யாழின் இசையாய்..
யாழிசை 20(ii)
காதல்!
காயங்கள் நிறைந்தாலும் கானல்கள் நிரம்பினாலும் மனங்கள் புதைத்து வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்களில் ஒன்று தானே இந்த காதல்.
சிலருக்கு தவமின்றி கிட்டும் வரமாகிடும்.சிலருக்கு வரமின்றி அனுஷ்டிக்கும் தவமாகிடும்.
தவமெனவோ..வரமெனவோ..
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்தில் காதல் உண்டு.இல்லையென்றாலும் காதலின் சாயலேனும் உண்டு.
எல்லாம் மரத்துப் போன மனமும் ஏதோ ஒரு மூலையில் காதலுக்கென உயிர்ப்பாக காத்திருப்பதுண்டு.தன் வாழ்வும் காதலால் மாறிப் போகும் என துளி நம்பிக்கையில் எத்தனையோ பேர் ஜீவனை பற்றிக் கொண்டு நகர்வதுமுண்டு.
அது தானே காதலின் விந்தை! காதல் செய்திடும் மாயம்!
பையனுக்கோ சத்தியமாய் அது புரியவில்லை.புரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை,அவன்.
ஆழ்ந்த நித்திரையில் சுருண்டு உறங்கியவளிடம் தன் மன எண்ணத்தை கொட்டி விட்டு வந்து அவனுக்கு நிம்மதியை வாரி வழங்கினாலும் மனதுக்குள் ஏதோ வலித்தது.
அவளுக்கு நிச்சயம் தன் மீது காதல் வந்திடாது என குருட்டு நம்பிக்கையுடன் இருப்பவனுக்கு யார் தான் எடுத்துரைத்திட காதலில் மாயையை..?
காதல் என்றால் சொல்லிக் கொண்டா வருகிறது..?
அகத்தில் எண்ணிலடங்கா மாற்றங்களை கேட்டு விட்டா தருகிறது..?
அவனும் காதல் கொண்டவன் தான்.ஆனால்,காதலை முழுதாய் கண்டவன் அல்லவே.அதனாலோ என்னவோ பாவையவளின் காதல் அவனை ஆட்டுவித்திடும் ஆழம் தெரிந்திடும் வாய்ப்பில்லை.
மேனியை தழுவிக் கொண்டு ஓடிய நீர்த்திவலைகளுடன் அவன் எத்தனை மணிநேரம் ஒருமித்துப் போயிருந்தானோ..?
அதீத குளிர்மையை மேனி உணர்ந்திடத் துவங்கும் போதே தன் செயல் உரைத்திட குளித்து முடித்து விட்டு வெளியே வந்த பின்னும் உறக்கம் கலைந்திருக்கவில்லை,பாவையவளுக்கு.
"நம்மள டிஸ்டர்ப் பண்ணிட்டு இவ மட்டும் எப்டி தான் டிஸ்பர்டன்ஸே இல்லாம தூங்கறளோ தெரில.." கடுப்படித்தவனுக்கு அவளின் நிம்மதியான உறக்கத்தின் மீது கோபமாய் வந்தது.
அவன் உறக்கத்தில் நிம்மதி இருந்ததா என்று பையனுக்கு தெரியாது.ஆனால்,இப்போது இல்லாதது போலவே தோன்றிற்று.அதுவும் நேற்றைய இரவு அவளின் குரட்டை சத்தம் இல்லாது உறக்கம் தழுவ மறுத்ததும் நினைவில் வர அவளை எழுப்பியே தீர வேண்டும் என்கின்ற உந்துதல்.
அவள் துயிலை விரட்டி விழித்தெழச் செய்திடும் நோக்குடன் நெருங்கி விட்டாலும் சற்றே அதிகமாகி இருந்த இதயத் துடிப்பு அப்படியே தடுத்தது,பையனை.
●●●●●●●●
"இந்த ரெண்டு வாராம இந்த மனுஷன் எதுக்கு இப்டி டல்லா இருக்குன்னு தெரிலியே..என்ன கேட்டாலும் சொல்லாது கல்லுளி மங்கன்.." அலைபேசியை கவனம் பதித்திருந்தவளை அவள் இதழ் இதழ்கள் திட்டித் தீர்த்திட அவளிடம் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று.
அவளை ஆழ்ந்து யோசித்திட வைக்கும் விதமாகத் தான் பையனும் நடந்து கொள்கிறான்,இந்த இரு வாரங்களாய்.
முன்பென்றால் அவளுடன் கதைக்கும் போதும் சரி அளவளாவும் போதும் சரி ஒரு வித உயிர்ப்புத் தெரியும்.உண்மை இருக்கும்.
ஆனால்,இப்போது அப்படித் தோன்றிடவில்லை.ஏதோ அழுத்தத்தில் தன்னை புறக்கணிக்க முடியா தன்னுடன் கடமைக்கு கதைப்பது போன்ற எண்ணம்.
ராமநாதனை நம்பிடச் செய்ய நடிக்கத் துவங்கி தான் இருவரும் நெருங்கியிருந்தாலும் அவளிடம் தோழனாய் இருப்பதாய் அவன் வாக்குத் தந்ததில் இருந்தே அவளின் அக்கறை கொஞ்சமாய் அவளுக்கு புரிந்திருந்தது.
புரிந்து கொண்ட அக்கறையை எண்ணி அவள் மகிழும் போதெல்லாம் பையனே அதை சப்பென்றாக்கி விட நம்புவதா இல்லையா என்கின்ற குழப்பமும் அவளுக்குள்.
அந்த குழப்பம் அவளின் நேசத்தை கொஞ்சமும் குறைத்திடவில்லை.அவள் தான் எந்தவொரு அக்கறையையும் எதிர்பார்த்திடவில்லையே.
அக்கறை எதிர்பாராவிடினும் சமீப நாட்களாய் அவன் காட்டிடும் புறக்கணிப்பெ அவளுக்கு வெறுமையைத் உருவாக்கி வைத்திட அவளும் இயல்பாய் இல்லை.
ராமநாதனும் பலமுறை கேட்டு விட்டார்,இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டையா என்று.பேசிப் புரிந்து சண்டையை தீர்க்கும் படி அறிவுரையும் கூறிவிட்டார்.
அவர்களுக்கிடையே சண்டை இருந்தாலும் பரவாயில்லை.அவளுக்கே புரியாமல் அல்லவா இருக்கிறது பையனின் புறக்கணிப்பின் அகராதி..?
அவள் தன்னை இதழ்களை மெதுவாய் நகர்த்தி திட்டித் தீர்ப்பது தெரிந்தும் எதிர்வினையாற்றாது இருந்தாலும் அடிக்கடி அவளை உரசிடத் தவறவில்லை,பையனின் விழிகள்.
அவள் தன்னைப் பாதிக்கிறாள் என்று தெரியும் அவனுக்கு.ஆனாலும் ஏன் விழிகளை அவளை வட்டமிடுது என்று யோசித்திடவில்லை,பையன்.பாதித்தாலும் காதலில் விழா மாட்டேன் என்கின்ற இறுமாப்பு தான் அதன் அடிநாதமோ..?
காதலின் சுழலில் இறுக்கங்களே சுக்கு நூறாய் போகுமிடத்து இறுமாப்புக்கள் எம்மாத்திரம்..?
அவளின் மெல்லிய இதழசைப்புடன் கூடிய அர்ச்சனையை ஒரு இதழ் சுளிப்போடு தோள் குலுக்கி கடந்து விட்டவனோ தன் வேலையை முடித்து விட்டு எழுந்து கொள்ள அப்போதும் அவள் புலம்பல் நின்றபாடில்லை.
"வர வர வாய்க்கொழுப்பு ரொம்ப கூடிப் போச்சு இவளுக்கு..ரொம்பத் தான் பண்றா இந்த மைக் செட்ட்ட்ட்ட்.." மனதுக்குள் நினைத்தவனோ எதையும் காட்டாத முகத்துடன் நடந்து சென்று அவளருகே இருந்த மின்சூளை எடுத்துக் கொண்டு திரும்பி நடகத் துவங்கியது தான் தாமதம்,
பின்னிருந்த கால்கள் முன்னே எட்டு வைக்கும் முன் பின்னிக் கொண்டு பின்னலிட்டு சதி செய்ய பின்னோக்கி வளைந்து விட்டான்,பையன்.
"ஐயோ சாரே.." கட்டிலில் அமர்ந்திருந்தவளை பதறிக் கொண்டு எழுந்து வந்து அவனைப் பிடித்திட ஒரு கரம் அவனின் முதுகிலும் அழுந்தப் பதிந்திருக்க மறுகரமோ பையனின் முழங்கையின் மேற்பகுதியை இறுக்கமாய் பிடித்திருந்தது.
கொஞ்சம் வளைந்து பின்னே சரிந்து ஒரு பாதம் மட்டும் தரையில் தரிக்க அவளின் பிடியுடன் சமநிலையில் இருந்தவனின் விழிகளின் கருமணிகளோ எதிரெதிர் முனைகளில் வந்து நின்றிட மெதுவாய் அழகாய் அமைதியாய் அவனிதயம் குத்திச் சென்றது,அவள் விம்பம்.
விழுந்திடுவோம் என்று தெரிந்தும் சீராய் இருந்த இதயம் அவள் தொடுதலிலும் அருகாமையிலும் எம்பிக் குதிக்க பிளந்த இதழ்களுடன் மூச்சு விட மறந்து போயிருந்தவனுக்கு இமைகள் கூட ஒட்டவில்லை.
"சாரே நேரா நில்லுங்க..முதுகு வலிக்கப் போகுது.." கரிசனையாய் அவள் மொழியவுமே தன்னிலையில் விழுந்தவனுக்கு சுற்றம் உரைக்க பட்டென்று நிலைக்கு வந்தாலும் இதயம் வேகமெடுத்து துடித்தது.வழமை போலவே இடது புற நெஞ்சில் அழுத்தமாய் கரத்தை பதித்தவனின் விரல்களே இதயமதின் வேகத்தை உணர்ந்து தொலைத்தன.
"ஏதாச்சும் அடி பட்டுச்சா..? கால் ஏதும் சுளுக்கிருச்சா..?" அவனுடனான கோபம் மறந்து பையனை மேலிருந்த கீழ் ஆராய்ந்த அந்த விழிகளில் பதட்டம் படையெடுத்திருந்தது.
"ஒன்னுல்ல இசை.. ஐ அம் ஃபைன்ன்ன்ன்ன்.." எம்பிக்குதித்த இதயத்தை அடக்கும் வழி தெரியாது அவளிடம் இருந்து விலக முயன்றவனின் செயலில் அவளுக்கு கோபம்.
"வர வர ரொம்ப ஓவரா தான் பண்றீங்க நீங்க..?"
"என்ன பண்றேன்..சும்மா நீயா ஏதாச்சும் நெனச்சுக்காத..போ போய் வேலய பாரு.." அவளிடம் இருந்து விலகி ஓகட முயன்றவனின் செயலில் அவள் புருவங்கள் சுருங்கின.
"உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன சாரே..இப்போ ரெண்டு வாரமா என் கூட நார்மலா பேசாம உங்க பாட்டுல இருக்கீங்க..?உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன..அன்னிக்கிம் சிடுசிடுன்னு தான் இருந்தீங்க..ஆனா என்னோட ஆஃபீஸ் வர்க்க பண்ணித் தந்தீங்க..அப்போலாம் நார்மலா இருப்பீங்க..? இப்போ திடீர்னு உங்களுக்கு என்ன தான் ஆச்சு சாரே..?"
"இசை ஒன்னுல்ல..ஒன்னுல்ல..நீ போய் வேலய பாரு.." அவளுக்கு மறுமொழி உரைக்க விடாது அவன் கடந்து செல்ல தொங்கிப் போனது,பாவையவளின் முகம்.
"என்ன மறந்துரு அதுக்காக ஃப்ரெண்டா இருக்கேன்னு சொல்ல வேண்டியது..ஆனா ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு உர்ரு மூஞ்சோட சுத்த வேண்டியது.." பையனின் செவியை தீண்டிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே சற்று சத்தமாக பேசி விட்டு அவள் நகர எந்தவோர் எதிர்வினையும் இல்லை,பையனிடமிருந்தது.
அலுவலகத்துக்கு அவளை தனியாக கிளம்பச் சொல்லி விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டவனின் மனமோ இனிமேல் தனிமைக்கு பழகிட வேண்டும் என தனக்குத் தானே கட்டளை விதித்துக் கொண்டிருந்தது,அன்று அவன் உணர்ந்த வெறுமையால்.
அவளின்றிப் போன அந்த ஒரு நாளில் அவன் உணர்ந்த வெறுமை ஒன்றும் கொஞ்ச நஞ்சம் அல்லவே..?ஏதோ வாழ்க்கையே மாறி விட்டது போலல்லவா சுற்றிக் கொண்டிருந்தான்,பையன்..?
எப்படியும் அவளை விட்டு விலகத் தான் போகிறான்.அது நிச்சயம் அவனுக்கு ஆழமாய் வலிக்கத் தான் செய்யும்.அந்த வலியின் ஆழத்தை குறைக்கத் தானோ இந்த முயற்சி..? அப்படித் தான் போலும்.
வாகன நெரிசலில் வண்டியை மெதுவாகவே ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு பக்கத்தில் இசையவள் இல்லா வெறுமையை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே இருந்தது.அவளிருந்தால் என நினைக்கும் போதே இதழ்கடையோரப் புன்னகையும் அத்தோடு பெருமூச்சும் எழுந்திட சலிப்பாய் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளில் வீழ்ந்தாள்,அந்தப் பெண்.
வாகனங்கள் வீதியின் சமிஞ்சைக்கேற்ப தரித்து நின்றிருந்தது,பாதசாரிகள் கடக்க வேண்டி இருக்கவே.
அந்தப் பெண்ணை எங்கோ கண்டிருப்பது போல் தோன்றினாலும் நினைவடுக்கின் இடுக்குகளில் இருந்து வெளிக்கொணர்வது சற்றே சிரமமாய்.
ஸ்டியரிங்கில் விரல்கள் தாளமிட தீவிரமாய் யோசித்தவனுக்கு பாவையவளின் கல்லுரிப் புகைப்படங்களில் இருந்த பெண் என்பது தெரிய வர இசையவளுக்கு அழைக்கலாமா என யோசிக்கவும் செய்தான்,பையன்.
அழைப்பு விடுத்து விடயத்தைச் சொன்னால் அவள் மகிழ்ந்திடுவாள் என்கின்ற எண்ணத்தில் அவளுக்கு அழைப்பெடுக்க முயன்றவனின் பார்வை எதேச்சையாய் மறுபுறம் திரும்ப அங்கு அந்தப் பெண்ணின் பக்கத்தில் புன்னகை நிரம்பி வழிய அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்,அபிஷேக்.
அபிஷேக்கை கண்டதும் பையனின் முகத்தில் தோன்றிட்ட சிறு நகை அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கையில் மறைந்திட முகத்தில் சிந்தனை ரேகைகள்.
அந்தப் பெண்ணை பாவையவளின் தோழியாக தெரிந்தவனுக்கு அபிஷேக் அவளின் காதலானகவோ கணவனாகவோ இருப்பது கூட பிரச்சினையில்லை.ஆனால்,இசையவள் அபிஷேக்கை யாரென்று தெரியாத விதமாய் நடந்து கொண்டதே நினைவிலாட அதுவே பெருத்த யோசனையாய்.
எப்படியும் தோழியின் திருமணம் பற்றி அவளுக்கு தெரியாது இருக்காதே என மனம் தன்பாட்டில் சிந்தனையை வளரவிட்டது.இருபுறமும் தலையாட்டி பெருமூச்சு விட்டவனுக்கு மனமை பாவையவளிடம் கேட்டே தீர வேண்டும் என எண்ணத்தை விதைத்துக் கொண்டது,தீவிர பாவத்துடன்.
அலுவலகம் சென்று விடயத்தை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள பாவையவளுக்கு அழைத்த போதிலும் வேண்டுமென்று அவளின் அழைப்புக்களை புறக்கணித்து அவனுக்குள் கடுப்பை பரப்பினாள்,மகராசி.
அவனின் புறக்கணிப்புக்கான பழிவாங்கல் போல.அவனுக்கு அப்படியே தோன்றிட பற்களை நறநறத்தவனை அரவிந்த் விசித்திரமாய் பார்த்தது வேறு கதை.
மீள வீடு செல்லும் பையனின் மனதில் யோசனைகள் நிரம்பியோடியது.ஏனென்று தெரியாமல் மனதில் சிறு நெருடல்.
இரவு கவிழ்ந்திருந்த நேரம் அது.
கட்டிலை ஒழுங்கிப் படுத்திக் கொண்டிருந்தவளோ அவனுடம் கோபம் காட்டிக் கொண்டிருக்க பையனுக்கு ஏனோ இப்போது சமாதானம் செய்யும் மனமில்லை.இனிமேல் இப்படி இருக்கக் கூடாது என நினைத்து முடிவெடுத்திருந்ததே அவன் மனது.
"இசை.."
".............."
"இசைஐஐஐஐஐ"
"................"
"இசைஐஐஐஐஐ" சற்றே சத்தமாக வந்து செவியில் மோதிட்ட பையனின் வார்த்தைகளில் அவள் கொஞ்சம் பயந்து விட்டாள்.மெல்லிய பயம் சூழ் விழிகளுடன் அவனை ஏறிட அவளின் பயம் புரிய இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,பையன்.
"ப்ச்..பயப்டாத நா ஒன்னும் அடிக்க மாட்டேன்..ஆமா அன்னிக்கி நீ காட்டனியே ஒரு ஃபோட்டோ அதுல இருந்தாங்களே உன்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க.." என்றிட சட்டென பாவையவளின் மூளைக்குள் மின்னலடித்தது.
இன்று காலையில் பையனின் கண்பட்ட அந்த தோழி இசையவளுக்கு முன்பே அழைப்பெடுத்து பையன் தம்மை பார்த்திட்ட விடயத்தை எத்தி வைத்திருந்தாளே.அதனால் சற்றே இயல்பாய் காட்டிக் கொள்ள முடிந்தது.இல்லாவிடின் அதற்கும் பயந்து பதறி இருப்பாள்.
"ஆமா அன்னிக்கி காட்டுனேன்..அவ ரம்யா..எங்க க்லேஜ் என்னோட டிபார்ட்மண்ட்..எதுக்கு இப்போ திடீர்னு அவள பத்தி கேக்கறீங்க..?"
"அந்த பொண்ணுக்கு மேரேஜ் ஆயிடுச்சா என்ன..?"
"ஆமா இப்போ ஒரு மாசம் முன்னாடி தான் ஆச்சு..அதுவும் அன்னிக்கி வீட்டுக்கு வந்தாரே உங்க வக்கீல் சார்..அவர் கூடத் தான்.." இயல்பாய் காட்டிக் கொண்டு அவள் பேசினாலும் உள்ளுக்குள் அத்தனை பயம்.பையன் தன் பொய்யை கண்டு பிடித்து விடுவானோ என்கின்ற கலக்கம் அவள் தேகத்தில் முழுவிடத்திலும்.
"அப்போ எதுக்கு நீ மேரேஜ்கு போகல.." அவளிடம் இருந்து இப்படி இயல்பான பதிலை பையன் எதிர்பார்த்து இருக்காவிடினும் அவனின் உடல்மொழி ஏனோ அவள் சொல்வது உண்மையென பையனுக்கு நம்பத் தடுத்தது.
"அவங்க சின்னதா தான் மேரேஜ் பண்ணுனாங்க..அதனால ஃப்ரெண்ட்ஸ் யாரயும் கூப்டல.." அமைதியான குரலில் சொல்லி விட்டு விட்டால் போதுமென ஓடியவளைப் பார்த்திருந்த பையனின் விழிகளில் சிறு தீவிரம்.
உயிர்த்தொடும்.
2024.09.13
யாழிசை 20(ii)
காதல்!
காயங்கள் நிறைந்தாலும் கானல்கள் நிரம்பினாலும் மனங்கள் புதைத்து வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்களில் ஒன்று தானே இந்த காதல்.
சிலருக்கு தவமின்றி கிட்டும் வரமாகிடும்.சிலருக்கு வரமின்றி அனுஷ்டிக்கும் தவமாகிடும்.
தவமெனவோ..வரமெனவோ..
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்தில் காதல் உண்டு.இல்லையென்றாலும் காதலின் சாயலேனும் உண்டு.
எல்லாம் மரத்துப் போன மனமும் ஏதோ ஒரு மூலையில் காதலுக்கென உயிர்ப்பாக காத்திருப்பதுண்டு.தன் வாழ்வும் காதலால் மாறிப் போகும் என துளி நம்பிக்கையில் எத்தனையோ பேர் ஜீவனை பற்றிக் கொண்டு நகர்வதுமுண்டு.
அது தானே காதலின் விந்தை! காதல் செய்திடும் மாயம்!
பையனுக்கோ சத்தியமாய் அது புரியவில்லை.புரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை,அவன்.
ஆழ்ந்த நித்திரையில் சுருண்டு உறங்கியவளிடம் தன் மன எண்ணத்தை கொட்டி விட்டு வந்து அவனுக்கு நிம்மதியை வாரி வழங்கினாலும் மனதுக்குள் ஏதோ வலித்தது.
அவளுக்கு நிச்சயம் தன் மீது காதல் வந்திடாது என குருட்டு நம்பிக்கையுடன் இருப்பவனுக்கு யார் தான் எடுத்துரைத்திட காதலில் மாயையை..?
காதல் என்றால் சொல்லிக் கொண்டா வருகிறது..?
அகத்தில் எண்ணிலடங்கா மாற்றங்களை கேட்டு விட்டா தருகிறது..?
அவனும் காதல் கொண்டவன் தான்.ஆனால்,காதலை முழுதாய் கண்டவன் அல்லவே.அதனாலோ என்னவோ பாவையவளின் காதல் அவனை ஆட்டுவித்திடும் ஆழம் தெரிந்திடும் வாய்ப்பில்லை.
மேனியை தழுவிக் கொண்டு ஓடிய நீர்த்திவலைகளுடன் அவன் எத்தனை மணிநேரம் ஒருமித்துப் போயிருந்தானோ..?
அதீத குளிர்மையை மேனி உணர்ந்திடத் துவங்கும் போதே தன் செயல் உரைத்திட குளித்து முடித்து விட்டு வெளியே வந்த பின்னும் உறக்கம் கலைந்திருக்கவில்லை,பாவையவளுக்கு.
"நம்மள டிஸ்டர்ப் பண்ணிட்டு இவ மட்டும் எப்டி தான் டிஸ்பர்டன்ஸே இல்லாம தூங்கறளோ தெரில.." கடுப்படித்தவனுக்கு அவளின் நிம்மதியான உறக்கத்தின் மீது கோபமாய் வந்தது.
அவன் உறக்கத்தில் நிம்மதி இருந்ததா என்று பையனுக்கு தெரியாது.ஆனால்,இப்போது இல்லாதது போலவே தோன்றிற்று.அதுவும் நேற்றைய இரவு அவளின் குரட்டை சத்தம் இல்லாது உறக்கம் தழுவ மறுத்ததும் நினைவில் வர அவளை எழுப்பியே தீர வேண்டும் என்கின்ற உந்துதல்.
அவள் துயிலை விரட்டி விழித்தெழச் செய்திடும் நோக்குடன் நெருங்கி விட்டாலும் சற்றே அதிகமாகி இருந்த இதயத் துடிப்பு அப்படியே தடுத்தது,பையனை.
●●●●●●●●
"இந்த ரெண்டு வாராம இந்த மனுஷன் எதுக்கு இப்டி டல்லா இருக்குன்னு தெரிலியே..என்ன கேட்டாலும் சொல்லாது கல்லுளி மங்கன்.." அலைபேசியை கவனம் பதித்திருந்தவளை அவள் இதழ் இதழ்கள் திட்டித் தீர்த்திட அவளிடம் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று.
அவளை ஆழ்ந்து யோசித்திட வைக்கும் விதமாகத் தான் பையனும் நடந்து கொள்கிறான்,இந்த இரு வாரங்களாய்.
முன்பென்றால் அவளுடன் கதைக்கும் போதும் சரி அளவளாவும் போதும் சரி ஒரு வித உயிர்ப்புத் தெரியும்.உண்மை இருக்கும்.
ஆனால்,இப்போது அப்படித் தோன்றிடவில்லை.ஏதோ அழுத்தத்தில் தன்னை புறக்கணிக்க முடியா தன்னுடன் கடமைக்கு கதைப்பது போன்ற எண்ணம்.
ராமநாதனை நம்பிடச் செய்ய நடிக்கத் துவங்கி தான் இருவரும் நெருங்கியிருந்தாலும் அவளிடம் தோழனாய் இருப்பதாய் அவன் வாக்குத் தந்ததில் இருந்தே அவளின் அக்கறை கொஞ்சமாய் அவளுக்கு புரிந்திருந்தது.
புரிந்து கொண்ட அக்கறையை எண்ணி அவள் மகிழும் போதெல்லாம் பையனே அதை சப்பென்றாக்கி விட நம்புவதா இல்லையா என்கின்ற குழப்பமும் அவளுக்குள்.
அந்த குழப்பம் அவளின் நேசத்தை கொஞ்சமும் குறைத்திடவில்லை.அவள் தான் எந்தவொரு அக்கறையையும் எதிர்பார்த்திடவில்லையே.
அக்கறை எதிர்பாராவிடினும் சமீப நாட்களாய் அவன் காட்டிடும் புறக்கணிப்பெ அவளுக்கு வெறுமையைத் உருவாக்கி வைத்திட அவளும் இயல்பாய் இல்லை.
ராமநாதனும் பலமுறை கேட்டு விட்டார்,இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டையா என்று.பேசிப் புரிந்து சண்டையை தீர்க்கும் படி அறிவுரையும் கூறிவிட்டார்.
அவர்களுக்கிடையே சண்டை இருந்தாலும் பரவாயில்லை.அவளுக்கே புரியாமல் அல்லவா இருக்கிறது பையனின் புறக்கணிப்பின் அகராதி..?
அவள் தன்னை இதழ்களை மெதுவாய் நகர்த்தி திட்டித் தீர்ப்பது தெரிந்தும் எதிர்வினையாற்றாது இருந்தாலும் அடிக்கடி அவளை உரசிடத் தவறவில்லை,பையனின் விழிகள்.
அவள் தன்னைப் பாதிக்கிறாள் என்று தெரியும் அவனுக்கு.ஆனாலும் ஏன் விழிகளை அவளை வட்டமிடுது என்று யோசித்திடவில்லை,பையன்.பாதித்தாலும் காதலில் விழா மாட்டேன் என்கின்ற இறுமாப்பு தான் அதன் அடிநாதமோ..?
காதலின் சுழலில் இறுக்கங்களே சுக்கு நூறாய் போகுமிடத்து இறுமாப்புக்கள் எம்மாத்திரம்..?
அவளின் மெல்லிய இதழசைப்புடன் கூடிய அர்ச்சனையை ஒரு இதழ் சுளிப்போடு தோள் குலுக்கி கடந்து விட்டவனோ தன் வேலையை முடித்து விட்டு எழுந்து கொள்ள அப்போதும் அவள் புலம்பல் நின்றபாடில்லை.
"வர வர வாய்க்கொழுப்பு ரொம்ப கூடிப் போச்சு இவளுக்கு..ரொம்பத் தான் பண்றா இந்த மைக் செட்ட்ட்ட்ட்.." மனதுக்குள் நினைத்தவனோ எதையும் காட்டாத முகத்துடன் நடந்து சென்று அவளருகே இருந்த மின்சூளை எடுத்துக் கொண்டு திரும்பி நடகத் துவங்கியது தான் தாமதம்,
பின்னிருந்த கால்கள் முன்னே எட்டு வைக்கும் முன் பின்னிக் கொண்டு பின்னலிட்டு சதி செய்ய பின்னோக்கி வளைந்து விட்டான்,பையன்.
"ஐயோ சாரே.." கட்டிலில் அமர்ந்திருந்தவளை பதறிக் கொண்டு எழுந்து வந்து அவனைப் பிடித்திட ஒரு கரம் அவனின் முதுகிலும் அழுந்தப் பதிந்திருக்க மறுகரமோ பையனின் முழங்கையின் மேற்பகுதியை இறுக்கமாய் பிடித்திருந்தது.
கொஞ்சம் வளைந்து பின்னே சரிந்து ஒரு பாதம் மட்டும் தரையில் தரிக்க அவளின் பிடியுடன் சமநிலையில் இருந்தவனின் விழிகளின் கருமணிகளோ எதிரெதிர் முனைகளில் வந்து நின்றிட மெதுவாய் அழகாய் அமைதியாய் அவனிதயம் குத்திச் சென்றது,அவள் விம்பம்.
விழுந்திடுவோம் என்று தெரிந்தும் சீராய் இருந்த இதயம் அவள் தொடுதலிலும் அருகாமையிலும் எம்பிக் குதிக்க பிளந்த இதழ்களுடன் மூச்சு விட மறந்து போயிருந்தவனுக்கு இமைகள் கூட ஒட்டவில்லை.
"சாரே நேரா நில்லுங்க..முதுகு வலிக்கப் போகுது.." கரிசனையாய் அவள் மொழியவுமே தன்னிலையில் விழுந்தவனுக்கு சுற்றம் உரைக்க பட்டென்று நிலைக்கு வந்தாலும் இதயம் வேகமெடுத்து துடித்தது.வழமை போலவே இடது புற நெஞ்சில் அழுத்தமாய் கரத்தை பதித்தவனின் விரல்களே இதயமதின் வேகத்தை உணர்ந்து தொலைத்தன.
"ஏதாச்சும் அடி பட்டுச்சா..? கால் ஏதும் சுளுக்கிருச்சா..?" அவனுடனான கோபம் மறந்து பையனை மேலிருந்த கீழ் ஆராய்ந்த அந்த விழிகளில் பதட்டம் படையெடுத்திருந்தது.
"ஒன்னுல்ல இசை.. ஐ அம் ஃபைன்ன்ன்ன்ன்.." எம்பிக்குதித்த இதயத்தை அடக்கும் வழி தெரியாது அவளிடம் இருந்து விலக முயன்றவனின் செயலில் அவளுக்கு கோபம்.
"வர வர ரொம்ப ஓவரா தான் பண்றீங்க நீங்க..?"
"என்ன பண்றேன்..சும்மா நீயா ஏதாச்சும் நெனச்சுக்காத..போ போய் வேலய பாரு.." அவளிடம் இருந்து விலகி ஓகட முயன்றவனின் செயலில் அவள் புருவங்கள் சுருங்கின.
"உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன சாரே..இப்போ ரெண்டு வாரமா என் கூட நார்மலா பேசாம உங்க பாட்டுல இருக்கீங்க..?உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன..அன்னிக்கிம் சிடுசிடுன்னு தான் இருந்தீங்க..ஆனா என்னோட ஆஃபீஸ் வர்க்க பண்ணித் தந்தீங்க..அப்போலாம் நார்மலா இருப்பீங்க..? இப்போ திடீர்னு உங்களுக்கு என்ன தான் ஆச்சு சாரே..?"
"இசை ஒன்னுல்ல..ஒன்னுல்ல..நீ போய் வேலய பாரு.." அவளுக்கு மறுமொழி உரைக்க விடாது அவன் கடந்து செல்ல தொங்கிப் போனது,பாவையவளின் முகம்.
"என்ன மறந்துரு அதுக்காக ஃப்ரெண்டா இருக்கேன்னு சொல்ல வேண்டியது..ஆனா ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு உர்ரு மூஞ்சோட சுத்த வேண்டியது.." பையனின் செவியை தீண்டிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே சற்று சத்தமாக பேசி விட்டு அவள் நகர எந்தவோர் எதிர்வினையும் இல்லை,பையனிடமிருந்தது.
அலுவலகத்துக்கு அவளை தனியாக கிளம்பச் சொல்லி விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டவனின் மனமோ இனிமேல் தனிமைக்கு பழகிட வேண்டும் என தனக்குத் தானே கட்டளை விதித்துக் கொண்டிருந்தது,அன்று அவன் உணர்ந்த வெறுமையால்.
அவளின்றிப் போன அந்த ஒரு நாளில் அவன் உணர்ந்த வெறுமை ஒன்றும் கொஞ்ச நஞ்சம் அல்லவே..?ஏதோ வாழ்க்கையே மாறி விட்டது போலல்லவா சுற்றிக் கொண்டிருந்தான்,பையன்..?
எப்படியும் அவளை விட்டு விலகத் தான் போகிறான்.அது நிச்சயம் அவனுக்கு ஆழமாய் வலிக்கத் தான் செய்யும்.அந்த வலியின் ஆழத்தை குறைக்கத் தானோ இந்த முயற்சி..? அப்படித் தான் போலும்.
வாகன நெரிசலில் வண்டியை மெதுவாகவே ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு பக்கத்தில் இசையவள் இல்லா வெறுமையை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே இருந்தது.அவளிருந்தால் என நினைக்கும் போதே இதழ்கடையோரப் புன்னகையும் அத்தோடு பெருமூச்சும் எழுந்திட சலிப்பாய் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளில் வீழ்ந்தாள்,அந்தப் பெண்.
வாகனங்கள் வீதியின் சமிஞ்சைக்கேற்ப தரித்து நின்றிருந்தது,பாதசாரிகள் கடக்க வேண்டி இருக்கவே.
அந்தப் பெண்ணை எங்கோ கண்டிருப்பது போல் தோன்றினாலும் நினைவடுக்கின் இடுக்குகளில் இருந்து வெளிக்கொணர்வது சற்றே சிரமமாய்.
ஸ்டியரிங்கில் விரல்கள் தாளமிட தீவிரமாய் யோசித்தவனுக்கு பாவையவளின் கல்லுரிப் புகைப்படங்களில் இருந்த பெண் என்பது தெரிய வர இசையவளுக்கு அழைக்கலாமா என யோசிக்கவும் செய்தான்,பையன்.
அழைப்பு விடுத்து விடயத்தைச் சொன்னால் அவள் மகிழ்ந்திடுவாள் என்கின்ற எண்ணத்தில் அவளுக்கு அழைப்பெடுக்க முயன்றவனின் பார்வை எதேச்சையாய் மறுபுறம் திரும்ப அங்கு அந்தப் பெண்ணின் பக்கத்தில் புன்னகை நிரம்பி வழிய அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்,அபிஷேக்.
அபிஷேக்கை கண்டதும் பையனின் முகத்தில் தோன்றிட்ட சிறு நகை அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கையில் மறைந்திட முகத்தில் சிந்தனை ரேகைகள்.
அந்தப் பெண்ணை பாவையவளின் தோழியாக தெரிந்தவனுக்கு அபிஷேக் அவளின் காதலானகவோ கணவனாகவோ இருப்பது கூட பிரச்சினையில்லை.ஆனால்,இசையவள் அபிஷேக்கை யாரென்று தெரியாத விதமாய் நடந்து கொண்டதே நினைவிலாட அதுவே பெருத்த யோசனையாய்.
எப்படியும் தோழியின் திருமணம் பற்றி அவளுக்கு தெரியாது இருக்காதே என மனம் தன்பாட்டில் சிந்தனையை வளரவிட்டது.இருபுறமும் தலையாட்டி பெருமூச்சு விட்டவனுக்கு மனமை பாவையவளிடம் கேட்டே தீர வேண்டும் என எண்ணத்தை விதைத்துக் கொண்டது,தீவிர பாவத்துடன்.
அலுவலகம் சென்று விடயத்தை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள பாவையவளுக்கு அழைத்த போதிலும் வேண்டுமென்று அவளின் அழைப்புக்களை புறக்கணித்து அவனுக்குள் கடுப்பை பரப்பினாள்,மகராசி.
அவனின் புறக்கணிப்புக்கான பழிவாங்கல் போல.அவனுக்கு அப்படியே தோன்றிட பற்களை நறநறத்தவனை அரவிந்த் விசித்திரமாய் பார்த்தது வேறு கதை.
மீள வீடு செல்லும் பையனின் மனதில் யோசனைகள் நிரம்பியோடியது.ஏனென்று தெரியாமல் மனதில் சிறு நெருடல்.
இரவு கவிழ்ந்திருந்த நேரம் அது.
கட்டிலை ஒழுங்கிப் படுத்திக் கொண்டிருந்தவளோ அவனுடம் கோபம் காட்டிக் கொண்டிருக்க பையனுக்கு ஏனோ இப்போது சமாதானம் செய்யும் மனமில்லை.இனிமேல் இப்படி இருக்கக் கூடாது என நினைத்து முடிவெடுத்திருந்ததே அவன் மனது.
"இசை.."
".............."
"இசைஐஐஐஐஐ"
"................"
"இசைஐஐஐஐஐ" சற்றே சத்தமாக வந்து செவியில் மோதிட்ட பையனின் வார்த்தைகளில் அவள் கொஞ்சம் பயந்து விட்டாள்.மெல்லிய பயம் சூழ் விழிகளுடன் அவனை ஏறிட அவளின் பயம் புரிய இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,பையன்.
"ப்ச்..பயப்டாத நா ஒன்னும் அடிக்க மாட்டேன்..ஆமா அன்னிக்கி நீ காட்டனியே ஒரு ஃபோட்டோ அதுல இருந்தாங்களே உன்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க.." என்றிட சட்டென பாவையவளின் மூளைக்குள் மின்னலடித்தது.
இன்று காலையில் பையனின் கண்பட்ட அந்த தோழி இசையவளுக்கு முன்பே அழைப்பெடுத்து பையன் தம்மை பார்த்திட்ட விடயத்தை எத்தி வைத்திருந்தாளே.அதனால் சற்றே இயல்பாய் காட்டிக் கொள்ள முடிந்தது.இல்லாவிடின் அதற்கும் பயந்து பதறி இருப்பாள்.
"ஆமா அன்னிக்கி காட்டுனேன்..அவ ரம்யா..எங்க க்லேஜ் என்னோட டிபார்ட்மண்ட்..எதுக்கு இப்போ திடீர்னு அவள பத்தி கேக்கறீங்க..?"
"அந்த பொண்ணுக்கு மேரேஜ் ஆயிடுச்சா என்ன..?"
"ஆமா இப்போ ஒரு மாசம் முன்னாடி தான் ஆச்சு..அதுவும் அன்னிக்கி வீட்டுக்கு வந்தாரே உங்க வக்கீல் சார்..அவர் கூடத் தான்.." இயல்பாய் காட்டிக் கொண்டு அவள் பேசினாலும் உள்ளுக்குள் அத்தனை பயம்.பையன் தன் பொய்யை கண்டு பிடித்து விடுவானோ என்கின்ற கலக்கம் அவள் தேகத்தில் முழுவிடத்திலும்.
"அப்போ எதுக்கு நீ மேரேஜ்கு போகல.." அவளிடம் இருந்து இப்படி இயல்பான பதிலை பையன் எதிர்பார்த்து இருக்காவிடினும் அவனின் உடல்மொழி ஏனோ அவள் சொல்வது உண்மையென பையனுக்கு நம்பத் தடுத்தது.
"அவங்க சின்னதா தான் மேரேஜ் பண்ணுனாங்க..அதனால ஃப்ரெண்ட்ஸ் யாரயும் கூப்டல.." அமைதியான குரலில் சொல்லி விட்டு விட்டால் போதுமென ஓடியவளைப் பார்த்திருந்த பையனின் விழிகளில் சிறு தீவிரம்.
உயிர்த்தொடும்.
2024.09.13