யாழின் இசையாய்..
யாழிசை 25(ii)
அவன் ஏற்கனவே அவளுக்கு காதல் ஒன்று இருந்திருக்க மாட்டாது என்பதை ஊகித்திருந்தாலும் அது உறுதிப் படுத்திக் கொள்கையில் கோபமாய் வந்தது.
அதுவும் அவள் தன்னிடம் பொய் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,பையனால்.அந்த பொய் அவளுக்காக சொல்லப்பட்டிருந்தால் கூட அவனுக்கு பிரச்சினை இருந்திருக்காது.
ஆனால்,அந்த பொய் முழுக்க அவனுக்காக என்பதை உணர்ந்தவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.மனதில் பல்லாயிரம் சஞ்சலங்கள்.
அதுவும் தோழனும் அவனுடன் கூட்டு என்கின்ற விடயமே பையனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.ப்ரித்வியின் இருப்பிடத்தை அறியச் சொல்லியும் அதற்கு பதிலின்றிப் போனதன் காரணம் இப்போதல்லவா அறிய முடிகிறது,அவனால்.
கோபமும் ஆற்றாமையும் உள்ளத்தை பிழிந்தெடுக்க மனம் நிறைத்த வலியுடன் முகத்தில் வேதனையின் சாயல் விழ நகரப்பார்த்தவனோ ப்ரித்வி கை நீட்ட தடுக்கப் பார்த்திட அவனை முறைத்த பையனின் விழிகளில் செந்தணல்.
அறையில் அங்குமிங்கும் உலாவித் திரிந்தவளுக்கு உறக்கம் எட்டியபாடில்லை.எண்ணம் முழுக்க பையனை வட்டமிட அவளுக்கு உறக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உண்டா என்ன..?
"இந்த மனுஷன் எங்க போய் இருக்கோ..?" கடுப்படித்தவளுக்கு இன்னும் முன்னைய நிகழ்வால் அவன் மீதுண்டான கோபம் மீதமிருந்தது தான்.
அந்த யோசனையில் நொடிகளை நெட்டித் தள்ளியவளுக்கு அறைக்கதவு திறபடும் ஓசை கேட்டிட புன்னகையுடன் நிமிர்ந்தவளின் விழிகள் மொத்தமும் பயத்தில் குளித்தது,பையன் இருந்த தோரணையைக் கண்டு.
முகம் முழுவதும் கோபத்தில் சிவக்க அந்த கோபத்தின் உஷ்ணத்தினால் உண்டான செந்நிறத்தை விழிகளுகளும் விழுங்கி தனக்குள் படரவிட்டிருந்தது,முழுதாகவே.
களைந்த சிகையுடன் ஷர்ட் கையை முட்டி வரை மடித்து விட்டவாறு அவன் நின்றிருந்த விதம் அவளின் உயிர்க் கூட்டில் நடுக்கத்தை கிளப்பிட விழிகளில் புரியாத பாவம் தேங்கிட நின்றவளைக் காண காண அவனின் கோபத் தீ பலமடங்கு பெரிதானது.
மெதுவாய் அவன் கதவை அடைத்த தோரணையிலேயே அவளுக்கு முதுகுத் தண்டு வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி பாவையவளின் கரத்தைப் பற்றி அவன் விரல்கள் தந்த அழுத்தத்தில் சத்தியமாய் அவளுக்கு வலித்திட பாவமாய் பார்த்தவளுக்கு அசைந்து கொடுக்கவில்லை,பையன்.
"என்ன சாரே.." பயத்தில் இதயம் நடுங்கித் துடிக்க இதழ்களில் திணறல் ஓடிட கேட்டவளுக்கு என்ன தான் பதிலை சொல்ல அவனும்..?
அறைக்குள் இருந்து கர்ஜித்தால் ராமநாதனுக்கு சத்தம் கேட்கும் என்று தெரிந்து விருட்டென அவளை அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் இழுத்துக் கொண்டு நடந்தவன் அவளைப் பற்றியிருந்த பிடியில் கொஞ்சம் தளர்வு,கொஞ்சமே கொஞ்சம் தான்,அவளுக்கு வலிக்காத அளவு.
அவளும் அதை உணர்ந்தாள் போலும்.இருப்பினும் கரத்தை விடுவித்துக் கொள்ள முயலவில்லை,பையனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள்.
குளியலறைக்குள் அவளை இழுத்து விட்டு கதவை மூடியவனோ அருகே இருந்த ஷவரையும் நீர்த்திருகையும் திறந்து விட்டான்,வெளியே சத்தம் கேட்டிடக் கூடாது என்பதற்காக.
ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டு மார்புக்கு குறுக்கே கரத்தை படரவிட்டு ஒற்றைக் பாதத்தை சுவற்றில் ஊன்றி முட்டுக் கொடுத்து நின்றவனுக்கு எதிர்ப்புறமாய் சுவற்றில் ஒட்டிக் கொண்டு தரித்திருந்தவளோ கைகளை பிசைந்து கொண்டிருந்த விதமே போதும்,அவளின் பயத்தை பறைசாற்றிட.
ஷவரின் இருந்து வளைபாதையில் வந்து விழுந்த நீர்த் திவலைகள் சுவற்றிலும் எதிர்ப்புறமாக நின்றிருந்தவனின் இலேசாகவும் பட்டு ஓய்ந்தன.நீர்த்திருகில் இருந்து வெளியடித்த நீர் தரை முட்டிய வேகத்தில் பல திக்கில் சிதறி பையனின் ஒற்றைப் பாத்தில் மென்தூறலாய் விழுந்து கொண்டிருக்க அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை,பையன்.
"நா கேக்கறேன் உண்மய மட்டுந்தான் சொல்லனும்..? காட் இட்..?" வார்த்தைகளில் இல்லாத மிரட்டல்,விழிகளிலும் குரலிலும்.ஆமோதிப்பாய் தலையசைத்தவளிடம் முழுதாய் கோபத்தை கூட காட்ட முடியா தன் இயாலமையை அறவே வெறுத்தான்,பையன்.
"நாம கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி உனக்கு என்ன தெர்யுமா..?" அவளின் கேள்வியிலேய அவளுக்கு புரிந்து போனது,ஏதோ தான்ற மறைத்த விடயமொன்று அவனுக்கு தெரிந்து இருக்கிறதென்பது.
மீண்டும் பொய் சொல்லத் தோன்றவில்லை.அவள் கூறிய பொய் அவனின் ஆழத்தில் எத்தகையை வலியை உண்டு பண்ணும் என்று அறியாதவள் இல்லையே,பாவையவள்.
"ம்ம்.."
"இதுக்கு முன்னாடி உனக்கு எந்த லவ்வும் இருந்தது கெடயாது..ப்ரித்விய பத்தி சொன்னது மொத்தமும் பொய் ரைட்..?"
"ம்ம்.." விழி தாழ்த்தியவாறு அவள் சிரசசைத்திட அவளுக்கு அறையத் தான் தோன்றியது.
அவளுக்கு அறையவும் முடியாமல் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் சுவற்றில் ஓங்கிக் குதித்திட திடுக்கிட்டு நிமிர்ந்தவளோ அவனைத் தடுக்க முன்னேறப் பார்த்திட அவனின் ஒற்றைப் பார்வை அவ்விடத்திலேயே அவளின் கால்களை வேரோட வைத்தது,அசைய விடாமல்.
"ஸ்டே தேர்.." கோப மிகுதியில் கர்ஜித்தவனுக்கு அவள் காதல் தரும் வதையை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை.இல்லவே இல்லை.
"முன்னவே என்ன லவ் பண்ணிருக்கியா..? இல்ல இப்போ தானா..?"
"க..கல்யாணத்துக்கு அப்றம் தான்.." நடுக்கம் இழையோடும் வார்த்தைகளால் பதில் இயம்பியவளுக்கு செந்நிறம் கொண்ட அவள் விழிகளைக் காணத் தான் பயமாய் இருந்தது.
"ஸோ என்ன புடிச்சி இருந்ததால தான் என் கிட்ட பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்க..அதுக்கு அரவிந்தும் கூட்டு..ரைட்..?"
"ம்ம்.."
அவளுக்கு தன்னை ஏதும் செய்து விடுவான் என்ற பயம் இல்லை.எங்கே அவனையே நோகடித்துக் கொள்ளப் போகிறானோ என்கின்ற அலைப்புறுதல் அவள் விழிகளில் பரவலாய்.
"எதுக்கு டி பொய் சொன்ன..? எதுக்கு பொய் சொன்ன..? நீ பண்றது தப்புன்னு உனக்கு தோணலயா..? ஹான்ன்ன்ன்ன்..?
சாகடிச்சிட்டு இருக்க டி நீ என்ன..கொஞ்சமா கொஞ்சமா கொன்னுட்டு இருக்க என்ன..நீ பண்றது ஒவ்வொன்னும் என்ன கொலயா கொன்னுட்டு இருக்குன்னா நீ பண்ணுன ஒவ்வொன்னும் தெரிய வரும் போதே என்ன பண்றதுன்னே எனக்கு தெரில.." வேதனையின் வேர்கள் வதனமதில் நிரம்ப அழுத்தமான குரலில் கர்ஜித்தவனை பார்த்திட அவள் விழிகளில் ஈரம்.
"யாரு டி அவ்ளோ நம்ப சொன்னாங்க என்ன..? நீயும் மத்தவங்கள மாதிரி என்ன ரேப்பிஸ்ட்னே நெனச்சிகிட்டு வெறுத்துருக்கலாம்ல.." அத்தனை ஆதங்கம் பையனின் வார்த்தைகளில்.யாரேனும் நம்பியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறான்,தான்.முதல் தடவை ஏன் இவள் தன்னை நம்பித் தொலைத்தாள் என்கின்ற ஆத்திரம் மனதில்.
நிலை கொள்ள முடியவில்லை,அவனால்.தன்னை நம்பாமல் தன் வாழ்வில் அவள் வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவு அவன் மனதில் குற்றவுணர்ச்சியும் அவள் காதல் தந்த வலியும்.
"எதுக்கு இல்லன்னு வாதாடி அபிஷேக்க பாத்து பேசுன..? எதுக்கு என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணி கிட்ட..? உன்ன தான் டி கேக்கறேன்..என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு...? என் லைஃப பத்தி என்ன தெர்யும் உனக்கு..? உன்ன தான் கேக்கறேன் இசை..?"
"உன்ன தான்டி கேக்கறேன்..உன்னத் தான் கேக்கறேன்..பொய் சொல்லி என்ன கல்யாணம் பண்ணி கிட்டியே உனக்கு என்ன தெரியும்..?
என்ன பத்தி என்னடி தெரியும் உனக்கு..? என்னோட மெடிகல் ஹிஸ்ட்ரி தெரியுமா..? எனக்கு என்ன வியாதி இருக்குன்னு தெரியுமா..?அட்லீஸ்ட் இன்னும் அஞ்சாறு வருஷத்துல சாகப் போறவன்னாவது தெரியுமா..?" அவன் உச்சபட்ச கோபத்தில் உடல் நடுங்கத் கத்திட அதற்கும் நெருங்கி வந்து அவளின் வாயைப் பொத்தியிருந்தவளோ மறுப்பாய் தலையசைத்திட அவள் விழியோரம் நீர் கட்டி நின்றது.வெடுக்கென அவளின் கரத்தை தட்டி விட்டான்,பையன்.
"இந்த வார்த்தய கேக்க கூட முடியல..அப்றம் எந்த தைரியத்துல டி என்ன லவ் பண்ற..?ஹான்..?உன்னத் தான் கேக்கறேன்.." தன்பாட்டில் குரல் உடைய கத்திக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் அவள் விழிகளில் எந்த அதிர்வையும் காணக் கிடைக்காதது கருத்தில் விழுந்தது.
"நீ..நீ..உனக்கு ஏற்கனவே விஷயம் தெர்யுமா..?" எச்சரித்துக் கொண்டிருந்த விரல்கள் நடுங்க கேட்டவனுக்கு பதில் தெரிந்து தான் இருந்தது.உடலில் மட்டுமல்ல உயிருக்குள்ளுமே நடுக்கம்.அவள் மறுத்திட வேண்டும் என்கின்ற பேராசை.இல்லையென்று தலையசைத்திட வேண்டும் என்பதாய் சிறு நப்பாசை.
கலங்கிய விழிகளில் ஈரத்தை உள்ளிழுத்தவாறு அவள் வந்த அழுகையை மென்று முழுங்கி மேலும் கீழும் மெதுவாய் தலையசைத்து ஆமோதிப்பை உணர்த்திட விழிகள் விரியப் பார்த்த பையனுக்கு மூச்சடைத்துப் போனது.செத்தே விட்டது,அவனின் ஆன்மா.மடிந்தே போனான்,உள்ளத்தால்.வலித்தே விட்டது,உயிரின் ஆழத்தில்.
"வாட் தி ஹெல்.." தெறிவினையாய் கத்தியவனோ அதிர்ந்து திகைத்து உள்ளம் நடுங்கி உயிர் குலுங்கி மீண்டிட வந்ததே கோபம்,அந்த கோபத்திலும் அவளைக் காயப்படுத்த முடியவில்லை,கல்லுளி மங்கனால்.அத்தனை பலவீனமாக்கி வைத்திருந்தாள்,அவனையும் அவனின் உறுதிகளையும்.
இறுக்கமானவனின் ஒற்றை பலவீனம் அவள்.அவனை மொத்தமாய் கொன்று குடிக்கும் ஒற்றை பலவீனம்.
"பைத்தியா உனக்கு..? பைத்தியமா டி நீ..? எதுக்கு என் லைஃப்ல வந்த..? நானா அழுதேன் வர சொல்லி..? என்ன வந்து லவ் பண்ண சொல்லி கெஞ்சுனேனா..?இல்லல..இல்லல..அப்றம் எதுக்குடி வந்த என் லைஃப்ல..?ஹான்..?"
"நானா வந்து லவ் பண்ண சொன்னேன்..உன் லவ்வ காட்ட சொன்னேன்..எதுவும் இல்லல..நா உண்டு என் வாழ்க்க உண்டுன்னு ஒதுங்கி இருந்தப்போ எதுக்குடி பொய் சொல்லி வாழ்க்கைல வந்த..?நீ மட்டும் அன்னிக்கி வராம இருந்திருந்தா அப்டி ஒரு பொய்ய சொல்லாம இருந்துருந்தா சத்தியமா நா கல்யாணம் ஒன்னு பண்ணியிருக்க மாட்டேன்..என் மனசும் நிம்மதியா இருந்துருக்கும்..இப்போ எதுவும் இல்ல..? எதுக்கு இப்டி என்ன கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்க..?"
"உன்ன கல்யாணம் பண்ணிகிட்டதுல இருந்து கில்டி ஃபீல் என்ன கொஞ்சமா கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்கு..இதுல நீ வேற..? எதுக்குடி இப்டி பண்ற..? ஷிட்ட்ட்ட்ட்ட்.." அவளின் செவிப்பறை கிழியும் அளவு உச்சஸ்தானியின் கத்தியவனோ மீண்டும் சுவற்றில் குத்திட விரல்களில் காயம் உண்டாகி உதிரம் உற்றெடுத்தது.
கோபத்தை அடக்கிட முடியவில்லை,பையனால்.எந்த காரணத்துக்காக அவளின் வாழ்க்கை பாழாக கூடாது என்று மொத்தமாய் ஒதுங்கி நின்றானோ..சுத்தமாய் விலகல் காட்டினானோ..அதே காரணத்தை பிடித்துக் கொண்டு அவனருகில் அவள் இருப்பதை அவனால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதுவும் அதைக் கூட கண்டு பிடிக்க இயலாமல் அவளுன் முன் பிறழ்ந்து போன அவனின் செயலை பையனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.மடத்தனமாய் இருந்து விட்டோமே என்று ஆயிரமாவது முறையாய் நொந்து போனது,அவன் மனம்.
விரக்தியின் வெளிப்பாடாய் இதழோரம் கசப்பான புன்னகை.அவ்வளவு ஆழமான ரணம் அவனிதயத்தில்,குற்றவுணர்ச்சியின் கூரிய முனையால்.
"தள்ளிப் போ.." வலியை விழுங்கிய குரலில் கத்தித் தீர்த்தவனோ அவளைப் பிடித்து ஓரமாய் நிறுத்தி விட அவளுக்கோ அவன் நிலை புரிய அழுகை முட்டிக் கொண்டு வந்தது,காதலின் அதிகபட்சத்தினால்.
"நா சொல்றத கொஞ்சம் கேளுங்க சாரே.." அவனின் நிலை கண்டு கிளர்ந்தெழுந்த தைரியத்துடன் முன்னேறிட பார்வையால் எச்சரித்தவனைக் கண்டு அவளுக்கு பயமாக இருந்தது.அதீத கோபத்திலும் தன்னை கொஞ்சமும் நோகடிக்கா அவனை எண்ணுகையில் அவளுக்குள்ளுமே வலி.
அவளிடம் பொய் சொல்லி அவனைத் திருமணம் செய்து கொள்ளக் காரணமே பையனின் இந்தக் குணம் தானே.
அவளைப் பொறுத்த வரையில் அப்பொழுது அவள் செய்தது தவறாகத் தோன்றவில்லை என்றாலும் இப்போது பையனின் வலியைப் பார்க்கையில் பெரும் தவறோ என்கின்ற எண்ணம்.ஆனாலும்,அப்படி செய்திருந்தால் அவனின் வாழ்க்கைக்குள் அவளால் நுழைந்திருக்கவும் இயலாதே.அவளும் என்ன தான் செய்திட..?
"என்னோட எடத்துல நீ இருந்தா என்னோட வலி என்னன்னு புரியும்..என்னோட சுய நலத்துக்காக உன் வாழ்க்கய பலி கொடுத்துடேங்குற குற்றவுணர்ச்சியே இன்னும் போகல..இப்போ நீயும் நல்லா செஞ்சிட்ட.." அவளுக்கு வலிக்கும் என்று தான் பேசினான்.அவனாலுமே ஆற்றாமையை மறைக்க இயலவில்லை.
அவள் காதல் கொல்கிறது,அவனை.தன்னிலை தெரிந்தும் அவனை விட்டு விலகிட நினைக்கா அவள் நேசம் அவனை வேரோடு சாய்த்து கொன்று புதைக்கிறதே.
அவள் பொய் சொன்னதற்கு கோபம் வந்தது நியாயம் தான்.ஆனால்,அந்த கோபம் மட்டுமல்ல,பையனின் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியா இந்த அவதாரத்தின் காரணம்.
அவளின் காதல் தான்.ஏன் இத்தனை நேசித்துத் தொலைக்கிறாள் என்கின்ற ஆதங்கம் தான்.அவள் காதலை உணருகையில் உள்ளுக்குள் உருப்பெறும் பேரலை வலி தான்.அந்த மொத்தமும் தான் கோபமாய் வெடித்திருந்தது.
நீர்த்திரையிட்ட விழிகளால் அவனை உரசியவளுக்கு தன் மீது அளவு கடந்த கோபம்,அவன் நிலையைப் பார்க்கையில்.
அவள் செய்தது தவறென்று மனப்பூர்வமாக அவள் ஒப்புக் கொண்டாலும் பையனின் நிலையைக் காண்கையில் அவளுக்குள்ளும் குற்றவுணர்வு குத்திக் கொன்றது.
அவனுக்கு தனிமைத் தேவைப்படும் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவனை விட்டுச் செல்ல முடியவில்லை.பையனும் அப்படியொரு நிலையில் தான் நின்றிருந்தான்,தன்னை மறந்து.
சுவற்றில் உள்ளங்கையை ஊன்றி இடு்ப்பில் மறு கரத்தை குற்றி விழி மூடி தலை தாழ்த்தி நின்றிருந்தவனின் முகத்தில் கோபத்தால் பிரசவமான செந்நிறம் அப்படியே இருந்தது.வெகு அழுத்தமாய் கோதி அழுத்தியதால் சிகை தன்பாட்டில் கலைந்திருக்க ஏறி இறங்கிக் கொண்டிருந்த தொண்டைக்குழி போதும்,அவன் உணர்வுகளை அடக்குவதை குறித்துக் காட்ட.
"சாரே.." நலிந்த குரலில் அழைத்தவளின் சத்தம் அவனுக்கு புரியாது போகுமா என்ன..? இருப்பினும் விழி திறந்து பார்க்கவில்லை.திட்டக் கூடவில்லை,அவன்.
"சாரே.."
"கோபத்த ரொம்ப கன்ட்ரோல் பண்ணி அடக்கிட்டு இருக்கேன் இசை..தயவு செஞ்சு போயிரு..ஏற்கனவே தியாகம்னு நெனச்சு நீ பண்ணியிருக்குறதால மனுஷன் உசுரோட செத்து போயிருக்கான்.."
"நா ஒன்னும் தியாகம் பண்ணல.." அழுகுரலில் சொல்லியவளின் மனதில் பையனுக்கு அந்த நினைப்பு வரக் கூடாது என்கின்ற வேண்டுதல் தானே மனதில் முதன்மையாய்.
அவளின் வார்த்தைள் அனல் மூட்ட விழி திறந்தவனுக்கு அத்தனை ஆத்திரம்."தியாகம் இல்லாம என்னன்னு சொல்றது அத..? எனக்காக உன் வாழ்க்கைய நாசம் பண்ணிகிட்டு இருக்குறத என்னன்னு சொல்றது..?"
இத்தனை நேரம் அழுகையில் கரைந்தவளுக்கும் அவனின் பேச்சில் சத்தியமாய் கோபம் வந்தது.அவளைப் பொறுத்த வரையில் அவள் செய்தது ஒன்றும் தியாகம் அல்ல.அப்படி செய்வதற்கு அவள் தியாகச் செம்மலும் அல்ல.
"என்னடி அப்போ சொல்றது..? என்ன பாத்து பரிதாபத்துல வாழ்க்கைய தியாகம பண்ணிருக்க..?" பையன் கத்த அவளுக்கும் சுர்ரென்று எகிறியது.
"நா ஒன்னும் பரிதாபத்துல உங்கள லவ் பண்ணல..எனக்கு புடிச்சி இருந்தது..உங்கள தவிர வேற யாரயும் கல்யாணம் பண்ண முடியும்னு தோணல..நீங்க வேற வாழ்க்கயே வெறுத்த மாதிரி இருந்தீங்க..உங்க கிட்ட வந்து புடிச்சி இருக்குன்னு சொன்னா என்ன பண்ணிருப்பீங்க சாரே..?"
"எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கனும்..அப்டி நெனக்கிறது பேர் ஒன்னும் பரிதாபம் இல்ல..அதெப்டி உங்களுக்கு வியாதி இருந்து ஒருத்தர் லவ் பண்ணா அத தியாகம்னும் பரிதாபம்னும் சொல்லுவீங்க..லவ் பண்றது நா..நா சொன்னா தான உங்களுக்கு தெர்யும்.."
"நீங்களா ஒன்ன நெனச்சு முடிவெடுத்து கிட்டா அதுக்கு நா பொறுப்பாக மாட்டேன்..நா ஒன்னும் உங்களுக்காக பண்ணல எனக்காகத் தான் பண்ணுனேன் போதுமா..? என்னால உங்கள தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுச்சு அதான் உங்களயே கல்யாணம் பண்ணுனேன்..நா பொய் சொன்னேன் தான்..அது தப்புன்னும் எனக்கு தெர்யும்..அதுக்காக பரிதாபத்துல வந்த லவ்வுன்னு நீங்களா ஒன்ன கற்பன பண்ணிகாதீங்க..பரிதாபத்துல லவ் பண்ணி வாழ்க்க கொடுக்கற அளவு நா நல்லவ இல்ல..பரிதாபத்துல லவ் பண்ற எடத்துலயும் நீங்க இல்ல" மூச்சு விடாமல் நீளமாய் பேசி முடித்தவளின் விழிகளில் இப்போது அனல்.
பையனுக்கு அவள் வார்த்தைகள் விசித்திரமாய்.அவன் அத்தனை திட்டியும் கோபப்பாடது அழுது கரைந்தவளின் காளியவதாரம் அவனுக்கும் திகைப்பு தான்.
"உனக்கு தியாகமா தோணலன்னா அது உன் தப்பு..ஆனா உன் லவ் பரிதாபத்துல வந்தது தான்.." அவளை நோகடித்து விலக்கிட வேண்டும் என அவன் தன் பிடியில் நிற்க எட்டி பையனின் சட்டைக் காலரை பற்றியிருந்தாள்,பாவையவள்.
"ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு..? இது ஒன்னும் பரிதாபத்துல வந்த லவ்வும் இல்ல..யெழவும் இல்ல..எனக்கு உங்கள விட யார் மேலவும் விருப்பம் வர்ல...உங்கள தவிர யார் கூடவும் நா நானா இருக்க மாட்டேன்னு தோணுச்சு..அதான் சான்ஸ் கெடச்சதும் உங்கள கல்யாணம் பண்ணி கிட்டேன் போதுமா..? திரும்பத் திரும்ப சொல்ல வக்காதீங்க.." சீறியவளின் அருகாமையில் வேறு நேரம் என்றால் திணறிப் போயிருப்பான்,பையன்.அவனின் மாற்றங்களை முழுதாய் முழுங்கி விட்டது,ஆழ் மனதின் காயம்.
அவனுக்கோ அவள் செயலில் இன்னும் மனம் வலித்தது.அவளின் வார்த்தைகளை அவளின் காதலின் ஆழத்தை விளக்கிட உடைந்தே போனான்,பையனும்.
விரல்களை விலத்தாது அவனின் விழிகளையே ஊடுருவ அத்தனை அடக்கியும் அவனின் விழிகளில் தெரிந்த மெல்லிய அலைப்புறுதல் அவளை வதைத்திட யாழவனின் முதுகின் பின்னூடு கரத்தை படரவிட்டு கட்டிக் கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்தாள்,இசையவள்!
யாழின் இசையானவள்!
உயிர்த்தொடும்.
2024.09.17
யாழிசை 25(ii)
அவன் ஏற்கனவே அவளுக்கு காதல் ஒன்று இருந்திருக்க மாட்டாது என்பதை ஊகித்திருந்தாலும் அது உறுதிப் படுத்திக் கொள்கையில் கோபமாய் வந்தது.
அதுவும் அவள் தன்னிடம் பொய் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை,பையனால்.அந்த பொய் அவளுக்காக சொல்லப்பட்டிருந்தால் கூட அவனுக்கு பிரச்சினை இருந்திருக்காது.
ஆனால்,அந்த பொய் முழுக்க அவனுக்காக என்பதை உணர்ந்தவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.மனதில் பல்லாயிரம் சஞ்சலங்கள்.
அதுவும் தோழனும் அவனுடன் கூட்டு என்கின்ற விடயமே பையனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.ப்ரித்வியின் இருப்பிடத்தை அறியச் சொல்லியும் அதற்கு பதிலின்றிப் போனதன் காரணம் இப்போதல்லவா அறிய முடிகிறது,அவனால்.
கோபமும் ஆற்றாமையும் உள்ளத்தை பிழிந்தெடுக்க மனம் நிறைத்த வலியுடன் முகத்தில் வேதனையின் சாயல் விழ நகரப்பார்த்தவனோ ப்ரித்வி கை நீட்ட தடுக்கப் பார்த்திட அவனை முறைத்த பையனின் விழிகளில் செந்தணல்.
அறையில் அங்குமிங்கும் உலாவித் திரிந்தவளுக்கு உறக்கம் எட்டியபாடில்லை.எண்ணம் முழுக்க பையனை வட்டமிட அவளுக்கு உறக்கம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உண்டா என்ன..?
"இந்த மனுஷன் எங்க போய் இருக்கோ..?" கடுப்படித்தவளுக்கு இன்னும் முன்னைய நிகழ்வால் அவன் மீதுண்டான கோபம் மீதமிருந்தது தான்.
அந்த யோசனையில் நொடிகளை நெட்டித் தள்ளியவளுக்கு அறைக்கதவு திறபடும் ஓசை கேட்டிட புன்னகையுடன் நிமிர்ந்தவளின் விழிகள் மொத்தமும் பயத்தில் குளித்தது,பையன் இருந்த தோரணையைக் கண்டு.
முகம் முழுவதும் கோபத்தில் சிவக்க அந்த கோபத்தின் உஷ்ணத்தினால் உண்டான செந்நிறத்தை விழிகளுகளும் விழுங்கி தனக்குள் படரவிட்டிருந்தது,முழுதாகவே.
களைந்த சிகையுடன் ஷர்ட் கையை முட்டி வரை மடித்து விட்டவாறு அவன் நின்றிருந்த விதம் அவளின் உயிர்க் கூட்டில் நடுக்கத்தை கிளப்பிட விழிகளில் புரியாத பாவம் தேங்கிட நின்றவளைக் காண காண அவனின் கோபத் தீ பலமடங்கு பெரிதானது.
மெதுவாய் அவன் கதவை அடைத்த தோரணையிலேயே அவளுக்கு முதுகுத் தண்டு வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி பாவையவளின் கரத்தைப் பற்றி அவன் விரல்கள் தந்த அழுத்தத்தில் சத்தியமாய் அவளுக்கு வலித்திட பாவமாய் பார்த்தவளுக்கு அசைந்து கொடுக்கவில்லை,பையன்.
"என்ன சாரே.." பயத்தில் இதயம் நடுங்கித் துடிக்க இதழ்களில் திணறல் ஓடிட கேட்டவளுக்கு என்ன தான் பதிலை சொல்ல அவனும்..?
அறைக்குள் இருந்து கர்ஜித்தால் ராமநாதனுக்கு சத்தம் கேட்கும் என்று தெரிந்து விருட்டென அவளை அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் இழுத்துக் கொண்டு நடந்தவன் அவளைப் பற்றியிருந்த பிடியில் கொஞ்சம் தளர்வு,கொஞ்சமே கொஞ்சம் தான்,அவளுக்கு வலிக்காத அளவு.
அவளும் அதை உணர்ந்தாள் போலும்.இருப்பினும் கரத்தை விடுவித்துக் கொள்ள முயலவில்லை,பையனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள்.
குளியலறைக்குள் அவளை இழுத்து விட்டு கதவை மூடியவனோ அருகே இருந்த ஷவரையும் நீர்த்திருகையும் திறந்து விட்டான்,வெளியே சத்தம் கேட்டிடக் கூடாது என்பதற்காக.
ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டு மார்புக்கு குறுக்கே கரத்தை படரவிட்டு ஒற்றைக் பாதத்தை சுவற்றில் ஊன்றி முட்டுக் கொடுத்து நின்றவனுக்கு எதிர்ப்புறமாய் சுவற்றில் ஒட்டிக் கொண்டு தரித்திருந்தவளோ கைகளை பிசைந்து கொண்டிருந்த விதமே போதும்,அவளின் பயத்தை பறைசாற்றிட.
ஷவரின் இருந்து வளைபாதையில் வந்து விழுந்த நீர்த் திவலைகள் சுவற்றிலும் எதிர்ப்புறமாக நின்றிருந்தவனின் இலேசாகவும் பட்டு ஓய்ந்தன.நீர்த்திருகில் இருந்து வெளியடித்த நீர் தரை முட்டிய வேகத்தில் பல திக்கில் சிதறி பையனின் ஒற்றைப் பாத்தில் மென்தூறலாய் விழுந்து கொண்டிருக்க அதை பொருட்படுத்தும் நிலையில் இல்லை,பையன்.
"நா கேக்கறேன் உண்மய மட்டுந்தான் சொல்லனும்..? காட் இட்..?" வார்த்தைகளில் இல்லாத மிரட்டல்,விழிகளிலும் குரலிலும்.ஆமோதிப்பாய் தலையசைத்தவளிடம் முழுதாய் கோபத்தை கூட காட்ட முடியா தன் இயாலமையை அறவே வெறுத்தான்,பையன்.
"நாம கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி உனக்கு என்ன தெர்யுமா..?" அவளின் கேள்வியிலேய அவளுக்கு புரிந்து போனது,ஏதோ தான்ற மறைத்த விடயமொன்று அவனுக்கு தெரிந்து இருக்கிறதென்பது.
மீண்டும் பொய் சொல்லத் தோன்றவில்லை.அவள் கூறிய பொய் அவனின் ஆழத்தில் எத்தகையை வலியை உண்டு பண்ணும் என்று அறியாதவள் இல்லையே,பாவையவள்.
"ம்ம்.."
"இதுக்கு முன்னாடி உனக்கு எந்த லவ்வும் இருந்தது கெடயாது..ப்ரித்விய பத்தி சொன்னது மொத்தமும் பொய் ரைட்..?"
"ம்ம்.." விழி தாழ்த்தியவாறு அவள் சிரசசைத்திட அவளுக்கு அறையத் தான் தோன்றியது.
அவளுக்கு அறையவும் முடியாமல் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் முடியாமல் சுவற்றில் ஓங்கிக் குதித்திட திடுக்கிட்டு நிமிர்ந்தவளோ அவனைத் தடுக்க முன்னேறப் பார்த்திட அவனின் ஒற்றைப் பார்வை அவ்விடத்திலேயே அவளின் கால்களை வேரோட வைத்தது,அசைய விடாமல்.
"ஸ்டே தேர்.." கோப மிகுதியில் கர்ஜித்தவனுக்கு அவள் காதல் தரும் வதையை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை.இல்லவே இல்லை.
"முன்னவே என்ன லவ் பண்ணிருக்கியா..? இல்ல இப்போ தானா..?"
"க..கல்யாணத்துக்கு அப்றம் தான்.." நடுக்கம் இழையோடும் வார்த்தைகளால் பதில் இயம்பியவளுக்கு செந்நிறம் கொண்ட அவள் விழிகளைக் காணத் தான் பயமாய் இருந்தது.
"ஸோ என்ன புடிச்சி இருந்ததால தான் என் கிட்ட பொய் சொல்லி கல்யாணம் பண்ணி இருக்க..அதுக்கு அரவிந்தும் கூட்டு..ரைட்..?"
"ம்ம்.."
அவளுக்கு தன்னை ஏதும் செய்து விடுவான் என்ற பயம் இல்லை.எங்கே அவனையே நோகடித்துக் கொள்ளப் போகிறானோ என்கின்ற அலைப்புறுதல் அவள் விழிகளில் பரவலாய்.
"எதுக்கு டி பொய் சொன்ன..? எதுக்கு பொய் சொன்ன..? நீ பண்றது தப்புன்னு உனக்கு தோணலயா..? ஹான்ன்ன்ன்ன்..?
சாகடிச்சிட்டு இருக்க டி நீ என்ன..கொஞ்சமா கொஞ்சமா கொன்னுட்டு இருக்க என்ன..நீ பண்றது ஒவ்வொன்னும் என்ன கொலயா கொன்னுட்டு இருக்குன்னா நீ பண்ணுன ஒவ்வொன்னும் தெரிய வரும் போதே என்ன பண்றதுன்னே எனக்கு தெரில.." வேதனையின் வேர்கள் வதனமதில் நிரம்ப அழுத்தமான குரலில் கர்ஜித்தவனை பார்த்திட அவள் விழிகளில் ஈரம்.
"யாரு டி அவ்ளோ நம்ப சொன்னாங்க என்ன..? நீயும் மத்தவங்கள மாதிரி என்ன ரேப்பிஸ்ட்னே நெனச்சிகிட்டு வெறுத்துருக்கலாம்ல.." அத்தனை ஆதங்கம் பையனின் வார்த்தைகளில்.யாரேனும் நம்பியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறான்,தான்.முதல் தடவை ஏன் இவள் தன்னை நம்பித் தொலைத்தாள் என்கின்ற ஆத்திரம் மனதில்.
நிலை கொள்ள முடியவில்லை,அவனால்.தன்னை நம்பாமல் தன் வாழ்வில் அவள் வராமலே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவு அவன் மனதில் குற்றவுணர்ச்சியும் அவள் காதல் தந்த வலியும்.
"எதுக்கு இல்லன்னு வாதாடி அபிஷேக்க பாத்து பேசுன..? எதுக்கு என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணி கிட்ட..? உன்ன தான் டி கேக்கறேன்..என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு...? என் லைஃப பத்தி என்ன தெர்யும் உனக்கு..? உன்ன தான் கேக்கறேன் இசை..?"
"உன்ன தான்டி கேக்கறேன்..உன்னத் தான் கேக்கறேன்..பொய் சொல்லி என்ன கல்யாணம் பண்ணி கிட்டியே உனக்கு என்ன தெரியும்..?
என்ன பத்தி என்னடி தெரியும் உனக்கு..? என்னோட மெடிகல் ஹிஸ்ட்ரி தெரியுமா..? எனக்கு என்ன வியாதி இருக்குன்னு தெரியுமா..?அட்லீஸ்ட் இன்னும் அஞ்சாறு வருஷத்துல சாகப் போறவன்னாவது தெரியுமா..?" அவன் உச்சபட்ச கோபத்தில் உடல் நடுங்கத் கத்திட அதற்கும் நெருங்கி வந்து அவளின் வாயைப் பொத்தியிருந்தவளோ மறுப்பாய் தலையசைத்திட அவள் விழியோரம் நீர் கட்டி நின்றது.வெடுக்கென அவளின் கரத்தை தட்டி விட்டான்,பையன்.
"இந்த வார்த்தய கேக்க கூட முடியல..அப்றம் எந்த தைரியத்துல டி என்ன லவ் பண்ற..?ஹான்..?உன்னத் தான் கேக்கறேன்.." தன்பாட்டில் குரல் உடைய கத்திக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் அவள் விழிகளில் எந்த அதிர்வையும் காணக் கிடைக்காதது கருத்தில் விழுந்தது.
"நீ..நீ..உனக்கு ஏற்கனவே விஷயம் தெர்யுமா..?" எச்சரித்துக் கொண்டிருந்த விரல்கள் நடுங்க கேட்டவனுக்கு பதில் தெரிந்து தான் இருந்தது.உடலில் மட்டுமல்ல உயிருக்குள்ளுமே நடுக்கம்.அவள் மறுத்திட வேண்டும் என்கின்ற பேராசை.இல்லையென்று தலையசைத்திட வேண்டும் என்பதாய் சிறு நப்பாசை.
கலங்கிய விழிகளில் ஈரத்தை உள்ளிழுத்தவாறு அவள் வந்த அழுகையை மென்று முழுங்கி மேலும் கீழும் மெதுவாய் தலையசைத்து ஆமோதிப்பை உணர்த்திட விழிகள் விரியப் பார்த்த பையனுக்கு மூச்சடைத்துப் போனது.செத்தே விட்டது,அவனின் ஆன்மா.மடிந்தே போனான்,உள்ளத்தால்.வலித்தே விட்டது,உயிரின் ஆழத்தில்.
"வாட் தி ஹெல்.." தெறிவினையாய் கத்தியவனோ அதிர்ந்து திகைத்து உள்ளம் நடுங்கி உயிர் குலுங்கி மீண்டிட வந்ததே கோபம்,அந்த கோபத்திலும் அவளைக் காயப்படுத்த முடியவில்லை,கல்லுளி மங்கனால்.அத்தனை பலவீனமாக்கி வைத்திருந்தாள்,அவனையும் அவனின் உறுதிகளையும்.
இறுக்கமானவனின் ஒற்றை பலவீனம் அவள்.அவனை மொத்தமாய் கொன்று குடிக்கும் ஒற்றை பலவீனம்.
"பைத்தியா உனக்கு..? பைத்தியமா டி நீ..? எதுக்கு என் லைஃப்ல வந்த..? நானா அழுதேன் வர சொல்லி..? என்ன வந்து லவ் பண்ண சொல்லி கெஞ்சுனேனா..?இல்லல..இல்லல..அப்றம் எதுக்குடி வந்த என் லைஃப்ல..?ஹான்..?"
"நானா வந்து லவ் பண்ண சொன்னேன்..உன் லவ்வ காட்ட சொன்னேன்..எதுவும் இல்லல..நா உண்டு என் வாழ்க்க உண்டுன்னு ஒதுங்கி இருந்தப்போ எதுக்குடி பொய் சொல்லி வாழ்க்கைல வந்த..?நீ மட்டும் அன்னிக்கி வராம இருந்திருந்தா அப்டி ஒரு பொய்ய சொல்லாம இருந்துருந்தா சத்தியமா நா கல்யாணம் ஒன்னு பண்ணியிருக்க மாட்டேன்..என் மனசும் நிம்மதியா இருந்துருக்கும்..இப்போ எதுவும் இல்ல..? எதுக்கு இப்டி என்ன கொஞ்சம் கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்க..?"
"உன்ன கல்யாணம் பண்ணிகிட்டதுல இருந்து கில்டி ஃபீல் என்ன கொஞ்சமா கொஞ்சமா சாகடிச்சிட்டு இருக்கு..இதுல நீ வேற..? எதுக்குடி இப்டி பண்ற..? ஷிட்ட்ட்ட்ட்ட்.." அவளின் செவிப்பறை கிழியும் அளவு உச்சஸ்தானியின் கத்தியவனோ மீண்டும் சுவற்றில் குத்திட விரல்களில் காயம் உண்டாகி உதிரம் உற்றெடுத்தது.
கோபத்தை அடக்கிட முடியவில்லை,பையனால்.எந்த காரணத்துக்காக அவளின் வாழ்க்கை பாழாக கூடாது என்று மொத்தமாய் ஒதுங்கி நின்றானோ..சுத்தமாய் விலகல் காட்டினானோ..அதே காரணத்தை பிடித்துக் கொண்டு அவனருகில் அவள் இருப்பதை அவனால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
அதுவும் அதைக் கூட கண்டு பிடிக்க இயலாமல் அவளுன் முன் பிறழ்ந்து போன அவனின் செயலை பையனால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.மடத்தனமாய் இருந்து விட்டோமே என்று ஆயிரமாவது முறையாய் நொந்து போனது,அவன் மனம்.
விரக்தியின் வெளிப்பாடாய் இதழோரம் கசப்பான புன்னகை.அவ்வளவு ஆழமான ரணம் அவனிதயத்தில்,குற்றவுணர்ச்சியின் கூரிய முனையால்.
"தள்ளிப் போ.." வலியை விழுங்கிய குரலில் கத்தித் தீர்த்தவனோ அவளைப் பிடித்து ஓரமாய் நிறுத்தி விட அவளுக்கோ அவன் நிலை புரிய அழுகை முட்டிக் கொண்டு வந்தது,காதலின் அதிகபட்சத்தினால்.
"நா சொல்றத கொஞ்சம் கேளுங்க சாரே.." அவனின் நிலை கண்டு கிளர்ந்தெழுந்த தைரியத்துடன் முன்னேறிட பார்வையால் எச்சரித்தவனைக் கண்டு அவளுக்கு பயமாக இருந்தது.அதீத கோபத்திலும் தன்னை கொஞ்சமும் நோகடிக்கா அவனை எண்ணுகையில் அவளுக்குள்ளுமே வலி.
அவளிடம் பொய் சொல்லி அவனைத் திருமணம் செய்து கொள்ளக் காரணமே பையனின் இந்தக் குணம் தானே.
அவளைப் பொறுத்த வரையில் அப்பொழுது அவள் செய்தது தவறாகத் தோன்றவில்லை என்றாலும் இப்போது பையனின் வலியைப் பார்க்கையில் பெரும் தவறோ என்கின்ற எண்ணம்.ஆனாலும்,அப்படி செய்திருந்தால் அவனின் வாழ்க்கைக்குள் அவளால் நுழைந்திருக்கவும் இயலாதே.அவளும் என்ன தான் செய்திட..?
"என்னோட எடத்துல நீ இருந்தா என்னோட வலி என்னன்னு புரியும்..என்னோட சுய நலத்துக்காக உன் வாழ்க்கய பலி கொடுத்துடேங்குற குற்றவுணர்ச்சியே இன்னும் போகல..இப்போ நீயும் நல்லா செஞ்சிட்ட.." அவளுக்கு வலிக்கும் என்று தான் பேசினான்.அவனாலுமே ஆற்றாமையை மறைக்க இயலவில்லை.
அவள் காதல் கொல்கிறது,அவனை.தன்னிலை தெரிந்தும் அவனை விட்டு விலகிட நினைக்கா அவள் நேசம் அவனை வேரோடு சாய்த்து கொன்று புதைக்கிறதே.
அவள் பொய் சொன்னதற்கு கோபம் வந்தது நியாயம் தான்.ஆனால்,அந்த கோபம் மட்டுமல்ல,பையனின் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியா இந்த அவதாரத்தின் காரணம்.
அவளின் காதல் தான்.ஏன் இத்தனை நேசித்துத் தொலைக்கிறாள் என்கின்ற ஆதங்கம் தான்.அவள் காதலை உணருகையில் உள்ளுக்குள் உருப்பெறும் பேரலை வலி தான்.அந்த மொத்தமும் தான் கோபமாய் வெடித்திருந்தது.
நீர்த்திரையிட்ட விழிகளால் அவனை உரசியவளுக்கு தன் மீது அளவு கடந்த கோபம்,அவன் நிலையைப் பார்க்கையில்.
அவள் செய்தது தவறென்று மனப்பூர்வமாக அவள் ஒப்புக் கொண்டாலும் பையனின் நிலையைக் காண்கையில் அவளுக்குள்ளும் குற்றவுணர்வு குத்திக் கொன்றது.
அவனுக்கு தனிமைத் தேவைப்படும் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவனை விட்டுச் செல்ல முடியவில்லை.பையனும் அப்படியொரு நிலையில் தான் நின்றிருந்தான்,தன்னை மறந்து.
சுவற்றில் உள்ளங்கையை ஊன்றி இடு்ப்பில் மறு கரத்தை குற்றி விழி மூடி தலை தாழ்த்தி நின்றிருந்தவனின் முகத்தில் கோபத்தால் பிரசவமான செந்நிறம் அப்படியே இருந்தது.வெகு அழுத்தமாய் கோதி அழுத்தியதால் சிகை தன்பாட்டில் கலைந்திருக்க ஏறி இறங்கிக் கொண்டிருந்த தொண்டைக்குழி போதும்,அவன் உணர்வுகளை அடக்குவதை குறித்துக் காட்ட.
"சாரே.." நலிந்த குரலில் அழைத்தவளின் சத்தம் அவனுக்கு புரியாது போகுமா என்ன..? இருப்பினும் விழி திறந்து பார்க்கவில்லை.திட்டக் கூடவில்லை,அவன்.
"சாரே.."
"கோபத்த ரொம்ப கன்ட்ரோல் பண்ணி அடக்கிட்டு இருக்கேன் இசை..தயவு செஞ்சு போயிரு..ஏற்கனவே தியாகம்னு நெனச்சு நீ பண்ணியிருக்குறதால மனுஷன் உசுரோட செத்து போயிருக்கான்.."
"நா ஒன்னும் தியாகம் பண்ணல.." அழுகுரலில் சொல்லியவளின் மனதில் பையனுக்கு அந்த நினைப்பு வரக் கூடாது என்கின்ற வேண்டுதல் தானே மனதில் முதன்மையாய்.
அவளின் வார்த்தைள் அனல் மூட்ட விழி திறந்தவனுக்கு அத்தனை ஆத்திரம்."தியாகம் இல்லாம என்னன்னு சொல்றது அத..? எனக்காக உன் வாழ்க்கைய நாசம் பண்ணிகிட்டு இருக்குறத என்னன்னு சொல்றது..?"
இத்தனை நேரம் அழுகையில் கரைந்தவளுக்கும் அவனின் பேச்சில் சத்தியமாய் கோபம் வந்தது.அவளைப் பொறுத்த வரையில் அவள் செய்தது ஒன்றும் தியாகம் அல்ல.அப்படி செய்வதற்கு அவள் தியாகச் செம்மலும் அல்ல.
"என்னடி அப்போ சொல்றது..? என்ன பாத்து பரிதாபத்துல வாழ்க்கைய தியாகம பண்ணிருக்க..?" பையன் கத்த அவளுக்கும் சுர்ரென்று எகிறியது.
"நா ஒன்னும் பரிதாபத்துல உங்கள லவ் பண்ணல..எனக்கு புடிச்சி இருந்தது..உங்கள தவிர வேற யாரயும் கல்யாணம் பண்ண முடியும்னு தோணல..நீங்க வேற வாழ்க்கயே வெறுத்த மாதிரி இருந்தீங்க..உங்க கிட்ட வந்து புடிச்சி இருக்குன்னு சொன்னா என்ன பண்ணிருப்பீங்க சாரே..?"
"எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கனும்..அப்டி நெனக்கிறது பேர் ஒன்னும் பரிதாபம் இல்ல..அதெப்டி உங்களுக்கு வியாதி இருந்து ஒருத்தர் லவ் பண்ணா அத தியாகம்னும் பரிதாபம்னும் சொல்லுவீங்க..லவ் பண்றது நா..நா சொன்னா தான உங்களுக்கு தெர்யும்.."
"நீங்களா ஒன்ன நெனச்சு முடிவெடுத்து கிட்டா அதுக்கு நா பொறுப்பாக மாட்டேன்..நா ஒன்னும் உங்களுக்காக பண்ணல எனக்காகத் தான் பண்ணுனேன் போதுமா..? என்னால உங்கள தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுச்சு அதான் உங்களயே கல்யாணம் பண்ணுனேன்..நா பொய் சொன்னேன் தான்..அது தப்புன்னும் எனக்கு தெர்யும்..அதுக்காக பரிதாபத்துல வந்த லவ்வுன்னு நீங்களா ஒன்ன கற்பன பண்ணிகாதீங்க..பரிதாபத்துல லவ் பண்ணி வாழ்க்க கொடுக்கற அளவு நா நல்லவ இல்ல..பரிதாபத்துல லவ் பண்ற எடத்துலயும் நீங்க இல்ல" மூச்சு விடாமல் நீளமாய் பேசி முடித்தவளின் விழிகளில் இப்போது அனல்.
பையனுக்கு அவள் வார்த்தைகள் விசித்திரமாய்.அவன் அத்தனை திட்டியும் கோபப்பாடது அழுது கரைந்தவளின் காளியவதாரம் அவனுக்கும் திகைப்பு தான்.
"உனக்கு தியாகமா தோணலன்னா அது உன் தப்பு..ஆனா உன் லவ் பரிதாபத்துல வந்தது தான்.." அவளை நோகடித்து விலக்கிட வேண்டும் என அவன் தன் பிடியில் நிற்க எட்டி பையனின் சட்டைக் காலரை பற்றியிருந்தாள்,பாவையவள்.
"ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு..? இது ஒன்னும் பரிதாபத்துல வந்த லவ்வும் இல்ல..யெழவும் இல்ல..எனக்கு உங்கள விட யார் மேலவும் விருப்பம் வர்ல...உங்கள தவிர யார் கூடவும் நா நானா இருக்க மாட்டேன்னு தோணுச்சு..அதான் சான்ஸ் கெடச்சதும் உங்கள கல்யாணம் பண்ணி கிட்டேன் போதுமா..? திரும்பத் திரும்ப சொல்ல வக்காதீங்க.." சீறியவளின் அருகாமையில் வேறு நேரம் என்றால் திணறிப் போயிருப்பான்,பையன்.அவனின் மாற்றங்களை முழுதாய் முழுங்கி விட்டது,ஆழ் மனதின் காயம்.
அவனுக்கோ அவள் செயலில் இன்னும் மனம் வலித்தது.அவளின் வார்த்தைகளை அவளின் காதலின் ஆழத்தை விளக்கிட உடைந்தே போனான்,பையனும்.
விரல்களை விலத்தாது அவனின் விழிகளையே ஊடுருவ அத்தனை அடக்கியும் அவனின் விழிகளில் தெரிந்த மெல்லிய அலைப்புறுதல் அவளை வதைத்திட யாழவனின் முதுகின் பின்னூடு கரத்தை படரவிட்டு கட்டிக் கொண்டு தோள் வளைவில் முகம் புதைத்தாள்,இசையவள்!
யாழின் இசையானவள்!
உயிர்த்தொடும்.
2024.09.17