யாழின் இசையாய்..
யாழிசை 18(i)
இசையவளின் இதழ்களின் துளிர்த்திருந்த புன்னகையில் வார்த்தைகள் கொண்டு விளக்கிட முடியா பலநூறு அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.
தோழியவளின் எந்தவொரு கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லையென்றாலும் ஏனோ புன்னகை மட்டும் உருவெடுத்திருந்தது.
அவளுக்கு பையனின் மாற்றங்கள் புரிகிறது தான்..தெள்ளமாய் தெரிகிறிது தான்..ஆனாலும்,அந்த மாற்றத்தின் காரணம் காதலின் தோற்றம் என்று அவள் யோசித்ததே இல்லை;யோசிக்கவும் மாட்டாள்.
அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும்.உடன் யார் இருந்தாலும் இத்தனை அக்கறை காட்டி நடத்துவது அவனின் பழக்கம் என்றும் தெரியும்.
வீட்டினர் அவனை காயப்படுத்தியிருந்த பின்னும் அவர்களை யோசிக்கும் அவன் மனம் பற்றி அவள் அறியாததா என்ன..?
இன்னுமே அவன் தங்கையின் பாதுகாப்பை பற்றி அவன் கவனம் செலுத்தவது அவள் அறிந்த விடயமே.
யாழவனின் குணமே அப்படிப் பட்டது தான் என்ற கணிப்பில் இருப்பவளுக்கு அவன் தன்னுடன் இயல்பாய் உரையாடுவதை எல்லாம் வைத்துக் கொண்டு காதல் என்றெல்லாம் பிதற்றிட மனம் இடம் கொடுத்திடாது.
கடுகடுப்புடன் அக்கறை காட்டினாலும் சில நேரம் அவளுக்கே அது குழம்பிப் போகும்,ராமநாதன் இருப்பதால்.அவனின் அக்கறையை உணர்ந்தாலும் முழுதாய் தனக்கானது தான் என்று ஏற்றுக் கொண்டிட பெரும் நெருடல்.
கல்லுளி மங்கன் அவனும் ஏதேனும் உணர்வுகளை விழிகளை காட்டியிருந்தால் மகராசிக்கு அவள் மீதான அக்கறை என்று முழுதாய் நம்பிட எண்ணம் வந்திருக்க கூடும்.அவன் வேறு தான் பங்குக்கு அவளை படுத்தி எடுக்கிறானே.
அவனுடன் வாயடிக்கிறாள்..வம்பிழுக்கிறாள்..வாய் ஓயாமல் கதைக்கிறாள்..எல்லாம் நடக்கிறது தான், இருப்பினும் மன எண்ணங்கள் அவ்விடத்தில் பரிமாறப்படவில்லையே.அவன் வேறு தோழனாய் இருப்பதாகத் தான வாக்குக் கொடுத்தும் இருப்பது.அந்த தோழமை எண்ணத்தில் தான் இப்படி நடந்து கொள்ளக் கூடும் எனவும் வாதிடும் ஆழ் மனம்.
ஆயினும்,அவனின் செயல்களில் குழம்பிப் போய் விழித்தாலும் முற்றாய் அவன் வசம் இழுக்கப்படும் மனதுக்கே புரிவதில்லை,ஏன் இத்தனை தூரம் அவன் வசம் வீழ்கிறோம் என்பது.
இன்று காலையில் கூட பையன் தன்னுடன் விளையாடிச் சீண்டியது அவளுக்கு பெருத்த அதிர்வு தான்.அவள் இதுவரை கண்டிராத..
கண்டே இராத யாழவன் அல்லவா அது..?
பேரூந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவளுக்கு அது தலையை குழம்ப வைத்திட அந்த மனப்போராட்டத்தை தாள முடியாமல் தான் உறக்கத்தில் விழுந்ததே..?
இப்போது சற்று சமப்பட்ட மனதுடன் தெளிந்திருந்தவளின் சிந்தனயை மீண்டும் கலங்க வைத்திருந்தாள்,தாமரை.
மதிய நேரம் கடந்து தான்,பாவையவளுக்கு அழைப்பெடுத்திருந்தான்,பையன்.அவனின் பிடிவாதத்திற்கு அழைத்தே இருக்க மாட்டான் என்பது வேறு விடயம்.ஆனால்,அவளென்று வருகையில் அந்த பிடிவாதமும் கொஞ்சம் பிடிகொடுத்து தானே போகிறது..?
"ஹலோ.." கம்பீரமாய் அவன் குரல் அவள் செவியில் மோதினாலும் பையனின் மன உணர்வுகள் வேறு கதை கூறிக் கொண்டிருந்தன.
"ஹலோ சாரே..என்ன பண்றீங்க..?" மாற்றமில்லா தொனியில் அவள் கேட்டது இவன் அகத்தில் ஏன் மாற்றிட முடியா அளவு மாற்றங்களை உண்டு பண்ணிட வேண்டும்..?
அவளின் செவி வழி நுழைந்த குரல்,புத்தி கிரகிக்கும் முன்னமே மனதை துளைத்துச் சென்று அவளின் இதயத் துடிப்பை வேகமெடுத்திட வைத்ததே.
அக்மார்க் மேனரிசமாய் பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனுக்கோ அவளின் குரலில் சிலிர்த்தடங்கிய தேகத்தை இன்னும் நம்பிட முடியவில்லை.அப்படியே புத்தி மரத்துப் போக பேச்சற்று நின்றான்,பையன்.
"சாரே என்ன லைன்ல இருக்கீங்களா..?"
"ம்ம்..ஆஃபீஸ்ல இருக்கேன்.." மாறா குரல் தொனியில் பதில் மொழிந்தவனோ வலக்கரத்தை இடது நெஞ்சின் அழுத்தி வைத்திருக்க விரல்கள் உணர்ந்து கொண்டன,அவனிதயம் எடுத்திருக்கும் வேகத்தை.
"ஓஹ் அப்டியா..? நாங்க இப்போ தான் ஊருக்கு போற ரூட்கே வந்துருக்கோம்..இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு போய்ரலாம்னு சொன்னாங்க..இப்போ சாப்பட்றதுக்காக தான் வண்டிய நிறுத்தி வச்சிருக்காங்க..ஆமா நீங்க சாப்டீங்களா..?"
"ம்ம் சாப்டுடேன்.." கூறியவனின் விழிகளோ மேசையின் மீதிருந்த பிரிக்கப்படா உணவுப் பொதியை தொட்டு மீண்டன.
"என்ன நீ இல்லாம நா சாப்ட மாட்டேன்னு நெனச்சியா..?" அவளின் அருகின்மை தனக்குள் எந்த வித வெறுமையையும் தோற்றுவித்திடவில்லை என்று பாவையவளுக்கு உணர்த்தும் முனைப்பில் கூறிட அதற்கெல்லாம் அசரும் ரகமா அவள்..?
அவனையே பாடாய்ப் படுத்தும் பெண் அவள்.அவளிடம் இப்படி ஒரு கேள்வியை அவன் யோசித்து தான் கேட்டிருக்க வேண்டுமோ..?
"எதே நா எங்க அப்டி நெனச்சேன்..? நா இல்லாம நீங்க சாப்ட மாட்டீங்கன்னு..நானே அப்டி இல்ல..நீங்க பக்கத்துல இல்லன்னாலும் என் பசிக்கு நா சாப்டுவேன்..இதுல நா எப்டி பாஸ் எதிர்பாக்கறது..?"
"லவ்வு லவ்வுன்னு சொல்ற..ஆனா நீ பண்றதெல்லாம் அதுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாம தான இருக்கே.."
"லவ்வு தான்..ஆனா அத நீங்க தான் மறக்க சொல்லிட்டீங்க..ஆனாலும் லவ்வுங்குறதுக்காக நீங்க பக்கத்துல இல்லன்னு என்னால சாப்டாம இருக்க முடியுமா..?அப்டி இருந்தா உங்கள லவ் பண்ணதுக்கு நா மெலிஞ்சு எலும்புக்கூடா தான் மாறி இருக்கனும்.."
"அப்போ என்ன லவ் பண்ணது தப்புன்னு சொல்லாம சொல்ற..?"
"யோவ்வ்வ்வ்..நா எங்கய்யா அப்டி சொன்னேன்..நீ தான் லவ்வுன்னா தப்பு..அதுவும் என்ன லவ் பண்றது மகா தப்பு..காவி வேஷ்டி கட்டிகிட்டு நா சாமியாராக போறேன்னு டயலாக் விட்டுட்டு இருந்த..பசின்னா சாப்டுவேன்னு சொன்னதுக்கு என் மேல பழிய திருப்பி விட்ற.." சத்தியமாய் அவளுக்கு கோபம் வந்து விட்டது.
அவள் காதலை குற்றம் சொல்ல அவனுக்குமே அவள் மனம் இடம் கொடுத்திடாது.இத்தனை நாள் அவனின் அறிவுரைகளை எல்லாம் சலிப்புடன் பொறுத்துக் கொண்டாள்.கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாய் இருந்தாள்.
ஆனால்,இப்போது அவன் விளையாட்டுக்கென கூறியதும் ஏனோ பொங்கி விட்டாள்.
அவள் காதல் அப்படித் தான்..
அவன் மீதான அவள் காதல் அப்படித் தான்..
அவனிடம் கூட விட்டுக்கொடுக்கத் தெரியா அவனின் மீதான அவள் காதல் அப்படியே தான்..
பையனுக்கு ஏனோ அவளின் படபடபேச்சும் அந்த வார்த்தைகள் கொண்டிருந்த ஆயிரமாயிரம் பெரிய அர்த்தங்களும் உள்ளிறங்கி ஆழத்தை ஆட்படுத்தியது.அவளின் வார்த்தைகள் அவளின் காதலை பறைசாற்றுவது போல்.
கோபத்தில் கூட அவன் மீதான காதலைக் காட்டிட அவளால் மட்டும் எப்படித் தான் முடிகிறதோ என்று வியந்து நின்றாலும் பேச்சை திசை திருப்பவே விரும்பினான்,பையன்.இன்னும் எத்தனை தூரத்துக்கு தான் தன்னை ஆட்டுவிப்பாள் என்று பயந்து விட்டான்,போலும்.
"சரி சும்மா கோவப்படாத..நீ சாப்டியா என்ன..?" தன்மையாய் வந்து விழுந்த வார்த்தைகளில் அவளும் அடங்கி நின்றாள்.அவளுமே அவன் உடனே இறங்கி வருவான் என்று நினைத்திருக்கவில்லை.
"ம்ஹும் இன்னும் இல்ல..இதுக்கப்றம் தான் சாப்டனும்..லேட்டாகாம வீட்டுக்கு சீக்ரமா போங்க..மாமா மட்டும் தனியா வீட்ல இருப்பாரு.."
"ம்ம்.." அவளின் கட்டளை போன்ற கூற்றுக்கு அவன் எந்த வித மறுப்பும் தெரிவிக்காது போனதை கவனிக்கவில்லை,அவள்.
"சரி சாரே..சாப்ட கூப்பட்றாங்க..நா அப்றமா பேசறேன்.."
"ம்ம்.." என்றிட அவள் அழைப்பை துண்டித்த பின்னும் அவன் இன்னும் தன்னியல்புக்கு வந்திடவில்லை.
இங்கு தாமரைக்கு நெஞ்சு வலி வராத குறை தான்.பையனை அவள் சராமாறியாய் திட்டியது அதிர்வென்றால் அதற்கு அவன் தன்மையாய் பதில் சொல்வது மெதுவாய் செவியை உரசியிருக்க அது இன்னுமும் அதிர்வே.
"என்ன அவரு இவ கிட்ட திட்டு வாங்கிட்டு பேசாம இருக்காரு..இவ என்னன்னா மொத்தமா அவர குத்தகக்கி எடுத்த மாதிரி திட்டி கிட்டு இருக்கா..ஒன்னுமே புரியலயே.." சித்தம் கலங்கிப் போய் பாவையவளைப் பார்த்திட அவளோ அலைபேசியில் தெரிந்த பையனின் புகைப்பத்தை வெடு ரசனையுடன் பார்வையால் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தாள்,சுற்றம் மறந்து.
பையனின் மனமோ ஒரு நிலையில் இல்லை.அவள் எதையும் காட்டிக் கொள்ளாது இயல்பாய் பேசியது,பையனின் மனதுக்குள் சிறு சுணக்கத்தை ஏனென்றில்லாமல் விதைத்து விட்டிருக்க "ப்ச்ச்ச்" சலிப்பாய் உச்சுக் கொட்டினான்,அவன்.
மனதின் மாற்றங்கள் மெல்லப் புரிந்தாலும் அதை உணர மறுப்பவனின் மறுப்பில் அவை அப்படியே உள்ளுக்குள் மடங்கி போயிற்று.மடங்கிப் போனாலும் மரித்துப் போயிருக்கவில்லை என்பது சத்தியமான உண்மை.
இன்னும் அவள் மீது காதல் வந்திருக்கிறதா என்பதில் சந்தேகம் தான்.இருப்பினும் அது கூட அவனுக்கு அழகே.
உணர்ந்தும் உணராமலும் புரிந்தும் புரியாமலும் தவிக்கும் அழகிய இம்சையால் அவள் பாராபட்சமின்றி அவனை வதம் செய்து கொண்டிருக்க மெதுமெதுவாய் கரைந்தோடுகிறது,அவனின் கர்வமும் அழுத்தமும் இறுக்கமும்.
யார் மீதும் மீண்டும் காதல் வராது என்ற இறுமாப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவனின் இறுக்கத்தை அவள் நேசம் மெதுவாய் அவனே அறியாது உடைத்துக் கொண்டிருக்க அதை உணரும் நிலையில் ஏற்றுக் கொள்வானா பிடிவாதக்காரன்..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அவளை அவனுடன் தங்க அழைத்த போதில் இருந்து ஐந்தரை மணியானதுமே அலுவலகத்தில் இருந்து அவளை அழைத்துச் செல்வது அவனுக்கு வாடிக்கையாய் மாறிப் போயிருக்க அரவிந்துக்கும் அது அத்தனை நிம்மதியைத் தந்திற்று.
முன்னைய நாட்களில் இரவு பத்து மணி வரை அலுவலகத்தில் தரிப்பவனை வீட்டுக்கு போகச் சொன்னால் கேட்கவும் மாட்டான்.அரவிந்துக்கோ அவனை தனியாக விட்டுச் செல்லவும் மனம் வராது.அதனாலோ என்னமோ இப்போது சீக்கிரமாக வீடு செல்வது அவனுக்கு அத்தனை நிம்மதி.
இன்றும் அப்படித் தான்.
ஐந்தரை மணிக்கு போல் தோழனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என வந்தவனுக்கு மடிக்கணினியில் மூழ்கியிருந்த தோழனைக் கண்டதும் ஐயோவென்றானது உண்மை.
"என்ன இவன் இன்னிக்கி வீட்டுக்கு போகமா இருக்கான்..?" யோசனையுடன் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அரவம் உணர்ந்தவனுக்குத் தெரியுமே வந்திருப்பது யார் என்பது.
"என்ன அரவிந்த்..?"
"என்ன வேந்தா..? ஐஞ்சர மணி ஆயிடுச்சு இன்னும் வீட்டுக்கு போகாம இருக்க..தங்கச்சிய கூட்டிட்டு போனும்ல.."
"உன் தங்கச்சி இன்னிக்கி டூர் போயிருக்கா.."
"அத எதுக்குடா இவ்ளோ கடுப்போட சொல்லனும்..? நீ எப்ப பாரு அந்த பொண்ண திட்டிட்டே இருப்ப..உனக்கு சரியாப் பாத்தா அந்த பொண்ணோட லவ் டார்ச்சர் இல்லன்னு சந்தோஷம் தான வரனும்..?" நாடி தட்டிய படி தன்பாட்டில் பிதற்றியவனுக்கு தோழனின் மனநிலையை கணித்துக் கொள்ளத் தான் முடியவில்லை.
"நா எப்ப டார்ச்சர் சொன்னேன்..?" விழிகளிலும் கடுகடுப்பைக் காட்டி கேட்டவனுக்கு ஏனோ எக்கச்சக்கமாய் கோபம் வந்தது.
முகத்தில் கோப ரேகைகள் படரவிட்டு ஏதோ ஒரு வெறுமையைத் தாங்கிய விழிகளுடன் உறுத்து விழித்த படி அமர்ந்திருந்த தோழனை புதிதாய்ப் பார்த்தான்,அரவிந்த்.
அவனின் தோழன் வேந்தன் இப்படியெல்லாம் நடந்து கொள்பவன் அல்லவே.பையனின் பெரும் பலமே உணர்வு காட்டாத வதனமும் கோபத்தின் போது கையாளும் நிதானமும் தான்.
பையனுக்கோ கோபம் உச்சிக்கு ஏறி நின்றாலும் அதை விட ஒரு படி அதிகமாய் நிச்சயம் நிதானம் இருக்கும்.கட்டுப்படுத்த இயலா கோபம் வந்தாலும் அந்த நிதானத்தை ஒருபோதும் கை விட்டதில்லை அவன்.
இசைவளால் யாழவனின் மெல்ல மெல்ல மாற்றங்கள்,அவனின் இயல்புகளை மறக்கடித்து.யாழின் இசை அல்லவா அவள்..?
யாழின் இசையாய் மாறி அவனின் உயிர்த்தொட்டுக் கொண்டிருப்பவள் அவனை மாற்றாது இருந்தால் தானே அதிர வேண்டும்..?
"என்ன இவன் இப்டி கடுப்படிக்கிறான்..காப்பாத்து சாமி.." மானசீகமாய் கடவுளிடம் பேசியவனோ எதுவும் பேசாது பையனின் அருகிலேயே அமர்ந்து கொண்டிட அதன் பின் அங்கு மௌனத்தின் ஓசை.
இரவு எட்டு மணியைக் கடந்திருந்தது.
அரவிந்தோ அலைபேசியில் மூழ்கியிருந்தாலும் அடிக்கடி விழிகள் வேலையில் ஆழ்ந்திருந்த தோழனை தொட்டிட இதழ்களோ அவனுக்கு மௌனமாய் வைதன.
"என்ன எதுக்கு பாத்து பாத்து திட்டிட்டு இருக்க..?"
"திட்டாம என்னடா பண்ணுவாங்க..எட்டு மணி ஆயிடுச்சு..வீட்டுக்கு போகாம ஆஃபீஸ கட்டிட்டு அழுதா என்ன தான் பண்ணுறது..?"
"இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு போய் என்ன பண்றது நா மட்டும்..? அதான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு பாக்கறேன்.."
"அப்போ சார் எதுக்கு இதுக்கு முன்ன சீக்கிரமா வீட்டுக்கு போனீங்களாம்..?"
"அது இசை இருப்பா..எனக்கும் போர் அடிக்காது..ஆனா இன்னிக்கி அவ வீட்ல இல்லல..அதான் வீட்டுக்கு போக போர் அடிக்கிது.." சலிப்பு இழையோடிய குரலில் கூறியவனை பேயறைந்தது போல் பார்த்திருந்தான்,தோழன்.
"அப்போ அரசி இல்லன்னா உனக்கு போர் எல்லாம் அடிக்குதா..?" ஏதோ அர்த்தத்தை தனக்குள் சுருட்டியிருந்த குரலில் தோழன் கேட்டிட பையனோ அதன் மாற்றுக் கருத்தை உணரும் நிலையில் இல்லை.இசையவளே நிகழை மொத்தமும் சொந்தமாக்கியிருந்தாள்.
"அஃப்கோர்ஸ் இசை இல்லன்னா எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.." அலட்டலின்றி பையன் சொல்ல தோழனின் பார்வையில் இன்னும் மாற்றமில்லை.
உயிர்த்தொடும்.
2024.09.10
யாழிசை 18(i)
இசையவளின் இதழ்களின் துளிர்த்திருந்த புன்னகையில் வார்த்தைகள் கொண்டு விளக்கிட முடியா பலநூறு அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.
தோழியவளின் எந்தவொரு கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லையென்றாலும் ஏனோ புன்னகை மட்டும் உருவெடுத்திருந்தது.
அவளுக்கு பையனின் மாற்றங்கள் புரிகிறது தான்..தெள்ளமாய் தெரிகிறிது தான்..ஆனாலும்,அந்த மாற்றத்தின் காரணம் காதலின் தோற்றம் என்று அவள் யோசித்ததே இல்லை;யோசிக்கவும் மாட்டாள்.
அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும்.உடன் யார் இருந்தாலும் இத்தனை அக்கறை காட்டி நடத்துவது அவனின் பழக்கம் என்றும் தெரியும்.
வீட்டினர் அவனை காயப்படுத்தியிருந்த பின்னும் அவர்களை யோசிக்கும் அவன் மனம் பற்றி அவள் அறியாததா என்ன..?
இன்னுமே அவன் தங்கையின் பாதுகாப்பை பற்றி அவன் கவனம் செலுத்தவது அவள் அறிந்த விடயமே.
யாழவனின் குணமே அப்படிப் பட்டது தான் என்ற கணிப்பில் இருப்பவளுக்கு அவன் தன்னுடன் இயல்பாய் உரையாடுவதை எல்லாம் வைத்துக் கொண்டு காதல் என்றெல்லாம் பிதற்றிட மனம் இடம் கொடுத்திடாது.
கடுகடுப்புடன் அக்கறை காட்டினாலும் சில நேரம் அவளுக்கே அது குழம்பிப் போகும்,ராமநாதன் இருப்பதால்.அவனின் அக்கறையை உணர்ந்தாலும் முழுதாய் தனக்கானது தான் என்று ஏற்றுக் கொண்டிட பெரும் நெருடல்.
கல்லுளி மங்கன் அவனும் ஏதேனும் உணர்வுகளை விழிகளை காட்டியிருந்தால் மகராசிக்கு அவள் மீதான அக்கறை என்று முழுதாய் நம்பிட எண்ணம் வந்திருக்க கூடும்.அவன் வேறு தான் பங்குக்கு அவளை படுத்தி எடுக்கிறானே.
அவனுடன் வாயடிக்கிறாள்..வம்பிழுக்கிறாள்..வாய் ஓயாமல் கதைக்கிறாள்..எல்லாம் நடக்கிறது தான், இருப்பினும் மன எண்ணங்கள் அவ்விடத்தில் பரிமாறப்படவில்லையே.அவன் வேறு தோழனாய் இருப்பதாகத் தான வாக்குக் கொடுத்தும் இருப்பது.அந்த தோழமை எண்ணத்தில் தான் இப்படி நடந்து கொள்ளக் கூடும் எனவும் வாதிடும் ஆழ் மனம்.
ஆயினும்,அவனின் செயல்களில் குழம்பிப் போய் விழித்தாலும் முற்றாய் அவன் வசம் இழுக்கப்படும் மனதுக்கே புரிவதில்லை,ஏன் இத்தனை தூரம் அவன் வசம் வீழ்கிறோம் என்பது.
இன்று காலையில் கூட பையன் தன்னுடன் விளையாடிச் சீண்டியது அவளுக்கு பெருத்த அதிர்வு தான்.அவள் இதுவரை கண்டிராத..
கண்டே இராத யாழவன் அல்லவா அது..?
பேரூந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவளுக்கு அது தலையை குழம்ப வைத்திட அந்த மனப்போராட்டத்தை தாள முடியாமல் தான் உறக்கத்தில் விழுந்ததே..?
இப்போது சற்று சமப்பட்ட மனதுடன் தெளிந்திருந்தவளின் சிந்தனயை மீண்டும் கலங்க வைத்திருந்தாள்,தாமரை.
மதிய நேரம் கடந்து தான்,பாவையவளுக்கு அழைப்பெடுத்திருந்தான்,பையன்.அவனின் பிடிவாதத்திற்கு அழைத்தே இருக்க மாட்டான் என்பது வேறு விடயம்.ஆனால்,அவளென்று வருகையில் அந்த பிடிவாதமும் கொஞ்சம் பிடிகொடுத்து தானே போகிறது..?
"ஹலோ.." கம்பீரமாய் அவன் குரல் அவள் செவியில் மோதினாலும் பையனின் மன உணர்வுகள் வேறு கதை கூறிக் கொண்டிருந்தன.
"ஹலோ சாரே..என்ன பண்றீங்க..?" மாற்றமில்லா தொனியில் அவள் கேட்டது இவன் அகத்தில் ஏன் மாற்றிட முடியா அளவு மாற்றங்களை உண்டு பண்ணிட வேண்டும்..?
அவளின் செவி வழி நுழைந்த குரல்,புத்தி கிரகிக்கும் முன்னமே மனதை துளைத்துச் சென்று அவளின் இதயத் துடிப்பை வேகமெடுத்திட வைத்ததே.
அக்மார்க் மேனரிசமாய் பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனுக்கோ அவளின் குரலில் சிலிர்த்தடங்கிய தேகத்தை இன்னும் நம்பிட முடியவில்லை.அப்படியே புத்தி மரத்துப் போக பேச்சற்று நின்றான்,பையன்.
"சாரே என்ன லைன்ல இருக்கீங்களா..?"
"ம்ம்..ஆஃபீஸ்ல இருக்கேன்.." மாறா குரல் தொனியில் பதில் மொழிந்தவனோ வலக்கரத்தை இடது நெஞ்சின் அழுத்தி வைத்திருக்க விரல்கள் உணர்ந்து கொண்டன,அவனிதயம் எடுத்திருக்கும் வேகத்தை.
"ஓஹ் அப்டியா..? நாங்க இப்போ தான் ஊருக்கு போற ரூட்கே வந்துருக்கோம்..இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு போய்ரலாம்னு சொன்னாங்க..இப்போ சாப்பட்றதுக்காக தான் வண்டிய நிறுத்தி வச்சிருக்காங்க..ஆமா நீங்க சாப்டீங்களா..?"
"ம்ம் சாப்டுடேன்.." கூறியவனின் விழிகளோ மேசையின் மீதிருந்த பிரிக்கப்படா உணவுப் பொதியை தொட்டு மீண்டன.
"என்ன நீ இல்லாம நா சாப்ட மாட்டேன்னு நெனச்சியா..?" அவளின் அருகின்மை தனக்குள் எந்த வித வெறுமையையும் தோற்றுவித்திடவில்லை என்று பாவையவளுக்கு உணர்த்தும் முனைப்பில் கூறிட அதற்கெல்லாம் அசரும் ரகமா அவள்..?
அவனையே பாடாய்ப் படுத்தும் பெண் அவள்.அவளிடம் இப்படி ஒரு கேள்வியை அவன் யோசித்து தான் கேட்டிருக்க வேண்டுமோ..?
"எதே நா எங்க அப்டி நெனச்சேன்..? நா இல்லாம நீங்க சாப்ட மாட்டீங்கன்னு..நானே அப்டி இல்ல..நீங்க பக்கத்துல இல்லன்னாலும் என் பசிக்கு நா சாப்டுவேன்..இதுல நா எப்டி பாஸ் எதிர்பாக்கறது..?"
"லவ்வு லவ்வுன்னு சொல்ற..ஆனா நீ பண்றதெல்லாம் அதுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாம தான இருக்கே.."
"லவ்வு தான்..ஆனா அத நீங்க தான் மறக்க சொல்லிட்டீங்க..ஆனாலும் லவ்வுங்குறதுக்காக நீங்க பக்கத்துல இல்லன்னு என்னால சாப்டாம இருக்க முடியுமா..?அப்டி இருந்தா உங்கள லவ் பண்ணதுக்கு நா மெலிஞ்சு எலும்புக்கூடா தான் மாறி இருக்கனும்.."
"அப்போ என்ன லவ் பண்ணது தப்புன்னு சொல்லாம சொல்ற..?"
"யோவ்வ்வ்வ்..நா எங்கய்யா அப்டி சொன்னேன்..நீ தான் லவ்வுன்னா தப்பு..அதுவும் என்ன லவ் பண்றது மகா தப்பு..காவி வேஷ்டி கட்டிகிட்டு நா சாமியாராக போறேன்னு டயலாக் விட்டுட்டு இருந்த..பசின்னா சாப்டுவேன்னு சொன்னதுக்கு என் மேல பழிய திருப்பி விட்ற.." சத்தியமாய் அவளுக்கு கோபம் வந்து விட்டது.
அவள் காதலை குற்றம் சொல்ல அவனுக்குமே அவள் மனம் இடம் கொடுத்திடாது.இத்தனை நாள் அவனின் அறிவுரைகளை எல்லாம் சலிப்புடன் பொறுத்துக் கொண்டாள்.கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாய் இருந்தாள்.
ஆனால்,இப்போது அவன் விளையாட்டுக்கென கூறியதும் ஏனோ பொங்கி விட்டாள்.
அவள் காதல் அப்படித் தான்..
அவன் மீதான அவள் காதல் அப்படித் தான்..
அவனிடம் கூட விட்டுக்கொடுக்கத் தெரியா அவனின் மீதான அவள் காதல் அப்படியே தான்..
பையனுக்கு ஏனோ அவளின் படபடபேச்சும் அந்த வார்த்தைகள் கொண்டிருந்த ஆயிரமாயிரம் பெரிய அர்த்தங்களும் உள்ளிறங்கி ஆழத்தை ஆட்படுத்தியது.அவளின் வார்த்தைகள் அவளின் காதலை பறைசாற்றுவது போல்.
கோபத்தில் கூட அவன் மீதான காதலைக் காட்டிட அவளால் மட்டும் எப்படித் தான் முடிகிறதோ என்று வியந்து நின்றாலும் பேச்சை திசை திருப்பவே விரும்பினான்,பையன்.இன்னும் எத்தனை தூரத்துக்கு தான் தன்னை ஆட்டுவிப்பாள் என்று பயந்து விட்டான்,போலும்.
"சரி சும்மா கோவப்படாத..நீ சாப்டியா என்ன..?" தன்மையாய் வந்து விழுந்த வார்த்தைகளில் அவளும் அடங்கி நின்றாள்.அவளுமே அவன் உடனே இறங்கி வருவான் என்று நினைத்திருக்கவில்லை.
"ம்ஹும் இன்னும் இல்ல..இதுக்கப்றம் தான் சாப்டனும்..லேட்டாகாம வீட்டுக்கு சீக்ரமா போங்க..மாமா மட்டும் தனியா வீட்ல இருப்பாரு.."
"ம்ம்.." அவளின் கட்டளை போன்ற கூற்றுக்கு அவன் எந்த வித மறுப்பும் தெரிவிக்காது போனதை கவனிக்கவில்லை,அவள்.
"சரி சாரே..சாப்ட கூப்பட்றாங்க..நா அப்றமா பேசறேன்.."
"ம்ம்.." என்றிட அவள் அழைப்பை துண்டித்த பின்னும் அவன் இன்னும் தன்னியல்புக்கு வந்திடவில்லை.
இங்கு தாமரைக்கு நெஞ்சு வலி வராத குறை தான்.பையனை அவள் சராமாறியாய் திட்டியது அதிர்வென்றால் அதற்கு அவன் தன்மையாய் பதில் சொல்வது மெதுவாய் செவியை உரசியிருக்க அது இன்னுமும் அதிர்வே.
"என்ன அவரு இவ கிட்ட திட்டு வாங்கிட்டு பேசாம இருக்காரு..இவ என்னன்னா மொத்தமா அவர குத்தகக்கி எடுத்த மாதிரி திட்டி கிட்டு இருக்கா..ஒன்னுமே புரியலயே.." சித்தம் கலங்கிப் போய் பாவையவளைப் பார்த்திட அவளோ அலைபேசியில் தெரிந்த பையனின் புகைப்பத்தை வெடு ரசனையுடன் பார்வையால் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தாள்,சுற்றம் மறந்து.
பையனின் மனமோ ஒரு நிலையில் இல்லை.அவள் எதையும் காட்டிக் கொள்ளாது இயல்பாய் பேசியது,பையனின் மனதுக்குள் சிறு சுணக்கத்தை ஏனென்றில்லாமல் விதைத்து விட்டிருக்க "ப்ச்ச்ச்" சலிப்பாய் உச்சுக் கொட்டினான்,அவன்.
மனதின் மாற்றங்கள் மெல்லப் புரிந்தாலும் அதை உணர மறுப்பவனின் மறுப்பில் அவை அப்படியே உள்ளுக்குள் மடங்கி போயிற்று.மடங்கிப் போனாலும் மரித்துப் போயிருக்கவில்லை என்பது சத்தியமான உண்மை.
இன்னும் அவள் மீது காதல் வந்திருக்கிறதா என்பதில் சந்தேகம் தான்.இருப்பினும் அது கூட அவனுக்கு அழகே.
உணர்ந்தும் உணராமலும் புரிந்தும் புரியாமலும் தவிக்கும் அழகிய இம்சையால் அவள் பாராபட்சமின்றி அவனை வதம் செய்து கொண்டிருக்க மெதுமெதுவாய் கரைந்தோடுகிறது,அவனின் கர்வமும் அழுத்தமும் இறுக்கமும்.
யார் மீதும் மீண்டும் காதல் வராது என்ற இறுமாப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவனின் இறுக்கத்தை அவள் நேசம் மெதுவாய் அவனே அறியாது உடைத்துக் கொண்டிருக்க அதை உணரும் நிலையில் ஏற்றுக் கொள்வானா பிடிவாதக்காரன்..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
அவளை அவனுடன் தங்க அழைத்த போதில் இருந்து ஐந்தரை மணியானதுமே அலுவலகத்தில் இருந்து அவளை அழைத்துச் செல்வது அவனுக்கு வாடிக்கையாய் மாறிப் போயிருக்க அரவிந்துக்கும் அது அத்தனை நிம்மதியைத் தந்திற்று.
முன்னைய நாட்களில் இரவு பத்து மணி வரை அலுவலகத்தில் தரிப்பவனை வீட்டுக்கு போகச் சொன்னால் கேட்கவும் மாட்டான்.அரவிந்துக்கோ அவனை தனியாக விட்டுச் செல்லவும் மனம் வராது.அதனாலோ என்னமோ இப்போது சீக்கிரமாக வீடு செல்வது அவனுக்கு அத்தனை நிம்மதி.
இன்றும் அப்படித் தான்.
ஐந்தரை மணிக்கு போல் தோழனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என வந்தவனுக்கு மடிக்கணினியில் மூழ்கியிருந்த தோழனைக் கண்டதும் ஐயோவென்றானது உண்மை.
"என்ன இவன் இன்னிக்கி வீட்டுக்கு போகமா இருக்கான்..?" யோசனையுடன் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அரவம் உணர்ந்தவனுக்குத் தெரியுமே வந்திருப்பது யார் என்பது.
"என்ன அரவிந்த்..?"
"என்ன வேந்தா..? ஐஞ்சர மணி ஆயிடுச்சு இன்னும் வீட்டுக்கு போகாம இருக்க..தங்கச்சிய கூட்டிட்டு போனும்ல.."
"உன் தங்கச்சி இன்னிக்கி டூர் போயிருக்கா.."
"அத எதுக்குடா இவ்ளோ கடுப்போட சொல்லனும்..? நீ எப்ப பாரு அந்த பொண்ண திட்டிட்டே இருப்ப..உனக்கு சரியாப் பாத்தா அந்த பொண்ணோட லவ் டார்ச்சர் இல்லன்னு சந்தோஷம் தான வரனும்..?" நாடி தட்டிய படி தன்பாட்டில் பிதற்றியவனுக்கு தோழனின் மனநிலையை கணித்துக் கொள்ளத் தான் முடியவில்லை.
"நா எப்ப டார்ச்சர் சொன்னேன்..?" விழிகளிலும் கடுகடுப்பைக் காட்டி கேட்டவனுக்கு ஏனோ எக்கச்சக்கமாய் கோபம் வந்தது.
முகத்தில் கோப ரேகைகள் படரவிட்டு ஏதோ ஒரு வெறுமையைத் தாங்கிய விழிகளுடன் உறுத்து விழித்த படி அமர்ந்திருந்த தோழனை புதிதாய்ப் பார்த்தான்,அரவிந்த்.
அவனின் தோழன் வேந்தன் இப்படியெல்லாம் நடந்து கொள்பவன் அல்லவே.பையனின் பெரும் பலமே உணர்வு காட்டாத வதனமும் கோபத்தின் போது கையாளும் நிதானமும் தான்.
பையனுக்கோ கோபம் உச்சிக்கு ஏறி நின்றாலும் அதை விட ஒரு படி அதிகமாய் நிச்சயம் நிதானம் இருக்கும்.கட்டுப்படுத்த இயலா கோபம் வந்தாலும் அந்த நிதானத்தை ஒருபோதும் கை விட்டதில்லை அவன்.
இசைவளால் யாழவனின் மெல்ல மெல்ல மாற்றங்கள்,அவனின் இயல்புகளை மறக்கடித்து.யாழின் இசை அல்லவா அவள்..?
யாழின் இசையாய் மாறி அவனின் உயிர்த்தொட்டுக் கொண்டிருப்பவள் அவனை மாற்றாது இருந்தால் தானே அதிர வேண்டும்..?
"என்ன இவன் இப்டி கடுப்படிக்கிறான்..காப்பாத்து சாமி.." மானசீகமாய் கடவுளிடம் பேசியவனோ எதுவும் பேசாது பையனின் அருகிலேயே அமர்ந்து கொண்டிட அதன் பின் அங்கு மௌனத்தின் ஓசை.
இரவு எட்டு மணியைக் கடந்திருந்தது.
அரவிந்தோ அலைபேசியில் மூழ்கியிருந்தாலும் அடிக்கடி விழிகள் வேலையில் ஆழ்ந்திருந்த தோழனை தொட்டிட இதழ்களோ அவனுக்கு மௌனமாய் வைதன.
"என்ன எதுக்கு பாத்து பாத்து திட்டிட்டு இருக்க..?"
"திட்டாம என்னடா பண்ணுவாங்க..எட்டு மணி ஆயிடுச்சு..வீட்டுக்கு போகாம ஆஃபீஸ கட்டிட்டு அழுதா என்ன தான் பண்ணுறது..?"
"இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு போய் என்ன பண்றது நா மட்டும்..? அதான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு பாக்கறேன்.."
"அப்போ சார் எதுக்கு இதுக்கு முன்ன சீக்கிரமா வீட்டுக்கு போனீங்களாம்..?"
"அது இசை இருப்பா..எனக்கும் போர் அடிக்காது..ஆனா இன்னிக்கி அவ வீட்ல இல்லல..அதான் வீட்டுக்கு போக போர் அடிக்கிது.." சலிப்பு இழையோடிய குரலில் கூறியவனை பேயறைந்தது போல் பார்த்திருந்தான்,தோழன்.
"அப்போ அரசி இல்லன்னா உனக்கு போர் எல்லாம் அடிக்குதா..?" ஏதோ அர்த்தத்தை தனக்குள் சுருட்டியிருந்த குரலில் தோழன் கேட்டிட பையனோ அதன் மாற்றுக் கருத்தை உணரும் நிலையில் இல்லை.இசையவளே நிகழை மொத்தமும் சொந்தமாக்கியிருந்தாள்.
"அஃப்கோர்ஸ் இசை இல்லன்னா எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.." அலட்டலின்றி பையன் சொல்ல தோழனின் பார்வையில் இன்னும் மாற்றமில்லை.
உயிர்த்தொடும்.
2024.09.10