அத்தியாயம் - 8
அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிய...இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்த வர்ஷினி,அதிகாலையில் தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றாள்.
அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருக்க "வர்ஷினி... வர்ஷினி எழுந்திரு,மணி ஆகிடுச்சு பாரு அப்பறம் உங்க பாட்டி திட்ட ஆரம்பிச்சிடுவாங்க" என மகளை சாந்தி எழுப்ப,
மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை திறந்த வர்ஷினிக்கு கண்கள் இரண்டும் நெருப்பாய் எரிந்தது. முகம் வீங்கி கண்கள் சிவந்து பார்க்கவே பாவமாக இருக்கும் மகளை பார்க்க பார்க்க பெற்ற வயிறு துடித்தது சாந்திக்கு.
மகளின் மனம் அறிந்த பின்னும் கணவனின் இந்த ஏற்பாடுகள் மனதுக்கு மிகவும் வலியை கொடுக்க...அதனை தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலையை தானே வெறுத்தார்.
அவளும் தன் அன்னையை பரிதாபமாக பார்க்க...இருவருக்கும் நேற்று இரவு கடைசியாக சண்முகசுந்தரம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
"இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் அதையும் மீறி நீங்க யாராவது இதை தடுக்க முயற்சி பண்ணீங்க... அப்பறம் என்னோட வேற முகத்தை தான் பார்க்க நேரிடும்".
"அப்படி உன் படிப்புக்காக இந்த கல்யாணத்தை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தினா கூட... அதுக்கப்புறமும் உன்னால படிக்க முடியாது.நான் அதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்" என உறுதியான குரலில் சொல்லிவிட்டு சென்றவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
அனைத்தையும் நினைத்து பெருமூச்சை விட்ட சாந்தி மகளின் தலையை கோதியபடி "போய் குளிச்சிட்டு வாடா...இன்னும் கொஞ்சநேரத்தில் உங்க அத்தை வீட்டிலிருந்து வந்துடுவாங்க. அப்போ நீ தயாரா இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்" என மகளுக்கு எடுத்து சொல்ல…
அவளும் கீ கொடுத்த பொம்மை போல எழுந்து குளிக்க சென்றாள்.
அந்த அழகான அரக்கு வண்ண பட்டு புடவையை மகளுக்கு அழகாக கட்டிவிட்டார் சாந்தி. அவளின் வெளுத்த நிறத்திற்கு அந்த புடவை மேலும் அழகுக்கு அழகு சேர்த்தது.
பள்ளி சீருடையில் சிறிய பெண் போல் இருந்த வர்ஷினியா இது என சந்தேகப்படும் அளவுக்கு...புடவை கட்டியவுடன் முகத்தில் வயதிற்கே உண்டான பக்குவம் வந்தது போல் இருந்தது சாந்தியின் கண்ணுக்கு.
கண்ணாடி எதிரில் அமர்ந்திருந்தாள் தான் ஆனால் அவளின் கவனம் முழுவதும் அங்கு இல்லை என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்தது.
அதிகமான அலங்காரம் எதுவும் இல்லாமலேயே தேவதை போல் இருந்த மகளை பார்க்க…அவளின் உணர்ச்சியற்ற தன்மையும் புன்னகையை தொலைத்த முகமும் அவள் மனதை படம்பிடித்து காட்டியது.இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாதே…
மகளை ரெடி செய்து முடித்தவர் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட...அங்கு அறையில் இருந்தது என்னவோ . வர்ஷினியும் தர்ஷினியும் தான்.
தன் அக்காவின் நேற்றைய அழுகையே சொல்லியது அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்று நடக்கிறது என்று...அதனால் அவளும் சோகமாகவே வர்ஷினி அருகே அவளை ஒட்டிக்கொண்டே திரிந்தாள்.
நேரம் செல்ல அவளின் அத்தை குடும்பமும் வந்து விட்டனர். வர்ஷினிக்கு அவளின் அத்தை குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது.
சிறுவயதில் இருந்த போதே...தன் அன்னையை அனைவரும் மரியாதை இல்லாமல் நடத்துவதையும் வார்த்தைகளால் வதைப்பதையும் பார்த்து பார்த்து வளர்ந்ததால் அவளுக்கு தந்தை வழி சொந்தம் யாரையும் பிடிக்கவே பிடிக்காது.
அதுவும் இப்போதாவது சாந்தி தன் துக்கத்தை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்ளுபவர்,அப்போது அனைவரும் இல்லாத நேரத்தில் மகள்களை அணைத்துக்கொண்டு கதறுவார்.
அதனை எல்லாம் பார்த்து வளர்ந்தால் என்னவோ அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசமட்டாள் வர்ஷினி. அக்காவை பார்த்தே அனைத்தையும் செய்யும் தர்ஷினி கூட அவர்களிடம் பேசமாட்டாள்.
இங்கு இப்படியிருக்க...அங்கு காலையில் மதி எழும்போதே வீட்டில் உள்ள அனைவர் முகமும் ஏதோ ஒரு கவலையில் இருந்ததை கண்டுக்கொண்டவன் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.
"என்ன தாத்தா எல்லாரும் ஒருமாதிரி இருக்கீங்க, என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா?.." என கேட்க,
அவரோ அவனை நிமிர்ந்து பார்த்து விரக்தியாக சிரித்தவர் நடந்ததை சொல்ல...அதனை முழுதாக உள்வாங்கும் முன் கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது.
மொபைலை எடுத்து ஹலோ என சொல்லும் முன் "டேய் எங்கடா இருக்க, அதுதான் அந்த ஸ்கூல் பொண்ணு,என பெயர் தெரியாமல் தடுமாறி 'ஆங்... உன் வாயாடிக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமாம் டா.உனக்கு தெரியுமா தெரியாதா" என்க….
சுற்றி தனது மொத்த குடும்பமும் இருக்க,ஆல்ரெடி அவங்க இருக்குற வருத்தத்தில் தானும் அதனை அதிகப்படுத்த விரும்பாமல்….அவர்கள் முன் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தவன்,அவர்களிடமிருந்து சற்று தள்ளிவந்து "சீக்கிரம் கிளம்பி வாடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்" என்றவன் ஃபோனை அணைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.
வீட்டில் அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்க….அவர்கள் பிரச்சனையில் தனக்கு எந்த வேலையும் இல்லை என நினைத்தவன் வேலைக்கு கிளம்பினான்.
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் தோளில் கைவைத்து அவனை கலைத்தவன்…"டேய் என்னடா இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.அவளை நீ காதலிக்கிற தானே, அப்போ ஏதாவது பண்ணுடா" என கதிர் சொல்ல,
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் "யாருடா மாப்பிள்ளை" என கேட்க..
"யாரோ அவங்க அத்தை பையனாம் பேரு கூட என்னவோ சொன்னாங்க" என சொல்லும் போதே...
"சந்திரன்" என மதியே பதில் சொன்னான்.
"டேய் அப்போ உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா?.." என்ற கதிருக்கு
"ம்ம்... நல்லாவே தெரியும்.மறக்க கூடிய முகமா அது" என பல்லை கடித்தான் மதி.
"எல்லாம் தெரிஞ்சும் அப்பறம் எதுக்கு ஒன்னும் பண்ணாம இருக்க...போய் நிச்சயத்தை நிறுத்துற வழியை பாரு" என்க…
அவனோ அசால்ட்டாக "நான் எதுக்கு அதை நிறுத்தனும்.அதெல்லாம் நல்லபடியா நடக்கும்,நடக்கணும்" என அழுத்தமாக சொல்ல,
அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கதிருக்கு தான் இப்போது தலையை வலிப்பது போல் இருந்தது. 'ஒருவேளை அதிர்ச்சியில் பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்குமோ' என நினைத்தவன் "என்னடா உலர்ற,அப்போ உனக்கு எந்த வருத்தமும் இல்லையா" என்க..
"கண்டிப்பா இல்ல...சொல்ல போனால் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என சிரித்தவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
கதிரோ "உன்கிட்ட இருந்து இந்த பதிலை சத்தியமா நான் எதிர்ப்பார்க்கலை டா. உனக்கு கூட லவ் வெறும் டைம் பாஸ் தான் இல்ல. அது தெரியாமல் நான் தான் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துட்டேன் போல" என சொல்லியவன் கோபத்தோடு அறையை விட்டு வெளியே வந்தான்.
வெகுநேரமாக எதையோ யோசித்து,ஒரு முடிவோடு நிமிர்ந்தவன், அதன்பின் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை தொடர்ந்தான்.
வீடு மொத்தமும் சொந்தங்கள் நிறைந்திருக்க…வர்ஷினியின் அத்தை அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருக்கு எப்போதும் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் வர்ஷினியை பிடிக்காது தான் ஆனால் வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதித்தார்.
எல்லாம் இந்த சந்திரனால் வந்தது என மகனை மனதுக்குள்ளேயே திட்டி தீர்த்தார். அவருக்கு மகன் சொன்னது நினைவு வந்தது.
"அம்மா நான் வர்ஷினியை காதலிக்கிறேன்" என தீடீரென்று சொல்ல…அவன் பெற்றோர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவனுக்குமே அவளை பிடிக்காது.சரியான திமிர் பிடித்தவள் என அடிக்கடி சொல்லுவான்.அப்படிப்பட்டவன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தால் ஆச்சரியப் படாமல் என்ன செய்வார்கள்.
"என்னடா இப்படி சட்டுன்னு வந்து சொல்ற" என வர்ஷினி யின் அத்தை கேட்க…
அவனோ "அதெல்லாம் அப்படி தாம்மா. அவளை ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் கோயில் திருவிழால பார்த்தேன்,பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சு" என்றான்.
"அவ இப்போதான் டா ஸ்கூல் படிகிறா, இப்போ போய் நாம பொண்ணு கேட்டாலும் கொடுப்பாங்களான்னு தெரியலையே" என சந்தேகமாக சொல்ல…
"அதெல்லாம் தருவாங்கம்மா. நம்ம வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்றதுக்கு எதுக்கு படிப்பு. இப்பவே இவ்வளவு திமிரா இருக்கா, இன்னும் படிச்சா நம்மளை சுத்தமா மதிக்க மாட்டாள்".
"அதனால படிச்சது போதும்ன்னு உங்க அண்ணன் கிட்ட கேளுங்க.உங்க அண்ணனுக்கும் ஆம்பளை வாரிசு இல்லை, அதனால பாதி சொத்தும் நமக்கு தான் கிடைக்கும்" என சொல்லிக்கொண்டே மேலும் தொடார்ந்தவனாக
"ஆல்ரெடி எனக்கு என்னோட பிசினஸில் கொஞ்சம் பணம் நெருக்கடி,நம்மளால அவ்ளோ பணம் எல்லாம் புரட்ட முடியாது. அதுவே உங்க அண்ணன் என்றால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.அதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்போ வேணாலும் பணம் கிடைக்கும். பக்கத்திலேயே பணம் காய்க்கும் மரத்தை விட்டுட்டு நாம எதுக்கு பணத்துக்கு அலையனும்" என என்ன சொன்னால் தன் அன்னை வழிக்கு வருவார் என சரியாக குறிப்பார்த்து தாக்க...அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டார்
அனைத்தையும் நினைத்து பார்த்தவர்,இவளோட திமிரை என் வீட்டுக்கு மருமகாளாய் வரும் போது குறைக்கிற விதத்தில் குறைக்கிறேன் என எண்ணியபடி அருகில் சென்றார்.
அவளோ வந்தவரை பார்த்து மாரியாதைக்கு கூட வாங்க என சொல்லாமல் அதே திமிரோடு கண்ணாடியை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
"ஏன் இன்னும் உங்க அம்மா உனக்கு மரியாதை என்றால் என்னன்னு சொல்லி தரலியா" என கத்த…
அவரை நிமிர்ந்து பார்த்த வர்ஷினி "ஏன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி தர போறீங்களா என்ன?..உங்களுக்கு அது நிறைய இருக்கோ" என நக்கலாக கேட்டாள்.
"ஏய் என்னடி ஓவரா பேசுற. இனிமே என்கிட்ட இப்படி பேசி பாரு பேசுற வாயை கிழிக்கிறேன். இனி நான் உனக்கு அத்தை மட்டுமில்ல உன் மாமியாரும் கூட... அதனால மரியாதை கொடுத்து பழகு" என திட்டியவரை கண்டுகொள்ளாமல்
"சின்னக்குட்டி அந்த கண் மையை எடுடி" என கேட்டு வாங்கியவள்,கண்ணுக்கு அழகாக மையை தீட்டிக்கொண்டே …'இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்' என நினைத்தபடி கோபமாக வெளியே செல்லும் தன் அத்தையை பார்த்திருந்தாள்.
சற்றுநேரத்தில் விழா இனிதே தொடங்கியது.அவளை சபைக்கு அழைத்து வரும்படி சொல்ல...அவளும் அழைத்து வரப்பட்டாள்.
சபைக்கு பொதுவாக மரியாதையை செலுத்தியவள்,அங்குள்ள கம்பளத்தில் அமர்ந்தாள்.அடுத்தடுத்து நிச்சயப்பத்திரம் வாசிக்க பட...இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என உறுதி செய்தனர்.
அனைத்திலும் வெறும் ஜடம் போல் பங்கேற்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
அதன் பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்க… நாட்கள் நெருங்க நெருங்க வர்ஷினியின் அழுகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் இடையில் விடுமுறை முடிந்து,பள்ளியும் தொடங்கி விட்டது.
தர்ஷினி தான் தன் அக்கா இல்லாமல் அழுது கொண்டே பள்ளிக்கு சென்று வந்தாள்.
"ஓய் சின்னக்குட்டி... அக்கா வரலைன்னு ஃபீல் பண்றீயா. அதான் நாங்க இருக்கோமே அப்பறம் என்ன" என அவளின் கவலை நிறைந்த முகத்தை பார்த்து நண்பர்கள் கேள்வி கேட்க…
அவளோ "நான் ஒன்னும் அதுக்கு ஃபீல் பண்ணல.அக்கா தினமும் அழுதுகிட்டே இருக்கு தெரியுமா?..அதுக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலையாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியலை" என கைகளை விரித்து சொல்ல
"உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே" என சொல்லும் நண்பர்களை பார்த்து…
"அப்படி சொன்னதுக்கு தான் அக்காவை போட்டு அடிச்சிட்டாரு அப்பா' என அழுதுகொண்டே...நீங்களாவது ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு" என அந்த வாண்டுகளிடம் இந்த வாண்டு ஐடியா கேட்டு நின்றது.
அவர்களும் ஏதோ பெரிய மனிதர்கள் போல் யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை. அப்போது சட்டென்று ரமேஷ் "டேய் ஒரு சூப்பர் ஐடியாடா… நாம ஏன் மதி அண்ணாகிட்ட சொல்ல கூடாது. அவரு போலீஸ் தான எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க" என சொல்ல,
தர்ஷினிக்கு ஒன்றும் புரியவில்லை."நீங்க யாரை சொல்றீங்க?.. அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திடுவாங்களா" என கேட்க
"ஆமாம்" என சொன்னவர்கள் இன்னைக்கு சாய்ந்திரம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போகலாம்" என்றான் ரமேஷ்.
"அய்யய்யோ! நான் வரமாட்டேன், எங்க அப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாரு" என பயத்தோடு சொல்ல..
"இங்க பார் அதெல்லாம் நாங்க யாருக்கும் தெரியாமல் உன்னை குறுக்கு வழியில அழைச்சிட்டு போறோம்" என சொல்ல,அவளும் அரை மனதோடு சரி என்றாள்.
மாலை பள்ளி முடிந்தவுடன் மூவரும் கிளம்பிவிட...முதன்முறை தன் அக்காவுக்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்ய போகிறாள்,அதுவும் அவளின் நலனுக்காக.
அந்த பெரிய வீட்டை பார்த்ததும் "இவளோ பெரிய வீடா" என தர்ஷினி வாயை பிளக்க…
அந்த இருவரும் "நீ என்னன்னு நினைச்ச மதி அண்ணா வீட்டை பத்தி,உங்களை விட செம்ம பணக்காரர்" என விளக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தனர்.
என்றும் இல்லாமல் இன்று மதி வீட்டுக்கு சீக்கிரத்தில் வந்துவிட...அனைவரோடு பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.
உள்ளே நுழைந்த ரமேஷை முதலில் பார்த்த மதி…"டேய் என்னடா இந்த பக்கம்" என கேட்க,அப்போது தான் அவனின் பின்னால் வந்த சதிஷையும் அவனை தொடர்ந்து கண்களில் மிரட்சியோடு தயங்கியபடி உள்ளே வந்த தர்ஷினியையும் பார்த்தான்.
இந்த வாண்டு எதுக்காக வந்திருக்கு என நினைத்து கொண்டே நிமிர...மொத்த குடும்பமும் தர்ஷினியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அவளோ பயத்தில் தன் நண்பர்கள் பின்னால் தன்னை மறைத்தபடி நின்றிருந்தாள்.தன் தாய், அக்கா அப்பறம் பள்ளி நண்பர்கள் தவிர வேறு யாரோடும் இதுவரை பேசி பழகிடாதவள்,அத்தனை நபரை ஒரே வீட்டில் பார்த்ததிலேயே பயம் வர,அதை அதிகப்படுத்தும் விதமாக அனைவரும் அவளையே பார்ப்பது இன்னும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
"டேய் என்னடா வந்ததில் இருந்து பேசாம இருக்கீங்க?.. என்ன விஷயம்" என மதி பேச்சை தொடங்க,
"உங்களை தான் அண்ணா பார்க்க வந்தோம்" என சொல்லிய சதீஷ், ரமேஷ் இருவருமே திரும்பி தர்ஷினியை பார்த்து சொல்லு என சைகை செய்ய, அவளோ இல்லை என்பதாய் வேகமாக தலையாட்டினாள்.
"நீயே சொல்லு நான் சொல்ல மாட்டேன்" என பயத்தோடு மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.
மதிக்கு புரிந்தது அவளின் தயக்கமும் பயமும். நிமிர்ந்து தன் குடும்பத்தை பார்த்து "இப்படி எல்லாரும் சுத்தி நின்னுட்டு இருந்து சொல்ல சொன்னா சின்ன பொண்ணு என்ன சொல்லும். எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க, இதை நான் பார்த்துக்கிறேன்" என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.
உள்ளே நுழைந்தவுடன் அவளின் நண்பர்கள் இருவரும் சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்துவிட...மதியும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
தர்ஷினி தயங்கியபடி அப்படியே நிற்க.. தன் அருகில் உள்ள நாற்காலியை இழுத்து தனக்கு எதிரில் போட்டவன் கைகாட்டி அமர சொல்ல,அவளோ தலையாட்டி மறுத்துவிட்டாள்.
"இப்படி வந்து உட்காரு, அப்போ தான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்லியபடி...அவளை கைப்பிடித்து அமரவைத்தவன், சொல்லு "இப்போ எதுக்கு என்ன பார்க்க வந்த" என்க…
" உங்களையா... அப்போ நீங்க தான் போலீசா இருக்கீங்களா?.." என அவன் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டாள் தர்ஷினி.
அவள் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியவன் "ஆமா.. ஏன் என்னை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா" என இவனும் கேட்க
' இல்லை ' என தலையாட்டி "நீங்க தான் போலீஸ் யூனிஃபார்மே போடலையே" என சொல்ல…
அவனோ அவளை பொய்யாக முறைத்துக்கொண்டே "ஓ... யூனிஃபார்ம் போட்டாதான் போலீஸ்ன்னு ஒத்துப்பியா?...அங்க பாருங்க மேடம்" என சுவரில் இருந்த போட்டோவை காட்ட,அதில் காக்கி சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தான் மதியழகன்.
"இப்போ நம்புறீங்களா மேடம்" என மெல்லிய சிரிப்போடு கேட்க அவளிடமிருந்து "ம்ம்" என்ற பதில் மட்டும் வந்தது.
அப்போது கதவை திறந்துகொண்டு மீனாட்சி கையில் தட்டுடன் உள்ளே வந்தார்.
சிறு சிறு தட்டுகளில் மிக்சர், முறுக்கு ஸ்வீட், என இருக்க, அனைவருக்கும் கொடுத்துவிட்டு தர்ஷினியிடம் வர...அவளோ "எனக்கு வேணாம்.யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு எங்க அக்கா சொல்லிருக்கு" என்றவள் அதனை தொட்டு கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் அதில் இருக்கும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.
"அதை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போங்கமா" என அன்னையிடம் இருந்து தட்டை வாங்கியவன் "இதை சாப்பிடு அப்போதான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்ல…அவளும் தயங்கியபடி வாங்கி கொண்டாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், "இப்போ சொல்லு" என்றான்.
சட்டென்று "எங்க அக்கா கல்யாணத்தை நிறுத்தனும்" என்றாள்.
ஆல்ரெடி அவள் வந்ததன் நோக்கம் அறிந்தவன் "ஏன் நிறுத்தனும்" என கேட்க,
அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "எங்க அக்காக்கு பிடிக்கலை அதான்" என்றாள்.
"எங்க அக்கா தினமும் அழுதிட்டே இருக்கு, கல்யாணம் வேணாம்னு அப்பாகிட்ட சொன்னதுக்கு அப்பாவும் அக்காவை அடிச்சிட்டாங்க தெரியுமா?..." என அழ ஆரம்பிக்க... அதை கேட்டு கண்களை மூடிக்கொண்டான்.
சற்று நேரம் விழிமூடி இருந்தவன்,பின்னர் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக...
அவள் அருகே சென்று கண்ணீரை துடைத்தவன், "அதுக்காக தான் பெரிய மனிஷி போல கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறியா... என்றவன், அப்போ உனக்கு உங்க அக்காவை ரொம்ப பிடிக்குமோ" என கேட்க
அவளோ கைகளை முடியும் மட்டும் அகலமாக விரித்து "இவளோ பிடிக்கும்" என்றாள்.
அந்த சிறு பெண்ணின் பதிலில்,அவனுக்கு அவள்மேல் தனிபாசம் அதிகரிக்க..மெல்ல அவள் தலையை வருடியவன் "சரி இனிமே அழ கூடாது, ஓகே வா. எல்லாம் நல்லதாவே நடக்கும் அதானால சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும் புரியுதா என்றவன், இப்போவே மணி ஆகிடுச்சு...நீ வீட்டுக்கு கிளம்பு,அப்பறம் நீ இங்க வந்ததை யார்கிட்டேயும் சொல்லாத முக்கியமா உங்க அக்காகிட்ட" என சொன்னவன் அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வர மொத்த குடும்பமும் அவனை சுற்றி கொண்டது.
அனைவரிடமும் முழுமையாக சொல்லாமல் மேலோட்டமாக விஷயத்தை சொன்னவன்,தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஏனென்றால் அவர்கள் தூண்டி துருவி கேட்கும் கேள்விக்கு அவனிடம் பதில்லை. அதனால் தான் அனைத்தையும் சொலலாமல் அரைகுறையாக எதையோ சொல்லி சமாளித்தான்.
அடுத்த நாள் யாருக்கும் காத்திருக்காமல் விடிய...இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டிருந்த வர்ஷினி,அதிகாலையில் தன்னை மறந்து தூக்கத்திற்கு சென்றாள்.
அப்போது தான் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருக்க "வர்ஷினி... வர்ஷினி எழுந்திரு,மணி ஆகிடுச்சு பாரு அப்பறம் உங்க பாட்டி திட்ட ஆரம்பிச்சிடுவாங்க" என மகளை சாந்தி எழுப்ப,
மிகவும் கஷ்டப்பட்டு கண்ணை திறந்த வர்ஷினிக்கு கண்கள் இரண்டும் நெருப்பாய் எரிந்தது. முகம் வீங்கி கண்கள் சிவந்து பார்க்கவே பாவமாக இருக்கும் மகளை பார்க்க பார்க்க பெற்ற வயிறு துடித்தது சாந்திக்கு.
மகளின் மனம் அறிந்த பின்னும் கணவனின் இந்த ஏற்பாடுகள் மனதுக்கு மிகவும் வலியை கொடுக்க...அதனை தடுக்க முடியாமல் இருக்கும் தன் நிலையை தானே வெறுத்தார்.
அவளும் தன் அன்னையை பரிதாபமாக பார்க்க...இருவருக்கும் நேற்று இரவு கடைசியாக சண்முகசுந்தரம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகளே மனதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
"இந்த கல்யாணம் நடந்தே ஆகனும் அதையும் மீறி நீங்க யாராவது இதை தடுக்க முயற்சி பண்ணீங்க... அப்பறம் என்னோட வேற முகத்தை தான் பார்க்க நேரிடும்".
"அப்படி உன் படிப்புக்காக இந்த கல்யாணத்தை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தினா கூட... அதுக்கப்புறமும் உன்னால படிக்க முடியாது.நான் அதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்" என உறுதியான குரலில் சொல்லிவிட்டு சென்றவரை எதிர்த்து யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
அனைத்தையும் நினைத்து பெருமூச்சை விட்ட சாந்தி மகளின் தலையை கோதியபடி "போய் குளிச்சிட்டு வாடா...இன்னும் கொஞ்சநேரத்தில் உங்க அத்தை வீட்டிலிருந்து வந்துடுவாங்க. அப்போ நீ தயாரா இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்" என மகளுக்கு எடுத்து சொல்ல…
அவளும் கீ கொடுத்த பொம்மை போல எழுந்து குளிக்க சென்றாள்.
அந்த அழகான அரக்கு வண்ண பட்டு புடவையை மகளுக்கு அழகாக கட்டிவிட்டார் சாந்தி. அவளின் வெளுத்த நிறத்திற்கு அந்த புடவை மேலும் அழகுக்கு அழகு சேர்த்தது.
பள்ளி சீருடையில் சிறிய பெண் போல் இருந்த வர்ஷினியா இது என சந்தேகப்படும் அளவுக்கு...புடவை கட்டியவுடன் முகத்தில் வயதிற்கே உண்டான பக்குவம் வந்தது போல் இருந்தது சாந்தியின் கண்ணுக்கு.
கண்ணாடி எதிரில் அமர்ந்திருந்தாள் தான் ஆனால் அவளின் கவனம் முழுவதும் அங்கு இல்லை என்பது முகத்தை பார்த்தாலே தெரிந்தது.
அதிகமான அலங்காரம் எதுவும் இல்லாமலேயே தேவதை போல் இருந்த மகளை பார்க்க…அவளின் உணர்ச்சியற்ற தன்மையும் புன்னகையை தொலைத்த முகமும் அவள் மனதை படம்பிடித்து காட்டியது.இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியாதே…
மகளை ரெடி செய்து முடித்தவர் வந்தவர்களை கவனிக்க சென்றுவிட...அங்கு அறையில் இருந்தது என்னவோ . வர்ஷினியும் தர்ஷினியும் தான்.
தன் அக்காவின் நேற்றைய அழுகையே சொல்லியது அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்று நடக்கிறது என்று...அதனால் அவளும் சோகமாகவே வர்ஷினி அருகே அவளை ஒட்டிக்கொண்டே திரிந்தாள்.
நேரம் செல்ல அவளின் அத்தை குடும்பமும் வந்து விட்டனர். வர்ஷினிக்கு அவளின் அத்தை குடும்பத்தை சுத்தமாக பிடிக்காது.
சிறுவயதில் இருந்த போதே...தன் அன்னையை அனைவரும் மரியாதை இல்லாமல் நடத்துவதையும் வார்த்தைகளால் வதைப்பதையும் பார்த்து பார்த்து வளர்ந்ததால் அவளுக்கு தந்தை வழி சொந்தம் யாரையும் பிடிக்கவே பிடிக்காது.
அதுவும் இப்போதாவது சாந்தி தன் துக்கத்தை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்ளுபவர்,அப்போது அனைவரும் இல்லாத நேரத்தில் மகள்களை அணைத்துக்கொண்டு கதறுவார்.
அதனை எல்லாம் பார்த்து வளர்ந்தால் என்னவோ அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசமட்டாள் வர்ஷினி. அக்காவை பார்த்தே அனைத்தையும் செய்யும் தர்ஷினி கூட அவர்களிடம் பேசமாட்டாள்.
இங்கு இப்படியிருக்க...அங்கு காலையில் மதி எழும்போதே வீட்டில் உள்ள அனைவர் முகமும் ஏதோ ஒரு கவலையில் இருந்ததை கண்டுக்கொண்டவன் தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தான்.
"என்ன தாத்தா எல்லாரும் ஒருமாதிரி இருக்கீங்க, என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா?.." என கேட்க,
அவரோ அவனை நிமிர்ந்து பார்த்து விரக்தியாக சிரித்தவர் நடந்ததை சொல்ல...அதனை முழுதாக உள்வாங்கும் முன் கதிரிடம் இருந்து அழைப்பு வந்தது.
மொபைலை எடுத்து ஹலோ என சொல்லும் முன் "டேய் எங்கடா இருக்க, அதுதான் அந்த ஸ்கூல் பொண்ணு,என பெயர் தெரியாமல் தடுமாறி 'ஆங்... உன் வாயாடிக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தமாம் டா.உனக்கு தெரியுமா தெரியாதா" என்க….
சுற்றி தனது மொத்த குடும்பமும் இருக்க,ஆல்ரெடி அவங்க இருக்குற வருத்தத்தில் தானும் அதனை அதிகப்படுத்த விரும்பாமல்….அவர்கள் முன் நண்பனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தவன்,அவர்களிடமிருந்து சற்று தள்ளிவந்து "சீக்கிரம் கிளம்பி வாடா எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்" என்றவன் ஃபோனை அணைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.
வீட்டில் அனைவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமைதியாக இருக்க….அவர்கள் பிரச்சனையில் தனக்கு எந்த வேலையும் இல்லை என நினைத்தவன் வேலைக்கு கிளம்பினான்.
