ஜாதி மல்லி பூ 04
மாளிகை போல் என்ன மாளிகை தானோ என வியக்கும் படி பறந்து விரிந்த அந்த பங்களாவின்
முன் கூட்டங்கள் அலைமோதிய வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.... அரசியல்வாதியின் வீடு என்றால் சொல்லவும் வேண்டுமோ???...
ஜெயராம கிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர்... அதுமட்டுமின்றி ஜேகே ஹாஸ்பிட்டல்ஸ் , ஜேகே காலேஜஸ் மற்றும் ஜேகே இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஏராளமானவற்றை நிர்வகிப்பவர்.... ஏகப்பட்ட சொத்துக்களை தன்வசம் கொண்டிருப்பவர்...... அதனாலேயோ என்னவோ மரியாதையை அவரிடம் கடுகளவும் எதிர்பாக்க முடியாது....
"வசந்த் இந்த மாச டெலிவரி எந்த அளவுல இருக்கு இன்னும் டூ வீக்ஸ்ல அனுப்பனும்...." என்றார் கோப்புக்கலில் கையெழுதிட்டப்படி..
"ஆல் குட் சார்... அல்மோஸ்ட் எல்லாம் ரெடி.... சரியான டேட்க்கு அனுப்புறது மட்டும் தான் பாக்கி.." என்றான் சற்று முன் வசந்த் என அழைக்கப்பட்ட ஜெயராமகிருஷ்ணனின் பிஏ
"எல்லாத்துலயும் ஒரு கண்ணு வெச்சிக்கோ வசந்த்... எங்கயும் எதுவும் மிஸ் ஆகிட கூடாது... கேக்குற சரக்கு எப்போவும் நம்மகிட்ட ஸ்டோக் இருக்குற மாதிரி பாத்துக்கோ....." என்றார் அவன் கண்களை பார்த்து ஏதோ உள்ளர்த்தத்துடன்.. அதனை சரியாக புரிந்து கொண்டவனாய்
"கண்டிப்பா சார்... நான் பாத்துக்குறேன்.... ஜேகே சார் நாலேஜ் இல்லாம எதுவுமே நான் பண்றதில்ல சார்.... இது சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்... சோ நீங்க பயப்பட வேண்டாம் எங்கயும் தப்பா போக வாய்ப்பே இல்லை....."
"ஹா ஹா அவன் உன்னையும் விடலயா???".... என்று கேலியாய் சொன்னவருக்கு மகனை நினைத்து எப்போதும் போல பெருமிதம் தான்....
"சார் ஐஜி உங்கள மீட் பண்ண ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்காரு..."
"ம்ம்ம் ஞாபகம் இருக்கு... அவன் பிடி இப்போ நம்ம கைல.... வாலாட்ட மாட்டான்.... இப்போதைக்கு அவன நினைச்சு பயப்பட வேணாம்னு தம்பி சொல்லிருக்கான்.... ரெண்டு நாள்ல டைம் பிக்ஸ் பண்ணு..... கொஞ்சம் வெய்ட் பண்ணட்டும் அப்போதான் கொழுப்பு குறையும்"
"ஓகே சார்...." என்றவன் அதுக்கான வேலைகளை பார்க்க விரைந்தான்....
அவன் சென்றதும் தன் மகனுக்கு அழைத்தவர்
"தம்பி அப்பா பேசுறேன் பா....."
"ஆமா இங்க எல்லாம் நல்லா தான் போகுது...."
"டைம்க்கு எல்லாம் முடிஞ்சிடும்..... அதான் நீ இருக்கியே....
" நம்ம ஹாஸ்பிடல தான் சேர வெச்சாச்சு...."
"ம்ம்ம் வாட்ச் பண்ண ஆள் செட் பண்ணிருக்கேன் பா..."
"நீ எப்போ வர்ற?..."
"ஓகே ஓகே நீ நாட்டுக்கு வந்ததும் அத பாத்துக்கலாம் எங்க போய்ட போகுது......"
"சரி நான் வெச்சிடுறேன்.. "
என்று அந்தப்பக்கம் பேசியவற்றுக்கு பதில் சொன்னவர் கட்சி மீட்டிங் செல்ல தன் அலுவக அறையை விட்டு வெளியேறினார்....
ஜேகே என அழைக்கப்படும் ஜெகதீஸ்வர கிருஷ்ணன்.... ஜெயராம கிருஷ்ணனின் ஒரே மகன்.... அவர் சொத்துக்களின் ஒரே வாரிசு..... உலகிலேயே விரல்விட்டு எண்ண கூடிய சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் அவனும் ஒருவன்.... மணிக்கு லட்சங்களில் சம்பாதிப்பவன்..... இப்போது ஏதோ ஒரு கண்டுபிடிப்புக்காக அமெரிக்கா வரை நீண்டிருக்கிறது அவன் பயணம்...... பணம் மட்டுமல்ல அறிவும் கத்தி போன்றது தான்..... இருக்கும் இடத்தை பொறுத்தது தான் அதன் குணமும்...... ஒன்று இருந்தாலே பயங்கரம் ஆனால் இங்கோ இரண்டின் சங்கமம்....??????
வண்ண நிலவனின் ஜீப் சரியாக ஜேகே ஹாஸ்பிடல் வளாகத்தில் நின்றது.... அதிலிருந்து இறங்கியவன் உள் நுழையும் போதே ஏதோ ஒரு இனம்புறியா உணர்வு அவனுள்.... ஏதோ மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வு..... அவனுக்கே அவனுக்கான சுவாசம் இருப்பதாய் அவன் இதயம் அடித்துக்கொண்டது.....
"என்னடா நிலவா.. என்னாச்சு.... காம் டவுன்....." என்று தனக்கு தானே சொல்லி தன் இதயத்தை நீவிக்கொண்டவாறே உள்நோக்கி சென்றான்....
"சார் பதினெட்டாம் வாட் இந்த பக்கம் தன் போகணும்....." என்ற ராமசாமியின் சொல்லுகினங்க அவர் காட்டிய திசையில் சென்றது அவன் கால்கள்..
"வா நிலவா இப்போ டாக்டர் வர நேரம் தான்..... பார்த்துட்டு டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் என்னன்னு சொல்லுவாங்க...." என்றான் அவன் நண்பன் புகழ்
"ம்ம்ம்.... பேரண்ட்ஸ்???..."
"பில் பே பண்ண போயிருக்காங்க... இப்போ வந்துடுவாங்க..." என்று சொல்லவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.....
"ரொம்ப தேங்க்ஸ் சார்... நீங்க மட்டும் பிடிக்கலனா... என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருக்கும்.... அவளுக்கு ஒன்னுனா எங்களால தாங்கவே முடியாது" என்று அழுதாவேறே பேசினார் அந்த குழந்தையின் தாய்...
"அதெல்லாம் ஒன்னுமில்லமா.... தேங்க்ஸ் எல்லாம் பெரிய வார்த்தை..... ஏதோ என்னால முடிஞ்சது... பாப்பாக்கு இப்போ எப்படி இருக்கு?"
"காயம் பெருசா ஒன்னுமில்ல சார்... ஜஸ்ட் கீறல் விழுந்திருக்கு... பயத்துல தன் பாப்பா மயங்கிட்டா" என்ற குழந்தையின் தந்தைக்கு தலையசைப்பை பதில் அளித்தவன் அவர்கள் குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைவதை பார்த்தவாறே அங்குள்ள இருக்கையில் நெஞ்சை நீவியபடி அமைதியாய் சிறிது நேரம் அமர்ந்தான்...
"என்ன ஆச்சு நிலவா ஏன் இப்படி உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு.... எனிதிங் சீரியஸ்???? இப்படி அமைதியா இருக்க மாட்டியே..." என்றான் அவன் நண்பன் புகழ்...
"நத்திங் மச்சான் ஜஸ்ட் திங்கிங் அவ்வளவுதான்...." என்றவன் நிலைமையை சுமூகமாக்க முயன்று "அப்புறம் உன்ன அப்பா பாக்கணும்னு சொன்னாருடா..." என்றான்
அவனை கொலை வெறியுடன் பார்த்த புகழ் "ஆள விடுடா சாமி..... நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல..... நீ எதுவும் எனக்கு பதில் சொல்லல...." என்றான் பீதியுடன்
"ஹா ஹா ஹா..... அனுபவம் ரொம்ப பலம் போல மச்சான்...."
"மனிசனாடா நீ அன்னைக்கு அப்பாகிட்ட என்ன கோர்த்துவிட்டுட்டு நீ ஜாலியா இருந்துட்ட.... நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்.... சின்ன வயசுல இருந்து உனக்கு பிரண்டா இருக்குறதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் அளவுக்கு அதிகமாவே எனக்கு பண்ணுறடா நீ" என்ற புகழுக்கு இரண்டு நாள் முதல் மாட்டிக்கொண்ட அந்த சம்பவம் கண் முன் விரிந்தது.....
"நிலவா.... நிலவா...." என்று அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்த புகழ் கண்டது ஹாலில் அமர்ந்திருந்த சேதுராமனை தான்
"ஐயையோ அய்யனார் இங்க தான் இருக்காரா??? என்ன பேச போறாரோ தெரியலையே.... நண்பா ஹெல்ப் மீ டா...." என மனதுக்குள்ளே பேசியவாறே முழித்தவனை ஆபத்பாந்தவனாய் காப்பற்றினார் வாசுகி..
"அடடே புகழு...... எவ்வளவு நாளாச்சு உன்ன பாத்து.... ஊர்ல அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா???.... ரெண்டு நாள் முன்ன கூட பைரவிகிட்ட பேசினேனே நீ வர்றத பத்தி அவ சொல்லவே இல்லை...... என்ன நின்னுட்டே இருக்க உக்காரு....." என்று அவனிடம் பேசியவர் இங்க பாருங்க நம்ம புகழ் வந்திருக்கான்...." என்று கணவரிடம் முடித்தார்...
"ம்ம்ம்... வாப்பா உக்காரு.. இதோ வந்துடுறேன்...." என்றவர் எழுந்து உள்ளே சென்றார்
"எப்படி இருக்கீங்கம்மா.... அம்மா அப்பா நல்லா இருக்காங்க.... அவங்களுக்கு தெரியாதுமா நான் வர்றது.... சொல்லி இருந்தா அவங்களும் கூடவே கெளம்பி இருப்பாங்க..... எப்பவும் உங்க புராணம் தான்... அங்க கூட்டிட்டு போய்ட்டாங்கனு டெய்லி அப்பாக்கு அர்ச்சன தான் விழுதுனா பாத்துக்கோங்களேன்..... எங்கம்மா நிலவன காணோம்...."
" வைரவி எப்பவும் அப்படித்தான்... என் மேல ரொம்ப பாசம் அவளுக்கு.... அவன் குளிக்கிறான் வருவான்.... நீ வா சாப்பிடலாம்........"
"இருக்கட்டும்மா அவனும் வரட்டும் சேர்ந்தே சாப்பிடுறோம்...."
"டேய் வாடா நல்லவனே..... வந்துட்டியா.." என்றவாறே அங்கு வந்து சேர்ந்தான் நிலவன்...
" இல்லை இன்னும் வரல நாளைக்கு வரட்டா..... அட போடா டேய்..... அப்பா ஏன் கூப்பிட்டாங்கன்னு சொல்லவே இல்லையே நீ....." என்று வாயடித்த புகழிடம் " ஏன்டா காலைலயே சூடா இருக்க..... சாப்பிட்டியா முதல்ல ????.... அம்மா டிபன் வைங்க...." என்றவாறு கூல் ஆக டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் புகழையும் தன் அருகே அமர்த்தினான்.....
'நீயும் வந்துடட்டும்னு இருந்தேன்.. சாப்பிடலாம்..... என்னமா டிபன் இன்னைக்கு....."
"பூரியும் உருளைக்கிழங்கும் தான்.... உனக்கு பிடிக்குமே" என்றவாறு இருவருக்கும் பரிமாறினார்...
"இப்போவாவது சொல்லேன் டா அப்பா ஏன் கூப்பிட்டாங்கனு....."
"ஹி ஹி ஹி.... அது வேறொன்னுமில்ல மச்சான்.... நான் போலீஸ்ல சேர முக்கிய காரணமே நீ தான்.... நீ தான் என்னோட ரோல் மாடல்..... உன்னாலதான் நான் இந்த முடிவுக்கே வந்தேன்.... புகழ் இல்லாட்டி நான் இதப்பத்தி யோசிச்சிருக்கவே மாட்டேன் அப்படி இப்படினு.... அப்பாகிட்ட உன்ன பத்தி புகழோ புகழ்னு புகழ்ந்தேன்டா புகழு....." என்றவன் சிரிக்காமல் பேசியது அவனுக்கே அதிசயம்....
"அட சண்டாளா.... நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்... இப்படி அய்யனார்கிட்ட கோர்த்து விட்டுட்டியே..... இதுல புகழ் புகழ் னு ரைமிங் வேற.... உன்னால என் பேரே எனக்கு சகிக்கல டா..... நான் ஜாயின் பண்ணப்பவே கிழி கிழினு கிழிச்சாரே உங்கப்பா......" என்றவனுக்கு உணவு தொண்டையில் சீக்கிக்கொண்டாது....
"இட்ஸ் மை டூட்டி மச்சான்..... உன் பெயர் வேற புகழ் உன்ன புகழாம இருக்கலாமா சொல்லு?..... உன் புகழ உலகம் பூரா பரப்புவேன் மச்சான் டிரஸ்ட் மீ...." என்றான் அப்பாவியாய்....
"வாயில நல்லா வந்துடும் மூடிட்டு சாப்புடு.... என்று நண்பனிடம் ஆரம்பித்தவன் "ச்சே உனக்கு நேரமே சரி இல்லடா புகழு.... ட்ரான்ஸர் தந்தாலும் தந்தாங்க இங்கயா தரணும்.... அதுவும் இவன் கூட.... நிம்மதியே இல்லை புகழு உனக்கு.. இதுல இவர நம்பணுமாம்ல...." என தனக்கு தானே முணுமுணுதாவாறு சேதுராமனின் அறையை நோக்கி விரைந்தவன் அவர் காலில் விழுந்தே விட்டான்....
"அப்பா அவன் சொன்னதை நம்பாதீங்கப்பா..... அவன் என்ன புகழ்ந்து சொல்லி இருப்பான்பா.... நான் எதுவுமே பண்ணல..... அதெல்லாம் அவன் முயற்சில கெடச்சதுப்பா.... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இவன் வேலைல சேர போறதே எனக்கு தெரியாதுப்பா....." என வாக்குமூலம் குடுத்தவன் "என்ன சௌண்டையே காணல..... ஒரு வேல நம்ம பெர்பார்மென்ஸ் பார்த்து மெர்சல் ஆகிட்டாரோ....." என்று எண்ணியவாறே நிமிர்ந்து பாக்க அவர் அவனை பார்வையால் எரித்து கொண்டிருந்தார்....
எழுந்து நின்றவன் "என்ன அப்பா மூக்குல காத்து விடுறாரு.... நம்ம ஏதும் தப்பா சொல்லிட்டோமா???? காலைல கூட இப்படி ஓவரா மொறச்சு பாக்கலயே.... அய்யனார் லுக் கொஞ்சம் ஹெவியா அடிக்கிது.... என்னவா இருக்கும்...." என்று எண்ணியவாறே அவரை பார்த்தான்
அதன் பின் நடந்ததெல்லாம் அர்ச்சனைகளின் அணிவகுப்பு தான்..... சில மணிநேரம் தொடர்ந்த அர்ச்சனைகள் எதுக்கென்றே புரியாமல் அப்பாவியாய் நின்றிருந்தான் புகழ்.....
"அவனையும் திருத்த முடியாது.... உன்னையும் திருத்த முடியாது.... உன் அப்பாகிட்ட பேசிக்கிறேன்...." என்று கோபமாய் சொன்னவர் வெளியே சென்றுவிட்டார்...
என்னத்துக்கு அடிக்கிறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கடா மொமெண்ட் தான் புகழுக்கு.... அவர் சென்றதையும் அறியாமல் நின்றிருந்தவனை கலைத்தது நிலவனின் சிரிப்பு......
"ஹா ஹா....ஹாஹா... முடியல டா மச்சான்.... ஆடு தானா சிக்கி பாத்திருக்கியா????..... நான் சொன்ன எல்லாத்தையும் அப்படியே நம்புறியே யாருடா மச்சான் நீ????... சும்மாவே அந்த மனிசன் உச்சில இருக்காரு நீ வேற போய் சொரிஞ்சு விட்டுட்டியே...."
"என்னடா சொல்லுற..." என்று அதிர்ச்சியாய் முழித்தவனிடம்
"சொல்லுறாங்க சொரக்காக்கு உப்பில்லனு... சும்மா ஒரு என்டேர்டைன்மெண்ட்க்கு உன்கிட்ட அடிச்சு விட்டேன்..... ஹாஹாஹா.... நீ பாட்டுக்கு நான் தான் ஆடுன்னு அவர் முன்ன போய் நின்னா விடுவாரா???? அதான் பிரிச்சு மெஞ்சிட்டாரு.... காத கொஞ்சம் காட்டு பிளட் வருதான்னு பாப்போம்..... " என்றவனின் பேச்சில் உண்மையிலேயே காதில் கை வைத்து பார்த்திருந்தான் புகழ்.... மேலும் நிலவனே தொடர்ந்தான்....
"என்மேல் காட்டுன கோபம் கொஞ்சம் மிச்சம் இருந்திச்சா.... அதான் என் நண்பன் உனக்கு அத வாங்கி தரலாமேனு ஒரு நல்ல எண்ணத்தோட போன போட்டேன்..... நீயும் சீக்கிட்ட..... இப்போதான் மனசே நெறைஞ்சிருக்கு..... இருந்தாலும் நீ கால்ல விழுந்தது தான் மச்சான் ஹைலைட்.... ஹாஹாஹா..."
"அட கொலகார பாவி.... இன்னைக்கு உன்ன என்ன செய்றேன் பாருடா...." என்றவாறு அவன் மேல் பாய்ந்தான்... அதற்கு பின் நடந்ததெல்லாம் அமளி துமளி தான்... வாசுகி வந்து பிரிக்கும் வரை தொடர்ந்தது அவர்களின் கலாட்டா....
அந்த யோசனையில் இருந்து நிகழ்க்காலத்துக்கு வந்த புகழ்.... இப்போதும் நிலவனை முறைத்துக்கொண்டுதான் இருந்தான்.....
"விட்றா மச்சான் விட்றா.... மலையிரங்கு... அப்பறம் உன் அப்பாகிட்ட தனி பிட் போடவேண்டி இருக்கும் பாத்துக்கோ???..."
"ஐயா ராசா.... ஆள விடு சாமி.... அய்யனார் என்ன பேசினாரோ தெரியல இப்போவரை அப்பா எதுக்குனே தெரியாம கத்துறாரு... நீ மறுபடியும் தொடங்கிடாத.... அப்பறம் உசுருக்கு உத்தரவாதம் இல்லை... நான் இன்னும் கமிட் கூட ஆகல அதுவரைக்கும் உசுர விட்டு வையி..."
"அந்த பயம் இருக்கட்டும்...." என்று விரல் நீட்டி எச்சரித்தவனிடம் " நீ ஓகே தான மச்சான்..... ஒன்னும் பிரச்சனை இல்லைல.... என்ன வேணும்னாலும் சொல்லுடா பாத்துக்கலாம் மனச குழப்பிக்காத...." என்றவனுக்கு சற்று முன் நிலவனின் முகம் காட்டிய வேதனையில் மனம் கசங்க தான் செய்தது.... அவனை இலகுவாக்கவே இவ்வளவு நேரம் பேசியதும் கூட..... அவனும் அறிவானே இந்த மூன்று வருடங்களாய் அவன் படும் பாடு....
"ஒன்னுமில்ல மச்சான்.... நீ பிரீ ஆ விடு.... என்னமும்னா உனக்கிட்ட தான வருவேன்...." என்றவனுக்கு புகழின் குரலில் இருந்த அக்கறை புரிய தான் செய்தது.. தன் நட்பை நினைத்து எப்போதும் போல இன்றும் பெருமிதம் தான்....
"டென் மினிட்ஸ் ஆகிடிச்சு இன்னுமா டாக்டர் வரல.... போய் கேட்டுட்டு வரேன் இரு" என்றவாறு சென்றவன் சிறிது நேரத்தில் வந்தான்
"டேய் அந்த லேடி டாக்டர் இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகுமாம்... போன் பண்ணி கேட்டிருக்காங்க போல.... ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொன்னாங்களாம்...."
"யாரு அந்த இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்.... வேலைல சின்சியரா இருக்குறதில்லையா???? இன்போர்ம் கூட பண்ணாம அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேல அவளுக்கு...." என்று பேசிக்கொண்டே போனவன் தனக்கு பின் அவள் நிற்பது... தன் நண்பன் அதற்கு குறிப்பு காட்டியது எதையும் அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான் நிலவன்....
நண்பன் பேச்சில் வழமையாக தெரியாதவர்களை பேசும்போது இருக்கும் மரியாதை இன்று காததூரம் சென்று இருந்ததால் புகழ் தான் கையை பிசைந்து கொண்டு அவளை பார்த்து முழித்து கொண்டிருந்தான்
"என்னடா பேய் முழி முழிக்கிற..... பேய் ஏதாச்சும் பாத்துட்டியா என்ன? என்றவாறு திரும்பியவன் கண்டது கை கட்டி தன் முன் கோபமாய் நிற்கும் அதிரலை தான்..... அந்த தோற்றம் ஆயிரம் பட்டாம்பூச்சி அவனுள்..... விபரிக்க முடியாத ஏதோ சுழலில் அவனை இழுப்பது போல் உணர்வு... மூச்சு விட முடியாமல் போராடும் அவன் நெஞ்சு.... அந்த நொடி நேரத்தில் அவன் முகம் காட்டிய பாவனையோ ஏராளம்.... சட்டென்று தன்னை சுதாகரித்துக்கொண்டவன் அவளை வெற்று பார்வை பார்த்தான்....
ஆனால் அவளிடமோ ஒரு கோபபார்வை.... கூடவே ஒரு ஆராய்ச்சி பார்வை.... நொடி பொழுதில் தோன்றி மறைந்த பரிச்சய பார்வை...... அதனை அவன் கண்டுகொண்டானோ என சிறு சுருக்கம் கூட அவள் விழியில் தோன்றியது.... இது எதுவுமே அவன் பார்வையில் இருந்து தப்பவே இல்லை..... அவை எல்லாம் மலைச்சாறல் போல் அவன் நெஞ்சில் குளிர்ச்சியாய்... இருந்தும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை அவன்...... அவளோ எதுவுமே பேசாமல் குழந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.....
"டேய் என்னடா இப்படி பேசிட்ட.... அவங்க என்ன நினைச்சிருப்பாங்க....." என்ற நண்பனின் குரல் அவனுக்கு கேக்கவே இல்லை மூச்சு முட்டுவதாய் ஒரு உணர்வு அவனுக்கு அங்கிருக்கவே முடியவில்லை..... "இதுக்கு தான் அப்படி துடிச்சியா நீ" என்று தன் இதயத்திடம் கேட்டு கொண்டவாறே..
"நான் கொஞ்சம் வெளில இருக்கேன்.... என்னனு பாத்துட்டு கூப்பிடுடா.... என்று சென்றவனின் செயல் எதிலிருந்தோ தப்பிக்க ஓடுவதை போல் இருந்தது....
"இவள் எப்படி இங்க????? ரொம்ப மெல்லிச்சிட்டாளே.... சாப்பிடுறது இல்லையோ?????..... கண்ணுல கூட கொஞ்சம் கருவளையம் வந்துடிச்சு.... ராட்சசிக்கு நல்லா முறைக்க மட்டும் தெரியும்...." என்று எண்ணியவனுக்கு எதிராய் அவன் மனசாட்சி போர் கோடி தூக்கியது...." அவளுக்கு நல்லா வேணும்.... இருக்குற கொழுப்புக்கு..... " என்ற மனசாட்சியை அடக்கியவன்
"என்ன நடந்தாலும் அந்த பார்வையும் அழகும் குறையவே குறையாது இவளுக்கு..." என்று அவள் எண்ணத்தில் மூழ்கி இருந்தவனை மனசாட்சி காரி துப்பியதை கூட கவனிக்காமல் கண் மூடி சற்று முன் பார்த்த அவள் தோற்றத்தில் லயித்திருந்தவன் புகழின் அழைப்பில் உலகத்துக்கு மீண்டு வந்தான்....
"தப்பு பண்ணிட்ட நிலவா.... அவங்க கார்டியோலோஜிஸ்டாம் டா..... நைட் ஏதோ எமஜென்சி ஹார்ட் சர்ஜெரி பண்ணினாங்கலாம்.... திடீர்னு வந்ததால வேற டாக்டர்ஸ் யாரும் அவைலபில் இல்லயாம்னு இவங்க டூட்டி டைம் முடிஞ்சும் அவசரத்துக்கு அந்த கேஸ் அட்டென்ட் பண்ணி இருக்காங்க... நைட் லேட்டா தான் போயிருக்காங்க.... அதான் இப்போ லேட்....."
"இத அவங்களே சொன்னாங்களா???? என்றவனின் குரலில் நக்கல் வழிந்தது.... கூடவே "மூன் எனக்கு கார்டியோலாஜிஸ்டா பிராக்டிஸ் பண்ண தான் ஆச...." என்ற குரல் அவன் காதில் ஒலித்தது.....
"இல்லையே அவங்க சொல்லல.... அங்க இருந்த நர்ஸ் ஒத்தவங்க சொன்னாங்க... ஏன்???"
"இல்லை சும்மா தான் கேட்டேன்... வா குழந்தையை பாத்துட்டு போவோம்...."
"அப்போ சாரி கேக்கலையா..."
"சாரியா எதுக்கு..."
"டேய் என்னடா... தப்பு பண்ணதுக்கு சாரி கேக்க தான வேணும்.... ஒழுங்கு மரியாதையா போய் சாரி கேளு..."
"தப்பா.... யாருடா மச்சான் தப்பு பண்ணினது.... நீ பண்ணியா என்ன??.. "
"டேய் படுத்தாததாடா.... வா..."
"ஓகே ஓகே என்ன இப்போ ஒனக்கு நான் சாரி கேக்கணும் அவ்வளவு தான... சாரி போதுமா?.."
"எனக்கெதுக்குடா சாரி..."
"அப்போ வேணாமா... சரி ஓகே போவோம்..." என்றவாறு முன் நடந்தவனின் இதழ்கலுக்குள் அடக்கப்பட்டிருந்த புன்னகை தாராளமாக விரிந்து கொண்டது....
மாளிகை போல் என்ன மாளிகை தானோ என வியக்கும் படி பறந்து விரிந்த அந்த பங்களாவின்
முன் கூட்டங்கள் அலைமோதிய வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.... அரசியல்வாதியின் வீடு என்றால் சொல்லவும் வேண்டுமோ???...
ஜெயராம கிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர்... அதுமட்டுமின்றி ஜேகே ஹாஸ்பிட்டல்ஸ் , ஜேகே காலேஜஸ் மற்றும் ஜேகே இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஏராளமானவற்றை நிர்வகிப்பவர்.... ஏகப்பட்ட சொத்துக்களை தன்வசம் கொண்டிருப்பவர்...... அதனாலேயோ என்னவோ மரியாதையை அவரிடம் கடுகளவும் எதிர்பாக்க முடியாது....
"வசந்த் இந்த மாச டெலிவரி எந்த அளவுல இருக்கு இன்னும் டூ வீக்ஸ்ல அனுப்பனும்...." என்றார் கோப்புக்கலில் கையெழுதிட்டப்படி..
"ஆல் குட் சார்... அல்மோஸ்ட் எல்லாம் ரெடி.... சரியான டேட்க்கு அனுப்புறது மட்டும் தான் பாக்கி.." என்றான் சற்று முன் வசந்த் என அழைக்கப்பட்ட ஜெயராமகிருஷ்ணனின் பிஏ
"எல்லாத்துலயும் ஒரு கண்ணு வெச்சிக்கோ வசந்த்... எங்கயும் எதுவும் மிஸ் ஆகிட கூடாது... கேக்குற சரக்கு எப்போவும் நம்மகிட்ட ஸ்டோக் இருக்குற மாதிரி பாத்துக்கோ....." என்றார் அவன் கண்களை பார்த்து ஏதோ உள்ளர்த்தத்துடன்.. அதனை சரியாக புரிந்து கொண்டவனாய்
"கண்டிப்பா சார்... நான் பாத்துக்குறேன்.... ஜேகே சார் நாலேஜ் இல்லாம எதுவுமே நான் பண்றதில்ல சார்.... இது சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்... சோ நீங்க பயப்பட வேண்டாம் எங்கயும் தப்பா போக வாய்ப்பே இல்லை....."
"ஹா ஹா அவன் உன்னையும் விடலயா???".... என்று கேலியாய் சொன்னவருக்கு மகனை நினைத்து எப்போதும் போல பெருமிதம் தான்....
"சார் ஐஜி உங்கள மீட் பண்ண ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்காரு..."
"ம்ம்ம் ஞாபகம் இருக்கு... அவன் பிடி இப்போ நம்ம கைல.... வாலாட்ட மாட்டான்.... இப்போதைக்கு அவன நினைச்சு பயப்பட வேணாம்னு தம்பி சொல்லிருக்கான்.... ரெண்டு நாள்ல டைம் பிக்ஸ் பண்ணு..... கொஞ்சம் வெய்ட் பண்ணட்டும் அப்போதான் கொழுப்பு குறையும்"
"ஓகே சார்...." என்றவன் அதுக்கான வேலைகளை பார்க்க விரைந்தான்....
அவன் சென்றதும் தன் மகனுக்கு அழைத்தவர்
"தம்பி அப்பா பேசுறேன் பா....."
"ஆமா இங்க எல்லாம் நல்லா தான் போகுது...."
"டைம்க்கு எல்லாம் முடிஞ்சிடும்..... அதான் நீ இருக்கியே....
" நம்ம ஹாஸ்பிடல தான் சேர வெச்சாச்சு...."
"ம்ம்ம் வாட்ச் பண்ண ஆள் செட் பண்ணிருக்கேன் பா..."
"நீ எப்போ வர்ற?..."
"ஓகே ஓகே நீ நாட்டுக்கு வந்ததும் அத பாத்துக்கலாம் எங்க போய்ட போகுது......"
"சரி நான் வெச்சிடுறேன்.. "
என்று அந்தப்பக்கம் பேசியவற்றுக்கு பதில் சொன்னவர் கட்சி மீட்டிங் செல்ல தன் அலுவக அறையை விட்டு வெளியேறினார்....
ஜேகே என அழைக்கப்படும் ஜெகதீஸ்வர கிருஷ்ணன்.... ஜெயராம கிருஷ்ணனின் ஒரே மகன்.... அவர் சொத்துக்களின் ஒரே வாரிசு..... உலகிலேயே விரல்விட்டு எண்ண கூடிய சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் அவனும் ஒருவன்.... மணிக்கு லட்சங்களில் சம்பாதிப்பவன்..... இப்போது ஏதோ ஒரு கண்டுபிடிப்புக்காக அமெரிக்கா வரை நீண்டிருக்கிறது அவன் பயணம்...... பணம் மட்டுமல்ல அறிவும் கத்தி போன்றது தான்..... இருக்கும் இடத்தை பொறுத்தது தான் அதன் குணமும்...... ஒன்று இருந்தாலே பயங்கரம் ஆனால் இங்கோ இரண்டின் சங்கமம்....??????
வண்ண நிலவனின் ஜீப் சரியாக ஜேகே ஹாஸ்பிடல் வளாகத்தில் நின்றது.... அதிலிருந்து இறங்கியவன் உள் நுழையும் போதே ஏதோ ஒரு இனம்புறியா உணர்வு அவனுள்.... ஏதோ மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வு..... அவனுக்கே அவனுக்கான சுவாசம் இருப்பதாய் அவன் இதயம் அடித்துக்கொண்டது.....
"என்னடா நிலவா.. என்னாச்சு.... காம் டவுன்....." என்று தனக்கு தானே சொல்லி தன் இதயத்தை நீவிக்கொண்டவாறே உள்நோக்கி சென்றான்....
"சார் பதினெட்டாம் வாட் இந்த பக்கம் தன் போகணும்....." என்ற ராமசாமியின் சொல்லுகினங்க அவர் காட்டிய திசையில் சென்றது அவன் கால்கள்..
"வா நிலவா இப்போ டாக்டர் வர நேரம் தான்..... பார்த்துட்டு டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் என்னன்னு சொல்லுவாங்க...." என்றான் அவன் நண்பன் புகழ்
"ம்ம்ம்.... பேரண்ட்ஸ்???..."
"பில் பே பண்ண போயிருக்காங்க... இப்போ வந்துடுவாங்க..." என்று சொல்லவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.....
"ரொம்ப தேங்க்ஸ் சார்... நீங்க மட்டும் பிடிக்கலனா... என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருக்கும்.... அவளுக்கு ஒன்னுனா எங்களால தாங்கவே முடியாது" என்று அழுதாவேறே பேசினார் அந்த குழந்தையின் தாய்...
"அதெல்லாம் ஒன்னுமில்லமா.... தேங்க்ஸ் எல்லாம் பெரிய வார்த்தை..... ஏதோ என்னால முடிஞ்சது... பாப்பாக்கு இப்போ எப்படி இருக்கு?"
"காயம் பெருசா ஒன்னுமில்ல சார்... ஜஸ்ட் கீறல் விழுந்திருக்கு... பயத்துல தன் பாப்பா மயங்கிட்டா" என்ற குழந்தையின் தந்தைக்கு தலையசைப்பை பதில் அளித்தவன் அவர்கள் குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைவதை பார்த்தவாறே அங்குள்ள இருக்கையில் நெஞ்சை நீவியபடி அமைதியாய் சிறிது நேரம் அமர்ந்தான்...
"என்ன ஆச்சு நிலவா ஏன் இப்படி உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு.... எனிதிங் சீரியஸ்???? இப்படி அமைதியா இருக்க மாட்டியே..." என்றான் அவன் நண்பன் புகழ்...
"நத்திங் மச்சான் ஜஸ்ட் திங்கிங் அவ்வளவுதான்...." என்றவன் நிலைமையை சுமூகமாக்க முயன்று "அப்புறம் உன்ன அப்பா பாக்கணும்னு சொன்னாருடா..." என்றான்
அவனை கொலை வெறியுடன் பார்த்த புகழ் "ஆள விடுடா சாமி..... நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல..... நீ எதுவும் எனக்கு பதில் சொல்லல...." என்றான் பீதியுடன்
"ஹா ஹா ஹா..... அனுபவம் ரொம்ப பலம் போல மச்சான்...."
"மனிசனாடா நீ அன்னைக்கு அப்பாகிட்ட என்ன கோர்த்துவிட்டுட்டு நீ ஜாலியா இருந்துட்ட.... நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்.... சின்ன வயசுல இருந்து உனக்கு பிரண்டா இருக்குறதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் அளவுக்கு அதிகமாவே எனக்கு பண்ணுறடா நீ" என்ற புகழுக்கு இரண்டு நாள் முதல் மாட்டிக்கொண்ட அந்த சம்பவம் கண் முன் விரிந்தது.....
"நிலவா.... நிலவா...." என்று அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்த புகழ் கண்டது ஹாலில் அமர்ந்திருந்த சேதுராமனை தான்
"ஐயையோ அய்யனார் இங்க தான் இருக்காரா??? என்ன பேச போறாரோ தெரியலையே.... நண்பா ஹெல்ப் மீ டா...." என மனதுக்குள்ளே பேசியவாறே முழித்தவனை ஆபத்பாந்தவனாய் காப்பற்றினார் வாசுகி..
"அடடே புகழு...... எவ்வளவு நாளாச்சு உன்ன பாத்து.... ஊர்ல அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா???.... ரெண்டு நாள் முன்ன கூட பைரவிகிட்ட பேசினேனே நீ வர்றத பத்தி அவ சொல்லவே இல்லை...... என்ன நின்னுட்டே இருக்க உக்காரு....." என்று அவனிடம் பேசியவர் இங்க பாருங்க நம்ம புகழ் வந்திருக்கான்...." என்று கணவரிடம் முடித்தார்...
"ம்ம்ம்... வாப்பா உக்காரு.. இதோ வந்துடுறேன்...." என்றவர் எழுந்து உள்ளே சென்றார்
"எப்படி இருக்கீங்கம்மா.... அம்மா அப்பா நல்லா இருக்காங்க.... அவங்களுக்கு தெரியாதுமா நான் வர்றது.... சொல்லி இருந்தா அவங்களும் கூடவே கெளம்பி இருப்பாங்க..... எப்பவும் உங்க புராணம் தான்... அங்க கூட்டிட்டு போய்ட்டாங்கனு டெய்லி அப்பாக்கு அர்ச்சன தான் விழுதுனா பாத்துக்கோங்களேன்..... எங்கம்மா நிலவன காணோம்...."
" வைரவி எப்பவும் அப்படித்தான்... என் மேல ரொம்ப பாசம் அவளுக்கு.... அவன் குளிக்கிறான் வருவான்.... நீ வா சாப்பிடலாம்........"
"இருக்கட்டும்மா அவனும் வரட்டும் சேர்ந்தே சாப்பிடுறோம்...."
"டேய் வாடா நல்லவனே..... வந்துட்டியா.." என்றவாறே அங்கு வந்து சேர்ந்தான் நிலவன்...
" இல்லை இன்னும் வரல நாளைக்கு வரட்டா..... அட போடா டேய்..... அப்பா ஏன் கூப்பிட்டாங்கன்னு சொல்லவே இல்லையே நீ....." என்று வாயடித்த புகழிடம் " ஏன்டா காலைலயே சூடா இருக்க..... சாப்பிட்டியா முதல்ல ????.... அம்மா டிபன் வைங்க...." என்றவாறு கூல் ஆக டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் புகழையும் தன் அருகே அமர்த்தினான்.....
'நீயும் வந்துடட்டும்னு இருந்தேன்.. சாப்பிடலாம்..... என்னமா டிபன் இன்னைக்கு....."
"பூரியும் உருளைக்கிழங்கும் தான்.... உனக்கு பிடிக்குமே" என்றவாறு இருவருக்கும் பரிமாறினார்...
"இப்போவாவது சொல்லேன் டா அப்பா ஏன் கூப்பிட்டாங்கனு....."
"ஹி ஹி ஹி.... அது வேறொன்னுமில்ல மச்சான்.... நான் போலீஸ்ல சேர முக்கிய காரணமே நீ தான்.... நீ தான் என்னோட ரோல் மாடல்..... உன்னாலதான் நான் இந்த முடிவுக்கே வந்தேன்.... புகழ் இல்லாட்டி நான் இதப்பத்தி யோசிச்சிருக்கவே மாட்டேன் அப்படி இப்படினு.... அப்பாகிட்ட உன்ன பத்தி புகழோ புகழ்னு புகழ்ந்தேன்டா புகழு....." என்றவன் சிரிக்காமல் பேசியது அவனுக்கே அதிசயம்....
"அட சண்டாளா.... நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்... இப்படி அய்யனார்கிட்ட கோர்த்து விட்டுட்டியே..... இதுல புகழ் புகழ் னு ரைமிங் வேற.... உன்னால என் பேரே எனக்கு சகிக்கல டா..... நான் ஜாயின் பண்ணப்பவே கிழி கிழினு கிழிச்சாரே உங்கப்பா......" என்றவனுக்கு உணவு தொண்டையில் சீக்கிக்கொண்டாது....
"இட்ஸ் மை டூட்டி மச்சான்..... உன் பெயர் வேற புகழ் உன்ன புகழாம இருக்கலாமா சொல்லு?..... உன் புகழ உலகம் பூரா பரப்புவேன் மச்சான் டிரஸ்ட் மீ...." என்றான் அப்பாவியாய்....
"வாயில நல்லா வந்துடும் மூடிட்டு சாப்புடு.... என்று நண்பனிடம் ஆரம்பித்தவன் "ச்சே உனக்கு நேரமே சரி இல்லடா புகழு.... ட்ரான்ஸர் தந்தாலும் தந்தாங்க இங்கயா தரணும்.... அதுவும் இவன் கூட.... நிம்மதியே இல்லை புகழு உனக்கு.. இதுல இவர நம்பணுமாம்ல...." என தனக்கு தானே முணுமுணுதாவாறு சேதுராமனின் அறையை நோக்கி விரைந்தவன் அவர் காலில் விழுந்தே விட்டான்....
"அப்பா அவன் சொன்னதை நம்பாதீங்கப்பா..... அவன் என்ன புகழ்ந்து சொல்லி இருப்பான்பா.... நான் எதுவுமே பண்ணல..... அதெல்லாம் அவன் முயற்சில கெடச்சதுப்பா.... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இவன் வேலைல சேர போறதே எனக்கு தெரியாதுப்பா....." என வாக்குமூலம் குடுத்தவன் "என்ன சௌண்டையே காணல..... ஒரு வேல நம்ம பெர்பார்மென்ஸ் பார்த்து மெர்சல் ஆகிட்டாரோ....." என்று எண்ணியவாறே நிமிர்ந்து பாக்க அவர் அவனை பார்வையால் எரித்து கொண்டிருந்தார்....
எழுந்து நின்றவன் "என்ன அப்பா மூக்குல காத்து விடுறாரு.... நம்ம ஏதும் தப்பா சொல்லிட்டோமா???? காலைல கூட இப்படி ஓவரா மொறச்சு பாக்கலயே.... அய்யனார் லுக் கொஞ்சம் ஹெவியா அடிக்கிது.... என்னவா இருக்கும்...." என்று எண்ணியவாறே அவரை பார்த்தான்
அதன் பின் நடந்ததெல்லாம் அர்ச்சனைகளின் அணிவகுப்பு தான்..... சில மணிநேரம் தொடர்ந்த அர்ச்சனைகள் எதுக்கென்றே புரியாமல் அப்பாவியாய் நின்றிருந்தான் புகழ்.....
"அவனையும் திருத்த முடியாது.... உன்னையும் திருத்த முடியாது.... உன் அப்பாகிட்ட பேசிக்கிறேன்...." என்று கோபமாய் சொன்னவர் வெளியே சென்றுவிட்டார்...
என்னத்துக்கு அடிக்கிறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கடா மொமெண்ட் தான் புகழுக்கு.... அவர் சென்றதையும் அறியாமல் நின்றிருந்தவனை கலைத்தது நிலவனின் சிரிப்பு......
"ஹா ஹா....ஹாஹா... முடியல டா மச்சான்.... ஆடு தானா சிக்கி பாத்திருக்கியா????..... நான் சொன்ன எல்லாத்தையும் அப்படியே நம்புறியே யாருடா மச்சான் நீ????... சும்மாவே அந்த மனிசன் உச்சில இருக்காரு நீ வேற போய் சொரிஞ்சு விட்டுட்டியே...."
"என்னடா சொல்லுற..." என்று அதிர்ச்சியாய் முழித்தவனிடம்
"சொல்லுறாங்க சொரக்காக்கு உப்பில்லனு... சும்மா ஒரு என்டேர்டைன்மெண்ட்க்கு உன்கிட்ட அடிச்சு விட்டேன்..... ஹாஹாஹா.... நீ பாட்டுக்கு நான் தான் ஆடுன்னு அவர் முன்ன போய் நின்னா விடுவாரா???? அதான் பிரிச்சு மெஞ்சிட்டாரு.... காத கொஞ்சம் காட்டு பிளட் வருதான்னு பாப்போம்..... " என்றவனின் பேச்சில் உண்மையிலேயே காதில் கை வைத்து பார்த்திருந்தான் புகழ்.... மேலும் நிலவனே தொடர்ந்தான்....
"என்மேல் காட்டுன கோபம் கொஞ்சம் மிச்சம் இருந்திச்சா.... அதான் என் நண்பன் உனக்கு அத வாங்கி தரலாமேனு ஒரு நல்ல எண்ணத்தோட போன போட்டேன்..... நீயும் சீக்கிட்ட..... இப்போதான் மனசே நெறைஞ்சிருக்கு..... இருந்தாலும் நீ கால்ல விழுந்தது தான் மச்சான் ஹைலைட்.... ஹாஹாஹா..."
"அட கொலகார பாவி.... இன்னைக்கு உன்ன என்ன செய்றேன் பாருடா...." என்றவாறு அவன் மேல் பாய்ந்தான்... அதற்கு பின் நடந்ததெல்லாம் அமளி துமளி தான்... வாசுகி வந்து பிரிக்கும் வரை தொடர்ந்தது அவர்களின் கலாட்டா....
அந்த யோசனையில் இருந்து நிகழ்க்காலத்துக்கு வந்த புகழ்.... இப்போதும் நிலவனை முறைத்துக்கொண்டுதான் இருந்தான்.....
"விட்றா மச்சான் விட்றா.... மலையிரங்கு... அப்பறம் உன் அப்பாகிட்ட தனி பிட் போடவேண்டி இருக்கும் பாத்துக்கோ???..."
"ஐயா ராசா.... ஆள விடு சாமி.... அய்யனார் என்ன பேசினாரோ தெரியல இப்போவரை அப்பா எதுக்குனே தெரியாம கத்துறாரு... நீ மறுபடியும் தொடங்கிடாத.... அப்பறம் உசுருக்கு உத்தரவாதம் இல்லை... நான் இன்னும் கமிட் கூட ஆகல அதுவரைக்கும் உசுர விட்டு வையி..."
"அந்த பயம் இருக்கட்டும்...." என்று விரல் நீட்டி எச்சரித்தவனிடம் " நீ ஓகே தான மச்சான்..... ஒன்னும் பிரச்சனை இல்லைல.... என்ன வேணும்னாலும் சொல்லுடா பாத்துக்கலாம் மனச குழப்பிக்காத...." என்றவனுக்கு சற்று முன் நிலவனின் முகம் காட்டிய வேதனையில் மனம் கசங்க தான் செய்தது.... அவனை இலகுவாக்கவே இவ்வளவு நேரம் பேசியதும் கூட..... அவனும் அறிவானே இந்த மூன்று வருடங்களாய் அவன் படும் பாடு....
"ஒன்னுமில்ல மச்சான்.... நீ பிரீ ஆ விடு.... என்னமும்னா உனக்கிட்ட தான வருவேன்...." என்றவனுக்கு புகழின் குரலில் இருந்த அக்கறை புரிய தான் செய்தது.. தன் நட்பை நினைத்து எப்போதும் போல இன்றும் பெருமிதம் தான்....
"டென் மினிட்ஸ் ஆகிடிச்சு இன்னுமா டாக்டர் வரல.... போய் கேட்டுட்டு வரேன் இரு" என்றவாறு சென்றவன் சிறிது நேரத்தில் வந்தான்
"டேய் அந்த லேடி டாக்டர் இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகுமாம்... போன் பண்ணி கேட்டிருக்காங்க போல.... ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொன்னாங்களாம்...."
"யாரு அந்த இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்.... வேலைல சின்சியரா இருக்குறதில்லையா???? இன்போர்ம் கூட பண்ணாம அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேல அவளுக்கு...." என்று பேசிக்கொண்டே போனவன் தனக்கு பின் அவள் நிற்பது... தன் நண்பன் அதற்கு குறிப்பு காட்டியது எதையும் அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான் நிலவன்....
நண்பன் பேச்சில் வழமையாக தெரியாதவர்களை பேசும்போது இருக்கும் மரியாதை இன்று காததூரம் சென்று இருந்ததால் புகழ் தான் கையை பிசைந்து கொண்டு அவளை பார்த்து முழித்து கொண்டிருந்தான்
"என்னடா பேய் முழி முழிக்கிற..... பேய் ஏதாச்சும் பாத்துட்டியா என்ன? என்றவாறு திரும்பியவன் கண்டது கை கட்டி தன் முன் கோபமாய் நிற்கும் அதிரலை தான்..... அந்த தோற்றம் ஆயிரம் பட்டாம்பூச்சி அவனுள்..... விபரிக்க முடியாத ஏதோ சுழலில் அவனை இழுப்பது போல் உணர்வு... மூச்சு விட முடியாமல் போராடும் அவன் நெஞ்சு.... அந்த நொடி நேரத்தில் அவன் முகம் காட்டிய பாவனையோ ஏராளம்.... சட்டென்று தன்னை சுதாகரித்துக்கொண்டவன் அவளை வெற்று பார்வை பார்த்தான்....
ஆனால் அவளிடமோ ஒரு கோபபார்வை.... கூடவே ஒரு ஆராய்ச்சி பார்வை.... நொடி பொழுதில் தோன்றி மறைந்த பரிச்சய பார்வை...... அதனை அவன் கண்டுகொண்டானோ என சிறு சுருக்கம் கூட அவள் விழியில் தோன்றியது.... இது எதுவுமே அவன் பார்வையில் இருந்து தப்பவே இல்லை..... அவை எல்லாம் மலைச்சாறல் போல் அவன் நெஞ்சில் குளிர்ச்சியாய்... இருந்தும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை அவன்...... அவளோ எதுவுமே பேசாமல் குழந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.....
"டேய் என்னடா இப்படி பேசிட்ட.... அவங்க என்ன நினைச்சிருப்பாங்க....." என்ற நண்பனின் குரல் அவனுக்கு கேக்கவே இல்லை மூச்சு முட்டுவதாய் ஒரு உணர்வு அவனுக்கு அங்கிருக்கவே முடியவில்லை..... "இதுக்கு தான் அப்படி துடிச்சியா நீ" என்று தன் இதயத்திடம் கேட்டு கொண்டவாறே..
"நான் கொஞ்சம் வெளில இருக்கேன்.... என்னனு பாத்துட்டு கூப்பிடுடா.... என்று சென்றவனின் செயல் எதிலிருந்தோ தப்பிக்க ஓடுவதை போல் இருந்தது....
"இவள் எப்படி இங்க????? ரொம்ப மெல்லிச்சிட்டாளே.... சாப்பிடுறது இல்லையோ?????..... கண்ணுல கூட கொஞ்சம் கருவளையம் வந்துடிச்சு.... ராட்சசிக்கு நல்லா முறைக்க மட்டும் தெரியும்...." என்று எண்ணியவனுக்கு எதிராய் அவன் மனசாட்சி போர் கோடி தூக்கியது...." அவளுக்கு நல்லா வேணும்.... இருக்குற கொழுப்புக்கு..... " என்ற மனசாட்சியை அடக்கியவன்
"என்ன நடந்தாலும் அந்த பார்வையும் அழகும் குறையவே குறையாது இவளுக்கு..." என்று அவள் எண்ணத்தில் மூழ்கி இருந்தவனை மனசாட்சி காரி துப்பியதை கூட கவனிக்காமல் கண் மூடி சற்று முன் பார்த்த அவள் தோற்றத்தில் லயித்திருந்தவன் புகழின் அழைப்பில் உலகத்துக்கு மீண்டு வந்தான்....
"தப்பு பண்ணிட்ட நிலவா.... அவங்க கார்டியோலோஜிஸ்டாம் டா..... நைட் ஏதோ எமஜென்சி ஹார்ட் சர்ஜெரி பண்ணினாங்கலாம்.... திடீர்னு வந்ததால வேற டாக்டர்ஸ் யாரும் அவைலபில் இல்லயாம்னு இவங்க டூட்டி டைம் முடிஞ்சும் அவசரத்துக்கு அந்த கேஸ் அட்டென்ட் பண்ணி இருக்காங்க... நைட் லேட்டா தான் போயிருக்காங்க.... அதான் இப்போ லேட்....."
"இத அவங்களே சொன்னாங்களா???? என்றவனின் குரலில் நக்கல் வழிந்தது.... கூடவே "மூன் எனக்கு கார்டியோலாஜிஸ்டா பிராக்டிஸ் பண்ண தான் ஆச...." என்ற குரல் அவன் காதில் ஒலித்தது.....
"இல்லையே அவங்க சொல்லல.... அங்க இருந்த நர்ஸ் ஒத்தவங்க சொன்னாங்க... ஏன்???"
"இல்லை சும்மா தான் கேட்டேன்... வா குழந்தையை பாத்துட்டு போவோம்...."
"அப்போ சாரி கேக்கலையா..."
"சாரியா எதுக்கு..."
"டேய் என்னடா... தப்பு பண்ணதுக்கு சாரி கேக்க தான வேணும்.... ஒழுங்கு மரியாதையா போய் சாரி கேளு..."
"தப்பா.... யாருடா மச்சான் தப்பு பண்ணினது.... நீ பண்ணியா என்ன??.. "
"டேய் படுத்தாததாடா.... வா..."
"ஓகே ஓகே என்ன இப்போ ஒனக்கு நான் சாரி கேக்கணும் அவ்வளவு தான... சாரி போதுமா?.."
"எனக்கெதுக்குடா சாரி..."
"அப்போ வேணாமா... சரி ஓகே போவோம்..." என்றவாறு முன் நடந்தவனின் இதழ்கலுக்குள் அடக்கப்பட்டிருந்த புன்னகை தாராளமாக விரிந்து கொண்டது....
Last edited: