தளர்ந்த நடையில் அறையை விட்டு வெளியே செல்ல போனவனின் வழியில் ஒரு நாற்காலி தடுக்கி அவன் காலில் விழுந்தது. "பச்"...என சலித்தபடி அதை எடுக்க கீழே குனிந்தவனின் கண்ணுக்கு … மித்ராவை பிரகாஷ் கண்ணிற்கு காட்டிக்கொடுத்த அதே கண்ணாடியில் இப்போது பிரகாஷ் மதியின் கண்ணுக்கு தெரிந்தான். அதுவும் மித்ராவின் வாயை பொத்திக்கொண்டு இருப்பது தெரிந்தது.
இரத்தம் கொதிக்க... தன்னவள் முகத்தில் பார்த்த உயிர் பயத்தை காண காண அவனை கண்டம் துண்டமாக வெட்டும் வெறி வர...அவர்களை நோக்கி தன் நடையை எட்டிப் போட்டான்.
அவள் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை மலர….பிரகாஷ் சுதாரிக்கும் முன் சட்டென்று நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைக்க, அதில் மித்ராவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவன் விட்ட அடுத்த நொடி "மாமா" என்ற கூவலோடு அவனை அணைத்தவள் அப்படியே அவன் கரங்களில் மயங்கி சரிந்தாள்.
இத்தனை நேரமும் அவனுக்காக காத்திருந்தவள், அவனை பார்த்தவுடன் இனி அவன் பார்த்து கொள்ளவான் என்ற நம்பிக்கையில்...இவ்வளவு நேரம் போராடிய போராட்டத்தில் உடலும் மனமும் சோர்வடைய அவனில் மயங்கிவிட்டாள்.
ஒரு கரத்தில் அவளை தாங்கி தன்னோடு அணைத்தவனின் மறு கரத்தில் துப்பாக்கி இருக்க...மதியின் காலுக்கு அடியில் பிரகாஷ் இருந்தான். ஷூ காலில் அழுத்தம் கொடுக்க… அதற்கு அடியில் அவனின் கரம் நசுங்கியது. அதில் வலி தாங்க முடியாமல் அவனிடமிருந்து பெரும் அலறல் சத்தம் வர,
இவனின் சத்தத்தில் கதிர் மற்றும் சில போலீசார்களும் வந்துவிட... கதிரிடம் கண் காட்டியவன், "நான் வர வரைக்கும் அவன் இந்த இடத்தை விட்டு நகரவே கூடாது. அதேமாதிரி யாரும் அவன்மேல் கை வைக்க கூடாது. நானே தான் சாரை ராஜ மரியாதையோடு வழியனுப்பனும்" என்றவன்,
தன்னவளை குழந்தை போல் கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
தன் மடியில் இருக்கும் முகத்தை பார்க்க பார்க்க அந்த பிரகாஷை துடித்துடிக்க கொள்ளும் வெறி வந்தது மதிக்கு. பின்னர் வண்டியை ஓட்டிக் கொண்டே வீட்டுக்கு தகவல் சொல்ல...அவளை மருத்துமனையில் சேர்த்த சில நிமிடங்களில் மொத்த குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது.
வெளியே வந்த டாக்டர்...ஒன்னும் பிரச்சனையில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிடுவாங்க. அதிகமான பயமும் அதிர்ச்சியும் தான் இப்படி ஆக காரணம் என்றுவிட்டு செல்ல அதன்பின்னரே மொத்த குடும்பமும் நிம்மதியடைந்தது.
அவள் கண்விழிக்கும் முன் செய்யவேண்டிய ஒரு கடமை இருக்க,குடும்பத்தினரிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தவன், கதிருக்கு அழைத்தான்.
"என்னடா நான் சொன்னது ரெடியா" என கேட்க, அவனும் எல்லாம் ரெடி என சொல்ல அவன் கைகளில் ஜீப் பறந்தது.
அதே அனாட்டமி ஆய்வகத்தில் கதிரின் அடியில் சுருண்டு கிடந்தான் பிரகாஷ்.
அவனை பார்த்தவுடன் கதிரின் சட்டையை பிடித்து "எதுக்குடா அடிச்ச,அவனை என் கையால கொல்லனும்னு சொன்னேன் தான" என கத்த,
"அவன் பேசுன பேச்சுக்கு நானே என் கையால கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு. என்கிட்டயே பேரம் பேசுறான் பொறுக்கி" என மீண்டும் ஒரு உதை விட்டான் கதிர்.
மதி ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர, அவனின் காலடியில் கிடந்த பிரகாஷின் தலைமுடியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் "எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு போலீஸ் காரன் பொண்டாட்டி மேல கைவைக்க பார்ப்ப...எதுக்குடா இப்படி பண்ண... சொல்லுடா... சொல்லு" என முகத்திலேயே பளார் பளார் என்று அடிக்க…
அவனோ அப்போதும் அடங்காமல் "டேய்... எங்க அப்பாவை பத்தி தெரியாம பேசாத...அவர் முன்னாடி நீங்க எல்லாம் கைக்கட்டி தான் நிற்கணும். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பணக்காரர் என பெருமை பேசியவன்,என் மேல கை வச்சது மட்டும் தெரிஞ்சிச்சு அப்பறம் உங்களுக்கு வேலையும் இருக்காது உயிரும் இருக்காது" என்றான் ஆணவமாக.
"அது உங்க அப்பாக்கு தெரிஞ்சா தானே தம்பி...நாளைக்கு உங்க அப்பாவே என்கிட்ட வந்து என் பையனை கண்டுபிடிச்சு தாங்கன்னு கேட்பார் பாரு என்றவன், சாரி சாரி அதை பார்க்க தான் நீ உயிரோடு இருக்க மாட்டியே" என உச்சுக்கொட்ட…"டேய் என்னடா சொல்ற?...வேணாம் என்னை விட்டுடு உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன்" என பேரம் பேச
"கவலைப்படாத நான் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான். எனக்கு உன்னோட பணமெல்லாம் வேணாம், உன் உயிர் மட்டும் போதும்…அதுவுமில்லாம உனக்கு துணைக்கு உன்னோட மானங்கெட்ட இரண்டு ஃப்ரெண்ட்ஸையும் துணைக்கு அனுப்புறேன் என்றவன், துப்பாக்கியை எடுக்க...அவனோ அலறி அடித்துக்கொண்டு மதியின் காலில் விழுந்தான்.
"என்னடா அதுக்குள்ள காலில் விழுந்துட்ட….நீ பேசுனா பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரமாவது கெத்தா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா இப்படி பட்டுன்னு உயிர்பிச்சை கேட்குற" என நக்கலாக சிரித்தவன்,
" உன்னை இதுக்காக மட்டும் தான் கொல்ல போறன்னு மட்டும் நினைக்காத...இது நீ கற்பழிச்சி கொலை பண்ண அத்தனை பொண்ணுக்காகவும் தான்.இதெல்லாம் எப்படி தெரியும்னு பார்க்குறிய...அதான் உன் பிரென்ட் சந்திரன் இருக்கானே, அவனை கவனிக்கிற விதத்தில் கவனிச்சோம் தானா வந்து உண்மையை சொல்லிட்டான். அப்பவே உனக்கு ஸ்கெட்ச் போட்டுடேன் டா. ஆனா என்ன என்னை கொஞ்சம் ஓவர் டேக் பண்ணிட்ட" என்றவனை இன்னும் பயத்துடன் பார்க்க,
"சரி விடு ரொம்ப பயப்படுற... அதனால துப்பாக்கி வேணாம் என்றவன் சுற்றியும் பார்த்துவிட்டு, இதெல்லாம் என்ன" என கேட்க...அவனோ பயத்துடன் நடுங்கும் குரலில் இதுக்கு பேர் கெடாவர் (பதப்படுத்தப்பட்ட மனித உடல்) என்றான் .
"ஓ... செத்ததுக்கு அப்பறம் தான் இந்த கெமிக்கலில் போடுவாங்கலா" என்க அவனும் ஆம் என தலையாட்டினான்.
"அப்போ நாம ஏன் புதுசா யோசிக்க கூடாது" என தாடையில் கைவைத்து யோசித்தவனின் கண்ணசைவில் அதே போன்ற திரவம் நிறைந்த ஒரு கண்ணாடி பெட்டி கொண்டுவரப்பட...அதை கண்டு மிரண்டு தப்பிக்க முயன்றவனை ஒரே தள்ளில் அந்த பெட்டியில் படுக்க வைத்தவன் அதனை மூடினான்….கொஞ்ச நேரத்தில் மூச்சடைத்து துடிக்க துடிக்க தன் உயிரை விட்டிருந்தான் பிரகாஷ்.
அதே லேபிள் இவனும் ஒரு பிணமாக இருக்க...அவனின் நண்பர்கள் இருவருக்கும் கூட வேறு விதத்தில் தண்டனை தயாராக இருக்க அதனை கதிரிடம் கொடுத்துவிட்டு இவன் மனைவியை காண சென்றுவிட்டான்.
உள்ளே நுழைந்தவனை பார்த்ததும் கண்ணீர் பெருக...வேகமாக அவளை நெருங்கியவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
அவனும் அவளின் தலையில் தாடையை பதித்து அப்படியே தனக்குள் புதைத்துக் கொள்ள... இருவருக்கும் தனிமை கொடுத்து அனைவரும் விலகி சென்றனர்.
அவன் முகம் பற்றி கண் மூக்கு காது என முத்தத்தை வரைமுரையின்றி வாரி வழங்க அவனும் அதே அளவுக்கு தன் தவிப்பை வெளிப்படுத்தினான்.
அவனிடம் நடந்தது அனைத்தையும் சொல்ல...அவள் எப்படியெல்லாம் பயந்திருப்பாள் என எண்ணியவன் அவள் கரம் பற்றி "என்னை மன்னிச்சிடு டா என்னால தானே...நான் மட்டும் இன்னைக்கு வந்திருந்தா இப்படி நடந்திருக்காது" என்றவன் அவளின் கரம் கொண்டு தன் கன்னத்தில் அடிக்க…
"அய்யோ விடுங்க மாமா...எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?...உங்களை பார்த்ததும். நீங்க போகக்கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்" என்க, "இனிமே என் உயிரே போனாலும் உன்னை விட்டு போகமாட்டேன்" என்றவன் வன்மையாக அணைக்க...அதற்குள் அறை கதவு தட்டப்பட்டது.
உள்ளே நுழைந்த சகுந்தலா தயங்கி நிற்க, மதி "யாரை கேட்டு உள்ள வந்தீங்க?..வெளிய போங்க" என விரட்டினான்.
மதியின் கையை பிடித்து தடுத்த மித்ரா வேண்டாம் என்பதாய் தலையாட்ட... மனையாளில் வார்த்தையில் கொஞ்சம் அமைதியானான்.
மித்ராவின் கையை பிடித்துக்கொண்டு "என்னை மன்னிச்சிடு டா ஏதோ கோபத்தில் புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன் "என கண்ணீர் வடிக்க,அவளும் "விடுங்கம்மா… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல" என்றவள், மெலிதாக சிரிக்க...இவளை போயா தவறாக நினைத்தோம் என காலம் கடந்து வருந்தினார்.
அடுத்த இருநாட்கள் மருத்துவமனையில் கழிய..இன்று தான் வீட்டிற்கு வந்தாள் மித்ரா. அவளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாய் அவளின் அப்பா அம்மா தங்கை என அனைவரும் அவளோடு அதே வீட்டில் இருப்பதை பார்க்கும் போது கண்ட கனவு மொத்தமும் நிறைவடைந்த நிறைவு முகத்தில். அன்றைய நாள் சந்தோஷத்தில் கரைய,
இரவு தங்கள் அறையில் தன் மாமனின் மார்பில் முகம் புதைத்து பேசி கொண்டிருந்த மித்ராவை தன்னிலிருந்து பிரித்த மதி அவளின் முகம் பார்க்க...அவளோ "என்ன டா மாமா அப்படி பார்க்குற" என கேட்டாள்
"மித்துமா... மாமா ஒன்னு கேட்பேன், ஆனா நீ முடியாதுன்னு சொல்லாம தருவியா" என கேட்க,
"என்கிட்ட என்ன மாமா தயக்கம்...தைரியமா கேளு எதுவா இருந்தாலும் நான் தரேன்" என அவன் என்ன கேட்க போகிறான் என்பதை அறியாத குழந்தையாக வாக்கு கொடுத்தாள்.
அவனோ அவளின் கண்களை ஆழமாக பார்த்துக்கொண்டே...அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "நீ தான் வேணும்,அதுவும் முழுசா...எனக்கே எனக்குன்னு. உன்னை தொலைச்சிட்டு நான் பட்ட வலி இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது. இன்னும் அந்த தவிப்பு அடங்கவே இல்லை,அதை உன்னால மட்டும் தான் தடுக்கமுடியும்" என்றவன்,
"ஐ லவ் யூ...அண்ட்….ஐ நீட் யூ பேட்லி" என்றவன் அவள் இதழை நெருங்கி,நிமிர்ந்து அவளின் விழி பார்க்க...அவனுக்கு சம்மதிக்கும் விதமாய் கண்மூடி கிடந்தாள்.
இத்தனை நாள் இல்லாத வன்மை அவனின் முத்தத்தில்...அது அவளுக்கு வலித்தாலும் அவளுக்கும் அது தேவையாய் இருந்தது. இரு இதழ்களின் போராட்டம் முடியவே முடியாது என்பது போல் நீண்டுக்கொண்டே இருந்தது முத்த யுத்தம். அவள் மூச்சுக்காற்றுக்காக ஏங்கும் போது மட்டும் கொஞ்சம் இடைவெளி விட்டவன் மீண்டும் முத்தத்தை தொடர்ந்தான்.
முத்தம் கடந்து முதன்முறை அவனின் தொடுகை கணவனாய் முன்னேற… வெட்கமும் கூச்சமும் போட்டி போட...தடுக்க முயன்றும் முடியாத நிலையில் அவள்.கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தவன்… புயலாய் அவளை ஆக்கிரமிக்க,அவனின் மென்மையை மட்டுமே உணர்ந்திருந்தவளுக்கு அவனின் வன்மையும் ரசிக்கவே செய்தது.
அவளை விடுவிக்க மனமின்றி மீண்டும் மீண்டும் அவளை நாட...அவனின் தவிப்பை உணர்ந்தவள் அவனுக்கு மொத்தமாய் தன்னையே விட்டுக்கொடுத்தாள். தன் இத்தனை வருட காதல் மொத்தத்தையும் ஒரே கூடலில் உணர்த்த துடித்தவன் அதை சாதித்துவிட்டே அவளைவிட்டு விலகினான்.
தன் மார்பில் கலைந்து களைத்து கிடக்கும் தன் தேவதையின் முகத்தில் படர்ந்த முடி கற்றையை காதோரம் ஒதுக்கி "செல்லக்குட்டி மாமா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா" என கேட்க, அவன் கேள்வியில் மேலும் சிவந்தவள், அவன் மார்பில் செல்லமாக இரண்டு அடிகளை போட்டாள்.
அவளின் செல்ல சிணுங்கல் கூட அவனுள் போதை ஏற்ற..வெகு அருகில் தெரிந்த அவளின் இதழில் மீண்டும் ஒரு முத்தத்தை கொடுத்து அணைத்துக்கொண்டான் மதி.
நாட்கள் செல்ல செல்ல...இருவரின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது. அதற்கு அச்சாரமாய் அடுத்த ஒரே ஆண்டில் அந்த வீட்டிற்கு ஒரு இளவரசியை மித்ரா ஈன்றெடுக்க...மொத்த குடும்பமும் அவளை தாங்கியது.
அதுவும் சண்முக சுந்தரத்திற்கு பேத்தி தான் உலகம் என்ற நிலை. ஆண் குழந்தை தான் குடும்பத்தின் வாரிசு என்று சொல்லி திரிந்த மரகதம் கூட தன் கொள்ளு பேத்தியை பார்த்தவுடன் மனம் மாறிவிட்டார்.
இரத்தம் கொதிக்க... தன்னவள் முகத்தில் பார்த்த உயிர் பயத்தை காண காண அவனை கண்டம் துண்டமாக வெட்டும் வெறி வர...அவர்களை நோக்கி தன் நடையை எட்டிப் போட்டான்.
அவள் முகத்தில் சிறு கீற்றாய் புன்னகை மலர….பிரகாஷ் சுதாரிக்கும் முன் சட்டென்று நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைக்க, அதில் மித்ராவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவன் விட்ட அடுத்த நொடி "மாமா" என்ற கூவலோடு அவனை அணைத்தவள் அப்படியே அவன் கரங்களில் மயங்கி சரிந்தாள்.
இத்தனை நேரமும் அவனுக்காக காத்திருந்தவள், அவனை பார்த்தவுடன் இனி அவன் பார்த்து கொள்ளவான் என்ற நம்பிக்கையில்...இவ்வளவு நேரம் போராடிய போராட்டத்தில் உடலும் மனமும் சோர்வடைய அவனில் மயங்கிவிட்டாள்.
ஒரு கரத்தில் அவளை தாங்கி தன்னோடு அணைத்தவனின் மறு கரத்தில் துப்பாக்கி இருக்க...மதியின் காலுக்கு அடியில் பிரகாஷ் இருந்தான். ஷூ காலில் அழுத்தம் கொடுக்க… அதற்கு அடியில் அவனின் கரம் நசுங்கியது. அதில் வலி தாங்க முடியாமல் அவனிடமிருந்து பெரும் அலறல் சத்தம் வர,
இவனின் சத்தத்தில் கதிர் மற்றும் சில போலீசார்களும் வந்துவிட... கதிரிடம் கண் காட்டியவன், "நான் வர வரைக்கும் அவன் இந்த இடத்தை விட்டு நகரவே கூடாது. அதேமாதிரி யாரும் அவன்மேல் கை வைக்க கூடாது. நானே தான் சாரை ராஜ மரியாதையோடு வழியனுப்பனும்" என்றவன்,
தன்னவளை குழந்தை போல் கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
தன் மடியில் இருக்கும் முகத்தை பார்க்க பார்க்க அந்த பிரகாஷை துடித்துடிக்க கொள்ளும் வெறி வந்தது மதிக்கு. பின்னர் வண்டியை ஓட்டிக் கொண்டே வீட்டுக்கு தகவல் சொல்ல...அவளை மருத்துமனையில் சேர்த்த சில நிமிடங்களில் மொத்த குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது.
வெளியே வந்த டாக்டர்...ஒன்னும் பிரச்சனையில்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிடுவாங்க. அதிகமான பயமும் அதிர்ச்சியும் தான் இப்படி ஆக காரணம் என்றுவிட்டு செல்ல அதன்பின்னரே மொத்த குடும்பமும் நிம்மதியடைந்தது.
அவள் கண்விழிக்கும் முன் செய்யவேண்டிய ஒரு கடமை இருக்க,குடும்பத்தினரிடம் மனைவியை ஒப்படைத்துவிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தவன், கதிருக்கு அழைத்தான்.
"என்னடா நான் சொன்னது ரெடியா" என கேட்க, அவனும் எல்லாம் ரெடி என சொல்ல அவன் கைகளில் ஜீப் பறந்தது.
அதே அனாட்டமி ஆய்வகத்தில் கதிரின் அடியில் சுருண்டு கிடந்தான் பிரகாஷ்.
அவனை பார்த்தவுடன் கதிரின் சட்டையை பிடித்து "எதுக்குடா அடிச்ச,அவனை என் கையால கொல்லனும்னு சொன்னேன் தான" என கத்த,
"அவன் பேசுன பேச்சுக்கு நானே என் கையால கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு. என்கிட்டயே பேரம் பேசுறான் பொறுக்கி" என மீண்டும் ஒரு உதை விட்டான் கதிர்.
மதி ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர, அவனின் காலடியில் கிடந்த பிரகாஷின் தலைமுடியை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் "எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு போலீஸ் காரன் பொண்டாட்டி மேல கைவைக்க பார்ப்ப...எதுக்குடா இப்படி பண்ண... சொல்லுடா... சொல்லு" என முகத்திலேயே பளார் பளார் என்று அடிக்க…
அவனோ அப்போதும் அடங்காமல் "டேய்... எங்க அப்பாவை பத்தி தெரியாம பேசாத...அவர் முன்னாடி நீங்க எல்லாம் கைக்கட்டி தான் நிற்கணும். தமிழ்நாட்டில் நம்பர் ஒன் பணக்காரர் என பெருமை பேசியவன்,என் மேல கை வச்சது மட்டும் தெரிஞ்சிச்சு அப்பறம் உங்களுக்கு வேலையும் இருக்காது உயிரும் இருக்காது" என்றான் ஆணவமாக.
"அது உங்க அப்பாக்கு தெரிஞ்சா தானே தம்பி...நாளைக்கு உங்க அப்பாவே என்கிட்ட வந்து என் பையனை கண்டுபிடிச்சு தாங்கன்னு கேட்பார் பாரு என்றவன், சாரி சாரி அதை பார்க்க தான் நீ உயிரோடு இருக்க மாட்டியே" என உச்சுக்கொட்ட…"டேய் என்னடா சொல்ற?...வேணாம் என்னை விட்டுடு உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன்" என பேரம் பேச
"கவலைப்படாத நான் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான். எனக்கு உன்னோட பணமெல்லாம் வேணாம், உன் உயிர் மட்டும் போதும்…அதுவுமில்லாம உனக்கு துணைக்கு உன்னோட மானங்கெட்ட இரண்டு ஃப்ரெண்ட்ஸையும் துணைக்கு அனுப்புறேன் என்றவன், துப்பாக்கியை எடுக்க...அவனோ அலறி அடித்துக்கொண்டு மதியின் காலில் விழுந்தான்.
"என்னடா அதுக்குள்ள காலில் விழுந்துட்ட….நீ பேசுனா பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரமாவது கெத்தா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா இப்படி பட்டுன்னு உயிர்பிச்சை கேட்குற" என நக்கலாக சிரித்தவன்,
" உன்னை இதுக்காக மட்டும் தான் கொல்ல போறன்னு மட்டும் நினைக்காத...இது நீ கற்பழிச்சி கொலை பண்ண அத்தனை பொண்ணுக்காகவும் தான்.இதெல்லாம் எப்படி தெரியும்னு பார்க்குறிய...அதான் உன் பிரென்ட் சந்திரன் இருக்கானே, அவனை கவனிக்கிற விதத்தில் கவனிச்சோம் தானா வந்து உண்மையை சொல்லிட்டான். அப்பவே உனக்கு ஸ்கெட்ச் போட்டுடேன் டா. ஆனா என்ன என்னை கொஞ்சம் ஓவர் டேக் பண்ணிட்ட" என்றவனை இன்னும் பயத்துடன் பார்க்க,
"சரி விடு ரொம்ப பயப்படுற... அதனால துப்பாக்கி வேணாம் என்றவன் சுற்றியும் பார்த்துவிட்டு, இதெல்லாம் என்ன" என கேட்க...அவனோ பயத்துடன் நடுங்கும் குரலில் இதுக்கு பேர் கெடாவர் (பதப்படுத்தப்பட்ட மனித உடல்) என்றான் .
"ஓ... செத்ததுக்கு அப்பறம் தான் இந்த கெமிக்கலில் போடுவாங்கலா" என்க அவனும் ஆம் என தலையாட்டினான்.
"அப்போ நாம ஏன் புதுசா யோசிக்க கூடாது" என தாடையில் கைவைத்து யோசித்தவனின் கண்ணசைவில் அதே போன்ற திரவம் நிறைந்த ஒரு கண்ணாடி பெட்டி கொண்டுவரப்பட...அதை கண்டு மிரண்டு தப்பிக்க முயன்றவனை ஒரே தள்ளில் அந்த பெட்டியில் படுக்க வைத்தவன் அதனை மூடினான்….கொஞ்ச நேரத்தில் மூச்சடைத்து துடிக்க துடிக்க தன் உயிரை விட்டிருந்தான் பிரகாஷ்.
அதே லேபிள் இவனும் ஒரு பிணமாக இருக்க...அவனின் நண்பர்கள் இருவருக்கும் கூட வேறு விதத்தில் தண்டனை தயாராக இருக்க அதனை கதிரிடம் கொடுத்துவிட்டு இவன் மனைவியை காண சென்றுவிட்டான்.
உள்ளே நுழைந்தவனை பார்த்ததும் கண்ணீர் பெருக...வேகமாக அவளை நெருங்கியவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
அவனும் அவளின் தலையில் தாடையை பதித்து அப்படியே தனக்குள் புதைத்துக் கொள்ள... இருவருக்கும் தனிமை கொடுத்து அனைவரும் விலகி சென்றனர்.
அவன் முகம் பற்றி கண் மூக்கு காது என முத்தத்தை வரைமுரையின்றி வாரி வழங்க அவனும் அதே அளவுக்கு தன் தவிப்பை வெளிப்படுத்தினான்.
அவனிடம் நடந்தது அனைத்தையும் சொல்ல...அவள் எப்படியெல்லாம் பயந்திருப்பாள் என எண்ணியவன் அவள் கரம் பற்றி "என்னை மன்னிச்சிடு டா என்னால தானே...நான் மட்டும் இன்னைக்கு வந்திருந்தா இப்படி நடந்திருக்காது" என்றவன் அவளின் கரம் கொண்டு தன் கன்னத்தில் அடிக்க…
"அய்யோ விடுங்க மாமா...எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா?...உங்களை பார்த்ததும். நீங்க போகக்கூடாதுன்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேன்" என்க, "இனிமே என் உயிரே போனாலும் உன்னை விட்டு போகமாட்டேன்" என்றவன் வன்மையாக அணைக்க...அதற்குள் அறை கதவு தட்டப்பட்டது.
உள்ளே நுழைந்த சகுந்தலா தயங்கி நிற்க, மதி "யாரை கேட்டு உள்ள வந்தீங்க?..வெளிய போங்க" என விரட்டினான்.
மதியின் கையை பிடித்து தடுத்த மித்ரா வேண்டாம் என்பதாய் தலையாட்ட... மனையாளில் வார்த்தையில் கொஞ்சம் அமைதியானான்.
மித்ராவின் கையை பிடித்துக்கொண்டு "என்னை மன்னிச்சிடு டா ஏதோ கோபத்தில் புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன் "என கண்ணீர் வடிக்க,அவளும் "விடுங்கம்மா… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல" என்றவள், மெலிதாக சிரிக்க...இவளை போயா தவறாக நினைத்தோம் என காலம் கடந்து வருந்தினார்.
அடுத்த இருநாட்கள் மருத்துவமனையில் கழிய..இன்று தான் வீட்டிற்கு வந்தாள் மித்ரா. அவளுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாய் அவளின் அப்பா அம்மா தங்கை என அனைவரும் அவளோடு அதே வீட்டில் இருப்பதை பார்க்கும் போது கண்ட கனவு மொத்தமும் நிறைவடைந்த நிறைவு முகத்தில். அன்றைய நாள் சந்தோஷத்தில் கரைய,
இரவு தங்கள் அறையில் தன் மாமனின் மார்பில் முகம் புதைத்து பேசி கொண்டிருந்த மித்ராவை தன்னிலிருந்து பிரித்த மதி அவளின் முகம் பார்க்க...அவளோ "என்ன டா மாமா அப்படி பார்க்குற" என கேட்டாள்
"மித்துமா... மாமா ஒன்னு கேட்பேன், ஆனா நீ முடியாதுன்னு சொல்லாம தருவியா" என கேட்க,
"என்கிட்ட என்ன மாமா தயக்கம்...தைரியமா கேளு எதுவா இருந்தாலும் நான் தரேன்" என அவன் என்ன கேட்க போகிறான் என்பதை அறியாத குழந்தையாக வாக்கு கொடுத்தாள்.
அவனோ அவளின் கண்களை ஆழமாக பார்த்துக்கொண்டே...அவள் முகத்தை கரங்களில் ஏந்தி "நீ தான் வேணும்,அதுவும் முழுசா...எனக்கே எனக்குன்னு. உன்னை தொலைச்சிட்டு நான் பட்ட வலி இருக்கே அதை வார்த்தையால சொல்ல முடியாது. இன்னும் அந்த தவிப்பு அடங்கவே இல்லை,அதை உன்னால மட்டும் தான் தடுக்கமுடியும்" என்றவன்,
"ஐ லவ் யூ...அண்ட்….ஐ நீட் யூ பேட்லி" என்றவன் அவள் இதழை நெருங்கி,நிமிர்ந்து அவளின் விழி பார்க்க...அவனுக்கு சம்மதிக்கும் விதமாய் கண்மூடி கிடந்தாள்.
இத்தனை நாள் இல்லாத வன்மை அவனின் முத்தத்தில்...அது அவளுக்கு வலித்தாலும் அவளுக்கும் அது தேவையாய் இருந்தது. இரு இதழ்களின் போராட்டம் முடியவே முடியாது என்பது போல் நீண்டுக்கொண்டே இருந்தது முத்த யுத்தம். அவள் மூச்சுக்காற்றுக்காக ஏங்கும் போது மட்டும் கொஞ்சம் இடைவெளி விட்டவன் மீண்டும் முத்தத்தை தொடர்ந்தான்.
முத்தம் கடந்து முதன்முறை அவனின் தொடுகை கணவனாய் முன்னேற… வெட்கமும் கூச்சமும் போட்டி போட...தடுக்க முயன்றும் முடியாத நிலையில் அவள்.கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தவன்… புயலாய் அவளை ஆக்கிரமிக்க,அவனின் மென்மையை மட்டுமே உணர்ந்திருந்தவளுக்கு அவனின் வன்மையும் ரசிக்கவே செய்தது.
அவளை விடுவிக்க மனமின்றி மீண்டும் மீண்டும் அவளை நாட...அவனின் தவிப்பை உணர்ந்தவள் அவனுக்கு மொத்தமாய் தன்னையே விட்டுக்கொடுத்தாள். தன் இத்தனை வருட காதல் மொத்தத்தையும் ஒரே கூடலில் உணர்த்த துடித்தவன் அதை சாதித்துவிட்டே அவளைவிட்டு விலகினான்.
தன் மார்பில் கலைந்து களைத்து கிடக்கும் தன் தேவதையின் முகத்தில் படர்ந்த முடி கற்றையை காதோரம் ஒதுக்கி "செல்லக்குட்டி மாமா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா" என கேட்க, அவன் கேள்வியில் மேலும் சிவந்தவள், அவன் மார்பில் செல்லமாக இரண்டு அடிகளை போட்டாள்.
அவளின் செல்ல சிணுங்கல் கூட அவனுள் போதை ஏற்ற..வெகு அருகில் தெரிந்த அவளின் இதழில் மீண்டும் ஒரு முத்தத்தை கொடுத்து அணைத்துக்கொண்டான் மதி.
நாட்கள் செல்ல செல்ல...இருவரின் காதலும் வளர்ந்துகொண்டே சென்றது. அதற்கு அச்சாரமாய் அடுத்த ஒரே ஆண்டில் அந்த வீட்டிற்கு ஒரு இளவரசியை மித்ரா ஈன்றெடுக்க...மொத்த குடும்பமும் அவளை தாங்கியது.
அதுவும் சண்முக சுந்தரத்திற்கு பேத்தி தான் உலகம் என்ற நிலை. ஆண் குழந்தை தான் குடும்பத்தின் வாரிசு என்று சொல்லி திரிந்த மரகதம் கூட தன் கொள்ளு பேத்தியை பார்த்தவுடன் மனம் மாறிவிட்டார்.