அத்தியாயம்: 25
யதுநந்தனை மூர் அழைத்து கொண்டு போன இடம் ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு… அங்கே குடித்து விட்டு வியாட்டின் கார்ட்ஸ் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர் அவர்கள் இங்கே குடிக்க வர வேண்டிய அவசியம் இல்லை அதற்க்கு தனியாக பார் இருந்தது… அவன் அதிகாரம் இவர்களை குடும்பம் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் இப்படி நடக்க வைத்தது.
இவன் போக கைகளை பிசைந்து கொண்டு இருந்த மேனேஜர் கேப்டன் என ஓடி வந்தவர்.
“கேப்டன் எனக்கு இப்போ உங்க ஹெல்ப் தேவை இவங்க நான் எத்தனை தடவை எடுத்து சொல்லியும் இப்படி நடந்து கொள்கிறாங்க…அது மட்டுமல்ல இவங்க பலசாலி நான் அப்படியா தனியாக பார் இருக்கு அங்கே போங்க என சொன்னேன் இங்கே தான் நல்லா கடல் காற்று வருகிறது சீனரி தெரிகிறது என நக்கல் பண்ணி கொண்டு இருக்கிறாங்க…
இது பேமிலி சாப்பிடும் இடம் இங்கே பாதி பேர் உங்க ஷிப்பில் டிராவல் பண்ணி வந்த பேமிலி. நீங்க தான் இவங்களை விரட்ட ஹெல்ப் பண்ண வேணும்” என்றார். மேனேஜர்
“உங்களுக்கு எங்களை பார்த்தால் எப்படி இருக்கு மேனேஜர் சார் அடியாட்கள் போலவா…நாங்க மரைன் இன்ஜினியர் படித்து விட்டு ஷீப்பில் கேப்டன், கோ கேப்டனாக வேலை பார்க்கும் ஆளுங்க.
நீங்க ஏதோ உங்க அடியாள் போல நினைத்து விட்டீங்க இதை சொல்ல வேண்டியது உங்க ஜி.எம் கிட்ட இல்லை என்றால் உங்க பெரும் மதிப்பிற்குரிய மிஸ்டர் துவாரகேஷிடம்… அவர் தானே இவங்க தலைவனை இங்கே வரவழைத்தது அவர் கிட்ட போய் சொல்லுங்க” என்றான் . அருண்
“கேப்டன் என்ன உங்க கோ கேப்டன் இப்படி சொல்கிறார் டைம் பார்த்து பழி வாங்கும் நேரமா இது… இதில் பாதி பேர் உங்க ஷிப்பில் டிராவல் பண்ணி வந்த ஆளுங்க என் கிட்ட அடியாட்கள் இருந்தால் நான் எதற்காக உங்க கிட்ட உதவி கேட்க வேணும்…இது ஹோட்டல் அதுவும் அமைதியான இந்த இடத்தில் இப்படி இது வரைக்கும் ஒரு சம்பவம் நடந்தது இல்லை
அதனால் வேலையாட்களை தவிர வேற ஆளுங்க எங்க கிட்ட இல்லை ஜி.எம் சாருக்கு இன்பார்ம் பண்ணி விட்டேன் அவர் வந்து கொண்டு இருப்பதாக சொன்னார்”… என சொல்லி கொண்டு இருக்கும் போது ஒரு பெண் பெரிதாக அழும் சத்தம் கேட்டது.
யது நந்தன் , அருண், மேனேஜர் ஓடி போய் பார்க்க அங்கே சாப்பிட வந்த அனைவருமே பயந்து போய் இருக்க… ஒரு பெண் ஒருவனிடம் ஏதோ கெஞ்சி கொண்டு இருப்பது தெரிய அவர்கள் சற்று உள்ளே போய் பார்க்க வியாட்டின் கார்ட்ஸ் ஒருவன் ஒரு இரண்டு வயது குழந்தையை டேபிளில் வைத்து… அதன் பால் பாட்டிலை பிடுங்கி வைத்து கொண்டு தங்கள் கையில் பியர் பாட்டிலை அதன் வாய் அருகே கொண்டு போவதும் வருவதுமாக விளையாட்டு காட்ட… அது அழ அதன் தாய் கெஞ்சி கொண்டு இருக்க தந்தையை தேட அவன் தரையில் இவர்கள் அடித்த அடியில் மயக்கமாக கிடந்தான்.
“இங்கே என்ன நடக்கிறது” என சத்தம் போட்டு கொண்டே யது நந்தன் ஓடி வர அவன் பின்னால் அருண் வந்தான்…மேனேஜர் கொஞ்சம் பயந்து தள்ளி நின்றார் கார்ட்ஸ் யாரு என பார்க்க யது நந்தனை காண அதில் ஒருவன் ஆங்கிலத்தில்
“ யாரு டா இவன் ஓ ஹீரோ சாரா ஹலோ ஹீரோ நாங்க யாரு தெரியுமா வியாட் டைட்டஸ் ஆளுங்க… எங்க பாஸ் பெயரை கேட்டாலே டாண் எல்லாம் உச்சா போய் விடுவாங்க அதனால் நீ என்ன செய்கிற உன் ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு ஓடி போய் விடு…எங்க பாஸ்க்கு நாளை கல்யாணம் அதை நாங்க இங்கே செலபிரேட் பண்ணுகிறோம் இந்த பேபி மட்டும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறது பேபி ஆ வாயை திற என… அழும் குழந்தைக்கு அவன் பியர் பாட்டிலை வாயில் வைக்க போக யது நந்தன் சட்டென அவன் கையை அழுத்தமாக பற்ற சிரித்து கொண்டு இருந்த கார்ட்ஸ் முகம் மாறியது.
இன்னொருவன் யது நந்தன் அருகில் வந்து அவன் தோளை பற்றி “டேய் யாருடா நீ” என கேட்டான்.
“இவன் தான் இந்த ஷிப்போட கேப்டன் யது நந்தன் நான் கோ கேப்டன் அருண் போதுமா உனக்கு விளக்கம் “என்றான். அருண்
“ஓ கேப்டன் யது நந்தன் நீ தானா இவங்க சொன்ன ஆள் நீ தானா… நாங்களும் ஏதோ பெரிய பெரிய விவிஐபி என நினைத்தோம்” என பேசி சிரிக்க.
“குழந்தையை கொடு” என யது கேட்க குழந்தையை அருகில் நின்றவன் சிரித்தவாறே … அதை எடுத்து தூக்கி மேலே போட்டு பிடிக்க தொடங்க அது சத்தமாக அழ தொடங்கியது. அதன் தாய்
“கேப்டன் பிளீஸ் சேவ் மீ மை பேபி” என சத்தமாக அழ யது விட்டான் உதை அவன் வயிற்றில் அவன் ஆ என அலறி கொண்டு வயிற்றை பிடித்தவன்… குழந்தையை கீழே விட அது தரையை தொட முன்னே சட்டென யது நந்தன் பாய்ந்து குழந்தையை பிடித்தவன் அதை அணைத்து கொண்டான்.
அப்போது தான் அங்கே இருந்த அனைவருக்குமே மூச்சு வந்தது இத்தனை நேரம் மூச்சை பிடித்து கொண்டு இருந்தவர்கள் இப்போ நிம்மதியாக உணர்ந்தார்கள்… குழந்தையை பார்க்க அது அழுகை நிலை மாறி மெல்ல சிரிக்க யது மெல்ல புன்னகை புரிந்தவன்… அதன் தாயை பார்க்க அவள் ஓடி வர குழந்தையை கொடுத்தவன் தரையில் மயங்கி இருந்த குழந்தையின் தந்தையை… மெதுவாக தூக்கி அங்கே இருந்த சேரில் இருக்க வைத்தவன் அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை ஓப்பன் பண்ணி அவன் முகத்தில் தெளித்தவன் திரும்பினான்.
“நீ யார் மேலே கை வைத்து இருக்க தெரியுமா வியாட் ஆளுங்க மேலே… இன்று உனக்கு நாங்க சமாதி கட்டாமல் போக மாட்டோம் டேய் வாங்க டா” என… மற்ற கார்ட்ஸை ஒருவன் அழைத்தவன் அவன் கூடவே நான்கு பேர் யது நந்தனை நெருங்க…
“யது நான் போய் அந்தமான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணவா… அதற்க்கு முன் நம்ம கேணலை அழைக்கலாமா” என மெல்ல அவன் காதுக்கு அருகே கேட்டான் . அருண்
“தேவையில்லை நான் இன்று இவங்களுக்கு மட்டுமல்ல… அந்த வியாட்டுக்கும் சேர்த்து பாடம் சொல்லி கொடுக்க போகிறேன்… நீ இவங்களை அழைத்து கொண்டு போ என்றான் யது… முதலில் தயங்கிய அருணுக்கு யது நந்தன் பற்றி தெரியும் என்பதால் அவன் அங்கே இருந்த பெண்களை சிறுவர்களை அழைத்து போனான்..
அவன் போன அடுத்த செக்கன் வியாட் கார்ட் ஒருவன் யது மேலே பாய… அவன் சட்டென விலக அவன் தரையில் விழ மூக்கு தான் உடைந்தது …அது போல அடுத்தவன் யது முகத்தில் குத்த வர யது அவன் கையை பிடித்து முறுக்க அவன் வலியில் சத்தம் போட்டான்.
பின்னால் இருந்து யது முதுகில் ஒருவன் காலால் ஏத்தி தள்ள யது தடுமாறியவன்… சட்டென தன்னை சமாளித்தவன் திரும்பியவன் தன் முன்னே நின்றவன் வயிற்றில் உதைக்க அவன் அம்மா என சத்தம் போட்டு கொண்டு வயிற்றை பிடிக்க…. இனி தனியாக இவனை தாக்கினால் சரி வராது என நினைத்தவர்கள் ஒன்றாக யது நந்தனை ரவுண்ட் கட்டினார்கள்..
யது நந்தன் தன் கை சர்ட் பட்டனை கழட்டியவன் அதை மடித்து விட்டு அவர்களை எதிர் கொள்ள தயார் ஆனான்… அவர்கள் ஒன்றாக அவன் மேலே பாய அத்தனை பேரையுமே பிளந்து கட்டினான் அங்கே நின்ற ஆண்கள் சந்தோஷமாக விசில் அடிக்க கூடவே சில பெண்களும் நின்று இருந்தனர் அவர்களும் கை தட்டினார்கள்.
“ஏய் இங்கே பாருங்க உங்க ஆட்டத்தை எல்லாம் உங்க நாட்டில் வைத்து கொள்ள வேணும்…இங்கே கூடாது இது எங்க நாடு இந்திய தேசம் இது பெண்களையும், குழந்தைகளையும் மதிக்கும் நாடு புரிகிறதா… இன்னும் ஒரு தடவை உங்களை இந்த ரெஸ்டாரன்ட் பக்கம் பார்த்தேன் அடுத்த தடவை உங்க பாஸ் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க என்றான். யது நந்தன்
“ரியலி இவங்க உன் எச்சரிக்கையை மீறி இங்கே இருந்தால் என்னை பார்க்க இருக்க மாட்டாங்க… என்பதை விட நீ இருக்க விட மாட்ட என்பது தான் உண்மை என கேட்டு கொண்டு வியாட் டைட்டஸ் வந்தான்... அவன் வரவை கண்ட அவன் கார்ட்ஸ் வலியோடு எழுந்து அவனுக்கு தலை வணங்க அங்கே இருந்த மற்றவர்கள் இந்த அரக்கன் இங்கே எதற்காக வந்தான் என யோசித்தார்கள்.
“ஈகிள் ஷிப் கேப்டன் யது நந்தன் உன்னை உனக்கு யாருக்குமே தலை வணங்குவது பிடிக்காதாமே கேள்விபட்டேன்…அதை விட உனக்கு வளைத்து கொடுப்பதும் உன் அகராதியில் இல்லையாம் உன்னை பற்றி கேள்விபட்டது உண்மை தான் போல இருக்கு…
பட் நான் யார் தெரியுமா நீயும் கேள்விபட்டு இருப்ப வியாட் டைட்டஸ் நான் நினைத்தால் இந்த உலகத்தை விலைக்கு வாங்க முடியும்… என் ஆளுங்க மேலே பார்வை வைக்கவே எவனும் துணிந்தது இல்லை நீ கை வைத்து இருக்க” என்றான். வியாட்
“ஐ நோ மிஸ்டர் வியாட் டைட்டஸ் உங்களை தெரியாதவங்க யார் இருக்க முடியும் யு நோ ஒன் திங் இலங்கை வேந்தன் ராவணையை கூட தெரியாத யாருமே இருந்தது இல்லை…
நான் வளைத்து கொடுக்க நாணல் அல்ல ஆலமரம் ஐ நோ காற்று ஐ மீன் சூறாவளி காற்று ஆலமரத்தை வேரோடு சாய்க்கும்… பட் என் விழுதுகள் உயிர் வாழும் நான் இல்லை என்றால் கூட தர்மம், சத்தியம் உயிர் வாழும் எனக்கு தப்பு செய்தால் கடவுள் என்றால் கூட தட்டி கேட்பேன்.. கடவுளுக்கே அப்படி என்றால் வியாட் டைட்டஸ் கார்ட்ஸ் எனக்கு வெறும் தூசு என்றான் யது நந்தன்…அவன் சொல்லி முடிக்க வியாட் முகம் பயங்கரமாக மாறியது காரணம் ராவணனுக்கு சமமாக தன்னை சொன்னான் அதற்கான காரணம் அவன் அரக்கன் அவனை தெரியாதவங்க இருக்க முடியுமா…. அது போல தான் நீயும் ஒரு அரக்கன் என சொல்லாமல் சொல்லி விட்டான் அங்கே இருந்தவர்களுக்கு அது புரிய அவர்கள் யோசிக்கும் போது ஏதோ சத்தம் கேட்டது… பார்த்தால் வியாட் கார்ட்ஸ் அனைவருமே கீழே விழ அதிர்ச்சியாக அனைவருமே வியாட்டை பார்க்க அவன் கையில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கி இருந்தது அதில் இருந்த குண்டு தான் அவர்கள் உயிரை வாங்கி இருந்தது.
நிலவு வரும்…