ஜாதி மல்லி பூ 29
சுற்றிலும் விசித்திர வெளிச்சம்... நிலவன் கண் சற்று சிரமப்பட்டே திறக்க வேண்டி இருந்தது.. மெல்ல இமைத்தட்டி கண்களை திறந்தவன் முன்னே கீழே செல்லும் படிகள் தான் கண்ணில் பட்டது.. அவனும் யோசனையுடனே அந்த படிகளில் இறங்கினான்..
ஏழு எட்டு படிகள் தான் முன்னே சென்றிருப்பான் மேலே பெரிய சத்தம் என்னவென்று திரும்பி பார்க்க, மேலே உள்ள ஒவ்வொரு படியாய் காணாமல் போய் கொண்டிருந்தது... குழப்பம் மேலோங்க கீழே பார்க்க கீழிருந்தும் படிகள் ஒன்றன் பின் ஒன்றாய் காணாமல் போய் கொண்டிருந்தது...
குழப்பம் மேலோங்க அவன் நின்றிருந்த நேரம் அவன் நின்றிருந்த படியும் மறைய, அவன் கீழே விழ போன கணம் ஒரு கை அவனை பிடித்துக்கொண்டது... கூடவே மறைந்த படிக்களும் மீள தோன்றியிருந்தது...
நிலவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.. தன்னை பிடித்த கை யாருடையது என்று உற்று நோக்க, அங்கே அறிவழகன் நின்றிருந்தான்...
"அறிவு.." என்று வியப்புடன் அவன் அழைக்க, அறிவழகனிடம் புன்னகை..
"நீ... நீ..."
"நான் தான் நிலவா..."
"அறிவு.. நீ.." என்றான் நிலவன் மீண்டும், அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வரவில்லை...
"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."
"என்ன பேசுற அறிவு... நீ உயிரோட.."
"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரியவரும்..." என்று சொன்னதையே மீண்டும் சொன்னபடி இருக்க, நிலவனுக்கோ குழப்பம்..
"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..." என்று சொன்னவனது உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய..
"அறிவு..." என்று கத்தியபடி நிலவன் எழுந்திருந்தான்...
"என்னாச்சு நிலவா.." என்று புகழ் அருகில் வர.. அப்போது தான், தான் கண்டது கனவென்பதே நிலவனுக்கு புரிந்தது...
"நத்திங்.. தூங்கிட்டேனா?... ஏன் தூங்க விட்ட புகழ்?.." என்றபடி எழுந்து தலையை பிடித்துக்கொண்டவனுக்கு கனவின் தாக்கம் குறைவதாய் இல்லை..
"தூங்கல மயங்கிட்ட.. ரொம்ப வயலண்டா பிஹெவ் பண்ண ஆரம்பிச்சிட்ட, அதான் அறைய வேண்டியதா போயிடிச்சு... ரொம்ப நேரம் எல்லாம் இல்லை ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ் தான் இருக்கும்.. இப்போ பெட்டரா பீல் பண்றியா?..."
"ம்ம்ம்ம்.." என்றவன் யோசனை எல்லாம் கனவில் தான்.. அதனை கனவு தான் என்று ஒதுக்கவும் முடியவில்லை... அறிவழகனும் சரி கடவுளும் சரி அவனுக்கு எதையோ உணர்த்த வருவது போலவே ஒரு தோன்றம் அவனுள்...
"என்னப்பாரு எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."
"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..."
யோசனைனையில் ஜீப்பினுள்ளே அமர்ந்திருந்தவனுக்கு நண்பன் சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்தது...
சிறிது நேர யோசனைக்கு பிறகு.. ஏதோ தோன்றியவனாக... தன் தொலைபேசியை ஆராய்ந்தவன் அவன் தேடிய காணொளி கிடைக்கவும்.. அதனை பார்வையிட்டான்...
ஆம் அது அறிவழகன் அவனுக்கு இறுதியாக அனுப்பிய காணொளி தான்....
இரண்டு முறை பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் கோபத்தில் தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வீசயவன், ஜீப்பை விட்டு வெளியே வந்து புகழின் அருகில் நின்றான்...
புகழோ தீவிர யோசனையில் இருக்க, நிலவன் வந்தது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..
சிறிது நேர அமைதிக்கு பின் புகழோ, "மச்சான் வர்ஷி சொன்ன அந்த லோர்ட் கிருஷ்ணவோட படம் எனக்கு தெரிஞ்சி எங்கயும் இருக்குற மாதிரி தோணல... ஜேகே காலேஜ், ஹாஸ்பிடல்.. இப்படி தேடுனோம்னா ஒரு வேளை கிடைக்க வாய்ப்பிருக்குல..." என்றதும் தான் தாமதம் நிலவனோ ஜீப்பை நோக்கி ஓடியவன் தன் தொலைபேசியை உயிர்ப்பிற்க அதுவோ அவன் வீசி எரியும் போதே உயிரை விட்டிருந்தது..
"சிட்... புகழ் சார்ஜர் கேபிள் இருக்கா.."
"இல்லையே மச்சான்.. வேணும்னா பக்கத்துல ஸ்டேஷன் போய் போட்டுக்கலாம்..." என்றான் ஏதோ அவசரம் என்பதை உணர்ந்து...
அங்கு செல்லும் அளவுக்கு நிலவனுக்கு பொறுமை இருக்கவில்லை.. உடனடியாக பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான்...
"உன் போன்ல சார்ஜ் இருக்கா?.. குடு..." என்று வாங்கியவன் பூஜாவுக்கு தொடர்பு கொண்டான்...
"ஹெலோ பூஜா" என்றவன் முடிக்கவில்லை
"என்னாச்சு நிலவா?.. அதிரல காப்பாத்திட்டியா?.. எங்க அவ?.. எப்போ கூட்டிட்டு வருவ?..." என்று அந்த பக்கம் அவள் கேள்விகளை அடுக்க..
"பூஜா லிசின்.. பதில் சொல்ற அளவுக்கு எனக்கு டைம் இல்லை.. என் லேப்டாப்ல அறிவோட வீடியோ சேவ் பண்ணி வெச்சிருக்கேன்.. அத இப்போ புகழ் நம்பருக்கு சென்ட் பண்ணு.. குயிக்.." என்றவன் அழைப்பு துண்டித்து சிறிது நேரத்தில் அந்த காணொளி வந்ததற்காக சத்தம் கேட்க..
அதனை உயிர்ப்பித்தவன் பார்வையிட தொடங்கினான்...
அவன் எதிர் பார்த்தது போல.. அந்த லோர்ட் கிருஷ்ணாவின் படம் அறிவழகன் பேசிகொண்டிருந்த காணொளியில் அவனுக்கு பின் பக்க சுவரில் தெரிந்தது...
கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்பது போல.. இவ்வளவு நாள் எண்ணத்தில் இல்லாததால் அது அவன் மூளையில் பதிந்திருக்கவில்லை... இன்றோ புகழின் பேச்சில் எழுந்த சந்தேகத்துடன் தேடிய போதுதான் அதனை மூளை உணர்த்தி இருந்தது...
புகழிடமும் காட்டியவன் மனதில் தன்னவளை நெருங்கி விட்ட சந்தோசம்...
ஆனால் இந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாதே.. விடியும் வரை கத்திருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு, நிமிடம் ஒவ்வொன்று வருடமாய் கடக்கும் மாயை...
அந்த நேரத்தை வீணடிக்காமல் முரளி கிருஷ்ணனை தொடர்பு கொண்டான்.. அவனுக்கு தெரியும் இந்த நேரம் அழைப்பதற்கான நேரம் இல்லை என்பது.. ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லையே.. அவன் கடக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பாய் தான் கடந்தது...
அவரிடம் செய்யவேண்டியவற்றையும் சொன்னவன்.. புகழை வற்புறுத்தி சிறிது நேரம் உறங்கும் படி பணித்திருந்தான்...
அவன் யோசனையுடனே கண் மூட.. அவனது பிறந்தநாள் அன்று அவளோடு பேசிய எண்ணங்களை அவனுள்...
அன்றிறவு அவன் கைகளைக்குள் அணைவாய் படித்திருத்தவளது வாய் ஒரு நிமிடம் அமைதியாய் இருக்கவில்லை.. தூங்கலாம் என்று அவளை நெஞ்சில் போட்டுகொண்டவனை எங்கே தூங்க விட்டாள்.. பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.. இவனும் ம்ம்ம் கொட்டி கேட்டுக்கொண்டே தான் இருந்தான்...
அவள் பேசிய அத்தனையும் அவர்கள் எதிர்காலம் தான்...
"நிலவா குறஞ்சது நம்ம ஆறு குழந்தைங்க பெத்துக்கணும்..."
"குறைஞ்சதே ஆறுங்களா மெண்டர் மேடம்..."
"ப்ச்.. குறுக்க பேசாத.. என்று அவன் வாயில் அடித்தவள்.. "கண்ணு வைக்காத எரும..." என்று அவன் நெஞ்சில் பல் பதியும் வரை கடித்திருந்தாள்..."
"ஸ்ஸ்ஸ்ஸ்... ராட்சசி வலிக்குதுடி..."
"வலிக்கட்டும் நல்லா.. பேசும் போது இடைல சத்தம் போட்ட கொன்னுடுவேன் பாத்துக்க.."
"ம்ம்ம்ம்.. பேசமாட்டேனே.. நீ பேசு ராஜாத்தி..." என்றவன் அவள் தலையில் முத்தமிட்டு இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்..
"குறைஞ்சது ஆறு பசங்க பெத்துக்கணும்.. முதலாவது பையன்... அப்பறம் அவனுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு.. என் மூத்த பையன் அவனோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவனுக்கு தம்பியா ஒரு பையன்.. பொண்ணு அவளோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவளுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு... அப்பறம் இந்த நாலு பேருக்கும் செல்லமா ஒரு தங்கச்சியும் ஒரு தம்பியும்... அவ்வளவு தான்.. இதுக்கு மேல வேணும்னா நம்ம இஷ்டம்.." என்றவள் அவனை நிமிர்ந்து பாக்க, அவன் பார்வையில் முகத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்..
"ரொம்ப தான்டி... இவ்வளவு ஐடியா வெச்சிட்டு நீ இப்படி வெக்கப்பட்டீனா.. எப்படி உன் கனவ நனவாக்கிறது?.. நான் தான் உன் கனவுக்கு உழைக்கணும் ஞாபகம் இருக்கட்டும்.." என்று அவளை சீண்டியவனுக்கு தெரியும்.. தனியே வளரந்த அவளது தனிமையின் ஏக்கமே இந்த உணர்வுகள் எல்லாம் என்று..
"எனக்காக கஷ்டப்படமாட்டியா?..." என்றாள் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு..
"அடியேய்.. எய்டீன் பிளஸ் கண்டென்ட முறைச்சிட்டே பேசுற ஆள் நீ ஒருத்தி தான்டி..."
"அதெல்லாம் அப்படிதான்.." என்றவள் முறுக்கிக்கொள்ள...
"கறும்பு தின்ன கூலியா?... நீ கவலைப்படாதடி செல்லம்.. மாமா எதுக்கிருக்கேன்.. ஆறு என்ன ஒரு டசனே பெத்துக்கலாம்.. என்ன வேல வெட்டிக்கு போகாம இதான் வேலைனு இருக்கணும்..." என்று சிரித்தவன் அவள் கையால் அடிகளும்.. பல்லால் பல கடிகலையும் பெற்றுக்கொண்டான்...
அன்றைய நாளின் நினைவில் மூடி இருந்த கண்களில் கண்ணீர் தன்னால் கீழ் இறங்கியது... கண்களை திறக்க அவளில்லாமல் இரண்டாவது விடியலும் வந்திருந்தது... கண்களை துடைத்து கொண்டவன் புகழையும் எழுப்பி.. ஜேகே கல்லூரியை நோக்கி விரைந்தான்...
காலை ஆறு மணி தான் ஆகி இருந்தது... யாரும் வந்திருக்க வில்லை.. வாட்ச்மேன் கூட அப்போதுதான் வந்திருந்தார்.. அவரிடம் பேசி உள்ளே நுழைந்து கொண்டவன்.. நேரே அந்த பழைய லேபிற்கு தான் சென்றான்..
பாவனையில் இல்லாத காரணத்தால் வெளியே செடி கொடிகள் படந்து வாயிலையே மூடியபடி தான் இருந்தது...
கொடிகளை எல்லாம் கைகளால் அகற்றியவன் உள்ளே நுழைய.. அந்த இடமே சிலந்தி வலைகள் நிறைந்து, பார்க்க பழைய பேய் பட அறை போலவே கட்சியளித்தது...
அவன் கால்கள் நேரே அந்த கடவுள் கிருஷ்ணனுடைய படத்தின் முன் தான் போய் நின்றது... அதனை புகழின் தொலைபேசியில் படம் பிடித்தவன்.. வர்ஷியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவளிடம் இது தானா என்று அதனை உறுதிப்படுத்தியும் கொண்டான்...
சுற்றி எவ்வளவு தேடியும் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை... நான்கு பக்க சுவர் தான் இருந்தது... வர்ஷி சொன்ன படிகள் போன்ற எதுவும் அங்கு இருப்பதாக தெரியவில்லை...
ஒருமணி நேர தேடலும் முடிவுக்கு வந்திருந்தது... இவ்வளவு நெருங்கியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை அவனுள் இருக்கத்தான் செய்தது...
"மச்சான்.. இங்க எதுவுமே இல்லையே டா.. தப்பான இடத்துக்கு வந்துட்டோமா??.."
"நோ புகழ் சரியா தான் வந்திருக்கோம்.. இங்க லேப் பில்டிங் மட்டும் தான் உடைஞ்சிருக்கு.. எகியூப்மெண்ட்ஸ் அப்படியே தான் இருக்கு... இத்தன வருஷம் பாவனை இல்லாம இருந்தா எப்போவோ துருப்பிடிச்சிருக்கணும்... பட் அப்படி எதுவுமே நடக்கல சோ இங்க டெஸ்டிங் நடந்துட்டு தான் இருக்கனும்... ஆனா இங்க உண்மை மறைஞ்சிருக்கு அத தான் கண்டுபிடிக்க நாம முயற்சி செய்யணும்.." என்றவன் சிறிது அமைதிக்கு பின்
"லெட்ஸ் கோ.." அங்கிருந்து வெளியேறி இருந்தான்...
புகழும் எங்கே என்று கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை... போக வேண்டிய ஓரிடத்துக்கு சென்றவன், அங்கே பேசி அவனுக்கான பதில் கிடைத்ததும் புன்னகையுடன் பூஜாவின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.
பூஜாவின் வீட்டில் நிலவனை இறக்கி விட்ட புகழ், நண்பனின் கட்டளையை நிறைவேற்ற ஓரிடம் சென்றான்..
யாரோ வரும் சத்தம் கேட்ட ஜெயராமன் கண்களை உயர்த்தி பார்க்க நிலவனின் உருவம் மங்களாகவே தெரிந்தது... கண்களை சிமிட்டி பார்வையை கூர்மையாக்க அவன் உருவம் படிப்படியாக தெளிவாகியது அவருக்கு....
"ஹாஹாஹா... நீ எப்படியும் திருப்பி எங்கிட்ட தான் வருவன்னு நல்லாவே தெரியும்.. எப்படியும் உன்னால கண்டுபிடிக்கவே முடியாது... என் பையன யாருனு நெனச்ச.. மருத்துவ உலகத்தோட முடி சூடா அரசன் அவன்... யாராளையும் சாய்க்க முடியாது..."
"அப்படிப்பட்ட உங்க மகன் தான் என் மருந்த திருடுன திருடனும் கூட.." என்றவனின் பதிலில் அவர் முகம் சற்று வெளிரவே செய்தது...
"எப்போவுமே அநீதியே ஜெயிச்சுக்கிட்டே இருக்காது மிஸ்டர் ஜெயராமன்.. கடவுள் ஏதோ ஒரு ரூபத்துல உண்மையா வெளிய கொண்டு வந்தே தீருவாரு..."
"என் மகன் ஜெயிக்க பொறந்தவன்டா..."
"மகன் பூராணம் பாடுனது போதும்... அந்த பழைய லேப் உள்ள போற வழி தான் தெரியணும்.. இப்போ அதிரல் இருக்க இடத்துக்கு போக வழி சொல்ல போறியா சாகுறியா?..."என்றான் அவன்
சரியாக லேப் வரை சென்று விட்டானே என அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை... அதனை முகத்தில் மறைத்தவர், "செத்தாலும் என் மகன காட்டி கொடுக்க மாட்டேன்..."
"ம்ம்ம் நல்ல அப்பா... இப்படி ஒரு அப்பாக்கு அப்படி ஒரு புள்ள இருக்குறதுல நியாயம் தான்.. பட் சாரதா மேம் மாதிரி நல்லவங்களுக்கு இப்படி ஒரு புருஷன்.. அப்படி ஒரு புள்ள.. சொல்லவே விசித்திரமா இல்லை...."
"டேய்ய்ய்ய்ய்... என்னடா பண்ண சாருவ..." என்றவர் கண்ணில் அத்தனை கலக்கம்..
"உங்களுக்கு வந்தா ரெத்தம் இதே அடுத்தவனுக்கு வந்தா?... எல்லாம் உயிர் தான, எத்தனை குழந்தைங்க வீணா அதோட உயிரை விட்டிருக்கும்.. எத்தனை கனவுகளோட இருந்த வாலிப வயசு பிள்ளைங்களோட கனவ செதச்சிருப்பீங்க... அடுத்தவன் பொண்டாட்டின்னதும் அசால்ட்டா பேசுன, இப்போ உன் பொண்டாட்டிக்கு ஒன்னுனதும் பதறுற.."
"என்ன என்ன வேணா பண்ணு சாரதாவ எதுவும் பண்ணாத அவளுக்கு நாங்க பண்ற வேலைல எந்த சம்பந்தமும் இல்லை... அவளுக்கு எதுவுமே தெரியாது.. அவளை விட்டுடு.."
"தெரியாதுன்னு தான் எனக்கே தெரியுமே.. தெரிய வெச்சிட்டா போச்சு.." என்றவன் "புகழ்" என்று சத்தம் போட, புகழ் அங்கே வர பின்னே சாரதாவும் கண்களில் கண்ணீருடன் வெளியே வந்தார்...
லேபிள் இருந்து நேரே அவன் சென்றது சிஸ்டர் மேரியிடம் தான்.. அவரிடம் பேசி சாரதாவை தொடர்பு கொண்டவன்... நடந்த விடயத்தை மேலோட்டமாய் விளக்க அவருக்கோ அதிர்ச்சி.. என்ன சொல்வது நம்புவதா வேண்டாமா என்றெல்லாம் யோசனைக்கு சென்றுவிட்டார்...
அவரிடம் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொண்டவன்... அவர் கணவன் மீதான அவரின் நம்பிக்கையே அந்த ஜெயராமானின் இந்த ஆட்டதுக்கு காரணம் என்பதை புரிந்து கொண்டான்...
அவரிடம் பல மன்றடல்களில் பின்னர் அவர் வருவதாக அரைமனதாய் சம்மதித்தார்.. அதுவும் சிஸ்டர் மேரி கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம்... அவரை அழைத்து வரத்தான் புகழை அனுப்பி இருந்தான்... ஜெயராமனை வாய் திறக்க வைக்கும் ஆயுதம் அவர் தான் என்பது நிலவனுக்கு புரிந்தது.. அதனால் தான் இந்த நடவடிக்கையும் கூட...
சற்று முன் தான் புகழ் அவரை இங்கே அழைத்து வந்திருந்தான்... முதலில் ஜெயராமானின் நிலையை கண்டு அவர் பதற, அடுத்து அவர் பேசியவைகளில் உண்மை அப்பட்டமாக தெரிந்ததில் உள்ளம் நொறுங்க நின்றிருந்தார்....
உள்ளே நுழைந்த மனைவியை கண்டவரது உள்ளம் பட்ட வேதனை அவர் மட்டுமே அறிவார்... எத்தனையோ பிஞ்சு குழந்தைகளை கொல்லும் போது வராத குற்றஉணர்வு அவர் மனைவியை கண்டதும் வந்தது... சில ஜென்மங்கள் எப்போதும் இப்படித்தான்... தங்களுக்கு ஒன்று என்றால் மாட்டுமே துடிக்கவும் செய்யும்...
"சாரு... இவங்க சொல்றது உண்மை இல்லடா நம்பாத... உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க... நம்பாதடா..."
அவரோ கண்களை துடைத்துக்கொண்டு "அவங்க சொன்னத நான் ஏங்க நம்ப போறேன்... இவ்வளவு நாள் நீங்க சொன்ன பொய்யையே நம்பி வாழ்ந்த இந்த மூளை அவ்வளவு சீக்கிரம் உண்மைய நம்பிடுமா என்ன?... இப்போவும் நீங்க சொன்னதை தான் நம்ப போறேன்... இனியும் அப்படியே முட்டாளாவே இருக்க போறேன்..."
"டேய் சாருமா... அப்படியெல்லாம் இல்லை டா..." என்றவருக்கு மேலும் பேச வார்த்தை வரவில்லை...
என்னவென்று சொல்வார் அதான் உண்மை தெரிந்துவிட்டதே.. கண்களில் கண்ணீருடன் நிற்கும் மனைவியிடம் என்ன சொல்வார்... தான் செய்யவில்லை என்று பொய்யா??... இல்லை செய்தவற்றை முழுமையாகவா??... சொன்னால் தாங்குவாரா??.. முதலில் தன்னால் சொல்ல முடியுமா??... என்றெல்லாம் பல யோசனை அவர் மனதில்...
அதன் பின் சாரதா எதுவும் பேசவில்லை.. பார்வை மொத்தமும் அவர் கணவரிடம் தான்... ஆனால் அதிலோ எப்போதும் இருக்கும் காதல் இருக்கவில்லை மாறாக அந்நிய பார்வை மட்டுமே.... ஜெயராமனை அதுவே கொல்லாமல் கொன்றது...
அதன் பின் மடை திறந்த வெல்லம் தான்.. தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தார்... புகழ் அதனை ஆதரமாக பதிவும் செய்து கொண்டான்..
"ரொம்ப தேங்க்ஸ் மேம்.. எங்கள நம்பி வந்ததுக்கு.. அண்ட் ரொம்ப சாரி.. இப்படி ஒரு கஷ்டத்த உங்களுக்கு குடுத்ததுக்கு..."
"இட்ஸ் ஓகே யங் மேன்.. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க... இனிமேல் எனக்கு புருசனும் இல்லை புள்ளையும் இல்லை... இப்போ போய் உங்க வைப பர்ஸ்ட் காப்பாத்துங்க.. மீதி அப்பறம் பேசிக்கலாம்..." என்றவர் ஒருநிமிடம் கூட தாமதிக்கவில்லை வெளியேறிவிட்டார்...
ஜெயராமானின் முகத்தை கூட அவருக்கு பார்க்க பிடிக்கவில்லை.. நிலவனும் புகழும் தாங்களே வீட்டில் விடுவதாக எவ்வளவு கூறியும் மறுத்தவர்.. அவராகவே நடந்து சென்றுவிட்டார்...
அவருக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட நிலவனும் அவர் போக்கிலேயே விட்டுவிட்டான்...
ஆனால் அப்படியே விடவில்லை.. அவர் இருக்கும் மனநிலைக்கு எந்த தப்பான முடிவுக்கும் போய் விடுவாரோ என்று அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது...
தனக்கு கீழ் வேலை செய்யும் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் அதிகாரி ஒருவனுக்கு அழைத்தவன்.. நிலைமைய எடுத்து செல்லி அவரை பின் தொடருமாறு பணிந்தவன்.. அவர் வீடு சென்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்... அதன் பிறகே மனைவியை காக்க கிளம்பி இருந்தான்...
இத்தனை நாள் ஓடி அலைந்த முயற்சிகளுக்கு விடையாய், அவன் மனைவி இருக்கும் இடத்துக்கான வழியை அறிந்துகொண்டாலும்... தனக்கு உதவிய ஒரு உயிரின் மனநிலை அந்த நேரத்தில் கூட முக்கியம் என்று கருதியது அவன் உள்ளம்...
அங்கே கல்லூரியில் உள்ள அந்த லேபிற்கே மீண்டும் சென்றனர் நிலவனும் புகழும்...
அவர்கள் வாகனத்தை அங்கே நிறுத்த.. அவன் ஏற்கனவே சொல்லி இருந்ததற்கு இணங்க, முரளிகிருஷ்ணனின் உதவியுடன் ஐவர் கொண்ட நம்பிக்கையான குழு ஒன்றும் வந்திறங்கியது... இன்று கல்லூரி விடுமுறை தினம் என்பதால் மாணவர் கூட்டம் அங்கு இல்லை... அதுவும் பெரிய உதவியாகிப்போனது...
நேரே அந்த லேபினுள் நுழைந்து கொண்டவன்.. ஜெயராமன் சொன்னபடி அங்கு வரையட்டிருந்த அந்த லோர்ட் கிருஷ்ணனின் கண் மணிக்குள் சிறிதாய் இருந்த பட்டன் போன்ற ஒன்றை தொட்டதுதான் தாமதம்.. சட்டென்று அதற்கு எதிர் பக்கமாக இருந்த சுவர் தன்னால் இரண்டாக பிளந்து திறந்து கொண்டது... அங்கே வர்ஷி சொன்னது போலவே.. கீழ் நோக்கி செல்லும் படியும் இருந்தது...
"நீங்க மூனு பேரும் இங்கயே இருங்க.. உள்ளுக்குள் எத்தனை பேர் இருப்பாங்கன்னு தெரியல... முரளி சார் இன்னும் போர்ஸ் கொஞ்ச நேரத்துல வரும்னு சொல்லி இருக்காரு.. அவங்க வந்ததும் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நான் இன்போர்ம் பண்ணப்பறம் உள்ள வந்தா போதும்..." என்று தன்னோடு வந்த அந்த ஐவர் குழுவில் மூவரை அங்கேயே இருக்க பணித்தவன்...
ஏழு பேரும் ஒன்றாக தொடர்பில் இருக்கும் படி தொலைபேசி அழைப்பை இணைத்தவன்... மற்ற இருவரோடு இவனும் புகழும் அந்த படி வழியே உள்ளே இறங்கினர்...
சுற்றிலும் விசித்திர வெளிச்சம்... நிலவன் கண் சற்று சிரமப்பட்டே திறக்க வேண்டி இருந்தது.. மெல்ல இமைத்தட்டி கண்களை திறந்தவன் முன்னே கீழே செல்லும் படிகள் தான் கண்ணில் பட்டது.. அவனும் யோசனையுடனே அந்த படிகளில் இறங்கினான்..
ஏழு எட்டு படிகள் தான் முன்னே சென்றிருப்பான் மேலே பெரிய சத்தம் என்னவென்று திரும்பி பார்க்க, மேலே உள்ள ஒவ்வொரு படியாய் காணாமல் போய் கொண்டிருந்தது... குழப்பம் மேலோங்க கீழே பார்க்க கீழிருந்தும் படிகள் ஒன்றன் பின் ஒன்றாய் காணாமல் போய் கொண்டிருந்தது...
குழப்பம் மேலோங்க அவன் நின்றிருந்த நேரம் அவன் நின்றிருந்த படியும் மறைய, அவன் கீழே விழ போன கணம் ஒரு கை அவனை பிடித்துக்கொண்டது... கூடவே மறைந்த படிக்களும் மீள தோன்றியிருந்தது...
நிலவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.. தன்னை பிடித்த கை யாருடையது என்று உற்று நோக்க, அங்கே அறிவழகன் நின்றிருந்தான்...
"அறிவு.." என்று வியப்புடன் அவன் அழைக்க, அறிவழகனிடம் புன்னகை..
"நீ... நீ..."
"நான் தான் நிலவா..."
"அறிவு.. நீ.." என்றான் நிலவன் மீண்டும், அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வரவில்லை...
"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."
"என்ன பேசுற அறிவு... நீ உயிரோட.."
"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரியவரும்..." என்று சொன்னதையே மீண்டும் சொன்னபடி இருக்க, நிலவனுக்கோ குழப்பம்..
"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..." என்று சொன்னவனது உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய..
"அறிவு..." என்று கத்தியபடி நிலவன் எழுந்திருந்தான்...
"என்னாச்சு நிலவா.." என்று புகழ் அருகில் வர.. அப்போது தான், தான் கண்டது கனவென்பதே நிலவனுக்கு புரிந்தது...
"நத்திங்.. தூங்கிட்டேனா?... ஏன் தூங்க விட்ட புகழ்?.." என்றபடி எழுந்து தலையை பிடித்துக்கொண்டவனுக்கு கனவின் தாக்கம் குறைவதாய் இல்லை..
"தூங்கல மயங்கிட்ட.. ரொம்ப வயலண்டா பிஹெவ் பண்ண ஆரம்பிச்சிட்ட, அதான் அறைய வேண்டியதா போயிடிச்சு... ரொம்ப நேரம் எல்லாம் இல்லை ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ் தான் இருக்கும்.. இப்போ பெட்டரா பீல் பண்றியா?..."
"ம்ம்ம்ம்.." என்றவன் யோசனை எல்லாம் கனவில் தான்.. அதனை கனவு தான் என்று ஒதுக்கவும் முடியவில்லை... அறிவழகனும் சரி கடவுளும் சரி அவனுக்கு எதையோ உணர்த்த வருவது போலவே ஒரு தோன்றம் அவனுள்...
"என்னப்பாரு எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."
"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..."
யோசனைனையில் ஜீப்பினுள்ளே அமர்ந்திருந்தவனுக்கு நண்பன் சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்தது...
சிறிது நேர யோசனைக்கு பிறகு.. ஏதோ தோன்றியவனாக... தன் தொலைபேசியை ஆராய்ந்தவன் அவன் தேடிய காணொளி கிடைக்கவும்.. அதனை பார்வையிட்டான்...
ஆம் அது அறிவழகன் அவனுக்கு இறுதியாக அனுப்பிய காணொளி தான்....
இரண்டு முறை பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் கோபத்தில் தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வீசயவன், ஜீப்பை விட்டு வெளியே வந்து புகழின் அருகில் நின்றான்...
புகழோ தீவிர யோசனையில் இருக்க, நிலவன் வந்தது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..
சிறிது நேர அமைதிக்கு பின் புகழோ, "மச்சான் வர்ஷி சொன்ன அந்த லோர்ட் கிருஷ்ணவோட படம் எனக்கு தெரிஞ்சி எங்கயும் இருக்குற மாதிரி தோணல... ஜேகே காலேஜ், ஹாஸ்பிடல்.. இப்படி தேடுனோம்னா ஒரு வேளை கிடைக்க வாய்ப்பிருக்குல..." என்றதும் தான் தாமதம் நிலவனோ ஜீப்பை நோக்கி ஓடியவன் தன் தொலைபேசியை உயிர்ப்பிற்க அதுவோ அவன் வீசி எரியும் போதே உயிரை விட்டிருந்தது..
"சிட்... புகழ் சார்ஜர் கேபிள் இருக்கா.."
"இல்லையே மச்சான்.. வேணும்னா பக்கத்துல ஸ்டேஷன் போய் போட்டுக்கலாம்..." என்றான் ஏதோ அவசரம் என்பதை உணர்ந்து...
அங்கு செல்லும் அளவுக்கு நிலவனுக்கு பொறுமை இருக்கவில்லை.. உடனடியாக பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான்...
"உன் போன்ல சார்ஜ் இருக்கா?.. குடு..." என்று வாங்கியவன் பூஜாவுக்கு தொடர்பு கொண்டான்...
"ஹெலோ பூஜா" என்றவன் முடிக்கவில்லை
"என்னாச்சு நிலவா?.. அதிரல காப்பாத்திட்டியா?.. எங்க அவ?.. எப்போ கூட்டிட்டு வருவ?..." என்று அந்த பக்கம் அவள் கேள்விகளை அடுக்க..
"பூஜா லிசின்.. பதில் சொல்ற அளவுக்கு எனக்கு டைம் இல்லை.. என் லேப்டாப்ல அறிவோட வீடியோ சேவ் பண்ணி வெச்சிருக்கேன்.. அத இப்போ புகழ் நம்பருக்கு சென்ட் பண்ணு.. குயிக்.." என்றவன் அழைப்பு துண்டித்து சிறிது நேரத்தில் அந்த காணொளி வந்ததற்காக சத்தம் கேட்க..
அதனை உயிர்ப்பித்தவன் பார்வையிட தொடங்கினான்...
அவன் எதிர் பார்த்தது போல.. அந்த லோர்ட் கிருஷ்ணாவின் படம் அறிவழகன் பேசிகொண்டிருந்த காணொளியில் அவனுக்கு பின் பக்க சுவரில் தெரிந்தது...
கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்பது போல.. இவ்வளவு நாள் எண்ணத்தில் இல்லாததால் அது அவன் மூளையில் பதிந்திருக்கவில்லை... இன்றோ புகழின் பேச்சில் எழுந்த சந்தேகத்துடன் தேடிய போதுதான் அதனை மூளை உணர்த்தி இருந்தது...
புகழிடமும் காட்டியவன் மனதில் தன்னவளை நெருங்கி விட்ட சந்தோசம்...
ஆனால் இந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாதே.. விடியும் வரை கத்திருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு, நிமிடம் ஒவ்வொன்று வருடமாய் கடக்கும் மாயை...
அந்த நேரத்தை வீணடிக்காமல் முரளி கிருஷ்ணனை தொடர்பு கொண்டான்.. அவனுக்கு தெரியும் இந்த நேரம் அழைப்பதற்கான நேரம் இல்லை என்பது.. ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லையே.. அவன் கடக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பாய் தான் கடந்தது...
அவரிடம் செய்யவேண்டியவற்றையும் சொன்னவன்.. புகழை வற்புறுத்தி சிறிது நேரம் உறங்கும் படி பணித்திருந்தான்...
அவன் யோசனையுடனே கண் மூட.. அவனது பிறந்தநாள் அன்று அவளோடு பேசிய எண்ணங்களை அவனுள்...
அன்றிறவு அவன் கைகளைக்குள் அணைவாய் படித்திருத்தவளது வாய் ஒரு நிமிடம் அமைதியாய் இருக்கவில்லை.. தூங்கலாம் என்று அவளை நெஞ்சில் போட்டுகொண்டவனை எங்கே தூங்க விட்டாள்.. பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.. இவனும் ம்ம்ம் கொட்டி கேட்டுக்கொண்டே தான் இருந்தான்...
அவள் பேசிய அத்தனையும் அவர்கள் எதிர்காலம் தான்...
"நிலவா குறஞ்சது நம்ம ஆறு குழந்தைங்க பெத்துக்கணும்..."
"குறைஞ்சதே ஆறுங்களா மெண்டர் மேடம்..."
"ப்ச்.. குறுக்க பேசாத.. என்று அவன் வாயில் அடித்தவள்.. "கண்ணு வைக்காத எரும..." என்று அவன் நெஞ்சில் பல் பதியும் வரை கடித்திருந்தாள்..."
"ஸ்ஸ்ஸ்ஸ்... ராட்சசி வலிக்குதுடி..."
"வலிக்கட்டும் நல்லா.. பேசும் போது இடைல சத்தம் போட்ட கொன்னுடுவேன் பாத்துக்க.."
"ம்ம்ம்ம்.. பேசமாட்டேனே.. நீ பேசு ராஜாத்தி..." என்றவன் அவள் தலையில் முத்தமிட்டு இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்..
"குறைஞ்சது ஆறு பசங்க பெத்துக்கணும்.. முதலாவது பையன்... அப்பறம் அவனுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு.. என் மூத்த பையன் அவனோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவனுக்கு தம்பியா ஒரு பையன்.. பொண்ணு அவளோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவளுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு... அப்பறம் இந்த நாலு பேருக்கும் செல்லமா ஒரு தங்கச்சியும் ஒரு தம்பியும்... அவ்வளவு தான்.. இதுக்கு மேல வேணும்னா நம்ம இஷ்டம்.." என்றவள் அவனை நிமிர்ந்து பாக்க, அவன் பார்வையில் முகத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்..
"ரொம்ப தான்டி... இவ்வளவு ஐடியா வெச்சிட்டு நீ இப்படி வெக்கப்பட்டீனா.. எப்படி உன் கனவ நனவாக்கிறது?.. நான் தான் உன் கனவுக்கு உழைக்கணும் ஞாபகம் இருக்கட்டும்.." என்று அவளை சீண்டியவனுக்கு தெரியும்.. தனியே வளரந்த அவளது தனிமையின் ஏக்கமே இந்த உணர்வுகள் எல்லாம் என்று..
"எனக்காக கஷ்டப்படமாட்டியா?..." என்றாள் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு..
"அடியேய்.. எய்டீன் பிளஸ் கண்டென்ட முறைச்சிட்டே பேசுற ஆள் நீ ஒருத்தி தான்டி..."
"அதெல்லாம் அப்படிதான்.." என்றவள் முறுக்கிக்கொள்ள...
"கறும்பு தின்ன கூலியா?... நீ கவலைப்படாதடி செல்லம்.. மாமா எதுக்கிருக்கேன்.. ஆறு என்ன ஒரு டசனே பெத்துக்கலாம்.. என்ன வேல வெட்டிக்கு போகாம இதான் வேலைனு இருக்கணும்..." என்று சிரித்தவன் அவள் கையால் அடிகளும்.. பல்லால் பல கடிகலையும் பெற்றுக்கொண்டான்...
அன்றைய நாளின் நினைவில் மூடி இருந்த கண்களில் கண்ணீர் தன்னால் கீழ் இறங்கியது... கண்களை திறக்க அவளில்லாமல் இரண்டாவது விடியலும் வந்திருந்தது... கண்களை துடைத்து கொண்டவன் புகழையும் எழுப்பி.. ஜேகே கல்லூரியை நோக்கி விரைந்தான்...
காலை ஆறு மணி தான் ஆகி இருந்தது... யாரும் வந்திருக்க வில்லை.. வாட்ச்மேன் கூட அப்போதுதான் வந்திருந்தார்.. அவரிடம் பேசி உள்ளே நுழைந்து கொண்டவன்.. நேரே அந்த பழைய லேபிற்கு தான் சென்றான்..
பாவனையில் இல்லாத காரணத்தால் வெளியே செடி கொடிகள் படந்து வாயிலையே மூடியபடி தான் இருந்தது...
கொடிகளை எல்லாம் கைகளால் அகற்றியவன் உள்ளே நுழைய.. அந்த இடமே சிலந்தி வலைகள் நிறைந்து, பார்க்க பழைய பேய் பட அறை போலவே கட்சியளித்தது...
அவன் கால்கள் நேரே அந்த கடவுள் கிருஷ்ணனுடைய படத்தின் முன் தான் போய் நின்றது... அதனை புகழின் தொலைபேசியில் படம் பிடித்தவன்.. வர்ஷியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவளிடம் இது தானா என்று அதனை உறுதிப்படுத்தியும் கொண்டான்...
சுற்றி எவ்வளவு தேடியும் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை... நான்கு பக்க சுவர் தான் இருந்தது... வர்ஷி சொன்ன படிகள் போன்ற எதுவும் அங்கு இருப்பதாக தெரியவில்லை...
ஒருமணி நேர தேடலும் முடிவுக்கு வந்திருந்தது... இவ்வளவு நெருங்கியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை அவனுள் இருக்கத்தான் செய்தது...
"மச்சான்.. இங்க எதுவுமே இல்லையே டா.. தப்பான இடத்துக்கு வந்துட்டோமா??.."
"நோ புகழ் சரியா தான் வந்திருக்கோம்.. இங்க லேப் பில்டிங் மட்டும் தான் உடைஞ்சிருக்கு.. எகியூப்மெண்ட்ஸ் அப்படியே தான் இருக்கு... இத்தன வருஷம் பாவனை இல்லாம இருந்தா எப்போவோ துருப்பிடிச்சிருக்கணும்... பட் அப்படி எதுவுமே நடக்கல சோ இங்க டெஸ்டிங் நடந்துட்டு தான் இருக்கனும்... ஆனா இங்க உண்மை மறைஞ்சிருக்கு அத தான் கண்டுபிடிக்க நாம முயற்சி செய்யணும்.." என்றவன் சிறிது அமைதிக்கு பின்
"லெட்ஸ் கோ.." அங்கிருந்து வெளியேறி இருந்தான்...
புகழும் எங்கே என்று கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை... போக வேண்டிய ஓரிடத்துக்கு சென்றவன், அங்கே பேசி அவனுக்கான பதில் கிடைத்ததும் புன்னகையுடன் பூஜாவின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.
பூஜாவின் வீட்டில் நிலவனை இறக்கி விட்ட புகழ், நண்பனின் கட்டளையை நிறைவேற்ற ஓரிடம் சென்றான்..
யாரோ வரும் சத்தம் கேட்ட ஜெயராமன் கண்களை உயர்த்தி பார்க்க நிலவனின் உருவம் மங்களாகவே தெரிந்தது... கண்களை சிமிட்டி பார்வையை கூர்மையாக்க அவன் உருவம் படிப்படியாக தெளிவாகியது அவருக்கு....
"ஹாஹாஹா... நீ எப்படியும் திருப்பி எங்கிட்ட தான் வருவன்னு நல்லாவே தெரியும்.. எப்படியும் உன்னால கண்டுபிடிக்கவே முடியாது... என் பையன யாருனு நெனச்ச.. மருத்துவ உலகத்தோட முடி சூடா அரசன் அவன்... யாராளையும் சாய்க்க முடியாது..."
"அப்படிப்பட்ட உங்க மகன் தான் என் மருந்த திருடுன திருடனும் கூட.." என்றவனின் பதிலில் அவர் முகம் சற்று வெளிரவே செய்தது...
"எப்போவுமே அநீதியே ஜெயிச்சுக்கிட்டே இருக்காது மிஸ்டர் ஜெயராமன்.. கடவுள் ஏதோ ஒரு ரூபத்துல உண்மையா வெளிய கொண்டு வந்தே தீருவாரு..."
"என் மகன் ஜெயிக்க பொறந்தவன்டா..."
"மகன் பூராணம் பாடுனது போதும்... அந்த பழைய லேப் உள்ள போற வழி தான் தெரியணும்.. இப்போ அதிரல் இருக்க இடத்துக்கு போக வழி சொல்ல போறியா சாகுறியா?..."என்றான் அவன்
சரியாக லேப் வரை சென்று விட்டானே என அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை... அதனை முகத்தில் மறைத்தவர், "செத்தாலும் என் மகன காட்டி கொடுக்க மாட்டேன்..."
"ம்ம்ம் நல்ல அப்பா... இப்படி ஒரு அப்பாக்கு அப்படி ஒரு புள்ள இருக்குறதுல நியாயம் தான்.. பட் சாரதா மேம் மாதிரி நல்லவங்களுக்கு இப்படி ஒரு புருஷன்.. அப்படி ஒரு புள்ள.. சொல்லவே விசித்திரமா இல்லை...."
"டேய்ய்ய்ய்ய்... என்னடா பண்ண சாருவ..." என்றவர் கண்ணில் அத்தனை கலக்கம்..
"உங்களுக்கு வந்தா ரெத்தம் இதே அடுத்தவனுக்கு வந்தா?... எல்லாம் உயிர் தான, எத்தனை குழந்தைங்க வீணா அதோட உயிரை விட்டிருக்கும்.. எத்தனை கனவுகளோட இருந்த வாலிப வயசு பிள்ளைங்களோட கனவ செதச்சிருப்பீங்க... அடுத்தவன் பொண்டாட்டின்னதும் அசால்ட்டா பேசுன, இப்போ உன் பொண்டாட்டிக்கு ஒன்னுனதும் பதறுற.."
"என்ன என்ன வேணா பண்ணு சாரதாவ எதுவும் பண்ணாத அவளுக்கு நாங்க பண்ற வேலைல எந்த சம்பந்தமும் இல்லை... அவளுக்கு எதுவுமே தெரியாது.. அவளை விட்டுடு.."
"தெரியாதுன்னு தான் எனக்கே தெரியுமே.. தெரிய வெச்சிட்டா போச்சு.." என்றவன் "புகழ்" என்று சத்தம் போட, புகழ் அங்கே வர பின்னே சாரதாவும் கண்களில் கண்ணீருடன் வெளியே வந்தார்...
லேபிள் இருந்து நேரே அவன் சென்றது சிஸ்டர் மேரியிடம் தான்.. அவரிடம் பேசி சாரதாவை தொடர்பு கொண்டவன்... நடந்த விடயத்தை மேலோட்டமாய் விளக்க அவருக்கோ அதிர்ச்சி.. என்ன சொல்வது நம்புவதா வேண்டாமா என்றெல்லாம் யோசனைக்கு சென்றுவிட்டார்...
அவரிடம் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொண்டவன்... அவர் கணவன் மீதான அவரின் நம்பிக்கையே அந்த ஜெயராமானின் இந்த ஆட்டதுக்கு காரணம் என்பதை புரிந்து கொண்டான்...
அவரிடம் பல மன்றடல்களில் பின்னர் அவர் வருவதாக அரைமனதாய் சம்மதித்தார்.. அதுவும் சிஸ்டர் மேரி கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம்... அவரை அழைத்து வரத்தான் புகழை அனுப்பி இருந்தான்... ஜெயராமனை வாய் திறக்க வைக்கும் ஆயுதம் அவர் தான் என்பது நிலவனுக்கு புரிந்தது.. அதனால் தான் இந்த நடவடிக்கையும் கூட...
சற்று முன் தான் புகழ் அவரை இங்கே அழைத்து வந்திருந்தான்... முதலில் ஜெயராமானின் நிலையை கண்டு அவர் பதற, அடுத்து அவர் பேசியவைகளில் உண்மை அப்பட்டமாக தெரிந்ததில் உள்ளம் நொறுங்க நின்றிருந்தார்....
உள்ளே நுழைந்த மனைவியை கண்டவரது உள்ளம் பட்ட வேதனை அவர் மட்டுமே அறிவார்... எத்தனையோ பிஞ்சு குழந்தைகளை கொல்லும் போது வராத குற்றஉணர்வு அவர் மனைவியை கண்டதும் வந்தது... சில ஜென்மங்கள் எப்போதும் இப்படித்தான்... தங்களுக்கு ஒன்று என்றால் மாட்டுமே துடிக்கவும் செய்யும்...
"சாரு... இவங்க சொல்றது உண்மை இல்லடா நம்பாத... உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க... நம்பாதடா..."
அவரோ கண்களை துடைத்துக்கொண்டு "அவங்க சொன்னத நான் ஏங்க நம்ப போறேன்... இவ்வளவு நாள் நீங்க சொன்ன பொய்யையே நம்பி வாழ்ந்த இந்த மூளை அவ்வளவு சீக்கிரம் உண்மைய நம்பிடுமா என்ன?... இப்போவும் நீங்க சொன்னதை தான் நம்ப போறேன்... இனியும் அப்படியே முட்டாளாவே இருக்க போறேன்..."
"டேய் சாருமா... அப்படியெல்லாம் இல்லை டா..." என்றவருக்கு மேலும் பேச வார்த்தை வரவில்லை...
என்னவென்று சொல்வார் அதான் உண்மை தெரிந்துவிட்டதே.. கண்களில் கண்ணீருடன் நிற்கும் மனைவியிடம் என்ன சொல்வார்... தான் செய்யவில்லை என்று பொய்யா??... இல்லை செய்தவற்றை முழுமையாகவா??... சொன்னால் தாங்குவாரா??.. முதலில் தன்னால் சொல்ல முடியுமா??... என்றெல்லாம் பல யோசனை அவர் மனதில்...
அதன் பின் சாரதா எதுவும் பேசவில்லை.. பார்வை மொத்தமும் அவர் கணவரிடம் தான்... ஆனால் அதிலோ எப்போதும் இருக்கும் காதல் இருக்கவில்லை மாறாக அந்நிய பார்வை மட்டுமே.... ஜெயராமனை அதுவே கொல்லாமல் கொன்றது...
அதன் பின் மடை திறந்த வெல்லம் தான்.. தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தார்... புகழ் அதனை ஆதரமாக பதிவும் செய்து கொண்டான்..
"ரொம்ப தேங்க்ஸ் மேம்.. எங்கள நம்பி வந்ததுக்கு.. அண்ட் ரொம்ப சாரி.. இப்படி ஒரு கஷ்டத்த உங்களுக்கு குடுத்ததுக்கு..."
"இட்ஸ் ஓகே யங் மேன்.. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க... இனிமேல் எனக்கு புருசனும் இல்லை புள்ளையும் இல்லை... இப்போ போய் உங்க வைப பர்ஸ்ட் காப்பாத்துங்க.. மீதி அப்பறம் பேசிக்கலாம்..." என்றவர் ஒருநிமிடம் கூட தாமதிக்கவில்லை வெளியேறிவிட்டார்...
ஜெயராமானின் முகத்தை கூட அவருக்கு பார்க்க பிடிக்கவில்லை.. நிலவனும் புகழும் தாங்களே வீட்டில் விடுவதாக எவ்வளவு கூறியும் மறுத்தவர்.. அவராகவே நடந்து சென்றுவிட்டார்...
அவருக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட நிலவனும் அவர் போக்கிலேயே விட்டுவிட்டான்...
ஆனால் அப்படியே விடவில்லை.. அவர் இருக்கும் மனநிலைக்கு எந்த தப்பான முடிவுக்கும் போய் விடுவாரோ என்று அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது...
தனக்கு கீழ் வேலை செய்யும் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் அதிகாரி ஒருவனுக்கு அழைத்தவன்.. நிலைமைய எடுத்து செல்லி அவரை பின் தொடருமாறு பணிந்தவன்.. அவர் வீடு சென்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்... அதன் பிறகே மனைவியை காக்க கிளம்பி இருந்தான்...
இத்தனை நாள் ஓடி அலைந்த முயற்சிகளுக்கு விடையாய், அவன் மனைவி இருக்கும் இடத்துக்கான வழியை அறிந்துகொண்டாலும்... தனக்கு உதவிய ஒரு உயிரின் மனநிலை அந்த நேரத்தில் கூட முக்கியம் என்று கருதியது அவன் உள்ளம்...
அங்கே கல்லூரியில் உள்ள அந்த லேபிற்கே மீண்டும் சென்றனர் நிலவனும் புகழும்...
அவர்கள் வாகனத்தை அங்கே நிறுத்த.. அவன் ஏற்கனவே சொல்லி இருந்ததற்கு இணங்க, முரளிகிருஷ்ணனின் உதவியுடன் ஐவர் கொண்ட நம்பிக்கையான குழு ஒன்றும் வந்திறங்கியது... இன்று கல்லூரி விடுமுறை தினம் என்பதால் மாணவர் கூட்டம் அங்கு இல்லை... அதுவும் பெரிய உதவியாகிப்போனது...
நேரே அந்த லேபினுள் நுழைந்து கொண்டவன்.. ஜெயராமன் சொன்னபடி அங்கு வரையட்டிருந்த அந்த லோர்ட் கிருஷ்ணனின் கண் மணிக்குள் சிறிதாய் இருந்த பட்டன் போன்ற ஒன்றை தொட்டதுதான் தாமதம்.. சட்டென்று அதற்கு எதிர் பக்கமாக இருந்த சுவர் தன்னால் இரண்டாக பிளந்து திறந்து கொண்டது... அங்கே வர்ஷி சொன்னது போலவே.. கீழ் நோக்கி செல்லும் படியும் இருந்தது...
"நீங்க மூனு பேரும் இங்கயே இருங்க.. உள்ளுக்குள் எத்தனை பேர் இருப்பாங்கன்னு தெரியல... முரளி சார் இன்னும் போர்ஸ் கொஞ்ச நேரத்துல வரும்னு சொல்லி இருக்காரு.. அவங்க வந்ததும் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நான் இன்போர்ம் பண்ணப்பறம் உள்ள வந்தா போதும்..." என்று தன்னோடு வந்த அந்த ஐவர் குழுவில் மூவரை அங்கேயே இருக்க பணித்தவன்...
ஏழு பேரும் ஒன்றாக தொடர்பில் இருக்கும் படி தொலைபேசி அழைப்பை இணைத்தவன்... மற்ற இருவரோடு இவனும் புகழும் அந்த படி வழியே உள்ளே இறங்கினர்...
Last edited: