அத்தியாயம் 20
திரும்பி ஸ்டேஷன் செல்லும் வழியில், "சார் அந்த பையன் பேரு ராம்குமார். டெக்ஸ்ட்ரான்னு ஒரு ஐடி கம்பெனியில வொர்க் பண்றான், அடுத்து அவன விசாரிக்க போறோமா சார்?" என்றான் சொக்கலிங்கம் விநாயகம் கொடுத்த தகவலை நீட்டியபடி.
"ம்ம் விசாரிப்போம் சொக்கு. நீங்க எதுக்கும் இந்த விநாயகத்த ஃபாலோ பண்ணவும் ஆளனுப்புங்க"
"சார் இவரு கில்லரா இருக்க சான்ஸ் இருக்கா?" என்றான் ஆர்வமாக,
"ம்ச் சொக்கு ஓவர் ஆர்வத்துல நிறைய கோட்ட விடுறீங்கன்னு நினைக்கிறேன். இந்த விநாயகம் எதுக்கு அந்த ராம்குமார் பத்தி தானா வந்து சொல்லணும்னு யோசிக்கணும். இவருக்கும் ப்ரின்ஸிபலுக்கும் எதும் ப்ராப்ளம் இருக்கா, இல்ல இவருக்கும் அந்த ராம்குமாருக்கும் ப்ராப்ளமா? எதுக்காக அவன பத்தி அன்னைக்கு சொல்லாம இன்னைக்கு வந்து சொல்றாருன்னு தெரியணும். ஃபாலோ பண்ணுங்க எதுக்கு வேணாலும் உதவும்" என்றவன் ஸ்டேஷன் வரவும் இறங்கிக் கொள்ள, சொக்குவும் அடுத்த வேலையாக கைதி ஒருவனை நீதிமன்றம் ஒப்படைக்க கிளம்பிவிட்டான்.
மேலும் நான்கு நாட்கள் சென்றிருந்தது. அன்று சனிக்கிழமை, மரகதவல்லி விடுமுறையென வீட்டில் தான் இருந்தாள். முத்துராமனும் டிவி முன் அமர்ந்திருந்தார். மதிய உணவை முடித்துக் கொண்டு வரவேற்பறையில் தான் மூவரும் அமர்ந்திருந்தனர்.
"ஏங்க நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாக்கு சம்பந்தி வீட்ல எல்லாரையும் வர சொல்லுவோமா? அவுக தெரு கோவில் பொங்கலுக்கு நம்மளயும் கூப்புட்டாங்க தானே அப்ப நம்மளும் கூப்புடனும்ல?" என்றார் அகிலா திடீரென.
"ரெண்டு நாளா தான் அவங்க இந்த பக்கம் வரல, அதான் என் மாமியார தேடுது போல அம்மாக்கு" என்றாள் மரகதவல்லி.
"உனக்காகத்தேன் அவுகட்ட அவ்வளவு பழகுதேன்"
"அடேங்கப்பா அவங்கட்ட நீ என்ன என்னமா புகழுவன்னு பாத்து பாத்து பூரிச்சு போயிட்டேன் போம்மா"
"பாப்பா. அவுக ரொம்ப நல்லமாதிரி பழகுறாங்க. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன்ன கட்டி குடுத்துட்டு வருவியா மாட்டியான்னு அவங்கள எதிர்பார்த்து இருக்கணும். இதே அவங்கட்ட நல்லா ஒட்டிட்டா யோசிக்காம நாங்களே வந்து போய் இருப்போம். அதான் அம்மா உன் மாமியார் வீட்டோட ஒட்டி பழகுறா" என்றார் முத்துராமன்.
"அதுமட்டுமில்ல அவுகளும் எந்த பாசாங்கும் இல்லாம பழகுதாங்க. நல்ல மாதிரி மனுஷங்க. இவ எதாவது கோனகால சாய்ச்சா கூட அவ மாமியார் பொறுத்து போயிடுவாக. இவளும் சமத்தா பொழைச்சுகிட்டான்னா போதும். எனக்கு அந்தம்மாவ அம்புட்டு புடிச்சுருக்கு" என்றார் மனதாரவே அகிலா.
"பாத்துக்கோங்கப்பா என்கூட அம்மாவும் கிளம்பி வந்துட்டாங்கன்னா உங்கபாடு திண்டாட்டமாகிடும்"
"போடி உளறாம. இப்ப அவங்கள கூப்பிடணும். நேர்ல போய்ட்டு வருவோமா?" என்றார் முத்துராமனிடம்.
"என்ன வேணா செய்ங்க, என்ன வச்சு மட்டும் எந்த ப்ளானும் செய்யாதீங்க ப்ளீஸ்"
"ரொம்பத்தேன் சலிச்சுக்குறவ மாதிரி நடிச்சுருவா, அப்றம் பாத்தா வேலைல இருக்க மாப்ளைய போட்டு நச்சு பண்ணி கூட்டிட்டு வந்து நிப்ப. ஆனா அம்புட்டு கோவபடுத மனுஷன எப்டிடி பேசி வரவைக்குற? உன் மாமியாருக்கு அதுதேன் ஆச்சரியமே அதான் உன்னயே எல்லாத்தையும் செய்ய வைக்குதாக. நீ மட்டும் எப்டி செய்த? நொரநாட்டியம் நிறைய பேசுவியே நீ எப்டி அவர சமாளிக்குற?"
அவர் பேச பேச இவள் முறைத்தே பார்க்க, "நீ சமாளிப்ப, சாமர்த்தியசாலி தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேச்ச அவர் கேக்குறது வேற, இப்பவே எப்டி கேக்காரு?அவர்ட்ட பேச அவுக அம்மாவே அம்புட்டு பயப்புடுதாக நீ எப்டி தைரியமா பேசுத?" அவர் சந்தேகம் நீண்டு கொண்டே செல்ல,
"கூட்டணி அமைச்சு ப்ளான் போட்டு கோர்த்து விட்டுட்டு சந்தேகம் வேற வருதோ உனக்கு? போயிரும்மா இல்ல தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ" என்றாள் கையிலிருக்கும் நோட்பேடை தூக்கிக் காண்பித்து.
"பாத்தீங்களா எப்டி பேசுதான்னு? இப்டி அங்கையும் போய் பேசுனா நல்லா இருக்க மாமியாரையும் இவளே மாத்தி விட்ருவா"
முத்துராமன், "அவளுக்கு எங்க எப்டி பேசணும்னு தெரியும். நீ போய் கிளம்பு போ. அவங்கள கூப்பிடணும்னு சொன்னல்ல போ சேலை மாத்திட்டு வா கிளம்புவோம்" என்கவும்,
"ஆடி மாசமா இருக்கதால, எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு. இன்னும் கல்யாண வேலை எம்புட்டு இருக்கு. ஆனா அமாவாசை, பௌர்ணமி, ஆடி பெருக்குன்னு மூணு நல்ல நாள்தான் இருக்கு. அதான் வேலை ஓட மாட்டேங்குது. இந்தா வாரேன் இருங்க, இவட்ட பேசிட்ருந்தா ஒரு கதையும் ஆவாது" என சொல்லிவிட்டே எழுந்து சென்றார்.
"என்னைய எதாது சொல்லாம உனக்கு நிமிஷம் கழியாதுல்லம்மா" என இவளும் பேச,
"விடு பாப்பா எதுக்கு அவகிட்ட மல்லுக்கு நிக்கிற?"
"நா நிறைய வாய் பேசுவேனாம் என்னைய கூட்டிட்டு போய் வச்சு பாத்தா தான் இவங்க இங்க படுற கஷ்டம் என்னன்னு அவங்களுக்கும் தெரியுமாம். நேத்து ஃபோன்ல சொல்லிட்ருக்காங்க"
"அவங்க விரசமில்லாம பழகுறதால ப்ரண்டு மாதிரி பழகிட்ருக்கா அதான் அப்டி பேசுதாடா"
"அதுசரி அவங்க ஃப்ரண்டஷிப்ப வளக்க என்ன ஷிப்பா யூஸ் பண்ணுவாங்களா?"
"நீதான் அவங்க ரெண்டு பேரும் ப்ரண்டாகவே காரணம், அப்ப பேச்சும் உன்ன வச்சு உன்ன சுத்தி தான இருக்கும். இதுல ஜோசியர் சொன்னதும் வேற யோசிக்க வேண்டிய இருக்குல்ல?"
"எது எங்கள லவ் பண்ண வைக்குறதா? ஏன்ப்பா நீங்களும்?"
"மாப்ள உன்ட்ட நல்லமாறி பேசுவாரா? அன்னைக்கு என்ட்ட ஃபோன்ல பேசும்போது எடுத்ததும் அவ்வளவு கறாரா பேசுனாரு, என்னடா இவ்வளவு கோவபடுதாரேன்னு கூட இருந்துச்சு ஆனா கோவத்துலயும் அவ ஆசை சரிதான் ஆனா எனக்கு நேரமில்ல பாத்தீங்களான்னு பேசுனாரு எனக்கு அப்படியே புல்லரிச்சுட்டு"
பாவமாக பார்த்தாள் அவரை, 'மத்தவங்களுக்கு புல்லரிக்குறளவுக்கு பொய்ய அவுத்து விடறது, அப்றம் பொய்யா அப்டினாங்குறது, ப்பா அவரு ஒரு ப்ராடு ஏசிபி' என நினைத்துக் கொண்டே தான் பார்த்திருந்தாள்.
"உன்ட்ட நல்லமாறி பழகுவாரு தான? கோவபட்டாலும் நீ கொஞ்சம் பொறுமையா போயிடு பாப்பா. மனுஷனுக்கு வெளில ஆயிரம் டென்ஷன் இருக்கும். நீதேன் எப்பவும் அவருக்கு ஆறுதலா இருக்கணும்"
"அப்படி நல்லா எடுத்து சொல்லுங்க" என்றவாறு பளபளவென்று கிளம்பி அறைக்குள்ளிருந்து பேசிக்கொண்டே வெளியே வந்தார் அகிலா.
'அவருக்கு நாந்தான் என்டர்டெயின்மென்ட்னு தெரியாம இன்னும் நா ஆறுதலா இருக்கணும்னா என்ன சொல்ல, உனக்கு குடுத்து வச்சது அந்த நக்கல் புடிச்ச ஏசிபி தானுங்கும் போது, பொறுமையே பெருமைன்னு போயிடுடி' என எப்போதும் போல் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.
"எதுக்கு நீ இப்ப பட்டு கட்டிருக்க?"
"பின்ன சம்மந்தி வீட்டுக்கு போறோம்ல?"
"கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்" என விரட்டியவளின் முதுகில் தட்டிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, இவள் வேலையில் ஆழ்ந்தாள்.
அவர்கள் சென்று அழைத்துவிட்டு வர இரவாகிவிட்டிருந்தது. வந்ததும் மீண்டும் கோவில் கிளம்பி சென்றுவிட்டனர். இவளுக்கு தான் காரணம் புரியவில்லை, "எதுக்கும்மா இந்நேரம் அவசரமா கோவிலுக்கு போறீங்க?" என நிறுத்திக் கேட்டதற்கும் வந்து சொல்றோம் என சென்று விட்டிருந்தனர்.
அவர்கள் வரும் முன் அவன் மூலம் செய்தி வந்திருந்தது. "என்ன மரகதம் நாளைக்கு கூழ் ஊத்த போறீங்களாம்? என்ன வேண்டுதல்? சாந்தி முகூர்த்தம் சாந்தியா நடக்கணும்னா?" என தான் பேச்சையே ஆரம்பித்தான்.
"கூழா?"
"ம்ம் என்ன கூப்பிட மாட்டியா அப்போ? பாசமு இல்ல மரியாதையும் இல்ல உன்ட்ட? இப்படிதான் அந்த மந்தாகினியும் செய்வா"
"ஏங்க நீங்க என்ன சொல்றீங்கனே புரியல"
"மந்தாகினி என்ன சொல்லுவான்னு புரியலையா? இரு தெளிவா சொல்றேன். நீ கேட்டு சொல்லாம இருப்பேனா?"
"நா அத கேக்கல. கூழ் ஊத்தறோம்னு சொன்னீங்களே அத கேட்டேன்"
"நீங்க ஊத்த போற கூழ் பத்தி என்னையே கேப்பியாடி நீ? கயிறு கட்ட இஷ்டமில்லாத மாதிரி இதுக்கும் கூப்பிட இஷ்டமில்லன்னு சொல்லிட்டு போடி. சாந்திய அவங்க பார்க்கட்டும் சாந்தி முகூர்த்தத்த நா பாத்துக்குறேன்"
"ஏங்க" என்றாள் பொறுமை இழந்த குரலில்.
"ஏங்கங்க?"
'கொழுப்பெடுத்த ஏசிபி' என வாய்க்குள் திட்டிவிட்டு, "என்ன பண்றீங்க? சாப்டீங்களா?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.
வீட்டிற்கு வந்திருந்தவன் சட்டையை கழற்றி ஹாங்கரில் மாட்டிவிட்டு, "சாப்பிடத்தான் ஆசையா இருக்கு. ஆனா கைக்கிட்ட இல்லையே?" என அவன் கையைத் தூக்கி அலுப்பெடுத்துக் கொண்டு சொல்ல,
"டிஃபன கேட்டேங்க" என்றவள் இப்போதே தலையை தாங்கி விட்டாள்.
"நானு மேகிய தான்டி சொன்னேன். காலி ஆகிடுச்சு கடை தூரமா இருக்குன்னு"
'இவர்ட்ட அது இது எதுல வர்ற மாத்தி யோசி மாதிரி மாத்தி மாத்தியே தான் பேசணும் போல' என புலம்பி விட்டு, "வீட்டுக்கு வந்துட்டீங்களா?" என்றாள்.
"நா உனக்கு ஃபோன் பண்ணத வச்சே கண்டுபுடிச்சுருக்க வேணாமா நீ?"
"சரிங்க சாரிங்க. இங்க மாரியம்மன் கோவில் தெருகட்டு பொங்கல். அதுக்கு அங்க உங்க வீட்ல எல்லாரையும் வர சொல்லலாம்னு அம்மாவும் அப்பாவும் போய்ட்டு வந்தாங்க"
"ம்ம் அங்க வச்சுதான் உங்கப்பா ஃபோன் போட்டு நாளைக்கு நம்ம வீட்டு சார்பா மாரியம்மனுக்கு கூழ் ஊத்துறோம் வந்துடுங்க மாப்ளன்னு கூப்பிட்டாரு. எனக்கு வர கஷ்டம் மாமா அம்மா வருவாங்கன்னு சொல்லிட்டு வச்சேன். ஆனாலும் வருங்கால பொண்டாட்டி கூப்பிட்டா வரலாம்னு பாத்தா கூப்பிடகூட மாட்டேன்ற நீ?"
"உங்களுக்கு வேலை இருக்கும்னு தான் கூப்பிடலங்க. கூழ் ஊத்துற விஷயமே நீங்க சொல்லித்தான் தெரியுது. அப்றம் வந்தாலும் நீங்க வீட்டுக்கு வர மாட்டீங்களே, இங்க எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுவாங்க"
"சோ வாட் நா கோவில் வந்துட்டு கிளம்பிடுறேன் நீ எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திடு"
"எதே மறுபடியுமா?"
"என்ன மறுபடியுமா? இனி வாழ்க்கை முழுக்க நீதான சாப்பாடு போடணும்"
"சும்மா இருங்க. நீங்க தப்பு தப்பா சொல்லி தந்து எனக்கு எல்லாம் தப்பு தப்பாவே கேக்குது" என்றதும் அவன் குலுங்கி சிரித்தான், ஆனால் அதும் அவளுக்கு தெரியாமல்.
"லாயர் மேடத்துக்கு எல்லாத்திலையும் சந்தேகம். சரி வருவியா மாட்டியா"
"நா வரமாட்டேன் ஆள விடுங்க"
"இந்த மந்தாகினி இருக்கால்ல"
"அவதான் இப்ப இல்லைல விடுங்க. நாளைக்கு வாங்கன்னு நா கூப்பிடணும் அவ்வளவு தானே? ப்ளீஸ் வாங்க, வரும்போது ஒரு ஃபெவிகால் வாங்கி வாய ஒட்டிட்டு வாங்க போதும் எனக்கு"
"கட்டிவிட தான் மாட்டனா ஒட்ட வைக்கவும் மாட்டியா?"
"ஏங்க"
"பெவிகால கேட்டேன் டி"
"முடியலங்க"
"கோட்டா ஓவர். பரவால்ல நல்லா ட்ரைன் ஆகுற"
"ஆமா இந்த ஏசிபிய சமாளிக்க ட்ரைன் ஆகிட்ருக்கேன்" என்றாள் தலையில் தட்டிக்கொண்டு.
"உன்னால முடியும் மரகதம். உன்னால மட்டுந்தான் முடியும்" என்றான் அந்த மரகத கள்வன் முகம் நிறைந்த குறும்புடன்.
திரும்பி ஸ்டேஷன் செல்லும் வழியில், "சார் அந்த பையன் பேரு ராம்குமார். டெக்ஸ்ட்ரான்னு ஒரு ஐடி கம்பெனியில வொர்க் பண்றான், அடுத்து அவன விசாரிக்க போறோமா சார்?" என்றான் சொக்கலிங்கம் விநாயகம் கொடுத்த தகவலை நீட்டியபடி.
"ம்ம் விசாரிப்போம் சொக்கு. நீங்க எதுக்கும் இந்த விநாயகத்த ஃபாலோ பண்ணவும் ஆளனுப்புங்க"
"சார் இவரு கில்லரா இருக்க சான்ஸ் இருக்கா?" என்றான் ஆர்வமாக,
"ம்ச் சொக்கு ஓவர் ஆர்வத்துல நிறைய கோட்ட விடுறீங்கன்னு நினைக்கிறேன். இந்த விநாயகம் எதுக்கு அந்த ராம்குமார் பத்தி தானா வந்து சொல்லணும்னு யோசிக்கணும். இவருக்கும் ப்ரின்ஸிபலுக்கும் எதும் ப்ராப்ளம் இருக்கா, இல்ல இவருக்கும் அந்த ராம்குமாருக்கும் ப்ராப்ளமா? எதுக்காக அவன பத்தி அன்னைக்கு சொல்லாம இன்னைக்கு வந்து சொல்றாருன்னு தெரியணும். ஃபாலோ பண்ணுங்க எதுக்கு வேணாலும் உதவும்" என்றவன் ஸ்டேஷன் வரவும் இறங்கிக் கொள்ள, சொக்குவும் அடுத்த வேலையாக கைதி ஒருவனை நீதிமன்றம் ஒப்படைக்க கிளம்பிவிட்டான்.
மேலும் நான்கு நாட்கள் சென்றிருந்தது. அன்று சனிக்கிழமை, மரகதவல்லி விடுமுறையென வீட்டில் தான் இருந்தாள். முத்துராமனும் டிவி முன் அமர்ந்திருந்தார். மதிய உணவை முடித்துக் கொண்டு வரவேற்பறையில் தான் மூவரும் அமர்ந்திருந்தனர்.
"ஏங்க நம்ம மாரியம்மன் கோவில் திருவிழாக்கு சம்பந்தி வீட்ல எல்லாரையும் வர சொல்லுவோமா? அவுக தெரு கோவில் பொங்கலுக்கு நம்மளயும் கூப்புட்டாங்க தானே அப்ப நம்மளும் கூப்புடனும்ல?" என்றார் அகிலா திடீரென.
"ரெண்டு நாளா தான் அவங்க இந்த பக்கம் வரல, அதான் என் மாமியார தேடுது போல அம்மாக்கு" என்றாள் மரகதவல்லி.
"உனக்காகத்தேன் அவுகட்ட அவ்வளவு பழகுதேன்"
"அடேங்கப்பா அவங்கட்ட நீ என்ன என்னமா புகழுவன்னு பாத்து பாத்து பூரிச்சு போயிட்டேன் போம்மா"
"பாப்பா. அவுக ரொம்ப நல்லமாதிரி பழகுறாங்க. நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன்ன கட்டி குடுத்துட்டு வருவியா மாட்டியான்னு அவங்கள எதிர்பார்த்து இருக்கணும். இதே அவங்கட்ட நல்லா ஒட்டிட்டா யோசிக்காம நாங்களே வந்து போய் இருப்போம். அதான் அம்மா உன் மாமியார் வீட்டோட ஒட்டி பழகுறா" என்றார் முத்துராமன்.
"அதுமட்டுமில்ல அவுகளும் எந்த பாசாங்கும் இல்லாம பழகுதாங்க. நல்ல மாதிரி மனுஷங்க. இவ எதாவது கோனகால சாய்ச்சா கூட அவ மாமியார் பொறுத்து போயிடுவாக. இவளும் சமத்தா பொழைச்சுகிட்டான்னா போதும். எனக்கு அந்தம்மாவ அம்புட்டு புடிச்சுருக்கு" என்றார் மனதாரவே அகிலா.
"பாத்துக்கோங்கப்பா என்கூட அம்மாவும் கிளம்பி வந்துட்டாங்கன்னா உங்கபாடு திண்டாட்டமாகிடும்"
"போடி உளறாம. இப்ப அவங்கள கூப்பிடணும். நேர்ல போய்ட்டு வருவோமா?" என்றார் முத்துராமனிடம்.
"என்ன வேணா செய்ங்க, என்ன வச்சு மட்டும் எந்த ப்ளானும் செய்யாதீங்க ப்ளீஸ்"
"ரொம்பத்தேன் சலிச்சுக்குறவ மாதிரி நடிச்சுருவா, அப்றம் பாத்தா வேலைல இருக்க மாப்ளைய போட்டு நச்சு பண்ணி கூட்டிட்டு வந்து நிப்ப. ஆனா அம்புட்டு கோவபடுத மனுஷன எப்டிடி பேசி வரவைக்குற? உன் மாமியாருக்கு அதுதேன் ஆச்சரியமே அதான் உன்னயே எல்லாத்தையும் செய்ய வைக்குதாக. நீ மட்டும் எப்டி செய்த? நொரநாட்டியம் நிறைய பேசுவியே நீ எப்டி அவர சமாளிக்குற?"
அவர் பேச பேச இவள் முறைத்தே பார்க்க, "நீ சமாளிப்ப, சாமர்த்தியசாலி தான். இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உன் பேச்ச அவர் கேக்குறது வேற, இப்பவே எப்டி கேக்காரு?அவர்ட்ட பேச அவுக அம்மாவே அம்புட்டு பயப்புடுதாக நீ எப்டி தைரியமா பேசுத?" அவர் சந்தேகம் நீண்டு கொண்டே செல்ல,
"கூட்டணி அமைச்சு ப்ளான் போட்டு கோர்த்து விட்டுட்டு சந்தேகம் வேற வருதோ உனக்கு? போயிரும்மா இல்ல தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ" என்றாள் கையிலிருக்கும் நோட்பேடை தூக்கிக் காண்பித்து.
"பாத்தீங்களா எப்டி பேசுதான்னு? இப்டி அங்கையும் போய் பேசுனா நல்லா இருக்க மாமியாரையும் இவளே மாத்தி விட்ருவா"
முத்துராமன், "அவளுக்கு எங்க எப்டி பேசணும்னு தெரியும். நீ போய் கிளம்பு போ. அவங்கள கூப்பிடணும்னு சொன்னல்ல போ சேலை மாத்திட்டு வா கிளம்புவோம்" என்கவும்,
"ஆடி மாசமா இருக்கதால, எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்ய வேண்டியிருக்கு. இன்னும் கல்யாண வேலை எம்புட்டு இருக்கு. ஆனா அமாவாசை, பௌர்ணமி, ஆடி பெருக்குன்னு மூணு நல்ல நாள்தான் இருக்கு. அதான் வேலை ஓட மாட்டேங்குது. இந்தா வாரேன் இருங்க, இவட்ட பேசிட்ருந்தா ஒரு கதையும் ஆவாது" என சொல்லிவிட்டே எழுந்து சென்றார்.
"என்னைய எதாது சொல்லாம உனக்கு நிமிஷம் கழியாதுல்லம்மா" என இவளும் பேச,
"விடு பாப்பா எதுக்கு அவகிட்ட மல்லுக்கு நிக்கிற?"
"நா நிறைய வாய் பேசுவேனாம் என்னைய கூட்டிட்டு போய் வச்சு பாத்தா தான் இவங்க இங்க படுற கஷ்டம் என்னன்னு அவங்களுக்கும் தெரியுமாம். நேத்து ஃபோன்ல சொல்லிட்ருக்காங்க"
"அவங்க விரசமில்லாம பழகுறதால ப்ரண்டு மாதிரி பழகிட்ருக்கா அதான் அப்டி பேசுதாடா"
"அதுசரி அவங்க ஃப்ரண்டஷிப்ப வளக்க என்ன ஷிப்பா யூஸ் பண்ணுவாங்களா?"
"நீதான் அவங்க ரெண்டு பேரும் ப்ரண்டாகவே காரணம், அப்ப பேச்சும் உன்ன வச்சு உன்ன சுத்தி தான இருக்கும். இதுல ஜோசியர் சொன்னதும் வேற யோசிக்க வேண்டிய இருக்குல்ல?"
"எது எங்கள லவ் பண்ண வைக்குறதா? ஏன்ப்பா நீங்களும்?"
"மாப்ள உன்ட்ட நல்லமாறி பேசுவாரா? அன்னைக்கு என்ட்ட ஃபோன்ல பேசும்போது எடுத்ததும் அவ்வளவு கறாரா பேசுனாரு, என்னடா இவ்வளவு கோவபடுதாரேன்னு கூட இருந்துச்சு ஆனா கோவத்துலயும் அவ ஆசை சரிதான் ஆனா எனக்கு நேரமில்ல பாத்தீங்களான்னு பேசுனாரு எனக்கு அப்படியே புல்லரிச்சுட்டு"
பாவமாக பார்த்தாள் அவரை, 'மத்தவங்களுக்கு புல்லரிக்குறளவுக்கு பொய்ய அவுத்து விடறது, அப்றம் பொய்யா அப்டினாங்குறது, ப்பா அவரு ஒரு ப்ராடு ஏசிபி' என நினைத்துக் கொண்டே தான் பார்த்திருந்தாள்.
"உன்ட்ட நல்லமாறி பழகுவாரு தான? கோவபட்டாலும் நீ கொஞ்சம் பொறுமையா போயிடு பாப்பா. மனுஷனுக்கு வெளில ஆயிரம் டென்ஷன் இருக்கும். நீதேன் எப்பவும் அவருக்கு ஆறுதலா இருக்கணும்"
"அப்படி நல்லா எடுத்து சொல்லுங்க" என்றவாறு பளபளவென்று கிளம்பி அறைக்குள்ளிருந்து பேசிக்கொண்டே வெளியே வந்தார் அகிலா.
'அவருக்கு நாந்தான் என்டர்டெயின்மென்ட்னு தெரியாம இன்னும் நா ஆறுதலா இருக்கணும்னா என்ன சொல்ல, உனக்கு குடுத்து வச்சது அந்த நக்கல் புடிச்ச ஏசிபி தானுங்கும் போது, பொறுமையே பெருமைன்னு போயிடுடி' என எப்போதும் போல் அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டாள்.
"எதுக்கு நீ இப்ப பட்டு கட்டிருக்க?"
"பின்ன சம்மந்தி வீட்டுக்கு போறோம்ல?"
"கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்" என விரட்டியவளின் முதுகில் தட்டிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, இவள் வேலையில் ஆழ்ந்தாள்.
அவர்கள் சென்று அழைத்துவிட்டு வர இரவாகிவிட்டிருந்தது. வந்ததும் மீண்டும் கோவில் கிளம்பி சென்றுவிட்டனர். இவளுக்கு தான் காரணம் புரியவில்லை, "எதுக்கும்மா இந்நேரம் அவசரமா கோவிலுக்கு போறீங்க?" என நிறுத்திக் கேட்டதற்கும் வந்து சொல்றோம் என சென்று விட்டிருந்தனர்.
அவர்கள் வரும் முன் அவன் மூலம் செய்தி வந்திருந்தது. "என்ன மரகதம் நாளைக்கு கூழ் ஊத்த போறீங்களாம்? என்ன வேண்டுதல்? சாந்தி முகூர்த்தம் சாந்தியா நடக்கணும்னா?" என தான் பேச்சையே ஆரம்பித்தான்.
"கூழா?"
"ம்ம் என்ன கூப்பிட மாட்டியா அப்போ? பாசமு இல்ல மரியாதையும் இல்ல உன்ட்ட? இப்படிதான் அந்த மந்தாகினியும் செய்வா"
"ஏங்க நீங்க என்ன சொல்றீங்கனே புரியல"
"மந்தாகினி என்ன சொல்லுவான்னு புரியலையா? இரு தெளிவா சொல்றேன். நீ கேட்டு சொல்லாம இருப்பேனா?"
"நா அத கேக்கல. கூழ் ஊத்தறோம்னு சொன்னீங்களே அத கேட்டேன்"
"நீங்க ஊத்த போற கூழ் பத்தி என்னையே கேப்பியாடி நீ? கயிறு கட்ட இஷ்டமில்லாத மாதிரி இதுக்கும் கூப்பிட இஷ்டமில்லன்னு சொல்லிட்டு போடி. சாந்திய அவங்க பார்க்கட்டும் சாந்தி முகூர்த்தத்த நா பாத்துக்குறேன்"
"ஏங்க" என்றாள் பொறுமை இழந்த குரலில்.
"ஏங்கங்க?"
'கொழுப்பெடுத்த ஏசிபி' என வாய்க்குள் திட்டிவிட்டு, "என்ன பண்றீங்க? சாப்டீங்களா?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.
வீட்டிற்கு வந்திருந்தவன் சட்டையை கழற்றி ஹாங்கரில் மாட்டிவிட்டு, "சாப்பிடத்தான் ஆசையா இருக்கு. ஆனா கைக்கிட்ட இல்லையே?" என அவன் கையைத் தூக்கி அலுப்பெடுத்துக் கொண்டு சொல்ல,
"டிஃபன கேட்டேங்க" என்றவள் இப்போதே தலையை தாங்கி விட்டாள்.
"நானு மேகிய தான்டி சொன்னேன். காலி ஆகிடுச்சு கடை தூரமா இருக்குன்னு"
'இவர்ட்ட அது இது எதுல வர்ற மாத்தி யோசி மாதிரி மாத்தி மாத்தியே தான் பேசணும் போல' என புலம்பி விட்டு, "வீட்டுக்கு வந்துட்டீங்களா?" என்றாள்.
"நா உனக்கு ஃபோன் பண்ணத வச்சே கண்டுபுடிச்சுருக்க வேணாமா நீ?"
"சரிங்க சாரிங்க. இங்க மாரியம்மன் கோவில் தெருகட்டு பொங்கல். அதுக்கு அங்க உங்க வீட்ல எல்லாரையும் வர சொல்லலாம்னு அம்மாவும் அப்பாவும் போய்ட்டு வந்தாங்க"
"ம்ம் அங்க வச்சுதான் உங்கப்பா ஃபோன் போட்டு நாளைக்கு நம்ம வீட்டு சார்பா மாரியம்மனுக்கு கூழ் ஊத்துறோம் வந்துடுங்க மாப்ளன்னு கூப்பிட்டாரு. எனக்கு வர கஷ்டம் மாமா அம்மா வருவாங்கன்னு சொல்லிட்டு வச்சேன். ஆனாலும் வருங்கால பொண்டாட்டி கூப்பிட்டா வரலாம்னு பாத்தா கூப்பிடகூட மாட்டேன்ற நீ?"
"உங்களுக்கு வேலை இருக்கும்னு தான் கூப்பிடலங்க. கூழ் ஊத்துற விஷயமே நீங்க சொல்லித்தான் தெரியுது. அப்றம் வந்தாலும் நீங்க வீட்டுக்கு வர மாட்டீங்களே, இங்க எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணுவாங்க"
"சோ வாட் நா கோவில் வந்துட்டு கிளம்பிடுறேன் நீ எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திடு"
"எதே மறுபடியுமா?"
"என்ன மறுபடியுமா? இனி வாழ்க்கை முழுக்க நீதான சாப்பாடு போடணும்"
"சும்மா இருங்க. நீங்க தப்பு தப்பா சொல்லி தந்து எனக்கு எல்லாம் தப்பு தப்பாவே கேக்குது" என்றதும் அவன் குலுங்கி சிரித்தான், ஆனால் அதும் அவளுக்கு தெரியாமல்.
"லாயர் மேடத்துக்கு எல்லாத்திலையும் சந்தேகம். சரி வருவியா மாட்டியா"
"நா வரமாட்டேன் ஆள விடுங்க"
"இந்த மந்தாகினி இருக்கால்ல"
"அவதான் இப்ப இல்லைல விடுங்க. நாளைக்கு வாங்கன்னு நா கூப்பிடணும் அவ்வளவு தானே? ப்ளீஸ் வாங்க, வரும்போது ஒரு ஃபெவிகால் வாங்கி வாய ஒட்டிட்டு வாங்க போதும் எனக்கு"
"கட்டிவிட தான் மாட்டனா ஒட்ட வைக்கவும் மாட்டியா?"
"ஏங்க"
"பெவிகால கேட்டேன் டி"
"முடியலங்க"
"கோட்டா ஓவர். பரவால்ல நல்லா ட்ரைன் ஆகுற"
"ஆமா இந்த ஏசிபிய சமாளிக்க ட்ரைன் ஆகிட்ருக்கேன்" என்றாள் தலையில் தட்டிக்கொண்டு.
"உன்னால முடியும் மரகதம். உன்னால மட்டுந்தான் முடியும்" என்றான் அந்த மரகத கள்வன் முகம் நிறைந்த குறும்புடன்.
Last edited: