி முடிக்க அவள் கண்ணீலிருந்து கண்ணீர் உருண்டடியது....
எவ்வளவு நாள் ஏக்கம் அவளுடையது... சொந்தமே ஆனாலும் இன்னொருவர் வீட்டில் தங்குவது என்பது அத்தனை உவகையளிப்பதில்லையே... இத்தனைக்கும் அவள் சிறிய பாட்டி இவளுடன் பாசமாக தான் இருந்தார்... ஆனால் அவர் மருமகளுக்கு அது அத்தனை பிடித்தமில்லை என்பது அவர் நடத்தையிலேயே தெரிந்தது....
குறிப்பிட்ட வயது வரை வேறு வழியின்றி அங்கே இருந்தவள் பின்னர் தனியே தங்கிக்கொள்ள பழகிக்கொண்டாள்... அவர்கள் தடுத்தும் கேட்கவில்லை... தைரியமானவளாக வெளியே காட்டிக்கொண்டாலும் உள்மனம் ஒரு ஆதரவுக்காக ஏங்கி கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை... அதன் விளைவு படிப்பு முடித்ததும் விடுமுறைக்கு அவளை இந்தியா அழைத்து வந்திருந்தது... ஆனால் காலமோ அவளை மீண்டும் வலிக்க வைத்தே அனுப்பி இருந்தது..
"ஏண்டா அப்பு அழற.."
"சந்தோஷத்துல அழுறேன் தாத்தா.. டு த்ரீ வீக்ஸ்ல நாம இங்க இருந்து பறக்குறோம் ஓகேவா.." என்றவள் கைகளால் பறப்பது போல் செய்து காட்டினாள்.
"நீ இவ்வளவு சந்தோசபடுவனு எதிர் பாக்கலடாமா... உன்ன ரொம்ப ஏங்க வெச்சிட்டனோ... இந்த கிழவனுக்கு புரியிரமாதிரி சொல்லி இருக்கலாமேடா தங்கம்.."
"நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல உன் உணர்வுகளும் எனக்கு முக்கியம் தான தாத்தா..." என்றவள் அவர் முகம் சோகத்தில் வாடுவதை பொறுக்காமல் "ஓகே நாம இந்த ஹாப்பினஸ் செலிப்ரேட் பண்ணுவோம்... இந்த சாப்பாடு வேணா.. நான் உனக்கு காரம்சாரமா மிளகு ரசம் செஞ்சு தரேன்.. பட் இந்த சண்டே கட் ஓகேவா.." என்றவள் அவரும் சரி என்க இதோ மிளகு ரசத்துக்கு வேலை நடக்கிறது சமையலறையில்..
"கமலாம்மா முறைச்சது போதும் அந்த மிளக கொஞ்சம் எடுங்க.." என்றாள் அவரு முறுக்கிக்கொள்ள அவளே எடுத்துக்கொண்டாள்...
"ரொம்ப சந்தோசதோட மனசு நிறைஞ்சு தான் பண்ணுறேன்... எனக்கு கஷ்டமே இல்லை... இன்னைக்கு தாத்தாக்கு பண்ணி கொடுக்கணும்னு தோணுது பண்ண கூடாதா நானு?.."
"அச்சோ என்ன பாப்பா நீ... உன்ன கஷ்டபடுத்த கூடாதுனு தான் நானே பண்ணுறேன்னு சொன்னேன்... உன் சந்தோசம் இது தான்னா வேற என்ன வேணும் எனக்கு..."
அதன் பின்னர் வேலை சட்டென சூடு பிடித்தது... மிளகு ஒரு மேசை கரண்டி எடுத்துகொண்டவள் நன்றாக பொடியாக இடித்து அதில் தோல் உரிக்காத வெள்ளைப்பூடு ஒரு கையளவு சேர்த்து நசிந்தும் நசியாமலும் இடித்துக்கொண்டாள்.. அதை ஒரு அளவான பாத்திரத்துகுக்கு மாற்றி சிறியதுண்டு புலி சேர்த்து.. நெருப்பில் சுட்ட வரமிளகாய் மூன்றை கைகளால் சிறிது மசித்து அதனுள் சேர்த்து கெட்டியான தேங்காய் பாலும் தேவையான அளவு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது நேரத்தில் கொதி வருவதற்கு சற்று முன் ஆற்றி இறக்கி இருந்தாள்.... கமலாவிற்கு அந்த வாசனைக்கே எச்சில் ஊறியது...
அன்று சாப்பாடு ராஜய்யாவின் வயிற்றை மட்டுமல்ல மனதையும் குளிர்வித்தது எனலாம்... அவரது பாராட்டு மழையில் நனைந்தவள், மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்ததில் தனிமையை நாடி தோட்டம் பக்கம் சென்றாள்... அங்கோ தனிமைக்கு பதிலாக, அங்கு பூத்திருந்த மல்லிகை பந்தல் அவளுக்கு எப்போதும் போல அந்த ஞாபகத்தை அழைத்து கொண்டுவந்திருந்தது....
"மீண்டும் அவனை விட்டு மொத்தமாக செல்ல போகிறாயா?" என்ற கேள்வி மனதை வண்டாய் குடைந்தது... ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு... இறுதி முடிவாகவே இருக்கட்டுமே... மனம் அவனுக்காக இழகி என்னவாகிட போகிறது... வேண்டாம் என்று ஒதுக்கியது உறவு ஒதுக்கியதாகவே இருக்கட்டுமே என அதனை புரம் தள்ளியவள் பந்தலின் கீழ் அமர்ந்திருக்க மனதில் ஒரு வெறுமை படர்வதை தடுக்க முடியவில்லை.. ஒரு மனம் வேண்டவே வேண்டாம் என்கிறது.. இன்னொரு மனம் யோசித்து பார் என அவனுக்காக கருணை கொள்கிறது.. அவள் முடிவில் உறுதியாக தான் இருக்கிறாள்.. உறுதி உடையும் நாளும் என்றோ?..
சற்று முன் இருந்த சந்தோசம் காற்றில் பறந்து போய்விட்டதோ என்னவோ.. அவளிடம் ஒரு அசாத்திய அமைதி.. ஏற்கனவே வேண்டாம் என்பதற்கான காரணங்கள் இன்று வரை அப்படியே தான் இருந்தது.. அது இனிமேலும் மாறப்போவதும் இல்லை.. ஆனால் உள்ளதுக்கு புரிந்தும் புரியாமல் அடம் பிடிப்பதுதான் விந்தை.. என்னதான் எண்ணினாலும் இறுதியில் ஒரு நூலிழையிலேனும் சரி அவன் பக்கம் சாய்ந்து விடுகிறது அவள் முடிவுகள்.. இப்போதும் அப்படியே அவள் விரல்கள் தன்னால் அவன் இலக்கத்தை உயிர்பித்திருந்தது.. செல்லும் அழைப்புடன் தானும் சென்று விடுவோமா என தோன்ற, அந்த எண்ணதுக்கே தன்னை தானே நிந்தித்துக்கொண்டாள்.
அழைப்பு சென்று கொண்டிருந்ததே ஒழிய எடுக்கப்படும் அறிகுறிதான் அந்தப்பக்கம் தென்படவில்லை.. திடீரென சென்றுகொண்டிருந்த அழைப்பும் சட்டென்று துண்டிக்கப்பட்டுவிட இதை எதிர்பாக்காத அதிரல் எனும் வேதாலம் மீண்டும் முருங்கை மரம் ஏறிகொண்டது..
"இந்த அவமானம் தேவையா உனக்கு.. உன் பாட்டுக்கு வந்தோமா.. வேலைய முடிச்சோமா.. போனோமான்னு இரு.. இடையில இவனுக்கு இரக்கப்படுறேன்னு போய் மாட்டிக்காத.." என்று இவ்வளவு நேரம் அவனுக்காக பேசிய மனதை கிழியோ கிழி தான்.. அதுவும் " போயும் போயும் உனக்காக பேசினேனே" என்று நிலவனுக்கு நான்கைந்து நல்ல வார்த்தைகளில் திட்டி அதன் குமுறலை தேற்றி கொண்டது...
இனி மீண்டும் அதிரலை தரை இறக்குவதெல்லாம் நிலவன் சாமர்த்தியம்.. அவன் வாழ்வில் காதல் அதிகாரம் படைக்கும் போது கடவுள், நிறையவே கரடிகளையும் சேர்த்து படைத்து விட்டார் போலும்.. நொடிக்கொரு முறை ஸ்பீட் பிரேக்கில் தான் போய் முடிகிறது.. இந்த முறை புகழ் என்ற கரடியின் கைவண்ணம் தான் இந்த சிறப்பான காரியம்.. அப்படி என்ன தான் குரளிவித்தை செய்திருப்பானோ???
ஜாதி மல்லி மலரும்......
கருத்து திரி
"டேய் அப்பு இங்க எல்லா வேலையும் முடிச்சிட்டு நானும் உன்கூடவே வந்துடவாடா..." என்று சொன்னது தன் தாத்தா தானா என அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..
"தாத்தா நிஜமாவா சொல்லுற..." என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்..
"ஆமாடா கண்ணா.. அந்த ரம்யா புள்ள பத்தி நீ சொன்னதும் தான் இந்த கிழவனுக்கு புத்தி வந்திருக்கு... என் குற்ற உணர்ச்சிக்கு உன்ன பழி ஆக்குனது எல்லாம் போதும், இனி என் மீதி வாழ்க்கைய இன்னொரு பெண்ணுக்காக வாழ போறேன்... இன்னும் எத்தனை நாள் எனக்கு இருக்குனு தெரியல.. இருக்குற வர உன்கூட தான்.."
"தாத்தா ஐ எம் சோ ஹாப்பி..." என்று சந்தோச கூச்சளிட்டவள் "தாத்தா இதுல உனக்கு முழு விருப்பம் தான எனக்காக ஒன்னும் சொல்லையே..." என்றாள்
"அந்த பாவி உன்ன ஏதும் பண்ணிடுவானோனு தான் சின்ன புள்ளைல உன்ன இங்க இருந்து அனுப்பி வெச்சேன்... இந்த நரகத்துல வாழுறது தான் எனக்கு தண்டனைனும் நினைச்சேன்.. ஆனா உனக்கு ஒரு துணையா உன்கூட இல்லாம போய்ட்டேனு இப்போ தோணுதுடா... உன் விருப்பப்படியே உன்கூடவே வறேன்... நாம போய்டலாம் இங்க இருந்து... எனக்கு இதுல முழு சம்மதம் தான்.." என்று அவர் சொல்லி முடிக்க அவள் கண்ணீலிருந்து கண்ணீர் உருண்டடியது....
எவ்வளவு நாள் ஏக்கம் அவளுடையது... சொந்தமே ஆனாலும் இன்னொருவர் வீட்டில் தங்குவது என்பது அத்தனை உவகையளிப்பதில்லையே... இத்தனைக்கும் அவள் சிறிய பாட்டி இவளுடன் பாசமாக தான் இருந்தார்... ஆனால் அவர் மருமகளுக்கு அது அத்தனை பிடித்தமில்லை என்பது அவர் நடத்தையிலேயே தெரிந்தது....
குறிப்பிட்ட வயது வரை வேறு வழியின்றி அங்கே இருந்தவள் பின்னர் தனியே தங்கிக்கொள்ள பழகிக்கொண்டாள்... அவர்கள் தடுத்தும் கேட்கவில்லை... தைரியமானவளாக வெளியே காட்டிக்கொண்டாலும் உள்மனம் ஒரு ஆதரவுக்காக ஏங்கி கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை... அதன் விளைவு படிப்பு முடித்ததும் விடுமுறைக்கு அவளை இந்தியா அழைத்து வந்திருந்தது... ஆனால் காலமோ அவளை மீண்டும் வலிக்க வைத்தே அனுப்பி இருந்தது..
