அத்தியாயம்:20
சந்தனாவை டாக்டர் செக் பண்ணி விட்டு அருகே நின்ற துவாரகேஷிடம். டாக்டர்
“சார் மேடம் தண்ணீரில் ரொம்ப நேரம் இருந்ததால் அவங்களால் சுவாசிக்க முடியாமல் போய் விட்டது …இப்போ ஊசி போட்டு இருக்கிறேன் நாளை காலையில் ஓகே ஆகி விடுவாங்க… கொஞ்சம் வீக்காக இருக்கிறாங்க நல்ல சத்தான ஆகாரமாக கொடுங்க சரியாகி விடும்” என சொல்லி விட்டு போக. துவாரகேஷ்
“ அபிராமி இங்கே பாரு இனி உன் பையன் என் பெமிர்ஷன் இல்லாமல் சந்தனாவை வெளியே அழைத்து போக கூடாது…அடுத்து அந்த யது நந்தன் கூட இனி இவனை நான் பார்க்க கூடாது நான் சொன்னதை மீறி நடந்தான் என்றால் எனக்கு கொள்ளி வைக்க கூட புள்ளை தேவையில்லை என நினைத்து விடுவேன்…புரிகிறதா இப்போ இவனை தூங்க போக சொல்லு நீ சந்தனா கூட இரு நாளை எனக்கு நாளை ஒரு முக்கியமான நாள் என் லட்சியம் நிறைவேற போகும் நாள்… அதில் ஏதும் தப்பு நடந்தது நான் மனுஷனாக இருக்க மாட்டேன்” என சொல்லி விட்டு நித்திலனை முறைத்து விட்டு போக. நித்திலன்
“ச்சே என்ன நன்றி கெட்ட குணம் யது அண்ணா தன் உயிரை பணயம் வைத்து அக்காவை காப்பாற்றி இருக்கிறார் ஆனால் அப்பா இப்படி பேசி விட்டு போகிறார் …அப்பா சொன்னாலும் நான் யது அண்ணா கூட பேசுவேன் இதை யாராலும் தடுக்க முடியாது அம்மா அப்பா நாளைக்கு ஏதோ லட்சியம் நிறைவேற போவதாக சொன்னார் அது என்ன மா” என கேட்க. அபிராமி
“ நானும் உன்னை போல தான் நித்திலா விபரம் ஏதும் புரியாத நிலையில் நிற்கிறேன் பார்க்கலாம் பா… சரி நீ போய் தூங்கு நான் அக்கா கூட தூங்குகிறேன் இன்டர்கம்மில் பால் ஆடர் பண்ணி இருக்கிறேன் சாப்பிட்டு விட்டு தூங்கு” என சொல்ல… நித்திலன் சரி என சொல்லி விட்டு சந்தனா அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் குட் நைட் அக்கா என சொல்லி விட்டு போகும் மகனை அபிராமி கனிவாக பார்த்தார்…
மறு நாள் காலையில் அந்தமான் தீவில் ஹெலிகாப்டரின் சத்தம் கேட்டது பொதுவாக கோடீஸ்வர ஆளுங்க ஹொலியில் வருவது உண்டு…இது சகஜம் என்பதால் யாருமே பெரிதாக எடுக்காமல் தங்கள் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர் ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்ட்டியில் ஜெகதீஷ் அவர் மனைவி சுசீலா அது போல இன்னும் சிலர் காலை காபி டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்…அப்போது யது நந்தன் ,அருண் காலை காபி,டிபன் சாப்பிட வர இவர்களை கண்ட ஜெகதீஷ் கேப்டன் என அழைக்க யது திரும்பி பார்த்தவன் முகம் மலர… ஜெகதீஷ் வர சொல்லி சைகை செய்ய ஒரு கணம் தயங்கியவன் பிறகு அருணை அழைத்து கொண்டு அவர் அருகே போனான். யது
“குட் மார்னிங் கேணல் அண்ட் மிஸஸ் ஜெகதீஷ்” என சொல்ல. சுசீலா சிரித்தவர்
“குட் மார்னிங் கேப்டன் சார் இந்த மிஸஸ் ஜெகதீஷ் என்பது வேணாமே ஆன்ட்டி என்று அழை அருண் நீயும் தான்…நேற்று இந்த ஹோட்டல் பூராகவும் உன்னை பற்றி தான் பேச்சு ரொம்ப நல்ல காரியம் செய்து இருக்க பா பாவம் சந்தனா குட்டி ரொம்ப பயந்தவள் அபிராமி , நித்து பையன் அவள் மேலே உயிரே வைத்து இருக்கிறாங்க…இந்த காலத்துல உன்னை போல ஒருத்தனை பார்க்க முடியாது என சொல்லி கொண்டு இருக்கும் போது ஹோட்டல் பரபரப்பாக இருந்து அங்கு இருப்பவர்கள் புரியாமல் பார்க்க. ஜெகதீஷ்
“வாட்ஸ் கோயிங் ஆன் யது ஏதும் சுனாமி, இல்ல கடல் சீற்றம் வர போகிறதா” என கேட்க. யது
“நோ கேணல் எங்களுக்கு அப்படி எந்த ரெட் அலர்ட்டும் வரவில்லை இது வேற ஏதோ போல இருக்கிறது…வெயிட்” என சொன்னவன்.. அங்கே கொஞ்சம் பயந்து வெளியே பார்த்து கொண்டு இருந்த வெயிட்டர் ஒருவனை அழைத்தான் அவன் கேப்டன் என வர. யது
“இங்கே என்ன நடக்கிறது ஏதும் கடல் கொந்தளிப்பா” என கேட்க. அவன்
“ அது கூட பரவாயில்ல கேப்டன் இது அதை விட அதி பயங்கரம் இனி இந்த அந்தமான் தீவு கை மாற போவது உறுதி ஏன் தெரியுமா…வந்தது என சொல்ல வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பிறகு மெதுவாக வம்பர் வெளவால் ( Vampire bat) வந்து இருக்கிறார்” என சொல்ல வாட் என யது, கேணல் சொல்ல. வெயிட்டர்
“ஆமாம் சார் அது தான் இங்கே உள்ள ஆளுங்க மட்டுமல்ல உங்க கப்பலில் வந்த ஆளுங்க கூட பயந்து போய் இருக்கிறாங்க…இனி என்ன நடக்குமோ என்று” என. ஜெகதீஷ்
“யு மீன் வியாட் டைட்டஸ் அவனுக்கு இங்கே என்ன வேலை அவனை யார் இங்கே வரவழைத்து இருப்பாங்க…அந்தமான் போல உள்ள சின்ன நாட்டில் அவன் கால் பதிக்க மாட்டானே” என சொல்ல. அருண்
“யது இவன் யாரு டா நீயும் கேணலும் இப்படி பெரிதாக பேசும் அளவுக்கு” என கேட்க .யது நந்தன்
“ ஓ உனக்கு தெரியாது இல்லையா இவனை ரத்தம் குடிக்கும் வௌவால் என வியாபார உலகில் சொல்வாங்க…இவன் நினைத்தால் அடுத்த செக்கன் ஒரு நாட்டை வாங்கும் அளவுக்கு பண பலம் படைத்தவன்…அவன் நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் போவான் …உயிர்கள் இவனுக்கு விளையாட்டு பொம்மைகள் இப்போ வரைக்கும் இவனுக்கு குடும்பம் இல்லை இவனை நம்பி எந்த பெண்ணு கழுத்தை நீட்டுவாள்…பெண்கள் போக பொருளாக நினைப்பவனுக்கு இவன் ராவணனை விட பல மடங்கு கொடூரன்” என சொல்ல. ஜெகதீஷ்
“ இன்னும் ஒன்றை சொல்ல மறந்து விட்டாய் யது அண்டர் கிராவுட் தாதா யஸ் இல்லீகல் பிசினஸ் செய்வதில் மன்னன்…பட் நோ புரூப்” என. சுசீலா
“என்னங்க அப்படி பட்ட ஆளு இப்போ இங்கே ஏன் வர வேணும் எனக்கு பயமாக இருக்குங்க” என சொல்ல. ஜெகதீஷ்
“என்ன சுசீ பேசுகிற நீ யாரு கேணல் ஜெகதீஷ் வொய்ப் இந்த நாட்டை காத்த ராணுவ வீரன் நான்…எல்லையில் இருக்கும் எதிரிகளை வேட்டையாடிய எனக்கு இவன் பெரிதா விடு மா பார்த்து கொள்ளலாம் முதலில் இவனை இங்கே வர வைத்தது யாரு…இவன் அழைப்பு வைத்தால் கூட வர மாட்டான் இப்போ இங்கே வந்து இருக்கிறான் என்றால் சம்திங் ராங் முக்கிய ஏதோ விஷயம் இருக்க வேணும் வெயிட் அண்ட் சீ” என்றார்.
சந்தனா கண் விழிக்கும் போது அவள் தான் உயிரோடு இருக்கிறாளா என சந்தேகமாக இருந்தது …அவளை கடல் வாரி சுருட்டியது தான் தெரியும் பிறகு ஏதுவுமோ நினைவு இல்லை இருந்தும் அவளுக்கு யாரோ தன்னை தூக்கிய உணர்வு…சந்தனா மெல்ல எழ பார்க்க அவளால் முடியவில்லை அப்போது பாப்பா பொறு என. அபிராமி குரல் கேட்டது..
மகள் எழுந்தவுடனே அவளுக்கு பசிக்கும் என்பதால் ஆடர் பண்ணிய காபி, டிபனை ரூம் சர்வீஸ் கொண்டு வர சொல்லி அதை வாங்கி வைத்து விட்டு வர தான்…சந்தனா எழ முயற்ச்சி செய்ததை கண்டு விட்டு பாப்பா என அழைத்து கொண்டு ஓடி வந்தவர் இரு பாப்பா என்றவர் அவளை மெதுவாக அணைத்து பிடித்தவர்… அவளை கட்டிலில் சாய்வாக இருக்க வைத்தவர் அவளை கண்கள் கலங்க பார்த்து விட்டு அவள் முகத்தை தடவி நெற்றியில் முத்தம் வைத்தவர். அபிராமி
“நான் ரொம்ப பயந்து போய் விட்டேன் பாப்பா என் கையில் தந்த பொக்கிஷத்தை இழந்து விட்டேன் என்று என் உயிரே போய் விட்டது…நல்ல காலம் அந்த தம்பி கடவுள் போல வந்து உன்னை காப்பாற்றி விட்டது ஏன் பாப்பா அம்மா கிட்ட சொல்லாமல் போன…உன் தம்பி சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்” என சொல்ல நான் ஒன்றும் சின்ன பையன் இல்லை என சொல்லி கொண்டு நித்திலன் வந்தான்.
வந்தவன் நேராக சந்தனா அருகில் போய் அவளை அக்கா என கட்டி கொண்டான் பார்த்து தம்பி என அபிராமி சொல்ல. நித்திலன்
“பார்த்து தான் மா அக்காவை அணைத்தேன் எப்படி அக்கா இருக்கு உடம்பு வலி காயம் இன்னும் வலிக்கிறதா…நான் ரொம்ப பயந்து விட்டேன் உன்னை காணவில்லை என்றவுடன் அழுகை அழுகையாக வந்தது…உன்னை கரையில் தானே நிற்க சொன்னேன் பிறகு நீ எதற்காக கடல் அருகே போன யது அண்ணா மட்டும் இல்லை என்றால் உன்னை பார்த்து இருக்க முடியாது” என… சந்தனா யாரு என வரண்டு இருந்த தன் நாவை ஈரபடுத்தி கொண்டு கேட்க. நித்திலன்
“ அது தான் கேப்டன் உன்னை காணவில்லை இனி தேடி பயன் இல்லை என டைவர்ஸ்( சுழியோடிகள்) சொல்ல நான் ரொம்ப அழுதேன் எனக்கு அக்கா வேணும் …நான் போய் தேட போகிறேன் என சொல்ல யது அண்ணா தான் என்னை திட்டி விட்டு உன்னை காப்பாற்றி அழைத்து வந்தார்… அதற்க்கு அப்பா அவருக்கு நல்ல கிப்ட் கொடுத்து விட்டார் அவரை பாராட்ட வேணாம் அடிக்காமல் இருந்து இருக்கலாம் இல்லையா என சொல்ல சந்தனா முகம் வாட. அபிராமி
“நித்திலா இப்போ இந்த பேச்சு எதற்க்கு அக்கா இப்போ தான் எழுந்து இருக்கிறாள் பிறகு பேசலாம் …முதலில் அவள் சாப்பிடட்டும் பிறகு பேசு இப்போ நீ உன் ரூம்க்கு போ” என சொல்ல… அவன் சரி என கிளம்ப அபிராமி மகளை வாஷ் ரூம்க்கு அழைத்து கொண்டு போனார் யது தன் கடமைகளை செய்ய ஆரம்பிக்க அவனுக்கு மட்டுமல்ல கப்பலில் வந்த பயணிகள் அந்த தீவில் உள்ள அனைவருக்குமே… இன்று இரவு துவாரகேஷ் விருந்து வைக்கிறார் அனைவருமே வர வேணும் என அழைப்பு வந்து இருக்க அதை படித்து விட்டு. அருண்
“என்ன டா இந்த ஆளுக்கு அம்னீசியாவா நேற்று தான் அவர் பெண்ணு சாவை நேரில் பார்த்து விட்டு வந்து இருக்கு …அது பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லாமல் இந்த ஆளு இன்று பார்ட்டிக்கு நம்மை எல்லாம் இன்வைட் பண்ணி இருக்கிறார்…அதுவும் உன் கூட அப்படி சண்டை போட்டு விட்டு உன்னை இன்வைட் பண்ணி இருக்கிறார் இதில் ஏதும் உள் குத்து இருக்குமோ என்றான்.
நிலவு வரும்…