அத்தியாயம் 25
அன்று இரவு பாண்டியன் அவன் அம்மா வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றை கடந்திருந்தது. வாசலில் கட்டிலை விரித்து பரஞ்சோதி படுத்திருக்க, திண்ணையில் அமர்ந்து அவருடன் வம்பளந்து கொண்டிருந்தார் வாசுகி.
அவன் பைக் சத்தத்தில், "அப்பாடி வந்துட்டான். மனுஷனுக்கு காது தேய்றளவுக்கு பேசுதா. எந்துச்சு போய் உன் மூத்த புள்ளைய கவனி போ" என விரட்டியவர் அவன் உள்ளே வரும் முன் போர்வையை தலையோடு சேர்த்து மூடி படுத்துக் கொண்டார். விழித்திருப்பது தெரிந்துவிட்டால் நின்று விடுவான். அடுத்து அவன் பேச்சை வேறு கேட்க வேண்டுமே என்ற பயம் அவருக்கு.
"பொண்டாட்டி பேச்சு அம்புட்டுக்கு கசக்குதோ? தொடுப்பு கிடுப்பு வச்சுகிட்டீகளோ நா உங்களுக்கு அதுக்குள்ள சலிச்சு போயிட்டேன்?" என வாசுகி சொல்லவும்,
"வாய கழுவுடி, உன் மவேன் வரவும் வேணும்னு ஒரண்ட இழுத்து விட பாக்கியோ? உன்ன கல்யாணம் பண்ணிட்டு அவஸ்த படுறது பத்தாதுன்னு இன்னொருத்தி வேற தேவதானா எனக்கு? கூறில்லாதவ கணக்கா எதையாவது உளறி அவேங்கிட்ட என்ன மாட்டிவிட்டுபுடாத சொல்லிட்டேன். தூங்க விடாம தலமாட்டுல உக்காந்து வசவா வஞ்சுட்டு இருந்துட்டு அத நா கேக்கலன்னு வேற மூஞ்ச தூக்குதவ போடி" என முனங்கலாக திரும்பிப் படுத்தார்.
"என்னம்மா? தூங்க வேண்டிய தான?" என வந்தவன் ஷுவை கழற்றியவாறு தகப்பன் படுத்திருந்த தோரணையை பார்த்தான். அதிலேயே அவர் இவனைக் கண்டுவிட்டு தான் தலையை மூடி இருக்கிறார் என புரிய, "இப்ப நா என்ன செஞ்சுருவேன்னு இப்படி படுத்துருக்கீங்கப்பா? தப்பு எதும் செஞ்சீங்களா? தப்பு செஞ்சவன் தான் போலீஸ்காரன பாத்து ஒளிஞ்சுக்குவான்" என்றான் அவர் தலைமாட்டில் நின்று இடுப்பில் கைவைத்து.
"அதத்தேன் நானும் கேட்டேன் மூத்தவனே. என்னைய கண்டாலே ஆவாதுங்கறாக, நா பேசுனாக்க எரிச்சலா வருதாம். என்னன்னு கேளுடா மூத்தவனே" என்றதும் பட்டென்று எழுந்து விட்டார்.
"இன்னைக்கு நெறைய வேலையப்பு. காலைல கொல தள்ளிருக்க வாழை எல்லாத்தையும் வெட்டி மார்க்கெட்டுக்கு ஏத்தி விடணும். அதுக்கு நா சீக்கிரம் போவணும் தூங்க விடுட்டின்னு சொன்னேன். உங்கம்மா அதுக்கு என்னைய போட்டு அரைமணிநேரமா தாளிச்சு கொட்டுதா"
"வேலைக்கு ஆள் வச்சு பாக்க வேண்டியது தான? இல்லனா அரசுவ அங்க கொஞ்சம் நிக்க சொன்னா என்னப்பா?" என்றான் இவன்.
"அவேன்ட்ட சொன்னாக்க அவேன் பொழப்ப நா பாக்கட்டுமான்னுல கேக்கியான்"
"முடியலன்னா குத்தகைக்கு விட்டுட்டு பேசாம இருங்க"
"விவசாய லோனு வாங்கி உங்கப்பா புதுசா இடம் வாங்கி போடுதாக நீ என்னன்னா எவனுக்கோ கூலிய குடுக்க சொல்லுத?" என்றார் வாசுகி,
"எம்மா எல்லா பக்கமும் பேசாத சொல்லிட்டேன். ஒன்னு அவுகள வேலை பாக்கவிடு இல்லயா யார்டையாது மாத்திவிட்டுட்டு காச வாங்கிட்டு காலாட்டிட்டு இருங்க, சும்மா போட்டு படுத்தக் கூடாது"
"நா சொன்னா எங்க கேக்குறா நீயே சொல்லு" என்றார் பரஞ்சோதி.
"இங்க பாரு மூத்தவனே இப்போதைக்கு கல்யாண சோலி நிறைய கடக்கு. அத மொத பாக்க சொல்லு. உனக்கு கல்யாணம் முடிஞ்சு சீர் வரிசைய ஏறகட்டுனப்றம் காட்டுலயே கூட உங்கப்பா குடி இருக்கட்டும் நா ஏன்னே கேக்க மாட்டேன் சொல்லிபுட்டேன்"
"ஏன்ப்பா கல்யாண வேலைய பாக்க மாட்டேனீங்களா?"
"சொல்ல விட்றுவாளா உங்கம்மா? பொண்ணு வீட்டுக்காரங்க வழில முக்கியமான ஆளுங்களுக்கு நம்ம வீட்ல இருந்தும் ஒராளு அவங்க கூட போவணுமாம். என்னைய போங்கன்றா, நா நீதேன் நல்லா பழகுத நீயே போய்ட்டு வாங்குறேன். வேற எதையும் நா செய்ய மாட்டேன்னே சொல்லல"
"என்னையால ஒவ்வொரு ஊருக்கா பஸ்ஸுல ஏறி இறங்க முடியுமா இங்க பேர புள்ளைகள ஆரு பாக்கன்னு கேட்டு சொல்லு மூத்தவனே"
"ரெண்டு பேரும் உள்ள வாங்க" என்றவன் வேகமாக அவனறைக்கு சென்று அவசர குளியலிட்டு மாற்றுடைக்கு மாறி வந்து சாப்பிட அமர்ந்தான். பரஞ்சோதி வாயை கொடுத்து விட்டோமே என பாவமாக அமர்ந்திருக்க, மகனுக்கு சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் வாசுகி.
"கட தெருவுல எங்கையும் கவிச்சு சாப்படாத மூத்தவனே, இனி கல்யாணம் முடியுற வரை காய்கறிகதேன் சாப்புடணும்"
"நேத்து மத்தியானம் கூட மட்டன் பிரியாணி சாப்டேனே?"
"ஆத்தி, இனி சாப்புடாதய்யா, இதேன் காத்து கருப்பு அண்ட கூடாதுன்றது பாத்தியா உன்ன இப்படிலாம் மாட்டிவிட பாக்கும். ஆமா மருமவட்ட குடுத்துவிட்ட கயிற எங்க? கைல காணும்?"
"அத உன் மருமகட்டயே கேளு. இப்ப என்னன்ன வேலை இருக்கு வரிசையா சொல்லு"
"பத்திரிகை வைக்க ஆரம்பிக்கணும், நம்ம வீட்டு சார்பா அவுக சொந்தகாரங்களுக்கு நம்ம போய் வைக்கணும் நம்ம வலசலுக்கு அவங்க சார்பா யாராவது வந்து வைக்கணும். அப்றம் குலதெய்வ கோவில்ல பூசைக்கு குடுத்து ஒரு கல்யாண பொண்ணுக்கு வாங்குற எல்லாத்தையும் நம்ம ஆத்தாளுக்கும் வாங்கி மருமவ கையால கல்யாணத்துக்கு முன்ன கொண்டு குடுக்கணும். புது உடுப்பெடுக்கணும், தாய்மாமன் முறை செய்யணும், மண்டபத்த ஓரெட்டு நீ பாத்துரு, அங்க என்னன்னலாம் அலங்காரம் பண்ணணும்னு சொல்லணும், அப்புறம் சாப்பாட்டுக்கு சொல்லணும். மீனாட்சி அம்மன் சன்னதில வச்சு கல்யாணம் நடக்க, கோவில்ல அனுமதி வாங்கணும். மருமவளுக்கு தாலி அது கோர்க்க செயினு, அட்டிகை, கொலுசு, மெட்டி, மோதிரம், எல்லாம் எடுக்கணும். ஐயருக்கு சொல்லணும். கல்யாணத்துக்கு நீ ஒரு பத்து நாளு லீவும் சொல்லணும்" என அவர் பேசி முடிக்கையில், பரஞ்சோதி சோஃபாவில் சாய்ந்து தூங்கியிருந்தார், பாண்டியன் சாப்பிட்டு முடித்திருந்தான்.
"சரி காலைல அவனுங்க ரெண்டு பேரையும் ஏழு மணிக்கு எழுப்பி விட்ரு, அப்பாவையும் அந்நேரம் வீட்ல இருக்கமாதிரி பாத்துக்கோ. பேசிடுறேன் நானு" என்றுவிட,
"சரிய்யா" என்றவர், விஷயத்தை மகனிடம் ஒப்படைத்த விட்ட சந்தோஷத்தில் தூங்கச் சென்றுவிட்டார்.
இவனும் அறைக்கு வந்தவன், தூங்கும் முன் பழக்கமாக மரகதவல்லிக்கு அழைத்தான், எடுத்தவள் தெளிவாக, "சொல்லுங்க" என்கவும்,
"ஹாய் மரகதம் தூங்கல?"
"இல்ல கொஞ்சம் வேலையா இருக்கேங்க" பவ்யமான பதில்,
"என்ன வேலையா இருக்க?"
"நாளைக்கு ஒரு கேஸ் ஹியரிங் இருக்கு, பாயிண்ட்ஸ் எடுக்குறேன்"
"அத பத்து மணிக்கு முன்ன எடுத்து பழகு மரகதம்"
"பனிரெண்டு மணி வரை தூக்கம் வராதுங்க எனக்கு, வேலை பாத்துட்டு தான் படுப்பேன்"
"பனிரெண்டு மணி வரை முழிச்சுருக்கறது நல்லது தான், ஆனா உன் வேலை பத்து மணிக்கு முன்ன முடிச்சுக்கணும் புரியுதா?" என்றான் குதர்க்கமாக,
"இப்ப புரிஞ்சுட்டுங்க" என்றுவிட்டாள் உடனேயே, அவளைதான் சார்ஜ் எடுக்குமுன் ட்ரைனிங் முடிப்பது போல் தினமும் மூன்று வேலை படுத்துகிறானே, அதில் தேறியிருந்தாள்.
"ஸ்மார்ட் மரகதம்"
"தேங்க்ஸ்ங்க"
"அப்றம் நம்ம கல்யாண வேலைலாம் எப்டி போயிட்ருக்கு?"
"நல்லா போகுதே. ஆடி பெருக்கு அப்றம் எல்லாம் வேகமா ஸ்டார்ட் பண்ணிடுவாங்க நினைக்கிறேன்"
"பண்ணட்டும் நீ எந்தளவுல ரெடியாகிட்ருக்க மரகதம்?"
"இப்பவே நா என்ன ரெடியாகணுங்க?"
"ஆய கலைகள் அறுபத்தி நான்காம் மரகதம், அத்தனையும் படிக்க நேரமெடுக்கும்ல?"
"ஏங்க?"
"உடனே ஏங்க ஆரம்பிச்சுருவியே நீ?"
"ஆமாங்க"
"உனக்கு ஒரு வேலையும் இல்லல?"
"ம்ம்கூம் கோர்ட்ல இன்விடேஷன் குடுப்பேன். ஃப்ரண்ட்ஸ்கெல்லாம் ஃபோன்ல தான்" என்றாள் சுருக்கமாக,
"நல்லது தான் நல்லா ரெஸ்ட்டு எடுத்துகிட்டாதான் ஃப்ரஷா இருக்கலாம்"
"ஆமாங்க"
"வேறெதுவும் என்ட்ட சொல்லணுமா மரகதம்?" என்றவன் கேள்வியில் திருதிருத்தாள். அவ்வளவு நேரமும் அவனை எளிதாக சமாளித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கெத்தில் அமர்ந்திருக்க ஒரே கேள்வியில் அவளை தரை இறக்கினான்.
"அன்னைக்கே கேட்டேன் சொல்லல. இப்ப என்ன நல்லா பழகிட்டியே இப்ப சொல்லலாம்ல? அப்படி எதாவது என்ட்ட சொல்ல இருக்கா மரகதம்?"
பதட்டமாக இங்குமங்கும் நடந்தாள், சொல்லவும் தோன்றியது வேண்டாம் என்றும் தோன்றியது. அவன் தெரிந்து கேட்கிறான், போட்டு வாங்குகிறான் என மனம் அடித்து சொன்னது. ஆனாலும் சொல்ல பயந்தாள் அவள்.
திருமணம் முடிந்த பிறகு சொல்லி கொள்ளலாம் என்ற முடிவில் "இல்லங்க" என்றுவிட்டாள்.
"ரைட். குட்நைட் மரகதம்" என்றவன் வேறு பேச்சின்றி வைத்துவிட்டான், அதில் இன்னும் வெலவெலத்து விட்டாள் மரகதவல்லி. ஆனால் அவன் வேறோரு அழைப்பு வந்ததால் தான் துண்டித்தான்.
"என்னாச்சு டாக்டர்?" என்றான் எதிர் முனையிலிருந்தவரிடம்.
"மூணு டெட்பாடில இருந்தும் எடுத்த முடி ஒரே ஆளோடது தான். ஏஜ் ஒரு ட்வன்டி ஃபைவ் டூ தேர்ட்டி ஃபைவ் குள்ள இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் வச்சு பாக்கும்போது இது ஒரு ஃபீமேல் ஹேர்தான்னு ட்வன்டி ஃபைவ் பெர்சன்ட் சொல்லலாம்"
"அப்ப கன்ஃபார்ம் இல்லையா?"
"ம்ம்கூம் அதுக்கு இன்னும் கொஞ்சம் சேம்பிள்ஸ் வேணும் ப்ளஸ் பிஃப்டீன் டேஸ்னாலும் டைம் வேணும்"
"ஓகே தென். பாத்துக்கலாம் டாக்டர் தேங்க்ஸ்"
"இனி இத வெளில சொல்லுவீங்களா?"
"என்னன்னு தெரியாம எதுக்கு சொல்லணும்? நா தேடுறது கொலைகாரனா கொலைகாரியான்னு தெரிஞ்சுக்க தான் ரகசியமா இத செய்ய சொன்னேன். இதையே நம்பவும் முடியாது நம்மள குழப்பி விடணும்னு கூட எவனோ கொண்ணுட்டு சவுரி முடில நாலு முடிய செத்தவனுங்க காலுல கட்டிவிட்டுட்டு போயிருக்கலாம். சிக்குவான்ல எப்படியும் பாத்துக்குலாம்" என்கவும்.
"ஓகே சார்" என வைத்துவிட்டார் அந்த தடயவியல் நிபுணர். முதல் பிரேதத்திலேயே பெருவிரல் இரண்டையும் இணைத்து முடிவைத்து கட்டிதான் ஹைவேயில் போட்டிருந்தனர், தடயவியல் நிபுணரிடம் அதை காட்டி பத்திரபடுத்திவிட்டான், அதுவே அடுத்த இரு பிரேதத்திலும் இருக்க, அவரே தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். மூன்றிலும் வித்தியாசமாக இருந்த ஒன்று அது தான், வேறெந்த தடயங்களும் கிடைக்கவில்லை, அந்த முடியும் கூட கொலை செய்பவன் அவர்களுக்காக கொடுத்துச் சென்றது தான்.
அதை பேசிவிட்டு இவன் யோசனையில் இருக்க, மரகதம் மீண்டும் அழைப்பில் வந்தாள், புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு சற்றுமுன் அவளிடம் பேசிவிட்டு வைத்தது ஞாபகம் வர கூடவே உல்லாச சிரிப்பும் வந்தமர்ந்தது.
"மரகதம்?"
"பிஸி ஆகிட்டீங்களா?"
"ஒரு ஃபோன் மரகதம். நீ என்ன திரும்ப கூப்பிட்ருக்க, மாமாவ ரொம்ப தேடுதோ?"
"இல்ல நீங்க கோவமா வச்சமாதிரி இருந்தது?"
"அப்டியா வச்சேன்? லாஸ்டா என்ன பேசிட்ருந்தோம்?"
"இல்ல எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. நீங்க கோவமோன்னு கேட்க தான் கூப்டேன். நா வைக்றேங்க" என வைத்துவிட்டாள், இவன் சிரித்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் இவன் எழுந்து வருகையிலேயே, வரவேற்பறையில் எல்லோரும் தயாராக காத்திருந்தனர், அதிலும் தம்பிகள் இருவரிடமும் இருந்த அதீத பவ்யம் அவன் மரகதத்தைத் தான் ஞாபகப் படுத்தியது.
'அம்புட்டும் ப்ராடுங்க தான்' என நினைத்துக் கொண்டே தான் வந்தமர்ந்தான்.
"வேலை எப்டிறா போகுது ரெண்டு பேருக்கும்?"
"நல்லாதான் போகுதுண்ணே" என அரசு சொல்ல, பாண்டியன் வரதனைப் பார்த்தான், "பிரச்சினை இல்லண்ணே",
"லீவெடுக்குறதுல எதுவும் பிரச்சினை இருக்கா?"
"இல்ல இல்ல, லீவு உன் கல்யாணத்த ஒட்டி எடுக்கணும்னு இருக்கேன்"
"கல்யாண வேலை எதும் செய்ய முடியுமா உங்க ரெண்டு பேருக்கும்? நேரம் இருக்குமா?" அவன் அப்படி கேட்டதும் இருவரும் உண்மைக்கும் பதறவே செய்தனர், அம்மாவிடம் ஏட்டிக்குப் போட்டி பேசினாலும், அவனை விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருவரிடமும் இருந்ததில்லை. அவன் பெரிய பதவி பார்த்து பயமும் அதிகம் தான். இது அவன் கல்யாணம் என்பதால் தான் கேட்டுக் கொண்டிருக்கிறான், இதே அம்மா அப்பாவிற்கு செய்வதில் எதும் குறை என்றால் சற்றும் யோசிக்காமல் பேசிவிடுவான். சிறுபிள்ளையில் அடிதடி என்று வளர்ந்தவர்கள் தான், அவன் காவல்துறையில் நுழைந்த பின்னர் தான் அப்படியே ஒதுங்கிவிட்டான், இவர்களும் ஆம் இல்லை என நின்று கொண்டனர்.
அன்று இரவு பாண்டியன் அவன் அம்மா வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்றை கடந்திருந்தது. வாசலில் கட்டிலை விரித்து பரஞ்சோதி படுத்திருக்க, திண்ணையில் அமர்ந்து அவருடன் வம்பளந்து கொண்டிருந்தார் வாசுகி.
அவன் பைக் சத்தத்தில், "அப்பாடி வந்துட்டான். மனுஷனுக்கு காது தேய்றளவுக்கு பேசுதா. எந்துச்சு போய் உன் மூத்த புள்ளைய கவனி போ" என விரட்டியவர் அவன் உள்ளே வரும் முன் போர்வையை தலையோடு சேர்த்து மூடி படுத்துக் கொண்டார். விழித்திருப்பது தெரிந்துவிட்டால் நின்று விடுவான். அடுத்து அவன் பேச்சை வேறு கேட்க வேண்டுமே என்ற பயம் அவருக்கு.
"பொண்டாட்டி பேச்சு அம்புட்டுக்கு கசக்குதோ? தொடுப்பு கிடுப்பு வச்சுகிட்டீகளோ நா உங்களுக்கு அதுக்குள்ள சலிச்சு போயிட்டேன்?" என வாசுகி சொல்லவும்,
"வாய கழுவுடி, உன் மவேன் வரவும் வேணும்னு ஒரண்ட இழுத்து விட பாக்கியோ? உன்ன கல்யாணம் பண்ணிட்டு அவஸ்த படுறது பத்தாதுன்னு இன்னொருத்தி வேற தேவதானா எனக்கு? கூறில்லாதவ கணக்கா எதையாவது உளறி அவேங்கிட்ட என்ன மாட்டிவிட்டுபுடாத சொல்லிட்டேன். தூங்க விடாம தலமாட்டுல உக்காந்து வசவா வஞ்சுட்டு இருந்துட்டு அத நா கேக்கலன்னு வேற மூஞ்ச தூக்குதவ போடி" என முனங்கலாக திரும்பிப் படுத்தார்.
"என்னம்மா? தூங்க வேண்டிய தான?" என வந்தவன் ஷுவை கழற்றியவாறு தகப்பன் படுத்திருந்த தோரணையை பார்த்தான். அதிலேயே அவர் இவனைக் கண்டுவிட்டு தான் தலையை மூடி இருக்கிறார் என புரிய, "இப்ப நா என்ன செஞ்சுருவேன்னு இப்படி படுத்துருக்கீங்கப்பா? தப்பு எதும் செஞ்சீங்களா? தப்பு செஞ்சவன் தான் போலீஸ்காரன பாத்து ஒளிஞ்சுக்குவான்" என்றான் அவர் தலைமாட்டில் நின்று இடுப்பில் கைவைத்து.
"அதத்தேன் நானும் கேட்டேன் மூத்தவனே. என்னைய கண்டாலே ஆவாதுங்கறாக, நா பேசுனாக்க எரிச்சலா வருதாம். என்னன்னு கேளுடா மூத்தவனே" என்றதும் பட்டென்று எழுந்து விட்டார்.
"இன்னைக்கு நெறைய வேலையப்பு. காலைல கொல தள்ளிருக்க வாழை எல்லாத்தையும் வெட்டி மார்க்கெட்டுக்கு ஏத்தி விடணும். அதுக்கு நா சீக்கிரம் போவணும் தூங்க விடுட்டின்னு சொன்னேன். உங்கம்மா அதுக்கு என்னைய போட்டு அரைமணிநேரமா தாளிச்சு கொட்டுதா"
"வேலைக்கு ஆள் வச்சு பாக்க வேண்டியது தான? இல்லனா அரசுவ அங்க கொஞ்சம் நிக்க சொன்னா என்னப்பா?" என்றான் இவன்.
"அவேன்ட்ட சொன்னாக்க அவேன் பொழப்ப நா பாக்கட்டுமான்னுல கேக்கியான்"
"முடியலன்னா குத்தகைக்கு விட்டுட்டு பேசாம இருங்க"
"விவசாய லோனு வாங்கி உங்கப்பா புதுசா இடம் வாங்கி போடுதாக நீ என்னன்னா எவனுக்கோ கூலிய குடுக்க சொல்லுத?" என்றார் வாசுகி,
"எம்மா எல்லா பக்கமும் பேசாத சொல்லிட்டேன். ஒன்னு அவுகள வேலை பாக்கவிடு இல்லயா யார்டையாது மாத்திவிட்டுட்டு காச வாங்கிட்டு காலாட்டிட்டு இருங்க, சும்மா போட்டு படுத்தக் கூடாது"
"நா சொன்னா எங்க கேக்குறா நீயே சொல்லு" என்றார் பரஞ்சோதி.
"இங்க பாரு மூத்தவனே இப்போதைக்கு கல்யாண சோலி நிறைய கடக்கு. அத மொத பாக்க சொல்லு. உனக்கு கல்யாணம் முடிஞ்சு சீர் வரிசைய ஏறகட்டுனப்றம் காட்டுலயே கூட உங்கப்பா குடி இருக்கட்டும் நா ஏன்னே கேக்க மாட்டேன் சொல்லிபுட்டேன்"
"ஏன்ப்பா கல்யாண வேலைய பாக்க மாட்டேனீங்களா?"
"சொல்ல விட்றுவாளா உங்கம்மா? பொண்ணு வீட்டுக்காரங்க வழில முக்கியமான ஆளுங்களுக்கு நம்ம வீட்ல இருந்தும் ஒராளு அவங்க கூட போவணுமாம். என்னைய போங்கன்றா, நா நீதேன் நல்லா பழகுத நீயே போய்ட்டு வாங்குறேன். வேற எதையும் நா செய்ய மாட்டேன்னே சொல்லல"
"என்னையால ஒவ்வொரு ஊருக்கா பஸ்ஸுல ஏறி இறங்க முடியுமா இங்க பேர புள்ளைகள ஆரு பாக்கன்னு கேட்டு சொல்லு மூத்தவனே"
"ரெண்டு பேரும் உள்ள வாங்க" என்றவன் வேகமாக அவனறைக்கு சென்று அவசர குளியலிட்டு மாற்றுடைக்கு மாறி வந்து சாப்பிட அமர்ந்தான். பரஞ்சோதி வாயை கொடுத்து விட்டோமே என பாவமாக அமர்ந்திருக்க, மகனுக்கு சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் வாசுகி.
"கட தெருவுல எங்கையும் கவிச்சு சாப்படாத மூத்தவனே, இனி கல்யாணம் முடியுற வரை காய்கறிகதேன் சாப்புடணும்"
"நேத்து மத்தியானம் கூட மட்டன் பிரியாணி சாப்டேனே?"
"ஆத்தி, இனி சாப்புடாதய்யா, இதேன் காத்து கருப்பு அண்ட கூடாதுன்றது பாத்தியா உன்ன இப்படிலாம் மாட்டிவிட பாக்கும். ஆமா மருமவட்ட குடுத்துவிட்ட கயிற எங்க? கைல காணும்?"
"அத உன் மருமகட்டயே கேளு. இப்ப என்னன்ன வேலை இருக்கு வரிசையா சொல்லு"
"பத்திரிகை வைக்க ஆரம்பிக்கணும், நம்ம வீட்டு சார்பா அவுக சொந்தகாரங்களுக்கு நம்ம போய் வைக்கணும் நம்ம வலசலுக்கு அவங்க சார்பா யாராவது வந்து வைக்கணும். அப்றம் குலதெய்வ கோவில்ல பூசைக்கு குடுத்து ஒரு கல்யாண பொண்ணுக்கு வாங்குற எல்லாத்தையும் நம்ம ஆத்தாளுக்கும் வாங்கி மருமவ கையால கல்யாணத்துக்கு முன்ன கொண்டு குடுக்கணும். புது உடுப்பெடுக்கணும், தாய்மாமன் முறை செய்யணும், மண்டபத்த ஓரெட்டு நீ பாத்துரு, அங்க என்னன்னலாம் அலங்காரம் பண்ணணும்னு சொல்லணும், அப்புறம் சாப்பாட்டுக்கு சொல்லணும். மீனாட்சி அம்மன் சன்னதில வச்சு கல்யாணம் நடக்க, கோவில்ல அனுமதி வாங்கணும். மருமவளுக்கு தாலி அது கோர்க்க செயினு, அட்டிகை, கொலுசு, மெட்டி, மோதிரம், எல்லாம் எடுக்கணும். ஐயருக்கு சொல்லணும். கல்யாணத்துக்கு நீ ஒரு பத்து நாளு லீவும் சொல்லணும்" என அவர் பேசி முடிக்கையில், பரஞ்சோதி சோஃபாவில் சாய்ந்து தூங்கியிருந்தார், பாண்டியன் சாப்பிட்டு முடித்திருந்தான்.
"சரி காலைல அவனுங்க ரெண்டு பேரையும் ஏழு மணிக்கு எழுப்பி விட்ரு, அப்பாவையும் அந்நேரம் வீட்ல இருக்கமாதிரி பாத்துக்கோ. பேசிடுறேன் நானு" என்றுவிட,
"சரிய்யா" என்றவர், விஷயத்தை மகனிடம் ஒப்படைத்த விட்ட சந்தோஷத்தில் தூங்கச் சென்றுவிட்டார்.
இவனும் அறைக்கு வந்தவன், தூங்கும் முன் பழக்கமாக மரகதவல்லிக்கு அழைத்தான், எடுத்தவள் தெளிவாக, "சொல்லுங்க" என்கவும்,
"ஹாய் மரகதம் தூங்கல?"
"இல்ல கொஞ்சம் வேலையா இருக்கேங்க" பவ்யமான பதில்,
"என்ன வேலையா இருக்க?"
"நாளைக்கு ஒரு கேஸ் ஹியரிங் இருக்கு, பாயிண்ட்ஸ் எடுக்குறேன்"
"அத பத்து மணிக்கு முன்ன எடுத்து பழகு மரகதம்"
"பனிரெண்டு மணி வரை தூக்கம் வராதுங்க எனக்கு, வேலை பாத்துட்டு தான் படுப்பேன்"
"பனிரெண்டு மணி வரை முழிச்சுருக்கறது நல்லது தான், ஆனா உன் வேலை பத்து மணிக்கு முன்ன முடிச்சுக்கணும் புரியுதா?" என்றான் குதர்க்கமாக,
"இப்ப புரிஞ்சுட்டுங்க" என்றுவிட்டாள் உடனேயே, அவளைதான் சார்ஜ் எடுக்குமுன் ட்ரைனிங் முடிப்பது போல் தினமும் மூன்று வேலை படுத்துகிறானே, அதில் தேறியிருந்தாள்.
"ஸ்மார்ட் மரகதம்"
"தேங்க்ஸ்ங்க"
"அப்றம் நம்ம கல்யாண வேலைலாம் எப்டி போயிட்ருக்கு?"
"நல்லா போகுதே. ஆடி பெருக்கு அப்றம் எல்லாம் வேகமா ஸ்டார்ட் பண்ணிடுவாங்க நினைக்கிறேன்"
"பண்ணட்டும் நீ எந்தளவுல ரெடியாகிட்ருக்க மரகதம்?"
"இப்பவே நா என்ன ரெடியாகணுங்க?"
"ஆய கலைகள் அறுபத்தி நான்காம் மரகதம், அத்தனையும் படிக்க நேரமெடுக்கும்ல?"
"ஏங்க?"
"உடனே ஏங்க ஆரம்பிச்சுருவியே நீ?"
"ஆமாங்க"
"உனக்கு ஒரு வேலையும் இல்லல?"
"ம்ம்கூம் கோர்ட்ல இன்விடேஷன் குடுப்பேன். ஃப்ரண்ட்ஸ்கெல்லாம் ஃபோன்ல தான்" என்றாள் சுருக்கமாக,
"நல்லது தான் நல்லா ரெஸ்ட்டு எடுத்துகிட்டாதான் ஃப்ரஷா இருக்கலாம்"
"ஆமாங்க"
"வேறெதுவும் என்ட்ட சொல்லணுமா மரகதம்?" என்றவன் கேள்வியில் திருதிருத்தாள். அவ்வளவு நேரமும் அவனை எளிதாக சமாளித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கெத்தில் அமர்ந்திருக்க ஒரே கேள்வியில் அவளை தரை இறக்கினான்.
"அன்னைக்கே கேட்டேன் சொல்லல. இப்ப என்ன நல்லா பழகிட்டியே இப்ப சொல்லலாம்ல? அப்படி எதாவது என்ட்ட சொல்ல இருக்கா மரகதம்?"
பதட்டமாக இங்குமங்கும் நடந்தாள், சொல்லவும் தோன்றியது வேண்டாம் என்றும் தோன்றியது. அவன் தெரிந்து கேட்கிறான், போட்டு வாங்குகிறான் என மனம் அடித்து சொன்னது. ஆனாலும் சொல்ல பயந்தாள் அவள்.
திருமணம் முடிந்த பிறகு சொல்லி கொள்ளலாம் என்ற முடிவில் "இல்லங்க" என்றுவிட்டாள்.
"ரைட். குட்நைட் மரகதம்" என்றவன் வேறு பேச்சின்றி வைத்துவிட்டான், அதில் இன்னும் வெலவெலத்து விட்டாள் மரகதவல்லி. ஆனால் அவன் வேறோரு அழைப்பு வந்ததால் தான் துண்டித்தான்.
"என்னாச்சு டாக்டர்?" என்றான் எதிர் முனையிலிருந்தவரிடம்.
"மூணு டெட்பாடில இருந்தும் எடுத்த முடி ஒரே ஆளோடது தான். ஏஜ் ஒரு ட்வன்டி ஃபைவ் டூ தேர்ட்டி ஃபைவ் குள்ள இருக்கலாம். டிஎன்ஏ டெஸ்ட் வச்சு பாக்கும்போது இது ஒரு ஃபீமேல் ஹேர்தான்னு ட்வன்டி ஃபைவ் பெர்சன்ட் சொல்லலாம்"
"அப்ப கன்ஃபார்ம் இல்லையா?"
"ம்ம்கூம் அதுக்கு இன்னும் கொஞ்சம் சேம்பிள்ஸ் வேணும் ப்ளஸ் பிஃப்டீன் டேஸ்னாலும் டைம் வேணும்"
"ஓகே தென். பாத்துக்கலாம் டாக்டர் தேங்க்ஸ்"
"இனி இத வெளில சொல்லுவீங்களா?"
"என்னன்னு தெரியாம எதுக்கு சொல்லணும்? நா தேடுறது கொலைகாரனா கொலைகாரியான்னு தெரிஞ்சுக்க தான் ரகசியமா இத செய்ய சொன்னேன். இதையே நம்பவும் முடியாது நம்மள குழப்பி விடணும்னு கூட எவனோ கொண்ணுட்டு சவுரி முடில நாலு முடிய செத்தவனுங்க காலுல கட்டிவிட்டுட்டு போயிருக்கலாம். சிக்குவான்ல எப்படியும் பாத்துக்குலாம்" என்கவும்.
"ஓகே சார்" என வைத்துவிட்டார் அந்த தடயவியல் நிபுணர். முதல் பிரேதத்திலேயே பெருவிரல் இரண்டையும் இணைத்து முடிவைத்து கட்டிதான் ஹைவேயில் போட்டிருந்தனர், தடயவியல் நிபுணரிடம் அதை காட்டி பத்திரபடுத்திவிட்டான், அதுவே அடுத்த இரு பிரேதத்திலும் இருக்க, அவரே தனியாக எடுத்து வைத்துக்கொண்டார். மூன்றிலும் வித்தியாசமாக இருந்த ஒன்று அது தான், வேறெந்த தடயங்களும் கிடைக்கவில்லை, அந்த முடியும் கூட கொலை செய்பவன் அவர்களுக்காக கொடுத்துச் சென்றது தான்.
அதை பேசிவிட்டு இவன் யோசனையில் இருக்க, மரகதம் மீண்டும் அழைப்பில் வந்தாள், புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு சற்றுமுன் அவளிடம் பேசிவிட்டு வைத்தது ஞாபகம் வர கூடவே உல்லாச சிரிப்பும் வந்தமர்ந்தது.
"மரகதம்?"
"பிஸி ஆகிட்டீங்களா?"
"ஒரு ஃபோன் மரகதம். நீ என்ன திரும்ப கூப்பிட்ருக்க, மாமாவ ரொம்ப தேடுதோ?"
"இல்ல நீங்க கோவமா வச்சமாதிரி இருந்தது?"
"அப்டியா வச்சேன்? லாஸ்டா என்ன பேசிட்ருந்தோம்?"
"இல்ல எனக்கு தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. நீங்க கோவமோன்னு கேட்க தான் கூப்டேன். நா வைக்றேங்க" என வைத்துவிட்டாள், இவன் சிரித்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் இவன் எழுந்து வருகையிலேயே, வரவேற்பறையில் எல்லோரும் தயாராக காத்திருந்தனர், அதிலும் தம்பிகள் இருவரிடமும் இருந்த அதீத பவ்யம் அவன் மரகதத்தைத் தான் ஞாபகப் படுத்தியது.
'அம்புட்டும் ப்ராடுங்க தான்' என நினைத்துக் கொண்டே தான் வந்தமர்ந்தான்.
"வேலை எப்டிறா போகுது ரெண்டு பேருக்கும்?"
"நல்லாதான் போகுதுண்ணே" என அரசு சொல்ல, பாண்டியன் வரதனைப் பார்த்தான், "பிரச்சினை இல்லண்ணே",
"லீவெடுக்குறதுல எதுவும் பிரச்சினை இருக்கா?"
"இல்ல இல்ல, லீவு உன் கல்யாணத்த ஒட்டி எடுக்கணும்னு இருக்கேன்"
"கல்யாண வேலை எதும் செய்ய முடியுமா உங்க ரெண்டு பேருக்கும்? நேரம் இருக்குமா?" அவன் அப்படி கேட்டதும் இருவரும் உண்மைக்கும் பதறவே செய்தனர், அம்மாவிடம் ஏட்டிக்குப் போட்டி பேசினாலும், அவனை விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருவரிடமும் இருந்ததில்லை. அவன் பெரிய பதவி பார்த்து பயமும் அதிகம் தான். இது அவன் கல்யாணம் என்பதால் தான் கேட்டுக் கொண்டிருக்கிறான், இதே அம்மா அப்பாவிற்கு செய்வதில் எதும் குறை என்றால் சற்றும் யோசிக்காமல் பேசிவிடுவான். சிறுபிள்ளையில் அடிதடி என்று வளர்ந்தவர்கள் தான், அவன் காவல்துறையில் நுழைந்த பின்னர் தான் அப்படியே ஒதுங்கிவிட்டான், இவர்களும் ஆம் இல்லை என நின்று கொண்டனர்.
Last edited: