யாழின் இசையாய்..
யாழிசை 23(i)
"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." சற்றே சத்தமாய் இதழசைத்து பாடிய படி உடைகளை மடித்துக் கொண்டிருந்தவளை ஒரு கணம் தானாய் உயர்ந்து உரசின,அவன் விழிகள்.
அவளுக்கு பிடித்த பாடல் என்பது அடிக்கடி அவள் தன் கட்டைக்குரலில் பாடிடும் போதே அவனுக்குத் தெரியும்.அப்போதெல்லாம் வெறும் அவளுக்கு பிடித்த பாடலாய் இருந்தது,இப்போது அவனுக்கென அவள் பாடுவதைப் போல் ஆகி விடுவதன் காரணம் தான் என்ன..?
"உனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்குமா இசை..?" மடிக்கணினியின் விசைப்பலகையில் விரல்கள் ஓடித்திரிய அவன் கேட்டதற்கு துள்ளலுடன் பதில் சொன்னாள்,அவள்.
"ஆமா சாரே..ரொம்ப புடிக்கும்..அதுவும் அந்த லிரிக்ஸ் ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.." என்றவளோ உடைகளை மடித்து வைத்து விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட அவள் உருவம் மறையும் பையனின் பார்வை தன்னை பின் தொடர்ந்ததை அறியவில்லை,பாவையவள்.
இப்போதெல்லாம் அப்படித் தான.அவள் பக்கத்தில் இருந்தால் அவனின் காயங்கள் தந்திடும் நினைவுகள் நில்லாது ஓடி ஒளிய அதுவே அவனுக்கு பெரும் இதமாய்.
அவளுடன் இருக்கும் போது அவளைத் தாண்டி அவனால் எதையும் யோசிக்க முடியாது என்கின்ற கட்டத்திற்கு பையன் தள்ளப்பட்டிருந்ததை அவன் இன்னுமே உணரவில்லை.உணர்ந்து தொலைத்தாலும் ஏற்றுக் கொள்வானா என்றும் தெரியவில்லை.
அவனைப் பொறுத்த வரையில் அவளின் அருகாமையில் நித்தம் நிந்தித்திடும் நிதர்சனங்கள் மறக்கடிக்கப்படும் என்றிருக்க அதற்காகவே பாவையவளுடன் பெரும்பாலான பொழுதுகளை கழித்திடுவான்,பையன்.
மொத்தமும் மறக்கும் அளவு அவள் தனக்குள் உடுருவியிருக்கிறாள் என்பதை உணர்ந்து தொலைக்கவில்லை, அந்த கல்லுளி மங்கன்.
காலையில் அவளுடன் கதைத்துக் கொண்டே சமைப்பதாகட்டும் சமையலுக்கு உதவுவதாகட்டும்..
ஆடைகளை அழுத்தி முடிந்த பின்பும் தன்னுடைகளை அழுத்துபவளுடன் கதைப்பதாகட்டும் அவளுக்கு உதவுவதாகட்டும்..
அவள் அறையில் இருந்தால் பின்னூடு வந்த நுழைந்து கொள்வதாகட்டும் இல்லாத வேலைக்காக மடிக்கணினியை திறந்து வைப்பதாகட்டும்..
பசியெடுத்தாலும் பாவையவளின் வருகைக்காக காத்திருதாகட்டும் வந்தவளுக்கும் சேர்த்துப் பரிமாறிய கதைத்த படி அவளுடனே உண்பதாகட்டும்..
உறக்கத்தில் விழும் வரை அவளுடன் கதையளப்பதாகட்டும் அவள் உறங்கிய பின் அவளின் வதனத்தை பார்வையால் வருடிய படி கண்ணயர்வதாகட்டும்..
சொல்லப் போனால் யாழவனின் நாள் முழுக்க இசையவளின் அருகாமையில் தான் என்றாலும் அது பொய்யில்லை.அத்தனை தூரம் அவளின் அருகாமை தேவைப்பட்டது,அவனுக்கும் அவனே உணரா அவள் மீதான காதலுக்கும்.
விலகி நிற்கத் தான் அவன் போராடுவதே.இருப்பினும் அவள் காதலும் உணரா அவனின் காதலும் அவனின் மொத்த போராட்டத்தையும் முறியத்தல்லவா விடுகிறது,சிறிதும் கணக்கின்றி.
அவள் தன்னை விட்டு விலகிச் சென்ற பின்பு தான் இத்தனைக்கும் ஏங்கிப் போவோம் என்று தெரிந்தும் மீதி வாழ்க்கையின் நினைவுகளாய் தன் கொள்கைகளை உடைத்து அவன் இந்த நொடிகளை இரசித்துக் கடத்த முன்னின்றதற்கு அழுத்தமான காரணம் ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.காரணம் காதல்;ஆழ்மனதில் வேர்ப்பிடித்து எழுந்து நிற்கும் அவள் மீதான அவனின் காதல்.அவனின் பயங்களை தாண்டி அவன் வாழ்க்கையை பொக்கிஷமாக்க உந்திடும் அவள் மீதான அவனின் உணராக் காதல்.
இன்றும் அப்படித் தான்.ஏனென்றில்லாமல் அவளுடன் வெளியே சென்று வரத் தோன்றிற்று.அதன் காரணம் ஆராயவும் இல்லை,பையன்.
தாமிருவரும் தனித்து எங்கும் வெளியே பெரிதாய் சென்றிராது இருப்பது அவனுக்குள் பெரும் குறையாய் உறுத்திக் கொண்டே இருந்திடவே இந்த முடிவு.
அவளுக்கோ அவனின் மனது உந்தி தான் வெளியே செல்வதற்கான தீர்மானம் என்று புரியவேயில்லை.
"மாமா தான் நாம அந்நியோன்னியமா இருக்கோம்னு நம்பிட்டாருல்ல சார்..அப்றம் எதுக்கு சாரே திரும்ப வெளில போனும்..?"
பையன் தன்னுடன் நேரத்தை செலவழித்திட விரும்புவதை அறியாமல் அவளும் தன்பாட்டில் புலம்ப பையனும் அதற்கு மறுப்பேதும் கூறிடவில்லை.
தான் தான் காரணம் என்று சொன்னால் அவளாக ஏதும் கற்பனை செய்து கொள்ளக் கூடும் என சிந்தித்து அவனும் அமைதி காக்க பாவையவளுக்கோ அவனின் அமைதி தான் சொல்வதை ஒத்துக் கொள்ளும் ஆமோதிப்பின் வடிவமாய்.
●●●●●●●
தன் முன்னே அமர்ந்து இருந்தவளை அடிக்கடி இமை வெட்டாது வருடித் தொலைத்தன,அவன் விழிகள்.
ஒவ்வொரு முறையும் வித்தியாசமாய் இன்னும் மெருகேறித் தெரிய விழிகள் அவன் பேச்சைக் கேட்பதை அடிக்கடி மறந்து தான் போகின்றன.
"நீங்க எதுவும் சாப்டலயா..?"வாயின் உணவை அடைத்துக் கொண்டு கேட்டவளுக்கு மறுப்பாய் தலையசைத்தான்,அவன்.
"நீ சாப்டு எனக்கு இப்போ பசிக்கல.."
"எதுக்கு பசிக்கல..வீட்ல எப்பவும் இந்த டைம்கு சாப்டுவீங்க தான..ஒரு வேள நைட் டைம்கு ஹெவியா எதுவும் சாப்ட கூடாதுன்னு யோசிக்கிறீங்களோ..அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாஸ்..சாப்டுங்க.." தன் தட்டில் ஒன்றை அவன் புறம் தள்ளி வைத்திட அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
"அப்போவும் தெளிவா ஒரு தட்ட தான் தள்ளி வக்கிற..ம்ம்..?" ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கி அவன் கேட்டிட திருட்டு முழியுடன் தலை தாழ்த்தி அசடு வழிய சிரித்தவளைக் இரசனையுடன் ஒரு கணம் பார்வையால் தொட்டு விட்டு அவள் கொடுத்த உணவை சுவைக்க பின்னிருந்த கேட்ட சத்ததில் தலையை திருப்பி பார்த்தான்,பையன்.
பின்னே அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வை இசையவள் மீது படிந்திருந்த உச்சிக்கு சினம் பெருகிற்று,யாழவனுக்கு.
விழிகளில் அனல் தேக்கி அவர்களை உறுத்தி விழித்தவனுக்கு இருவரையும் அடித்து விடும் வேகம்.
"புல் ஷிட்ட்ட்ட்ட்.." நீள் நயனங்களின் சிவப்பு பரவிட அழுத்தமாய் ஆட்காட்டி விரலாலும் பெரு விரலாலும் நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு பொறாமையும் கோபமும் சரி விகிதமாய்.
பட்டென பார்வையை திருப்பி பாவையவளை உரசிட அநியாயத்திற்கு அழகாய்த் தெரிந்தாள்,அவள்.எப்போதும் முடியை பின்னிக் கொண்டே திரிபவள் குளித்து விட்டு ஈரம் காயாததால் சிறு க்ளிப்பினும் அடக்கி விட்டிருந்தவளின் தோற்றம் அவன் விழிகளுக்குள் உயிருள் கரைந்து நின்றதே.
என்ன யோசித்தானோ தெரியவில்லை,ஏறிய கோபத்துடன் "இசை" என்றான்,அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
"என்ன சாரே..?" உணவில் கவனமாய் இருந்தவளுக்கு சுற்றம் சத்தியமாய் உரைக்கவில்லை.
"நீ இந்த சைட்கு வா நா அந்த சைட்கு போறேன்..கம் க்விக்.."
"ஏன் சாரே கஷ்டமா இருக்கா..?" கேட்டுக் கொண்டு அவனிருக்கைக்கு வர அவள் புறம் வந்தவனின் பார்வை அந்த இரு ஆணையும் அமர்த்தலாய் தொட்டது.
இசையவளோ சாப்பிட்டு முடித்து கைகளை கழுவிக் கொண்டு ஓய்வறைக்குள் செல்ல அந்த சந்தர்ப்பத்தை தனதாக்கிக் கொண்டு அந்த ஆண்களின் அருகே வந்தான்,பையன்.
"இனிமே அந்த பக்கம் கண்ணு திரும்பிச்சு முழியோ தோண்டிருவேன்.." முகத்தில் புன்னகையுடன் நிதானமாய் இதயத்தை நடுங்கச் செய்யும் அழுத்தத்துடன் மொழிந்தவனின் விழிகளில் மின்னிய கோபம் இருவருக்கும் பயத்தைக் கிளப்பியது.
விரல் நீட்டி எச்சரித்தவனோ தன்னிடத்துக்கு வந்திட சுற்றம் இருந்த ஓரிருவரின் பார்வை தன் மீது வேறு விதமாய் படிவதைக் கண்டாலும் வெறுமேன தோளை உலுக்கிக் கொண்டான்,அவன்.
அவன் மீது சுமத்தப்பட்ட பொய்ப்பழி இல்லையென்று ஆன பின்னும் அவர்கள் அவன் புறம் தவறு இல்லை என்று நம்பிடவில்லை.அது ஒன்றும் அவனுக்கு புதிதும் அல்ல.
"பணம் இருக்குல தப்ப செஞ்சிட்டு தப்பிச்சு இருப்பான்.."
"காசு நல்லா இருக்கு..தப்பு பண்ணிட்டு அத இல்லன்னு சொல்றதுக்கு இவ்ளோ டைம் அவசியமே இல்லயே.."
பையனின் காது பட பேசியவர்களையே கணக்கெடுக்காது கடந்தவனுக்கு இந்த பார்வை எம்மாத்திரம்..?
"அடுத்தவன் என்ன நெனச்சுப்பான்னு பாத்தா நாம சாகத் தான் வேணும் தாமர..அவனுங்க என்ன நெனச்சாலும் அப்டியே கடந்து போக வேண்டியது தான்.." பாவையவள் தோழிக்கு அடிக்கடி கூறும் அறிவரை பையனின் இதயத்தை தீண்டியல்லவா இருக்கிறது..?
அந்த நினைவு தந்த புன்னகையில் இதழ் இலேசாக பிரிய அமர்ந்திருந்தவனின் முன்னே வந்து அமர்ந்தவளுக்கு அவனின் புன்னகையை கண்டு தானாக இதழ்களில் மென்னகை நெளிந்தது.
"என்ன பாஸ் தனியா சிரிக்கிறீங்க..?"
"சும்மா தான்.." என்றவனின் இதழ்களில் ஓடிய புன்னகையில் மாற்றமில்லை.
"போங்க சாரே வர வர ரொம்ப டிஃபரன்ட் தான் நடந்துக்குறீங்க..என்னன்னும் புரில.."
"டிஃபரன்டா நானா நோ நோ..அப்டி ஏதும் இல்ல.." தன் பிடியில் நின்றவனுக்கு அவளின் வார்த்தைகளை புறந்தள்ளவும் முடியவில்லை.
"ஆமா என்ன என்ன டிஃபரன்டா நடந்துக்குறேன்.." அவளிடம் கேட்டவனுக்கு இதயம் படபடத்தது.
அவன் நிம்மதியாய் நொடிகளை இரசித்து வாழ்கிறான் என்று அவன் இருக்க அவளோ அவன் மாறியிருக்கிறான் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வானா அந்த கல்லுளி மங்கன்..?
"அது ரொம்ப.." அவள் ஆரம்பிக்கும் போதே பையனின் அலைபேசி ஒலித்திட பாவையவளின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது தான் விதியின் சதியோ..?
அவள் மட்டும் பையனின் மாற்றங்களை போட்டுடைத்து இருந்தால் காதலை உணர்ந்து கொள்ள இன்னும் தாமதமாக்கி இருக்க மாட்டானோ என்னவோ..?
யாரைப் பிழை சொல்ல..?
விதி வலியது.
"இரு ஒரு நிமிஷம் வர்ரேன்.." அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல பாவையவளின் பார்வை சுற்றும் முற்றும் அலசிட அப்போது தான் அவளுக்கு மூச்சடைத்திட வைப்பது போல் யாரோ ஒரு பெண்ணுடன் உள் நுழைந்தான்,ப்ரித்வி.
ப்ரித்வியைக் கண்டதும் உடல் அதிர தூக்கி வாரிப் போட்டது,அவளுக்கு.விழிகள் விரிந்து கொள்ள பயத்தில் கால்கள் நடுங்கின.
ப்ரித்விக்கோ அந்த பதட்டம் எதுவும் இல்லை போலும்.விசிலடித்த படி நடந்து வந்தவனுக்கு பாவையவளைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
"அரசி இங்க பண்ற..ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.."
"என் புருஷனும் வந்திருக்காரு டா.." அவன் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அவள் போட்டுடைத்திட அவன் முகத்தில் மெல்லிய கலவரம்.
"என்ன சொல்ற நீ..?"
"ஆமா நா வேற உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய்யா சொல்லிருக்கேன்..உனக்கு தெர்யும்ல..ப்ளீஸ் எப்டியாவது அவரு கண்ல படாம தப்பிச்சிரு..உன்ன கெஞ்சி கேக்கறேன்.." அவள் அழுகுரலில் கூறிட அவளை இன்னும் அதிர வைக்கும் படியாய் அமர்த்தலான நடையுடன் உள்ளே நுழைந்தான்,பையன்.
ப்ரித்வியுடன் வந்திருந்த அவனுடன் அலுவலகத்தில் பணிபுரியும் தோழி தீபாவுக்கு எதுவும் புரியவில்லை.இருவரையும் மாறி மாறி பார்த்தவளுக்கு மண்டை குழம்பியது.
"அந்த ஃபோட்டோவ இருந்த சம்யுக்தாவ தான் உன்னோட வைஃப்னு அவர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன்..அன்னிக்கி என்ன பொய் சொன்னேன் சொன்னேன்ல உன் கிட்ட..எப்டியாச்சும் சமாளிங்க ப்ளீஸ்..அவர் கிட்ட வந்துட்டாரு.." பதட்டத்துடன் கூறியவள் நிலமையை சமாளிக்க விடயத்தை சுருக்கமாய் கூறியதே அதிசயம்.
"சரி நா பாத்துக்கறேன்.." நிலமையை கையில் எடுத்துக் கொண்ட ப்ரித்வியோ தீபாவிற்கு கண்ணைக் காட்ட அவளும் எதுவும் புரியாவிடினும் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்,சிரசை.
பையன் தம்மை நோக்கி வருவது தெரிந்து முகத்தை இயல்பாகிக் கொண்டவனோ பாவையவளிடம் சாதாரணமாக பேசிட அவளும் பதில் சொல்வது போல் நடித்தாலும் முகத்தில் பயம் அப்பட்டமாய்.
"இப்டி பேயக் கண்ட மாதிரி இருக்காத அரசி..நார்மலா இரு.." அதட்டிட தன் முக பாவத்தில் தெரிந்த பயத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டாள்,அவள்.
பையனுக்கு வெளியே இருக்கும் போதே ப்ரித்வி வருகை புரிந்திருக்க பாவையவளின் நடவடிக்கைகளை பார்த்த படி வெளியே நின்றிருந்தான்.தூரமாய் இருந்த படியால் அவளின் முகபாவம் பெரிதாய் பிடிபடவில்லை என்றாலும் ஏனோ ப்ரித்வியுடன் அவள் பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை;அறவே பிடிக்கவில்லை.பொறாமையாய் இருந்தது.
உள்ளுக்குள் எழுந்த பொறாமைத் தீயை அடக்க முடியாது போயிருக்கத் தான் வணிக விடயம் தொடர்பான முக்கியமான அழைப்பை கூட பாதியில் துண்டித்து விட்டதே.
சரியாய்ப் பார்த்தால் அவள் மீது அவனுக்கு எந்த உணர்வும் இல்லையென்றால் இருவரையும் பேச விட்டு ஆராய்ந்து உண்மையை கண்டு பிடித்திருக்கத் தானே வேண்டும்..?
அதை செய்ய இயலாது தடுத்தது,காதல் தானே.
அழுத்தமான நடையுடன் தம்மை நோக்கி வருபவனைக் திரும்பிப் பார்த்த ப்ரித்விக்கும் பயம் தான்.இருப்பினும் சாதுர்யமாய் மறைத்துக் கொண்டான்,உள்ளம் நடுங்க.
"அரசி இது தான் உன்னோட ஹஸ்பண்டா..? ஹாய் சார்..ஐ அம் ப்ரித்வி" பையன் தன் முன்னே நின்றதும் போலியாய் கேட்டுக் கொண்டு கரத்தை நீட்ட அதைப் பற்றி குலுக்கினாலும் பையனின் முகத்தில் கொஞ்சமும் புன்னகை இல்லை.
"வாங்க ப்ரித்வி கொஞ்சம் உக்காந்து பேசலாம்.."பையன் அழைத்திட பார்வையோ இசையவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.
அவளின் வதனமோ பயத்தில் வெளிறிப் போயிருக்க அவளின் முகத்தில் தென்பாடது போன கலக்கத்தின் சுவடுகள் பையனுக்கு அவள் கூறியது பொய் என்று பறைசாற்றுவதாய்.
அவள் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெளிவாய் தெரிந்த பின் அவனுக்கு கோபம் எழாமல் உள்ளுக்குள் நிம்மதியின் நீர்வீழ்ச்சி வழிந்தோடக் காரணம் தான் என்ன..?
காதலின்றி வேறொன்றை வார்த்தைக்கேனும் காரணம் எனக் கூறினால் தகுமா என்ன..?
"என்ன இசை உன் ப்ரெண்ட உக்காருன்னு கூட சொல்ல மாட்டியா..?" பையனோ "ப்ரெண்ட்" என்கின்ற வார்த்தையை அழுத்திக் கேட்ட விதத்தில் ப்ரித்விக்கு ஏதோ புரிவது போல்.
பாவையவளின் அருகே அமரப் போன தீபாவை ப்ரித்வி கை பிடித்து நிறுத்த அதற்குள் பாவையவளின் அருகே சென்று அமர்ந்தே விட்டான்,பையன்.
அவர்கள் இருவருக்கும் நேரெதிரே ப்ரித்வியும் தீபாவும் அமர்ந்து கொண்டிட பையனின் கூர்ப்பார்வை ப்ரித்வியவனை கூறிட்டது.
"ம்ம் எதுக்கு எல்லாரும் சைலன்டா இருக்கீங்க..?இசை என்ன முன்ன பின்ன தெரியாதவங்க வந்து இருக்கற மாதிரி சைலன்டா இருக்க..நார்மலா பேசு..ஓகே ஏதாச்சும் ஆர்டர் பண்ணலாம்..என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..ஆமா இது யாரு ப்ரித்வி..?"
"இது என்னோட வர்க் பண்ற தீபா.." என்றவனுக்கு முன்பு கண்ட யாழ்வேந்தன் இப்போது இல்லை என்கின்ற எண்ணம்.
பையனின் நடத்தைகளில் இருந்த மாற்றம் பாவையவளுக்கு புரியவில்லை என்றாலும் ப்ரித்விக்கு நன்றாக தெரிந்தது.
உரிமையுடன் இசையவளின் அருகே அமர்ந்து கொண்டதும் தோழன் என்று அழுத்திச் சொல்கையில் விழிகளில் தென்பட்ட கோபமும் அவனின் முகத்தில் ஏறியிருந்த அனலும் எதையோ மௌனமாய் சொல்லிக் கொண்டிருந்தன.பையனின் மன எண்ணத்தை ஆராய விரும்பினான்,ப்ரித்வி.
"எப்டி இருக்க இசை..?" குரலை கலக்கமாய் வைத்துக் கொண்டு முகத்தில் வருத்தத்தை தேக்கி வினவியவனின் கேள்வியை விட அவனின் அழைப்புத் தான் பையனுக்கு உள்ளுக்குள் தீ மூட்டியது.
இசையவளோ பேயறைந்தது போல் ப்ரித்வியைப் பார்த்திட அவனோ அவளின் அதிர்ச்சியை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
"என்ன இசை இப்போ பதில் சொல்ல இவ்ளோ யோசிக்கற..?" குரலில் வருத்தம் தோய்த்து மீளக் கேட்டிட பையனின் விழிகளில் செந்தணல்.
"அரசி நல்லா தான் இருக்காங்க ப்ரித்வி.." வார்த்தைகள் இயல்பானவை என்றாலும் குரலில் கோபம்.மீண்டும் அவளை "இசை" என்று அழைத்துப் பாரேன் என்கின்ற மறைமுக மிரட்டல் விழிகளில்.மீளவும் அவன் "இசை" என்று அழைத்திருந்தால் பையன் அறைந்தே விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அத்தனை உரிமையுணர்வு அவனில்.
"பார்ரா இசைங்குற பேர இவருக்கு பட்டா போட்டு கொடுத்து இருக்குற மாதிரி பிஹேவ் பண்றாரு..பட் இன்ட்ரஸ்டிங்.." என்று மனதால் நினைத்தவனுக்கோ பையனை சீண்டத் தான் மனம் உந்தியது.
"நீ நல்லாருக்கன்னு உன் ஹஸ்பன்ட் சொல்றப்போ நிம்மதியா இருக்கு இ..அரசி.." வேண்டுமென்றே "இசை" என அழைக்க வந்தவன் பையன் மேசையில் உணவுக்கென வைக்கப்பட்டிருந்த சிறு கத்தியை கையில் எடுத்துக் கொண்டதும் விளிப்பை மாற்றியிருந்தான்,வெகுவாய் பயந்து.
பயந்தாலும் அவன சீண்டுவதென்றே உறுதி கொண்டு குருட்டு நம்பிக்கையில் பேசினான்,அவன்.
"ஆனா நா நல்லா இல்ல அரசி..அவசரப்பட்டு உன்ன விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டேன்னு தோணுது.." பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு மொழிந்திட இசையவளின் விழிகள் அதிர்வைத் தாங்கி நிற்க யாழவனின் கோப நரம்புகள் புடைத்தெழுந்தது.
விழிகளில் போலிக்கலக்கம் தேக்கி இசையவளை பார்த்திருப்பவன் நடிக்கிறான் என்று ஆழ் மனம் கூவினாலும் அதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை,பையனால்.
அதுவும் ப்ரித்வி அவள் மீது வீசிய பார்வையில் தவறு இல்லையென்று புரிந்தாலும் மனதில் உரிமையுணர்வு தலை விரித்தாடியது.
"அதுக்கு இசை என்ன பண்ணுவாங்க ப்ரித்வி.." அமர்த்தலான பார்வையுடன் சற்றே அவள் புறம் சரிந்து அவளிருக்கையில் கரத்தை நீட்டி அவளின் தோளைப் பற்றிக் கொண்டவனின் இதயம் வேகமெடுத்தது,அவளுக்கென.
உயிர்த்தொடும்.
2024.09.15
யாழிசை 23(i)
"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." சற்றே சத்தமாய் இதழசைத்து பாடிய படி உடைகளை மடித்துக் கொண்டிருந்தவளை ஒரு கணம் தானாய் உயர்ந்து உரசின,அவன் விழிகள்.
அவளுக்கு பிடித்த பாடல் என்பது அடிக்கடி அவள் தன் கட்டைக்குரலில் பாடிடும் போதே அவனுக்குத் தெரியும்.அப்போதெல்லாம் வெறும் அவளுக்கு பிடித்த பாடலாய் இருந்தது,இப்போது அவனுக்கென அவள் பாடுவதைப் போல் ஆகி விடுவதன் காரணம் தான் என்ன..?
"உனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்குமா இசை..?" மடிக்கணினியின் விசைப்பலகையில் விரல்கள் ஓடித்திரிய அவன் கேட்டதற்கு துள்ளலுடன் பதில் சொன்னாள்,அவள்.
"ஆமா சாரே..ரொம்ப புடிக்கும்..அதுவும் அந்த லிரிக்ஸ் ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.." என்றவளோ உடைகளை மடித்து வைத்து விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட அவள் உருவம் மறையும் பையனின் பார்வை தன்னை பின் தொடர்ந்ததை அறியவில்லை,பாவையவள்.
இப்போதெல்லாம் அப்படித் தான.அவள் பக்கத்தில் இருந்தால் அவனின் காயங்கள் தந்திடும் நினைவுகள் நில்லாது ஓடி ஒளிய அதுவே அவனுக்கு பெரும் இதமாய்.
அவளுடன் இருக்கும் போது அவளைத் தாண்டி அவனால் எதையும் யோசிக்க முடியாது என்கின்ற கட்டத்திற்கு பையன் தள்ளப்பட்டிருந்ததை அவன் இன்னுமே உணரவில்லை.உணர்ந்து தொலைத்தாலும் ஏற்றுக் கொள்வானா என்றும் தெரியவில்லை.
அவனைப் பொறுத்த வரையில் அவளின் அருகாமையில் நித்தம் நிந்தித்திடும் நிதர்சனங்கள் மறக்கடிக்கப்படும் என்றிருக்க அதற்காகவே பாவையவளுடன் பெரும்பாலான பொழுதுகளை கழித்திடுவான்,பையன்.
மொத்தமும் மறக்கும் அளவு அவள் தனக்குள் உடுருவியிருக்கிறாள் என்பதை உணர்ந்து தொலைக்கவில்லை, அந்த கல்லுளி மங்கன்.
காலையில் அவளுடன் கதைத்துக் கொண்டே சமைப்பதாகட்டும் சமையலுக்கு உதவுவதாகட்டும்..
ஆடைகளை அழுத்தி முடிந்த பின்பும் தன்னுடைகளை அழுத்துபவளுடன் கதைப்பதாகட்டும் அவளுக்கு உதவுவதாகட்டும்..
அவள் அறையில் இருந்தால் பின்னூடு வந்த நுழைந்து கொள்வதாகட்டும் இல்லாத வேலைக்காக மடிக்கணினியை திறந்து வைப்பதாகட்டும்..
பசியெடுத்தாலும் பாவையவளின் வருகைக்காக காத்திருதாகட்டும் வந்தவளுக்கும் சேர்த்துப் பரிமாறிய கதைத்த படி அவளுடனே உண்பதாகட்டும்..
உறக்கத்தில் விழும் வரை அவளுடன் கதையளப்பதாகட்டும் அவள் உறங்கிய பின் அவளின் வதனத்தை பார்வையால் வருடிய படி கண்ணயர்வதாகட்டும்..
சொல்லப் போனால் யாழவனின் நாள் முழுக்க இசையவளின் அருகாமையில் தான் என்றாலும் அது பொய்யில்லை.அத்தனை தூரம் அவளின் அருகாமை தேவைப்பட்டது,அவனுக்கும் அவனே உணரா அவள் மீதான காதலுக்கும்.
விலகி நிற்கத் தான் அவன் போராடுவதே.இருப்பினும் அவள் காதலும் உணரா அவனின் காதலும் அவனின் மொத்த போராட்டத்தையும் முறியத்தல்லவா விடுகிறது,சிறிதும் கணக்கின்றி.
அவள் தன்னை விட்டு விலகிச் சென்ற பின்பு தான் இத்தனைக்கும் ஏங்கிப் போவோம் என்று தெரிந்தும் மீதி வாழ்க்கையின் நினைவுகளாய் தன் கொள்கைகளை உடைத்து அவன் இந்த நொடிகளை இரசித்துக் கடத்த முன்னின்றதற்கு அழுத்தமான காரணம் ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.காரணம் காதல்;ஆழ்மனதில் வேர்ப்பிடித்து எழுந்து நிற்கும் அவள் மீதான அவனின் காதல்.அவனின் பயங்களை தாண்டி அவன் வாழ்க்கையை பொக்கிஷமாக்க உந்திடும் அவள் மீதான அவனின் உணராக் காதல்.
இன்றும் அப்படித் தான்.ஏனென்றில்லாமல் அவளுடன் வெளியே சென்று வரத் தோன்றிற்று.அதன் காரணம் ஆராயவும் இல்லை,பையன்.
தாமிருவரும் தனித்து எங்கும் வெளியே பெரிதாய் சென்றிராது இருப்பது அவனுக்குள் பெரும் குறையாய் உறுத்திக் கொண்டே இருந்திடவே இந்த முடிவு.
அவளுக்கோ அவனின் மனது உந்தி தான் வெளியே செல்வதற்கான தீர்மானம் என்று புரியவேயில்லை.
"மாமா தான் நாம அந்நியோன்னியமா இருக்கோம்னு நம்பிட்டாருல்ல சார்..அப்றம் எதுக்கு சாரே திரும்ப வெளில போனும்..?"
பையன் தன்னுடன் நேரத்தை செலவழித்திட விரும்புவதை அறியாமல் அவளும் தன்பாட்டில் புலம்ப பையனும் அதற்கு மறுப்பேதும் கூறிடவில்லை.
தான் தான் காரணம் என்று சொன்னால் அவளாக ஏதும் கற்பனை செய்து கொள்ளக் கூடும் என சிந்தித்து அவனும் அமைதி காக்க பாவையவளுக்கோ அவனின் அமைதி தான் சொல்வதை ஒத்துக் கொள்ளும் ஆமோதிப்பின் வடிவமாய்.
●●●●●●●
தன் முன்னே அமர்ந்து இருந்தவளை அடிக்கடி இமை வெட்டாது வருடித் தொலைத்தன,அவன் விழிகள்.
ஒவ்வொரு முறையும் வித்தியாசமாய் இன்னும் மெருகேறித் தெரிய விழிகள் அவன் பேச்சைக் கேட்பதை அடிக்கடி மறந்து தான் போகின்றன.
"நீங்க எதுவும் சாப்டலயா..?"வாயின் உணவை அடைத்துக் கொண்டு கேட்டவளுக்கு மறுப்பாய் தலையசைத்தான்,அவன்.
"நீ சாப்டு எனக்கு இப்போ பசிக்கல.."
"எதுக்கு பசிக்கல..வீட்ல எப்பவும் இந்த டைம்கு சாப்டுவீங்க தான..ஒரு வேள நைட் டைம்கு ஹெவியா எதுவும் சாப்ட கூடாதுன்னு யோசிக்கிறீங்களோ..அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாஸ்..சாப்டுங்க.." தன் தட்டில் ஒன்றை அவன் புறம் தள்ளி வைத்திட அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
"அப்போவும் தெளிவா ஒரு தட்ட தான் தள்ளி வக்கிற..ம்ம்..?" ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கி அவன் கேட்டிட திருட்டு முழியுடன் தலை தாழ்த்தி அசடு வழிய சிரித்தவளைக் இரசனையுடன் ஒரு கணம் பார்வையால் தொட்டு விட்டு அவள் கொடுத்த உணவை சுவைக்க பின்னிருந்த கேட்ட சத்ததில் தலையை திருப்பி பார்த்தான்,பையன்.
பின்னே அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வை இசையவள் மீது படிந்திருந்த உச்சிக்கு சினம் பெருகிற்று,யாழவனுக்கு.
விழிகளில் அனல் தேக்கி அவர்களை உறுத்தி விழித்தவனுக்கு இருவரையும் அடித்து விடும் வேகம்.
"புல் ஷிட்ட்ட்ட்ட்.." நீள் நயனங்களின் சிவப்பு பரவிட அழுத்தமாய் ஆட்காட்டி விரலாலும் பெரு விரலாலும் நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு பொறாமையும் கோபமும் சரி விகிதமாய்.
பட்டென பார்வையை திருப்பி பாவையவளை உரசிட அநியாயத்திற்கு அழகாய்த் தெரிந்தாள்,அவள்.எப்போதும் முடியை பின்னிக் கொண்டே திரிபவள் குளித்து விட்டு ஈரம் காயாததால் சிறு க்ளிப்பினும் அடக்கி விட்டிருந்தவளின் தோற்றம் அவன் விழிகளுக்குள் உயிருள் கரைந்து நின்றதே.
என்ன யோசித்தானோ தெரியவில்லை,ஏறிய கோபத்துடன் "இசை" என்றான்,அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.
"என்ன சாரே..?" உணவில் கவனமாய் இருந்தவளுக்கு சுற்றம் சத்தியமாய் உரைக்கவில்லை.
"நீ இந்த சைட்கு வா நா அந்த சைட்கு போறேன்..கம் க்விக்.."
"ஏன் சாரே கஷ்டமா இருக்கா..?" கேட்டுக் கொண்டு அவனிருக்கைக்கு வர அவள் புறம் வந்தவனின் பார்வை அந்த இரு ஆணையும் அமர்த்தலாய் தொட்டது.
இசையவளோ சாப்பிட்டு முடித்து கைகளை கழுவிக் கொண்டு ஓய்வறைக்குள் செல்ல அந்த சந்தர்ப்பத்தை தனதாக்கிக் கொண்டு அந்த ஆண்களின் அருகே வந்தான்,பையன்.
"இனிமே அந்த பக்கம் கண்ணு திரும்பிச்சு முழியோ தோண்டிருவேன்.." முகத்தில் புன்னகையுடன் நிதானமாய் இதயத்தை நடுங்கச் செய்யும் அழுத்தத்துடன் மொழிந்தவனின் விழிகளில் மின்னிய கோபம் இருவருக்கும் பயத்தைக் கிளப்பியது.
விரல் நீட்டி எச்சரித்தவனோ தன்னிடத்துக்கு வந்திட சுற்றம் இருந்த ஓரிருவரின் பார்வை தன் மீது வேறு விதமாய் படிவதைக் கண்டாலும் வெறுமேன தோளை உலுக்கிக் கொண்டான்,அவன்.
அவன் மீது சுமத்தப்பட்ட பொய்ப்பழி இல்லையென்று ஆன பின்னும் அவர்கள் அவன் புறம் தவறு இல்லை என்று நம்பிடவில்லை.அது ஒன்றும் அவனுக்கு புதிதும் அல்ல.
"பணம் இருக்குல தப்ப செஞ்சிட்டு தப்பிச்சு இருப்பான்.."
"காசு நல்லா இருக்கு..தப்பு பண்ணிட்டு அத இல்லன்னு சொல்றதுக்கு இவ்ளோ டைம் அவசியமே இல்லயே.."
பையனின் காது பட பேசியவர்களையே கணக்கெடுக்காது கடந்தவனுக்கு இந்த பார்வை எம்மாத்திரம்..?
"அடுத்தவன் என்ன நெனச்சுப்பான்னு பாத்தா நாம சாகத் தான் வேணும் தாமர..அவனுங்க என்ன நெனச்சாலும் அப்டியே கடந்து போக வேண்டியது தான்.." பாவையவள் தோழிக்கு அடிக்கடி கூறும் அறிவரை பையனின் இதயத்தை தீண்டியல்லவா இருக்கிறது..?
அந்த நினைவு தந்த புன்னகையில் இதழ் இலேசாக பிரிய அமர்ந்திருந்தவனின் முன்னே வந்து அமர்ந்தவளுக்கு அவனின் புன்னகையை கண்டு தானாக இதழ்களில் மென்னகை நெளிந்தது.
"என்ன பாஸ் தனியா சிரிக்கிறீங்க..?"
"சும்மா தான்.." என்றவனின் இதழ்களில் ஓடிய புன்னகையில் மாற்றமில்லை.
"போங்க சாரே வர வர ரொம்ப டிஃபரன்ட் தான் நடந்துக்குறீங்க..என்னன்னும் புரில.."
"டிஃபரன்டா நானா நோ நோ..அப்டி ஏதும் இல்ல.." தன் பிடியில் நின்றவனுக்கு அவளின் வார்த்தைகளை புறந்தள்ளவும் முடியவில்லை.
"ஆமா என்ன என்ன டிஃபரன்டா நடந்துக்குறேன்.." அவளிடம் கேட்டவனுக்கு இதயம் படபடத்தது.
அவன் நிம்மதியாய் நொடிகளை இரசித்து வாழ்கிறான் என்று அவன் இருக்க அவளோ அவன் மாறியிருக்கிறான் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வானா அந்த கல்லுளி மங்கன்..?
"அது ரொம்ப.." அவள் ஆரம்பிக்கும் போதே பையனின் அலைபேசி ஒலித்திட பாவையவளின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது தான் விதியின் சதியோ..?
அவள் மட்டும் பையனின் மாற்றங்களை போட்டுடைத்து இருந்தால் காதலை உணர்ந்து கொள்ள இன்னும் தாமதமாக்கி இருக்க மாட்டானோ என்னவோ..?
யாரைப் பிழை சொல்ல..?
விதி வலியது.
"இரு ஒரு நிமிஷம் வர்ரேன்.." அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல பாவையவளின் பார்வை சுற்றும் முற்றும் அலசிட அப்போது தான் அவளுக்கு மூச்சடைத்திட வைப்பது போல் யாரோ ஒரு பெண்ணுடன் உள் நுழைந்தான்,ப்ரித்வி.
ப்ரித்வியைக் கண்டதும் உடல் அதிர தூக்கி வாரிப் போட்டது,அவளுக்கு.விழிகள் விரிந்து கொள்ள பயத்தில் கால்கள் நடுங்கின.
ப்ரித்விக்கோ அந்த பதட்டம் எதுவும் இல்லை போலும்.விசிலடித்த படி நடந்து வந்தவனுக்கு பாவையவளைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
"அரசி இங்க பண்ற..ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.."
"என் புருஷனும் வந்திருக்காரு டா.." அவன் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அவள் போட்டுடைத்திட அவன் முகத்தில் மெல்லிய கலவரம்.
"என்ன சொல்ற நீ..?"
"ஆமா நா வேற உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய்யா சொல்லிருக்கேன்..உனக்கு தெர்யும்ல..ப்ளீஸ் எப்டியாவது அவரு கண்ல படாம தப்பிச்சிரு..உன்ன கெஞ்சி கேக்கறேன்.." அவள் அழுகுரலில் கூறிட அவளை இன்னும் அதிர வைக்கும் படியாய் அமர்த்தலான நடையுடன் உள்ளே நுழைந்தான்,பையன்.
ப்ரித்வியுடன் வந்திருந்த அவனுடன் அலுவலகத்தில் பணிபுரியும் தோழி தீபாவுக்கு எதுவும் புரியவில்லை.இருவரையும் மாறி மாறி பார்த்தவளுக்கு மண்டை குழம்பியது.
"அந்த ஃபோட்டோவ இருந்த சம்யுக்தாவ தான் உன்னோட வைஃப்னு அவர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன்..அன்னிக்கி என்ன பொய் சொன்னேன் சொன்னேன்ல உன் கிட்ட..எப்டியாச்சும் சமாளிங்க ப்ளீஸ்..அவர் கிட்ட வந்துட்டாரு.." பதட்டத்துடன் கூறியவள் நிலமையை சமாளிக்க விடயத்தை சுருக்கமாய் கூறியதே அதிசயம்.
"சரி நா பாத்துக்கறேன்.." நிலமையை கையில் எடுத்துக் கொண்ட ப்ரித்வியோ தீபாவிற்கு கண்ணைக் காட்ட அவளும் எதுவும் புரியாவிடினும் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்,சிரசை.
பையன் தம்மை நோக்கி வருவது தெரிந்து முகத்தை இயல்பாகிக் கொண்டவனோ பாவையவளிடம் சாதாரணமாக பேசிட அவளும் பதில் சொல்வது போல் நடித்தாலும் முகத்தில் பயம் அப்பட்டமாய்.
"இப்டி பேயக் கண்ட மாதிரி இருக்காத அரசி..நார்மலா இரு.." அதட்டிட தன் முக பாவத்தில் தெரிந்த பயத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டாள்,அவள்.
பையனுக்கு வெளியே இருக்கும் போதே ப்ரித்வி வருகை புரிந்திருக்க பாவையவளின் நடவடிக்கைகளை பார்த்த படி வெளியே நின்றிருந்தான்.தூரமாய் இருந்த படியால் அவளின் முகபாவம் பெரிதாய் பிடிபடவில்லை என்றாலும் ஏனோ ப்ரித்வியுடன் அவள் பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை;அறவே பிடிக்கவில்லை.பொறாமையாய் இருந்தது.
உள்ளுக்குள் எழுந்த பொறாமைத் தீயை அடக்க முடியாது போயிருக்கத் தான் வணிக விடயம் தொடர்பான முக்கியமான அழைப்பை கூட பாதியில் துண்டித்து விட்டதே.
சரியாய்ப் பார்த்தால் அவள் மீது அவனுக்கு எந்த உணர்வும் இல்லையென்றால் இருவரையும் பேச விட்டு ஆராய்ந்து உண்மையை கண்டு பிடித்திருக்கத் தானே வேண்டும்..?
அதை செய்ய இயலாது தடுத்தது,காதல் தானே.
அழுத்தமான நடையுடன் தம்மை நோக்கி வருபவனைக் திரும்பிப் பார்த்த ப்ரித்விக்கும் பயம் தான்.இருப்பினும் சாதுர்யமாய் மறைத்துக் கொண்டான்,உள்ளம் நடுங்க.
"அரசி இது தான் உன்னோட ஹஸ்பண்டா..? ஹாய் சார்..ஐ அம் ப்ரித்வி" பையன் தன் முன்னே நின்றதும் போலியாய் கேட்டுக் கொண்டு கரத்தை நீட்ட அதைப் பற்றி குலுக்கினாலும் பையனின் முகத்தில் கொஞ்சமும் புன்னகை இல்லை.
"வாங்க ப்ரித்வி கொஞ்சம் உக்காந்து பேசலாம்.."பையன் அழைத்திட பார்வையோ இசையவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.
அவளின் வதனமோ பயத்தில் வெளிறிப் போயிருக்க அவளின் முகத்தில் தென்பாடது போன கலக்கத்தின் சுவடுகள் பையனுக்கு அவள் கூறியது பொய் என்று பறைசாற்றுவதாய்.
அவள் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெளிவாய் தெரிந்த பின் அவனுக்கு கோபம் எழாமல் உள்ளுக்குள் நிம்மதியின் நீர்வீழ்ச்சி வழிந்தோடக் காரணம் தான் என்ன..?
காதலின்றி வேறொன்றை வார்த்தைக்கேனும் காரணம் எனக் கூறினால் தகுமா என்ன..?
"என்ன இசை உன் ப்ரெண்ட உக்காருன்னு கூட சொல்ல மாட்டியா..?" பையனோ "ப்ரெண்ட்" என்கின்ற வார்த்தையை அழுத்திக் கேட்ட விதத்தில் ப்ரித்விக்கு ஏதோ புரிவது போல்.
பாவையவளின் அருகே அமரப் போன தீபாவை ப்ரித்வி கை பிடித்து நிறுத்த அதற்குள் பாவையவளின் அருகே சென்று அமர்ந்தே விட்டான்,பையன்.
அவர்கள் இருவருக்கும் நேரெதிரே ப்ரித்வியும் தீபாவும் அமர்ந்து கொண்டிட பையனின் கூர்ப்பார்வை ப்ரித்வியவனை கூறிட்டது.
"ம்ம் எதுக்கு எல்லாரும் சைலன்டா இருக்கீங்க..?இசை என்ன முன்ன பின்ன தெரியாதவங்க வந்து இருக்கற மாதிரி சைலன்டா இருக்க..நார்மலா பேசு..ஓகே ஏதாச்சும் ஆர்டர் பண்ணலாம்..என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..ஆமா இது யாரு ப்ரித்வி..?"
"இது என்னோட வர்க் பண்ற தீபா.." என்றவனுக்கு முன்பு கண்ட யாழ்வேந்தன் இப்போது இல்லை என்கின்ற எண்ணம்.
பையனின் நடத்தைகளில் இருந்த மாற்றம் பாவையவளுக்கு புரியவில்லை என்றாலும் ப்ரித்விக்கு நன்றாக தெரிந்தது.
உரிமையுடன் இசையவளின் அருகே அமர்ந்து கொண்டதும் தோழன் என்று அழுத்திச் சொல்கையில் விழிகளில் தென்பட்ட கோபமும் அவனின் முகத்தில் ஏறியிருந்த அனலும் எதையோ மௌனமாய் சொல்லிக் கொண்டிருந்தன.பையனின் மன எண்ணத்தை ஆராய விரும்பினான்,ப்ரித்வி.
"எப்டி இருக்க இசை..?" குரலை கலக்கமாய் வைத்துக் கொண்டு முகத்தில் வருத்தத்தை தேக்கி வினவியவனின் கேள்வியை விட அவனின் அழைப்புத் தான் பையனுக்கு உள்ளுக்குள் தீ மூட்டியது.
இசையவளோ பேயறைந்தது போல் ப்ரித்வியைப் பார்த்திட அவனோ அவளின் அதிர்ச்சியை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
"என்ன இசை இப்போ பதில் சொல்ல இவ்ளோ யோசிக்கற..?" குரலில் வருத்தம் தோய்த்து மீளக் கேட்டிட பையனின் விழிகளில் செந்தணல்.
"அரசி நல்லா தான் இருக்காங்க ப்ரித்வி.." வார்த்தைகள் இயல்பானவை என்றாலும் குரலில் கோபம்.மீண்டும் அவளை "இசை" என்று அழைத்துப் பாரேன் என்கின்ற மறைமுக மிரட்டல் விழிகளில்.மீளவும் அவன் "இசை" என்று அழைத்திருந்தால் பையன் அறைந்தே விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அத்தனை உரிமையுணர்வு அவனில்.
"பார்ரா இசைங்குற பேர இவருக்கு பட்டா போட்டு கொடுத்து இருக்குற மாதிரி பிஹேவ் பண்றாரு..பட் இன்ட்ரஸ்டிங்.." என்று மனதால் நினைத்தவனுக்கோ பையனை சீண்டத் தான் மனம் உந்தியது.
"நீ நல்லாருக்கன்னு உன் ஹஸ்பன்ட் சொல்றப்போ நிம்மதியா இருக்கு இ..அரசி.." வேண்டுமென்றே "இசை" என அழைக்க வந்தவன் பையன் மேசையில் உணவுக்கென வைக்கப்பட்டிருந்த சிறு கத்தியை கையில் எடுத்துக் கொண்டதும் விளிப்பை மாற்றியிருந்தான்,வெகுவாய் பயந்து.
பயந்தாலும் அவன சீண்டுவதென்றே உறுதி கொண்டு குருட்டு நம்பிக்கையில் பேசினான்,அவன்.
"ஆனா நா நல்லா இல்ல அரசி..அவசரப்பட்டு உன்ன விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டேன்னு தோணுது.." பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு மொழிந்திட இசையவளின் விழிகள் அதிர்வைத் தாங்கி நிற்க யாழவனின் கோப நரம்புகள் புடைத்தெழுந்தது.
விழிகளில் போலிக்கலக்கம் தேக்கி இசையவளை பார்த்திருப்பவன் நடிக்கிறான் என்று ஆழ் மனம் கூவினாலும் அதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை,பையனால்.
அதுவும் ப்ரித்வி அவள் மீது வீசிய பார்வையில் தவறு இல்லையென்று புரிந்தாலும் மனதில் உரிமையுணர்வு தலை விரித்தாடியது.
"அதுக்கு இசை என்ன பண்ணுவாங்க ப்ரித்வி.." அமர்த்தலான பார்வையுடன் சற்றே அவள் புறம் சரிந்து அவளிருக்கையில் கரத்தை நீட்டி அவளின் தோளைப் பற்றிக் கொண்டவனின் இதயம் வேகமெடுத்தது,அவளுக்கென.
உயிர்த்தொடும்.
2024.09.15