ஜாதி மல்லி பூ 31
நள்ளிரவையும் தாண்டி விட்டது ஆனால் இன்னும் பெண்கள் கூட்டம் அரட்டையை முடித்த பாடில்லை... பேச்சின் இடையிலே ரம்யாவும் வர்ஷியும் தூங்கி இருந்தனர்..
"கீதா.. என்னமா யோசனை.. நாளைக்கு நைட் சடங்குல ஏதாச்சும் டவுட் இருந்தா கேளு.. அக்கா நான் எதுக்கு இருக்கேன்..." என்றாள் பூஜா..
"டவுட்டா எனக்கா நெவர்.. கிளாஸ்ல பிரீயா இருக்கும்போது என்ன பண்ணுவோம்னு நினைக்கிற.. டவுட் எல்லாம் கிளீயர் பண்றது தான் வேலையே.." என்று அவள் கண்ணடித்து சொன்னதில் ஆரவாரம் தான் அங்கே..
"ஸ்ஸ்ஸ் மெதுவாடி.. இருந்தாலும் ரொம்ப முன்னேற்றம் தான்... இப்ப உள்ள டுகே கிட்ஸ நம்பவே முடியாது... வெரி டேன்ஜரஸ்" என்று பூஜா சொல்ல
அங்கிருந்த இன்னொரு உறவுக்கார பெண்ணோ "அப்போ ஏன் மேடம் மேடைல வெக்கப்பட்டீங்களாம்?..." என்று கீதாவை வார..
"வெக்கம் அது வேற டிபார்ட்மென்ட்..." என்று அவள் கெத்தாய் சொன்னதில் நான்கைந்து அடிகள் விழ, அங்கே குட்டி கலவரமே உருவானது...
அதிரலோ இது எதிலும் கலந்து கொல்லாமல் ஜன்னல் அருகே நின்றிருந்தாள்.. அப்போது தான் அதனை அவதானித்த பூஜா அவள் அருகில் சென்றாள்...
"என்ன அதி இங்க தனியா நிக்கிற.. வா அங்க பேசிட்டு இருப்போம்.."
"நோ பூஜா நீங்க பேசுங்க.. நான் இங்க நிக்கிறேன்.." என்று அவள் மறுக்க..
"ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் அதி.. நிலவன் பண்றது எனக்கே கொஞ்சம் ஓவர் போல தான் தோணுது... பட் அவன் பண்ணுனா கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்.. அதுவும் உன்ன அவொய்ட் பண்றான்னா நீயே யோசிச்சிக்க.." என்று சொல்ல
அதிரலோ சிரித்தபடி "ஐ நோ ஹிம் பூஜா.. பட் அவன் என்ன அவொய்ட் பண்றது என்ன விட அதிகமா அவன தான் ஹேர்ட் பண்ணும்.. அது தான் எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு.."
"போய் பேசு அதி.. விடிஞ்சா கல்யாணம்.. இப்பவும் மாப்பிள்ளை முறுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்.. ரெண்டு அடி போடு வழிக்கு வரட்டும்..."
"எப்படி பூஜா போறது.. வெளிய அத்தன பேர் இருக்காங்க.." என்றவள் உதட்டை வளைக்க
"நாங்க எதுக்கு இருக்கோம்.. உன்ன பாட்னர் கூட பேச வைக்கிறது என் பொறுப்பு அதி..." என்றாள் பின்னால் இருந்து கீதா..
"ஆக இங்க பேசுறத ஒட்டுக்கேட்டுட்டு இருந்திருக்க கழுத.." என்று பூஜா அவள் காதை திருக..
"ஹீஹீ இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.. நானும் என் மாமா கூட பேசணும்.. சோ ஹெல்ப்க்கு ஹெல்ப் சரியா போகும்ல அந்த ஒரு நல்ல எண்ணம் தான்.."
"அதுசரி இப்போ எப்படி இத்தனை பேர தாண்டி போறது.." என்ற பூஜா லேசாக கதவை திறந்து ஹாலை எட்டி பார்க்க.. சிலர் தூங்கி இருக்க, சிலர் இன்னும் கதை பேசி கொண்டு தான் இருந்தனர்... கல்யாண வீட்டில் பேச்சுக்கா பஞ்சம்...
"இந்த பெருசு எல்லாம் கத பேசலனு யார் அழுதா.." என்று தலையில் அடித்துக்கொள்ள
"வயசானவங்க தான பேசிட்டு இருக்காங்க.. நம்ம போறது தெரியவா போகுது.. சத்தம் போடாம போயிட்டு வந்துடவா?..." என்ற அதிரலை அங்கிருந்தவர்கள் அப்பாவி போல பார்க்க..
"ஏன் என்னாச்சு.." என்றாள் புரியாமல்..
"நீ அவங்கள என்ன நினச்ச.. வயசானவங்க தான பார்க்க மாட்டாங்கனா?... எல்லாம் சிசிடிவி கேமராவையும் மிஞ்சின ஆட்கள்.. பார்க்காத மாதிரி தான் இருக்கும் ஆனா கண்ணு எல்லா பக்கமும் இருக்கும்... காது கேக்காத போல தான் இருக்கும். ஆனா நம்ம நடக்குற சத்தம் கூட கிரிஸ்டல் கிளீயரா கேட்கும்... அத்தனைக்கும் மேல அம்புட்டும் சோசியல் மீடியாவ விட பவர்புல் லேடீஸ்.. நாம இப்படிக்கா போய் வரதுக்குள்ள இங்க எல்லாருக்கும் விஷயம் பரவிடும்.." என்றாள் கீதா ஏதோ தீவிரவாதியை விபரிப்பது போல.. அவள் சொன்ன விதத்தில் அதிரலுக்கு சிரிப்பு வரவே செய்தது...
"ஓகே இதான் பிளான்.. நானும் ஹேமாவும் கிட்சனுக்கு தண்ணி எடுக்க போறோம்... அப்போ சிசிடிவி கேமரா எல்லாம் எங்கள போகஸ் பண்ணும்.. அந்த நேரம் நீயும் கீதாவும் அந்த பக்கம் போய்டணும்..." என்று அதிரலிடம் பூஜா சொல்ல.. அவளும் சரி என்பதாய் பெருவிரலை உயர்த்தி காட்டி இருந்தாள்...
"அப்போ நாங்க என்ன பண்றது.." என்று உள்ளே மிச்சமாய் இருந்த பெண்களில் ஒருத்தி ஆர்வமாய் கேட்க..
பூஜாவோ தலையில் கை வைத்தபடி "உங்கள எல்லாம் மேய்க்கிறதுக்கு எருமைய மேய்க்கலாம் போலடி... மூடிட்டு இங்கயே இருங்க வந்துடுறோம்..." என்று கதவியில் கை வைக்க போக
"பூஜா.. நிலவன் கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தா என்ன பண்றது?..." என்றாள் அவசரமாக
"இது ஒரு நல்ல கேள்வி.." என்று கீதா சொல்ல
பூஜா ஸ்லோ மோஷனில் திரும்பிவள்
"வாய்ப்பிருக்கு... ம்ம்ம் என்ன பண்ணலாம்.. நான் ராமுக்கு கால் பண்ணுறேன் இரு..." என்றவள் அவனுக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டிருந்தது ஆனால் எடுக்கப்படவில்லை..
"இந்த எரும போன எடுக்காம என்ன பண்ணுது..." என்றவள் மீண்டும் அழைக்க.. இந்த முறை அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது...
"ராம்.. அங்க உங்ககூட நிலவன் இருக்கானா?.."
"பூஜாமா நான் கார்த்தி பேசுறேன் டா.. ராம் தூங்குறான்... நிலவன் அங்க கெஸ்ட் ஹவுஸ்ல டா... ஏதாச்சும் வேணுமாடா?..."
"இல்ல கார்த்தி ணா.. அதி நிலவன் கூட பேசணுமாம் அதான் எங்க இருக்கான்னு செக் பண்ண கேட்டேன்.."
"ஓகேடா.. அங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கான் போய் பார்க்க சொல்லு... என்று நிறுத்தியவன்.. சிறு தயக்கத்தின் பின்.. "கீதா இருக்காளாடா அங்க?.." என்க
பூஜாவோ சிரித்தபடி "இருக்காளே.." என்றாள் இழுவையுடன்..
"கொஞ்சம் கார்டன் பக்கம் வர சொல்லுறியாடா??..."
"ஓகே ணா சொல்லிடுறேன்..." என்று பேசி அழைப்பை துண்டித்தவளை கீதாவும் அதிரலும் ஆர்வமாய் பார்த்தனர்...
"உன் ஆளு கெஸ்ட் ஹவுஸ்ல தானாம்.. என்று அதிரலிடம் சொன்னவள்...
கீதாவிடம் "உன் ஆளு தூங்க போராறாம் டிஸ்டர்ப் பண்ண வேணாமாம்.." என்றாள்.. அவளுக்கோ மூஞ்சி சுருங்கி போக...
"ஹாஹா... உடனே சார்ஜ் குறையிது.. உன்ன கார்டன் வரட்டுமாம்.. இப்போ ஹாப்பி.." என்க அவளும் புன்னகைத்தாள்..
சரியாக அரை மணி நேரம் கழித்து கீதா பதுங்கி பதுங்கி கார்டன் பக்கம் செல்ல, அங்கிருந்து ஒரு கை அவளை இழுத்து அணைத்துக்கொண்டது..
"என்னங்க மேடம் இந்த பக்கம்.."
"யாரோ ஒருத்தர் ரொம்ப ஏங்கி போய் பார்க்கணும்னு வர சொன்னாறாமே.. அதான் பாவம் போனா போகட்டும்னு வந்தேன்..." என்றாள் அவன் அணைப்பில் வாகாய் நுழைந்தபடி...
"ம்ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப ஏங்கி போய் இருக்கேன்... என்றவன் அணைப்பு இன்னும் இறுக..
"யாரோ சொன்னாங்க படிச்சு முடிக்கிற வர ஒன்னுமில்லனு... இப்போ அவங்களே இவ்வளவு இறுக்கமா கட்டி பிடிச்சிருக்காங்க..."
"எவன் சொன்னான்.. லூசு பையன்.. இவ்வளவு அழகான பொண்டாட்டிய வெச்சிட்டு எவனாவது சும்மா இருப்பானா???... இன்னைக்கு புடவைல மாமன் மனச அள்ளிட்டடி ராட்சசி.." என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்..
"ஸ்ஸ்ஸ் வலிக்குது மாமா..."
"நல்லா வலிக்கட்டும் வயசு பையன் மனச கெடுத்துட்டல்ல.. உன்ன அங்க மேடைலயே கட்டிக்கணும்னு தோணிச்சு தெரியுமா அவ்வளவு அழகா இருந்த... இவ்வளவு அழக எங்கடி ஒளிச்சு வெச்சிருந்த?..."
"அதெல்லாம் இங்கயே தான் இருக்கு உன் கண்ணுக்கு தெரியல அவ்வளவு தான்..." என்று அவள் முறுக்கிக்கொள்ள.. அவனோ முத்தமிட்டு சமாதானம் செய்திருந்தான்...
அங்கே கீழே அந்த புல்லில் அமர்ந்தவன் அவளை மடியில் இருத்தி கொண்டு "இதுக்கு தான்டி.. இப்போ கல்யாணம் வேணான்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன்.. எங்க கேட்டீங்க??.. சந்தர்ப்பமும் உங்களுக்கு ஏத்த மாதிரியே அமஞ்சிடிச்சு.. இப்போ என் நிலைமை.. நீ படிச்சு முடிக்கிற வர எப்படி நல்லவனா இருக்க போறேனோ??..." என்று புலம்ப..
"புலம்பாத மாமா.. நான் பேபியையும் படிப்பையும் சேர்த்து பாத்துப்பேன்... நீ கவல படாத.." என்று நம்பிக்கை கொடுக்க..
"நீ ஒருத்தி போதும்டி.. இப்படி பேசி பேசியே என் முடிவ மாத்திடுவ.. பட் இந்த விசயத்துல நான் ஸ்ட்ரிக்டா தான் இருப்..." என்றவனின் மீதி வார்த்தையை அவள் இதழ் விழுங்கிகொண்டது...
அதன் பின் எங்கே அவன் உறுதி செல்லுபடி ஆக.. தள்ளுபடி தான் ஆனது....
அங்கே அதிரலோ, கீதா கார்டன் பக்கம் போவதை பார்த்திருந்தவள்.. அவள் சென்றதும் நிலவனை காண சென்றாள்...
அங்கே முன் கதவு பூட்டி இருக்க.. இது அவன் வேலை தான் என்பதும் புரிந்து தான் இருந்தது... சுற்றி வீட்டின் மற்ற பக்கம் வந்தாள்..
சரியாக அவன் அறையின் பின் பக்க ஜன்னலை திறக்கச்செல்ல அதிலோ ஏதோ இருப்பது போல் தெரிய.. தன் தொலைபேசியில் வெளிச்சத்தை படர விட்டாள்..
அங்கே ஒரு காகிதத்தில் "இன்னைக்கு மட்டும் என்ன விட்டுடு ஜாஸ்.. நாளைக்கு பேசிக்கலாம்.. இப்படிக்கு உன் மூன்.." என்று எழுதி இருந்தது...
"இடியட்.. வேணும்னே பன்றான்.." என்று அவனை திட்டியவளுக்கு லேசாக கண் கலங்கவே செய்தது.. பேசிவிடலாம் என்று அத்தனை ஆசையாய் வந்தாளே..
இனி அவன் பேச்சை மீறி உள்ளே செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை... கண்களை துடைத்தவள் வந்த வழியே திரும்பி நடக்க தொடங்கினாள்...
இத்தனை நேரமும் அவனும் தூங்கவில்லை அவளையே தான் உள்ளிருந்து பார்த்திருந்தான்... உள்ளே வெளிச்சம் படர விட்டிருந்ததில் இவள் வந்தது தெரிந்தது..
அதிலும் அவள் கண்களை துடைத்தபடி திரும்பி சென்றது கூட நிழல் உருவாமாக தெரியவே செய்தது... அதன் பின்னும் பொறுப்பானா என்ன?..
அவசரமாக வெளியே வந்தவன்.. அவளை நெருங்கி பின்னிருந்தே தைத்தாங்கலாக அவளை தூக்கி இருந்தான்...
"விடு என்ன விடு... அதான் பேச விருப்பம் இல்லல விடு.. என்ன விடு.." என்று அழுகையினூடே அவள் திமிர... அவன் எதுவும் பேசவில்லை.. நேரே அறைக்கு தூக்கி வந்தவன் கீழே விட்டது தான் தாமதம்.. இறுக்கி அணைத்திருந்தான் அவளை...
வழமை போல் அந்த அணைப்பில் மென்மை இருக்கவில்லை.. வன்மையான ஒரு அணைப்பு... நேரம் செல்ல செல்ல அணைப்பு வன்மை கூடியதே தவிர குறையவே இல்லை...
ஒரு கட்டத்தில் அதிரலுக்கு உடல் வலிக்கவே செய்தது... ஆனாலும் அவனுக்காய் தன்னை கொடுத்து நின்றிருந்தாள்...
ஆனால் அவனோ விடுவது போல் இல்லை.. அடுத்த நொடியே உலகம் அழியபோகிறது என்கிற ரீதியில் அவளை விடாமல் தன்வசம் வைத்திருந்தான்...
அத்தனை நேரம் பொறுமையாய் இருந்தவள்.. அவள் கழுத்தோரம் சூடான ஈரத்தை உணர்ந்ததும் தன்னவன் அழுகிறான் என்பது புரிய அவனை வலுகட்டாயமாக பிரிக்க முயன்றும் முடியாமல் தான் போனதில் வலியில் "ஸ்ஸ்ஸ்ஸ்" என்பதாய் மெல்லிய சத்தம் எழுப்பினாள்..
இத்தனை பலம் கொண்டு தள்ளியும் அவனை அசைக்க முடியவில்லை...
ஆனால் அந்த மெல்லிய வலியில் முணங்கும் சத்தம் அந்த வேலையை சரியாக செய்திருந்தது.. அவனை அவளை விட்டு விலக்கி இருந்தது...
"சாரிடி சாரிடி ரொம்ப வலிச்சுடுச்சா..." என்று அவள் முகம் பார்த்து கேட்டவன் கண்களில் உருண்டோடிய கண்ணீர் அவள் கண்ணீலும் கண்ணீரை வரவழைத்திருந்தது..
தன் அணைப்பின் வலியில் வந்த கண்ணீரோ என எண்ணியவனோ "இதுக்கு தான்டி உன்ன பார்த்தாலும் பேசாம விலகி விலகி போனேன்... நான் இருக்குற நிலைமைக்கு உன்ன ஹேர்ட் பண்ணிடுவேனோன்னு தான் உன்ன விட்டு என்ன நானே ஒதுக்கிகிட்டேன்.... செத்துட்டேன்டி, உன்ன அந்த நிலமைல பார்த்ததும்... மூச்சு பேச்சில்லாம நீ படுத்திருந்த நான் நடமாடினேன் அவ்வளவு தான் வித்தியாசம்...." என்றவன் அங்கிருந்த மெத்தையில் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்... சிறிது நேரம் பேசவில்லை மௌனம் அவனிடம்..
அவன் அருகில் சென்றவள் அவன் தோளை தொட... அவளை இழுத்து அருகில் அமர வைத்தவன்.. அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்...
"திரும்ப நீ கண்முழிச்சப்போ தான் நான் மறுபடியும் பிறந்து வந்ததா பீல் ஆச்சு.. அப்போ இருந்து உன்ன உணரணும்னு என் ஒவ்வொரு செல்லும் என்ன பாடா படுத்துது... உன்ன முழுசா எனக்குள்ள உணரணும்.. உன் மூச்சு காத்து என்மேல வீசிட்டே இருக்கணும்.. நீ எனக்குள்ள இருக்கனும்.. இப்படி நான் நானா இருக்க முடியலடி... உன் கூட பேசுனா கண்டிப்பா என் நிதானத்த இழந்துடுவேன்னு தெரியும்.. அதான் உன்ன அவொய்ட் பண்ற போல நடிச்சேன்..." என்றான்.
அவள் ஏதோ பேச வர, தடுத்தவன் அவனே "நான் கேக்காமலே உன்ன எனக்கு கொடுக்க நினைச்சவ நீ.. நான் கேட்டும் தராம இருக்க போறதில்ல தான்.." என்றவனின் முகம் அதுவரை இருந்த மென்மையை தொலைத்திருந்தது.. அடுத்து அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளுக்கு..
"ஆனா உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குவனுக்கு தண்டனை கொடுக்காம எப்படிடி உன்ன எடுத்துப்பேன்... என் உயிர என்ன விட்டு பிரிக்க பார்த்தவனுக்கு தண்டனை கொடுக்க வேணாமா?... அதுவரைக்கும் என்ன கட்டுப்படுத்திக்க தான் உன்ன விட்டே தள்ளி ஓடுனேன்... இன்னைக்கு அவனுக்கு முடிவு கட்டியாச்சு.. இனி நோ டென்ஷன்..." என்றவன் அவளை அணைத்திருந்தான்.. இப்போது மென்மையாக...
"ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான கடத்திடலாம்னு பார்த்தா இன்னைக்கு அவ்வளவு அழகா வந்து என்ன மூச்சு முட்ட வெச்சிட்டடி.. எப்படியும் நீ என்ன தேடி வருவன்னு தெரியும்... வந்தா என்ன என்னலேயே கட்டுப்படுத்த முடியாம போயிடும்னு பயந்து தான் அப்படி எழுதி வெச்சேன்... ஆனா நீ வந்து திரும்பி கண்ண துடைச்சிட்டே போகவும்.. கட்டுப்பாடாவது ஒன்னாவதுனு உன்ன தூக்கிட்டு வந்துட்டேன்... என்ன ரொம்ப தான்டி மயக்கி வெச்சிருக்க நீ.." என்று அவள் மூக்கை கடிக்க..
"நீ தான் காலையில இருந்து என்ன பாக்கவே இல்லையே..."
"யார் சொன்னா.. நம்ம போகஸ் புல்லா எப்போதும் என் ஜாஸ் மேல தான்.. அதுவும் என்னையே பார்த்துட்டு நான் பாப்பேனா மாட்டேனானு தவிச்சிட்டு நின்னியே... அப்போ போங்கடா நீங்களும் உங்க சாம்பிரதாயம்னு உன்ன அப்படியே தூக்கிட்டு நாட்ட விட்டே ஓடிடலாம்னு கூட தோணிச்சு..." என்றான் கண்ணில் காதல் மையலுடன்...
"அப்போ ஏன் சார் தூக்கிட்டு போகல... யாரு உங்கள தடுத்தா?.."
"வேற யாரு உன் சேலை மறைவுல தெரிஞ்ச உன் இடுப்பு தான், என்ன பாத்து வெளிநாட்டுக்கு போய் என்னடா பண்ணப்போற வாழ் நாள் முழுசா இங்கயே உனக்கு இடம் தரேன்னு சொல்லி என்ன அதுல முடிஞ்சிடிச்சு.. அந்த டீல் எனக்கு பிடிச்சதால நானும் ஓகேனு சொல்லிட்டேன்..." என்று கண்ணடித்தவனின் கரங்கள் அப்போது உணர ஆசைப்பட்ட இடையின் மென்மையை இப்போது ஆற அமர சோதித்தது.. அவள் அணிந்திருந்த டிசேர்ட்டும் அவனுக்கு வழிவிட அவன் கரங்களுக்கு ஏது தடை...
"கேடி ஏசிபி..." என்றவள் அவன் கரம் செய்யும் மாயத்தில் உணர்வுகள் தாங்காமல் கண்களை மூடிகொண்டாள்...
அவளை மெத்தையில் சரித்து அவள் மீது படர்ந்து, அவள் முகத்துக்கு நேரே அவன் முகத்தை கொண்டு வந்தவன்
"ஜாஸ்.."
"ம்ம்ம்"
"நோ சொல்லுடி"
"ம்ம்கூம்.."
"ஐ காண்ட் கண்ட்ரோல்டி பட்டு.. ஐ நீட் யூ பேட்லி.. உன்ன ஏதாச்சும் பண்ணிடுவேன்... ப்ளீஸ் நோ சொல்லிடுடி பட்டு.."
"நான் முழுசா உனக்கே உனக்கு தான் நிலவா..." என்ற அவளது வார்த்தைகள் அவன் தாபத்தை மேலும் கூட்டவே செய்தது..
அவள் கன்னத்தில் இரு விரல்கள் கொண்டு அழுத்தம் கொடுக்க விரிந்துகொண்ட அவள் இதழை அவன் இதழ்களால் கொள்ளையிட்டான் அந்த காவலதிகாரி...
அவன் பாரத்தை தன்னில் சுமந்தவளது ஒரு காரமோ அவன் கேசத்துக்குள் நுழைத்து கொள்ள, அடுத்த கரம் அவன் முதுகில் கோலம் போட தொடங்கியது...
மென்மையான முத்தமது அவள் ஸ்பரிசத்தை அவனுள் ஆழ உணர்த்தி இருந்தது... நீண்ட நெடிய முத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் விலகி அவள் அருகில் படுத்துக்கொண்டு அவளை அவன் நெஞ்சில் போட்டுகொண்டான்...
சிறிது நேர அமைதிக்கு பின் "வை மீ நிலவா?.." என்ற கேள்வி அதிரலிடம் இருந்து வந்தது
அவனோ புரியாமல் அவளை குனிந்து பார்க்க "இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன ஏன் லவ் பண்ற நிலவா??... அதுவும் இவ்வளவு காதல்.. உன்னோட இந்த அளவில்லாத காதல் எனக்கே எனக்குன்னு ஏன்?... இப்போவும் உன்னோட உணர்வுகளை விட எனக்குனு யோசிக்கிறியே.. இந்தளவு காதல் என் மேல ஏன்?.."
"ஏன்னா நீ தான் என்னோட ஜாஸ்மின்..." என்ற ஒரே ஒரு பதில் தான் அவனிடம்..
"என்ன உன் காதலால மூச்சைடைக்க வைக்கிற நிலவா?... இவ்வளவு காதலையும் வெச்சிட்டு எப்படிடா உன்னால விலகி நிற்க முடியுது..."
"நமக்கான காதலும் சரி காமமும் சரி நமக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா ஜாஸ்... நம்ம ஒருத்தர ஒருத்தர் காதலா உணர்ந்து அதுக்கு மேலே ஒரு படி போய் தாம்பத்தியத்துல இணையிரப்போ உனக்கும் சரி எனக்கும் சரி எந்தவித உறுத்தலும் இருக்கவே கூடாது... முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிறைஞ்சி இருக்கனும்... இன்னொரு நாள் அத நினைச்சி பாக்குறப்போ எந்தவித செகண்ட் தோட்டும் வரவே கூடாது... இது எல்லாத்துக்கும் ஒரு நாள் வெயிட் பண்றது தப்பில்லல..."
"லவ் யூ சோ மச் நிலவா... கடவுள் ரொம்ப நியாயமானவருல வள்ளலும் கூட... சின்ன வயசுல எனக்கு கொடுத்த கஷ்டத்துக்கு அதைவிட பெரிய பொக்கிஷமா உன்ன எனக்கு கொடுத்திருக்காரே... நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி நிலவா..." என்றவள் ரொம்பவே உணர்ச்சிவசப்படிருந்தாள்...
"ரெண்டு பேருமே லக்கி தான்.." என்றவன் தங்கள் இருவரது நிச்சய மோதிரத்தை அருகருகே வைத்து அவளுக்கு காட்டியவன்... "அதிரலோட மூனும் நிலவனோட ஜாஸும் எப்போவும் சேர்ந்தே தான் இருக்கணும்... எனக்காக நீ தான்.. உனக்காக நான் தான்.. நாம ஒருத்தருக்காக ஒருத்தர் படைக்கப்பட்டவங்க ஜாஸ்.. ரொம்ப யோசிக்காம நம்ம நாலாவது கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க பொண்டாட்டி" என்றவன் அவளை நெஞ்சில் சுமந்து தட்டிக்கொடுத்தபடி கண்களை மூடினான்...
அவர்கள் அணிந்திருந்த நிச்சய மோதிரத்தில் பூரண நிலவினுள்ளே ஜாதி மல்லி பூ இருப்பது போல வடிவமைத்திருந்தான் நிலவன்... இவர்களை போலவே அவையும் என்றும் பிரியாதிருக்கும்....
அவன் காதல் சின்னமாக நினைக்கும் இதே ஜாதி மல்லி தான் அவன் காதலையும் அவனிடம் மீட்டு கொடுத்திருந்தது என்பது அவன் அறியாத உண்மை....
நள்ளிரவையும் தாண்டி விட்டது ஆனால் இன்னும் பெண்கள் கூட்டம் அரட்டையை முடித்த பாடில்லை... பேச்சின் இடையிலே ரம்யாவும் வர்ஷியும் தூங்கி இருந்தனர்..
"கீதா.. என்னமா யோசனை.. நாளைக்கு நைட் சடங்குல ஏதாச்சும் டவுட் இருந்தா கேளு.. அக்கா நான் எதுக்கு இருக்கேன்..." என்றாள் பூஜா..
"டவுட்டா எனக்கா நெவர்.. கிளாஸ்ல பிரீயா இருக்கும்போது என்ன பண்ணுவோம்னு நினைக்கிற.. டவுட் எல்லாம் கிளீயர் பண்றது தான் வேலையே.." என்று அவள் கண்ணடித்து சொன்னதில் ஆரவாரம் தான் அங்கே..
"ஸ்ஸ்ஸ் மெதுவாடி.. இருந்தாலும் ரொம்ப முன்னேற்றம் தான்... இப்ப உள்ள டுகே கிட்ஸ நம்பவே முடியாது... வெரி டேன்ஜரஸ்" என்று பூஜா சொல்ல
அங்கிருந்த இன்னொரு உறவுக்கார பெண்ணோ "அப்போ ஏன் மேடம் மேடைல வெக்கப்பட்டீங்களாம்?..." என்று கீதாவை வார..
"வெக்கம் அது வேற டிபார்ட்மென்ட்..." என்று அவள் கெத்தாய் சொன்னதில் நான்கைந்து அடிகள் விழ, அங்கே குட்டி கலவரமே உருவானது...
அதிரலோ இது எதிலும் கலந்து கொல்லாமல் ஜன்னல் அருகே நின்றிருந்தாள்.. அப்போது தான் அதனை அவதானித்த பூஜா அவள் அருகில் சென்றாள்...
"என்ன அதி இங்க தனியா நிக்கிற.. வா அங்க பேசிட்டு இருப்போம்.."
"நோ பூஜா நீங்க பேசுங்க.. நான் இங்க நிக்கிறேன்.." என்று அவள் மறுக்க..
"ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் அதி.. நிலவன் பண்றது எனக்கே கொஞ்சம் ஓவர் போல தான் தோணுது... பட் அவன் பண்ணுனா கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்.. அதுவும் உன்ன அவொய்ட் பண்றான்னா நீயே யோசிச்சிக்க.." என்று சொல்ல
அதிரலோ சிரித்தபடி "ஐ நோ ஹிம் பூஜா.. பட் அவன் என்ன அவொய்ட் பண்றது என்ன விட அதிகமா அவன தான் ஹேர்ட் பண்ணும்.. அது தான் எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு.."
"போய் பேசு அதி.. விடிஞ்சா கல்யாணம்.. இப்பவும் மாப்பிள்ளை முறுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்.. ரெண்டு அடி போடு வழிக்கு வரட்டும்..."
"எப்படி பூஜா போறது.. வெளிய அத்தன பேர் இருக்காங்க.." என்றவள் உதட்டை வளைக்க
"நாங்க எதுக்கு இருக்கோம்.. உன்ன பாட்னர் கூட பேச வைக்கிறது என் பொறுப்பு அதி..." என்றாள் பின்னால் இருந்து கீதா..
"ஆக இங்க பேசுறத ஒட்டுக்கேட்டுட்டு இருந்திருக்க கழுத.." என்று பூஜா அவள் காதை திருக..
"ஹீஹீ இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.. நானும் என் மாமா கூட பேசணும்.. சோ ஹெல்ப்க்கு ஹெல்ப் சரியா போகும்ல அந்த ஒரு நல்ல எண்ணம் தான்.."
"அதுசரி இப்போ எப்படி இத்தனை பேர தாண்டி போறது.." என்ற பூஜா லேசாக கதவை திறந்து ஹாலை எட்டி பார்க்க.. சிலர் தூங்கி இருக்க, சிலர் இன்னும் கதை பேசி கொண்டு தான் இருந்தனர்... கல்யாண வீட்டில் பேச்சுக்கா பஞ்சம்...
"இந்த பெருசு எல்லாம் கத பேசலனு யார் அழுதா.." என்று தலையில் அடித்துக்கொள்ள
"வயசானவங்க தான பேசிட்டு இருக்காங்க.. நம்ம போறது தெரியவா போகுது.. சத்தம் போடாம போயிட்டு வந்துடவா?..." என்ற அதிரலை அங்கிருந்தவர்கள் அப்பாவி போல பார்க்க..
"ஏன் என்னாச்சு.." என்றாள் புரியாமல்..
"நீ அவங்கள என்ன நினச்ச.. வயசானவங்க தான பார்க்க மாட்டாங்கனா?... எல்லாம் சிசிடிவி கேமராவையும் மிஞ்சின ஆட்கள்.. பார்க்காத மாதிரி தான் இருக்கும் ஆனா கண்ணு எல்லா பக்கமும் இருக்கும்... காது கேக்காத போல தான் இருக்கும். ஆனா நம்ம நடக்குற சத்தம் கூட கிரிஸ்டல் கிளீயரா கேட்கும்... அத்தனைக்கும் மேல அம்புட்டும் சோசியல் மீடியாவ விட பவர்புல் லேடீஸ்.. நாம இப்படிக்கா போய் வரதுக்குள்ள இங்க எல்லாருக்கும் விஷயம் பரவிடும்.." என்றாள் கீதா ஏதோ தீவிரவாதியை விபரிப்பது போல.. அவள் சொன்ன விதத்தில் அதிரலுக்கு சிரிப்பு வரவே செய்தது...
"ஓகே இதான் பிளான்.. நானும் ஹேமாவும் கிட்சனுக்கு தண்ணி எடுக்க போறோம்... அப்போ சிசிடிவி கேமரா எல்லாம் எங்கள போகஸ் பண்ணும்.. அந்த நேரம் நீயும் கீதாவும் அந்த பக்கம் போய்டணும்..." என்று அதிரலிடம் பூஜா சொல்ல.. அவளும் சரி என்பதாய் பெருவிரலை உயர்த்தி காட்டி இருந்தாள்...
"அப்போ நாங்க என்ன பண்றது.." என்று உள்ளே மிச்சமாய் இருந்த பெண்களில் ஒருத்தி ஆர்வமாய் கேட்க..
பூஜாவோ தலையில் கை வைத்தபடி "உங்கள எல்லாம் மேய்க்கிறதுக்கு எருமைய மேய்க்கலாம் போலடி... மூடிட்டு இங்கயே இருங்க வந்துடுறோம்..." என்று கதவியில் கை வைக்க போக
"பூஜா.. நிலவன் கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தா என்ன பண்றது?..." என்றாள் அவசரமாக
"இது ஒரு நல்ல கேள்வி.." என்று கீதா சொல்ல
பூஜா ஸ்லோ மோஷனில் திரும்பிவள்
"வாய்ப்பிருக்கு... ம்ம்ம் என்ன பண்ணலாம்.. நான் ராமுக்கு கால் பண்ணுறேன் இரு..." என்றவள் அவனுக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டிருந்தது ஆனால் எடுக்கப்படவில்லை..
"இந்த எரும போன எடுக்காம என்ன பண்ணுது..." என்றவள் மீண்டும் அழைக்க.. இந்த முறை அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது...
"ராம்.. அங்க உங்ககூட நிலவன் இருக்கானா?.."
"பூஜாமா நான் கார்த்தி பேசுறேன் டா.. ராம் தூங்குறான்... நிலவன் அங்க கெஸ்ட் ஹவுஸ்ல டா... ஏதாச்சும் வேணுமாடா?..."
"இல்ல கார்த்தி ணா.. அதி நிலவன் கூட பேசணுமாம் அதான் எங்க இருக்கான்னு செக் பண்ண கேட்டேன்.."
"ஓகேடா.. அங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கான் போய் பார்க்க சொல்லு... என்று நிறுத்தியவன்.. சிறு தயக்கத்தின் பின்.. "கீதா இருக்காளாடா அங்க?.." என்க
பூஜாவோ சிரித்தபடி "இருக்காளே.." என்றாள் இழுவையுடன்..
"கொஞ்சம் கார்டன் பக்கம் வர சொல்லுறியாடா??..."
"ஓகே ணா சொல்லிடுறேன்..." என்று பேசி அழைப்பை துண்டித்தவளை கீதாவும் அதிரலும் ஆர்வமாய் பார்த்தனர்...
"உன் ஆளு கெஸ்ட் ஹவுஸ்ல தானாம்.. என்று அதிரலிடம் சொன்னவள்...
கீதாவிடம் "உன் ஆளு தூங்க போராறாம் டிஸ்டர்ப் பண்ண வேணாமாம்.." என்றாள்.. அவளுக்கோ மூஞ்சி சுருங்கி போக...
"ஹாஹா... உடனே சார்ஜ் குறையிது.. உன்ன கார்டன் வரட்டுமாம்.. இப்போ ஹாப்பி.." என்க அவளும் புன்னகைத்தாள்..
சரியாக அரை மணி நேரம் கழித்து கீதா பதுங்கி பதுங்கி கார்டன் பக்கம் செல்ல, அங்கிருந்து ஒரு கை அவளை இழுத்து அணைத்துக்கொண்டது..
"என்னங்க மேடம் இந்த பக்கம்.."
"யாரோ ஒருத்தர் ரொம்ப ஏங்கி போய் பார்க்கணும்னு வர சொன்னாறாமே.. அதான் பாவம் போனா போகட்டும்னு வந்தேன்..." என்றாள் அவன் அணைப்பில் வாகாய் நுழைந்தபடி...
"ம்ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப ஏங்கி போய் இருக்கேன்... என்றவன் அணைப்பு இன்னும் இறுக..
"யாரோ சொன்னாங்க படிச்சு முடிக்கிற வர ஒன்னுமில்லனு... இப்போ அவங்களே இவ்வளவு இறுக்கமா கட்டி பிடிச்சிருக்காங்க..."
"எவன் சொன்னான்.. லூசு பையன்.. இவ்வளவு அழகான பொண்டாட்டிய வெச்சிட்டு எவனாவது சும்மா இருப்பானா???... இன்னைக்கு புடவைல மாமன் மனச அள்ளிட்டடி ராட்சசி.." என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்..
"ஸ்ஸ்ஸ் வலிக்குது மாமா..."
"நல்லா வலிக்கட்டும் வயசு பையன் மனச கெடுத்துட்டல்ல.. உன்ன அங்க மேடைலயே கட்டிக்கணும்னு தோணிச்சு தெரியுமா அவ்வளவு அழகா இருந்த... இவ்வளவு அழக எங்கடி ஒளிச்சு வெச்சிருந்த?..."
"அதெல்லாம் இங்கயே தான் இருக்கு உன் கண்ணுக்கு தெரியல அவ்வளவு தான்..." என்று அவள் முறுக்கிக்கொள்ள.. அவனோ முத்தமிட்டு சமாதானம் செய்திருந்தான்...
அங்கே கீழே அந்த புல்லில் அமர்ந்தவன் அவளை மடியில் இருத்தி கொண்டு "இதுக்கு தான்டி.. இப்போ கல்யாணம் வேணான்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன்.. எங்க கேட்டீங்க??.. சந்தர்ப்பமும் உங்களுக்கு ஏத்த மாதிரியே அமஞ்சிடிச்சு.. இப்போ என் நிலைமை.. நீ படிச்சு முடிக்கிற வர எப்படி நல்லவனா இருக்க போறேனோ??..." என்று புலம்ப..
"புலம்பாத மாமா.. நான் பேபியையும் படிப்பையும் சேர்த்து பாத்துப்பேன்... நீ கவல படாத.." என்று நம்பிக்கை கொடுக்க..
"நீ ஒருத்தி போதும்டி.. இப்படி பேசி பேசியே என் முடிவ மாத்திடுவ.. பட் இந்த விசயத்துல நான் ஸ்ட்ரிக்டா தான் இருப்..." என்றவனின் மீதி வார்த்தையை அவள் இதழ் விழுங்கிகொண்டது...
அதன் பின் எங்கே அவன் உறுதி செல்லுபடி ஆக.. தள்ளுபடி தான் ஆனது....
அங்கே அதிரலோ, கீதா கார்டன் பக்கம் போவதை பார்த்திருந்தவள்.. அவள் சென்றதும் நிலவனை காண சென்றாள்...
அங்கே முன் கதவு பூட்டி இருக்க.. இது அவன் வேலை தான் என்பதும் புரிந்து தான் இருந்தது... சுற்றி வீட்டின் மற்ற பக்கம் வந்தாள்..
சரியாக அவன் அறையின் பின் பக்க ஜன்னலை திறக்கச்செல்ல அதிலோ ஏதோ இருப்பது போல் தெரிய.. தன் தொலைபேசியில் வெளிச்சத்தை படர விட்டாள்..
அங்கே ஒரு காகிதத்தில் "இன்னைக்கு மட்டும் என்ன விட்டுடு ஜாஸ்.. நாளைக்கு பேசிக்கலாம்.. இப்படிக்கு உன் மூன்.." என்று எழுதி இருந்தது...
"இடியட்.. வேணும்னே பன்றான்.." என்று அவனை திட்டியவளுக்கு லேசாக கண் கலங்கவே செய்தது.. பேசிவிடலாம் என்று அத்தனை ஆசையாய் வந்தாளே..
இனி அவன் பேச்சை மீறி உள்ளே செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை... கண்களை துடைத்தவள் வந்த வழியே திரும்பி நடக்க தொடங்கினாள்...
இத்தனை நேரமும் அவனும் தூங்கவில்லை அவளையே தான் உள்ளிருந்து பார்த்திருந்தான்... உள்ளே வெளிச்சம் படர விட்டிருந்ததில் இவள் வந்தது தெரிந்தது..
அதிலும் அவள் கண்களை துடைத்தபடி திரும்பி சென்றது கூட நிழல் உருவாமாக தெரியவே செய்தது... அதன் பின்னும் பொறுப்பானா என்ன?..
அவசரமாக வெளியே வந்தவன்.. அவளை நெருங்கி பின்னிருந்தே தைத்தாங்கலாக அவளை தூக்கி இருந்தான்...
"விடு என்ன விடு... அதான் பேச விருப்பம் இல்லல விடு.. என்ன விடு.." என்று அழுகையினூடே அவள் திமிர... அவன் எதுவும் பேசவில்லை.. நேரே அறைக்கு தூக்கி வந்தவன் கீழே விட்டது தான் தாமதம்.. இறுக்கி அணைத்திருந்தான் அவளை...
வழமை போல் அந்த அணைப்பில் மென்மை இருக்கவில்லை.. வன்மையான ஒரு அணைப்பு... நேரம் செல்ல செல்ல அணைப்பு வன்மை கூடியதே தவிர குறையவே இல்லை...
ஒரு கட்டத்தில் அதிரலுக்கு உடல் வலிக்கவே செய்தது... ஆனாலும் அவனுக்காய் தன்னை கொடுத்து நின்றிருந்தாள்...
ஆனால் அவனோ விடுவது போல் இல்லை.. அடுத்த நொடியே உலகம் அழியபோகிறது என்கிற ரீதியில் அவளை விடாமல் தன்வசம் வைத்திருந்தான்...
அத்தனை நேரம் பொறுமையாய் இருந்தவள்.. அவள் கழுத்தோரம் சூடான ஈரத்தை உணர்ந்ததும் தன்னவன் அழுகிறான் என்பது புரிய அவனை வலுகட்டாயமாக பிரிக்க முயன்றும் முடியாமல் தான் போனதில் வலியில் "ஸ்ஸ்ஸ்ஸ்" என்பதாய் மெல்லிய சத்தம் எழுப்பினாள்..
இத்தனை பலம் கொண்டு தள்ளியும் அவனை அசைக்க முடியவில்லை...
ஆனால் அந்த மெல்லிய வலியில் முணங்கும் சத்தம் அந்த வேலையை சரியாக செய்திருந்தது.. அவனை அவளை விட்டு விலக்கி இருந்தது...
"சாரிடி சாரிடி ரொம்ப வலிச்சுடுச்சா..." என்று அவள் முகம் பார்த்து கேட்டவன் கண்களில் உருண்டோடிய கண்ணீர் அவள் கண்ணீலும் கண்ணீரை வரவழைத்திருந்தது..
தன் அணைப்பின் வலியில் வந்த கண்ணீரோ என எண்ணியவனோ "இதுக்கு தான்டி உன்ன பார்த்தாலும் பேசாம விலகி விலகி போனேன்... நான் இருக்குற நிலைமைக்கு உன்ன ஹேர்ட் பண்ணிடுவேனோன்னு தான் உன்ன விட்டு என்ன நானே ஒதுக்கிகிட்டேன்.... செத்துட்டேன்டி, உன்ன அந்த நிலமைல பார்த்ததும்... மூச்சு பேச்சில்லாம நீ படுத்திருந்த நான் நடமாடினேன் அவ்வளவு தான் வித்தியாசம்...." என்றவன் அங்கிருந்த மெத்தையில் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்... சிறிது நேரம் பேசவில்லை மௌனம் அவனிடம்..
அவன் அருகில் சென்றவள் அவன் தோளை தொட... அவளை இழுத்து அருகில் அமர வைத்தவன்.. அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்...
"திரும்ப நீ கண்முழிச்சப்போ தான் நான் மறுபடியும் பிறந்து வந்ததா பீல் ஆச்சு.. அப்போ இருந்து உன்ன உணரணும்னு என் ஒவ்வொரு செல்லும் என்ன பாடா படுத்துது... உன்ன முழுசா எனக்குள்ள உணரணும்.. உன் மூச்சு காத்து என்மேல வீசிட்டே இருக்கணும்.. நீ எனக்குள்ள இருக்கனும்.. இப்படி நான் நானா இருக்க முடியலடி... உன் கூட பேசுனா கண்டிப்பா என் நிதானத்த இழந்துடுவேன்னு தெரியும்.. அதான் உன்ன அவொய்ட் பண்ற போல நடிச்சேன்..." என்றான்.
அவள் ஏதோ பேச வர, தடுத்தவன் அவனே "நான் கேக்காமலே உன்ன எனக்கு கொடுக்க நினைச்சவ நீ.. நான் கேட்டும் தராம இருக்க போறதில்ல தான்.." என்றவனின் முகம் அதுவரை இருந்த மென்மையை தொலைத்திருந்தது.. அடுத்து அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளுக்கு..
"ஆனா உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குவனுக்கு தண்டனை கொடுக்காம எப்படிடி உன்ன எடுத்துப்பேன்... என் உயிர என்ன விட்டு பிரிக்க பார்த்தவனுக்கு தண்டனை கொடுக்க வேணாமா?... அதுவரைக்கும் என்ன கட்டுப்படுத்திக்க தான் உன்ன விட்டே தள்ளி ஓடுனேன்... இன்னைக்கு அவனுக்கு முடிவு கட்டியாச்சு.. இனி நோ டென்ஷன்..." என்றவன் அவளை அணைத்திருந்தான்.. இப்போது மென்மையாக...
"ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான கடத்திடலாம்னு பார்த்தா இன்னைக்கு அவ்வளவு அழகா வந்து என்ன மூச்சு முட்ட வெச்சிட்டடி.. எப்படியும் நீ என்ன தேடி வருவன்னு தெரியும்... வந்தா என்ன என்னலேயே கட்டுப்படுத்த முடியாம போயிடும்னு பயந்து தான் அப்படி எழுதி வெச்சேன்... ஆனா நீ வந்து திரும்பி கண்ண துடைச்சிட்டே போகவும்.. கட்டுப்பாடாவது ஒன்னாவதுனு உன்ன தூக்கிட்டு வந்துட்டேன்... என்ன ரொம்ப தான்டி மயக்கி வெச்சிருக்க நீ.." என்று அவள் மூக்கை கடிக்க..
"நீ தான் காலையில இருந்து என்ன பாக்கவே இல்லையே..."