"ஏண்டா அப்பு அழற.."
"சந்தோஷத்துல அழுறேன் தாத்தா.. டு த்ரீ வீக்ஸ்ல நாம இங்க இருந்து பறக்குறோம் ஓகேவா.." என்றவள் கைகளால் பறப்பது போல் செய்து காட்டினாள்.
"நீ இவ்வளவு சந்தோசபடுவனு எதிர் பாக்கலடாமா... உன்ன ரொம்ப ஏங்க வெச்சிட்டனோ... இந்த கிழவனுக்கு புரியிரமாதிரி சொல்லி இருக்கலாமேடா தங்கம்.."
"நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல உன் உணர்வுகளும் எனக்கு முக்கியம் தான தாத்தா..." என்றவள் அவர் முகம் சோகத்தில் வாடுவதை பொறுக்காமல் "ஓகே நாம இந்த ஹாப்பினஸ் செலிப்ரேட் பண்ணுவோம்... இந்த சாப்பாடு வேணா.. நான் உனக்கு காரம்சாரமா மிளகு ரசம் செஞ்சு தரேன்.. பட் இந்த சண்டே கட் ஓகேவா.." என்றவள் அவரும் சரி என்க இதோ மிளகு ரசத்துக்கு வேலை நடக்கிறது சமையலறையில்..
"கமலாம்மா முறைச்சது போதும் அந்த மிளக கொஞ்சம் எடுங்க.." என்றாள் அவரு முறுக்கிக்கொள்ள அவளே எடுத்துக்கொண்டாள்...
"ரொம்ப சந்தோசதோட மனசு நிறைஞ்சு தான் பண்ணுறேன்... எனக்கு கஷ்டமே இல்லை... இன்னைக்கு தாத்தாக்கு பண்ணி கொடுக்கணும்னு தோணுது பண்ண கூடாதா நானு?.."
"அச்சோ என்ன பாப்பா நீ... உன்ன கஷ்டபடுத்த கூடாதுனு தான் நானே பண்ணுறேன்னு சொன்னேன்... உன் சந்தோசம் இது தான்னா வேற என்ன வேணும் எனக்கு..."
அதன் பின்னர் வேலை சட்டென சூடு பிடித்தது... மிளகு ஒரு மேசை கரண்டி எடுத்துகொண்டவள் நன்றாக பொடியாக இடித்து அதில் தோல் உரிக்காத வெள்ளைப்பூடு ஒரு கையளவு சேர்த்து நசிந்தும் நசியாமலும் இடித்துக்கொண்டாள்.. அதை ஒரு அளவான பாத்திரத்துகுக்கு மாற்றி சிறியதுண்டு புலி சேர்த்து.. நெருப்பில் சுட்ட வரமிளகாய் மூன்றை கைகளால் சிறிது மசித்து அதனுள் சேர்த்து கெட்டியான தேங்காய் பாலும் தேவையான அளவு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது நேரத்தில் கொதி வருவதற்கு சற்று முன் ஆற்றி இறக்கி இருந்தாள்.... கமலாவிற்கு அந்த வாசனைக்கே எச்சில் ஊறியது...
அன்று சாப்பாடு ராஜய்யாவின் வயிற்றை மட்டுமல்ல மனதையும் குளிர்வித்தது எனலாம்... அவரது பாராட்டு மழையில் நனைந்தவள், மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்ததில் தனிமையை நாடி தோட்டம் பக்கம் சென்றாள்... அங்கோ தனிமைக்கு பதிலாக, அங்கு பூத்திருந்த மல்லிகை பந்தல் அவளுக்கு எப்போதும் போல அந்த ஞாபகத்தை அழைத்து கொண்டுவந்திருந்தது....
"மீண்டும் அவனை விட்டு மொத்தமாக செல்ல போகிறாயா?" என்ற கேள்வி மனதை வண்டாய் குடைந்தது... ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு... இறுதி முடிவாகவே இருக்கட்டுமே... மனம் அவனுக்காக இழகி என்னவாகிட போகிறது... வேண்டாம் என்று ஒதுக்கியது உறவு ஒதுக்கியதாகவே இருக்கட்டுமே என அதனை புரம் தள்ளியவள் பந்தலின் கீழ் அமர்ந்திருக்க மனதில் ஒரு வெறுமை படர்வதை தடுக்க முடியவில்லை.. ஒரு மனம் வேண்டவே வேண்டாம் என்கிறது.. இன்னொரு மனம் யோசித்து பார் என அவனுக்காக கருணை கொள்கிறது.. அவள் முடிவில் உறுதியாக தான் இருக்கிறாள்.. உறுதி உடையும் நாளும் என்றோ?..
சற்று முன் இருந்த சந்தோசம் காற்றில் பறந்து போய்விட்டதோ என்னவோ.. அவளிடம் ஒரு அசாத்திய அமைதி.. ஏற்கனவே வேண்டாம் என்பதற்கான காரணங்கள் இன்று வரை அப்படியே தான் இருந்தது.. அது இனிமேலும் மாறப்போவதும் இல்லை.. ஆனால் உள்ளதுக்கு புரிந்தும் புரியாமல் அடம் பிடிப்பதுதான் விந்தை.. என்னதான் எண்ணினாலும் இறுதியில் ஒரு நூலிழையிலேனும் சரி அவன் பக்கம் சாய்ந்து விடுகிறது அவள் முடிவுகள்.. இப்போதும் அப்படியே அவள் விரல்கள் தன்னால் அவன் இலக்கத்தை உயிர்பித்திருந்தது.. செல்லும் அழைப்புடன் தானும் சென்று விடுவோமா என தோன்ற, அந்த எண்ணதுக்கே தன்னை தானே நிந்தித்துக்கொண்டாள்.
அழைப்பு சென்று கொண்டிருந்ததே ஒழிய எடுக்கப்படும் அறிகுறிதான் அந்தப்பக்கம் தென்படவில்லை.. திடீரென சென்றுகொண்டிருந்த அழைப்பும் சட்டென்று துண்டிக்கப்பட்டுவிட இதை எதிர்பாக்காத அதிரல் எனும் வேதாலம் மீண்டும் முருங்கை மரம் ஏறிகொண்டது..
"இந்த அவமானம் தேவையா உனக்கு.. உன் பாட்டுக்கு வந்தோமா.. வேலைய முடிச்சோமா.. போனோமான்னு இரு.. இடையில இவனுக்கு இரக்கப்படுறேன்னு போய் மாட்டிக்காத.." என்று இவ்வளவு நேரம் அவனுக்காக பேசிய மனதை கிழியோ கிழி தான்.. அதுவும் " போயும் போயும் உனக்காக பேசினேனே" என்று நிலவனுக்கு நான்கைந்து நல்ல வார்த்தைகளில் திட்டி அதன் குமுறலை தேற்றி கொண்டது...
இனி மீண்டும் அதிரலை தரை இறக்குவதெல்லாம் நிலவன் சாமர்த்தியம்.. அவன் வாழ்வில் காதல் அதிகாரம் படைக்கும் போது கடவுள், நிறையவே கரடிகளையும் சேர்த்து படைத்து விட்டார் போலும்.. நொடிக்கொரு முறை ஸ்பீட் பிரேக்கில் தான் போய் முடிகிறது.. இந்த முறை புகழ் என்ற கரடியின் கைவண்ணம் தான் இந்த சிறப்பான காரியம்.. அப்படி என்ன தான் குரளிவித்தை செய்திருப்பானோ???
ஜாதி மல்லி மலரும்......
கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
aadvikapommunovels.com
Last edited: