ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
#Twist21

#No9

#இனி_என்னென்ன_நேர்ந்திடுமோ

அழுத்தமான உணர்வுகளை கொண்ட காதல் கதை... தலைப்பு வெகு பொருத்தம்... ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் இனி என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை கொடுத்தது?? ஒரு டென்ஷன் லயே இருக்க வச்சுட்டாங்க, என்ன நடக்குமோ என்று..

சந்தியா பயந்த சுபாவம் கொண்ட இந்த பிள்ளை ஒரு terror கிட்ட(சத்யன்) வேலை பார்க்குது. அவன் வேற நியாயம் என்றால் என்ன விலை கேட்பான் போல(அவன் வேலையில்) அவனுக்கு அவன் செய்வது மட்டுமே நியாயம்... பாவம் அவள் வாழ்வில் நடக்கும் கொடுமையில் அவள் அப்பாவுக்கு முடியாமல் போய் விட, இன்னொரு புறம் முதல் முறை அவளின் கண்ணீர் சத்யனை கரைக்க அவளை கட்டம் கட்டி தூக்கிடுறான், கல்யாணம் மூலம், அவளின் விருப்பு இல்லாமலே, பழி வாங்க என்று... அவன் பழி வாங்கும் விதம்???????

பாவம் அவள் அவளுக்கான நியாயம் தேடி ஒருவனுடன் சேர்ந்து கண்டுபிடிக்க அலைந்து கொண்டு இருக்க, அவளை பார்க்கும் அவளின் துன்பத்திற்கு காரணமானவன் ஒருபுறம் அவளை கொல்ல துணிகிறான்... அவன் நோக்கம் நிறைவேறுமா?

சந்தியாவின் நோக்கம் நிறைவேறுமா? இல்லை சத்யனின் நோக்கம் நிறைவேறுமா?

எல்லாம் தெரிந்த சத்யன் என்ன செய்வான்?

அவனின் தம்பி அஷ்வின் அவனின் காதல், அதற்கு அவனின் தாய் கூறும் வழிகள், அறிவுரைகள் எல்லாம், சூப்பர்ப்... காதலியிடம் காதல் சொல்லிய பின் நடக்கும் சிறு புரிதல் பிழையில் அது ஒரு பக்கம் அந்தரத்தில் இருக்குது... காரணம் தெரிய வந்தபின் அவன் என்ன செய்வான்?

அவனின் அண்ணன் விஷ்வா மனைவியை மதிக்காதவன்..ரொம்ப ரொம்ப நல்லவன் வல்லவன் என பெயரெடுத்தவன்... பாவம் சுமித்ரா.. வாயில்லா பூச்சி... அவனின் அலட்சியத்திற்கு காரணம் தெரிய வரும் போது காதல் கொண்ட மனம் என்ன ஆகும்?

வில்லன் பொறியில் மாட்டிய எலி போல இவன் நிலை ஆகும் போது?????? அதுவும் மூன்று புறம் நீர் சூழ்ந்த கடல் போல அனைத்து பக்கமும் அடைபட்ட நிலையில், இவனுக்கு தெரிய வரும் உண்மை??? அப்போ கூட அடங்காத, இவனுக்கு கிடைக்கும் தண்டனை??? நிறைவாக இருந்துச்சு???

ரொம்பவே பிடிச்சது சத்யன் அம்மா.. மகன்களுக்கு சரியான அறிவுரை சரியான நேரத்தில் சொல்லுறாங்க.. அவங்க தவறை திருத்தவும் சொல்லுறாங்க...

சத்யன் இவனை என்ன சொல்ல?? பழியெல்லாம் இருக்கட்டும், இவனின் நேசம் அருமையானது... ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யுறாண்.. அவனின் காதல் மெதுவா மெதுவா அரும்பாகி மொட்டாகி பூவாவது சூப்பர்ப்??? இவனின் செயல்களை கூட இவனின் நேசம் நேர் செய்வது சூப்பர்????

டுவிஸ்ட், எதிர்ப்பார்க்கலை ரைட்டர் மேடம்.. சூப்பர்..

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????
Wow சூப்பர் ரிவ்யூ அக்கா. மிக்க நன்றி. ஒவ்வொரு யூடிக்கும் நீங்கள் தரும் ஆதரவிற்கு அன்பிற்கும்.thank u so much ❤️❤️
 

Ammu.R

New member
சத்யன் பெயர் மட்டும் தான் சத்யன் ஆனால் அவன் தொழிலில் சத்தியத்துக்கு எதிராக நிற்பவன்.

சந்தியா சத்யன் ஆபீஸில் பணிபுரிகிறாள் பயந்த சுபாவம் கொண்டவள். இந்த டெரர் சக்தி கிட்ட இன்னும் சொல்லவே வேணாம் ???அவள் எல்லாத்தையும் கரெக்டா ப்ராபெர் பண்ணுவாள் ஆனால் சக்தி முன்னாடி மட்டும் பேச வார்த்தைகள் வராது அப்படி ஒரு பயம் அவனை நேரில் பார்த்தால்.

தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது அதனால் அவங்க அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போகுது. ஒரு மர்ம மனிதனின் உதவியுடன் அந்த பிரச்சனைக்கு காரணமானவனை தேடும் பணியில் இறங்குகிறாள்.

அதனால் வருத்தத்துடனும் வாடிய முகத்துடன் காணப்படும் தியாவை பார்க்கும் போது சக்தியின் மனதில் ஒர் இனம் புரியாத உணர்வு உண்டாகுது இதற்காகவே அவள் மேல் கோபம் வருது அவனுக்கு(இது வரைக்கும் என் அன்பையும் கரிசனத்தையும் யார் மேலயும் வெளிப்படுதலை உன் மேல மட்டும் எப்படி இது வெளிப்படலாம் நீ எப்படி என்னை இப்படி மாத்தலாம் என்று) இதனாலேயே அவளை பழிவாங்க திருமணமும் செய்து கொள்கிறான்.????

கதையின் முதல் பாதியில் ச்சா... என்ன இவ்வளவு டெரர் பிஸ்சா இருக்கானே என்று தோணுச்சு பிற்பாதியில் தியா மேல் கொண்ட காதலையும் மென்மையும் அவள் மேல் உள்ள அக்கறை நிறைந்த அரவணைப்பும் அவன் தான் இவனா என்று தோணுச்சு ????????????

என்ன பிரச்சனை? யாரைத் தேடுகிறாள்? உதவி செய்யும் அந்த மர்ம மனிதர் யார்? அந்த பிரச்சனையால் அவளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுப்பானா சக்தி?

அப்புறம் சக்தியை பார்த்தாலே பயந்து நடுங்கும் சந்தியா இப்படி இருப்பவளுக்கு எப்படி சக்தி மேல் ஒரு ஈர்ப்பு வந்தது என்றும் அந்த பிரச்சனையால் சந்தியா வாக இருப்பவள் எப்படி சந்(த்)தியா ஆக மாறுகிறாள் என்று கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் ??????????

அஷ்வின் கவிதா காதலும் சூப்பர்???????? இவங்க காதலை நல்லபடியா ஆரம்பித்து நடுவில் பாவம் அஸ்வினை கொஞ்சம் கலங்க வைத்துவிட்டீர்கள் ?????? இருவர் மேலயும் தவறு இல்லை அவன் காதலிக்கிற பெண்ணென்று அட்வான்டேஜ் எடுத்துகிட்டான் அவள் மேல் காதல் இல்லாமல் அப்படி நடந்துக்கிட்டு இருந்தால் அது தவறுதான் கவிதாவால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை அவள் தோழிக்கு நடந்தது கண்முன் வந்துடுச்சு எல்லோரும் அப்படிதான் என்று நினைத்துவிட்டால். இதுல இருந்து இருவருக்குள்ளும் ஒரு புரிதலை உண்டாக்கி சுமுகமா சேர்த்து வைத்தது செம்ம????????

பானுமதி சிறந்த தாய் பிள்ளைகளுக்கு தந்த அறிவுரை சூப்பர். அவர்களை நல்ல தான் வளர்த்து இருக்கிறார் ஒருவனை தவிர தன் வளர்ப்பு தவறாகி போனதற்கு நீங்க கொடுத்த தண்டனை சூப்பர்??????????


விஷ்வா ???? நீ எல்லாம் மிருகம் உன்னை இன்னும் கொடூரமான சித்திரவதை செய்து உன் உயிரைப் எடுத்து இருக்கனும்.ம்ம்ம்...????இதுவும் நல்ல தான் இருந்தது உடம்பால் சித்திரவதை அனுபவிக்க வில்லை என்றாலும் இந்த தண்டனை பெரிய வலிதான் உனக்கு.

உனக்கெல்லாம் சுமித்ரா மாதிரி சாந்தமான உன் அன்பும் அரவணைப்பும் கிடைக்கா வில்லை என்றாலும் தன் அன்பும் காதலும் உனக்கு மட்டும் தான் என்று நினைக்கும் மனைவி அமைந்து இருக்க கூடாது டெரர் மனைவியாக அமைந்து ஆரம்பத்துல இருந்தே நல்ல மெத்தி எடுத்து இருக்கனும் உன்னை ?? எனக்கு இந்த ஆசை நிறைவேறனாலும் உன் சுயரூபத்தை அறிந்த பிறகு சுமி உன்னை எதிர்த்து பேசிய அந்த தைரியம் பிடித்தது?????

கடைசியில் எதிர்பார்க்க படாத திருப்பங்கள் அருமை??????????

இப்போட்டியில் இக்கதை வெற்றிபெற வாழ்த்துக்கள் ?????????? ????
 
  • Love
Reactions: T21

Lalitha Iyer

New member
Super story .
சரியான முடிவு . சத்யா, சந்தியா unexpected twist revealed.
சத்யன் மாதிரி கணவன் கிடைப்பது ஒரு வரப் பிரசாதம் .
 
  • Love
Reactions: T21

Raji sivam

New member
Super story with unexpected twists.... especially that twins?....sandhya part ronbave kashtama irunthuchu....vishwa??worsttttuuuu....nalla mudivu
 
  • Love
Reactions: T21
Top