அத்தியாயம் - 19
"டேய் என்னடா நடக்குது இங்க...இவனா,என்னால சத்தியமா நம்ப முடியலை. அன்னைக்கு பார்க்கும் போது அரைவேக்காடு மாதிரி இருந்தானே டா " என கதிர் அந்த புகைப்படத்தையே பார்க்க அதில் இருந்தது என்னவோ சந்திரனின் முகமே.
மதிக்கு இது மிக பெரிய அதிர்ச்சி...அவன் என்னவோ வெட்டியாக பிசினஸ் பண்ணுகிறேன் என்று கடன் வாங்கி அதனை திருப்பி தர முடியாமல் ஏமாற்ற நினைத்ததால் தான் அன்று இவன் மேல் கேஸ் பதிவானது . அதுவும் அந்த நேரத்தில் கல்யாணத்தை நிறுத்த ஒரு காரணம் வேண்டும் என்று அவசரமாக அவனை கைது செய்திருந்தான் மதி. அப்படியிருக்க அவன் ஒரு கடத்தல் காரனாக இருப்பான் என நினைக்கவே இல்லை.
மித்ராவின் அத்தைமகன்,அன்று திருமணம் முடிந்து கைது செய்து காவல்துறைக்கு அழைத்து வர பட்டவன், அன்று மாலையே பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு விடுதலையாகி விட்டான். ஆனால் அவ்வளவு பணம் எப்படி உடனடியாக அவனுக்கு வந்தது என்பதை பற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மகனை காப்பாற்ற எதையாவது வித்து பணம் பெற்றிருப்பார்கள் என்றே எண்ணினான்.
ஒருவேளை அன்றே அதனை பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமோ...சொந்தகார்கள் தான் என்பதால் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லையோ என இன்று வருந்தினான். அப்படி மட்டும் அன்றே அனைத்தையும் விசாரித்திருந்தால் இந்த பெண்ணுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதே என நினைத்தவன்,
"ரொம்ப தேங்க்ஸ் மா... இவனை அடையாளம் காட்டியதற்கு.நீங்க கிளம்பலாம்" என்றுவிட்டு வேகமாக வெளியே வந்தான்.
இப்போது அந்த சந்திரன் எங்கு இருப்பான் என மொபைல் நெட்வொர்க் வைத்து கண்டறிந்தவர்கள்,அந்த இடத்தை நோக்கி சென்றனர்.
அங்கு தங்கள் கெஸ்ட் ஹவுஸில் பிரகாஷ் மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் மதுபானத்தை கையில் ஏந்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
"டேய் என்னடா இன்னும் இவனை காணும்.நேர்த்தே பார்ட்டி ரெடிண்ணு சொன்னானே...இன்னுமா வரான்" என அவசரப்பட்டனர் பிரகாஷின் நண்பர்கள்.
எப்போதும் பிரகாஷ் தான் இப்படி பரபரப்பான். ஆனால் இன்று மாறாக அவனை தவிர்த்து அனைவருமே உச்சகட்ட போதையில் ஒரு பெண்ணுக்காக காத்திருந்தனர்.
பிரகாஷோ மனதில் மித்ராவை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்.எப்படி அவளிடம் தன் காதலை உணர்த்துவது என்று.
அதே நினைவில் உழன்று கொண்டிருந்தவனுக்கு இப்போது இதில் கொஞ்சமும் விருப்பமில்லை,
நண்பர்களுக்காக மட்டுமே உடன் இருக்கிறான். அவனுக்கு இப்போது மித்ராவை அடைவது ஒன்றே குறியா இருந்தது.மற்றையது எல்லாம் பின்னுக்கு செல்ல அவன் சிந்தை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள் மித்ரவர்ஷினி.
கல்லூரி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மித்ராவின் காதில் முதலில் விழுந்தது மதி சென்னையில் இருந்து வந்துவிட்டான் என்ற செய்தியே.
அதை கேட்டவுடன் மனம் சிறகில்லாமல் பறக்க,மகிழ்ச்சியோடு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.ஆனால் அவளை வரவேற்றது என்னவோ வெறுமையான அறையே….'இன்னும் என்மேல் கோபம் போகலையோ,அப்போ இனிமேலும் முன்புபோல் வீட்டுக்கு வர மாட்டானோ' என எண்ணி வருந்தியவளுக்கு 'இப்போதே அவனிடம் கத்தி எனக்கு உன்மேல் கோபமில்லை. நானும் உன்னை காதலிக்கிறேன்' என சொல்லவேண்டும் போல் மனம் துடித்தது.
இவ்வளவு நாள் பொறுமை காத்தவளுக்கு இன்று அவன் வரும்வரை காத்திருக்க முடியவில்லை.உடனடியாக அவனிடம் பேச வேண்டும் என பேதை மனம் பரபரக்க,எப்படி அவனிடம் பேசுவது என யோசித்தவளுக்கு அப்போது தான் அவன் வாங்கி கொடுத்த ஃபோன் நினைவு வந்தது.இத்தனை நாட்களாக அதை எடுத்து பார்க்காதவள் இன்று அதனை கைகளில் எடுத்தாள்.
அன்று கோபத்தில் வெறுத்த அதே பொருளை இன்று தனக்காக தன்னவன் பரிசளித்தது என்று நினைக்கும் போதே முகத்தில் தானாக ஒரு வெட்கம் வந்து குடிகொண்டது.
அந்த மொபைலை கையில் வைத்துக்கொண்டு 'இப்போ அவரோட நம்பருக்கு எங்க போறது' என எண்ணியபடி அதனை உயிர்ப்பிக்க,அவளுக்கு சிரமம் வைக்காமல் அதில் அவனின் எண் பதிவாகியிருந்தது. இத்தனை நேரம் இருந்த தைரியம் மொத்தமும் போக, இப்போது அவனுக்கு ஃபோன் பண்ணலாமா வேண்டாமா என வெகுநேரம் அப்படியே இருந்தவள்,பின்னர் ஒரு முடிவோடு அவனுக்கு அழைத்தாள்.
இவளின் கெட்ட நேரமோ அல்லது அவனின் கெட்ட நேரமோ...அப்போது தான் தனது மொபைலை சைலண்டில் போட்டிருந்தான் மதி. இது எப்போதும் கேஸ் விஷயமாக செல்லும் போது போலீஸ்காரர்கள் அனைவரும் செய்வது தான்.அதை தான் இவனும் செய்திருந்தான்.
ஒன்று இரண்டு மூன்று என தொடர்ந்து இவளும் அழைத்துகொண்டே இருக்க,அவனது மொபைல் ஊமையாக கத்திக்கொண்டிருந்தது அவனின் பாண்ட் பாக்கெட்டில்.
இவளோ 'அவன் தன்னை அந்த அளவுக்கு வெறுத்துவிட்டானா,இத்தனை முறை அழைத்தும் பதில் இல்லையே' என தவிக்க,அவனின் மொபைல் பேட்டரி இல்லாத காரணத்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.
கண்கள் இரண்டும் கலங்க "இதுதான் கடைசி தடவை இப்போ மட்டும் எடுக்கலை" என சொல்லிக்கொண்டே அவனுக்கு அழைக்க இப்போது ஸ்விட்ச் ஆஃப் என வரவும்….அவன் வேண்டுமென்றே தான் அழைத்தது பிடிக்காமல் தன்னிடம் பேச விருப்பமில்லாமல் அணைத்துவிட்டான் என தப்பாக புரிந்து கொண்டாள்.
"போயேன் நீ பேசலன்னா எனக்கென்ன...இனிமேல் நீயே வந்து பேசினாலும் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்" என வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் தனிந்திருந்த கோபம் மீண்டும் உயிற்பெற அங்குள்ள அவனின் புகைப்படத்தை பார்த்து திட்டி அதன் மண்டையிலேயே ஒன்று போட்டாள்.
சந்திரனும் பிரகாஷின் நண்பன் தான். அவர்களின் அனைத்து தீய பழக்கங்களில் இவனுக்கும் பங்கு உண்டு. வீட்டுக்குள்ளும் உறவுகளுக்கு மத்தியிலும் ஒன்றும் தெரியாத அப்பாவி வேஷத்தை போட்டுக்கொண்டு திரிபவன், இவர்களோடு இணைந்தால் எந்த கேடு கெட்ட வேலையையும் செய்ய தயங்க மாட்டான்.
பிரகாஷ்க்கு கூட தெரியாது இவனின் மாமன் மகள் தான் மித்ரா என்றும் இவனோடு திருமணம் வரை சென்று நின்றது என எதுவும் தெரியாது. அவர்களுக்கு அப்போது தான் நான்காம் ஆண்டு இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் இவனின் திருமணத்திற்கு செல்லவில்லை.
அதுவுமில்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்தால் குடும்பத்தை பற்றி பேசவே கூடாது என்பது இவர்களுக்கு எழுதப்படாத சட்டம்.அதை சரியாக கடைப்பிடிப்பார்கள்,
அதனாலேயே மித்ரா திருமணம் ஆன செய்தியும் அவனுக்கு இதுவரை தெரியவே இல்லை.
சந்திரனின் கார் மதுரை நகரத்தை கடந்து ஒரு சிறிய ரோட்டில் பயணிக்க,மதியும் கதிரும் கிட்டத்தட்ட அவனை நெருங்கிவிட்டனர். இருவரின் காருக்கும் இடையே ஐம்பது மீட்டர் தொலைவே இருந்தது.
அதுவரை கார் ஓட்டுவதில் கவனமாக இருந்த சந்திரன், எதர்ச்சியாக ரிவர்வியூ கண்ணாடியை பார்த்து தலையை ஸ்டைலாக சிலுப்பிக்கொள்ள,அப்போது தான் ஒரு கார் தன்னை பின் தொடர்வதை உணர்ந்தான்.
அது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம் என்பதால் அவ்வளவாக வாகனங்களோ மக்கள் நடமாட்டமோ இல்லாத இடம்,எனவே அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது.
சைட் கண்ணாடி வழியாக யாரு என்று உற்று பார்க்க,அங்கே அமர்ந்திருந்த இருவரை பார்த்து ஈரகுலையே நடங்கியது அவனுக்கு.
'இவனுகளா...இப்போ எப்படி தப்பிப்பேன்' என்ற யோசனையில் பிரகாஷ் எண்ணிற்கு அழைக்க, "டேய் மச்சான் போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துடுச்சி டா...நான் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை" என சொல்ல
"என்னடா சொல்ற,உன்னை என்ன கொலையா பண்ண சொன்னேன்.ஒரு பொண்ணை தூக்கிட்டு வர சொன்னேன்.அதுக்கு கூட முடியாமல் மாட்டிக்கிட்டு" என கத்தியவன்,
"டேய் ஒழுங்கா நான் சொல்றதை கேளு.முதல்ல காரை அப்படியே வேற பக்கத்துல திருப்பு. எந்த காரணம் கொண்டும் நாங்க இருக்குற இடம் மட்டும் போலீஸ்க்கு தெரிய கூடாது.அவங்களை வேற பக்கம் திசை திருப்பு.உனக்கு எதுவும் ஆகாமல் நாங்க பார்த்துக்குறோம்" என்றுவிட்டு மொபைலை அணைத்தவன்,
"டேய் வாங்கடா முதல்ல இடத்தை காலி பண்ணுவோம்.அந்த கிறுக்கன் போலீஸ்ல மாட்டிக்கிட்டான்" என நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுசை விட்டு அகன்றான்.
இங்கு சந்திரனுக்கு மதியை கண்ட பீதியிலேயே கார் அவன் கையிலிருந்து தடுமாறியது. தாறுமாறாக வண்டியை ஓட்ட, எங்கே ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆகிவிடுமோ என்ற பயத்தில் மதியும் தனது வண்டியின் வேகத்தை கூட்டினான் எப்படியும் அந்த பெண்ணை காப்பாற்றி விடும் நோக்கத்தில்.
சாதாரண மண் சாலையில் இரு வாகனமும் ரேஸ் வேகத்தில் செல்ல, ஒரு கட்டத்தில் மதியின் கார் அவனின் வண்டியை முந்திக்கொண்டு முன்னே நின்றது.
சட்டென்று ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய சந்திரன்,காரில் இருந்து இறங்கி ஓட தொடங்க, ஒரே எட்டில் அவனை பிடித்த மதி… "தப்பிக்க நினைச்ச இதே இடத்தில் கொன்னு புதைச்சிடுவேன் பொறுக்கி நாயே...உன்னை ரொம்ப சாதாரணமாக எடை போட்டுட்டேன்,ஆனா இனிமேல் உன்னை அந்த கடவுளால் கூட காப்பாத்த முடியாது" என்றவன் ஓங்கி ஒரு குத்து மூக்கிலேயே குத்த,முகத்தில் இரத்தம் வடிய,
"வேண்டாம்டா என்கிட்ட வச்சுக்கிட்ட,அப்பறம் நிறைய பின்விளைவுகளை சந்திப்ப" என்ற சந்திரனை,
"டேய் நீ என்னடா அவனை பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்குற" என கோபத்தில் கதிரும் தன் பங்கிற்கு அடி வெளுத்து வாங்க…."விடுடா செத்துட போறான்.இவனை வச்சு செய்யணும் நீ பாட்டுக்கு போசுக்குண்ணு சாகடிச்சிடாத" என்ற மதி அவனை தர தரவென இழுத்து சென்று ஜீப்போடு சேர்த்து கைவிலங்கிட்டவன், காரை திறக்க,
அங்கே கைக்காலகள் எல்லாம் கட்டப்பட்டு,மயங்கிய நிலையில் இருந்தால் கடத்தப்பட்ட பெண்.
கதிர் உடனடியாக இந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ..நான் இவனை கொஞ்சம் கவனிச்சிட்டு, அப்பறம் வந்து பார்க்கிறேன் என்றவன், சந்திரனோடு கிளம்பிவிட,கதிரும் அந்த பெண்ணோடு மருத்துவமனை நோக்கி சென்றான்.
அன்று முழுவதும் காவல்நிலையத்தில் வைத்தே அவனை ஒருவழி ஆக்கியிருந்தான் மதி. "டேய் வேணாம் நீ உன்னோட சொந்த பகையை எல்லாம் காட்டி ஓவரா பண்ற,என்னை கோர்ட்டில் ஒப்படைக்கணும்...இப்படி அடிச்ச உன்னோட வேலைக்கே ஆப்பு தான்" என கொஞ்சமும் பயமின்றி சந்திரன் சொல்ல,
"ஏண்டா நாயே...இவளோ தெரிஞ்ச எனக்கு இரத்தம் காயம் ஏதும் வராமா உன்னை அடிக்க தெரியாதா?..உன் திமிர் மொத்தமும் அடங்கி என்னை விட்டுடுன்னு உன் வாயில் இருந்து வரும்வரை உன்னை இன்னைக்கு விடுறதா இல்லை" என மதியும் கோபத்தில் சிங்கம் போல் கர்ஜித்தான்.
"எதுக்குடா அந்த பொண்ணை கடத்துனா" என்ற மதியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே "அதுவா அந்த பொண்ணை நான் ஒன் சைடா காதலிக்கிறேன் அதான்,கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்னு" என சொன்னவனின் வாயில் மீண்டும் ஒரு குத்துவிட…"யாருகிட்ட உன் வேலையை காட்டுற மரியாதையா சொல்லு உன் பின்னாடி யாரு இருக்கா.கண்டிப்பா இதை நீ மட்டும் செய்ய வாய்ப்பேயில்லை,உனக்கெல்லாம் அந்த அளவுக்கு தைரியம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றவன்,
"உனக்கு பின்னால் யாரோ ஒரு பணம் தின்னி முதலை இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். அது யாருன்னு சொல்லிட்டா உனக்கு நல்லது இல்லை அப்பறம் உன் உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது" என்க,
'அவனோ நீ எவ்ளோ அடிச்சாலும் ஒரு வார்த்தையை கூட உன்னால் வாங்க முடியாது' என்ற தெனாவட்டில் இருந்தான்.
அன்றைய நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருந்தவன்,விடியற்காலையில் வீட்டிற்கு வந்தான். இன்னும் யாரும் எழாததால் நேரே தன் அறைக்கு செல்ல,
இரவு வெகுநேரம் மதியின் நினைவில் அழுகையில் கரைந்தவள், சற்று நேரத்திற்கு முன்பே தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றிருந்தாள் வர்ஷினி.
ஒருபுறமாக ஒருக்களித்து படுத்திருந்த மித்ராவின் அருகே அமர,வெகுநாட்கள் கழித்து அவளை ஆசையாக தன் பார்வையால் வருடினான்.
விடிவிளக்கின் ஒளியில் கன்னத்தில் பதிந்திருந்த கண்ணீர் தடம் அப்பட்டமாக தெரிய,அதனை புருவம் சுருக்கி பார்த்தவன்…."குட்டி சாத்தான் அடுத்தவங்களை தானே அழ வைப்பா,எதுக்கு இப்படி அழுதிருக்கா" என நினைக்கும் போதே தூக்கத்திலேயே சிறுபிள்ளை போல் தெம்ப,
மெல்ல தன் விரல் கொண்டு அவளின் கன்னம் வருட,முகத்தில் தானாக ஒரு கீற்று புன்னகை தோன்றி மறைந்தது.
தூக்கத்திலேயே அவனின் தொடுகையை உணர்ந்தவள் போல் கன்னம் வருடிய கரத்தை கெட்டியா பிடித்துக்கொள்ள,ஒருவேளை முழித்து விட்டாளோ என பயந்தவன்,அடுத்து அவள் செய்த செய்கையில் அவனின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அவனின் கரத்தை இழுத்து தன் கழுத்தடியில் வைத்துக்கொண்டு அவன் உள்ளங்கையில் முகம் தாங்கி தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
அவனும் அவளிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க மனமின்றி அப்படியே அமர்ந்துவிட்டான் அவன் தேவைதையை ரசித்தபடி.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன் மெல்ல குனிந்து அவள் நெற்றியில் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்க,அவளோ கண்கள் சுருக்கி அதனை ரசித்தாள். அடுத்தது அவன் இதழ்கள் பதிந்தது என்னவோ அவளின் விழிகளில் தான்.அடுத்து அவளின் நுனி மூக்கில் முத்தமிட்டவாறே மெல்ல கடிக்க, கூச்சத்தில் முகத்தை திருப்ப அடுத்தது இரு கன்னங்கள் தாண்டி அவளின் இதழை நோக்கி இவனின் இதழ்கள் பயணிக்க,
நூழிலை இடைவெளியில் அவளின் வார்த்தைகள் நினைவில் வர, தீச்சுட்டார் போல் அவளை விட்டு விலகினான். ஒருமுறை தடுமாறி கொடுத்த முத்ததிற்கே அப்படி பேசியவளுக்கு இது மட்டும் தெரிந்தது அவ்வளவு தான் என எண்ணியபடி தன் கரத்தை விடுவிக்க முயல,ஆனால் அவளோ எங்கே மீண்டும் வந்தவன் சென்றுவிடுவானோ என்று நிஜத்தை கனவாய் எண்ணி கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
வெகுநேரம் அப்படியே குனிந்து அவளின் முகம் பார்த்தே இவனும் இருக்க,மெல்ல விடிய தொடங்க,ஹாலில் அனைவரின் சத்தமும் கேட்டது. இனிமேல் இப்படியே அமர்ந்திருப்பது நல்லதல்ல என எண்ணி கரத்தை இழுக்க, இப்போதும் முடியவில்லை.
அவனுக்கோ 'இப்போது மட்டும் அவள் எழுந்து இருவரும் இருக்கும் நிலையை பார்த்தாள் என செய்வாளோ' என பயத்தோடு மெல்ல தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் தலையை தாங்கி தலையணையில் வைத்தவன்,தன்னை பிடித்திருந்த கரத்தில் மீசை முடி குறுகுறுக்க தன் இதழ் பதிக்க,சட்டென்று அவன் கரத்தை விடுவித்தாள்.
தப்பித்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடி குளியலைக்குள் புகுந்து கொண்டான்.யாருக்கும் பயப்படாதவன் அஞ்சாநெஞ்சன் என பெயர்பெற்ற மதி, தன் குட்டி ராட்ச்சசிக்கு பயந்து நடுங்கினான்.
அவன் வந்ததோ,மீண்டும் டியூட்டிக்கு சென்றதோ எதுவும் தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள், மெல்ல விழி திறக்கும் போது மணி காலை எழரையை கடந்திருந்தது.அவசரமாக எழுந்து கிளம்பியவளுக்கு அவன் வந்துபோன அடையாளம் எதுவும் கருத்தில் பதியவில்லை. இரவில் அவன் பதித்த முத்தங்கள் அனைத்தும் அவளை பொறுத்தவரை கனவாகவே இருந்தது.
அன்றைய நாள் கல்லூரியில் கூட அவள் முகத்தில் சிரிப்பு என்பதின்றி இறுக்கமாகவே இருந்தது.அவளின் தோழி கூட எவ்வளவு முயன்றும் அவளை மாற்ற முடியாமல் அவள் போக்கில் விட்டுவிட்டாள்.
அன்று சந்திரனை கோர்ட்டில் ஒப்படைக்க, அவனோ நேற்று மதியிடம் சொன்னது போல் அவளை காதலித்தேன் அதான் கடத்தினேன் என்று சொன்னானே தவிர வேறு ஒரு வார்த்தையும் இவர்களால் வரவைக்க முடியவில்லை. போன கடத்தலுக்கு இவனுக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதராமும் இல்லாததால் அந்த கேஸ் எதுவும் இவன் மேல் விழவில்லை.இவர்கள் எதிர்ப்பார்த்ததை விட குறைந்தபட்ச தண்டனையாக மூன்று ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைத்தது.
அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவனிடமிருந்து வாங்க முடியவில்லை.அவன் மொபைலை வைத்து பார்த்தலிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.அந்தளவுக்கு எல்லா தடயங்களையும் அழித்திருந்தான் பிரகாஷ்.அவனுக்கும் இவனுக்கும் இடையேயான தொடர்பு கடைசிவரை மதிக்கு தெரியாமலே போனது.
அவன் உள்மனம் சொல்லும் அந்த முகம் தெரியாத ஒருவனால், தன் உயிரானவளின் உயிர் ஊஞ்சலாட போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
"டேய் என்னடா நடக்குது இங்க...இவனா,என்னால சத்தியமா நம்ப முடியலை. அன்னைக்கு பார்க்கும் போது அரைவேக்காடு மாதிரி இருந்தானே டா " என கதிர் அந்த புகைப்படத்தையே பார்க்க அதில் இருந்தது என்னவோ சந்திரனின் முகமே.
மதிக்கு இது மிக பெரிய அதிர்ச்சி...அவன் என்னவோ வெட்டியாக பிசினஸ் பண்ணுகிறேன் என்று கடன் வாங்கி அதனை திருப்பி தர முடியாமல் ஏமாற்ற நினைத்ததால் தான் அன்று இவன் மேல் கேஸ் பதிவானது . அதுவும் அந்த நேரத்தில் கல்யாணத்தை நிறுத்த ஒரு காரணம் வேண்டும் என்று அவசரமாக அவனை கைது செய்திருந்தான் மதி. அப்படியிருக்க அவன் ஒரு கடத்தல் காரனாக இருப்பான் என நினைக்கவே இல்லை.
மித்ராவின் அத்தைமகன்,அன்று திருமணம் முடிந்து கைது செய்து காவல்துறைக்கு அழைத்து வர பட்டவன், அன்று மாலையே பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு விடுதலையாகி விட்டான். ஆனால் அவ்வளவு பணம் எப்படி உடனடியாக அவனுக்கு வந்தது என்பதை பற்றி யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மகனை காப்பாற்ற எதையாவது வித்து பணம் பெற்றிருப்பார்கள் என்றே எண்ணினான்.
ஒருவேளை அன்றே அதனை பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமோ...சொந்தகார்கள் தான் என்பதால் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லையோ என இன்று வருந்தினான். அப்படி மட்டும் அன்றே அனைத்தையும் விசாரித்திருந்தால் இந்த பெண்ணுக்கு இப்படியொரு நிலை வந்திருக்காதே என நினைத்தவன்,
"ரொம்ப தேங்க்ஸ் மா... இவனை அடையாளம் காட்டியதற்கு.நீங்க கிளம்பலாம்" என்றுவிட்டு வேகமாக வெளியே வந்தான்.
இப்போது அந்த சந்திரன் எங்கு இருப்பான் என மொபைல் நெட்வொர்க் வைத்து கண்டறிந்தவர்கள்,அந்த இடத்தை நோக்கி சென்றனர்.
அங்கு தங்கள் கெஸ்ட் ஹவுஸில் பிரகாஷ் மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் மதுபானத்தை கையில் ஏந்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
"டேய் என்னடா இன்னும் இவனை காணும்.நேர்த்தே பார்ட்டி ரெடிண்ணு சொன்னானே...இன்னுமா வரான்" என அவசரப்பட்டனர் பிரகாஷின் நண்பர்கள்.
எப்போதும் பிரகாஷ் தான் இப்படி பரபரப்பான். ஆனால் இன்று மாறாக அவனை தவிர்த்து அனைவருமே உச்சகட்ட போதையில் ஒரு பெண்ணுக்காக காத்திருந்தனர்.
பிரகாஷோ மனதில் மித்ராவை பற்றியே நினைத்து கொண்டிருந்தான்.எப்படி அவளிடம் தன் காதலை உணர்த்துவது என்று.
அதே நினைவில் உழன்று கொண்டிருந்தவனுக்கு இப்போது இதில் கொஞ்சமும் விருப்பமில்லை,
நண்பர்களுக்காக மட்டுமே உடன் இருக்கிறான். அவனுக்கு இப்போது மித்ராவை அடைவது ஒன்றே குறியா இருந்தது.மற்றையது எல்லாம் பின்னுக்கு செல்ல அவன் சிந்தை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள் மித்ரவர்ஷினி.
கல்லூரி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மித்ராவின் காதில் முதலில் விழுந்தது மதி சென்னையில் இருந்து வந்துவிட்டான் என்ற செய்தியே.
அதை கேட்டவுடன் மனம் சிறகில்லாமல் பறக்க,மகிழ்ச்சியோடு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.ஆனால் அவளை வரவேற்றது என்னவோ வெறுமையான அறையே….'இன்னும் என்மேல் கோபம் போகலையோ,அப்போ இனிமேலும் முன்புபோல் வீட்டுக்கு வர மாட்டானோ' என எண்ணி வருந்தியவளுக்கு 'இப்போதே அவனிடம் கத்தி எனக்கு உன்மேல் கோபமில்லை. நானும் உன்னை காதலிக்கிறேன்' என சொல்லவேண்டும் போல் மனம் துடித்தது.
இவ்வளவு நாள் பொறுமை காத்தவளுக்கு இன்று அவன் வரும்வரை காத்திருக்க முடியவில்லை.உடனடியாக அவனிடம் பேச வேண்டும் என பேதை மனம் பரபரக்க,எப்படி அவனிடம் பேசுவது என யோசித்தவளுக்கு அப்போது தான் அவன் வாங்கி கொடுத்த ஃபோன் நினைவு வந்தது.இத்தனை நாட்களாக அதை எடுத்து பார்க்காதவள் இன்று அதனை கைகளில் எடுத்தாள்.
அன்று கோபத்தில் வெறுத்த அதே பொருளை இன்று தனக்காக தன்னவன் பரிசளித்தது என்று நினைக்கும் போதே முகத்தில் தானாக ஒரு வெட்கம் வந்து குடிகொண்டது.
அந்த மொபைலை கையில் வைத்துக்கொண்டு 'இப்போ அவரோட நம்பருக்கு எங்க போறது' என எண்ணியபடி அதனை உயிர்ப்பிக்க,அவளுக்கு சிரமம் வைக்காமல் அதில் அவனின் எண் பதிவாகியிருந்தது. இத்தனை நேரம் இருந்த தைரியம் மொத்தமும் போக, இப்போது அவனுக்கு ஃபோன் பண்ணலாமா வேண்டாமா என வெகுநேரம் அப்படியே இருந்தவள்,பின்னர் ஒரு முடிவோடு அவனுக்கு அழைத்தாள்.
இவளின் கெட்ட நேரமோ அல்லது அவனின் கெட்ட நேரமோ...அப்போது தான் தனது மொபைலை சைலண்டில் போட்டிருந்தான் மதி. இது எப்போதும் கேஸ் விஷயமாக செல்லும் போது போலீஸ்காரர்கள் அனைவரும் செய்வது தான்.அதை தான் இவனும் செய்திருந்தான்.
ஒன்று இரண்டு மூன்று என தொடர்ந்து இவளும் அழைத்துகொண்டே இருக்க,அவனது மொபைல் ஊமையாக கத்திக்கொண்டிருந்தது அவனின் பாண்ட் பாக்கெட்டில்.
இவளோ 'அவன் தன்னை அந்த அளவுக்கு வெறுத்துவிட்டானா,இத்தனை முறை அழைத்தும் பதில் இல்லையே' என தவிக்க,அவனின் மொபைல் பேட்டரி இல்லாத காரணத்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.
கண்கள் இரண்டும் கலங்க "இதுதான் கடைசி தடவை இப்போ மட்டும் எடுக்கலை" என சொல்லிக்கொண்டே அவனுக்கு அழைக்க இப்போது ஸ்விட்ச் ஆஃப் என வரவும்….அவன் வேண்டுமென்றே தான் அழைத்தது பிடிக்காமல் தன்னிடம் பேச விருப்பமில்லாமல் அணைத்துவிட்டான் என தப்பாக புரிந்து கொண்டாள்.
"போயேன் நீ பேசலன்னா எனக்கென்ன...இனிமேல் நீயே வந்து பேசினாலும் உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்" என வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் தனிந்திருந்த கோபம் மீண்டும் உயிற்பெற அங்குள்ள அவனின் புகைப்படத்தை பார்த்து திட்டி அதன் மண்டையிலேயே ஒன்று போட்டாள்.
சந்திரனும் பிரகாஷின் நண்பன் தான். அவர்களின் அனைத்து தீய பழக்கங்களில் இவனுக்கும் பங்கு உண்டு. வீட்டுக்குள்ளும் உறவுகளுக்கு மத்தியிலும் ஒன்றும் தெரியாத அப்பாவி வேஷத்தை போட்டுக்கொண்டு திரிபவன், இவர்களோடு இணைந்தால் எந்த கேடு கெட்ட வேலையையும் செய்ய தயங்க மாட்டான்.
பிரகாஷ்க்கு கூட தெரியாது இவனின் மாமன் மகள் தான் மித்ரா என்றும் இவனோடு திருமணம் வரை சென்று நின்றது என எதுவும் தெரியாது. அவர்களுக்கு அப்போது தான் நான்காம் ஆண்டு இறுதி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் இவனின் திருமணத்திற்கு செல்லவில்லை.
அதுவுமில்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்தால் குடும்பத்தை பற்றி பேசவே கூடாது என்பது இவர்களுக்கு எழுதப்படாத சட்டம்.அதை சரியாக கடைப்பிடிப்பார்கள்,
அதனாலேயே மித்ரா திருமணம் ஆன செய்தியும் அவனுக்கு இதுவரை தெரியவே இல்லை.
சந்திரனின் கார் மதுரை நகரத்தை கடந்து ஒரு சிறிய ரோட்டில் பயணிக்க,மதியும் கதிரும் கிட்டத்தட்ட அவனை நெருங்கிவிட்டனர். இருவரின் காருக்கும் இடையே ஐம்பது மீட்டர் தொலைவே இருந்தது.
அதுவரை கார் ஓட்டுவதில் கவனமாக இருந்த சந்திரன், எதர்ச்சியாக ரிவர்வியூ கண்ணாடியை பார்த்து தலையை ஸ்டைலாக சிலுப்பிக்கொள்ள,அப்போது தான் ஒரு கார் தன்னை பின் தொடர்வதை உணர்ந்தான்.
அது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம் என்பதால் அவ்வளவாக வாகனங்களோ மக்கள் நடமாட்டமோ இல்லாத இடம்,எனவே அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது.
சைட் கண்ணாடி வழியாக யாரு என்று உற்று பார்க்க,அங்கே அமர்ந்திருந்த இருவரை பார்த்து ஈரகுலையே நடங்கியது அவனுக்கு.
'இவனுகளா...இப்போ எப்படி தப்பிப்பேன்' என்ற யோசனையில் பிரகாஷ் எண்ணிற்கு அழைக்க, "டேய் மச்சான் போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துடுச்சி டா...நான் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை" என சொல்ல
"என்னடா சொல்ற,உன்னை என்ன கொலையா பண்ண சொன்னேன்.ஒரு பொண்ணை தூக்கிட்டு வர சொன்னேன்.அதுக்கு கூட முடியாமல் மாட்டிக்கிட்டு" என கத்தியவன்,
"டேய் ஒழுங்கா நான் சொல்றதை கேளு.முதல்ல காரை அப்படியே வேற பக்கத்துல திருப்பு. எந்த காரணம் கொண்டும் நாங்க இருக்குற இடம் மட்டும் போலீஸ்க்கு தெரிய கூடாது.அவங்களை வேற பக்கம் திசை திருப்பு.உனக்கு எதுவும் ஆகாமல் நாங்க பார்த்துக்குறோம்" என்றுவிட்டு மொபைலை அணைத்தவன்,
"டேய் வாங்கடா முதல்ல இடத்தை காலி பண்ணுவோம்.அந்த கிறுக்கன் போலீஸ்ல மாட்டிக்கிட்டான்" என நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுசை விட்டு அகன்றான்.
இங்கு சந்திரனுக்கு மதியை கண்ட பீதியிலேயே கார் அவன் கையிலிருந்து தடுமாறியது. தாறுமாறாக வண்டியை ஓட்ட, எங்கே ஏதாவது ஆக்ஸிடென்ட் ஆகிவிடுமோ என்ற பயத்தில் மதியும் தனது வண்டியின் வேகத்தை கூட்டினான் எப்படியும் அந்த பெண்ணை காப்பாற்றி விடும் நோக்கத்தில்.
சாதாரண மண் சாலையில் இரு வாகனமும் ரேஸ் வேகத்தில் செல்ல, ஒரு கட்டத்தில் மதியின் கார் அவனின் வண்டியை முந்திக்கொண்டு முன்னே நின்றது.
சட்டென்று ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய சந்திரன்,காரில் இருந்து இறங்கி ஓட தொடங்க, ஒரே எட்டில் அவனை பிடித்த மதி… "தப்பிக்க நினைச்ச இதே இடத்தில் கொன்னு புதைச்சிடுவேன் பொறுக்கி நாயே...உன்னை ரொம்ப சாதாரணமாக எடை போட்டுட்டேன்,ஆனா இனிமேல் உன்னை அந்த கடவுளால் கூட காப்பாத்த முடியாது" என்றவன் ஓங்கி ஒரு குத்து மூக்கிலேயே குத்த,முகத்தில் இரத்தம் வடிய,
"வேண்டாம்டா என்கிட்ட வச்சுக்கிட்ட,அப்பறம் நிறைய பின்விளைவுகளை சந்திப்ப" என்ற சந்திரனை,
"டேய் நீ என்னடா அவனை பேச விட்டுட்டு வேடிக்கை பார்க்குற" என கோபத்தில் கதிரும் தன் பங்கிற்கு அடி வெளுத்து வாங்க…."விடுடா செத்துட போறான்.இவனை வச்சு செய்யணும் நீ பாட்டுக்கு போசுக்குண்ணு சாகடிச்சிடாத" என்ற மதி அவனை தர தரவென இழுத்து சென்று ஜீப்போடு சேர்த்து கைவிலங்கிட்டவன், காரை திறக்க,
அங்கே கைக்காலகள் எல்லாம் கட்டப்பட்டு,மயங்கிய நிலையில் இருந்தால் கடத்தப்பட்ட பெண்.
கதிர் உடனடியாக இந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போ..நான் இவனை கொஞ்சம் கவனிச்சிட்டு, அப்பறம் வந்து பார்க்கிறேன் என்றவன், சந்திரனோடு கிளம்பிவிட,கதிரும் அந்த பெண்ணோடு மருத்துவமனை நோக்கி சென்றான்.
அன்று முழுவதும் காவல்நிலையத்தில் வைத்தே அவனை ஒருவழி ஆக்கியிருந்தான் மதி. "டேய் வேணாம் நீ உன்னோட சொந்த பகையை எல்லாம் காட்டி ஓவரா பண்ற,என்னை கோர்ட்டில் ஒப்படைக்கணும்...இப்படி அடிச்ச உன்னோட வேலைக்கே ஆப்பு தான்" என கொஞ்சமும் பயமின்றி சந்திரன் சொல்ல,
"ஏண்டா நாயே...இவளோ தெரிஞ்ச எனக்கு இரத்தம் காயம் ஏதும் வராமா உன்னை அடிக்க தெரியாதா?..உன் திமிர் மொத்தமும் அடங்கி என்னை விட்டுடுன்னு உன் வாயில் இருந்து வரும்வரை உன்னை இன்னைக்கு விடுறதா இல்லை" என மதியும் கோபத்தில் சிங்கம் போல் கர்ஜித்தான்.
"எதுக்குடா அந்த பொண்ணை கடத்துனா" என்ற மதியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே "அதுவா அந்த பொண்ணை நான் ஒன் சைடா காதலிக்கிறேன் அதான்,கடத்தி கல்யாணம் பண்ணிக்கலாம்னு" என சொன்னவனின் வாயில் மீண்டும் ஒரு குத்துவிட…"யாருகிட்ட உன் வேலையை காட்டுற மரியாதையா சொல்லு உன் பின்னாடி யாரு இருக்கா.கண்டிப்பா இதை நீ மட்டும் செய்ய வாய்ப்பேயில்லை,உனக்கெல்லாம் அந்த அளவுக்கு தைரியம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றவன்,
"உனக்கு பின்னால் யாரோ ஒரு பணம் தின்னி முதலை இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். அது யாருன்னு சொல்லிட்டா உனக்கு நல்லது இல்லை அப்பறம் உன் உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது" என்க,
'அவனோ நீ எவ்ளோ அடிச்சாலும் ஒரு வார்த்தையை கூட உன்னால் வாங்க முடியாது' என்ற தெனாவட்டில் இருந்தான்.
அன்றைய நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருந்தவன்,விடியற்காலையில் வீட்டிற்கு வந்தான். இன்னும் யாரும் எழாததால் நேரே தன் அறைக்கு செல்ல,
இரவு வெகுநேரம் மதியின் நினைவில் அழுகையில் கரைந்தவள், சற்று நேரத்திற்கு முன்பே தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றிருந்தாள் வர்ஷினி.
ஒருபுறமாக ஒருக்களித்து படுத்திருந்த மித்ராவின் அருகே அமர,வெகுநாட்கள் கழித்து அவளை ஆசையாக தன் பார்வையால் வருடினான்.
விடிவிளக்கின் ஒளியில் கன்னத்தில் பதிந்திருந்த கண்ணீர் தடம் அப்பட்டமாக தெரிய,அதனை புருவம் சுருக்கி பார்த்தவன்…."குட்டி சாத்தான் அடுத்தவங்களை தானே அழ வைப்பா,எதுக்கு இப்படி அழுதிருக்கா" என நினைக்கும் போதே தூக்கத்திலேயே சிறுபிள்ளை போல் தெம்ப,
மெல்ல தன் விரல் கொண்டு அவளின் கன்னம் வருட,முகத்தில் தானாக ஒரு கீற்று புன்னகை தோன்றி மறைந்தது.
தூக்கத்திலேயே அவனின் தொடுகையை உணர்ந்தவள் போல் கன்னம் வருடிய கரத்தை கெட்டியா பிடித்துக்கொள்ள,ஒருவேளை முழித்து விட்டாளோ என பயந்தவன்,அடுத்து அவள் செய்த செய்கையில் அவனின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.
அவனின் கரத்தை இழுத்து தன் கழுத்தடியில் வைத்துக்கொண்டு அவன் உள்ளங்கையில் முகம் தாங்கி தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
அவனும் அவளிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க மனமின்றி அப்படியே அமர்ந்துவிட்டான் அவன் தேவைதையை ரசித்தபடி.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன் மெல்ல குனிந்து அவள் நெற்றியில் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்க,அவளோ கண்கள் சுருக்கி அதனை ரசித்தாள். அடுத்தது அவன் இதழ்கள் பதிந்தது என்னவோ அவளின் விழிகளில் தான்.அடுத்து அவளின் நுனி மூக்கில் முத்தமிட்டவாறே மெல்ல கடிக்க, கூச்சத்தில் முகத்தை திருப்ப அடுத்தது இரு கன்னங்கள் தாண்டி அவளின் இதழை நோக்கி இவனின் இதழ்கள் பயணிக்க,
நூழிலை இடைவெளியில் அவளின் வார்த்தைகள் நினைவில் வர, தீச்சுட்டார் போல் அவளை விட்டு விலகினான். ஒருமுறை தடுமாறி கொடுத்த முத்ததிற்கே அப்படி பேசியவளுக்கு இது மட்டும் தெரிந்தது அவ்வளவு தான் என எண்ணியபடி தன் கரத்தை விடுவிக்க முயல,ஆனால் அவளோ எங்கே மீண்டும் வந்தவன் சென்றுவிடுவானோ என்று நிஜத்தை கனவாய் எண்ணி கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.
வெகுநேரம் அப்படியே குனிந்து அவளின் முகம் பார்த்தே இவனும் இருக்க,மெல்ல விடிய தொடங்க,ஹாலில் அனைவரின் சத்தமும் கேட்டது. இனிமேல் இப்படியே அமர்ந்திருப்பது நல்லதல்ல என எண்ணி கரத்தை இழுக்க, இப்போதும் முடியவில்லை.
அவனுக்கோ 'இப்போது மட்டும் அவள் எழுந்து இருவரும் இருக்கும் நிலையை பார்த்தாள் என செய்வாளோ' என பயத்தோடு மெல்ல தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் தலையை தாங்கி தலையணையில் வைத்தவன்,தன்னை பிடித்திருந்த கரத்தில் மீசை முடி குறுகுறுக்க தன் இதழ் பதிக்க,சட்டென்று அவன் கரத்தை விடுவித்தாள்.
தப்பித்தால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடி குளியலைக்குள் புகுந்து கொண்டான்.யாருக்கும் பயப்படாதவன் அஞ்சாநெஞ்சன் என பெயர்பெற்ற மதி, தன் குட்டி ராட்ச்சசிக்கு பயந்து நடுங்கினான்.
அவன் வந்ததோ,மீண்டும் டியூட்டிக்கு சென்றதோ எதுவும் தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவள், மெல்ல விழி திறக்கும் போது மணி காலை எழரையை கடந்திருந்தது.அவசரமாக எழுந்து கிளம்பியவளுக்கு அவன் வந்துபோன அடையாளம் எதுவும் கருத்தில் பதியவில்லை. இரவில் அவன் பதித்த முத்தங்கள் அனைத்தும் அவளை பொறுத்தவரை கனவாகவே இருந்தது.
அன்றைய நாள் கல்லூரியில் கூட அவள் முகத்தில் சிரிப்பு என்பதின்றி இறுக்கமாகவே இருந்தது.அவளின் தோழி கூட எவ்வளவு முயன்றும் அவளை மாற்ற முடியாமல் அவள் போக்கில் விட்டுவிட்டாள்.
அன்று சந்திரனை கோர்ட்டில் ஒப்படைக்க, அவனோ நேற்று மதியிடம் சொன்னது போல் அவளை காதலித்தேன் அதான் கடத்தினேன் என்று சொன்னானே தவிர வேறு ஒரு வார்த்தையும் இவர்களால் வரவைக்க முடியவில்லை. போன கடத்தலுக்கு இவனுக்கும் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதராமும் இல்லாததால் அந்த கேஸ் எதுவும் இவன் மேல் விழவில்லை.இவர்கள் எதிர்ப்பார்த்ததை விட குறைந்தபட்ச தண்டனையாக மூன்று ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைத்தது.
அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவனிடமிருந்து வாங்க முடியவில்லை.அவன் மொபைலை வைத்து பார்த்தலிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.அந்தளவுக்கு எல்லா தடயங்களையும் அழித்திருந்தான் பிரகாஷ்.அவனுக்கும் இவனுக்கும் இடையேயான தொடர்பு கடைசிவரை மதிக்கு தெரியாமலே போனது.
அவன் உள்மனம் சொல்லும் அந்த முகம் தெரியாத ஒருவனால், தன் உயிரானவளின் உயிர் ஊஞ்சலாட போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.