ஜாதி மல்லி பூ 19
இப்படியே நாட்கள் கடந்து அதிரல் கல்லூரி வந்து நான்கு மாதம் கழிந்திருந்தது... இடைப்பட்ட நாளில் பல மாற்றம்... அவள் வந்த மறு நாளே நிலவன் அவளிடம் காதலை சொல்லி அவள் கோபத்தையும் பெற்றுக்கொண்டான். ஆனாலும் அவன் நிறுத்தவில்லை தினமும் அவளை ஒரு வழி பண்ணிக்கொண்டுதான் இருந்தான்.. நண்பர்களுக்கு கூட அவனது மின்னல் வேகம் பயத்தையே கொடுத்தது...
இன்று நிலவனுக்கு சைகாட்ரிக் அப்பொய்ன்மெண்ட் ஒன்று இருந்தது.. தற்கொலைக்கு முயன்று மனநிலை மற்றதுக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டருக்கும் மாணவி தொடர்பான முழு அறிக்கை ஒன்று தனக்கு பொறுப்பான ப்ரோபசருக்கு சமர்ப்பிக்கவேண்டி இருந்தது...
அவர்கள் வகுப்பு மூன்று குழுக்களாய் பிரிக்கப்பட்டு தான் அப்பொய்ன்மெண்ட் சென்று கொண்டிருந்தது... அதில் பூஜாவும் இவனும் ஒரு குழு.. விஷ்ணு, அறிவு, நிஷா மூவரும் ஒன்று.. ராம் மற்ற குழுவிலும் என்று பிரிந்திருந்தனர்..
அதிரல் மூன்று குழுக்களுக்கும் பொதுவாய் உதவி செய்து கொண்டிருந்தாள்.. சந்தேகங்களை முடியுமான வரை தீர்த்து வைப்பது... அவர்களை வழி நடத்துவது.. புரியாத விடயங்களை சொல்லி குடுப்பது என அவள் கொஞ்சம் பிசியாக தான் இந்த நான்கு மாதமும் வேலை செய்து கொண்டிருந்தாள்..
நிலவன் அங்கே ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவன் நேரே அந்த மாணவியை வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான்...
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி.. தன் தாய் தம்பியிடம் தன்னை விட அதிகமாக பாசம் காட்டுவதால் தாங்கிகொள்ள முடியாமல் கையை வெட்ட தெரியாமல் வெட்டி இருந்தாள் அந்த இளம் சிட்டு... அவள் மனநிலை மாற்றம் வேண்டியே இங்கே அனுமதிக்கபட்டிருந்தாள்...
"ஹாய் வர்ஷி... என்ன பண்றீங்க சாப்டாச்சா?.."
"ஆமாணா.. ஆச்சு.."
"குட் கேர்ள்... இன்னைக்கு நீங்க வீட்டுக்கு போக போறீங்கல்ல வர்ஷி...
போனதும் அண்ணாவ மறந்துடுவீங்களா என்ன?.."
"இல்லையே.. அண்ணா கூட டெய்லி பேசுவேனே..."
"ஓகேடாமா... இனிமேல் அண்ணா சொன்ன போல நடந்துக்குவீங்க தான..."
"பிங்கி ப்ரோமிஸ் ணா.."
"தருண நான் என் வீட்டுக்கு கொண்டு போகட்டுமா???.."
"நோ... நான் தம்பிய யாருக்கும் தர மாட்டேன்..."
"அம்மாடியோ.. யாரோ தருண பிடிக்கலைனு சொன்னாங்க... யாரு வர்ஷி அது..." என்றதும் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கி சிரித்தது குழந்தை... அவள் தலையை கலைத்தவன்
"பாய் வர்ஷி..." என்று அந்த சிறுமியை டிரீட் பண்ணும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தான்...
"எஸ்கியூஸ் மீ மேம்..."
"வா நிலவா.. பேசன்ட் வர்ஷியோட ரிப்போர்ட் ரெடியா?..."
"எஸ் மேம்.." என்று ஒரு பைலை அவரிடம் கொடுத்தான்..
"ஓகே நிலவா.. நான் அப்பறமா செக் பண்ணிட்டு சொல்லுறேன்..."
"ஓகே மேம் பூஜாவோட பைல் ஈவினிங் கொடுக்குறதா சொன்னா மேம்... லைட்டா பீவர் அவளுக்கு... "
"நோ இஸ்சு நாளைக்கு வர சப்மிட் பண்ண டைம் இருக்குல்ல... நாளைக்கே பண்ணிட சொல்லு..."
"தேங்க் யூ மேம்..." என்றவன் அங்கிருந்து வெளியேற எதிரே அதிரல் வந்துகொண்டிருந்தாள்... அவளோ அவனை பார்த்து மெல்ல புன்னகைக்க அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை... அவன் பாட்டுக்கு வெளியேறிவிட்டான்... அதிரலுக்கு புரிந்தது அன்று அவள் நடந்து கொண்டதான் விளைவு இது என...
அவளிடம் காதலை உரைத்த நாளில் இருந்து நாள் தவறாமல் அவளுக்கு வரும் ஜாதி மல்லிகை பூ கொத்தும் கடிதமும் இந்த மூன்று நாட்களாக அவளுக்கு வரவில்லை...
அது அவளுக்கு ஏதோ போல் தான் இருந்தது.. முதலில் வெறுப்பாய் இருந்தவை அவை பின்னாளில் அந்த பூங்கொத்தும் "அன்புள்ள ஜாஸுக்கு" என்று ஆரம்பிக்கும் அந்த கடிதமும் இல்லாமல் அவள் நாள் பூரணமடைவதில்லை என்ற அளவுக்கு அதனை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது அவள் மனம்...
நட்பு வட்டம் என அவளுக்கு பெரிதாக யாரும் இருந்ததில்லை... தனிமை விரும்பி அவள்.. படிக்கும் காலத்திலும் கூட நெருங்கிய நட்பு என்று இருந்ததில்லை.. சாதாரணமாக பேசிக்கொல்வது இல்லையேல் படிப்பில் தேவை ஏற்படின் பேசிக்கொல்வது அவ்வளவே அவளுடைய கல்லூரி காலம் இருந்தது...
இங்கு வந்தது முதல் நிலவன் பூஜா மீது காட்டும் கோபத்தில் இருக்கும் நட்பு.. அவன் விஷ்னு ராமிடம் கலாய்த்தபடி பேசும் போது அதில் இருக்கும் நட்பு... அறிவு அவனை ஒதுக்கினாலும் எதை பற்றியும் யோசிக்காமல் அவனுடன் தானாய் போய் பேசும்போது அதில் இருக்கும் நட்பு... தன்னை காதலித்தவளாக இருந்தாலும் நிஷாவிடம் அவன் காட்டும் கண்ணியமான நட்பு... இவை அனைத்தும் அவளை அவன் நட்புக்காக ஏங்க வைத்தது எனலாம்...
அன்று வேண்டும் என்று பேசிவிட்டாள் தான்... பேசியது கொஞ்சம் அதிகப்படியோ என்று பேசிய பின் தான் புரிந்தது... ஒரு மனது போய் பேசு என்று நச்சரிக்க இன்னொரு மனமோ அப்படியே விட்டுவிடு இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றது... இரண்டின் போராட்டத்தின் விளைவில் அவன் சென்ற திசையில் அவள் கால்களும் தன்னால் சென்றது...
வேகமாய் அவன் முன்னே சென்றவள் அவனை நிறுத்தி இருந்தாள்... அவனோ கேள்வியாய் அந்நிய பார்வை பார்க்க இதய மருத்துவ மாணவியவளின் இதயம் சிறிது தாளம் தப்பி தான் துடித்தது...
"ஐ எம் சாரி மிஸ்டர் நிலவன்... நான் அப்படி பேசி இருக்க கூடாதுதான்.." என்றவள் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருக்க...
"இட்ஸ் ஓகே மேம்.." என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்... அவனையே பார்த்திருந்தவளின் மனதில் அன்றைய நாள் விரிந்தது...
மூன்று நாட்களுக்கு முன்பும் அவளுக்கான மல்லிகை பூங்கொத்தும் கடிதமும் தவறாமல் வந்தது... அன்று அவள் அம்மாவின் பிறந்தநாள்.. அம்மாவின் தாக்கம் அவளுள் பெரிதாய் ஊடுருவி இருந்தது.. அங்கே மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அமருவதற்க்கான மேடை ஒன்றில் தாயின் புகைப்படம் ஒன்றுடன் தனியே அமர்ந்திருந்தாள்..
அன்றென்று பார்த்து நிலவனும் இத்தனை நாளாய் திருமணம் ஆகிவிட்டதென நடிப்பவளை பிடிப்பதற்காகவென அவன் நண்பர்களுடன் திட்டம் ஒன்றை தீட்டி இருந்தான்...
"டேய் நிலவா இது அவசியமாடா.. ரொம்ப பழைய டெக்னிக்... கண்டுபிடிக்க போறாங்க பாரேன்.. ஒருத்தர் ஒரு நாள் ரெண்டு நாள் பொய் சொல்லலாம் நாலு மாசமாவாடா சொல்லுவாங்க?.." என்றான் விஷ்னு
"ஜெய வேல் சார் தான் சொன்னாரேடா அவர் பேரனுக்கு அதிய பேச போறதா??.... அப்போ கல்யாணம் ஆகலனு தான அர்த்தம்..." என்றாள் பூஜா அவன் கேள்விக்கு பதிலாக
"அதெல்லாம் சரிதான் மச்சி... அப்போ ஏன் அவங்க பொய் சொல்லணும்..."
"ஸ்டார்டிங்ல ஜஸ்ட் பன்னுக்காக சொல்லி இருக்கனும்.. அடுத்த நாள் தான் சார் ஸ்ட்ரைட்டா போய் ப்ரொபோஸ் பண்ணிட்டாரே.. அதான் அவங்க அதே பொய்ய கன்டினியூ பண்ணி இருபாங்கன்னு தோணுதுடா... இவனோட நல்ல நேரம் இவன் பண்ற குறளிவித்த எல்லாம், அவங்க மேனேஜ்மென்ட்ல கம்பளைண்ட் பண்ணாம இருக்காங்க.." என்று பூஜாவிற்கு முன், ராமே விளக்கம் கொடுத்திருந்தான்
இவர்கள் சம்பாசனையில் கலந்து கொள்ளாத நிலவன், அட்டன்டென்ட் சேகரிடம் செய்ய வேண்டியதை சொல்லிகொண்டிருந்தான்..
"அங்கிள் போய் நான் சொல்லி குடுத்தபடி ஜஸ்ட் சொல்லுங்க.. வேற ஒன்னும் பண்ண வேணாம் என்ன சொல்றானு பாப்போம்..." என்றவன் அவர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உயிர்பிக்கபட்டதும் காதில் வைத்திருந்தான் அவள் பேசுவதை கேட்பதற்காக
"சரிங்க தம்பி.." என்று அவரும் அதிரலிடம் செல்ல இவர்கள் மறைந்து பார்த்திருந்தனர்..
"வருங்கால டாக்டர்ஸ் டா நாமெல்லாம்... என்ன காரியம் பண்ணிட்டு இருக்கோம்னு தெரியுதா??.." என்றான் ராம் மறைந்திருந்தவாறு..
"மூடிட்டு நிக்கிறியா இல்ல மிதிக்கட்டுமா???.."
"ஓகே இப்படி அன்பா சொல்லு கேட்கமாட்டேன்னுவனா நானு..."
"இதுக்கு பருத்தி மூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்..." என்று விஷ்னு வாய் மூடி சிரிக்க "விஷு" என்ற பூஜாவின் குரலில் விஷ்னு வாயை மூடி கொண்டான்...
சேகர் அதிரலிடம் சென்று " பாப்பா உன் புருஷன்னு ஒருத்தர் வந்திருக்காரு உன்ன சந்திக்கணுமாம்... "
"யாரு அங்கிள்.." என்றாள் முதலில் புரியாமல்
"தெரியலயே மா.. உன் புருஷன்னு தான் சொன்னாரு..."
"எனக்கு தான் கல்யாணமே ஆகலயே அங்கிள்... வேற யாரையோ தேடி வந்துருப்பாங்க செக் பண்ணுங்க..."
"இல்லமா அதிரல்னு தான் கேட்டாங்க... ஒருவேளை உன் வருங்கால கணவரா இருக்குமோ?..."
"இல்லை அங்கிள் அப்படி யாரும் இல்ல... இன்னொரு தரம் அவங்ககிட்ட சரியா கேட்டுப்பாருங்க அங்கிள்.." என்றதும் அவர் திரும்பி அந்த மரத்தடியை நோக்கினார்.. சட்டென நடப்பவை என்னவென்று அதிரலுக்கு புரிந்து போனது... கோபமாய் அங்கே சென்றவள்..
"மிஸ்டர் நிலவன் வெளிய வாங்க..." என்று அவள் கோபமாய் சொல்ல முதலில் நின்றிருந்த பூஜாவை தள்ளி விட்ட நிலவன் அடுத்ததாய் வெளியே வந்தான் அவன் பின்னே ராமும் விஷ்னுவும் வர சேகர் அதிரலில் பின் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் பாவமாய்...
அவரை பார்த்த நிலவன், "நீங்க போங்க அங்கிள் நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல அவரோ திரும்பி பார்த்தபடி சென்றுவிட்டார்...
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நிலவன் நீங்க..." அவன் ஏதோ சொல்ல வர "உன்னதான்னு சினிமா டயலாக் அடிச்சீங்க அப்பறம் என் கைதான் பேசும்..." என்றவள் பேச்சுக்கு "கஷ்டம்டா நிலவா..." என்று எண்ணியவன்
அமைதியாக நின்றிருக்க, மற்ற மூவரும் அப்படியே நின்றிருந்தனர்....
"இப்போ என்ன தெரியணும்... எதுக்கு இவ்வளவு ட்ராமா... ஆமா எனக்கு கல்யாணம் ஆகல குழந்தையும் இல்ல போதுமா..." என்று கோபமாய் சொல்ல அவர்கள் இதழில் புன்னகை.. அதில் மேலும் கடுப்பானவள்..
"ஓஹோ... எனக்கு கல்யாணம் ஆகலைன்னதும் உடனே உன்னோட பைத்தியக்கார தனத்துக்கு ஓகே சொல்லுவேன்னு நினைப்போ??... பாவம் நீ ஹர்ட் ஆக வேணான்னு தான் ஜஸ்ட் பன்னுக்காக சொன்ன பொய்யா அப்படியே கன்டினியூ பண்ணுனேன்... எனக்கு கல்யாணம்னு கமிட் ஆகுற ஐடியா எல்லாம் இல்ல... அப்படியே பியூச்சர்ல வந்தாலும் எனக்கு தம்பியா இருக்குற ஒருத்தர பண்ணுற ஐடியா சுத்தமா இல்ல..."
"நான் ஒன்னும் உனக்கு தம்பி இல்லை.." என்றான் அவசரமாக
"பாத்தியா அவன் விஷத்துல கரெக்டா இருக்கான்.. " என்று ராம் பூஜாவின் காதை கடிக்க.. அவள் முறைப்பில் அமைதியாக நடப்பதை பார்க்க தொடங்கினான்..
"நீ இல்லைனு சொன்னாலும் அது தான் நிஜம்... இது என்னைக்கும் நடக்காது.."
"நீயும் பாத்துட்டே இரு நீயா வந்து உன் லவ்வ சொல்லுவ.." என்றான் அப்போதும் விடாமல் அதில் கோபம் கொண்டவளோ அவனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அடுத்து வந்த வார்த்தைகளை பேசினாள்...
"ஓஓஓஓ உனக்கு ஒருத்தி பத்தலையோ.. இன்னொன்னும் கேக்குது... இவளும் பார்க்க அழகா தான இருக்கா அப்பறம் எதுக்கு இன்னொன்னு... இதுல அவளே உனக்கு ப்ரோக்கர் வேலை வேற பாக்குறா செம சீன்ல... காதலனுக்கு காதலிக்க பெண் பார்த்த காதலி அப்படினு ஹெடிங் கூட வெச்சிக்கலாம்..." என்று பூஜாவை காட்டியவாறு நக்கல் தொணியில் பேச
மூன்று ஆண்களுக்கும் திடீரென கோபம் எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் அவ்வளவு கோபம்... இருந்தும் ராமும் விஷ்னுவும் நிலவனுக்காக கோபத்தை கட்டுப்படுத்தியப்படி நிற்க, நிலவனுக்குத்தான் அந்த கட்டுப்பாடெல்லம் இல்லையே...
"என்னடி சொன்ன" என்று அவள் கழுத்தை பற்றி இருந்தான்.. வலித்தாலும் அவளும் கட்டிக்கொல்லாமல் வீம்பாய் தான் நின்றாள்... ஒரு கட்டத்தில் வலி பொறுக்காமல் கண்களை சுருக்கி அவள் முகம் வலியில் சுருங்க..
"நிலவா விடு அவளை... விடுன்னு சொன்னேன்..." என்று பூஜா கட்டளையாக சொல்ல, அவனும் பிடியை தளர்த்தி இருந்தான் அதிரலோ இருமியபடி பெரிதாய் மூச்சு விட..
"உன் மேல எவ்வளவு மரியாதையும் காதலும் வெச்சிருந்தேன்னு தெரியுமாடி... பைத்தியக்காரி அவளை போய் அப்படி பேசிட்டியேடி... என் கொழந்தடி அவ..." என்று பூஜாவை ஒரு கையால் அனைத்தவன்
"அவளை என்னோட சேர்த்து சீ... இதுக்காக உன்ன நான் எப்போவும் மன்னிக்கவே மாட்டேன்..." என்று கோபமாய் பூஜாவையும் இழுத்தபடி அங்கிருந்து செல்ல பூஜாவும் அவளை பார்த்தபடி அவன் இழுப்புக்கு அவனோடு சென்றாள்...
மற்ற இருவரும் அவர்களை பின் தொடர... போகும் அவர்களையே பார்த்து நின்றிருந்த அதிரல் கண்ணில் ஒன்றை கண்ணீர் துளி உருண்டு விழுந்தது...
இப்போதெல்லாம் அவனுக்காக அவள் மனது துடிக்க தொடங்கி இருந்தது... தனக்காக ஒருவர் என்ற எண்ணமே அவளுக்கு நாளடைவில் பிடித்து போய் இருந்தது... இத்தனை நாளில் எத்தனையோ பேர் காதல் என்று வந்து நின்றிருந்தாலும் இவனிடம் மட்டும் சற்று மனம் மயங்கவே செய்தது... அவன் பார்வையில் இருக்கும் கண்ணியம் கூட ஒரு வகையில் காரணம் தான்... ஆனால் அவள் கடந்து வந்த பாதையில் காதலுக்கெல்லாம் இடம் இல்லையே...
அதிலும் தாயின் இறுதி வாக்கியம் ஆண்கள் யாரையும் நம்ப கூடாது என்பதுதானே... தாயின் வாழக்கையிலேயே பெரிய பாடத்தை படித்தவள் அவள் எங்கனம் இதற்கு சம்மதிக்க முடியும்.. அதுக்கென்று அந்த கலையரசன் இடத்தில் நிலவனை வைக்க அவள் மனது இடம் கொடுக்கவில்லை.... அவனை வெறுக்க வைப்பதற்கே இந்த பேச்சு... அதுவும் அவனை விரும்பும் அவள் உள்ளதுக்கும் சேர்த்து தான்...
அங்கே நிலவனோ அங்கிருந்த சுவற்றில் கையை ஓங்கி குத்தி இருந்தான்... இரத்தம் பீறிட்டு பாய்ந்தும் நிறுத்தவில்லை அவன்... அவனை கட்டுப்படுத்த முயன்றும் அவன் நண்பர்களால் முடியவில்லை...
"நீ இப்படி பண்ணி அவ பேசுனத உண்மையாக்க போறியா நிலவா??... எங்க போயிடிச்சு உன் நிதானம்... அவ உனக்கு வலிக்கனும்னே தெரிஞ்சே பேசுறா... நீயும் அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.." என்று பூஜா கத்தியதும், அவன் கை குத்துவதை நிறுத்தி இருந்தது.. மேலும் அவளே தொடர்ந்தாள்..
"அவளுக்கு உன்னையும் என்னையும் பத்தி நல்லாவே தெரியும் நிலவா... நம்ம ரெண்டு பேரையும் பார்க்கும் போது அவ கண்ணுல சின்னதா ஏக்கம் தெரியும் அந்த பார்வைல எப்பவும் கோபமோ அருவெறுப்போ இருந்ததில்லை... காயப்படுத்தனும்னே இப்படி பேசி இருக்கா.... நீயே சொல்லி இருக்கியே இத்தன நாள்ல அவ கண்ணுல உனக்கான காதல பாத்தணு... அப்போ அது பொய்யா இல்ல உன் மனசு சொல்லுறது தான் பொய்யா??.. நல்லா யோசிச்சு பாரு.... " என்றவள் பேசி முடிக்க நிலவன் அங்கிருந்து சென்றிருந்தான்...
இப்படியே நாட்கள் சென்றது... நிலவன் அதிரலின் சண்டை நடந்து மூன்று மாதம் கடந்திருந்தது... அவர்களது இறுதி பரீட்சையும் முடிந்து இப்போது இன்ட்டேர்னும் தொடங்கி இருந்தது....
இன்றுவரை தொடர்கிறது நிலவனின் பராமுகம்... அவனிடம் எவ்வளவு பேச முயன்றும் பதில் பூச்சியம் தான்.. அவளும் விடாமல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு தான் இருக்கிறாள்...
அவள் ஆசைப்பட்ட படி அவன் விலகல் இருந்தாலும்.. இப்படியே விட்டு இங்கிருந்து செல்லவும் மனசு வரவில்லை... அதனால் இங்கிருந்து செல்லும் நாளை கூட தள்ளி போட்டுகொண்டிருக்கிறாள்... இடைப்பட்ட நாளில் அந்த "ஜாஸ்" என்ற வார்த்தை தாங்கி வரும் கடிதத்தை பெரிதும் எதிர்பார்த்தது அவள் மனது...
இப்போதெல்லாம் அந்த பழைய கடிதங்கள் தான் அவள் துணை என்றாகி போனது... தானும் இப்படி அவனை காதலிப்போம் என அவள் எண்ணியே பார்க்கவில்லை.. அதிலும் தன்னை விட வயது குறைந்தவன் மீது... நினைக்கவே அவளுக்கே விந்தையாகவே இருந்தது... காதல் என்பதே விந்தைகளின் கலவை தானே... ஆனால் அவனோடு சேருவது என்பது கேள்விக்குறி தான்... அதிலும் இது நடக்கவே கூடாது என்பதிலும் அத்தனை திண்ணம் அவளுக்கு...
அன்று மதியம் நிலவன் ஹாஸ்பிடல் கேன்டீனில் அமர்ந்திருந்தான்.. சற்று முன் தான் ஒரு சின்ன குழந்தையின் ஜனனத்தில் பங்கு கொன்டிருந்தான்.. நிலவன் மனமோ அப்படி இலகி இருந்தது... அவன் குழந்தையும் இப்படித்தான் பூமிக்கு ஜனனம் ஆகும் என்று எண்ணியவனுக்கு அதிரலில் எண்ணமும் சேர்ந்தே வந்தது... இத்தனை நாளில் அவள் எண்ணம் வராமல் இல்லை இருந்தாலும் அவளை மன்னிக்க தான் மனது இடம் கொடுக்கவில்லை...
"என்ன நிலவா யோசனை... குடி டீ ஆறுது பாரு..."
"ஆன்... இதோ பூ.." என்றவன் பருக தொடங்கினான்..
"பாவம்டா அதிரல்.. ஏதோ தெரியாம பண்ணிட்டா மன்னிச்சு விடேன்.. அவள பாக்கவே ஒரு மாதிரியா இருக்கு... இது என்னமோ அவ உனக்கு ப்ரொபோஸ் பண்ணி நீ ரிஜெக்ட் பண்ணின போல இருக்கு... எவ்வளவு கெத்தா இருந்தா.. இப்படி ஆகிட்டியே... உன்ன ரொம்ப லவ் பண்ணுறாடா.. கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்னவாம்..."
"அவள நம்புறியா பூ நீ... எனக்கே டாகால்டி வேலை காட்டுற ஆள் அவ... கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்... இப்போ நான் போய் பேசுனா உடனே லவ்னு வந்து நிப்பான்னு நினைக்கிறியா நெவர்.."
"அப்போ அவளை மன்னிக்கிற ஐடியா இல்லையா??.. அப்போ உன் லவ்?.."
"மன்னிக்கனுமா அவளையா??.. அவ தெரிஞ்சே தான் அப்படி பேசி இருக்கா... எத பேசுனா எனக்கு வலிக்கும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.. இப்போ இந்த கரிசனம் கூட இப்படி பேசிட்டோமென்னு தான்... மத்தபடி காதல் இருந்தாலும் ஒத்துகிற ஆளா அவ... அவள இன்னும் கொஞ்சம் வெச்சு செய்யணும்..அதுவும் கூடவே வெச்சு.."
"எங்க நீ கோபத்துல எனக்காகனு உன்னோட லவ்வ விட்டுக்கொடுத்துடுவியோன்னு பயந்துட்டேன் நிலவா.. இப்போதான் ஹாப்பி.."
"அவ பேசும் போது செம கோபம் தான் பூ எனக்கு... அப்பறமா யோசிச்சு பார்த்தேன், உன்ன பேசுனது கூட என்ன ஹர்ட் பண்ணனும் தான், அவ அப்படி பண்ணதுக்கு பின்னாடி ஒரு வேலிட் ரீசன் இருக்கணும்னு தோணுது... நீயா என் காதலானு கேட்டா எனக்கு நீதான் பர்ஸ்ட்.. பட் காதல விட்டுடுவேன்னு இல்ல... அவ தான் எனக்கு எப்போவும்.." என்றான்
அப்போது அவன் அருகில் அட்டென்டன்ட் சேகர் வந்தவர் "தம்பி உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு"
"எப்போ அங்கிள்?... யார்கிட்ட இருந்து?... இப்போ எங்க அது?.." என்று கேள்வியை அடுக்க
"காலைல வந்திச்சி தம்பி... உங்கள தேடுனேன் காணோம்னு உங்க ரூம்ல தான் வெச்சிருக்கேன்... யாருனு எதுவும் போடல தம்பி... நான் சரியா கவனிக்கல போல"
"ஓகே தேங்க்ஸ் அங்கிள்.. நானே பாத்துக்கிறேன்..." என்று டீ குடித்து முடிந்ததும் பூஜாவுடன் அறையை நோக்கி சென்றான்...
அங்கே மேசையில் ஒரு பெரிய பார்சல் இருந்தது அதனை பிரிக்க உள்ளே ஒரு நடுத்தர அளவிளான பொக்கேவும் ஒரு கடிதமும் இருந்தது.. அவன் இதழிலோ புன்னகை.. யாரின் வேலை இது என்பது தான் தெரியுமே.. பூஜாவை திரும்பி பார்த்தவன் "என்னோட கிப்ட்ட ரொம்ப மிஸ் பண்ணுறா போல..." என்று அந்த பொக்கேவை கையில் எடுத்து கொண்டான்...
"உலகத்துல காதலுக்கு ஜாதி மல்லி பூ குடுத்துக்கிறது நீங்க மட்டும் தான்டா.." என்று அவள் தலையில் அடித்துக்கொள்ள, அவனிடம் சிறு புன்னகை.. கைகளால் மெல்ல அதனை வருடி கொடுத்துக்கொண்டான்..
இப்படியே நாட்கள் கடந்து அதிரல் கல்லூரி வந்து நான்கு மாதம் கழிந்திருந்தது... இடைப்பட்ட நாளில் பல மாற்றம்... அவள் வந்த மறு நாளே நிலவன் அவளிடம் காதலை சொல்லி அவள் கோபத்தையும் பெற்றுக்கொண்டான். ஆனாலும் அவன் நிறுத்தவில்லை தினமும் அவளை ஒரு வழி பண்ணிக்கொண்டுதான் இருந்தான்.. நண்பர்களுக்கு கூட அவனது மின்னல் வேகம் பயத்தையே கொடுத்தது...
இன்று நிலவனுக்கு சைகாட்ரிக் அப்பொய்ன்மெண்ட் ஒன்று இருந்தது.. தற்கொலைக்கு முயன்று மனநிலை மற்றதுக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டருக்கும் மாணவி தொடர்பான முழு அறிக்கை ஒன்று தனக்கு பொறுப்பான ப்ரோபசருக்கு சமர்ப்பிக்கவேண்டி இருந்தது...
அவர்கள் வகுப்பு மூன்று குழுக்களாய் பிரிக்கப்பட்டு தான் அப்பொய்ன்மெண்ட் சென்று கொண்டிருந்தது... அதில் பூஜாவும் இவனும் ஒரு குழு.. விஷ்ணு, அறிவு, நிஷா மூவரும் ஒன்று.. ராம் மற்ற குழுவிலும் என்று பிரிந்திருந்தனர்..
அதிரல் மூன்று குழுக்களுக்கும் பொதுவாய் உதவி செய்து கொண்டிருந்தாள்.. சந்தேகங்களை முடியுமான வரை தீர்த்து வைப்பது... அவர்களை வழி நடத்துவது.. புரியாத விடயங்களை சொல்லி குடுப்பது என அவள் கொஞ்சம் பிசியாக தான் இந்த நான்கு மாதமும் வேலை செய்து கொண்டிருந்தாள்..
நிலவன் அங்கே ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவன் நேரே அந்த மாணவியை வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான்...
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி.. தன் தாய் தம்பியிடம் தன்னை விட அதிகமாக பாசம் காட்டுவதால் தாங்கிகொள்ள முடியாமல் கையை வெட்ட தெரியாமல் வெட்டி இருந்தாள் அந்த இளம் சிட்டு... அவள் மனநிலை மாற்றம் வேண்டியே இங்கே அனுமதிக்கபட்டிருந்தாள்...
"ஹாய் வர்ஷி... என்ன பண்றீங்க சாப்டாச்சா?.."
"ஆமாணா.. ஆச்சு.."
"குட் கேர்ள்... இன்னைக்கு நீங்க வீட்டுக்கு போக போறீங்கல்ல வர்ஷி...
போனதும் அண்ணாவ மறந்துடுவீங்களா என்ன?.."
"இல்லையே.. அண்ணா கூட டெய்லி பேசுவேனே..."
"ஓகேடாமா... இனிமேல் அண்ணா சொன்ன போல நடந்துக்குவீங்க தான..."
"பிங்கி ப்ரோமிஸ் ணா.."
"தருண நான் என் வீட்டுக்கு கொண்டு போகட்டுமா???.."
"நோ... நான் தம்பிய யாருக்கும் தர மாட்டேன்..."
"அம்மாடியோ.. யாரோ தருண பிடிக்கலைனு சொன்னாங்க... யாரு வர்ஷி அது..." என்றதும் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கி சிரித்தது குழந்தை... அவள் தலையை கலைத்தவன்
"பாய் வர்ஷி..." என்று அந்த சிறுமியை டிரீட் பண்ணும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தான்...
"எஸ்கியூஸ் மீ மேம்..."
"வா நிலவா.. பேசன்ட் வர்ஷியோட ரிப்போர்ட் ரெடியா?..."
"எஸ் மேம்.." என்று ஒரு பைலை அவரிடம் கொடுத்தான்..
"ஓகே நிலவா.. நான் அப்பறமா செக் பண்ணிட்டு சொல்லுறேன்..."
"ஓகே மேம் பூஜாவோட பைல் ஈவினிங் கொடுக்குறதா சொன்னா மேம்... லைட்டா பீவர் அவளுக்கு... "
"நோ இஸ்சு நாளைக்கு வர சப்மிட் பண்ண டைம் இருக்குல்ல... நாளைக்கே பண்ணிட சொல்லு..."
"தேங்க் யூ மேம்..." என்றவன் அங்கிருந்து வெளியேற எதிரே அதிரல் வந்துகொண்டிருந்தாள்... அவளோ அவனை பார்த்து மெல்ல புன்னகைக்க அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை... அவன் பாட்டுக்கு வெளியேறிவிட்டான்... அதிரலுக்கு புரிந்தது அன்று அவள் நடந்து கொண்டதான் விளைவு இது என...
அவளிடம் காதலை உரைத்த நாளில் இருந்து நாள் தவறாமல் அவளுக்கு வரும் ஜாதி மல்லிகை பூ கொத்தும் கடிதமும் இந்த மூன்று நாட்களாக அவளுக்கு வரவில்லை...
அது அவளுக்கு ஏதோ போல் தான் இருந்தது.. முதலில் வெறுப்பாய் இருந்தவை அவை பின்னாளில் அந்த பூங்கொத்தும் "அன்புள்ள ஜாஸுக்கு" என்று ஆரம்பிக்கும் அந்த கடிதமும் இல்லாமல் அவள் நாள் பூரணமடைவதில்லை என்ற அளவுக்கு அதனை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது அவள் மனம்...
நட்பு வட்டம் என அவளுக்கு பெரிதாக யாரும் இருந்ததில்லை... தனிமை விரும்பி அவள்.. படிக்கும் காலத்திலும் கூட நெருங்கிய நட்பு என்று இருந்ததில்லை.. சாதாரணமாக பேசிக்கொல்வது இல்லையேல் படிப்பில் தேவை ஏற்படின் பேசிக்கொல்வது அவ்வளவே அவளுடைய கல்லூரி காலம் இருந்தது...
இங்கு வந்தது முதல் நிலவன் பூஜா மீது காட்டும் கோபத்தில் இருக்கும் நட்பு.. அவன் விஷ்னு ராமிடம் கலாய்த்தபடி பேசும் போது அதில் இருக்கும் நட்பு... அறிவு அவனை ஒதுக்கினாலும் எதை பற்றியும் யோசிக்காமல் அவனுடன் தானாய் போய் பேசும்போது அதில் இருக்கும் நட்பு... தன்னை காதலித்தவளாக இருந்தாலும் நிஷாவிடம் அவன் காட்டும் கண்ணியமான நட்பு... இவை அனைத்தும் அவளை அவன் நட்புக்காக ஏங்க வைத்தது எனலாம்...
அன்று வேண்டும் என்று பேசிவிட்டாள் தான்... பேசியது கொஞ்சம் அதிகப்படியோ என்று பேசிய பின் தான் புரிந்தது... ஒரு மனது போய் பேசு என்று நச்சரிக்க இன்னொரு மனமோ அப்படியே விட்டுவிடு இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றது... இரண்டின் போராட்டத்தின் விளைவில் அவன் சென்ற திசையில் அவள் கால்களும் தன்னால் சென்றது...
வேகமாய் அவன் முன்னே சென்றவள் அவனை நிறுத்தி இருந்தாள்... அவனோ கேள்வியாய் அந்நிய பார்வை பார்க்க இதய மருத்துவ மாணவியவளின் இதயம் சிறிது தாளம் தப்பி தான் துடித்தது...
"ஐ எம் சாரி மிஸ்டர் நிலவன்... நான் அப்படி பேசி இருக்க கூடாதுதான்.." என்றவள் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருக்க...
"இட்ஸ் ஓகே மேம்.." என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்... அவனையே பார்த்திருந்தவளின் மனதில் அன்றைய நாள் விரிந்தது...
மூன்று நாட்களுக்கு முன்பும் அவளுக்கான மல்லிகை பூங்கொத்தும் கடிதமும் தவறாமல் வந்தது... அன்று அவள் அம்மாவின் பிறந்தநாள்.. அம்மாவின் தாக்கம் அவளுள் பெரிதாய் ஊடுருவி இருந்தது.. அங்கே மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அமருவதற்க்கான மேடை ஒன்றில் தாயின் புகைப்படம் ஒன்றுடன் தனியே அமர்ந்திருந்தாள்..
அன்றென்று பார்த்து நிலவனும் இத்தனை நாளாய் திருமணம் ஆகிவிட்டதென நடிப்பவளை பிடிப்பதற்காகவென அவன் நண்பர்களுடன் திட்டம் ஒன்றை தீட்டி இருந்தான்...
"டேய் நிலவா இது அவசியமாடா.. ரொம்ப பழைய டெக்னிக்... கண்டுபிடிக்க போறாங்க பாரேன்.. ஒருத்தர் ஒரு நாள் ரெண்டு நாள் பொய் சொல்லலாம் நாலு மாசமாவாடா சொல்லுவாங்க?.." என்றான் விஷ்னு
"ஜெய வேல் சார் தான் சொன்னாரேடா அவர் பேரனுக்கு அதிய பேச போறதா??.... அப்போ கல்யாணம் ஆகலனு தான அர்த்தம்..." என்றாள் பூஜா அவன் கேள்விக்கு பதிலாக
"அதெல்லாம் சரிதான் மச்சி... அப்போ ஏன் அவங்க பொய் சொல்லணும்..."
"ஸ்டார்டிங்ல ஜஸ்ட் பன்னுக்காக சொல்லி இருக்கனும்.. அடுத்த நாள் தான் சார் ஸ்ட்ரைட்டா போய் ப்ரொபோஸ் பண்ணிட்டாரே.. அதான் அவங்க அதே பொய்ய கன்டினியூ பண்ணி இருபாங்கன்னு தோணுதுடா... இவனோட நல்ல நேரம் இவன் பண்ற குறளிவித்த எல்லாம், அவங்க மேனேஜ்மென்ட்ல கம்பளைண்ட் பண்ணாம இருக்காங்க.." என்று பூஜாவிற்கு முன், ராமே விளக்கம் கொடுத்திருந்தான்
இவர்கள் சம்பாசனையில் கலந்து கொள்ளாத நிலவன், அட்டன்டென்ட் சேகரிடம் செய்ய வேண்டியதை சொல்லிகொண்டிருந்தான்..
"அங்கிள் போய் நான் சொல்லி குடுத்தபடி ஜஸ்ட் சொல்லுங்க.. வேற ஒன்னும் பண்ண வேணாம் என்ன சொல்றானு பாப்போம்..." என்றவன் அவர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உயிர்பிக்கபட்டதும் காதில் வைத்திருந்தான் அவள் பேசுவதை கேட்பதற்காக
"சரிங்க தம்பி.." என்று அவரும் அதிரலிடம் செல்ல இவர்கள் மறைந்து பார்த்திருந்தனர்..
"வருங்கால டாக்டர்ஸ் டா நாமெல்லாம்... என்ன காரியம் பண்ணிட்டு இருக்கோம்னு தெரியுதா??.." என்றான் ராம் மறைந்திருந்தவாறு..
"மூடிட்டு நிக்கிறியா இல்ல மிதிக்கட்டுமா???.."
"ஓகே இப்படி அன்பா சொல்லு கேட்கமாட்டேன்னுவனா நானு..."
"இதுக்கு பருத்தி மூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்..." என்று விஷ்னு வாய் மூடி சிரிக்க "விஷு" என்ற பூஜாவின் குரலில் விஷ்னு வாயை மூடி கொண்டான்...
சேகர் அதிரலிடம் சென்று " பாப்பா உன் புருஷன்னு ஒருத்தர் வந்திருக்காரு உன்ன சந்திக்கணுமாம்... "
"யாரு அங்கிள்.." என்றாள் முதலில் புரியாமல்
"தெரியலயே மா.. உன் புருஷன்னு தான் சொன்னாரு..."
"எனக்கு தான் கல்யாணமே ஆகலயே அங்கிள்... வேற யாரையோ தேடி வந்துருப்பாங்க செக் பண்ணுங்க..."
"இல்லமா அதிரல்னு தான் கேட்டாங்க... ஒருவேளை உன் வருங்கால கணவரா இருக்குமோ?..."
"இல்லை அங்கிள் அப்படி யாரும் இல்ல... இன்னொரு தரம் அவங்ககிட்ட சரியா கேட்டுப்பாருங்க அங்கிள்.." என்றதும் அவர் திரும்பி அந்த மரத்தடியை நோக்கினார்.. சட்டென நடப்பவை என்னவென்று அதிரலுக்கு புரிந்து போனது... கோபமாய் அங்கே சென்றவள்..
"மிஸ்டர் நிலவன் வெளிய வாங்க..." என்று அவள் கோபமாய் சொல்ல முதலில் நின்றிருந்த பூஜாவை தள்ளி விட்ட நிலவன் அடுத்ததாய் வெளியே வந்தான் அவன் பின்னே ராமும் விஷ்னுவும் வர சேகர் அதிரலில் பின் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் பாவமாய்...
அவரை பார்த்த நிலவன், "நீங்க போங்க அங்கிள் நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல அவரோ திரும்பி பார்த்தபடி சென்றுவிட்டார்...
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நிலவன் நீங்க..." அவன் ஏதோ சொல்ல வர "உன்னதான்னு சினிமா டயலாக் அடிச்சீங்க அப்பறம் என் கைதான் பேசும்..." என்றவள் பேச்சுக்கு "கஷ்டம்டா நிலவா..." என்று எண்ணியவன்
அமைதியாக நின்றிருக்க, மற்ற மூவரும் அப்படியே நின்றிருந்தனர்....
"இப்போ என்ன தெரியணும்... எதுக்கு இவ்வளவு ட்ராமா... ஆமா எனக்கு கல்யாணம் ஆகல குழந்தையும் இல்ல போதுமா..." என்று கோபமாய் சொல்ல அவர்கள் இதழில் புன்னகை.. அதில் மேலும் கடுப்பானவள்..
"ஓஹோ... எனக்கு கல்யாணம் ஆகலைன்னதும் உடனே உன்னோட பைத்தியக்கார தனத்துக்கு ஓகே சொல்லுவேன்னு நினைப்போ??... பாவம் நீ ஹர்ட் ஆக வேணான்னு தான் ஜஸ்ட் பன்னுக்காக சொன்ன பொய்யா அப்படியே கன்டினியூ பண்ணுனேன்... எனக்கு கல்யாணம்னு கமிட் ஆகுற ஐடியா எல்லாம் இல்ல... அப்படியே பியூச்சர்ல வந்தாலும் எனக்கு தம்பியா இருக்குற ஒருத்தர பண்ணுற ஐடியா சுத்தமா இல்ல..."
"நான் ஒன்னும் உனக்கு தம்பி இல்லை.." என்றான் அவசரமாக
"பாத்தியா அவன் விஷத்துல கரெக்டா இருக்கான்.. " என்று ராம் பூஜாவின் காதை கடிக்க.. அவள் முறைப்பில் அமைதியாக நடப்பதை பார்க்க தொடங்கினான்..
"நீ இல்லைனு சொன்னாலும் அது தான் நிஜம்... இது என்னைக்கும் நடக்காது.."
"நீயும் பாத்துட்டே இரு நீயா வந்து உன் லவ்வ சொல்லுவ.." என்றான் அப்போதும் விடாமல் அதில் கோபம் கொண்டவளோ அவனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அடுத்து வந்த வார்த்தைகளை பேசினாள்...
"ஓஓஓஓ உனக்கு ஒருத்தி பத்தலையோ.. இன்னொன்னும் கேக்குது... இவளும் பார்க்க அழகா தான இருக்கா அப்பறம் எதுக்கு இன்னொன்னு... இதுல அவளே உனக்கு ப்ரோக்கர் வேலை வேற பாக்குறா செம சீன்ல... காதலனுக்கு காதலிக்க பெண் பார்த்த காதலி அப்படினு ஹெடிங் கூட வெச்சிக்கலாம்..." என்று பூஜாவை காட்டியவாறு நக்கல் தொணியில் பேச
மூன்று ஆண்களுக்கும் திடீரென கோபம் எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் அவ்வளவு கோபம்... இருந்தும் ராமும் விஷ்னுவும் நிலவனுக்காக கோபத்தை கட்டுப்படுத்தியப்படி நிற்க, நிலவனுக்குத்தான் அந்த கட்டுப்பாடெல்லம் இல்லையே...
"என்னடி சொன்ன" என்று அவள் கழுத்தை பற்றி இருந்தான்.. வலித்தாலும் அவளும் கட்டிக்கொல்லாமல் வீம்பாய் தான் நின்றாள்... ஒரு கட்டத்தில் வலி பொறுக்காமல் கண்களை சுருக்கி அவள் முகம் வலியில் சுருங்க..
"நிலவா விடு அவளை... விடுன்னு சொன்னேன்..." என்று பூஜா கட்டளையாக சொல்ல, அவனும் பிடியை தளர்த்தி இருந்தான் அதிரலோ இருமியபடி பெரிதாய் மூச்சு விட..
"உன் மேல எவ்வளவு மரியாதையும் காதலும் வெச்சிருந்தேன்னு தெரியுமாடி... பைத்தியக்காரி அவளை போய் அப்படி பேசிட்டியேடி... என் கொழந்தடி அவ..." என்று பூஜாவை ஒரு கையால் அனைத்தவன்
"அவளை என்னோட சேர்த்து சீ... இதுக்காக உன்ன நான் எப்போவும் மன்னிக்கவே மாட்டேன்..." என்று கோபமாய் பூஜாவையும் இழுத்தபடி அங்கிருந்து செல்ல பூஜாவும் அவளை பார்த்தபடி அவன் இழுப்புக்கு அவனோடு சென்றாள்...
மற்ற இருவரும் அவர்களை பின் தொடர... போகும் அவர்களையே பார்த்து நின்றிருந்த அதிரல் கண்ணில் ஒன்றை கண்ணீர் துளி உருண்டு விழுந்தது...
இப்போதெல்லாம் அவனுக்காக அவள் மனது துடிக்க தொடங்கி இருந்தது... தனக்காக ஒருவர் என்ற எண்ணமே அவளுக்கு நாளடைவில் பிடித்து போய் இருந்தது... இத்தனை நாளில் எத்தனையோ பேர் காதல் என்று வந்து நின்றிருந்தாலும் இவனிடம் மட்டும் சற்று மனம் மயங்கவே செய்தது... அவன் பார்வையில் இருக்கும் கண்ணியம் கூட ஒரு வகையில் காரணம் தான்... ஆனால் அவள் கடந்து வந்த பாதையில் காதலுக்கெல்லாம் இடம் இல்லையே...
அதிலும் தாயின் இறுதி வாக்கியம் ஆண்கள் யாரையும் நம்ப கூடாது என்பதுதானே... தாயின் வாழக்கையிலேயே பெரிய பாடத்தை படித்தவள் அவள் எங்கனம் இதற்கு சம்மதிக்க முடியும்.. அதுக்கென்று அந்த கலையரசன் இடத்தில் நிலவனை வைக்க அவள் மனது இடம் கொடுக்கவில்லை.... அவனை வெறுக்க வைப்பதற்கே இந்த பேச்சு... அதுவும் அவனை விரும்பும் அவள் உள்ளதுக்கும் சேர்த்து தான்...
அங்கே நிலவனோ அங்கிருந்த சுவற்றில் கையை ஓங்கி குத்தி இருந்தான்... இரத்தம் பீறிட்டு பாய்ந்தும் நிறுத்தவில்லை அவன்... அவனை கட்டுப்படுத்த முயன்றும் அவன் நண்பர்களால் முடியவில்லை...
"நீ இப்படி பண்ணி அவ பேசுனத உண்மையாக்க போறியா நிலவா??... எங்க போயிடிச்சு உன் நிதானம்... அவ உனக்கு வலிக்கனும்னே தெரிஞ்சே பேசுறா... நீயும் அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.." என்று பூஜா கத்தியதும், அவன் கை குத்துவதை நிறுத்தி இருந்தது.. மேலும் அவளே தொடர்ந்தாள்..
"அவளுக்கு உன்னையும் என்னையும் பத்தி நல்லாவே தெரியும் நிலவா... நம்ம ரெண்டு பேரையும் பார்க்கும் போது அவ கண்ணுல சின்னதா ஏக்கம் தெரியும் அந்த பார்வைல எப்பவும் கோபமோ அருவெறுப்போ இருந்ததில்லை... காயப்படுத்தனும்னே இப்படி பேசி இருக்கா.... நீயே சொல்லி இருக்கியே இத்தன நாள்ல அவ கண்ணுல உனக்கான காதல பாத்தணு... அப்போ அது பொய்யா இல்ல உன் மனசு சொல்லுறது தான் பொய்யா??.. நல்லா யோசிச்சு பாரு.... " என்றவள் பேசி முடிக்க நிலவன் அங்கிருந்து சென்றிருந்தான்...
இப்படியே நாட்கள் சென்றது... நிலவன் அதிரலின் சண்டை நடந்து மூன்று மாதம் கடந்திருந்தது... அவர்களது இறுதி பரீட்சையும் முடிந்து இப்போது இன்ட்டேர்னும் தொடங்கி இருந்தது....
இன்றுவரை தொடர்கிறது நிலவனின் பராமுகம்... அவனிடம் எவ்வளவு பேச முயன்றும் பதில் பூச்சியம் தான்.. அவளும் விடாமல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு தான் இருக்கிறாள்...
அவள் ஆசைப்பட்ட படி அவன் விலகல் இருந்தாலும்.. இப்படியே விட்டு இங்கிருந்து செல்லவும் மனசு வரவில்லை... அதனால் இங்கிருந்து செல்லும் நாளை கூட தள்ளி போட்டுகொண்டிருக்கிறாள்... இடைப்பட்ட நாளில் அந்த "ஜாஸ்" என்ற வார்த்தை தாங்கி வரும் கடிதத்தை பெரிதும் எதிர்பார்த்தது அவள் மனது...
இப்போதெல்லாம் அந்த பழைய கடிதங்கள் தான் அவள் துணை என்றாகி போனது... தானும் இப்படி அவனை காதலிப்போம் என அவள் எண்ணியே பார்க்கவில்லை.. அதிலும் தன்னை விட வயது குறைந்தவன் மீது... நினைக்கவே அவளுக்கே விந்தையாகவே இருந்தது... காதல் என்பதே விந்தைகளின் கலவை தானே... ஆனால் அவனோடு சேருவது என்பது கேள்விக்குறி தான்... அதிலும் இது நடக்கவே கூடாது என்பதிலும் அத்தனை திண்ணம் அவளுக்கு...
அன்று மதியம் நிலவன் ஹாஸ்பிடல் கேன்டீனில் அமர்ந்திருந்தான்.. சற்று முன் தான் ஒரு சின்ன குழந்தையின் ஜனனத்தில் பங்கு கொன்டிருந்தான்.. நிலவன் மனமோ அப்படி இலகி இருந்தது... அவன் குழந்தையும் இப்படித்தான் பூமிக்கு ஜனனம் ஆகும் என்று எண்ணியவனுக்கு அதிரலில் எண்ணமும் சேர்ந்தே வந்தது... இத்தனை நாளில் அவள் எண்ணம் வராமல் இல்லை இருந்தாலும் அவளை மன்னிக்க தான் மனது இடம் கொடுக்கவில்லை...
"என்ன நிலவா யோசனை... குடி டீ ஆறுது பாரு..."
"ஆன்... இதோ பூ.." என்றவன் பருக தொடங்கினான்..
"பாவம்டா அதிரல்.. ஏதோ தெரியாம பண்ணிட்டா மன்னிச்சு விடேன்.. அவள பாக்கவே ஒரு மாதிரியா இருக்கு... இது என்னமோ அவ உனக்கு ப்ரொபோஸ் பண்ணி நீ ரிஜெக்ட் பண்ணின போல இருக்கு... எவ்வளவு கெத்தா இருந்தா.. இப்படி ஆகிட்டியே... உன்ன ரொம்ப லவ் பண்ணுறாடா.. கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்னவாம்..."
"அவள நம்புறியா பூ நீ... எனக்கே டாகால்டி வேலை காட்டுற ஆள் அவ... கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்... இப்போ நான் போய் பேசுனா உடனே லவ்னு வந்து நிப்பான்னு நினைக்கிறியா நெவர்.."
"அப்போ அவளை மன்னிக்கிற ஐடியா இல்லையா??.. அப்போ உன் லவ்?.."
"மன்னிக்கனுமா அவளையா??.. அவ தெரிஞ்சே தான் அப்படி பேசி இருக்கா... எத பேசுனா எனக்கு வலிக்கும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.. இப்போ இந்த கரிசனம் கூட இப்படி பேசிட்டோமென்னு தான்... மத்தபடி காதல் இருந்தாலும் ஒத்துகிற ஆளா அவ... அவள இன்னும் கொஞ்சம் வெச்சு செய்யணும்..அதுவும் கூடவே வெச்சு.."
"எங்க நீ கோபத்துல எனக்காகனு உன்னோட லவ்வ விட்டுக்கொடுத்துடுவியோன்னு பயந்துட்டேன் நிலவா.. இப்போதான் ஹாப்பி.."
"அவ பேசும் போது செம கோபம் தான் பூ எனக்கு... அப்பறமா யோசிச்சு பார்த்தேன், உன்ன பேசுனது கூட என்ன ஹர்ட் பண்ணனும் தான், அவ அப்படி பண்ணதுக்கு பின்னாடி ஒரு வேலிட் ரீசன் இருக்கணும்னு தோணுது... நீயா என் காதலானு கேட்டா எனக்கு நீதான் பர்ஸ்ட்.. பட் காதல விட்டுடுவேன்னு இல்ல... அவ தான் எனக்கு எப்போவும்.." என்றான்
அப்போது அவன் அருகில் அட்டென்டன்ட் சேகர் வந்தவர் "தம்பி உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு"
"எப்போ அங்கிள்?... யார்கிட்ட இருந்து?... இப்போ எங்க அது?.." என்று கேள்வியை அடுக்க
"காலைல வந்திச்சி தம்பி... உங்கள தேடுனேன் காணோம்னு உங்க ரூம்ல தான் வெச்சிருக்கேன்... யாருனு எதுவும் போடல தம்பி... நான் சரியா கவனிக்கல போல"
"ஓகே தேங்க்ஸ் அங்கிள்.. நானே பாத்துக்கிறேன்..." என்று டீ குடித்து முடிந்ததும் பூஜாவுடன் அறையை நோக்கி சென்றான்...
அங்கே மேசையில் ஒரு பெரிய பார்சல் இருந்தது அதனை பிரிக்க உள்ளே ஒரு நடுத்தர அளவிளான பொக்கேவும் ஒரு கடிதமும் இருந்தது.. அவன் இதழிலோ புன்னகை.. யாரின் வேலை இது என்பது தான் தெரியுமே.. பூஜாவை திரும்பி பார்த்தவன் "என்னோட கிப்ட்ட ரொம்ப மிஸ் பண்ணுறா போல..." என்று அந்த பொக்கேவை கையில் எடுத்து கொண்டான்...
"உலகத்துல காதலுக்கு ஜாதி மல்லி பூ குடுத்துக்கிறது நீங்க மட்டும் தான்டா.." என்று அவள் தலையில் அடித்துக்கொள்ள, அவனிடம் சிறு புன்னகை.. கைகளால் மெல்ல அதனை வருடி கொடுத்துக்கொண்டான்..
Last edited: