அத்தியாயம் - 4
மெத்தையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மதிக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.
அதுவும் தந்தை சொன்ன திருமணம் என்ற வார்த்தையை கேட்கும் போதே... ஏன் அவள் முகம் மனதில் தோன்றியது என்ற கேள்விக்கு அவனிடமே பதிலில்லை.
அப்படியே விழி மூடி உறங்க நினைத்தவனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மூடிய இமைக்குள் அவளின் கண்ணங்குழி சிரிப்பும்,அழகு மதிவதனமே தோன்றி, என்றுமில்லாமல் இன்று மிகவும் இம்சித்தது.
இங்கு... தர்ஷினியின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் இருவருமே தவிப்பில் இருந்தனர்.
"சின்னக்குட்டி அக்கா சொல்றேன் தானே இன்னும் அழுதுட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்" என எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காமல் தன் அன்னையை இறுகி அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள் தர்ஷினி.
மகளை தேற்றி கொண்டிருந்தவர்,நிமிர்ந்து பார்க்க கடிகாரம் இரவு எட்டரையை கடந்திருந்தது.
"வர்ஷினி நீ இங்க சின்னக்குட்டி பக்கத்துல இரு, நான் போய் பாட்டிக்கும் அப்பாவுக்கும் சாப்பாடு பரிமாறிட்டு வரேன்" என்று எழ முயன்றார் சாந்தி.
தாயை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்ட தர்ஷினி..."அம்மா போகாத அப்பா திரும்பவும் அடிப்பாங்க" என மடியில் முகம் புதைக்க,
மகளின் தலையை அதுரமாக வருடியவர் "இல்லடா அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது.அம்மா போய்ட்டு உடனேயே வந்துடுறேன்" என்றபடி வெளியே சென்றார்.
சாந்தி அனைத்தையும் டைன்னிங் டேபிளில் எடுத்துவைக்கவும், சண்முகசுந்தரம் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
எப்போதும் போல் அவர் அமர...அருகில் நின்று பரிமாறிய சாந்திக்கு தான் கைகள் நடுங்கியது. முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவர் அவருக்கு உணவினை எடுத்து வைத்தார்.
மனைவியை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இன்றி அவர் தன் உணவினை தொடர...அடி வாங்கிய சாந்தியும் எதுவும் நடவாது போல் அவரின் தட்டை பார்த்து பார்த்து பரிமாறினார்.
ஏதோ அவரை மணந்ததே இதற்காக தான் என்பது போல் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார் சாந்தி.
அவருக்கு அடுத்து மாமியார் உண்ண… பின்னர் அனைத்தையும் ஒழுங்கு படுத்தியவர் இரு மகளுக்கும் உணவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
இருவரையும் கட்டாயப்படுத்தி இரண்டு வாய் உண்ண வைத்தவர், அதற்கு மேல் முடியாமல் எழுந்து கைகழுவி வந்தார்.
ஏனோ அவருக்கு உணவு இறங்கும் என்று தோன்றவில்லை,சாப்பிடாமல் படுத்துக் கொண்டார்.
வாழ்க்கையில் முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம் போன்றவற்றை எப்படி மறக்க முடியாதோ அதே போல் கணவனிடம் வாங்கிய முதல் அடியை கூட மறக்க முடியாது தான் போல...சாந்தியும் கணவன் அடித்ததையே நினைத்துக்கொண்டு விழித்திருந்தார்.
அனைவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாத இரவாக மாறியது. மறுநாள் காலை எப்போதும் போல் பள்ளிக்கு தயாராகி வர்ஷினி தங்கையை எழுப்ப… அவளின் உடலோ அனலாக கொதித்தது.
சட்டென்று மனதில் பதட்டம் குடிக்கொள்ள "அம்மா.. ஆ இங்க வா" என தாயை அழைக்க,
என்னவோ ஏதோ என்று செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தார் சாந்தி.
பெரிய மகளின் சத்தத்தில் உள்ளே வந்தவர் அப்போது தான் சின்ன மகளின் நிலையை கண்டுகொண்டார்.
நேற்றைய பயமும் அழுகையும் சேர்த்து காய்ச்சலை வரவைத்திருந்தது.
மருத்துவமனைக்கு செல்லலாம் என்றால் அதற்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என நன்றாக அறிந்தவர்,அந்த எண்ணத்தை கைவிட்டவராக மீண்டும் சமயலறை நோக்கி விரைந்தார்.
கிண்ணத்தில் தண்ணீரும் சிறு துண்டையும் எடுத்து வந்தவர்,உடல் வெப்பம் குறையும் மட்டும் குளிர்ந்த நீரால் உடல் முழுவதும் துடைத்துவிட்டவர்...அவள் மறுக்க மறுக்க அரிசி கஞ்சியை குடிக்க வைத்துவிட்டு காய்ச்சல் மருந்தை கொடுத்தார்.
சற்று நேரத்தில் கொஞ்சம் உடல் சூடு குறைந்திருந்தது முழுமையாக சரியாகாத காரணத்தால் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
வர்ஷினி தங்கையின் தலையை வருடி…"சின்னக்குட்டி அக்கா ஸ்கூலுக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்.அதுவரைக்கும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு" என்றவள் கையை பிடித்துக்கொண்டாள் தர்ஷினி.
"என் கூடவே இருக்கா, பிளீஸ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என அந்த உடல் சோர்வையும் வலியையும் பொறுக்க முடியாமல் அந்த சிறுபெண் கேட்க…
தங்கையின் தெளியாத முகத்தை பார்த்து அவளுக்கும் பள்ளிக்கு செல்லும் எண்ணம் சுத்தமாக விடைப்பெற்றுவிட்டது.
அன்று முழுவதும் வர்ஷினி மற்றும் சாந்தியின் கவனிப்பிலும் அன்பிலும் ஜுரம் நன்றாகவே விட்டிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தந்தையை பார்ப்பதையே தவிர்க்க தொடங்கினாள்.அவர் ஹாலில் அமர்ந்திருந்தாள் இவள் அறைக்குள் நுழைந்து கொள்வாள்.அவர் அறைக்குள் சென்றவுடன் வெளியே வருவாள்.இப்படி வீட்டுக்குள்ளேயே ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தர்ஷினியும் அடுத்த நாளில் இருந்தே பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டாள்.
நாட்கள் செல்ல…அன்று காலை மதி அறையை விட்டு வெளியே வரும் போதே வீடு பரபரப்பாக இருந்தது.
இன்னைக்கு என்ன விசேஷம் என நாட்காட்டியை பார்க்க,அதிலும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை.
'அட என்னடா இது,இங்க நான் ஒருத்தன் இருக்குறதை கூட கண்டுக்காம அப்படி என்ன வேலை' என எண்ணியபடி ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.
"அம்மா காஃபி" என சமையலறை நோக்கி சத்தமாக கேட்டவன், அன்றைய செய்தி தாளில் மூழ்கிவிட்டான்.
சிறிது நேரங்கள் கடந்தும் அவன் கேட்டது கிடைக்காததால் மீண்டும் "அம்மா..ஆ, எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க"..? என்ன தான் நடக்குது இந்த வீட்டில்" என சத்தமாகவே கத்த,
ஆனால் யாரும் அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.அனைவருமே தங்கள் வேலையில் கவனமாக இருந்தனர்.
ஒன்றும் புரியாமல் நின்றவனை நெருங்கி "மதி இவளை கொஞ்சம் பார்த்துக்கோ, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு" என தியாவை கையில் கொடுத்துவிட்டு செல்லும் அண்ணியை கோபமாக பிடித்து நிறுத்தினான்.
"அண்ணி இங்க என்ன நடக்குது.இப்போ சொல்ல போறீங்களா இல்லையா" என்க,
அவன் அண்ணி அனுவோ... எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை உதித்தவள் "எல்லாரும் தான் நடக்குறாங்க, நீ யாரை கேட்கிற மதி" என்க,
அவனோ பல்லை கடித்துக்கொண்டு இருக்குற கடுப்புல இவங்க வேற என நினைத்தவன் "செம்ம காமெடி அப்பறம் சிரிக்கிறேன்" என்றவன்,
கோபம் அதிகரிக்க "எல்லாரும் ரொம்ப பிசியா இருக்கீங்க? என் கேள்விக்கு பதில் சொல்லவோ, என்னை கவனிக்கவோ தான் யாருமில்லையே. அப்பறம் நான் எதுக்கு இங்க வீணா.நான் டியூட்டிக்கு கிளம்புறேன்" என திரும்பவும் தியாவை அவளிடமே கொடுத்தவன் தன் அறைக்குள் நுழைந்தான்.
கோபமாக போகும் கொழுந்தனை பார்த்து சிரித்தபடி சமயலறையில் நுழைந்த அனு… "அத்தை மதி வேலைக்கு போக போறேன்னு கோபமா போறார். பாவம் என்னன்னு போய் சொல்லுங்கத்த,ஓவர் டென்ஷனில் இருக்கார்" என்றாள்.
"நீ சும்மா இரும்மா. எப்போ பார் உன் கொழுந்தனுக்கு வக்காளத்து பண்ண வந்திடுவ. நேத்து அவ்வளவு தூரம் ஃபோன் பண்ணி வீட்டுக்கு சீக்கிரம் வாடா,முக்கியமான விஷயம் பேசணும்னு படிச்சி படிச்சி சொன்னா...திருடன் மாதிரி நடுராத்திரிக்கு வரான்".
"கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாம மண்டையை போட்டு பிச்சிக்கிட்டும். பொறுமையா சொல்லிக்கலாம்" என தன் மகன் மேல் உள்ள கோபத்தில் பேசிய மீனாட்சி, சமையலை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் காக்கி சட்டையோடு அறையிலிருந்து வந்தவன்,யாரையும் கண்டுகொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் தன் புல்லட்டை தேட, அதுவோ அவன் நிறுத்திய இடத்தில் இல்லாமல் சதி செய்தது.
பக்கத்தில் அவனின் அப்பாவும் சித்தப்பாவும் எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்க…"அப்பா எங்க என் வண்டி? யார் எடுத்தது,இப்பவே எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிடுச்சு" என புலம்பினான்.
அப்போதுதான் அவனை பார்த்த இருவரும், "நீ எங்க கிளம்பிட்ட,அதுவும் யூனிஃபார்ம் போட்டுகிட்டு" என்றவரை முறைக்க தொடங்கினான் மதி.
"இது என்ன கேள்விப்பா,வேலைக்கு தான்.புதுசா கேக்குறீங்க? கேள்வி மட்டும் இல்ல இன்னைக்கு இந்த வீட்ல எல்லாமே புதுசா தான் இருக்கு" என கத்தியவனை இப்போது இவர்கள் முறைக்க தொடங்கினர்.
"ஏண்டா விளையாட வேற நேரமில்லையா..? உள்ள போடா. இன்னைக்கு எங்கயும் வெளிய போக கூடாது. இன்னைக்கு வீட்ல முக்கியமான பங்ஷன் இருக்கு.அதுவும் நீயில்லாம எப்படி " என இவரும் நேரடியாக விஷயத்திற்கு வரமால் சுற்றி வளைத்து பேசியபடி உள்ளே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து...மதியின் அறைக்குள் நுழைந்த அவனின் அன்னை,தலையில் கைவைத்து அமர்ந்திருந்த மகனை பார்த்து "டேய் சாப்பிட வாடா" என்க,அவனோ "எனக்கு எதுவும் வேண்டாம்" என சொன்னவன்,அப்படியே மெத்தையில் படுத்துக்கொண்டான்.
"நாங்க தான் உன்மேல கோபத்தில் இருக்கணும்.ஆனா இங்க எல்லாமே தலைகீழா இருக்கு" என்றவர், அவன் அவன் அருகே அமர்ந்து முகம் பார்க்க...
அவன் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டு மேலும் அவனை வெறுப்பேற்ற பிடிக்காமல்,நடக்க இருக்கும் நிகழ்ச்சியை பற்றி சொன்னார்.
தன் அன்னை சொன்னதை கேட்டவன் அதிர்ச்சியில் படுக்கையை விட்டு சட்டென்று எழுந்து கொண்டான்.
"அம்மா என்ன சொல்றீங்க..? யாரை கேட்டு இப்படி திடீர்னு நிச்சயதார்த்ததுக்கு ரெடி பண்ணீங்க?" என மனம் படப்படக்க தாயை பார்த்தான்.
கல்யாணத்தை பத்தி பேசி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில்,இப்படி தீடீரென்று,அதுவும் இவ்வளவு சீக்கிரம் அனைத்து வேலையும் தொடங்குவார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்து என்ன செய்வது என புரியாமல் தன் அன்னையை பார்த்து, "இன்னும் மது காலேஜ் முடிக்கலையேம்மா அதுக்குள்ள என்ன அவசரம்" என்க..
"கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்குடா,இப்போ வெறும் நிச்சயம் தான். உங்க மாமா தான் அவசரப்படுறார்.
பேசி வெச்சிட்டா அப்பறம் எப்போ வேணா கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொன்னார்,அதான் போன வாரம் எல்லாரும் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிட்டு வந்தோம்" என்றவர்,
"உன்கிட்ட அப்பவே சொல்லலாம்னு நினைச்சோம்,உங்க மாமா தான் இப்போ சொன்னா மாட்டேன்னு சொல்லுவான் நிச்சியத்துக்கு முந்தின நாள் சொல்லிக்கலாம்னு சொன்னார்" என்க…
இப்போது கோபம் மொத்தமும் அவனுக்கு அவன் மாமாவின் மேல் எழுந்தது.
'தனக்கு தெரியாமல் இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.ஆனால் நான் இது எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறேனே' என நினைக்கையிலேயே "நீதான் வீடே தங்குறது இல்லையே, அப்புறம் எப்படி உங்கிட்ட சொல்றது. அப்படி என்ன வேலையோ வீட்டுக்கு கூட வர முடியாமல்" அவர் பாட்டிற்கு புலம்ப தொடங்கியவர், மகனின் முகம் பார்க்க அவனோ ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
"டேய் என்னடா பேய் அடிச்ச மாதிரி இருக்க"...? என அவன் சிந்தனையை கலைத்தார் மீனாட்சி.
"உனக்கு போட்டுக்க,வெட்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்.முதல்ல வந்து சாப்பிட்டு எல்லாத்தையும் போட்டுக்க...இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துடுவாங்க" என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.
மதி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். மதுவை அவனுக்கு பிடிக்கும் தான்,அது வெறும் அத்தை மகள் என்ற ரீதியில் மட்டுமே. அதை தாண்டி இதுவரை அவளை வேறு நோக்கத்தில் பார்த்ததுமில்லை, நினைத்ததில்லை.
அப்படியிருக்க இப்போது அவளை மனைவியாக,அதனை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை அவனால்.
அப்படியே பெரியவர்களின் ஆசைக்காக கல்யாணம் செய்துகொண்டாலும்,
அவளுடன் சந்தோஷமான மணவாழ்க்கையை வாழ முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
மனைவி என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் முகம் இன்றும் தோன்றியது. ஆனால் ஒரு நாளும் மதுவின் முகம் அப்படி தோன்றியதில்லையே.
ஒருவேளை ஒரே வீட்டில் வளர்ந்ததனால் தான் என்னவோ, அனைவரிடமும் பேசுவது போல தான் அவளிடமும் பேசுவான்.அவள் மேல் அத்தை பெண் மேல் தோன்றும் உரிமை கூட இதுவரை தோன்றியதில்லை.
கேலி கிண்டல் எல்லாமே, சாதாரணமாக தான். அதில் பாசம் இருக்குமே தவிர எள்ளளவும் காதல் இருந்ததில்லை.
அப்படியிருக்க, இப்போது என்ன சொல்லி இந்த திருமணத்தை நிறுத்துவது என்பதே பெரிய கேள்வியாக மண்டையை குடைந்தது.
நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் அவனுக்கே அது காதல் தானா என்பது சந்தேகமே.
அப்படியே சொன்னாலும் அவளை காதலியாக அவனால் அடையாளம் காட்ட முடியாது. இருவரும் சேரவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அடுத்து என்ன என்பது கேள்விக்குறி தான்.
சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன்,அழுந்த தன் தலையை கோதியவாறு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
என்ன ஆனாலும் இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் எழுந்து தயாராக தொடங்கினான்.
ஊரின் பெரிய வீட்டின் நிகழ்ச்சி என்பதால்,ஊர் மக்கள் அனைவருமே வருகை தந்திருந்தனர்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக கூடத்தில் நடுநாயகமாக இருக்கையில் அமர்ந்திருந்தவன் உள்ளத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி என்பது இல்லை.
வெளியே அனைவரின் பார்வைக்காக முகத்தை கஷ்டப்பட்டு சிரித்தபடி வைத்திருந்தான்.
அப்போது மதுமிதாவை அழைத்து வர,பட்டு புடவையில் மிதமான அலங்காரத்திலேயே தேவதையாக வந்தவளை அனைவருமே விழி விரித்து பார்த்தனர்.
"நம்ம மதிக்கு ஏத்த பொண்ணு தான். புடவையில் மகாலட்சுமி போல இல்ல இருக்கா" என அனைவருமே அவர்களின் ஜோடி பொருத்தத்தை புகழ்ந்து தள்ள...அவளின் அழகை ரசிக்க வேண்டிய இடத்தில் இருப்பவனோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவன் மட்டும் தான் அப்படி இருந்தான். ஆனால் மது புதிதாக முகத்தில் முளைத்த வெட்கத்தால் முகம் ரோஜா நிறத்தை தத்தெடுக்க ,யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவித்தாள்.
சிறு வயதில் இருந்து அவனை தான் மணக்க போகிறாய் என அனைவரும் சொல்வதை கேட்டு வளர்ந்ததால், அவளுமே இந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்.
கூடியிருந்த அனைவரையும் பார்த்து வணங்கியவள்,அங்கு விரிக்கப்பட்ட கம்பளத்தில் அமர்ந்தாள்.
விழா தொடங்க...ஊர் மக்களின் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி ஆசிர்வாதம் செய்துவிட்டு உணவருந்த சென்றனர்.நேரம் கடக்க வந்தவர்கள் அனைவரும் விடைபெற்று சென்றுவிட...வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
ஏனோ அன்று காலையிலிருந்தே மிகவும் இறுக்கமாக உணர்ந்தவன்,தன் நண்பனுக்கு அழைத்தான்.
"டேய் கதிர், டியூட்டி முடிஞ்சா வீட்டுக்கு வந்துட்டு போ" என்றவன்,யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.
மாலை கதிர் வந்தவுடன்,தன் புல்லட்டை கூட எடுக்காமல் அவன் வண்டியிலேயே கிளம்பிவிட்டான்.
"என்னடா ஒரு மாதிரி இருக்க..? ஏதாவது பிரச்சனையா..? என்ற நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் "முதல்ல கிளம்புடா அப்பறம் சொல்றேன்" என்றவன் பின் இருக்கையில் அமர்ந்தான்.
வண்டி நேராக சென்று நின்றது என்னவோ ஒரு டீ கடையில் தான். எப்போதுமே நண்பர்கள் அனைவரும் அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்து அரட்டை அடிப்பது தான் வழக்கம்.
அதனால் அங்கேயே வண்டியை நிறுத்தியவன்,இருவருக்கும் டீ சொல்லிவிட்டு அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்தான் கதிர் .
மதியும் அமர்ந்தவன், எதுவும் பேசாமல் கொண்டுவந்து கொடுத்த டீயை பருகியவன் காதில் ஒரு குரல் கேட்டது.
சட்டென்று திரும்பி பார்க்க,அங்கே தன் நண்பர்கள் படை சூழ வந்து கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
பார்வையை மாற்றாமல் அவளையே அழுத்தமாக பார்க்க… அவளோ "டேய் உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகிடுச்சு டா. இரு இரு எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் சொல்றேன், உங்களுக்கு இவன் பட்டப்பெயர் வாய்த்திருக்கான் அப்படின்னு" என ரமேஷின் காதை திருகியவாறு தன்னுடைய வாண்டு நண்பர்களுடன் கதையளந்து கொண்டே நடந்தவள்,டீ கடையை கடக்கும் நேரம்….
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் "டேய் ரமேஷ் இங்க வாடா" என அழைத்தான்.
திரும்பி பார்த்த ரமேஷ் "ஹேய் மதி அண்ணா... என கூச்சலிட்ட படி, சின்னக்குட்டி இந்த சைக்கிளை மட்டும் கொஞ்சம் பிடியேன் இதோ வரேன்" என்றவன்,மதியை நோக்கி ஓடினான்.
"மதி அண்ணா" என்றபடி எதிரில் வந்து நின்றவனை பார்த்த பின்பே அவனை அழைத்தது நினைவில் எழுந்தது.
செல்லும் அவளை தடுக்கவே இவனை அழைத்திருந்தான். இப்போ என்ன சொல்வது என யோசித்தவன்,மணிக்கட்டில் உள்ள கைக்கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தரையை கடந்திருந்தது.
"டேய் உங்களுக்கு ஸ்கூல் நாலு மணிக்கே முடிந்திருக்குமே, அப்பறம் எதுக்கு இன்னும் இங்கேயே சுத்திட்டு இருக்க. என்ன உங்க அப்பா கிட்ட சொல்லனுமா..? என என்ன பேசுவது என தெரியாமல் சிறுபிள்ளையை பயமுறுத்தினான்.
அவனிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் பார்வையோ ஓரக்கண்ணால் அங்கு நின்று கொண்டிருந்த மித்ராவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தது.
அங்கு சட்டமாக அமர்ந்துகொண்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க இவளுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.
"டேய் ரமேஷ், அங்க என்ன வெட்டியா பேசிட்டு இருக்க.. இப்போ வர முடியுமா முடியாதா' என சத்தமாக கத்தியவள்,இப்போ நீ மட்டும் வரலைன்னா சைக்கிளை அப்படியே ரோட்ல போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்" என சொன்னவள் மறந்தும் அவன் முகத்தை பார்க்கவில்லை.
'திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர்' என நினைத்தவன் "நீ போடா" என ரமேஷை அனுப்பி வைத்தான்.
"என்னடா அந்த பொண்ணு இப்படி பேசுறா? சரியான வாயாடியா இருப்பா போல" என்ற கதிரை பார்த்து "நீ முதல்ல வண்டியை எடுடா" என்றான்.
"டேய் எதுவோ பேசணும்னு வர சொன்ன,இப்போ திரும்பவும் எங்கேயோ குப்பிடுற" என்க,
"நீ வந்தா வா இல்லனா ஆளை விடு நானே போய்க்கிறேன்" என நடக்க தொடங்கிய மதியை தடுத்து அவனே வண்டியை எடுத்தான்.
"எங்கடா போகணும் வீட்டுக்கா" என்க,
அவனோ "நான் சொல்ற வழியில் போ" என அவனுக்கு மேப்பாக மாறி வழி சொன்னான்.
தன் நண்பர்கள் வீடு வந்துவிட, அவர்கள் சென்றவுடன், சைக்கிளில் தங்கையை அமரவைத்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
லெஃப்ட், ரைட் என வளைந்து வளைந்து நான்கு தெருவை தாண்டி மீண்டும் அந்த டீ கடைக்கு செல்லும் பாதையில் பயணிக்க…
மெத்தையில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த மதிக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது.
அதுவும் தந்தை சொன்ன திருமணம் என்ற வார்த்தையை கேட்கும் போதே... ஏன் அவள் முகம் மனதில் தோன்றியது என்ற கேள்விக்கு அவனிடமே பதிலில்லை.
அப்படியே விழி மூடி உறங்க நினைத்தவனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. மூடிய இமைக்குள் அவளின் கண்ணங்குழி சிரிப்பும்,அழகு மதிவதனமே தோன்றி, என்றுமில்லாமல் இன்று மிகவும் இம்சித்தது.
இங்கு... தர்ஷினியின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் இருவருமே தவிப்பில் இருந்தனர்.
"சின்னக்குட்டி அக்கா சொல்றேன் தானே இன்னும் அழுதுட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்" என எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்காமல் தன் அன்னையை இறுகி அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள் தர்ஷினி.
மகளை தேற்றி கொண்டிருந்தவர்,நிமிர்ந்து பார்க்க கடிகாரம் இரவு எட்டரையை கடந்திருந்தது.
"வர்ஷினி நீ இங்க சின்னக்குட்டி பக்கத்துல இரு, நான் போய் பாட்டிக்கும் அப்பாவுக்கும் சாப்பாடு பரிமாறிட்டு வரேன்" என்று எழ முயன்றார் சாந்தி.
தாயை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொண்ட தர்ஷினி..."அம்மா போகாத அப்பா திரும்பவும் அடிப்பாங்க" என மடியில் முகம் புதைக்க,
மகளின் தலையை அதுரமாக வருடியவர் "இல்லடா அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது.அம்மா போய்ட்டு உடனேயே வந்துடுறேன்" என்றபடி வெளியே சென்றார்.
சாந்தி அனைத்தையும் டைன்னிங் டேபிளில் எடுத்துவைக்கவும், சண்முகசுந்தரம் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
எப்போதும் போல் அவர் அமர...அருகில் நின்று பரிமாறிய சாந்திக்கு தான் கைகள் நடுங்கியது. முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவர் அவருக்கு உணவினை எடுத்து வைத்தார்.
மனைவியை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இன்றி அவர் தன் உணவினை தொடர...அடி வாங்கிய சாந்தியும் எதுவும் நடவாது போல் அவரின் தட்டை பார்த்து பார்த்து பரிமாறினார்.
ஏதோ அவரை மணந்ததே இதற்காக தான் என்பது போல் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார் சாந்தி.
அவருக்கு அடுத்து மாமியார் உண்ண… பின்னர் அனைத்தையும் ஒழுங்கு படுத்தியவர் இரு மகளுக்கும் உணவை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
இருவரையும் கட்டாயப்படுத்தி இரண்டு வாய் உண்ண வைத்தவர், அதற்கு மேல் முடியாமல் எழுந்து கைகழுவி வந்தார்.
ஏனோ அவருக்கு உணவு இறங்கும் என்று தோன்றவில்லை,சாப்பிடாமல் படுத்துக் கொண்டார்.
வாழ்க்கையில் முதல் காதல், முதல் நட்பு, முதல் முத்தம் போன்றவற்றை எப்படி மறக்க முடியாதோ அதே போல் கணவனிடம் வாங்கிய முதல் அடியை கூட மறக்க முடியாது தான் போல...சாந்தியும் கணவன் அடித்ததையே நினைத்துக்கொண்டு விழித்திருந்தார்.
அனைவருக்குமே அந்த இரவு உறக்கம் இல்லாத இரவாக மாறியது. மறுநாள் காலை எப்போதும் போல் பள்ளிக்கு தயாராகி வர்ஷினி தங்கையை எழுப்ப… அவளின் உடலோ அனலாக கொதித்தது.
சட்டென்று மனதில் பதட்டம் குடிக்கொள்ள "அம்மா.. ஆ இங்க வா" என தாயை அழைக்க,
என்னவோ ஏதோ என்று செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தார் சாந்தி.
பெரிய மகளின் சத்தத்தில் உள்ளே வந்தவர் அப்போது தான் சின்ன மகளின் நிலையை கண்டுகொண்டார்.
நேற்றைய பயமும் அழுகையும் சேர்த்து காய்ச்சலை வரவைத்திருந்தது.
மருத்துவமனைக்கு செல்லலாம் என்றால் அதற்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள் என நன்றாக அறிந்தவர்,அந்த எண்ணத்தை கைவிட்டவராக மீண்டும் சமயலறை நோக்கி விரைந்தார்.
கிண்ணத்தில் தண்ணீரும் சிறு துண்டையும் எடுத்து வந்தவர்,உடல் வெப்பம் குறையும் மட்டும் குளிர்ந்த நீரால் உடல் முழுவதும் துடைத்துவிட்டவர்...அவள் மறுக்க மறுக்க அரிசி கஞ்சியை குடிக்க வைத்துவிட்டு காய்ச்சல் மருந்தை கொடுத்தார்.
சற்று நேரத்தில் கொஞ்சம் உடல் சூடு குறைந்திருந்தது முழுமையாக சரியாகாத காரணத்தால் மகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.
வர்ஷினி தங்கையின் தலையை வருடி…"சின்னக்குட்டி அக்கா ஸ்கூலுக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்.அதுவரைக்கும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு" என்றவள் கையை பிடித்துக்கொண்டாள் தர்ஷினி.
"என் கூடவே இருக்கா, பிளீஸ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என அந்த உடல் சோர்வையும் வலியையும் பொறுக்க முடியாமல் அந்த சிறுபெண் கேட்க…
தங்கையின் தெளியாத முகத்தை பார்த்து அவளுக்கும் பள்ளிக்கு செல்லும் எண்ணம் சுத்தமாக விடைப்பெற்றுவிட்டது.
அன்று முழுவதும் வர்ஷினி மற்றும் சாந்தியின் கவனிப்பிலும் அன்பிலும் ஜுரம் நன்றாகவே விட்டிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் தந்தையை பார்ப்பதையே தவிர்க்க தொடங்கினாள்.அவர் ஹாலில் அமர்ந்திருந்தாள் இவள் அறைக்குள் நுழைந்து கொள்வாள்.அவர் அறைக்குள் சென்றவுடன் வெளியே வருவாள்.இப்படி வீட்டுக்குள்ளேயே ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தர்ஷினியும் அடுத்த நாளில் இருந்தே பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டாள்.
நாட்கள் செல்ல…அன்று காலை மதி அறையை விட்டு வெளியே வரும் போதே வீடு பரபரப்பாக இருந்தது.
இன்னைக்கு என்ன விசேஷம் என நாட்காட்டியை பார்க்க,அதிலும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை.
'அட என்னடா இது,இங்க நான் ஒருத்தன் இருக்குறதை கூட கண்டுக்காம அப்படி என்ன வேலை' என எண்ணியபடி ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.
"அம்மா காஃபி" என சமையலறை நோக்கி சத்தமாக கேட்டவன், அன்றைய செய்தி தாளில் மூழ்கிவிட்டான்.
சிறிது நேரங்கள் கடந்தும் அவன் கேட்டது கிடைக்காததால் மீண்டும் "அம்மா..ஆ, எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க"..? என்ன தான் நடக்குது இந்த வீட்டில்" என சத்தமாகவே கத்த,
ஆனால் யாரும் அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.அனைவருமே தங்கள் வேலையில் கவனமாக இருந்தனர்.
ஒன்றும் புரியாமல் நின்றவனை நெருங்கி "மதி இவளை கொஞ்சம் பார்த்துக்கோ, எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு" என தியாவை கையில் கொடுத்துவிட்டு செல்லும் அண்ணியை கோபமாக பிடித்து நிறுத்தினான்.
"அண்ணி இங்க என்ன நடக்குது.இப்போ சொல்ல போறீங்களா இல்லையா" என்க,
அவன் அண்ணி அனுவோ... எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை உதித்தவள் "எல்லாரும் தான் நடக்குறாங்க, நீ யாரை கேட்கிற மதி" என்க,
அவனோ பல்லை கடித்துக்கொண்டு இருக்குற கடுப்புல இவங்க வேற என நினைத்தவன் "செம்ம காமெடி அப்பறம் சிரிக்கிறேன்" என்றவன்,
கோபம் அதிகரிக்க "எல்லாரும் ரொம்ப பிசியா இருக்கீங்க? என் கேள்விக்கு பதில் சொல்லவோ, என்னை கவனிக்கவோ தான் யாருமில்லையே. அப்பறம் நான் எதுக்கு இங்க வீணா.நான் டியூட்டிக்கு கிளம்புறேன்" என திரும்பவும் தியாவை அவளிடமே கொடுத்தவன் தன் அறைக்குள் நுழைந்தான்.
கோபமாக போகும் கொழுந்தனை பார்த்து சிரித்தபடி சமயலறையில் நுழைந்த அனு… "அத்தை மதி வேலைக்கு போக போறேன்னு கோபமா போறார். பாவம் என்னன்னு போய் சொல்லுங்கத்த,ஓவர் டென்ஷனில் இருக்கார்" என்றாள்.
"நீ சும்மா இரும்மா. எப்போ பார் உன் கொழுந்தனுக்கு வக்காளத்து பண்ண வந்திடுவ. நேத்து அவ்வளவு தூரம் ஃபோன் பண்ணி வீட்டுக்கு சீக்கிரம் வாடா,முக்கியமான விஷயம் பேசணும்னு படிச்சி படிச்சி சொன்னா...திருடன் மாதிரி நடுராத்திரிக்கு வரான்".
"கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாம மண்டையை போட்டு பிச்சிக்கிட்டும். பொறுமையா சொல்லிக்கலாம்" என தன் மகன் மேல் உள்ள கோபத்தில் பேசிய மீனாட்சி, சமையலை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் காக்கி சட்டையோடு அறையிலிருந்து வந்தவன்,யாரையும் கண்டுகொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் தன் புல்லட்டை தேட, அதுவோ அவன் நிறுத்திய இடத்தில் இல்லாமல் சதி செய்தது.
பக்கத்தில் அவனின் அப்பாவும் சித்தப்பாவும் எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்க…"அப்பா எங்க என் வண்டி? யார் எடுத்தது,இப்பவே எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிடுச்சு" என புலம்பினான்.
அப்போதுதான் அவனை பார்த்த இருவரும், "நீ எங்க கிளம்பிட்ட,அதுவும் யூனிஃபார்ம் போட்டுகிட்டு" என்றவரை முறைக்க தொடங்கினான் மதி.
"இது என்ன கேள்விப்பா,வேலைக்கு தான்.புதுசா கேக்குறீங்க? கேள்வி மட்டும் இல்ல இன்னைக்கு இந்த வீட்ல எல்லாமே புதுசா தான் இருக்கு" என கத்தியவனை இப்போது இவர்கள் முறைக்க தொடங்கினர்.
"ஏண்டா விளையாட வேற நேரமில்லையா..? உள்ள போடா. இன்னைக்கு எங்கயும் வெளிய போக கூடாது. இன்னைக்கு வீட்ல முக்கியமான பங்ஷன் இருக்கு.அதுவும் நீயில்லாம எப்படி " என இவரும் நேரடியாக விஷயத்திற்கு வரமால் சுற்றி வளைத்து பேசியபடி உள்ளே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து...மதியின் அறைக்குள் நுழைந்த அவனின் அன்னை,தலையில் கைவைத்து அமர்ந்திருந்த மகனை பார்த்து "டேய் சாப்பிட வாடா" என்க,அவனோ "எனக்கு எதுவும் வேண்டாம்" என சொன்னவன்,அப்படியே மெத்தையில் படுத்துக்கொண்டான்.
"நாங்க தான் உன்மேல கோபத்தில் இருக்கணும்.ஆனா இங்க எல்லாமே தலைகீழா இருக்கு" என்றவர், அவன் அவன் அருகே அமர்ந்து முகம் பார்க்க...
அவன் முகத்தில் உள்ள குழப்பத்தை கண்டு மேலும் அவனை வெறுப்பேற்ற பிடிக்காமல்,நடக்க இருக்கும் நிகழ்ச்சியை பற்றி சொன்னார்.
தன் அன்னை சொன்னதை கேட்டவன் அதிர்ச்சியில் படுக்கையை விட்டு சட்டென்று எழுந்து கொண்டான்.
"அம்மா என்ன சொல்றீங்க..? யாரை கேட்டு இப்படி திடீர்னு நிச்சயதார்த்ததுக்கு ரெடி பண்ணீங்க?" என மனம் படப்படக்க தாயை பார்த்தான்.
கல்யாணத்தை பத்தி பேசி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில்,இப்படி தீடீரென்று,அதுவும் இவ்வளவு சீக்கிரம் அனைத்து வேலையும் தொடங்குவார்கள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்து என்ன செய்வது என புரியாமல் தன் அன்னையை பார்த்து, "இன்னும் மது காலேஜ் முடிக்கலையேம்மா அதுக்குள்ள என்ன அவசரம்" என்க..
"கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாசம் இருக்குடா,இப்போ வெறும் நிச்சயம் தான். உங்க மாமா தான் அவசரப்படுறார்.
பேசி வெச்சிட்டா அப்பறம் எப்போ வேணா கல்யாணத்தை முடிச்சிடலாம்னு சொன்னார்,அதான் போன வாரம் எல்லாரும் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிட்டு வந்தோம்" என்றவர்,
"உன்கிட்ட அப்பவே சொல்லலாம்னு நினைச்சோம்,உங்க மாமா தான் இப்போ சொன்னா மாட்டேன்னு சொல்லுவான் நிச்சியத்துக்கு முந்தின நாள் சொல்லிக்கலாம்னு சொன்னார்" என்க…
இப்போது கோபம் மொத்தமும் அவனுக்கு அவன் மாமாவின் மேல் எழுந்தது.
'தனக்கு தெரியாமல் இவ்வளவு விஷயம் நடந்திருக்கு.ஆனால் நான் இது எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறேனே' என நினைக்கையிலேயே "நீதான் வீடே தங்குறது இல்லையே, அப்புறம் எப்படி உங்கிட்ட சொல்றது. அப்படி என்ன வேலையோ வீட்டுக்கு கூட வர முடியாமல்" அவர் பாட்டிற்கு புலம்ப தொடங்கியவர், மகனின் முகம் பார்க்க அவனோ ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
"டேய் என்னடா பேய் அடிச்ச மாதிரி இருக்க"...? என அவன் சிந்தனையை கலைத்தார் மீனாட்சி.
"உனக்கு போட்டுக்க,வெட்டி சட்டை எடுத்து வச்சிருக்கேன்.முதல்ல வந்து சாப்பிட்டு எல்லாத்தையும் போட்டுக்க...இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துடுவாங்க" என்றவர் அறையை விட்டு வெளியேறினார்.
மதி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். மதுவை அவனுக்கு பிடிக்கும் தான்,அது வெறும் அத்தை மகள் என்ற ரீதியில் மட்டுமே. அதை தாண்டி இதுவரை அவளை வேறு நோக்கத்தில் பார்த்ததுமில்லை, நினைத்ததில்லை.
அப்படியிருக்க இப்போது அவளை மனைவியாக,அதனை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை அவனால்.
அப்படியே பெரியவர்களின் ஆசைக்காக கல்யாணம் செய்துகொண்டாலும்,
அவளுடன் சந்தோஷமான மணவாழ்க்கையை வாழ முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை.
மனைவி என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் முகம் இன்றும் தோன்றியது. ஆனால் ஒரு நாளும் மதுவின் முகம் அப்படி தோன்றியதில்லையே.
ஒருவேளை ஒரே வீட்டில் வளர்ந்ததனால் தான் என்னவோ, அனைவரிடமும் பேசுவது போல தான் அவளிடமும் பேசுவான்.அவள் மேல் அத்தை பெண் மேல் தோன்றும் உரிமை கூட இதுவரை தோன்றியதில்லை.
கேலி கிண்டல் எல்லாமே, சாதாரணமாக தான். அதில் பாசம் இருக்குமே தவிர எள்ளளவும் காதல் இருந்ததில்லை.
அப்படியிருக்க, இப்போது என்ன சொல்லி இந்த திருமணத்தை நிறுத்துவது என்பதே பெரிய கேள்வியாக மண்டையை குடைந்தது.
நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் அவனுக்கே அது காதல் தானா என்பது சந்தேகமே.
அப்படியே சொன்னாலும் அவளை காதலியாக அவனால் அடையாளம் காட்ட முடியாது. இருவரும் சேரவும் முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அடுத்து என்ன என்பது கேள்விக்குறி தான்.
சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன்,அழுந்த தன் தலையை கோதியவாறு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.
என்ன ஆனாலும் இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் எழுந்து தயாராக தொடங்கினான்.
ஊரின் பெரிய வீட்டின் நிகழ்ச்சி என்பதால்,ஊர் மக்கள் அனைவருமே வருகை தந்திருந்தனர்.
பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக கூடத்தில் நடுநாயகமாக இருக்கையில் அமர்ந்திருந்தவன் உள்ளத்தில் மருந்துக்கும் மகிழ்ச்சி என்பது இல்லை.
வெளியே அனைவரின் பார்வைக்காக முகத்தை கஷ்டப்பட்டு சிரித்தபடி வைத்திருந்தான்.
அப்போது மதுமிதாவை அழைத்து வர,பட்டு புடவையில் மிதமான அலங்காரத்திலேயே தேவதையாக வந்தவளை அனைவருமே விழி விரித்து பார்த்தனர்.
"நம்ம மதிக்கு ஏத்த பொண்ணு தான். புடவையில் மகாலட்சுமி போல இல்ல இருக்கா" என அனைவருமே அவர்களின் ஜோடி பொருத்தத்தை புகழ்ந்து தள்ள...அவளின் அழகை ரசிக்க வேண்டிய இடத்தில் இருப்பவனோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
அவன் மட்டும் தான் அப்படி இருந்தான். ஆனால் மது புதிதாக முகத்தில் முளைத்த வெட்கத்தால் முகம் ரோஜா நிறத்தை தத்தெடுக்க ,யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவித்தாள்.
சிறு வயதில் இருந்து அவனை தான் மணக்க போகிறாய் என அனைவரும் சொல்வதை கேட்டு வளர்ந்ததால், அவளுமே இந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்.
கூடியிருந்த அனைவரையும் பார்த்து வணங்கியவள்,அங்கு விரிக்கப்பட்ட கம்பளத்தில் அமர்ந்தாள்.
விழா தொடங்க...ஊர் மக்களின் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்தனர்.
அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் இருவரையும் வாழ்த்தி ஆசிர்வாதம் செய்துவிட்டு உணவருந்த சென்றனர்.நேரம் கடக்க வந்தவர்கள் அனைவரும் விடைபெற்று சென்றுவிட...வீட்டினர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
ஏனோ அன்று காலையிலிருந்தே மிகவும் இறுக்கமாக உணர்ந்தவன்,தன் நண்பனுக்கு அழைத்தான்.
"டேய் கதிர், டியூட்டி முடிஞ்சா வீட்டுக்கு வந்துட்டு போ" என்றவன்,யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.
மாலை கதிர் வந்தவுடன்,தன் புல்லட்டை கூட எடுக்காமல் அவன் வண்டியிலேயே கிளம்பிவிட்டான்.
"என்னடா ஒரு மாதிரி இருக்க..? ஏதாவது பிரச்சனையா..? என்ற நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் "முதல்ல கிளம்புடா அப்பறம் சொல்றேன்" என்றவன் பின் இருக்கையில் அமர்ந்தான்.
வண்டி நேராக சென்று நின்றது என்னவோ ஒரு டீ கடையில் தான். எப்போதுமே நண்பர்கள் அனைவரும் அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்து அரட்டை அடிப்பது தான் வழக்கம்.
அதனால் அங்கேயே வண்டியை நிறுத்தியவன்,இருவருக்கும் டீ சொல்லிவிட்டு அங்குள்ள பெஞ்ச்சில் அமர்ந்தான் கதிர் .
மதியும் அமர்ந்தவன், எதுவும் பேசாமல் கொண்டுவந்து கொடுத்த டீயை பருகியவன் காதில் ஒரு குரல் கேட்டது.
சட்டென்று திரும்பி பார்க்க,அங்கே தன் நண்பர்கள் படை சூழ வந்து கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
பார்வையை மாற்றாமல் அவளையே அழுத்தமாக பார்க்க… அவளோ "டேய் உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகிடுச்சு டா. இரு இரு எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் சொல்றேன், உங்களுக்கு இவன் பட்டப்பெயர் வாய்த்திருக்கான் அப்படின்னு" என ரமேஷின் காதை திருகியவாறு தன்னுடைய வாண்டு நண்பர்களுடன் கதையளந்து கொண்டே நடந்தவள்,டீ கடையை கடக்கும் நேரம்….
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் "டேய் ரமேஷ் இங்க வாடா" என அழைத்தான்.
திரும்பி பார்த்த ரமேஷ் "ஹேய் மதி அண்ணா... என கூச்சலிட்ட படி, சின்னக்குட்டி இந்த சைக்கிளை மட்டும் கொஞ்சம் பிடியேன் இதோ வரேன்" என்றவன்,மதியை நோக்கி ஓடினான்.
"மதி அண்ணா" என்றபடி எதிரில் வந்து நின்றவனை பார்த்த பின்பே அவனை அழைத்தது நினைவில் எழுந்தது.
செல்லும் அவளை தடுக்கவே இவனை அழைத்திருந்தான். இப்போ என்ன சொல்வது என யோசித்தவன்,மணிக்கட்டில் உள்ள கைக்கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தரையை கடந்திருந்தது.
"டேய் உங்களுக்கு ஸ்கூல் நாலு மணிக்கே முடிந்திருக்குமே, அப்பறம் எதுக்கு இன்னும் இங்கேயே சுத்திட்டு இருக்க. என்ன உங்க அப்பா கிட்ட சொல்லனுமா..? என என்ன பேசுவது என தெரியாமல் சிறுபிள்ளையை பயமுறுத்தினான்.
அவனிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் பார்வையோ ஓரக்கண்ணால் அங்கு நின்று கொண்டிருந்த மித்ராவையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தது.
அங்கு சட்டமாக அமர்ந்துகொண்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க இவளுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.
"டேய் ரமேஷ், அங்க என்ன வெட்டியா பேசிட்டு இருக்க.. இப்போ வர முடியுமா முடியாதா' என சத்தமாக கத்தியவள்,இப்போ நீ மட்டும் வரலைன்னா சைக்கிளை அப்படியே ரோட்ல போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்" என சொன்னவள் மறந்தும் அவன் முகத்தை பார்க்கவில்லை.
'திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர்' என நினைத்தவன் "நீ போடா" என ரமேஷை அனுப்பி வைத்தான்.
"என்னடா அந்த பொண்ணு இப்படி பேசுறா? சரியான வாயாடியா இருப்பா போல" என்ற கதிரை பார்த்து "நீ முதல்ல வண்டியை எடுடா" என்றான்.
"டேய் எதுவோ பேசணும்னு வர சொன்ன,இப்போ திரும்பவும் எங்கேயோ குப்பிடுற" என்க,
"நீ வந்தா வா இல்லனா ஆளை விடு நானே போய்க்கிறேன்" என நடக்க தொடங்கிய மதியை தடுத்து அவனே வண்டியை எடுத்தான்.
"எங்கடா போகணும் வீட்டுக்கா" என்க,
அவனோ "நான் சொல்ற வழியில் போ" என அவனுக்கு மேப்பாக மாறி வழி சொன்னான்.
தன் நண்பர்கள் வீடு வந்துவிட, அவர்கள் சென்றவுடன், சைக்கிளில் தங்கையை அமரவைத்து வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.
லெஃப்ட், ரைட் என வளைந்து வளைந்து நான்கு தெருவை தாண்டி மீண்டும் அந்த டீ கடைக்கு செல்லும் பாதையில் பயணிக்க…