ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

Shayini Hamsha

Active member
டுவிஸ்ட்21 நாவல் போட்டி

கதை விமர்சனம்

கதை எண்~ 9

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!


கதையின் ஆரம்பம் முதல் கதையின் இறுதி வரையிலும், தலைப்பினை போலவே கதையினை படிக்கும் வாசகர்களான எமது மனதிலும் இனி என்னென்ன எல்லாம் நடக்குமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது விறுவிறுப்பான கதை நகர்வுகளுடனும்,கதையின் போக்கில் எங்கும் எந்தவிதமான தொய்வுமன்றி பெண் வர்க்க சமூகத்தின் வலிகளை அனைவரினதும் மனதில் அழுத்தமாக பதியும் வகையில் இலகுவான தமிழ் மொழி நடையிலுள்ள அழுத்தமான ஆத்மார்த்தமான உணர்வு பூர்வமான டுவிஸ்ட் நாவல் .???

திக் திக் நிமிடங்களென கடக்கும் இனி என்னென்ன நேரந்திடுமோ !


கதையின் நாயகனான சத்யதேவ் எந்தவித போலி முமுகமூடியும் அற்ற யாதார்த்தவாதி,

கோர்ட்டில் தேவ் வாதாட எடுக்கும் வழக்குகளில் நீதி,நேர்மை மற்றும் நியாயம் என்றால் கிலோ என்ன விலையென நேரடியாக கேட்கக் கூடிய அழுத்தமான பிரபல்யமான வக்கீல். அவனின் நியாயங்கள் வாதங்கள் அவனது அகராதியில் எப்போதும் நியாயங்களே..!

நாயகி தியா தனது உண்மையான இயல்பை தொலைத்த அமைதியான சுபாவமுள்ள நங்கை. அவளிற்கு ஒரே சொந்தமாக அவளின் தந்தை மற்றும் நெருங்கிய நண்பியாக கவிதா.. வாழ்வில் அவள் கடந்து வந்த இழப்பு, அவளது வாழ்வில் திருமணம் என்ற ஒன்றிற்கே இடமில்லையெனவும், திருமணம் என்ற அத்தியாயத்தை முழுமையாக தியா தவிர்க்கையில், அவளுக்கு இருக்கும் ஒரேயொரு உறவான தந்தையின் ஆசைக்கும் நிம்மதிக்குமாக , திருமணத்திற்கு சம்மதிக்க நேருகையில் , அவளிடம் பழிவாங்க மட்டுமே உன்னை நான் திருமணம் செய்யப் போகிறேனென நேரடியாகவே கூறி திருமணம் செய்யும் சத்யா !


பழிவாங்கும் நோக்கில் நடக்கும் திருமணத்சில் இருவரினதும் வாழ்வு செழிக்குமா ? இவற்றுக்கு இடையில் தனது இழப்புக்கு காரணமானவனை சகோதரனாக பழகும் ஒருவனின் உதவியுடன் கண்டு பிடித்து பழிதீர்க்க முயலும் நாயகி தியா!

அவளுக்கு பிரதிபலன் பாராது திறை மறைவில் உதவுவது யார் ? ஆரம்பத்தில் திருமண வாழ்வில் பிடிப்பில்லாமல் இருக்கும் நாயகி தியா, நாட்கள் மேலும் செல்ல செல்ல திருமணவாழ்விலும் புகுந்த வீட்டிலும் ஒன்ற நினைக்கிறாள்.

பட்டாம் பூச்சி போல எந்தவித கவலையும் இல்லாது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தவளின் வாழ்க்கை நொடியில் தடம்புரள காரணமானவன் பற்றிய உண்மை கண்முன்னே! அதனைத் தெரிந்தால் அவளின் மனநிலை !???

அஷ்வின் ஜாலியான கலகலப்பு பேர்வழி! தனது காதலினை எந்த வகையான சூழ்நிலையிலும் தனது மனங்கவர்ந்த பெண்ணவளிடம் திணிக்காது காதல் உணர்வினை வெளிப்படுத்தும் தருணத்தில் வாசகர் மனதை கவரும் கள்வன் ! காதலியே அவனது உண்மையான காதலை ஒரு கணத்தில் விதி வசத்தால் துச்சமாக பேசும் தருணத்திலும் நிதானமாக சூழலை கையாண்டு அவளிடமும் தன் மீதான காதலை உணர வைக்கிறான்.
?????

முத்தென மூன்று புதல்வர்கள்! மனம் நிறைந்த அருமையான மகள்களின் ஸ்தானத்தில் இருக்கும் மருமகள்கள்!என வாழும் அன்னை பத்மாவதி ! தாங்கள் பெற்றுவளர்த்த கடாமார்பில் பாய்ந்தால் ,தாயாக பத்மாவதியின் மனநிலை !


திடுக்கிடும் உண்மைகள் தெரிய வரும் போது மண வாழ்க்கைக்கு துளியும் தகுதியற்றவனெ தெரியாது மணவாழ்வை பகிர்ந்த அபலை பெண்ணவளின் மனநிலை !?? ? மனதை குலைக்கும் உண்மைகள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியுமென அறிந்து கொள்கையில் இனி என்னென்ன நேருமோ! என தவிக்கும் விஷபூச்சியின் மனநிலை ! திக்திக் நொடிகள் ! ???☹

அருமையான கதையை டுவிஸ்டுடன் சுவாரஸ்யமாக கொடுத்த கதையின் ஆசிரியர்க்கு பாராட்டுக்களுடனும் மேன் மேலும் நிறைய கதைகளை தந்து மகிழ்விக்க வேண்டுமென்ற மனமார்ந்த வாழ்த்துக்களுடனும்

.... .......அன்புடன் ... ?ஷாயினி
?eiWYEU872101.jpg
கதை திரி https://www.pommutamilnovels.com/index.php?forums/9-இனி-என்னென்ன-நேர்ந்திடுமோ-completed.182/

விமர்சனதிரி https://www.pommutamilnovels.com/in...னென்ன-நேர்ந்திடுமோ-கதைக்கான-விமர்சனங்கள்.602/
 
Last edited:
Top