"யார் சொன்னா.. நம்ம போகஸ் புல்லா எப்போதும் என் ஜாஸ் மேல தான்.. அதுவும் என்னையே பார்த்துட்டு நான் பாப்பேனா மாட்டேனானு தவிச்சிட்டு நின்னியே... அப்போ போங்கடா நீங்களும் உங்க சாம்பிரதாயம்னு உன்ன அப்படியே தூக்கிட்டு நாட்ட விட்டே ஓடிடலாம்னு கூட தோணிச்சு..." என்றான் கண்ணில் காதல் மையலுடன்...
"அப்போ ஏன் சார் தூக்கிட்டு போகல... யாரு உங்கள தடுத்தா?.."
"வேற யாரு உன் சேலை மறைவுல தெரிஞ்ச உன் இடுப்பு தான், என்ன பாத்து வெளிநாட்டுக்கு போய் என்னடா பண்ணப்போற வாழ் நாள் முழுசா இங்கயே உனக்கு இடம் தரேன்னு சொல்லி என்ன அதுல முடிஞ்சிடிச்சு.. அந்த டீல் எனக்கு பிடிச்சதால நானும் ஓகேனு சொல்லிட்டேன்..." என்று கண்ணடித்தவனின் கரங்கள் அப்போது உணர ஆசைப்பட்ட இடையின் மென்மையை இப்போது ஆற அமர சோதித்தது.. அவள் அணிந்திருந்த டிசேர்ட்டும் அவனுக்கு வழிவிட அவன் கரங்களுக்கு ஏது தடை...
"கேடி ஏசிபி..." என்றவள் அவன் கரம் செய்யும் மாயத்தில் உணர்வுகள் தாங்காமல் கண்களை மூடிகொண்டாள்...
அவளை மெத்தையில் சரித்து அவள் மீது படர்ந்து, அவள் முகத்துக்கு நேரே அவன் முகத்தை கொண்டு வந்தவன்
"ஜாஸ்.."
"ம்ம்ம்"
"நோ சொல்லுடி"
"ம்ம்கூம்.."
"ஐ காண்ட் கண்ட்ரோல்டி பட்டு.. ஐ நீட் யூ பேட்லி.. உன்ன ஏதாச்சும் பண்ணிடுவேன்... ப்ளீஸ் நோ சொல்லிடுடி பட்டு.."
"நான் முழுசா உனக்கே உனக்கு தான் நிலவா..." என்ற அவளது வார்த்தைகள் அவன் தாபத்தை மேலும் கூட்டவே செய்தது..
அவள் கன்னத்தில் இரு விரல்கள் கொண்டு அழுத்தம் கொடுக்க விரிந்துகொண்ட அவள் இதழை அவன் இதழ்களால் கொள்ளையிட்டான் அந்த காவலதிகாரி...
அவன் பாரத்தை தன்னில் சுமந்தவளது ஒரு காரமோ அவன் கேசத்துக்குள் நுழைத்து கொள்ள, அடுத்த கரம் அவன் முதுகில் கோலம் போட தொடங்கியது...
மென்மையான முத்தமது அவள் ஸ்பரிசத்தை அவனுள் ஆழ உணர்த்தி இருந்தது... நீண்ட நெடிய முத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் விலகி அவள் அருகில் படுத்துக்கொண்டு அவளை அவன் நெஞ்சில் போட்டுகொண்டான்...
சிறிது நேர அமைதிக்கு பின் "வை மீ நிலவா?.." என்ற கேள்வி அதிரலிடம் இருந்து வந்தது
அவனோ புரியாமல் அவளை குனிந்து பார்க்க "இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன ஏன் லவ் பண்ற நிலவா??... அதுவும் இவ்வளவு காதல்.. உன்னோட இந்த அளவில்லாத காதல் எனக்கே எனக்குன்னு ஏன்?... இப்போவும் உன்னோட உணர்வுகளை விட எனக்குனு யோசிக்கிறியே.. இந்தளவு காதல் என் மேல ஏன்?.."
"ஏன்னா நீ தான் என்னோட ஜாஸ்மின்..." என்ற ஒரே ஒரு பதில் தான் அவனிடம்..
"என்ன உன் காதலால மூச்சைடைக்க வைக்கிற நிலவா?... இவ்வளவு காதலையும் வெச்சிட்டு எப்படிடா உன்னால விலகி நிற்க முடியுது..."
"நமக்கான காதலும் சரி காமமும் சரி நமக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா ஜாஸ்... நம்ம ஒருத்தர ஒருத்தர் காதலா உணர்ந்து அதுக்கு மேலே ஒரு படி போய் தாம்பத்தியத்துல இணையிரப்போ உனக்கும் சரி எனக்கும் சரி எந்தவித உறுத்தலும் இருக்கவே கூடாது... முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிறைஞ்சி இருக்கனும்... இன்னொரு நாள் அத நினைச்சி பாக்குறப்போ எந்தவித செகண்ட் தோட்டும் வரவே கூடாது... இது எல்லாத்துக்கும் ஒரு நாள் வெயிட் பண்றது தப்பில்லல..."
"லவ் யூ சோ மச் நிலவா... கடவுள் ரொம்ப நியாயமானவருல வள்ளலும் கூட... சின்ன வயசுல எனக்கு கொடுத்த கஷ்டத்துக்கு அதைவிட பெரிய பொக்கிஷமா உன்ன எனக்கு கொடுத்திருக்காரே... நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி நிலவா..." என்றவள் ரொம்பவே உணர்ச்சிவசப்படிருந்தாள்...
"ரெண்டு பேருமே லக்கி தான்.." என்றவன் தங்கள் இருவரது நிச்சய மோதிரத்தை அருகருகே வைத்து அவளுக்கு காட்டியவன்... "அதிரலோட மூனும் நிலவனோட ஜாஸும் எப்போவும் சேர்ந்தே தான் இருக்கணும்... எனக்காக நீ தான்.. உனக்காக நான் தான்.. நாம ஒருத்தருக்காக ஒருத்தர் படைக்கப்பட்டவங்க ஜாஸ்.. ரொம்ப யோசிக்காம நம்ம நாலாவது கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க பொண்டாட்டி" என்றவன் அவளை நெஞ்சில் சுமந்து தட்டிக்கொடுத்தபடி கண்களை மூடினான்...
அவர்கள் அணிந்திருந்த நிச்சய மோதிரத்தில் பூரண நிலவினுள்ளே ஜாதி மல்லி பூ இருப்பது போல வடிவமைத்திருந்தான் நிலவன்... இவர்களை போலவே அவையும் என்றும் பிரியாதிருக்கும்....
அவன் காதல் சின்னமாக நினைக்கும் இதே ஜாதி மல்லி தான் அவன் காதலையும் அவனிடம் மீட்டு கொடுத்திருந்தது என்பது அவன் அறியாத உண்மை....
Last edited: