யாழின் இசையாய்..
யாழிசை 10(ii)
கண் விழித்த பார்த்த யாழவனின் விழிகளில் இசையவள் வீழாது போக உறக்கம் தோய்ந்திருந்த விழிகள் மெல்ல இடுங்கினாலும் மறு புறம் திரும்பி படுத்துக் கொள்ள முயன்றவனை எழுப்பி விட்டது,ஏதோ கீழே விழும் சத்தம்.
"கிச்சன்ல ஏதோ உருட்டிகிட்டு இருப்பா.." சலிப்புடன் நினைத்துக் கொண்டவனோ விழி மூடப் பார்த்திடினும் தொடராய் வந்த இருமலின் ஒலி அவனை அவ்வண்ணமே தரித்த இடம் கொடுத்திடாது போனது.அவள் மீதிருக்கும் அக்கறை சற்றே எட்டிப் பார்த்திருக்கும் போலும்.
எழுந்தமர்ந்தவனோ கட்டிலில் இருந்த இறங்கப் பார்த்திடினும் மனசாட்சி தடுத்தது,அவளுக்காக.
"நீ இப்ப போய் அக்கறன்னு பாத்தன்னா அவளுக்கு உன் மேல இருக்குற இன்பாக்ஷுவேஷன் இன்னும் கூடித் தான் போகும்..கண்டுக்காத மாதிரியே இரு.." அவள் நலன் வேண்டி வாதிட்ட மனசாட்சியின் பேச்சைக் கேட்டவனோ மீண்டும் படுத்துக் கொண்டாலும் உறக்கம் வந்து தொலைப்பேனா என்றிருந்தது.
விழி மூடியிருந்தாலும் அடிக்கடி எட்டிப் பார்த்த இருமல் சத்தத்திலேயே கவனம் நிலைத்திருக்க தன்னை மீறி எழுந்து செல்ல பார்த்த பாதங்களை அடக்கிக் கொண்டு படுத்திருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறு இருந்திட முடியவில்லை.
எழுந்து கொண்டவனோ கதவருகே சென்று திறக்கப் பார்க்கவும் பாவையவள் நடந்து வரும் ஓசை செவியரோத்தை உரசவும் சரியாய் இருக்க வந்த சுவடின்றி மீண்டும் படுத்துக் கொண்டவனோ அவளுக்கு முதுகுகாட்டி இமைத்தாழ் இட்டிருந்தான்.
வாயைப் பொத்தி இருமிய படி வந்த இசையவளுக்கோ இருமல் சற்றே மட்டுப்பட்டிருக்க சோபாவில் சரிந்தவளுக்கோ பையன் விழித்திருப்பது தெரியவில்லை.
"ரோபோ..ரோபோ இவ்ளோ இருமுறேன் முழிச்சிக்கிதா பாரு.." சற்று சத்தமாக திட்டிய படி கண்களை பொத்திக் கொண்டாலும் மனசாட்சியோ பையனுக்கு வக்காலத்து வாங்கி அவளை அமைதிப்படுத்தியது.
அந்த சுணக்கம் எல்லாம் சில நொடிகளுக்குத் தான்.உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவனின் விம்பம் விழிகளை நிரப்பியதும் மொத்தமாய் இரசனை சேர்ந்து விட்டிருந்தது,உள்ளுக்குள்.
பாவையின் இடத்தில் வேறு யார் இருப்பினும் இத்தனை தூரம் காதல் செய்திருப்பார்களா என்று தெரியாது,அதுவும் யாழவனோ அவள் மீது சிறு அக்கறை இருப்பதையும் காட்டிக் கொள்ளாத போதும்.
ஆனாலும்,அவள் காதலில் மாற்றமில்லை.சொல்லப் போனால் இன்னும் அதிகமாய்த் தான் காதலிக்கிறாள்,இப்பொழுதெல்லாம்.
பிடித்தங்களின் பிடி இறுகிக் கொண்டே தான் போகிறது.விருப்பங்களின் விரிவுரைகள் விரிவாய்த் தான் ஆகின்றன.இருந்திருந்த ஈர்ப்புக்கள் எல்லாம் ஈற்றைத் தாண்டி ஓடுகின்றன.ஈன்றெடுத்த காதலின் கால் தடங்கள் இன்னும் ஆழமாய்த் தான் மாறுகின்றன.
பெரிதாய் எதிர்ப்பார்ப்புக்கள் இல்லை.அப்படியே எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்தாலும் அதை பையன் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அவள் எதிர்ப்பார்ப்பதுமில்லை.அவ்வியல்பு தானோ யாழவனை இன்னுமின்னும் காதலிக்க வைக்கிறது..?
ஆம்,அது தான் போலும்.
அப்படி காதலிப்பதால் தானே அவள் இசையாகிறாள்!
கிட்டத்தட்ட ஒரு வாரம் அப்படியே பையனின் நடிப்புடனும் பாவையவளின் சலிப்புடனும் கழிந்திட நாளுக்கு நாள் பையனின் அலப்பறைகள் கூடிக்கொண்டு தான் போனது.
காலையில் எழுந்தவுடன் அவனோடு எழுந்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் "இசை..இசைமா.." என அழைத்தே அவளை ஒருவழியாக்கி விடுவான்.
"இசை காஃபி" என சில காலைப் பொழுதுகளில் அவனிதழ்கள் மொழிந்தாலும் ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்திருக்கும் பெரும்பாலான பொழுதுகளில் அவளை நோக்கியே காஃபி கோப்பை வந்திடும்.
