யாழின் இசையாய்..
யாழிசை 08(i)
"வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் திரு.யாழ் வேந்தன் மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டு போலியென ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது" சமூக வலைத்தளங்களில் பரவலாய் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க இசையவளோ பூஜையறையில் நின்று மனமுருக கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள்.
ஏனோ பையனின் மீதிருந்த அவப்பெயர் இப்போது முற்றாய் துடைத்தெறியப்பட்டது அவளுக்குள் விதைத்த நிம்மதிக்கு அளவே இல்லை.அவன் காட்டிக் கொள்ளா விடினும் அவனுக்குள் அந்த பொய்ப்பழி சிறு காயத்தையேனும் தந்திருக்காது என்பது நிச்சயம் இல்லையே.
கடவுளிடம் வேண்டி விட்டு கலங்கியிருந்த விழிகளின் ஈரத்தை ஒளித்து வைத்தவளோ நிறைவான புன்னகையுடன் வெளியே வர அங்கு கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து இருந்த ராமநாதனின் மனதில் நிறைவான எண்ணம்.
"அம்மாடி வேந்தன் வந்துட்டானா..?"
"இல்ல மாமா..இப்போ வந்துருவாரு.." பொய்யாய் சமாளித்ததை உண்மையாக்கும் விதமாய் வழமைக்கு மாறாய் சற்றே குறைந்திருந்த இறுக்கத்துடன் உள் நுழைந்தான்,பையன்.
ஏனோ அவனைக் கண்டதும் அவளுக்கு புன்னகைக்கத் தோன்றிற்று.மெதுவாய் யாழவனைப் பார்த்து இசையவள் இதழ் விரிக்க அவனின் இதழ்களுமே மெல்லிய முறுவலை நெளிய விட்டது.
சிறிய தந்தை இருப்பதால் கடமைக்காக புன்னகைத்திடவில்லை,அவன்.மனதின் அழுத்தம் தளர்ந்து குறைந்திருக்க அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றால் ஆழ் மனம் உந்த அவளிடம் முகம் திருப்பிக் கொள்ள முடியாமல் போனது என்பது தான் உண்மை.
எப்போதும் இருக்கும் துள்ளலுடன் இருந்திருந்தால் பாவையவளும் அவன் புன்னைகயைக் கண்டு துள்ளி குதித்திருப்பாள்.மனதில் இருந்த நிர்மலம் அவளின் கற்பனை இறக்கைகளை சற்று மட்டுப்படுத்தியதோ என்னவோ...?
தந்தைக்கும் மகனுக்கும் தனிமை கொடுத்து விட்டு அவள் விலகிச் சென்றிட முதலில் பேச்சைத் துவங்கியது,ராமநாதன் தான்.
நேற்று இருவருக்கும் ஆறுதலாய் பேசிட நேரம் இருக்கவில்லை.ராமநாதனுக்கு பயணக் களைப்பு என்றால் பையனுக்கு வழக்கின் தீர்ப்பை பற்றிய அழுத்தம்.அதனால் சுக நல விசாரிப்போடு இருவரின் உரையாடலும் முற்றுப் பெற மீண்டும் நேரம் கிடைத்தது,இப்பொழுது தான்.
"எப்டி இருக்கடா..? நல்லா இருக்கியா..?"
"ஆமா சித்தப்பா..நா நல்லா இருக்கேன்..நீங்க எப்டி இருக்கீங்க..?"
"நா நல்லா இருக்கேன்..என்னடா என்னோட பொண்ணு கிட்ட நல்லா நடந்துக்குற தான..இல்ல எப்பவும் மாதிரு உர்ருன்னு இருக்கியா..?" அவர் இசையைக் குறிப்பிட்டு கேட்டிட அவரின் உரிமையான அழைப்பில் அவனுக்கு சிறு கோபம்.
தன் மருமகள் என்று சொல்லியிருந்தால் இலகுவாய் கடந்திருப்பான்.தன் மகள் என்று கூறிக் கொண்டு தன்னையே அதட்டுவது அவர் மீதான பையனின் உரிமையுணர்வை தூண்டி விட்டதே.
"அதெல்லாம் நல்லா தான் பாத்துக்கறேன் சித்தப்பா.." வார்த்தைகளை உதிர்க்கும் போதே அவளுடன் காட்டும் கடின முகம் தான் கண் முன்னே வந்து சென்றது.
"இங்க பாரு டா..நா ஒன்னு சொல்லிக்கறேன்..பன்ச் பேசறேன்னு சலிச்சுக்காத..எல்லாருக்கும் பர்ஸ்ட் லவ் வாழ்க்கைல வரும்..ஆனா கொஞ்சம் பேருக்கு தான் செகண்ட் லவ் வாழ்க்கயா வரும்..உனக்கு அப்டி தான்..அந்தப் பொண்ணு உனக்கு வாழ்க்கயா வந்துருக்கு..பத்திரமா பாத்துக்கோ.." மகனின் முகத்தை வைத்தே ஏதோ கணித்து விட்டு அவர் கூறிட ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் எண்ணப்போக்கும் முழுதாய் மாறுபட்டதாய்..
முற்றிலும் வேறுபட்டதாய்..
"நீங்க என்ன சொன்னீங்கன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல நானும் அவளும் ட்வோர்ஸ் பண்ணிப்போம்..நீங்களே வேணாம்னு சொன்னாலும் கண்டிப்பா நடக்கும்.." மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டவனுக்குத் தெரியாதே காலம் விதைத்து வைத்திருப்பது..?
விதி வலியது!
பொழுதுகள் கடந்து இரவும் வந்தது.
தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்த நைட்டியின் மேல் ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு கண்ணாடியின் முன்னே நின்று தன் உருவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.
முகத்தில் இருந்த நீர்த்துளிகளை துப்பட்டாவின் நுனியைக் கொண்டு ஒற்றி எடுத்தவளுக்கு ஏனோ மனதில் ஒரு படபடப்பு.
நேற்று பையன் வெளியே சென்று வரும் பொழுது இரவு பத்து மணியைத் தாண்டியிருக்க காத்து காத்து விழித்திருந்தவளோ அப்படியே கண்ணயர்ந்திருக்க அவன் வந்ததும் சோபாவில் படுத்துறங்கியதும் தெரியாது.ஆனால்,இன்று அப்படியல்லவே.
"சோபலா படுக்கறதா..?கட்டில்ல படுக்கறதா..?சோபால படுக்கறா..?" தனக்குள் வினாத்தொடுத்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்,பையன்.
கண்ணாடி முன்னே நின்றிருந்தவளை ஒரு கணம் பார்வையால் ஸ்பரிசித்து விட்டு துவாயையும் மாற்றுடைகளையும் எடுத்துக் கொண்டு அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொள்ள இசையவளுக்கோ அவன் பார்வையே பெரும் பீதியைக் கிளப்பியது.
"இந்த மனுஷன் லவ் பண்ணியிருக்குன்னு நம்பக் கூட முடியல..பாத்தாலே எரிக்கற மாதிரில இருக்கு.." முணுமுணுத்துக் கொண்டவளோ தாமரையிடம் பேச அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றிருந்தாள்,தேகத்தை தழுவும் காற்றின் குளிரை வசைபாடிய படி.
குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தவனுக்கு பால்கனியில் இருந்து வந்த பேச்சுக்குரலின் உரப்பே போதுமாய் இருந்தது,பாவையின் இருப்பிடத்தை உணர்த்த.
"தொண்டைல மைக்க செருகி வச்சிருக்கா போல.." உள்ளுக்குள் நினைத்தவனோ அப்படியே கட்டிலில் குறுக்காக விழ பாதங்கள் மெத்தைக்கு வெளியே நீண்டிருந்தன.
ஒரு கையால் தலையணைத் தன்னோடு சேர்த்தணைத்தவாறு மறு கையால் எஞ்சியை தலையணையால் காதைப் பொத்திக் கொண்டு படுத்திருந்தவனுக்கு சிறு ஒ(ளி)லி இருந்தால் கூட உறக்கம் எட்டாது என்பது வேறு விடயம்.
பாவையின் கட்டைக்குரல் தெளிவாகவே பையனின் செவியில் மோதிட அவனிதழ்கள் அலுப்பான புன்னகையொன்றை ஏந்தி நின்றன.
அவளின் சத்தம் மட்டும் இல்லையென்றால் அவன் விழுந்த நொடியே உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான்,மனதில் இருந்த பெரும் பாரம் விலகிச் சென்றிருப்பதால்.ஆனால்,அவள் இதற்கு இடம் தர வேண்டுமே.
தாழ்ந்து சென்று கொண்டிருக்கும் குரல் திடீரென உயர்வதும் உச்ச ஸ்தானியில் சென்று கொண்டிருந்த குரல் சடுதியாய் தேய்வதும் அவனுக்கு எரிச்சலை கிளப்பியது.
"தூங்க விட மாட்டா போல.." தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவோ புரண்டு புரண்டு பார்த்தாலும் உறக்கம் வரவில்லை.
அவளை அதட்டினாலே..
ம்ஹும்,அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாலே சர்வமும் அடங்கிப் போக முழி பிதுங்கி நிற்பாள் என்று தெரிந்தும் ஏனோ அதை செய்யத் தான் மனம் வரவில்லை.
எப்போதும் போல் அவளுக்கான இடத்தை அவளுக்கென விட்டிருந்தது,மனம்.அவளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட பையன் விரும்பவில்லை.அது தான் யாழவனின் குணமும் கூட.
பாவைக்கு பேச சொல்லித் தரவா வேண்டும்..?
அதுவும் நெருங்கிய தோழியுடன்..
ஒரு நாள் முழுக்க நடந்தவற்றை விலாவாரியாக அவள் விவரித்துக் கொண்டிருக்க யாழவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.
அரை மணி நேரம் கடந்திருந்தது.அதற்கு மேலும் பொறுமை காத்தால் அது யாழ் வேந்தன் இல்லையென்று ஆகிவிடாதா..?
துளியென துளிர்த்த கோபத்தை அடக்கியவனோ படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு அவளை நோக்கிச் சென்றான்,சத்தத்தை குறைக்கச் சொல்லிச் சொல்லிட.
தோழியுடன் சம்பாஷணையில் மூழ்கி இருந்தவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த தன் பின்னே கதவு நிலையில் சாய்ந்தவாறு பையன் நின்றதை உணர்ந்திடும் சாத்தியம் ஏது..?
"ஆமா இப்பொ செகண்ட் லவ் தான்..அதுக்கென்ன ஆகும்..? செகண்ட் மேரேஜே இருக்குறப்போ செகண்ட் லவ்வா இருக்குறதுல என்ன தப்பு..? சும்மா சும்மா பர்ஸ்ட் லவ் தான் ஒசத்தின்னு பேசாத..நாக்க அறுத்துருவேன்.." கடுப்புடன் தாமரையுடன் பேசிக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் ஏனோ பையனை நின்று செவிமடுக்கச் செய்தன.
"பர்ஸ்ட்டு லவ் தான் பெஸ்ட்னு எவன் தான் பொரளிய கெளப்பி விட்டானோ..அதெல்லாம் பொய் தாமர..செகண்ட் லவ் அழகு தாமர..அதுவும் செகண்ட் லவ்வா இருக்குறது இன்னும் அழகு.." தன்னை மறந்து பேசிக் கொண்டிருப்பவளின் குரலில் இழையோடிய ஏதோ ஒன்று பையனுக்கு அபிஷேக்குடன் நடந்த உரையாடலை நினைவில் எழ வைத்தது.
"ஃபீல் பண்ணி பாத்தா ரொம்ப அழகா இருக்கும் டி.." அவள் எதேச்சையாய் கூறியது,அவனை ஏதோ செய்திருக்க வேண்டும்.
இத்தனை நேரம் அவளின் பேச்சுக்கு செவிசாய்த்து நின்றது போதுமென மனம் வாதிட்டது போலும்.
"க்கும்.." பின்னால் நின்றிருந்தவாறு அவன் தொண்டையைச் செருமிட தூக்கி வாரிப் போட்டது,பாவையவளுக்கு.
"ஐயோ சாமி.." பதறியவளோ திரும்பி வேகத்தில் அருகே இருந்த பூச்சாடியில் இடித்துக் கொண்டு நிலை தடுமாறி கீழே விழுந்திட கணுக்காலை இடித்துக் கொண்ட வேகத்தில் உயிர் போனது.
"அம்மா.." காலைப் பிடித்துக் கொண்டு விழுந்திருந்தவளை அழுத்தமாய்ப் பார்த்தவனோ தன்னாலே நீண்ட தன் கரங்களை பின்னே இழுத்துக் கொண்டது சிக்கவில்லை,பாவையின் பார்வையில்.
அவ்விடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் கூட நிச்சயம் அவனின் கரம் நீண்டிருக்கும்,மனிதாபிமானத்தினால்.அதில் ஐயமேதும் இல்லை.
ஆனால்,அவளை நோக்கி கரங்கள் நீண்டாலும் அதில் சிறு பதட்டமும் கலந்திருந்தது.
ஆம்,பதட்டம் தான்.
பதட்டத்தின் காரணம்..?
வேறொன்றுமில்லை,அக்கறை தான்.
உண்மை தான்,
பையனுக்கு அவள் மீது தனிப்பட்ட அக்கறை இருக்கத் தான் செய்கிறது.என்னவொன்று இதுவரை அவளிடம் அதை வெளிப்படுத்திக் காட்டியதில்லை.
அவனின் மனைவியென்றானதால் உண்டாகிற்ற அக்கறை அல்ல அது.ஏனோ பாவையின் குணங்கள் மீது அவனுக்கு தனிப்பட்ட ப்ரியம்.ப்ரியம் என்பத்றாக அதை காதலென்றும் வரையறை செய்ய முடியாது.
அதுவும் தன்னுடன் இருக்கும் பெண்ணென்பதால் அவள் மீது கரிசனமும் உண்டு.இசையவளின் காதல் மட்டும் அவனுக்கு தெரியாது இருப்பின் நிச்சயம் அவனின் நெருங்கிய தோழியாகக் கூட அவள் மாறியிருக்கக் கூடும்.
அவள் தன்னிடம் காதல் என்று பிதற்றிக் கொண்டு திரிவதில் தான் அவனுக்கு பிடித்தமில்லை.எங்கே தான் அவளிடம் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக் கொண்டால் அவள் இன்னும் தன் பிடியில் நிற்பாள் என்று பயந்து தான் ஒதுக்கம் காட்டுகிறான்;வெறுப்பாய் நடக்கிறான்;திட்டியும் விடுகிறான்.
அவள் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு கோபம் வராமல் இல்லை.ஆனால்,கோபம் வருவதால் அக்கறை இல்லையென்று ஆகிவிடாதே.
கணுக்காலை பிடித்துக் கொண்டு வலியோடு அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் விழிகளில் எந்த வித உணர்வும் இல்லை,வழமை போல்.
காட்ட விழைந்த அக்கறையை மறைத்துக் கொண்டான்,மனதுக்குள்.
"என்ன அடிபட்டிருச்சா..?"
அவனின் இயந்திரக் குரலில் அவளுக்கு கோபம் முட்டிக் கொண்டு வந்தது.
ஏற்கனேவ வலியில் விழிகள் கலங்கியிருக்க அவனின் அக்கறையில்லா குரலில் இன்னும் கோபம் ஏறியது.
"இருக்காதா பின்ன..?" முணகியவளோ கணுக்காலை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க அவனுக்கும் அதற்கு மேல் பேசாமல் இருக்க மனிதாபிமானம் இடம் கொடுத்திடவில்லை,போலும்.
"எங்க கால காட்டு.." அவளை நெருங்கி தரையில் குனிந்தவனோ அவளின் கால்களை ஆராய முயல பட்டென உள்ளிழுத்துக் கொண்டவளின் பார்வை அதிர்ச்சியுடன் பையனின் மீது பதி(டி)ந்தது.
"காலக் காட்டுங்குறேன்ல.." அவளை அடக்கும் வழி தெரிந்தவனாய் அதட்டிட அவளோ வழி விடவில்லை.
"இல்ல நா பாக்கறேன்.." கூறிய படி பால்கனிக் கம்பியை பற்றிக் கொண்டே கடினப்பட்டு எழுந்து நின்றவளின் முகமோ வலியில் சுருங்கிப் போயிருக்கவே பையன் ஊகித்துக் கொண்டான்,பலமான அடிதான் என்பதை.
"எதுக்கு இப்ப எந்திரிச்சிட்டு இருக்க..? கால் வலிக்கிதுல.." சிடுசிடுப்புடன் தன் அக்கறையை வெளிப்படுத்தி நின்றவனுக்கு அவளின் நிலையைக் கண்டு தானாய் கனிவு பிறக்கத் தான் செய்தது.
"இல்ல ஏதாச்சும் பூசுனா சரியாய்டும்.." அவனுக்கு கேட்கும் படி தலை தாழ்த்திச் சொல்லி விட்டு முதலடியை எடுத்து வைக்கையிலே சுரீரென்று வலியெடுத்திட "ஆ" தன்னாலே அலறிவிட்டிருந்தாள்,மெதுவாய்.
மீண்டும் பால்கனியின் ஹேன்ட் ட்ரில் கம்பியை இறுகப்பிடித்து தன்னை சமப்படுத்த முயன்றவளை பையனின் கரங்கள் பிடித்துத் தாங்கிட நீள சட்டென தன் தேகத்தை உள்ளிழுத்துக் கொண்டு ஒடுங்கி நின்றாள்,பாவையவள்.
அவனின் அருகாமையே அவளை வெகுவாய் திணறடித்திட ஸ்பரிசம் மூச்சடைக்க வைத்திடும் வேறு யாரும் அவளிடம் சொல்லத் தான் வேண்டுமா என்ன..?
"என்ன பண்ற சொல்ற நீ..? இப்டி கால வச்சிகிட்டு நடக்க முடியுமா உன்னால..?"
அவள் நிலை அவனுக்கு கொஞ்சம் புரிந்திட ஏனோ எப்போதும் போல் இல்லாமல் தன்மையாய் வந்து விழுந்தன,பையனின் வார்த்தைகள்.
யாழவனின் இதழ்கள் இசையவளுக்காய் இசைத்ததோ,அத்தனை மென்மையாய்..?
யாருக்குத் தெரியும்..?
அவளுக்கோ அவன் தன் மீது எரிந்து விழுந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனப்போக்கு.கடுகடுப்பாய் வெளிவந்த வார்த்தைகள் என்றாலும் அதில் இருந்த அக்கறை அத்தனை தித்திப்பை தர அது இன்னுமே அவளை தடுமாற வைத்து தடம் மாறிய இதயத்தில் இன்னும் ஆழமாய் அவனின் தடம் பதிக்க விழைந்திடுதே!
"இல்ல சாரே..நீங்க போங்க நா வர்ரேன்.." அவள் பிடிவாதமாய் மறுத்திட அழுத்தமாய் ஒரு வினாடிப் பார்வையால் உரசி விட்டு அவன் நகர்ந்திடவுமே தான் பாவையின் மனம் சமப்பட்டது.
"எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகற..? டென்ஷன கம்மி பண்ணு இசை..டென்ஷன கம்மி பண்ணு.." தனக்குத் தானே கூறிக் கொண்டவள் பால்கனிக் கம்பியை பற்றிய படி கெந்திக் கெந்தி இரு அடிகளை எடுத்து வைத்திருக்க கதவருகே நின்று அவளைப் பார்த்திருந்த பையனின் மனதில் என்ன தோன்றியதோ..?
சட்டென அவளை நோக்கி நடந்து வந்து அவள் சுதாரிக்கும் முன்னே பாவையவளை கரங்களில் ஏந்திக் கொள்ள அவள் நெஞ்சம் வெடித்தது.
யாழவனை இசையவள் கொஞ்சம் மாற்றித் தான் வைக்கிறாளோ..?
காதல் இல்லாமல்,அக்கறை எனும் பெயராலே.
இசையவளின் ரிதமாய் யாழவன் மாறியிருக்க யாழவனின் இசையாய் இசையவள் மாறுவது எப்போழுதோ..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
உயிர்த்தொடும்.
2024.08.26
யாழிசை 08(i)
"வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் திரு.யாழ் வேந்தன் மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டு போலியென ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது" சமூக வலைத்தளங்களில் பரவலாய் செய்திகள் ஓடிக் கொண்டிருக்க இசையவளோ பூஜையறையில் நின்று மனமுருக கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள்.
ஏனோ பையனின் மீதிருந்த அவப்பெயர் இப்போது முற்றாய் துடைத்தெறியப்பட்டது அவளுக்குள் விதைத்த நிம்மதிக்கு அளவே இல்லை.அவன் காட்டிக் கொள்ளா விடினும் அவனுக்குள் அந்த பொய்ப்பழி சிறு காயத்தையேனும் தந்திருக்காது என்பது நிச்சயம் இல்லையே.
கடவுளிடம் வேண்டி விட்டு கலங்கியிருந்த விழிகளின் ஈரத்தை ஒளித்து வைத்தவளோ நிறைவான புன்னகையுடன் வெளியே வர அங்கு கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து இருந்த ராமநாதனின் மனதில் நிறைவான எண்ணம்.
"அம்மாடி வேந்தன் வந்துட்டானா..?"
"இல்ல மாமா..இப்போ வந்துருவாரு.." பொய்யாய் சமாளித்ததை உண்மையாக்கும் விதமாய் வழமைக்கு மாறாய் சற்றே குறைந்திருந்த இறுக்கத்துடன் உள் நுழைந்தான்,பையன்.
ஏனோ அவனைக் கண்டதும் அவளுக்கு புன்னகைக்கத் தோன்றிற்று.மெதுவாய் யாழவனைப் பார்த்து இசையவள் இதழ் விரிக்க அவனின் இதழ்களுமே மெல்லிய முறுவலை நெளிய விட்டது.
சிறிய தந்தை இருப்பதால் கடமைக்காக புன்னகைத்திடவில்லை,அவன்.மனதின் அழுத்தம் தளர்ந்து குறைந்திருக்க அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்றால் ஆழ் மனம் உந்த அவளிடம் முகம் திருப்பிக் கொள்ள முடியாமல் போனது என்பது தான் உண்மை.
எப்போதும் இருக்கும் துள்ளலுடன் இருந்திருந்தால் பாவையவளும் அவன் புன்னைகயைக் கண்டு துள்ளி குதித்திருப்பாள்.மனதில் இருந்த நிர்மலம் அவளின் கற்பனை இறக்கைகளை சற்று மட்டுப்படுத்தியதோ என்னவோ...?
தந்தைக்கும் மகனுக்கும் தனிமை கொடுத்து விட்டு அவள் விலகிச் சென்றிட முதலில் பேச்சைத் துவங்கியது,ராமநாதன் தான்.
நேற்று இருவருக்கும் ஆறுதலாய் பேசிட நேரம் இருக்கவில்லை.ராமநாதனுக்கு பயணக் களைப்பு என்றால் பையனுக்கு வழக்கின் தீர்ப்பை பற்றிய அழுத்தம்.அதனால் சுக நல விசாரிப்போடு இருவரின் உரையாடலும் முற்றுப் பெற மீண்டும் நேரம் கிடைத்தது,இப்பொழுது தான்.
"எப்டி இருக்கடா..? நல்லா இருக்கியா..?"
"ஆமா சித்தப்பா..நா நல்லா இருக்கேன்..நீங்க எப்டி இருக்கீங்க..?"
"நா நல்லா இருக்கேன்..என்னடா என்னோட பொண்ணு கிட்ட நல்லா நடந்துக்குற தான..இல்ல எப்பவும் மாதிரு உர்ருன்னு இருக்கியா..?" அவர் இசையைக் குறிப்பிட்டு கேட்டிட அவரின் உரிமையான அழைப்பில் அவனுக்கு சிறு கோபம்.
தன் மருமகள் என்று சொல்லியிருந்தால் இலகுவாய் கடந்திருப்பான்.தன் மகள் என்று கூறிக் கொண்டு தன்னையே அதட்டுவது அவர் மீதான பையனின் உரிமையுணர்வை தூண்டி விட்டதே.
"அதெல்லாம் நல்லா தான் பாத்துக்கறேன் சித்தப்பா.." வார்த்தைகளை உதிர்க்கும் போதே அவளுடன் காட்டும் கடின முகம் தான் கண் முன்னே வந்து சென்றது.
"இங்க பாரு டா..நா ஒன்னு சொல்லிக்கறேன்..பன்ச் பேசறேன்னு சலிச்சுக்காத..எல்லாருக்கும் பர்ஸ்ட் லவ் வாழ்க்கைல வரும்..ஆனா கொஞ்சம் பேருக்கு தான் செகண்ட் லவ் வாழ்க்கயா வரும்..உனக்கு அப்டி தான்..அந்தப் பொண்ணு உனக்கு வாழ்க்கயா வந்துருக்கு..பத்திரமா பாத்துக்கோ.." மகனின் முகத்தை வைத்தே ஏதோ கணித்து விட்டு அவர் கூறிட ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் எண்ணப்போக்கும் முழுதாய் மாறுபட்டதாய்..
முற்றிலும் வேறுபட்டதாய்..
"நீங்க என்ன சொன்னீங்கன்னாலும் இன்னும் கொஞ்ச நாள்ல நானும் அவளும் ட்வோர்ஸ் பண்ணிப்போம்..நீங்களே வேணாம்னு சொன்னாலும் கண்டிப்பா நடக்கும்.." மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டவனுக்குத் தெரியாதே காலம் விதைத்து வைத்திருப்பது..?
விதி வலியது!
பொழுதுகள் கடந்து இரவும் வந்தது.
தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்த நைட்டியின் மேல் ஸ்வெட்டரை போட்டுக் கொண்டு கண்ணாடியின் முன்னே நின்று தன் உருவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்,பாவையவள்.
முகத்தில் இருந்த நீர்த்துளிகளை துப்பட்டாவின் நுனியைக் கொண்டு ஒற்றி எடுத்தவளுக்கு ஏனோ மனதில் ஒரு படபடப்பு.
நேற்று பையன் வெளியே சென்று வரும் பொழுது இரவு பத்து மணியைத் தாண்டியிருக்க காத்து காத்து விழித்திருந்தவளோ அப்படியே கண்ணயர்ந்திருக்க அவன் வந்ததும் சோபாவில் படுத்துறங்கியதும் தெரியாது.ஆனால்,இன்று அப்படியல்லவே.
"சோபலா படுக்கறதா..?கட்டில்ல படுக்கறதா..?சோபால படுக்கறா..?" தனக்குள் வினாத்தொடுத்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்,பையன்.
கண்ணாடி முன்னே நின்றிருந்தவளை ஒரு கணம் பார்வையால் ஸ்பரிசித்து விட்டு துவாயையும் மாற்றுடைகளையும் எடுத்துக் கொண்டு அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொள்ள இசையவளுக்கோ அவன் பார்வையே பெரும் பீதியைக் கிளப்பியது.
"இந்த மனுஷன் லவ் பண்ணியிருக்குன்னு நம்பக் கூட முடியல..பாத்தாலே எரிக்கற மாதிரில இருக்கு.." முணுமுணுத்துக் கொண்டவளோ தாமரையிடம் பேச அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றிருந்தாள்,தேகத்தை தழுவும் காற்றின் குளிரை வசைபாடிய படி.
குளித்து விட்டு தலையைத் துவட்டியவாறு வெளியே வந்தவனுக்கு பால்கனியில் இருந்து வந்த பேச்சுக்குரலின் உரப்பே போதுமாய் இருந்தது,பாவையின் இருப்பிடத்தை உணர்த்த.
"தொண்டைல மைக்க செருகி வச்சிருக்கா போல.." உள்ளுக்குள் நினைத்தவனோ அப்படியே கட்டிலில் குறுக்காக விழ பாதங்கள் மெத்தைக்கு வெளியே நீண்டிருந்தன.
ஒரு கையால் தலையணைத் தன்னோடு சேர்த்தணைத்தவாறு மறு கையால் எஞ்சியை தலையணையால் காதைப் பொத்திக் கொண்டு படுத்திருந்தவனுக்கு சிறு ஒ(ளி)லி இருந்தால் கூட உறக்கம் எட்டாது என்பது வேறு விடயம்.
பாவையின் கட்டைக்குரல் தெளிவாகவே பையனின் செவியில் மோதிட அவனிதழ்கள் அலுப்பான புன்னகையொன்றை ஏந்தி நின்றன.
அவளின் சத்தம் மட்டும் இல்லையென்றால் அவன் விழுந்த நொடியே உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான்,மனதில் இருந்த பெரும் பாரம் விலகிச் சென்றிருப்பதால்.ஆனால்,அவள் இதற்கு இடம் தர வேண்டுமே.
தாழ்ந்து சென்று கொண்டிருக்கும் குரல் திடீரென உயர்வதும் உச்ச ஸ்தானியில் சென்று கொண்டிருந்த குரல் சடுதியாய் தேய்வதும் அவனுக்கு எரிச்சலை கிளப்பியது.
"தூங்க விட மாட்டா போல.." தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவோ புரண்டு புரண்டு பார்த்தாலும் உறக்கம் வரவில்லை.
அவளை அதட்டினாலே..
ம்ஹும்,அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தாலே சர்வமும் அடங்கிப் போக முழி பிதுங்கி நிற்பாள் என்று தெரிந்தும் ஏனோ அதை செய்யத் தான் மனம் வரவில்லை.
எப்போதும் போல் அவளுக்கான இடத்தை அவளுக்கென விட்டிருந்தது,மனம்.அவளின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட பையன் விரும்பவில்லை.அது தான் யாழவனின் குணமும் கூட.
பாவைக்கு பேச சொல்லித் தரவா வேண்டும்..?
அதுவும் நெருங்கிய தோழியுடன்..
ஒரு நாள் முழுக்க நடந்தவற்றை விலாவாரியாக அவள் விவரித்துக் கொண்டிருக்க யாழவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது.
அரை மணி நேரம் கடந்திருந்தது.அதற்கு மேலும் பொறுமை காத்தால் அது யாழ் வேந்தன் இல்லையென்று ஆகிவிடாதா..?
துளியென துளிர்த்த கோபத்தை அடக்கியவனோ படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு அவளை நோக்கிச் சென்றான்,சத்தத்தை குறைக்கச் சொல்லிச் சொல்லிட.
தோழியுடன் சம்பாஷணையில் மூழ்கி இருந்தவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்த தன் பின்னே கதவு நிலையில் சாய்ந்தவாறு பையன் நின்றதை உணர்ந்திடும் சாத்தியம் ஏது..?
"ஆமா இப்பொ செகண்ட் லவ் தான்..அதுக்கென்ன ஆகும்..? செகண்ட் மேரேஜே இருக்குறப்போ செகண்ட் லவ்வா இருக்குறதுல என்ன தப்பு..? சும்மா சும்மா பர்ஸ்ட் லவ் தான் ஒசத்தின்னு பேசாத..நாக்க அறுத்துருவேன்.." கடுப்புடன் தாமரையுடன் பேசிக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் ஏனோ பையனை நின்று செவிமடுக்கச் செய்தன.
"பர்ஸ்ட்டு லவ் தான் பெஸ்ட்னு எவன் தான் பொரளிய கெளப்பி விட்டானோ..அதெல்லாம் பொய் தாமர..செகண்ட் லவ் அழகு தாமர..அதுவும் செகண்ட் லவ்வா இருக்குறது இன்னும் அழகு.." தன்னை மறந்து பேசிக் கொண்டிருப்பவளின் குரலில் இழையோடிய ஏதோ ஒன்று பையனுக்கு அபிஷேக்குடன் நடந்த உரையாடலை நினைவில் எழ வைத்தது.
"ஃபீல் பண்ணி பாத்தா ரொம்ப அழகா இருக்கும் டி.." அவள் எதேச்சையாய் கூறியது,அவனை ஏதோ செய்திருக்க வேண்டும்.
இத்தனை நேரம் அவளின் பேச்சுக்கு செவிசாய்த்து நின்றது போதுமென மனம் வாதிட்டது போலும்.
"க்கும்.." பின்னால் நின்றிருந்தவாறு அவன் தொண்டையைச் செருமிட தூக்கி வாரிப் போட்டது,பாவையவளுக்கு.
"ஐயோ சாமி.." பதறியவளோ திரும்பி வேகத்தில் அருகே இருந்த பூச்சாடியில் இடித்துக் கொண்டு நிலை தடுமாறி கீழே விழுந்திட கணுக்காலை இடித்துக் கொண்ட வேகத்தில் உயிர் போனது.
"அம்மா.." காலைப் பிடித்துக் கொண்டு விழுந்திருந்தவளை அழுத்தமாய்ப் பார்த்தவனோ தன்னாலே நீண்ட தன் கரங்களை பின்னே இழுத்துக் கொண்டது சிக்கவில்லை,பாவையின் பார்வையில்.
அவ்விடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் கூட நிச்சயம் அவனின் கரம் நீண்டிருக்கும்,மனிதாபிமானத்தினால்.அதில் ஐயமேதும் இல்லை.
ஆனால்,அவளை நோக்கி கரங்கள் நீண்டாலும் அதில் சிறு பதட்டமும் கலந்திருந்தது.
ஆம்,பதட்டம் தான்.
பதட்டத்தின் காரணம்..?
வேறொன்றுமில்லை,அக்கறை தான்.
உண்மை தான்,
பையனுக்கு அவள் மீது தனிப்பட்ட அக்கறை இருக்கத் தான் செய்கிறது.என்னவொன்று இதுவரை அவளிடம் அதை வெளிப்படுத்திக் காட்டியதில்லை.
அவனின் மனைவியென்றானதால் உண்டாகிற்ற அக்கறை அல்ல அது.ஏனோ பாவையின் குணங்கள் மீது அவனுக்கு தனிப்பட்ட ப்ரியம்.ப்ரியம் என்பத்றாக அதை காதலென்றும் வரையறை செய்ய முடியாது.
அதுவும் தன்னுடன் இருக்கும் பெண்ணென்பதால் அவள் மீது கரிசனமும் உண்டு.இசையவளின் காதல் மட்டும் அவனுக்கு தெரியாது இருப்பின் நிச்சயம் அவனின் நெருங்கிய தோழியாகக் கூட அவள் மாறியிருக்கக் கூடும்.
அவள் தன்னிடம் காதல் என்று பிதற்றிக் கொண்டு திரிவதில் தான் அவனுக்கு பிடித்தமில்லை.எங்கே தான் அவளிடம் கொஞ்சமேனும் அக்கறை எடுத்துக் கொண்டால் அவள் இன்னும் தன் பிடியில் நிற்பாள் என்று பயந்து தான் ஒதுக்கம் காட்டுகிறான்;வெறுப்பாய் நடக்கிறான்;திட்டியும் விடுகிறான்.
அவள் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு கோபம் வராமல் இல்லை.ஆனால்,கோபம் வருவதால் அக்கறை இல்லையென்று ஆகிவிடாதே.
கணுக்காலை பிடித்துக் கொண்டு வலியோடு அமர்ந்திருந்தவளை பார்த்தவனின் விழிகளில் எந்த வித உணர்வும் இல்லை,வழமை போல்.
காட்ட விழைந்த அக்கறையை மறைத்துக் கொண்டான்,மனதுக்குள்.
"என்ன அடிபட்டிருச்சா..?"
அவனின் இயந்திரக் குரலில் அவளுக்கு கோபம் முட்டிக் கொண்டு வந்தது.
ஏற்கனேவ வலியில் விழிகள் கலங்கியிருக்க அவனின் அக்கறையில்லா குரலில் இன்னும் கோபம் ஏறியது.
"இருக்காதா பின்ன..?" முணகியவளோ கணுக்காலை தேய்த்து விட்டுக் கொண்டிருக்க அவனுக்கும் அதற்கு மேல் பேசாமல் இருக்க மனிதாபிமானம் இடம் கொடுத்திடவில்லை,போலும்.
"எங்க கால காட்டு.." அவளை நெருங்கி தரையில் குனிந்தவனோ அவளின் கால்களை ஆராய முயல பட்டென உள்ளிழுத்துக் கொண்டவளின் பார்வை அதிர்ச்சியுடன் பையனின் மீது பதி(டி)ந்தது.
"காலக் காட்டுங்குறேன்ல.." அவளை அடக்கும் வழி தெரிந்தவனாய் அதட்டிட அவளோ வழி விடவில்லை.
"இல்ல நா பாக்கறேன்.." கூறிய படி பால்கனிக் கம்பியை பற்றிக் கொண்டே கடினப்பட்டு எழுந்து நின்றவளின் முகமோ வலியில் சுருங்கிப் போயிருக்கவே பையன் ஊகித்துக் கொண்டான்,பலமான அடிதான் என்பதை.
"எதுக்கு இப்ப எந்திரிச்சிட்டு இருக்க..? கால் வலிக்கிதுல.." சிடுசிடுப்புடன் தன் அக்கறையை வெளிப்படுத்தி நின்றவனுக்கு அவளின் நிலையைக் கண்டு தானாய் கனிவு பிறக்கத் தான் செய்தது.
"இல்ல ஏதாச்சும் பூசுனா சரியாய்டும்.." அவனுக்கு கேட்கும் படி தலை தாழ்த்திச் சொல்லி விட்டு முதலடியை எடுத்து வைக்கையிலே சுரீரென்று வலியெடுத்திட "ஆ" தன்னாலே அலறிவிட்டிருந்தாள்,மெதுவாய்.
மீண்டும் பால்கனியின் ஹேன்ட் ட்ரில் கம்பியை இறுகப்பிடித்து தன்னை சமப்படுத்த முயன்றவளை பையனின் கரங்கள் பிடித்துத் தாங்கிட நீள சட்டென தன் தேகத்தை உள்ளிழுத்துக் கொண்டு ஒடுங்கி நின்றாள்,பாவையவள்.
அவனின் அருகாமையே அவளை வெகுவாய் திணறடித்திட ஸ்பரிசம் மூச்சடைக்க வைத்திடும் வேறு யாரும் அவளிடம் சொல்லத் தான் வேண்டுமா என்ன..?
"என்ன பண்ற சொல்ற நீ..? இப்டி கால வச்சிகிட்டு நடக்க முடியுமா உன்னால..?"
அவள் நிலை அவனுக்கு கொஞ்சம் புரிந்திட ஏனோ எப்போதும் போல் இல்லாமல் தன்மையாய் வந்து விழுந்தன,பையனின் வார்த்தைகள்.
யாழவனின் இதழ்கள் இசையவளுக்காய் இசைத்ததோ,அத்தனை மென்மையாய்..?
யாருக்குத் தெரியும்..?
அவளுக்கோ அவன் தன் மீது எரிந்து விழுந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனப்போக்கு.கடுகடுப்பாய் வெளிவந்த வார்த்தைகள் என்றாலும் அதில் இருந்த அக்கறை அத்தனை தித்திப்பை தர அது இன்னுமே அவளை தடுமாற வைத்து தடம் மாறிய இதயத்தில் இன்னும் ஆழமாய் அவனின் தடம் பதிக்க விழைந்திடுதே!
"இல்ல சாரே..நீங்க போங்க நா வர்ரேன்.." அவள் பிடிவாதமாய் மறுத்திட அழுத்தமாய் ஒரு வினாடிப் பார்வையால் உரசி விட்டு அவன் நகர்ந்திடவுமே தான் பாவையின் மனம் சமப்பட்டது.
"எதுக்குடி இவ்ளோ டென்ஷன் ஆகற..? டென்ஷன கம்மி பண்ணு இசை..டென்ஷன கம்மி பண்ணு.." தனக்குத் தானே கூறிக் கொண்டவள் பால்கனிக் கம்பியை பற்றிய படி கெந்திக் கெந்தி இரு அடிகளை எடுத்து வைத்திருக்க கதவருகே நின்று அவளைப் பார்த்திருந்த பையனின் மனதில் என்ன தோன்றியதோ..?
சட்டென அவளை நோக்கி நடந்து வந்து அவள் சுதாரிக்கும் முன்னே பாவையவளை கரங்களில் ஏந்திக் கொள்ள அவள் நெஞ்சம் வெடித்தது.
யாழவனை இசையவள் கொஞ்சம் மாற்றித் தான் வைக்கிறாளோ..?
காதல் இல்லாமல்,அக்கறை எனும் பெயராலே.
இசையவளின் ரிதமாய் யாழவன் மாறியிருக்க யாழவனின் இசையாய் இசையவள் மாறுவது எப்போழுதோ..?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
உயிர்த்தொடும்.
2024.08.26