அத்தியாயம் 15
"அய்யோ விடுங்க... அ... அ...என தயங்கியவள், பின் விடுங்களேன் யாராவது வர போறாங்க..?" என சொல்ல.
அவனோ கையை விட்டவன்,வலிக்கும்படி அழுத்தமாக அவளின் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன் "எதுக்காக இப்படி யாருகிட்டயோ பேசுற மாதிரி பேசுகிறாய்..?" என்றபடி அழுத்தத்தை கூட்ட,
"ஆ.. ஆ..வலிக்குது விடுங்க" என திரும்பவும் அதே மாதிரி சொல்ல..இப்போது அவளை பிடித்து சுவரோடு சாய்த்தவன் "என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனதில்,மரியாதையா எப்பவும் என்னை எப்படி கூப்பிடுவாயோ அதே மாதிரி கூப்பிடு, இல்லனா என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என கோபத்தில் பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவளோ திருத்திருவென முழித்தவள் "உங்களுக்கு தான் அத்தான் என்று கூப்பிட்டா பிடிக்காது என சொல்லி நந்தனாவை தள்ளிவிட்டிங்களே, அதான் அப்படி கூப்பிடவில்லை" என பயத்துடன் சொல்ல…கையை கொஞ்சம் தளர்த்தியவன்,
அவள் கன்னத்தை வருடியபடி "நான் உங்கிட்ட இதுவரைக்கும் அப்படி சொல்லிருக்கேனா..?" என கேட்க,அவளோ இல்லை என தலையாட்டினாள்.
"அப்பறம் எதுக்கு லூசு மாதிரி இப்படி நடந்துக் கொள்கிறாய், அவளும் நீயும் ஒன்றா…? இப்போ நான் சொல்வதை இந்த மூளையில் நன்றாக ஏற்றிக்கொள் என்றவன், என்னை அத்தான் என கூப்பிட இந்த உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு புரியுதா...சரி இப்போ கூப்பிடு" என சொல்லியபடி கைக்கட்டி நிற்க,அவளோ யாரை என கேட்டாள்.
"செத்துப்போன உன் தாத்தாவை என திட்டியவன்,இவளோ நேரம் எதை பற்றி சொல்லிட்டு இருந்தேன்,இப்படி ஒன்னும் தெரியாத குழந்தைபோல் முழிக்கிறதை நிறுத்துடி. உன்னை பார்த்தால் யாராவது டாக்டர் என சொல்வார்களா…?' என கத்தியவன் பின்னர் என்னை நீ எப்பவும் கூப்பிடுவது போல் இப்போ கூப்பிடு" என அவள் விழிகளை பார்த்தபடி சொன்னவன்,அவள் உதிக்கும் வார்த்தைக்காக காத்திருந்தான்.
நந்தினியோ அதுவரை உதட்டை கடித்து தலைகுனிந்து நின்றவள் மெல்ல விழி மலர்த்தி "விக்ரம் அத்தான்" என கொஞ்சும் குரலில் அழைக்க...விக்ரம் தன் சித்தம் தொலைத்தான். சுவற்றில் சாய்ந்து விழி மூடியவன்,சாகடிக்கிறடி என தன் கேசத்தை கலைத்து தன்னை சமன் செய்தவன்,அவள் அருகில் வந்தான்.
"யாருடி உனக்கு இந்த புடவை கட்டிவிட்டது" என கேட்க,அவளோ "அம்மா" என்றாள்.
"உனக்கு கட்ட தெரியாதா..?" என்பதற்கு , உதட்டை பிதுக்கி இல்லை என்பது போல் தலையாட்ட...
அவனோ அவளை நெருங்கி இடையை பற்றியவன் அவளின் திகைத்த பார்வையை கண்டுகொள்ளாமல் "இது என்ன கண்காட்சியா" என்றபடி இடையை வருடியவன், ஒழுங்கா புடவையை கட்டு,இதை பார்க்க எனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு" என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். உள்ளே நந்தினியோ அவன் முத்தத்தில் முதலில் திகைத்தவள்,இதுவும் கனவா இருக்குமோ என சுற்றி பார்க்க..இது கனவாக இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாக அவள் விக்ரமின் அறையில் நின்றிருந்தாள்.
"அப்போ எல்லாமே உண்மை தானா..? ஆனா ஏன் இப்படி..?" என பலவாறு குழம்பியவள்,நேரம் கடப்பதை உணர்ந்து வெளியே செல்ல காலெடுத்து வைத்தவள்,பின்னரே ஏதோ ஞாபகம் வந்தவளாக சேலையை இடையை மறைத்தபடி பின் செய்துவிட்டே வெளியே வந்தாள்.
வெளியே வந்தவளின் பார்வை விக்ரமை தேட அவனோ ஒன்றும் நடவாததை போல் லேப்டாப்பை மடியில் வைத்தபடி அதிலேயே மூழ்கி விட்டான்.
இவன் தான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு அப்படி நடந்துக்கொண்டான் என சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.அப்படி இருந்தது அவனது நடவடிக்கை. அவள் கீழே சென்ற பிறகே தலையை நிமிர்த்தியவன் சிரித்துக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தான்.
தன் அறையில் அமர்ந்திருந்த சந்தியா கீ கொடுத்த பொம்மை போல் அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். நீங்க நிற்க சொன்னால் நிற்கிறேன் உட்கார சொன்னால் உட்கார்கிறேன் என்ற ரீதியில் இருந்தது அவள் செயல். யாருக்கோ நடக்கும் விசேஷத்திற்கு விருப்பமே இல்லாமல் கிளம்புவது போல் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மற்றவர்கள் விருப்பத்திற்காக அமைதியாக அனைத்தையும் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அங்கு மதன் மும்பை வந்து சேர்ந்தவன்,நாளை தான் வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதால்,தனக்கென வழங்கப்பட்ட பிளாட்டில் விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்தவன் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.
தன் மொபைலில் உள்ள அவளின் புகைப்படத்தை வருடியவன் அதில் தன் முத்தத்தை பதித்து.. "ஏண்டி என்னை போய் காதலித்தாய்..? உன் காதலுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்" என புலம்பியபடி கடிகாரத்தை பார்த்தவன்,இந்நேரம் நிச்சயதார்த்தம் தொடங்கியிருக்கும் என எண்ணும் போதே மனம் தன்னவளை இழக்கப் போகிறோம் என கதறித்துடித்தது.
பதுமைப்போல் வந்தவள் ஹாலில் அனைவரையும் வணங்கிவிட்டு அமர..விழா தொடங்கியது.நிச்சய பத்திரம் வாசிக்கப்பட இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டு, தாம்பூல தட்டை இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொள்ள திருமணம் இனிதாய் உறுதி செய்யப்பட்டது.
வந்தது முதல் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் சந்தியா. இன்னும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கூட பார்க்கவில்லை,பார்க்க விருப்பமும் இல்லை. மாப்பிள்ளை கோலத்தில் பட்டுவேட்டி சட்டையில் கொஞ்சமும் முகத்தில் சந்தோஷம் இல்லாமல் ஃபோனை நொண்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரோஹித்.
விக்ரமின் பார்வை மொத்தமும் அவன் வீட்டினுள் நுழைந்தது முதல் ரோஹித்தை தான் நோட்டமிட்டது.அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது அப்பட்டமாக அவனின் நடவடிக்கையிலேயே தெரிந்தது.
"ஹாய் ஐம் விக்ரம்" என தன்னை அறிமுகப்படுத்தியவன் அவனிடம் பொதுவாக அமெரிக்கா வாழ்க்கை அவனுடைய வேலை பற்றி பேசியவன்,இங்க சென்னையில் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போவதாக சொன்னாங்க..? எங்கே, என்ன பிஸ்னஸ்..? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டபடி வாங்களேன் அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டே பேசலாம்" என அழைத்தவன் மாடியை நோக்கி அழைத்து சென்றான்.
சுமார் ஒரு நேரம் இருவரும் பேசிவிட்டு,சிரித்தபடி கீழே இறங்கி வர..பார்த்திருந்த அனைவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தது,இருக்காதா பின்னே வீட்டில் இருப்பவரிடமே அளந்து பேசுபவன்,சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த ஒருவனிடம் சிரித்தபடி பேசியது அதிசயம் தானே.
"என்னப்பா என்ன சொல்றார் மாப்பிள்ளை..?" என்ற தந்தையை பார்த்து,மெல்ல புன்னகைத்தவன், தன் மாமன் ராகவன் அருகில் அமர்ந்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் "வாழ்க்கையிலேயே நீங்க பண்ண ஒரே நல்ல காரியம் இந்த சம்பந்தம் தான்" என்றவன் அவரை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.
ராகவன் சந்தேகமாக விக்ரமை பார்த்தவர் 'என்ன சொல்றான் இவன் உண்மையிலேயே என்னை பாராட்டுகிறானா..? இல்லை கலாய்கிறானா..? ஒன்னும் புரியலையே, ஏதுவாக இருந்தாலும் இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.சரியான எமகாதகன்' என எண்ணியவாறு வந்தவர்களை வழியனுப்ப சென்றார்.
நாட்கள் வேகமாக செல்ல...அன்று வழக்கத்திற்கு அதிகமாக கோபத்தில் இருந்த விக்ரம் ஆபீஸில் அனைவரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டான். புதிதாக தொடங்கிய ப்ராஜெக்ட்டில் ஏதோ தவறாகிவிட்டது என அதனை பற்றிய சிந்தனையில் முழுதாக தனது கவனத்தை செலுத்தி,அதற்கான தீர்வை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
விக்ரமின் அறைக்கு வெளியே நின்று.. "கைகளை பிசைந்து கொண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா" என கைகளை கதவை நோக்கி நகர்த்துவதும் பின்வாங்குவதுவாக இருந்தாள் தர்ஷினி.
அவளின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த அவள் தோழி சவிதா "எதுக்கு இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க ஒன்னு உள்ள போ, இல்லனா வந்து உட்காரு. லீவ் கேட்கிறதுக்கு இவளோ பயமா" என கத்த…. மனதில் தைரியத்தை வர வைத்தவள் ,கதவை லேசாக தட்டி "மே ஐ கம் இன் சார்" என்க…
அதுவரை கையிலுள்ள கோப்பையில் மூழ்கியிருந்தவன் " கம் இன்" என்றான் தன் கம்பீர குரலில்.
அதுவரை இருந்த தைரியம் மொத்தமும் வடிந்து போக…உள்ளே நுழைந்தவளுக்கு "என்ன பேச வந்தோம்..?" என்பதே சுத்தமாக மறந்துவிட்டது.
உள்ளே நுழைந்ததிலிருந்து அவளையே துளைத்தெடுக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவன் " வாட் " என்க...அந்த குரலில் தன்னை மீட்டவள் அதுவந்து...அது…" டூ டேஸ் லீவ் வேண்டும்" என்க…
"ஐ திங்ஸ் யூ ஆர் தேர் இன் நியூ ப்ராஜெக்ட் ரைட் " என்றவனை பார்த்து பயத்தை விழுங்கியவள்…"எஸ் சார்" என்க,
"அப்போ உங்களுக்கு பதிலா அந்த ப்ராஜெக்ட் வொர்க்கை நான் பாக்கணுமா..?" என நிதானமாக கேட்க…இல்லை என அவசரமாக தலையாட்டியவள்….
"நாளைக்கு என்னோட நிச்சயதார்த்தம்" என்றாள்.
அவளின் பதிலில் அதிர்ந்தவன் அதை முகத்தில் காட்டாமல் "வாட் கம் அகைன் " என திரும்பவும் கேட்க….
அவளோ "என்னோட எங்கேஜ்மெண்ட் சார்" என்றாள் கொஞ்சம் அழுத்தமாக.
அவனோ சிறிது நேரம் அவளையே பார்த்தவன் "ஓகே டேக் லீவ்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.
போகும் அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,நடக்க போகாத கல்யாணத்திற்கு ஒரு எங்கேஜ்மெண்ட் வேற. முதலில் நிச்சியதார்த்தமே நடக்க வாய்ப்பில்லை என தோள்களை குலுக்கியவன் தன் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட எரிச்சலானவன்,உள்ளே வந்தவனை யோசனையாக பார்த்தவாறே அமர சொன்னவன் "என்ன" என்க,
"எனக்கும் டூ டேஸ் லீவ் வேண்டும் என்றவன், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் திவ்யாவுக்கு எனக்கும் நாளைக்கு" என ஆரம்பித்து அனைத்தையும் சொன்னவன் விக்ரமின் பதிலுக்காக அவன் முகம் பார்க்க
விக்ரமோ அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக "கங்கிராட்ஸ் என சிரித்தவன் தாராளமா "டூ டேஸ் என்ன..? டூ வீக்ஸ் கூட எடுத்துக்கோங்க. நான் லீவ் அப்ரூவ் பண்றேன்" என சொல்ல... கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்க்கு வியப்பாக இருந்தது.
விக்ரமிடம் அவ்வளவு சீக்கிரம் சிரிப்பை பார்க்க முடியாது அப்படிப்பட்டவன் இன்று இயல்பாக சிரித்தது மட்டுமில்லாமல் கேட்டவுடன் லீவ் கொடுத்ததும் நம்ம முடியாமல் தன் கையை தானே கிள்ளி பார்த்துக்கொண்டான்.பின்னர் பல நன்றிகளை சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே வந்தவன்,தன் இருக்கையில் அமர்ந்து ஃபோனை எடுத்து தன் நண்பர்களை அழைத்து இன்று பாரில் பார்ட்டி இருப்பதாக சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக வேலையை தொடர்ந்தான்.
மாலை வழக்கம் போல்… திவ்யா வேலை முடிந்தவுடன் வீட்டிற்க்கு செல்ல தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,அதுவோ ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ண தொடங்கியது. மழை வேறு வரும் போல் இருக்க ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மெக்கானிக் ஷாப் நோக்கி சென்றாள்.மகேஷ் இதற்கு முன்பு பலமுறை அவளை பைக்கில் வரும்படி அழைத்தும் அவள் வராததால்,அவளை பற்றி கண்டுகொள்ளாமல் அவனும் சென்றுவிட்டான்.
மெக்கானிக் ஷாப்பில் வண்டியை நிறுத்தியவள்,அது சரியாகும் வரை காத்திருக்க... மழை பெய்யத் தொடங்கியது. மழைக்காக அருகிலுள்ள கடையில் ஒதுங்கி நிற்க,தனக்கு மிக அருகில் யாரோ நிற்கும் அரவம் கேட்க,திரும்பி பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தள்ளி நின்றாள்.
தள்ளி நின்றவளின் கைபிடித்து தடுத்த ஆதி,அவள் கையை விடுவிக்க போராடுவதை பார்த்து இன்னும் அழுத்தமாக பிடித்தவன்,மழையை பற்றி கவலைப்படாமல் தரதரவென இழுத்தவன் அவளை காரினுள் தள்ளி கதவை அடைத்துவிட்டு காரை அதிவேகத்தில் செலுத்தினான்.
"என்ன பண்றீங்க நீங்க..? முதலில் காரை நிறுத்துங்க. இல்லனா கீழே குதித்து விடுவேன்" என மிரட்ட..
அவனோ "தாராளமாக குதிக்கலாம் அது உன் இஷ்டம்" என்க..அவளும் காரின் கதவை திறக்க முயல அதுவோ லாக்காகி இருந்தது.
"பிளீஸ் ஆதி" என கெஞ்ச தொடங்கியவளை திரும்பி பார்த்தவன்
"பேசாம அமைதியாக வந்தால் உங்க வீட்டில் கொண்டு விடுவேன், இல்லை நான் இப்படிதான் கத்துவேன் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை,இதுவரைக்கும் உன்னை கடத்தும் எண்ணம் எனகில்லை அதுதான் உன் விருப்பமென்றால் எனக்கும் ஓகே…அரேஞ்ச் மேரேஜ், ஓடிப்போய் கல்யாணம் பண்றதெல்லாம் ஓல்டு ஃபேஷன். அதில் என்ன த்ரில் இருக்கு சொல்லு..? இதுவே உன்னை மாதிரி அழகான பொண்ணை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாலும் சரி, இல்ல டைரக்டா ஃபர்ஸ்ட் நைட் என்றாலும் சரி அதில் இருக்கும் த்ரில்லே செம்ம" என்றவன் அவள் முகம் பார்க்க...அவளோ அவன் சொன்ன விஷயத்தில் பயத்தில் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.
எட்டி அவள் கையை பிடித்தவன் அவள் நடுக்கத்தை உணர்ந்தவாறே "கவலைப்படாதே திவி பேபி எனக்கு அதுமாதிரி எந்த ஐடியாவும் இல்லை" என சொன்ன பிறகே அவள் மூச்சு சீரானது. அவளை ஓரக்கண்ணால் சைட் அடித்துக்கொண்டே சென்றவன் சாலையின் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினான்.
அவள் என்ன என்பது போல் பார்க்க..."கொஞ்சம் மழை கம்மியாகட்டும் என்றவன் , ஒருவேளை என்மேல் நம்பிக்கை இல்லனா சொல்லிடு இப்போவே உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்" என்றான் அவளையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு…"அப்படியெல்லாம் ஏதுமில்லை" என உடனடியாக பதில் சொன்னவள்,அமைதியாக கொட்டும் மழையை வெறித்தாள்.
ஆல்ரெடி மழையில் கொஞ்சம் நனைந்த்திருக்க...இப்போது காரின்
ஏசி காற்றில் உடல் மெலிதாக குளிரில் நடுங்கிய தொடங்க,அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் காரின் ஏசியை அணைத்துவிட்டு காரிலிருந்த டவலை எடுத்து துவட்டி கொள்ளும்படி கொடுத்தான். அவன் அக்கறையில் நெகிழ்ந்தவள் அதனை வாங்கிக்கொண்டாள்.
சிறிது நேரம் கொட்டும் மழையின் சத்தத்தை தவிர எந்த சத்தமும் இல்லாமல் காரே அமைதியிலிருக்க...மெல்ல பேச்சை தொடங்கினான் ஆதி.
"நாளைக்கு என்ன விசேஷம்" என கேட்க,அவளோ கண்களில் கலக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
"அதான் பிடிக்கலை இல்ல, வாயை திறந்து உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே எனக்கு மகேஷை பிடிக்கலைனு. எதுக்கு அமைதியா இருந்து சாகடிகிற' என முதல்முறை தன் கோபத்தை அவளிடம் காட்டியவன், எல்லா நேரமும் இந்த அமைதி உன்னை காப்பாற்றாது திவ்யா…நமக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றாலும் சரி வேண்டாமென்றும் சரி நாம தான் அதுக்காக பேசணும் போராடனும். இது ஒன்னும் சினிமா இல்லை யாராவது வந்து நம்மை காப்பாற்ற... புரியுதா..?" என அவள் முகம் பார்க்க...அவளோ அவனின் கோப முகத்தை பார்த்த அதிர்ச்சிலிருந்தே வெளி வராதவள் எங்கே அவன் சொன்னதை கவனித்தாள். அவளின் நிலையை கண்டே அவள் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை என உணர்ந்தவனுக்கு இப்போது கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.
அவள் தோளை தொட்டு உலுக்கி, நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தவன். "இவளோ நேரம் நான் என்ன சொன்னேன் என்று நினைவிருக்கா" என கேட்க ...அவளோ தலையை குனிந்தபடி இல்லை என தலையாட்டினாள்.
அவனும் முதலில் சிரித்தவன் பின் சீரியஸான குரலில் "நாளைக்கு என்ன பண்ணுவதாக இருக்கிறாய்" என கேட்க..அவளோ பேந்த பேந்த முழித்தாள்.அப்படியே ஓங்கி மண்டையில் ஒன்று போடவேண்டும் போல் இருந்த ஆசையை கைவிட்டவன்...கோபமாக
"அப்போ அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா"..? என எரிந்து விழ...
கண்களில் கண்ணீரோடு "அதெல்லாம் ஒன்னும் இல்ல,கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை என்றால் செத்துடுவேன்" என்றாள்.
அதுவரை அவளிடம் கோபத்தை காட்ட கூடாது என கட்டுப்படுத்தியவன் விட்டான் ஒரு அறை,கன்னம் வின் வின் என தெறிக்க,பட்டு போன்ற மென்மையான கன்னம் சிவந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது.
"பைத்தியக்காரி... பைத்தியக்காரி ,நான் இருக்கும் போதே அதுவும் எங்கிட்டயே செத்துடுவேன் என சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்றவன்,அப்படியே செத்தாலும் சாவேனே தவிர உன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சொல்கிறாய் அப்படிதானே. பைத்தியக்காரன் மாதிரி அஞ்சு வருஷமா உனக்காக காத்திருக்கும் எனக்கு இதுதான் பதில் அப்படித்தானே. சொல்லுடி... எதுக்கு அமைதியாய் இருக்க சொல்லு...ஆமாம் அப்படித்தான் டா என சொல்லு, நானும் அப்படியே கண்கானாமல் போய்விடுகிறேன்" என்றான் கோபமாக…
அவளோ முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்.
"அய்யோ விடுங்க... அ... அ...என தயங்கியவள், பின் விடுங்களேன் யாராவது வர போறாங்க..?" என சொல்ல.
அவனோ கையை விட்டவன்,வலிக்கும்படி அழுத்தமாக அவளின் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன் "எதுக்காக இப்படி யாருகிட்டயோ பேசுற மாதிரி பேசுகிறாய்..?" என்றபடி அழுத்தத்தை கூட்ட,
"ஆ.. ஆ..வலிக்குது விடுங்க" என திரும்பவும் அதே மாதிரி சொல்ல..இப்போது அவளை பிடித்து சுவரோடு சாய்த்தவன் "என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனதில்,மரியாதையா எப்பவும் என்னை எப்படி கூப்பிடுவாயோ அதே மாதிரி கூப்பிடு, இல்லனா என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என கோபத்தில் பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவளோ திருத்திருவென முழித்தவள் "உங்களுக்கு தான் அத்தான் என்று கூப்பிட்டா பிடிக்காது என சொல்லி நந்தனாவை தள்ளிவிட்டிங்களே, அதான் அப்படி கூப்பிடவில்லை" என பயத்துடன் சொல்ல…கையை கொஞ்சம் தளர்த்தியவன்,
அவள் கன்னத்தை வருடியபடி "நான் உங்கிட்ட இதுவரைக்கும் அப்படி சொல்லிருக்கேனா..?" என கேட்க,அவளோ இல்லை என தலையாட்டினாள்.
"அப்பறம் எதுக்கு லூசு மாதிரி இப்படி நடந்துக் கொள்கிறாய், அவளும் நீயும் ஒன்றா…? இப்போ நான் சொல்வதை இந்த மூளையில் நன்றாக ஏற்றிக்கொள் என்றவன், என்னை அத்தான் என கூப்பிட இந்த உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு புரியுதா...சரி இப்போ கூப்பிடு" என சொல்லியபடி கைக்கட்டி நிற்க,அவளோ யாரை என கேட்டாள்.
"செத்துப்போன உன் தாத்தாவை என திட்டியவன்,இவளோ நேரம் எதை பற்றி சொல்லிட்டு இருந்தேன்,இப்படி ஒன்னும் தெரியாத குழந்தைபோல் முழிக்கிறதை நிறுத்துடி. உன்னை பார்த்தால் யாராவது டாக்டர் என சொல்வார்களா…?' என கத்தியவன் பின்னர் என்னை நீ எப்பவும் கூப்பிடுவது போல் இப்போ கூப்பிடு" என அவள் விழிகளை பார்த்தபடி சொன்னவன்,அவள் உதிக்கும் வார்த்தைக்காக காத்திருந்தான்.
நந்தினியோ அதுவரை உதட்டை கடித்து தலைகுனிந்து நின்றவள் மெல்ல விழி மலர்த்தி "விக்ரம் அத்தான்" என கொஞ்சும் குரலில் அழைக்க...விக்ரம் தன் சித்தம் தொலைத்தான். சுவற்றில் சாய்ந்து விழி மூடியவன்,சாகடிக்கிறடி என தன் கேசத்தை கலைத்து தன்னை சமன் செய்தவன்,அவள் அருகில் வந்தான்.
"யாருடி உனக்கு இந்த புடவை கட்டிவிட்டது" என கேட்க,அவளோ "அம்மா" என்றாள்.
"உனக்கு கட்ட தெரியாதா..?" என்பதற்கு , உதட்டை பிதுக்கி இல்லை என்பது போல் தலையாட்ட...
அவனோ அவளை நெருங்கி இடையை பற்றியவன் அவளின் திகைத்த பார்வையை கண்டுகொள்ளாமல் "இது என்ன கண்காட்சியா" என்றபடி இடையை வருடியவன், ஒழுங்கா புடவையை கட்டு,இதை பார்க்க எனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு" என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். உள்ளே நந்தினியோ அவன் முத்தத்தில் முதலில் திகைத்தவள்,இதுவும் கனவா இருக்குமோ என சுற்றி பார்க்க..இது கனவாக இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாக அவள் விக்ரமின் அறையில் நின்றிருந்தாள்.
"அப்போ எல்லாமே உண்மை தானா..? ஆனா ஏன் இப்படி..?" என பலவாறு குழம்பியவள்,நேரம் கடப்பதை உணர்ந்து வெளியே செல்ல காலெடுத்து வைத்தவள்,பின்னரே ஏதோ ஞாபகம் வந்தவளாக சேலையை இடையை மறைத்தபடி பின் செய்துவிட்டே வெளியே வந்தாள்.
வெளியே வந்தவளின் பார்வை விக்ரமை தேட அவனோ ஒன்றும் நடவாததை போல் லேப்டாப்பை மடியில் வைத்தபடி அதிலேயே மூழ்கி விட்டான்.
இவன் தான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு அப்படி நடந்துக்கொண்டான் என சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.அப்படி இருந்தது அவனது நடவடிக்கை. அவள் கீழே சென்ற பிறகே தலையை நிமிர்த்தியவன் சிரித்துக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தான்.
தன் அறையில் அமர்ந்திருந்த சந்தியா கீ கொடுத்த பொம்மை போல் அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். நீங்க நிற்க சொன்னால் நிற்கிறேன் உட்கார சொன்னால் உட்கார்கிறேன் என்ற ரீதியில் இருந்தது அவள் செயல். யாருக்கோ நடக்கும் விசேஷத்திற்கு விருப்பமே இல்லாமல் கிளம்புவது போல் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மற்றவர்கள் விருப்பத்திற்காக அமைதியாக அனைத்தையும் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அங்கு மதன் மும்பை வந்து சேர்ந்தவன்,நாளை தான் வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதால்,தனக்கென வழங்கப்பட்ட பிளாட்டில் விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்தவன் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.
தன் மொபைலில் உள்ள அவளின் புகைப்படத்தை வருடியவன் அதில் தன் முத்தத்தை பதித்து.. "ஏண்டி என்னை போய் காதலித்தாய்..? உன் காதலுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்" என புலம்பியபடி கடிகாரத்தை பார்த்தவன்,இந்நேரம் நிச்சயதார்த்தம் தொடங்கியிருக்கும் என எண்ணும் போதே மனம் தன்னவளை இழக்கப் போகிறோம் என கதறித்துடித்தது.
பதுமைப்போல் வந்தவள் ஹாலில் அனைவரையும் வணங்கிவிட்டு அமர..விழா தொடங்கியது.நிச்சய பத்திரம் வாசிக்கப்பட இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டு, தாம்பூல தட்டை இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொள்ள திருமணம் இனிதாய் உறுதி செய்யப்பட்டது.
வந்தது முதல் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் சந்தியா. இன்னும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கூட பார்க்கவில்லை,பார்க்க விருப்பமும் இல்லை. மாப்பிள்ளை கோலத்தில் பட்டுவேட்டி சட்டையில் கொஞ்சமும் முகத்தில் சந்தோஷம் இல்லாமல் ஃபோனை நொண்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரோஹித்.
விக்ரமின் பார்வை மொத்தமும் அவன் வீட்டினுள் நுழைந்தது முதல் ரோஹித்தை தான் நோட்டமிட்டது.அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது அப்பட்டமாக அவனின் நடவடிக்கையிலேயே தெரிந்தது.
"ஹாய் ஐம் விக்ரம்" என தன்னை அறிமுகப்படுத்தியவன் அவனிடம் பொதுவாக அமெரிக்கா வாழ்க்கை அவனுடைய வேலை பற்றி பேசியவன்,இங்க சென்னையில் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போவதாக சொன்னாங்க..? எங்கே, என்ன பிஸ்னஸ்..? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டபடி வாங்களேன் அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டே பேசலாம்" என அழைத்தவன் மாடியை நோக்கி அழைத்து சென்றான்.
சுமார் ஒரு நேரம் இருவரும் பேசிவிட்டு,சிரித்தபடி கீழே இறங்கி வர..பார்த்திருந்த அனைவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தது,இருக்காதா பின்னே வீட்டில் இருப்பவரிடமே அளந்து பேசுபவன்,சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த ஒருவனிடம் சிரித்தபடி பேசியது அதிசயம் தானே.
"என்னப்பா என்ன சொல்றார் மாப்பிள்ளை..?" என்ற தந்தையை பார்த்து,மெல்ல புன்னகைத்தவன், தன் மாமன் ராகவன் அருகில் அமர்ந்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் "வாழ்க்கையிலேயே நீங்க பண்ண ஒரே நல்ல காரியம் இந்த சம்பந்தம் தான்" என்றவன் அவரை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.
ராகவன் சந்தேகமாக விக்ரமை பார்த்தவர் 'என்ன சொல்றான் இவன் உண்மையிலேயே என்னை பாராட்டுகிறானா..? இல்லை கலாய்கிறானா..? ஒன்னும் புரியலையே, ஏதுவாக இருந்தாலும் இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.சரியான எமகாதகன்' என எண்ணியவாறு வந்தவர்களை வழியனுப்ப சென்றார்.
நாட்கள் வேகமாக செல்ல...அன்று வழக்கத்திற்கு அதிகமாக கோபத்தில் இருந்த விக்ரம் ஆபீஸில் அனைவரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டான். புதிதாக தொடங்கிய ப்ராஜெக்ட்டில் ஏதோ தவறாகிவிட்டது என அதனை பற்றிய சிந்தனையில் முழுதாக தனது கவனத்தை செலுத்தி,அதற்கான தீர்வை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
விக்ரமின் அறைக்கு வெளியே நின்று.. "கைகளை பிசைந்து கொண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா" என கைகளை கதவை நோக்கி நகர்த்துவதும் பின்வாங்குவதுவாக இருந்தாள் தர்ஷினி.
அவளின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த அவள் தோழி சவிதா "எதுக்கு இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க ஒன்னு உள்ள போ, இல்லனா வந்து உட்காரு. லீவ் கேட்கிறதுக்கு இவளோ பயமா" என கத்த…. மனதில் தைரியத்தை வர வைத்தவள் ,கதவை லேசாக தட்டி "மே ஐ கம் இன் சார்" என்க…
அதுவரை கையிலுள்ள கோப்பையில் மூழ்கியிருந்தவன் " கம் இன்" என்றான் தன் கம்பீர குரலில்.
அதுவரை இருந்த தைரியம் மொத்தமும் வடிந்து போக…உள்ளே நுழைந்தவளுக்கு "என்ன பேச வந்தோம்..?" என்பதே சுத்தமாக மறந்துவிட்டது.
உள்ளே நுழைந்ததிலிருந்து அவளையே துளைத்தெடுக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவன் " வாட் " என்க...அந்த குரலில் தன்னை மீட்டவள் அதுவந்து...அது…" டூ டேஸ் லீவ் வேண்டும்" என்க…
"ஐ திங்ஸ் யூ ஆர் தேர் இன் நியூ ப்ராஜெக்ட் ரைட் " என்றவனை பார்த்து பயத்தை விழுங்கியவள்…"எஸ் சார்" என்க,
"அப்போ உங்களுக்கு பதிலா அந்த ப்ராஜெக்ட் வொர்க்கை நான் பாக்கணுமா..?" என நிதானமாக கேட்க…இல்லை என அவசரமாக தலையாட்டியவள்….
"நாளைக்கு என்னோட நிச்சயதார்த்தம்" என்றாள்.
அவளின் பதிலில் அதிர்ந்தவன் அதை முகத்தில் காட்டாமல் "வாட் கம் அகைன் " என திரும்பவும் கேட்க….
அவளோ "என்னோட எங்கேஜ்மெண்ட் சார்" என்றாள் கொஞ்சம் அழுத்தமாக.
அவனோ சிறிது நேரம் அவளையே பார்த்தவன் "ஓகே டேக் லீவ்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.
போகும் அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,நடக்க போகாத கல்யாணத்திற்கு ஒரு எங்கேஜ்மெண்ட் வேற. முதலில் நிச்சியதார்த்தமே நடக்க வாய்ப்பில்லை என தோள்களை குலுக்கியவன் தன் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட எரிச்சலானவன்,உள்ளே வந்தவனை யோசனையாக பார்த்தவாறே அமர சொன்னவன் "என்ன" என்க,
"எனக்கும் டூ டேஸ் லீவ் வேண்டும் என்றவன், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் திவ்யாவுக்கு எனக்கும் நாளைக்கு" என ஆரம்பித்து அனைத்தையும் சொன்னவன் விக்ரமின் பதிலுக்காக அவன் முகம் பார்க்க
விக்ரமோ அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக "கங்கிராட்ஸ் என சிரித்தவன் தாராளமா "டூ டேஸ் என்ன..? டூ வீக்ஸ் கூட எடுத்துக்கோங்க. நான் லீவ் அப்ரூவ் பண்றேன்" என சொல்ல... கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்க்கு வியப்பாக இருந்தது.
விக்ரமிடம் அவ்வளவு சீக்கிரம் சிரிப்பை பார்க்க முடியாது அப்படிப்பட்டவன் இன்று இயல்பாக சிரித்தது மட்டுமில்லாமல் கேட்டவுடன் லீவ் கொடுத்ததும் நம்ம முடியாமல் தன் கையை தானே கிள்ளி பார்த்துக்கொண்டான்.பின்னர் பல நன்றிகளை சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே வந்தவன்,தன் இருக்கையில் அமர்ந்து ஃபோனை எடுத்து தன் நண்பர்களை அழைத்து இன்று பாரில் பார்ட்டி இருப்பதாக சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக வேலையை தொடர்ந்தான்.
மாலை வழக்கம் போல்… திவ்யா வேலை முடிந்தவுடன் வீட்டிற்க்கு செல்ல தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,அதுவோ ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ண தொடங்கியது. மழை வேறு வரும் போல் இருக்க ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மெக்கானிக் ஷாப் நோக்கி சென்றாள்.மகேஷ் இதற்கு முன்பு பலமுறை அவளை பைக்கில் வரும்படி அழைத்தும் அவள் வராததால்,அவளை பற்றி கண்டுகொள்ளாமல் அவனும் சென்றுவிட்டான்.
மெக்கானிக் ஷாப்பில் வண்டியை நிறுத்தியவள்,அது சரியாகும் வரை காத்திருக்க... மழை பெய்யத் தொடங்கியது. மழைக்காக அருகிலுள்ள கடையில் ஒதுங்கி நிற்க,தனக்கு மிக அருகில் யாரோ நிற்கும் அரவம் கேட்க,திரும்பி பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தள்ளி நின்றாள்.
தள்ளி நின்றவளின் கைபிடித்து தடுத்த ஆதி,அவள் கையை விடுவிக்க போராடுவதை பார்த்து இன்னும் அழுத்தமாக பிடித்தவன்,மழையை பற்றி கவலைப்படாமல் தரதரவென இழுத்தவன் அவளை காரினுள் தள்ளி கதவை அடைத்துவிட்டு காரை அதிவேகத்தில் செலுத்தினான்.
"என்ன பண்றீங்க நீங்க..? முதலில் காரை நிறுத்துங்க. இல்லனா கீழே குதித்து விடுவேன்" என மிரட்ட..
அவனோ "தாராளமாக குதிக்கலாம் அது உன் இஷ்டம்" என்க..அவளும் காரின் கதவை திறக்க முயல அதுவோ லாக்காகி இருந்தது.
"பிளீஸ் ஆதி" என கெஞ்ச தொடங்கியவளை திரும்பி பார்த்தவன்
"பேசாம அமைதியாக வந்தால் உங்க வீட்டில் கொண்டு விடுவேன், இல்லை நான் இப்படிதான் கத்துவேன் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை,இதுவரைக்கும் உன்னை கடத்தும் எண்ணம் எனகில்லை அதுதான் உன் விருப்பமென்றால் எனக்கும் ஓகே…அரேஞ்ச் மேரேஜ், ஓடிப்போய் கல்யாணம் பண்றதெல்லாம் ஓல்டு ஃபேஷன். அதில் என்ன த்ரில் இருக்கு சொல்லு..? இதுவே உன்னை மாதிரி அழகான பொண்ணை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாலும் சரி, இல்ல டைரக்டா ஃபர்ஸ்ட் நைட் என்றாலும் சரி அதில் இருக்கும் த்ரில்லே செம்ம" என்றவன் அவள் முகம் பார்க்க...அவளோ அவன் சொன்ன விஷயத்தில் பயத்தில் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.
எட்டி அவள் கையை பிடித்தவன் அவள் நடுக்கத்தை உணர்ந்தவாறே "கவலைப்படாதே திவி பேபி எனக்கு அதுமாதிரி எந்த ஐடியாவும் இல்லை" என சொன்ன பிறகே அவள் மூச்சு சீரானது. அவளை ஓரக்கண்ணால் சைட் அடித்துக்கொண்டே சென்றவன் சாலையின் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினான்.
அவள் என்ன என்பது போல் பார்க்க..."கொஞ்சம் மழை கம்மியாகட்டும் என்றவன் , ஒருவேளை என்மேல் நம்பிக்கை இல்லனா சொல்லிடு இப்போவே உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்" என்றான் அவளையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு…"அப்படியெல்லாம் ஏதுமில்லை" என உடனடியாக பதில் சொன்னவள்,அமைதியாக கொட்டும் மழையை வெறித்தாள்.
ஆல்ரெடி மழையில் கொஞ்சம் நனைந்த்திருக்க...இப்போது காரின்
ஏசி காற்றில் உடல் மெலிதாக குளிரில் நடுங்கிய தொடங்க,அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் காரின் ஏசியை அணைத்துவிட்டு காரிலிருந்த டவலை எடுத்து துவட்டி கொள்ளும்படி கொடுத்தான். அவன் அக்கறையில் நெகிழ்ந்தவள் அதனை வாங்கிக்கொண்டாள்.
சிறிது நேரம் கொட்டும் மழையின் சத்தத்தை தவிர எந்த சத்தமும் இல்லாமல் காரே அமைதியிலிருக்க...மெல்ல பேச்சை தொடங்கினான் ஆதி.
"நாளைக்கு என்ன விசேஷம்" என கேட்க,அவளோ கண்களில் கலக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
"அதான் பிடிக்கலை இல்ல, வாயை திறந்து உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே எனக்கு மகேஷை பிடிக்கலைனு. எதுக்கு அமைதியா இருந்து சாகடிகிற' என முதல்முறை தன் கோபத்தை அவளிடம் காட்டியவன், எல்லா நேரமும் இந்த அமைதி உன்னை காப்பாற்றாது திவ்யா…நமக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றாலும் சரி வேண்டாமென்றும் சரி நாம தான் அதுக்காக பேசணும் போராடனும். இது ஒன்னும் சினிமா இல்லை யாராவது வந்து நம்மை காப்பாற்ற... புரியுதா..?" என அவள் முகம் பார்க்க...அவளோ அவனின் கோப முகத்தை பார்த்த அதிர்ச்சிலிருந்தே வெளி வராதவள் எங்கே அவன் சொன்னதை கவனித்தாள். அவளின் நிலையை கண்டே அவள் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை என உணர்ந்தவனுக்கு இப்போது கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.
அவள் தோளை தொட்டு உலுக்கி, நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தவன். "இவளோ நேரம் நான் என்ன சொன்னேன் என்று நினைவிருக்கா" என கேட்க ...அவளோ தலையை குனிந்தபடி இல்லை என தலையாட்டினாள்.
அவனும் முதலில் சிரித்தவன் பின் சீரியஸான குரலில் "நாளைக்கு என்ன பண்ணுவதாக இருக்கிறாய்" என கேட்க..அவளோ பேந்த பேந்த முழித்தாள்.அப்படியே ஓங்கி மண்டையில் ஒன்று போடவேண்டும் போல் இருந்த ஆசையை கைவிட்டவன்...கோபமாக
"அப்போ அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா"..? என எரிந்து விழ...
கண்களில் கண்ணீரோடு "அதெல்லாம் ஒன்னும் இல்ல,கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை என்றால் செத்துடுவேன்" என்றாள்.
அதுவரை அவளிடம் கோபத்தை காட்ட கூடாது என கட்டுப்படுத்தியவன் விட்டான் ஒரு அறை,கன்னம் வின் வின் என தெறிக்க,பட்டு போன்ற மென்மையான கன்னம் சிவந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது.
"பைத்தியக்காரி... பைத்தியக்காரி ,நான் இருக்கும் போதே அதுவும் எங்கிட்டயே செத்துடுவேன் என சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்றவன்,அப்படியே செத்தாலும் சாவேனே தவிர உன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சொல்கிறாய் அப்படிதானே. பைத்தியக்காரன் மாதிரி அஞ்சு வருஷமா உனக்காக காத்திருக்கும் எனக்கு இதுதான் பதில் அப்படித்தானே. சொல்லுடி... எதுக்கு அமைதியாய் இருக்க சொல்லு...ஆமாம் அப்படித்தான் டா என சொல்லு, நானும் அப்படியே கண்கானாமல் போய்விடுகிறேன்" என்றான் கோபமாக…
அவளோ முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்.