அத்தியாயம் - 28
"அத்தான் பொய் தானே சொல்றீங்க..? உண்மையை சொல்லுங்க, நானா காரணம்" என விழிகள் குளமிட அவன் மீதே பார்வையை செலுத்திய வண்ணம் "ஆம்" என்று மட்டும் சொல்லிவிடாதே என்பது போல் பார்க்க..அவனோ அவள் விரும்பாத பதிலை தான் சொன்னான்.
அவளோ "ஏன் நான் என்ன பண்ணினேன்" என எவ்வளவு யோசித்தும் விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க...அவன் தன் குரலை செருமியபடி சொல்ல தொடங்கினான்.
ஆதி விக்ரம் இருவரும் உடன் பிறந்த இரட்டையர்களாக இருந்ததாலும் இருவரின் குணாதிசயங்களும் வெவ்வேறாகவே இருந்தது. ஆதி சிறுவயது முதலே எந்த சூழலையும் நிதானமாக கையாளுபவன்,எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேசியே சரி செய்ய முயல்வான்.ஆனால் விக்ரம் அதற்கு நேரெதிராக...கோபமே முதன்மையாக இருக்கும்.ஆனால் எவ்வளவு கோபத்திலும் தன் நிதானத்தை இழக்க மாட்டான்,அதேநேரம் கையில் எடுத்த வேலையை முடிக்காமல் விடவும் மாட்டான்.
ஆதி யாராக இருந்தாலும் சட்டென்று பேசி பழகிவிடுவான்,அதனாலேயே அவனின் நட்பு வட்டம் மிகவும் பெரியது.விக்ரமிற்கும் நண்பர்கள் இருந்தாலும் அது மிக குறைவே, மதன் மட்டுமே இருவருக்கும் பொதுவுடமையாகி போனான்.
எது எப்படி இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சொல்ல போனால் பார்க்கும் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் ஒற்றுமையாக, எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.
இருவருக்குள்ளும் சகோதரர்களுக்கு உரிய அன்பு ஒற்றுமை இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு புரிதலை முதன்முறை உணர்ந்த தருணம் அன்றைய தினம் தான். இருவரும் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க,வழக்கம் போல் ஸ்கூல் முடிந்தவுடன் கிரவுண்டில் விக்ரம் பஸ்கட் பால் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆதி அடுத்த நாள் செய்யவேண்டிய அசைன்மெண்ட்க்காக லைப்ரரியில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க.. மதன் ஆதியோடு இருக்க விக்ரம் தணித்து தன் டீமோடு இருந்தான்.
மதனோ ஆதியை திட்டிக் கொண்டே நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான் "ஏண்டா நீ பெரிய படிப்பீஸ்ட் தான் ஒத்துக்கிறேன், அதுக்காக என்னையும் இப்படி விளையாடவிடாமல் கொடுமை படுத்துற" என்க
" தினமும் தானே விளையாட போறோம்,ஒருநாள் உன்னால போகாமல் இருக்க முடியாதா….மரியாதையா நோட்ஸ் எடு இல்லனா கழுத்தை நெரித்து கொன்றுவிடுவேன்" என்றவன் புத்தகத்தில் கவனம் செலுத்த மதனும் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான்.
"நானெல்லாம் ஸ்கூல் ஒர்கிங் டைமில் கூட இப்படி படிக்கமாட்டேன் என்னை போய் இப்படி ஓவர்டைம் படிக்க வைக்கிறானே.. எல்லாம் விதி" என்றபடி புத்தகத்தை புரட்டினான்.
அப்போது கிரவுண்டில் விளையாடி கொண்டிருந்த விக்ரமை பார்த்து "எப்போதும் இவனால் தான்டா நாம தோற்றுப் போகிறோம், நாமதான் அவனைவிட சீனியர் அப்படியிருந்தும் அவனை செயிக்க முடியவில்லை" என்ற கோபத்தில் எதிர் அணியை சேர்ந்த மாணவர்கள் வேண்டுமென்றே அவனை அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் கைப்பந்து ஆட்டத்தில் கலந்துக்கொள்ள கூடாது என்று திட்டம் தீட்டினர்.
வேகமாக ஓடி வந்து பந்தை கூடையில் போட்டுவிட்டு காலை கீழே வைக்கும் வேளை விக்ரமின் காலை இடறிவிட... இதை கொஞ்சமும் எதிர்பாராத விக்ரம் எகிறிக் குதித்ததினால் பிடிமானம் இன்றி கீழே விழுந்தான்.
நெற்றியிலும்,முழங்கை மற்றும் முழங்கால் முட்டியிலும் அடிப்பட்டு இரத்தம் வர எழ முடியாமல் தவித்தவன் நிமிர்ந்து பார்க்க..தட்டிவிட்டவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
அப்போதே புரிந்துகொண்டான் இது தெரியாமல் நடந்த விஷயமில்லை வேண்டுமென்றே தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்று. உயிர்ப் போகும் வலியை உணர்ந்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வரவில்லை.அவனும் பள்ளி செல்லும் சிறுவன் தான் வலிக்காமல் இருக்க அபூர்வ பிறவி ஒன்றுமில்லையே ஆனால் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் முன்பு அழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான்.
அதேநேரம் இங்கே லைப்ரரியில் அமர்ந்திருந்த ஆதிக்கு என்னவோ போல் இருந்தது...உடல் லேசாக வியர்க்க தொடங்க இதயம் தன் துடிப்பை அதிகமாக்கியது. அவனுக்குள் என்ன நேர்கிறது என உணர முடியாத வயதில் இருப்பவனுக்கு ஏதோ சரியில்லை சரியில்லை என மனம் அடித்துக்கொண்டது.
அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியது விக்ரமின் முகமே….ஏன் அவன் முகம் தோன்றுகிறது என எண்ணியவன் அனைத்தையும் ஒன்றாக கோர்த்துப் பார்க்க விக்ரமிற்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்தது.
புரிந்த நொடி சற்றுநேரம் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் உறைந்து நின்றான்.விக்ரம் ஒன்றும் வெகுதூரத்தில் இல்லை லைப்ரரிக்கு வெளியே சென்றால் போதும் அவனால் ஸ்கூல் கிரவுண்ட் மொத்தத்தையும் பார்க்க முடியும் இருந்தாலும் முதன்முறை ஏற்ப்பட்ட மாற்றத்தால் அப்படி உறைந்து நின்றவன், சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு
மதனை நோக்கி " வாடா போகலாம்" என்க...
அவனோ அப்போது தான் ஆர்வமாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
"ஏண்டா நான் போகலாம் என சொன்னபோது முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது படிக்கும் மூட் வரும்போது போகலாம் என்கிறாய்" என்று காய்ந்தவனை பதட்டத்துடன் பார்த்து
"விளையாடாத டா சீக்கிரம் வா விக்ரமிற்கு ஏதோ ஆகிவிட்டது போல் இருக்கு" என படப்படக்க.. அவன் முகத்தை பார்த்து விளையாட்டை கைவிட்டவன் ,
"உனக்கு எப்படிடா தெரியும் அவன் வெளியே இருக்கான், நம்ம இங்க இருக்கோம்" என புரியாமல் கேட்க...
அவனோ "அதெல்லாம் அப்பறம் சொல்றேன் முதலில் வா" என அவனை இழுத்துக்கொண்டு கைப்பந்து விளையாடும் இடத்தை நோக்கி நடையை எட்டிப்போட,அங்கே அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்த ஆதி மதனின் கையை விட்டுவிட்டு ஓட தொடங்கினான். அவனின் ஓட்டத்தை பார்த்த மதனும் அவனை பின் தொடர்ந்து ஓடினான்.
அங்கே கூட்டத்தை விளக்கி உள்ளே சென்ற ஆதி பார்த்தது அடிப்பட்டு இரத்தம் சொட்ட நின்ற விக்ரமை தான்.
விக்ரம் "என்னடா ஆச்சு" என்றபடி தன் கைக்குட்டையால் நெற்றியில் கட்டிட்டவன்,மதனின் கைக்குட்டையை வாங்கி கையில் கட்டியபடி,
"மதன் நீ போய் ஆபீஸில் யாராவது ஸ்டாஃப் இருந்தால் அப்பாவுக்கு கால் பண்ணு" என்றவன் கூட்டத்தை கலைத்து...குடிக்க தண்ணீர் கொடுத்தவன்
"ரொம்ப வலிக்குதாடா" என்றபடி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க.. சிறிது நேரத்தில் அவனின் தந்தையும் வந்துவிட்டார். அதன்பின் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றவன் வீடு வந்து சேர...அதற்குள் அனைவரும் அவனுக்கு அடிப்பட்ட விஷயம் கேட்டு பதட்டத்துடன் காத்திருந்தனர்.
நந்தினியின் வீடும் அருகிலேயே இருக்க,அவர்களுக்கு வாரம் சனி ஞாயிறு இங்கே தான்.அவர்களும் அவனை காண வந்திருக்க அனைவரின் நல விசாரிப்புக்குக்கு பிறகு தன் அறைக்கு வந்தவனுக்கு அவன் அன்னை உணவை ஊட்டிவிட்டு மருந்து கொடுத்துவிட்டு செல்ல… அவனும் டிவியை ஆன் செய்துவிட்டு அமர்ந்தான்.
சற்று நேரத்தில் ஆதியும் மதனும் வர….அவனிடம் எப்படி அடிப்பட்டது என கேட்டும், கீழே விழுந்துவிட்டேன் என்பதை தவிர எதுவும் சொல்லவில்லை.
பின்னர் விக்ரம் ஆதியை பார்த்து "உனக்கு எப்படிடா தெரியும், யாரு சொன்னது எனக்கு அடிப்பட்டு விட்டது என்று" என கேட்க,
ஆதியும் தனக்கு நேர்ந்த மாற்றத்தை சொல்ல அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாத நிலையில் இருந்தான். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களும் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சென்றுவிட...அவனும் உறங்கலாம் என நினைத்த வேளை அவன் அறைக்குள் ஒரு தலை மட்டும் எட்டிப் பார்த்தது.
"ஏய் வாலு... இங்க என்ன பண்ற ?" என்றவனின் குரலில்
"அய்யய்யோ பார்த்துட்டாங்களா" என்றபடி உள்ளே வந்த நந்தினி, அவனை நெருங்கி கால் கட்டை பார்த்தபடி "உங்களுக்கு அடிப்பட்டு விட்டதா அத்தான்" என்க..
அவனும் தலையை மட்டும் " ம்ம் " என ஆட்ட,மெல்ல அவளின் பிஞ்சு கைவிரல்களால் கால் கட்டினை வருடி
"உங்களுக்கு வலிக்குதா ?" என்றவள் உதடு குவித்து ஊதியவாறே "இப்படி பண்ணா வலி போய்டும் எனக்கு அடிபட்டா அம்மா இப்படிதான் பண்ணுவாங்க" என்றவளின் கண்களில் கண்ணீரை கண்டவன்,
அவளை தன் அருகில் அழைத்து "எதுக்கு அழற" என்க
அவளோ சட்டென்று "உங்களுக்கு வலிக்கும் தானே அதான்" என்றாள்.
அந்த பதில் அவனுக்கு ஆச்சிரியதையும் வியப்பையும் கொடுத்தாலும் பிடித்துத் தான் இருந்தது. அவள் முகம் தாங்கி கண்ணீரை துடைத்தவன்
"அதெல்லாம் இப்போ வலியில்லை டாக்டர் ஊசி போட்டாங்க சரியாகிவிட்டது" என்றவனை பார்த்து,
"அய்யய்யோ ஊசி போட்டாங்காளா ? நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க நான் படிச்சி டாக்டர் ஆகி உங்களுக்கு ஊசி போடாமால் இனிப்பா இருக்குற மருந்து மட்டும் தரேன்" என்றவளின் கன்னம் பற்றி கிள்ளியவன்
"வாயாடி... போய் சாப்பிட்டுவிட்டு தூங்கு" என அனுப்பி வைத்தான்.
"அமுல் பேபி வரவர ஓவரா பேசுற" என்று நினைத்தபடி உறங்க சென்றான்.
விக்ரம் தன் இயல்பை மீறி கெஞ்சிக் கொஞ்சி பேசும் ஒரே ஜீவன் நந்தினி மட்டுமே..சிறுவயதில் இருந்தே அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென்று தன் குண்டு கன்னங்களோடு "விக்ரம் அத்தான்" என மழலை குரலில் சொல்லும் தன் அத்தை மகளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இருவரையும் பெயர் சொல்லியே அழைத்தவளை,
விக்ரம் தான் " நான் உன்னை விட ரொம்ப பெரியவன் ஒழுங்கா அத்தான் என்று கூப்பிடு அதுதான் முறையாம்... அமெரிக்கா பாட்டி சொன்னாங்க. நந்தனா ஸ்வேதாவை கூட அப்படித்தான் கூப்பிட சொன்னாங்க,அவங்க அப்படி கூப்பிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. "நீ அப்படி கூப்பிடு செல்லக்குட்டி" என எட்டுவயது சிறுமியிடம் பன்னிரெண்டு வயது விக்ரம் கெஞ்சிக் கொண்டிருக்க,
அவளோ "மாட்டேன் பெயர் சொல்லிதான் கூப்பிடுவேன், அது தான் எனக்கு பிடித்திருக்கு" என அடம்பிடிக்க..
அவனோ "அப்போ இனிமேல் என்கிட்ட பேசாதே" என்றவன், ஒரு வாரம் அவளிடம் பேசாமல் அவள் பெயர் சொல்லி அழைக்கும் போது கண்டுகொள்ளாதவன் போல் இருக்க, பின்னர் அவள்தான் தன் பிடிவாதத்தை கைவிட்டு "விக்ரம் அத்தான்" என அழைக்க நேர்ந்தது.
ஆதிக்கு அவள் பெயர் சொல்லி கூப்பிடுவது தான் பிடிக்கும் என்பதால்,அதன் பின் எப்போதும் அத்தான் என்ற வார்த்தை விக்ரமிற்கு மட்டுமே ஏகபோக உரிமை ஆகிவிட்டது.அவள் அத்தான் என கூப்பிடும் நபர் இந்த உலகில் அவன் மட்டுமே ஆகிப்போனான்.
"அத்தான் பொய் தானே சொல்றீங்க..? உண்மையை சொல்லுங்க, நானா காரணம்" என விழிகள் குளமிட அவன் மீதே பார்வையை செலுத்திய வண்ணம் "ஆம்" என்று மட்டும் சொல்லிவிடாதே என்பது போல் பார்க்க..அவனோ அவள் விரும்பாத பதிலை தான் சொன்னான்.
அவளோ "ஏன் நான் என்ன பண்ணினேன்" என எவ்வளவு யோசித்தும் விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க...அவன் தன் குரலை செருமியபடி சொல்ல தொடங்கினான்.
ஆதி விக்ரம் இருவரும் உடன் பிறந்த இரட்டையர்களாக இருந்ததாலும் இருவரின் குணாதிசயங்களும் வெவ்வேறாகவே இருந்தது. ஆதி சிறுவயது முதலே எந்த சூழலையும் நிதானமாக கையாளுபவன்,எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேசியே சரி செய்ய முயல்வான்.ஆனால் விக்ரம் அதற்கு நேரெதிராக...கோபமே முதன்மையாக இருக்கும்.ஆனால் எவ்வளவு கோபத்திலும் தன் நிதானத்தை இழக்க மாட்டான்,அதேநேரம் கையில் எடுத்த வேலையை முடிக்காமல் விடவும் மாட்டான்.
ஆதி யாராக இருந்தாலும் சட்டென்று பேசி பழகிவிடுவான்,அதனாலேயே அவனின் நட்பு வட்டம் மிகவும் பெரியது.விக்ரமிற்கும் நண்பர்கள் இருந்தாலும் அது மிக குறைவே, மதன் மட்டுமே இருவருக்கும் பொதுவுடமையாகி போனான்.
எது எப்படி இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சொல்ல போனால் பார்க்கும் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் ஒற்றுமையாக, எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.
இருவருக்குள்ளும் சகோதரர்களுக்கு உரிய அன்பு ஒற்றுமை இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு புரிதலை முதன்முறை உணர்ந்த தருணம் அன்றைய தினம் தான். இருவரும் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க,வழக்கம் போல் ஸ்கூல் முடிந்தவுடன் கிரவுண்டில் விக்ரம் பஸ்கட் பால் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆதி அடுத்த நாள் செய்யவேண்டிய அசைன்மெண்ட்க்காக லைப்ரரியில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க.. மதன் ஆதியோடு இருக்க விக்ரம் தணித்து தன் டீமோடு இருந்தான்.
மதனோ ஆதியை திட்டிக் கொண்டே நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான் "ஏண்டா நீ பெரிய படிப்பீஸ்ட் தான் ஒத்துக்கிறேன், அதுக்காக என்னையும் இப்படி விளையாடவிடாமல் கொடுமை படுத்துற" என்க
" தினமும் தானே விளையாட போறோம்,ஒருநாள் உன்னால போகாமல் இருக்க முடியாதா….மரியாதையா நோட்ஸ் எடு இல்லனா கழுத்தை நெரித்து கொன்றுவிடுவேன்" என்றவன் புத்தகத்தில் கவனம் செலுத்த மதனும் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான்.
"நானெல்லாம் ஸ்கூல் ஒர்கிங் டைமில் கூட இப்படி படிக்கமாட்டேன் என்னை போய் இப்படி ஓவர்டைம் படிக்க வைக்கிறானே.. எல்லாம் விதி" என்றபடி புத்தகத்தை புரட்டினான்.
அப்போது கிரவுண்டில் விளையாடி கொண்டிருந்த விக்ரமை பார்த்து "எப்போதும் இவனால் தான்டா நாம தோற்றுப் போகிறோம், நாமதான் அவனைவிட சீனியர் அப்படியிருந்தும் அவனை செயிக்க முடியவில்லை" என்ற கோபத்தில் எதிர் அணியை சேர்ந்த மாணவர்கள் வேண்டுமென்றே அவனை அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் கைப்பந்து ஆட்டத்தில் கலந்துக்கொள்ள கூடாது என்று திட்டம் தீட்டினர்.
வேகமாக ஓடி வந்து பந்தை கூடையில் போட்டுவிட்டு காலை கீழே வைக்கும் வேளை விக்ரமின் காலை இடறிவிட... இதை கொஞ்சமும் எதிர்பாராத விக்ரம் எகிறிக் குதித்ததினால் பிடிமானம் இன்றி கீழே விழுந்தான்.
நெற்றியிலும்,முழங்கை மற்றும் முழங்கால் முட்டியிலும் அடிப்பட்டு இரத்தம் வர எழ முடியாமல் தவித்தவன் நிமிர்ந்து பார்க்க..தட்டிவிட்டவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான்.
அப்போதே புரிந்துகொண்டான் இது தெரியாமல் நடந்த விஷயமில்லை வேண்டுமென்றே தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்று. உயிர்ப் போகும் வலியை உணர்ந்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வரவில்லை.அவனும் பள்ளி செல்லும் சிறுவன் தான் வலிக்காமல் இருக்க அபூர்வ பிறவி ஒன்றுமில்லையே ஆனால் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் முன்பு அழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான்.
அதேநேரம் இங்கே லைப்ரரியில் அமர்ந்திருந்த ஆதிக்கு என்னவோ போல் இருந்தது...உடல் லேசாக வியர்க்க தொடங்க இதயம் தன் துடிப்பை அதிகமாக்கியது. அவனுக்குள் என்ன நேர்கிறது என உணர முடியாத வயதில் இருப்பவனுக்கு ஏதோ சரியில்லை சரியில்லை என மனம் அடித்துக்கொண்டது.
அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியது விக்ரமின் முகமே….ஏன் அவன் முகம் தோன்றுகிறது என எண்ணியவன் அனைத்தையும் ஒன்றாக கோர்த்துப் பார்க்க விக்ரமிற்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்தது.
புரிந்த நொடி சற்றுநேரம் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் உறைந்து நின்றான்.விக்ரம் ஒன்றும் வெகுதூரத்தில் இல்லை லைப்ரரிக்கு வெளியே சென்றால் போதும் அவனால் ஸ்கூல் கிரவுண்ட் மொத்தத்தையும் பார்க்க முடியும் இருந்தாலும் முதன்முறை ஏற்ப்பட்ட மாற்றத்தால் அப்படி உறைந்து நின்றவன், சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு
மதனை நோக்கி " வாடா போகலாம்" என்க...
அவனோ அப்போது தான் ஆர்வமாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.
"ஏண்டா நான் போகலாம் என சொன்னபோது முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது படிக்கும் மூட் வரும்போது போகலாம் என்கிறாய்" என்று காய்ந்தவனை பதட்டத்துடன் பார்த்து
"விளையாடாத டா சீக்கிரம் வா விக்ரமிற்கு ஏதோ ஆகிவிட்டது போல் இருக்கு" என படப்படக்க.. அவன் முகத்தை பார்த்து விளையாட்டை கைவிட்டவன் ,
"உனக்கு எப்படிடா தெரியும் அவன் வெளியே இருக்கான், நம்ம இங்க இருக்கோம்" என புரியாமல் கேட்க...
அவனோ "அதெல்லாம் அப்பறம் சொல்றேன் முதலில் வா" என அவனை இழுத்துக்கொண்டு கைப்பந்து விளையாடும் இடத்தை நோக்கி நடையை எட்டிப்போட,அங்கே அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்த ஆதி மதனின் கையை விட்டுவிட்டு ஓட தொடங்கினான். அவனின் ஓட்டத்தை பார்த்த மதனும் அவனை பின் தொடர்ந்து ஓடினான்.
அங்கே கூட்டத்தை விளக்கி உள்ளே சென்ற ஆதி பார்த்தது அடிப்பட்டு இரத்தம் சொட்ட நின்ற விக்ரமை தான்.
விக்ரம் "என்னடா ஆச்சு" என்றபடி தன் கைக்குட்டையால் நெற்றியில் கட்டிட்டவன்,மதனின் கைக்குட்டையை வாங்கி கையில் கட்டியபடி,
"மதன் நீ போய் ஆபீஸில் யாராவது ஸ்டாஃப் இருந்தால் அப்பாவுக்கு கால் பண்ணு" என்றவன் கூட்டத்தை கலைத்து...குடிக்க தண்ணீர் கொடுத்தவன்
"ரொம்ப வலிக்குதாடா" என்றபடி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க.. சிறிது நேரத்தில் அவனின் தந்தையும் வந்துவிட்டார். அதன்பின் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றவன் வீடு வந்து சேர...அதற்குள் அனைவரும் அவனுக்கு அடிப்பட்ட விஷயம் கேட்டு பதட்டத்துடன் காத்திருந்தனர்.
நந்தினியின் வீடும் அருகிலேயே இருக்க,அவர்களுக்கு வாரம் சனி ஞாயிறு இங்கே தான்.அவர்களும் அவனை காண வந்திருக்க அனைவரின் நல விசாரிப்புக்குக்கு பிறகு தன் அறைக்கு வந்தவனுக்கு அவன் அன்னை உணவை ஊட்டிவிட்டு மருந்து கொடுத்துவிட்டு செல்ல… அவனும் டிவியை ஆன் செய்துவிட்டு அமர்ந்தான்.
சற்று நேரத்தில் ஆதியும் மதனும் வர….அவனிடம் எப்படி அடிப்பட்டது என கேட்டும், கீழே விழுந்துவிட்டேன் என்பதை தவிர எதுவும் சொல்லவில்லை.
பின்னர் விக்ரம் ஆதியை பார்த்து "உனக்கு எப்படிடா தெரியும், யாரு சொன்னது எனக்கு அடிப்பட்டு விட்டது என்று" என கேட்க,
ஆதியும் தனக்கு நேர்ந்த மாற்றத்தை சொல்ல அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாத நிலையில் இருந்தான். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களும் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சென்றுவிட...அவனும் உறங்கலாம் என நினைத்த வேளை அவன் அறைக்குள் ஒரு தலை மட்டும் எட்டிப் பார்த்தது.
"ஏய் வாலு... இங்க என்ன பண்ற ?" என்றவனின் குரலில்
"அய்யய்யோ பார்த்துட்டாங்களா" என்றபடி உள்ளே வந்த நந்தினி, அவனை நெருங்கி கால் கட்டை பார்த்தபடி "உங்களுக்கு அடிப்பட்டு விட்டதா அத்தான்" என்க..
அவனும் தலையை மட்டும் " ம்ம் " என ஆட்ட,மெல்ல அவளின் பிஞ்சு கைவிரல்களால் கால் கட்டினை வருடி
"உங்களுக்கு வலிக்குதா ?" என்றவள் உதடு குவித்து ஊதியவாறே "இப்படி பண்ணா வலி போய்டும் எனக்கு அடிபட்டா அம்மா இப்படிதான் பண்ணுவாங்க" என்றவளின் கண்களில் கண்ணீரை கண்டவன்,
அவளை தன் அருகில் அழைத்து "எதுக்கு அழற" என்க
அவளோ சட்டென்று "உங்களுக்கு வலிக்கும் தானே அதான்" என்றாள்.
அந்த பதில் அவனுக்கு ஆச்சிரியதையும் வியப்பையும் கொடுத்தாலும் பிடித்துத் தான் இருந்தது. அவள் முகம் தாங்கி கண்ணீரை துடைத்தவன்
"அதெல்லாம் இப்போ வலியில்லை டாக்டர் ஊசி போட்டாங்க சரியாகிவிட்டது" என்றவனை பார்த்து,
"அய்யய்யோ ஊசி போட்டாங்காளா ? நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க நான் படிச்சி டாக்டர் ஆகி உங்களுக்கு ஊசி போடாமால் இனிப்பா இருக்குற மருந்து மட்டும் தரேன்" என்றவளின் கன்னம் பற்றி கிள்ளியவன்
"வாயாடி... போய் சாப்பிட்டுவிட்டு தூங்கு" என அனுப்பி வைத்தான்.
"அமுல் பேபி வரவர ஓவரா பேசுற" என்று நினைத்தபடி உறங்க சென்றான்.
விக்ரம் தன் இயல்பை மீறி கெஞ்சிக் கொஞ்சி பேசும் ஒரே ஜீவன் நந்தினி மட்டுமே..சிறுவயதில் இருந்தே அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென்று தன் குண்டு கன்னங்களோடு "விக்ரம் அத்தான்" என மழலை குரலில் சொல்லும் தன் அத்தை மகளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இருவரையும் பெயர் சொல்லியே அழைத்தவளை,
விக்ரம் தான் " நான் உன்னை விட ரொம்ப பெரியவன் ஒழுங்கா அத்தான் என்று கூப்பிடு அதுதான் முறையாம்... அமெரிக்கா பாட்டி சொன்னாங்க. நந்தனா ஸ்வேதாவை கூட அப்படித்தான் கூப்பிட சொன்னாங்க,அவங்க அப்படி கூப்பிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. "நீ அப்படி கூப்பிடு செல்லக்குட்டி" என எட்டுவயது சிறுமியிடம் பன்னிரெண்டு வயது விக்ரம் கெஞ்சிக் கொண்டிருக்க,
அவளோ "மாட்டேன் பெயர் சொல்லிதான் கூப்பிடுவேன், அது தான் எனக்கு பிடித்திருக்கு" என அடம்பிடிக்க..
அவனோ "அப்போ இனிமேல் என்கிட்ட பேசாதே" என்றவன், ஒரு வாரம் அவளிடம் பேசாமல் அவள் பெயர் சொல்லி அழைக்கும் போது கண்டுகொள்ளாதவன் போல் இருக்க, பின்னர் அவள்தான் தன் பிடிவாதத்தை கைவிட்டு "விக்ரம் அத்தான்" என அழைக்க நேர்ந்தது.
ஆதிக்கு அவள் பெயர் சொல்லி கூப்பிடுவது தான் பிடிக்கும் என்பதால்,அதன் பின் எப்போதும் அத்தான் என்ற வார்த்தை விக்ரமிற்கு மட்டுமே ஏகபோக உரிமை ஆகிவிட்டது.அவள் அத்தான் என கூப்பிடும் நபர் இந்த உலகில் அவன் மட்டுமே ஆகிப்போனான்.