ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

Ruby

Well-known member
#Twist21

#No9

#இனி_என்னென்ன_நேர்ந்திடுமோ

அழுத்தமான உணர்வுகளை கொண்ட காதல் கதை... தலைப்பு வெகு பொருத்தம்... ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் இனி என்ன நடக்கும் என எதிர்பார்ப்பை கொடுத்தது?? ஒரு டென்ஷன் லயே இருக்க வச்சுட்டாங்க, என்ன நடக்குமோ என்று..

சந்தியா பயந்த சுபாவம் கொண்ட இந்த பிள்ளை ஒரு terror கிட்ட(சத்யன்) வேலை பார்க்குது. அவன் வேற நியாயம் என்றால் என்ன விலை கேட்பான் போல(அவன் வேலையில்) அவனுக்கு அவன் செய்வது மட்டுமே நியாயம்... பாவம் அவள் வாழ்வில் நடக்கும் கொடுமையில் அவள் அப்பாவுக்கு முடியாமல் போய் விட, இன்னொரு புறம் முதல் முறை அவளின் கண்ணீர் சத்யனை கரைக்க அவளை கட்டம் கட்டி தூக்கிடுறான், கல்யாணம் மூலம், அவளின் விருப்பு இல்லாமலே, பழி வாங்க என்று... அவன் பழி வாங்கும் விதம்???????

பாவம் அவள் அவளுக்கான நியாயம் தேடி ஒருவனுடன் சேர்ந்து கண்டுபிடிக்க அலைந்து கொண்டு இருக்க, அவளை பார்க்கும் அவளின் துன்பத்திற்கு காரணமானவன் ஒருபுறம் அவளை கொல்ல துணிகிறான்... அவன் நோக்கம் நிறைவேறுமா?

சந்தியாவின் நோக்கம் நிறைவேறுமா? இல்லை சத்யனின் நோக்கம் நிறைவேறுமா?

எல்லாம் தெரிந்த சத்யன் என்ன செய்வான்?

அவனின் தம்பி அஷ்வின் அவனின் காதல், அதற்கு அவனின் தாய் கூறும் வழிகள், அறிவுரைகள் எல்லாம், சூப்பர்ப்... காதலியிடம் காதல் சொல்லிய பின் நடக்கும் சிறு புரிதல் பிழையில் அது ஒரு பக்கம் அந்தரத்தில் இருக்குது... காரணம் தெரிய வந்தபின் அவன் என்ன செய்வான்?

அவனின் அண்ணன் விஷ்வா மனைவியை மதிக்காதவன்..ரொம்ப ரொம்ப நல்லவன் வல்லவன் என பெயரெடுத்தவன்... பாவம் சுமித்ரா.. வாயில்லா பூச்சி... அவனின் அலட்சியத்திற்கு காரணம் தெரிய வரும் போது காதல் கொண்ட மனம் என்ன ஆகும்?

வில்லன் பொறியில் மாட்டிய எலி போல இவன் நிலை ஆகும் போது?????? அதுவும் மூன்று புறம் நீர் சூழ்ந்த கடல் போல அனைத்து பக்கமும் அடைபட்ட நிலையில், இவனுக்கு தெரிய வரும் உண்மை??? அப்போ கூட அடங்காத, இவனுக்கு கிடைக்கும் தண்டனை??? நிறைவாக இருந்துச்சு???

ரொம்பவே பிடிச்சது சத்யன் அம்மா.. மகன்களுக்கு சரியான அறிவுரை சரியான நேரத்தில் சொல்லுறாங்க.. அவங்க தவறை திருத்தவும் சொல்லுறாங்க...

சத்யன் இவனை என்ன சொல்ல?? பழியெல்லாம் இருக்கட்டும், இவனின் நேசம் அருமையானது... ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்யுறாண்.. அவனின் காதல் மெதுவா மெதுவா அரும்பாகி மொட்டாகி பூவாவது சூப்பர்ப்??? இவனின் செயல்களை கூட இவனின் நேசம் நேர் செய்வது சூப்பர்????

டுவிஸ்ட், எதிர்ப்பார்க்கலை ரைட்டர் மேடம்.. சூப்பர்..

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Super super super
Banumathi oru nalla amma than payianu therinja udane thandanai kuduthutanga romba great
Aswin he was a good human avan veetla irruka yellarukum pathu pathu seirathula irrunthu avan brother thappu senjanu avan oppose panrathu sema
Ana intha sathyan... theriyala... avan love panna ponnuku kastam athanala than avan brother ah yethirthana
Yena avan kasu vangitu kettavangalukaga support panni casela win panravana irrukane
Antha characterahyum diya kaka than mathuran lastla so avana ithula yentha vagaila sekka theriyala
Aana avan lovela unmaiya irrukan avaluku oru kastamu varavidama parthukitu avanga appavayum pathu avaluku time kuduthu avalayum jeyuchutan
He is a good family man
Romba nalla story sissy
Vetri pera vazhthukal
Wow...super review sis thank u so much sis ❤️❤️ நீங்க சொல்றதும் உண்மை தான் சிஸ்... ஹீரான்னா நல்லவனாவே தான் இருக்கணும்னு இல்லையே அவனும் மனுஷன் தானே...
தப்பு பண்ற எல்லாருமே அது தனக்கோ தன்னை சார்ந்தவர்களையோ பாதிக்கும் போது தான் உணராங்க. அப்படி பார்த்தா அவனும் செல்பிஷ் தான் தன் காதலிக்காக துடிச்சான்... அவளக்காகவே தன்னை மாத்திக்கிட்டான். ஆனா ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அந்த மாற்றம் கூட எல்லார் கிட்டயும் வந்துடாது. இவனுக்கு வந்துச்சு அதான் ஹீரோ வாகிட்டான்.
 

T21

Well-known member
Wonderland writer
வணக்கம் சகோதரிகளே ...

#இனி_என்னென்ன_நேர்ந்திடுமோ

#கதைஎண் 9

பொம்மு நாவலின் போட்டிக்கதை

துரிய கர்ண்ண அர்ஜூன வழித்தோன்றல்
ஒரே சூழ் உறையூல்..
விதிவிலக்கான ஒரு சூல் அதன் தனிபாதையில்
பாதையின் முகமூடி சுவடை எல்லாம் ..
களையும் தருணங்கள் ...
சாபவிமோசன தார்பரியங்களே..

ஈன்றபொழுதில் பெருது உவந்த தாய்
ஈற்றில் கலவர நிலையில் மீள் துவள்வது
வரமா?சாபமா? இங்கே இனி நேர்ந்தநிலை..

கண்ணீரில் உதித்த காதலாய் பல நிலைகள் கடக்க
முகம் மறைத்த திரைமறை காதலை என்னவென்பது.
சத்ய திய காதலின் உருமாரிய கலவையில்.. பல
இருட்டுக்கள் வெளிச்ச வீடாய்..ஒளிபெற்றதோ..!!❤❤

சத்யன்... ஹப்பா..!!என்ன ஒரு நேயன் நேசன். கண்ணீரின் வெளியோடு தன்னவளை நேசித்து சுவாசிக்கும் காதல் நிலைகள் மிகவும் மனதை நெகிழ்த்து சென்றது. நான் பார்க்க பலாபழம் உள்ளே நல் சுவையே என வந்து நிற்பது அசத்தல் .??

தன்னவளுக்காய் முகமூடி போட்டு பல திருட்டுக்கள் பிடிப்பது
இவனின் காதலின் ஆழத்தை உணர்ந்த நிலை. சத்யன் சத்யவான் தான்..தொழில் வேறு குடும்பம் வேறு இவனின் தாரகமந்திரம் .
எம் மனதோடும் நிறைந்து போனான்.??

அஷ்வின் ராமனுக்கு ஏற்ற லட்சுமணன். சுவாரசியங்கள் நிறைந்த காதல் இளவரசன் . அதையும் தாண்டி இவன் உறுமும் இடமெல்லாம் கைத்தட்டவே தோன்றியது.??

சந்(த்)தியா பட்டாம் பூச்சி நாயகி. சில போராட்ட போர்க்களத்தால் சாதனை பெண்ணாய்,பயந்தவளாய் , காதல் மறை காதலியாய்,மனைவியாய் என பல நிலைகளின் பங்குதாரி. ஆனாலும் அவளின் வலி அவள் மனதோடு.

சுமித்ரா பாவபட்ட சாதாரண குடும்ப மருமகள் .பெயருக்கேற்ற பொறுமைசாலி கடைசியில் எங்கே பொங்க வேண்டுமோ அங்கே
போர்த்தொடுத்து பொங்குவது சபாஷ் போட தோன்றியது.??

தாய் பானுமதி இவர் தெய்வ தாயே தான்!!!! இவரை தலைவணங்க தோன்றுகிறது .. இப்படியும் ஒரு தாய் அருமை... அருமை.. இவரின் பாத்திர படைப்பு.

சாணக்கிய வினையன் இவனை பற்றி சொல்லாமல் போவதே நன்று.. முகமூடி போர்த்திய திருந்தா மனித மிருகம்.??

ஆசிரிய தோழியே.. மிகவும் எம்மை எதிர்பார்ப்பை கூட்டவைத்து கதை நகர்த்திய விதம் மிகவும் நன்று. அதுவும் அந்தந்த கதாபாத்திரங்களுக்க நீங்கள் சூட்டிய பெயர்கள் மிகவும் பொருத்தமான ஒன்று சபாஷ்டா. ??

கதையில் ஒரு தோய்வு கூட இல்லாது கதை நகர்த்திய விதம் .கடைசிவரை அந்த நபரை எப்படி காட்டுவீர்கள் என எமை ஆச்சரிய படுத்த நீங்கள் கொண்டுவந்த அந்த ரகசிய நபரினை கண்டு நாம் அதிர்வு கொண்டோம். இப்படி யோசிக்கவில்லையே என்று.

இந்த கதை போட்டிக்கு சரியான தெறிவு கருவாக கொண்டு வந்ததிற்கு வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே..??

குடும்ப உறவுகள்,பாசம்,சேட்டைகள், காதல், நட்பு,மற்றும் பாசவேஷம் என பல நிலைகளிலும்.. .. பெண்களை மோகிக்கும் மோகிகளை இனம் கண்டு அது யாராய் இருந்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு என கூறி சென்றது மிகவும் அருமைமா.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ பெயருக்கேற்ற கதைக்கரு.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
Wow...அழகான கவிதை மற்றும் விமார்சனம் ரெண்டுமே சூப்பர்.மிக்க நன்றிகள் அக்கா. உங்களின் ஒவ்வொரு கவிதையும் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்தது போல் இருந்தது.thank u so much sis ❤️❤️
 
Top