ஜாதி மல்லி பூ 17
நிலவன் மருத்துவ கல்லூரியில் இறுதி வருடத்தில் பயிலும் மாணவன்... இந்த வருடத்தோடு அவன் படிப்பு முடிந்து ஒரு வைத்தியராக வளம் வர போகிறான்... இது அவனது சின்ன வயது முதலான ஆசை.. இன்னும் ஒருவருடத்தில் நிறைவேறவும் காத்திருக்கிறது... அதில் அவனுக்கு எப்போதும் மன நிறைவு தான்..
நிலவன் காலேஜினுள் நுழைய அவன் வானர படை அங்கே அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தின் கீழ் தான் அமர்ந்திருந்தனர்.. அவன் கேங்கில் அவனோடு சேர்த்து மொத்தமாய் ஆறு பேர் தான்... மற்ற ஐவர் விஷ்னு, ராம், பூஜா, அறிவழகன் மற்றும் நிஷா..
"வாடா மச்சான்.. உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு.. என்னனு கெஸ் பண்ணு பாக்கலாம்..." என்றான் விஷ்ணு
"டேய் ஓட்ட வாய் கொரங்கே... இப்பவே சொல்லனுமா? அவன கொஞ்சம் இங்க வந்து உக்கார விடு .." என்று பூஜா அவன் தலையில் கொட்ட..
"ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ... ஏன்டி அடிச்ச அதான் நான் உன் வீட்ல உன் லவ் விஷயம் சக்ஸஸ் ஆகிடிச்சினு சொல்லவே இல்லையே... சர்பிரைஸ்னு மட்டும் தான சொன்னேன்.." என்றான் தலையை தடவியப்படி..
"சுத்தம்..." என்று அருகில் அமர்ந்திருந்த ராம் தலையிலடித்து கொள்ள
பூஜாவோ "நான் தான் சொன்னனே இவன் கிட்ட பர்ஸ்ட் சொல்லாதனு கேட்டியா நீ இனி இந்த காலேஜ் பூரா இன்னைக்குள்ள எல்லார்கிட்டயும் உளறி தொலைச்சிடுவான்..."
"விட்றி அவன பத்தி தான் தெரியுமே... நம்ம விஷயம் இங்க யாருக்கும் தெரியாததா?? இதுவும் தெரிஞ்சிட்டு போகுது விடு..." என்றான் ராம் நண்பனை அறிந்தவனாய்..
விஷ்னுவின் கெட்ட பழக்கம் இது ஒன்று தான்... எதையும் மறைத்து வைக்க தெரியாது... தெரியாது என்பதை விட அவனால் அது முடியாது என்று தான் சொல்ல வேண்டும்... சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை.. அதுவாகவே வந்துவிடும் அப்படிப்பட்ட ஒரு ஓட்ட வாய் அவனுக்கு...
இந்த நான்கு வருடத்தில் எது மாறினாலும் அவனிடம் இந்த குணம் மட்டும் மாறவேயில்லை... நண்பர்கள் எவ்வளவு போராடியும் மாற்ற முடியாமல் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டும் விட்டனர்...
ஆனால் அவனது இந்த குணத்தால் மறைமுகமாக.. இன்னொரு ஜீவன் தைரியமாய் சுதந்திரமாக உலாவ போகிறது... அதில் இரண்டு உயிர்கள் பாதிக்கப்படவும் இருக்கிறது.... அதனை அறிந்த விதியால் கைகட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது....
"மறுபடியும் உளறிட்டனா?" என்றான் விஷ்னு சோகமாக
"அத விடு மச்சான் நமக்குள்ள தான.. சூப்பர் நியூஸ் சொல்லி இருக்கீங்க... ட்ரீட் எங்க.." என்று அவர்கள் அருகில் வந்தமர்ந்தான் நிலவன்..
உடனே ராம், "உனக்கில்லாத ட்ரீட்டா... ட்ரீட் நான் தரேன் பில் நீ பே பண்ணிடு அம்புட்டு தான.."
"பூ, உனக்கு இந்த கஞ்ஜுஸ் தான் கண்ணடிப்பா வேணுமா... நீ எதுக்கும் உன் முடிவ ஏன் ரீகன்சிடர் பண்ண கூடாது..."
"நீ சொல்லிட்டல பண்ணிட்டா போச்சு..."
"எப்பா ராசா இப்போ தான் ஓகே ஆகி இருக்கு அதுக்குள்ள நீ முடிவுரை எழுத வெச்சிடாத.. ட்ரீட் தான தந்து தொலைக்கிறேன்..."
"ஆஆ.. அப்படி வா வழிக்கு... அறிவயும் கூப்பிடுவல.."
"நீ திருந்த மாட்டியா நிலவா.. அவன் தான் உன்ன அவொய்ட் பன்றான்னு தெரியுதுல... அப்போ ஏன் நீ அவன பிடிச்சிட்டு தொங்குற... அவன் இப்போ முன்ன மாதிரி இல்ல, அத நீ புரிஞ்சிக்கோ பர்ஸ்ட்... உன்ன வேணும்னே ஹேர்ட் பண்றவன் பிரண்ட்டாவே இருந்தாலும் எனக்கு வேணா.." என்ற பூஜா கோபத்தில் எழுந்து செல்ல பார்க்க
"ஓகே ஓகே நான் அவன பத்தி பேசல நீ உக்காரு..." என்று அவளை ஒருவாறு சமாதானம் செய்து அமர வைத்தவன் பேச்சை மாற்றும் விதமாக
"நாளைக்கு பிரஷஸ் வராங்கல்ல... அதுல என் தேவதை வருவானு தோணுது பூ..."
அதற்கு பூஜாவோ "இதேயே தான் நீ ஒவ்வொரு முறையும் சொல்லுற.. அப்படி பாத்தா வருஷத்துக்கு ஒன்னுபடி இப்போவே உனக்கு நாலு தேவதை இருந்திருக்கணுமேடா..." என்றாள் நக்கலுடன்..
"அதான் ஏற்கனவே நிலவனுக்கு ஒரு தேவதை இருக்காளே பூஜா..." என்ற விஷ்னு நிலவன் கையால் கொட்டு ஒன்றை பெற்றுக்கொண்டான்...
"உதபடுவ ராஸ்கல்.. நிஷா இருக்கப்போ இப்படி உளறி கொட்டிடாத... என்ன ஞானம் பொறந்திச்சோ?, இப்போ தான் கொஞ்சம் அத பத்தி பேசாம இருக்கா... திருப்பி லவ்ன்னு ஆரம்பிக்க வெச்சிடாத..." என்றான் நிலவன் பெரிய கும்பிடோடு...
"ஐ வில் ட்ரை மச்சான்..." என்ற விஷ்னுவின் பதிலில்
"ஹாஹாஹா இப்போவே உன் வசந்த காலம் எனக்கு தெரியுது நிலவா..." என்ற ராமையும் முறைத்தான்.. நால்வரும் ஒருவாறு கேன்டீன் நுழைந்து கொண்டனர்..
அதன் பின் அவர்களுக்கான நேரம் அந்த கேன்டீனில் வழமைப்போல் அரட்டையுடன் கழிந்தது... அதனை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த அறிவழகன் கண்களில் நிலவன் மீதான பொறாமையும் வெறுப்புமே நிறைந்திருந்தது....
அவன் அருகில் நின்றிருந்த நிஷா அவன் தோளில் கை வைத்து "அவங்களும் உன்ன மிஸ் பன்றாங்க தான் அறிவு.. நீ ஏன் ஒதுங்கி போற.. உன் கோபம் அர்த்தமில்லாதது... அப்பவும் நிலவன் மேல தான கோபம் உனக்கு.. ஏன் மத்தவங்களையும் அவொய்ட் பண்ணுற... முதல்ல அவங்க உனக்கு தான் பிரண்ட்ஸ் அத மறந்துடாத" என்றாள்
அவன் ஏதும் பேசாது அங்கிருந்து செல்ல.. அவ்வளவு நேரம் சிரித்து பேசியபடி இருந்த நிலவனுக்கு அறிவழகன் ஞாபகம் எழ சற்று முகம் வாடவே செய்தது.. இருந்தும் இன்னைக்கு அவர்களது சந்தோஷமான நாளை கெடுக்க விரும்பாமல் அவர்களோடு இணைத்து கொண்டான்...
ராம் பூஜா இருவரும் பள்ளிக்கூடம் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள் காதலும் எப்போதோ எப்படியோ நுழைந்து விட்டது இருவருக்குள்ளும்.. விதியும் அவர்களை பிரிய விடாது முடிச்சு போட்டே இங்கேயும் அனுப்பி வைத்துவிட்டது...
அறிவழகன் ஒதுக்குப்புற கிராமம் ஒன்றில் இருந்து வந்தவன்.. கஷ்டப்பட்டு படித்து மாவட்டத்திலே இரண்டாவதாய் வந்திருந்ததால் அவனுக்கு இந்த கல்லூரியில் சீட் கிடைத்து.. அதில் அவன் தந்தைக்கு பெருமை தான்...
கல்லூரி முதல் நாள் அன்று.. எல்லோரையும் கண்டு மிரட்சியாய் ஒரு ஓரமாய் நின்றிருந்தனர் அவனும் அவன் தந்தையும்... அவர்களிடம் முதல் வந்து பேசியது பூஜா தான்
"என்ன அங்கிள் இங்க நிக்கிறீங்க ஏதாச்சும் உதவி வேணுமா..."
"அம்மனி.. இங்க என் மகன சேர்க்கனும்னா என்ன பண்ணனும்?.. இவன் அழகு.. என் பையனுங்க.. இங்க தான் அழகு டாக்டருக்கு படிக்க போகுதுங்க.. மாவட்டத்துலேயே ரெண்டாவது வந்திருக்கு... டிவில எல்லாம் காட்டுனாங்களே.." என்றார் பெருமையாக
"வாவ் சூப்பர் அழகு.. என் பேரு பூஜா.. இவன் ராம்.. நாங்களும் இங்க தான் படிக்க போறோம்... சோ டோன்ட் ஒர்ரி.. நாம பிரண்ட்ஸ் ஆகிக்கலாம்..." என்று அவள் சொல்லி உதவியும் செய்ய அன்றே அவர்கள் நட்பும் ஆரம்பமானது..
அறிவழகனுடன் தான் முதலில் பூஜா, ராம் இருவருக்கும் நட்பு உருவானது... அவர்கள் மூவர் கூட்டுக்குள் அதற்கு அடுத்ததாய் நுழைந்தவன் தான் விஷ்னு..
கல்லூரி தொடங்கி முதல் ஒரு வாரம் காய்ச்சல் நிலவனை படுத்தி எடுத்துவிட்டது... அடுத்த வார தொடக்கத்திலேயே அவனால் அங்கு வர முடிந்தது... அவன் முதலில் சந்தித்ததும் அறிவழகனை தான்.. அதன் பின் அவனும் அந்த நால்வரோடு சேர்ந்து கொள்ள, நிஷாவும் பின்னாளில் அந்த கூட்டினுள் நுழைந்து கொண்டாள்..
அறிவு நல்லவன் தான் ஆனால் தனக்கு முன் ஒருவன் இருக்கிறான் என்ற பொறாமை என்னும் தீ காலப்போக்கில் நுழைந்து கொள்ள, எடுத்ததற்கு எல்லாம் நிலவன் மீது இல்லாத கோபத்தை வளர்த்துக்கொண்டான்...
நிலவன் இயற்கையிலேயே சற்று அறிவாளி தான்... லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம்.. சராசரி மனிதனை விட அவன் மூளை கொஞ்சம் அதிகமாகவே வேலைசெய்யும்.. அது கடவுளின் அருளும் கூட... ஆனால் ஒரு நாளும் அதை கொண்டு அவன் தன்னை பெரிதாய் நினைத்ததில்லை... கடவுள், தனக்கு தந்ததால் தான், இல்லையென்றால் தன் இடத்தில் இன்னொருவர் என்பதே அவன் எண்ணம்...
பள்ளிக்கூடம் சென்ற காலம் தொட்டு பெரிதாய் நண்பர்களும் இருந்ததில்லை... புகழ் மட்டுமே நண்பனாய் பிறந்தது முதல் அவனோடு... இப்போது புகழின் இடத்தை நிரப்பவே இந்த ஐவர் என்பது அவன் எண்ணம்..
நாலு வருடமாக புகழ் அவனுடன் இல்லை... சொந்த ஊருக்கு சென்றிருந்தான்.. தினமும் பேசி விடுவதால் பெரிதாய் பிரிந்திருப்பது போல் தோன்றுவதில்லை ஆனால் அவன் போலீஸ் ட்ரைனிங்காக சென்றிருந்த இந்த ஒரு மாதம் அவனோட பேச முடியாமல் போனது... இன்னும் ஐந்து மாதம் இப்படியே கடக்க வேண்டும் என்பதும் நிலவனுக்கு கவலையே... புகழை எப்படித்தான் கலாய்த்தாலும் அவன் எப்போதும் நிலவனுக்கு ஸ்பெஷல் தான்...
அந்த கவலையுடன் இப்போது அறிவழகனின் விலகலும் சேர்ந்து கொண்டது... அவனின் விலகளுக்கான காரணம் என்ன என்பதே நிலவனுக்கு தெரியவில்லை.. அவனும் பேச முயற்சி செய்கிறான் தான் ஆனால் அறிவழகன் பிடிக்கொடுப்பதாய் இல்லை... சாதாரணமாய் தொடர்ந்த விலகல் இன்று அவர்கள் கூட்டை உடைத்து விட்டது எனலாம்...
நட்பு தான் எவ்வளவு விசித்திரமானது.. யார் என்று தெரியாமல் தொடங்கும் நட்பு.. தாய்க்கு தெரியாத விடயங்களை கூட யாரும் சொல்லாமலே தெரிந்து கொள்கிறதே!!... இந்த உலகத்தில் காதல் இல்லாமல்.. தாய் இல்லாமல்.. தந்தை இல்லாமல்... ஏன் மனைவி பிள்ளைகள் இல்லாமல் கூட ஒருவன் இருந்து விடுவான் ஆனால் ஒரே ஒரு நண்பன் கூட இல்லாத ஒரு மனிதனை எவராலும் காட்டிவிடத்தான் முடியுமா என்ன??...
மதியம் ஏதோ ஒரு விசிட்டிங் ப்ரோபசர் ஒருவரின் லெக்சர் இருந்தது.. ஹார்மோன்கள் தொடர்பான வகுப்பு அது... நிலவன் செய்துவரும் ஆராய்ச்சிக்கு அது மிகவும் தேவைப்படும் ஒன்று என்பதால்.. ஆர்வமாகவே அவதானித்து சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டான்...
அதன் பின் மீண்டும் நண்பர்களுக்கான நேரம் தொடர்த்தது... கார்த்தியையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால் நிலவன் நேரத்துக்கே சென்றுவிட்டான்.. அவனோடு விஷ்னுவும் காதல் ஜோடிக்கு தனிமை கொடுத்து விடைபெற அந்த நாள் ராம் பூஜா இருவருக்குமானதானது...
அந்த நாள் முடிவில்... ராம் ஹாஸ்டல் அறைக்கு வர அங்கே அறிவழகன் அமர்ந்திருந்தான்...
"ராம்.."
"சொல்லு அறிவு.." என்றான் குளிக்க ஆயத்தமானவாறு...
"என்மேல கோபமா..."
"எனக்கென்ன கோபம்.."
"பொய் சொல்லாத... எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல கோபம்னு "
"உன் மேல கோபப்பட நாங்க யாரு அறிவு..."
"இப்படிலாம் பேசாத ராம்... எனக்கு சில விஷயம் பிடிக்கல அதான் விலகி இருக்கேன்.. மத்தபடி உங்க மேல எல்லாம் எனக்கு கோபம் இல்ல..."
"ஏன் சுத்தி வளைக்கிற, நிலவன் மேலதான் கோபம் அவனைத்தான் பிடிக்கலைனு சொல்லேன்..." என்க அவனிடம் மௌனம்
"அப்படி இல்லனு கூட உன்னால சொல்ல முடியலல... அப்படி என்னடா அவன் உனக்கு பண்ணிட்டான்.. அந்த பைத்தியக்கார இப்பவும் உன்ன பத்தித்தான் பேசிட்டு இருக்கான்..." என்றான் ராம் கோபத்தோடு..
அறிவோ, "அதெல்லாம் இல்ல... நீ எப்பவும் போல என்னோட பேசு.. நீ குளிச்சிட்டு வா நாம சாப்பிட போகலாம்...." என்று அந்த விடயத்திற்கு அதோடு முற்றிப்புள்ளி வைத்தான்... ராமோ "இவனுக்கு சொல்றதே வேஸ்ட்" என்று எண்ணியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்....
அடுத்த நாள் காலை ரம்மியமாய் விடிந்தது நிலவனுக்கும் சரி அதிரலுக்கும் சரி.. ஆனால் அவர்கள் சந்திப்பதற்காக காத்திருக்கும் கியூபிட்டுக்கு கலவரமாக தான் விடிந்தது....
அங்கே அதிரலில் வீட்டில் ராஜய்யா ஏதோ சொல்லி அதிரலின் முறைப்பை பெற்றுக்கொண்டார்..
"இப்போ என்ன தாத்தா.. இத மாத்தணுமா?? இந்த டிரஸுக்கு என்ன குறைச்சல் நல்லா தான இருக்கு..." என்று அப்படியும் இப்படியும் தன்னை கண்ணாடியில் பார்த்து கொள்ள.. இவர் தான் பாவமாய் முழிக்க வேண்டி இருந்தது...
அவளோ தொடை வரையான இளம் சிவப்பும் இல்லாமல் கடும் சிவப்பும் இல்லாமல் சிவப்பின் ஏதோ ஒரு வகையில் ஸ்கேர்டும் இடை ஓரளவுக்கு தெரியும் படியான அதே நிறத்திலான கிராப் டாப்பும் தான் அணிந்திருந்தாள்... மேற்கத்தைய கலாச்சாரதில் வளர்ந்தவளுக்கு அது ஒன்றும் தவறாக தெரியவில்லை... அங்கே ஒரு மாதிரி இங்கே ஒருமாதிரி என இத்தனை நாளில் அவள் நடந்ததுமில்லை... ஆனால் அவருக்கோ இந்த உடையில் செல்வது பிடிக்கவில்லை.. அதனாலேயே இந்த எதிர்ப்பு...
"ஓகே முகத்தை அப்படி வெச்சிக்காத... மாத்துறேன்... என்றவள் உள்ளே சென்று அதே டாபிற்கு இப்போது சற்று நீளமான ஸ்கேர்ட்டை அணிந்து வந்திருந்தாள்... இடை சற்று தெரியத்தான் செய்தது... முன்பை விட இது எவ்வளவோ மேல் என்பதால் அவரும் புன்னகைத்து சம்மதம் சொல்லி இருந்தார்....
"அப்பாடா.. இதுக்காச்சும் ஒத்துகிட்டியே... உன் பிரண்ட் அங்க இருப்பாருல நான் போய் மீட் பண்ணுறேன்... அவர் நேம் என்ன?..
"ஜெயவேல் கிருஷ்ணன் டா.."
"ஓகே தாத்தா போயிட்டு வரேன் பாய்.. என்ன ப்ளஸ் பண்ணு" என்று அவர் காலில் விழுந்து எழுந்திருந்தாள்.. இது சீதா பழக்கி விட்ட பழக்கம்.. இன்றுவரை பேத்தி மாறாமல் கடைபிடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி தான்...
"என்ன நிலவா இன்னைக்காச்சும் இந்த கூட்டத்துல உன் தேவதை தேறுமா?..."
"வெயிட் பண்ணு பூ... அத தான் நானும் பாக்குறேன்... எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ஸ்பார்க் வர மாட்டேங்கிதே... மனசு சைட் அடிக்க மட்டும் தான சொல்லுது..."
"சொல்லும் டா சொல்லும்.. ஊர்ல இருக்க பொண்ணு ஒன்னு விடாம சைட் அடிக்க வேண்டியது அப்பறம் ஸ்பார்க் வரல தேவதை வரலன்னு கத விட வேண்டியது..."
"அட மச்சான்.. நீ ஏன் பொங்குற.. அந்த டீச்சர் கவிதா.. நேத்து கூட நாம அந்த பக்கம் போகும் போது ரெண்டு பேரும் சைட் அடிச்சோமே... நீ கூட செம ஹாட்.. அளவான ஹைட்னு சொன்னியே அத சொல்லுறியா மச்சான்??.."
ராமோ, "ரைட்டு சைத்தான நானே சைக்கில்ல கூப்பிட்டேனா?" என்றபடி பூஜாவை பார்க்க.. அவள் பார்த்த பார்வையில் குறைந்தது இன்னும் மூன்று வாரத்துக்கு இதை வைத்து செய்வாள் என்பது அவன் கண் முன் விரிந்ததில் மீண்டும் வாயை திறப்பானா என்ன?...
"விஷ்னு குமுறல் சத்தம் கேக்கலையா மச்சான் உனக்கு?." என்றான் நிலவன் விஷ்னு தோள் மீது கை போட்டப்படி
"ஹெவியா வருதே... பெரிய ஒப்பாரி சத்தமே உள்ள ஒளிஞ்சு கிடைக்கு மச்சான்..."
"ரெண்டு பேரும் அவன கலாச்சது போதும்.. பிகர பாப்போம் வாங்கடா...." என்ற பூஜாவை மூவரும் முறைக்க
"ஹி ஹி சாரி... உங்க கூட சேர்ந்ததுல இருந்து அடிக்கடி நானும் ஒரு பொண்ணுங்கிறதைய மறந்துடுறேன்.."
"நல்லா மறந்த போ.." என்ற நிலவன் தீவிரமாய் பெண்களுக்கு மார்க் போட்டு கொண்டிருக்க... சற்று தள்ளி சில இடங்களில் ரேகிங் நடக்க தான் செய்தது...
அந்த நேரம் நிஷாவும் அறிவும் அந்த இடம் வர... கோபமாய் கிளம்ப போன பூஜாவை கண்களால் கெஞ்சி அமர வைத்திருந்தான் நிலவன்...
அவன் பூவுக்கு நிலவன் என்றால் எப்போதும் ஸ்பெஷல்... அவனுக்கும் அவள் மீது தனி பாசம் தான்..
அவர்களது பிணைப்பு அவர்களது நண்பர்களுக்கே விசித்திரம் தான்.... அவர்கள் உறவுக்குள் அவர்களுக்கேயான எல்லா உறவும் வந்து போகும்...
அவள் குழந்தையாக இருந்தாள் அவன் தந்தையாக அவளை சுமப்பான்.. அவன் குழந்தையாகும் போது அவள் தாயாய் மடி கொடுப்பாள்.. சண்டை போட அண்ணன் தங்கையாய்... உயிரை எடுக்கும் அண்ணன் தம்பியாய்... தோள் கொடுக்க நண்பர்களாய் இப்படி பல அவதாரம் அவர்கள் நட்புக்குள்...
"வா நிஷா... வாடா அறிவு உக்காரு... சைட் அடிக்கிற சங்கத்துல நீயும் ஜொயின் ஆகிக்கோ..." என்ற நிலவனின் பேச்சை சிறிதும் கண்டுகொள்ளாதவன்
"நான் ஒன்னும் பொறுக்கி இல்ல.." என்று பொதுவாய் சொன்னவன் ராமிடம் "ராம்.. எனக்கு ரிப்போட் சப்மிட் பண்ணவேண்டியதிருக்கு நான் கிளம்புறேன் நீ வரியா??..." என்றான்
"நான் நாளைக்கு பண்ணிப்பேன்... நீ போ அறிவு.. எனக்கு சைட் அடிக்கிற வேல இருக்கு.. கொஞ்சம் பொறுக்கி தனம் பண்ணப்போறேன்..." என்ற ராம் வேலை முடிந்தது என்பதாய் நிலவன் பக்கம் திரும்ப அறிவுக்கு கோபம் தான்.. இருந்தும் காட்டிகொள்ளாமல் "ஓகே டா" என்றவன் கிளம்பிவிட்டான்..
இவர்கள் இங்கே பேசிகொண்டிருக்க பக்கத்தில் யாரோ யாரையோ அறையும் சத்தம்... ரேகிங், அளவு மீறி அடிப்பது வரை சென்று விட்டதோ என நினைத்து நண்பர்கள் நால்வரும் அங்கே செல்ல
"நீ சீனியர்னா என்ன வேணா பேசுவியா??.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. பேசுற வார்த்தைல கவனம் இருக்கணும்.. அதுக்காக தான் இந்த அறை..." என்று சிறிது நிறுத்தியவள் "ம்ம்ம் இப்போ சாரி கேளு.." என்று முடித்திருக்க அவனுக்கோ பெரிய அவமானம்... அங்கு நின்றிருந்தவர்கள் அவனையே பார்த்திக்க உள்ளுக்குள் கனன்ற கோபத்தோடு நின்றிருந்தான்...
அவன் நான்காம் ஆண்டு மாணவன் நிலவனின் ஜூனியரும் கூட... கொஞ்சம் சிக்கலான பேர்வழி தான்... அவன் பேச்சில் நிதானம் இருக்காது, நிலவனிடம் கூட இரு முறை அறை வாங்கி இருக்கிறான்... எப்படியும் அவன் மீதுதான் தவறு இருக்கும்.. அந்த பெண்ணை ஏதோ ஏடாகூடமாக பேசி இருக்கிறான் என்று அவனுக்கு புரிந்தது...
ஆனால் "வந்த முதல் நாளே இப்படி அடித்து விட்டாளே" என பூஜா அவளையே பார்த்திருக்க... நிலவனோ கண்ணில் காதல் அம்பு விட்டுகொண்டிருந்தான் அதிரலுக்கு... குயூபிட் வேலையை நிலவனின் பக்கத்தில் சிறப்பாய் ஆரம்பித்து வைத்து விட்டது.. ஆனால் இனி தான் அதற்கு உண்மையான போராட்டமே...
"நிலவா டேய் என்னடா கனவு கண்டுட்டு இருக்க... போய் பிரச்சனைய முடிச்சு வை..."
"நானா என்று அவன் முழிக்க..."
பூஜா, "பின்ன நானா.. நீ தானடா.. ஸ்டுடென்ட்ஸ் ப்ரெசிடெண்ட்.. நீதான பேசணும் அப்பறம் டீன் வரைக்கும் போனா பிரச்சனை ஆகும்..." என்றதும் தான் சுய உணர்வே வர... கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றான்..
அவன் இருந்த மனநிலைக்கு விசாரிக்க கூட தோன்றாமல் "விக்கி மன்னிப்பு கேளு... உனக்கு இதே வேலையா போச்சு... யோசிச்சு பேசணும்னு எத்தனை தடவ சொல்லுறது..." என்றான் அந்த மாணவனிடம்..
அதிரலோ.. "ஹூ ஆர் யூ..." என்றாளே பார்க்கலாம்.. எல்லோரும் "ங்கே" என்றே பார்த்திருந்தனர்..
"எக்ஸ்கியூஸ்மி.. ஐ ஆஸ்க்ட் ஹூ ஆர் யூ?..
"நிலவன்..." என்றவன் "நா.." என்று ஏதோ சொல்ல வர அதனை தடுத்து நிறுத்தினாள்
"இங்க பாருங்க மிஸ்டர் நிலவன்.. இங்க என்ன நடந்திச்சிச்சு தெரியுமா??.." என்க அவன் தலை இடம் வளமாக ஆடியது.. "தென் வை ஆர் யு அஸ்கிங் ஹிம் டு அப்போலோஜய்ஸ்..." (அப்போ அவர ஏன் மன்னிப்பு கேட்க சொல்லுறீங்க ) என்று அவனிடம் கேட்க அவனுக்கோ ஏதோ வில்லங்கமாய் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது, அவன் செய்தது தவறு என உணர்ந்ததாலோ என்னவோ?? மௌனமாய் நின்றிருந்தான்...
"நீ மன்னிப்பு கேளு மா.. உனக்கு இன்னொரு முறை சொல்லனுமா.." என்று அந்த பெண்ணிடம் சொல்லி, அவளும் மன்னிப்பு கேட்க கூட்டம் கலைந்தது...