அத்தியாயம் - 23
குழந்தையோடு வீடு வந்து சேர எடுத்துக்கொண்ட ஒரு வாரமும் ஒருமுறை கூட மரகதம் மருமகளையோ பேத்தியையோ பார்க்க கூட செல்லவில்லை.
சாந்தி நேராக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட, தினமும் சண்முகம் மட்டும் மனைவி குழந்தைகளை சென்று பார்த்து வருவார்.அன்றும் இருவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மகனை தடுத்த மரகதம் "அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கப்பா" என கேட்க,அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் "என்னம்மா கேட்கிறீங்க புரியலை" என சொல்ல,
"ஏண்டா... இப்படியே இளிச்சவாயனா இருந்தா அவ்ளோ தான்.நான் எதை பத்தி பேசுறன்னு கூட தெரியாம இருக்குறியே,உன் பொண்டாட்டி பிள்ளைங்க பத்தி தான் கேட்கிறேன்" என சொன்னவரை பார்த்து,
"அவங்களை பத்தி என்ன சொல்லனும்.மூணு பேரும் நல்லா இருக்காங்க...நீங்க என்னவோ சொல்லவரீங்கன்னு நல்லா தெரியுது. எதுவா இருந்தாலும் புரியும்படி சொல்லுங்க?..இந்த சுத்தி வலைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்" என நேரடியாக விஷயத்திற்கு வந்தவர் தாயின் முகத்தையே பார்க்க,
ஒரு பெருமூச்சை வெளியிட்ட மரகதம் "இங்க பாருடா நமக்கு நம்மளோட குடும்பம் தான் முக்கியம். அதுதான் அந்த டாக்டர் திரும்பவும் குழந்தை பெத்துக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களே, அதை பத்தி கேட்டேன்" என தயக்கமாக குரலில் சொல்ல,
"அதுக்கு என்னம்மா பண்ண முடியும். கடவுள் கொடுத்தது இதுதான்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.முதல்ல எனக்கு கூட கொஞ்சம் வருத்தம் இருந்தது தான் இல்லைன்னு சொல்லல...ஆனா குழந்தை முகத்தை பார்த்ததும் எல்லாமே ஓடி போய்டுச்சு.ஆனா நீங்க இன்னும் குழந்தையை கூட பார்க்கலையே" என வருத்தமாக சொல்ல,
"நான் எதை பத்தி சொல்றேன்,நீ எதை சொல்ற,இந்த வீட்டுக்கு உனக்கு அடுத்து ஒரு மகன் வேணாமா?...பேசாம நான் சொல்றதை கேளு நம்ம சொந்ததிலேயே ஒரு பொண்ணு இருக்கு இரண்டா தாரமா கட்டிக்கோ.பொண்ணு வீட்டுல கூட பேசிட்டேன்.அவங்களுக்கும் சம்மதம் தான்" என்ற தாயை அதிர்ந்து பார்த்தார் சண்முக சுந்தரம்.
"அம்மா….ஆ.. என்ன பேசுறீங்க?...உங்களால எப்படி இப்படியெல்லாம் பேச முடியுது. நான் போய் இன்னொரு கல்யாணம்.என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியலை. வேண்டாம் இதோடு இந்த பேச்சை நிறுத்திக்கோங்க. நீங்க தலைகீழா நின்னாலும் இது நடக்கவே நடக்காது" என்றவர் கோபத்தோடு சென்றுவிட,
இவன்கிட்ட பேசி ஒன்னும் ஆகப்போறது இல்ல,நான் யாருகிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன் என தனக்குள் சொல்லிக்கொண்டவர், மறுநாள் மகன் வேலைக்கு சென்றவுடன் சாந்தியை காண வந்துவிட்டார்.
இத்தனை நாட்கள் கழித்து வரும் மாமியாரை பார்த்தவுடன் அப்பாடா இப்போதாவது கோபம் குறைந்து வந்துவிட்டார் என சந்தோஷப் பட, மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றாள். அவரை தொடர்ந்து கணவன் வழி சொந்தங்கள் அனைத்தும் வந்திருக்க அனைவரையும் வரவேற்றனர்.
"வாங்க அத்தை...வாங்க" என அனைவரையும் அழைத்து, குழந்தையை பார்க்கத்தான் தான் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி நேராக அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் மகளை தூங்கிவர அறைக்கு செல்ல முயல,
அவரோ "நாங்க யாரையும் பார்க்க வரலை.உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் வந்தேன், அதனால இங்கனயே பேசலாம்" என நடுகூடத்திலேயே அனைவர் முன்பும் பேச்சை தொடங்கினார்.
அனைவரும் கேள்வியாக மரகதத்தின் முகத்தையே பார்க்க,அடுத்து அவர் சொன்ன வார்த்தையில் சாந்தியின் மொத்த குடும்பமே அதிர்ந்தது.
"நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன்...எனக்கு என் குடும்பம் விருத்தியடையனும்,உன்னால முடியாதுன்னு தெரியும் அதனால எப்படியாவது நீதான் என் பையனை இரண்டாவது கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கணும்" என்றார்.
அத்தனை பேர் முன்பும் இப்படி பேசியது கூனிகுறுக செய்ய...விழிகள் கலங்க தன் மாமியாரையே பார்த்துக்கொண்டிருக்க,உள்ளே மகள் அழுகும் குரல் கேட்டது.
சட்டென்று உள்ளே சென்று மகளை தூக்கி வந்த சாந்தி 'இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்த்தாவது மனம் மாறிவிட மாட்டாரா' என நற்ப்பாசையில் "அத்தை இவளை பாருங்க இவளும் உங்க பேத்தி தானே...அப்பறம் ஏன் அத்தை இந்த மாதிரி" என அங்கே தன் வாழ்க்கையே பறிபோய் விடுமோ என்று கண்ணீர் வடிக்க,
சுற்றி நின்ற குடும்பத்தினரும் முதலில் பொறுமையாக எடுத்து சொல்ல,அதை கேட்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிந்தவுடன் "உங்களுக்கு எல்லாம் மன சாட்சியே இல்லையா நீங்களும் ஒரு பொண்ணு தானே" என கேட்க,
"ஏன் சொல்ல மாட்டீங்க, என் குடும்ப விளக்கை ஏற்ற வந்த மகாலட்சுமின்னு நினைச்சு தான் நானும் பெண் எடுத்தேன். கடைசியில என்னாச்சு... விளக்கு அனஞ்சு போனது தான் மிச்சம்.போதும் உங்க பொண்ணோட என் மகன் வாழ்ந்த வாழ்க்கை.இத்தோடு எல்லாத்தையும் முடிச்சிக்களாம்.என்னோட முடிவு இதுதான் இரண்டு பேருக்கும் வெட்டிவிட்டுட்டு என் சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கு அவளை தான் என் மகனுக்கு கட்டி வைக்க போறேன்" என்றவர்,
"என் மகனும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்" என ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட, எல்லாரும் அதிர்ந்தாலும்
சாந்தி முகத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. "இல்ல நீங்க சொன்னதை நான் நம்ப மாட்டேன். அவரு கண்டிப்பா அப்படி சொல்லியிருக்க மாட்டார்" என சொன்ன சாந்தி இப்போது தைரியமா மாமியாரை எதிர்கொண்டார் தன் கணவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில்.
மரகதம் அதன் பின்னரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க,ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க சாந்தியின் இரண்டு அண்ணங்களும் "இங்க பாருங்கமா வயசுல பெரியவங்களாச்சேன்னு அமைதியா இருக்கேன். இல்லனா நடக்கிறதே வேற...முதல்ல இங்கிருந்து கிளம்புங்க" என கோபத்தில் கத்த,
அதுவரை பொறுமையாக இருந்த ஊர்க்காரர்கள் "ஓ… அப்படியா,உனக்கு மட்டும் தான் கோபம் வருமா ஏன் எங்களுக்கு எல்லாம் வராதா" என சண்டைக்கு தயாராக...வாய் சண்டை திடீரென்று அடிதடிக்கு மாறிவிட்டது.
அப்போது மகளையும் மனைவியையும் காண வந்த சண்முக சுந்தரத்தை பார்த்தவுடன், மரகதம் இதுதான் சமயம் என்று ஒண்ணுக்கு இரண்டாய் கண்ணீரோடு போட்டு கொடுக்க,அவரின் சொந்தங்களும் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இல்லாதது பொல்லாதது என்று இட்டுக்கட்டி சொல்ல,
அவரும் கோபத்தில் தன் மச்சான்களை முறைத்தவர், "இதுதான் நீங்க எங்களுக்கு கொடுக்குற மரியாதையா?...ஏதோ பெரியவங்க தெரியாம பேசினால் அதுக்காக அவங்களை இப்படி தான் மரியாதை இல்லாமல் நடத்துவீங்க இல்ல" என கோபத்தில் பேசியவர் மீண்டும் பிரச்சனையை பெரிதாக்காமல் அனைவரையும் கிளப்ப,
அவர்களோ "அது எப்படி அடிவாங்கிட்டு பேசாம போக நாங்க என்ன மான ரோஷம் இல்லாதவங்களா...முதல்ல உங்க மச்சான் இரண்டு பேரையும் எங்ககிட்ட மன்னிப்பை கேட்க சொல்லுங்க" என கத்த,
சாந்தி குடும்பம் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க...சண்முக சுந்தரத்திற்கு மனைவியின் சொந்தங்களை விட தங்கள் சொந்தமே முதன்மையாக இருக்க "இப்போ நீங்க மன்னிப்பு கேட்க்கலைன்னா... அப்பறம் கடைசிவரை உங்க தங்கச்சி உங்க வீட்லயே இருக்க வேண்டியது தான். இதுவரைக்கும் உங்க தங்கச்சியை விட்டுட்டு வேறு பொண்ணை கல்யாணம் பண்ணும் எண்ணம் எனகில்லை ஆனா அதை வர வச்சீடாதீங்க" என்று அத்தனை பேர் முன்பும் மனைவியை முன்னிறுத்தி கேட்க,
சாந்தி விழிகளில் வழியும் கண்ணீரோடு கணவனையே பார்த்தவர்,திரும்பி தன் அண்ணன்கள் முகத்தை பார்க்க, தங்கைக்காக எதற்கும் துணிந்தவர்கள் அதற்கும் ஒத்துக்கொண்டு மன்னிப்பை வேண்ட வர….கூட்டத்தில் நின்ற மேகலா இதுதான் நேரம் என்று எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கனும்" என்றார்.
அனைவரும் "ஆமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் இல்லனா உங்க பொண்ணு வாழாவெட்டி தான்.உங்களுக்கு வேற வழியில்லை" என சொல்ல,ஆனால் இதற்கு சாந்தியே "அதெல்லாம் முடியாது.அவங்க எந்த தப்பும் பண்ணமா எனக்காக யாரு காலில் விழ மாட்டாங்க" என்க,
மரகதத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. எப்படியும் மகனின் கோபத்தை அதிகப்படுத்தி அப்படியே இவளையும் தலை முழ்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏத்திவிட…."அப்போ நாங்க கிளம்புறோம் உங்களுக்கும் உங்க பொண்ணு மேல அக்கறையில்லை...அவளுக்கும் என்னோட வாழ ஆசையில்லை. அப்பறம் நான் மட்டும் எதுக்கு கவலைப்படனும்" என்றவர் அனைவரோடும் கிளம்ப,
வாசல்வரை வாசலை தாண்டும் போது மித்ரா தந்தையின் காலை பிடித்துக்கொண்டு தூக்க சொல்லி அடம்பிடிக்க,கோபத்தில் மனைவியை வேண்டாம் என சொல்ல முடிந்தவரால் மகளை சொல்ல முடியவில்லை.
திரும்பி மனைவியின் அருகில் வந்தவர் "உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரேன்...உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ….நான் தான் வேணும்னா இனிமேல் உனக்கு பிறந்த வீடுண்ணு ஒன்னு இருக்கிறதை இன்னையோடு தலை முழ்கிட்டு வா... எனக்கு பொண்டாட்டியா மட்டும்" என்க,
என்னதான் பெற்றவர்கள் முக்கியம் என்றாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என சொல்லும் வர்க்கத்தில் இருந்தவளுக்கு கணவனே முக்கியமாக தெரிய மனதை கல்லாக்கி கொண்டு அவரோடு சென்றார்.
அவ்வளவு தான் அதன் பின் பிறந்த வீடு சொந்தம் மொத்தமும் விட்டு போக,கணவனுக்கு தெரியாமல் அவர்களோடு பேசுவதில் உடன்பாடு இல்லாததால் வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். முன்பு போல் கணவரும் சரியாக பேசாததால் அவர்கள் இடையே இருந்த மெல்லிய விரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக தாயும் தங்கையும் சேர்ந்து தினமும் ஒரு பிரச்சனையை கிளப்ப...சுத்தமாக மனைவியை தவிர்த்துவிட்டார். அந்த விரிசல் தொடர்ந்து மகள்களிடமும் ஆரம்பிக்க...வீட்டில் பேசுவதையே குறைத்துக்கொண்டார்.
தன் அத்தையை காண வந்த மதியையும் திட்டி விரட்டிவிட்ட மரகதம், அந்த வீட்டின் மகாராணி போலவும் சாந்தி மற்றும் அவளின் பிள்ளைகளையும் மகன் கண்களுக்கு தெரியாமல் ஒரு அடிமை போலவே நடத்த தொடங்கிவிட்டார்.
அதுவரை சுதந்திரமாக இருந்த மித்ராவிற்கு அங்கு இருக்கவே பிடிக்காமல் தன் மாமா வீட்டுக்கு ஓடிவிடுபவள் மதியோடு சுற்ற...அது எப்படியோ மரகத்தின் காதில் விழுந்துவிட,குழந்தை என்றும் பாராமல் அடி வெளுத்துவிட்டார்.
ஆனால் அதற்கும் அடங்காமல் திரும்ப திரும்ப அதையே செய்ய…. மதியின் கண் முன்பே அவள் வாங்கிய அடியை பார்த்து மதியே அவளிடமிருந்து கொஞ்ச கொஞ்சமாக ஒத்துங்கிவிட்டான். மீண்டும் மீண்டும் அவனை சுற்றியே வரும் மித்ராவை பார்த்து பாவமாக இருந்தாலும் எங்கே தான் பேசினால் அவள் அடிவாங்கி விடுவாளோ என்றே அவள் அழுகை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு கடந்து செல்லுபவன் வீட்டில் உள்ளவர்களிடம் பேச கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டான்.
அப்படி ஒரு நாளில் தான் மித்ரா... "மதியிடம் என்கிட்ட நீ பேச மாட்டியா?..நான் வேனா இனிமேல் உன்னை மாமான்னு கூப்பிடுறேன்.வாடா போடா எல்லாம் சொல்ல மாட்டேன்" என அவனின் பலநாள் ஆசையை சொல்ல...அவனோ உனக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா,எனக்கு தான் உன்னை பார்க்கவே பிடிக்கலைன்னு சொல்றேன் இல்ல போ" என விரட்டினான் தூரத்தில் தன் மாமா வருவதை பார்த்துவிட்டு.
அவளோ அழுதுகொண்டே "அப்போ உனக்கு மித்து பாப்பா உண்மையிலேயே வேணாமா" என்க,அவனும் "வேணாம் வேணாம்" என கத்தினான்.
அப்போது அங்கு அவளின் தந்தை வந்துவிட, அவளும் சலுகையாய் "அப்பா..ஆ... மதி என் கூட" என சொல்ல வரும் முன்பே பளார் என்று குழந்தையை அறைய...அப்படியே கீழே சுருண்டு விழுந்துவிட்டாள்.
ஆல்ரெடி தன் அத்தையை பார்க்கவிடாமல் செய்ததில் அவர் மேல் கோபத்தில் இருந்தவனுக்கு இதுவும் கோபத்தை கிளப்ப ...கொஞ்சமும் யோசிக்காமல் அத்தனை பேர் முன்பும் அவர் சட்டையை பிடித்துவிட்டான் மதி.
"உங்களால தான் அன்னைக்கு என் அத்தை அழுதாங்க...இப்போ இவ,இன்னொரு வாட்டி இரண்டு பேர் மேலயும் கைவச்சீங்க அப்பறம் அவ்ளோதான். ஊர்ல இருக்கிறவன் எல்லாரும் உங்களுக்கு பயப்படலாம் ஆனா எனக்கு அப்படியெல்லாம் கிடையாது" என சொன்னவன் சட்டையை விட்டுவிட்டு கீழே விழுந்தவளை பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட்டான்.
நாட்கள் செல்ல அவளுக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்த வயதில் அவனிடம் பேச சொல்லி கெஞ்சுவதை நிறுத்திவிட்டு…'இனி நீயே வந்து பேசினாலும் நான் பேச மாட்டேன்' என்ற வைராக்கியத்துடன் அவள் தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள்.
அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் முகம் பார்க்க,அவளோ அழ தயாராக இருந்தாள். எட்டி அவளை அணைத்தவன் "அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் டா… அதுதான் என் மித்து குட்டியை கட்டம் கட்டி தூக்கிட்டு வந்திட்டேனே" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "அப்போ எனக்காக தான் நீங்க எல்லாரும் என்கிட்ட பேசாம விலகி விலகி போனீங்களா?...இது தெரியாம எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என வருந்தியவள்,அவன் முகம் பற்றி தன் காதலை முத்தத்தில் உணர்த்த,அவனும் பதிலுக்கு பதில் அவள் கொடுத்ததை அவளுக்கே திருப்பி கொடுத்தான்.
மறுநாள் என்றுமில்லாமல் தாத்தா,பாட்டி அத்தை மாமா என அனைவரிடமும் இயல்பாக உரிமையுடன் பேசியவள் இத்தனை நாள் அவர்களிடம் பேசாமல் இருந்ததிற்கு மன்னிப்பும் கேட்டுவிட...இழந்த சொர்கம் மீண்டுவிட்ட சந்தோஷத்தில் அனைவரும் புன்னகையோடு வலம் வந்தனர்....மீனா "முதல்ல வீட்டில உள்ள எல்லாரையும் உட்கார வச்சு சுத்தி போடு. என் கண்ணே பட்டுடும் போல" என்றார் பாட்டி.
மித்ரா கல்லூரிக்கு கிளம்ப... எப்போதும் பேசிக்கொண்டே வரும் மது இன்று அமைதியாக இருக்க…"அக்கா என்ன?..ஒரே ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல,என்ன மாமாவோட சண்டையா?..."என சரியாக கேட்க,
உனக்கு எப்படி தெரியும் என திருதிருத்தவளை பார்த்து "ரொம்ப யோசிக்காதீங்க,அதுதான் உங்க மூஞ்சியில் எழுதி ஒட்டியிருக்கே…" என சிரித்தவளை பார்த்து,
"என் முகத்துல தெரியரது இருக்கட்டும்...என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க,நேத்து வேற மேடம் காலேஜ் லீவ்,என்ன மேட்டர்" என்றவளை பார்க்க முடியாமல் அழகாக வெட்கப்பட, "ஓ... மேடம்க்கு வெட்கமெல்லாம் பட தெரியுமா?...இது தெரியாம போச்சே" என கலாய்க்க, இருவருமே சிரித்துக்கொண்டே கல்லூரிக்கு சென்றனர்.
இங்கு பிரகாஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான். என்ன முயற்சி செய்தும் நண்பனை விடுவிக்க முடியாத கோபம் மொத்தமும் வெறியாக மதியின் மேல் திரும்பியது. அவனை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன்.அதான் இப்படி ஆகிடுச்சு, ஆனா திரும்பவும் அவன்கிட்ட தோற்க மாட்டேன் என கத்தியவன், மதியை வீழ்த்த திட்டங்களை தீட்ட தொடங்கினான்.
"பிரகாஷ் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராத… இன்னும் உன் படிப்பு முடியலை அது நினைவில் இருக்கா?...முதல்ல படிப்பை முடிச்சிட்டு உன்னோட மேற்படிப்பை லண்டன்ல உள்ள பெரிய யுனிவர்சிட்டியில் படிக்க சீட் ரெடியா இருக்கு.நீ இங்கேயே இருந்தா...இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் உன் பிரென்ட் உங்க எல்லார் பேரையும் சொல்லிட்டா உன் எதிர்காலமே வீனா போயிடும். அதனால இந்த விஷயத்திலாவது எங்க பேச்சை கேளு" என அவனின் தந்தையும் தாயும் எடுத்து சொல்ல,
"எப்படிப்பா அவனை சும்மா விட்டுட்டு போக சொல்றீங்க?..முடியாது போகிறதுக்கு முன்னாடி அவனை ஒருவழி பண்ணிட்டு தான் போவேன்" என ஆத்திரத்தில் கத்தும் மகனை சமாதானப்படுத்தும் விதமாக…
"அதைதான் நாங்களும் சொல்றோம்.கோபத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தில் தான் முடியும். கொஞ்சம் இந்த விஷயத்தை ஆறப் போடுவோம்.அதுக்குள்ள நீ உன் படிப்பை முடிச்சிடலாம் அப்பறம் நானே உனக்கு எல்லாவிதத்திலும் ஹெல்ப் பண்றேன்" என எந்த தந்தையும் செய்யாத... மகனின் கேவலமான எண்ணத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பிரகாஷின் தந்தை. அவனின் தந்தையே இவ்வளவு கேவலமானவனாக இருக்கும் போது அவரின் மகன் பிரகாஷ் மட்டும் எப்படி இருப்பான்.
கல்லூரிக்கு வந்த பிரகாஷ்...தன் நண்பர்களிடம் தந்தை சொன்னதை சொல்ல,அவர்களும் அதையே சொல்ல...பின்னர் அவனும் அதனை ஏற்றுக்கொண்டான். "எல்லாம் சரிடா ஆனா இவளை விட்டுட்டு எப்படிடா போறது.எனக்கு எது இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனா எந்த காரணத்திற்காகவும் இவளை மட்டும் என்னால் விட்டு கொடுக்க முடியாது….அது என்னவோ தெரியலை அவ மேல அப்படி ஒரு வெறி,அவளை முழுசா அடையிற வரை அது அடங்கவே அடங்காது" என மித்ராவையே மோக பார்வை பார்த்துக்கொண்டே சொல்ல,
"மச்சான் இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் முடிக்க போறா...இன்னும் முழுசா நாலு வருஷம் இருக்கு.அதுக்குள்ள நீயும் திரும்ப வந்திடலாம். அப்பறம் என்ன அவளுக்கும் பிடிச்சா கட்டிக்கோ... இல்லையா வச்சுக்கோ அவ்ளோ தான் மேட்டர்.இதுக்கா இவளோ ஃபீல் பண்ற. அவளை பார்த்தா யாரையும் காதலிக்கிற மாதிரி தெரியலை,அப்படியே அது மாதிரி ஏதாவதுன்னா நமக்கா தெரியாது என்ன பண்ணனும்னு. ஜஸ்ட் ஃபீல் ஃப்ரீ டா.நாங்க இருக்கோம்" என்ற நண்பர்களின் வார்த்தை அவனையும் வெளிநாடு செல்ல சம்மதிக்க வைத்தது.
குழந்தையோடு வீடு வந்து சேர எடுத்துக்கொண்ட ஒரு வாரமும் ஒருமுறை கூட மரகதம் மருமகளையோ பேத்தியையோ பார்க்க கூட செல்லவில்லை.
சாந்தி நேராக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுவிட, தினமும் சண்முகம் மட்டும் மனைவி குழந்தைகளை சென்று பார்த்து வருவார்.அன்றும் இருவரையும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த மகனை தடுத்த மரகதம் "அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்கப்பா" என கேட்க,அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாமல் "என்னம்மா கேட்கிறீங்க புரியலை" என சொல்ல,
"ஏண்டா... இப்படியே இளிச்சவாயனா இருந்தா அவ்ளோ தான்.நான் எதை பத்தி பேசுறன்னு கூட தெரியாம இருக்குறியே,உன் பொண்டாட்டி பிள்ளைங்க பத்தி தான் கேட்கிறேன்" என சொன்னவரை பார்த்து,
"அவங்களை பத்தி என்ன சொல்லனும்.மூணு பேரும் நல்லா இருக்காங்க...நீங்க என்னவோ சொல்லவரீங்கன்னு நல்லா தெரியுது. எதுவா இருந்தாலும் புரியும்படி சொல்லுங்க?..இந்த சுத்தி வலைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்" என நேரடியாக விஷயத்திற்கு வந்தவர் தாயின் முகத்தையே பார்க்க,
ஒரு பெருமூச்சை வெளியிட்ட மரகதம் "இங்க பாருடா நமக்கு நம்மளோட குடும்பம் தான் முக்கியம். அதுதான் அந்த டாக்டர் திரும்பவும் குழந்தை பெத்துக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களே, அதை பத்தி கேட்டேன்" என தயக்கமாக குரலில் சொல்ல,
"அதுக்கு என்னம்மா பண்ண முடியும். கடவுள் கொடுத்தது இதுதான்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.முதல்ல எனக்கு கூட கொஞ்சம் வருத்தம் இருந்தது தான் இல்லைன்னு சொல்லல...ஆனா குழந்தை முகத்தை பார்த்ததும் எல்லாமே ஓடி போய்டுச்சு.ஆனா நீங்க இன்னும் குழந்தையை கூட பார்க்கலையே" என வருத்தமாக சொல்ல,
"நான் எதை பத்தி சொல்றேன்,நீ எதை சொல்ற,இந்த வீட்டுக்கு உனக்கு அடுத்து ஒரு மகன் வேணாமா?...பேசாம நான் சொல்றதை கேளு நம்ம சொந்ததிலேயே ஒரு பொண்ணு இருக்கு இரண்டா தாரமா கட்டிக்கோ.பொண்ணு வீட்டுல கூட பேசிட்டேன்.அவங்களுக்கும் சம்மதம் தான்" என்ற தாயை அதிர்ந்து பார்த்தார் சண்முக சுந்தரம்.
"அம்மா….ஆ.. என்ன பேசுறீங்க?...உங்களால எப்படி இப்படியெல்லாம் பேச முடியுது. நான் போய் இன்னொரு கல்யாணம்.என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியலை. வேண்டாம் இதோடு இந்த பேச்சை நிறுத்திக்கோங்க. நீங்க தலைகீழா நின்னாலும் இது நடக்கவே நடக்காது" என்றவர் கோபத்தோடு சென்றுவிட,
இவன்கிட்ட பேசி ஒன்னும் ஆகப்போறது இல்ல,நான் யாருகிட்ட பேசனுமோ அவங்ககிட்ட பேசிக்கிறேன் என தனக்குள் சொல்லிக்கொண்டவர், மறுநாள் மகன் வேலைக்கு சென்றவுடன் சாந்தியை காண வந்துவிட்டார்.
இத்தனை நாட்கள் கழித்து வரும் மாமியாரை பார்த்தவுடன் அப்பாடா இப்போதாவது கோபம் குறைந்து வந்துவிட்டார் என சந்தோஷப் பட, மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றாள். அவரை தொடர்ந்து கணவன் வழி சொந்தங்கள் அனைத்தும் வந்திருக்க அனைவரையும் வரவேற்றனர்.
"வாங்க அத்தை...வாங்க" என அனைவரையும் அழைத்து, குழந்தையை பார்க்கத்தான் தான் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி நேராக அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் மகளை தூங்கிவர அறைக்கு செல்ல முயல,
அவரோ "நாங்க யாரையும் பார்க்க வரலை.உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் வந்தேன், அதனால இங்கனயே பேசலாம்" என நடுகூடத்திலேயே அனைவர் முன்பும் பேச்சை தொடங்கினார்.
அனைவரும் கேள்வியாக மரகதத்தின் முகத்தையே பார்க்க,அடுத்து அவர் சொன்ன வார்த்தையில் சாந்தியின் மொத்த குடும்பமே அதிர்ந்தது.
"நான் நேரடியாக விஷயத்துக்கு வரேன்...எனக்கு என் குடும்பம் விருத்தியடையனும்,உன்னால முடியாதுன்னு தெரியும் அதனால எப்படியாவது நீதான் என் பையனை இரண்டாவது கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கணும்" என்றார்.
அத்தனை பேர் முன்பும் இப்படி பேசியது கூனிகுறுக செய்ய...விழிகள் கலங்க தன் மாமியாரையே பார்த்துக்கொண்டிருக்க,உள்ளே மகள் அழுகும் குரல் கேட்டது.
சட்டென்று உள்ளே சென்று மகளை தூக்கி வந்த சாந்தி 'இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்த்தாவது மனம் மாறிவிட மாட்டாரா' என நற்ப்பாசையில் "அத்தை இவளை பாருங்க இவளும் உங்க பேத்தி தானே...அப்பறம் ஏன் அத்தை இந்த மாதிரி" என அங்கே தன் வாழ்க்கையே பறிபோய் விடுமோ என்று கண்ணீர் வடிக்க,
சுற்றி நின்ற குடும்பத்தினரும் முதலில் பொறுமையாக எடுத்து சொல்ல,அதை கேட்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிந்தவுடன் "உங்களுக்கு எல்லாம் மன சாட்சியே இல்லையா நீங்களும் ஒரு பொண்ணு தானே" என கேட்க,
"ஏன் சொல்ல மாட்டீங்க, என் குடும்ப விளக்கை ஏற்ற வந்த மகாலட்சுமின்னு நினைச்சு தான் நானும் பெண் எடுத்தேன். கடைசியில என்னாச்சு... விளக்கு அனஞ்சு போனது தான் மிச்சம்.போதும் உங்க பொண்ணோட என் மகன் வாழ்ந்த வாழ்க்கை.இத்தோடு எல்லாத்தையும் முடிச்சிக்களாம்.என்னோட முடிவு இதுதான் இரண்டு பேருக்கும் வெட்டிவிட்டுட்டு என் சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்கு அவளை தான் என் மகனுக்கு கட்டி வைக்க போறேன்" என்றவர்,
"என் மகனும் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்" என ஒரு பெரிய அணுகுண்டை தூக்கி போட, எல்லாரும் அதிர்ந்தாலும்
சாந்தி முகத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. "இல்ல நீங்க சொன்னதை நான் நம்ப மாட்டேன். அவரு கண்டிப்பா அப்படி சொல்லியிருக்க மாட்டார்" என சொன்ன சாந்தி இப்போது தைரியமா மாமியாரை எதிர்கொண்டார் தன் கணவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையில்.
மரகதம் அதன் பின்னரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க,ஒரு கட்டத்தில் பொறுமை பறக்க சாந்தியின் இரண்டு அண்ணங்களும் "இங்க பாருங்கமா வயசுல பெரியவங்களாச்சேன்னு அமைதியா இருக்கேன். இல்லனா நடக்கிறதே வேற...முதல்ல இங்கிருந்து கிளம்புங்க" என கோபத்தில் கத்த,
அதுவரை பொறுமையாக இருந்த ஊர்க்காரர்கள் "ஓ… அப்படியா,உனக்கு மட்டும் தான் கோபம் வருமா ஏன் எங்களுக்கு எல்லாம் வராதா" என சண்டைக்கு தயாராக...வாய் சண்டை திடீரென்று அடிதடிக்கு மாறிவிட்டது.
அப்போது மகளையும் மனைவியையும் காண வந்த சண்முக சுந்தரத்தை பார்த்தவுடன், மரகதம் இதுதான் சமயம் என்று ஒண்ணுக்கு இரண்டாய் கண்ணீரோடு போட்டு கொடுக்க,அவரின் சொந்தங்களும் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் இல்லாதது பொல்லாதது என்று இட்டுக்கட்டி சொல்ல,
அவரும் கோபத்தில் தன் மச்சான்களை முறைத்தவர், "இதுதான் நீங்க எங்களுக்கு கொடுக்குற மரியாதையா?...ஏதோ பெரியவங்க தெரியாம பேசினால் அதுக்காக அவங்களை இப்படி தான் மரியாதை இல்லாமல் நடத்துவீங்க இல்ல" என கோபத்தில் பேசியவர் மீண்டும் பிரச்சனையை பெரிதாக்காமல் அனைவரையும் கிளப்ப,
அவர்களோ "அது எப்படி அடிவாங்கிட்டு பேசாம போக நாங்க என்ன மான ரோஷம் இல்லாதவங்களா...முதல்ல உங்க மச்சான் இரண்டு பேரையும் எங்ககிட்ட மன்னிப்பை கேட்க சொல்லுங்க" என கத்த,
சாந்தி குடும்பம் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க...சண்முக சுந்தரத்திற்கு மனைவியின் சொந்தங்களை விட தங்கள் சொந்தமே முதன்மையாக இருக்க "இப்போ நீங்க மன்னிப்பு கேட்க்கலைன்னா... அப்பறம் கடைசிவரை உங்க தங்கச்சி உங்க வீட்லயே இருக்க வேண்டியது தான். இதுவரைக்கும் உங்க தங்கச்சியை விட்டுட்டு வேறு பொண்ணை கல்யாணம் பண்ணும் எண்ணம் எனகில்லை ஆனா அதை வர வச்சீடாதீங்க" என்று அத்தனை பேர் முன்பும் மனைவியை முன்னிறுத்தி கேட்க,
சாந்தி விழிகளில் வழியும் கண்ணீரோடு கணவனையே பார்த்தவர்,திரும்பி தன் அண்ணன்கள் முகத்தை பார்க்க, தங்கைக்காக எதற்கும் துணிந்தவர்கள் அதற்கும் ஒத்துக்கொண்டு மன்னிப்பை வேண்ட வர….கூட்டத்தில் நின்ற மேகலா இதுதான் நேரம் என்று எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கனும்" என்றார்.
அனைவரும் "ஆமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும் இல்லனா உங்க பொண்ணு வாழாவெட்டி தான்.உங்களுக்கு வேற வழியில்லை" என சொல்ல,ஆனால் இதற்கு சாந்தியே "அதெல்லாம் முடியாது.அவங்க எந்த தப்பும் பண்ணமா எனக்காக யாரு காலில் விழ மாட்டாங்க" என்க,
மரகதத்திற்கு இதுவே போதுமானதாக இருந்தது. எப்படியும் மகனின் கோபத்தை அதிகப்படுத்தி அப்படியே இவளையும் தலை முழ்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏத்திவிட…."அப்போ நாங்க கிளம்புறோம் உங்களுக்கும் உங்க பொண்ணு மேல அக்கறையில்லை...அவளுக்கும் என்னோட வாழ ஆசையில்லை. அப்பறம் நான் மட்டும் எதுக்கு கவலைப்படனும்" என்றவர் அனைவரோடும் கிளம்ப,
வாசல்வரை வாசலை தாண்டும் போது மித்ரா தந்தையின் காலை பிடித்துக்கொண்டு தூக்க சொல்லி அடம்பிடிக்க,கோபத்தில் மனைவியை வேண்டாம் என சொல்ல முடிந்தவரால் மகளை சொல்ல முடியவில்லை.
திரும்பி மனைவியின் அருகில் வந்தவர் "உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தரேன்...உனக்கு நான் வேணுமா இல்ல உன் குடும்பமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ….நான் தான் வேணும்னா இனிமேல் உனக்கு பிறந்த வீடுண்ணு ஒன்னு இருக்கிறதை இன்னையோடு தலை முழ்கிட்டு வா... எனக்கு பொண்டாட்டியா மட்டும்" என்க,
என்னதான் பெற்றவர்கள் முக்கியம் என்றாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என சொல்லும் வர்க்கத்தில் இருந்தவளுக்கு கணவனே முக்கியமாக தெரிய மனதை கல்லாக்கி கொண்டு அவரோடு சென்றார்.
அவ்வளவு தான் அதன் பின் பிறந்த வீடு சொந்தம் மொத்தமும் விட்டு போக,கணவனுக்கு தெரியாமல் அவர்களோடு பேசுவதில் உடன்பாடு இல்லாததால் வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். முன்பு போல் கணவரும் சரியாக பேசாததால் அவர்கள் இடையே இருந்த மெல்லிய விரிசலை மேலும் அதிகரிக்கும் விதமாக தாயும் தங்கையும் சேர்ந்து தினமும் ஒரு பிரச்சனையை கிளப்ப...சுத்தமாக மனைவியை தவிர்த்துவிட்டார். அந்த விரிசல் தொடர்ந்து மகள்களிடமும் ஆரம்பிக்க...வீட்டில் பேசுவதையே குறைத்துக்கொண்டார்.
தன் அத்தையை காண வந்த மதியையும் திட்டி விரட்டிவிட்ட மரகதம், அந்த வீட்டின் மகாராணி போலவும் சாந்தி மற்றும் அவளின் பிள்ளைகளையும் மகன் கண்களுக்கு தெரியாமல் ஒரு அடிமை போலவே நடத்த தொடங்கிவிட்டார்.
அதுவரை சுதந்திரமாக இருந்த மித்ராவிற்கு அங்கு இருக்கவே பிடிக்காமல் தன் மாமா வீட்டுக்கு ஓடிவிடுபவள் மதியோடு சுற்ற...அது எப்படியோ மரகத்தின் காதில் விழுந்துவிட,குழந்தை என்றும் பாராமல் அடி வெளுத்துவிட்டார்.
ஆனால் அதற்கும் அடங்காமல் திரும்ப திரும்ப அதையே செய்ய…. மதியின் கண் முன்பே அவள் வாங்கிய அடியை பார்த்து மதியே அவளிடமிருந்து கொஞ்ச கொஞ்சமாக ஒத்துங்கிவிட்டான். மீண்டும் மீண்டும் அவனை சுற்றியே வரும் மித்ராவை பார்த்து பாவமாக இருந்தாலும் எங்கே தான் பேசினால் அவள் அடிவாங்கி விடுவாளோ என்றே அவள் அழுகை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு கடந்து செல்லுபவன் வீட்டில் உள்ளவர்களிடம் பேச கூடாது என கண்டிப்பாக சொல்லிவிட்டான்.
அப்படி ஒரு நாளில் தான் மித்ரா... "மதியிடம் என்கிட்ட நீ பேச மாட்டியா?..நான் வேனா இனிமேல் உன்னை மாமான்னு கூப்பிடுறேன்.வாடா போடா எல்லாம் சொல்ல மாட்டேன்" என அவனின் பலநாள் ஆசையை சொல்ல...அவனோ உனக்கு ஒரு தடவை சொன்ன புரியாதா,எனக்கு தான் உன்னை பார்க்கவே பிடிக்கலைன்னு சொல்றேன் இல்ல போ" என விரட்டினான் தூரத்தில் தன் மாமா வருவதை பார்த்துவிட்டு.
அவளோ அழுதுகொண்டே "அப்போ உனக்கு மித்து பாப்பா உண்மையிலேயே வேணாமா" என்க,அவனும் "வேணாம் வேணாம்" என கத்தினான்.
அப்போது அங்கு அவளின் தந்தை வந்துவிட, அவளும் சலுகையாய் "அப்பா..ஆ... மதி என் கூட" என சொல்ல வரும் முன்பே பளார் என்று குழந்தையை அறைய...அப்படியே கீழே சுருண்டு விழுந்துவிட்டாள்.
ஆல்ரெடி தன் அத்தையை பார்க்கவிடாமல் செய்ததில் அவர் மேல் கோபத்தில் இருந்தவனுக்கு இதுவும் கோபத்தை கிளப்ப ...கொஞ்சமும் யோசிக்காமல் அத்தனை பேர் முன்பும் அவர் சட்டையை பிடித்துவிட்டான் மதி.
"உங்களால தான் அன்னைக்கு என் அத்தை அழுதாங்க...இப்போ இவ,இன்னொரு வாட்டி இரண்டு பேர் மேலயும் கைவச்சீங்க அப்பறம் அவ்ளோதான். ஊர்ல இருக்கிறவன் எல்லாரும் உங்களுக்கு பயப்படலாம் ஆனா எனக்கு அப்படியெல்லாம் கிடையாது" என சொன்னவன் சட்டையை விட்டுவிட்டு கீழே விழுந்தவளை பார்த்தும் பார்க்காமல் சென்றுவிட்டான்.
நாட்கள் செல்ல அவளுக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்த வயதில் அவனிடம் பேச சொல்லி கெஞ்சுவதை நிறுத்திவிட்டு…'இனி நீயே வந்து பேசினாலும் நான் பேச மாட்டேன்' என்ற வைராக்கியத்துடன் அவள் தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டாள்.
அனைத்தையும் சொல்லி முடித்தவன் அவள் முகம் பார்க்க,அவளோ அழ தயாராக இருந்தாள். எட்டி அவளை அணைத்தவன் "அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம் டா… அதுதான் என் மித்து குட்டியை கட்டம் கட்டி தூக்கிட்டு வந்திட்டேனே" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "அப்போ எனக்காக தான் நீங்க எல்லாரும் என்கிட்ட பேசாம விலகி விலகி போனீங்களா?...இது தெரியாம எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என வருந்தியவள்,அவன் முகம் பற்றி தன் காதலை முத்தத்தில் உணர்த்த,அவனும் பதிலுக்கு பதில் அவள் கொடுத்ததை அவளுக்கே திருப்பி கொடுத்தான்.
மறுநாள் என்றுமில்லாமல் தாத்தா,பாட்டி அத்தை மாமா என அனைவரிடமும் இயல்பாக உரிமையுடன் பேசியவள் இத்தனை நாள் அவர்களிடம் பேசாமல் இருந்ததிற்கு மன்னிப்பும் கேட்டுவிட...இழந்த சொர்கம் மீண்டுவிட்ட சந்தோஷத்தில் அனைவரும் புன்னகையோடு வலம் வந்தனர்....மீனா "முதல்ல வீட்டில உள்ள எல்லாரையும் உட்கார வச்சு சுத்தி போடு. என் கண்ணே பட்டுடும் போல" என்றார் பாட்டி.
மித்ரா கல்லூரிக்கு கிளம்ப... எப்போதும் பேசிக்கொண்டே வரும் மது இன்று அமைதியாக இருக்க…"அக்கா என்ன?..ஒரே ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல,என்ன மாமாவோட சண்டையா?..."என சரியாக கேட்க,
உனக்கு எப்படி தெரியும் என திருதிருத்தவளை பார்த்து "ரொம்ப யோசிக்காதீங்க,அதுதான் உங்க மூஞ்சியில் எழுதி ஒட்டியிருக்கே…" என சிரித்தவளை பார்த்து,
"என் முகத்துல தெரியரது இருக்கட்டும்...என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க,நேத்து வேற மேடம் காலேஜ் லீவ்,என்ன மேட்டர்" என்றவளை பார்க்க முடியாமல் அழகாக வெட்கப்பட, "ஓ... மேடம்க்கு வெட்கமெல்லாம் பட தெரியுமா?...இது தெரியாம போச்சே" என கலாய்க்க, இருவருமே சிரித்துக்கொண்டே கல்லூரிக்கு சென்றனர்.
இங்கு பிரகாஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான். என்ன முயற்சி செய்தும் நண்பனை விடுவிக்க முடியாத கோபம் மொத்தமும் வெறியாக மதியின் மேல் திரும்பியது. அவனை ரொம்ப சாதாரணமா நினைச்சிட்டேன்.அதான் இப்படி ஆகிடுச்சு, ஆனா திரும்பவும் அவன்கிட்ட தோற்க மாட்டேன் என கத்தியவன், மதியை வீழ்த்த திட்டங்களை தீட்ட தொடங்கினான்.
"பிரகாஷ் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராத… இன்னும் உன் படிப்பு முடியலை அது நினைவில் இருக்கா?...முதல்ல படிப்பை முடிச்சிட்டு உன்னோட மேற்படிப்பை லண்டன்ல உள்ள பெரிய யுனிவர்சிட்டியில் படிக்க சீட் ரெடியா இருக்கு.நீ இங்கேயே இருந்தா...இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் உன் பிரென்ட் உங்க எல்லார் பேரையும் சொல்லிட்டா உன் எதிர்காலமே வீனா போயிடும். அதனால இந்த விஷயத்திலாவது எங்க பேச்சை கேளு" என அவனின் தந்தையும் தாயும் எடுத்து சொல்ல,
"எப்படிப்பா அவனை சும்மா விட்டுட்டு போக சொல்றீங்க?..முடியாது போகிறதுக்கு முன்னாடி அவனை ஒருவழி பண்ணிட்டு தான் போவேன்" என ஆத்திரத்தில் கத்தும் மகனை சமாதானப்படுத்தும் விதமாக…
"அதைதான் நாங்களும் சொல்றோம்.கோபத்தில் எடுக்கும் முடிவு ஆபத்தில் தான் முடியும். கொஞ்சம் இந்த விஷயத்தை ஆறப் போடுவோம்.அதுக்குள்ள நீ உன் படிப்பை முடிச்சிடலாம் அப்பறம் நானே உனக்கு எல்லாவிதத்திலும் ஹெல்ப் பண்றேன்" என எந்த தந்தையும் செய்யாத... மகனின் கேவலமான எண்ணத்திற்கு ஆதரவு தெரிவித்தார் பிரகாஷின் தந்தை. அவனின் தந்தையே இவ்வளவு கேவலமானவனாக இருக்கும் போது அவரின் மகன் பிரகாஷ் மட்டும் எப்படி இருப்பான்.
கல்லூரிக்கு வந்த பிரகாஷ்...தன் நண்பர்களிடம் தந்தை சொன்னதை சொல்ல,அவர்களும் அதையே சொல்ல...பின்னர் அவனும் அதனை ஏற்றுக்கொண்டான். "எல்லாம் சரிடா ஆனா இவளை விட்டுட்டு எப்படிடா போறது.எனக்கு எது இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனா எந்த காரணத்திற்காகவும் இவளை மட்டும் என்னால் விட்டு கொடுக்க முடியாது….அது என்னவோ தெரியலை அவ மேல அப்படி ஒரு வெறி,அவளை முழுசா அடையிற வரை அது அடங்கவே அடங்காது" என மித்ராவையே மோக பார்வை பார்த்துக்கொண்டே சொல்ல,
"மச்சான் இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் முடிக்க போறா...இன்னும் முழுசா நாலு வருஷம் இருக்கு.அதுக்குள்ள நீயும் திரும்ப வந்திடலாம். அப்பறம் என்ன அவளுக்கும் பிடிச்சா கட்டிக்கோ... இல்லையா வச்சுக்கோ அவ்ளோ தான் மேட்டர்.இதுக்கா இவளோ ஃபீல் பண்ற. அவளை பார்த்தா யாரையும் காதலிக்கிற மாதிரி தெரியலை,அப்படியே அது மாதிரி ஏதாவதுன்னா நமக்கா தெரியாது என்ன பண்ணனும்னு. ஜஸ்ட் ஃபீல் ஃப்ரீ டா.நாங்க இருக்கோம்" என்ற நண்பர்களின் வார்த்தை அவனையும் வெளிநாடு செல்ல சம்மதிக்க வைத்தது.