அத்தியாயம் - 10
"ஏய் நீ என்ன லூசாடி"..? என்ன அடிச்சிட்டு நீ எதுக்கு அழுகிற,யாராவது பார்த்தா நான் என்னமோ உன்னை கொடுமைப்படுத்திய மாதிரி நினைக்க போறாங்க, முதலில் அழுகையை நிறுத்து" என கூறியவனை பார்த்து
"உனக்கு நிஜமாவே நான் எதுக்கு அடிச்சேன்னு தெரியாது,அப்படிதானே" என இடுப்பில் கைவைத்து முறைத்தவள் "அந்த வர்ஷா உன்கிட்ட, என்ன பேசிட்டு இருந்தா..?" என கேட்க...அவனோ "அது என்னோட பெர்சனல் அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது" என்றான்.
"எதுடா உன்னோட பெர்சனல்,நாலு வருஷமா ஒருத்தி உன் பின்னாடியே சுத்தி சுத்தி காதலிப்பதாக சொல்லியும்,அவளை கண்டுகொள்ளாமல் இப்போ நடுவில் அந்த மேக்கப் மூஞ்சி உன்னை லவ் பண்றேன்னு சொல்றா, நீயும் காலையில் வந்தவுடன் வேலையை கூட பார்க்காமல்,அவளோடு கேன்டீன் போனதுமில்லாமல் வீட்ல கொட்டிக்கிட்டது பத்தாதுன்னு இங்க அவளோட காஃபி குடிச்சிக்கிட்டே ஒரு மணி நேரம் அங்கேயே அவளிடம் கடலைப்போட்டுட்டு இருப்ப அதை நான் கேட்க கூடாதா..? ஒரு அடியோடு விட்டுட்டேன் என்று சந்தோஷப்படு அதுவும் அவளோட காதலை நீ ஏற்றுக்கொள்ள வில்லை என்பதால் தான் அடியோடு விட்டேன் இல்லைன்னா உன்னை கொலைப் பண்ணியிருப்பேன்" என்றாள் மூச்சுவிடாமல்.
"எனக்கு யாரை பிடித்திருக்கோ அவங்கிட்ட தான் பேச முடியும், இப்போதாவது புரிந்துகொள் எனக்கு உன்னை பிடிக்கவில்லை" என்று சொல்ல...அவளோ அவன் காலரை பிடித்தவள் "என்னை நிமிர்ந்து கண்ணை பார்த்து சொல்லு என்னை பிடிக்கலை,அவளைத்தான் பிடித்திருக்கு என்று…? இனிமே உன்னை சத்தியமா டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என விழிகளில் நீர்த்திரையிட அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு,அவன் பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்க….
ஒரு நிமிடம் விழி மூடி தயங்கி நின்றவன், பின்னர் அவள் கண்களைப் பார்த்து "எனக்கு உன்னை பிடிக்கலை" என்க,
அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவிட்டு,ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்தவள் " சாரி எல்லாத்துக்கும்" என்று சொல்லிவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
போகும் அவளை வெறுமையான பார்வைப் பார்த்தவன்,தன் இருக்கையில் விழி மூடி சாய்ந்து அமர்ந்தான்.அவன் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் மட்டும் கீழே விழுந்து சிதறியது,அவனின் காதலைப் போல.
எப்போதும் வாரத்தில் ஒருநாள் தன் தோழியுடன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்ட திவ்யா, இன்றும் தன் தோழி சவிதாவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.
லைனில் நின்று சுவாமி தரிசனத்தை முடித்தவர்கள்,ஒரு தூணுக்கு அடியில் சென்று அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருக்க, பக்கத்தில் யாரோ அமர்வது போல் இருக்க,திரும்பி பார்த்தவள் அங்கு ஆதியை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.
சவிதாவோ "எக்ஸ்க்யூஸ் மீ சார்"... நாங்க இங்க உட்கார்ந்து இருக்கிறது தெரியலையா ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்,வேற எங்காவது போய் உட்காருங்க, யாரோ தெரியாத நபர் என்று நினைத்து கோபமாக கூற...அவனோ "திவி உன்கிட்ட நான் தனியா பேசணும். அதனால் ஒழுங்கா உன் ஃப்ரெண்ட கிளம்ப சொல்லு,ரொம்ப பேசுறா அப்பறம் நடக்கும் சம்பவத்துக்கு நான் பொறுப்பில்லை" என்றவன்,
"உன்கிட்ட முன்கூட்டியே சொல்லியிருக்கேன் பழைய ஆதி மாதிரி பொறுமையாக எல்லாம் இருக்க முடியாது" என்றான்.
பின்னர் சவிதாவை நோக்கி திரும்பியவன்,"அதையே தான் நானும் கேட்கிறேன் மிஸ்.சவிதா ...ரைட்" என புருவத்தை ஏற்றி இறக்க,அவளும் என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என குழம்பியப்படி 'எஸ்' என்று தலையாட்ட...
அவனோ "ரெண்டு லவ்வர்ஸ் பேசிட்டு இருக்கும் போது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம பக்கத்தில் உட்கார்ந்து இருந்தால்,எங்களுக்கு எப்படி பிரைவசி கிடைக்கும்,சோ பெட்டர் யூ கேன் கோ" என வாசலை கைக்காட்டினான்.
அவளோ "வாட் நான் ஏன் போகணும்,நான் திவ்யாவை தனியாக விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன் என்றவள்,திவ்யா வா நாம்ம கிளம்பலாம்" என நண்பியை அழைக்க...அவளும் எழ முயன்றாள்.
திவ்யாவின் கையை அழுத்தி பிடித்து தடுத்தவன் "உன்கிட்ட நான் பேசணும் என்றவன், அப்படி நீ கண்டிப்பா உன் பிரெண்டோடு போக போகிறாய் என்றால் தாராளமாக கிளம்பலாம், ஆனா அதுக்கு முன்னாடி இதையும் கேட்டுக்கோ என்றவன்,அவள் காதருகில் குனிந்து " கோவிலை தாண்டி ஒரு அடியெடுத்து வைத்தாலும் எல்லார் முன்னாடியும் பப்ளிக்கா கட்டிபிடிச்சி கிஸ் பண்ணுவேன். உனக்கு ஓகே என்றால் தாராளமாக போகலாம். ஆனால் நான் சொன்னது மட்டும் கண்டிப்பா நடக்கும் என்றவன்,நீயே முடிவுப் பண்ணிக்கோ...நான் உன்கிட்ட தனியா பேசணும் அது கோவிலுக்குள் என்றால் டீசெண்ட்டா உன் முகத்தை பார்த்து பேசிட்டு போய்கிட்டே இருப்பேன்,இல்லை செகண்ட் ஆப்ஷன் தான் வேண்டுமென்றால் எனக்கும் டபிள் ஓகே" என்றான் கண்களை சிமிட்டி.
அவளோ அவன் சொன்ன வார்த்தையில் உறைந்து நின்றவள், அவன் முகத்தைப் பார்க்க.. அதில் நான் கண்டிப்பாக சொன்னதை செய்வேன் என்று உறுதி இருந்தது. அவளுக்கே சந்தேகமாக இருந்தது, ஐந்து வருடங்களாக அமைதியே உருவாக இருந்தவனா இவன் என்று..? அவனின் புதிதான நடவடிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் சற்று மிரண்டுதான் போனாள்.
பின்னர் தன் தோழியிடம் "நீ போடி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று சொல்ல,அவளோ இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்தவாறே வெளியே சென்றாள்.
திவ்யா தன் பயத்தை ஒதுக்கியவள்,நேரம் ஆவதை கருத்தில் கொண்டு..."ஏதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகிடுச்சு" என்றாள்.
ஆதியோ எடுத்த எடுப்பில் "நேத்து உங்க வீட்டுக்கு யார் வந்தாங்க..? எதுக்காக வந்தார்கள்..? நீ எதுக்காக வேலைக்கு லீவ் போட்டாய்..?" என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...அவளோ அவன் வேறு எதைப் பற்றியோ பேசப்போகிறான் என நினைத்திருக்க, அவனிடம் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது... அது...ஊரிலிருந்து அத்தை வந்தாங்க" என திணறலான குரலில் சொல்ல….அவனோ "அப்பறம் அவ்வளவு தானா" என கேட்க,அவளோ இன்னும் என்ன என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.
"வேற எதுவும் நடக்கலையா..?" என்றவனை பார்த்து தயங்கியவாறே "அது எனக்கும் அவங்க பையனுக்கும் கல்யாணம்" என சொல்லி முடிப்பதற்குள், அவள் இதழ்களில் மீது தன் விரலை வைத்தவன்,
"சும்மா பேச்சுக்காக கூட அப்படி சொல்லாதே என்றவன்,அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி உனக்கு அதில் சம்மதமா..?" என கேட்க கூட பிடிக்காத வார்த்தையை அவளின் மனதை அறிய வேண்டி கேட்க...அவளோ வேகமாக "ச்சிசீ" என சொல்லியவாறே தலையாட்டியவள் அவனை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது" என தன்னையும் அறியாமல் பதில் சொல்லியவளாக முகத்தை சுழித்தாள்.
அவள் பதிலில் மனம் லேசாக,பைத்தியக்காரி அவனை பத்தி பேசிய உடனேயே பிடிக்கவில்லை என சொல்ல தெரிந்த உன்னால்.. ஐந்து வருடங்களாக என்னை பார்த்து இந்த வார்த்தையை ஒருமுறை கூட உபயோகிக்கவில்லை என்பது மட்டும் உன் மண்டையில் என்றைக்கு தான் ஏறுமோ என நினைத்தவன்,இப்போது தான் கவலை மறந்து தன்னவளை ரசிக்க தொடங்கினான்.
அவளை ரசித்தபடியே ..."எனக்கு பிரசாதம் எல்லாம் தரமாட்டியா..?" என சிரிப்பை அடக்கியபடி கேட்க,அவளோ பேப்பரில் மடித்து வைத்த தீருநீரை அவன் முன் நீட்ட,அவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியப்படி தலையை மட்டும் முன் பக்கமாக நகர்த்தி நீயே வைத்துவிட்டு என சொல்ல,
அவள் தயக்கமாக "இல்ல நீங்களே " என திக்கித் திணற...அவனோ கண்களை மூடி அதே நிலையில் அமர்ந்திருந்தான்.அவளும் வேறு வழியின்றி மெல்ல தன் தளிர் விரல்களால் அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு கைகளை அகற்றிக்கொண்டாள்.
விழி திறந்தவன்,அவள் கைகளில் இருந்த சர்க்கரைப் பொங்கலை பறிக்க, அவள் "அது நான் சாப்பிட்டு வைத்த மிச்சம்" என சொல்லுவதற்குள் சாப்பிட தொடங்கிவிட்டான். "சர்க்கரை பொங்கல் ரொம்ப இனிப்பாக இருக்கு" என்க,அவளோ "அப்படியெல்லாம் இல்லையே இனிப்பு சரியா தான் இருந்தது" என்றாள்.
ஆதியோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "எனக்கு மட்டும் அப்படி இருக்கும் போல என அவள் இதழ்களை பார்த்தபடி சொன்னவன்,சரி வா போகலாம் டைம் ஆகிடுச்சு" என்றபடி எழுந்து,அவள் எழ கைநீட்ட,
அவளோ "வேண்டாம் நானே" என சொன்னவள்,எழும்போது தன் ஷாலை மிதித்துவிட ஷாலோ தோளில் சுடித்தாரோடு ஃபின் பண்ணியிருந்தவள் தடுக்கி விழ அதற்குள் ஆதி அவளை தாங்கிப்பிடித்தான்.
"சொல் பேச்சை கேட்க கூடாது என்றே நினைத்துகொண்டு இருக்கிறாயா"..? என்றவன்,அவளை எழுப்பி ஒழுங்காக நிற்க வைத்தான். அவளோ ஒரு அசட்டு சிரிப்பை உதித்தவள் "சாரி" என்றாள்.
பின்னர் இருவரும் வெளியே செல்ல...வாசலை கடந்தவுடன் ஆதியை விட்டு தள்ளியே வந்தவளை பார்த்து...அவள் செய்கையின் அர்த்தம் புரிந்தவன், " ஹா ஹா" என சத்தமாக வாய்விட்டு சிரித்தவன் திவி பேபி எனக்கு கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்கும் எண்ணமெல்லாம் இப்போ இல்லை கவலைப்படாதே,எல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் தான்...நானெல்லாம் ரொம்ப குட் பாய்" என்றவன், அவள் கையிலுள்ள ஸ்கூட்டி சாவியை வாங்கி, அவனே சென்று வண்டியை எடுத்து கொடுத்தவன்,அவள் வீடு சேரும்வரை பின் தொடர்ந்துவிட்டே தன் வீடு வந்து சேர்ந்தான்.
அன்று அதற்கு மேல் நந்தினியை யாரும் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். அன்றைய நாள் அவ்வாறே முடிய...மறுநாளும் விடிந்தது.இன்று அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் சற்று பரபரப்பாக காணப்பட்டது அந்த காலைப்பொழுது.
அனைவரும் உணவருந்த டைனிங் டேபிளில் கூடியிருக்க...தங்கள் உணவை உண்ணத் தொடங்கினர். அப்போது மதன் உள்ளே வர..."ஏண்டா இவ்வளவு நேரம்,எல்லாரும் சாப்பிட தொடங்கிட்டாங்க.. வா வந்து சாப்பிடு" என்ற கீர்த்தனா, அவனுக்கும் தட்டைவைத்து பரிமாற தொடங்கினார்.
"ஸ்ஸ்... ஆஆ அம்மா....என கத்தியவாறு என்னம்மா சட்னி இவ்வளவு காரமா இருக்கு" என்றவள், தண்ணீரை எடுத்து பருகத் தொடங்கினாள்.
"அத்தை அவளுக்கு தான் காரம் என்றாலே ஒத்துக்காதே,அப்பறம் எதுக்காக இவளோ காரமாக செய்தீங்க. பாருங்க இதுக்கே கண்ணு மூக்கு எல்லாம் சிவந்த்துப்போச்சு" என்றவன் அவள் தட்டை எடுத்து தூரம் வைத்துவிட்டு புதிதாக தட்டில் இட்லியும் சாம்பார் மட்டும் பரிமாரியவன்...நந்து இதை மட்டும் சாப்பிடு என கொடுக்க,அவளோ அதற்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டால் காரம் தாங்காமல்.
அதுவரை அமைதியாக இருந்த பாட்டி…"உன் ஒருத்திக்காக காரம் இல்லாமல் சமைத்தால் நாங்களெல்லாம் எப்படி சாப்பிடுவது,எங்களுக்கு காரமாக சாப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு" என்றபடி இட்லியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தார்.
ஆதியோ "அப்படியா பாட்டி" சொல்லவே இல்ல என நக்கலாக கூறியவன்,எழுந்து சமையலறை சென்று ஒரு பாத்திரத்தை எடுத்துவந்தவன்,அதை திறந்து வைத்துவிட்டு "சிட்னி விட இது காரமாக இருக்கும் பாட்டி இதை சாப்பிடுங்க" என்று மிளகாய் தூளை கட்டியவன் தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.
"ஆதி எதில் விளையாடுவது என்று இல்லை,இப்படி சாப்பிடும் போது மிளகாய்தூளை வைத்தால் எப்படி சாப்பிடுவது" என ராதா மகனை கத்த,
அவனோ "உங்க அம்மா தான் காரம் பத்தலைன்னு சொன்னாங்க. அவங்களை கேளுங்க என்றவன், தன் தட்டில் கவனமானன். விக்ரம் நந்துவின் முகத்தை பார்க்க,இன்னும் உதட்டை குவித்து "ஊப் ஊப்" என சத்தமிட்டவாறு தண்ணீரையே குடித்துகொண்டிருந்தாள்.அதற்குள் ராகவனோ அடுத்த வேலையை தொடங்கிவிட்டார்.
"என்னப்பா மதன் விக்ரம் கம்பெனியில வேலை செய்கிறாய் போல" என்க..
அவனும் "ஆமாம் சார்" என மகிழ்ச்சியாகவே தன் நண்பனின் கம்பெனியில் வேலை செய்வத்தை சொல்ல...அவரும் அவனை காயப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் "சந்தோஷமா இருக்காதா பின்ன, வேலை தேடி அலைய வேண்டாம்,எல்லா கம்பெனியை விட அதிக சம்பளம்,வேலை செய்யவில்லை என்றாலும் யாரும் கேட்கமாட்டாங்க...இது எல்லாத்தையும் தவிர தினமும் காலையில் டிஃபன் செலவும் இல்ல அப்போ சந்தோஷமா தான் இருப்பாய்" என குத்தலாக சொல்ல...சாப்பிட்டு கொண்டிருந்தவனின் கை தட்டிற்கும் வாய்க்கும் இடையே அப்படியே அந்தரத்தில் நின்றது.
அனைவரும் இப்படிப்பட்ட பேச்சை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை. விக்ரம் ஆதி இருவருக்கும் அப்படி ஒரு கோபம். முதலில் தொடங்கிய ஆதி "மாமா யாரை பார்த்து என்ன சொல்றீங்க..? இதே வார்த்தையை உங்களை தவிர வேற யாராவது சொல்லியிருந்தால், இந்நேரம் அவன் உடம்பில் உயிர் இருந்திருக்காது" என்றான் கோபமாக.
மதன் கண்கள் கலங்கத் தொடங்க...அனைவர் முன்பும் அழுதுவிட கூடாது என்பதால் அதன்பின் ஒரு வாய் கூட உண்ணாமல் கைக்கழுவியவன்,கீர்த்தனாவை நோக்கி "அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. அப்பறம் வரேன்" என்றவன்,அவர்கள் தடுத்து பேசும் முன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
சந்தியாவோ அவன் வந்தபின் குனிந்த தலை நிமிராமல் இருந்தவள்,அவன் கலக்கத்தோடு வெளியேறுவதை பார்த்து, தன் கண்ணீரை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டாள்.
"என்ன மச்சான் இப்படி சொல்லிட்டீங்க..? மதன் எத்தனையோ தடவை மாட்டேன் என்று சொல்லியும் நாங்கதான் காலையில் இங்கதான் சாப்பிடனும்னு கட்டாயப்படுத்தினோம். நீங்க பேசியதில் சாப்பிடாமல் கூட எழுந்து போய்விட்டான்" என கண்ணன் ஆதங்கமாக சொல்ல..அவரோ "நான் சாதாரணமாக தான் சொன்னேன்,அதை தப்பா புரிந்துகொண்டாள் நான் என்ன செய்யமுடியும்" என்றவர் சாப்பிட தொடங்கினார்.
பின்னர் அதற்கு மேல் யாருக்கும் உண்ண பிடிக்காமல் நந்து ஆதி சந்தியா விக்ரம் என அனைவரும் சாப்பிடாமல் தங்கள் வேலைக்கு செல்லத் தொடங்கினர். ராகவனுக்கு அது இன்னும் ஆத்திரத்தை கொடுத்தது,எவனோ ஒருத்தனை சொன்னவுடன் மொத்த குடும்பமும் இப்படி சாப்பிடாமல் செல்வதிலேயே அந்த வீட்டில் மதனின் இடத்தை நன்றாகவே புரிந்துகொண்டார். ஆளாளுக்கு என்னை கேள்விக் கேட்கிறாங்க,அப்படியென்றால் ரோட்டில் போறவனுக்கு இருக்கும் உரிமையும் மரியாதையும் கூட இந்த வீட்டில் எனக்கு இல்லை என்று தானே அர்த்தம் என நினைத்தவர்,ஒரேயடியாக அவனை இந்த வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கிறேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
பின்னர் அனைவரும் சென்றுவிட...விக்ரம் தன் கார் அருகில் நின்றுக்கொண்டு யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க,அப்போது வெளியே வந்த ராகவனை பார்த்து... "ஒரு நிமிஷம் மிஸ்டர்.ராகவன் என்க...
அவரோ "ஏய் என்னடா திமிரா உன் அதிகாரத்தை எல்லாம் யாருகிட்டயாவது வைத்துக்கொள். பெயர் சொல்லி கூப்பிடுகிறாய்..? நான் உனக்கு தாய்மாமா அதற்குண்டான மரியாதை கொடுத்து பேசு" என்றார்.
விக்ரம் " மரியாதை என்பது ஒருவரை பார்த்து தானாக அவரின் நல்ல நடவடிக்கையின் பேரில் கொடுப்பது,அதெல்லாம் கேட்டுவாங்க கூடாது. அதற்கான தகுதி உங்களுக்கு இருந்தால் மரியாதை தானாக வரும்,இப்போ அது உங்ககிட்ட இல்லை அதனால் என்கிட்ட அதை எதிர் பார்க்காதீர்கள்" என்றவன்,
"இந்த வீட்டிலுள்ள எல்லாரும் உங்களை நல்லவன் வல்லவன் என்று சொன்னாலும் அதை நான் நம்ம மாட்டேன்,உங்களை பற்றி முழுசா தெரிந்த ஒரே ஆள் நான் தான்..அதனால் என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...மதன் இங்க வருவதினாலோ,சாப்பிடுவதனால் உங்க அப்பா வீட்டு காசு ஒன்னும் கரைந்துப்போகாது,போறது எங்க அப்பாவீட்டு பணம் தான் அதனால் கொஞ்சம் உங்க வேலையை மட்டும் பார்த்திட்டு ...வந்தோமா போனோமா என்று இருக்கணும், அவனாவது உங்களை மாமா என்பதற்காக வார்த்தையோடு நிறுத்திட்டான். ஆனா நான் அதையெல்லாம் பார்க்கமாட்டேன்,சொன்னதை உண்மையில் செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் ஜாக்கிரதை" என்றவன் தன் காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
"ஏய் நீ என்ன லூசாடி"..? என்ன அடிச்சிட்டு நீ எதுக்கு அழுகிற,யாராவது பார்த்தா நான் என்னமோ உன்னை கொடுமைப்படுத்திய மாதிரி நினைக்க போறாங்க, முதலில் அழுகையை நிறுத்து" என கூறியவனை பார்த்து
"உனக்கு நிஜமாவே நான் எதுக்கு அடிச்சேன்னு தெரியாது,அப்படிதானே" என இடுப்பில் கைவைத்து முறைத்தவள் "அந்த வர்ஷா உன்கிட்ட, என்ன பேசிட்டு இருந்தா..?" என கேட்க...அவனோ "அது என்னோட பெர்சனல் அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது" என்றான்.
"எதுடா உன்னோட பெர்சனல்,நாலு வருஷமா ஒருத்தி உன் பின்னாடியே சுத்தி சுத்தி காதலிப்பதாக சொல்லியும்,அவளை கண்டுகொள்ளாமல் இப்போ நடுவில் அந்த மேக்கப் மூஞ்சி உன்னை லவ் பண்றேன்னு சொல்றா, நீயும் காலையில் வந்தவுடன் வேலையை கூட பார்க்காமல்,அவளோடு கேன்டீன் போனதுமில்லாமல் வீட்ல கொட்டிக்கிட்டது பத்தாதுன்னு இங்க அவளோட காஃபி குடிச்சிக்கிட்டே ஒரு மணி நேரம் அங்கேயே அவளிடம் கடலைப்போட்டுட்டு இருப்ப அதை நான் கேட்க கூடாதா..? ஒரு அடியோடு விட்டுட்டேன் என்று சந்தோஷப்படு அதுவும் அவளோட காதலை நீ ஏற்றுக்கொள்ள வில்லை என்பதால் தான் அடியோடு விட்டேன் இல்லைன்னா உன்னை கொலைப் பண்ணியிருப்பேன்" என்றாள் மூச்சுவிடாமல்.
"எனக்கு யாரை பிடித்திருக்கோ அவங்கிட்ட தான் பேச முடியும், இப்போதாவது புரிந்துகொள் எனக்கு உன்னை பிடிக்கவில்லை" என்று சொல்ல...அவளோ அவன் காலரை பிடித்தவள் "என்னை நிமிர்ந்து கண்ணை பார்த்து சொல்லு என்னை பிடிக்கலை,அவளைத்தான் பிடித்திருக்கு என்று…? இனிமே உன்னை சத்தியமா டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என விழிகளில் நீர்த்திரையிட அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு,அவன் பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்க….
ஒரு நிமிடம் விழி மூடி தயங்கி நின்றவன், பின்னர் அவள் கண்களைப் பார்த்து "எனக்கு உன்னை பிடிக்கலை" என்க,
அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவிட்டு,ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்தவள் " சாரி எல்லாத்துக்கும்" என்று சொல்லிவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
போகும் அவளை வெறுமையான பார்வைப் பார்த்தவன்,தன் இருக்கையில் விழி மூடி சாய்ந்து அமர்ந்தான்.அவன் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் மட்டும் கீழே விழுந்து சிதறியது,அவனின் காதலைப் போல.
எப்போதும் வாரத்தில் ஒருநாள் தன் தோழியுடன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்ட திவ்யா, இன்றும் தன் தோழி சவிதாவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.
லைனில் நின்று சுவாமி தரிசனத்தை முடித்தவர்கள்,ஒரு தூணுக்கு அடியில் சென்று அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருக்க, பக்கத்தில் யாரோ அமர்வது போல் இருக்க,திரும்பி பார்த்தவள் அங்கு ஆதியை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.
சவிதாவோ "எக்ஸ்க்யூஸ் மீ சார்"... நாங்க இங்க உட்கார்ந்து இருக்கிறது தெரியலையா ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்,வேற எங்காவது போய் உட்காருங்க, யாரோ தெரியாத நபர் என்று நினைத்து கோபமாக கூற...அவனோ "திவி உன்கிட்ட நான் தனியா பேசணும். அதனால் ஒழுங்கா உன் ஃப்ரெண்ட கிளம்ப சொல்லு,ரொம்ப பேசுறா அப்பறம் நடக்கும் சம்பவத்துக்கு நான் பொறுப்பில்லை" என்றவன்,
"உன்கிட்ட முன்கூட்டியே சொல்லியிருக்கேன் பழைய ஆதி மாதிரி பொறுமையாக எல்லாம் இருக்க முடியாது" என்றான்.
பின்னர் சவிதாவை நோக்கி திரும்பியவன்,"அதையே தான் நானும் கேட்கிறேன் மிஸ்.சவிதா ...ரைட்" என புருவத்தை ஏற்றி இறக்க,அவளும் என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என குழம்பியப்படி 'எஸ்' என்று தலையாட்ட...
அவனோ "ரெண்டு லவ்வர்ஸ் பேசிட்டு இருக்கும் போது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம பக்கத்தில் உட்கார்ந்து இருந்தால்,எங்களுக்கு எப்படி பிரைவசி கிடைக்கும்,சோ பெட்டர் யூ கேன் கோ" என வாசலை கைக்காட்டினான்.
அவளோ "வாட் நான் ஏன் போகணும்,நான் திவ்யாவை தனியாக விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன் என்றவள்,திவ்யா வா நாம்ம கிளம்பலாம்" என நண்பியை அழைக்க...அவளும் எழ முயன்றாள்.
திவ்யாவின் கையை அழுத்தி பிடித்து தடுத்தவன் "உன்கிட்ட நான் பேசணும் என்றவன், அப்படி நீ கண்டிப்பா உன் பிரெண்டோடு போக போகிறாய் என்றால் தாராளமாக கிளம்பலாம், ஆனா அதுக்கு முன்னாடி இதையும் கேட்டுக்கோ என்றவன்,அவள் காதருகில் குனிந்து " கோவிலை தாண்டி ஒரு அடியெடுத்து வைத்தாலும் எல்லார் முன்னாடியும் பப்ளிக்கா கட்டிபிடிச்சி கிஸ் பண்ணுவேன். உனக்கு ஓகே என்றால் தாராளமாக போகலாம். ஆனால் நான் சொன்னது மட்டும் கண்டிப்பா நடக்கும் என்றவன்,நீயே முடிவுப் பண்ணிக்கோ...நான் உன்கிட்ட தனியா பேசணும் அது கோவிலுக்குள் என்றால் டீசெண்ட்டா உன் முகத்தை பார்த்து பேசிட்டு போய்கிட்டே இருப்பேன்,இல்லை செகண்ட் ஆப்ஷன் தான் வேண்டுமென்றால் எனக்கும் டபிள் ஓகே" என்றான் கண்களை சிமிட்டி.
அவளோ அவன் சொன்ன வார்த்தையில் உறைந்து நின்றவள், அவன் முகத்தைப் பார்க்க.. அதில் நான் கண்டிப்பாக சொன்னதை செய்வேன் என்று உறுதி இருந்தது. அவளுக்கே சந்தேகமாக இருந்தது, ஐந்து வருடங்களாக அமைதியே உருவாக இருந்தவனா இவன் என்று..? அவனின் புதிதான நடவடிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் சற்று மிரண்டுதான் போனாள்.
பின்னர் தன் தோழியிடம் "நீ போடி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று சொல்ல,அவளோ இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்தவாறே வெளியே சென்றாள்.
திவ்யா தன் பயத்தை ஒதுக்கியவள்,நேரம் ஆவதை கருத்தில் கொண்டு..."ஏதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகிடுச்சு" என்றாள்.
ஆதியோ எடுத்த எடுப்பில் "நேத்து உங்க வீட்டுக்கு யார் வந்தாங்க..? எதுக்காக வந்தார்கள்..? நீ எதுக்காக வேலைக்கு லீவ் போட்டாய்..?" என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...அவளோ அவன் வேறு எதைப் பற்றியோ பேசப்போகிறான் என நினைத்திருக்க, அவனிடம் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது... அது...ஊரிலிருந்து அத்தை வந்தாங்க" என திணறலான குரலில் சொல்ல….அவனோ "அப்பறம் அவ்வளவு தானா" என கேட்க,அவளோ இன்னும் என்ன என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.
"வேற எதுவும் நடக்கலையா..?" என்றவனை பார்த்து தயங்கியவாறே "அது எனக்கும் அவங்க பையனுக்கும் கல்யாணம்" என சொல்லி முடிப்பதற்குள், அவள் இதழ்களில் மீது தன் விரலை வைத்தவன்,
"சும்மா பேச்சுக்காக கூட அப்படி சொல்லாதே என்றவன்,அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி உனக்கு அதில் சம்மதமா..?" என கேட்க கூட பிடிக்காத வார்த்தையை அவளின் மனதை அறிய வேண்டி கேட்க...அவளோ வேகமாக "ச்சிசீ" என சொல்லியவாறே தலையாட்டியவள் அவனை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது" என தன்னையும் அறியாமல் பதில் சொல்லியவளாக முகத்தை சுழித்தாள்.
அவள் பதிலில் மனம் லேசாக,பைத்தியக்காரி அவனை பத்தி பேசிய உடனேயே பிடிக்கவில்லை என சொல்ல தெரிந்த உன்னால்.. ஐந்து வருடங்களாக என்னை பார்த்து இந்த வார்த்தையை ஒருமுறை கூட உபயோகிக்கவில்லை என்பது மட்டும் உன் மண்டையில் என்றைக்கு தான் ஏறுமோ என நினைத்தவன்,இப்போது தான் கவலை மறந்து தன்னவளை ரசிக்க தொடங்கினான்.
அவளை ரசித்தபடியே ..."எனக்கு பிரசாதம் எல்லாம் தரமாட்டியா..?" என சிரிப்பை அடக்கியபடி கேட்க,அவளோ பேப்பரில் மடித்து வைத்த தீருநீரை அவன் முன் நீட்ட,அவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியப்படி தலையை மட்டும் முன் பக்கமாக நகர்த்தி நீயே வைத்துவிட்டு என சொல்ல,
அவள் தயக்கமாக "இல்ல நீங்களே " என திக்கித் திணற...அவனோ கண்களை மூடி அதே நிலையில் அமர்ந்திருந்தான்.அவளும் வேறு வழியின்றி மெல்ல தன் தளிர் விரல்களால் அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு கைகளை அகற்றிக்கொண்டாள்.
விழி திறந்தவன்,அவள் கைகளில் இருந்த சர்க்கரைப் பொங்கலை பறிக்க, அவள் "அது நான் சாப்பிட்டு வைத்த மிச்சம்" என சொல்லுவதற்குள் சாப்பிட தொடங்கிவிட்டான். "சர்க்கரை பொங்கல் ரொம்ப இனிப்பாக இருக்கு" என்க,அவளோ "அப்படியெல்லாம் இல்லையே இனிப்பு சரியா தான் இருந்தது" என்றாள்.
ஆதியோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "எனக்கு மட்டும் அப்படி இருக்கும் போல என அவள் இதழ்களை பார்த்தபடி சொன்னவன்,சரி வா போகலாம் டைம் ஆகிடுச்சு" என்றபடி எழுந்து,அவள் எழ கைநீட்ட,
அவளோ "வேண்டாம் நானே" என சொன்னவள்,எழும்போது தன் ஷாலை மிதித்துவிட ஷாலோ தோளில் சுடித்தாரோடு ஃபின் பண்ணியிருந்தவள் தடுக்கி விழ அதற்குள் ஆதி அவளை தாங்கிப்பிடித்தான்.
"சொல் பேச்சை கேட்க கூடாது என்றே நினைத்துகொண்டு இருக்கிறாயா"..? என்றவன்,அவளை எழுப்பி ஒழுங்காக நிற்க வைத்தான். அவளோ ஒரு அசட்டு சிரிப்பை உதித்தவள் "சாரி" என்றாள்.
பின்னர் இருவரும் வெளியே செல்ல...வாசலை கடந்தவுடன் ஆதியை விட்டு தள்ளியே வந்தவளை பார்த்து...அவள் செய்கையின் அர்த்தம் புரிந்தவன், " ஹா ஹா" என சத்தமாக வாய்விட்டு சிரித்தவன் திவி பேபி எனக்கு கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்கும் எண்ணமெல்லாம் இப்போ இல்லை கவலைப்படாதே,எல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் தான்...நானெல்லாம் ரொம்ப குட் பாய்" என்றவன், அவள் கையிலுள்ள ஸ்கூட்டி சாவியை வாங்கி, அவனே சென்று வண்டியை எடுத்து கொடுத்தவன்,அவள் வீடு சேரும்வரை பின் தொடர்ந்துவிட்டே தன் வீடு வந்து சேர்ந்தான்.
அன்று அதற்கு மேல் நந்தினியை யாரும் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். அன்றைய நாள் அவ்வாறே முடிய...மறுநாளும் விடிந்தது.இன்று அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் சற்று பரபரப்பாக காணப்பட்டது அந்த காலைப்பொழுது.
அனைவரும் உணவருந்த டைனிங் டேபிளில் கூடியிருக்க...தங்கள் உணவை உண்ணத் தொடங்கினர். அப்போது மதன் உள்ளே வர..."ஏண்டா இவ்வளவு நேரம்,எல்லாரும் சாப்பிட தொடங்கிட்டாங்க.. வா வந்து சாப்பிடு" என்ற கீர்த்தனா, அவனுக்கும் தட்டைவைத்து பரிமாற தொடங்கினார்.
"ஸ்ஸ்... ஆஆ அம்மா....என கத்தியவாறு என்னம்மா சட்னி இவ்வளவு காரமா இருக்கு" என்றவள், தண்ணீரை எடுத்து பருகத் தொடங்கினாள்.
"அத்தை அவளுக்கு தான் காரம் என்றாலே ஒத்துக்காதே,அப்பறம் எதுக்காக இவளோ காரமாக செய்தீங்க. பாருங்க இதுக்கே கண்ணு மூக்கு எல்லாம் சிவந்த்துப்போச்சு" என்றவன் அவள் தட்டை எடுத்து தூரம் வைத்துவிட்டு புதிதாக தட்டில் இட்லியும் சாம்பார் மட்டும் பரிமாரியவன்...நந்து இதை மட்டும் சாப்பிடு என கொடுக்க,அவளோ அதற்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டால் காரம் தாங்காமல்.
அதுவரை அமைதியாக இருந்த பாட்டி…"உன் ஒருத்திக்காக காரம் இல்லாமல் சமைத்தால் நாங்களெல்லாம் எப்படி சாப்பிடுவது,எங்களுக்கு காரமாக சாப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு" என்றபடி இட்லியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தார்.
ஆதியோ "அப்படியா பாட்டி" சொல்லவே இல்ல என நக்கலாக கூறியவன்,எழுந்து சமையலறை சென்று ஒரு பாத்திரத்தை எடுத்துவந்தவன்,அதை திறந்து வைத்துவிட்டு "சிட்னி விட இது காரமாக இருக்கும் பாட்டி இதை சாப்பிடுங்க" என்று மிளகாய் தூளை கட்டியவன் தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.
"ஆதி எதில் விளையாடுவது என்று இல்லை,இப்படி சாப்பிடும் போது மிளகாய்தூளை வைத்தால் எப்படி சாப்பிடுவது" என ராதா மகனை கத்த,
அவனோ "உங்க அம்மா தான் காரம் பத்தலைன்னு சொன்னாங்க. அவங்களை கேளுங்க என்றவன், தன் தட்டில் கவனமானன். விக்ரம் நந்துவின் முகத்தை பார்க்க,இன்னும் உதட்டை குவித்து "ஊப் ஊப்" என சத்தமிட்டவாறு தண்ணீரையே குடித்துகொண்டிருந்தாள்.அதற்குள் ராகவனோ அடுத்த வேலையை தொடங்கிவிட்டார்.
"என்னப்பா மதன் விக்ரம் கம்பெனியில வேலை செய்கிறாய் போல" என்க..
அவனும் "ஆமாம் சார்" என மகிழ்ச்சியாகவே தன் நண்பனின் கம்பெனியில் வேலை செய்வத்தை சொல்ல...அவரும் அவனை காயப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் "சந்தோஷமா இருக்காதா பின்ன, வேலை தேடி அலைய வேண்டாம்,எல்லா கம்பெனியை விட அதிக சம்பளம்,வேலை செய்யவில்லை என்றாலும் யாரும் கேட்கமாட்டாங்க...இது எல்லாத்தையும் தவிர தினமும் காலையில் டிஃபன் செலவும் இல்ல அப்போ சந்தோஷமா தான் இருப்பாய்" என குத்தலாக சொல்ல...சாப்பிட்டு கொண்டிருந்தவனின் கை தட்டிற்கும் வாய்க்கும் இடையே அப்படியே அந்தரத்தில் நின்றது.
அனைவரும் இப்படிப்பட்ட பேச்சை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை. விக்ரம் ஆதி இருவருக்கும் அப்படி ஒரு கோபம். முதலில் தொடங்கிய ஆதி "மாமா யாரை பார்த்து என்ன சொல்றீங்க..? இதே வார்த்தையை உங்களை தவிர வேற யாராவது சொல்லியிருந்தால், இந்நேரம் அவன் உடம்பில் உயிர் இருந்திருக்காது" என்றான் கோபமாக.
மதன் கண்கள் கலங்கத் தொடங்க...அனைவர் முன்பும் அழுதுவிட கூடாது என்பதால் அதன்பின் ஒரு வாய் கூட உண்ணாமல் கைக்கழுவியவன்,கீர்த்தனாவை நோக்கி "அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. அப்பறம் வரேன்" என்றவன்,அவர்கள் தடுத்து பேசும் முன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
சந்தியாவோ அவன் வந்தபின் குனிந்த தலை நிமிராமல் இருந்தவள்,அவன் கலக்கத்தோடு வெளியேறுவதை பார்த்து, தன் கண்ணீரை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டாள்.
"என்ன மச்சான் இப்படி சொல்லிட்டீங்க..? மதன் எத்தனையோ தடவை மாட்டேன் என்று சொல்லியும் நாங்கதான் காலையில் இங்கதான் சாப்பிடனும்னு கட்டாயப்படுத்தினோம். நீங்க பேசியதில் சாப்பிடாமல் கூட எழுந்து போய்விட்டான்" என கண்ணன் ஆதங்கமாக சொல்ல..அவரோ "நான் சாதாரணமாக தான் சொன்னேன்,அதை தப்பா புரிந்துகொண்டாள் நான் என்ன செய்யமுடியும்" என்றவர் சாப்பிட தொடங்கினார்.
பின்னர் அதற்கு மேல் யாருக்கும் உண்ண பிடிக்காமல் நந்து ஆதி சந்தியா விக்ரம் என அனைவரும் சாப்பிடாமல் தங்கள் வேலைக்கு செல்லத் தொடங்கினர். ராகவனுக்கு அது இன்னும் ஆத்திரத்தை கொடுத்தது,எவனோ ஒருத்தனை சொன்னவுடன் மொத்த குடும்பமும் இப்படி சாப்பிடாமல் செல்வதிலேயே அந்த வீட்டில் மதனின் இடத்தை நன்றாகவே புரிந்துகொண்டார். ஆளாளுக்கு என்னை கேள்விக் கேட்கிறாங்க,அப்படியென்றால் ரோட்டில் போறவனுக்கு இருக்கும் உரிமையும் மரியாதையும் கூட இந்த வீட்டில் எனக்கு இல்லை என்று தானே அர்த்தம் என நினைத்தவர்,ஒரேயடியாக அவனை இந்த வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கிறேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
பின்னர் அனைவரும் சென்றுவிட...விக்ரம் தன் கார் அருகில் நின்றுக்கொண்டு யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க,அப்போது வெளியே வந்த ராகவனை பார்த்து... "ஒரு நிமிஷம் மிஸ்டர்.ராகவன் என்க...
அவரோ "ஏய் என்னடா திமிரா உன் அதிகாரத்தை எல்லாம் யாருகிட்டயாவது வைத்துக்கொள். பெயர் சொல்லி கூப்பிடுகிறாய்..? நான் உனக்கு தாய்மாமா அதற்குண்டான மரியாதை கொடுத்து பேசு" என்றார்.
விக்ரம் " மரியாதை என்பது ஒருவரை பார்த்து தானாக அவரின் நல்ல நடவடிக்கையின் பேரில் கொடுப்பது,அதெல்லாம் கேட்டுவாங்க கூடாது. அதற்கான தகுதி உங்களுக்கு இருந்தால் மரியாதை தானாக வரும்,இப்போ அது உங்ககிட்ட இல்லை அதனால் என்கிட்ட அதை எதிர் பார்க்காதீர்கள்" என்றவன்,
"இந்த வீட்டிலுள்ள எல்லாரும் உங்களை நல்லவன் வல்லவன் என்று சொன்னாலும் அதை நான் நம்ம மாட்டேன்,உங்களை பற்றி முழுசா தெரிந்த ஒரே ஆள் நான் தான்..அதனால் என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...மதன் இங்க வருவதினாலோ,சாப்பிடுவதனால் உங்க அப்பா வீட்டு காசு ஒன்னும் கரைந்துப்போகாது,போறது எங்க அப்பாவீட்டு பணம் தான் அதனால் கொஞ்சம் உங்க வேலையை மட்டும் பார்த்திட்டு ...வந்தோமா போனோமா என்று இருக்கணும், அவனாவது உங்களை மாமா என்பதற்காக வார்த்தையோடு நிறுத்திட்டான். ஆனா நான் அதையெல்லாம் பார்க்கமாட்டேன்,சொன்னதை உண்மையில் செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் ஜாக்கிரதை" என்றவன் தன் காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்