அத்தியாயம் 30
அவன் வெளியே வரும்போது வைஷ்ணவி எதிரே உள்ளே வந்தாள், முகமெங்கும் பதட்டமாக இருந்தது, ஆனாலும் திடமாக காட்டிக்கொண்டாள். உடன் இரு பெண்களும் வந்தனர்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தவாறே வந்தவன், "வைஷ்ணவி?" என்றான் அவளை கேள்வியாக,
"எஸ் சார், அந்த ரெண்டு பசங்களுக்கும் ஜாமின் வாங்க வந்துருக்கேன்" என்றதும் தான் பக்கத்தில் நின்ற இரு பெண்களை பார்த்தான், முதல் நாள் இரவிலிருந்து போராட்டம் என அமர்ந்திருந்தவர்கள் இப்போது தான் காவல்துறையின் முறைகளை தெரிந்தவர்கள் போன்று ஜாமினுக்கு வக்கீலுடன் வந்திருந்தனர்.
போராட்டம் பண்ணினால் அஞ்சுவான், மக்கள் கூட்டத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பிள்ளைகளை வீட்டிற்கு விட்டுவிடுவான் என்றெல்லாம் கதிர் பெற்றோர் சொல்ல கேட்டு, ராமுவின் பெற்றோரும் போராட்டம் செய்து பார்த்தனர். ஆனால் ப்ரஸ் மக்களோடு கொஞ்சம் கூட்டத்தை தவிர அவர்கள் பக்கம் யாரும் நிக்கவில்லை. அதிது என ஆராய்ந்து சமூக வலைதளங்களில் அந்த பள்ளியையும் அங்குள்ள மானவர்களையும் என அவரவர் இஷ்டத்திற்கு கதையை அடித்து விட்டிருக்க, மொத்தத்தில் வயது பிள்ளைகள் வாழ்க்கை கெடுகிறது என ஒரு சாராரும், அவர்கள் எதோ செய்திருக்க பழிவாங்கவே தொடர் கொலையை எவனோ செய்கிறான் என மறுசாராரும் பிரிந்து வாக்கு வாதத்தில் இருக்கின்றனர்.
ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாண்டியன் முதல் நாள் இரவும் கிளம்பி சென்று விட்டான், இதோ இன்றும் எவ்வளவு தாமதமாக வந்தும் அவர்களை கண்டுகொள்ளவில்லை, கமிஷனரும் கூட அன்று போல் இன்று கண்டு கொண்டதாக தெரியாததால், வைஷ்ணவியை கெஞ்சி அழைத்து வந்திருந்தார் அவளின் அம்மா. அதுவரை அவளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாக தான் அவளும் இருந்து கொண்டாள்.
"எப்.ஐ.ஆர் போட்டாச்சு, கோர்ட்ல தான் இனி நீங்க பாத்துக்கணும். அண்ட் பசங்க அப்ரூவ் ஆகிருக்காங்க, சோ நா கோர்ட்ல தான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்"
"ஓகே சார்" என்றவள், "நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் வாம்மா" என அதில் ஒருவரை அழைத்துக் கொண்டு திரும்ப போக,
"உனக்கும் அவன் தம்பி தானடி? ஒரு வாரமா நாங்க என்ன பாடு படுறோம்னு பாத்துட்ருந்தும் எனக்கென்னன்னு இருந்துட்ட, இன்னைக்கும் எனக்கென்னன்னு இதென்னடி பேச்சு? தாயில்லா புள்ளை ஆயிட்டான்டி? உன் தம்பி போனதுல இருந்து இவனத்தான நா அவன் இடத்துல வச்சு பாத்துட்ருக்கேன். இவனையும் இப்ப தூக்கி குடுக்க போறியா? நம்ம குடும்பத்துல என்ன நடக்குன்னே புரியலடி!" என கத்தி திட்டி அழுதார் அந்த பெண்மணி,
இவள் திரும்பி பாண்டியனை பார்த்துவிட்டு, "கிளம்பும்மா, அவன் ஏதோ செய்ய போய் தான இங்க வந்து உக்காந்துருக்கான்? தப்பு பண்ணா அனுபவிக்க தான செய்யணும்?" என்றாள் மெதுவாக அதட்டி,
"உங்க தம்பி பேரென்ன வைஷ்ணவி?" என்றான் இவன் பின்னிருந்து,
"எனக்கு தெரியும் சார் உங்களுக்கு இப்ப என்ன பத்தின ஃபுல் டீடெயில்ஸும் தெரியும்னு தெரியும். ஆனா எல்லாம் தானா வெளிய வர வைப்பீங்க. நானும் வருவேன் சார், மொத்தமா முடிஞ்சப்றம்" என்றாள் லேசான கன்றலுடன்.
"அதுக்கு நா விடமாட்டேனே வைஷ்ணவி?"
"நா ட்ரை பண்ணுவேன் சார்"
"பாக்கலாம் நாளைக்கு கோர்ட்டுக்கு கண்டிப்பா வந்திடுங்க" என்றதும்,
"ஸுயர் சார்" என்றவள் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
"சார் என் புள்ளைய அடிக்காதீங்க சார், வலி தாங்க மாட்டான்" என்றார் வைஷ்ணவியின் தாயார்.
"உங்க பையனா? உங்க தங்கச்சி பையனா? சரி யாரா வேணா இருக்கட்டும். அவன நீங்க சரியா கவனிக்கலம்மா, சோ நாங்க நல்லா கவனிச்சு தான் அனுப்புவோம், முடிஞ்சா கமிஷனர்ட்ட பேசிக்கோங்க" என்றவாறு சொல்லிக்கொண்டே அவரை கடந்துச் சென்றுவிட்டான். கமிஷனரிடம் அனைத்தையும் தகவலாக ஒப்படைத்துவிட்டான்.
அன்றைய இரவில் மரகதத்திடம் போனில் பேசும்போது கூட, அவளை எப்போதும் போல் கலாய்த்து தான் பேசிக் கொண்டிருந்தான், வைஷ்ணவி அவளிடம் பேசியிருக்கவில்லை என அவளாகவும் ஆரம்பிக்காததில் புரிந்திருந்தான்.
'ஆனாலும் நம்புறதுக்கில்ல, விஷயம் தெரிஞ்சுருந்தா கூட முழுசா முழுங்கிருவா ப்ராடு. அவளே ஆரம்பிக்கட்டும் பேசிக்கிறேன்' என அவளை மனதினுள் திட்டியும் கொண்டவன், "அப்றம் மரகதம் என்ன சாப்பாடு?" என்றான் சாதரணமாக,
"ஆப்பம் கடலை கறிங்க"
"நா மேகி எப்ப சாப்ட?"
"இன்னுமா சாப்டல நீங்க?"
"இல்ல நேரம் பாத்துட்ருக்கேன், கைக்கு வந்ததும் ஸ்வாஹா தான்"
மூஞ்சை சுருக்கி திருதிருத்தவள், "இன்னைக்கு அத்த வீட்டுக்கு போயிருக்கலாம்லங்க?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.
"அங்க எல்லாம் பிஸி, நா போனா அம்மா எல்லா வேலையும் விட்டுட்டு வீட்ல இருந்துப்பாங்க"
"நீங்க யாருக்கும் இன்விடேஷன் வைக்கலையா?"
"மந்தாகினிக்கு மட்டும் வைக்கணும் இப்ப எங்க என்ன பண்ணிட்ருக்காளோ? கல்யாணம் ஆகி பிள்ளைங்கலாம் இருக்கும்ல மரகதம்?"
"ஏங்க?" என்றவள் தலையை தாங்கி விட்டாள், 'எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாரே இந்த ஏசிபி' நினைக்க மட்டுமே முடிந்தது.
"ஆமால்ல உனக்குத்தான் அவளபத்தி பேசினா பிடிக்காதுல்ல?" என்றான் அவனேவும்.
"ஆமாங்க நாம வேற பேசலாம். அந்த தொடர் கொலை வழக்குல கில்லர் யாருன்னு சொல்லுங்களேன்"
"சொல்லலாமே? அதுக்கு முன்ன நீ சொல்லு வைஷ்ணவி பத்தி உனக்கு எந்தளவுக்கு தெரியும்?" என பிடித்துக் கொண்டான்.
"வைஷுவா?" அவள் திணற,
"ஆமா உன் கூட ஜீவானந்தம் சார்ட்ட வேலை பாக்குற அதே வைஷு தான்"
'நீயா தாண்டி எப்பவும் வாய குடுத்து மாட்ற?' என புலம்பி நகம் கடித்தவள், "தெரியுங்க கூடவே வேலை பாக்றாளே அதனால தெரியும்"
"அதான் எந்தளவுக்குன்னு கேக்றேன்டி?"
"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, கூட பிறந்தவங்க ஒரு அண்ணா, ஒரு தம்பின்ற அளவுக்கு தெரியும்"
"அந்த தம்பி இப்ப உயிரோட இல்லன்னு தெரியுமா?"
"ஆமா உடம்பு சரியில்லாம நாலைஞ்சு மாசம் முன்ன இறந்துட்டான்னு சொல்லியிருந்தா"
"நீ போகலையா அந்த டெத்துக்கு?'
"போனேன் அந்த டைம்கு மட்டும் போய்ட்டு வந்துட்டேன்"
"க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான ரெண்டு பேரும்?"
"ஆமாங்க ஆனாலும் அவளா சொல்லாத எதையும் நா கம்பல் பண்ணி தெரிஞ்சுக்க மாட்டேன். இப்பலாம் எதுவும் சொல்றதுமில்ல"
"சரி உனக்கா தெரிஞ்சத சொல்லேன் கேட்போம்"
"என்னங்க என்னையே கில்லர் போல விசாரிக்றீங்க? ஆமா வைஷ்ணவிய எதுக்கு இவ்வளவு விசாரிக்றீங்க சொல்லுங்க?"
"உனக்கு தெரிஞ்சத நீயே சொல்லிட்டா பெட்டர் மரகதம்" கோவமாக தான் வந்தது அவன் குரல்.
நிலையாக நின்று கொண்டவள், 'எதோ இருக்கு அதான் இவ்வளவு போட்டு வாங்குறாருடி மேகி. தெரிஞ்சத சொல்லிடு இல்ல இதுக்கும் சேத்து வச்சு செய்வாரு' என முடிவெடுத்து கொண்டு, "வைஷ்ணவியோட அம்மாவும், சித்தியும் கூட பிறந்த அக்கா தங்கச்சி, வைஷ்ணவியோட சித்தி வள்ளி மேடம் கேகேவி ஸ்கூல் சயின்ஸ் டீச்சர், அவங்க அங்க வொர்க் பண்ணதால ஃபேமிலி எல்லாருமே அந்த ஸ்கூல்ல தான் படிக்றாங்க, வைஷ்ணவி அண்ணா விநாயகம் கூட அங்க தான் பிடி சாரா இருக்காரு. வைஷ்ணவி தம்பி விஷ்ணுக்கும், அவளோட சித்தி மகன் ராமனுக்கும் ஒரே வயசு தான், டென்த் தான் படிக்கிறாங்க, இவங்க ரெண்டு பேருமே இப்ப தொடர்ந்து கொலை நடந்துட்டு வருதே, அந்த கேங்க்ல தான் இருந்தாங்க. இவ ரெண்டு பேரையும் அடிக்கடி கூப்ட்டு திட்டி அனுப்புவா, படிக்க சொல்லுவா, நானும் கூட அட்வைஸ் பண்ணிருக்கேன், சரிசரின்னு சொல்லிட்டு போவாங்க, ஆனா படிக்க மாட்டாங்க, அகைன் சில இஷ்யூஸ் வரும், அந்த அண்ணாவும் வைஷ்ணவியும் போய் சமாளிச்சுட்டு வருவாங்க. வைஷ்ணவி அண்ணா சொன்ன சில விஷயங்கள் ரொம்ப ஷாக்கிங்கா கூட இருந்தது. பொண்ணுங்க பசங்களோட நியூட் வீடியோஸ ஸ்கூல்ல வச்சு பாத்தாங்களாம், அதையும் மத்த பொண்ணுங்க, லேடி ஸ்டாஃப்ஸ்னு காமிக்றதும் அவங்க மொபைலுக்கு அனுப்பி வைக்றதும், அத வச்சு காசு கேக்றதும்னு இருந்துருக்காங்க. இதனால அவங்க சித்தி வள்ளி மேடம்க்கு கூட அங்க நல்ல நேம் இல்லாம, நிறைய பேசிருக்காங்க, அவங்களுக்கு இந்த பசங்க வருசையா இறந்து போகவும் அதிக பயம், தன்னோட பிள்ளையையும் இதுமாதிரி கொன்றுவாங்களோன்னு அதிக பயம், மன அழுத்தம். போன வாரம் அவங்களும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. இப்ப உங்ககிட்ட இருக்க ரெண்டு பசங்கள்ல ராமன் அந்த வள்ளி சித்தி பையன் தான், அம்மா இறந்ததும் அவனுக்கு அதிகமா தப்பு பண்ணிட்ட ஃபீல் போல. உங்க கமிஷனர் ஆபிஸ்ல அவனுக்காக வந்து உக்காந்துருக்குறது, அவனோட பெரியம்மா பெரியப்பா தான், அதாவது வைஷ்ணவியோட அம்மா அப்பா தான். இவளுக்கும் இவ அண்ணனுக்கும் சப்போர்ட் பண்ண இஷ்டமில்ல அதான் அந்த பக்கம் வராம இருக்கா" என படபடவென்று சொல்லி முடித்தாள்.
"அவ்வளவு தானா?" என்றான் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு.
"எனக்கு இதாங்க தெரியும். அவளுக்கு போலீஸ் ப்ரொடக்ஷனுக்கு கூட இவ அப்ளை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. நா உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சதுல இருந்து என்ட்ட எதையும் சொல்றதில்ல"
"இத ஏன் நீ முன்னவே சொல்லல? லாஸ்ட் பிஃப்டீன் டேஸா இந்த கேஸ் தான் பீக்ல இருக்குன்னு தெரியும்ல, நாந்தான் ஹேண்டில் பண்றேன்னும் தெரியும். பின்ன ஏன் மரகதம் என்ட்ட சொல்லல?"
"நீங்க கேக்கல தானே? அந்த பசங்க கேகேவி ஸ்கூல், வைஷுவோட ரிலேடிவ் இத நீங்களே தெரிஞ்சுப்பீங்க நா வேற தனியா என்ன சொல்லிட்டுன்னு தான் சொல்லல"
"ஓஹோ! தென் வேறென்ன தெரியும் ?இன்னும் கடத்தி கொலை எதும் பண்ணதும் தெரியுமா?"
"யாரு வைஷுவா? அவ எப்டிங்க பண்ணுவா? ஏன் பண்ணணும்?"
"உனக்கு தெரியாதுன்ற?"
"ஏங்க கில்லர் லேடின்னு அன்னைக்கு சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன் இப்ப என்னன்னா வைஷுவோட கம்பேர் பண்றீங்க? அவளா கில்லர்?" என்றாள் படபடத்து.
"வேற எந்த லேடியும் இதுல சம்மந்தப்படலையே?"
"அதுக்காக சும்மா இருக்கவள புடிச்சு உள்ள போட பாப்பீங்களா? அவ செய்ய வேண்டிய அவசியம்? அவளுக்கு அதுக்கான மோட்டிவ்வே இல்லையே? அவ தம்பிங்களும் சேர்ந்து தான் யாருக்கோ எதோ பண்ணிருக்காங்க. பாதிக்கபட்ட ஒருத்தன் கடத்தி கொல்றான். இவ ஏன் பண்ணணும்?"
"அந்த ராமன், வைஷுவோட சித்தி பையன் ரைட்? அவன் அப்ரூவராகிட்டான். அக்காதான் காரணம்னு தெளிவா சொல்றான். நீதான் இப்ப சொன்னா அவனோட அக்கா வைஷுன்னு?"
"இவ அந்த பையனுக்கு பெரியம்மா பொண்ணு தான். அவனோட கூட பிறந்த அக்கா இன்னொருத்தி இருக்காங்க" என்றாள் தெளிவாகவும் வேகமாகவும்.
"ம்ம் மந்தாகினி இல்லையா அந்த பொண்ணு பேரு?" என்றான் அவன் அவ்வளவு நிதானமாக. அவன் அவளை கொண்டு வர வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்திருந்தான்.
"ஆ ஆ ஆமாங்க" இவளும் மனதிற்குள் என்னவெல்லாமோ யோசித்து பயந்தாள்.
"குட். நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் மரகதம். குட் நைட்" என அதற்கு மேல் பேசவிடாமல் வைத்து விட்டான். இவளும் அப்படியே அமர்ந்து விட்டாள். 'மந்தாகினி' என்றோ இவள் விளையாட்டாக முன்னெடுத்து வைத்த பெயர், இன்று வரை விடாமல் துரத்துகிறது.
அவன் வெளியே வரும்போது வைஷ்ணவி எதிரே உள்ளே வந்தாள், முகமெங்கும் பதட்டமாக இருந்தது, ஆனாலும் திடமாக காட்டிக்கொண்டாள். உடன் இரு பெண்களும் வந்தனர்.
அவளை புருவம் சுருக்கி பார்த்தவாறே வந்தவன், "வைஷ்ணவி?" என்றான் அவளை கேள்வியாக,
"எஸ் சார், அந்த ரெண்டு பசங்களுக்கும் ஜாமின் வாங்க வந்துருக்கேன்" என்றதும் தான் பக்கத்தில் நின்ற இரு பெண்களை பார்த்தான், முதல் நாள் இரவிலிருந்து போராட்டம் என அமர்ந்திருந்தவர்கள் இப்போது தான் காவல்துறையின் முறைகளை தெரிந்தவர்கள் போன்று ஜாமினுக்கு வக்கீலுடன் வந்திருந்தனர்.
போராட்டம் பண்ணினால் அஞ்சுவான், மக்கள் கூட்டத்திற்கு பதில் சொல்ல முடியாமல் பிள்ளைகளை வீட்டிற்கு விட்டுவிடுவான் என்றெல்லாம் கதிர் பெற்றோர் சொல்ல கேட்டு, ராமுவின் பெற்றோரும் போராட்டம் செய்து பார்த்தனர். ஆனால் ப்ரஸ் மக்களோடு கொஞ்சம் கூட்டத்தை தவிர அவர்கள் பக்கம் யாரும் நிக்கவில்லை. அதிது என ஆராய்ந்து சமூக வலைதளங்களில் அந்த பள்ளியையும் அங்குள்ள மானவர்களையும் என அவரவர் இஷ்டத்திற்கு கதையை அடித்து விட்டிருக்க, மொத்தத்தில் வயது பிள்ளைகள் வாழ்க்கை கெடுகிறது என ஒரு சாராரும், அவர்கள் எதோ செய்திருக்க பழிவாங்கவே தொடர் கொலையை எவனோ செய்கிறான் என மறுசாராரும் பிரிந்து வாக்கு வாதத்தில் இருக்கின்றனர்.
ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாண்டியன் முதல் நாள் இரவும் கிளம்பி சென்று விட்டான், இதோ இன்றும் எவ்வளவு தாமதமாக வந்தும் அவர்களை கண்டுகொள்ளவில்லை, கமிஷனரும் கூட அன்று போல் இன்று கண்டு கொண்டதாக தெரியாததால், வைஷ்ணவியை கெஞ்சி அழைத்து வந்திருந்தார் அவளின் அம்மா. அதுவரை அவளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாக தான் அவளும் இருந்து கொண்டாள்.
"எப்.ஐ.ஆர் போட்டாச்சு, கோர்ட்ல தான் இனி நீங்க பாத்துக்கணும். அண்ட் பசங்க அப்ரூவ் ஆகிருக்காங்க, சோ நா கோர்ட்ல தான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்"
"ஓகே சார்" என்றவள், "நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் வாம்மா" என அதில் ஒருவரை அழைத்துக் கொண்டு திரும்ப போக,
"உனக்கும் அவன் தம்பி தானடி? ஒரு வாரமா நாங்க என்ன பாடு படுறோம்னு பாத்துட்ருந்தும் எனக்கென்னன்னு இருந்துட்ட, இன்னைக்கும் எனக்கென்னன்னு இதென்னடி பேச்சு? தாயில்லா புள்ளை ஆயிட்டான்டி? உன் தம்பி போனதுல இருந்து இவனத்தான நா அவன் இடத்துல வச்சு பாத்துட்ருக்கேன். இவனையும் இப்ப தூக்கி குடுக்க போறியா? நம்ம குடும்பத்துல என்ன நடக்குன்னே புரியலடி!" என கத்தி திட்டி அழுதார் அந்த பெண்மணி,
இவள் திரும்பி பாண்டியனை பார்த்துவிட்டு, "கிளம்பும்மா, அவன் ஏதோ செய்ய போய் தான இங்க வந்து உக்காந்துருக்கான்? தப்பு பண்ணா அனுபவிக்க தான செய்யணும்?" என்றாள் மெதுவாக அதட்டி,
"உங்க தம்பி பேரென்ன வைஷ்ணவி?" என்றான் இவன் பின்னிருந்து,
"எனக்கு தெரியும் சார் உங்களுக்கு இப்ப என்ன பத்தின ஃபுல் டீடெயில்ஸும் தெரியும்னு தெரியும். ஆனா எல்லாம் தானா வெளிய வர வைப்பீங்க. நானும் வருவேன் சார், மொத்தமா முடிஞ்சப்றம்" என்றாள் லேசான கன்றலுடன்.
"அதுக்கு நா விடமாட்டேனே வைஷ்ணவி?"
"நா ட்ரை பண்ணுவேன் சார்"
"பாக்கலாம் நாளைக்கு கோர்ட்டுக்கு கண்டிப்பா வந்திடுங்க" என்றதும்,
"ஸுயர் சார்" என்றவள் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
"சார் என் புள்ளைய அடிக்காதீங்க சார், வலி தாங்க மாட்டான்" என்றார் வைஷ்ணவியின் தாயார்.
"உங்க பையனா? உங்க தங்கச்சி பையனா? சரி யாரா வேணா இருக்கட்டும். அவன நீங்க சரியா கவனிக்கலம்மா, சோ நாங்க நல்லா கவனிச்சு தான் அனுப்புவோம், முடிஞ்சா கமிஷனர்ட்ட பேசிக்கோங்க" என்றவாறு சொல்லிக்கொண்டே அவரை கடந்துச் சென்றுவிட்டான். கமிஷனரிடம் அனைத்தையும் தகவலாக ஒப்படைத்துவிட்டான்.
அன்றைய இரவில் மரகதத்திடம் போனில் பேசும்போது கூட, அவளை எப்போதும் போல் கலாய்த்து தான் பேசிக் கொண்டிருந்தான், வைஷ்ணவி அவளிடம் பேசியிருக்கவில்லை என அவளாகவும் ஆரம்பிக்காததில் புரிந்திருந்தான்.
'ஆனாலும் நம்புறதுக்கில்ல, விஷயம் தெரிஞ்சுருந்தா கூட முழுசா முழுங்கிருவா ப்ராடு. அவளே ஆரம்பிக்கட்டும் பேசிக்கிறேன்' என அவளை மனதினுள் திட்டியும் கொண்டவன், "அப்றம் மரகதம் என்ன சாப்பாடு?" என்றான் சாதரணமாக,
"ஆப்பம் கடலை கறிங்க"
"நா மேகி எப்ப சாப்ட?"
"இன்னுமா சாப்டல நீங்க?"
"இல்ல நேரம் பாத்துட்ருக்கேன், கைக்கு வந்ததும் ஸ்வாஹா தான்"
மூஞ்சை சுருக்கி திருதிருத்தவள், "இன்னைக்கு அத்த வீட்டுக்கு போயிருக்கலாம்லங்க?" என்றாள் பேச்சை மாற்ற எண்ணி.
"அங்க எல்லாம் பிஸி, நா போனா அம்மா எல்லா வேலையும் விட்டுட்டு வீட்ல இருந்துப்பாங்க"
"நீங்க யாருக்கும் இன்விடேஷன் வைக்கலையா?"
"மந்தாகினிக்கு மட்டும் வைக்கணும் இப்ப எங்க என்ன பண்ணிட்ருக்காளோ? கல்யாணம் ஆகி பிள்ளைங்கலாம் இருக்கும்ல மரகதம்?"
"ஏங்க?" என்றவள் தலையை தாங்கி விட்டாள், 'எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாரே இந்த ஏசிபி' நினைக்க மட்டுமே முடிந்தது.
"ஆமால்ல உனக்குத்தான் அவளபத்தி பேசினா பிடிக்காதுல்ல?" என்றான் அவனேவும்.
"ஆமாங்க நாம வேற பேசலாம். அந்த தொடர் கொலை வழக்குல கில்லர் யாருன்னு சொல்லுங்களேன்"
"சொல்லலாமே? அதுக்கு முன்ன நீ சொல்லு வைஷ்ணவி பத்தி உனக்கு எந்தளவுக்கு தெரியும்?" என பிடித்துக் கொண்டான்.
"வைஷுவா?" அவள் திணற,
"ஆமா உன் கூட ஜீவானந்தம் சார்ட்ட வேலை பாக்குற அதே வைஷு தான்"
'நீயா தாண்டி எப்பவும் வாய குடுத்து மாட்ற?' என புலம்பி நகம் கடித்தவள், "தெரியுங்க கூடவே வேலை பாக்றாளே அதனால தெரியும்"
"அதான் எந்தளவுக்குன்னு கேக்றேன்டி?"
"அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல, கூட பிறந்தவங்க ஒரு அண்ணா, ஒரு தம்பின்ற அளவுக்கு தெரியும்"
"அந்த தம்பி இப்ப உயிரோட இல்லன்னு தெரியுமா?"
"ஆமா உடம்பு சரியில்லாம நாலைஞ்சு மாசம் முன்ன இறந்துட்டான்னு சொல்லியிருந்தா"
"நீ போகலையா அந்த டெத்துக்கு?'
"போனேன் அந்த டைம்கு மட்டும் போய்ட்டு வந்துட்டேன்"
"க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான ரெண்டு பேரும்?"
"ஆமாங்க ஆனாலும் அவளா சொல்லாத எதையும் நா கம்பல் பண்ணி தெரிஞ்சுக்க மாட்டேன். இப்பலாம் எதுவும் சொல்றதுமில்ல"
"சரி உனக்கா தெரிஞ்சத சொல்லேன் கேட்போம்"
"என்னங்க என்னையே கில்லர் போல விசாரிக்றீங்க? ஆமா வைஷ்ணவிய எதுக்கு இவ்வளவு விசாரிக்றீங்க சொல்லுங்க?"
"உனக்கு தெரிஞ்சத நீயே சொல்லிட்டா பெட்டர் மரகதம்" கோவமாக தான் வந்தது அவன் குரல்.
நிலையாக நின்று கொண்டவள், 'எதோ இருக்கு அதான் இவ்வளவு போட்டு வாங்குறாருடி மேகி. தெரிஞ்சத சொல்லிடு இல்ல இதுக்கும் சேத்து வச்சு செய்வாரு' என முடிவெடுத்து கொண்டு, "வைஷ்ணவியோட அம்மாவும், சித்தியும் கூட பிறந்த அக்கா தங்கச்சி, வைஷ்ணவியோட சித்தி வள்ளி மேடம் கேகேவி ஸ்கூல் சயின்ஸ் டீச்சர், அவங்க அங்க வொர்க் பண்ணதால ஃபேமிலி எல்லாருமே அந்த ஸ்கூல்ல தான் படிக்றாங்க, வைஷ்ணவி அண்ணா விநாயகம் கூட அங்க தான் பிடி சாரா இருக்காரு. வைஷ்ணவி தம்பி விஷ்ணுக்கும், அவளோட சித்தி மகன் ராமனுக்கும் ஒரே வயசு தான், டென்த் தான் படிக்கிறாங்க, இவங்க ரெண்டு பேருமே இப்ப தொடர்ந்து கொலை நடந்துட்டு வருதே, அந்த கேங்க்ல தான் இருந்தாங்க. இவ ரெண்டு பேரையும் அடிக்கடி கூப்ட்டு திட்டி அனுப்புவா, படிக்க சொல்லுவா, நானும் கூட அட்வைஸ் பண்ணிருக்கேன், சரிசரின்னு சொல்லிட்டு போவாங்க, ஆனா படிக்க மாட்டாங்க, அகைன் சில இஷ்யூஸ் வரும், அந்த அண்ணாவும் வைஷ்ணவியும் போய் சமாளிச்சுட்டு வருவாங்க. வைஷ்ணவி அண்ணா சொன்ன சில விஷயங்கள் ரொம்ப ஷாக்கிங்கா கூட இருந்தது. பொண்ணுங்க பசங்களோட நியூட் வீடியோஸ ஸ்கூல்ல வச்சு பாத்தாங்களாம், அதையும் மத்த பொண்ணுங்க, லேடி ஸ்டாஃப்ஸ்னு காமிக்றதும் அவங்க மொபைலுக்கு அனுப்பி வைக்றதும், அத வச்சு காசு கேக்றதும்னு இருந்துருக்காங்க. இதனால அவங்க சித்தி வள்ளி மேடம்க்கு கூட அங்க நல்ல நேம் இல்லாம, நிறைய பேசிருக்காங்க, அவங்களுக்கு இந்த பசங்க வருசையா இறந்து போகவும் அதிக பயம், தன்னோட பிள்ளையையும் இதுமாதிரி கொன்றுவாங்களோன்னு அதிக பயம், மன அழுத்தம். போன வாரம் அவங்களும் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. இப்ப உங்ககிட்ட இருக்க ரெண்டு பசங்கள்ல ராமன் அந்த வள்ளி சித்தி பையன் தான், அம்மா இறந்ததும் அவனுக்கு அதிகமா தப்பு பண்ணிட்ட ஃபீல் போல. உங்க கமிஷனர் ஆபிஸ்ல அவனுக்காக வந்து உக்காந்துருக்குறது, அவனோட பெரியம்மா பெரியப்பா தான், அதாவது வைஷ்ணவியோட அம்மா அப்பா தான். இவளுக்கும் இவ அண்ணனுக்கும் சப்போர்ட் பண்ண இஷ்டமில்ல அதான் அந்த பக்கம் வராம இருக்கா" என படபடவென்று சொல்லி முடித்தாள்.
"அவ்வளவு தானா?" என்றான் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு.
"எனக்கு இதாங்க தெரியும். அவளுக்கு போலீஸ் ப்ரொடக்ஷனுக்கு கூட இவ அப்ளை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா. நா உங்கள கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சதுல இருந்து என்ட்ட எதையும் சொல்றதில்ல"
"இத ஏன் நீ முன்னவே சொல்லல? லாஸ்ட் பிஃப்டீன் டேஸா இந்த கேஸ் தான் பீக்ல இருக்குன்னு தெரியும்ல, நாந்தான் ஹேண்டில் பண்றேன்னும் தெரியும். பின்ன ஏன் மரகதம் என்ட்ட சொல்லல?"
"நீங்க கேக்கல தானே? அந்த பசங்க கேகேவி ஸ்கூல், வைஷுவோட ரிலேடிவ் இத நீங்களே தெரிஞ்சுப்பீங்க நா வேற தனியா என்ன சொல்லிட்டுன்னு தான் சொல்லல"
"ஓஹோ! தென் வேறென்ன தெரியும் ?இன்னும் கடத்தி கொலை எதும் பண்ணதும் தெரியுமா?"
"யாரு வைஷுவா? அவ எப்டிங்க பண்ணுவா? ஏன் பண்ணணும்?"
"உனக்கு தெரியாதுன்ற?"
"ஏங்க கில்லர் லேடின்னு அன்னைக்கு சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன் இப்ப என்னன்னா வைஷுவோட கம்பேர் பண்றீங்க? அவளா கில்லர்?" என்றாள் படபடத்து.
"வேற எந்த லேடியும் இதுல சம்மந்தப்படலையே?"
"அதுக்காக சும்மா இருக்கவள புடிச்சு உள்ள போட பாப்பீங்களா? அவ செய்ய வேண்டிய அவசியம்? அவளுக்கு அதுக்கான மோட்டிவ்வே இல்லையே? அவ தம்பிங்களும் சேர்ந்து தான் யாருக்கோ எதோ பண்ணிருக்காங்க. பாதிக்கபட்ட ஒருத்தன் கடத்தி கொல்றான். இவ ஏன் பண்ணணும்?"
"அந்த ராமன், வைஷுவோட சித்தி பையன் ரைட்? அவன் அப்ரூவராகிட்டான். அக்காதான் காரணம்னு தெளிவா சொல்றான். நீதான் இப்ப சொன்னா அவனோட அக்கா வைஷுன்னு?"
"இவ அந்த பையனுக்கு பெரியம்மா பொண்ணு தான். அவனோட கூட பிறந்த அக்கா இன்னொருத்தி இருக்காங்க" என்றாள் தெளிவாகவும் வேகமாகவும்.
"ம்ம் மந்தாகினி இல்லையா அந்த பொண்ணு பேரு?" என்றான் அவன் அவ்வளவு நிதானமாக. அவன் அவளை கொண்டு வர வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்திருந்தான்.
"ஆ ஆ ஆமாங்க" இவளும் மனதிற்குள் என்னவெல்லாமோ யோசித்து பயந்தாள்.
"குட். நாளைக்கு கோர்ட்ல பாக்கலாம் மரகதம். குட் நைட்" என அதற்கு மேல் பேசவிடாமல் வைத்து விட்டான். இவளும் அப்படியே அமர்ந்து விட்டாள். 'மந்தாகினி' என்றோ இவள் விளையாட்டாக முன்னெடுத்து வைத்த பெயர், இன்று வரை விடாமல் துரத்துகிறது.
Last edited: