அத்தியாயம் - 14
இருவருமே காரில் ஏற...பின்னால் ஏற போனவளின் கரம் பிடித்து முன் இருக்கையில் அமர வைத்தவன்,தானும் அமர்ந்து,அனைவரிடமும் விடைபெற்று விட்டு காரை கிளப்பினான்.
"இப்போ எதுக்கு என்னை இங்க உட்கார வச்சிங்க,நான் பின்னாடியே இருக்கேன். முதல்ல காரை நிறுத்துங்க" என அடம்பிடிக்க…
அவனோ "ஓய் நான் என்ன உனக்கு டிரைவரா... மேடம் மட்டும் ஹாயா பின்னாடி உட்கார்ந்துட்டு வருவீங்க,நாங்க உங்களுக்கு கார் ஓட்டணுமா?..அதெல்லாம் முடியாது போடி. நான் என் பொண்டாட்டி பக்கத்தில் தான் உட்கார்ந்து வண்டி ஓட்டுவேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ" என்றவன்,ஊரை கடந்து நெடுஞ்சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவளும் அத்தோடு விடாமல் காரின் கதவை திறக்க முயல,அதுவோ லாக் ஆகியிருந்தது. "நான் தான் சொன்னேனே உன்னால் முடிந்தால் எழுந்து பின்னாடி போகலாம்" என நக்கலான குரலில் கூறினான்.
அனைத்து முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்,அவனை முறைத்துவிட்டு ஜன்னலின் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.
நேரம் செல்ல,மணி பத்தை நெருங்கும் போதே அவளுக்கு கண்கள் தூக்கத்தில் சொக்கியது. காரின் கதவில் சாய்ந்து உறங்க தொடங்க,காரின் வேகத்தில் அடிக்கடி தலையில் இடித்துக் கொண்டாள்.
பின்னர் தலையை தேய்த்து கொண்டே இந்த பக்கம் திரும்பி படுக்க,சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் அவனின் தோளில் சாய்ந்திருந்தாள்.
தன் மேல் சாய்ந்து தூங்கும் தன்னவளை பார்த்து மெலிதாக சிரித்தவன்,சந்தோஷமாக உணர்ந்தான்.
தோளில் இருந்து அடிக்கடி சரிந்து விழுந்தவளை கண்டு காரை ஓரமாக நிறுத்தியவன்,அவளை அப்படியே தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான். அவளும் அவனின் இடையை அணைத்துக்கொண்டு உறங்க தொடங்கினாள்.
மணி அதிகாலை நான்கு மணி அளவில் கார் சென்னையை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டலுக்கு முன்பு காரை நிறுத்தியவன்,தன் மடியில் குழந்தை போல் இறங்கும் வர்ஷினியை பார்த்தபடி அவளை எழுப்ப வேண்டும் என்பதை மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் அப்படியே இருந்தவன்,நேரம் கடப்பதை உணர்ந்து மெல்ல அவளை எழுப்பினான்.
அவளும் சிணுங்கிக்கொண்டே கண்ணை திறக்க,எதிரில் அவன் முகத்தை கண்டு குழம்பியவள் அப்போது தான் உணர்ந்தாள் அவனின் மடியில் படுத்திருப்பதை.
அவசரமாக எழுந்தவள் எதுவும் நடக்காததை போல் சாதாரணமான அவனை பார்க்க,அவனும் தன் சிரிப்பை உதட்டுக்குள்ளேயே மறைத்துக்கொண்டான்.
"இதுதான் கல்யாண மண்டபமா" என அங்கு பிரம்மாண்டமாக வீற்றிருந்த கட்டிடத்தை காட்டி கேட்க,
அவனும் "அதெல்லாம் காலையில் கிளப்பியதுக்கு அப்பறம் பாத்துக்கலாம். இப்போ இங்க தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் கிளம்பி போகலாம்" என்றவன் தங்கள் உடமைகளை கீழே இறக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
ஆல்ரெடி ஆன்லைன் மூலமாக அறையை புக் செய்ததால் சாவியை மட்டும் வாங்கிக்கொண்டு செல்ல, வர்ஷினியோ தூங்கிவழிந்து கொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.
அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அங்குள்ள மெத்தையில் விழுந்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள் வர்ஷினி.
அவனும் அறையை சாத்திவிட்டு மெத்தையில் படுத்தவனுக்கு பயணத்தின் களைப்பில் உடனடியாக தூக்கம் வந்து தழுவியது.
இரவு முழுவதும் தூங்கியதால் காலையில் சீக்கிரமே எழுந்தவள்,அவன் விழிக்கும் முன் கிளம்ப எண்ணி குளிக்க சென்றாள்.
கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச,முயன்று அதை விரட்டியவன் மொபைலை எடுத்து மணியை பார்க்க, அது காலை எட்டு என காட்டியது. இதற்கு மேல் தூங்கினால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என எழுந்தவன் எதிரில் கண்ட காட்சியில் கண்கள் தானாய் விரிந்தது.
அவன் எதிரில் கையில் பாதி புடவை, மீதி தரையில் என புடவையுடன் மல்லுக்கட்டி கொண்டு நின்றிருந்தாள் அவனின் மனையாள்.
அவளுக்கு புடவை கட்டி பழக்கமே இல்லை.நிச்சயம்,
கல்யாணத்திற்கு கட்டியதோடு சரி. அதுவும் அவளின் தாய் தான் கட்டிவிட்டார். அப்படியிருக்க மதி வேறு நண்பனின் திருமணம் என்றவுடன் கையில் சிக்கிய புடவையை பெரிய இவளாட்டம் கட்ட தெரிந்தது போல் எடுத்து வந்துவிட்டாள். ஆனால் அதனை உடுத்ததான் முடியவில்லை.
'அப்பப்பா காலையிலேயே கண் கொள்ளா காட்சி தான்' என மனதுக்குள் குதுகளித்தவன் வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு "ஏய் பொண்டாட்டி என்னடி பண்ற, சேலை எத்தனை முழம்னு கணக்கு பண்ணிட்டு இருக்கியா" என குரல் கொடுக்க,
அவன் குரலில் உடல் மொத்தமும் தூக்கிவாரி போட,அவசரமாக தன்னை சேலையால் மறைத்தவள்,அவனை நிமிர்ந்து பார்க்க,
'ஆமா இப்போ மறைச்சு என்ன ஆக போகுது, நான் தான் ஆல்ரெடி பார்த்துட்டேனே' என நினைத்தவன் மீண்டும் "என்னடி பண்ற" என்க,
அவன் முன் தெரியாது என சொல்ல பிடிக்காமல் "அது...அது" என தடுமாற, அவனோ சிரித்துக்கொண்டே…"அவ்ளோ கஷ்டப்பட்டு புடவை கட்ட வேணாம். ஏதாவது சுடிதார் போட்டுட்டு கிளம்பு டைம் ஆகிடுச்சு" என்றவன், அவனும் அவசரமாக கிளம்பினான்.
'கல்யாணத்திற்கு புடவை தானே கட்டிட்டு போக சொன்னாங்க பாட்டி. இவன் என்ன சுடிதார் போட சொல்றான்' என யோசித்தாலும் புடவையில் இருந்து விடுமுறை கிடைத்த சந்தோஷத்துடன் கிளம்பினாள்
இருவருக்கும் காலை உணவை அறைக்கே வரவழைத்தவன்,
சாப்பிட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இதுதான் முதல் முறை சென்னை வருவதால் அனைத்தையும் ஆர்வமாக பார்த்தபடி வந்தவள்,கார் ஒரு இடத்தில் நின்றவுடன் நிமிர்ந்து பார்க்க, இப்போது அவளின் கண்கள் இரண்டும் ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது.
சென்னை மருத்துவ கல்லூரி வளாகம்...அதில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் பெரிய பேனர் போஸ்டர் கட்டப்பட்டு இருந்தது.
விழிகளில் இருந்து என்ன முயன்றும் வழியும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை அவளால்.
அவளையே பார்த்துகொண்டிருந்த மதி அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்து புன்னகைத்தான்.
இதுக்கு தானே அவனும் ஆசைப்பட்டான். தன்னவளின் லட்சியத்தை தன் லட்சியமாக கொண்டு அனைத்தையும் அவளுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியை கொடுப்பதற்காக தான் நண்பனின் திருமணம் என சென்னை வரை வர வைத்திருந்தான்.
என்ன தான் வெளியே தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாலும் அவன் வேலைக்கு சென்றவுடன் தனிமையில் தனது மார்க் ஷீட்டை கையில் வைத்துக்கொண்டு அழும் அவளை எதர்ச்சியாக பார்க்க நேர்ந்ததில் இருந்து எப்படியாவது அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு பெரிதாக எந்த சிரமமும் இல்லாமல்,அவள் ஏற்கனவே நுழைவு தேர்வு எழுதி அதிலும் பாஸ் ஆகியிருக்க, அவளை இப்போது கலந்தாய்வுக்கு அழைத்து வந்துவிட்டான்.
விழிகளில் வழியும் கண்ணீரோடு அவனை பார்க்க,அவனோ அவள் முகத்தை கைகளில் ஏந்தி "நீ சந்தோஷபடுவேன்னு நினைச்சேன், ஆனா நீ அழறதை பார்த்தா பிடிக்கலை போல...திரும்பி போய்டலாமா" என்க,
அவளோ வேகமாக தலையாட்டி மறுத்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.அவனுக்கு அவளின் செய்கை அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
பின்னர் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல,ஒரு பெரிய கூட்டமே இருந்தது.
அங்கு போடபட்ட சேரில் அமர்ந்தவாறே எதிரில் இருந்த திரையில் தங்களின் எண் மற்றும் அழைப்பிற்காக காத்திருந்தனர்.
"நீ நல்ல மதிப்பெண் வாங்கியிருப்பதால் உனக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது கல்லூரியை தேர்வு செய்ய,அதனால் மதுரையில் இருக்குற மெடிக்கல் காலேஜையே தேர்வு செய்" என அவன் சொல்ல..
"அதெல்லாம் வேணாம் நான் வேற ஊர்ல தான் கேட்பேன். நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சுக்கிறேன்" என்றாள் வர்ஷினி.
"வேனாம்டி என் கோபத்தை கிளப்பாத… சுத்தி நிறைய பேர் இருக்காங்களேன்னு பார்க்கிறேன் இல்லனா நடக்கிறதே வேற …..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, ஒன்னு நீ நம்ம வீட்டில் தங்கி மதுரையில் படிகிறதா இருந்தா படி…. இல்லனா படிக்கவே வேண்டாம்" என்றான்.
எதை சொன்னால் அவள் தன் முடிவை மாற்றி கொள்வாள் என்பது அவனுக்கா தெரியாது.
அவன் வார்த்தையில் உள்ள உறுதியில் அவளும் தன் முடிவை மாற்றி இருக்க...கலந்தாய்வு தொடங்கியது.
ரொம்ப நேரமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சிறிதுநேரத்தில் அவளை அழைத்து விட….பயத்தோடு உள்ளே நுழைந்தவள், திரும்பி வரும்போது உறைந்த புன்னகையோடு வந்தாள்.
மதுரை மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்க,மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் ஓடி சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
அத்தனை பேர் அவர்களை சுற்றி இருக்க,அதை பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் இல்லை இருவருமே...அவளின் சந்தோஷம், சிரிப்பு, அணைப்பு எல்லாம் அவனுக்குள்ளும் இதமாய் இறங்கியது.
சூழ்நிலையை உணர்ந்து அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.
நேரம் மதியத்தை நெருங்யிருக்க,அவளை ஒரு உணவு விடுதிக்கு கூட்டி சென்றான்.
"உனக்கு சாப்பிட என்ன வேணும்" என கேட்க,அவளோ திருதிருவென முழித்தாள். இதற்கு முன்பு இதுபோல் எங்கயாவது வந்திருந்தால் தானே தெரிவதற்கு.
அவனே இருவருக்கும் ஆர்டர் கொடுக்க,சுடசுட பிரியாணியை ஒரு பிடி பிடித்தாள் வர்ஷினி. அடுத்தடுத்து அவன் பார்த்து பார்த்து அவளுக்காகவே ஆர்டர் கொடுக்க,அனைத்தையும் ரசித்து சாப்பிட்டாள்.கடைசியாக ஐஸ்கிரீம் கொண்டு வர சொல்ல,அவளோ "எனக்கு சேமியா ஐஸ் தான் ரொம்ப பிடிக்கும்,அதுவே சொல்லுங்க" என்க….
"அதெல்லாம் இங்க கிடைக்காதுடி குட்டி சாத்தான்.இதை சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்" என்க,
அவளும் சேமியா ஐஸ் இல்லாத வருத்தத்தில் ஐஸ்கிரீமை வாயில் வைக்க,அதன் சுவையில் லயித்து போனவள் அவனை கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை தின்றாள்,பாதியை சாப்பிட்ட பின்னர் தான் நிமிர்ந்து பார்த்தாள்.
"நீ ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டியா" என சாப்பிடாமல் அமர்ந்திருந்தவனை பார்த்து கேட்க,
"அதுதான் எனக்கும் சேர்த்து நீ சாப்பிடுறீயே அப்பறம் என்ன,எனக்கு வேணாம் நீயே சாப்பிடு" என்றவன் அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே பார்த்துத்திருந்தான்.
இங்கு இருவருமே மகிழ்ச்சியில் இருக்க,அங்கு இவர்கள் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்.
மதுவின் தந்தையும்,அவளின் அண்ணனும் சேர்ந்து தங்கள் பேச்சை தொடங்கினர்.
"இங்க பாரு சகுந்தலா, நான் சொல்றதை கேளு...ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போச்சுன்னா அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் நடக்கிறதே பெரிய பிரச்சனையா இருக்கும். அதுதான் அவளுக்கு பேசிய அதே முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்" என்றார் மதுவின் தந்தை.
"அம்மா... அப்பா சொல்றதும் சரி தானே. நீங்க தான் அவளுக்கு எடுத்து சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.நீங்களே வேணாம்னு சொன்னால் என்ன அர்த்தம்" என அவனும் தங்கையின் வாழ்க்கையை நினைத்து வருந்தியவனாக எடுத்து சொல்ல முயன்றான் ஆனால் சகுந்தலா ஒற்றை காலில் நின்றுக்கொண்டு அதனை தடுக்கவே பார்த்தார்.
"என்ன சொல்றீங்க இரண்டு பேரும்...அவங்க எங்க நாம எங்க,அவனுக்கு போய் என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்றீங்க?..என் உயிரே போனாலும் நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்".
"என் மக வாழ்க்கையை வேற ஒருத்தி ராணி மாதிரி வாழ்வா...ஆனா என் பொண்ணு மட்டும் சாதாரண ஒரு குடும்பத்தில் வாக்கப்பட்டு கஷ்டபடனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா" என இருவரையும் சாடினார்.
"அம்மா... கதிருக்கு என்ன குறை சொல்லுங்க,நல்லா படிச்சிருக்கான்,அவனும் போலீஸ் தான்.இன்ஸ்பெக்டராக இருக்கான்,எனக்கும் அவன் ப்ரெண்ட் தான் எனக்கு தெரிஞ்சு எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.
என்ன நம்மளை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த அளவுக்கு வசதியில்லை. அதுக்காக அவங்க ஒன்னும் கஷ்டப்படும் குடும்பம் இல்லையே. இந்த ஊரில் அவங்களுக்கு ஏகபட்ட நிலபுலன்கள் எல்லாமே இருக்கு" என கதிரை பற்றி எடுத்து சொன்னான்.
ஆனால் அது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக தான் போனது.யார் சொல்வதையும் காதில் வாங்காமல் தன்னுடைய முடிவில் இறுதியாக நின்றார்.
அனைவருமே அவர் வாயில் இருந்து சம்மதம் என்ற ஒரு வார்த்தை வந்து விடாதா என்ற நற்பாசையில் இருந்தனர்.
"யார் என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு.எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றவர்,இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க" என சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே வந்தாள் மது.
வந்தவள் அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு தன் தந்தையின் புறம் திரும்பியவள் "அப்பா நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்" என சொல்ல,
"என்னடி சொல்ற உனக்கென்ன பைத்தியமா...எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை,நான் இதை நடக்க விடமாட்டேன்" என மகளை பார்த்து கத்தினார் சகுந்தலா.
"கல்யாணம் எனக்கு, அப்போ என்னோட சம்மதம் தான் இங்க முக்கியம்.ஒருதடவை உங்க பேச்சை கேட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதித்தேன் என்ன ஆச்சு?...அதுதான் சொல்றேன் இந்த தடவையாவது என்னை முடிவெடுக்க விடுங்க. அதையும் மீறி நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சித்தால் அப்பறம் கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்" என இவளும் பதிலுக்கு பேசினாள்.
முதன்முறை இவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டியதற்கு பரிசாக தான் பட்டது போதும் என்றே அவளே இந்த முறை முடிவை எடுத்திருந்தாள்.
அவளுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை தான். ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.ஏற்கனவே தன் அன்னை அனைவரையும் வார்த்தையால் படுத்தும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அதுவும் மித்ராவை பார்த்தாள் அவருக்கு உண்டாகும் கோபமும் கண்களில் தோன்றும் வன்மமும் நல்லதுக்கு இல்லை என்றே இந்த முடிவு.
இந்த முடிவை எடுக்க இன்னும் ஒரு காரணமும் இருந்தது.அது மித்ரவர்ஷினி தான்.தான் இங்கேயே இருந்தால் அவளும் நிம்மதியாக இந்த வீட்டில் நடமாடமுடியாது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் மது.
' ஒருவேளை தனக்கு திருமணம் முடிந்தாலாவது தாயின் கோபம் குறையாதா' என்றே இதற்கு சம்மதித்தாள்.
அவளின் சம்மதம் கேட்டு வீடே மகிழ்ச்சியில் இருந்தது.அவளின் தாயை தவிர.
அவளின் சம்மதம் கிடைத்தவுடன் அங்கு மதிக்கு அழைத்து சொல்லிவிட்டார் மதுவின் தந்தை.
அனைத்திற்கும் காரண கர்த்தா மதி தான். அவன் தான் தன் மாமா மற்றும் ரகுவிடம் கதிரை பற்றி சொன்னது.
இவர்களுக்கும் மதியின் மேல் சின்ன வருத்தம் இருந்தாலும் நடந்த அனைத்தையும் நல்ல முறையாக மாற்ற நினைக்கும் அவனின் நல்ல மனதிற்காக இவர்களும் சம்மதித்து,அனைவரின் சம்மதத்தையும் பெற்றும் விட்டனர்.
அதுவும் அவனும் வர்ஷினியும் இருக்கும் போது இந்த பேச்சை தொடங்கினாள் பெரிய பிரச்சனையில் முடியும் என்பதை நன்றாக அறிந்தவன்,இருவரும் இல்லாத பொழுது பேசுமாறு இருவரிடமும் சொல்லியிருந்தான். அவன் நினைத்தது போல் எல்லாம் நன்றாகவே முடிந்தது.
ஏற்கனவே தன்னவளுடனான தனிமை மகிழ்ச்சியைத் தந்திருக்க, இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது.
அன்றைய நாள் முழுவதும் அவளை அழைத்து கொண்டு பீச்,சினிமா என சுற்றியவர்கள் இரவு உணவை வெளியே முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தனர்.
மறுநாள் காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பியவன், "ஓய் பொண்டாட்டி சீக்கிரம் எழுத்து கிளம்பு" என்க…
"எங்க போறோம் ஊருக்கா" என அவளும் கேட்க,
"ஏண்டி இங்க எதுக்காக வந்தோம் என் ப்ரெண்ட் கல்யாணம்னு தானே சொன்னேன்.இன்னைக்கு தான் கல்யாணம் எழுந்து கிளம்பு என்றவன், இன்னைக்கு புடவை தான் கட்டணும் அதுவும் பாட்டி கொடுத்தாங்க இல்ல அந்த புடவையை" என சொல்லியவன் எழுந்து சென்றுவிட…
நேற்றைய கதை இன்றும் தொடர்கதையாக புடவையோடு சண்டை ஒன்று தான் போடவில்லை. அப்படி ஒரு போராட்டம் புடவைக்கும் அவளுக்கும்.
அதுவரை அறையின் பால்கனியில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அவளின் செயலை பார்த்து சத்தமாக சிரித்தான்.
அவனின் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து திரும்பியவள் "ஏய் லூசு...பொறுக்கி வெளிய போடா, இப்படிதான் டிரஸ் மாத்தும் போது வருவியா... நேத்தும் இப்படிதான் பண்ண" என அவனை திட்ட,
"சரி நான் இப்போ வெளிய போய்ட்டா மட்டும் நீ கிளம்பி வந்துடுவியா" என்றவன் அவளையே அழுத்தமாக பார்க்க,
"இப்போ என்ன பண்ண சொல்ற,எனக்கு புடவையே கட்ட வரலை. பேசாம நான் சுடிதாரையே போட்டுக்குறேன்" என்றாள் வெறுப்பாக.
அவனும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக "இங்க வா நான் கட்டி விடுறேன்" என கூப்பிட, அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.
"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.உன்கிட்ட எல்லாம் என்னால….என இழுத்தவள், முடியாது முடியாது" என அவசரமாக தலையாட்டி மறுத்தாள்.
"அப்போ இப்படியே என் கூட வர போறியா,எனக்கு ஓகே தான் என நக்கல் செய்தவன், சரி வெயிட் பண்ணு ஹோட்டல்ல இருக்குற லேடி ஒர்கர் யாராவது இருந்தால் கூப்பிடுறேன்" என கிளம்ப முயல..
'அது எப்படி யாரோ ஒருவர் முன் அப்படி நிற்பது, அது பெண்ணாகவே இருந்தாலும் அது எப்படி தன்னால் முடியும்' என யோசித்தவள் அவனை தடுத்தாள்.
இருவருமே காரில் ஏற...பின்னால் ஏற போனவளின் கரம் பிடித்து முன் இருக்கையில் அமர வைத்தவன்,தானும் அமர்ந்து,அனைவரிடமும் விடைபெற்று விட்டு காரை கிளப்பினான்.
"இப்போ எதுக்கு என்னை இங்க உட்கார வச்சிங்க,நான் பின்னாடியே இருக்கேன். முதல்ல காரை நிறுத்துங்க" என அடம்பிடிக்க…
அவனோ "ஓய் நான் என்ன உனக்கு டிரைவரா... மேடம் மட்டும் ஹாயா பின்னாடி உட்கார்ந்துட்டு வருவீங்க,நாங்க உங்களுக்கு கார் ஓட்டணுமா?..அதெல்லாம் முடியாது போடி. நான் என் பொண்டாட்டி பக்கத்தில் தான் உட்கார்ந்து வண்டி ஓட்டுவேன். உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ" என்றவன்,ஊரை கடந்து நெடுஞ்சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவளும் அத்தோடு விடாமல் காரின் கதவை திறக்க முயல,அதுவோ லாக் ஆகியிருந்தது. "நான் தான் சொன்னேனே உன்னால் முடிந்தால் எழுந்து பின்னாடி போகலாம்" என நக்கலான குரலில் கூறினான்.
அனைத்து முயற்சியும் தோல்வியடைந்த நிலையில்,அவனை முறைத்துவிட்டு ஜன்னலின் புறம் திரும்பி வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.
நேரம் செல்ல,மணி பத்தை நெருங்கும் போதே அவளுக்கு கண்கள் தூக்கத்தில் சொக்கியது. காரின் கதவில் சாய்ந்து உறங்க தொடங்க,காரின் வேகத்தில் அடிக்கடி தலையில் இடித்துக் கொண்டாள்.
பின்னர் தலையை தேய்த்து கொண்டே இந்த பக்கம் திரும்பி படுக்க,சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் அவனின் தோளில் சாய்ந்திருந்தாள்.
தன் மேல் சாய்ந்து தூங்கும் தன்னவளை பார்த்து மெலிதாக சிரித்தவன்,சந்தோஷமாக உணர்ந்தான்.
தோளில் இருந்து அடிக்கடி சரிந்து விழுந்தவளை கண்டு காரை ஓரமாக நிறுத்தியவன்,அவளை அப்படியே தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான். அவளும் அவனின் இடையை அணைத்துக்கொண்டு உறங்க தொடங்கினாள்.
மணி அதிகாலை நான்கு மணி அளவில் கார் சென்னையை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டலுக்கு முன்பு காரை நிறுத்தியவன்,தன் மடியில் குழந்தை போல் இறங்கும் வர்ஷினியை பார்த்தபடி அவளை எழுப்ப வேண்டும் என்பதை மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் அப்படியே இருந்தவன்,நேரம் கடப்பதை உணர்ந்து மெல்ல அவளை எழுப்பினான்.
அவளும் சிணுங்கிக்கொண்டே கண்ணை திறக்க,எதிரில் அவன் முகத்தை கண்டு குழம்பியவள் அப்போது தான் உணர்ந்தாள் அவனின் மடியில் படுத்திருப்பதை.
அவசரமாக எழுந்தவள் எதுவும் நடக்காததை போல் சாதாரணமான அவனை பார்க்க,அவனும் தன் சிரிப்பை உதட்டுக்குள்ளேயே மறைத்துக்கொண்டான்.
"இதுதான் கல்யாண மண்டபமா" என அங்கு பிரம்மாண்டமாக வீற்றிருந்த கட்டிடத்தை காட்டி கேட்க,
அவனும் "அதெல்லாம் காலையில் கிளப்பியதுக்கு அப்பறம் பாத்துக்கலாம். இப்போ இங்க தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் கிளம்பி போகலாம்" என்றவன் தங்கள் உடமைகளை கீழே இறக்கிவிட்டு உள்ளே நுழைந்தான்.
ஆல்ரெடி ஆன்லைன் மூலமாக அறையை புக் செய்ததால் சாவியை மட்டும் வாங்கிக்கொண்டு செல்ல, வர்ஷினியோ தூங்கிவழிந்து கொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.
அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி அங்குள்ள மெத்தையில் விழுந்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள் வர்ஷினி.
அவனும் அறையை சாத்திவிட்டு மெத்தையில் படுத்தவனுக்கு பயணத்தின் களைப்பில் உடனடியாக தூக்கம் வந்து தழுவியது.
இரவு முழுவதும் தூங்கியதால் காலையில் சீக்கிரமே எழுந்தவள்,அவன் விழிக்கும் முன் கிளம்ப எண்ணி குளிக்க சென்றாள்.
கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச,முயன்று அதை விரட்டியவன் மொபைலை எடுத்து மணியை பார்க்க, அது காலை எட்டு என காட்டியது. இதற்கு மேல் தூங்கினால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என எழுந்தவன் எதிரில் கண்ட காட்சியில் கண்கள் தானாய் விரிந்தது.
அவன் எதிரில் கையில் பாதி புடவை, மீதி தரையில் என புடவையுடன் மல்லுக்கட்டி கொண்டு நின்றிருந்தாள் அவனின் மனையாள்.
அவளுக்கு புடவை கட்டி பழக்கமே இல்லை.நிச்சயம்,
கல்யாணத்திற்கு கட்டியதோடு சரி. அதுவும் அவளின் தாய் தான் கட்டிவிட்டார். அப்படியிருக்க மதி வேறு நண்பனின் திருமணம் என்றவுடன் கையில் சிக்கிய புடவையை பெரிய இவளாட்டம் கட்ட தெரிந்தது போல் எடுத்து வந்துவிட்டாள். ஆனால் அதனை உடுத்ததான் முடியவில்லை.
'அப்பப்பா காலையிலேயே கண் கொள்ளா காட்சி தான்' என மனதுக்குள் குதுகளித்தவன் வெளியே சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு "ஏய் பொண்டாட்டி என்னடி பண்ற, சேலை எத்தனை முழம்னு கணக்கு பண்ணிட்டு இருக்கியா" என குரல் கொடுக்க,
அவன் குரலில் உடல் மொத்தமும் தூக்கிவாரி போட,அவசரமாக தன்னை சேலையால் மறைத்தவள்,அவனை நிமிர்ந்து பார்க்க,
'ஆமா இப்போ மறைச்சு என்ன ஆக போகுது, நான் தான் ஆல்ரெடி பார்த்துட்டேனே' என நினைத்தவன் மீண்டும் "என்னடி பண்ற" என்க,
அவன் முன் தெரியாது என சொல்ல பிடிக்காமல் "அது...அது" என தடுமாற, அவனோ சிரித்துக்கொண்டே…"அவ்ளோ கஷ்டப்பட்டு புடவை கட்ட வேணாம். ஏதாவது சுடிதார் போட்டுட்டு கிளம்பு டைம் ஆகிடுச்சு" என்றவன், அவனும் அவசரமாக கிளம்பினான்.
'கல்யாணத்திற்கு புடவை தானே கட்டிட்டு போக சொன்னாங்க பாட்டி. இவன் என்ன சுடிதார் போட சொல்றான்' என யோசித்தாலும் புடவையில் இருந்து விடுமுறை கிடைத்த சந்தோஷத்துடன் கிளம்பினாள்
இருவருக்கும் காலை உணவை அறைக்கே வரவழைத்தவன்,
சாப்பிட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இதுதான் முதல் முறை சென்னை வருவதால் அனைத்தையும் ஆர்வமாக பார்த்தபடி வந்தவள்,கார் ஒரு இடத்தில் நின்றவுடன் நிமிர்ந்து பார்க்க, இப்போது அவளின் கண்கள் இரண்டும் ஆச்சிரியத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது.
சென்னை மருத்துவ கல்லூரி வளாகம்...அதில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் பெரிய பேனர் போஸ்டர் கட்டப்பட்டு இருந்தது.
விழிகளில் இருந்து என்ன முயன்றும் வழியும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை அவளால்.
அவளையே பார்த்துகொண்டிருந்த மதி அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்து புன்னகைத்தான்.
இதுக்கு தானே அவனும் ஆசைப்பட்டான். தன்னவளின் லட்சியத்தை தன் லட்சியமாக கொண்டு அனைத்தையும் அவளுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியை கொடுப்பதற்காக தான் நண்பனின் திருமணம் என சென்னை வரை வர வைத்திருந்தான்.
என்ன தான் வெளியே தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாலும் அவன் வேலைக்கு சென்றவுடன் தனிமையில் தனது மார்க் ஷீட்டை கையில் வைத்துக்கொண்டு அழும் அவளை எதர்ச்சியாக பார்க்க நேர்ந்ததில் இருந்து எப்படியாவது அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதை மட்டுமே எண்ணிக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு பெரிதாக எந்த சிரமமும் இல்லாமல்,அவள் ஏற்கனவே நுழைவு தேர்வு எழுதி அதிலும் பாஸ் ஆகியிருக்க, அவளை இப்போது கலந்தாய்வுக்கு அழைத்து வந்துவிட்டான்.
விழிகளில் வழியும் கண்ணீரோடு அவனை பார்க்க,அவனோ அவள் முகத்தை கைகளில் ஏந்தி "நீ சந்தோஷபடுவேன்னு நினைச்சேன், ஆனா நீ அழறதை பார்த்தா பிடிக்கலை போல...திரும்பி போய்டலாமா" என்க,
அவளோ வேகமாக தலையாட்டி மறுத்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.அவனுக்கு அவளின் செய்கை அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது.
பின்னர் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல,ஒரு பெரிய கூட்டமே இருந்தது.
அங்கு போடபட்ட சேரில் அமர்ந்தவாறே எதிரில் இருந்த திரையில் தங்களின் எண் மற்றும் அழைப்பிற்காக காத்திருந்தனர்.
"நீ நல்ல மதிப்பெண் வாங்கியிருப்பதால் உனக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது கல்லூரியை தேர்வு செய்ய,அதனால் மதுரையில் இருக்குற மெடிக்கல் காலேஜையே தேர்வு செய்" என அவன் சொல்ல..
"அதெல்லாம் வேணாம் நான் வேற ஊர்ல தான் கேட்பேன். நான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சுக்கிறேன்" என்றாள் வர்ஷினி.
"வேனாம்டி என் கோபத்தை கிளப்பாத… சுத்தி நிறைய பேர் இருக்காங்களேன்னு பார்க்கிறேன் இல்லனா நடக்கிறதே வேற …..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, ஒன்னு நீ நம்ம வீட்டில் தங்கி மதுரையில் படிகிறதா இருந்தா படி…. இல்லனா படிக்கவே வேண்டாம்" என்றான்.
எதை சொன்னால் அவள் தன் முடிவை மாற்றி கொள்வாள் என்பது அவனுக்கா தெரியாது.
அவன் வார்த்தையில் உள்ள உறுதியில் அவளும் தன் முடிவை மாற்றி இருக்க...கலந்தாய்வு தொடங்கியது.
ரொம்ப நேரமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சிறிதுநேரத்தில் அவளை அழைத்து விட….பயத்தோடு உள்ளே நுழைந்தவள், திரும்பி வரும்போது உறைந்த புன்னகையோடு வந்தாள்.
மதுரை மருத்துவ கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்க,மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் ஓடி சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
அத்தனை பேர் அவர்களை சுற்றி இருக்க,அதை பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் இல்லை இருவருமே...அவளின் சந்தோஷம், சிரிப்பு, அணைப்பு எல்லாம் அவனுக்குள்ளும் இதமாய் இறங்கியது.
சூழ்நிலையை உணர்ந்து அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.
நேரம் மதியத்தை நெருங்யிருக்க,அவளை ஒரு உணவு விடுதிக்கு கூட்டி சென்றான்.
"உனக்கு சாப்பிட என்ன வேணும்" என கேட்க,அவளோ திருதிருவென முழித்தாள். இதற்கு முன்பு இதுபோல் எங்கயாவது வந்திருந்தால் தானே தெரிவதற்கு.
அவனே இருவருக்கும் ஆர்டர் கொடுக்க,சுடசுட பிரியாணியை ஒரு பிடி பிடித்தாள் வர்ஷினி. அடுத்தடுத்து அவன் பார்த்து பார்த்து அவளுக்காகவே ஆர்டர் கொடுக்க,அனைத்தையும் ரசித்து சாப்பிட்டாள்.கடைசியாக ஐஸ்கிரீம் கொண்டு வர சொல்ல,அவளோ "எனக்கு சேமியா ஐஸ் தான் ரொம்ப பிடிக்கும்,அதுவே சொல்லுங்க" என்க….
"அதெல்லாம் இங்க கிடைக்காதுடி குட்டி சாத்தான்.இதை சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்" என்க,
அவளும் சேமியா ஐஸ் இல்லாத வருத்தத்தில் ஐஸ்கிரீமை வாயில் வைக்க,அதன் சுவையில் லயித்து போனவள் அவனை கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை தின்றாள்,பாதியை சாப்பிட்ட பின்னர் தான் நிமிர்ந்து பார்த்தாள்.
"நீ ஐஸ்கிரீம் சாப்பிட மாட்டியா" என சாப்பிடாமல் அமர்ந்திருந்தவனை பார்த்து கேட்க,
"அதுதான் எனக்கும் சேர்த்து நீ சாப்பிடுறீயே அப்பறம் என்ன,எனக்கு வேணாம் நீயே சாப்பிடு" என்றவன் அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே பார்த்துத்திருந்தான்.
இங்கு இருவருமே மகிழ்ச்சியில் இருக்க,அங்கு இவர்கள் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்.
மதுவின் தந்தையும்,அவளின் அண்ணனும் சேர்ந்து தங்கள் பேச்சை தொடங்கினர்.
"இங்க பாரு சகுந்தலா, நான் சொல்றதை கேளு...ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போச்சுன்னா அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் நடக்கிறதே பெரிய பிரச்சனையா இருக்கும். அதுதான் அவளுக்கு பேசிய அதே முகூர்த்தத்தில் கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்" என்றார் மதுவின் தந்தை.
"அம்மா... அப்பா சொல்றதும் சரி தானே. நீங்க தான் அவளுக்கு எடுத்து சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.நீங்களே வேணாம்னு சொன்னால் என்ன அர்த்தம்" என அவனும் தங்கையின் வாழ்க்கையை நினைத்து வருந்தியவனாக எடுத்து சொல்ல முயன்றான் ஆனால் சகுந்தலா ஒற்றை காலில் நின்றுக்கொண்டு அதனை தடுக்கவே பார்த்தார்.
"என்ன சொல்றீங்க இரண்டு பேரும்...அவங்க எங்க நாம எங்க,அவனுக்கு போய் என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்றீங்க?..என் உயிரே போனாலும் நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்".
"என் மக வாழ்க்கையை வேற ஒருத்தி ராணி மாதிரி வாழ்வா...ஆனா என் பொண்ணு மட்டும் சாதாரண ஒரு குடும்பத்தில் வாக்கப்பட்டு கஷ்டபடனும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா" என இருவரையும் சாடினார்.
"அம்மா... கதிருக்கு என்ன குறை சொல்லுங்க,நல்லா படிச்சிருக்கான்,அவனும் போலீஸ் தான்.இன்ஸ்பெக்டராக இருக்கான்,எனக்கும் அவன் ப்ரெண்ட் தான் எனக்கு தெரிஞ்சு எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.
என்ன நம்மளை ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த அளவுக்கு வசதியில்லை. அதுக்காக அவங்க ஒன்னும் கஷ்டப்படும் குடும்பம் இல்லையே. இந்த ஊரில் அவங்களுக்கு ஏகபட்ட நிலபுலன்கள் எல்லாமே இருக்கு" என கதிரை பற்றி எடுத்து சொன்னான்.
ஆனால் அது அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக தான் போனது.யார் சொல்வதையும் காதில் வாங்காமல் தன்னுடைய முடிவில் இறுதியாக நின்றார்.
அனைவருமே அவர் வாயில் இருந்து சம்மதம் என்ற ஒரு வார்த்தை வந்து விடாதா என்ற நற்பாசையில் இருந்தனர்.
"யார் என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு.எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றவர்,இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க" என சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே வந்தாள் மது.
வந்தவள் அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு தன் தந்தையின் புறம் திரும்பியவள் "அப்பா நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்" என சொல்ல,
"என்னடி சொல்ற உனக்கென்ன பைத்தியமா...எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை,நான் இதை நடக்க விடமாட்டேன்" என மகளை பார்த்து கத்தினார் சகுந்தலா.
"கல்யாணம் எனக்கு, அப்போ என்னோட சம்மதம் தான் இங்க முக்கியம்.ஒருதடவை உங்க பேச்சை கேட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதித்தேன் என்ன ஆச்சு?...அதுதான் சொல்றேன் இந்த தடவையாவது என்னை முடிவெடுக்க விடுங்க. அதையும் மீறி நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்த முயற்சித்தால் அப்பறம் கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்" என இவளும் பதிலுக்கு பேசினாள்.
முதன்முறை இவர்கள் சொன்ன அனைத்திற்கும் தலையாட்டியதற்கு பரிசாக தான் பட்டது போதும் என்றே அவளே இந்த முறை முடிவை எடுத்திருந்தாள்.
அவளுக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை தான். ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.ஏற்கனவே தன் அன்னை அனைவரையும் வார்த்தையால் படுத்தும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள். அதுவும் மித்ராவை பார்த்தாள் அவருக்கு உண்டாகும் கோபமும் கண்களில் தோன்றும் வன்மமும் நல்லதுக்கு இல்லை என்றே இந்த முடிவு.
இந்த முடிவை எடுக்க இன்னும் ஒரு காரணமும் இருந்தது.அது மித்ரவர்ஷினி தான்.தான் இங்கேயே இருந்தால் அவளும் நிம்மதியாக இந்த வீட்டில் நடமாடமுடியாது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் மது.
' ஒருவேளை தனக்கு திருமணம் முடிந்தாலாவது தாயின் கோபம் குறையாதா' என்றே இதற்கு சம்மதித்தாள்.
அவளின் சம்மதம் கேட்டு வீடே மகிழ்ச்சியில் இருந்தது.அவளின் தாயை தவிர.
அவளின் சம்மதம் கிடைத்தவுடன் அங்கு மதிக்கு அழைத்து சொல்லிவிட்டார் மதுவின் தந்தை.
அனைத்திற்கும் காரண கர்த்தா மதி தான். அவன் தான் தன் மாமா மற்றும் ரகுவிடம் கதிரை பற்றி சொன்னது.
இவர்களுக்கும் மதியின் மேல் சின்ன வருத்தம் இருந்தாலும் நடந்த அனைத்தையும் நல்ல முறையாக மாற்ற நினைக்கும் அவனின் நல்ல மனதிற்காக இவர்களும் சம்மதித்து,அனைவரின் சம்மதத்தையும் பெற்றும் விட்டனர்.
அதுவும் அவனும் வர்ஷினியும் இருக்கும் போது இந்த பேச்சை தொடங்கினாள் பெரிய பிரச்சனையில் முடியும் என்பதை நன்றாக அறிந்தவன்,இருவரும் இல்லாத பொழுது பேசுமாறு இருவரிடமும் சொல்லியிருந்தான். அவன் நினைத்தது போல் எல்லாம் நன்றாகவே முடிந்தது.
ஏற்கனவே தன்னவளுடனான தனிமை மகிழ்ச்சியைத் தந்திருக்க, இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது.
அன்றைய நாள் முழுவதும் அவளை அழைத்து கொண்டு பீச்,சினிமா என சுற்றியவர்கள் இரவு உணவை வெளியே முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தனர்.
மறுநாள் காலையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தவளை எழுப்பியவன், "ஓய் பொண்டாட்டி சீக்கிரம் எழுத்து கிளம்பு" என்க…
"எங்க போறோம் ஊருக்கா" என அவளும் கேட்க,
"ஏண்டி இங்க எதுக்காக வந்தோம் என் ப்ரெண்ட் கல்யாணம்னு தானே சொன்னேன்.இன்னைக்கு தான் கல்யாணம் எழுந்து கிளம்பு என்றவன், இன்னைக்கு புடவை தான் கட்டணும் அதுவும் பாட்டி கொடுத்தாங்க இல்ல அந்த புடவையை" என சொல்லியவன் எழுந்து சென்றுவிட…
நேற்றைய கதை இன்றும் தொடர்கதையாக புடவையோடு சண்டை ஒன்று தான் போடவில்லை. அப்படி ஒரு போராட்டம் புடவைக்கும் அவளுக்கும்.
அதுவரை அறையின் பால்கனியில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அவளின் செயலை பார்த்து சத்தமாக சிரித்தான்.
அவனின் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்து திரும்பியவள் "ஏய் லூசு...பொறுக்கி வெளிய போடா, இப்படிதான் டிரஸ் மாத்தும் போது வருவியா... நேத்தும் இப்படிதான் பண்ண" என அவனை திட்ட,
"சரி நான் இப்போ வெளிய போய்ட்டா மட்டும் நீ கிளம்பி வந்துடுவியா" என்றவன் அவளையே அழுத்தமாக பார்க்க,
"இப்போ என்ன பண்ண சொல்ற,எனக்கு புடவையே கட்ட வரலை. பேசாம நான் சுடிதாரையே போட்டுக்குறேன்" என்றாள் வெறுப்பாக.
அவனும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக "இங்க வா நான் கட்டி விடுறேன்" என கூப்பிட, அவளோ அவனை முறைத்து பார்த்தாள்.
"அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.உன்கிட்ட எல்லாம் என்னால….என இழுத்தவள், முடியாது முடியாது" என அவசரமாக தலையாட்டி மறுத்தாள்.
"அப்போ இப்படியே என் கூட வர போறியா,எனக்கு ஓகே தான் என நக்கல் செய்தவன், சரி வெயிட் பண்ணு ஹோட்டல்ல இருக்குற லேடி ஒர்கர் யாராவது இருந்தால் கூப்பிடுறேன்" என கிளம்ப முயல..
'அது எப்படி யாரோ ஒருவர் முன் அப்படி நிற்பது, அது பெண்ணாகவே இருந்தாலும் அது எப்படி தன்னால் முடியும்' என யோசித்தவள் அவனை தடுத்தாள்.