Wow...ரொம்ப அழகான விமர்சனம் சிஸ்...சஸ்பென்ஸ் உடைக்காமல் படிக்க தூண்டும் விதமாக இருக்கிறது. மிக்க நன்றிகள் சிஸ்.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கு ???சத்யன் பெயர் மட்டும் தான் சத்யன் ஆனால் அவன் தொழிலில் சத்தியத்துக்கு எதிராக நிற்பவன்.
சந்தியா சத்யன் ஆபீஸில் பணிபுரிகிறாள் பயந்த சுபாவம் கொண்டவள். இந்த டெரர் சக்தி கிட்ட இன்னும் சொல்லவே வேணாம் ???அவள் எல்லாத்தையும் கரெக்டா ப்ராபெர் பண்ணுவாள் ஆனால் சக்தி முன்னாடி மட்டும் பேச வார்த்தைகள் வராது அப்படி ஒரு பயம் அவனை நேரில் பார்த்தால்.
தியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது அதனால் அவங்க அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போகுது. ஒரு மர்ம மனிதனின் உதவியுடன் அந்த பிரச்சனைக்கு காரணமானவனை தேடும் பணியில் இறங்குகிறாள்.
அதனால் வருத்தத்துடனும் வாடிய முகத்துடன் காணப்படும் தியாவை பார்க்கும் போது சக்தியின் மனதில் ஒர் இனம் புரியாத உணர்வு உண்டாகுது இதற்காகவே அவள் மேல் கோபம் வருது அவனுக்கு(இது வரைக்கும் என் அன்பையும் கரிசனத்தையும் யார் மேலயும் வெளிப்படுதலை உன் மேல மட்டும் எப்படி இது வெளிப்படலாம் நீ எப்படி என்னை இப்படி மாத்தலாம் என்று) இதனாலேயே அவளை பழிவாங்க திருமணமும் செய்து கொள்கிறான்.????
கதையின் முதல் பாதியில் ச்சா... என்ன இவ்வளவு டெரர் பிஸ்சா இருக்கானே என்று தோணுச்சு பிற்பாதியில் தியா மேல் கொண்ட காதலையும் மென்மையும் அவள் மேல் உள்ள அக்கறை நிறைந்த அரவணைப்பும் அவன் தான் இவனா என்று தோணுச்சு ????????????
என்ன பிரச்சனை? யாரைத் தேடுகிறாள்? உதவி செய்யும் அந்த மர்ம மனிதர் யார்? அந்த பிரச்சனையால் அவளுக்கு ஏற்படும் ஆபத்தை தடுப்பானா சக்தி?
அப்புறம் சக்தியை பார்த்தாலே பயந்து நடுங்கும் சந்தியா இப்படி இருப்பவளுக்கு எப்படி சக்தி மேல் ஒரு ஈர்ப்பு வந்தது என்றும் அந்த பிரச்சனையால் சந்தியா வாக இருப்பவள் எப்படி சந்(த்)தியா ஆக மாறுகிறாள் என்று கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் ??????????
அஷ்வின் கவிதா காதலும் சூப்பர்???????? இவங்க காதலை நல்லபடியா ஆரம்பித்து நடுவில் பாவம் அஸ்வினை கொஞ்சம் கலங்க வைத்துவிட்டீர்கள் ?????? இருவர் மேலயும் தவறு இல்லை அவன் காதலிக்கிற பெண்ணென்று அட்வான்டேஜ் எடுத்துகிட்டான் அவள் மேல் காதல் இல்லாமல் அப்படி நடந்துக்கிட்டு இருந்தால் அது தவறுதான் கவிதாவால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை அவள் தோழிக்கு நடந்தது கண்முன் வந்துடுச்சு எல்லோரும் அப்படிதான் என்று நினைத்துவிட்டால். இதுல இருந்து இருவருக்குள்ளும் ஒரு புரிதலை உண்டாக்கி சுமுகமா சேர்த்து வைத்தது செம்ம????????
பானுமதி சிறந்த தாய் பிள்ளைகளுக்கு தந்த அறிவுரை சூப்பர். அவர்களை நல்ல தான் வளர்த்து இருக்கிறார் ஒருவனை தவிர தன் வளர்ப்பு தவறாகி போனதற்கு நீங்க கொடுத்த தண்டனை சூப்பர்??????????
விஷ்வா ???? நீ எல்லாம் மிருகம் உன்னை இன்னும் கொடூரமான சித்திரவதை செய்து உன் உயிரைப் எடுத்து இருக்கனும்.ம்ம்ம்...????இதுவும் நல்ல தான் இருந்தது உடம்பால் சித்திரவதை அனுபவிக்க வில்லை என்றாலும் இந்த தண்டனை பெரிய வலிதான் உனக்கு.
உனக்கெல்லாம் சுமித்ரா மாதிரி சாந்தமான உன் அன்பும் அரவணைப்பும் கிடைக்கா வில்லை என்றாலும் தன் அன்பும் காதலும் உனக்கு மட்டும் தான் என்று நினைக்கும் மனைவி அமைந்து இருக்க கூடாது டெரர் மனைவியாக அமைந்து ஆரம்பத்துல இருந்தே நல்ல மெத்தி எடுத்து இருக்கனும் உன்னை ?? எனக்கு இந்த ஆசை நிறைவேறனாலும் உன் சுயரூபத்தை அறிந்த பிறகு சுமி உன்னை எதிர்த்து பேசிய அந்த தைரியம் பிடித்தது?????
கடைசியில் எதிர்பார்க்க படாத திருப்பங்கள் அருமை??????????
இப்போட்டியில் இக்கதை வெற்றிபெற வாழ்த்துக்கள் ?????????? ????