அத்தியாயம் :15
அந்தமான் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது இரண்டு தீவு கூட்டங்களை கொண்டது அவை அந்தமான், நிகோபர் தீவுகள் இதன் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும்… இங்கு பல மதத்தவர்கள் வாழ்கின்றனர் இங்கு ஆட்சி மொழி ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், ஜாரவா, செண்டினல், சாம்பென், ஒன்கே அதை விட அந்தமான் பழங்குடியினரால் பேச படும் எழுத்து வழக்கு இல்லாத மொழி உள்ளது.
இங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் ஹேவ்லாக் தீவு, போர்ட் பிளேர், செல்லுலார் சிறை,பரதாங் தீவு ,சாமுத்திரிகா கடல் அருங்காட்சியகம், ராதாபுரம் கடற்கரை, மானுடவியல் அருங்காட்சியகம், ரோஸ், ஸ்மித் தீவு இப்படி பல உள்ளது… ஈகிள் ஷிப் அந்தமான் தீவை வந்து அடைந்தது சுற்றலா பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்களில் அந்தமான் தீவும் ஒன்றாகும் அதனால் ஈகிள் ஒரு ஷிப் தன் ஒரு மாத பயணத்தில் அந்தமான் தீவையும் தேர்ந்தெடுத்து இருந்தது கப்பல் அந்தமான் தீவை நெருங்க அருண் அறிவிப்பு செய்தான்… இங்கே நான்கு நாள் தங்குவதாக ஏற்பாடு செய்து உள்ளது நிர்வாகம் அதற்கு ஏற்றது போல உடைகள் உங்க முக்கிய தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வாருங்கள் மற்றது எல்லாம் கப்பலில் உள்ள உங்க ரூம் லாக்கரில் வைத்து பூட்டுங்கள்…. இங்கே உள்ள பாதுகாப்பு அங்கே இருக்குமா என தெரியாது காரணம் பல தரப்பட்ட மக்கள் வந்து போகும் இடம் சுற்றி வர பெரும்பாலும் கடற்கரை வழி பறி நடப்பது உண்டு அதற்காக தான் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்தது என்று அவன் அறிவிப்பு செய்ய… அவன் சொல்வது சரி என்பதால் அபிராமி துவாரகேஷ் எடுத்து கொண்டு வர சொன்ன சந்தனாவின் நகைகள், பட்டு புடவை கூடவே தன் நகை, உடை எல்லாம் லாக்கரில் வைத்து பூட்ட போக. துவாரகேஷ்
“ அபிராமி என்ன செய்கிற நான் எதற்காக இதை எல்லாம் எடுத்து கொண்டு வர சொன்னேன் பாவிக்க தானே…நீ என்ன என்றால் இதை எல்லாம் உள்ளே வைத்து பூட்டுகிறாய் எல்லாம் நம்ம கொண்டு போகும் டிராலி பேக்கில் எடுத்து வை” என சொல்ல. அபிராமி
“ என்னங்க இது அந்தமான் கடற்கரை தீவு அதற்கு எதற்கு பட்டு, புடவை நகை எல்லாம் அதுவும் திருடன் பயம் வேற இருக்கிறது… என அறிவிப்பு செய்து உள்ளாங்க இங்கே வைத்து விட்டு சாதாரண உடைகளை மட்டும் எடுத்து போகலாம்” என. துவாரகேஷ்
“ இது எல்லாம் தெரியாமல் கொண்டு வர சொல்ல நான் என்ன முட்டாளா …நான் சொன்னதை செய் நம்ம பாதுகாப்புக்கு என்று பத்து கார்ட்ஸ் வந்து இருக்கிறாங்க ஓவ்வோருவரும் இரண்டு மல்யுத்த வீரனுக்கு சமம் நான் சொன்னபடியே எடுத்து கொண்டு வா போ சீக்கிரமாக இறங்க தயாராக இருக்கங்கள்” என சொல்ல…. அபிராமிக்கு உண்மையில் சந்தேகமே இல்லாமல் இவர் ஏதோ தவறு செய்கிறார் என நினைக்க தோன்றியது மனசு வேற ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தாலும் தணிகாசலம் பார்வை எப்போவுமே தங்களை விட்டு அகலாது என்பதால் அவர் நிம்மதியோடு பிள்ளைகளை அழைக்க போனார்… மரகதம் எங்கே போனாலும் மொபைலும் கையுமாக அலைவார் வேற ஒன்றுமில்ல இளமையில் அவரால் செய்ய முடியாதது எல்லாம் இப்போ செய்து கொண்டு இருக்கிறார்… பேஸ் புக்கில் போட்டோ போடுவது ,லைவ் கொடுப்பது டிக் டாக் செய்வது இது தான் அவர் இப்போதைய வேலை… அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்க அபிராமி வழமை போல தலையில் அடித்து கொண்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு தீவுக்கு போக தயார் ஆனார்.
அவர்கள் வந்தது ஹேவ்லாக் தீவு அந்தமான், நிக்கோபார் தீவுகளில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் இங்கு ஸ்கூபா டைவிங், ஆழ்கடல் டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற சாகச விளையாட்கள் இடம் பெறும் இது அந்தமான் தீவு கூட்டத்தில் இருந்து மிகவும் வித்தியாசமான தீவாக காணபடுகிறது… சின்ன சின்ன கடற்கரை, விளையாட்டுகள்,பீச் சைட் ஹோட்டல்கள் என்று விடுமுறையை கழிக்க ஏற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது இங்கு பாலாவுக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் இருந்தது … பெரும்பாலான கப்பபலுக்கு சொந்தகார்கள் இப்படி சில முக்கிய சுற்றுலா இடங்களில் ஹோட்டல்கள் வைத்து இருப்பது உண்டு கடல் பயணங்களில் போது தங்கி ஓய்வெடுக்க சுற்றி பார்க்க தங்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள் இருந்தால் வசதி பணத்திற்கு பணமும் ஆயிற்று தங்கள் பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பார்கள்…. பயணிகளை எல்லாம் பாதுகாப்பாக இறங்கி விட்டு யது நந்தன், அருண் கப்பலின் மேனஜ்மென்ட் நிர்வாகி, கூடவே பாதுகாப்பு அதிகாரி, ஆளுங்க இறங்கினார்கள் மீதி உள்ளளவர்கள் கப்பலில் தங்கி கப்பலை பாதுகாக்கும் பணியை தொடர்ந்தனர் பாலாவின் ஹோட்டல் அழகாக தீவுகளுக்கு ஏற்ற போல இருந்தது அந்த ஹோட்டல் பெயரும் ஈகிள் தான்…
ஹோட்டல் மேனேஜர் ஓடி வந்தவர் முதலில் துவாரகேஷ்க்கு தான் பூமாலை போட்டு பொக்கே கொடுத்து வரவேற்க… அதில் அவர் முகத்தில் பெருமை தெரிந்தது இங்கு தமிழ் மொழி பரிச்சயமான ஒன்று என்பதால் மேனேஜர் தமிழில்
“ வெல்கம் சார் நீங்க எங்க ஹோட்டலுக்கு வந்ததில் எங்க ஹோட்டலுக்கு தான் பெருமை சார்…நீங்க வருவதாக பாலா சார் சொன்னதும் நான் ஏற்பாடு எல்லாம் பெரிதாக செய்ய நினைத்தேன்…ஆனால் ஷிப் எப்போ வரும் என தெரியாது என்பதால் இது தான் என்னால் செய்ய முடிந்தது உங்க ரூம் எல்லாம் பக்காவாக தயார் பண்ணி இருக்கிறேன்” என சொல்ல துவாரகேஷ் மற்றவர்கள் முன் தன் இமேஜ் உயர்ந்து விட்டதாக நினைத்தவர். துவாரகேஷ்
“ மேனேஜர் என் ஸ்டேட்டஸ்க்கு இந்த ஹோட்டலில் எல்லாம் தங்க கூடாது பட் இது என் நண்பனின் ஹோட்டல்…நானும் கூடிய சீக்கிரமாக இங்கே பைப் ஸ்டார் ஹோட்டல் கட்ட போகிறேன் அங்கே நீங்க தான் ஜி.எம் என சொல்ல மேனேஜருக்கு கேட்க வேணுமா வாய் எல்லாம் பல்லாகி போனது அவர் தேங்கஸ் தேங்க்ஸ் சார் என சொல்ல… துவாரகேஷ் மற்றவர்களை ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு கிளம்ப போக அவர் பின்னால் மேனேஜரும் போக வன் செக்கன் மேனேஜர் என ஆங்கிலத்தில் குரல் கேட்க துவாரகேஷ், மேனேஜர் திரும்பி பார்க்க யது நந்தன் தான் நின்று இருந்தான். யது
“ நீங்க உங்க கடமையை சரியாக செய்யவில்லை என தெரிகிறது மிஸ்டர் துவாரகேஷ்க்கு மட்டும் வரவேற்ப்பு கொடுத்தால் போதுமா…இங்கே பல விவிஐபிங்க இருக்கிறாங்க எல்லாருமே உயர் பதவியில் இருந்து ரிட்டயர்ட் ஆனவங்க சோ அவங்களுக்கும் நீங்க தான் வரவேற்ப்பு கொடுக்க வேணும்… அது தானே பேசிக் மேனர்ஸ் பாலா சாருக்கு இது பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் மேனேஜர்” என அழுத்தமாக சொல்ல. மேனேஜர் முகம் மாற துவாரகேஷ் யது நந்தனை சினம் துளிர்க்க பார்க்க அவன் அதை அலட்சியம் செய்தவாறே நிற்க. கேணல் ஜெகதீஷ்
“ கமான் யது அது எல்லாம் எங்களுக்கு வேணாம் நாங்க இங்கே வந்து இருப்பது நிம்மதியாக எங்க ஓய்வை கழிக்க தான்…எங்க கடமைகளை அடையாளத்தை மறைத்து வந்து இருக்கிறோம் இது எல்லாம் எதிர் பார்க்கும் ஆளுங்க நாங்க இல்லை” என மறைமுகமாக துவாரகேஷ்யை சொல்ல. துவாரகேஷ்
“ மிஸ்டர் ஜெகதீஷ் வாட் யூ மீன் நீங்க சொல்வதை பார்த்தால் நான் இந்த பப்ளிசிட்டியை எதிர்பார்த்து இருப்பது போல சொல்கிறீங்க….கேணல் பார்த்து நான் யாரென தெரியும் தானே பிசினஸ் மேன் துவாரகேஷ்” என சொல்ல. ஜெகதீஷ்
“ ஐ நோ யு மிஸ்டர் துவாரகேஷ் பட் இப்போ நீங்க பிசினஸ் ட்ரிப் வரவில்லை தானே பேமிலி டூர் வந்து இருக்கிறீங்க…சோ அந்த பிசினஸ் மேன் முகமூடியை கழட்டி வைத்து விட்டு ஜாலியாக எங்களை போல இருக்கலாம் தானே” என கேட்க. துவாரகேஷ்
“ மிஸ்டர் கேணல் எனக்கு மற்றவங்க அட்வைஸ் பண்ணினால் பிடிக்காது சோ பிளிஸ்” என சொல்ல கேணல் சின்ன சிரிப்பை கொடுக்க. மேனேஜர்
“ வெல்கம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கேணல் ஜெகதீஷ்” என சொல்ல. யது நந்தன்
“ வெல்கம் ஓகே பூமாலை, பொக்கே எல்லாம் எங்கே மேனேஜர் சார் ஒருவருக்கு மட்டும் தான் இந்த தீவில் பூக்கள் பூக்குமோ என கேட்க… துவாரகேஷ் தன் கழுத்தில் உள்ள பூமாலைலை கழட்டி கீழே எறிந்தவர் அது போல பொக்கேவை எறிந்து விட்டு கார்ட்ஸ் கூட வர தன் ரூம்க்கு போக அவர் பின்னால் துவாரகா நில்லு என மரகதம் யதுவை முறைத்து விட்டு போக… அபிராமி கண்களால் அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு போனார் சந்தனா அவனை பார்த்தவள் ஏதும் பேசாது போக நித்திலன் அவன் அருகே வந்தவன் அவன் கை பற்றி குலுக்கி விட்டு சூப்பர் அண்ணா செம நோஸ் கட் என சொன்னவன் அவர்களை பின் தொடர்ந்து போக…மேனேஜர் போகும் அவரை பார்த்து கொண்டு இருக்க மேனேஜர் சார் என யது நந்தன் அழைக்க மேனேஜர் திரும்பியவர். அவர்
“கேப்டன் நீங்க ரொம்ப தப்பு பண்ணி விட்டீங்க அவர் யாரு தெரியுமா நம்ம சாரோட பெஸ்ட் ப்ரண்ட்… அது மட்டுமா உலகம் தெரிந்த பிசினஸ் மேன் அவரை இன்சல்ட் பண்ணி நீங்க தான் இப்போ சிக்கலில் மாட்டி கொண்டு உள்ளீங்க” என சொல்ல. யது நந்தன்
“ எந்த சிக்கல் வந்தாலும் அதை தீர்க்கும் விதம் எனக்கு தெரியும் அது போல பாலா சாருக்கு நான் பதில் சொல்லி கொள்கிறேன்…முதலில் நீங்க அனைவரையுமே சரி சமமாக நடத்த கற்று கொள்ளுங்க நீங்க பாலா சாருக்கு தான் வேலை பார்க்கிறீங்க…முதலில் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட வேணாம் பணக்காரங்க வாக்கு தண்ணீர் மேலே எழுதிய எழுத்து போல நான் சொல்வது புரிகிறதா இந்த வேலை தான் உங்களுக்கு நிரந்தரம் விசுவாசத்தை ஒருத்தரிடம் காட்டுங்கள் பலரிடம் காட்டினால் அதற்கு பெயர் சந்தர்ப்பவாதி…தொழிலில் உயர தான் வேணும் உழைப்பால், நேர்மையாள் நேர்மையற்ற இடத்தில் நீங்க வேலை பார்க்க வேண்டி இருந்தால் தாராளமாக நீங்க விலக நினைக்கலாம்… பாலா சார் அப்படிப்பட்டவர் அல்ல என்பது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் இப்போ நடந்ததை நான் அவரிடம் சொன்னால் உங்க கிட்ட தான் தப்பு என்பார் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. நம்ம அனைவருமே இங்கே வேலை பார்ப்பவங்க எங்களை நம்பி வந்து இருக்கும் இவங்க நம்ம அனைவருக்குமே ஒன்று தான் சோ உங்க தனிப்பட்ட விருப்பத்திற்காக சிலதை மாற்ற முயற்சிக்க வேணாம்” என்றான்…
நிலவு வரும்…