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த நண்பனின் தோளில் கைவைத்து அவனை கலைத்தவன்…"டேய் என்னடா இப்படி அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்.அவளை நீ காதலிக்கிற தானே, அப்போ ஏதாவது பண்ணுடா" என கதிர் சொல்ல,
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் "யாருடா மாப்பிள்ளை" என கேட்க..
"யாரோ அவங்க அத்தை பையனாம் பேரு கூட என்னவோ சொன்னாங்க" என சொல்லும் போதே...
"சந்திரன்" என மதியே பதில் சொன்னான்.
"டேய் அப்போ உனக்கு அவங்க யாருன்னு தெரியுமா?.." என்ற கதிருக்கு
"ம்ம்... நல்லாவே தெரியும்.மறக்க கூடிய முகமா அது" என பல்லை கடித்தான் மதி.
"எல்லாம் தெரிஞ்சும் அப்பறம் எதுக்கு ஒன்னும் பண்ணாம இருக்க...போய் நிச்சயத்தை நிறுத்துற வழியை பாரு" என்க…
அவனோ அசால்ட்டாக "நான் எதுக்கு அதை நிறுத்தனும்.அதெல்லாம் நல்லபடியா நடக்கும்,நடக்கணும்" என அழுத்தமாக சொல்ல,
அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கதிருக்கு தான் இப்போது தலையை வலிப்பது போல் இருந்தது. 'ஒருவேளை அதிர்ச்சியில் பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்குமோ' என நினைத்தவன் "என்னடா உலர்ற,அப்போ உனக்கு எந்த வருத்தமும் இல்லையா" என்க..
"கண்டிப்பா இல்ல...சொல்ல போனால் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என சிரித்தவன் அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
கதிரோ "உன்கிட்ட இருந்து இந்த பதிலை சத்தியமா நான் எதிர்ப்பார்க்கலை டா. உனக்கு கூட லவ் வெறும் டைம் பாஸ் தான் இல்ல. அது தெரியாமல் நான் தான் ஓவர் ரியாக்ஷன் கொடுத்துட்டேன் போல" என சொல்லியவன் கோபத்தோடு அறையை விட்டு வெளியே வந்தான்.
வெகுநேரமாக எதையோ யோசித்து,ஒரு முடிவோடு நிமிர்ந்தவன், அதன்பின் எதை பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையை தொடர்ந்தான்.
வீடு மொத்தமும் சொந்தங்கள் நிறைந்திருக்க…வர்ஷினியின் அத்தை அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருக்கு எப்போதும் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளும் வர்ஷினியை பிடிக்காது தான் ஆனால் வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதித்தார்.
எல்லாம் இந்த சந்திரனால் வந்தது என மகனை மனதுக்குள்ளேயே திட்டி தீர்த்தார். அவருக்கு மகன் சொன்னது நினைவு வந்தது.
"அம்மா நான் வர்ஷினியை காதலிக்கிறேன்" என தீடீரென்று சொல்ல…அவன் பெற்றோர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவனுக்குமே அவளை பிடிக்காது.சரியான திமிர் பிடித்தவள் என அடிக்கடி சொல்லுவான்.அப்படிப்பட்டவன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தால் ஆச்சரியப் படாமல் என்ன செய்வார்கள்.
"என்னடா இப்படி சட்டுன்னு வந்து சொல்ற" என வர்ஷினி யின் அத்தை கேட்க…
அவனோ "அதெல்லாம் அப்படி தாம்மா. அவளை ரொம்ப நாள் கழிச்சு நேத்துதான் கோயில் திருவிழால பார்த்தேன்,பார்த்ததும் ரொம்ப பிடிச்சிடுச்சு" என்றான்.
"அவ இப்போதான் டா ஸ்கூல் படிகிறா, இப்போ போய் நாம பொண்ணு கேட்டாலும் கொடுப்பாங்களான்னு தெரியலையே" என சந்தேகமாக சொல்ல…
"அதெல்லாம் தருவாங்கம்மா. நம்ம வீட்டுக்கு வந்து வீட்டுவேலை செய்றதுக்கு எதுக்கு படிப்பு. இப்பவே இவ்வளவு திமிரா இருக்கா, இன்னும் படிச்சா நம்மளை சுத்தமா மதிக்க மாட்டாள்".
"அதனால படிச்சது போதும்ன்னு உங்க அண்ணன் கிட்ட கேளுங்க.உங்க அண்ணனுக்கும் ஆம்பளை வாரிசு இல்லை, அதனால பாதி சொத்தும் நமக்கு தான் கிடைக்கும்" என சொல்லிக்கொண்டே மேலும் தொடார்ந்தவனாக
"ஆல்ரெடி எனக்கு என்னோட பிசினஸில் கொஞ்சம் பணம் நெருக்கடி,நம்மளால அவ்ளோ பணம் எல்லாம் புரட்ட முடியாது. அதுவே உங்க அண்ணன் என்றால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.அதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்போ வேணாலும் பணம் கிடைக்கும். பக்கத்திலேயே பணம் காய்க்கும் மரத்தை விட்டுட்டு நாம எதுக்கு பணத்துக்கு அலையனும்" என என்ன சொன்னால் தன் அன்னை வழிக்கு வருவார் என சரியாக குறிப்பார்த்து தாக்க...அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டார்
அனைத்தையும் நினைத்து பார்த்தவர்,இவளோட திமிரை என் வீட்டுக்கு மருமகாளாய் வரும் போது குறைக்கிற விதத்தில் குறைக்கிறேன் என எண்ணியபடி அருகில் சென்றார்.
அவளோ வந்தவரை பார்த்து மாரியாதைக்கு கூட வாங்க என சொல்லாமல் அதே திமிரோடு கண்ணாடியை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
"ஏன் இன்னும் உங்க அம்மா உனக்கு மரியாதை என்றால் என்னன்னு சொல்லி தரலியா" என கத்த…
அவரை நிமிர்ந்து பார்த்த வர்ஷினி "ஏன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி தர போறீங்களா என்ன?..உங்களுக்கு அது நிறைய இருக்கோ" என நக்கலாக கேட்டாள்.
"ஏய் என்னடி ஓவரா பேசுற. இனிமே என்கிட்ட இப்படி பேசி பாரு பேசுற வாயை கிழிக்கிறேன். இனி நான் உனக்கு அத்தை மட்டுமில்ல உன் மாமியாரும் கூட... அதனால மரியாதை கொடுத்து பழகு" என திட்டியவரை கண்டுகொள்ளாமல்
"சின்னக்குட்டி அந்த கண் மையை எடுடி" என கேட்டு வாங்கியவள்,கண்ணுக்கு அழகாக மையை தீட்டிக்கொண்டே …'இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்' என நினைத்தபடி கோபமாக வெளியே செல்லும் தன் அத்தையை பார்த்திருந்தாள்.
சற்றுநேரத்தில் விழா இனிதே தொடங்கியது.அவளை சபைக்கு அழைத்து வரும்படி சொல்ல...அவளும் அழைத்து வரப்பட்டாள்.
சபைக்கு பொதுவாக மரியாதையை செலுத்தியவள்,அங்குள்ள கம்பளத்தில் அமர்ந்தாள்.அடுத்தடுத்து நிச்சயப்பத்திரம் வாசிக்க பட...இரு வீட்டாரும் தாம்பூல தட்டை மாற்றி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என உறுதி செய்தனர்.
அனைத்திலும் வெறும் ஜடம் போல் பங்கேற்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
அதன் பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்க… நாட்கள் நெருங்க நெருங்க வர்ஷினியின் அழுகை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதன் இடையில் விடுமுறை முடிந்து,பள்ளியும் தொடங்கி விட்டது.
தர்ஷினி தான் தன் அக்கா இல்லாமல் அழுது கொண்டே பள்ளிக்கு சென்று வந்தாள்.
"ஓய் சின்னக்குட்டி... அக்கா வரலைன்னு ஃபீல் பண்றீயா. அதான் நாங்க இருக்கோமே அப்பறம் என்ன" என அவளின் கவலை நிறைந்த முகத்தை பார்த்து நண்பர்கள் கேள்வி கேட்க…
அவளோ "நான் ஒன்னும் அதுக்கு ஃபீல் பண்ணல.அக்கா தினமும் அழுதுகிட்டே இருக்கு தெரியுமா?..அதுக்கு இந்த கல்யாணம் சுத்தமா பிடிக்கலையாம், அதான் என்ன பண்றதுன்னு தெரியலை" என கைகளை விரித்து சொல்ல
"உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே" என சொல்லும் நண்பர்களை பார்த்து…
"அப்படி சொன்னதுக்கு தான் அக்காவை போட்டு அடிச்சிட்டாரு அப்பா' என அழுதுகொண்டே...நீங்களாவது ஏதாவது ஐடியா சொல்லுங்களேன் எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு" என அந்த வாண்டுகளிடம் இந்த வாண்டு ஐடியா கேட்டு நின்றது.
அவர்களும் ஏதோ பெரிய மனிதர்கள் போல் யோசித்தவர்களுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை. அப்போது சட்டென்று ரமேஷ் "டேய் ஒரு சூப்பர் ஐடியாடா… நாம ஏன் மதி அண்ணாகிட்ட சொல்ல கூடாது. அவரு போலீஸ் தான எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவாங்க" என சொல்ல,
தர்ஷினிக்கு ஒன்றும் புரியவில்லை."நீங்க யாரை சொல்றீங்க?.. அவங்ககிட்ட சொன்னா கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்திடுவாங்களா" என கேட்க
"ஆமாம்" என சொன்னவர்கள் இன்னைக்கு சாய்ந்திரம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு போகலாம்" என்றான் ரமேஷ்.
"அய்யய்யோ! நான் வரமாட்டேன், எங்க அப்பாக்கு தெரிஞ்சா அடிப்பாரு" என பயத்தோடு சொல்ல..
"இங்க பார் அதெல்லாம் நாங்க யாருக்கும் தெரியாமல் உன்னை குறுக்கு வழியில அழைச்சிட்டு போறோம்" என சொல்ல,அவளும் அரை மனதோடு சரி என்றாள்.
மாலை பள்ளி முடிந்தவுடன் மூவரும் கிளம்பிவிட...முதன்முறை தன் அக்காவுக்கு தெரியாமல் ஒரு விஷயம் செய்ய போகிறாள்,அதுவும் அவளின் நலனுக்காக.
அந்த பெரிய வீட்டை பார்த்ததும் "இவளோ பெரிய வீடா" என தர்ஷினி வாயை பிளக்க…
அந்த இருவரும் "நீ என்னன்னு நினைச்ச மதி அண்ணா வீட்டை பத்தி,உங்களை விட செம்ம பணக்காரர்" என விளக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தனர்.
என்றும் இல்லாமல் இன்று மதி வீட்டுக்கு சீக்கிரத்தில் வந்துவிட...அனைவரோடு பேசிக்கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.
உள்ளே நுழைந்த ரமேஷை முதலில் பார்த்த மதி…"டேய் என்னடா இந்த பக்கம்" என கேட்க,அப்போது தான் அவனின் பின்னால் வந்த சதிஷையும் அவனை தொடர்ந்து கண்களில் மிரட்சியோடு தயங்கியபடி உள்ளே வந்த தர்ஷினியையும் பார்த்தான்.
இந்த வாண்டு எதுக்காக வந்திருக்கு என நினைத்து கொண்டே நிமிர...மொத்த குடும்பமும் தர்ஷினியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அவளோ பயத்தில் தன் நண்பர்கள் பின்னால் தன்னை மறைத்தபடி நின்றிருந்தாள்.தன் தாய், அக்கா அப்பறம் பள்ளி நண்பர்கள் தவிர வேறு யாரோடும் இதுவரை பேசி பழகிடாதவள்,அத்தனை நபரை ஒரே வீட்டில் பார்த்ததிலேயே பயம் வர,அதை அதிகப்படுத்தும் விதமாக அனைவரும் அவளையே பார்ப்பது இன்னும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
"டேய் என்னடா வந்ததில் இருந்து பேசாம இருக்கீங்க?.. என்ன விஷயம்" என மதி பேச்சை தொடங்க,
"உங்களை தான் அண்ணா பார்க்க வந்தோம்" என சொல்லிய சதீஷ், ரமேஷ் இருவருமே திரும்பி தர்ஷினியை பார்த்து சொல்லு என சைகை செய்ய, அவளோ இல்லை என்பதாய் வேகமாக தலையாட்டினாள்.
"நீயே சொல்லு நான் சொல்ல மாட்டேன்" என பயத்தோடு மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.
மதிக்கு புரிந்தது அவளின் தயக்கமும் பயமும். நிமிர்ந்து தன் குடும்பத்தை பார்த்து "இப்படி எல்லாரும் சுத்தி நின்னுட்டு இருந்து சொல்ல சொன்னா சின்ன பொண்ணு என்ன சொல்லும். எல்லோரும் அவங்கவங்க வேலையை பாருங்க, இதை நான் பார்த்துக்கிறேன்" என்றவன் மூவரையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்.
உள்ளே நுழைந்தவுடன் அவளின் நண்பர்கள் இருவரும் சென்று அங்குள்ள மெத்தையில் அமர்ந்துவிட...மதியும் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
தர்ஷினி தயங்கியபடி அப்படியே நிற்க.. தன் அருகில் உள்ள நாற்காலியை இழுத்து தனக்கு எதிரில் போட்டவன் கைகாட்டி அமர சொல்ல,அவளோ தலையாட்டி மறுத்துவிட்டாள்.
"இப்படி வந்து உட்காரு, அப்போ தான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்லியபடி...அவளை கைப்பிடித்து அமரவைத்தவன், சொல்லு "இப்போ எதுக்கு என்ன பார்க்க வந்த" என்க…
" உங்களையா... அப்போ நீங்க தான் போலீசா இருக்கீங்களா?.." என அவன் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டாள் தர்ஷினி.
அவள் கேள்வியில் வந்த சிரிப்பை அடக்கியவன் "ஆமா.. ஏன் என்னை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா" என இவனும் கேட்க
' இல்லை ' என தலையாட்டி "நீங்க தான் போலீஸ் யூனிஃபார்மே போடலையே" என சொல்ல…
அவனோ அவளை பொய்யாக முறைத்துக்கொண்டே "ஓ... யூனிஃபார்ம் போட்டாதான் போலீஸ்ன்னு ஒத்துப்பியா?...அங்க பாருங்க மேடம்" என சுவரில் இருந்த போட்டோவை காட்ட,அதில் காக்கி சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தான் மதியழகன்.
"இப்போ நம்புறீங்களா மேடம்" என மெல்லிய சிரிப்போடு கேட்க அவளிடமிருந்து "ம்ம்" என்ற பதில் மட்டும் வந்தது.
அப்போது கதவை திறந்துகொண்டு மீனாட்சி கையில் தட்டுடன் உள்ளே வந்தார்.
சிறு சிறு தட்டுகளில் மிக்சர், முறுக்கு ஸ்வீட், என இருக்க, அனைவருக்கும் கொடுத்துவிட்டு தர்ஷினியிடம் வர...அவளோ "எனக்கு வேணாம்.யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு எங்க அக்கா சொல்லிருக்கு" என்றவள் அதனை தொட்டு கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் அதில் இருக்கும் அனைத்தும் அவளுக்கு மிகவும் பிடித்த சிற்றுண்டி.
"அதை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போங்கமா" என அன்னையிடம் இருந்து தட்டை வாங்கியவன் "இதை சாப்பிடு அப்போதான் நீ சொல்றதை கேட்பேன்" என சொல்ல…அவளும் தயங்கியபடி வாங்கி கொண்டாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், "இப்போ சொல்லு" என்றான்.
சட்டென்று "எங்க அக்கா கல்யாணத்தை நிறுத்தனும்" என்றாள்.
ஆல்ரெடி அவள் வந்ததன் நோக்கம் அறிந்தவன் "ஏன் நிறுத்தனும்" என கேட்க,
அவளோ கொஞ்சமும் யோசிக்காமல் "எங்க அக்காக்கு பிடிக்கலை அதான்" என்றாள்.
"எங்க அக்கா தினமும் அழுதிட்டே இருக்கு, கல்யாணம் வேணாம்னு அப்பாகிட்ட சொன்னதுக்கு அப்பாவும் அக்காவை அடிச்சிட்டாங்க தெரியுமா?..." என அழ ஆரம்பிக்க... அதை கேட்டு கண்களை மூடிக்கொண்டான்.
சற்று நேரம் விழிமூடி இருந்தவன்,பின்னர் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாக...
அவள் அருகே சென்று கண்ணீரை துடைத்தவன், "அதுக்காக தான் பெரிய மனிஷி போல கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறியா... என்றவன், அப்போ உனக்கு உங்க அக்காவை ரொம்ப பிடிக்குமோ" என கேட்க
அவளோ கைகளை முடியும் மட்டும் அகலமாக விரித்து "இவளோ பிடிக்கும்" என்றாள்.
அந்த சிறு பெண்ணின் பதிலில்,அவனுக்கு அவள்மேல் தனிபாசம் அதிகரிக்க..மெல்ல அவள் தலையை வருடியவன் "சரி இனிமே அழ கூடாது, ஓகே வா. எல்லாம் நல்லதாவே நடக்கும் அதானால சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும் புரியுதா என்றவன், இப்போவே மணி ஆகிடுச்சு...நீ வீட்டுக்கு கிளம்பு,அப்பறம் நீ இங்க வந்ததை யார்கிட்டேயும் சொல்லாத முக்கியமா உங்க அக்காகிட்ட" என சொன்னவன் அவர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வர மொத்த குடும்பமும் அவனை சுற்றி கொண்டது.
அனைவரிடமும் முழுமையாக சொல்லாமல் மேலோட்டமாக விஷயத்தை சொன்னவன்,தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
ஏனென்றால் அவர்கள் தூண்டி துருவி கேட்கும் கேள்விக்கு அவனிடம் பதில்லை. அதனால் தான் அனைத்தையும் சொலலாமல் அரைகுறையாக எதையோ சொல்லி சமாளித்தான்.