"மாமா... பேசணும்னு சொல்லிட்டு ரொம்ப நேரமா சைலன்டாவே இருக்கீங்களே... ஏதாச்சும் பிரச்சனையா மாமா....."
"ம்ம்ம்ம்... பிரச்சனை தான்.... நான் சொல்ல போறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா நீங்க என் நிலைமைய புரிஞ்சிக்கணும்.... என் பொண்ண விட்டு நீங்க விலகணும்.... நான் சொல்லுறது தப்புனு எனக்கு நல்லாவே தெரியும்... இருந்தாலும் ஒரு அப்பனா எனக்கு இது தான் சரின்னு படுது....
"மாமா"
"முதல்ல நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன் அப்பறம் நீங்க பேசுங்க ப்ளீஸ்...."
"ம்ம்ம்ம் சொல்லுங்க...."
"எந்த அப்பனும் தன் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தான எதிர்பாப்பான்... அதே போல தான் நானும் எனக்கிருக்குறது ஒரே பொண்ணு... அவள என்ன விட நல்லா பாத்துக்குற மாப்பிள்ளைக்கு தான கட்டி வைக்க ஆசைப்படுவேன்.... குறைஞ்சது என் அளவுக்கு பாத்துக்குற மாப்பிளையாச்சும் தேட மாட்டேனா.... நீங்க நல்லா பாத்துக்க மாட்டீங்கனு நான் சொல்ல வரல.... உங்க மேல எந்த முன் கோபமும் எனக்கில்லை நீங்க புரிஞ்சிக்கணும்...." என்றார் தான் சொல்லுவதை அவன் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன்
"எனக்கு புரியுது மாமா நீங்க மேல சொல்லுங்க...." என்றவனின் குரலில் இருந்த கோபத்தை அவர் உணரவே செய்தார்...."
"நீங்களும் உழைக்கிறீங்க தான் நான் இல்லனு சொல்லல... ஆனா என் பொண்ண என் அளவுக்கு பாத்துக்க அது போதுமான்னா இல்லைனு தான் நான் சொல்லுவேன்.... எனக்கு என் பொண்ணு நல்லா வாழனும் அவ்வளவு தான்... எப்போவுமே அவ எதுக்குமே கையேந்தி நிக்குற நிலைமை வர கூடாது... அவ ஆசைப்படுறது அவ யோசிக்கிறதுக்கு முதலே அவளுக்கு கிடைச்சிருக்கணும்னு நினைக்கிற அப்பா நான்.... உங்க மேலயோ உங்க குடும்பம் மேலயோ எனக்கு எந்த கோபமும் இல்ல... சப்போஸ் நிலவனுக்கு என் பொண்ண பேசுறதா இருந்தா நான் சந்தோசமா கட்டி குடுத்திருப்பேன்...." என்று பேசிக்கொண்டு போனவரின் பேச்சு அப்படியே நின்றது... காரணம் அவன் கோபம் கையில் இருந்த கிளாசை நொறுக்கி இருந்தது... கோபத்தை அடக்க கிளாசை பிடித்தவன் கடைசி வசனத்தில் அதை சுக்குனூறாக்கி இருந்தான்.... கையில் இரத்தம் வடிவது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை... ஆனால் இதயத்தில் யாரோ உளி கொண்டு அடித்தது போல் வலித்தது....
"ஐயோ ரத்தம் வருது மாப்பிள.... நான் அந்த அர்த்தத்துல சொல்லல... என்னவோ எண்ணத்துல சொன்னது உங்களுக்கு வேறமாதிரி அர்த்தம் தந்துடிச்சு.... வாங்க ஹாஸ்பிடல் போவோம்...."
"இட்ஸ் ஓகே மாமா... நோ நீட்.... உங்க மனநிலைய நீங்க சொல்லிடீங்க.... உங்க பொண்ணு நீங்க யோசிக்கிறது தப்புனு நான் சொல்ல மாட்டேன்.... ஆனா அவளுக்கும் ஒரு மனசு இருக்குனு நீங்க புரிஞ்சிக்கணும்.... அதுல எப்போவும் நான் மட்டும் தான் இருப்பேன்.... இது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல.... எங்களோட நேசம் ஆரம்பிச்சது இப்போனு இல்ல மாமா.... காசு பணம் ஒன்னும் அறியாத காலத்துலயே வளந்தது எங்க காதல்... எங்க காதலுக்குள்ள நீங்க இல்ல யாராலயும் நுழையவே முடியாது..."
"என் மனசுல அவ காதலியா இல்லை மனைவியா தான் இருக்கா... அப்படித்தான் அவளுக்கும்.... என்ன விட யாரோடவும் உங்க பொண்ணு வாழவும் மாட்டா.... நானும் அவள யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டேன்.... இத நான் கர்வமாவே சொல்லுவேன்.... எத்தன ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உங்க மாப்பிள... நீங்க தான் என் மாமா.... நீங்க இந்த விஷயத்தை அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல.... நாங்க வாழுறத பாத்தா நீங்க உங்க எண்ணத்தயே மாத்துவீங்க அதுக்கு நான் கேரண்டி... நீங்க பேசினது முடிஞ்சிதுனா கிளம்புவோம் மாமா..."
"மாப்பிளை இந்த விஷயம் என் பொண்ணுக்கு...."
"அவளா கேக்காம நான் சொல்லமாட்டேன் மாமா... என்ன நம்பலாம் நீங்க..." என்றவன் அங்கிருந்து அவருடன் கிளம்பிவிட்டான்....
அவன் சொல்லி முடிக்கவும் அங்கு பெரிய அமைதி... அவன் உள்ளங்கை காயத்தை வருடியபடி அங்கு நிலவிய அமைதியை உடைத்தவள்... "அதெப்படி நான் கேப்பேன்னு உனக்கு தெரியும்..." என்றாள் லேசாக குணமடைந்திருந்த அவன் காயத்தில் முத்தமிட்டு அவனை அணைத்து கொண்டவாறு...
"தெரியும்... தட்ஸ் இட்..."
"அதான் எப்படி..."
"அடியேய்... எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கேன்... அதெல்லாம் கேக்காம இத ஏன் டி கேக்குற...."
"அதெல்லாம் எதுக்கு... நீதான் என் அப்பா கேட்ட எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிட்டியே அப்பறம் என்ன?.. எனக்கு தேவை இல்லாத நான் எதுக்கு கேக்கணும்...."
"நீ இருக்கியே... உன்ன திருப்பி திருப்பி டீப்பா லவ் பண்ண வெச்சிட்டே இருக்கடி..." என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்..
"லவ் பண்றியா என்ன? எனக்கொன்னும் அப்படி தெரியலையே... லவ் பண்றவர் தான் ரெண்டு நாள் என்கூட பேசாம இருந்தாராக்கும்.."
"அது ஒரு மாதிரி டென்ஷன் ஆகிடிச்சு செல்ல குட்டி.. அப்பவே உன்ன பாத்திருந்தேன்னு வெச்சிக்கோ இப்போ பண்ண மாதிரி, ஏன் அதையும் விட ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணி இருப்பேன்... அப்பறம் கல்யாணத்துக்கு முன்ன வளைகாப்பு பண்ணவேண்டி இருந்திருக்கும்... அப்பறம் உன் அப்பாவ யோசிச்சு பாரு...."
"பண்ணுவீங்க பண்ணுவீங்க ஆளையும் மூஞ்சயும் பாரு... ஒரு கிஸ் வாங்குறதுக்குள்ள நான் படுற பா...." என்று பேசிக்கொண்டுபோனவளின் மீதி வார்த்தைகள் அவன் இதழுக்குள் புதைந்து கொண்டது... சிறிது நேரத்தின் பின் அவனிடம் இருந்து விலகியவள்
"அதிசயம் எல்லாம் நடக்குது..."
"என் ஆள் என் உரிமை...."
"அது சரி.... அந்த கவிதா உன் மேல ஒரு கண்ணாவே திரியிறா... உன் கண்ணு சும்மாவும் அவ பக்கம் திரும்பிச்சு..."
"அடியேய் டவல விடுடி... நான் ஏண்டி அவள பாக்கபோறேன்..."
"நானும் பாக்குறேன் இவ்வளவு நடந்தும் எப்படி இந்த டவல் ஸ்ட்ரோங்கா அவிலாமலே இருக்கு...."
"ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான்டி... முதல்ல படிச்சு டிகிரி வாங்குற வழிய பாரு...."
"டிகிரி வாங்குறத பத்தி பேசு ஆனா படிச்சுனு ஒரு வார்த்தைய சொருகாத... அதெல்லாம் என் பாட்னர் பாத்துக்குவான்... முதல்ல ஒழுங்கா டிரஸ போடுங்க வாத்தியாரே..... வரட்டா...." என்றவள் ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டாள்... போகும் அவளையே பார்த்தவன் கண்களில் மித மிஞ்சிய காதலே கொட்டிகிடந்தது.....
ஜாதி மல்லி மலரும்....
கருத்து திரி
"ம்ம்ம்ம்... பிரச்சனை தான்.... நான் சொல்ல போறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா நீங்க என் நிலைமைய புரிஞ்சிக்கணும்.... என் பொண்ண விட்டு நீங்க விலகணும்.... நான் சொல்லுறது தப்புனு எனக்கு நல்லாவே தெரியும்... இருந்தாலும் ஒரு அப்பனா எனக்கு இது தான் சரின்னு படுது....
"மாமா"
"முதல்ல நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன் அப்பறம் நீங்க பேசுங்க ப்ளீஸ்...."
"ம்ம்ம்ம் சொல்லுங்க...."
"எந்த அப்பனும் தன் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தான எதிர்பாப்பான்... அதே போல தான் நானும் எனக்கிருக்குறது ஒரே பொண்ணு... அவள என்ன விட நல்லா பாத்துக்குற மாப்பிள்ளைக்கு தான கட்டி வைக்க ஆசைப்படுவேன்.... குறைஞ்சது என் அளவுக்கு பாத்துக்குற மாப்பிளையாச்சும் தேட மாட்டேனா.... நீங்க நல்லா பாத்துக்க மாட்டீங்கனு நான் சொல்ல வரல.... உங்க மேல எந்த முன் கோபமும் எனக்கில்லை நீங்க புரிஞ்சிக்கணும்...." என்றார் தான் சொல்லுவதை அவன் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன்
"எனக்கு புரியுது மாமா நீங்க மேல சொல்லுங்க...." என்றவனின் குரலில் இருந்த கோபத்தை அவர் உணரவே செய்தார்...."
"நீங்களும் உழைக்கிறீங்க தான் நான் இல்லனு சொல்லல... ஆனா என் பொண்ண என் அளவுக்கு பாத்துக்க அது போதுமான்னா இல்லைனு தான் நான் சொல்லுவேன்.... எனக்கு என் பொண்ணு நல்லா வாழனும் அவ்வளவு தான்... எப்போவுமே அவ எதுக்குமே கையேந்தி நிக்குற நிலைமை வர கூடாது... அவ ஆசைப்படுறது அவ யோசிக்கிறதுக்கு முதலே அவளுக்கு கிடைச்சிருக்கணும்னு நினைக்கிற அப்பா நான்.... உங்க மேலயோ உங்க குடும்பம் மேலயோ எனக்கு எந்த கோபமும் இல்ல... சப்போஸ் நிலவனுக்கு என் பொண்ண பேசுறதா இருந்தா நான் சந்தோசமா கட்டி குடுத்திருப்பேன்...." என்று பேசிக்கொண்டு போனவரின் பேச்சு அப்படியே நின்றது... காரணம் அவன் கோபம் கையில் இருந்த கிளாசை நொறுக்கி இருந்தது... கோபத்தை அடக்க கிளாசை பிடித்தவன் கடைசி வசனத்தில் அதை சுக்குனூறாக்கி இருந்தான்.... கையில் இரத்தம் வடிவது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை... ஆனால் இதயத்தில் யாரோ உளி கொண்டு அடித்தது போல் வலித்தது....
"ஐயோ ரத்தம் வருது மாப்பிள.... நான் அந்த அர்த்தத்துல சொல்லல... என்னவோ எண்ணத்துல சொன்னது உங்களுக்கு வேறமாதிரி அர்த்தம் தந்துடிச்சு.... வாங்க ஹாஸ்பிடல் போவோம்...."
"இட்ஸ் ஓகே மாமா... நோ நீட்.... உங்க மனநிலைய நீங்க சொல்லிடீங்க.... உங்க பொண்ணு நீங்க யோசிக்கிறது தப்புனு நான் சொல்ல மாட்டேன்.... ஆனா அவளுக்கும் ஒரு மனசு இருக்குனு நீங்க புரிஞ்சிக்கணும்.... அதுல எப்போவும் நான் மட்டும் தான் இருப்பேன்.... இது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல.... எங்களோட நேசம் ஆரம்பிச்சது இப்போனு இல்ல மாமா.... காசு பணம் ஒன்னும் அறியாத காலத்துலயே வளந்தது எங்க காதல்... எங்க காதலுக்குள்ள நீங்க இல்ல யாராலயும் நுழையவே முடியாது..."