அலுவலகத்துக்கு அவள் தாமதாகும் போதெல்லாம் அக்மார்க் கணவனாய் மாறி பகலுணவை கூட கட்டிக் கொடுத்து கை பிடித்து அழைத்துச் செல்லும் அளவுக்கு உருமாற்றம் பெற்றிருந்தது,அவனின் நடத்தைகள்.
ஆம்,உருமாற்றம் தான்.அதன் காரணம் என்னவோ ராமநாதன் மட்டுந்தான் என்பதும் குறித்துக் கொள்ள வேண்டியது.
முதன் முதலில் இவை நடந்தேறும் போதெல்லாம் பாவையவளோ உறைந்து போனாலும் இப்பொழுதெல்லாம் பழகி விட்டது.
நெற்றியில் இருந்த பொட்டை திருத்தி உச்சியில் குங்குமம் வைத்து விட்ட போதெல்லாம் அது நடிப்பென்று தெரிந்தும் அந்த தருணங்களில் நெகிழத் தான் செய்தது,அவள் மனது.
நிழல் என்று தெரிந்தும் நெகிழும் தன் மனதை அடக்கும் வழி தெரியவில்லை,
பாவையவளுக்கு.அப்படித் தெரிந்திருந்தால் இத்தனை ஆழமாய் காதலித்திருக்க மாட்டாளே!
நிஜமில்லை என்று தெரிந்தும் நெகிழ்வதும்..
நிழலெனப் புரிந்த பின்னும் இரசிப்பதும் கண்மூடித்தனமான காதலில் மாத்திரம் தான் சாத்தியம் போலும்.
ஏன் இப்போதும் கூட அவளின் பெயரை விலைக்கு வாங்கியது போல் கூவிக் கொண்டிருந்தான்,பையன்.
"இசை லேட்டாகுது சீக்கிரம் வா.." கையில் இருந்த கைக்கடிகாரத்தை பார்த்த படி குரல் கொடுத்திட ராமநாதனின் இதழ்களில் சிறு புன்னகை ஓடிக் கொண்டிருந்தது.
"தோ வந்துட்டேங்க.." அவசரமாய் அவசரமாய் கூந்தலை பின்னிக் கொண்டிருந்தவளோ அதே கதியில் அவன் முன்னே வந்து நிற்க அவளின் கரத்தை பற்றிக் கொள்ள ராமநாதனிடம் சொல்லிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்,இருவரும்.
மின்தூக்கியை அடையும் வரை அவளின் கரம் பையனின் பிடிக்குள் இறுகி இருந்தாலும் மின் தூக்கியில் நுழைந்ததும் பட்டென கரத்தை விட்டவனோ அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓரமாய் சரிந்து நின்றிட பழகிப் போனதென்பதால் அவளை அதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
அப்படி ஒவ்வொன்றையும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் யாழவனை அவள் எப்படி காதலிப்பதாம்..?
அவளோ சுற்றும் முற்றும் விழிகளை சுழலவிட்டு தன்னில் லயித்து போக அலைபேசியில் அமிழ்ந்தது போல் காட்டிக் கொண்ட பையனின் கவனமோ கேளாமல் அவளைச் சுற்றித் தான் சுழன்றோடிற்று.
அவளுக்கு எப்படியோ அவனைப் பொறுத்த வரையில் தான் செய்து கொண்டிருப்பவற்றை நினைக்கையில் குற்றவுணர்வு மனம் முழுக்க வியாபித்து நிற்பதை தவிர்த்திட இயலவில்லை.
அவன் மீது அவளுக்கு காதல் இல்லாத பட்சத்தில் நெருக்கமானவர்கள் போல் நடிப்பது அவ்வளவு உசிதமாய் அவனுக்கு தோன்றிடாத பொழுது அவன் மீது காதல் இருப்பது தெரிந்தும் அவ்வாறு நடந்து கொள்ள எப்படி பையனின் மனம் ஒத்துக் கொள்ளும்..?
தான் சற்றே அக்கறை காட்டினாலும் அவள் மனதில் எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும் உண்டாகிடும் என்று தெரிந்தும் அதை செய்ய வேண்டியிருக்கும் கையலாகாத நிலையை அறவே வெறுத்தது,மனது.
ஒட்டு மொத்தமாய் அவர்களின் ஒப்பந்தத்தில் இருப்பது அவனது சுயநலம் என்று முற்றாய் உணர்ந்திருப்பவனுக்கோ பாவையின் உணர்வுகளுடன் விளையாடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை.
போதாதற்கு அவளுக்கு தன் மீது காதல் பூக்கும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.
ஆக,அவனைப் பொறுத்த வரையில் அவளுக்கு காதல்..
ம்ஹும் இல்லை ஈர்ப்பு உண்டாகியது திருமணத்துக்கு பின்னர் தான்.ஆனால்,பையனுக்குத் தெரியாது,அது பூத்த காதல் அல்ல,முன்பே பூத்திருந்த காதல் என்பது.
எதுவும் செய்ய இயலா இக்கட்டான சூழ்நிலையில் தான் விருப்பமின்றி திருமணத்துக்கு சம்மதம் சொன்னதே.வாழ்வா சாவா என்று ராமநாதன் போராடிக் கொண்டிருந்த பொழுதாக மட்டும் இல்லாவிடின் அவன் என்ன நடந்திருப்பினும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான் என்பது அவனும் அந்த கடவுளும் மட்டுமே அறிந்த உண்மை.
திருமணத்துக்கு முன்னமே இசையவளிடம் தன் எண்ணத்தை எடுத்துச் சொல்ல அவளும் அவனின் நிபந்தனைகளுக்கு தலையாட்டிய பின் தான் திருமணம் செய்து கொண்டதே.
நினைவுகளை மீட்டிப் பார்த்தான்,யாழவன்.
திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தெரிய வந்த செய்தி தான் அவனை முற்றாகவே திருமண பந்தத்தில் இருந்து விலக்கி வைத்திருப்பதாக அவனுக்குள் ஓர் எண்ணம்.
"அப்போ அப்டி இல்லன்னா நீ அந்த பொண்ணு கிட்ட டைவோர்ஸ் வாங்காம இருந்துருப்பியா..?" மனசாட்சி கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு தன் எண்ணத்தை நினைக்கையில் உள்ளுக்குள் பெரும் கலவரம் மூண்டது.
இரு புறமும் தலையாட்டி தன்னை சமப்படுத்திக் கொண்டவனோ அதன் பின் அவளைப் பற்றி எதுவும் யோசித்திடவில்லை.
●●●●●●●●
"இன்னும் ஒரு வாரத்துல நமக்கு யூ எஸ் ட்ரிப் இருக்கு..அதுக்கப்றம் ஜாலி தான்.." விசிலடித்த படி சுழலும் கதிரையில் அமர்ந்து இருபுறமும் அசைந்து கொண்டிருந்த மோகனுக்கோ தோழனின் முகத்தில் இருந்த வாட்டம் பல கேள்விகளை கிளப்பி விட்டது.
"டேய் மகேஷ் என்னடா நா இவ்ளோ ஜாலியா இருக்கேன்..நீ என்னன்னா இப்டி சோகமா இருக்க..? என்ன உன் லவ்வர் நெனப்புல சுத்திட்டு இருக்கியா..?" தோழனின் மன எண்ணம் புரிந்தவனாய் கேட்டிட எதிர்வினை ஏதும் இல்லை,மகேஷிடம் இருந்து.
"இங்க பாருடா..எதேச்சயா ரெண்டு மாசம் முன்னாடி மீட் பண்ண பொண்ணு மேல லவ்வு வளத்துகிட்டு வெய்ட் பண்ணாத..அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சோ தெரியல.." நிதர்சனத்தை உரைத்த தோழனை உறுத்து விழித்தன,அவன் விழிகள்.
"ப்ச்..எதுக்கு இப்டி மொற மொறன்னு மொறச்சிகிட்டு இருக்க..நா என்ன இல்லாததயா சொன்னேன்..? இப்டி நடந்துர்கலாம்னு ஒரு வாய்ப்பு இருக்குன்னு தா சொன்னேன்..பாத்துக்க.."எச்சரித்த மோகனுக்கோ தோழன் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்கின்ற எண்ணம்.
"மகேஷ் உன்ன அரவிந்த் சார் கூப்பர்ராரு.." உடன் பணிபுரியும் தோழனொருவன் வந்து சொல்லி விட்டு போக அரவிந்தின் அறைக்குள் நுழைய அங்கு அவனுக்கென சில கோப்புக்களை வைத்துக் கொண்டு காத்திருந்தான்,அரவிந்த்.
செய்ய வேண்டிய பணிகளை விளக்கிய படி கையில் இருந்த கோப்புக்களின் அடுக்கை அவனிடம் ஒப்படைத்திட சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்ட மகேஷின் மீது அவனுக்கு தனி மதிப்பு இருப்பது என்னவோ உண்மை தான்.
மீள பையனின் அறைக்குள் நுழைந்தவனை கேள்வியாய் பார்த்தான்,பையன்.
"என்ன சார்..? ஏதாச்சும் கேக்கனுமா..?" தொழிலிடம் என்பதால் மரியாதையுடன் அழைப்பவனின் அழைப்பை பையன் மறுத்து நின்றாலும் ஏற்பதில்லை,தோழன்.
"யார் கிட்ட ஃபைல்ஸ செக் பண்ண கொடுத்து இருக்கீங்க பி ஏ சார்...?" மடிக்கணனினியில் ஏதோ தட்டிய படி கேட்டான்,பையன்.
"மகேஷ் கிட்ட சார்.."
"ஓகே.."
"சார் இந்த பேபர்ஸ்ல சைன் வேணும்.." சில காகிதங்களை நீட்டிட படிக்காமல கையெழுத்துட்டிருந்தான்,பையன்.
"எத்தன தடவ சொல்றது உங்களுக்கு..? பேபர்ஸ் நீட்டுனா படிச்சு பாத்து சைன் பண்ண மாட்டீங்களா..?" கேலியாய் கேட்டவனுக்கு தெரியாமல் இல்லை,பையன் அவ்வாறு கையெழுத்திடுவதன் காரணம் அவன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை என்பது.
"சும்மா ஒரு சைன வச்சு என்ன பண்ண போறீங்க பி ஏ சார்..?"
"ஏன் உங்க சொத்து மொத்ததத்தயும் என்னோட பேருக்கு மாத்தி எழுதிக்குவேன் பரவாலியா..?"
"இதுக்கப்றம் அப்டி நடந்தா என்ன..? நடக்கலனா என்ன..? நா அவ்ளோ சொத்த வச்சிட்டு என்ன போறேன்..நானே எழுதி வச்சிர்லாங்குற முடிவுல தா இருக்கேன் பி ஏ சார்.." மனதில் தோன்றியதை அப்படியே பையன் கூறிட சட்டென தோழனின் முகம் வாடிப் போய்விட அவ்விடத்தில் நிலவிய சூழ்நிலையில் அத்தனை கனமும் இறுக்கமும்.
இயல்பாய் பேசி விட்டு தோழனின் முகம் பார்த்திடவுமே தான் சிதறவிட்ட வார்த்தைகளின் வீரியம் உரைத்திட அவனிடம் மன்னிப்புக் கேட்டிடும் முன் அவ்விடத்தில் இருந்து அகன்று விட்டவ அரவிந்தின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தாலும் மனதுக்குள் சிறு பயமும்.
"கெஞ்சி கேக்கறேன் சாமி..இவன் கிட்ட என்ன காப்பாத்தி விட்ரு.." கை கூப்பி கடவுளை வேண்டிட அவனின் வேண்டுதல் கடவுளின் செவிகளை எட்டியதோ என்னவோ..?
அதே நேரம்,
"இதுக்கப்றம் நீங்க இந்த கம்பனில தான் வேல செய்யப் போறீங்க..இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்..ஸோ எல்லார் கூடவும் இன்டர்ட்யூஸ் ஆகிக்கோங்க யாழினி.." மேலாளர் கூறி விட்டுச் செல்ல தன் அணியில் இருப்பவர்களுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்,யாழினி.
"டீம்ல ஆறு பேர் இருக்காங்கன்னு சொன்னீங்கல..இப்போ அஞ்சு பேர் தான் இருக்காங்க..மத்தது யாரு..? அவங்க இன்னிக்கி வர்லியா..?"
"அவ வந்துருவா..அஞ்சு பத்து நிமுஷம் வர்ரதுக்கு லேட் ஆயிடும் செல வேள.." அருகே இருந்த பெண் கூறி முடிக்கும் முன்னே மூச்சு வாங்க அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தாள்,இசை.
நெற்றியிலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வைத் துளிகளை துப்பட்டா நுனியால் ஒற்றிய படி தன்னிடத்தில் அமர்ந்தவளின் கவனத்தில் பதியவில்லை,அங்கே புதியாய் ஒரு பெண் அமர்ந்திருப்பது.
"என்ன இசை இன்னிக்கி லேட் ஆயிடுச்சு போல..ஏன் உன் ஹஸ்பண்ட் கூட வர்லியா நீ..?"
"ச்சே..அவரு கூட தான் வந்தேன்..இன்னிக்கி வீட்ல இருந்து வரும் போது லேட் ஆயிடுச்சு.."
"ஆமா எங்களுக்கு எப்போ உன்னோட ஹஸ்பன்ட இன்டர்ட்யூஸ் பண்ணி வக்கப் போற.."
"அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.." என்றவளின் மனமோ,
"நானே என் வாழ்க்க எந்த போக்குல போகுதுன்னு தெரியாம அல்லாடிகிட்டு இருக்கேன்..இதுல இன்டர்டக்ஷன் ஒன்னு தான் கொறச்சல்.." என்று நினைத்துக் கொண்டது வேறு கதை.
"இசை என்னடி பின்னால திரும்பாமலே இருக்க..இங்க பாரு..புதுசா நம்ம டீம்ல ஜாய்ன் ஆகியிருக்காங்க.." தோழியின் அழைப்புக்கேற்ப புன்னகையுடன் திரும்பியவளின் இதழ்கள் அப்படியே பாதியில் நின்று போனது,அவ்விடத்தில் இருந்து யாழினியைக் கண்டதும்.
"ஹாய் ஐ அம் யாழினி..இன்னிக்கி தா ஜாய்ன் பண்ணி இருக்கேன்.." கை நீட்டிய படி கூறியவளின் கரத்தை மனமின்றி பற்றி குலுக்கி விடுவித்தவளுக்கு தெரிந்து தான் இருந்தது,அது பையனின் உடன் பிறந்த தங்கையென்பது.
"என்னங்க நீங்க யார்னு சொல்லவே மாட்டேங்குறீங்க..?" தலை சரித்துக் கேட்ட யாழினியின் செயலில் ஏனோ பாவையவளுக்கு கோபம் தலைக்கேறியது.
"நா இசையரசி.." பட்டும் படாமல் கத்தரித்தது போல் சொல்லி விட்டு திரும்பியவளின் செயலில் அவளின் முகம் சற்றே கறுத்துப் போனது.
முகத்தில் அடித்தாற் போல் நடந்து கொண்டவளின் செயலில் சுற்றி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்வு.எல்லோரையும் அனுசரித்து பழகும் பாவையவள் அனைவரிடமும் இன்முகம் அறிந்தவர்களுக்கு அவளின் இந்த நடந்தை கொஞ்சம் அதிர்ச்சியே.
"என்ன இசை..எதுக்கு இப்டி மொகத்துல அடிச்ச மாதிரி நடந்துகிட்ட..?" அருகே இருந்து தாமரை உலுக்க முகத்தில் கோபம் மின்ன முறைத்தவளின் விழிகளில் தெரிந்த அதட்டலில் அமைதியாகிப் போயிருந்தாள்,தாமரை.
உயிர்த்தொடும்.
2024.08.31
யாழிசை 10(ii)
கண் விழித்த பார்த்த யாழவனின் விழிகளில் இசையவள் வீழாது போக உறக்கம் தோய்ந்திருந்த விழிகள் மெல்ல இடுங்கினாலும் மறு புறம் திரும்பி படுத்துக் கொள்ள முயன்றவனை எழுப்பி விட்டது,ஏதோ கீழே விழும் சத்தம்.
"கிச்சன்ல ஏதோ உருட்டிகிட்டு இருப்பா.." சலிப்புடன் நினைத்துக் கொண்டவனோ விழி மூடப் பார்த்திடினும் தொடராய் வந்த இருமலின் ஒலி அவனை அவ்வண்ணமே தரித்த இடம் கொடுத்திடாது போனது.அவள் மீதிருக்கும் அக்கறை சற்றே எட்டிப் பார்த்திருக்கும் போலும்.
எழுந்தமர்ந்தவனோ கட்டிலில் இருந்த இறங்கப் பார்த்திடினும் மனசாட்சி தடுத்தது,அவளுக்காக.
"நீ இப்ப போய் அக்கறன்னு பாத்தன்னா அவளுக்கு உன் மேல இருக்குற இன்பாக்ஷுவேஷன் இன்னும் கூடித் தான் போகும்..கண்டுக்காத மாதிரியே இரு.." அவள் நலன் வேண்டி வாதிட்ட மனசாட்சியின் பேச்சைக் கேட்டவனோ மீண்டும் படுத்துக் கொண்டாலும் உறக்கம் வந்து தொலைப்பேனா என்றிருந்தது.
விழி மூடியிருந்தாலும் அடிக்கடி எட்டிப் பார்த்த இருமல் சத்தத்திலேயே கவனம் நிலைத்திருக்க தன்னை மீறி எழுந்து செல்ல பார்த்த பாதங்களை அடக்கிக் கொண்டு படுத்திருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறு இருந்திட முடியவில்லை.
எழுந்து கொண்டவனோ கதவருகே சென்று திறக்கப் பார்க்கவும் பாவையவள் நடந்து வரும் ஓசை செவியரோத்தை உரசவும் சரியாய் இருக்க வந்த சுவடின்றி மீண்டும் படுத்துக் கொண்டவனோ அவளுக்கு முதுகுகாட்டி இமைத்தாழ் இட்டிருந்தான்.
வாயைப் பொத்தி இருமிய படி வந்த இசையவளுக்கோ இருமல் சற்றே மட்டுப்பட்டிருக்க சோபாவில் சரிந்தவளுக்கோ பையன் விழித்திருப்பது தெரியவில்லை.
"ரோபோ..ரோபோ இவ்ளோ இருமுறேன் முழிச்சிக்கிதா பாரு.." சற்று சத்தமாக திட்டிய படி கண்களை பொத்திக் கொண்டாலும் மனசாட்சியோ பையனுக்கு வக்காலத்து வாங்கி அவளை அமைதிப்படுத்தியது.
அந்த சுணக்கம் எல்லாம் சில நொடிகளுக்குத் தான்.உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவனின் விம்பம் விழிகளை நிரப்பியதும் மொத்தமாய் இரசனை சேர்ந்து விட்டிருந்தது,உள்ளுக்குள்.
பாவையின் இடத்தில் வேறு யார் இருப்பினும் இத்தனை தூரம் காதல் செய்திருப்பார்களா என்று தெரியாது,அதுவும் யாழவனோ அவள் மீது சிறு அக்கறை இருப்பதையும் காட்டிக் கொள்ளாத போதும்.
ஆனாலும்,அவள் காதலில் மாற்றமில்லை.சொல்லப் போனால் இன்னும் அதிகமாய்த் தான் காதலிக்கிறாள்,இப்பொழுதெல்லாம்.
பிடித்தங்களின் பிடி இறுகிக் கொண்டே தான் போகிறது.விருப்பங்களின் விரிவுரைகள் விரிவாய்த் தான் ஆகின்றன.இருந்திருந்த ஈர்ப்புக்கள் எல்லாம் ஈற்றைத் தாண்டி ஓடுகின்றன.ஈன்றெடுத்த காதலின் கால் தடங்கள் இன்னும் ஆழமாய்த் தான் மாறுகின்றன.
பெரிதாய் எதிர்ப்பார்ப்புக்கள் இல்லை.அப்படியே எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்தாலும் அதை பையன் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அவள் எதிர்ப்பார்ப்பதுமில்லை.அவ்வியல்பு தானோ யாழவனை இன்னுமின்னும் காதலிக்க வைக்கிறது..?
ஆம்,அது தான் போலும்.
அப்படி காதலிப்பதால் தானே அவள் இசையாகிறாள்!
கிட்டத்தட்ட ஒரு வாரம் அப்படியே பையனின் நடிப்புடனும் பாவையவளின் சலிப்புடனும் கழிந்திட நாளுக்கு நாள் பையனின் அலப்பறைகள் கூடிக்கொண்டு தான் போனது.
காலையில் எழுந்தவுடன் அவனோடு எழுந்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் "இசை..இசைமா.." என அழைத்தே அவளை ஒருவழியாக்கி விடுவான்.
"இசை காஃபி" என சில காலைப் பொழுதுகளில் அவனிதழ்கள் மொழிந்தாலும் ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்திருக்கும் பெரும்பாலான பொழுதுகளில் அவளை நோக்கியே காஃபி கோப்பை வந்திடும்.
அலுவலகத்துக்கு அவள் தாமதாகும் போதெல்லாம் அக்மார்க் கணவனாய் மாறி பகலுணவை கூட கட்டிக் கொடுத்து கை பிடித்து அழைத்துச் செல்லும் அளவுக்கு உருமாற்றம் பெற்றிருந்தது,அவனின் நடத்தைகள்.
ஆம்,உருமாற்றம் தான்.அதன் காரணம் என்னவோ ராமநாதன் மட்டுந்தான் என்பதும் குறித்துக் கொள்ள வேண்டியது.
முதன் முதலில் இவை நடந்தேறும் போதெல்லாம் பாவையவளோ உறைந்து போனாலும் இப்பொழுதெல்லாம் பழகி விட்டது.
நெற்றியில் இருந்த பொட்டை திருத்தி உச்சியில் குங்குமம் வைத்து விட்ட போதெல்லாம் அது நடிப்பென்று தெரிந்தும் அந்த தருணங்களில் நெகிழத் தான் செய்தது,அவள் மனது.
நிழல் என்று தெரிந்தும் நெகிழும் தன் மனதை அடக்கும் வழி தெரியவில்லை,
பாவையவளுக்கு.அப்படித் தெரிந்திருந்தால் இத்தனை ஆழமாய் காதலித்திருக்க மாட்டாளே!
நிஜமில்லை என்று தெரிந்தும் நெகிழ்வதும்..
நிழலெனப் புரிந்த பின்னும் இரசிப்பதும் கண்மூடித்தனமான காதலில் மாத்திரம் தான் சாத்தியம் போலும்.
ஏன் இப்போதும் கூட அவளின் பெயரை விலைக்கு வாங்கியது போல் கூவிக் கொண்டிருந்தான்,பையன்.
"இசை லேட்டாகுது சீக்கிரம் வா.." கையில் இருந்த கைக்கடிகாரத்தை பார்த்த படி குரல் கொடுத்திட ராமநாதனின் இதழ்களில் சிறு புன்னகை ஓடிக் கொண்டிருந்தது.
"தோ வந்துட்டேங்க.." அவசரமாய் அவசரமாய் கூந்தலை பின்னிக் கொண்டிருந்தவளோ அதே கதியில் அவன் முன்னே வந்து நிற்க அவளின் கரத்தை பற்றிக் கொள்ள ராமநாதனிடம் சொல்லிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்,இருவரும்.
மின்தூக்கியை அடையும் வரை அவளின் கரம் பையனின் பிடிக்குள் இறுகி இருந்தாலும் மின் தூக்கியில் நுழைந்ததும் பட்டென கரத்தை விட்டவனோ அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓரமாய் சரிந்து நின்றிட பழகிப் போனதென்பதால் அவளை அதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
அப்படி ஒவ்வொன்றையும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் யாழவனை அவள் எப்படி காதலிப்பதாம்..?
அவளோ சுற்றும் முற்றும் விழிகளை சுழலவிட்டு தன்னில் லயித்து போக அலைபேசியில் அமிழ்ந்தது போல் காட்டிக் கொண்ட பையனின் கவனமோ கேளாமல் அவளைச் சுற்றித் தான் சுழன்றோடிற்று.
அவளுக்கு எப்படியோ அவனைப் பொறுத்த வரையில் தான் செய்து கொண்டிருப்பவற்றை நினைக்கையில் குற்றவுணர்வு மனம் முழுக்க வியாபித்து நிற்பதை தவிர்த்திட இயலவில்லை.
அவன் மீது அவளுக்கு காதல் இல்லாத பட்சத்தில் நெருக்கமானவர்கள் போல் நடிப்பது அவ்வளவு உசிதமாய் அவனுக்கு தோன்றிடாத பொழுது அவன் மீது காதல் இருப்பது தெரிந்தும் அவ்வாறு நடந்து கொள்ள எப்படி பையனின் மனம் ஒத்துக் கொள்ளும்..?
தான் சற்றே அக்கறை காட்டினாலும் அவள் மனதில் எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும் உண்டாகிடும் என்று தெரிந்தும் அதை செய்ய வேண்டியிருக்கும் கையலாகாத நிலையை அறவே வெறுத்தது,மனது.
ஒட்டு மொத்தமாய் அவர்களின் ஒப்பந்தத்தில் இருப்பது அவனது சுயநலம் என்று முற்றாய் உணர்ந்திருப்பவனுக்கோ பாவையின் உணர்வுகளுடன் விளையாடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை.
போதாதற்கு அவளுக்கு தன் மீது காதல் பூக்கும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.
ஆக,அவனைப் பொறுத்த வரையில் அவளுக்கு காதல்..
ம்ஹும் இல்லை ஈர்ப்பு உண்டாகியது திருமணத்துக்கு பின்னர் தான்.ஆனால்,பையனுக்குத் தெரியாது,அது பூத்த காதல் அல்ல,முன்பே பூத்திருந்த காதல் என்பது.
எதுவும் செய்ய இயலா இக்கட்டான சூழ்நிலையில் தான் விருப்பமின்றி திருமணத்துக்கு சம்மதம் சொன்னதே.வாழ்வா சாவா என்று ராமநாதன் போராடிக் கொண்டிருந்த பொழுதாக மட்டும் இல்லாவிடின் அவன் என்ன நடந்திருப்பினும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான் என்பது அவனும் அந்த கடவுளும் மட்டுமே அறிந்த உண்மை.
திருமணத்துக்கு முன்னமே இசையவளிடம் தன் எண்ணத்தை எடுத்துச் சொல்ல அவளும் அவனின் நிபந்தனைகளுக்கு தலையாட்டிய பின் தான் திருமணம் செய்து கொண்டதே.
நினைவுகளை மீட்டிப் பார்த்தான்,யாழவன்.
திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தெரிய வந்த செய்தி தான் அவனை முற்றாகவே திருமண பந்தத்தில் இருந்து விலக்கி வைத்திருப்பதாக அவனுக்குள் ஓர் எண்ணம்.
"அப்போ அப்டி இல்லன்னா நீ அந்த பொண்ணு கிட்ட டைவோர்ஸ் வாங்காம இருந்துருப்பியா..?" மனசாட்சி கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு தன் எண்ணத்தை நினைக்கையில் உள்ளுக்குள் பெரும் கலவரம் மூண்டது.
இரு புறமும் தலையாட்டி தன்னை சமப்படுத்திக் கொண்டவனோ அதன் பின் அவளைப் பற்றி எதுவும் யோசித்திடவில்லை.
●●●●●●●●
"இன்னும் ஒரு வாரத்துல நமக்கு யூ எஸ் ட்ரிப் இருக்கு..அதுக்கப்றம் ஜாலி தான்.." விசிலடித்த படி சுழலும் கதிரையில் அமர்ந்து இருபுறமும் அசைந்து கொண்டிருந்த மோகனுக்கோ தோழனின் முகத்தில் இருந்த வாட்டம் பல கேள்விகளை கிளப்பி விட்டது.
"டேய் மகேஷ் என்னடா நா இவ்ளோ ஜாலியா இருக்கேன்..நீ என்னன்னா இப்டி சோகமா இருக்க..? என்ன உன் லவ்வர் நெனப்புல சுத்திட்டு இருக்கியா..?" தோழனின் மன எண்ணம் புரிந்தவனாய் கேட்டிட எதிர்வினை ஏதும் இல்லை,மகேஷிடம் இருந்து.
"இங்க பாருடா..எதேச்சயா ரெண்டு மாசம் முன்னாடி மீட் பண்ண பொண்ணு மேல லவ்வு வளத்துகிட்டு வெய்ட் பண்ணாத..அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சோ தெரியல.." நிதர்சனத்தை உரைத்த தோழனை உறுத்து விழித்தன,அவன் விழிகள்.
"ப்ச்..எதுக்கு இப்டி மொற மொறன்னு மொறச்சிகிட்டு இருக்க..நா என்ன இல்லாததயா சொன்னேன்..? இப்டி நடந்துர்கலாம்னு ஒரு வாய்ப்பு இருக்குன்னு தா சொன்னேன்..பாத்துக்க.."எச்சரித்த மோகனுக்கோ தோழன் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்கின்ற எண்ணம்.
"மகேஷ் உன்ன அரவிந்த் சார் கூப்பர்ராரு.." உடன் பணிபுரியும் தோழனொருவன் வந்து சொல்லி விட்டு போக அரவிந்தின் அறைக்குள் நுழைய அங்கு அவனுக்கென சில கோப்புக்களை வைத்துக் கொண்டு காத்திருந்தான்,அரவிந்த்.
செய்ய வேண்டிய பணிகளை விளக்கிய படி கையில் இருந்த கோப்புக்களின் அடுக்கை அவனிடம் ஒப்படைத்திட சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்ட மகேஷின் மீது அவனுக்கு தனி மதிப்பு இருப்பது என்னவோ உண்மை தான்.
மீள பையனின் அறைக்குள் நுழைந்தவனை கேள்வியாய் பார்த்தான்,பையன்.
"என்ன சார்..? ஏதாச்சும் கேக்கனுமா..?" தொழிலிடம் என்பதால் மரியாதையுடன் அழைப்பவனின் அழைப்பை பையன் மறுத்து நின்றாலும் ஏற்பதில்லை,தோழன்.
"யார் கிட்ட ஃபைல்ஸ செக் பண்ண கொடுத்து இருக்கீங்க பி ஏ சார்...?" மடிக்கணனினியில் ஏதோ தட்டிய படி கேட்டான்,பையன்.
"மகேஷ் கிட்ட சார்.."
"ஓகே.."
"சார் இந்த பேபர்ஸ்ல சைன் வேணும்.." சில காகிதங்களை நீட்டிட படிக்காமல கையெழுத்துட்டிருந்தான்,பையன்.
"எத்தன தடவ சொல்றது உங்களுக்கு..? பேபர்ஸ் நீட்டுனா படிச்சு பாத்து சைன் பண்ண மாட்டீங்களா..?" கேலியாய் கேட்டவனுக்கு தெரியாமல் இல்லை,பையன் அவ்வாறு கையெழுத்திடுவதன் காரணம் அவன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை என்பது.
"சும்மா ஒரு சைன வச்சு என்ன பண்ண போறீங்க பி ஏ சார்..?"
"ஏன் உங்க சொத்து மொத்ததத்தயும் என்னோட பேருக்கு மாத்தி எழுதிக்குவேன் பரவாலியா..?"
"இதுக்கப்றம் அப்டி நடந்தா என்ன..? நடக்கலனா என்ன..? நா அவ்ளோ சொத்த வச்சிட்டு என்ன போறேன்..நானே எழுதி வச்சிர்லாங்குற முடிவுல தா இருக்கேன் பி ஏ சார்.." மனதில் தோன்றியதை அப்படியே பையன் கூறிட சட்டென தோழனின் முகம் வாடிப் போய்விட அவ்விடத்தில் நிலவிய சூழ்நிலையில் அத்தனை கனமும் இறுக்கமும்.
இயல்பாய் பேசி விட்டு தோழனின் முகம் பார்த்திடவுமே தான் சிதறவிட்ட வார்த்தைகளின் வீரியம் உரைத்திட அவனிடம் மன்னிப்புக் கேட்டிடும் முன் அவ்விடத்தில் இருந்து அகன்று விட்டவ அரவிந்தின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தாலும் மனதுக்குள் சிறு பயமும்.
"கெஞ்சி கேக்கறேன் சாமி..இவன் கிட்ட என்ன காப்பாத்தி விட்ரு.." கை கூப்பி கடவுளை வேண்டிட அவனின் வேண்டுதல் கடவுளின் செவிகளை எட்டியதோ என்னவோ..?
அதே நேரம்,
"இதுக்கப்றம் நீங்க இந்த கம்பனில தான் வேல செய்யப் போறீங்க..இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்..ஸோ எல்லார் கூடவும் இன்டர்ட்யூஸ் ஆகிக்கோங்க யாழினி.." மேலாளர் கூறி விட்டுச் செல்ல தன் அணியில் இருப்பவர்களுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்,யாழினி.
"டீம்ல ஆறு பேர் இருக்காங்கன்னு சொன்னீங்கல..இப்போ அஞ்சு பேர் தான் இருக்காங்க..மத்தது யாரு..? அவங்க இன்னிக்கி வர்லியா..?"
"அவ வந்துருவா..அஞ்சு பத்து நிமுஷம் வர்ரதுக்கு லேட் ஆயிடும் செல வேள.." அருகே இருந்த பெண் கூறி முடிக்கும் முன்னே மூச்சு வாங்க அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தாள்,இசை.
நெற்றியிலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வைத் துளிகளை துப்பட்டா நுனியால் ஒற்றிய படி தன்னிடத்தில் அமர்ந்தவளின் கவனத்தில் பதியவில்லை,அங்கே புதியாய் ஒரு பெண் அமர்ந்திருப்பது.
"என்ன இசை இன்னிக்கி லேட் ஆயிடுச்சு போல..ஏன் உன் ஹஸ்பண்ட் கூட வர்லியா நீ..?"
"ச்சே..அவரு கூட தான் வந்தேன்..இன்னிக்கி வீட்ல இருந்து வரும் போது லேட் ஆயிடுச்சு.."
"ஆமா எங்களுக்கு எப்போ உன்னோட ஹஸ்பன்ட இன்டர்ட்யூஸ் பண்ணி வக்கப் போற.."
"அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.." என்றவளின் மனமோ,
"நானே என் வாழ்க்க எந்த போக்குல போகுதுன்னு தெரியாம அல்லாடிகிட்டு இருக்கேன்..இதுல இன்டர்டக்ஷன் ஒன்னு தான் கொறச்சல்.." என்று நினைத்துக் கொண்டது வேறு கதை.
"இசை என்னடி பின்னால திரும்பாமலே இருக்க..இங்க பாரு..புதுசா நம்ம டீம்ல ஜாய்ன் ஆகியிருக்காங்க.." தோழியின் அழைப்புக்கேற்ப புன்னகையுடன் திரும்பியவளின் இதழ்கள் அப்படியே பாதியில் நின்று போனது,அவ்விடத்தில் இருந்து யாழினியைக் கண்டதும்.
"ஹாய் ஐ அம் யாழினி..இன்னிக்கி தா ஜாய்ன் பண்ணி இருக்கேன்.." கை நீட்டிய படி கூறியவளின் கரத்தை மனமின்றி பற்றி குலுக்கி விடுவித்தவளுக்கு தெரிந்து தான் இருந்தது,அது பையனின் உடன் பிறந்த தங்கையென்பது.
"என்னங்க நீங்க யார்னு சொல்லவே மாட்டேங்குறீங்க..?" தலை சரித்துக் கேட்ட யாழினியின் செயலில் ஏனோ பாவையவளுக்கு கோபம் தலைக்கேறியது.
"நா இசையரசி.." பட்டும் படாமல் கத்தரித்தது போல் சொல்லி விட்டு திரும்பியவளின் செயலில் அவளின் முகம் சற்றே கறுத்துப் போனது.
முகத்தில் அடித்தாற் போல் நடந்து கொண்டவளின் செயலில் சுற்றி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்வு.எல்லோரையும் அனுசரித்து பழகும் பாவையவள் அனைவரிடமும் இன்முகம் அறிந்தவர்களுக்கு அவளின் இந்த நடந்தை கொஞ்சம் அதிர்ச்சியே.
"என்ன இசை..எதுக்கு இப்டி மொகத்துல அடிச்ச மாதிரி நடந்துகிட்ட..?" அருகே இருந்து தாமரை உலுக்க முகத்தில் கோபம் மின்ன முறைத்தவளின் விழிகளில் தெரிந்த அதட்டலில் அமைதியாகிப் போயிருந்தாள்,தாமரை.
உயிர்த்தொடும்.
2024.08.31