அத்தியாயம் - 20
அவள் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமை நோக்கி அந்த புடவையை கொடுத்தவள் "எனக்கு இது வேண்டாம்" என விழிகளில் தேங்கிய கண்ணீரோடு சொல்ல,
அவனோ "ஓ அப்படியா" என்பது போல் புருவங்களை ஏற்றி இறங்கியவன் "உங்கிட்ட நான் வேண்டுமா வேண்டாமா..? என கேட்கவில்லையே….
நீ இதை தான் கல்யாணத்திற்கு கட்டணும் இல்லையென்றால் நடக்கும் சம்பவத்திற்கு நான் பொறுப்பில்லை என அவளை நெருங்கி இதையும் மீறி நீ மாட்டேன் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் நானே கட்டிவிட தொடங்கிவிடுவேன்" என்க,
அவன் சொல்லில் அதிர்ந்து விழித்தவளை கண்டுகொள்ளாமல் "உன்னை மாதிரி சேலை கட்ட உங்க அம்மாவை கூப்பிட வேண்டிய அவசியம் கூட எனக்கில்லை. ஒரு தடவை யூ டியூபில் பார்த்தால் போதும் நல்லா கட்டிவிடுவேன்..! உனக்கு எது வசதி..?எனக்கு ஏதுவாக இருந்தாலும் ஓகே தான். அதுவும் நீ மாட்டேன் என்று சொன்னால் என்னை விட யாரும் சந்தோஷப் பட முடியாது..? எல்லாருக்கும் இப்படி ஒரு அழகான பெண்ணிற்கு சேலை கட்டிவிடும் வாய்ப்பு கிடைக்காது இல்ல" என்றவன் இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு அறையிருந்து வெளியேறினான்.
திகைத்து விழித்தவளுக்கு இப்போது கோபம் வந்து ஒட்டிக்கொண்டது. இன்னும் கொஞ்ச நாளில் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பவன் தன்னிடம் என் இப்படி நடந்து கொள்கிறான் என்று...இருந்தும் அந்த கோபத்தை அவன் முன் காண்பிக்க கொஞ்சமும் தைரியம் இல்லை பெண்ணவளுக்கு. அவன் மீது உள்ள கோபத்தை விட காதல் அதிகம் இருக்க அடுத்தடுத்து என்ன நடக்குமோ என பயத்துடன் நாட்களை கடத்தினாள்.
அன்று அளவுக்கு அதிகமான அலைச்சல் காரணமாக தலைவலி மண்டையை பிளக்க வீட்டிற்குள் நுழைந்தான் மதன்.வெளியே ஒரு மீட்டிங்கிற்காக விக்ரமுடன் சென்றிருக்க சந்தியாவோ எப்போதும் போல் தனது ஸ்கூட்டியில் அவனுக்கு முன்பே வீடு வந்து சேர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்தவுடன் விழிகள் அன்னையை தேட,அவரோ அங்கு இல்லை ஒருவேளை கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என அவனே மனதினுள் நினைத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்து ஒரு புக்கை படித்துக்கொண்டிருந்த சந்தியா,ஒருநிமிடம் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புக்கினுள் தலையை புகுத்திக் கொண்டாள்.
களைத்து போய் வந்தவன் தனது லேப்டாப் பேக்கை உரிய இடத்தில் வைத்துவிட்டு கையில் டவலுடன் அவளை நோக்கி பார்வையை திருப்பியவன் "சந்தியா கொஞ்சம் ஒரு கப் டீ மட்டும் போட்டுகொடு" என்றவாறு குளியலறைக்குள் நுழைந்தவன் களைப்பு தீர குளித்துவிட்டு வெளியே வர அவளோ மெத்தையை விட்டு அகலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு இருந்த தலைவலியில் கோபம் அதிகரிக்க முயன்று தன்னை கட்டுப்படுத்தியன் "சந்தியா உன்கிட்ட தான் கேட்கிறேன் ஒரு டீ போட்டுக்கொடு ரொம்ப தலை வலிக்குது...உன் கோபத்தை அப்பறமா காட்டுடி..?" என பொறுமையாகவே எடுத்து சொல்ல அப்போதும் அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
என்னதான் தன் மேல் கோபம் இருந்தாலும் தனக்கு ஒன்று என்றால் தன்னவள் பதட்டம் கொள்வாள் என காதல் கொண்ட மனம் நினைத்திருக்க... அவளோ அவன் சொன்னதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்தது அவனுக்கு இதுவரை கட்டிக்காத்த பொறுமை காற்றில் பறக்க செய்தது....அவனோ பழைய கோபம் தான் இன்னும் இருக்கிறது என நினைத்திருக்க, ஆனால் அவளோ இன்று காலை நடந்த நிகழ்ச்சியை எண்ணி கோபமாக இருப்பது அவனுக்கு எங்கே தெரிய போகிறது.
காலையில் அலுவலகத்தில் ரொம்ப நேரமாக அவனை காணாமல் எங்க போனான் ஃபைலை எடுத்துகொண்டு அண்ணா ரூமிற்க்கு தானே போனான் இவ்வளவு நேரமாக ஆளையே காணோம்.என்ன தான் கோபமாக அவனிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தாலும் அவனின் அருகாமையில் ஒருவித அறுதலை அடைந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனை பார்த்த ஆகவேண்டும் போல் இருந்தது...வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஒன்றாகவே இருந்தாலும் தற்போது மனம் அவனையே நாட இன்று எப்படியும் அவனிடம் பேசி தங்கள் வாழ்வை தொடங்கலாம் என்ற கனவோடு அவனை தேடி அறையை விட்டு வெளியே வந்தாள்.
பாவம் சனிஸ்வர பகவான் அவனை பார்த்து சிரித்து கொண்டு அவரின் ஆட்டத்தைத் தொடங்க போவது தெரியாமல்….. வர்ஷாவிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான். "சிரி மகனே சிரி..
இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு மட்டும் ஒரு புயல் காத்துக்கொண்டிருக்கிறது" என்ற கடவுளின் வார்த்தை அவன் காதில் விழவில்லை போல எல்லாம் விதி.
அவனை காண வெகுநாட்கள் கழித்து முகத்தில் புன்னகையுடன் கண்களில் காதல் வழிய வெளியே வந்தவளின் காதல் பார்வை கொஞ்ச கொஞ்சமாக கோபப் பார்வையாக மாறியது. விட்டால் பார்வையாலேயே அவனை எரித்துவிடும் ரௌத்திரம் கொண்டு கண்கள் பளபளக்க நின்றிருந்தாள் சந்தியா.
அவனிடம் மொத்தமாக சரணடைய துடித்த மனம் இப்போது பழமை போல் மாறிவிட்டது. இதை அறியாத மதன் வெகு நேரம் வர்ஷாவிடம் பேசிவிட்டு உள்ளே வர அவளின் முறைப்பை கண்டு "
எப்பவும் அப்படிதானே பார்க்கிறாள் இன்றைக்கு மட்டும் மாறிவிடுமா என்ன..? என்றபடி வேலையை தொடங்க….அவளோ அப்போ என் கோபம் அவனை பாதிக்கவில்லையா..? என லூசுத்தனமாக சிந்திக்க தொடங்கினாள்.
இத்தனை நாளும் தான்தான் அவனிடம் கோபம் கொண்டு பேசாமல் முறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து..என்னவோ இதுவரை இருவரும் காதலில் கசிந்துருகி சுற்றிக்கொண்டு இருந்தவர்கள் இன்று தான் முதன்முறை சண்டை போட்டுவிட்டு தன் கோபம் அவனை பாதிக்க வில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டு தொடர்கதையாக தொடர்ந்து விட்டாள்.
இதனை எல்லாம் எண்ணியபடி அமர்ந்திருந்த சந்தியா 'அவகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போது தலைவலி இல்லை இப்போ வீட்டிக்கு வந்ததும் தலைவலிக்குதா உனக்கு..? நல்லா வலிக்கட்டும்' என்ற நினைப்போடு..."எனக்கும் தான் தலைவலிக்குது அப்போ எனக்கு யாரு டீ போட்டு தருவா..? நானே தானே போட்டுக் கொள்கிறேன் அது மாதிரி நீங்களும் போட்டுக் குடிங்க" என்றவள் மீண்டும் புத்தகத்தில் பார்வையை திருப்பினாள்.
மதனின் பொறுமை காற்றில் பறக்க அவள் அருகே வந்தவன் "உன்கிட்ட சத்தியமா இதை எதிர்ப்பார்க்க வில்லை சந்தியா என அழுத்தமாக சொன்னவன்….உனக்கென்ன என் மேல கோபம் நம்ம காதலுக்காக எதையும் செய்யவில்லை என்று தானே..? உனக்கு மூளை இருக்கு தானே... கொஞ்சம் கூட அதை யூஸ் பண்ணவே மாட்டியா..? உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் நீ கூடப் பிறந்த தங்கை தானே..! இல்லை உன்னை உங்க வீட்டில் தவிடுக்கு வாங்கினார்களா..?" என கேட்க...பல்லை கடித்துக்கொண்டு எதையோ சொல்ல வந்தவளை கைநீட்டி தடுத்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
"நீயேன்ன பொம்மையா அப்படியே தூக்கி என் கையில் கொடுக்க..? அறிவு கெட்டவளே நல்லா கேட்டுக்கோ நானே வாய்விட்டு கேட்டதால் மட்டும் தான் உன்னை எனக்கு கட்டிகொடுத்தாங்க..? ஒருவேளை நான் பேசவில்லையேன்றால் உன் கல்யாணம் நின்றிருக்கும் ஆனால் எனக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுத்திருக்க மாட்டார்கள்.
நான் தான் கேட்டேன் உங்க அண்ணன்கள் இருவரிடமும் என்னால சந்தியா இல்லாமல் வாழ முடியாது என்று..,? அன்னைக்கு உன் கல்யாணத்திற்கு ரெண்டு நாட்கள் முன்பு உன் வீட்டில் உன்னை நலங்கு வைக்க அழைத்து வந்தார்களே..! அதுவரை நான் கொண்ட உறுதி மொத்தமும் வீழ்ந்தது அன்றுதான். அதற்கு மேல் ஒருநிமிடம் கூட அங்கே நிற்கமுடியாமல் சென்ற என்னால் ஒரு நொடி கூட நிம்மதியாக மூச்சு விட முடியவில்லை.
எங்கே உன்னை இழந்து விடுவேனோ என்ற எண்ணத்திலேயே அன்றைக்கு இரவு ஒரு பொட்டு கூட தூக்கமில்லாமல் தவித்தேன் அது எனக்கு மட்டும் தான்டி தெரியும்" என்றவன் மேலும் தொடர்ந்தவனாக அப்பறம் ஒரு முடிவோடு காலையில் விக்ரம் ஆதி இருவரையும் வரவைத்து…..
அன்றைக்கு
"டேய் என்னடா... கல்யாண வேலை அவ்வளவு இருக்கு இப்போ எதுக்கு அவசரமாக வர சொன்ன..? என்றபடி அந்த காஃபி ஷாப்பில் மதன் எதிரில் அமர்ந்தான் ஆதி.
அப்போது விக்ரமும் நுழைய இவனையும் எதுக்கு வர சொல்லியிருக்க என்னும் போதே விக்ரம் அருகில் வந்துவிட அவனுக்கும் ஆதியை அங்கே பார்த்தவுடன் அதே கேள்விதான் மனதில் எழுந்தது .
சிறிது நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்த மதனை கலைத்த ஆதி "பேசவேண்டும் என வர சொல்லிவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்" என்க...
அவனோ எப்படி துவங்குவது என தயக்கமாக "அது...அது.." என இழுக்க,
"எங்ககிட்ட சொல்ல என்னடா தயக்கம்" என்க,விக்ரம் அவன் எதை பற்றி பேச போகிறான் என்பதை நன்றாக அறிந்திருந்தவனாக நடப்பதை அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வேடிக்கை பார்த்தான்.
பின்னர் ஒருவாறு தன்னை சமன் செய்த்தவன் அது "நான் சந்தியாவை காதலிக்கிறேன்" என்றான்.இருவரிடமும் அதிர்ச்சியை அல்லது கோபத்தையாவது எதிர்ப்பார்த்த மதனிற்க்கு இருவரின் அமைதியான அதே நேரம் அழுத்தமான பார்வை கண்டு அதை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தான்.
முதலில் தொடர்ந்த ஆதி "இதை நீ நாளைக்கு சொல்லியிருந்தால் இந்நேரம் என் தங்கச்சிக்கு கல்யாணமே முடிந்திருக்கும் என்றவன், கோபமாக காதலை சொல்ல நல்ல நேரம் பார்த்தடா..? இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்..? இப்போ சொல்ல வந்த தைரியம் ஏன் முன்னாடி வரவில்லை" என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க...அவனின் நியாயமான கேள்விக்கு அவனிடம் தான் பதில்லிலாமல் போய்விட்டது.
"சாரிடா... நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்னிடம் பதில்லை,அவளை எவ்வளவோ தவிர்க்க நினைத்தும் முடியவில்லை. எங்கே நீங்க ரெண்டு பேரும் என்னை தப்பாக நினைத்து விடுவிற்களோ என்ற பயம் என்றவன்… ஆனா இப்போ என்னால சத்தியமா முடியலை..? அவள் எனக்கு கிடைக்க மாட்டாளோ என இந்த ஒருநாள் தவிப்பையே என்னால் தாங்க முடியவில்லை. எங்க வாழ்க்கை முழுவதும் அவ இல்லாமல் பைத்தியம் ஆகிவிடுவெனோ என்று பயமா இருக்குடா..? இப்படி கேட்பது தப்பு தான் அதுவும் நாளைக்கு கல்யாணம் என்ற நிலையில் ஆனா எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு டா, எனக்கு என் சந்தியா வேண்டும், அவளை எனக்கே கொடுத்துடுங்களேன்" என தன் நண்பர்களிடம் முதன்முறை தன் காதலுக்காக கெஞ்சினான்.
அதுவரை அமைதியாக இருந்த விக்ரம் மெல்ல வாய்த்திறந்தான்.. "சாரிடா திஸ் இஸ் டூ லேட். நீ முன்பே சொல்லியிருந்தால் கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்..எனக்கும் என் தங்கையுடைய விருப்பம் தான் முக்கியம்,அதுவும் இல்லாமல் நீ என் நண்பனாக இருக்கலாம் ஆனால் ஒரு தனி மனிதனாய் என் தங்கையை திருமணம் செய்ய அனைத்து தகுதியும் உனக்கு இருக்கு. இன்னும் சொல்ல போனால் நாங்க தேடினாலும் உன்னை போல் ஒருவனை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக கொண்டுவர முடியாது தான். ஆனால் காலையில் திருமணம் என்னும் பொழுது என்னால் எதுவும் செய்ய முடியாது. இது நான் மட்டும் முடிவெடுக்க கூடிய விஷயம் இல்லை, இதில் இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது…சோ சாரிடா உன் மனதை மாற்றிக்கொள்வது நல்லது என்றபடி விக்ரம்" எழுந்து சென்றுவிட்டான்.
ஆதியும் "நானும் இதைதான் சொல்ல வந்தேன் என்றவன் சாரிடா, என்றபடி நகர்ந்தவன் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கல்யாணத்திற்கு வராமல் இருக்காதே..?" என்றுவிட்டு அவனும் சென்றுவிட்டான்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
அவள் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமை நோக்கி அந்த புடவையை கொடுத்தவள் "எனக்கு இது வேண்டாம்" என விழிகளில் தேங்கிய கண்ணீரோடு சொல்ல,
அவனோ "ஓ அப்படியா" என்பது போல் புருவங்களை ஏற்றி இறங்கியவன் "உங்கிட்ட நான் வேண்டுமா வேண்டாமா..? என கேட்கவில்லையே….
நீ இதை தான் கல்யாணத்திற்கு கட்டணும் இல்லையென்றால் நடக்கும் சம்பவத்திற்கு நான் பொறுப்பில்லை என அவளை நெருங்கி இதையும் மீறி நீ மாட்டேன் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் நானே கட்டிவிட தொடங்கிவிடுவேன்" என்க,
அவன் சொல்லில் அதிர்ந்து விழித்தவளை கண்டுகொள்ளாமல் "உன்னை மாதிரி சேலை கட்ட உங்க அம்மாவை கூப்பிட வேண்டிய அவசியம் கூட எனக்கில்லை. ஒரு தடவை யூ டியூபில் பார்த்தால் போதும் நல்லா கட்டிவிடுவேன்..! உனக்கு எது வசதி..?எனக்கு ஏதுவாக இருந்தாலும் ஓகே தான். அதுவும் நீ மாட்டேன் என்று சொன்னால் என்னை விட யாரும் சந்தோஷப் பட முடியாது..? எல்லாருக்கும் இப்படி ஒரு அழகான பெண்ணிற்கு சேலை கட்டிவிடும் வாய்ப்பு கிடைக்காது இல்ல" என்றவன் இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு அறையிருந்து வெளியேறினான்.
திகைத்து விழித்தவளுக்கு இப்போது கோபம் வந்து ஒட்டிக்கொண்டது. இன்னும் கொஞ்ச நாளில் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பவன் தன்னிடம் என் இப்படி நடந்து கொள்கிறான் என்று...இருந்தும் அந்த கோபத்தை அவன் முன் காண்பிக்க கொஞ்சமும் தைரியம் இல்லை பெண்ணவளுக்கு. அவன் மீது உள்ள கோபத்தை விட காதல் அதிகம் இருக்க அடுத்தடுத்து என்ன நடக்குமோ என பயத்துடன் நாட்களை கடத்தினாள்.
அன்று அளவுக்கு அதிகமான அலைச்சல் காரணமாக தலைவலி மண்டையை பிளக்க வீட்டிற்குள் நுழைந்தான் மதன்.வெளியே ஒரு மீட்டிங்கிற்காக விக்ரமுடன் சென்றிருக்க சந்தியாவோ எப்போதும் போல் தனது ஸ்கூட்டியில் அவனுக்கு முன்பே வீடு வந்து சேர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்தவுடன் விழிகள் அன்னையை தேட,அவரோ அங்கு இல்லை ஒருவேளை கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என அவனே மனதினுள் நினைத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்து ஒரு புக்கை படித்துக்கொண்டிருந்த சந்தியா,ஒருநிமிடம் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புக்கினுள் தலையை புகுத்திக் கொண்டாள்.
களைத்து போய் வந்தவன் தனது லேப்டாப் பேக்கை உரிய இடத்தில் வைத்துவிட்டு கையில் டவலுடன் அவளை நோக்கி பார்வையை திருப்பியவன் "சந்தியா கொஞ்சம் ஒரு கப் டீ மட்டும் போட்டுகொடு" என்றவாறு குளியலறைக்குள் நுழைந்தவன் களைப்பு தீர குளித்துவிட்டு வெளியே வர அவளோ மெத்தையை விட்டு அகலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு இருந்த தலைவலியில் கோபம் அதிகரிக்க முயன்று தன்னை கட்டுப்படுத்தியன் "சந்தியா உன்கிட்ட தான் கேட்கிறேன் ஒரு டீ போட்டுக்கொடு ரொம்ப தலை வலிக்குது...உன் கோபத்தை அப்பறமா காட்டுடி..?" என பொறுமையாகவே எடுத்து சொல்ல அப்போதும் அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
என்னதான் தன் மேல் கோபம் இருந்தாலும் தனக்கு ஒன்று என்றால் தன்னவள் பதட்டம் கொள்வாள் என காதல் கொண்ட மனம் நினைத்திருக்க... அவளோ அவன் சொன்னதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்தது அவனுக்கு இதுவரை கட்டிக்காத்த பொறுமை காற்றில் பறக்க செய்தது....அவனோ பழைய கோபம் தான் இன்னும் இருக்கிறது என நினைத்திருக்க, ஆனால் அவளோ இன்று காலை நடந்த நிகழ்ச்சியை எண்ணி கோபமாக இருப்பது அவனுக்கு எங்கே தெரிய போகிறது.
காலையில் அலுவலகத்தில் ரொம்ப நேரமாக அவனை காணாமல் எங்க போனான் ஃபைலை எடுத்துகொண்டு அண்ணா ரூமிற்க்கு தானே போனான் இவ்வளவு நேரமாக ஆளையே காணோம்.என்ன தான் கோபமாக அவனிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தாலும் அவனின் அருகாமையில் ஒருவித அறுதலை அடைந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனை பார்த்த ஆகவேண்டும் போல் இருந்தது...வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஒன்றாகவே இருந்தாலும் தற்போது மனம் அவனையே நாட இன்று எப்படியும் அவனிடம் பேசி தங்கள் வாழ்வை தொடங்கலாம் என்ற கனவோடு அவனை தேடி அறையை விட்டு வெளியே வந்தாள்.
பாவம் சனிஸ்வர பகவான் அவனை பார்த்து சிரித்து கொண்டு அவரின் ஆட்டத்தைத் தொடங்க போவது தெரியாமல்….. வர்ஷாவிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான். "சிரி மகனே சிரி..
இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு மட்டும் ஒரு புயல் காத்துக்கொண்டிருக்கிறது" என்ற கடவுளின் வார்த்தை அவன் காதில் விழவில்லை போல எல்லாம் விதி.
அவனை காண வெகுநாட்கள் கழித்து முகத்தில் புன்னகையுடன் கண்களில் காதல் வழிய வெளியே வந்தவளின் காதல் பார்வை கொஞ்ச கொஞ்சமாக கோபப் பார்வையாக மாறியது. விட்டால் பார்வையாலேயே அவனை எரித்துவிடும் ரௌத்திரம் கொண்டு கண்கள் பளபளக்க நின்றிருந்தாள் சந்தியா.
அவனிடம் மொத்தமாக சரணடைய துடித்த மனம் இப்போது பழமை போல் மாறிவிட்டது. இதை அறியாத மதன் வெகு நேரம் வர்ஷாவிடம் பேசிவிட்டு உள்ளே வர அவளின் முறைப்பை கண்டு "
எப்பவும் அப்படிதானே பார்க்கிறாள் இன்றைக்கு மட்டும் மாறிவிடுமா என்ன..? என்றபடி வேலையை தொடங்க….அவளோ அப்போ என் கோபம் அவனை பாதிக்கவில்லையா..? என லூசுத்தனமாக சிந்திக்க தொடங்கினாள்.
இத்தனை நாளும் தான்தான் அவனிடம் கோபம் கொண்டு பேசாமல் முறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து..என்னவோ இதுவரை இருவரும் காதலில் கசிந்துருகி சுற்றிக்கொண்டு இருந்தவர்கள் இன்று தான் முதன்முறை சண்டை போட்டுவிட்டு தன் கோபம் அவனை பாதிக்க வில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டு தொடர்கதையாக தொடர்ந்து விட்டாள்.
இதனை எல்லாம் எண்ணியபடி அமர்ந்திருந்த சந்தியா 'அவகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போது தலைவலி இல்லை இப்போ வீட்டிக்கு வந்ததும் தலைவலிக்குதா உனக்கு..? நல்லா வலிக்கட்டும்' என்ற நினைப்போடு..."எனக்கும் தான் தலைவலிக்குது அப்போ எனக்கு யாரு டீ போட்டு தருவா..? நானே தானே போட்டுக் கொள்கிறேன் அது மாதிரி நீங்களும் போட்டுக் குடிங்க" என்றவள் மீண்டும் புத்தகத்தில் பார்வையை திருப்பினாள்.
மதனின் பொறுமை காற்றில் பறக்க அவள் அருகே வந்தவன் "உன்கிட்ட சத்தியமா இதை எதிர்ப்பார்க்க வில்லை சந்தியா என அழுத்தமாக சொன்னவன்….உனக்கென்ன என் மேல கோபம் நம்ம காதலுக்காக எதையும் செய்யவில்லை என்று தானே..? உனக்கு மூளை இருக்கு தானே... கொஞ்சம் கூட அதை யூஸ் பண்ணவே மாட்டியா..? உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் நீ கூடப் பிறந்த தங்கை தானே..! இல்லை உன்னை உங்க வீட்டில் தவிடுக்கு வாங்கினார்களா..?" என கேட்க...பல்லை கடித்துக்கொண்டு எதையோ சொல்ல வந்தவளை கைநீட்டி தடுத்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
"நீயேன்ன பொம்மையா அப்படியே தூக்கி என் கையில் கொடுக்க..? அறிவு கெட்டவளே நல்லா கேட்டுக்கோ நானே வாய்விட்டு கேட்டதால் மட்டும் தான் உன்னை எனக்கு கட்டிகொடுத்தாங்க..? ஒருவேளை நான் பேசவில்லையேன்றால் உன் கல்யாணம் நின்றிருக்கும் ஆனால் எனக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுத்திருக்க மாட்டார்கள்.
நான் தான் கேட்டேன் உங்க அண்ணன்கள் இருவரிடமும் என்னால சந்தியா இல்லாமல் வாழ முடியாது என்று..,? அன்னைக்கு உன் கல்யாணத்திற்கு ரெண்டு நாட்கள் முன்பு உன் வீட்டில் உன்னை நலங்கு வைக்க அழைத்து வந்தார்களே..! அதுவரை நான் கொண்ட உறுதி மொத்தமும் வீழ்ந்தது அன்றுதான். அதற்கு மேல் ஒருநிமிடம் கூட அங்கே நிற்கமுடியாமல் சென்ற என்னால் ஒரு நொடி கூட நிம்மதியாக மூச்சு விட முடியவில்லை.
எங்கே உன்னை இழந்து விடுவேனோ என்ற எண்ணத்திலேயே அன்றைக்கு இரவு ஒரு பொட்டு கூட தூக்கமில்லாமல் தவித்தேன் அது எனக்கு மட்டும் தான்டி தெரியும்" என்றவன் மேலும் தொடர்ந்தவனாக அப்பறம் ஒரு முடிவோடு காலையில் விக்ரம் ஆதி இருவரையும் வரவைத்து…..
அன்றைக்கு
"டேய் என்னடா... கல்யாண வேலை அவ்வளவு இருக்கு இப்போ எதுக்கு அவசரமாக வர சொன்ன..? என்றபடி அந்த காஃபி ஷாப்பில் மதன் எதிரில் அமர்ந்தான் ஆதி.
அப்போது விக்ரமும் நுழைய இவனையும் எதுக்கு வர சொல்லியிருக்க என்னும் போதே விக்ரம் அருகில் வந்துவிட அவனுக்கும் ஆதியை அங்கே பார்த்தவுடன் அதே கேள்விதான் மனதில் எழுந்தது .
சிறிது நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்த மதனை கலைத்த ஆதி "பேசவேண்டும் என வர சொல்லிவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்" என்க...
அவனோ எப்படி துவங்குவது என தயக்கமாக "அது...அது.." என இழுக்க,
"எங்ககிட்ட சொல்ல என்னடா தயக்கம்" என்க,விக்ரம் அவன் எதை பற்றி பேச போகிறான் என்பதை நன்றாக அறிந்திருந்தவனாக நடப்பதை அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வேடிக்கை பார்த்தான்.
பின்னர் ஒருவாறு தன்னை சமன் செய்த்தவன் அது "நான் சந்தியாவை காதலிக்கிறேன்" என்றான்.இருவரிடமும் அதிர்ச்சியை அல்லது கோபத்தையாவது எதிர்ப்பார்த்த மதனிற்க்கு இருவரின் அமைதியான அதே நேரம் அழுத்தமான பார்வை கண்டு அதை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தான்.
முதலில் தொடர்ந்த ஆதி "இதை நீ நாளைக்கு சொல்லியிருந்தால் இந்நேரம் என் தங்கச்சிக்கு கல்யாணமே முடிந்திருக்கும் என்றவன், கோபமாக காதலை சொல்ல நல்ல நேரம் பார்த்தடா..? இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்..? இப்போ சொல்ல வந்த தைரியம் ஏன் முன்னாடி வரவில்லை" என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க...அவனின் நியாயமான கேள்விக்கு அவனிடம் தான் பதில்லிலாமல் போய்விட்டது.
"சாரிடா... நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்னிடம் பதில்லை,அவளை எவ்வளவோ தவிர்க்க நினைத்தும் முடியவில்லை. எங்கே நீங்க ரெண்டு பேரும் என்னை தப்பாக நினைத்து விடுவிற்களோ என்ற பயம் என்றவன்… ஆனா இப்போ என்னால சத்தியமா முடியலை..? அவள் எனக்கு கிடைக்க மாட்டாளோ என இந்த ஒருநாள் தவிப்பையே என்னால் தாங்க முடியவில்லை. எங்க வாழ்க்கை முழுவதும் அவ இல்லாமல் பைத்தியம் ஆகிவிடுவெனோ என்று பயமா இருக்குடா..? இப்படி கேட்பது தப்பு தான் அதுவும் நாளைக்கு கல்யாணம் என்ற நிலையில் ஆனா எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு டா, எனக்கு என் சந்தியா வேண்டும், அவளை எனக்கே கொடுத்துடுங்களேன்" என தன் நண்பர்களிடம் முதன்முறை தன் காதலுக்காக கெஞ்சினான்.
அதுவரை அமைதியாக இருந்த விக்ரம் மெல்ல வாய்த்திறந்தான்.. "சாரிடா திஸ் இஸ் டூ லேட். நீ முன்பே சொல்லியிருந்தால் கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்..எனக்கும் என் தங்கையுடைய விருப்பம் தான் முக்கியம்,அதுவும் இல்லாமல் நீ என் நண்பனாக இருக்கலாம் ஆனால் ஒரு தனி மனிதனாய் என் தங்கையை திருமணம் செய்ய அனைத்து தகுதியும் உனக்கு இருக்கு. இன்னும் சொல்ல போனால் நாங்க தேடினாலும் உன்னை போல் ஒருவனை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக கொண்டுவர முடியாது தான். ஆனால் காலையில் திருமணம் என்னும் பொழுது என்னால் எதுவும் செய்ய முடியாது. இது நான் மட்டும் முடிவெடுக்க கூடிய விஷயம் இல்லை, இதில் இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது…சோ சாரிடா உன் மனதை மாற்றிக்கொள்வது நல்லது என்றபடி விக்ரம்" எழுந்து சென்றுவிட்டான்.
ஆதியும் "நானும் இதைதான் சொல்ல வந்தேன் என்றவன் சாரிடா, என்றபடி நகர்ந்தவன் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கல்யாணத்திற்கு வராமல் இருக்காதே..?" என்றுவிட்டு அவனும் சென்றுவிட்டான்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்