"என் மனசுல அவ காதலியா இல்லை மனைவியா தான் இருக்கா... அப்படித்தான் அவளுக்கும்.... என்ன விட யாரோடவும் உங்க பொண்ணு வாழவும் மாட்டா.... நானும் அவள யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டேன்.... இத நான் கர்வமாவே சொல்லுவேன்.... எத்தன ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உங்க மாப்பிள... நீங்க தான் என் மாமா.... நீங்க இந்த விஷயத்தை அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல.... நாங்க வாழுறத பாத்தா நீங்க உங்க எண்ணத்தயே மாத்துவீங்க அதுக்கு நான் கேரண்டி... நீங்க பேசினது முடிஞ்சிதுனா கிளம்புவோம் மாமா..."
"மாப்பிளை இந்த விஷயம் என் பொண்ணுக்கு...."
"அவளா கேக்காம நான் சொல்லமாட்டேன் மாமா... என்ன நம்பலாம் நீங்க..." என்றவன் அங்கிருந்து அவருடன் கிளம்பிவிட்டான்....
அவன் சொல்லி முடிக்கவும் அங்கு பெரிய அமைதி... அவன் உள்ளங்கை காயத்தை வருடியபடி அங்கு நிலவிய அமைதியை உடைத்தவள்... "அதெப்படி நான் கேப்பேன்னு உனக்கு தெரியும்..." என்றாள் லேசாக குணமடைந்திருந்த அவன் காயத்தில் முத்தமிட்டு அவனை அணைத்து கொண்டவாறு...
"தெரியும்... தட்ஸ் இட்..."
"அதான் எப்படி..."
"அடியேய்... எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கேன்... அதெல்லாம் கேக்காம இத ஏன் டி கேக்குற...."
"அதெல்லாம் எதுக்கு... நீதான் என் அப்பா கேட்ட எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிட்டியே அப்பறம் என்ன?.. எனக்கு தேவை இல்லாத நான் எதுக்கு கேக்கணும்...."
"நீ இருக்கியே... உன்ன திருப்பி திருப்பி டீப்பா லவ் பண்ண வெச்சிட்டே இருக்கடி..." என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்..
"லவ் பண்றியா என்ன? எனக்கொன்னும் அப்படி தெரியலையே... லவ் பண்றவர் தான் ரெண்டு நாள் என்கூட பேசாம இருந்தாராக்கும்.."
"அது ஒரு மாதிரி டென்ஷன் ஆகிடிச்சு செல்ல குட்டி.. அப்பவே உன்ன பாத்திருந்தேன்னு வெச்சிக்கோ இப்போ பண்ண மாதிரி, ஏன் அதையும் விட ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணி இருப்பேன்... அப்பறம் கல்யாணத்துக்கு முன்ன வளைகாப்பு பண்ணவேண்டி இருந்திருக்கும்... அப்பறம் உன் அப்பாவ யோசிச்சு பாரு...."
"பண்ணுவீங்க பண்ணுவீங்க ஆளையும் மூஞ்சயும் பாரு... ஒரு கிஸ் வாங்குறதுக்குள்ள நான் படுற பா...." என்று பேசிக்கொண்டுபோனவளின் மீதி வார்த்தைகள் அவன் இதழுக்குள் புதைந்து கொண்டது... சிறிது நேரத்தின் பின் அவனிடம் இருந்து விலகியவள்
"அதிசயம் எல்லாம் நடக்குது..."
"என் ஆள் என் உரிமை...."
"அது சரி.... அந்த கவிதா உன் மேல ஒரு கண்ணாவே திரியிறா... உன் கண்ணு சும்மாவும் அவ பக்கம் திரும்பிச்சு..."
"அடியேய் டவல விடுடி... நான் ஏண்டி அவள பாக்கபோறேன்..."
"நானும் பாக்குறேன் இவ்வளவு நடந்தும் எப்படி இந்த டவல் ஸ்ட்ரோங்கா அவிலாமலே இருக்கு...."
"ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான்டி... முதல்ல படிச்சு டிகிரி வாங்குற வழிய பாரு...."
"டிகிரி வாங்குறத பத்தி பேசு ஆனா படிச்சுனு ஒரு வார்த்தைய சொருகாத... அதெல்லாம் என் பாட்னர் பாத்துக்குவான்... முதல்ல ஒழுங்கா டிரஸ போடுங்க வாத்தியாரே..... வரட்டா...." என்றவள் ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டாள்... போகும் அவளையே பார்த்தவன் கண்களில் மித மிஞ்சிய காதலே கொட்டிகிடந்தது.....
ஜாதி மல்லி மலரும்....
கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
aadvikapommunovels.com
Last edited: