யாழின் இசையாய்..
யாழிசை 04
தன் முன்னே வந்து நின்ற அண்ணனின் கேள்வியில் விக்கித்துப் போய் நின்ற யாழினிக்கு விழிகள் கலங்குவது போல் இருந்தன.
"என்னாச்சு யாழினி..? எதுக்கு கண்ணெல்லாம் கலங்கி இருக்கு..?"
"ஒன்னுல்லண்ணா.."
அழுகை அடக்கிய குரலில் கூறிட தமிழின் முகத்தில் சிந்தனையில் சாயல்.
"நீ ஏதோ மறக்கிற யாழினி..?"
"ஒன்னும் மறக்கலணா.."
"உண்மய சொல்லு யாழினி.." அவன் அதட்டிட அவளோ அவனின் தோளில் சாய்ந்து கதறியே விட்டாள். சில நாட்களாய் அடைக்கி வைத்திருந்த வலிகளும் வேதனைகளும் கண்ணீராய் வெளியேறிட எதுவும் கேட்காமல் மெதுவாய் தட்டிக் கொடுத்தான்,அண்ணன்காரன்.
அவளுக்கோ அழுகை மட்டுப்படவேயில்லை.குற்றவுணர்வும் தான் விட்டொழித்த வார்த்தைகளும் மனதில் படமாய் விரிந்திட என்ன செய்வதென்று புரியவும் இல்லை.
"யாழினி அழாதடி..என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல..எதுக்கு இப்டி அழுதுகிட்டு இருக்க..?" தங்கையின் கண்ணீர் மனதைப் பிசைந்திட தமிழ் கேட்டதற்கு மறுப்பாய் தலையசைத்தவளோ விம்மி விம்மி அழுதாள்,
தன்னைத் தேற்றிட.
அழுகை அடங்கிட தேம்பல் முற்றுப் பெற்று விசும்பலும் நின்று போய்விட விழி நிமிர்த்தி அண்ணனை ஏறிடும் தைரியம் இல்லை,அவளுக்கு.
எங்கே அவன் கேட்டால் மொத்த உண்மையையும் உளறி விடுவாளோ என்று பயந்து தலை தாழ்ந்தவாறு விலகிச் சென்றிட தமிழின் மனதுக்குள் பலவிதமான கேள்விகள்.
பொழுது கடந்து மறுநாளும் விடிய அலுவலகத்துக்குள் நுழைந்த பாவையவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள்,தாமரை.
"அரசி என்னாச்சு..?என்னடி இன்னிக்கி டல்லா இருக்க..?"
"ஒன்னுல்லடி"
"பொய் சொல்லாத..ஏதோ நடந்துருக்கு.." தோழி துருவித் துருவி கேட்டிட மழுப்பி விட்டு விலகிச் சென்றவளை புரியாது பார்த்தாள்,தோழியவள்.
"என்னாச்சு இவளுக்கு..? என்னமோ ஒரு மாதிரி இருக்கா..இதுக்கு முன்னாடி இவ இப்டி கப்பல் கவுந்த மாதிரி சுத்திகிட்டு இருக்க மாட்டாளே.." நாடி தட்டியவளுக்கு அவளின் கலக்கத்துக்கான காரணத்தை ஊகித்திடக் கூட முடியவில்லை.
யாருடனும் பேசாது வேலையில் ஆழ்ந்தவளுக்கு பையனின் வார்த்தைகளே செவியில் ஒலித்து வதைத்துக் கொண்டிருந்தது.இடையிடையே கவனம் சிதற வேலையை முடித்தவளின் மனம் தனிமையைத் தேடி அலைய ஒருவாறு அலுவலகத்துக்கு பின்னே இருக்கும் மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்,நிம்மதியுடன்.
வீசிச் சென்ற காற்றும் அவள் மனதின் வெம்மையை தணிக்க முயன்று போய் இன்னும் வேகமெடுத்தது.காற்றின் வேகத்தில் சிக்கி ஆடித் திரிந்த சிகை முகத்தில் மோத அதை பின்னே தள்ளி விடும் மனநிலையில் கூட இல்லை,பாவையவள்.
இலக்கற்று வெறித்து அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கரமோ தனிச்சையாய் கையில் இருந்த நாட்குறிப்பைத் தடவிட ஏனோ புரட்டிப் பார்த்திடத் தோன்றியது.
தனியாக வருகையில் கையோடு அவளின் நாட்குறிப்பையும் எடுத்து வருவது அவளின் வாடிக்கையான பழக்கம்.
பையனைக் காதலிக்கத் துவங்கியது முதல் அவனின் நினைவுகளையும் அவளுக்கான அறிவுரைகளையும் எழுதி விடுவது வழக்கமாகிப் போனது.
அவனால் சில நேரம் மனம் காயப்பட அதை ஒன்றும் மனதுக்குள்ளே வைத்துக் கொண்டு மருகித் தவித்திட சத்தியமாய் இயலாது,அவளால்.
ஏனோ அடுத்தவர் யாரிடமும் காயத்தைச் சொன்னால் அவனைப் பற்றி தவறாய் நினைக்க கூடும் என்கின்ற எண்ணம் அவளை வாய் திறக்க விடாது.
உரைத்திடவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து மருகிடவும் முடியாமல் தவித்தவளுக்கு துணையாகிப் போனது,எழுதுகோலும் நாட்குறிப்பும் தான்.அவளின் வலி அவளோடே கரைந்திடட்டும் என்கின்ற எண்ணம் போலும்.
மெலிதாய் விரிந்த இதழ்களுடன் சில தாள்களை புரட்டியவளுக்கு நான்காம் பக்கத்தில் எழுதியிருந்தவை வெகுவாய் கவனத்தை ஈர்த்திற்று.
"ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் ஹிம்..அப்டித் தான் தோணுது..என்ன தான் முன்ன மாதிரி மனுஷன் உர்ருன்னு கல்ல முழுங்குன மாதிரி வெறப்பா இருந்தாலும் நமக்கு க்யூட் க்யூட்டா தெரிறாரு..பாக்கறப்போ எல்லாம் வயித்துல பட்டர் ஃப்ளை பறக்குது..வாந்தி வர்ர மாதிரி இருக்குது..மனுஷன பாத்தா நா நானாவே இல்ல..அப்போ இது லவ் தான..?" தனக்குத் தானே கேள்வி கேட்பது போல் எழுதியிருக்க அவளுக்கே புன்னகை.
உறைந்த முறுவறுடன் சில தாள்களை புரட்டிட காற்றில் ஆட முயன்ற தாளொன்றை இழுத்து ஒட்ட வைத்தது,இரு விரல்கள்.
"இன்னிக்க ரோபோ என்ன ரொம்ப திட்டுச்சு..அது மனசுல எனக்கு எடமே இல்லன்னு சொல்லிச்சு..ரொம்ப வலிக்கிது..நா அந்த ரோபோவ லவ் பண்ற மாதிரி அது என்ன வெறுத்துட்டு இருக்கா..?" கிறுக்கல் கையெழுத்தில் எழுதியிருக்க சற்றே பெரிதாகி கசிந்து போன மையுடன் இருந்த எழுத்துக்கள் சாட்சியம் கூறின,அவளின் கண்ணீர்த்துளிகளுக்கு.
இப்போதும் அதே நிலை தான்.அதில் மாற்றம் இல்லை என நினைத்தவளின் விரல்களோ அடுத்த பக்கத்தை புரட்டிட கையில் அகப்பட்டது,தனக்கே எழுதி வைத்த கடிதமொன்று.அதில் இருந்த வரிகளை வாசித்த பின் ஏனோ அவளின் மனதுக்கு மொத்தமாய் தீர்வு கிடைத்த உணர்வு.
"அவரு பத்தி முழுசா தெரிஞ்சு தான் லவ் பண்ற நீ..அவர முழுசா புரிஞ்சிகிட்டு இருந்தா அவரும் உன்ன மாதிரியே உன்ன லவ் பண்ணனும்னு எப்டி எதிர்பாக்கலாம்..? அப்டி எதிர்பாத்தா அது லவ்வாகிடுமா..?"
"அவரு உன்ன லவ்வே பண்ணலனாலும் உன்ன வெறுத்தாலும் அவர டார்ச்சர் பண்ணாம லவ் பண்றதால எதுவும் ஆகிடாது...வாழ்க்கைல ரொம்ப நொந்து போயிருக்குற மனுஷன் கொஞ்சம் ரஃப் அன்ட் டஃப்பாத்தான் இருப்பாரு..அதுக்காக அவரு என்ன கெட்டவர்னு ஆயிடுமா..?"
"அவருக்கு உன்ன புடிக்கலனாலும் லவ் பண்ணு..லவ் பண்ணிட்டே இரு..அவர லவ் பண்றதுக்கு உனக்கு இல்லாத உரிமயா..? உன்ன லவ் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு அவருக்கு கூட ரைட்ஸ் இல்ல..நீ உன் பாட்டுக்கு லவ் பண்ணு..அந்த மனுஷன் கிட்ட இருந்து எதயும் எதிர்பாக்காத..ஒத்த பார்வைய கூட..கல்லுளி மங்கன் உன்ன கண்டிப்பா திரும்பிக் கூட பாக்காது ரோபோ.."
"இங்க பாரு இசை..லவ்வுங்குறது ஒரு ஃபீல் அது தானா வரனும்..நாமளா வர வெக்க கூடாது..அது இங்கயும் பொருந்தும்..அவருக்கு உன் மேல லவ் வர்ர வர வெயிட் பண்ணு..வரும் வர நீ இன்னும் அதிகமா லவ் பண்ணு.."
"ஒன்னு புரிஞ்சுக்கோ இசை..அந்த ரோபோவ விட நீ லவ் பண்ண யாரும் பொருத்தமா கெடக்க மாட்டாங்க..என்ன தான் வெறப்பா திரிஞ்சு பேய் மாதிரி கத்தினாலும் ஹீ ஈஸ் அ ப்யூர் ஸோல்..அது உனக்கு தெரியும் தான..அப்றம் எதுக்குடி இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ ஃபீல் பண்ற..இத விட சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் காத்திருக்கு..அப்போ அதெல்லாம் நடக்குறப்போ நீ என்ன பண்ணுவ இசை..?"
"அவர விட அதிகமா யாரவும் உன்னால லவ் பண்ண முடியாது..அவர விட்டுட்டு யாரயும் உன்னால நெனச்சுக் கூட பாக்க முடியாதுன்னு தெரியும்ல..அதுக்கப்றம் எதுக்கு இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி டைம வேஸ்ட் பண்ற..பேசாம விட்டுடு.."
"விட்டுத்தள்ளிட்டு வேலய பாரு..அந்த மரமண்ட ரோபோக்கு ஒருநாள் உன்னோட லவ் புரியும்..அப்போ வந்து கண்ணே மணியேன்னு கொஞ்சும்..அப்போ வச்சி செஞ்சு பழி வாங்கு.."
"எல்லாம் ஒரு நாள் சரியாகும் இசை..அந்த ரோபோ உன்னோட லவ்வ புரிஞ்சுக்குற நாளும் கண்டிப்பா வரும்..ரொம்ப அலட்டிக்காம விட்டுத் தள்ளு..நம்ம அரசியல்ல எல்லாம் சகஜம்..ஸோ நோ வொரீஸ்..ஆல் ஈஸ் வெல்.." என்றவாறு அவள் எழுதியது முற்றுப் பெற்றிருக்க படித்தவளுக்கு முற்றிலும் மனம் தெளிந்தது போல் தோன்றிட நிம்மதி பரவியது,மனம் பூராகவும்.
"புரியுதா இசை..? அவரு உன்ன வெளிப்படயாவே வெறுத்தாலும் நீ உன் லவ்வ மாத்திக்காத.." தனக்குத் தானே கூறித் தேற்றிக் கொண்டவளின் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து போயிருந்தது,மாயமென.
●●●●●●●●
வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்ட சக்திக்கு காரணம் தெரிந்தாலும் அதை தீர்த்து வைத்திடும் வழிவகை தான் தெரியவில்லை.
மனையாளைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.சிறு விடயத்துக்கும் அதீதமாய் உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றுவது தான் அவள் இழுத்துக் கொண்ட சிக்கல்களுக்கும் கொடுத்து விட்ட காயங்களுக்கும் மூல முதற்காரணமென்று அறிந்து தான் இருந்தான்,அவனும்.
"அபி என்ன யோசிச்சிகிட்டு இருக்க..?"
"ஒன்னுல்லங்க.." பொய்யைக் கூறி சமாளித்தவளுக்கு கணவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்பது வேறு பெரும் அலைக்கழிப்பாய்.
அவளின் கலக்கம் அவனுக்கு தெளிவாய் புரிந்திருக்கும் போலும்.
கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் அருகே வந்தமர்ந்து தன் முகம் பார்த்திடச் செய்ய அவளுக்கோ அவனின் விழிகளை சந்தித்திட முடியவில்லை;முடியவேயில்லை.
"என் கண்ண பாரு அபி.." அவனின் உயிர்த்தொடும் குரலில் நிமிர்ந்தவளுக்கு அவனின் விழிகளில் தெரிந்த பரிவைக் கண்டதும் கழிவிரகத்தில் அழுகை வந்திட கண்ணீர் வழிந்தது,கன்னத்தின் ஓரமாய்.
"நா தப்பு பண்ணிட்டேங்க..சரியே பண்ண முடியாத அளவு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.." அழுது கொண்ட கத்தியவளின் சத்தம் அறையைத் தாண்டி வெளியே போகும் சாத்தியம் இருக்க சாற்றியிருந்த கதவை தாழிட்டு விட்டு வந்தமர்ந்தான்,கணவன்.
"அபி என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல.."
"எனக்கு எல்லாம் தெரியும்ங்க.." உடைந்த குரலில் கூறியவளோ கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவனை ஏறிட சக்திக்கோ செய்வதறியா சூழ்நிலை.
"யாரு சொன்னா.." பிசிர் தட்டா குரலில் கேட்டவனுக்கு மேற்கொண்டு எதுவும் பேசிடவும் முடியவில்லை.
"அது அது..எனக்கு தெரிஞ்சவங்க சொன்னாங்க.." திணறிய படி கூறியவளுக்கு மீண்டும் அழுகை உடைப்பெடுக்க அவனைக் கட்டிக் கொண்டு கதறியவளை மெதுவாய் தேற்றி விட்டன,அவனின் கரங்கள்.
போனது போகட்டும் என்று ஆறுதல் சொல்ல அவனின் மனசாட்சி இடம் கொடுத்திடாது.அவளின் செயலாய் நடந்த களேபரங்கள் ஒன்றும் சுலபமாய் கடந்து போய் விடக்கூடியவை அல்லவே.
அபிக்கோ அவன் ஏதும் வார்த்தைகளை கூறி தன்னை ஆற்றுப்படுத்த முயலாததே தான் செய்த தவறின் வீரியத்தை இன்னும் எடுத்துரைத்திட இன்னும் வலுத்துப் பெருக்கெடுத்தது,அழுகை.
குற்றவுணர்வில் அழுது கரைந்தே ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்,அபிராமி.
அதே நேரம்,
வாழ்வில் நடந்தவை வரிசையாய் நினைவிலாட ஆழமாய் நெடுமூச்செறிந்து கோர்த்த கைகளை பின்னந்தலையில் வைத்தவாறு இருக்கையில் சரிந்தமர்ந்தவனுக்கு மனதில் அழுத்தம்.
தோழனின் நிலமை புரிந்தவன் போல் அரவிந்த கதவைத் தட்டிக் கொண்டு வந்திட சட்டென தன்னை மீட்டு இறுக்கத்தை கொண்டு வந்தவனுக்கு அரவிந்தின் முகத்தில் இருந்த பதட்டம் யோசனைத் துளிகளை தெளித்து விட்டன.
"என்னடா என்ன ஆச்சு..? என்ன ஒரு மாதிரி பரபரப்பா இருக்க..வாட் ஹேப்பன்ட்..?"
"டேய் உன் சித்தப்பா வர்ராறாம்.."
"எதே..?" அதிர்வில் குளித்த விழிகளுடன் எழுந்தே நின்று விட்டான்,பையன்.
"ஆமாட நாளக்கி ஃப்ளைட்..நாளன்னிக்கி இங்க வந்துருவாராம்..நீ பண்ணிட்டு இருக்குற திருகுதாளம் தெரிஞ்சுது நீ மட்டுல்ல நானும் காலி.."
"யார்ரா சொன்னா..?"
"இப்போ உன் சித்தப்பா தான் ஃபோன் பண்ணி சொன்னாரு.." என்றிட பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுந்தத் தடவியவனின் மனமோ தான் செய்ய வேண்டிய வேலைகளை தாமதியாமல் பட்டியலிட்டது.
"மச்சான்..நீ மட்டும் யோசிக்காம என்ன பண்ணப் போற ஏது பண்ணப்போறன்னு என் கிட்டவும் சொல்லுடா..நீ மட்டும் இப்டி இருக்குறத தெரிஞ்சுதுன்னு வை..உன் சித்தப்பா என்னோட கழுத்த அறுத்துறுவாரு.." புலம்பிய அரவிந்துக்கோ பையனை விட பதட்டம்.
பின்னே பையன் செய்யும் அனைத்திற்கும் அவனைப் பிடித்து காய்த்து எடுத்தால் பதறாமல் இருக்க அவன் சிலையா என்ன..?
"டேய் என்னடா இப்பவும் காலைல மாதிரி தியானம் பண்ணிட்டு இருக்க..ஏதாவது பேசித் தொலயேன்டா.."
"ரிலாக்ஸ் அரவிந்த்..ரிலாக்ஸ்..கொஞ்சம் யோசிக்கலாம் நீ பர்ஸ்ட் உக்காரு.." இருக்கையைக் காட்டிட ஷர்ட்டின் இரண்டாவது பட்டனை திறந்து விட்டவாறே அமர்ந்து கொண்டான்,தோழன்.
"இவனுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி ஆஸ்பத்திரில போய் படுத்துருவோம் போல இருக்கே.." முணகியவனின் வார்த்தைகள் பையனின் செவியிலும் விழாமல் இல்லை.
உயிர்த்தொடும்.
2024.08.22
யாழிசை 04
தன் முன்னே வந்து நின்ற அண்ணனின் கேள்வியில் விக்கித்துப் போய் நின்ற யாழினிக்கு விழிகள் கலங்குவது போல் இருந்தன.
"என்னாச்சு யாழினி..? எதுக்கு கண்ணெல்லாம் கலங்கி இருக்கு..?"
"ஒன்னுல்லண்ணா.."
அழுகை அடக்கிய குரலில் கூறிட தமிழின் முகத்தில் சிந்தனையில் சாயல்.
"நீ ஏதோ மறக்கிற யாழினி..?"
"ஒன்னும் மறக்கலணா.."
"உண்மய சொல்லு யாழினி.." அவன் அதட்டிட அவளோ அவனின் தோளில் சாய்ந்து கதறியே விட்டாள். சில நாட்களாய் அடைக்கி வைத்திருந்த வலிகளும் வேதனைகளும் கண்ணீராய் வெளியேறிட எதுவும் கேட்காமல் மெதுவாய் தட்டிக் கொடுத்தான்,அண்ணன்காரன்.
அவளுக்கோ அழுகை மட்டுப்படவேயில்லை.குற்றவுணர்வும் தான் விட்டொழித்த வார்த்தைகளும் மனதில் படமாய் விரிந்திட என்ன செய்வதென்று புரியவும் இல்லை.
"யாழினி அழாதடி..என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல..எதுக்கு இப்டி அழுதுகிட்டு இருக்க..?" தங்கையின் கண்ணீர் மனதைப் பிசைந்திட தமிழ் கேட்டதற்கு மறுப்பாய் தலையசைத்தவளோ விம்மி விம்மி அழுதாள்,
தன்னைத் தேற்றிட.
அழுகை அடங்கிட தேம்பல் முற்றுப் பெற்று விசும்பலும் நின்று போய்விட விழி நிமிர்த்தி அண்ணனை ஏறிடும் தைரியம் இல்லை,அவளுக்கு.
எங்கே அவன் கேட்டால் மொத்த உண்மையையும் உளறி விடுவாளோ என்று பயந்து தலை தாழ்ந்தவாறு விலகிச் சென்றிட தமிழின் மனதுக்குள் பலவிதமான கேள்விகள்.
பொழுது கடந்து மறுநாளும் விடிய அலுவலகத்துக்குள் நுழைந்த பாவையவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள்,தாமரை.
"அரசி என்னாச்சு..?என்னடி இன்னிக்கி டல்லா இருக்க..?"
"ஒன்னுல்லடி"
"பொய் சொல்லாத..ஏதோ நடந்துருக்கு.." தோழி துருவித் துருவி கேட்டிட மழுப்பி விட்டு விலகிச் சென்றவளை புரியாது பார்த்தாள்,தோழியவள்.
"என்னாச்சு இவளுக்கு..? என்னமோ ஒரு மாதிரி இருக்கா..இதுக்கு முன்னாடி இவ இப்டி கப்பல் கவுந்த மாதிரி சுத்திகிட்டு இருக்க மாட்டாளே.." நாடி தட்டியவளுக்கு அவளின் கலக்கத்துக்கான காரணத்தை ஊகித்திடக் கூட முடியவில்லை.
யாருடனும் பேசாது வேலையில் ஆழ்ந்தவளுக்கு பையனின் வார்த்தைகளே செவியில் ஒலித்து வதைத்துக் கொண்டிருந்தது.இடையிடையே கவனம் சிதற வேலையை முடித்தவளின் மனம் தனிமையைத் தேடி அலைய ஒருவாறு அலுவலகத்துக்கு பின்னே இருக்கும் மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்,நிம்மதியுடன்.
வீசிச் சென்ற காற்றும் அவள் மனதின் வெம்மையை தணிக்க முயன்று போய் இன்னும் வேகமெடுத்தது.காற்றின் வேகத்தில் சிக்கி ஆடித் திரிந்த சிகை முகத்தில் மோத அதை பின்னே தள்ளி விடும் மனநிலையில் கூட இல்லை,பாவையவள்.
இலக்கற்று வெறித்து அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கரமோ தனிச்சையாய் கையில் இருந்த நாட்குறிப்பைத் தடவிட ஏனோ புரட்டிப் பார்த்திடத் தோன்றியது.
தனியாக வருகையில் கையோடு அவளின் நாட்குறிப்பையும் எடுத்து வருவது அவளின் வாடிக்கையான பழக்கம்.
பையனைக் காதலிக்கத் துவங்கியது முதல் அவனின் நினைவுகளையும் அவளுக்கான அறிவுரைகளையும் எழுதி விடுவது வழக்கமாகிப் போனது.
அவனால் சில நேரம் மனம் காயப்பட அதை ஒன்றும் மனதுக்குள்ளே வைத்துக் கொண்டு மருகித் தவித்திட சத்தியமாய் இயலாது,அவளால்.
ஏனோ அடுத்தவர் யாரிடமும் காயத்தைச் சொன்னால் அவனைப் பற்றி தவறாய் நினைக்க கூடும் என்கின்ற எண்ணம் அவளை வாய் திறக்க விடாது.
உரைத்திடவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து மருகிடவும் முடியாமல் தவித்தவளுக்கு துணையாகிப் போனது,எழுதுகோலும் நாட்குறிப்பும் தான்.அவளின் வலி அவளோடே கரைந்திடட்டும் என்கின்ற எண்ணம் போலும்.
மெலிதாய் விரிந்த இதழ்களுடன் சில தாள்களை புரட்டியவளுக்கு நான்காம் பக்கத்தில் எழுதியிருந்தவை வெகுவாய் கவனத்தை ஈர்த்திற்று.
"ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் ஹிம்..அப்டித் தான் தோணுது..என்ன தான் முன்ன மாதிரி மனுஷன் உர்ருன்னு கல்ல முழுங்குன மாதிரி வெறப்பா இருந்தாலும் நமக்கு க்யூட் க்யூட்டா தெரிறாரு..பாக்கறப்போ எல்லாம் வயித்துல பட்டர் ஃப்ளை பறக்குது..வாந்தி வர்ர மாதிரி இருக்குது..மனுஷன பாத்தா நா நானாவே இல்ல..அப்போ இது லவ் தான..?" தனக்குத் தானே கேள்வி கேட்பது போல் எழுதியிருக்க அவளுக்கே புன்னகை.
உறைந்த முறுவறுடன் சில தாள்களை புரட்டிட காற்றில் ஆட முயன்ற தாளொன்றை இழுத்து ஒட்ட வைத்தது,இரு விரல்கள்.
"இன்னிக்க ரோபோ என்ன ரொம்ப திட்டுச்சு..அது மனசுல எனக்கு எடமே இல்லன்னு சொல்லிச்சு..ரொம்ப வலிக்கிது..நா அந்த ரோபோவ லவ் பண்ற மாதிரி அது என்ன வெறுத்துட்டு இருக்கா..?" கிறுக்கல் கையெழுத்தில் எழுதியிருக்க சற்றே பெரிதாகி கசிந்து போன மையுடன் இருந்த எழுத்துக்கள் சாட்சியம் கூறின,அவளின் கண்ணீர்த்துளிகளுக்கு.
இப்போதும் அதே நிலை தான்.அதில் மாற்றம் இல்லை என நினைத்தவளின் விரல்களோ அடுத்த பக்கத்தை புரட்டிட கையில் அகப்பட்டது,தனக்கே எழுதி வைத்த கடிதமொன்று.அதில் இருந்த வரிகளை வாசித்த பின் ஏனோ அவளின் மனதுக்கு மொத்தமாய் தீர்வு கிடைத்த உணர்வு.
"அவரு பத்தி முழுசா தெரிஞ்சு தான் லவ் பண்ற நீ..அவர முழுசா புரிஞ்சிகிட்டு இருந்தா அவரும் உன்ன மாதிரியே உன்ன லவ் பண்ணனும்னு எப்டி எதிர்பாக்கலாம்..? அப்டி எதிர்பாத்தா அது லவ்வாகிடுமா..?"
"அவரு உன்ன லவ்வே பண்ணலனாலும் உன்ன வெறுத்தாலும் அவர டார்ச்சர் பண்ணாம லவ் பண்றதால எதுவும் ஆகிடாது...வாழ்க்கைல ரொம்ப நொந்து போயிருக்குற மனுஷன் கொஞ்சம் ரஃப் அன்ட் டஃப்பாத்தான் இருப்பாரு..அதுக்காக அவரு என்ன கெட்டவர்னு ஆயிடுமா..?"
"அவருக்கு உன்ன புடிக்கலனாலும் லவ் பண்ணு..லவ் பண்ணிட்டே இரு..அவர லவ் பண்றதுக்கு உனக்கு இல்லாத உரிமயா..? உன்ன லவ் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு அவருக்கு கூட ரைட்ஸ் இல்ல..நீ உன் பாட்டுக்கு லவ் பண்ணு..அந்த மனுஷன் கிட்ட இருந்து எதயும் எதிர்பாக்காத..ஒத்த பார்வைய கூட..கல்லுளி மங்கன் உன்ன கண்டிப்பா திரும்பிக் கூட பாக்காது ரோபோ.."
"இங்க பாரு இசை..லவ்வுங்குறது ஒரு ஃபீல் அது தானா வரனும்..நாமளா வர வெக்க கூடாது..அது இங்கயும் பொருந்தும்..அவருக்கு உன் மேல லவ் வர்ர வர வெயிட் பண்ணு..வரும் வர நீ இன்னும் அதிகமா லவ் பண்ணு.."
"ஒன்னு புரிஞ்சுக்கோ இசை..அந்த ரோபோவ விட நீ லவ் பண்ண யாரும் பொருத்தமா கெடக்க மாட்டாங்க..என்ன தான் வெறப்பா திரிஞ்சு பேய் மாதிரி கத்தினாலும் ஹீ ஈஸ் அ ப்யூர் ஸோல்..அது உனக்கு தெரியும் தான..அப்றம் எதுக்குடி இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ ஃபீல் பண்ற..இத விட சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் காத்திருக்கு..அப்போ அதெல்லாம் நடக்குறப்போ நீ என்ன பண்ணுவ இசை..?"
"அவர விட அதிகமா யாரவும் உன்னால லவ் பண்ண முடியாது..அவர விட்டுட்டு யாரயும் உன்னால நெனச்சுக் கூட பாக்க முடியாதுன்னு தெரியும்ல..அதுக்கப்றம் எதுக்கு இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி டைம வேஸ்ட் பண்ற..பேசாம விட்டுடு.."
"விட்டுத்தள்ளிட்டு வேலய பாரு..அந்த மரமண்ட ரோபோக்கு ஒருநாள் உன்னோட லவ் புரியும்..அப்போ வந்து கண்ணே மணியேன்னு கொஞ்சும்..அப்போ வச்சி செஞ்சு பழி வாங்கு.."
"எல்லாம் ஒரு நாள் சரியாகும் இசை..அந்த ரோபோ உன்னோட லவ்வ புரிஞ்சுக்குற நாளும் கண்டிப்பா வரும்..ரொம்ப அலட்டிக்காம விட்டுத் தள்ளு..நம்ம அரசியல்ல எல்லாம் சகஜம்..ஸோ நோ வொரீஸ்..ஆல் ஈஸ் வெல்.." என்றவாறு அவள் எழுதியது முற்றுப் பெற்றிருக்க படித்தவளுக்கு முற்றிலும் மனம் தெளிந்தது போல் தோன்றிட நிம்மதி பரவியது,மனம் பூராகவும்.
"புரியுதா இசை..? அவரு உன்ன வெளிப்படயாவே வெறுத்தாலும் நீ உன் லவ்வ மாத்திக்காத.." தனக்குத் தானே கூறித் தேற்றிக் கொண்டவளின் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து போயிருந்தது,மாயமென.
●●●●●●●●
வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்ட சக்திக்கு காரணம் தெரிந்தாலும் அதை தீர்த்து வைத்திடும் வழிவகை தான் தெரியவில்லை.
மனையாளைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.சிறு விடயத்துக்கும் அதீதமாய் உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றுவது தான் அவள் இழுத்துக் கொண்ட சிக்கல்களுக்கும் கொடுத்து விட்ட காயங்களுக்கும் மூல முதற்காரணமென்று அறிந்து தான் இருந்தான்,அவனும்.
"அபி என்ன யோசிச்சிகிட்டு இருக்க..?"
"ஒன்னுல்லங்க.." பொய்யைக் கூறி சமாளித்தவளுக்கு கணவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்பது வேறு பெரும் அலைக்கழிப்பாய்.
அவளின் கலக்கம் அவனுக்கு தெளிவாய் புரிந்திருக்கும் போலும்.
கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் அருகே வந்தமர்ந்து தன் முகம் பார்த்திடச் செய்ய அவளுக்கோ அவனின் விழிகளை சந்தித்திட முடியவில்லை;முடியவேயில்லை.
"என் கண்ண பாரு அபி.." அவனின் உயிர்த்தொடும் குரலில் நிமிர்ந்தவளுக்கு அவனின் விழிகளில் தெரிந்த பரிவைக் கண்டதும் கழிவிரகத்தில் அழுகை வந்திட கண்ணீர் வழிந்தது,கன்னத்தின் ஓரமாய்.
"நா தப்பு பண்ணிட்டேங்க..சரியே பண்ண முடியாத அளவு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.." அழுது கொண்ட கத்தியவளின் சத்தம் அறையைத் தாண்டி வெளியே போகும் சாத்தியம் இருக்க சாற்றியிருந்த கதவை தாழிட்டு விட்டு வந்தமர்ந்தான்,கணவன்.
"அபி என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல.."
"எனக்கு எல்லாம் தெரியும்ங்க.." உடைந்த குரலில் கூறியவளோ கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவனை ஏறிட சக்திக்கோ செய்வதறியா சூழ்நிலை.
"யாரு சொன்னா.." பிசிர் தட்டா குரலில் கேட்டவனுக்கு மேற்கொண்டு எதுவும் பேசிடவும் முடியவில்லை.
"அது அது..எனக்கு தெரிஞ்சவங்க சொன்னாங்க.." திணறிய படி கூறியவளுக்கு மீண்டும் அழுகை உடைப்பெடுக்க அவனைக் கட்டிக் கொண்டு கதறியவளை மெதுவாய் தேற்றி விட்டன,அவனின் கரங்கள்.
போனது போகட்டும் என்று ஆறுதல் சொல்ல அவனின் மனசாட்சி இடம் கொடுத்திடாது.அவளின் செயலாய் நடந்த களேபரங்கள் ஒன்றும் சுலபமாய் கடந்து போய் விடக்கூடியவை அல்லவே.
அபிக்கோ அவன் ஏதும் வார்த்தைகளை கூறி தன்னை ஆற்றுப்படுத்த முயலாததே தான் செய்த தவறின் வீரியத்தை இன்னும் எடுத்துரைத்திட இன்னும் வலுத்துப் பெருக்கெடுத்தது,அழுகை.
குற்றவுணர்வில் அழுது கரைந்தே ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்,அபிராமி.
அதே நேரம்,
வாழ்வில் நடந்தவை வரிசையாய் நினைவிலாட ஆழமாய் நெடுமூச்செறிந்து கோர்த்த கைகளை பின்னந்தலையில் வைத்தவாறு இருக்கையில் சரிந்தமர்ந்தவனுக்கு மனதில் அழுத்தம்.
தோழனின் நிலமை புரிந்தவன் போல் அரவிந்த கதவைத் தட்டிக் கொண்டு வந்திட சட்டென தன்னை மீட்டு இறுக்கத்தை கொண்டு வந்தவனுக்கு அரவிந்தின் முகத்தில் இருந்த பதட்டம் யோசனைத் துளிகளை தெளித்து விட்டன.
"என்னடா என்ன ஆச்சு..? என்ன ஒரு மாதிரி பரபரப்பா இருக்க..வாட் ஹேப்பன்ட்..?"
"டேய் உன் சித்தப்பா வர்ராறாம்.."
"எதே..?" அதிர்வில் குளித்த விழிகளுடன் எழுந்தே நின்று விட்டான்,பையன்.
"ஆமாட நாளக்கி ஃப்ளைட்..நாளன்னிக்கி இங்க வந்துருவாராம்..நீ பண்ணிட்டு இருக்குற திருகுதாளம் தெரிஞ்சுது நீ மட்டுல்ல நானும் காலி.."
"யார்ரா சொன்னா..?"
"இப்போ உன் சித்தப்பா தான் ஃபோன் பண்ணி சொன்னாரு.." என்றிட பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுந்தத் தடவியவனின் மனமோ தான் செய்ய வேண்டிய வேலைகளை தாமதியாமல் பட்டியலிட்டது.
"மச்சான்..நீ மட்டும் யோசிக்காம என்ன பண்ணப் போற ஏது பண்ணப்போறன்னு என் கிட்டவும் சொல்லுடா..நீ மட்டும் இப்டி இருக்குறத தெரிஞ்சுதுன்னு வை..உன் சித்தப்பா என்னோட கழுத்த அறுத்துறுவாரு.." புலம்பிய அரவிந்துக்கோ பையனை விட பதட்டம்.
பின்னே பையன் செய்யும் அனைத்திற்கும் அவனைப் பிடித்து காய்த்து எடுத்தால் பதறாமல் இருக்க அவன் சிலையா என்ன..?
"டேய் என்னடா இப்பவும் காலைல மாதிரி தியானம் பண்ணிட்டு இருக்க..ஏதாவது பேசித் தொலயேன்டா.."
"ரிலாக்ஸ் அரவிந்த்..ரிலாக்ஸ்..கொஞ்சம் யோசிக்கலாம் நீ பர்ஸ்ட் உக்காரு.." இருக்கையைக் காட்டிட ஷர்ட்டின் இரண்டாவது பட்டனை திறந்து விட்டவாறே அமர்ந்து கொண்டான்,தோழன்.
"இவனுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி ஆஸ்பத்திரில போய் படுத்துருவோம் போல இருக்கே.." முணகியவனின் வார்த்தைகள் பையனின் செவியிலும் விழாமல் இல்லை.
உயிர்த்தொடும்.
2024.08.22
Last edited: