அத்தியாயம் 35
முதல் முத்தம் என்பதால் அவன் அதற்குள் மூழ்கி முத்தை தேடிக் கொண்டிருக்க, வாசுகி சத்தமெல்லாம் எங்கோ மூலையில் கேட்கும் நிலை தான், ஏற்கனவே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல், அவன் தரும் புது உணர்வுகளை ஏற்று அதனோடு பயணிக்கவும் முடியாமல், தள்ளிவிட்டு விலகி கொள்ளவும் தோன்றாமல், நடுங்கி கொண்டு நின்றவளுக்கு தான் வாசுகியின் குரல் உடனே கேட்டது.
'ஆத்தி அத்த' என மனதிற்குள் அலறி, விலக முயன்றாள். ஆனால் அவனிடமிருந்து இஞ்ச் நகர முடியவில்லை அவளால், அவ்வளவு நேரமும் அவள் விலக முயலாததாள் அவளுக்கு தெரியவில்லை போலும், இப்போது புரிந்தது அவள் முயற்சித்திருந்தாலும் முடிந்திருந்திருக்காது என்பது.
அங்கு வாசுகி கதவை வேகமாக தட்ட துவங்கவும், இவள் அவன் தோளில் அடிக்க, அதையும் தூசு போல் தட்டிவிட்டு அவன் முத்தமிடும் வேலையில் தான் அவனது முழு கவனமும்.
பல நாட்களாக செயல்படுத்த நினைத்து நினைத்து முடியாமல் போனதை அப்போது செய்துவிட்டாள், எட்டி நறுக்கென்று அவன் உச்சியில் கொட்டிவிட, அதில் மொத்தமும் கலைய அவளிடமிருந்து பிரிந்து அவள் முகம் பார்க்க, "அத்த கூப்பிடுறாங்க" என்றாள் பாவமாக.
"அதுக்கு கொட்டுவியா நீ?"
"பின்ன எப்டி உங்கள நகர்த்தவே முடிலயே?"
"மூத்தவனே? கண்ணு, பாப்பா, மரகதவல்லி" என அங்கு அழைத்துக் கொண்டே இருந்தார் வாசுகி.
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேருன்னு ஊருபட்ட பேராடி வச்சுக்குவ? இரு உன்ன நாளைக்கு தனியா சிக்கும் போது பேசிக்றேன்" என்றவன் விறுவிறுவென கதவை திறக்க செல்ல,
"பேசுற மூஞ்சிய தான் இவ்வளவு நேரமு பாத்துட்ருக்கேன் நா" என முனங்கி கொண்டே முகத்தை கைக்குட்டையால் நன்கு துடைத்து கொண்டு பின் தொடர்ந்து சென்றாள் இவளும்.
"என்னடி முனங்குன?" என்றான் கதவு வரை சென்றவன் சட்டென்று நின்று திரும்பி,
"ஒன்னுமில்லங்க, அத்த திட்டுவாங்களோன்னு யோசிச்சேன், அத தான் சொல்லிட்டேன் போல"
"நானே வில்லங்கம் புடிச்சவன் எங்கிட்டயே டகால்டி வேலை காட்றல்ல?"
"ஏங்க கதவ திறந்துட்டு என்ன வேணா திட்டுங்களேன், அவங்க எதாது நினச்சுக்க போறாங்க"
"அவங்க நினைக்குறது தான நடந்தது, அப்ப அவங்க நினைக்குறதும் சரிதான?"
"ஏங்கங்க" என்றாள் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு.
"நீயே சொல்லேன்"
"கதவ திறங்க இல்ல வழி விடுங்க நா திறக்குறேன்"
"என்னட்டி இம்புட்டு தட்டியும் திறக்க மாட்டேங்காக, பேச்சு சத்தம் கேக்குதே? இவேன் ரொம்ப திட்டிருப்பானோ? பெரிய சண்டை எதுவும் போடுதாகளோ? காத்து கருப்பு வேலைய காட்டுதோ? ஆத்தி அந்த ஜோசியகாரன் வேற வாய வச்சு தொலைச்சானே?" என அங்கு வாசுகி வேறு புலம்ப,
"அத்த அதெல்லாம் இருக்காது, அவங்களே வருவாங்க, அத்தான் நீங்க இப்படி தட்டுததுக்குதேன் வைய்ய போறாக" என ஷீலா அவரை இழுத்து பிடிக்க முயன்றாள்.
"உங்களதாம்டி மொத்தணும், அவேன் கோவமா இருக்கியான்னு சொல்லியும் அந்த புள்ளைய கூட்டிட்டு வந்து விட்ருக்கீக. படிச்ச புள்ளைக செய்யுற வேலையாட்டி இது? நாளைக்கு காலைல கல்யாணத்த வச்சுகிட்டு இந்நேரம் ரெண்டும் சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். என்னைய கூப்புடாம உங்கள யாருட்டி அவள மூத்தவன் ரூமுக்குள்ள போ விட சொன்னது? நமக்குதேன் தெரியும் உள்ள ரெண்டும் சண்ட போடுதுகன்னு. மத்தவுக தப்பால்ல பேசுவாக. சின்ன பிள்ளைகன்னு காமிச்சுருதீகளே" அவர் திட்ட திட்ட கேட்டுக் கொண்டு தேமே என்று தான் நின்றனர் ஷீலா விசாலாட்சி இருவரும். குறுக்க பேசினால் இன்னும் திட்டுவார் என தெரிந்ததால் அமைதியாக வாங்கிக் கொண்டனர்.
வெளியே அவர்கள் பேச்சு வார்த்தையில் இருக்க உள்ளே இவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.
'எப்பையும் போல வெளிய மாமியார் உள்ள மகன், மேகி உன் வாழ்க்கையோட சேம்பிள் ஒளிவட்டம் இதான்டி. மாட்டிட்டு முழிக்கதான் போற' இந்தமுறை தெளிவாக மனதிற்குள் மட்டுமே நொந்து கொண்டாள்.
"எங்க என்ன தாண்டி போய் திறடி பாப்போம்" என தான் மறித்து நின்றான் மகிழ்.
'முத்தமே குடுத்தாச்சு இனி என்னவாம், இவர சுத்தி போயி திறந்துடுவோமாடி மேகி' என அவனின் வலது பக்கம் வழியே கதவின் குமிழியை திருக கையை கொண்டு சென்றாள், அவன் சட்டை மட்டுமே உரசியது, அதற்கே படபடக்க பட்டென்று மீண்டும் எடுத்துக் கொண்டாள்.
"பாண்டியா" என வாசுகி இந்த முறை கொஞ்சம் சத்தமாக கத்தவும்,
"போச்சு எல்லாரும் வர போறாங்க, நம்ம சண்டை எல்லாருக்கும் தெரிய போகுது"
"அதுக்கு நீ படிக்குற காலத்துல ஃபோர்ஜரி பண்ணாம இருந்துருக்கணும் இந்த அப்பாவிய ஏமாத்தாம இருந்துருக்கணும் மரகதம்"
"அப்பாவி தாங்க"
"இல்லம்பியா நீ?"
"அதெப்டிங்க சொல்ல முடியும் என்ன நம்புனீங்களே. ஆனா நானும் நல்ல பொண்ணுதான் இதோ கமிட்டாகும் முன்ன சரண்டர் ஆகிட்டேன்ல?"
"மரகதவல்லி" வாசுகி வெளியே,
"ப்ளீஸ்ங்க"
"அப்ப டீல் பேசுவோம், நீதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே? எனக்கு மந்தாகினிய மறக்க வை திறக்குறேன்" என்றான் விறைப்புடனே.
"மறுபடியுமா?" என்றவள் அதிர்ந்து அவனை வேகமாக கடந்து சென்று கதவை திறந்தே விட்டாள், உதட்டுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடைத்துக் கொண்டான் அந்த கள்வன்.
"என்ன பாப்பா பண்ற? மூத்தவன் கூட சண்டை போட போயிருக்கன்றா ஷீலா? இந்நேரத்துல எதுக்கு சண்டை என்ன சண்டை?" என படபடத்தார் அவர்.
"அது கேஸ் விஷயமா பேசி சண்டையாகிடுச்சுத்த கோச்சுகிட்டாங்க அதான் பேச வந்தேன். இப்ப பேசிட்டேன், நாம போலாம்" அறை வாசலில் தான் சாய்ந்து நின்று அவள் கதையை உதட்டை பிதுக்கி காண்பித்து கேட்டிருந்தான் பாண்டியன்.
"என்னய்யா? கோர்ட்டு கேஸுலாம் அங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு வந்தா புருஷன் பொண்டாட்டின்னு மட்டுந்தேன் இருக்கணும் வேலை கொண்டு வந்து வீட்டுலையும் சண்டை போட கூடாதுய்யா"
"ம்மா எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது இது. உனக்கு தெரியாது" என்றான் அவன்.
"என்னது எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது? என்ன கண்ணு பிரச்சினை"
"அத்த ஒன்னுமில்ல நீங்க வாங்க நா சொல்றேன். காலைல நாலு மணிக்குலாம் மேக்கப் பண்ண ஆளுங்க வந்துடுவாங்க. ஆமா தானே விசாலாட்சி?" என்றாள் அவளிடமும்.
"ஆமா ஆமா வாங்கத்த யாராவது வந்து என்னன்னு கேட்கும் முன்ன போயிடலாம்" என்றவள் அவர் கையை பிடித்திழுக்க,
"உங்களாலாம் வச்சுட்டு நா என்னன்னுதேன் இந்த கல்யாணத்த நடத்தி முடிக்க போறேனோ தெரியல" என புலம்பி கொண்டே தான் சென்றார் வாசுகி.
"மூத்தவளே கூடவே வா" என அவளுக்கும் திரும்பி சொல்ல,
"வரேன்த்த" என்றவாறு ஷீலாவுடன் அவர்பின்னே நடந்தவள் திரும்பி அவனை ஒருமுறை பார்க்க,
"ப்ராடு இங்க வாடி" என்றான் மெலிதான சத்தத்தில், பட்டென்று திரும்பி நடந்துவிட்டாள். முதலில் இருந்த குழப்பம் இன்றி தெளிவாக தூங்கச் சென்றாள், இதுவரை அவனிடம் அதை வெளிப்படுத்தாதது உறுத்திக் கொண்டே இருக்க, இன்று சொல்லிவிட்டு அவனிடம் சமரசமும் ஆகிவிட்டது நிம்மதியாக இருக்க, சந்தோஷமாகவே தூங்கச் சென்றாள்.
காலை மூன்று மணிக்கெல்லாம் அவளை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டனர், நான்கு மணிக்கு அவளை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட்டனர், அன்றைக்கான சிறப்பலங்காரம், கூரை புடவையில் தயாரகியவளை கண்மணி தான் அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே வந்து நின்ற பாண்டியன் முன் சென்று நிறுத்தினாள். பாண்டியன் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மிடுக்கோடு, சற்று திமிராக நின்றிருந்தான். அவன் வேலையால் அவனது உடல்மொழியே அப்படியென்று ஆகிவிட்டது.
"உட்காருங்கோ" என ஐயர் சொல்லவும் இருவரும் அனைவருக்கும் வணக்கம் வைத்து மணையில் அமர்ந்தனர், அவர் மந்திர உச்சாடனம் உச்சரித்து, ஹோமத்தில் போட பூ, அரிசி, வேப்பங் குச்சி என தர இருவரும் அப்படியே செய்தனர்.
தேங்காய் வைத்து அவள் மடியை அவன் கையால் நிரப்ப சொன்னார், "மரகதம்" என்றான் அவள் காதில்.
அவள் நிமிர்ந்து பார்த்து சிரிக்க, "பழைய காதலியா, மனசுக்குள் மந்தாகினி ஆனால் தாலி கட்டிக்க என் பக்கத்துல நீ மரகதம் இருக்க, உன் மடியை நிரப்புறேன் நா. நீ என்ன நினைக்குற இதைப்பத்தி" என்றான் நக்கலாக.
'இவருக்கு இருக்க குசும்புக்கு' என திட்டியவள், "பழைய காதலி இன்றைய மனைவி நாளைக்கு உங்களுக்கு எல்லாமுமாவே இருக்க போறது வரை, எல்லாமே உங்களுக்கு நாந்தாங்க" என்றாள் பவ்யமாக.
"ஓஹோ எல்லாமாவா?"
"ஆமாங்க"
"இங்க பாருங்கோ ரெண்டு பேரும்" என்ற ஐயரின் அழைப்பில் இருவரும் அவரிடம் திரும்ப,
"தாலிய தொட்டுக்கோங்கோ" என்றார்.
இருவரும் தொட்டு வணங்கி கொள்ள, "சுத்தி நிக்குறவா எல்லாம் தொட்டுக்கோங்கோ" என மாங்கல்யம் இருந்த தட்டை நீட்ட, மணமேடையை சுற்றி நின்ற அனைவரும் தொட்டு வணங்கி, மணமக்களை வாழ்த்த அதிலிருந்த மஞ்சளில் பிரட்டிய அரிசியையும் பூவையும் கையில் எடுத்துக் கொண்டனர்.
"இந்தாங்கோ இப்ப கட்டுங்கோ" என மாங்கல்யத்தை பாண்டியனிடம் நீட்ட, வாங்கி கொண்டவன், "கட்டிறவா மரகதம்?" என அவளிடமும் கேட்க,
"ஏடாகூடமா பேசாம கட்டிடுங்க ப்ளீஸ்" கண்ணை சுருக்கி கெஞ்சி சொல்லவும், சிரித்துக் கொண்டே அவள் கழுத்தை சுற்றி மாங்கல்யம் கோர்த்த மஞ்சள் கயிறை கொண்டு சென்று மூன்று முடிச்சிட்டான். அவன் கையை எடுத்ததும், கண்மணி அவளே அறியாமல் நான்காம் முடிச்சை தான் போட்டாள்.
"துணை மாலைய மாத்துங்கோ" இருவரும் மாலையை மாற்ற, "மெட்டி போட்டு விடுங்கோ" என்றார்,
"அது கண்மணி போடுவா மூத்தவனே, வீட்ல போய் போட்டுக்குவோம்" என்றார் வாசுகி, மகன் அப்படி அமர்ந்து போட மாட்டானோ எண்ணி அவராகவே கூறினார்.
"ஏன் கண்மணி போடணும்? செய்றத சரியா செய்யணும்மா, இது நாந்தானே செய்யணும்?" என்றான் அவரிடம்.
"ஆமாய்யா" என்றவர், "ஷீலா, பர்சுலதேன் இருந்தது எடுத்தா" என்றதும் அவள் நகைகள் இருந்த பையில் இருந்து எடுத்து தர, வாசுகி வாங்கி இவனிடம் தர, "அம்மி எடுத்து வைக்கல, நீ இந்த பலகைல கால வைத்தா" என ஒரு பலகையை எடுத்து வந்து வைக்கவும், மரகதவல்லி அதில் காலை வைக்க, அன்று அவன் போட்டுவிட்ட கொலுசு அங்கு மின்னிக் கொண்டிருந்தது, அவள் அன்று அவ்வளவு புலம்பினாளும் அதை கலட்டியிருக்கவில்லை, அதுவே வாசுகிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.
"மூத்தவன் தான் அன்னைக்கே அவ கால புடிச்சானுள்ள, நா ஒரு மடச்சி அத மறந்துபுட்டேன் பாரு, அழகா அம்மி கொண்டு வச்சுருந்தா அதுல வச்சே போட்ருப்பான், நாந்தான் வயசானவ மறந்துபோயிட்டேன் நீங்களாது நெனவு சொன்னா என்னட்டி" என்றார் அருகிலிருந்த இரு மருமகள்களிடமும்.
"உங்களுக்கு எல்லாத்துக்கும் நாங்கதேன் உடனே கிடைப்போம்" என்றாள் ஷீலா.
"வாய் மட்டும் நல்லா பேசு" என்றவர் மணமக்களிடம் கவனம் வைக்க, அங்கு நிதானமாக அவளின் விரலுக்கு வலிக்காமல் மெட்டியை நுழைத்துக் கொண்டிருந்தான் அவர் மகன்.
மரகதவல்லியும் அதை தான் கவனித்திருந்தாள், மென்மையாக அவள் பாதம் பற்றி, அடிபாதத்தில் யாரும் அறியாமல் ஒரு கோடிழுத்து அவளை கூச செய்துவிட்டே விரலுக்கு வந்தான், அவள் காலும் அதிலிருக்கும் மருதாணியுமே அவனை மயங்க வைக்க போதும் போலும், கையை எடுக்கவே மனமில்லாமல் தான் ஒரு காலில் மெட்டியை போட்டுவிட்டு மறு காலுக்கு வந்தான். அங்கும் இருகைகளாலும் அவள் பாதத்தை பிடித்து அவன் குடுத்த அழுத்தம் அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சியை சிறகடிக்க வைத்துக்கொண்டிருந்தது.
"சார் இங்க பாருங்க" என புகைபடக்காரரின் அழைப்பில் அவரிடம் திரும்பினான். அப்படியே அந்த நிலை நிழல்படமானது.
"இந்த ட்ரஸ்ல உங்க பேரண்ட்ஸ்ட்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி எடுத்துக்குலாம் சார். அப்றம் ட்ரஸ் மாத்திட்டு தனியா சில ஸ்டில்ஸ் எடுத்துக்கலாம் சார்" என்றதும்,
"எடுக்கலாமே" என்றவன் சொன்ன விதத்தில் மரகதவல்லி தான் திருதிருத்தாள். அவள் பயம் சரியே என்பது போல் தான் நடந்தது. இருவரை மட்டும் தனியறையில் விட்டு புகைப்படங்கள் எடுக்கையில், அவர்கள் கையை பிடி என்றால் காலை பிடித்தான், காலை பிடி என்றால் இடுப்பை பிடித்தான், "இதென்ன நல்லாவே வரலையே" என எடுத்ததை பார்த்து விட்டு, மறுபடியும் மறுபடியும் எடுக்க வைத்தான். அவன் பிடிப்பதும் அதிலுள்ள அழுத்தங்களும் அவளுக்கு மட்டுந்தானே தெரியும், வெளியே நல்ல பிள்ளையாக தானே போஸ் கொடுத்து நின்றான்.
"முடியலங்க" என அவளே சொன்ன பின்னரே, "முடியலையாம்ப்பா, போதும் முடிச்சுக்கலாம். எடுத்ததுல ரொம்ப நல்லா வந்தத மட்டும் ப்ரிண்ட் போட்டுடுங்க" என்றான்.
"இன்னொரு நாள் தனி ஷுட் எதும் வச்சுப்போமா சார்?" என்றான் புகைப்படம் கலைஞன்.
"வேணாம். இந்த டே இன்னைக்கு கிடைக்குற ஃபீலிங் அன்னைக்கு கிடைக்காது"
"ஏன் சார்? அதெல்லாம் ஸ்பாட்ல வச்சு எடுத்தா நல்லா வரும் சார்" என்றான் அவன்.
"ம்ம்கூம் இன்னைக்கு ஃபீல் இனி என்னைக்கும் கிடைக்காது. அது வேற ஃபீலா தான் இருக்கும்" என்றான் மெலிதான புன்னகையுடன்.
"புரியல சார்"
"எல்லாரையும் கவர் பண்ணிடுங்க, யாரும் மிஸ்ஸாக கூடாது" என அவன் தோளில் தட்டி சொல்லிவிட்டு திரும்ப அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் மரகதவல்லி.
முதல் முத்தம் என்பதால் அவன் அதற்குள் மூழ்கி முத்தை தேடிக் கொண்டிருக்க, வாசுகி சத்தமெல்லாம் எங்கோ மூலையில் கேட்கும் நிலை தான், ஏற்கனவே ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல், அவன் தரும் புது உணர்வுகளை ஏற்று அதனோடு பயணிக்கவும் முடியாமல், தள்ளிவிட்டு விலகி கொள்ளவும் தோன்றாமல், நடுங்கி கொண்டு நின்றவளுக்கு தான் வாசுகியின் குரல் உடனே கேட்டது.
'ஆத்தி அத்த' என மனதிற்குள் அலறி, விலக முயன்றாள். ஆனால் அவனிடமிருந்து இஞ்ச் நகர முடியவில்லை அவளால், அவ்வளவு நேரமும் அவள் விலக முயலாததாள் அவளுக்கு தெரியவில்லை போலும், இப்போது புரிந்தது அவள் முயற்சித்திருந்தாலும் முடிந்திருந்திருக்காது என்பது.
அங்கு வாசுகி கதவை வேகமாக தட்ட துவங்கவும், இவள் அவன் தோளில் அடிக்க, அதையும் தூசு போல் தட்டிவிட்டு அவன் முத்தமிடும் வேலையில் தான் அவனது முழு கவனமும்.
பல நாட்களாக செயல்படுத்த நினைத்து நினைத்து முடியாமல் போனதை அப்போது செய்துவிட்டாள், எட்டி நறுக்கென்று அவன் உச்சியில் கொட்டிவிட, அதில் மொத்தமும் கலைய அவளிடமிருந்து பிரிந்து அவள் முகம் பார்க்க, "அத்த கூப்பிடுறாங்க" என்றாள் பாவமாக.
"அதுக்கு கொட்டுவியா நீ?"
"பின்ன எப்டி உங்கள நகர்த்தவே முடிலயே?"
"மூத்தவனே? கண்ணு, பாப்பா, மரகதவல்லி" என அங்கு அழைத்துக் கொண்டே இருந்தார் வாசுகி.
"ஒவ்வொருத்தருக்கும் ஒரு பேருன்னு ஊருபட்ட பேராடி வச்சுக்குவ? இரு உன்ன நாளைக்கு தனியா சிக்கும் போது பேசிக்றேன்" என்றவன் விறுவிறுவென கதவை திறக்க செல்ல,
"பேசுற மூஞ்சிய தான் இவ்வளவு நேரமு பாத்துட்ருக்கேன் நா" என முனங்கி கொண்டே முகத்தை கைக்குட்டையால் நன்கு துடைத்து கொண்டு பின் தொடர்ந்து சென்றாள் இவளும்.
"என்னடி முனங்குன?" என்றான் கதவு வரை சென்றவன் சட்டென்று நின்று திரும்பி,
"ஒன்னுமில்லங்க, அத்த திட்டுவாங்களோன்னு யோசிச்சேன், அத தான் சொல்லிட்டேன் போல"
"நானே வில்லங்கம் புடிச்சவன் எங்கிட்டயே டகால்டி வேலை காட்றல்ல?"
"ஏங்க கதவ திறந்துட்டு என்ன வேணா திட்டுங்களேன், அவங்க எதாது நினச்சுக்க போறாங்க"
"அவங்க நினைக்குறது தான நடந்தது, அப்ப அவங்க நினைக்குறதும் சரிதான?"
"ஏங்கங்க" என்றாள் முகத்தை அழுந்த தேய்த்து கொண்டு.
"நீயே சொல்லேன்"
"கதவ திறங்க இல்ல வழி விடுங்க நா திறக்குறேன்"
"என்னட்டி இம்புட்டு தட்டியும் திறக்க மாட்டேங்காக, பேச்சு சத்தம் கேக்குதே? இவேன் ரொம்ப திட்டிருப்பானோ? பெரிய சண்டை எதுவும் போடுதாகளோ? காத்து கருப்பு வேலைய காட்டுதோ? ஆத்தி அந்த ஜோசியகாரன் வேற வாய வச்சு தொலைச்சானே?" என அங்கு வாசுகி வேறு புலம்ப,
"அத்த அதெல்லாம் இருக்காது, அவங்களே வருவாங்க, அத்தான் நீங்க இப்படி தட்டுததுக்குதேன் வைய்ய போறாக" என ஷீலா அவரை இழுத்து பிடிக்க முயன்றாள்.
"உங்களதாம்டி மொத்தணும், அவேன் கோவமா இருக்கியான்னு சொல்லியும் அந்த புள்ளைய கூட்டிட்டு வந்து விட்ருக்கீக. படிச்ச புள்ளைக செய்யுற வேலையாட்டி இது? நாளைக்கு காலைல கல்யாணத்த வச்சுகிட்டு இந்நேரம் ரெண்டும் சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். என்னைய கூப்புடாம உங்கள யாருட்டி அவள மூத்தவன் ரூமுக்குள்ள போ விட சொன்னது? நமக்குதேன் தெரியும் உள்ள ரெண்டும் சண்ட போடுதுகன்னு. மத்தவுக தப்பால்ல பேசுவாக. சின்ன பிள்ளைகன்னு காமிச்சுருதீகளே" அவர் திட்ட திட்ட கேட்டுக் கொண்டு தேமே என்று தான் நின்றனர் ஷீலா விசாலாட்சி இருவரும். குறுக்க பேசினால் இன்னும் திட்டுவார் என தெரிந்ததால் அமைதியாக வாங்கிக் கொண்டனர்.
வெளியே அவர்கள் பேச்சு வார்த்தையில் இருக்க உள்ளே இவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.
'எப்பையும் போல வெளிய மாமியார் உள்ள மகன், மேகி உன் வாழ்க்கையோட சேம்பிள் ஒளிவட்டம் இதான்டி. மாட்டிட்டு முழிக்கதான் போற' இந்தமுறை தெளிவாக மனதிற்குள் மட்டுமே நொந்து கொண்டாள்.
"எங்க என்ன தாண்டி போய் திறடி பாப்போம்" என தான் மறித்து நின்றான் மகிழ்.
'முத்தமே குடுத்தாச்சு இனி என்னவாம், இவர சுத்தி போயி திறந்துடுவோமாடி மேகி' என அவனின் வலது பக்கம் வழியே கதவின் குமிழியை திருக கையை கொண்டு சென்றாள், அவன் சட்டை மட்டுமே உரசியது, அதற்கே படபடக்க பட்டென்று மீண்டும் எடுத்துக் கொண்டாள்.
"பாண்டியா" என வாசுகி இந்த முறை கொஞ்சம் சத்தமாக கத்தவும்,
"போச்சு எல்லாரும் வர போறாங்க, நம்ம சண்டை எல்லாருக்கும் தெரிய போகுது"
"அதுக்கு நீ படிக்குற காலத்துல ஃபோர்ஜரி பண்ணாம இருந்துருக்கணும் இந்த அப்பாவிய ஏமாத்தாம இருந்துருக்கணும் மரகதம்"
"அப்பாவி தாங்க"
"இல்லம்பியா நீ?"
"அதெப்டிங்க சொல்ல முடியும் என்ன நம்புனீங்களே. ஆனா நானும் நல்ல பொண்ணுதான் இதோ கமிட்டாகும் முன்ன சரண்டர் ஆகிட்டேன்ல?"
"மரகதவல்லி" வாசுகி வெளியே,
"ப்ளீஸ்ங்க"
"அப்ப டீல் பேசுவோம், நீதான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே? எனக்கு மந்தாகினிய மறக்க வை திறக்குறேன்" என்றான் விறைப்புடனே.
"மறுபடியுமா?" என்றவள் அதிர்ந்து அவனை வேகமாக கடந்து சென்று கதவை திறந்தே விட்டாள், உதட்டுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடைத்துக் கொண்டான் அந்த கள்வன்.
"என்ன பாப்பா பண்ற? மூத்தவன் கூட சண்டை போட போயிருக்கன்றா ஷீலா? இந்நேரத்துல எதுக்கு சண்டை என்ன சண்டை?" என படபடத்தார் அவர்.
"அது கேஸ் விஷயமா பேசி சண்டையாகிடுச்சுத்த கோச்சுகிட்டாங்க அதான் பேச வந்தேன். இப்ப பேசிட்டேன், நாம போலாம்" அறை வாசலில் தான் சாய்ந்து நின்று அவள் கதையை உதட்டை பிதுக்கி காண்பித்து கேட்டிருந்தான் பாண்டியன்.
"என்னய்யா? கோர்ட்டு கேஸுலாம் அங்கேயே விட்டுட்டு வீட்டுக்கு வந்தா புருஷன் பொண்டாட்டின்னு மட்டுந்தேன் இருக்கணும் வேலை கொண்டு வந்து வீட்டுலையும் சண்டை போட கூடாதுய்யா"
"ம்மா எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது இது. உனக்கு தெரியாது" என்றான் அவன்.
"என்னது எட்டு வருஷத்துக்கு முன்ன நடந்தது? என்ன கண்ணு பிரச்சினை"
"அத்த ஒன்னுமில்ல நீங்க வாங்க நா சொல்றேன். காலைல நாலு மணிக்குலாம் மேக்கப் பண்ண ஆளுங்க வந்துடுவாங்க. ஆமா தானே விசாலாட்சி?" என்றாள் அவளிடமும்.
"ஆமா ஆமா வாங்கத்த யாராவது வந்து என்னன்னு கேட்கும் முன்ன போயிடலாம்" என்றவள் அவர் கையை பிடித்திழுக்க,
"உங்களாலாம் வச்சுட்டு நா என்னன்னுதேன் இந்த கல்யாணத்த நடத்தி முடிக்க போறேனோ தெரியல" என புலம்பி கொண்டே தான் சென்றார் வாசுகி.
"மூத்தவளே கூடவே வா" என அவளுக்கும் திரும்பி சொல்ல,
"வரேன்த்த" என்றவாறு ஷீலாவுடன் அவர்பின்னே நடந்தவள் திரும்பி அவனை ஒருமுறை பார்க்க,
"ப்ராடு இங்க வாடி" என்றான் மெலிதான சத்தத்தில், பட்டென்று திரும்பி நடந்துவிட்டாள். முதலில் இருந்த குழப்பம் இன்றி தெளிவாக தூங்கச் சென்றாள், இதுவரை அவனிடம் அதை வெளிப்படுத்தாதது உறுத்திக் கொண்டே இருக்க, இன்று சொல்லிவிட்டு அவனிடம் சமரசமும் ஆகிவிட்டது நிம்மதியாக இருக்க, சந்தோஷமாகவே தூங்கச் சென்றாள்.
காலை மூன்று மணிக்கெல்லாம் அவளை எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டனர், நான்கு மணிக்கு அவளை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட்டனர், அன்றைக்கான சிறப்பலங்காரம், கூரை புடவையில் தயாரகியவளை கண்மணி தான் அழைத்துச் சென்று அங்கு ஏற்கனவே வந்து நின்ற பாண்டியன் முன் சென்று நிறுத்தினாள். பாண்டியன் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மிடுக்கோடு, சற்று திமிராக நின்றிருந்தான். அவன் வேலையால் அவனது உடல்மொழியே அப்படியென்று ஆகிவிட்டது.
"உட்காருங்கோ" என ஐயர் சொல்லவும் இருவரும் அனைவருக்கும் வணக்கம் வைத்து மணையில் அமர்ந்தனர், அவர் மந்திர உச்சாடனம் உச்சரித்து, ஹோமத்தில் போட பூ, அரிசி, வேப்பங் குச்சி என தர இருவரும் அப்படியே செய்தனர்.
தேங்காய் வைத்து அவள் மடியை அவன் கையால் நிரப்ப சொன்னார், "மரகதம்" என்றான் அவள் காதில்.
அவள் நிமிர்ந்து பார்த்து சிரிக்க, "பழைய காதலியா, மனசுக்குள் மந்தாகினி ஆனால் தாலி கட்டிக்க என் பக்கத்துல நீ மரகதம் இருக்க, உன் மடியை நிரப்புறேன் நா. நீ என்ன நினைக்குற இதைப்பத்தி" என்றான் நக்கலாக.
'இவருக்கு இருக்க குசும்புக்கு' என திட்டியவள், "பழைய காதலி இன்றைய மனைவி நாளைக்கு உங்களுக்கு எல்லாமுமாவே இருக்க போறது வரை, எல்லாமே உங்களுக்கு நாந்தாங்க" என்றாள் பவ்யமாக.
"ஓஹோ எல்லாமாவா?"
"ஆமாங்க"
"இங்க பாருங்கோ ரெண்டு பேரும்" என்ற ஐயரின் அழைப்பில் இருவரும் அவரிடம் திரும்ப,
"தாலிய தொட்டுக்கோங்கோ" என்றார்.
இருவரும் தொட்டு வணங்கி கொள்ள, "சுத்தி நிக்குறவா எல்லாம் தொட்டுக்கோங்கோ" என மாங்கல்யம் இருந்த தட்டை நீட்ட, மணமேடையை சுற்றி நின்ற அனைவரும் தொட்டு வணங்கி, மணமக்களை வாழ்த்த அதிலிருந்த மஞ்சளில் பிரட்டிய அரிசியையும் பூவையும் கையில் எடுத்துக் கொண்டனர்.
"இந்தாங்கோ இப்ப கட்டுங்கோ" என மாங்கல்யத்தை பாண்டியனிடம் நீட்ட, வாங்கி கொண்டவன், "கட்டிறவா மரகதம்?" என அவளிடமும் கேட்க,
"ஏடாகூடமா பேசாம கட்டிடுங்க ப்ளீஸ்" கண்ணை சுருக்கி கெஞ்சி சொல்லவும், சிரித்துக் கொண்டே அவள் கழுத்தை சுற்றி மாங்கல்யம் கோர்த்த மஞ்சள் கயிறை கொண்டு சென்று மூன்று முடிச்சிட்டான். அவன் கையை எடுத்ததும், கண்மணி அவளே அறியாமல் நான்காம் முடிச்சை தான் போட்டாள்.
"துணை மாலைய மாத்துங்கோ" இருவரும் மாலையை மாற்ற, "மெட்டி போட்டு விடுங்கோ" என்றார்,
"அது கண்மணி போடுவா மூத்தவனே, வீட்ல போய் போட்டுக்குவோம்" என்றார் வாசுகி, மகன் அப்படி அமர்ந்து போட மாட்டானோ எண்ணி அவராகவே கூறினார்.
"ஏன் கண்மணி போடணும்? செய்றத சரியா செய்யணும்மா, இது நாந்தானே செய்யணும்?" என்றான் அவரிடம்.
"ஆமாய்யா" என்றவர், "ஷீலா, பர்சுலதேன் இருந்தது எடுத்தா" என்றதும் அவள் நகைகள் இருந்த பையில் இருந்து எடுத்து தர, வாசுகி வாங்கி இவனிடம் தர, "அம்மி எடுத்து வைக்கல, நீ இந்த பலகைல கால வைத்தா" என ஒரு பலகையை எடுத்து வந்து வைக்கவும், மரகதவல்லி அதில் காலை வைக்க, அன்று அவன் போட்டுவிட்ட கொலுசு அங்கு மின்னிக் கொண்டிருந்தது, அவள் அன்று அவ்வளவு புலம்பினாளும் அதை கலட்டியிருக்கவில்லை, அதுவே வாசுகிக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.
"மூத்தவன் தான் அன்னைக்கே அவ கால புடிச்சானுள்ள, நா ஒரு மடச்சி அத மறந்துபுட்டேன் பாரு, அழகா அம்மி கொண்டு வச்சுருந்தா அதுல வச்சே போட்ருப்பான், நாந்தான் வயசானவ மறந்துபோயிட்டேன் நீங்களாது நெனவு சொன்னா என்னட்டி" என்றார் அருகிலிருந்த இரு மருமகள்களிடமும்.
"உங்களுக்கு எல்லாத்துக்கும் நாங்கதேன் உடனே கிடைப்போம்" என்றாள் ஷீலா.
"வாய் மட்டும் நல்லா பேசு" என்றவர் மணமக்களிடம் கவனம் வைக்க, அங்கு நிதானமாக அவளின் விரலுக்கு வலிக்காமல் மெட்டியை நுழைத்துக் கொண்டிருந்தான் அவர் மகன்.
மரகதவல்லியும் அதை தான் கவனித்திருந்தாள், மென்மையாக அவள் பாதம் பற்றி, அடிபாதத்தில் யாரும் அறியாமல் ஒரு கோடிழுத்து அவளை கூச செய்துவிட்டே விரலுக்கு வந்தான், அவள் காலும் அதிலிருக்கும் மருதாணியுமே அவனை மயங்க வைக்க போதும் போலும், கையை எடுக்கவே மனமில்லாமல் தான் ஒரு காலில் மெட்டியை போட்டுவிட்டு மறு காலுக்கு வந்தான். அங்கும் இருகைகளாலும் அவள் பாதத்தை பிடித்து அவன் குடுத்த அழுத்தம் அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சியை சிறகடிக்க வைத்துக்கொண்டிருந்தது.
"சார் இங்க பாருங்க" என புகைபடக்காரரின் அழைப்பில் அவரிடம் திரும்பினான். அப்படியே அந்த நிலை நிழல்படமானது.
"இந்த ட்ரஸ்ல உங்க பேரண்ட்ஸ்ட்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி எடுத்துக்குலாம் சார். அப்றம் ட்ரஸ் மாத்திட்டு தனியா சில ஸ்டில்ஸ் எடுத்துக்கலாம் சார்" என்றதும்,
"எடுக்கலாமே" என்றவன் சொன்ன விதத்தில் மரகதவல்லி தான் திருதிருத்தாள். அவள் பயம் சரியே என்பது போல் தான் நடந்தது. இருவரை மட்டும் தனியறையில் விட்டு புகைப்படங்கள் எடுக்கையில், அவர்கள் கையை பிடி என்றால் காலை பிடித்தான், காலை பிடி என்றால் இடுப்பை பிடித்தான், "இதென்ன நல்லாவே வரலையே" என எடுத்ததை பார்த்து விட்டு, மறுபடியும் மறுபடியும் எடுக்க வைத்தான். அவன் பிடிப்பதும் அதிலுள்ள அழுத்தங்களும் அவளுக்கு மட்டுந்தானே தெரியும், வெளியே நல்ல பிள்ளையாக தானே போஸ் கொடுத்து நின்றான்.
"முடியலங்க" என அவளே சொன்ன பின்னரே, "முடியலையாம்ப்பா, போதும் முடிச்சுக்கலாம். எடுத்ததுல ரொம்ப நல்லா வந்தத மட்டும் ப்ரிண்ட் போட்டுடுங்க" என்றான்.
"இன்னொரு நாள் தனி ஷுட் எதும் வச்சுப்போமா சார்?" என்றான் புகைப்படம் கலைஞன்.
"வேணாம். இந்த டே இன்னைக்கு கிடைக்குற ஃபீலிங் அன்னைக்கு கிடைக்காது"
"ஏன் சார்? அதெல்லாம் ஸ்பாட்ல வச்சு எடுத்தா நல்லா வரும் சார்" என்றான் அவன்.
"ம்ம்கூம் இன்னைக்கு ஃபீல் இனி என்னைக்கும் கிடைக்காது. அது வேற ஃபீலா தான் இருக்கும்" என்றான் மெலிதான புன்னகையுடன்.
"புரியல சார்"
"எல்லாரையும் கவர் பண்ணிடுங்க, யாரும் மிஸ்ஸாக கூடாது" என அவன் தோளில் தட்டி சொல்லிவிட்டு திரும்ப அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் மரகதவல்லி.
Last edited: