யாழின் இசையாய்..
யாழிசை 15(ii)
முகம் முழுவதும் பூரிப்பு நிறைந்திட அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தவளை ஓர விழிப்பார்வையால் உரசிக் கொண்டிருந்தான்,பையன்.
முன்பென்றால் அவள் புறம் அவ்வளவாய் திரும்பாத அவனின் பார்வை இப்பொதெல்லாம் அவளிருக்கும் பக்கமாய் கொஞ்சம் திரும்பிடத் தான் செய்கிறது.
முன்னைய நாட்களிலும் குழந்தையென நினைத்து அவளின் செய்கைகளையும் கிறுக்குத் தனங்களையும் அவ்வப்போது இரசிப்பவனின் மனதில் இருந்த தூய்மையில் இப்போது கொஞ்சம் மாசு சேர்ந்திருப்பது உண்மை.
மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டிக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தவனின் கவனமோ அடிக்கடி சிதறி பாவையவளில் நிலைப்பது புரிந்திட ராமநாதனின் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்து நின்றது.
"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு பையனுக்கு அருகில் எதையோ தேடி உலாத்தி விட்டு கடந்து சென்றிட ஏனோ அந்த வரிகளைக் கேட்டதும் அவன் விரல்கள் நொடி வேலா நிறுத்தம் செய்திட விழிகளோ சரேலென நிமிர்ந்து அவளின் விம்பத்தை தமக்குள் சேர்த்துக் கொண்டன.
எல்லாம் ஒரு சில நொடிகளுக்கு தான்.தலையை உலுக்கிக் கொண்டு தன்னை மீட்டவனுக்கோ தன்னிச்சையாய் அவள் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள் கூட இதயத்தின் ஆழம் தாக்கிற்று.
"அன்னிக்கி கண்ண பாத்தத்துல இருந்து நாம கன்ட்ரோல்ல இல்ல.." இதழ் குவித்து ஊதிய படி நினைத்துக் கொண்டவனுக்கு தன் மனதை நினைத்து ஆத்திரமாய் வந்தது.
அவனுக்குள் புதிதாய் உருவெடுத்திருக்கும் தவிப்பு புரியாதவளோ அவனின் கண்முன்னே வட்டமடித்துக் கொண்டிருக்க பையனால் நிலை கொள்ள முடியவில்லை.
இருப்பினும் எழுந்து கொள்ள மனம் வரவில்லை.
"சித்தப்பா ஏதாச்சும் நெனச்சுக்க போறாரு.." தனக்குத் தானே கூறிக் கொண்டு அமர்ந்து இருந்தவனில் வார்த்தைகளில் கொஞ்சம் பொய் கலந்து இருந்தது,உண்மை தான் போலும்.அப்படியே உண்மையென்றாலும் அவனின் விழிகள் சுழல வேண்டிய தேவை இல்லையே.
பையன் அமர்ந்திருந்த சோபாவுக்கு பின்னே உயரம் குறைந்த அலுமாரி ஒன்று நிலை கொண்டிருக்க அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுக்கத் தான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.
அவளின் பாதச்சத்தங்கள் பையனின் செவியோரம் உரசும் போதே நிமிர்ந்து பார்த்தவனின் இதயம் என்றுமில்லாமல் தாளம் தப்பி வேகமெடுத்திட கொஞ்சம் பதட்டம்,அவனுள்ளத்தில்.
தடுமாறாமல் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் ஏனோ பதட்டத்தில் இதழ்களோ குவிந்து அடிக்கடி சுவாசத்தை சீர்ப்படுத்திக் கொண்டன.
இத்தனை நாள் இப்படி இல்லை.இல்லவே இல்லை.அவனுமே நினைத்திருக்க மாட்டான்,தான் இத்தனை தூரம் தடுமாறிப் போவோம் என்று.
அவளின் அருகாமையும் விழியுரசலும் அவனுக்குள் விதைத்திட்ட மாற்றத்தின் ஆழம் அப்படி.ஆழத்தின் வீச்சம் அப்படி.வீச்சத்தின் வீரியம் அப்படி.
இதற்கு மேலாய் அவனுக்கு அவள் ஒன்று முதல் காதலும் இல்லை.முதன் முதலாய் ஈர்க்கும் பெண்ணும் இல்லை.
ஈர்த்தாள் என்றே ஒத்துக் கொண்டிட அவனுக்கு காதல் மேல் நல்லபிப்ராயம் இருந்தாலும் பரவாயில்லை.ஏற்கனவே காதல் தோல்வியால் வெறுத்து துவண்டு போய் இருப்பவன்.காதலை அறவே வெறுத்து மனதை இறுக்கிக் கொண்டு ஒதுங்கி நிற்பவன்.அப்படியிருந்தும் அவள் ஏன் இத்தனை தூரம் தன்னை பாதிக்கிறாள்..?
அதுவும் இந்த சில நாட்களாய்..
புரியவேயில்லை,பையனுக்கு.
தன்னுடன் நெருங்க எந்த பெண்ணையும் அனுமதித்ததில்லையே.முதன் முதலாய் எதிர் துருவமாய் இருக்கும் அவளுடனான நெருக்கமும் பழக்கமும் தான் ஆழமாய் தாக்குகிறது போலும்.
தானே யோசித்து தனக்குள் தீர்த்துக் கொண்டது பையனின் மனம்,மடத்தனமாய்.
பாவம்,அவன் யோசித்திடவில்லை.அவன் அருகாமையில் அவள் இருந்தாலும் இருவரும் அந்நியர் போல் விலகித் தான் இருக்கிறார்கள் என்பதை.
அவள் தன்னருகே வந்து நின்றதுமே தனிச்சையாய் நகர்வது போல் ஓரடி தள்ளி அமர்ந்து கொண்டிட நல்ல வேளை அது அவளின் கண்ணில் அகப்படாமல் போனது.இல்லையென்றால் அவள் தனக்கொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருப்பாள்,அவசரக்காரி.
அவளில் இருந்து தள்ளி அமர்ந்ததும் தான் அவனுக்கு கொஞ்சமேனும் மனம் சமப்பட்டது.முன்பு நெருங்கி வந்தாலும் அவனில் தடுமாற்றம் இல்லை.ஆனால்,இப்பொது துளியும் நெருங்காமல் அவனைப் பதட்டப்படுத்திக் கொண்டிருந்தாள்,அவனின் இ(ம்)சை.
அலுமாரியின் மேல் இருந்த வைக்கப்பட்டிருந்த பொருட்குவியலில் தீவிரமாய் தேடிக் கொண்டிருந்தவளோ காகிதக் கட்டொன்றை எடுத்திட ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியின் உபயத்தால் அது சிதறடிக்கப்பட்டு எல்லா இடமும் பரவிட அவளுக்கோ ஆயாசமாய் இருந்தது.
பையனோ விழி நிமிர்த்தி அவளை ஒரு பார்த்திட மனமோ அவளுக்கு உதவச் சொல்லி கட்டளையிட்டாலும்,
ஏதோ ஒரு வீம்பு..
ஏதோ ஒரு தயக்கம்..
ஏதோ ஒரு பயம்..
அவனுக்கு அதற்கு மறுப்பு கூறிட மனதின் பேச்சை கேட்டவன் அப்படியே அமர்ந்திருக்க அதுவே இம்சையாகிடப் போவது அவனுக்கு தெரியாதே.
பறந்து சென்ற காகிதங்களை சபித்த படி குனிந்தெழுந்தவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்திருந்தான்,பையன்.அவள் செயல்களை மனமோ இரசித்திட விழைந்து கொண்டிருந்தது.
அவனின் பாதங்களுக்கு அருகே விழுந்திருந்த காகிதகங்களை குனிந்த வண்ணம் எடுத்துக் கொண்டிருந்தவள் நிமிரவும் பையன் காலடியில் விழுந்த பென்ட்ரைவ்வை எடுக்க குனிந்திடவும் அவளின் நெற்றியோரம் பலமாய் மோதிக் கொண்டது,பையனின் நெற்றியுடன்.
பையனின் விழிகள் எதிர்பாரா அதிர்வில் விரிய அவள் விழிகளும் அதே போல் திறந்து முட்டை விழிகளுக்குள் முட்டிக் கொண்டு நின்றது,பையனின் பார்வை.மீண்டும் உயிருக்குள் கண நேர மின்னலொன்று.
"அம்மாஆஆஆஆஆ" நெற்றியைப் பிடித்துக் கொண்டே அலறியவள் சமநிலை தவறி அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்,கால்கள் மடங்கிட.
பையனுக்கோ அவள் அலறல் எல்லாம் எங்கே கருத்தில் பதிந்தது..?
விழிகள் மோதி அவன் உயிர் வீழ்ந்து கிடந்தது.
சில நொடி உறைந்து நின்றவனோ தலையை உலுக்கிக் கொண்டு மீண்டிட அவன் கண்டது என்னவோ,முகம் சுருங்கிட தரையில் அமர்ந்திருந்த பாவையவளைத் தான்.
"இசை என்னாச்சு..?" பதறிக் கொண்டு கேட்டவனின் குரலில் அக்கறை தொனித்து வழிந்தது.சத்தியமாய் அது நடிப்பில்லை என்பது பையனின் விழிகளைப் பார்த்தாலே தெரிந்திடும்.
"கால் மடங்கிடுச்சு.." முகம் சுருங்கிட கூறியவளோ கடினப்பட்டு எழுந்து நிற்க முன் அவளை நோக்கி நீண்டிருந்தது,அவன் கரம்.
அவளுக்கோ அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு மீண்டும் அவனின் வார்த்தைகளை கேட்டிட விருப்பமில்லை.நீட்டிய கரத்தை பற்றிட மறுத்தவளாய் அவள் அப்படியே இருக்க அவளின் மணிக்கட்டை இறுகப் பற்றியன,பையனின் ஐ விரல்களும்.
அவளை எழுப்பி விட்டவனோ அவளுக்கு நடப்பதற்கு உதவ முன் வர மறுப்பாய் தலையசைத்து தடுத்தாள்,அவளை.
ஏன் என்று வினாத்தொடுத்த விழிகளுக்கு பதில் கொடுக்காது தனக்குள் முணுமுணுத்த படி அவள் நகர்ந்து கொள்ள அவனுக்கோ அவளின் இதழசைப்பு புரியாது போகுமா என்ன..?
"ஹெல்ப் பண்ணிட்டு எந்த பொண்ணா இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன்னு டயலாக் விட வேண்டியது..நா அதுக்கு நடந்தே போறேன்.." அவளின் ஆற்றாமை வார்த்தைகள் மூலம் வெளிப்பட இருபுறமும் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளோ கெந்தி கெந்தி நடப்பவளை சிறு சிரிப்புடன் உரசிட அந்த புன்னகையில் இருந்த அர்த்தம் என்ன..?
கதவை சாற்றிக் கொண்டு உறங்க வந்தவனோ கை மறைவில் கொட்டாவி படுக்கை உதறியவளோ போர்வையை இழுத்த வேகமே கூறியது,அவள் ஏதோ கோபத்தில் இருப்பதை.
ஏனென்று கேட்டிட மனம் உந்தினாலும் அவனோ அதை தவிர்த்து நிற்க அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதாய் நினைத்தவளுக்கு இன்னும் சினம் பெருகியது.
"இவ்ளோ உர்ருன்னு இருக்கேன்..என்னாச்சுன்னாலும் கேக்குதா பாரு..ரோபோ ரோபா.." திட்டியவளின் கோபத்தின் காரணம் அவன் அலுமாரியில் இருந்த அபிராமியின் சிறு வயது புகைப்படம் தான்.யாழினியுடன் சிறு வயதில் அவள் சேர்ந்து எடுத்துக் கொண்டது.
அந்த புகைப்படத்தில் இருந்தது,அபிராமி என்று அவளுக்குத் தெரிய வந்ததே யாழினியின் கிறுக்கல் கையெழுத்தால் புகைப்படத்தில் இருந்த பெயர் தான்.அந்த பெயரைக் கண்டதுமே பாவையவளுக்கு சட்டென பொறி தட்டியது.
அபிராமியின் தாய் பையனின் தாயாரின் நெருங்கிய தோழி என்பதால் இரு குடும்பங்களுக்கும் இடையே பையனின் சிறு வயது துவக்கமே நட்புறவு இருந்தது.
அதுவும் சந்திப்பதும் ஒன்று கூடுவதும் வழமையாக நடந்தேறுவது என்பதால் புகைப்படங்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன..?
அதில் ஓரிரண்டு தப்பி பையனின் உடைமைகளுடன் வந்து சேர்ந்திருக்க சத்தியமாய் அவன் அதை கவனித்திடவில்லை.கவனித்திருந்தால் அதை அகற்றி விட்டு தான் மறுவேலை பார்த்திருப்பான் என்பது வேறு விடயம்.
அவனின் மன எண்ணத்தை அவள் அறிந்திடும் வாய்ப்பில்லையே.அவன் அவளுடன் நடந்து கொள்வது அப்படித் தானே.
"இவ என்ன இப்போ திடீர்னு உர்ருன்னு இருக்கா..?" மனதுக்குள் நினைத்தவனோ எதுவும் பேசாது குளியலறைக்குள் சென்றிட பாவையவளுக்கோ எகிறியது.
"இந்த ரோபோவஅஅஅஅஅஅஅ" பற்களை நறநறத்துக் கொண்டவளுக்கோ அவன் மீது கோபத்தை காட்டி வேண்டும் என்கின்ற வேகம்.
மூளை கிறுக்கத் தனமாய் சிந்திக்க அவனுக்கு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்துடன் குளியலறைக் கதவை வெளிப்பக்கமாய் பூட்டினாலும் உள்ளுக்குள் பயந்து செத்துக் கொண்டிருந்ததும் வேறு விடயம்.
குளித்து விட்டு தலையை துவட்டிய படி கதவைத் திறக்கப் பார்த்திட்ட பையனுக்கு வெளியில் பூட்டியிருப்பது உரைத்திட தடதடவென கதவைத் தட்டியவனுக்கு சிறிது நேரம் கடந்த பின்னே புரிந்தது,பாவையவள் வேண்டுமென்றே செய்திருப்பது.
"இசை கதவத்தெற.." அவளின் கோபம் ஏன் என்றே தெரியாவிடினும் அவளின் செயலில் சிரிப்புத் தான் வந்தது,பையனுக்கு.
இருப்பினும் குரலை கடினமாய் மாற்றிக் கொண்டு மீண்டும் கத்திய படி தட்டிட பாவையவளோ பயத்தை காட்டிக் கொள்ளாது விறைப்பாய் நிற்பது போல் நின்றிருந்தாலும் பாதங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருந்தன.
"இசை கதவத் தெற.." மறுமுறையும் அவன் சத்தம் போட கதவைத் திறந்து விட்டவளோ அவன் வரும் முன் ஓடியிருந்தாள்,அறையில் இருந்து.
இரண்டு நாட்களாய் முகம் பார்த்திட மறுப்பவளிடம் ஏனென்று கேட்டிட மனம் சண்டித்தனம் செய்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் பாராமுகம் புரியாது போகுமா..?
அவனறிந்த இசையவளுக்கு வாய் ஓயாது.ஆனால்,இந்த இரு நாட்கள் அவள் கடைபிடித்து வரும் அமைதி அவளின் கோபத்தின் காரணம் என்று அறிந்தவனுக்கு சத்தியமாய் கோபத்தின் காரணம் துளியும் புரிந்திடவில்லை.
அன்றிரவு கதவை அடைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தவளிடம் கேள்வி கேட்டிட வேண்டும் என்றே விழித்திக் கிடந்தவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் உள்நுழைந்தவளோ அவனைப் பாராது கட்டிலில் படுத்துக் கொள்ள பையனுக்கு கோபமாய் வந்தது.
அவளின் பாராமுகம் அவனுக்கு பிடிக்கவேயில்லை.சத்தியமாய் பிடிக்கவேயில்லை.எல்லாம் இருந்தும் அந்த பாராமுகம் அவனுக்குள் ஏதோ ஒன்றின் இன்மையை உணர்த்திக் கொண்டல்லவா இருக்கிறது..?
"என்ன தூங்க போறியா..?"
"ம்ம்.." ஒற்றை வார்த்தையில் வந்தது,அவள் பதில்.அவனுக்கோ இன்னும் ஏறிற்று,சினம்.
"இவ்ளோ சீக்கிரமா..?"
"ம்ம்ம்ம்.." அதே பதில்.பையனின் அதே "ம்ம்".என்ன இழுவை ராகத்தில் மட்டும் சற்றே இறக்கம்.
"நம்ம ம்ம்ம நமக்கே ரிபீட் அடிக்கிறா..பாவி.." மனதுக்குள் அவளுக்கு அர்ச்சித்தவனோ இப்படி வழிய சென்று பேசும் ரகம் இல்லையே.ஏனோ அதை கவனிக்க மறந்திருந்தாள்,பாவையவள்.
"நா இன்னிக்கி பெட்ல படுக்குறேன்.." வேண்டுமென்று தான் சொன்னான்,அவள் நிச்சயம் எதிர்க்கேள்வி கேட்பாள் என்கின்ற எதிர்ப்பார்ப்புடன்.
எல்லா நேரத்தில் எதிர்ப்பார்ப்புகள் நிஜமாகுமா என்ன..?
"ம்ம்.." அவளின் பதிலில் அவனுக்கோ உச்சபட்ச கோபம்.
கடுகடுத்த முகத்துடன் எழுந்து வந்தவனோ அவளை மறித்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிட யாழவனின் இதயம் கொஞ்சம் வேகமெடுத்து தொலைத்தது,இசையவளின் அருகாமையில்.
"என்னாச்சு உனக்கு..? என்ன ப்ரச்சன..? எதுக்கு இப்ப உர்ருன்னு பேசாம இருக்க..?" அதட்டலான குரலில் கேட்டிட அவளுக்கோ இன்னும் ஆத்திரமாய் வந்தது.
"ஒன்னுல்ல.." வெடுக்கென வந்த பதிலில் அவன் புருவங்கள் ஏறி இறங்கிட செவியை தீண்டிய வண்ணம் இருந்தது,வேகமெடுத்திருந்த இதயத்தின் ரிதம்.
"என்னாச்சு உனக்கு..? எதுக்கு இப்டி இருக்க..?" தன்மையாய் கேட்டவனின் குரலில் இருந்த பரிவில் அவளுக்கு அழுகை வரும் போல இருந்திட தலை தாழ்த்தி நின்றவளின் விழிகளில் மெல்ல மெல்ல ஈரம் சேர்ந்திற்று.
"உன்ன தான் கேக்கறேன் இசை..என்னன்னு சொல்லு.." பொறுமையாய் கேட்டவன் இத்தனை தூரம் இறங்கி வருவதே பெரிது தான்.
"நீங்க இன்னும் அந்த அபி நெனச்சிகிட்டு இருக்கீங்களா..?"
அவளிடம் இருந்து எதிர்பாரா கேள்வியை கேட்டு விட அவள் கேள்வியில் திகைத்து நின்றான்,பையன்.
உயிர்த்தொடும்.
2024.09.07
யாழிசை 15(ii)
முகம் முழுவதும் பூரிப்பு நிறைந்திட அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தவளை ஓர விழிப்பார்வையால் உரசிக் கொண்டிருந்தான்,பையன்.
முன்பென்றால் அவள் புறம் அவ்வளவாய் திரும்பாத அவனின் பார்வை இப்பொதெல்லாம் அவளிருக்கும் பக்கமாய் கொஞ்சம் திரும்பிடத் தான் செய்கிறது.
முன்னைய நாட்களிலும் குழந்தையென நினைத்து அவளின் செய்கைகளையும் கிறுக்குத் தனங்களையும் அவ்வப்போது இரசிப்பவனின் மனதில் இருந்த தூய்மையில் இப்போது கொஞ்சம் மாசு சேர்ந்திருப்பது உண்மை.
மடிக்கணினியின் விசைப்பலகையை தட்டிக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தவனின் கவனமோ அடிக்கடி சிதறி பாவையவளில் நிலைப்பது புரிந்திட ராமநாதனின் இதழ்களுக்குள் புன்னகை ஒளிந்து நின்றது.
"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு பையனுக்கு அருகில் எதையோ தேடி உலாத்தி விட்டு கடந்து சென்றிட ஏனோ அந்த வரிகளைக் கேட்டதும் அவன் விரல்கள் நொடி வேலா நிறுத்தம் செய்திட விழிகளோ சரேலென நிமிர்ந்து அவளின் விம்பத்தை தமக்குள் சேர்த்துக் கொண்டன.
எல்லாம் ஒரு சில நொடிகளுக்கு தான்.தலையை உலுக்கிக் கொண்டு தன்னை மீட்டவனுக்கோ தன்னிச்சையாய் அவள் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள் கூட இதயத்தின் ஆழம் தாக்கிற்று.
"அன்னிக்கி கண்ண பாத்தத்துல இருந்து நாம கன்ட்ரோல்ல இல்ல.." இதழ் குவித்து ஊதிய படி நினைத்துக் கொண்டவனுக்கு தன் மனதை நினைத்து ஆத்திரமாய் வந்தது.
அவனுக்குள் புதிதாய் உருவெடுத்திருக்கும் தவிப்பு புரியாதவளோ அவனின் கண்முன்னே வட்டமடித்துக் கொண்டிருக்க பையனால் நிலை கொள்ள முடியவில்லை.
இருப்பினும் எழுந்து கொள்ள மனம் வரவில்லை.
"சித்தப்பா ஏதாச்சும் நெனச்சுக்க போறாரு.." தனக்குத் தானே கூறிக் கொண்டு அமர்ந்து இருந்தவனில் வார்த்தைகளில் கொஞ்சம் பொய் கலந்து இருந்தது,உண்மை தான் போலும்.அப்படியே உண்மையென்றாலும் அவனின் விழிகள் சுழல வேண்டிய தேவை இல்லையே.
பையன் அமர்ந்திருந்த சோபாவுக்கு பின்னே உயரம் குறைந்த அலுமாரி ஒன்று நிலை கொண்டிருக்க அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எடுக்கத் தான் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.
அவளின் பாதச்சத்தங்கள் பையனின் செவியோரம் உரசும் போதே நிமிர்ந்து பார்த்தவனின் இதயம் என்றுமில்லாமல் தாளம் தப்பி வேகமெடுத்திட கொஞ்சம் பதட்டம்,அவனுள்ளத்தில்.
தடுமாறாமல் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் ஏனோ பதட்டத்தில் இதழ்களோ குவிந்து அடிக்கடி சுவாசத்தை சீர்ப்படுத்திக் கொண்டன.
இத்தனை நாள் இப்படி இல்லை.இல்லவே இல்லை.அவனுமே நினைத்திருக்க மாட்டான்,தான் இத்தனை தூரம் தடுமாறிப் போவோம் என்று.
அவளின் அருகாமையும் விழியுரசலும் அவனுக்குள் விதைத்திட்ட மாற்றத்தின் ஆழம் அப்படி.ஆழத்தின் வீச்சம் அப்படி.வீச்சத்தின் வீரியம் அப்படி.
இதற்கு மேலாய் அவனுக்கு அவள் ஒன்று முதல் காதலும் இல்லை.முதன் முதலாய் ஈர்க்கும் பெண்ணும் இல்லை.
ஈர்த்தாள் என்றே ஒத்துக் கொண்டிட அவனுக்கு காதல் மேல் நல்லபிப்ராயம் இருந்தாலும் பரவாயில்லை.ஏற்கனவே காதல் தோல்வியால் வெறுத்து துவண்டு போய் இருப்பவன்.காதலை அறவே வெறுத்து மனதை இறுக்கிக் கொண்டு ஒதுங்கி நிற்பவன்.அப்படியிருந்தும் அவள் ஏன் இத்தனை தூரம் தன்னை பாதிக்கிறாள்..?
அதுவும் இந்த சில நாட்களாய்..
புரியவேயில்லை,பையனுக்கு.
தன்னுடன் நெருங்க எந்த பெண்ணையும் அனுமதித்ததில்லையே.முதன் முதலாய் எதிர் துருவமாய் இருக்கும் அவளுடனான நெருக்கமும் பழக்கமும் தான் ஆழமாய் தாக்குகிறது போலும்.
தானே யோசித்து தனக்குள் தீர்த்துக் கொண்டது பையனின் மனம்,மடத்தனமாய்.
பாவம்,அவன் யோசித்திடவில்லை.அவன் அருகாமையில் அவள் இருந்தாலும் இருவரும் அந்நியர் போல் விலகித் தான் இருக்கிறார்கள் என்பதை.
அவள் தன்னருகே வந்து நின்றதுமே தனிச்சையாய் நகர்வது போல் ஓரடி தள்ளி அமர்ந்து கொண்டிட நல்ல வேளை அது அவளின் கண்ணில் அகப்படாமல் போனது.இல்லையென்றால் அவள் தனக்கொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருப்பாள்,அவசரக்காரி.
அவளில் இருந்து தள்ளி அமர்ந்ததும் தான் அவனுக்கு கொஞ்சமேனும் மனம் சமப்பட்டது.முன்பு நெருங்கி வந்தாலும் அவனில் தடுமாற்றம் இல்லை.ஆனால்,இப்பொது துளியும் நெருங்காமல் அவனைப் பதட்டப்படுத்திக் கொண்டிருந்தாள்,அவனின் இ(ம்)சை.
அலுமாரியின் மேல் இருந்த வைக்கப்பட்டிருந்த பொருட்குவியலில் தீவிரமாய் தேடிக் கொண்டிருந்தவளோ காகிதக் கட்டொன்றை எடுத்திட ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியின் உபயத்தால் அது சிதறடிக்கப்பட்டு எல்லா இடமும் பரவிட அவளுக்கோ ஆயாசமாய் இருந்தது.
பையனோ விழி நிமிர்த்தி அவளை ஒரு பார்த்திட மனமோ அவளுக்கு உதவச் சொல்லி கட்டளையிட்டாலும்,
ஏதோ ஒரு வீம்பு..
ஏதோ ஒரு தயக்கம்..
ஏதோ ஒரு பயம்..
அவனுக்கு அதற்கு மறுப்பு கூறிட மனதின் பேச்சை கேட்டவன் அப்படியே அமர்ந்திருக்க அதுவே இம்சையாகிடப் போவது அவனுக்கு தெரியாதே.
பறந்து சென்ற காகிதங்களை சபித்த படி குனிந்தெழுந்தவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்திருந்தான்,பையன்.அவள் செயல்களை மனமோ இரசித்திட விழைந்து கொண்டிருந்தது.
அவனின் பாதங்களுக்கு அருகே விழுந்திருந்த காகிதகங்களை குனிந்த வண்ணம் எடுத்துக் கொண்டிருந்தவள் நிமிரவும் பையன் காலடியில் விழுந்த பென்ட்ரைவ்வை எடுக்க குனிந்திடவும் அவளின் நெற்றியோரம் பலமாய் மோதிக் கொண்டது,பையனின் நெற்றியுடன்.
பையனின் விழிகள் எதிர்பாரா அதிர்வில் விரிய அவள் விழிகளும் அதே போல் திறந்து முட்டை விழிகளுக்குள் முட்டிக் கொண்டு நின்றது,பையனின் பார்வை.மீண்டும் உயிருக்குள் கண நேர மின்னலொன்று.
"அம்மாஆஆஆஆஆ" நெற்றியைப் பிடித்துக் கொண்டே அலறியவள் சமநிலை தவறி அப்படியே அமர்ந்து விட்டிருந்தாள்,கால்கள் மடங்கிட.
பையனுக்கோ அவள் அலறல் எல்லாம் எங்கே கருத்தில் பதிந்தது..?
விழிகள் மோதி அவன் உயிர் வீழ்ந்து கிடந்தது.
சில நொடி உறைந்து நின்றவனோ தலையை உலுக்கிக் கொண்டு மீண்டிட அவன் கண்டது என்னவோ,முகம் சுருங்கிட தரையில் அமர்ந்திருந்த பாவையவளைத் தான்.
"இசை என்னாச்சு..?" பதறிக் கொண்டு கேட்டவனின் குரலில் அக்கறை தொனித்து வழிந்தது.சத்தியமாய் அது நடிப்பில்லை என்பது பையனின் விழிகளைப் பார்த்தாலே தெரிந்திடும்.
"கால் மடங்கிடுச்சு.." முகம் சுருங்கிட கூறியவளோ கடினப்பட்டு எழுந்து நிற்க முன் அவளை நோக்கி நீண்டிருந்தது,அவன் கரம்.
அவளுக்கோ அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டு மீண்டும் அவனின் வார்த்தைகளை கேட்டிட விருப்பமில்லை.நீட்டிய கரத்தை பற்றிட மறுத்தவளாய் அவள் அப்படியே இருக்க அவளின் மணிக்கட்டை இறுகப் பற்றியன,பையனின் ஐ விரல்களும்.
அவளை எழுப்பி விட்டவனோ அவளுக்கு நடப்பதற்கு உதவ முன் வர மறுப்பாய் தலையசைத்து தடுத்தாள்,அவளை.
ஏன் என்று வினாத்தொடுத்த விழிகளுக்கு பதில் கொடுக்காது தனக்குள் முணுமுணுத்த படி அவள் நகர்ந்து கொள்ள அவனுக்கோ அவளின் இதழசைப்பு புரியாது போகுமா என்ன..?
"ஹெல்ப் பண்ணிட்டு எந்த பொண்ணா இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன்னு டயலாக் விட வேண்டியது..நா அதுக்கு நடந்தே போறேன்.." அவளின் ஆற்றாமை வார்த்தைகள் மூலம் வெளிப்பட இருபுறமும் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளோ கெந்தி கெந்தி நடப்பவளை சிறு சிரிப்புடன் உரசிட அந்த புன்னகையில் இருந்த அர்த்தம் என்ன..?
கதவை சாற்றிக் கொண்டு உறங்க வந்தவனோ கை மறைவில் கொட்டாவி படுக்கை உதறியவளோ போர்வையை இழுத்த வேகமே கூறியது,அவள் ஏதோ கோபத்தில் இருப்பதை.
ஏனென்று கேட்டிட மனம் உந்தினாலும் அவனோ அதை தவிர்த்து நிற்க அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதாய் நினைத்தவளுக்கு இன்னும் சினம் பெருகியது.
"இவ்ளோ உர்ருன்னு இருக்கேன்..என்னாச்சுன்னாலும் கேக்குதா பாரு..ரோபோ ரோபா.." திட்டியவளின் கோபத்தின் காரணம் அவன் அலுமாரியில் இருந்த அபிராமியின் சிறு வயது புகைப்படம் தான்.யாழினியுடன் சிறு வயதில் அவள் சேர்ந்து எடுத்துக் கொண்டது.
அந்த புகைப்படத்தில் இருந்தது,அபிராமி என்று அவளுக்குத் தெரிய வந்ததே யாழினியின் கிறுக்கல் கையெழுத்தால் புகைப்படத்தில் இருந்த பெயர் தான்.அந்த பெயரைக் கண்டதுமே பாவையவளுக்கு சட்டென பொறி தட்டியது.
அபிராமியின் தாய் பையனின் தாயாரின் நெருங்கிய தோழி என்பதால் இரு குடும்பங்களுக்கும் இடையே பையனின் சிறு வயது துவக்கமே நட்புறவு இருந்தது.
அதுவும் சந்திப்பதும் ஒன்று கூடுவதும் வழமையாக நடந்தேறுவது என்பதால் புகைப்படங்களுக்கு பஞ்சம் இருக்குமா என்ன..?
அதில் ஓரிரண்டு தப்பி பையனின் உடைமைகளுடன் வந்து சேர்ந்திருக்க சத்தியமாய் அவன் அதை கவனித்திடவில்லை.கவனித்திருந்தால் அதை அகற்றி விட்டு தான் மறுவேலை பார்த்திருப்பான் என்பது வேறு விடயம்.
அவனின் மன எண்ணத்தை அவள் அறிந்திடும் வாய்ப்பில்லையே.அவன் அவளுடன் நடந்து கொள்வது அப்படித் தானே.
"இவ என்ன இப்போ திடீர்னு உர்ருன்னு இருக்கா..?" மனதுக்குள் நினைத்தவனோ எதுவும் பேசாது குளியலறைக்குள் சென்றிட பாவையவளுக்கோ எகிறியது.
"இந்த ரோபோவஅஅஅஅஅஅஅ" பற்களை நறநறத்துக் கொண்டவளுக்கோ அவன் மீது கோபத்தை காட்டி வேண்டும் என்கின்ற வேகம்.
மூளை கிறுக்கத் தனமாய் சிந்திக்க அவனுக்கு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணத்துடன் குளியலறைக் கதவை வெளிப்பக்கமாய் பூட்டினாலும் உள்ளுக்குள் பயந்து செத்துக் கொண்டிருந்ததும் வேறு விடயம்.
குளித்து விட்டு தலையை துவட்டிய படி கதவைத் திறக்கப் பார்த்திட்ட பையனுக்கு வெளியில் பூட்டியிருப்பது உரைத்திட தடதடவென கதவைத் தட்டியவனுக்கு சிறிது நேரம் கடந்த பின்னே புரிந்தது,பாவையவள் வேண்டுமென்றே செய்திருப்பது.
"இசை கதவத்தெற.." அவளின் கோபம் ஏன் என்றே தெரியாவிடினும் அவளின் செயலில் சிரிப்புத் தான் வந்தது,பையனுக்கு.
இருப்பினும் குரலை கடினமாய் மாற்றிக் கொண்டு மீண்டும் கத்திய படி தட்டிட பாவையவளோ பயத்தை காட்டிக் கொள்ளாது விறைப்பாய் நிற்பது போல் நின்றிருந்தாலும் பாதங்கள் ஆட்டம் கண்டு கொண்டிருந்தன.
"இசை கதவத் தெற.." மறுமுறையும் அவன் சத்தம் போட கதவைத் திறந்து விட்டவளோ அவன் வரும் முன் ஓடியிருந்தாள்,அறையில் இருந்து.
இரண்டு நாட்களாய் முகம் பார்த்திட மறுப்பவளிடம் ஏனென்று கேட்டிட மனம் சண்டித்தனம் செய்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவனுக்கு அவளின் பாராமுகம் புரியாது போகுமா..?
அவனறிந்த இசையவளுக்கு வாய் ஓயாது.ஆனால்,இந்த இரு நாட்கள் அவள் கடைபிடித்து வரும் அமைதி அவளின் கோபத்தின் காரணம் என்று அறிந்தவனுக்கு சத்தியமாய் கோபத்தின் காரணம் துளியும் புரிந்திடவில்லை.
அன்றிரவு கதவை அடைத்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தவளிடம் கேள்வி கேட்டிட வேண்டும் என்றே விழித்திக் கிடந்தவனின் எண்ணத்தை பொய்யாக்காமல் உள்நுழைந்தவளோ அவனைப் பாராது கட்டிலில் படுத்துக் கொள்ள பையனுக்கு கோபமாய் வந்தது.
அவளின் பாராமுகம் அவனுக்கு பிடிக்கவேயில்லை.சத்தியமாய் பிடிக்கவேயில்லை.எல்லாம் இருந்தும் அந்த பாராமுகம் அவனுக்குள் ஏதோ ஒன்றின் இன்மையை உணர்த்திக் கொண்டல்லவா இருக்கிறது..?
"என்ன தூங்க போறியா..?"
"ம்ம்.." ஒற்றை வார்த்தையில் வந்தது,அவள் பதில்.அவனுக்கோ இன்னும் ஏறிற்று,சினம்.
"இவ்ளோ சீக்கிரமா..?"
"ம்ம்ம்ம்.." அதே பதில்.பையனின் அதே "ம்ம்".என்ன இழுவை ராகத்தில் மட்டும் சற்றே இறக்கம்.
"நம்ம ம்ம்ம நமக்கே ரிபீட் அடிக்கிறா..பாவி.." மனதுக்குள் அவளுக்கு அர்ச்சித்தவனோ இப்படி வழிய சென்று பேசும் ரகம் இல்லையே.ஏனோ அதை கவனிக்க மறந்திருந்தாள்,பாவையவள்.
"நா இன்னிக்கி பெட்ல படுக்குறேன்.." வேண்டுமென்று தான் சொன்னான்,அவள் நிச்சயம் எதிர்க்கேள்வி கேட்பாள் என்கின்ற எதிர்ப்பார்ப்புடன்.
எல்லா நேரத்தில் எதிர்ப்பார்ப்புகள் நிஜமாகுமா என்ன..?
"ம்ம்.." அவளின் பதிலில் அவனுக்கோ உச்சபட்ச கோபம்.
கடுகடுத்த முகத்துடன் எழுந்து வந்தவனோ அவளை மறித்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றிட யாழவனின் இதயம் கொஞ்சம் வேகமெடுத்து தொலைத்தது,இசையவளின் அருகாமையில்.
"என்னாச்சு உனக்கு..? என்ன ப்ரச்சன..? எதுக்கு இப்ப உர்ருன்னு பேசாம இருக்க..?" அதட்டலான குரலில் கேட்டிட அவளுக்கோ இன்னும் ஆத்திரமாய் வந்தது.
"ஒன்னுல்ல.." வெடுக்கென வந்த பதிலில் அவன் புருவங்கள் ஏறி இறங்கிட செவியை தீண்டிய வண்ணம் இருந்தது,வேகமெடுத்திருந்த இதயத்தின் ரிதம்.
"என்னாச்சு உனக்கு..? எதுக்கு இப்டி இருக்க..?" தன்மையாய் கேட்டவனின் குரலில் இருந்த பரிவில் அவளுக்கு அழுகை வரும் போல இருந்திட தலை தாழ்த்தி நின்றவளின் விழிகளில் மெல்ல மெல்ல ஈரம் சேர்ந்திற்று.
"உன்ன தான் கேக்கறேன் இசை..என்னன்னு சொல்லு.." பொறுமையாய் கேட்டவன் இத்தனை தூரம் இறங்கி வருவதே பெரிது தான்.
"நீங்க இன்னும் அந்த அபி நெனச்சிகிட்டு இருக்கீங்களா..?"
அவளிடம் இருந்து எதிர்பாரா கேள்வியை கேட்டு விட அவள் கேள்வியில் திகைத்து நின்றான்,பையன்.
உயிர்த்தொடும்.
2024.09.07