அங்கு ஆதியும் தன் அறைக்குள் நுழைந்தவுடன் தன்னவளை பின்னால் இருந்து அணைத்தவன் "திவி" என கிறக்கமான குரலில் அழைத்து
"எனக்காக உங்க அப்பா கிட்ட பேசினாயா"..? என்க, அவளும் "ம்ம்" என்று மட்டும் தலையாட்டினாள்.
"என்னடி சொன்ன" என்றவனின் உதடு அவளின் காதுமடலை வருட...
அவளோ அவன் தொடுகையின் நெளிந்தபடி "எனக்கு ஆதி தான் வேண்டும் என்று சொன்னேன்" என்றவளை தன் புறம் திருப்பியவன்
"எங்கடி என்னோட பர்த்டே கிஃப்ட்" என அவளை அணைத்தபடி கேட்க...ஏதோ எடுப்பதற்காக அவனை விட்டு விலக முயன்றவளை
"அதெல்லாம் காலையில்…. இப்போ எனக்கு வேற வேண்டும்" என்றபடி அவள் இதழ்களையே பார்க்க...
"கல்யாணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் பொண்டாட்டிக்கு ஒரு கிஸ் கூட கொடுக்காத ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்" என்றவன் அவள் இதழை சிறைப்பிடித்தான்.தன் இத்தனை நாள் காத்திருப்பு மொத்தத்தையும் தன் முத்தத்தில் காட்டினான். மிகவும் மென்மையாக நிதானமாக தன் காதலை அவளுக்கு வெளிப்படுத்த...அவள் அதில் மயங்கித்தான் போனாள்.
முத்தயுத்தம் நீடித்துக்கொண்டே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல...தன்னவளை இன்றே அறிந்துவிடும் நோக்கத்தில் அவளை கைகளில் ஏந்தியவன் மெத்தையில் கிடத்த,அவளுடன் அவனும் சரிந்தான்.விடியும் வரை தொடர்ந்த காதல் யுத்தம் "ஆதி ப்ளீஸ்" என்ற வார்த்தையில், கிழக்கு வெளுக்கும் வேளையில் முடிவுக்கு வந்தது.
காலையில் தன் மொபைல் சத்தத்தில் கண்விழித்த ஆதி அதனை எடுத்து காதில் வைக்க,எதிரில் விக்ரமின் குரல் "டேய் இன்னைக்கு நந்து ஹாஸ்பிடல் வரமாட்டாள்" என்க,
அதற்கு அவனும் "நானும் அதை தான் சொல்ல நினைத்தேன் இன்னைக்கு திவ்யாவும் ஆபீஸ் வரமாட்டாள்.மரியாதையா ஃபோனை கட் பண்ணுடா தூக்கம் வருது" என்றவன் இணைப்பை துண்டித்தான்.விக்ரமும் சிரித்துக்கொண்டே விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இரு ஜோடிகளும் தங்கள் காதலை வெளிப்படுத்த,அதுவும் திவ்யா ஆதிக்கு பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தாள்.அவன் காதலுக்கு குறையாத காதலை அவனுக்கும் அளிக்க….மொத்தத்தில் அனைத்து ஜோடிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பதட்டத்தோடு மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர்.திவ்யாவின் பெற்றோர்கள் ஒருபக்கம் விக்ரமின் குடும்பம்,கையில் தனது நான்கு மாத குழந்தையோடு சந்தியா என அனைவரின் முகத்திலும் பயமும் பதட்டமும் நிறைந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்... இரண்டும் ஆண் குழந்தை என்க அங்கிருந்த அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.
திவ்யா நந்தினி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விக்ரம் ஆதி இருவரும் தத்தம் மனைவிக்கு உறுதுணையாக பிரசவ அறையில் அவர்களுக்கு குறையாத வலியை மனதில் தாங்கியவாறு ஆறுதலாக இருந்தனர்.
மருத்துவர் சென்ற சில நிமிடங்களில் கையில் குழந்தையோடு கண்களில் தேங்கிய கண்ணீரும் அதற்கு மாறாக முகத்தில் புன்னகையோடு வெளியே வந்தார்கள் விக்ரமும் ஆதியும்.
ரோஜா நிறத்தில் குட்டி கைக்கால்களுடன் பார்க்கவே அவ்வளவு அழகு இரு குழந்தைகளும்.அதுவும் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியான முக சாயலோடு இருக்க… மதனோ குழந்தையை கவனிக்காமல் விக்ரம் ஆதியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"டேய் என்னடா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க நீ மட்டும் இப்படி பார்க்கிறாய்" என்க...
அவனோ இருவரையும் முறைத்தப்படி "டேய் உங்க ஒற்றுமைக்கு ஒரு அளவே இல்லையா டா… ஒரே நேரத்தில் பிறந்த குழந்தை மாதிரியா இருக்கு டிவின்ஸ் மாதிரி இருக்குடா….சத்தியமாக எங்களால இன்னொரு விக்ரம் ஆதியை தாங்க முடியாது டா" என சிரிக்க...
மொத்த குடும்பமும் சிரிப்புடன் "ஆமாம்" என தலையாட்டி சிரித்தாலும் குழந்தைகளும் இவர்களை போலவே இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருந்தது.
"எனக்காக உங்க அப்பா கிட்ட பேசினாயா"..? என்க, அவளும் "ம்ம்" என்று மட்டும் தலையாட்டினாள்.
"என்னடி சொன்ன" என்றவனின் உதடு அவளின் காதுமடலை வருட...
அவளோ அவன் தொடுகையின் நெளிந்தபடி "எனக்கு ஆதி தான் வேண்டும் என்று சொன்னேன்" என்றவளை தன் புறம் திருப்பியவன்
"எங்கடி என்னோட பர்த்டே கிஃப்ட்" என அவளை அணைத்தபடி கேட்க...ஏதோ எடுப்பதற்காக அவனை விட்டு விலக முயன்றவளை
"அதெல்லாம் காலையில்…. இப்போ எனக்கு வேற வேண்டும்" என்றபடி அவள் இதழ்களையே பார்க்க...
"கல்யாணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் பொண்டாட்டிக்கு ஒரு கிஸ் கூட கொடுக்காத ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்" என்றவன் அவள் இதழை சிறைப்பிடித்தான்.தன் இத்தனை நாள் காத்திருப்பு மொத்தத்தையும் தன் முத்தத்தில் காட்டினான். மிகவும் மென்மையாக நிதானமாக தன் காதலை அவளுக்கு வெளிப்படுத்த...அவள் அதில் மயங்கித்தான் போனாள்.
முத்தயுத்தம் நீடித்துக்கொண்டே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல...தன்னவளை இன்றே அறிந்துவிடும் நோக்கத்தில் அவளை கைகளில் ஏந்தியவன் மெத்தையில் கிடத்த,அவளுடன் அவனும் சரிந்தான்.விடியும் வரை தொடர்ந்த காதல் யுத்தம் "ஆதி ப்ளீஸ்" என்ற வார்த்தையில், கிழக்கு வெளுக்கும் வேளையில் முடிவுக்கு வந்தது.
காலையில் தன் மொபைல் சத்தத்தில் கண்விழித்த ஆதி அதனை எடுத்து காதில் வைக்க,எதிரில் விக்ரமின் குரல் "டேய் இன்னைக்கு நந்து ஹாஸ்பிடல் வரமாட்டாள்" என்க,
அதற்கு அவனும் "நானும் அதை தான் சொல்ல நினைத்தேன் இன்னைக்கு திவ்யாவும் ஆபீஸ் வரமாட்டாள்.மரியாதையா ஃபோனை கட் பண்ணுடா தூக்கம் வருது" என்றவன் இணைப்பை துண்டித்தான்.விக்ரமும் சிரித்துக்கொண்டே விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
இரு ஜோடிகளும் தங்கள் காதலை வெளிப்படுத்த,அதுவும் திவ்யா ஆதிக்கு பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தாள்.அவன் காதலுக்கு குறையாத காதலை அவனுக்கும் அளிக்க….மொத்தத்தில் அனைத்து ஜோடிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பதட்டத்தோடு மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர்.திவ்யாவின் பெற்றோர்கள் ஒருபக்கம் விக்ரமின் குடும்பம்,கையில் தனது நான்கு மாத குழந்தையோடு சந்தியா என அனைவரின் முகத்திலும் பயமும் பதட்டமும் நிறைந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்... இரண்டும் ஆண் குழந்தை என்க அங்கிருந்த அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.
திவ்யா நந்தினி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விக்ரம் ஆதி இருவரும் தத்தம் மனைவிக்கு உறுதுணையாக பிரசவ அறையில் அவர்களுக்கு குறையாத வலியை மனதில் தாங்கியவாறு ஆறுதலாக இருந்தனர்.
மருத்துவர் சென்ற சில நிமிடங்களில் கையில் குழந்தையோடு கண்களில் தேங்கிய கண்ணீரும் அதற்கு மாறாக முகத்தில் புன்னகையோடு வெளியே வந்தார்கள் விக்ரமும் ஆதியும்.
ரோஜா நிறத்தில் குட்டி கைக்கால்களுடன் பார்க்கவே அவ்வளவு அழகு இரு குழந்தைகளும்.அதுவும் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியான முக சாயலோடு இருக்க… மதனோ குழந்தையை கவனிக்காமல் விக்ரம் ஆதியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"டேய் என்னடா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க நீ மட்டும் இப்படி பார்க்கிறாய்" என்க...
அவனோ இருவரையும் முறைத்தப்படி "டேய் உங்க ஒற்றுமைக்கு ஒரு அளவே இல்லையா டா… ஒரே நேரத்தில் பிறந்த குழந்தை மாதிரியா இருக்கு டிவின்ஸ் மாதிரி இருக்குடா….சத்தியமாக எங்களால இன்னொரு விக்ரம் ஆதியை தாங்க முடியாது டா" என சிரிக்க...
மொத்த குடும்பமும் சிரிப்புடன் "ஆமாம்" என தலையாட்டி சிரித்தாலும் குழந்தைகளும் இவர்களை போலவே இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருந்தது.