யாழின் இசையாய்..
யாழிசை 13(i)
அமர்த்தலான பார்வையுடன் கரத்தை குலுக்கியவனைப் பார்த்தவளுக்கு ஏதோ நிறைவு உண்டானது போல்.
அவளொன்றும் மனமுவந்து பையனிடம் அவனை மறப்பதாய் வாக்குக் கொடுத்திடவில்லை.என்ன நடந்தாலும் அவனை விடுத்து வேறொருத்தரை மனதால் நினைப்பது கூட அவளால் இயலாத காரியம்.
அவளுக்கு அவனை மாற்ற வேண்டும்.மொத்தமாய் மாற்றி அவனுக்கு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்படி அவனை மாற்றிட வேண்டுமென்றால் அவனோடு நெருங்கிப் பழக வேண்டும்.இத்தனை நாள் காத்திருப்பின் பலனாய் இந்த சந்தர்ப்பம் கிடைத்திட அதனை முழுதாய் தன் வசப்படுத்திக் கொள்ள முனைந்தாள்,பாவையவள்.
அவனுக்கென மட்டுமே இல்லாத தைரியத்தை வரழைத்துக் கொண்டு பையனிடம் பேசிட அது சரியாகியும் நின்றது.மாற்றம் ஒன்றை உருவாக்கிடும் முன் காரணமானவரிலும் ஏதேனும் மாற்றம் உண்டாகிட வேண்டும் என்பது தானே நியதி.
துளிர்த்திடும் மாற்றங்கள் கூட துளிர்த்திட்ட சில மாற்றங்களுக்கான எதிர்வினை தானே!
அப்படி ஒன்று நடந்தேறிய பின் அவன் அவளை மீள காதலிக்கா விட்டாலும் அவளுக்கு அது பிரச்சினையேயில்லை.
ஏன் வேறு யாரின் மீது அவனுக்கு காதல் துளிர்த்தாலும் கவலையுமில்லை.
மனதோரம் வலிக்கும் தான்.அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை தான்.ஆனாலும் கடந்திடுவாள்,
அவனுக்காக..
அவனுக்கென..
அவனுக்கென மட்டும்..
அவனின் நினைவுகளுடன்.. கடந்திடுவாள் நிகழில் அவனின் அத்தியாயத்தை,அவனின் நினைவுகளை இறுகப்பற்றிக் கொண்டே.
ஒரு வேளை அவனுக்கு யார் மீதும் காதல் வராது போனாலும் அவள் மீதும் காதல் தோன்றாதிருந்தாலும் அவனுக்கும் சேர்த்து அவளே காதலித்துக் கொண்டு வாழ்ந்து விடுவாள்,அருகில் இருந்தோ..
தொலைவாகச் சென்றோ..
அவளுக்கு அவன் மாற வேண்டும்.அவன் கூட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.வரமென வந்த வாழ்வை இரசித்திட வேண்டும்.அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகித் தான் இருந்தாள்.ஏன் அவளின் காதலைக் கூட விட்டுக் கொடுக்கச் சென்னால் அதைச் செய்வதிலும் அவளுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.
அவன் தன் கவலை மறந்து வாழ்க்கையை நிம்மதியாய் வாழ வேண்டும்.அவ்வளவு தான் அவளின் மன எண்ணம்.
அவன் மீதான ஆழமான காதல் தான்.அந்தக் காதலில் அவள் அவளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பையும் சுமந்திடாதது தான் அவள் காதலின் தனித்துவம்.பையனை மட்டுமே சுற்றி வந்து அவனுக்கென மட்டுமே யோசித்திடும் அந்தக் காதலின் சுயநலம் கூட கொஞ்சம் அழகாய்த் தான் தெரிகிறது.
"உன் லவ் மேல அவ்ளோ நம்பிக்கயா உனக்கு..? இவ்ளோ நாள் இல்லாம இப்டி ரெண்டு மாசம் உன் கூட பழகறதனால பெருசா என்ன நடந்துடப் போகுது..?" புருவமுயர்த்தி கேட்டிட அவளிதழ்களில் புன்முறுவல் படர்ந்தது.
தன் மீது நேசம் துளிர்த்து பெருமரமாய் விரியும் என்றெல்லாம் அவள் நினைத்திடவில்லை.அவனை ஏதோ மாற்றிட முயலும் அது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது.
அவள் காதலின் ஆழத்தை உரித்தானவனாலே தெரிந்து கொள்ள முடியாதிருக்கும் பட்சத்தில் அவள் உணர்ந்து எங்கனம் தன் காதலின் மீது நம்பிக்கை வைத்திட..?
"ரெண்டு மாசம் இருக்கு என்ன வேணுன்னாலும் நடக்கலாம்.." பெரிதாய் நம்பிக்கை எதுவுமின்றி மெல்லிய குரலில் மொழிந்தவளுக்கு அவனுக்கு தன் மீது நேசம் உருப்பெறாவிடினும் பரவாயில்லை,அவனை மொத்தமாய் மாற்றி விட்டால் போதுமென்கின்ற எண்ணம் தான்.
வாழ்ந்து வாழ வைத்திடும் காதல்கள் அழகென்றால் மடிந்தும் வாழ வைத்திடும் காதல்கள் பேரழகு தானே!அவள் காதலும் அப்படித்தான்!
தான் மடிந்தாலும் பரவாயில்லை,அவன் வாழ்ந்தால் போதுமென்பது மட்டுமே அவள் காதலின் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பு.
"இப்போவே உன்னோட மனசு தேத்தி வச்சுக்கோ இசை..என்ன நடந்தாலும் நாம ரெண்டு பேரும் டைவோர்ஸ் வாங்கப் போறது கன்ஃபார்ம்..மறக்காம ஞாபகம் வச்சிக்க.." தீர்க்கமாய் உறுதியாய் கூறியவனுக்கு அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை என்றாலும் தற்சமயம் பாவையவளின் எண்ணம் என்னவென்று தான் கணிக்க இயலாமல் போனது,பையனால்.
என்ன தான் பாவையவள் சவால் விட்டாலும் அவள் விழிகளில் அவள் காதல் மீதான உறுதியை அவன் காணவில்லை.தன்னை காதலிக்க வைத்து விடலாம் என்கின்ற உறுதி அவளுக்குள்ளும் இல்லை என்பது போல் தான் தோன்றிற்று,பையனின் மனதில்.
"இவ எதுக்கு இப்டி பண்றா..?" மௌனமாய் யோசித்து ஆழமான பார்வையொன்றை வீசி விட்டு அறையில் இருந்து வெளியேறிட நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்,இசையவள்.
பையனோ உடை மாற்றிக் கொண்டு வர வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்தனர்,இருவரும்.
பையனோ இத்தனை நாள் மனதை அழுத்திக் கொண்டிருந்த குழப்பம் முழுவதும் நீங்கப் பெற்றிருந்ததால் சற்று நிமிர்வாய்த் தான் தெரிந்தான்.
இசையவளோ அவனை ஓரப்பார்வையால் உரசிக் கொண்டே வர ஒரு கட்டத்தில் அவனுக்குமே கோபம் வந்து விட்டது.
முன்பும் இப்படி கடைவிழி உரசல்கள் அவளிடமிருந்து கிடைக்கப் பெற்றாலும் தான் ஓரவிழியில் முறைப்பை படரவிட்டாலே பம்மிக் கொண்டு பயந்து நிற்பாள்,பாவையவள்.
இப்போது முறைத்தாலும் அவள் கண்டு கொள்ளாதது சிறு கோபத்தை கிளப்பி விட்டது.
"எதுக்கு இப்டி ஓரக்கண்ணலா பாக்கற..?"
"ஆங்..நா பாக்கவே இல்லியே.." பதறிய குரலில் கூறிக் கொண்டு விழிகளை தாழ்த்தியவளை கடுமையோடு சாடின,பையனின் விழிகள்.
"என்ன பாக்கலன்னு பொய்யெல்லாம் சொல்ற..? நீ பாத்தத நா பாத்தேன்..பாக்கலனு சொல்லு பாக்கலாம்.."
"சாரே நம்ம டீல் ஞாபகம் இருக்குல..இப்போ நா உங்க ப்ரெண்ட்..உங்க ப்ரெண்ட் இப்டி பாத்தா நீங்க திட்டுவீங்களா..?" கேட்டவளுக்கும் தன்னுள் இருக்கும் பயமும் பதட்டமும் எங்கு போனதன்றே தெரியவில்லை.
பையன் தன்னிடம் தோழமைக் கரம் நீட்டி விட்டதால் உண்டாகிய நிமிர்வா..?
அவனை மாற்றிய தீர வேண்டும் என முனைப்புடன் சுற்றுவதால் எழுந்திட்ட ஆர்வமா..?
பையன் அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலைத் தான் எதிர்பார்த்திருப்பான் போலும்.இரு புறமும் தலையாட்டி இதழ் குவித்து ஊதிக் கொண்டவனோ பதிலேதும் பேசாமல் முன்னே நடந்திட அவளுக்கும் அவனின் அமைதியில் கிலி பிடித்து பரவி நிற்க தானாய் வேறு புறம் தாவின,அவள் விழிகள்.
●●●●●●●●
"இவங்க எதுக்கு எப்போ என்ன பாத்தாலும் மொறச்சிகிட்டே இருக்காங்க..முன்ன பின்ன நா இவங்கள பாத்ததும் இல்ல..ஆனா எதுக்கு இப்டி பண்றாங்கன்னு தெரிலியே..அவங்க உங்க ப்ரெண்ட் தான..என்னன்னு நார்மலா கேக்கற மாதிரி கேட்டு சொல்றீங்களா..? இது வர யாரும் என் கிட்ட மொகத்த திருப்பி கிட்டு நடந்தது இல்ல..அதான் ஒரு மாதிரி இருக்கு.."உணவைப் பிசைந்த படி அடுத்த மேசையில் அமர்ந்து உணவில் கவனமாகி இருந்த பாவையவளை பார்த்துக் கொண்டு யாழினி சொல்ல கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு புரையேற மட்டுந்தான் இல்லை.
இன்று தற்செயலாய் யாழினியின் அருகே அமர்ந்தவளோ அவளிடம் சாதாரணமாய் பேசத் துவங்கிட அவளின் பேச்சுக்கு செவிசாய்த்தாலும் யாழினியின் விழிகள் சுற்றி வந்தது என்னவோ,இசையவளைத் தான்.
"அண்ணன் அடிக்க வேண்டிய சைட்ட தங்கச்சி அடிக்கிதோ..?" அவளின் பார்வை அடிக்கடி படிவதும் மீள்வதுமாய் இருக்க அதைக் கண்டு கொண்டவளின் மனசாட்சி இப்படி நினைக்காது இருந்தால் தான் அதிசயம்.
"என்ன தாமர நா இவ்ளோ சொல்றேன்..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க..? ஏன் உங்க கிட்ட அவங்க நார்மலா தான இருக்காங்க.." தன்பாட்டில் கூறியவளுக்கு தெரியாது,தான் கதைத்துக் கொண்டிருப்பது பாவையவளின் உயிர்த்தோழியுடன் என்பது.
"நா என்னன்னு மெதுவா விசாரிச்சு பாக்கறேன் யாழினி..இப்போ ரெண்டு நாளா கொஞ்சம் பிஸியா இருக்குறதனால அரசி கூட அவ்ளவா பேச டைம் இருக்கல..நா கண்டிப்பா கேட்டு சொல்றேன்.."
அந்த சமயத்தில் யாழினியை சமாளித்தவளுக்கு அவளிடமும் சுமூகமாக அனுசரித்து செல்ல வேண்டிய நிலைமை அல்லவா..?
உணவை முடித்து எழுந்தவளோ காலையில் பையனுடன் நடந்த சம்பாஷணைகள் இரசனையுடன் மீட்டிய படி இதழில் உறைந்த முறுவலுடன் கரங்களை கழுவிக் கொண்டிருக்க அவ்விடம் வந்த நான்கைந்து பேரும் இசையவளை விசித்திரமாய்த் தான் பார்த்து வைத்தனர்.
அவளுக்கோ பையன் தன்னுடன் தோழனாய் பழக ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்த மகிழ்வும் நிம்மதியும் ஒரு வித மோன நிலையை கொடுத்திட வழமைக்கு மாறாய் விகசிக்கும் வதனமும் மின்னும் விழிகளுமாய்த் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்,பாவையவளும்.
"அரசி தண்ணிய தெறந்து விட்டுட்டு கனவு காணாம இங்க வா.." உடன் பணிபுரியும் தோழியொருத்தி பிடித்து தன் புறம் இழுத்து வைத்ததுமே அவள் சிந்தை கலைந்தது.
இன்னும் கரத்தை கூட முற்றாக கழுவத் தவறி போயிருக்க அதைக் கழுவிக் கொண்டே நகர்ந்திருந்தாள்,ஈரடி.
"என்னடி இது என்னக்கும் இல்லாம இன்னிக்கி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்க..?" சுற்றி நின்ற நான்கைந்து பேரும் கேட்டுக் கொண்டே அவளை கலாய்த்து சிரித்திட அவளோ முறைத்துக் கொண்டே நகர்ந்திருந்தாள்,அவ்விடம் விட்டு.
"நம்ம மொகர மட்டும் எதுக்கு இப்டி கண்ணாடி மாதிரி இருக்கோ தெரியல.." தனக்குத் தானே திட்டிக் கொண்டு நடந்தவளோ முரளிக்கு எதிர்ப்பட அவனும் சிறு புன்னகையுடன் அவளை தாண்டிச் செல்ல பாவையவளுக்கு மண்டை குழம்பியது.
"ஆளாளுக்கு எதுக்கு தான் நம்மள பாத்து சிரிக்கிறாங்களே..அதுவும் இந்த முரளி என்னக்கு இல்லாம உலக அதிசயமா பாத்து சிரிக்கிறாரு.." தலையில் அடித்துக் கொண்டு வந்தவளின் செயலில் புதிதாய்த் தான் இருந்தது,தாமரைக்கும்.
அலுவலக நேரம் முடிந்திருக்க வழமையாக அலுவலக வளாகத்தினுள் இருப்பவள் இப்போதெல்லாம் பாதையை கடந்து வந்து அங்கிருக்கும் பேரூந்து நிறுத்தத்தில் தரிக்கத் துவங்கி இருந்தாள்,பையன் யாழினியை பார்த்திடக் கூடாது என்பதற்காக.
மழைக்கு குடையும் இன்றிப் போக கொட்டும் மழையில் பாதம் வைத்து வந்தவளோ கொஞ்சம் நனைந்து போயிருக்க தேகத்தைச் சுற்றி துப்பட்டாவை போர்த்திக் கொண்டு நின்றிருந்தவளுக்கு தெரியாமல் இல்லை,மழையும் அதன் குளிரும் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது.
பையனின் வரவிற்காக காத்திருக்கும் போதும் சரிவாய் வீசிய சாரல் அவளை நனைத்துச் சென்றிட இன்னுமே தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்,பாவையவள்.
மொத்தமாய் ஐந்து நிமிடங்கள் கடந்த பின் அவளின் முன்னே வந்து நின்றது,பையனின் வண்டி.தூரத்தில் இருக்கும் போதே அவள் நிற்பதை இனங்காண முடிந்திருந்தது,அவனால்.
அவளோ நனைந்து கொண்டு வரப்பார்த்திட கையமர்த்தி சைகை செய்தவனோ காரில் இருந்து இறங்கி வந்து நனைந்து கொண்டே குடையொன்றை நீட்டிட
முறைப்புடன் வாங்கிக் கொண்டாள்,அவள்.
குடையைப் ப பிடித்துக் கொண்டே மறுபுறம் வந்து அவள் ஏறிட முன்னே பையன் வண்டிக்குள் நுழைந்து வண்டியை இயக்கியிருக்க இருக்கையில் அமர ஒரு கணம் யோசித்தவளை பையனின் அழுத்தமான பார்வை அப்படியே அமரச் செய்தது.
இருக்கையின் ஒரு ஓரமாய் ஒன்றிப் போய் உட்கார்ந்து இருந்தவளுக்கு இருக்கை நனைந்து விடுமோ என்கின்ற பயம்.அதை விட குற்றவுணர்ச்சி.
"சீட் ஒன்னும் ஆகாது..நார்மலா உக்காரு.." அவளின் மனதை படித்தவனோ அதட்டலான குரலில் மொழிய அப்போதும் அசையவில்லை,அவள்.
"ஒழுங்கா உக்கார சொல்றேன்ல.." வண்டியைக் கிளப்பாது அவன் மீண்டும் எச்சரித்திட அதில் பயந்தவளோ சரியாய் அமர்ந்து கொண்டான்,கொஞ்சம் அசைந்து.
வழி எங்கும் மௌனத்தின் அலைவரிசை.அவனுடன் பேசுவதற்கு உரிமையும் தந்து விட்டான் தான்.இருப்பினும் ஏதோ தயக்கம்.
அவ்வப்போது அவளின் தைரியம் எட்டிப் பார்த்தாலும் ஒரே நாளில் அவளின் மொத்த பயத்தையும் களைவது அத்தனை சுலபமான விடயம் அல்லவே.
அலுவலகத்தில் நிலவிய ஏசியின் குளிரோடு சேர்த்து மழையில் நனைந்ததும் தன் வினையை காட்டத் தொடங்கிட அவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.இடைக்கிடை தும்மல் வேறு.
இருக்கையில் சாய்ந்து தலைசாய்த்து விழி மூடிக் கொண்டவளுக்கோ அடிக்கடி தும்மல் வந்து கொண்டேயிருக்க அவனுக்கும் மனம் பிசைந்தது.
அவள் அந்த மழையில் நனைந்து கொண்டு வந்து பேரூந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றது அவன் யாழினியை கண்டு காயப்படக் கூடாது என்பதற்காகத் தான் என்று பையனுக்கு நன்றாகவே தெரியும்.
வண்டியில் ஏறிக் கொண்டவுடன் கிளப்பச் சொல்லி பரபரக்கும் அவளின் வேகமும் அங்குமிங்கும் அசைந்து ஆசுவாசப் பெருமூச்சை விடும் அவளின் செயலும் அதை அவனுக்கு இரு நாட்களிலேயே கூறிப் போயின.
"எதுக்கு மழைல நனஞ்சிட்டு வந்து பஸ் ஸ்டாப்ல நின்ன..? உன் ஆஃபீஸ்ல எடம் இருக்கு தான.."
"அ..அது நாம ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்னு யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னீங்கல..அதுக்கு தான்.."
"அன்னிக்கி எல்லாம் கேட் கிட்ட தான வந்து நின்ன..? அங்கயும் மழக்கி ஒதுங்கி நிக்க எடம் இருக்கு தான..?" இத்தனை பொறுமையாய் துருவிக் கேள்வி கேட்பது எல்லாம் பையனின் அகராதியில் இல்லாத விடயங்கள்.
அவளுக்கென அவனைக் கேளாமல் அவனறியாமல் நடந்தேறிக் கொண்டிருந்தன.
அவளால் அவன் அகராதியில் கொஞ்சம் மாற்றங்களோ என்னவோ..?
"அ..அது இன்னிக்க வந்து நிக்கனும்னு தோணுச்சு சாரே.." விட்டு விடேன் எனும் பாவனையில் மொழிந்தவளுக்கு மீண்டும் தும்மல் வரத் துவங்கிட விழி மூடியிருந்தவளை அழுத்தமாய் தொட்டு மீண்டன,அவளின் விழிகள்.
உனக்காகத் தான் செய்தேன் என்று தைரியமாய் போட்டுடைத்து ஒப்புக் கொண்டாலும் அவனுக்குள் இத்தனை குற்றவுணர்ச்சியும் கனமும் உண்டாகியிருக்காதோ என்னவோ..?
அவள் தன்னை காதலிக்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் ஒரு போதும் அவள் அதை சொல்லியதேயில்லை.
அறிந்தோ அறியாமலோ இயல்பாய் நடந்தேறும் அவளின் செயல்கள் எல்லாம் அவன் மீதான நேசத்தை தெள்ளத் தெளிவாய் விளக்கிக் காட்டிட ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோ ஆகிடுவது நிஜம்.
ஒவ்வொரு நொடியும் அவனுக்கான காதலை சத்தமின்றி உணர்த்திச் செல்லும் அவள் புதிராய்த் தோன்றினான்,பையனுக்கு.
யாழவனின் இறுக்கங்களையும் அழுத்தங்களையும் தாண்டி இசையவளின் காதல் அவனின் உயிர்த்தொடும் மாயம் பையன் அறியவில்லை.
உயிர்த்தொடும்.
2024.09.05
யாழிசை 13(i)
அமர்த்தலான பார்வையுடன் கரத்தை குலுக்கியவனைப் பார்த்தவளுக்கு ஏதோ நிறைவு உண்டானது போல்.
அவளொன்றும் மனமுவந்து பையனிடம் அவனை மறப்பதாய் வாக்குக் கொடுத்திடவில்லை.என்ன நடந்தாலும் அவனை விடுத்து வேறொருத்தரை மனதால் நினைப்பது கூட அவளால் இயலாத காரியம்.
அவளுக்கு அவனை மாற்ற வேண்டும்.மொத்தமாய் மாற்றி அவனுக்கு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்படி அவனை மாற்றிட வேண்டுமென்றால் அவனோடு நெருங்கிப் பழக வேண்டும்.இத்தனை நாள் காத்திருப்பின் பலனாய் இந்த சந்தர்ப்பம் கிடைத்திட அதனை முழுதாய் தன் வசப்படுத்திக் கொள்ள முனைந்தாள்,பாவையவள்.
அவனுக்கென மட்டுமே இல்லாத தைரியத்தை வரழைத்துக் கொண்டு பையனிடம் பேசிட அது சரியாகியும் நின்றது.மாற்றம் ஒன்றை உருவாக்கிடும் முன் காரணமானவரிலும் ஏதேனும் மாற்றம் உண்டாகிட வேண்டும் என்பது தானே நியதி.
துளிர்த்திடும் மாற்றங்கள் கூட துளிர்த்திட்ட சில மாற்றங்களுக்கான எதிர்வினை தானே!
அப்படி ஒன்று நடந்தேறிய பின் அவன் அவளை மீள காதலிக்கா விட்டாலும் அவளுக்கு அது பிரச்சினையேயில்லை.
ஏன் வேறு யாரின் மீது அவனுக்கு காதல் துளிர்த்தாலும் கவலையுமில்லை.
மனதோரம் வலிக்கும் தான்.அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை தான்.ஆனாலும் கடந்திடுவாள்,
அவனுக்காக..
அவனுக்கென..
அவனுக்கென மட்டும்..
அவனின் நினைவுகளுடன்.. கடந்திடுவாள் நிகழில் அவனின் அத்தியாயத்தை,அவனின் நினைவுகளை இறுகப்பற்றிக் கொண்டே.
ஒரு வேளை அவனுக்கு யார் மீதும் காதல் வராது போனாலும் அவள் மீதும் காதல் தோன்றாதிருந்தாலும் அவனுக்கும் சேர்த்து அவளே காதலித்துக் கொண்டு வாழ்ந்து விடுவாள்,அருகில் இருந்தோ..
தொலைவாகச் சென்றோ..
அவளுக்கு அவன் மாற வேண்டும்.அவன் கூட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.வரமென வந்த வாழ்வை இரசித்திட வேண்டும்.அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகித் தான் இருந்தாள்.ஏன் அவளின் காதலைக் கூட விட்டுக் கொடுக்கச் சென்னால் அதைச் செய்வதிலும் அவளுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.
அவன் தன் கவலை மறந்து வாழ்க்கையை நிம்மதியாய் வாழ வேண்டும்.அவ்வளவு தான் அவளின் மன எண்ணம்.
அவன் மீதான ஆழமான காதல் தான்.அந்தக் காதலில் அவள் அவளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பையும் சுமந்திடாதது தான் அவள் காதலின் தனித்துவம்.பையனை மட்டுமே சுற்றி வந்து அவனுக்கென மட்டுமே யோசித்திடும் அந்தக் காதலின் சுயநலம் கூட கொஞ்சம் அழகாய்த் தான் தெரிகிறது.
"உன் லவ் மேல அவ்ளோ நம்பிக்கயா உனக்கு..? இவ்ளோ நாள் இல்லாம இப்டி ரெண்டு மாசம் உன் கூட பழகறதனால பெருசா என்ன நடந்துடப் போகுது..?" புருவமுயர்த்தி கேட்டிட அவளிதழ்களில் புன்முறுவல் படர்ந்தது.
தன் மீது நேசம் துளிர்த்து பெருமரமாய் விரியும் என்றெல்லாம் அவள் நினைத்திடவில்லை.அவனை ஏதோ மாற்றிட முயலும் அது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது.
அவள் காதலின் ஆழத்தை உரித்தானவனாலே தெரிந்து கொள்ள முடியாதிருக்கும் பட்சத்தில் அவள் உணர்ந்து எங்கனம் தன் காதலின் மீது நம்பிக்கை வைத்திட..?
"ரெண்டு மாசம் இருக்கு என்ன வேணுன்னாலும் நடக்கலாம்.." பெரிதாய் நம்பிக்கை எதுவுமின்றி மெல்லிய குரலில் மொழிந்தவளுக்கு அவனுக்கு தன் மீது நேசம் உருப்பெறாவிடினும் பரவாயில்லை,அவனை மொத்தமாய் மாற்றி விட்டால் போதுமென்கின்ற எண்ணம் தான்.
வாழ்ந்து வாழ வைத்திடும் காதல்கள் அழகென்றால் மடிந்தும் வாழ வைத்திடும் காதல்கள் பேரழகு தானே!அவள் காதலும் அப்படித்தான்!
தான் மடிந்தாலும் பரவாயில்லை,அவன் வாழ்ந்தால் போதுமென்பது மட்டுமே அவள் காதலின் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பு.
"இப்போவே உன்னோட மனசு தேத்தி வச்சுக்கோ இசை..என்ன நடந்தாலும் நாம ரெண்டு பேரும் டைவோர்ஸ் வாங்கப் போறது கன்ஃபார்ம்..மறக்காம ஞாபகம் வச்சிக்க.." தீர்க்கமாய் உறுதியாய் கூறியவனுக்கு அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை என்றாலும் தற்சமயம் பாவையவளின் எண்ணம் என்னவென்று தான் கணிக்க இயலாமல் போனது,பையனால்.
என்ன தான் பாவையவள் சவால் விட்டாலும் அவள் விழிகளில் அவள் காதல் மீதான உறுதியை அவன் காணவில்லை.தன்னை காதலிக்க வைத்து விடலாம் என்கின்ற உறுதி அவளுக்குள்ளும் இல்லை என்பது போல் தான் தோன்றிற்று,பையனின் மனதில்.
"இவ எதுக்கு இப்டி பண்றா..?" மௌனமாய் யோசித்து ஆழமான பார்வையொன்றை வீசி விட்டு அறையில் இருந்து வெளியேறிட நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்,இசையவள்.
பையனோ உடை மாற்றிக் கொண்டு வர வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்தனர்,இருவரும்.
பையனோ இத்தனை நாள் மனதை அழுத்திக் கொண்டிருந்த குழப்பம் முழுவதும் நீங்கப் பெற்றிருந்ததால் சற்று நிமிர்வாய்த் தான் தெரிந்தான்.
இசையவளோ அவனை ஓரப்பார்வையால் உரசிக் கொண்டே வர ஒரு கட்டத்தில் அவனுக்குமே கோபம் வந்து விட்டது.
முன்பும் இப்படி கடைவிழி உரசல்கள் அவளிடமிருந்து கிடைக்கப் பெற்றாலும் தான் ஓரவிழியில் முறைப்பை படரவிட்டாலே பம்மிக் கொண்டு பயந்து நிற்பாள்,பாவையவள்.
இப்போது முறைத்தாலும் அவள் கண்டு கொள்ளாதது சிறு கோபத்தை கிளப்பி விட்டது.
"எதுக்கு இப்டி ஓரக்கண்ணலா பாக்கற..?"
"ஆங்..நா பாக்கவே இல்லியே.." பதறிய குரலில் கூறிக் கொண்டு விழிகளை தாழ்த்தியவளை கடுமையோடு சாடின,பையனின் விழிகள்.
"என்ன பாக்கலன்னு பொய்யெல்லாம் சொல்ற..? நீ பாத்தத நா பாத்தேன்..பாக்கலனு சொல்லு பாக்கலாம்.."
"சாரே நம்ம டீல் ஞாபகம் இருக்குல..இப்போ நா உங்க ப்ரெண்ட்..உங்க ப்ரெண்ட் இப்டி பாத்தா நீங்க திட்டுவீங்களா..?" கேட்டவளுக்கும் தன்னுள் இருக்கும் பயமும் பதட்டமும் எங்கு போனதன்றே தெரியவில்லை.
பையன் தன்னிடம் தோழமைக் கரம் நீட்டி விட்டதால் உண்டாகிய நிமிர்வா..?
அவனை மாற்றிய தீர வேண்டும் என முனைப்புடன் சுற்றுவதால் எழுந்திட்ட ஆர்வமா..?
பையன் அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலைத் தான் எதிர்பார்த்திருப்பான் போலும்.இரு புறமும் தலையாட்டி இதழ் குவித்து ஊதிக் கொண்டவனோ பதிலேதும் பேசாமல் முன்னே நடந்திட அவளுக்கும் அவனின் அமைதியில் கிலி பிடித்து பரவி நிற்க தானாய் வேறு புறம் தாவின,அவள் விழிகள்.
●●●●●●●●
"இவங்க எதுக்கு எப்போ என்ன பாத்தாலும் மொறச்சிகிட்டே இருக்காங்க..முன்ன பின்ன நா இவங்கள பாத்ததும் இல்ல..ஆனா எதுக்கு இப்டி பண்றாங்கன்னு தெரிலியே..அவங்க உங்க ப்ரெண்ட் தான..என்னன்னு நார்மலா கேக்கற மாதிரி கேட்டு சொல்றீங்களா..? இது வர யாரும் என் கிட்ட மொகத்த திருப்பி கிட்டு நடந்தது இல்ல..அதான் ஒரு மாதிரி இருக்கு.."உணவைப் பிசைந்த படி அடுத்த மேசையில் அமர்ந்து உணவில் கவனமாகி இருந்த பாவையவளை பார்த்துக் கொண்டு யாழினி சொல்ல கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு புரையேற மட்டுந்தான் இல்லை.
இன்று தற்செயலாய் யாழினியின் அருகே அமர்ந்தவளோ அவளிடம் சாதாரணமாய் பேசத் துவங்கிட அவளின் பேச்சுக்கு செவிசாய்த்தாலும் யாழினியின் விழிகள் சுற்றி வந்தது என்னவோ,இசையவளைத் தான்.
"அண்ணன் அடிக்க வேண்டிய சைட்ட தங்கச்சி அடிக்கிதோ..?" அவளின் பார்வை அடிக்கடி படிவதும் மீள்வதுமாய் இருக்க அதைக் கண்டு கொண்டவளின் மனசாட்சி இப்படி நினைக்காது இருந்தால் தான் அதிசயம்.
"என்ன தாமர நா இவ்ளோ சொல்றேன்..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க..? ஏன் உங்க கிட்ட அவங்க நார்மலா தான இருக்காங்க.." தன்பாட்டில் கூறியவளுக்கு தெரியாது,தான் கதைத்துக் கொண்டிருப்பது பாவையவளின் உயிர்த்தோழியுடன் என்பது.
"நா என்னன்னு மெதுவா விசாரிச்சு பாக்கறேன் யாழினி..இப்போ ரெண்டு நாளா கொஞ்சம் பிஸியா இருக்குறதனால அரசி கூட அவ்ளவா பேச டைம் இருக்கல..நா கண்டிப்பா கேட்டு சொல்றேன்.."
அந்த சமயத்தில் யாழினியை சமாளித்தவளுக்கு அவளிடமும் சுமூகமாக அனுசரித்து செல்ல வேண்டிய நிலைமை அல்லவா..?
உணவை முடித்து எழுந்தவளோ காலையில் பையனுடன் நடந்த சம்பாஷணைகள் இரசனையுடன் மீட்டிய படி இதழில் உறைந்த முறுவலுடன் கரங்களை கழுவிக் கொண்டிருக்க அவ்விடம் வந்த நான்கைந்து பேரும் இசையவளை விசித்திரமாய்த் தான் பார்த்து வைத்தனர்.
அவளுக்கோ பையன் தன்னுடன் தோழனாய் பழக ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்த மகிழ்வும் நிம்மதியும் ஒரு வித மோன நிலையை கொடுத்திட வழமைக்கு மாறாய் விகசிக்கும் வதனமும் மின்னும் விழிகளுமாய்த் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்,பாவையவளும்.
"அரசி தண்ணிய தெறந்து விட்டுட்டு கனவு காணாம இங்க வா.." உடன் பணிபுரியும் தோழியொருத்தி பிடித்து தன் புறம் இழுத்து வைத்ததுமே அவள் சிந்தை கலைந்தது.
இன்னும் கரத்தை கூட முற்றாக கழுவத் தவறி போயிருக்க அதைக் கழுவிக் கொண்டே நகர்ந்திருந்தாள்,ஈரடி.
"என்னடி இது என்னக்கும் இல்லாம இன்னிக்கி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்க..?" சுற்றி நின்ற நான்கைந்து பேரும் கேட்டுக் கொண்டே அவளை கலாய்த்து சிரித்திட அவளோ முறைத்துக் கொண்டே நகர்ந்திருந்தாள்,அவ்விடம் விட்டு.
"நம்ம மொகர மட்டும் எதுக்கு இப்டி கண்ணாடி மாதிரி இருக்கோ தெரியல.." தனக்குத் தானே திட்டிக் கொண்டு நடந்தவளோ முரளிக்கு எதிர்ப்பட அவனும் சிறு புன்னகையுடன் அவளை தாண்டிச் செல்ல பாவையவளுக்கு மண்டை குழம்பியது.
"ஆளாளுக்கு எதுக்கு தான் நம்மள பாத்து சிரிக்கிறாங்களே..அதுவும் இந்த முரளி என்னக்கு இல்லாம உலக அதிசயமா பாத்து சிரிக்கிறாரு.." தலையில் அடித்துக் கொண்டு வந்தவளின் செயலில் புதிதாய்த் தான் இருந்தது,தாமரைக்கும்.
அலுவலக நேரம் முடிந்திருக்க வழமையாக அலுவலக வளாகத்தினுள் இருப்பவள் இப்போதெல்லாம் பாதையை கடந்து வந்து அங்கிருக்கும் பேரூந்து நிறுத்தத்தில் தரிக்கத் துவங்கி இருந்தாள்,பையன் யாழினியை பார்த்திடக் கூடாது என்பதற்காக.
மழைக்கு குடையும் இன்றிப் போக கொட்டும் மழையில் பாதம் வைத்து வந்தவளோ கொஞ்சம் நனைந்து போயிருக்க தேகத்தைச் சுற்றி துப்பட்டாவை போர்த்திக் கொண்டு நின்றிருந்தவளுக்கு தெரியாமல் இல்லை,மழையும் அதன் குளிரும் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது.
பையனின் வரவிற்காக காத்திருக்கும் போதும் சரிவாய் வீசிய சாரல் அவளை நனைத்துச் சென்றிட இன்னுமே தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்,பாவையவள்.
மொத்தமாய் ஐந்து நிமிடங்கள் கடந்த பின் அவளின் முன்னே வந்து நின்றது,பையனின் வண்டி.தூரத்தில் இருக்கும் போதே அவள் நிற்பதை இனங்காண முடிந்திருந்தது,அவனால்.
அவளோ நனைந்து கொண்டு வரப்பார்த்திட கையமர்த்தி சைகை செய்தவனோ காரில் இருந்து இறங்கி வந்து நனைந்து கொண்டே குடையொன்றை நீட்டிட
முறைப்புடன் வாங்கிக் கொண்டாள்,அவள்.
குடையைப் ப பிடித்துக் கொண்டே மறுபுறம் வந்து அவள் ஏறிட முன்னே பையன் வண்டிக்குள் நுழைந்து வண்டியை இயக்கியிருக்க இருக்கையில் அமர ஒரு கணம் யோசித்தவளை பையனின் அழுத்தமான பார்வை அப்படியே அமரச் செய்தது.
இருக்கையின் ஒரு ஓரமாய் ஒன்றிப் போய் உட்கார்ந்து இருந்தவளுக்கு இருக்கை நனைந்து விடுமோ என்கின்ற பயம்.அதை விட குற்றவுணர்ச்சி.
"சீட் ஒன்னும் ஆகாது..நார்மலா உக்காரு.." அவளின் மனதை படித்தவனோ அதட்டலான குரலில் மொழிய அப்போதும் அசையவில்லை,அவள்.
"ஒழுங்கா உக்கார சொல்றேன்ல.." வண்டியைக் கிளப்பாது அவன் மீண்டும் எச்சரித்திட அதில் பயந்தவளோ சரியாய் அமர்ந்து கொண்டான்,கொஞ்சம் அசைந்து.
வழி எங்கும் மௌனத்தின் அலைவரிசை.அவனுடன் பேசுவதற்கு உரிமையும் தந்து விட்டான் தான்.இருப்பினும் ஏதோ தயக்கம்.
அவ்வப்போது அவளின் தைரியம் எட்டிப் பார்த்தாலும் ஒரே நாளில் அவளின் மொத்த பயத்தையும் களைவது அத்தனை சுலபமான விடயம் அல்லவே.
அலுவலகத்தில் நிலவிய ஏசியின் குளிரோடு சேர்த்து மழையில் நனைந்ததும் தன் வினையை காட்டத் தொடங்கிட அவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.இடைக்கிடை தும்மல் வேறு.
இருக்கையில் சாய்ந்து தலைசாய்த்து விழி மூடிக் கொண்டவளுக்கோ அடிக்கடி தும்மல் வந்து கொண்டேயிருக்க அவனுக்கும் மனம் பிசைந்தது.
அவள் அந்த மழையில் நனைந்து கொண்டு வந்து பேரூந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றது அவன் யாழினியை கண்டு காயப்படக் கூடாது என்பதற்காகத் தான் என்று பையனுக்கு நன்றாகவே தெரியும்.
வண்டியில் ஏறிக் கொண்டவுடன் கிளப்பச் சொல்லி பரபரக்கும் அவளின் வேகமும் அங்குமிங்கும் அசைந்து ஆசுவாசப் பெருமூச்சை விடும் அவளின் செயலும் அதை அவனுக்கு இரு நாட்களிலேயே கூறிப் போயின.
"எதுக்கு மழைல நனஞ்சிட்டு வந்து பஸ் ஸ்டாப்ல நின்ன..? உன் ஆஃபீஸ்ல எடம் இருக்கு தான.."
"அ..அது நாம ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்னு யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னீங்கல..அதுக்கு தான்.."
"அன்னிக்கி எல்லாம் கேட் கிட்ட தான வந்து நின்ன..? அங்கயும் மழக்கி ஒதுங்கி நிக்க எடம் இருக்கு தான..?" இத்தனை பொறுமையாய் துருவிக் கேள்வி கேட்பது எல்லாம் பையனின் அகராதியில் இல்லாத விடயங்கள்.
அவளுக்கென அவனைக் கேளாமல் அவனறியாமல் நடந்தேறிக் கொண்டிருந்தன.
அவளால் அவன் அகராதியில் கொஞ்சம் மாற்றங்களோ என்னவோ..?
"அ..அது இன்னிக்க வந்து நிக்கனும்னு தோணுச்சு சாரே.." விட்டு விடேன் எனும் பாவனையில் மொழிந்தவளுக்கு மீண்டும் தும்மல் வரத் துவங்கிட விழி மூடியிருந்தவளை அழுத்தமாய் தொட்டு மீண்டன,அவளின் விழிகள்.
உனக்காகத் தான் செய்தேன் என்று தைரியமாய் போட்டுடைத்து ஒப்புக் கொண்டாலும் அவனுக்குள் இத்தனை குற்றவுணர்ச்சியும் கனமும் உண்டாகியிருக்காதோ என்னவோ..?
அவள் தன்னை காதலிக்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் ஒரு போதும் அவள் அதை சொல்லியதேயில்லை.
அறிந்தோ அறியாமலோ இயல்பாய் நடந்தேறும் அவளின் செயல்கள் எல்லாம் அவன் மீதான நேசத்தை தெள்ளத் தெளிவாய் விளக்கிக் காட்டிட ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோ ஆகிடுவது நிஜம்.
ஒவ்வொரு நொடியும் அவனுக்கான காதலை சத்தமின்றி உணர்த்திச் செல்லும் அவள் புதிராய்த் தோன்றினான்,பையனுக்கு.
யாழவனின் இறுக்கங்களையும் அழுத்தங்களையும் தாண்டி இசையவளின் காதல் அவனின் உயிர்த்தொடும் மாயம் பையன் அறியவில்லை.
உயிர்த்தொடும்.
2024.09.05