அத்தியாயம் - 5
எப்போதும் பரபரப்புடன் இருக்கும் அந்த பிரபலமான மருத்துவமனையின், ஓ.பி.டி என்றும் போல் இன்றும், பல நோயாளிகள் மருத்துவர்களை காண காத்திருந்தனர். ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றவாறு இதயம், மூளை,குழந்தைகள்,மனநலம் என அதற்கென்று ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களின் அறைகள் முன்பு ஒரு கூட்டமே காத்திருந்தது.
முதலில் எல்லாம் கோயில்களிலும் விசேஷ வீடுகளில் மட்டுமே கூட்டம் அலைமோதி கொண்டிருக்கும்... இப்போது அதனை காட்டிலும் மருத்துவமனைகளில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வர தொடங்கிவிட்டனர். நமது வாழ்க்கை தரம் உயர உயர நோய்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.
நந்தினி ஜெனரல் மெடிசன் என்ற பெயர் பலகை பதிக்கப்பட்ட அறைக்கு வெளியேயும் பலர் காத்திருக்க…. அறையிலிருந்து ஒருவர் வெளியே வர,உடனடியாக "ரிங் "என்று மணியடித்து அடுத்த நோயாளியை உள்ளே அழைத்தாள். நந்து எவ்வளவு சுட்டித்தனமோ அதற்கு குறையாமல் தனது வேளையில் முழு ஈடுபாடுடன் செயல்படுவாள். தனது எல்லா விளையாட்டுத் தனத்தையும் மருத்துவமனைக்கு வெளியே வைத்துக் கொள்பவள், அந்த வெள்ளை நிற மேல்கோட்டை அணிந்தவுடன் ஒரு நல்ல மருத்துவராக மட்டுமே செயல்படுவாள்.முகத்தில் தானாக ஒரு பொறுமையும், பொறுப்பும், கனிவும் தோன்றிவிடும்.
காலை பதினொன்று மணி வரை கூட்டம் அலைமோத கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் எல்லா நோயாளியையும் பார்த்தவள், சிஸ்டர் என அழைத்து…."வேற யாராவது இருக்காங்களா…?" என கேட்க,அவரின் இல்லை என்ற சொல்லை கேட்டு, தலையை இரு பக்கமாக திரும்பி கழுத்து வலியை விரட்டியவள்,நான் ப்ரேக் முடிச்சிட்டு வருகிறேன் என்றாள்.
பின்னர் மொபைலை ஆன் செய்தவள், ஆதிக்கு அழைக்க...அவனோ எடுத்தவுடன் "நான் வார்டு ரவுண்ட்சில் இருக்கேன்,நீ கேண்டீனில் வெயிட் பண்ணு" என்றவன்,ஃபோனை அணைத்து விட்டான்.
இவளும் கேன்டீன் சென்றவள், ஆதிக்காக காத்து இருக்க... அந்த நேரம் அவளின் எதிரில் வந்து அமர்ந்தான் ஒரு நெடியவன். அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் தனது மொபைலை பார்த்து கொண்டிருக்க,அந்த நெடியவன் "ஹாய் உங்க பெயர் நந்தினி தானே..?" என்றான்.
அவளும் அதுவரை மொபைலில் இருந்த பார்வையை விலக்கியவள், தன் பெயரை அழைத்ததும் நிமிர்ந்து " எஸ் ஐம் நந்தினி வாட் யூ வாண்ட்" என்றாள்.
அவன் சற்று தயங்கி பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டு "ஐம் சதிஷ்குமார் சைகேட்டரிக் டாக்டர்" என்றவன்,நானும் நீங்க இங்க ஜாயின் பண்ணியதில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்..உங்களோட ஒவ்வொரு செயலும், நடவடிக்கையும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுது.வேளையில் உள்ள டெடிகேஷன் ஆகட்டும், ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள குழந்தைத்தனமும் என்னை ரொம்ப பாதித்துவிட்டது" என்றான்.
நான் சுத்தி வளைத்து பேச விரும்பலை. டைரக்டா சொல்றேன் ஐம் இன் லவ் வித் யூ" என்றான்..அவளோ ஒரு நிமிடம் அவன் கூற்றில் அதிர்ந்தவள்,பின்னர் நிமிர்ந்து அமர்ந்தாள்.
"சாரி மிஸ்டர் சதிஷ், நான் ஆல்ரெடி ஒருவரை காதலிக்கிறேன்.. அவரை தவிர என் வாழ்க்கையில் வேற யாருக்கும் இடம் இல்லை' என தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியவள், சோ திரும்பவும் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கண்ணு நினைக்கிறேன்" என்றாள் அழுத்தமாக.
அவனோ அவள் இவ்வளவு சொல்லியும், "நீங்க உடனே பதில் சொல்லனும் என்ற அவசியம் இல்லை நல்லா யோசிச்சு பதில் சொன்னா போதும்" என்றான்.
கோபமே வராத எனக்கே கோபம் வர வைத்துவிடுவான் போலவே என சலித்துக்கொண்டவள்…"எக்ஸ்க்யூஸ் மீ சார்... உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? ஐம் ஆல்ரெடி கமிட்டெட். சோ பிளீஸ் லீவ் ஃப்ரம் ஹியர், இல்லனா பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க அதுக்கப்பறம் உங்க இஷ்டம்" என்றவள் திரும்பவும் மொபைலில் பார்வையை செலுத்தினாள்.
அவன் இன்னும் இடத்தை காலி செய்யாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க...அப்போது உள்ளே வந்த ஆதி,கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவன் அருகே நிற்க... நிமிர்த்து பார்த்த நந்து ஆதியை பார்த்துவிட்டு " அப்பவே சொன்னேன் கேட்டியா..? இனி என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்பது போல் எதிரில் இருப்பவனை பார்த்தவள் விட்ட வேலையை அதாவது செல்லில் கேம் விளையாடும் பணியை தொடர்ந்தாள்.
"ஆடு தானா வந்து என்னை வெட்டுங்கன்னு சொன்னா, கசாப்பு கடைக்காரன் சும்மா விடுவானா…? எல்லாம் விதி" என்று நினைத்தவள் அமைதியாக நடக்க இருப்பதை பார்க்க தொடங்கினாள்.
அதுவரை நந்துவையே ஏதோ கிராமத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவன்...தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்க்க, அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த ஆதியை பார்த்து அவசரமாக எழுந்து நின்றான்.
ஆதியும் நந்துவும் உறவினர்கள் என்பது அவனுக்கு தெரியும், எனவே மனதில் தோன்றிய பயத்தை விலக்கியவன்…"ஹாய் ஆதி... நந்து தனியா உட்கார்ந்து இருந்தாங்க,அதான் சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்" என்றான் தடுமாற்றம் நிறைந்த குரலில்.
அவனை விழிகள் இடுங்க பார்த்த ஆதி " அப்படியா என்ன பேசினீங்க,எதை பற்றி பேசுனீங்க" என்றான் அழுத்தமாக.
அவனோ எச்சில் கூட்டி விழுங்கியவன்,தைரியத்தை வர வைத்து.. நந்துவை காதலிப்பதாக சொல்லவும் ஆதியோ "ஓ…. அப்படியா, அப்போ ஒன்னு பண்ணுங்க நாளைக்கு இதே நேரம் இதே இடத்திற்கு வந்து உங்க காதலை சொல்லுங்க,முடிவை நாங்க சொல்றோம். ஏனென்றால் எங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும்" என்றான் முகத்தை முடிந்தளவு சாதாரணமாக வைத்துக்கொண்டு.
சதிஷ் வாயெல்லாம் பல்லாக சிரித்தவன் "ரொம்ப தேங்க்ஸ் ஆதி" என்றுவிட்டு மகிழ்ச்சியாக கேன்டீனை விட்டு சென்றான்.
யாரு பெத்த பிள்ளையோ..? என தோன்றிய நினைவை கலைத்து ஆதியை பார்க்க...அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
போய் இருவருக்கும் காபியும் அவளுக்கு பிடித்த சமோசாவையும் வாங்கி வந்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான். "லூசு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தனியா வராதே,நான் இல்லனா உன் ஃப்ரெண்ட் வித்யா கூட வா என்று... சொல் பேச்சை கேட்க கூடாதுன்னு இருக்கியா" என்றான் கோபமாக.
அவளோ சமோசாவை ரசித்து உண்டவள் "நீ வருவேன்னு சொன்னதால் தான் தனியா வந்தேன்" என்றவள் அவனை நிமிர்ந்து பாராமல் சாப்பிடுவதிலேயே கவனத்தை செலுத்தினாள்.
"உன்கிட்ட சொல்வதற்கு பதில் அந்த சுவர்கிட்ட சொல்லலாம்" என்றவன் காபியை அருந்தினான்.
பின்னர் இருவரும் கேன்டீனில் இருந்து வெளியே செல்கையில்... "எதுக்காக அவனை நாளைக்கு வர சொன்னாய்..?" என நந்து கேட்க.
அவனோ "அதை நாளைக்கு வந்து தெரிஞ்சுக்கோ" என்றுவிட்டு தனது தளத்திற்கு செல்ல லிஃப்ட் நோக்கி சென்றான்.
கே.ஆர் குரூப் ஆஃப் கம்பெனியில் உள்ள அனைவரும் இன்று பரபரப்புடன் காணப்பட்டனர். புதிதாக கிடைத்துள்ள கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் பற்றிய கலந்தாய்வு இன்னும் சிறு நேரத்தில் நடக்க இருப்பதால் தான் இந்த பரபரப்பு.
பல கவர்மெண்ட் ப்ராஜெக்டை செய்திருந்தாலும்... இது மிகப் பெரிய பட்ஜெட் உடைய ப்ராஜெக்ட் என்பதாலும்,இதில் எந்த தவறு நடந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என முன்கூட்டியே அறிவித்திருந்தாலும் அனைவரும் கொஞ்சம் பயத்துடனேயே மீட்டிங் ஹாலுக்கு சென்றனர்.
தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து பைலை பார்த்துக்கொண்டிருந்தவன், தனது பி.ஏ சுரேஷை அழைத்து... "மீட்டிங் ஹாலுக்கு போகலாமா எல்லாம் ரெடியா..?" என்றான்.
அவனும் "எல்லாம் ரெடி சார்,எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க" என்றான்.
இருக்கையிலிருந்து எழுந்தவன் தனது கம்பீரமான நடையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். அதுவரை இருந்த சலசலப்பு அடங்கி,மூச்சு விடும் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி அங்கே நிலவியது.
அனைவரும் எழுந்து நின்று மரியாதையை தெரிவிக்க...அதனை சிறு தலையசைப்போடு ஏற்றவன்,அனைவரையும் அமரும்படி சொன்னான்.
"லெட் மீ கமிங் டூ தி பாய்ண்ட். இந்த மீட்டிங் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்..இதுவரைக்கும் நாம செய்த ப்ராஜக்டை விட பலமடங்கு லாபம் மட்டுமில்ல ...நம்ம கம்பெனிக்கு பெரிய பெயரும் எடுத்து தரக்கூடிய ஒரு ப்ராஜெக்ட்.
உங்களுக்கே தெரியும் இந்த ப்ராஜெட்க்காக எத்தனையோ கம்பெனிஸ் போட்டிபோட்டு.. ஃபைனலி நமக்கு கிடைத்திருக்கு.. சோ இந்த ப்ராஜெக்ட்ல எந்த ஒரு பிரச்சினையும் வருவதை நான் விரும்பவில்லை என்றவன்,உங்களுக்கு கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்திருக்கணும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை..அப்படி யாராவது வேலையை முடிக்க முடியாது என்றாலும் சரி,முடிக்க முடியவில்லை என்றாலும் உடனடியாக வேலையை விட்டு போகவேண்டியாதாக இருக்கும்.மற்ற எல்லா விஷயங்களையும் உங்க டீம் லீடர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க" என்றவன்.
"ஓகே கைஸ்... ஆல் தி பெஸ்ட். ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். நவ் யூ கேன் கோ" என்றவன் விடுவிடுவென மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறி தன் அறைக்கு சென்றான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல் அனைவரும் அப்போதுதான் பெருமூச்சுவிட்டனர்.இந்த ப்ராஜெக்ட் முடிவதற்குள் என்னவெல்லாம் நடக்க போகுதோ என புலம்பியப்படி சென்றனர்.
அனைவரும் சென்றிருக்க அவள் மட்டும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
"ஏய்.. திவ்யா என்ன பகல் கனவா..? எல்லாரும் போயிட்டாங்க வா போகலாம்" என்ற தோழியை பார்த்து...இல்லடி எனக்கு இப்பவே ரொம்ப பயமா இருக்கு..ஜாயின் பண்ணி ஒரு வருஷம் தானே ஆகுது அதுக்குள்ள என்னை எதுக்கு இவளோ பெரிய ப்ராஜெக்டில் போட்டாங்க…? சீனியர் ஸ்டாஃப் கூட இப்படி பயப்படுறாங்க,இதுல நான் எப்படி" என்க,
"அதெல்லாம் பார்த்துக்கலாம் நீ அனாவசியமாக பயப்படாதே" என்றவள் திவ்யாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
"ஆமா நீ நம்ம பாஸ் படிச்ச காலேஜ் தானே...அவரை பற்றி முன்பே தெரியும் தானே உனக்கு..இப்படி பயந்து சாகுறவள்,எதுக்கு இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்தாய்" என கேட்க,
அவளோ "நீ வேறடி...இங்க ஜாயின் பண்ணி ரெண்டு நாளுக்கு அப்பறம் தான் இது இவருடைய கம்பெனி என்று தெரிந்தது. அப்பறம் வேற வழியில்லை என்று என்னையே தேற்றிக்கொண்டேன்" என்றாள் பாவமாக.
பின்னர் 'எல்லாம் அவன் செயல்' என கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்தவள்...தனது வேளையில் முழ்கிவிட்டாள்.
தனது அறையில் நுழைந்த விக்ரம்,தனது நண்பன் மதனை அழைக்க...அவனும் உடனடியாக வந்தான். "மதன் இந்த ப்ராஜெக்ட் முடியும்வரை மற்ற வேலைகளை யாரிடமாவது கொடுத்துட்டு,நீ இதில் மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு. எந்த ப்ராப்ளமும் வராமல் பார்த்துக்கொள்" என்றான்.
பின்னர் நினைவு வந்தவனாக "அப்பறம் சந்தியா எங்கே ஆளையே காணும்" என விக்ரம் கேட்க...
அவனோ "இன்னைக்கு மாடல் கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன். காலையிலிருந்து மாடல் கொட்டேஷன் ரெடி பண்றேன்னு ரூம் ஃபுல்லா குப்பையை போட்டுட்டு இருக்கா" என்றான் கடுப்பாக.
அதனைக் கேட்டு சிரித்தவன், "ஏதாவது பண்ணட்டும் விடு மச்சி,போக போக கற்றுக்கொள்வாள்" என்றவன் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்.
தன் அறைக்கு வந்த மதன் அது இருக்கும் நிலைமையை பார்த்து…"நீ கொட்டேஷன் ரெடி பண்ண வரை போதும் விடு சந்தியா என்றவன்,வேற ஏதாவது பண்ணு இல்லனா வீட்டுக்கு கிளம்பு" என சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.
விக்ரம் எப்போதும் பிஸியாக இருப்பதால் அவளுக்கு வேலையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மதனிடன் வழங்கினான். அவனும் முதலில் மறுக்கவே நினைத்தான்,பின்னர் விக்ரமிற்காக ஒத்துக்கொண்டான். ஆனால் ஏன் ஒத்திக்கொண்டோம் என ஒவ்வொரு நிமிடமும் அவனை நினைக்க வைத்தாள் சந்தியா.
வேலை செய்கிறாளோ இல்லையோ ஆனால் அவனை சைட் அடிக்கும் வேலையை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள். "மதன்...மதன்" என அவள் அழைக்க அவனோ "ம்ம்.. சொல்லு" என்றான் அமைதியாக.
மதன் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்...நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றாள் சிணுங்கியவாறு.
அவனோ அவளை நிமிர்ந்து பார்த்து "எனக்கு வேலை இருக்கு...நான் ஒன்னும் வெட்டியா இல்லை புரியுதா,உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் வெளிய மரியா மேம் இருப்பாங்க அவங்க கிட்ட கேளு..? என்னை ஆளை விடு" என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி பற்களை கடித்துக்கொண்டு.
"அப்படியெல்லாம் உன்னை விட முடியாது மதன்.. நீ சொல்லிக்கொடுத்தா கொடு இல்லனா விடு,அதுக்காக எல்லாம் என்னால யாருகிட்டயும் போய் நிற்கமுடியாது புரியுதா பேபி" என்றவள், தன் இருக்கையில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் பார்வை அவனை தீண்டினாலும்,அவளை பார்க்காமல் தன் வேலையை பார்க்க முயன்றவனால் சுத்தமாக முடியவில்லை. தன்னை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி ஒழுங்காக செய்வது...அவளை எதுவும் செய்யமுடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி தன்னையே வெறுத்தான் மதன்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
எப்போதும் பரபரப்புடன் இருக்கும் அந்த பிரபலமான மருத்துவமனையின், ஓ.பி.டி என்றும் போல் இன்றும், பல நோயாளிகள் மருத்துவர்களை காண காத்திருந்தனர். ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றவாறு இதயம், மூளை,குழந்தைகள்,மனநலம் என அதற்கென்று ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களின் அறைகள் முன்பு ஒரு கூட்டமே காத்திருந்தது.
முதலில் எல்லாம் கோயில்களிலும் விசேஷ வீடுகளில் மட்டுமே கூட்டம் அலைமோதி கொண்டிருக்கும்... இப்போது அதனை காட்டிலும் மருத்துவமனைகளில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வர தொடங்கிவிட்டனர். நமது வாழ்க்கை தரம் உயர உயர நோய்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.
நந்தினி ஜெனரல் மெடிசன் என்ற பெயர் பலகை பதிக்கப்பட்ட அறைக்கு வெளியேயும் பலர் காத்திருக்க…. அறையிலிருந்து ஒருவர் வெளியே வர,உடனடியாக "ரிங் "என்று மணியடித்து அடுத்த நோயாளியை உள்ளே அழைத்தாள். நந்து எவ்வளவு சுட்டித்தனமோ அதற்கு குறையாமல் தனது வேளையில் முழு ஈடுபாடுடன் செயல்படுவாள். தனது எல்லா விளையாட்டுத் தனத்தையும் மருத்துவமனைக்கு வெளியே வைத்துக் கொள்பவள், அந்த வெள்ளை நிற மேல்கோட்டை அணிந்தவுடன் ஒரு நல்ல மருத்துவராக மட்டுமே செயல்படுவாள்.முகத்தில் தானாக ஒரு பொறுமையும், பொறுப்பும், கனிவும் தோன்றிவிடும்.
காலை பதினொன்று மணி வரை கூட்டம் அலைமோத கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் எல்லா நோயாளியையும் பார்த்தவள், சிஸ்டர் என அழைத்து…."வேற யாராவது இருக்காங்களா…?" என கேட்க,அவரின் இல்லை என்ற சொல்லை கேட்டு, தலையை இரு பக்கமாக திரும்பி கழுத்து வலியை விரட்டியவள்,நான் ப்ரேக் முடிச்சிட்டு வருகிறேன் என்றாள்.
பின்னர் மொபைலை ஆன் செய்தவள், ஆதிக்கு அழைக்க...அவனோ எடுத்தவுடன் "நான் வார்டு ரவுண்ட்சில் இருக்கேன்,நீ கேண்டீனில் வெயிட் பண்ணு" என்றவன்,ஃபோனை அணைத்து விட்டான்.
இவளும் கேன்டீன் சென்றவள், ஆதிக்காக காத்து இருக்க... அந்த நேரம் அவளின் எதிரில் வந்து அமர்ந்தான் ஒரு நெடியவன். அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் தனது மொபைலை பார்த்து கொண்டிருக்க,அந்த நெடியவன் "ஹாய் உங்க பெயர் நந்தினி தானே..?" என்றான்.
அவளும் அதுவரை மொபைலில் இருந்த பார்வையை விலக்கியவள், தன் பெயரை அழைத்ததும் நிமிர்ந்து " எஸ் ஐம் நந்தினி வாட் யூ வாண்ட்" என்றாள்.
அவன் சற்று தயங்கி பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டு "ஐம் சதிஷ்குமார் சைகேட்டரிக் டாக்டர்" என்றவன்,நானும் நீங்க இங்க ஜாயின் பண்ணியதில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்..உங்களோட ஒவ்வொரு செயலும், நடவடிக்கையும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுது.வேளையில் உள்ள டெடிகேஷன் ஆகட்டும், ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள குழந்தைத்தனமும் என்னை ரொம்ப பாதித்துவிட்டது" என்றான்.
நான் சுத்தி வளைத்து பேச விரும்பலை. டைரக்டா சொல்றேன் ஐம் இன் லவ் வித் யூ" என்றான்..அவளோ ஒரு நிமிடம் அவன் கூற்றில் அதிர்ந்தவள்,பின்னர் நிமிர்ந்து அமர்ந்தாள்.
"சாரி மிஸ்டர் சதிஷ், நான் ஆல்ரெடி ஒருவரை காதலிக்கிறேன்.. அவரை தவிர என் வாழ்க்கையில் வேற யாருக்கும் இடம் இல்லை' என தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியவள், சோ திரும்பவும் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கண்ணு நினைக்கிறேன்" என்றாள் அழுத்தமாக.
அவனோ அவள் இவ்வளவு சொல்லியும், "நீங்க உடனே பதில் சொல்லனும் என்ற அவசியம் இல்லை நல்லா யோசிச்சு பதில் சொன்னா போதும்" என்றான்.
கோபமே வராத எனக்கே கோபம் வர வைத்துவிடுவான் போலவே என சலித்துக்கொண்டவள்…"எக்ஸ்க்யூஸ் மீ சார்... உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? ஐம் ஆல்ரெடி கமிட்டெட். சோ பிளீஸ் லீவ் ஃப்ரம் ஹியர், இல்லனா பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க அதுக்கப்பறம் உங்க இஷ்டம்" என்றவள் திரும்பவும் மொபைலில் பார்வையை செலுத்தினாள்.
அவன் இன்னும் இடத்தை காலி செய்யாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க...அப்போது உள்ளே வந்த ஆதி,கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவன் அருகே நிற்க... நிமிர்த்து பார்த்த நந்து ஆதியை பார்த்துவிட்டு " அப்பவே சொன்னேன் கேட்டியா..? இனி என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்பது போல் எதிரில் இருப்பவனை பார்த்தவள் விட்ட வேலையை அதாவது செல்லில் கேம் விளையாடும் பணியை தொடர்ந்தாள்.
"ஆடு தானா வந்து என்னை வெட்டுங்கன்னு சொன்னா, கசாப்பு கடைக்காரன் சும்மா விடுவானா…? எல்லாம் விதி" என்று நினைத்தவள் அமைதியாக நடக்க இருப்பதை பார்க்க தொடங்கினாள்.
அதுவரை நந்துவையே ஏதோ கிராமத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவன்...தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்க்க, அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த ஆதியை பார்த்து அவசரமாக எழுந்து நின்றான்.
ஆதியும் நந்துவும் உறவினர்கள் என்பது அவனுக்கு தெரியும், எனவே மனதில் தோன்றிய பயத்தை விலக்கியவன்…"ஹாய் ஆதி... நந்து தனியா உட்கார்ந்து இருந்தாங்க,அதான் சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்" என்றான் தடுமாற்றம் நிறைந்த குரலில்.
அவனை விழிகள் இடுங்க பார்த்த ஆதி " அப்படியா என்ன பேசினீங்க,எதை பற்றி பேசுனீங்க" என்றான் அழுத்தமாக.
அவனோ எச்சில் கூட்டி விழுங்கியவன்,தைரியத்தை வர வைத்து.. நந்துவை காதலிப்பதாக சொல்லவும் ஆதியோ "ஓ…. அப்படியா, அப்போ ஒன்னு பண்ணுங்க நாளைக்கு இதே நேரம் இதே இடத்திற்கு வந்து உங்க காதலை சொல்லுங்க,முடிவை நாங்க சொல்றோம். ஏனென்றால் எங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும்" என்றான் முகத்தை முடிந்தளவு சாதாரணமாக வைத்துக்கொண்டு.
சதிஷ் வாயெல்லாம் பல்லாக சிரித்தவன் "ரொம்ப தேங்க்ஸ் ஆதி" என்றுவிட்டு மகிழ்ச்சியாக கேன்டீனை விட்டு சென்றான்.
யாரு பெத்த பிள்ளையோ..? என தோன்றிய நினைவை கலைத்து ஆதியை பார்க்க...அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
போய் இருவருக்கும் காபியும் அவளுக்கு பிடித்த சமோசாவையும் வாங்கி வந்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான். "லூசு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தனியா வராதே,நான் இல்லனா உன் ஃப்ரெண்ட் வித்யா கூட வா என்று... சொல் பேச்சை கேட்க கூடாதுன்னு இருக்கியா" என்றான் கோபமாக.
அவளோ சமோசாவை ரசித்து உண்டவள் "நீ வருவேன்னு சொன்னதால் தான் தனியா வந்தேன்" என்றவள் அவனை நிமிர்ந்து பாராமல் சாப்பிடுவதிலேயே கவனத்தை செலுத்தினாள்.
"உன்கிட்ட சொல்வதற்கு பதில் அந்த சுவர்கிட்ட சொல்லலாம்" என்றவன் காபியை அருந்தினான்.
பின்னர் இருவரும் கேன்டீனில் இருந்து வெளியே செல்கையில்... "எதுக்காக அவனை நாளைக்கு வர சொன்னாய்..?" என நந்து கேட்க.
அவனோ "அதை நாளைக்கு வந்து தெரிஞ்சுக்கோ" என்றுவிட்டு தனது தளத்திற்கு செல்ல லிஃப்ட் நோக்கி சென்றான்.
கே.ஆர் குரூப் ஆஃப் கம்பெனியில் உள்ள அனைவரும் இன்று பரபரப்புடன் காணப்பட்டனர். புதிதாக கிடைத்துள்ள கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் பற்றிய கலந்தாய்வு இன்னும் சிறு நேரத்தில் நடக்க இருப்பதால் தான் இந்த பரபரப்பு.
பல கவர்மெண்ட் ப்ராஜெக்டை செய்திருந்தாலும்... இது மிகப் பெரிய பட்ஜெட் உடைய ப்ராஜெக்ட் என்பதாலும்,இதில் எந்த தவறு நடந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என முன்கூட்டியே அறிவித்திருந்தாலும் அனைவரும் கொஞ்சம் பயத்துடனேயே மீட்டிங் ஹாலுக்கு சென்றனர்.
தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து பைலை பார்த்துக்கொண்டிருந்தவன், தனது பி.ஏ சுரேஷை அழைத்து... "மீட்டிங் ஹாலுக்கு போகலாமா எல்லாம் ரெடியா..?" என்றான்.
அவனும் "எல்லாம் ரெடி சார்,எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க" என்றான்.
இருக்கையிலிருந்து எழுந்தவன் தனது கம்பீரமான நடையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். அதுவரை இருந்த சலசலப்பு அடங்கி,மூச்சு விடும் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி அங்கே நிலவியது.
அனைவரும் எழுந்து நின்று மரியாதையை தெரிவிக்க...அதனை சிறு தலையசைப்போடு ஏற்றவன்,அனைவரையும் அமரும்படி சொன்னான்.
"லெட் மீ கமிங் டூ தி பாய்ண்ட். இந்த மீட்டிங் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்..இதுவரைக்கும் நாம செய்த ப்ராஜக்டை விட பலமடங்கு லாபம் மட்டுமில்ல ...நம்ம கம்பெனிக்கு பெரிய பெயரும் எடுத்து தரக்கூடிய ஒரு ப்ராஜெக்ட்.
உங்களுக்கே தெரியும் இந்த ப்ராஜெட்க்காக எத்தனையோ கம்பெனிஸ் போட்டிபோட்டு.. ஃபைனலி நமக்கு கிடைத்திருக்கு.. சோ இந்த ப்ராஜெக்ட்ல எந்த ஒரு பிரச்சினையும் வருவதை நான் விரும்பவில்லை என்றவன்,உங்களுக்கு கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்திருக்கணும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை..அப்படி யாராவது வேலையை முடிக்க முடியாது என்றாலும் சரி,முடிக்க முடியவில்லை என்றாலும் உடனடியாக வேலையை விட்டு போகவேண்டியாதாக இருக்கும்.மற்ற எல்லா விஷயங்களையும் உங்க டீம் லீடர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க" என்றவன்.
"ஓகே கைஸ்... ஆல் தி பெஸ்ட். ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். நவ் யூ கேன் கோ" என்றவன் விடுவிடுவென மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறி தன் அறைக்கு சென்றான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல் அனைவரும் அப்போதுதான் பெருமூச்சுவிட்டனர்.இந்த ப்ராஜெக்ட் முடிவதற்குள் என்னவெல்லாம் நடக்க போகுதோ என புலம்பியப்படி சென்றனர்.
அனைவரும் சென்றிருக்க அவள் மட்டும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
"ஏய்.. திவ்யா என்ன பகல் கனவா..? எல்லாரும் போயிட்டாங்க வா போகலாம்" என்ற தோழியை பார்த்து...இல்லடி எனக்கு இப்பவே ரொம்ப பயமா இருக்கு..ஜாயின் பண்ணி ஒரு வருஷம் தானே ஆகுது அதுக்குள்ள என்னை எதுக்கு இவளோ பெரிய ப்ராஜெக்டில் போட்டாங்க…? சீனியர் ஸ்டாஃப் கூட இப்படி பயப்படுறாங்க,இதுல நான் எப்படி" என்க,
"அதெல்லாம் பார்த்துக்கலாம் நீ அனாவசியமாக பயப்படாதே" என்றவள் திவ்யாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
"ஆமா நீ நம்ம பாஸ் படிச்ச காலேஜ் தானே...அவரை பற்றி முன்பே தெரியும் தானே உனக்கு..இப்படி பயந்து சாகுறவள்,எதுக்கு இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்தாய்" என கேட்க,
அவளோ "நீ வேறடி...இங்க ஜாயின் பண்ணி ரெண்டு நாளுக்கு அப்பறம் தான் இது இவருடைய கம்பெனி என்று தெரிந்தது. அப்பறம் வேற வழியில்லை என்று என்னையே தேற்றிக்கொண்டேன்" என்றாள் பாவமாக.
பின்னர் 'எல்லாம் அவன் செயல்' என கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்தவள்...தனது வேளையில் முழ்கிவிட்டாள்.
தனது அறையில் நுழைந்த விக்ரம்,தனது நண்பன் மதனை அழைக்க...அவனும் உடனடியாக வந்தான். "மதன் இந்த ப்ராஜெக்ட் முடியும்வரை மற்ற வேலைகளை யாரிடமாவது கொடுத்துட்டு,நீ இதில் மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு. எந்த ப்ராப்ளமும் வராமல் பார்த்துக்கொள்" என்றான்.
பின்னர் நினைவு வந்தவனாக "அப்பறம் சந்தியா எங்கே ஆளையே காணும்" என விக்ரம் கேட்க...
அவனோ "இன்னைக்கு மாடல் கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன். காலையிலிருந்து மாடல் கொட்டேஷன் ரெடி பண்றேன்னு ரூம் ஃபுல்லா குப்பையை போட்டுட்டு இருக்கா" என்றான் கடுப்பாக.
அதனைக் கேட்டு சிரித்தவன், "ஏதாவது பண்ணட்டும் விடு மச்சி,போக போக கற்றுக்கொள்வாள்" என்றவன் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்.
தன் அறைக்கு வந்த மதன் அது இருக்கும் நிலைமையை பார்த்து…"நீ கொட்டேஷன் ரெடி பண்ண வரை போதும் விடு சந்தியா என்றவன்,வேற ஏதாவது பண்ணு இல்லனா வீட்டுக்கு கிளம்பு" என சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.
விக்ரம் எப்போதும் பிஸியாக இருப்பதால் அவளுக்கு வேலையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மதனிடன் வழங்கினான். அவனும் முதலில் மறுக்கவே நினைத்தான்,பின்னர் விக்ரமிற்காக ஒத்துக்கொண்டான். ஆனால் ஏன் ஒத்திக்கொண்டோம் என ஒவ்வொரு நிமிடமும் அவனை நினைக்க வைத்தாள் சந்தியா.
வேலை செய்கிறாளோ இல்லையோ ஆனால் அவனை சைட் அடிக்கும் வேலையை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள். "மதன்...மதன்" என அவள் அழைக்க அவனோ "ம்ம்.. சொல்லு" என்றான் அமைதியாக.
மதன் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்...நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றாள் சிணுங்கியவாறு.
அவனோ அவளை நிமிர்ந்து பார்த்து "எனக்கு வேலை இருக்கு...நான் ஒன்னும் வெட்டியா இல்லை புரியுதா,உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் வெளிய மரியா மேம் இருப்பாங்க அவங்க கிட்ட கேளு..? என்னை ஆளை விடு" என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி பற்களை கடித்துக்கொண்டு.
"அப்படியெல்லாம் உன்னை விட முடியாது மதன்.. நீ சொல்லிக்கொடுத்தா கொடு இல்லனா விடு,அதுக்காக எல்லாம் என்னால யாருகிட்டயும் போய் நிற்கமுடியாது புரியுதா பேபி" என்றவள், தன் இருக்கையில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் பார்வை அவனை தீண்டினாலும்,அவளை பார்க்காமல் தன் வேலையை பார்க்க முயன்றவனால் சுத்தமாக முடியவில்லை. தன்னை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி ஒழுங்காக செய்வது...அவளை எதுவும் செய்யமுடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி தன்னையே வெறுத்தான் மதன்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.