அத்தியாயம்: 40
அன்று நைட் யது நந்தன், சந்தனாவின் முதலிரவுக்கு ஹோட்டல் ரூம்மில் ஏற்பாடு செய்து இருந்தார் அபிராமி….தணிகாசலத்திடம் பேசி விட்டு வந்தவர் சந்தனாவை பார்க்க நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள் சரி தூங்கட்டும் என நினைத்தவர்…
அவர் போய் குளித்து உடை மாற்றி விட்டு வர சந்தனா அப்போது தான் எழுந்து இருந்தாள்…
அபிராமி “ பாப்பா எழுந்து விட்டாயா மா அம்மா எழுப்ப வேணும் என நினைத்தேன் நீ எழுந்து விட்ட…சரி தங்கம் சூடாக காபி, டிபனுக்கு சொல்கிறேன் சாப்பிட்டு விட்டு குளித்து விட்டு வா மா நைட் சடங்கு இருக்கு” என்றார்…
சந்தனா “ எனக்கு ரொம்ப டயர்ட்டாக இருக்கு மா ஓம புகை வேற நிது எங்கே மா?ஆளை காணோம் தாத்தாவை பார்க்க போய் விட்டானா….நைட் என்ன சடங்கு! என கேட்டவளுக்கு பிறகு தான் நினைவு வந்தது…அவள் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணு தான் பல உலகம் விஷயம் தெரியாதவள் தான் அதற்காக குழந்தை அல்ல வளர்ந்த குமாரி சந்தனா அமைதியாக இருந்தாள்…
அபிராமி “இன்று நீ வாழ்க்கை தொடக்கும் நாள் எல்லாம் நல்லபடியாக நடக்க வேணும் என் பெண்ணு புருஷன் ,குழந்தை குட்டி என சந்தோஷமாக இருக்க வேணும்… அதை நான் நேரிலும் என் காயு மேலே இருந்து பார்த்து சந்தோஷபடுவாள்….அவள் என்னை நம்பி விட்டு போன பொறுப்பை நான் நல்லபடியாக நிறைவேற்றி விட்டேன் இனி எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை” என சொன்னார்….
அவர் சொல்ல சந்தனா “அம்மா அப்படி பேச வேணாம்” என சொன்னவள் அபிராமியை இடையோடு அணைத்து கொள்ள…அபிராமி அவள் தலையில் தடவி முத்தமிட்டார் அப்போது டோர் பெல் அடித்தது அபிராமி போய் பார்க்க காபி, டிபன் வந்து இருந்தது… அவர் நன்றி கூறி அதை பெற்று கொண்டவர் அவரும் சந்தனாவும் அதை சாப்பிட ஆரம்பித்தனர்…
யதுநந்தன் நல்லா தூங்கி கொண்டு இருக்க அவன் ரூம் டோர் பெல் அடித்தது முதலில் எங்கோ பெல் சத்தம் கேட்கிறது…என நினைத்தவன் புரண்டு படுக்க இன்னும் அதிகமாக சத்தம் கேட்டது…யது கண் விழித்தவன் யார் இது என எரிச்சலாக எழுந்தவன் தன் வாட்ச்சில் டைம் பார்க்க அது நைட் ஏழு மணி என காட்டியது…
இவ்வளவு நேரமாகவா! தூங்கினோம் என நினைத்தவன் எழுந்து ரூம் கதவை திறக்க வெளியே தணிகாசலம் நின்று இருந்தார் பின்னால் கார்ட் ஒருவன் பையோடு நிற்க… யது வாங்க தாத்தா என அழைக்க அவர் உள்ளே வர கார்ட் பையை அங்கே இருந்த டேபிளில் வைத்து விட்டு வெளியே போய் காவலுக்கு நின்றான் …
தணிகாசலம் “ ஸாரி மாப்பிள்ளை நல்லா தூங்கி கொண்டு இருந்தீங்க போல உங்களை டிஸ்டர்ப் பண்ணி விட்டேன்…நான் வந்தது உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த தான்… எனக்கு நீங்களும் நித்தி பையன் போல பேரன் தான்…அது தான் வேற யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லி அனுப்பாமல் நானே வந்தேன்…
இன்று நல்ல நாள் என சடங்கு வைக்க ஐயர் நேரம் குறித்து கொடுத்து இருக்கிறார் அபி சொல்ல சொன்னாள்…உங்களுக்கு சூட் ரூம் அவள் தான் ஏற்பாடு பண்ணி இருக்கிறாள் அம்மா இல்லையா? தன் பெண்ணு மாப்பிள்ளை கூட சந்தோஷமாக வாழ்க்கை தொடங்க வேணும் என்பது அவள் கனவு…இதில் புது துணி இருக்கு போட்டு கொள்ளுங்கள்….
நீங்க படித்தவர் ,பல நாடு சுற்றியவர் நல்ல பதவியில் இருப்பவர் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை…இருந்தாலும் நான் தாத்தா இல்லையா? மனசு கேட்கவில்லை சிலதை சொல்ல தான் வேணும்…
என் பெண்ணு காயத்திரி பற்றி உங்களுக்கு தெரியாது மாப்பிள்ளை ஒற்றை வாரிசு தவம் இருந்து என் லட்சுமி பெத்து எடுத்தவள்…அவள் சந்தனா போல இல்லை நித்து போல ரொம்ப தைரியசாலி பணக்கார வாரிசு தான் ஆனா சந்தனா போல துளியும் அதை யாரிடமும் காட்ட மாட்டாள்…
அவள் என் கிட்ட கேட்டது ஒன்று தான் துவாரகேஷ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வைங்க அப்பா என்று தான்…அவர் வசதி குறைவு என்றாலும் கூட நல்ல குடும்பம் பையன் நல்லவன் கெட்டிக்காரன் என விசாரித்து கட்டி வைத்தேன்….நன்றாக தான் இருந்தார் பிறகு எப்படி ஈகோ பேய் பிடித்தது என தெரியவில்லை என் பெண்ணு மொத்தமாக உடைந்து போனாள் அது தான் அவள் உயிரையும் காவு வாங்கியது…
அபி இல்லை என்றால் என் பேத்தி வாழ்க்கை என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…அபி செய்தது தியாகத்திற்க்கு மேலே மாப்பிள்ளை அவளுக்கு நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வைத்து இருந்தேன் தெரியுமா?... அப்படிப்பட்ட மாப்பிள்ளையை உதறி தள்ளி விட்டு துவாரகேஷை கல்யாணம் பண்ண காரணம் சந்தனா தான் …
என் பேத்தி உலகம் தெரியாதவள் பயந்த சுபாவம் அவளை இப்படி ஆக்கியது அவள் அப்பா, பாட்டி தான்….எங்கே உலகம் தெரிந்தாள் தன்னை விட்டு போய் சொத்தை பிடுங்கி விடுவாள் என்ற பயம்… அதை விட அவள் அறிவாளியாக இருந்தால் அவள் தனிப்பட்ட சொத்தும் கை விட்டு போய் விடுமே!
அதற்காக தான் சரியாக விசாரிக்காமல் வியாட்டை மாப்பிள்ளையாக அழைத்து வந்தது….நீங்க இல்லை என்றால் என் பேத்தியின் கதி என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…இனி அவள் உங்க பொறுப்பு அவளுக்கு நீங்க தான் தேவையானதை கற்று கொடுத்து என் காயத்திரி, அபிராமி போல ஆக்க வேணும்…
அவள் தன்னையறியாது தவறு செய்தால் கூட நீங்க தான் பொறுமையாக கற்று கொடுக்க வேணும்….இது தான் ஒரு தாத்தாவாக உங்க கிட்ட நான் கேட்பது” என்றார் ….
யது நந்தன் அவர் கையை பற்றி கொண்டவன் “ நீங்க கவலைப்பட வேணாம் தாத்தா எனக்கு உங்க பயம் புரிகிறது….எனக்கு என் அம்மா அப்பா வாழ்ந்த வாழ்க்கை நினைவு இருக்கிறது ஒரு தடவை கூட என் அப்பா என் அம்மாவை கோபமாக திட்டி பேசியதை நான் கேட்டது இல்லை….அம்மாவும் அப்பா மேலே உயிராக இருந்தாங்க நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்… என் மனைவியை கண் கலங்காமல் பார்த்து கொள்ள தெரியும் இனி சந்தனா மட்டுமல்ல அத்தை, நித்திலன் கூட என் பொறுப்பு” என சொன்னான் ….
இரவு சாந்த முகூர்த்திற்க்கு சந்தனாவை அபிராமி, சுசீலா தயார் செய்ய ஆரம்பித்தார்கள்….இரவு சாப்பாடு முடிய மற்றவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தூங்கவே, வெளியே சுற்ற போய் விட்டனர்….நித்திலன் இன்னும் எழவில்லை துவாரகேஷ் அவர் நாளை காலை சென்னை கிளம்ப போவதாக சொல்லி விட்டார்… தன் கூட வருபவர்கள் வாங்க உங்களுக்காக நான் வெயிட் பண்ணி கொண்டு இருக்க மாட்டேன்… என்று மறைமுகமாக அபிராமி,நித்திலனை எச்சரித்து இருந்தார்…
அபிராமி அவர் பேச்சை எல்லாம் இப்போ யோசிக்க நேரம் இல்லை என்று… அதை புறம் தள்ளி விட்டு மகளை அலங்கரிக்க தொடங்கி இருந்தாள்…சந்தனாவுக்கு லாவண்டர் வண்ண சாப்ட் சில்க் ஸாரி அதிகபடியான நகைகளை தவிர்த்து அதற்க்கு பொருத்தமான சில நகைகள் போட்டு விட்டாள்….சந்தனாவின் நீண்ட முடியை பின்னலிட்டு அதில் அந்தமானில் கிடைத்த சில பூக்களை வைத்து விட்டவர் அவளை திருப்தியாக பார்த்தாள்…
அபிராமி “ ரொம்ப அழகாக இருக்க மா சந்தோஷமாக இரு அம்மா உன் கிட்ட ஒன்று தான் சொல்வேன்….இனி யது தான் உன் வாழ்க்கை முதல் இடம் அம்மா, தம்பி தாத்தா, அப்பா அல்ல இனி அது தான் உன் குடும்பம்…நாங்க உனக்கு யதுவுக்கு பிறகு தான் மா நீ சின்ன பெண் அல்ல வாழ்க்கை உனக்கு புரியும்…
விட்டு கொடு கேட்டு பெறு ஆனால் அடிமையாக இராதே உனக்கு பக்கபலமாக நாங்க எப்பவுமே இருப்போம்” என்றார்….சுசீலாவும் சில விஷயங்களை நாசூக்காக சொல்ல சந்தனா அதை கேட்டு கொண்டு இருந்தாள்….நல்ல நேரம் வர சூட் ரூம்மில் சந்தனாவை ரூம் வாசல் வரை சென்று விட அவள் அபிராமி , சுசீலா காலில் விழுந்து ஆசி வாங்கி விட்டு தயக்கமாக உள்ளே போனாள்…
அது வழமை போல உள்ள சூட் ரூம் அங்கே யது நந்தன் முதலில் வந்தவன் அங்கே இருந்த பால்கனியில் நின்று….அந்தமான் கடலை ரசித்து கொண்டு இருந்தான் பெரும்பாலும் அந்தமானில் உள்ள ரூம் பால்கனி கடலை பார்த்து தான் இருந்தது காரணம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கட்டப்பட்டு இருந்தது…
சந்தனா உள்ளே வர கதவு ஆட்டோமேட்டிக் லாக் டோர் என்பதால் அதுவே பூட்டபட்டது சந்தனா அங்கே நின்று ரூம் அலங்காரத்தை ரசித்தாள்…மூர்த்தி பணத்தை பார்க்காது பேத்திக்காக சிவப்பு, தங்க நிறத்தால் பூக்கள், பலூன், கேண்டில் என அலங்காரம் செய்ய சொல்ல ஹோட்டல் நிர்வாகம் தான் இந்த ஏற்பாடுகள் செய்தது…
“வா மா” என சொல்லி கொண்டு யது நந்தன் வந்தான் சந்தனாவின் கொலுசு சத்தமும், கதவு பூட்டபடும் சத்தம் கேட்க தான் வந்தான்… சந்தனா அபிராமி சொல்லி இருந்த படி அவன் காலில் விழ போக பாதியில் யது நந்தன் அவளை பிடித்து நிறுத்தியவன்…அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவனும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தான்…
யது நந்தன் சந்தனா கையை பற்ற போக அவள் மெதுவாக இழுத்தவள் தலை குனிய அதை வெட்கம் தயக்கம் என நினைத்தவன்…
யது “ சந்தனா அழகான பெயர் உன்னை நான் தனா என அழைக்கிறேன் உனக்கு பிடித்து இருக்கு தானே! மற்ற விஷயங்கள் நம்ம நிறைய பேசி விட்டோம் இப்போ நம்மை பற்றி பேசலாமா?....உனக்கு என் பெயர், தொழில் தான் தெரியும் என் ஆசை விருப்பு வெறுப்பு தெரியாது தானே!...
என் முதல் காதலி இந்த கடல் தான் இங்கு தான் நான் வாழ்க்கையின் பாதி நாளை கழித்தேன்…இந்த தொழிலை மட்டும் நீ விட்டு விட சொல்ல கூடாது அது என்னால் முடியாது! தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி உயிர் வாழ முடியாதோ!... அது போல தான் எனக்கு இந்த கடல், தொழில் இரண்டுமே மற்றும்படி எனக்கு பெரிதாக எந்த ஆசையும் இது வரைக்கும் இருந்தது இல்லை… உன்னை பார்க்கும் வரைக்கும் என சொல்ல சந்தனா அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…
நிலவு வரும்….
அன்று நைட் யது நந்தன், சந்தனாவின் முதலிரவுக்கு ஹோட்டல் ரூம்மில் ஏற்பாடு செய்து இருந்தார் அபிராமி….தணிகாசலத்திடம் பேசி விட்டு வந்தவர் சந்தனாவை பார்க்க நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள் சரி தூங்கட்டும் என நினைத்தவர்…
அவர் போய் குளித்து உடை மாற்றி விட்டு வர சந்தனா அப்போது தான் எழுந்து இருந்தாள்…
அபிராமி “ பாப்பா எழுந்து விட்டாயா மா அம்மா எழுப்ப வேணும் என நினைத்தேன் நீ எழுந்து விட்ட…சரி தங்கம் சூடாக காபி, டிபனுக்கு சொல்கிறேன் சாப்பிட்டு விட்டு குளித்து விட்டு வா மா நைட் சடங்கு இருக்கு” என்றார்…
சந்தனா “ எனக்கு ரொம்ப டயர்ட்டாக இருக்கு மா ஓம புகை வேற நிது எங்கே மா?ஆளை காணோம் தாத்தாவை பார்க்க போய் விட்டானா….நைட் என்ன சடங்கு! என கேட்டவளுக்கு பிறகு தான் நினைவு வந்தது…அவள் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணு தான் பல உலகம் விஷயம் தெரியாதவள் தான் அதற்காக குழந்தை அல்ல வளர்ந்த குமாரி சந்தனா அமைதியாக இருந்தாள்…
அபிராமி “இன்று நீ வாழ்க்கை தொடக்கும் நாள் எல்லாம் நல்லபடியாக நடக்க வேணும் என் பெண்ணு புருஷன் ,குழந்தை குட்டி என சந்தோஷமாக இருக்க வேணும்… அதை நான் நேரிலும் என் காயு மேலே இருந்து பார்த்து சந்தோஷபடுவாள்….அவள் என்னை நம்பி விட்டு போன பொறுப்பை நான் நல்லபடியாக நிறைவேற்றி விட்டேன் இனி எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை” என சொன்னார்….
அவர் சொல்ல சந்தனா “அம்மா அப்படி பேச வேணாம்” என சொன்னவள் அபிராமியை இடையோடு அணைத்து கொள்ள…அபிராமி அவள் தலையில் தடவி முத்தமிட்டார் அப்போது டோர் பெல் அடித்தது அபிராமி போய் பார்க்க காபி, டிபன் வந்து இருந்தது… அவர் நன்றி கூறி அதை பெற்று கொண்டவர் அவரும் சந்தனாவும் அதை சாப்பிட ஆரம்பித்தனர்…
யதுநந்தன் நல்லா தூங்கி கொண்டு இருக்க அவன் ரூம் டோர் பெல் அடித்தது முதலில் எங்கோ பெல் சத்தம் கேட்கிறது…என நினைத்தவன் புரண்டு படுக்க இன்னும் அதிகமாக சத்தம் கேட்டது…யது கண் விழித்தவன் யார் இது என எரிச்சலாக எழுந்தவன் தன் வாட்ச்சில் டைம் பார்க்க அது நைட் ஏழு மணி என காட்டியது…
இவ்வளவு நேரமாகவா! தூங்கினோம் என நினைத்தவன் எழுந்து ரூம் கதவை திறக்க வெளியே தணிகாசலம் நின்று இருந்தார் பின்னால் கார்ட் ஒருவன் பையோடு நிற்க… யது வாங்க தாத்தா என அழைக்க அவர் உள்ளே வர கார்ட் பையை அங்கே இருந்த டேபிளில் வைத்து விட்டு வெளியே போய் காவலுக்கு நின்றான் …
தணிகாசலம் “ ஸாரி மாப்பிள்ளை நல்லா தூங்கி கொண்டு இருந்தீங்க போல உங்களை டிஸ்டர்ப் பண்ணி விட்டேன்…நான் வந்தது உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த தான்… எனக்கு நீங்களும் நித்தி பையன் போல பேரன் தான்…அது தான் வேற யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லி அனுப்பாமல் நானே வந்தேன்…
இன்று நல்ல நாள் என சடங்கு வைக்க ஐயர் நேரம் குறித்து கொடுத்து இருக்கிறார் அபி சொல்ல சொன்னாள்…உங்களுக்கு சூட் ரூம் அவள் தான் ஏற்பாடு பண்ணி இருக்கிறாள் அம்மா இல்லையா? தன் பெண்ணு மாப்பிள்ளை கூட சந்தோஷமாக வாழ்க்கை தொடங்க வேணும் என்பது அவள் கனவு…இதில் புது துணி இருக்கு போட்டு கொள்ளுங்கள்….
நீங்க படித்தவர் ,பல நாடு சுற்றியவர் நல்ல பதவியில் இருப்பவர் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை…இருந்தாலும் நான் தாத்தா இல்லையா? மனசு கேட்கவில்லை சிலதை சொல்ல தான் வேணும்…
என் பெண்ணு காயத்திரி பற்றி உங்களுக்கு தெரியாது மாப்பிள்ளை ஒற்றை வாரிசு தவம் இருந்து என் லட்சுமி பெத்து எடுத்தவள்…அவள் சந்தனா போல இல்லை நித்து போல ரொம்ப தைரியசாலி பணக்கார வாரிசு தான் ஆனா சந்தனா போல துளியும் அதை யாரிடமும் காட்ட மாட்டாள்…
அவள் என் கிட்ட கேட்டது ஒன்று தான் துவாரகேஷ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வைங்க அப்பா என்று தான்…அவர் வசதி குறைவு என்றாலும் கூட நல்ல குடும்பம் பையன் நல்லவன் கெட்டிக்காரன் என விசாரித்து கட்டி வைத்தேன்….நன்றாக தான் இருந்தார் பிறகு எப்படி ஈகோ பேய் பிடித்தது என தெரியவில்லை என் பெண்ணு மொத்தமாக உடைந்து போனாள் அது தான் அவள் உயிரையும் காவு வாங்கியது…
அபி இல்லை என்றால் என் பேத்தி வாழ்க்கை என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…அபி செய்தது தியாகத்திற்க்கு மேலே மாப்பிள்ளை அவளுக்கு நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வைத்து இருந்தேன் தெரியுமா?... அப்படிப்பட்ட மாப்பிள்ளையை உதறி தள்ளி விட்டு துவாரகேஷை கல்யாணம் பண்ண காரணம் சந்தனா தான் …
என் பேத்தி உலகம் தெரியாதவள் பயந்த சுபாவம் அவளை இப்படி ஆக்கியது அவள் அப்பா, பாட்டி தான்….எங்கே உலகம் தெரிந்தாள் தன்னை விட்டு போய் சொத்தை பிடுங்கி விடுவாள் என்ற பயம்… அதை விட அவள் அறிவாளியாக இருந்தால் அவள் தனிப்பட்ட சொத்தும் கை விட்டு போய் விடுமே!
அதற்காக தான் சரியாக விசாரிக்காமல் வியாட்டை மாப்பிள்ளையாக அழைத்து வந்தது….நீங்க இல்லை என்றால் என் பேத்தியின் கதி என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…இனி அவள் உங்க பொறுப்பு அவளுக்கு நீங்க தான் தேவையானதை கற்று கொடுத்து என் காயத்திரி, அபிராமி போல ஆக்க வேணும்…
அவள் தன்னையறியாது தவறு செய்தால் கூட நீங்க தான் பொறுமையாக கற்று கொடுக்க வேணும்….இது தான் ஒரு தாத்தாவாக உங்க கிட்ட நான் கேட்பது” என்றார் ….
யது நந்தன் அவர் கையை பற்றி கொண்டவன் “ நீங்க கவலைப்பட வேணாம் தாத்தா எனக்கு உங்க பயம் புரிகிறது….எனக்கு என் அம்மா அப்பா வாழ்ந்த வாழ்க்கை நினைவு இருக்கிறது ஒரு தடவை கூட என் அப்பா என் அம்மாவை கோபமாக திட்டி பேசியதை நான் கேட்டது இல்லை….அம்மாவும் அப்பா மேலே உயிராக இருந்தாங்க நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்… என் மனைவியை கண் கலங்காமல் பார்த்து கொள்ள தெரியும் இனி சந்தனா மட்டுமல்ல அத்தை, நித்திலன் கூட என் பொறுப்பு” என சொன்னான் ….
இரவு சாந்த முகூர்த்திற்க்கு சந்தனாவை அபிராமி, சுசீலா தயார் செய்ய ஆரம்பித்தார்கள்….இரவு சாப்பாடு முடிய மற்றவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தூங்கவே, வெளியே சுற்ற போய் விட்டனர்….நித்திலன் இன்னும் எழவில்லை துவாரகேஷ் அவர் நாளை காலை சென்னை கிளம்ப போவதாக சொல்லி விட்டார்… தன் கூட வருபவர்கள் வாங்க உங்களுக்காக நான் வெயிட் பண்ணி கொண்டு இருக்க மாட்டேன்… என்று மறைமுகமாக அபிராமி,நித்திலனை எச்சரித்து இருந்தார்…
அபிராமி அவர் பேச்சை எல்லாம் இப்போ யோசிக்க நேரம் இல்லை என்று… அதை புறம் தள்ளி விட்டு மகளை அலங்கரிக்க தொடங்கி இருந்தாள்…சந்தனாவுக்கு லாவண்டர் வண்ண சாப்ட் சில்க் ஸாரி அதிகபடியான நகைகளை தவிர்த்து அதற்க்கு பொருத்தமான சில நகைகள் போட்டு விட்டாள்….சந்தனாவின் நீண்ட முடியை பின்னலிட்டு அதில் அந்தமானில் கிடைத்த சில பூக்களை வைத்து விட்டவர் அவளை திருப்தியாக பார்த்தாள்…
அபிராமி “ ரொம்ப அழகாக இருக்க மா சந்தோஷமாக இரு அம்மா உன் கிட்ட ஒன்று தான் சொல்வேன்….இனி யது தான் உன் வாழ்க்கை முதல் இடம் அம்மா, தம்பி தாத்தா, அப்பா அல்ல இனி அது தான் உன் குடும்பம்…நாங்க உனக்கு யதுவுக்கு பிறகு தான் மா நீ சின்ன பெண் அல்ல வாழ்க்கை உனக்கு புரியும்…
விட்டு கொடு கேட்டு பெறு ஆனால் அடிமையாக இராதே உனக்கு பக்கபலமாக நாங்க எப்பவுமே இருப்போம்” என்றார்….சுசீலாவும் சில விஷயங்களை நாசூக்காக சொல்ல சந்தனா அதை கேட்டு கொண்டு இருந்தாள்….நல்ல நேரம் வர சூட் ரூம்மில் சந்தனாவை ரூம் வாசல் வரை சென்று விட அவள் அபிராமி , சுசீலா காலில் விழுந்து ஆசி வாங்கி விட்டு தயக்கமாக உள்ளே போனாள்…
அது வழமை போல உள்ள சூட் ரூம் அங்கே யது நந்தன் முதலில் வந்தவன் அங்கே இருந்த பால்கனியில் நின்று….அந்தமான் கடலை ரசித்து கொண்டு இருந்தான் பெரும்பாலும் அந்தமானில் உள்ள ரூம் பால்கனி கடலை பார்த்து தான் இருந்தது காரணம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கட்டப்பட்டு இருந்தது…
சந்தனா உள்ளே வர கதவு ஆட்டோமேட்டிக் லாக் டோர் என்பதால் அதுவே பூட்டபட்டது சந்தனா அங்கே நின்று ரூம் அலங்காரத்தை ரசித்தாள்…மூர்த்தி பணத்தை பார்க்காது பேத்திக்காக சிவப்பு, தங்க நிறத்தால் பூக்கள், பலூன், கேண்டில் என அலங்காரம் செய்ய சொல்ல ஹோட்டல் நிர்வாகம் தான் இந்த ஏற்பாடுகள் செய்தது…
“வா மா” என சொல்லி கொண்டு யது நந்தன் வந்தான் சந்தனாவின் கொலுசு சத்தமும், கதவு பூட்டபடும் சத்தம் கேட்க தான் வந்தான்… சந்தனா அபிராமி சொல்லி இருந்த படி அவன் காலில் விழ போக பாதியில் யது நந்தன் அவளை பிடித்து நிறுத்தியவன்…அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவனும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தான்…
யது நந்தன் சந்தனா கையை பற்ற போக அவள் மெதுவாக இழுத்தவள் தலை குனிய அதை வெட்கம் தயக்கம் என நினைத்தவன்…
யது “ சந்தனா அழகான பெயர் உன்னை நான் தனா என அழைக்கிறேன் உனக்கு பிடித்து இருக்கு தானே! மற்ற விஷயங்கள் நம்ம நிறைய பேசி விட்டோம் இப்போ நம்மை பற்றி பேசலாமா?....உனக்கு என் பெயர், தொழில் தான் தெரியும் என் ஆசை விருப்பு வெறுப்பு தெரியாது தானே!...
என் முதல் காதலி இந்த கடல் தான் இங்கு தான் நான் வாழ்க்கையின் பாதி நாளை கழித்தேன்…இந்த தொழிலை மட்டும் நீ விட்டு விட சொல்ல கூடாது அது என்னால் முடியாது! தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி உயிர் வாழ முடியாதோ!... அது போல தான் எனக்கு இந்த கடல், தொழில் இரண்டுமே மற்றும்படி எனக்கு பெரிதாக எந்த ஆசையும் இது வரைக்கும் இருந்தது இல்லை… உன்னை பார்க்கும் வரைக்கும் என சொல்ல சந்தனா அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…
நிலவு வரும்….