"யாரு உன் கிட்ட சைன் வாங்குனா?... நீயா அப்படி நெனச்சுகிட்ட.." என்றதும் குழப்பத்தில் எழுந்து அமர்ந்தே விட்டாள்... இப்போது அவன் தலை அவள் மடியில்...
"என்னடா சொல்லுற..."
"பெரிய கையெழுத்து... ஏ கொஞ்சம் ஸ்டைலா போட்டு கோழி கிண்டுன மாதிரி ரெண்டு கிறுக்கு.. குட்டி ஆர் பக்கத்தில ரெண்டு கோடு இது ஒரு சைன் இத எங்களால போடமுடியாதா? என்றான் சிரிப்புடன்
அவன் தலையில் கொட்டியவள் "பிராடு பயலே... இன்னும் என்ன எல்லாம் எனக்கு சொல்லாம பண்ணி இருக்க நீ..." என முறைப்புடன் வினவ
"அதெல்லாம் அப்பப்போ டைம் வரும் போது சொல்லுவோம்.. இப்போ தூங்கலாம் வா.." என்று அவளை தன் நெஞ்சில் போட்டுகொண்டு கண்களை மூடிக்கொள்ள அவளும் விரும்பியே அவனை அணைத்துக்கொண்டாள்...
பொழுது மெல்ல விடிய தொடங்க, நேரத்துக்கே எழுந்த வாசுகி, வேலை எல்லாம் முடித்தவர் மகனுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து சொல்லலாம் என சமையல் அறையில் இருந்து வாசல் நோக்கி செல்ல
அந்த நேரம் அறையிலிருந்து அபினாஷுக்கு பால் எடுக்க வெளியே வந்த பூஜா "எங்கமா போறீங்க.." என்றாள்
"நிலவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்லடா அதான் விஷ் பண்ணலாம்னு போறேன்..."
"அதுக்கு நீங்க என் வீட்டுக்கு தான் போகணும்.."
"என்னடி சொல்லுற" என்றவருக்கு நேற்று நடந்தவற்றை அவள் சொல்ல, அவருக்கு முகமெல்லாம் பூரிப்பு...
"ரொம்ப சந்தோசம் டா.. புள்ளைங்க ரெண்டும் சந்தோசமா இருந்தாலே போதும்... அதி வந்ததும் அவளுக்கு சுத்தி போடணும்..." என்று பேசிகொண்டிருக்க
கீதா, நிஷா அதுக்கடுத்து புகழ், விஷ்ணு என ஒவ்வொருத்தராக வர அவர்களுக்கும் விடயம் பகிரப்பட்டது.. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ஆனால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் மனதிலோ தனக்கு சொல்லப்பட்ட வேலையை முடிக்கும் வன்மம்..
அங்கே பூஜாவின் வீட்டிலோ முதலில் கண் மூழித்தது அதிரல் தான்.. அவன் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்தவளை ஒருகையால் வளைத்து பிடித்திருந்தான்.. மெல்ல அவன் கையை விளக்கி எழுந்தவள்..
"ஹாப்பி பர்த்டேடா நிலவா... ரொம்ப ரொம்ப குட் பாய்டா நீ... ஒரு பொண்ணு நானே என்ன எடுத்துக்கோன்னு சொல்லியும்.. அதுக்கான உரிமை உங்கிட்ட இருந்தாலும், தள்ளி நின்ன உன்னோட கண்ணியம் ரொம்ப பிடிச்சிருக்கு நிலவா... லவ் யூ சோ மச் டா பட்டு..." என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவள்... குளிக்க சென்றிருந்தாள்..
அவள் சென்றது தான் தாமதம் அவன் கண்கள் மெல்ல திறந்து கொண்டது... அவள் பேசியவற்றை அவனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.. மூடட்டிருக்கும் குளியலறை கதைவில் பார்வையை செலுத்தியவன்,
"உன்ன பத்தி எனக்கு தெரியாதாடி... நம்ம கல்யாணம் ஊரறிய நடக்கணுங்கிறது உன்னோட ஆசைனு எனக்கு தெரியும்.. உன்னோட குற்ற உணர்ச்சிதான் உன்ன இப்படிலாம் யோசிக்கவும் வெச்சிருக்கு... உன் மனசு கஷ்டப்படுற எந்த காரியத்தையும் நான் செய்யமாட்டேன்..." என்று மனதார எண்ணிகொண்டவன்... விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்...
குளித்து முடித்து பூந்துவாளையுடன் வெளியே வந்த அதிரல், நேற்று பார்த்து பார்த்து ஆசையாய் எடுத்த மஞ்சள் நிற புடவையை கையில் எடுத்துக்கொண்டாள்.. ஜாக்கெட் பாவாடை இரண்டையும் அணிந்துகொண்டு கையில் புடவையுடன் அவனிடத்தில் வந்தாள்....
"நிலவா... நிலவா எழுந்துக்கோ..." என்று அவனை எழுப்ப.. அரைதூக்கத்தில் எழுந்தவன்.. "என்னடி..." என்க
"எனக்கு புடவ கட்டி விடு..."
"எதே நானே... ஒரு வயசு பையன நல்லவனா இருக்க விடமாட்டியாடி..."
"ம்ம்கூம் மாட்டேன்... வா வந்து கட்டிவிடு... இந்த புடவைய எடுத்ததே நீ கட்டி விடணும்னு தான்..."
"ரொம்ப நல்ல நோக்கம் டி..." என்று எழுந்தவன் அவள் அருகில் வர..
"சீக்கிரம் கட்டு... இன்னைக்கு பூரா நீ எங்கூடத்தான் இருக்கனும்... எங்க எல்லாம் போகணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருக்கேன்..."
"டிபார்ட்மென்ட்ல எனக்கு செருப்பாலேயே அடிப்பாங்க பரவாயில்லையா?.." என்றான் அவளுக்கு புடவையை கட்டி விட்டபடியே...
"வாங்கிக்கோ தப்பில்ல... கேட்டா பொண்டாட்டி விடமாட்டேங்கிறானு சொல்லு..."
ஒருவழியாய் கட்டி முடித்தவன் கீழே குனிந்து மடிப்புக்களை சரியாக எடுத்து விட்டுகொண்டிருக்க
அவளோ "நிலவா ப்ரிஜ்ல பூ இருக்கு எடுத்துட்டு வாயேன்.." என்றாள்..
"கேடி எல்லாம் ரெடியா தான் கொண்டு வந்திருக்க..." என்றவன் எடுத்து வந்து அவளுக்கு அழகாக தலையையும் பின்னி பூவும் வைத்து விட்டான்...
"பேர்பக்ட்.. ஆள அள்ளுறடி.. நேத்து நல்லவனா இருந்து தப்பு பண்ணிட்டேனோ" என்று அவளை சீண்ட...
"யாரு நீ.. போப்பா பால்வாடி பாப்பா..."
"ரொம்ப தான்டி... ஒருநாள் மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு.. கெஞ்சினாலும் விட மாட்டேன் பாத்துக்கோ..."
"பாக்கலாம் பாக்கலாம்..."
"நீ ரெடி ஆகு குளிச்சிட்டு வந்துடுறேன் அப்பறம் மதியம் வர உன்கூடதான் ஓகேவா?..."
"என்னது மதியம் வரையா??... அதுக்கப்பறம்.." என்று அவள் முறைக்க
"என் செல்லம்ல.. மதியத்துக்கப்பறம் கொஞ்சம் வேல இருக்குடா.. அந்த ஜேகேய பிடிச்சே ஆகணும்... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு ஈவினிங் வந்துடுவேன் நைட் வர வெளிய சுத்தலாம் ஓகே வா.."
"முக்கியமான வேலைனு சொல்லுறதால விடுறேன்... ஈவினிங் சீக்கிரம் வரணும்..." என்றாள் போனால் போகிறது என்பது போல..
"உங்கள் கருணையே கருணை அரசியாரே..." என்று நாடக பாணியில் குனிந்து வணங்கியவன் குளிக்க சென்றிருந்தான்...
இருவரும் ஒருவாறு செல்ல சண்டைகளுக்கிடையில் தயாராகி... வெளியே செல்ல ஆயத்தமாக நிலவனின் தொலைபேசி இருப்பை உணர்த்தியது... புகழ் தான் அழைத்திருந்தான்... எடுத்து காதில் வைக்க..
"மச்சான் டிஸ்டர்ப் பண்ணுறேன்னு புரியுது பட் கொஞ்சம் அவசரம்... ஜெயராமனோட ஆள் ஒருத்தன் சிக்கி இருக்கான்.. போதைல வண்டி ஓட்டிட்டு வந்து நேத்து நைட் தான் மாட்டினான்.. இப்போ ஏதோ சரக்குனு பேசுறானாம்... ஐ திங் இவன விசாரிச்சா கண்டிப்பா ஏதோ க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு... நான் இப்போ ஸ்டேஷனுக்கு தான் போக போறேன்... நீயும் வர்றியா??..."
"ஓகே மச்சான்.. டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..." என்று அழைப்பை துண்டித்தவன்.. அதிரலிடம் "அதி.... கொஞ்சம் அர்ஜென்டா ஸ்டேஷன் வரைக்கும் போகணும்... போயிட்டு ஒரு தேர்ட்டி மினிட்ஸ்ல வந்துடுவேன்டா..." என்று அவளை பார்க்க...
"ஓகே நிலவா.... என்ன வீட்டுல விட்டுட்டு போ..." என்று அவள் சாதாரணமாக தான் சொன்னாள் அவனுக்கோ கோபித்து கொண்டாளோ என்று தோன்ற, "இல்ல இல்ல நீ இங்கயே வெயிட் பண்ணு நான் போயிட்டு சட்டுனு வந்துடுவேன்..."
"வேணா நிலவா... நீ ஒர்க் பாரு... நாம இன்னொரு நாள் கூட போகலாம்..."
"இல்ல இல்ல இன்னைக்கே போவோம்... என் செல்லம்ல நான் சொன்னா கேக்க மாட்டியா?... நீ கதவ பூட்டிட்டு இருந்துக்கோ சீக்கிரம் வந்துடுவேன்.." என்று அவளை அங்கேயே இருக்க வைத்தவன்... வெளியேறி இருந்தான்.... அவள் கேட்டது போல வீட்டிலேயே விட்டிருக்கலாம் என்று அதற்காக இன்றே கவலை படவும் போகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்வது...
நிலவனின் வாகனம் வெளியேறியதை பார்த்துக்கொண்டு தூரத்தில் நின்றிருந்த வாகனம் ஒன்று பத்து நிமிடங்களுக்கு பிறகு பூஜாவின் வீட்டின் முன் வந்து நின்றது.... அதிலிருந்தது இறங்கிய அந்த உருவாமோ... உள்ளே சென்று கதவை தட்டியது...
நிலவன் இல்லை என்பது தெரியும்... யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு கதவை திறந்தவள்... "நீயா, உள்ள வா.. நீ இங்க எப்படி?.."
"நிலவன் தான் நீ தனியா இருக்க துணைக்கு கூட போய் இருன்னு சொன்னான்... "
"ஓகே... டீ குடிக்கிறியா?..."
"ஜூஸ் கிடைக்குமா??.."
"ஓகே இரு எடுத்துட்டு வரேன்.." என்றவள் அங்கிருந்து செல்ல... மருந்து தேய்கப்பட்ட கைக்குட்டடையுடன் அவளை பின் தொடர்ந்தது அந்த உருவம்....
சொன்னதை விட நேரம் அதிகமாகவே கடந்திருந்தது.... மதியவேளை நெருங்கியிருக்க, நிலவனோ வேகமாக காரை ஓட்டிகொண்டிருந்தான்... வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டான்...
கதவு திறந்தபடி தான் கிடந்தது... "ஜாஸ்.. ஜாஸ்..." என்று அழைத்தபடி உள்ளே செல்ல பதில் எதுவும் வரவில்லை..
"ரொம்ப கோபமா இருக்கா போல..." என்று எண்ணியவன் ஒவ்வொரு இடமாக தேட... எங்கும் அவள் இல்லை... "வீட்டுக்கு சென்றிருப்பாளோ?" என்று தான் எண்ணினான்.. அவளுக்கு ஏதும் ஆகி இருக்கும் என்ற நேர் மறையான எண்ணம் கூட அவனிடத்தில் இல்லை... ஆனால் உண்மை அறியும்
நேரம்??...
வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டவனோ.. தன் வீட்டை நோக்கி தான் சென்றான்...
"மா.. ஒரு டீ..." என்று சொல்லி அங்கே இருந்த சோபாவில் விழுந்தான்..
அவன் சத்ததுக்கு நிஷா தான் முதலில் வெளியே வந்தாள்... "அம்மா இல்லையே நிலவா... ஊருக்கு போயிருக்காங்களே..."
"ஆமால மறந்துட்டேன்..." என்றவன் நெற்றியை நீவிக்கொள்ள..
"நான் போட்டு தரட்டுமா நிலவா??.."
"வேணா நிஷா.. அதிய கொஞ்சம் கூப்பிடுறியா??...
"அவ இங்க இல்லையே நிலவா உங்கூட தான இருக்கிறதா பூஜா சொன்னா???..."
"இங்க இல்லையா?..." என்றவன் எழுந்தே விட்டான்.. ஆனாலும் அதிர்ச்சியை முகத்தில் மறைத்தபடி... "என்னோடதான் இருந்தா... நான் இடைல ஸ்டேஷன் போய்ட்டேன்.. ஒருவேள இங்க வந்திருப்பாளோன்னு நேரா இங்கயே வந்துட்டேன்..." என்றான்
அந்த நேரம் வெளியில் வந்த பூஜா "எங்க நிலவா அதி.. என்ன பாக்க வெக்கத்துல ரூம்ல போய் அடஞ்சிக்கிட்டாளா?... வரட்டும் இருக்கு அவளுக்கு..." என்றாள்
"இல்லை பூஜா அவ வரல.." என்றவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ "என்ன நிலவா ஒரு மாதிரி பேசுற என்னாச்சு..."
"ஒண்ணுமில்ல கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்... ராம் எங்க?.."
"விஷ்னுவோட கார் போன இடத்துல இடைல எங்கயோ நின்னுடிச்சாம்... அதான் ராம் என்னனு பாக்க போயிருக்கான் நிலவா... ஏதாச்சும் அவசரமா??... கால் பண்ணி வர சொல்லவா??..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜஸ்ட் கேட்டேன் அவ்வளவு தான்... நான் வரேன் ராம் வந்தா எனக்கு கால் பண்ண சொல்லு" என்றவன் வெளியேறி இருந்தான்...
மின்னல் வேகத்தில் தான் அவன் கார் பறந்தது.... அவள் எண்ணுக்கு எத்தனை தடவை அழைத்தும் பதில் பூஜ்ஜியம் தான்... கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலமாக அழைக்கிறான் எங்கும் அவள் இல்லை... புகழும் அவன் பங்குக்கு தேட... ராமும் விஷ்ணு என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு தேடத்தான் செய்தனர்... ஆனால் பதில் தான் அவர்களுக்கு சாதகமாக கிடைக்கவில்லை...
சரியாக மாலை ஐந்து மணி நால்வரும் அங்கே பூஜாவின் வீட்டில் தான் கூடி இருந்தனர்...
"மச்சான்.. எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம்டா நீ உடஞ்சிடாதடா..." என்ற புகழின் சமாதானம் கூட அவன் காதில் ஏறவில்லை...
ஜாஸ்.. ஜாஸ்.. ஜாஸ் மட்டுமே அவன் மனதில் ஓடிகொண்டிருந்த நாமம்... மூச்சு என்று கூட சொல்லலாம்... அப்படிதான் இருந்தான் இந்த ஐந்து மணி நேரமும்...
பூஜாவோ விடாமல் ராமுக்கு அழைத்து கொண்டே தான் இருந்தாள்.. என்ன சொல்லவது எப்படி சொல்லவது என்ற எண்ணமே அதனை தவிர்க்கவும் வைத்தது...
சரியாக அந்த நேரம் தான் ஜேகே அதிரலை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்ததும் அவளோடு பேசியதும்...
"என்ன யாருனு நெனச்ச... நான் தி கிரேட் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்.. மருத்துவ உலகத்தோட அரசன்..." என்று அந்த அறை அதிர கத்தியவன் அங்கே அருகில் இருந்த ஆளுயற கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டவன் "விஷ்வஜெகதீஸ்வரகிருஷ்ணன்.." என்றான் கோணல் சிரிப்புடன்..
"ஹாஹாஹா... உன் பின்னாடி லவ்னு திரிஞ்சதும் பேக்குன்னு நினச்சிட்டல்ல என்ன?.. நீயும் அழகா தான் இருக்க பட் என் டேஸ்டுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட... எப்படி நம்ம நடிப்பு ரியாலிஸ்டிக்கா இருந்திச்சா?... உலகத்தோட பார்வைக்கு விஷ்வா எங்குற சந்தமான இமேஜ் எனக்கு தேவைப்பட்டிச்சு.. நான் இப்படி பட்டவன்னு நானே போய் சொன்னாலும் இனி யாரும் நம்ப மாட்டாங்க.. அதுதானே எனக்கும் வேணும்..." என்றான் வெகு நிதானமாய்
"உன்ன வேற எதுக்கோ தான் ஹாஸ்பிடல்ல விட்டு வச்சிருந்தேன்... எப்போ உனக்கு ஓ நெகடிவ்னு தெரிஞ்சிதோ அன்னைக்கு முடிவு பண்ணியாச்சு.. உன்னோட ஹார்ட் தான் என் ருத்ரம்மாவோட ஹார்டா துடிக்கணும்னு.. ரெடியா இரு இன்னும் த்ரீ டேஸ்ல ஆபரேஷன் வெச்சிக்கலாம்.. இது அந்த நிலவனுக்கும் பெரிய அடி... ஏற்கனவே அடிச்சதுல இருந்தே இன்னும் அவன் எந்திரிக்கல... என்னடா ஏற்கனவேன்னு பாஸ்ட்ல சொல்லுறானேன்னு பாக்கறியா???.." என்று அவளிடம் கேள்வியாய் நிறுத்தியவன்
மீண்டும், "ஒரேடியா எல்லா உண்மையும் சொன்னா அதிர்ச்சில, எனக்கு தேவையான உன் ஹார்ட்டுக்கு ஏதாச்சும் ஆகிட போகுது.. சோ கொஞ்சம் கொஞ்சமா சொல்லுறேன்... இன்னைக்கு இந்த அதிர்ச்சியே போதும்..."
"அப்பறம் உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு உங்க காதல் தெய்வீக காதல் வேற... வேணும்னா உன்ன அடக்கம் பண்ணி முடிஞ்ச பிறகு அவனுக்கு சொல்லி அனுப்புவோமா??... நீ பிரீயா ஹார்ட் எல்லாம் டோனேட் பண்ண போற, நன்றியா இருக்கணுமா இல்லையா???.." என்று நக்கலாக பேசியவன், தன் கையாளுக்கு கண் காட்டியபடி வெளியேற பழையபடி அவள் வாயை மூடப்பட்டு விளக்கும் அனைக்கப்பட்டது...
அவள் மனதிலோ... "சீக்கிரம் வா நிலவா.." என்ற குரலே... அதுவும் அவள் சாக போகிறாளே என்ற கவலையில் அல்ல... மீண்டும் தன்னை பிரிந்து தன்னவனால் இருக்க முடியாது என்பதால் தான்...
ஜாதி மல்லி மலரும்....
இன்னும் மூன்று நாட்களுக்குள் நிலவன் அவன் மனைவியை மீட்பானா?...
அவன் மனைவியை காப்பாற்ற முடியாவிட்டால் அதன் பின் நிலவனின் நிலை??
ஜேகே உதவும் அந்த உருவம் யாராக இருக்கும்???
கருத்து திரி
"என்னடா சொல்லுற..."
"பெரிய கையெழுத்து... ஏ கொஞ்சம் ஸ்டைலா போட்டு கோழி கிண்டுன மாதிரி ரெண்டு கிறுக்கு.. குட்டி ஆர் பக்கத்தில ரெண்டு கோடு இது ஒரு சைன் இத எங்களால போடமுடியாதா? என்றான் சிரிப்புடன்
அவன் தலையில் கொட்டியவள் "பிராடு பயலே... இன்னும் என்ன எல்லாம் எனக்கு சொல்லாம பண்ணி இருக்க நீ..." என முறைப்புடன் வினவ
"அதெல்லாம் அப்பப்போ டைம் வரும் போது சொல்லுவோம்.. இப்போ தூங்கலாம் வா.." என்று அவளை தன் நெஞ்சில் போட்டுகொண்டு கண்களை மூடிக்கொள்ள அவளும் விரும்பியே அவனை அணைத்துக்கொண்டாள்...
பொழுது மெல்ல விடிய தொடங்க, நேரத்துக்கே எழுந்த வாசுகி, வேலை எல்லாம் முடித்தவர் மகனுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து சொல்லலாம் என சமையல் அறையில் இருந்து வாசல் நோக்கி செல்ல
அந்த நேரம் அறையிலிருந்து அபினாஷுக்கு பால் எடுக்க வெளியே வந்த பூஜா "எங்கமா போறீங்க.." என்றாள்
"நிலவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்லடா அதான் விஷ் பண்ணலாம்னு போறேன்..."
"அதுக்கு நீங்க என் வீட்டுக்கு தான் போகணும்.."
"என்னடி சொல்லுற" என்றவருக்கு நேற்று நடந்தவற்றை அவள் சொல்ல, அவருக்கு முகமெல்லாம் பூரிப்பு...
"ரொம்ப சந்தோசம் டா.. புள்ளைங்க ரெண்டும் சந்தோசமா இருந்தாலே போதும்... அதி வந்ததும் அவளுக்கு சுத்தி போடணும்..." என்று பேசிகொண்டிருக்க
கீதா, நிஷா அதுக்கடுத்து புகழ், விஷ்ணு என ஒவ்வொருத்தராக வர அவர்களுக்கும் விடயம் பகிரப்பட்டது.. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ஆனால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் மனதிலோ தனக்கு சொல்லப்பட்ட வேலையை முடிக்கும் வன்மம்..
அங்கே பூஜாவின் வீட்டிலோ முதலில் கண் மூழித்தது அதிரல் தான்.. அவன் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்தவளை ஒருகையால் வளைத்து பிடித்திருந்தான்.. மெல்ல அவன் கையை விளக்கி எழுந்தவள்..
"ஹாப்பி பர்த்டேடா நிலவா... ரொம்ப ரொம்ப குட் பாய்டா நீ... ஒரு பொண்ணு நானே என்ன எடுத்துக்கோன்னு சொல்லியும்.. அதுக்கான உரிமை உங்கிட்ட இருந்தாலும், தள்ளி நின்ன உன்னோட கண்ணியம் ரொம்ப பிடிச்சிருக்கு நிலவா... லவ் யூ சோ மச் டா பட்டு..." என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவள்... குளிக்க சென்றிருந்தாள்..
அவள் சென்றது தான் தாமதம் அவன் கண்கள் மெல்ல திறந்து கொண்டது... அவள் பேசியவற்றை அவனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.. மூடட்டிருக்கும் குளியலறை கதைவில் பார்வையை செலுத்தியவன்,
"உன்ன பத்தி எனக்கு தெரியாதாடி... நம்ம கல்யாணம் ஊரறிய நடக்கணுங்கிறது உன்னோட ஆசைனு எனக்கு தெரியும்.. உன்னோட குற்ற உணர்ச்சிதான் உன்ன இப்படிலாம் யோசிக்கவும் வெச்சிருக்கு... உன் மனசு கஷ்டப்படுற எந்த காரியத்தையும் நான் செய்யமாட்டேன்..." என்று மனதார எண்ணிகொண்டவன்... விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்...
குளித்து முடித்து பூந்துவாளையுடன் வெளியே வந்த அதிரல், நேற்று பார்த்து பார்த்து ஆசையாய் எடுத்த மஞ்சள் நிற புடவையை கையில் எடுத்துக்கொண்டாள்.. ஜாக்கெட் பாவாடை இரண்டையும் அணிந்துகொண்டு கையில் புடவையுடன் அவனிடத்தில் வந்தாள்....
"நிலவா... நிலவா எழுந்துக்கோ..." என்று அவனை எழுப்ப.. அரைதூக்கத்தில் எழுந்தவன்.. "என்னடி..." என்க
"எனக்கு புடவ கட்டி விடு..."
"எதே நானே... ஒரு வயசு பையன நல்லவனா இருக்க விடமாட்டியாடி..."
"ம்ம்கூம் மாட்டேன்... வா வந்து கட்டிவிடு... இந்த புடவைய எடுத்ததே நீ கட்டி விடணும்னு தான்..."
"ரொம்ப நல்ல நோக்கம் டி..." என்று எழுந்தவன் அவள் அருகில் வர..
"சீக்கிரம் கட்டு... இன்னைக்கு பூரா நீ எங்கூடத்தான் இருக்கனும்... எங்க எல்லாம் போகணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருக்கேன்..."
"டிபார்ட்மென்ட்ல எனக்கு செருப்பாலேயே அடிப்பாங்க பரவாயில்லையா?.." என்றான் அவளுக்கு புடவையை கட்டி விட்டபடியே...
"வாங்கிக்கோ தப்பில்ல... கேட்டா பொண்டாட்டி விடமாட்டேங்கிறானு சொல்லு..."
ஒருவழியாய் கட்டி முடித்தவன் கீழே குனிந்து மடிப்புக்களை சரியாக எடுத்து விட்டுகொண்டிருக்க
அவளோ "நிலவா ப்ரிஜ்ல பூ இருக்கு எடுத்துட்டு வாயேன்.." என்றாள்..
"கேடி எல்லாம் ரெடியா தான் கொண்டு வந்திருக்க..." என்றவன் எடுத்து வந்து அவளுக்கு அழகாக தலையையும் பின்னி பூவும் வைத்து விட்டான்...
"பேர்பக்ட்.. ஆள அள்ளுறடி.. நேத்து நல்லவனா இருந்து தப்பு பண்ணிட்டேனோ" என்று அவளை சீண்ட...
"யாரு நீ.. போப்பா பால்வாடி பாப்பா..."
"ரொம்ப தான்டி... ஒருநாள் மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு.. கெஞ்சினாலும் விட மாட்டேன் பாத்துக்கோ..."
"பாக்கலாம் பாக்கலாம்..."
"நீ ரெடி ஆகு குளிச்சிட்டு வந்துடுறேன் அப்பறம் மதியம் வர உன்கூடதான் ஓகேவா?..."
"என்னது மதியம் வரையா??... அதுக்கப்பறம்.." என்று அவள் முறைக்க
"என் செல்லம்ல.. மதியத்துக்கப்பறம் கொஞ்சம் வேல இருக்குடா.. அந்த ஜேகேய பிடிச்சே ஆகணும்... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு ஈவினிங் வந்துடுவேன் நைட் வர வெளிய சுத்தலாம் ஓகே வா.."
"முக்கியமான வேலைனு சொல்லுறதால விடுறேன்... ஈவினிங் சீக்கிரம் வரணும்..." என்றாள் போனால் போகிறது என்பது போல..
"உங்கள் கருணையே கருணை அரசியாரே..." என்று நாடக பாணியில் குனிந்து வணங்கியவன் குளிக்க சென்றிருந்தான்...
இருவரும் ஒருவாறு செல்ல சண்டைகளுக்கிடையில் தயாராகி... வெளியே செல்ல ஆயத்தமாக நிலவனின் தொலைபேசி இருப்பை உணர்த்தியது... புகழ் தான் அழைத்திருந்தான்... எடுத்து காதில் வைக்க..
"மச்சான் டிஸ்டர்ப் பண்ணுறேன்னு புரியுது பட் கொஞ்சம் அவசரம்... ஜெயராமனோட ஆள் ஒருத்தன் சிக்கி இருக்கான்.. போதைல வண்டி ஓட்டிட்டு வந்து நேத்து நைட் தான் மாட்டினான்.. இப்போ ஏதோ சரக்குனு பேசுறானாம்... ஐ திங் இவன விசாரிச்சா கண்டிப்பா ஏதோ க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு... நான் இப்போ ஸ்டேஷனுக்கு தான் போக போறேன்... நீயும் வர்றியா??..."
"ஓகே மச்சான்.. டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..." என்று அழைப்பை துண்டித்தவன்.. அதிரலிடம் "அதி.... கொஞ்சம் அர்ஜென்டா ஸ்டேஷன் வரைக்கும் போகணும்... போயிட்டு ஒரு தேர்ட்டி மினிட்ஸ்ல வந்துடுவேன்டா..." என்று அவளை பார்க்க...
"ஓகே நிலவா.... என்ன வீட்டுல விட்டுட்டு போ..." என்று அவள் சாதாரணமாக தான் சொன்னாள் அவனுக்கோ கோபித்து கொண்டாளோ என்று தோன்ற, "இல்ல இல்ல நீ இங்கயே வெயிட் பண்ணு நான் போயிட்டு சட்டுனு வந்துடுவேன்..."
"வேணா நிலவா... நீ ஒர்க் பாரு... நாம இன்னொரு நாள் கூட போகலாம்..."
"இல்ல இல்ல இன்னைக்கே போவோம்... என் செல்லம்ல நான் சொன்னா கேக்க மாட்டியா?... நீ கதவ பூட்டிட்டு இருந்துக்கோ சீக்கிரம் வந்துடுவேன்.." என்று அவளை அங்கேயே இருக்க வைத்தவன்... வெளியேறி இருந்தான்.... அவள் கேட்டது போல வீட்டிலேயே விட்டிருக்கலாம் என்று அதற்காக இன்றே கவலை படவும் போகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்வது...
நிலவனின் வாகனம் வெளியேறியதை பார்த்துக்கொண்டு தூரத்தில் நின்றிருந்த வாகனம் ஒன்று பத்து நிமிடங்களுக்கு பிறகு பூஜாவின் வீட்டின் முன் வந்து நின்றது.... அதிலிருந்தது இறங்கிய அந்த உருவாமோ... உள்ளே சென்று கதவை தட்டியது...
நிலவன் இல்லை என்பது தெரியும்... யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு கதவை திறந்தவள்... "நீயா, உள்ள வா.. நீ இங்க எப்படி?.."
"நிலவன் தான் நீ தனியா இருக்க துணைக்கு கூட போய் இருன்னு சொன்னான்... "
"ஓகே... டீ குடிக்கிறியா?..."
"ஜூஸ் கிடைக்குமா??.."
"ஓகே இரு எடுத்துட்டு வரேன்.." என்றவள் அங்கிருந்து செல்ல... மருந்து தேய்கப்பட்ட கைக்குட்டடையுடன் அவளை பின் தொடர்ந்தது அந்த உருவம்....
சொன்னதை விட நேரம் அதிகமாகவே கடந்திருந்தது.... மதியவேளை நெருங்கியிருக்க, நிலவனோ வேகமாக காரை ஓட்டிகொண்டிருந்தான்... வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டான்...
கதவு திறந்தபடி தான் கிடந்தது... "ஜாஸ்.. ஜாஸ்..." என்று அழைத்தபடி உள்ளே செல்ல பதில் எதுவும் வரவில்லை..
"ரொம்ப கோபமா இருக்கா போல..." என்று எண்ணியவன் ஒவ்வொரு இடமாக தேட... எங்கும் அவள் இல்லை... "வீட்டுக்கு சென்றிருப்பாளோ?" என்று தான் எண்ணினான்.. அவளுக்கு ஏதும் ஆகி இருக்கும் என்ற நேர் மறையான எண்ணம் கூட அவனிடத்தில் இல்லை... ஆனால் உண்மை அறியும்
நேரம்??...
வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டவனோ.. தன் வீட்டை நோக்கி தான் சென்றான்...
"மா.. ஒரு டீ..." என்று சொல்லி அங்கே இருந்த சோபாவில் விழுந்தான்..
அவன் சத்ததுக்கு நிஷா தான் முதலில் வெளியே வந்தாள்... "அம்மா இல்லையே நிலவா... ஊருக்கு போயிருக்காங்களே..."
"ஆமால மறந்துட்டேன்..." என்றவன் நெற்றியை நீவிக்கொள்ள..
"நான் போட்டு தரட்டுமா நிலவா??.."
"வேணா நிஷா.. அதிய கொஞ்சம் கூப்பிடுறியா??...
"அவ இங்க இல்லையே நிலவா உங்கூட தான இருக்கிறதா பூஜா சொன்னா???..."
"இங்க இல்லையா?..." என்றவன் எழுந்தே விட்டான்.. ஆனாலும் அதிர்ச்சியை முகத்தில் மறைத்தபடி... "என்னோடதான் இருந்தா... நான் இடைல ஸ்டேஷன் போய்ட்டேன்.. ஒருவேள இங்க வந்திருப்பாளோன்னு நேரா இங்கயே வந்துட்டேன்..." என்றான்
அந்த நேரம் வெளியில் வந்த பூஜா "எங்க நிலவா அதி.. என்ன பாக்க வெக்கத்துல ரூம்ல போய் அடஞ்சிக்கிட்டாளா?... வரட்டும் இருக்கு அவளுக்கு..." என்றாள்
"இல்லை பூஜா அவ வரல.." என்றவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ "என்ன நிலவா ஒரு மாதிரி பேசுற என்னாச்சு..."
"ஒண்ணுமில்ல கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்... ராம் எங்க?.."
"விஷ்னுவோட கார் போன இடத்துல இடைல எங்கயோ நின்னுடிச்சாம்... அதான் ராம் என்னனு பாக்க போயிருக்கான் நிலவா... ஏதாச்சும் அவசரமா??... கால் பண்ணி வர சொல்லவா??..."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜஸ்ட் கேட்டேன் அவ்வளவு தான்... நான் வரேன் ராம் வந்தா எனக்கு கால் பண்ண சொல்லு" என்றவன் வெளியேறி இருந்தான்...
மின்னல் வேகத்தில் தான் அவன் கார் பறந்தது.... அவள் எண்ணுக்கு எத்தனை தடவை அழைத்தும் பதில் பூஜ்ஜியம் தான்... கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலமாக அழைக்கிறான் எங்கும் அவள் இல்லை... புகழும் அவன் பங்குக்கு தேட... ராமும் விஷ்ணு என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு தேடத்தான் செய்தனர்... ஆனால் பதில் தான் அவர்களுக்கு சாதகமாக கிடைக்கவில்லை...
சரியாக மாலை ஐந்து மணி நால்வரும் அங்கே பூஜாவின் வீட்டில் தான் கூடி இருந்தனர்...
"மச்சான்.. எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம்டா நீ உடஞ்சிடாதடா..." என்ற புகழின் சமாதானம் கூட அவன் காதில் ஏறவில்லை...
ஜாஸ்.. ஜாஸ்.. ஜாஸ் மட்டுமே அவன் மனதில் ஓடிகொண்டிருந்த நாமம்... மூச்சு என்று கூட சொல்லலாம்... அப்படிதான் இருந்தான் இந்த ஐந்து மணி நேரமும்...
பூஜாவோ விடாமல் ராமுக்கு அழைத்து கொண்டே தான் இருந்தாள்.. என்ன சொல்லவது எப்படி சொல்லவது என்ற எண்ணமே அதனை தவிர்க்கவும் வைத்தது...
சரியாக அந்த நேரம் தான் ஜேகே அதிரலை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்ததும் அவளோடு பேசியதும்...
"என்ன யாருனு நெனச்ச... நான் தி கிரேட் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்.. மருத்துவ உலகத்தோட அரசன்..." என்று அந்த அறை அதிர கத்தியவன் அங்கே அருகில் இருந்த ஆளுயற கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டவன் "விஷ்வஜெகதீஸ்வரகிருஷ்ணன்.." என்றான் கோணல் சிரிப்புடன்..
"ஹாஹாஹா... உன் பின்னாடி லவ்னு திரிஞ்சதும் பேக்குன்னு நினச்சிட்டல்ல என்ன?.. நீயும் அழகா தான் இருக்க பட் என் டேஸ்டுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட... எப்படி நம்ம நடிப்பு ரியாலிஸ்டிக்கா இருந்திச்சா?... உலகத்தோட பார்வைக்கு விஷ்வா எங்குற சந்தமான இமேஜ் எனக்கு தேவைப்பட்டிச்சு.. நான் இப்படி பட்டவன்னு நானே போய் சொன்னாலும் இனி யாரும் நம்ப மாட்டாங்க.. அதுதானே எனக்கும் வேணும்..." என்றான் வெகு நிதானமாய்
"உன்ன வேற எதுக்கோ தான் ஹாஸ்பிடல்ல விட்டு வச்சிருந்தேன்... எப்போ உனக்கு ஓ நெகடிவ்னு தெரிஞ்சிதோ அன்னைக்கு முடிவு பண்ணியாச்சு.. உன்னோட ஹார்ட் தான் என் ருத்ரம்மாவோட ஹார்டா துடிக்கணும்னு.. ரெடியா இரு இன்னும் த்ரீ டேஸ்ல ஆபரேஷன் வெச்சிக்கலாம்.. இது அந்த நிலவனுக்கும் பெரிய அடி... ஏற்கனவே அடிச்சதுல இருந்தே இன்னும் அவன் எந்திரிக்கல... என்னடா ஏற்கனவேன்னு பாஸ்ட்ல சொல்லுறானேன்னு பாக்கறியா???.." என்று அவளிடம் கேள்வியாய் நிறுத்தியவன்
மீண்டும், "ஒரேடியா எல்லா உண்மையும் சொன்னா அதிர்ச்சில, எனக்கு தேவையான உன் ஹார்ட்டுக்கு ஏதாச்சும் ஆகிட போகுது.. சோ கொஞ்சம் கொஞ்சமா சொல்லுறேன்... இன்னைக்கு இந்த அதிர்ச்சியே போதும்..."
"அப்பறம் உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு உங்க காதல் தெய்வீக காதல் வேற... வேணும்னா உன்ன அடக்கம் பண்ணி முடிஞ்ச பிறகு அவனுக்கு சொல்லி அனுப்புவோமா??... நீ பிரீயா ஹார்ட் எல்லாம் டோனேட் பண்ண போற, நன்றியா இருக்கணுமா இல்லையா???.." என்று நக்கலாக பேசியவன், தன் கையாளுக்கு கண் காட்டியபடி வெளியேற பழையபடி அவள் வாயை மூடப்பட்டு விளக்கும் அனைக்கப்பட்டது...
அவள் மனதிலோ... "சீக்கிரம் வா நிலவா.." என்ற குரலே... அதுவும் அவள் சாக போகிறாளே என்ற கவலையில் அல்ல... மீண்டும் தன்னை பிரிந்து தன்னவனால் இருக்க முடியாது என்பதால் தான்...
ஜாதி மல்லி மலரும்....
இன்னும் மூன்று நாட்களுக்குள் நிலவன் அவன் மனைவியை மீட்பானா?...
அவன் மனைவியை காப்பாற்ற முடியாவிட்டால் அதன் பின் நிலவனின் நிலை??
ஜேகே உதவும் அந்த உருவம் யாராக இருக்கும்???
கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி
aadvikapommunovels.com
Last edited: