ஜாதி மல்லி பூ 24
"அண்ணா" என்று அழைத்தபடி அவனை அணைத்துக்கொண்ட அந்த விரல்கள் உண்மைக்கும் நடுங்கி கொண்டிருந்தது..
நிலவனுக்கும் அதிரலுக்கும் சட்டென்று ஒன்றும் புரியவில்லை... என்னவென்று உணரும் முன்பே அந்த தாதி உள்ளே வந்திருந்தார்.. முகத்தில் தெரியும் பயத்தை மறைத்தபடி...
"சாரி சார்.. இந்த பொண்ணு இப்படித்தான் யாரப்பாத்தாலும் கட்டிபிடிச்சிடுது..." என்றவர் அவனிடம் இருந்து அந்த பெண்ணை பிரித்து வெளியே அழைத்து செல்ல முயற்சிக்க.. அவளோ பிடியை விடவில்லை... அவரோ வழுகட்டாயமாக இழுத்து செல்ல, அந்த பெண்ணோ பேசவே தோன்றாமல் பார்வை முழுவதையும் நிலவனிடமே நிறுத்தி இருந்தாள்..
அந்த பர்வை அவனை ஏதோ செய்ய, அவனோ அவன் ஞாபக அடுக்கில் அந்த பெண்ணை தேடிகொண்டிருந்தான்.. அதில் எங்குமே அவள் முகம் இருப்பதாய் தெரியவில்லை...
அதிரலுக்கு சட்டென்று ஏதோ யோசனை வர.. "ஒரு நிமிஷம்... இவ நான் அட்மிட் பண்ண பொண்ணு தான..." என்று இறங்கி அந்த பெண் அருகே சற்று மெதுவாக நடந்து சென்றாள்...
அந்த தாதிக்கோ இப்போது என்ன சொல்வதென்று குழப்பம்... இல்லையென்று சொன்னால் அவள் சந்தேக படக்கூடும்... ஆம் என்றாலும் அவள் கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே.. என்ற பதற்றத்தோடு தேர்த்து, இந்த நேரம் அவளை அழைத்து வந்த தன் மடத்தனத்தையும் எண்ணி கவலையும், பயமும் இணைந்து கொண்டது...
"உங்கள தான் கேக்குறேன்... பதில் சொல்லுங்க சிஸ்டர்.."
"ஆமா மேடம் அந்த பொண்ணு தான்..."
"இன்னும் இவள இங்க ஏன் வெச்சிருக்கீங்க.."
"இல்ல டாக்டர் சில ரிப்போர்ட்ஸ் எடுக்கணும்னு சொன்னாங்க..."
"எந்த டாக்டர்?... வன் வீக் இவ கேஸ் நான் தான் கேண்டில் பண்ணேன்.. காயம் குணமாகி இவ நல்ல ஆரோக்யமா தான இருந்தா.. அன்னைக்கே யாருனு விசாரிச்சு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி இருந்தனே.." என்ற அதிரலுக்கு அந்த தாதியின் மழுப்பலான பேச்சில் ஒரு வித சந்தேகம் தோன்றத்தான் செய்தது...
இத்தனை பேச்சு வார்த்தைக்கும் அந்த பெண்ணின் பார்வை நிலவனை விட்டு அகலவே இல்லை...
"ஆமா மேடம்.. இந்த பொண்ணும் ஒன்னும் வாய தொறந்து சொல்லல.. இவள தேடியும் யாரும் வரல.. அதான் இங்கயே வெச்சிருந்தோம்.." என்றார் என்ன சொல்லுவதென்று தெரியாமல்...
"ஓகே நீங்க கிளம்புங்க நானே அவளை அவங்க வீட்டுல விட்டுடுறேன்... இந்த பெரிய பொண்ணுகிட்ட அட்ரஸ் கேட்டு தெரிஞ்சிக்க இவ்வளவு நாள்னு நீங்க சொல்லுற சில்லி ரீசன்கெல்லாம் தலையாட்ட முடியாது..." என்றாள் கோபமாக..
"இல்லை மேடம், டாக்டர் கேட்டா?.." என்று அவர் இழுக்க...
"யாரா இருந்தாலும் என்ன வந்து பாக்க சொல்லுங்க..." என்றாள் அவர் பேச்சை கத்தரித்தது போல்...
அந்த பெண்மணியோ திரும்பி திரும்பி பார்த்தபடியே வெளியேறினார்...
அதிரளுக்கோ மனதில் ஆயிரம் கேள்வி... ஏற்கனவே நிலவனை வர சொல்லி இருந்தது கூட ஏதோ ஒரு சந்தேகம் வந்ததன் காரணமாக தான்.. இங்கே இன்னொன்று... ஏதோ நடக்கிறது இங்கே என்பது மட்டும் புரிந்தது...
அந்த பெண்ணில் அருகில் சென்றவள்.. அவளை அங்கே அமர வைத்து "ஏண்டா... உங்க வீட்டு அட்ரஸ் சொல்லி இங்க இருந்து போய் இருக்கலாமில்லையா?... ஏன் சொல்லல நீங்க??... என்று கேட்க அப்போதும் அவள் பார்வை நிலவனிடம் தான்...
ஏனென்றே தெரியாமல் ஒரு இடரில் மாட்டிக்கொண்டு தவியாய் தவித்து... பல நாட்களாய் யாரவது வருவார்களா என்று காத்திருக்கும் ஒரு உயிருக்கு தெரிந்தவர் ஒருவரை கண்டால் உள்ளம் படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதல்லவா... அந்த நிலையில் தான் இருந்தாள் அந்த பெண்ணும்.. மூளை உறைந்திருந்தது.. இந்த நிமிடம் பொய் ஆகிட கூடாதென உள்ளம் அடித்துக்கொண்டது... பேசவேண்டும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாள் தான் ஆனால் பேச்சு தொண்டையை தாண்டி வரவில்லை...
இத்தனைக்கும் சில வாரங்களுக்கு முன் தான் அதிரல் அவளை காப்பாற்றி இருந்தாள் ஆனால் அதிரல் கூட அவளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை நிலவனின் முன்னால்...
"ஏன் நிலவா இவ பேசமாட்டேங்கிறா?... ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல் தான்.. அன்னைக்கு ஒருநாள் உன்ன சந்திக்க வரும் போது நான் கூட லேட்டா வந்தனே.. ஒரு சின்ன பொண்ணு பைகல வந்து விழுந்து ஆக்சிடென்ட் அதனாலதான் லேட்னு கூட சொல்லி இருந்தேனே.. உனக்கு ஞாபகம் இருக்கா??.."
"ம்ம்ம்ம் ஆமா ஞாபகம் இருக்கு... அந்த பொண்ணா இவ..."
"ஆமா.. பயத்துல மயங்கிட்டா... விழுந்ததுல காயம் கொஞ்சம் ஆழம் தான்.. இவளுக்கு பிளட் குரூப் ஓ நெகடிவ்.. சோ நானே பிளட் குடுத்துட்டு.. இங்கயே அட்மிட் பன்னிட்டு தான் அன்னைக்கு உன்ன பாக்க வந்தேன்.."
"அப்பறம் வன் வீக் ஹாஸ்பிடல்ல தான் இருந்தா.. நார்மல் ஆகிட்டா.. அந்த நேரம் தான் நான் அந்த கலையரசன் கேஸ்ல கொஞ்சம் பிசியா இருந்தேன்... சோ டிஸ்சார்ஜ் ப்ரோசீஜர் என்னனு பாக்க சொல்லி என் கோலீக் ஒருத்தங்க கிட்ட சொல்லிட்டு போனேன்.."
"அன்னைக்கு பெரிய பிரச்சனை இல்ல.. ஜஸ்ட் பயத்துல மயங்கிட்டான்னு மட்டும் தான சொன்ன?.." என்றவன் பார்வை அவளை துளைக்க
"டிரீட்மென்ட் ஓரளவுக்கு நடந்து அவளும் ஓகே ஆகிட்டா நிலவா.. சோ எதுக்கு ஏற்கனவே டென்ஷன்ல இருந்த உன்ன மேலும் டென்ஷன் பண்ணனும்னு தான் அப்படி சொன்னேன்.."
நிலவன் சிறிது நேரம் யோசித்தவன் "அதி.. அந்த பொண்ணு ஏதோ பிரச்சனை ஒன்னுல மாட்டி இருந்து இருக்கா... இங்க இந்த ஹாஸ்பிடல்ல ஏதோ நடக்குது... அந்த ஜெயராமன் என்னமோ ஒன்னு பண்ணுறாருன்னு மட்டும் புரியுது..." என்றான்..
அவன் மனமோ, அவன் சந்தேக வட்டமான "ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சனை தான்" என்று உறுதியாய் நம்பியது...
"இன்னொரு விஷயமும் சொல்லணும் நிலவா... நான் உன்ன இங்க வர சொன்னதே அதுக்கு தான்... நடந்த கலவரத்துல அத மறந்துட்டேன்... இங்க..." என்று அவள் ஆரம்பிக்க போக தடுத்தவன்...
"இங்க இதப்பத்தி பேச வேணாம் அதி.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... இந்த பொண்ணுக்குரிய டிஸ்சார்ஜ் என்னனு பாரு போகலாம்.." என்று அவன் வெளியேற
அவ்வளவு நேரம் பொம்மையாய் அமர்ந்திருந்தவள் அவன் செல்ல போகிறான் என்றதும் உயிர் வந்தவளாக மீண்டும்... "நிலவன் அண்ணா..." என்று அழைத்திருந்தாள்
நிலவனோ அவள் அருகில் வந்து "உனக்கு என்ன தெரியுமாடா???" என்று கேட்க அந்த பெண்ணும் ஆம் என்பதாய் தலையாட்டினாள்..
"நீ யாரு... என்ன எப்படி உனக்கு தெரியும்.."
"உங்க வர்ஷி பாப்பா ணா... தருண் கூட அதுக்கப்பறம் நான் சண்டையே போடல தெரியுமா?.." என்று அவளை அவனுக்கு உணர்த்தியவள் கண்களில் தன்னை கண்டுகொள்ள வேண்டுமே என்ற ஆர்வம்...
அவனோ அவள் கையை பிடித்து வெட்டுப்பட்ட இடத்தை பார்க்க அந்த தழும்பு அப்படியே இருந்தது... அவனுக்கோ அதிர்ச்சி.. "வர்ஷியா இவள்.." என்ற கேள்வி தான்
அவனுள்... அடையாளமே தெரியவில்லை... இந்த மூன்று வருடத்தில் நன்கு வளர்ந்திருந்தாள்... அப்போதே அவளுக்கு பன்னிரெண்டு வயது.. குட்டி பெண் போலத்தான் இருப்பாள்... இன்று பதினஞ்சு பதினாறு வயது இருக்கும்.. அவனால் அடையாடம் காணமுடியவில்லை...
"டேய் வர்ஷி நீயாடா... இத்தன வருசத்துக்கு அப்பறம் அதுவும் இந்த டிரஸ்ல உன்னால என்ன அடையாளம் காண முடியாதா டா??.. என்று அவன் சந்தேகத்தை கேட்டிருந்தான்...
இங்கே ஓரிரண்டு முறை வந்திருந்தாலும்... அவன் வேலை செய்த நாளில் இருந்தே இங்கே இருப்பவர்கள் சிலர் இன்னும் இருக்க தான் செய்தனர் ஆனால் அதில் ஒருவர்கூட இதுவரை அவனை அடையாளம் கண்டு கேட்டத்தில்லையே...
"உங்க குரல தான் ணா முதல்ல உணர்ந்தேன் அதுவே நீங்கனு காட்டி கொடுத்திச்சு..." என்றவளின் பேச்சில் தெரிந்த அன்பு அவனுக்கு ஆச்சரியம் தான்... இருந்தும் அவளின் இன்றைய நிலையை அறிய வேண்டும் என்பதை உணர்ந்தவன்
"அம்மா அப்பா தேடுவாங்கல்லடா... இங்க ஹாஸ்பிடல்ல உன் அட்ரஸ் சொல்லி இருக்கலாமே... இவ்வளவு நாள் இங்கயே இருக்க, அவங்க பயந்துடுவாங்கல்ல..."
அவளோ "அம்மா அப்பா இருப்பாங்களாணா..." என்று அவன் கேள்விக்கு பதிலாய் அவள் கேள்வி கேட்டவள் கண்களில் கண்ணீர் கொட்டியது, பெற்றோரின் ஞாபகத்தில்...
"ஏண்டா என்னாச்சு ஏன் இப்படி கேக்குற?...
"ஒரு வருசத்துக்கு முதலே அவங்கள அடிச்சிட்டு போட்டுட்டு தான்ணா என்ன கொண்டு போனாங்க..." என்றாள் விசும்பலுடன்...
"என்னடா சொல்லுற? ஒரு வருசத்துக்கு முதலா.."
"ஆமா ணா.. அன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்குள்ள கொஞ்ச பேர் வந்தாங்க.. அப்பாகிட்ட ரொம்ப சத்தம் போட்டாங்க.. நான் அவங்களுக்கு வேணுமாம்ணு பணம் எல்லாம் கொடுத்தாங்க... அப்பா முடியவே முடியாதுனு கோபமா சண்டை போடவும்... என் கண் முன்னாடியே மூனு பேரையும் அடிச்சி போட்டுட்டு என்ன கூட்டிட்டு போய்ட்டாங்க ணா... " என்றவள் அன்றைய நாளின் தாக்கத்தில் மேலும் அழுதாள்...
அவனுக்கோ தலைசுற்றியது.... என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல் ஒவ்வொன்றாய் கிளம்புகிறதே என்று....
வெளியே ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த அதிரல்..
"நிலவா இங்க இருந்து முதல்ல வீட்டுக்கு போகலாம்.. மிச்சம் அங்க போய் பேசிக்கலாம்.." என்று நிலைமையை உணர்த்த...
"அதி.. இங்க ஹாஸ்பிடல் தான் பிரச்சனைனா.. இவ நம்ம கூட வர்றது யாருக்கும் தெரிய வேணாம்.. இப்படியே கூட்டிட்டு போய்டலாம்..." என்றவனுக்கு அவளும் சம்மதமாய் தலையாட்டினாள்
அவர்கள் நேரே சென்றது நிலவின் வீட்டுக்கு தான்... புகழையும் அழைக்க அவனும் அங்கு வந்திருந்தான்... நிலவனோ அழுதழுது சோர்வாய் இருந்தவளை அங்கிருந்த அறை ஒன்றில் தூங்க வைத்தவன்... வெளியே வர
"நிலவா நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா... பேசலாம்..." என்றான் புகழ் அவன் இன்னும் யூனிபோர்முடன் இருப்பதை பார்த்து...
"அதெல்லாம் வேணாம்.. என்றவனை கட்டாயப்படுத்தி அனுப்பி இருந்தான் புகழ்...
"என்ன வசந்த பண்ணிட்டு இருக்க நீ... அந்த இடியட் பண்ண வேலைல இப்போ அந்த பொண்ணு அவன் கைல... சிட்.."
"அவளை முடிச்சிடுவோமா சார்..."
"சென்ஸ் ஓட பேசு வசந்த்... ஓ நெகடிவ் பிளட் குரூப் அவ.... அவளோட பெறுமதினு என்னனு தெரியாதா உனக்கு??... சும்மா போக விடுற உயிரா அவ... அவளை நம்ம இடத்துக்கு எடுக்க ஏற்பாடு பண்ணு... அந்த அதிரலையும் சேர்த்து..."
"ஓகே சார்... அந்த பொண்ணுக்கு அடையாளம் சொல்லுற அளவுக்கு நம்ம இடம் சரியா தெரியாதே... எப்படியும் அவள மட்டும் வெச்சிட்டு நம்ம இடத்த கண்டுபிடிக்க கஷ்டம் தான் சார்... நீங்க டென்ஷன் ஆகாதீங்க..." என்றான் சமாதானமாக...
"நோ.. அந்த நிலவன சாதாரணமா நினைக்காத... அவன் கொஞ்சம் உஷாரானாலும் டேஞ்சர் தான்..." என்றவன் மீண்டும் "அந்த லேடிய பயர் பண்ணிடு... அவ இனிமேல் நம்ம ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ண கூடாது... ஆனா ரீசன் வேலிட்டா இருக்கணும் பாத்துக்கோ... இன்னும் டூ த்ரீ மந்த் அப்பறம் பண்ணு..."
"ஓகே சார் பண்ணிடுறேன்... ஆனா நாளைக்கே பண்ணலாமே.. ஏன் லேட்டா?..."
"நீ ஸ்மார்ட்டா தான் இருக்க.. அப்பப்போ ஊர் புத்திய காட்டுற... ஏற்கனவே அவ மேல சந்தேகம் வந்திருக்கும்... இப்போவே அவள பயர் பண்ணா இதுக்கு நாமளும் காரணம்னு ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மேலயே சந்தேகம் வருமேடா இடியட்..." என்றான் அவனுக்கு புரியும் படி...
"ஆமால... ஓகே சார்..." என்று தலையை சொரிந்தவன் வெளியேறி இருந்தான்...
"இப்போதைக்கு மூனு பிரச்சனை நம்மல சுத்தி இருக்கு... நம்பர் வன், காலேஜ்ல நமக்கு நடந்த பிரச்சனை... நம்பர் டூ, அந்த ஆசிரமத்துல நடந்த பையர் ஆக்சிடென்ட்... நம்பர் த்ரீ, வர்ஷியோட விஷயம்.. இதுல மூனுலையும் சம்பந்தப்பட்ட ஒரே
விஷயம் அண்ட் ஒரே ஆள் ஜெயராமன் தான்..." என்று நிலவன் சொல்ல
புகழோ.. "ஆசிரமம் ஓகே... காலேஜ்ல நடந்ததும் வர்ஷியோட விஷயமும் தொடர்பு பட்டிருக்கும்னு எப்படி சொல்ற.."
"காலேஜூம் ஜெயராமனோடது தான.. அண்ட் மோர் ஓவர் என்னோட மருந்து யாருக்கோ தேவபட்டிருக்கு.. சோ காலேஜ் மேனேஜ்மென்ட் ஏன் இத பண்ணி இருக்க கூடாது... ஜஸ்ட் ஒரு சந்தேகம் தான்...
"அடுத்தது வர்ஷியோட விஷயம் அவ ஏதோ ஒண்ணுக்காக கடத்தபட்டிருக்கா.. அவங்க பேரண்ட்ஸ தாக்கியாவது கடத்துனும்கிற அளவுக்கு அவகிட்ட ஏதோ ஒன்னு இருந்திருக்கு... அன்ட் ஜேகே ஹாஸ்பிடல்ல அவள யாருக்கும் தெரியாம வெச்சிருந்திருக்காங்க.. சோ அங்க உள்ள யாரோ தான் அவள கடத்தி இருக்கனும்.. அப்படி இல்லனா கடத்துனவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கனும்.. எப்படி பார்த்தாலும் அதுல ஜேகே ஹாஸ்பிடலுக்கு சம்பந்தம் இருக்கு... சோ அது ஏன் ஜெயராமனா இருக்க கூடாது?..."
"வாய்ப்பிருக்கு நிலவா பட் உறுதியா சொல்லமுடியதில்லையா??..." என்றான் புகழ்...
"இல்ல புகழ் அவன் யோசிக்கிற வே கரைக்ட்... எனக்கும் அங்க நடக்குற விஷயத்துல சில டவுட்ஸ் இருக்கு..." என்று புகழிடம் சொன்னவள்
நிலவனிடம் "உன்ன இன்னைக்கு வர சொன்னதும் இதுக்காக தான்.... கொஞ்ச நாள் முதல் அங்க எம்எல்ஏ கணேசனுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் நடந்திச்சு... நான் தான் பண்ணினேன்.. வழமையை ஹார்ட் அப்படியெல்லாம் உடனடியா கிடச்சுடாது.. அவருக்கு டூ வீக்ஸ்லயே கிடச்சுது.. அதுவும் அங்க ஹாஸ்பிடல்ல இருந்த ஒரு பொண்ணு மூலமா கிடைசித்து... சேம் இன்சிடென்ட் போனவாரம் எங்க ஹாஸ்பிடல் அடையார்ல உள்ள பிரான்ச்லயும் நடந்திருக்கு... இது இன்னைக்கு தான் எனக்கே தெரியவந்திச்சு... அது எப்படி இரண்டு தடவையும் ஒரே போல நடக்கும்னு டவுட்டா இருந்திச்சு..."
"ஹார்ட் எப்படி இன்னொரு ஆளுக்கு குடுப்பாங்க..."
"இல்ல புகழ்.. அந்த பொண்ணுக்கு பிரைன் டெத்... அவளுக்கு ஆசிடெண்டும் ஆகல... மூளைல கட்டியும் எதுவும் இல்ல பட் அவளுக்கு பிரைன் டெத் ஆகி இருந்து.. அப்போவே எனக்கு சந்தேகம் தான்... பட் அதுக்குரிய டாக்டர்ஸ் சொல்லும் போது என்னால நம்பாம இருக்கவும் முடியல... அதுக்கு டூ த்ரீ டேய்ஸ் முன்னாடித்தான் அவ அப்பாவுக்கு கிட்னி பெய்லியர்னு அவளோட கிட்னிய கொடுத்திருந்தா... அவளை அங்கேயே தொடர்ந்து பார்த்ததுனால அப்படி தோணி இருக்கும் போல..."
நிலவனோ அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுகொண்டிருந்தவன் என்ன தோன்றியதோ உடனடியாக "அதி உனக்கு அடையார் பிராஞ்ல நடந்ததா யாரு சொன்னது..." என்றான் சற்று அவசரமாய்...
"அங்க ஹார்ட் ஸ்பெலிஸ்ட்டா ஒர்க் பண்றவங்க தான்... அவங்க கொஞ்சம் புதுசு... அப்பப்போ ஒர்க் பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க.. ஏன் கேக்குற..."
"ஓகே அவங்களுக்கு கால் பண்ணி... ஹார்ட் டோனரா இருந்த பொண்ணு... ஆபரேஷனுக்கு முதல் அங்க ஏதாச்சும் ட்ரீட்மென்ட் எடுத்திச்சானு கேளு... இல்ல உறுப்பு தானம் ஆர் இரத்த தானம் இப்படி எதுக்காச்சும் அங்க ஹாஸ்பிடலுக்கு வந்திச்சானு கேளு...." என்றவன் சொல்ல அதிரலுக்கும் ஏதோ புரிவதை போல் இருந்தது...
அவளும் அந்த பெண்ணுக்கு அழைப்பெடுத்து பேசி வைத்தவள் ஆமாமென்பதாய் தலை அசைத்தாள்
"போன மந்த் அங்க பிளட் டொனேட் பண்ணி இருக்கா...."
"எஸ் ஐ கொட் இட்..."
"நிலவா அப்போ இது..." என்று அவள் சொல்ல வர
"எஸ் யூ ஆர் ரைட்... உடலுறப்பு திருட்டு.."
"என்ன நிலவா சொல்லுற..." என்றான் புகழ்
"ஆமா புகழ்... ஹாஸ்பிடல் வர்ற ஆட்களோட பிளட் ரிப்போர்ட் எடுக்குறாங்க... தேவைப்படும் போது அவங்க உறுப்புகளை எடுக்குறாங்க.. இதுதான் அங்க ஹாஸ்பிடல்ல நடக்கிற மர்மமா இருக்கனும்... பட் ஆக்சிடென்ட் எதுவும் இல்லாம எப்படி பிரைன் டெத் ஆகுதுன்னு யோசிக்கணும்... இதே விஷயம் ஆசிரமதுளையும் நடந்திருக்கு... தீ விபத்து நடக்க முதல் அங்க மெடிக்கல் கேம்ப் நடந்திருக்கு அதுவும் ஜேகே ஹாஸ்பிடலால தான்..." என்றான்..
"அப்படினா... ஆசிரமத்துல உள்ள குழந்தைங்க கடத்த தான பட்டிருக்கணும்.. ஏன் அவங்கள கொன்னாங்க..."
"கொன்னது கூட ஒரு வித கண்துடைப்பா தான் இருக்கணும்... அங்க ஒரு குறிப்பிட்ட வயசு பிள்ளைங்களோட பாடி விபத்துல கிடைக்கல... அதுக்கு ரீசன், தீ ஒரு பில்டிங்ல அதிகமான பிடிச்சதால உடல் கருகி போயிடிச்சுனு ரிப்போர்ட்ல இருக்கு..."
"பட் அப்படி காணாம போன பிள்ளைங்க எல்லாருக்கும் பதினாலு டு பதினெட்டு வயசுதான்... அங்க தான் எனக்கு சந்தேகம் வந்திச்சு.. எப்படி ஒரு குறிப்பிட்ட வயசு உள்ளவங்க உடம்பு மட்டும் கிடைக்காம போகும்னு...."
"அந்த வயசு பிள்ளைங்க மட்டும் தனியா தூங்கி இருக்கலாம் இல்லையா?.."
"இதே டவுட் எனக்கும் வந்திச்சு புகழ்... நான் சிஸ்டர் மேரிகிட்டயே கேட்டேன்... அப்படி எதுவும் இல்ல எல்லா வயசுலயும் கலந்து தான் பிரிச்சிருக்கிறதா சொன்னாங்க... சோ அந்த பிள்ளைங்க எல்லாம் கடத்தபட்டிருக்கணும்.. வர்ஷியும் இதே நோக்கத்துக்காக தான் கடத்தப்பட்டிருப்பா அவளோட பிளட் குரூப் ரொம்ப ரேர்..." என்று சொன்னவனுக்கு தன்னவளுக்கும் அதே இரத்த வகை தான் என்பது மறந்துபோனது....
"அந்த ஜெயராமனுக்கு இப்படி ஓரு மூளையான்னு ஆச்சரியமா இருக்கு நிலவா..."
நிலவனோ இடம் வலமாக தலையாட்டியவன் "நோ புகழ்... அவருக்கு பின்னால யாரோ இருக்கனும்.. அவரோட மூளையா செயற்பட ஒரு ஆள் இருக்கு.. அந்த நபர தான் நாம கண்டுபிடிக்கணும்..."
"நிலவா, அவருக்கு ஒரு பேரன் இருக்குறதா ஜெயவேல் சார் எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு.. அவனும் டாக்டர் தான்... ஏன் அது அவனா இருக்க கூடாது..." என்றாள் அதிரல் சந்தேகமாய்
"வாய்ப்பிருக்கு பட் அவன பத்தி விசாரிக்கணும்... உனக்கு ஏதாச்சும் தெரியுமா அவன பத்தி..."
"நோ ஐடியா... ரீசென்ட்டா கேள்வி பட்டது கூட இல்லையே... அவன் போரின்ல இருக்குறதா தான் ஜெயவேல் சார் சொன்னாரு..."
புகழ் ஏதோ ஞாபகம் வந்தவனாக "மச்சான் நான் ட்ரைனிங்ல இருந்த டைம்ல என் பிரண்ட் ஒருத்தன் இந்த ஊர்தான்... அவன் அப்பா கூட ஜெயராமன் வீட்ல டிரைவரா வேலை பாக்குறதா சொல்லி இருக்கான்... அவன் கிட்ட வேணும்னா கேட்டு பாக்கலாம்...."
"அண்ணா" என்று அழைத்தபடி அவனை அணைத்துக்கொண்ட அந்த விரல்கள் உண்மைக்கும் நடுங்கி கொண்டிருந்தது..
நிலவனுக்கும் அதிரலுக்கும் சட்டென்று ஒன்றும் புரியவில்லை... என்னவென்று உணரும் முன்பே அந்த தாதி உள்ளே வந்திருந்தார்.. முகத்தில் தெரியும் பயத்தை மறைத்தபடி...
"சாரி சார்.. இந்த பொண்ணு இப்படித்தான் யாரப்பாத்தாலும் கட்டிபிடிச்சிடுது..." என்றவர் அவனிடம் இருந்து அந்த பெண்ணை பிரித்து வெளியே அழைத்து செல்ல முயற்சிக்க.. அவளோ பிடியை விடவில்லை... அவரோ வழுகட்டாயமாக இழுத்து செல்ல, அந்த பெண்ணோ பேசவே தோன்றாமல் பார்வை முழுவதையும் நிலவனிடமே நிறுத்தி இருந்தாள்..
அந்த பர்வை அவனை ஏதோ செய்ய, அவனோ அவன் ஞாபக அடுக்கில் அந்த பெண்ணை தேடிகொண்டிருந்தான்.. அதில் எங்குமே அவள் முகம் இருப்பதாய் தெரியவில்லை...
அதிரலுக்கு சட்டென்று ஏதோ யோசனை வர.. "ஒரு நிமிஷம்... இவ நான் அட்மிட் பண்ண பொண்ணு தான..." என்று இறங்கி அந்த பெண் அருகே சற்று மெதுவாக நடந்து சென்றாள்...
அந்த தாதிக்கோ இப்போது என்ன சொல்வதென்று குழப்பம்... இல்லையென்று சொன்னால் அவள் சந்தேக படக்கூடும்... ஆம் என்றாலும் அவள் கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே.. என்ற பதற்றத்தோடு தேர்த்து, இந்த நேரம் அவளை அழைத்து வந்த தன் மடத்தனத்தையும் எண்ணி கவலையும், பயமும் இணைந்து கொண்டது...
"உங்கள தான் கேக்குறேன்... பதில் சொல்லுங்க சிஸ்டர்.."
"ஆமா மேடம் அந்த பொண்ணு தான்..."
"இன்னும் இவள இங்க ஏன் வெச்சிருக்கீங்க.."
"இல்ல டாக்டர் சில ரிப்போர்ட்ஸ் எடுக்கணும்னு சொன்னாங்க..."
"எந்த டாக்டர்?... வன் வீக் இவ கேஸ் நான் தான் கேண்டில் பண்ணேன்.. காயம் குணமாகி இவ நல்ல ஆரோக்யமா தான இருந்தா.. அன்னைக்கே யாருனு விசாரிச்சு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி இருந்தனே.." என்ற அதிரலுக்கு அந்த தாதியின் மழுப்பலான பேச்சில் ஒரு வித சந்தேகம் தோன்றத்தான் செய்தது...
இத்தனை பேச்சு வார்த்தைக்கும் அந்த பெண்ணின் பார்வை நிலவனை விட்டு அகலவே இல்லை...
"ஆமா மேடம்.. இந்த பொண்ணும் ஒன்னும் வாய தொறந்து சொல்லல.. இவள தேடியும் யாரும் வரல.. அதான் இங்கயே வெச்சிருந்தோம்.." என்றார் என்ன சொல்லுவதென்று தெரியாமல்...
"ஓகே நீங்க கிளம்புங்க நானே அவளை அவங்க வீட்டுல விட்டுடுறேன்... இந்த பெரிய பொண்ணுகிட்ட அட்ரஸ் கேட்டு தெரிஞ்சிக்க இவ்வளவு நாள்னு நீங்க சொல்லுற சில்லி ரீசன்கெல்லாம் தலையாட்ட முடியாது..." என்றாள் கோபமாக..
"இல்லை மேடம், டாக்டர் கேட்டா?.." என்று அவர் இழுக்க...
"யாரா இருந்தாலும் என்ன வந்து பாக்க சொல்லுங்க..." என்றாள் அவர் பேச்சை கத்தரித்தது போல்...
அந்த பெண்மணியோ திரும்பி திரும்பி பார்த்தபடியே வெளியேறினார்...
அதிரளுக்கோ மனதில் ஆயிரம் கேள்வி... ஏற்கனவே நிலவனை வர சொல்லி இருந்தது கூட ஏதோ ஒரு சந்தேகம் வந்ததன் காரணமாக தான்.. இங்கே இன்னொன்று... ஏதோ நடக்கிறது இங்கே என்பது மட்டும் புரிந்தது...
அந்த பெண்ணில் அருகில் சென்றவள்.. அவளை அங்கே அமர வைத்து "ஏண்டா... உங்க வீட்டு அட்ரஸ் சொல்லி இங்க இருந்து போய் இருக்கலாமில்லையா?... ஏன் சொல்லல நீங்க??... என்று கேட்க அப்போதும் அவள் பார்வை நிலவனிடம் தான்...
ஏனென்றே தெரியாமல் ஒரு இடரில் மாட்டிக்கொண்டு தவியாய் தவித்து... பல நாட்களாய் யாரவது வருவார்களா என்று காத்திருக்கும் ஒரு உயிருக்கு தெரிந்தவர் ஒருவரை கண்டால் உள்ளம் படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதல்லவா... அந்த நிலையில் தான் இருந்தாள் அந்த பெண்ணும்.. மூளை உறைந்திருந்தது.. இந்த நிமிடம் பொய் ஆகிட கூடாதென உள்ளம் அடித்துக்கொண்டது... பேசவேண்டும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாள் தான் ஆனால் பேச்சு தொண்டையை தாண்டி வரவில்லை...
இத்தனைக்கும் சில வாரங்களுக்கு முன் தான் அதிரல் அவளை காப்பாற்றி இருந்தாள் ஆனால் அதிரல் கூட அவளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை நிலவனின் முன்னால்...
"ஏன் நிலவா இவ பேசமாட்டேங்கிறா?... ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல் தான்.. அன்னைக்கு ஒருநாள் உன்ன சந்திக்க வரும் போது நான் கூட லேட்டா வந்தனே.. ஒரு சின்ன பொண்ணு பைகல வந்து விழுந்து ஆக்சிடென்ட் அதனாலதான் லேட்னு கூட சொல்லி இருந்தேனே.. உனக்கு ஞாபகம் இருக்கா??.."
"ம்ம்ம்ம் ஆமா ஞாபகம் இருக்கு... அந்த பொண்ணா இவ..."
"ஆமா.. பயத்துல மயங்கிட்டா... விழுந்ததுல காயம் கொஞ்சம் ஆழம் தான்.. இவளுக்கு பிளட் குரூப் ஓ நெகடிவ்.. சோ நானே பிளட் குடுத்துட்டு.. இங்கயே அட்மிட் பன்னிட்டு தான் அன்னைக்கு உன்ன பாக்க வந்தேன்.."
"அப்பறம் வன் வீக் ஹாஸ்பிடல்ல தான் இருந்தா.. நார்மல் ஆகிட்டா.. அந்த நேரம் தான் நான் அந்த கலையரசன் கேஸ்ல கொஞ்சம் பிசியா இருந்தேன்... சோ டிஸ்சார்ஜ் ப்ரோசீஜர் என்னனு பாக்க சொல்லி என் கோலீக் ஒருத்தங்க கிட்ட சொல்லிட்டு போனேன்.."
"அன்னைக்கு பெரிய பிரச்சனை இல்ல.. ஜஸ்ட் பயத்துல மயங்கிட்டான்னு மட்டும் தான சொன்ன?.." என்றவன் பார்வை அவளை துளைக்க
"டிரீட்மென்ட் ஓரளவுக்கு நடந்து அவளும் ஓகே ஆகிட்டா நிலவா.. சோ எதுக்கு ஏற்கனவே டென்ஷன்ல இருந்த உன்ன மேலும் டென்ஷன் பண்ணனும்னு தான் அப்படி சொன்னேன்.."
நிலவன் சிறிது நேரம் யோசித்தவன் "அதி.. அந்த பொண்ணு ஏதோ பிரச்சனை ஒன்னுல மாட்டி இருந்து இருக்கா... இங்க இந்த ஹாஸ்பிடல்ல ஏதோ நடக்குது... அந்த ஜெயராமன் என்னமோ ஒன்னு பண்ணுறாருன்னு மட்டும் புரியுது..." என்றான்..
அவன் மனமோ, அவன் சந்தேக வட்டமான "ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சனை தான்" என்று உறுதியாய் நம்பியது...
"இன்னொரு விஷயமும் சொல்லணும் நிலவா... நான் உன்ன இங்க வர சொன்னதே அதுக்கு தான்... நடந்த கலவரத்துல அத மறந்துட்டேன்... இங்க..." என்று அவள் ஆரம்பிக்க போக தடுத்தவன்...
"இங்க இதப்பத்தி பேச வேணாம் அதி.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... இந்த பொண்ணுக்குரிய டிஸ்சார்ஜ் என்னனு பாரு போகலாம்.." என்று அவன் வெளியேற
அவ்வளவு நேரம் பொம்மையாய் அமர்ந்திருந்தவள் அவன் செல்ல போகிறான் என்றதும் உயிர் வந்தவளாக மீண்டும்... "நிலவன் அண்ணா..." என்று அழைத்திருந்தாள்
நிலவனோ அவள் அருகில் வந்து "உனக்கு என்ன தெரியுமாடா???" என்று கேட்க அந்த பெண்ணும் ஆம் என்பதாய் தலையாட்டினாள்..
"நீ யாரு... என்ன எப்படி உனக்கு தெரியும்.."
"உங்க வர்ஷி பாப்பா ணா... தருண் கூட அதுக்கப்பறம் நான் சண்டையே போடல தெரியுமா?.." என்று அவளை அவனுக்கு உணர்த்தியவள் கண்களில் தன்னை கண்டுகொள்ள வேண்டுமே என்ற ஆர்வம்...
அவனோ அவள் கையை பிடித்து வெட்டுப்பட்ட இடத்தை பார்க்க அந்த தழும்பு அப்படியே இருந்தது... அவனுக்கோ அதிர்ச்சி.. "வர்ஷியா இவள்.." என்ற கேள்வி தான்
அவனுள்... அடையாளமே தெரியவில்லை... இந்த மூன்று வருடத்தில் நன்கு வளர்ந்திருந்தாள்... அப்போதே அவளுக்கு பன்னிரெண்டு வயது.. குட்டி பெண் போலத்தான் இருப்பாள்... இன்று பதினஞ்சு பதினாறு வயது இருக்கும்.. அவனால் அடையாடம் காணமுடியவில்லை...
"டேய் வர்ஷி நீயாடா... இத்தன வருசத்துக்கு அப்பறம் அதுவும் இந்த டிரஸ்ல உன்னால என்ன அடையாளம் காண முடியாதா டா??.. என்று அவன் சந்தேகத்தை கேட்டிருந்தான்...
இங்கே ஓரிரண்டு முறை வந்திருந்தாலும்... அவன் வேலை செய்த நாளில் இருந்தே இங்கே இருப்பவர்கள் சிலர் இன்னும் இருக்க தான் செய்தனர் ஆனால் அதில் ஒருவர்கூட இதுவரை அவனை அடையாளம் கண்டு கேட்டத்தில்லையே...
"உங்க குரல தான் ணா முதல்ல உணர்ந்தேன் அதுவே நீங்கனு காட்டி கொடுத்திச்சு..." என்றவளின் பேச்சில் தெரிந்த அன்பு அவனுக்கு ஆச்சரியம் தான்... இருந்தும் அவளின் இன்றைய நிலையை அறிய வேண்டும் என்பதை உணர்ந்தவன்
"அம்மா அப்பா தேடுவாங்கல்லடா... இங்க ஹாஸ்பிடல்ல உன் அட்ரஸ் சொல்லி இருக்கலாமே... இவ்வளவு நாள் இங்கயே இருக்க, அவங்க பயந்துடுவாங்கல்ல..."
அவளோ "அம்மா அப்பா இருப்பாங்களாணா..." என்று அவன் கேள்விக்கு பதிலாய் அவள் கேள்வி கேட்டவள் கண்களில் கண்ணீர் கொட்டியது, பெற்றோரின் ஞாபகத்தில்...
"ஏண்டா என்னாச்சு ஏன் இப்படி கேக்குற?...
"ஒரு வருசத்துக்கு முதலே அவங்கள அடிச்சிட்டு போட்டுட்டு தான்ணா என்ன கொண்டு போனாங்க..." என்றாள் விசும்பலுடன்...
"என்னடா சொல்லுற? ஒரு வருசத்துக்கு முதலா.."
"ஆமா ணா.. அன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்குள்ள கொஞ்ச பேர் வந்தாங்க.. அப்பாகிட்ட ரொம்ப சத்தம் போட்டாங்க.. நான் அவங்களுக்கு வேணுமாம்ணு பணம் எல்லாம் கொடுத்தாங்க... அப்பா முடியவே முடியாதுனு கோபமா சண்டை போடவும்... என் கண் முன்னாடியே மூனு பேரையும் அடிச்சி போட்டுட்டு என்ன கூட்டிட்டு போய்ட்டாங்க ணா... " என்றவள் அன்றைய நாளின் தாக்கத்தில் மேலும் அழுதாள்...
அவனுக்கோ தலைசுற்றியது.... என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல் ஒவ்வொன்றாய் கிளம்புகிறதே என்று....
வெளியே ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த அதிரல்..
"நிலவா இங்க இருந்து முதல்ல வீட்டுக்கு போகலாம்.. மிச்சம் அங்க போய் பேசிக்கலாம்.." என்று நிலைமையை உணர்த்த...
"அதி.. இங்க ஹாஸ்பிடல் தான் பிரச்சனைனா.. இவ நம்ம கூட வர்றது யாருக்கும் தெரிய வேணாம்.. இப்படியே கூட்டிட்டு போய்டலாம்..." என்றவனுக்கு அவளும் சம்மதமாய் தலையாட்டினாள்
அவர்கள் நேரே சென்றது நிலவின் வீட்டுக்கு தான்... புகழையும் அழைக்க அவனும் அங்கு வந்திருந்தான்... நிலவனோ அழுதழுது சோர்வாய் இருந்தவளை அங்கிருந்த அறை ஒன்றில் தூங்க வைத்தவன்... வெளியே வர
"நிலவா நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா... பேசலாம்..." என்றான் புகழ் அவன் இன்னும் யூனிபோர்முடன் இருப்பதை பார்த்து...
"அதெல்லாம் வேணாம்.. என்றவனை கட்டாயப்படுத்தி அனுப்பி இருந்தான் புகழ்...
"என்ன வசந்த பண்ணிட்டு இருக்க நீ... அந்த இடியட் பண்ண வேலைல இப்போ அந்த பொண்ணு அவன் கைல... சிட்.."
"அவளை முடிச்சிடுவோமா சார்..."
"சென்ஸ் ஓட பேசு வசந்த்... ஓ நெகடிவ் பிளட் குரூப் அவ.... அவளோட பெறுமதினு என்னனு தெரியாதா உனக்கு??... சும்மா போக விடுற உயிரா அவ... அவளை நம்ம இடத்துக்கு எடுக்க ஏற்பாடு பண்ணு... அந்த அதிரலையும் சேர்த்து..."
"ஓகே சார்... அந்த பொண்ணுக்கு அடையாளம் சொல்லுற அளவுக்கு நம்ம இடம் சரியா தெரியாதே... எப்படியும் அவள மட்டும் வெச்சிட்டு நம்ம இடத்த கண்டுபிடிக்க கஷ்டம் தான் சார்... நீங்க டென்ஷன் ஆகாதீங்க..." என்றான் சமாதானமாக...
"நோ.. அந்த நிலவன சாதாரணமா நினைக்காத... அவன் கொஞ்சம் உஷாரானாலும் டேஞ்சர் தான்..." என்றவன் மீண்டும் "அந்த லேடிய பயர் பண்ணிடு... அவ இனிமேல் நம்ம ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ண கூடாது... ஆனா ரீசன் வேலிட்டா இருக்கணும் பாத்துக்கோ... இன்னும் டூ த்ரீ மந்த் அப்பறம் பண்ணு..."
"ஓகே சார் பண்ணிடுறேன்... ஆனா நாளைக்கே பண்ணலாமே.. ஏன் லேட்டா?..."
"நீ ஸ்மார்ட்டா தான் இருக்க.. அப்பப்போ ஊர் புத்திய காட்டுற... ஏற்கனவே அவ மேல சந்தேகம் வந்திருக்கும்... இப்போவே அவள பயர் பண்ணா இதுக்கு நாமளும் காரணம்னு ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மேலயே சந்தேகம் வருமேடா இடியட்..." என்றான் அவனுக்கு புரியும் படி...
"ஆமால... ஓகே சார்..." என்று தலையை சொரிந்தவன் வெளியேறி இருந்தான்...
"இப்போதைக்கு மூனு பிரச்சனை நம்மல சுத்தி இருக்கு... நம்பர் வன், காலேஜ்ல நமக்கு நடந்த பிரச்சனை... நம்பர் டூ, அந்த ஆசிரமத்துல நடந்த பையர் ஆக்சிடென்ட்... நம்பர் த்ரீ, வர்ஷியோட விஷயம்.. இதுல மூனுலையும் சம்பந்தப்பட்ட ஒரே
விஷயம் அண்ட் ஒரே ஆள் ஜெயராமன் தான்..." என்று நிலவன் சொல்ல
புகழோ.. "ஆசிரமம் ஓகே... காலேஜ்ல நடந்ததும் வர்ஷியோட விஷயமும் தொடர்பு பட்டிருக்கும்னு எப்படி சொல்ற.."
"காலேஜூம் ஜெயராமனோடது தான.. அண்ட் மோர் ஓவர் என்னோட மருந்து யாருக்கோ தேவபட்டிருக்கு.. சோ காலேஜ் மேனேஜ்மென்ட் ஏன் இத பண்ணி இருக்க கூடாது... ஜஸ்ட் ஒரு சந்தேகம் தான்...
"அடுத்தது வர்ஷியோட விஷயம் அவ ஏதோ ஒண்ணுக்காக கடத்தபட்டிருக்கா.. அவங்க பேரண்ட்ஸ தாக்கியாவது கடத்துனும்கிற அளவுக்கு அவகிட்ட ஏதோ ஒன்னு இருந்திருக்கு... அன்ட் ஜேகே ஹாஸ்பிடல்ல அவள யாருக்கும் தெரியாம வெச்சிருந்திருக்காங்க.. சோ அங்க உள்ள யாரோ தான் அவள கடத்தி இருக்கனும்.. அப்படி இல்லனா கடத்துனவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கனும்.. எப்படி பார்த்தாலும் அதுல ஜேகே ஹாஸ்பிடலுக்கு சம்பந்தம் இருக்கு... சோ அது ஏன் ஜெயராமனா இருக்க கூடாது?..."
"வாய்ப்பிருக்கு நிலவா பட் உறுதியா சொல்லமுடியதில்லையா??..." என்றான் புகழ்...
"இல்ல புகழ் அவன் யோசிக்கிற வே கரைக்ட்... எனக்கும் அங்க நடக்குற விஷயத்துல சில டவுட்ஸ் இருக்கு..." என்று புகழிடம் சொன்னவள்
நிலவனிடம் "உன்ன இன்னைக்கு வர சொன்னதும் இதுக்காக தான்.... கொஞ்ச நாள் முதல் அங்க எம்எல்ஏ கணேசனுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் நடந்திச்சு... நான் தான் பண்ணினேன்.. வழமையை ஹார்ட் அப்படியெல்லாம் உடனடியா கிடச்சுடாது.. அவருக்கு டூ வீக்ஸ்லயே கிடச்சுது.. அதுவும் அங்க ஹாஸ்பிடல்ல இருந்த ஒரு பொண்ணு மூலமா கிடைசித்து... சேம் இன்சிடென்ட் போனவாரம் எங்க ஹாஸ்பிடல் அடையார்ல உள்ள பிரான்ச்லயும் நடந்திருக்கு... இது இன்னைக்கு தான் எனக்கே தெரியவந்திச்சு... அது எப்படி இரண்டு தடவையும் ஒரே போல நடக்கும்னு டவுட்டா இருந்திச்சு..."
"ஹார்ட் எப்படி இன்னொரு ஆளுக்கு குடுப்பாங்க..."
"இல்ல புகழ்.. அந்த பொண்ணுக்கு பிரைன் டெத்... அவளுக்கு ஆசிடெண்டும் ஆகல... மூளைல கட்டியும் எதுவும் இல்ல பட் அவளுக்கு பிரைன் டெத் ஆகி இருந்து.. அப்போவே எனக்கு சந்தேகம் தான்... பட் அதுக்குரிய டாக்டர்ஸ் சொல்லும் போது என்னால நம்பாம இருக்கவும் முடியல... அதுக்கு டூ த்ரீ டேய்ஸ் முன்னாடித்தான் அவ அப்பாவுக்கு கிட்னி பெய்லியர்னு அவளோட கிட்னிய கொடுத்திருந்தா... அவளை அங்கேயே தொடர்ந்து பார்த்ததுனால அப்படி தோணி இருக்கும் போல..."
நிலவனோ அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுகொண்டிருந்தவன் என்ன தோன்றியதோ உடனடியாக "அதி உனக்கு அடையார் பிராஞ்ல நடந்ததா யாரு சொன்னது..." என்றான் சற்று அவசரமாய்...
"அங்க ஹார்ட் ஸ்பெலிஸ்ட்டா ஒர்க் பண்றவங்க தான்... அவங்க கொஞ்சம் புதுசு... அப்பப்போ ஒர்க் பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க.. ஏன் கேக்குற..."
"ஓகே அவங்களுக்கு கால் பண்ணி... ஹார்ட் டோனரா இருந்த பொண்ணு... ஆபரேஷனுக்கு முதல் அங்க ஏதாச்சும் ட்ரீட்மென்ட் எடுத்திச்சானு கேளு... இல்ல உறுப்பு தானம் ஆர் இரத்த தானம் இப்படி எதுக்காச்சும் அங்க ஹாஸ்பிடலுக்கு வந்திச்சானு கேளு...." என்றவன் சொல்ல அதிரலுக்கும் ஏதோ புரிவதை போல் இருந்தது...
அவளும் அந்த பெண்ணுக்கு அழைப்பெடுத்து பேசி வைத்தவள் ஆமாமென்பதாய் தலை அசைத்தாள்
"போன மந்த் அங்க பிளட் டொனேட் பண்ணி இருக்கா...."
"எஸ் ஐ கொட் இட்..."
"நிலவா அப்போ இது..." என்று அவள் சொல்ல வர
"எஸ் யூ ஆர் ரைட்... உடலுறப்பு திருட்டு.."
"என்ன நிலவா சொல்லுற..." என்றான் புகழ்
"ஆமா புகழ்... ஹாஸ்பிடல் வர்ற ஆட்களோட பிளட் ரிப்போர்ட் எடுக்குறாங்க... தேவைப்படும் போது அவங்க உறுப்புகளை எடுக்குறாங்க.. இதுதான் அங்க ஹாஸ்பிடல்ல நடக்கிற மர்மமா இருக்கனும்... பட் ஆக்சிடென்ட் எதுவும் இல்லாம எப்படி பிரைன் டெத் ஆகுதுன்னு யோசிக்கணும்... இதே விஷயம் ஆசிரமதுளையும் நடந்திருக்கு... தீ விபத்து நடக்க முதல் அங்க மெடிக்கல் கேம்ப் நடந்திருக்கு அதுவும் ஜேகே ஹாஸ்பிடலால தான்..." என்றான்..
"அப்படினா... ஆசிரமத்துல உள்ள குழந்தைங்க கடத்த தான பட்டிருக்கணும்.. ஏன் அவங்கள கொன்னாங்க..."
"கொன்னது கூட ஒரு வித கண்துடைப்பா தான் இருக்கணும்... அங்க ஒரு குறிப்பிட்ட வயசு பிள்ளைங்களோட பாடி விபத்துல கிடைக்கல... அதுக்கு ரீசன், தீ ஒரு பில்டிங்ல அதிகமான பிடிச்சதால உடல் கருகி போயிடிச்சுனு ரிப்போர்ட்ல இருக்கு..."
"பட் அப்படி காணாம போன பிள்ளைங்க எல்லாருக்கும் பதினாலு டு பதினெட்டு வயசுதான்... அங்க தான் எனக்கு சந்தேகம் வந்திச்சு.. எப்படி ஒரு குறிப்பிட்ட வயசு உள்ளவங்க உடம்பு மட்டும் கிடைக்காம போகும்னு...."
"அந்த வயசு பிள்ளைங்க மட்டும் தனியா தூங்கி இருக்கலாம் இல்லையா?.."
"இதே டவுட் எனக்கும் வந்திச்சு புகழ்... நான் சிஸ்டர் மேரிகிட்டயே கேட்டேன்... அப்படி எதுவும் இல்ல எல்லா வயசுலயும் கலந்து தான் பிரிச்சிருக்கிறதா சொன்னாங்க... சோ அந்த பிள்ளைங்க எல்லாம் கடத்தபட்டிருக்கணும்.. வர்ஷியும் இதே நோக்கத்துக்காக தான் கடத்தப்பட்டிருப்பா அவளோட பிளட் குரூப் ரொம்ப ரேர்..." என்று சொன்னவனுக்கு தன்னவளுக்கும் அதே இரத்த வகை தான் என்பது மறந்துபோனது....
"அந்த ஜெயராமனுக்கு இப்படி ஓரு மூளையான்னு ஆச்சரியமா இருக்கு நிலவா..."
நிலவனோ இடம் வலமாக தலையாட்டியவன் "நோ புகழ்... அவருக்கு பின்னால யாரோ இருக்கனும்.. அவரோட மூளையா செயற்பட ஒரு ஆள் இருக்கு.. அந்த நபர தான் நாம கண்டுபிடிக்கணும்..."
"நிலவா, அவருக்கு ஒரு பேரன் இருக்குறதா ஜெயவேல் சார் எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு.. அவனும் டாக்டர் தான்... ஏன் அது அவனா இருக்க கூடாது..." என்றாள் அதிரல் சந்தேகமாய்
"வாய்ப்பிருக்கு பட் அவன பத்தி விசாரிக்கணும்... உனக்கு ஏதாச்சும் தெரியுமா அவன பத்தி..."
"நோ ஐடியா... ரீசென்ட்டா கேள்வி பட்டது கூட இல்லையே... அவன் போரின்ல இருக்குறதா தான் ஜெயவேல் சார் சொன்னாரு..."
புகழ் ஏதோ ஞாபகம் வந்தவனாக "மச்சான் நான் ட்ரைனிங்ல இருந்த டைம்ல என் பிரண்ட் ஒருத்தன் இந்த ஊர்தான்... அவன் அப்பா கூட ஜெயராமன் வீட்ல டிரைவரா வேலை பாக்குறதா சொல்லி இருக்கான்... அவன் கிட்ட வேணும்னா கேட்டு பாக்கலாம்...."
Last edited: