இங்கு கதிரின் வீட்டில்...மதுவை கதிரின் பெற்றோர்கள் நன்றாகவே பார்த்துக்கொண்டனர்.ஆனால் அவளால் தான் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. அவளுக்கு பிடித்து நடந்திருந்த திருமணம் என்றால் அப்படி உணர்ந்திருக்க மாட்டாள்,ஏனோ அவள் மட்டும் அந்நியப்பட்டு போனது போல் உணர்ந்தாள்.
இரவு உறங்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தை நெட்டி தள்ள வேண்டியிருந்தது அவளுக்கு. யார் பேசினாலும் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு அறைக்கு சென்றுவிட,ஒவ்வொரு நிமிடத்தையும் கடப்பது ஒரு யுகத்தை கடப்பது போல் இருந்தது.
இப்படியே இருந்தால் பைத்தியம் பிடிப்பது உறுதி,அதுவும் இல்லாமல் அறைக்குள்ளேயே மூச்சடைத்த போவது போல் இருக்க,இது அனைத்திலும் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க தொடங்கியவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. இதற்கு இங்குள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற குழப்பத்தில் இருந்தாள் மதுமிதா.
அப்போது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கதிர். மணி இரவு எட்டு மணியை கடந்திருக்க,வந்தவன் நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு எப்போதும் போல் ஒரு பூந்துவாலை மட்டும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைய, அவளோ அவனிடம் பேசிவிடும் வேகத்தில் குளியலறை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்.
சட்டென்று அவனை அந்த கோலத்தில் பார்த்துவிட, "அய்யயோ" என்ற அலறலோடு அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுக்கொள்ள, அவனுமே அவள் அறைக்குள் இருப்பாள் என்பதை மறந்து தான் போனான்.
"சாரி நான் ஏதோ ஒரு நினைப்பில் அப்படியே" என்றவன் அவரமாக தன் உடையை எடுத்துக்கொண்டு மீண்டும் பாத்ரூம்க்குள் நுழைந்து மாற்றிவிட்டு வந்தான்.
அதன்பின் அவளும் அவள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் மௌனமாக இருக்க,அதனை களைக்கும் பொருட்டு அவனே பேச்சை தொடங்கினான்.
அவளிடம் ஒரு பேப்பரை நீட்ட,அதனை வாங்கி பார்த்தவள் அவனையே இமைக்காது பார்க்க தொடங்கினாள்.
"அதுவந்து உனக்கு டீச்சிங்ல ரொம்ப ஆர்வம்னு கேள்வி பட்டேன்.அதான் உனக்கு வீட்டில் இருக்க போர் அடிக்கும் என்றவன் அவசரமாக…. உன்னை படி இல்ல வேலைக்கு போனு சொல்லலை. உனக்கு பிடித்தால் மட்டும் தான்,உன்னை கட்டாயப்படுத்தலை" என்றான் எங்கே அவள் தன்னை தவறாக எடுத்து கொள்வாளோ என்று.
ஆனால் அவனின் நினைப்பிற்கு மாறாக,கொஞ்ச கொஞ்சமாக அவளின் மனதில் இடம் பிடித்து கொண்டிருக்கிறான் என்று அவளும் அறியவில்லை அவனுக்கும் புரியவில்லை.
இதை தான் அவளும் சொல்ல நினைத்திருந்தாள்,அதற்குள் அவன் முந்திக்கொண்டான். ஒருவேளை திருமணம் நடக்காது இருந்திருந்தால் இதை தான் படிக்க எண்ணியிருந்தாள்.அதை சொல்லாமலேயே நிறைவேற்றிய கதிரின் மேல் மரியாதை கூடியது அவள் மனதில்.
அவள் அமைதியை கண்டு ஒருவேளை பிடிக்கவில்லையோ என எண்ணியவன், அதற்கு மேல் அவளை கேட்டு கட்டாயப்படுத்த விரும்பாமல்... வா சாப்பிட போகலாம் மணி ஆகிடுச்சு" என்று முன்னே செல்ல…
"ஒரு நிமிஷம்".... என்ற அவளின் காந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தவனை கண்டு "ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் மது.
"எனக்கெதுக்கு தேங்க்ஸ், இது என் பொண்டாட்டிக்கு நான் செய்ய வேண்டிய கடமை.தேங்க்ஸ் சொல்லி என்னை வேற்று ஆளாய் மாற்றிடாதே" என வருத்தமாக சொல்ல.
"சாரி... இனிமேல் அப்படி சொல்லமாட்டேன்" என சொன்னவளை பார்த்து
"அந்த லிஸ்டில் சாரி என்ற வார்த்தையையும் சேர்த்துக்கோ"
என்றவன் அழகான ஒரு புன்னகையை சிந்திவிட்டு உணவருந்த சென்றான்.
அன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அறையில்
படித்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி.அப்போது அறைக்கதவு தட்டபட,திறந்து பார்த்தவள் முன்பு நின்றுகொண்டிருந்தான் மதியின் தம்பி அதாவது அவனின் சித்தப்பா மகன் மதன்.
இத்தனை நாட்களில் அவன் இவளிடம் பேசியதே இல்லை. ஸ்கூல் படிக்கிறான் என்று மட்டுமே தெரியும்.
அவனுக்கும் வர்ஷினியை தெரியவில்லை... அவள் இந்த வீட்டில் இருந்து செல்லும் போது அவனுக்கு மூன்று வயது. இவளை விட மூன்று வயது சின்னவன், அப்போது நடந்த எதுவும் நினைவில்லை. அதனாலேயே அவனும் இவளிடம் பேச முயலவில்லை.
தன் முன் தயக்கத்துடன் நின்றிருந்த மதனை பார்த்து "என்ன?.." என கேட்க,
அவனும் "அது சின்ன உதவி அண்ணி" என்றான்.
அவன் அண்ணி என்று சொன்னதே மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. உறவு சொல்லி அழைக்க கூட யாரும் இல்லாமல் இருந்தவளுக்கு இந்த அழைப்பு பிடித்து போக,அவளும் புன்னகையுடன் பேசினாள்.
"சொல்லு மதன் என்ன பண்ணனும்' என கேட்க,
"அது நீங்க தான் நம்ம ஸ்கூல் ஃபர்ஸ்டுன்னு சொன்னாங்க...நான் இந்த வருஷம் டென்த் அதான் என்று இழுத்தவன்,எனக்கு மத்ஸ் மட்டும் சொல்லி தரிங்களா" என கேட்டான்.
"அதுக்கு எதுக்கு இவளோ தயக்கம். வா எனக்கும் தனியா படிக்க என்னவோ மாதிரி இருக்கு,
இனிமே இரண்டு பேரும் சேர்ந்தே படிக்கலாம்" என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் படித்துக்கொண்டிருந்த மேஜையின் அருகில் இன்னொரு நாற்காலியை போட்டு அவனை அமரவைத்து அவனின் சந்தேகத்தை கேட்டறிந்து அதனை அவனுக்கு சொல்லி கொடுத்தாள்.
"அண்ணி நீங்க சூப்பரா சொல்லி தரீங்க,படிக்க ஈஸியாக இருக்கு" என்று அவனும் உற்சாகத்துடன் படிக்க தொடங்கினான்.அவள் கொடுத்த சில கணக்குகளை போட்டு பார்த்தவுடன் இன்னும் அது எளிமையானதாக தோன்றியது அவனுக்கு.
இருவரும் வெகுநேரம் படித்துக்கொண்டிருக்க,சற்று நேரம் கழித்து ஓய்வு என்ற பேரில் ஊர் கதைகளை பேச தொடங்கிவிட்டனர்.
அவனும் இயல்பாக அவளிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பற்றி சொல்ல,அவளும் கல்லூரியில் நடந்ததை சொன்னாள்.
சாதாரணமாக அவள் பழகும் அனைவரும் அவளை விட சிறியவர்களே...அவளின் நட்பு வட்டமும் வாண்டுகள் தான் அதனால் சிறிது நேரத்திலேயே அவனோடு வாயாட தொடங்கிவிட்டாள்.
இருவரின் பேச்சும் சிரிப்பு சத்தமும் வெளியே ஹால் வரை கேட்க,அப்போது வேலை முடிந்து உள்ளே நுழைந்த மதியின் செவிகளில் தன்னவளின் சிரிப்பொலியே வரவேற்றது.
இதுநாள் வரை அவள் இருப்பதே தெரியாது..அனாவசியமாக ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசாதவள் இன்று தன் கூட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள். அதுவே அனைவருக்கும் நிம்மதியை தர,சீக்கிரம் பழையபடி தங்களையே சுற்றிவரும் மித்ராவாக மாறிவிடுவாள் என்ற நிம்மதியில் இருந்தனர்.
அறைக்குள் நுழைந்தவன் கதவில் சாய்ந்தவாறு இருவரையும் பார்க்க,அவர்களோ இவனை கண்டுகொள்ளாமல் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.
"அது சரி எல்லாரும் ஓகே... ஆனா உங்க அண்ணன் மட்டும் ஏன் இப்படி இருக்கார்.எப்போ பார்த்தாலும் முறைச்சிகிட்டே...வீட்ல கூட போலீஸ் மாதிரி,எதுவா இருந்தாலும் என்னை மிரட்டியே செய்ய வைத்துவிடுறான்" என அவனை திட்டி தீர்க்க,
"என்ன அண்ணி நீங்க எங்க அண்ணாவை பார்த்து அவன் இவன்னு சொல்றீங்க?..." மதனும் சண்டைக்கு வர
"அதெல்லாம் உங்க அண்ணனுக்கு அவ்ளோ சீன் போதும், நீயும் ஓவரா பில்டப் கொடுக்காதே...சரியான டம்மி போலீஸ்.
போலீஸ்ன்னா எப்படியிருக்கனும் தெரியுமா?... காக்க காக்க சூர்யா தெரியுமா அப்படி இருக்கணும். எங்க வீட்ல இருக்குற ஓல்டு லெடிக்கு தெரியாம திருட்டுத்தனமாக பார்த்த படம். அதுல சும்மா எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு, துப்பாக்கி எடுத்து வில்லன்களை எல்லாம் இப்படி சுட்டு தள்ளுவாரே"….என கையை துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு திரும்ப,
அங்கு ருத்ரமூர்த்தியாக அவளையே அழுத்தமாக பார்த்துகொண்டு நின்றிருந்தான் மதி.
அவனை அந்தநேரத்தில் சற்றும் எதிர்பாராத மித்ரா அதிர்ச்சியில் "அய்யோ" என வாயில் கைவைக்க,மதனும் தன் அண்ணனை பார்த்து திருதிருவென முழித்தான்.
அவனோ அமைதியாக உள்ளே நுழைய…"அண்ணி நான் நாளைக்கு வரேன்,ஹோம் ஒர்க் பண்ணனும்" என சொல்லிவிட்டு மதன் எஸ்கேப் ஆகிவிட,
'அடப்பாவி இப்படி தனியா இந்த நெட்டையன் கிட்ட மாட்டிவிட்டுட்டு போறியே' என மனதுக்குள் புலம்பியவள்,அவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து அவளை நெருங்கியவன்,அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க,அவள் முகம் அவன் மார்பில் வந்து மோதியது.
தன்னை அடிக்க தான் போகிறான் என்ற பயத்தில் கண்மூடி கிடந்தவள்,அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து,அவனை நிமிர்ந்து பார்க்க…
அதற்காகவே காத்திருந்தவன் போல்,வெகு அருகில் தெரிந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்…."சாகடிக்கிற டி ராட்சசி" என்றவன் அவள் என்ன நடந்தது என உணரும் முன்பே அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான். அந்த இதழணைப்பை முடிக்கும் எண்ணமே இல்லாதவனாக அதிலேயே முழ்கியவன்,சட்டென்று பிரித்து,
"இந்த வாய் தானே இப்படியெல்லாம் பேசுது...நானா டம்மி போலீஸ்" என சொல்ல சிறிது இடைவெளி விட்டவன், மீண்டும் பற்றி கொள்ள….அவனின் காதலை இதழ் வழி கடத்தி சென்று இதயம் சேர்க்கும் முயற்ச்சியில் அவன் இருக்க….அவளோ தன்னிடமிருந்து அவனை பிரித்து தள்ளினாள். அவனின் திடமான உடலை அவளை அசைக்க கூட முடியவில்லை.
இருவருக்குமான முதல் முத்தம்...அவனுக்காவது அவள் மேல் எல்லையற்ற காதல் இருக்க,அவளுக்கோ அப்படி எதுவும் இல்லை. அவளை பொறுத்தவரை அவன் தன் மாமா பையன் அவ்வளவு தான்.இதுவரை காதல் என்ற உணர்வை அவள் உணர்ந்ததுமில்லை உணரக்கூடிய வயதுமில்லை.
அப்படியிருக்க அவனின் இந்த செயல் அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரத்தை கொடுக்க,அவனை எதுவும் செய்யமுடியாத நிலை ஒருபுறம், மூச்செடுக்க முடியாமல் தவிக்கும் நிலை என இரண்டும் சேர்ந்து அழுகையாக கண்களில் இருந்து இறங்க…
அத்தனை நேரம் தன்னவள் இதழில் மூழ்கி இருந்தவனை கலைத்தது அவள் கண்ணீரின் உவர்ப்பு.
தன்னிலை அடைந்து பிரியும் போதே தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவன்,தன் தலையிலேயே தட்டிக்கொண்டு….மன்னிப்பை வேண்டி பாவையவள் முகம் பார்க்க,முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள் மித்ரா.
"செல்லக்குட்டி சாரிடா...அத்தான் ஏதோ தெரியாம…"
என்ற வார்த்தையை முடிக்கும் முன்பே அவள் கரம் இடியென அவன் கன்னத்தில் பதிந்தது.
இத்தனை நாள் அவள் அடித்தது அனைத்தும் செல்ல அடியாக உணர்ந்தவனுக்கு இந்த அடியில் அவன் உணர்ந்த வலி பெண்ணவளின் ஒட்டுமொத்த கோபம் மற்றும் வலியின் வெளிப்பாடு என்று நன்றாகவே உணர்ந்துக்கொண்டான்.
இரவு உறங்கும் நேரத்தை தவிர மற்ற நேரத்தை நெட்டி தள்ள வேண்டியிருந்தது அவளுக்கு. யார் பேசினாலும் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு அறைக்கு சென்றுவிட,ஒவ்வொரு நிமிடத்தையும் கடப்பது ஒரு யுகத்தை கடப்பது போல் இருந்தது.
இப்படியே இருந்தால் பைத்தியம் பிடிப்பது உறுதி,அதுவும் இல்லாமல் அறைக்குள்ளேயே மூச்சடைத்த போவது போல் இருக்க,இது அனைத்திலும் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்க தொடங்கியவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. இதற்கு இங்குள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற குழப்பத்தில் இருந்தாள் மதுமிதா.
அப்போது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கதிர். மணி இரவு எட்டு மணியை கடந்திருக்க,வந்தவன் நேராக குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு எப்போதும் போல் ஒரு பூந்துவாலை மட்டும் அணிந்துகொண்டு அறைக்குள் நுழைய, அவளோ அவனிடம் பேசிவிடும் வேகத்தில் குளியலறை திறக்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்.
சட்டென்று அவனை அந்த கோலத்தில் பார்த்துவிட, "அய்யயோ" என்ற அலறலோடு அவனுக்கு முதுகுக்காட்டி நின்றுக்கொள்ள, அவனுமே அவள் அறைக்குள் இருப்பாள் என்பதை மறந்து தான் போனான்.
"சாரி நான் ஏதோ ஒரு நினைப்பில் அப்படியே" என்றவன் அவரமாக தன் உடையை எடுத்துக்கொண்டு மீண்டும் பாத்ரூம்க்குள் நுழைந்து மாற்றிவிட்டு வந்தான்.
அதன்பின் அவளும் அவள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் மௌனமாக இருக்க,அதனை களைக்கும் பொருட்டு அவனே பேச்சை தொடங்கினான்.
அவளிடம் ஒரு பேப்பரை நீட்ட,அதனை வாங்கி பார்த்தவள் அவனையே இமைக்காது பார்க்க தொடங்கினாள்.
"அதுவந்து உனக்கு டீச்சிங்ல ரொம்ப ஆர்வம்னு கேள்வி பட்டேன்.அதான் உனக்கு வீட்டில் இருக்க போர் அடிக்கும் என்றவன் அவசரமாக…. உன்னை படி இல்ல வேலைக்கு போனு சொல்லலை. உனக்கு பிடித்தால் மட்டும் தான்,உன்னை கட்டாயப்படுத்தலை" என்றான் எங்கே அவள் தன்னை தவறாக எடுத்து கொள்வாளோ என்று.
ஆனால் அவனின் நினைப்பிற்கு மாறாக,கொஞ்ச கொஞ்சமாக அவளின் மனதில் இடம் பிடித்து கொண்டிருக்கிறான் என்று அவளும் அறியவில்லை அவனுக்கும் புரியவில்லை.
இதை தான் அவளும் சொல்ல நினைத்திருந்தாள்,அதற்குள் அவன் முந்திக்கொண்டான். ஒருவேளை திருமணம் நடக்காது இருந்திருந்தால் இதை தான் படிக்க எண்ணியிருந்தாள்.அதை சொல்லாமலேயே நிறைவேற்றிய கதிரின் மேல் மரியாதை கூடியது அவள் மனதில்.
அவள் அமைதியை கண்டு ஒருவேளை பிடிக்கவில்லையோ என எண்ணியவன், அதற்கு மேல் அவளை கேட்டு கட்டாயப்படுத்த விரும்பாமல்... வா சாப்பிட போகலாம் மணி ஆகிடுச்சு" என்று முன்னே செல்ல…
"ஒரு நிமிஷம்".... என்ற அவளின் காந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தவனை கண்டு "ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் மது.
"எனக்கெதுக்கு தேங்க்ஸ், இது என் பொண்டாட்டிக்கு நான் செய்ய வேண்டிய கடமை.தேங்க்ஸ் சொல்லி என்னை வேற்று ஆளாய் மாற்றிடாதே" என வருத்தமாக சொல்ல.
"சாரி... இனிமேல் அப்படி சொல்லமாட்டேன்" என சொன்னவளை பார்த்து
"அந்த லிஸ்டில் சாரி என்ற வார்த்தையையும் சேர்த்துக்கோ"
என்றவன் அழகான ஒரு புன்னகையை சிந்திவிட்டு உணவருந்த சென்றான்.
அன்று கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அறையில்
படித்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி.அப்போது அறைக்கதவு தட்டபட,திறந்து பார்த்தவள் முன்பு நின்றுகொண்டிருந்தான் மதியின் தம்பி அதாவது அவனின் சித்தப்பா மகன் மதன்.
இத்தனை நாட்களில் அவன் இவளிடம் பேசியதே இல்லை. ஸ்கூல் படிக்கிறான் என்று மட்டுமே தெரியும்.
அவனுக்கும் வர்ஷினியை தெரியவில்லை... அவள் இந்த வீட்டில் இருந்து செல்லும் போது அவனுக்கு மூன்று வயது. இவளை விட மூன்று வயது சின்னவன், அப்போது நடந்த எதுவும் நினைவில்லை. அதனாலேயே அவனும் இவளிடம் பேச முயலவில்லை.
தன் முன் தயக்கத்துடன் நின்றிருந்த மதனை பார்த்து "என்ன?.." என கேட்க,
அவனும் "அது சின்ன உதவி அண்ணி" என்றான்.
அவன் அண்ணி என்று சொன்னதே மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. உறவு சொல்லி அழைக்க கூட யாரும் இல்லாமல் இருந்தவளுக்கு இந்த அழைப்பு பிடித்து போக,அவளும் புன்னகையுடன் பேசினாள்.
"சொல்லு மதன் என்ன பண்ணனும்' என கேட்க,
"அது நீங்க தான் நம்ம ஸ்கூல் ஃபர்ஸ்டுன்னு சொன்னாங்க...நான் இந்த வருஷம் டென்த் அதான் என்று இழுத்தவன்,எனக்கு மத்ஸ் மட்டும் சொல்லி தரிங்களா" என கேட்டான்.
"அதுக்கு எதுக்கு இவளோ தயக்கம். வா எனக்கும் தனியா படிக்க என்னவோ மாதிரி இருக்கு,
இனிமே இரண்டு பேரும் சேர்ந்தே படிக்கலாம்" என அவனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் படித்துக்கொண்டிருந்த மேஜையின் அருகில் இன்னொரு நாற்காலியை போட்டு அவனை அமரவைத்து அவனின் சந்தேகத்தை கேட்டறிந்து அதனை அவனுக்கு சொல்லி கொடுத்தாள்.
"அண்ணி நீங்க சூப்பரா சொல்லி தரீங்க,படிக்க ஈஸியாக இருக்கு" என்று அவனும் உற்சாகத்துடன் படிக்க தொடங்கினான்.அவள் கொடுத்த சில கணக்குகளை போட்டு பார்த்தவுடன் இன்னும் அது எளிமையானதாக தோன்றியது அவனுக்கு.
இருவரும் வெகுநேரம் படித்துக்கொண்டிருக்க,சற்று நேரம் கழித்து ஓய்வு என்ற பேரில் ஊர் கதைகளை பேச தொடங்கிவிட்டனர்.
அவனும் இயல்பாக அவளிடம் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பற்றி சொல்ல,அவளும் கல்லூரியில் நடந்ததை சொன்னாள்.
சாதாரணமாக அவள் பழகும் அனைவரும் அவளை விட சிறியவர்களே...அவளின் நட்பு வட்டமும் வாண்டுகள் தான் அதனால் சிறிது நேரத்திலேயே அவனோடு வாயாட தொடங்கிவிட்டாள்.
இருவரின் பேச்சும் சிரிப்பு சத்தமும் வெளியே ஹால் வரை கேட்க,அப்போது வேலை முடிந்து உள்ளே நுழைந்த மதியின் செவிகளில் தன்னவளின் சிரிப்பொலியே வரவேற்றது.
இதுநாள் வரை அவள் இருப்பதே தெரியாது..அனாவசியமாக ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசாதவள் இன்று தன் கூட்டை விட்டு வெளியே வந்திருக்கிறாள். அதுவே அனைவருக்கும் நிம்மதியை தர,சீக்கிரம் பழையபடி தங்களையே சுற்றிவரும் மித்ராவாக மாறிவிடுவாள் என்ற நிம்மதியில் இருந்தனர்.
அறைக்குள் நுழைந்தவன் கதவில் சாய்ந்தவாறு இருவரையும் பார்க்க,அவர்களோ இவனை கண்டுகொள்ளாமல் தங்கள் பேச்சை தொடர்ந்தனர்.
"அது சரி எல்லாரும் ஓகே... ஆனா உங்க அண்ணன் மட்டும் ஏன் இப்படி இருக்கார்.எப்போ பார்த்தாலும் முறைச்சிகிட்டே...வீட்ல கூட போலீஸ் மாதிரி,எதுவா இருந்தாலும் என்னை மிரட்டியே செய்ய வைத்துவிடுறான்" என அவனை திட்டி தீர்க்க,
"என்ன அண்ணி நீங்க எங்க அண்ணாவை பார்த்து அவன் இவன்னு சொல்றீங்க?..." மதனும் சண்டைக்கு வர
"அதெல்லாம் உங்க அண்ணனுக்கு அவ்ளோ சீன் போதும், நீயும் ஓவரா பில்டப் கொடுக்காதே...சரியான டம்மி போலீஸ்.
போலீஸ்ன்னா எப்படியிருக்கனும் தெரியுமா?... காக்க காக்க சூர்யா தெரியுமா அப்படி இருக்கணும். எங்க வீட்ல இருக்குற ஓல்டு லெடிக்கு தெரியாம திருட்டுத்தனமாக பார்த்த படம். அதுல சும்மா எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு, துப்பாக்கி எடுத்து வில்லன்களை எல்லாம் இப்படி சுட்டு தள்ளுவாரே"….என கையை துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு திரும்ப,
அங்கு ருத்ரமூர்த்தியாக அவளையே அழுத்தமாக பார்த்துகொண்டு நின்றிருந்தான் மதி.
அவனை அந்தநேரத்தில் சற்றும் எதிர்பாராத மித்ரா அதிர்ச்சியில் "அய்யோ" என வாயில் கைவைக்க,மதனும் தன் அண்ணனை பார்த்து திருதிருவென முழித்தான்.
அவனோ அமைதியாக உள்ளே நுழைய…"அண்ணி நான் நாளைக்கு வரேன்,ஹோம் ஒர்க் பண்ணனும்" என சொல்லிவிட்டு மதன் எஸ்கேப் ஆகிவிட,
'அடப்பாவி இப்படி தனியா இந்த நெட்டையன் கிட்ட மாட்டிவிட்டுட்டு போறியே' என மனதுக்குள் புலம்பியவள்,அவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்.
ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து அவளை நெருங்கியவன்,அவள் இடையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க,அவள் முகம் அவன் மார்பில் வந்து மோதியது.
தன்னை அடிக்க தான் போகிறான் என்ற பயத்தில் கண்மூடி கிடந்தவள்,அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாததால் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து,அவனை நிமிர்ந்து பார்க்க…
அதற்காகவே காத்திருந்தவன் போல்,வெகு அருகில் தெரிந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்…."சாகடிக்கிற டி ராட்சசி" என்றவன் அவள் என்ன நடந்தது என உணரும் முன்பே அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான். அந்த இதழணைப்பை முடிக்கும் எண்ணமே இல்லாதவனாக அதிலேயே முழ்கியவன்,சட்டென்று பிரித்து,
"இந்த வாய் தானே இப்படியெல்லாம் பேசுது...நானா டம்மி போலீஸ்" என சொல்ல சிறிது இடைவெளி விட்டவன், மீண்டும் பற்றி கொள்ள….அவனின் காதலை இதழ் வழி கடத்தி சென்று இதயம் சேர்க்கும் முயற்ச்சியில் அவன் இருக்க….அவளோ தன்னிடமிருந்து அவனை பிரித்து தள்ளினாள். அவனின் திடமான உடலை அவளை அசைக்க கூட முடியவில்லை.
இருவருக்குமான முதல் முத்தம்...அவனுக்காவது அவள் மேல் எல்லையற்ற காதல் இருக்க,அவளுக்கோ அப்படி எதுவும் இல்லை. அவளை பொறுத்தவரை அவன் தன் மாமா பையன் அவ்வளவு தான்.இதுவரை காதல் என்ற உணர்வை அவள் உணர்ந்ததுமில்லை உணரக்கூடிய வயதுமில்லை.
அப்படியிருக்க அவனின் இந்த செயல் அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரத்தை கொடுக்க,அவனை எதுவும் செய்யமுடியாத நிலை ஒருபுறம், மூச்செடுக்க முடியாமல் தவிக்கும் நிலை என இரண்டும் சேர்ந்து அழுகையாக கண்களில் இருந்து இறங்க…
அத்தனை நேரம் தன்னவள் இதழில் மூழ்கி இருந்தவனை கலைத்தது அவள் கண்ணீரின் உவர்ப்பு.
தன்னிலை அடைந்து பிரியும் போதே தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவன்,தன் தலையிலேயே தட்டிக்கொண்டு….மன்னிப்பை வேண்டி பாவையவள் முகம் பார்க்க,முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள் மித்ரா.
"செல்லக்குட்டி சாரிடா...அத்தான் ஏதோ தெரியாம…"
என்ற வார்த்தையை முடிக்கும் முன்பே அவள் கரம் இடியென அவன் கன்னத்தில் பதிந்தது.
இத்தனை நாள் அவள் அடித்தது அனைத்தும் செல்ல அடியாக உணர்ந்தவனுக்கு இந்த அடியில் அவன் உணர்ந்த வலி பெண்ணவளின் ஒட்டுமொத்த கோபம் மற்றும் வலியின் வெளிப்பாடு என்று நன்றாகவே உணர்ந்துக்கொண்டான்.