அத்தியாயம் 15
"நடு சாமத்துல என்னத்த புடுங்கி தள்ளிறலாம்னு வெளில வந்தான் அவேன்? செத்து போயிருவோம்னு பயமே இல்லாம தான வந்துருக்கான் போய் சேரட்டும்" என அந்த இருட்டில் நின்று தாளித்து கொண்டிருந்தான் மகிழ், முதல் நாள் இரவு தேட துவங்கியது, போலீஸ் டிப்பார்ட்மெண்ட் மொத்தமும் களத்தில் இறங்கி மதுரையை சுற்றிவர பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் தேடிபார்த்தாகிற்று, சந்தேகபடும்படி வாகனங்கள் கூட கிடைக்கவில்லை.
இதோ மீண்டும் கடத்திய இடத்திற்கே வந்து நிற்க, கடுப்பில் கத்திக்கொண்டிருக்கிறான். உணவுமில்லை தூக்கமும் இல்லை என்கையில் வரும் எரிச்சலில் தான் அவனும் இருந்தான் மற்ற அனைவரும் கூட இருந்தனர்.
"ஒரு சிசிடிவில கூட சிக்காம எப்டி சார்? ஜாமர்லாம் வச்சு பண்றான்னா, செர்வீஸ்ட் கொலைகாரனா இருப்பானோ?" என்றான் தோய்ந்து அமர்ந்திருந்த சொக்கலிங்கம்.
"எங்க வச்சு கொலை பண்றான்? சிட்டிக்குள்ள சிட்டிக்கு வெளியன்னு எல்லா இடமும் இந்த டைம் செர்ச் பண்ணியாச்சு, எப்படி யார் கண்ணுலயும் படாம கொண்டு போய் கொண்டு வர முடியுது கில்லரால? எங்கையோ ஏதோ மிஸ்ஸாகுது" என பேசிக்கொண்டே தீவிரமாக யோசித்து நின்றான் மகிழ்.
அந்நேரம் கமிஷனரிடமிருந்து அழைப்பு வர, "பிடிக்க முடிஞ்சதா பாண்டியன்?" என்றார் அவர்.
"பிடிச்சுருந்தா நானே கால் பண்ணிருக்க மாட்டேனா சார்?" என்றான் இவன் கடுப்புடன்.
அவருக்கும் தெரியுமே, அவருமே பகலில் மொத்த மதுரையையும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார், ஏற்கனவே கைதாகி சிறையிலிருக்கும் கைதிகளிடம் கூட கொலை செய்ய ஏதுவாக அவர்கள் தேர்ந்தெடுக்குமிடங்கள் என விசாரித்து அதையும் சல்லடை போட்டாகிற்று, சிறு துரும்பும் சிக்கவில்லையே, பின் அவனிடம் சாடி என்ன செய்ய என நினைத்தவர், "என்ன செய்யலாம் பாண்டியன்?" என கேட்க
"எனக்கென்னவோ கில்லர் நம்ம டிப்பார்ட்மெண்ட் சேர்ந்தவனா இருப்பானோன்னு தோணுது சார்" என பாண்டியன் சொல்ல,
"ஏன்? யாருன்னு ஐடியா இருக்கா?"
"நம்ம எவ்வளவு தீவிரமா இறங்கி தேடுவோம்னு தெரிஞ்சும், இந்த டைம் ரிஸ்க் எடுத்துருக்கான், கேப்பே இல்லாம அடுத்தடுத்து செய்றான், அப்ப நாம அவன பிடிக்குறதுக்குள்ள எல்லா கொலையும் பண்ணிடனும்ன்ற அவசரம் அவன்ட்ட இருக்கு. இன்னும் மூணு பேரையும் நாம பிடிக்குறதுக்குள்ள கொண்ணுடனும்னு நினைக்கிறான். அதும் நாம எப்டிலாம் தேடுவோம் எங்கெல்லாம் தேடுவோம்னு எல்லாம் தெரிஞ்சுருக்கு, ஈசியா மூவ் பண்ணி போயிட்ருக்கான் சின்ன தடையம் கூட இல்லாம. சர்வீஸ்ட் கொலைகாரனா இருந்தா கூட எதாவது மிஸ் பண்ணுவான், இவன் அதுலயும் ரொம்ப கவனமா இருக்கான், சோ நம்ம டிப்பார்ட்மெண்ட் சைடா இருக்க வாய்ப்பு அதிகம்" அவன் யோசனை முழுவதும் இப்போது அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது என அனைவருக்கும் புரிந்தது.
"சரி எப்படின்னு அதையும் யோசிக்கலாம். நீங்க ஒரு டூ அவர்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க பாண்டியன்" என்றார் அவராகவே.
"எப்டியும் இந்நேரம் அந்த பையன கொன்னுருப்பான், திரும்ப கொண்டு பப்ளிக்ல தான போடணும், அப்ப நம்மட்ட சிக்கணும்ல? ஹேக் பண்றான் சோ இனி சிசிடிவி நம்பி யூஸ் இல்ல, நம்ம தான் நின்னாகணும்"
"ஆல்மோஸ்ட் எல்லாரும் ஃபீல்ட்ல தான் இருக்கோம். ஷிஃப்ட் மாத்தாம இருக்குற எல்லாரையும் மாத்திவிட சொல்லுங்க, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வாங்க, அப்பதான் கில்லர் கண் முன்னால ஓடுனாலும் துரத்தி பிடிக்க முடியும்" என்கவும், அவனுக்கும் அந்த ஓய்வு தேவையாக இருக்க, சரி என கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வரும் வரையும் கூட அதே யோசனைதான், காணாமல் போன மாணவன் காதலியின் எண்ணிலிருந்து அழைத்து தான் அவனை வெளியே வரவழைத்திருக்கிறான் கில்லர். அவன் காதிலியின் மொபைல் தொலைந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது என்கிறாள் அந்த பெண், பத்து நாட்களுக்கு முன் அதெப்படி தொலைந்தது என்றால் தெரியவில்லை அவளுக்கு. தொலைந்த போனை பற்றி அவனுக்கும் தெரியாதாம், ஏனெனில் தொடர் கொலையால் பயந்திருந்தவன் பள்ளியில் வைத்தும் இவளிடம் சரிவர பேசவில்லையாம், அவனும் அவன் நண்பர்களுமாகவே ஏதோ வேலையாக சுற்றி திரிந்தனராம். இதெல்லாம் அந்த பெண்ணை விசாரித்ததில் தெரியவந்தவை. அவ்வளவு பயந்து இருந்தவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் ஏன் வெளியே வர வேண்டும்? ஏதோ எங்கயோ மிஸ் பண்ற மகிழ்? அந்த நீள முடி கண்டிப்பா கொலையான இடத்துக்கு ஒரு பெண் வந்து போறது கன்பார்ம் ஆகுது. ஆனா அந்த பொண்ணு தனியா செய்யல. கொலையாளி ஒரு பெண்ணா இருக்கலாம், இல்ல கொலையாளிக்கு ஒரு பெண் சப்போர்ட்டா கூட இருக்கலாம், கண்டுபிடிக்கனும். மத்த மூணு பேர முடிக்குற வர இன்னும் கவனமாதான் இருப்பாங்க, யோசியோசி என்ன பண்ணலாம்' அவன் அவனுக்குள் பேசிக் கொண்டே வர, வீடு வந்திருந்தது.
"குட் நைட் சார்" என்ற பரத்திற்கும், சொக்கலிங்கத்திற்கும் கையசைத்து சென்றுவிட்டான்.
வீட்டினுள்ளே நுழைந்ததுமே ஒரு புதுவித நறுமனம் குப்பென்றடித்தது. சட்டென்று சுதாரித்து வீட்டை சுற்றி நோட்டமிட்டான். எல்லா அறையிலும் விளக்கை ஒளிரவிட்டு சுற்றிவர தேடிவந்தவனுக்கு, சாப்பாட்டு மேசையை கடக்கையில் தான் ஒரு லஞ்ச் பேக் அதன்மேலிருப்பது அவன் கண்ணில் பட்டது. புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தவன், அதை திறக்குமுன்பே கையிலெடுத்து தட்டி அசைத்து பார்த்தான். நிச்சயம் உள்ளே சில்வர் கேரியர் தான் என வரிவடிவமாக புரிந்தது.
மீண்டும் மேசையில் வைத்துவிட்டு, லஞ்ச் பேக்கை திறந்து கேரியரை வெளியே எடுத்து திறக்க, மேலடுக்கில் இட்லியும், இரண்டாம் அடுக்கில் சாம்பாரும், மூன்றாம் அடுக்கில் சட்னியும் இருந்தது. கூடவே ஒரு மில்க் ஸ்வீட்டும். தனி தனியாக திறந்து வைத்துவிட்டு, இடுப்பில் கைவைத்து யோசித்தவனுக்கு, 'மரகதம் வந்திருக்க வாய்ப்பில்லையே!' என்ற எண்ணம் மட்டுமே.
சாவி அவனிடம் ஒன்று உண்டு மற்றொன்று அங்கு அவன் வீட்டில் தான் கேட்பாரின்றி எங்காவது கிடக்கும். அவன் அம்மா நிச்சயம் அவனை கேட்காமல் இதை செய்யமாட்டார், வேறு யாரும் அவனின் அனுமதி இன்றி வீட்டினுள் நுழைய வாய்ப்பில்லை, இதையெல்லாம் யோசித்தே சென்று குளித்து வெளி வந்தவன், தலையை துவட்டிக் கொண்டே அவளுக்கு தான் அழைத்தான்.
'அவள தவிர வேற யாருக்கு இந்த தைரியம் வரும். ப்ராடு இப்ப பவ்யமா பேசட்டும் வச்சுக்குறேன்' என நினைத்துக் கொண்டிருக்க, "ஹலோ" என்றாள் பாதி தூக்கத்தில் மரகதவல்லி,
"மரகதம்" என்றான் சத்தமாக, பதறி எழுந்தமர்ந்தாள் அவன் காதுக்குள் கத்தியதில்,
"என்ன என்னாச்சு?" என வேக மூச்சோடு கேட்க,
"தூங்கிட்டியா மரகதம்?" என்று வேறு கேட்க,
பாதி தூக்கம், அறையின் இருட்டு என பேந்த பேந்த விழித்தவள் அவன் கேள்வியில் தான் சுயம் பெற்றாள், "எதுக்கு கத்துனீங்க?" என இவளும் திட்டி கேட்க,
"பார்றா மரகதவல்லிக்கு வாய்ஸ் ரைஸ்லாம் ஆகுது" என்றதும், மொபைலை திருப்பி மணியை பார்த்தாள் மணி இரண்டு ஐந்து எ.எம் என்றிருந்தது அதில். 'சரியான ராப்பாடி. ஃபோன் பண்ணிருக்க நேரத்த பாரு' என திட்டியவள், "நீங்க ஏன் திடீர்னு கத்துனீங்க?" என்றாள் இப்போது மெதுவாக.
"நா பேசுறதே கேக்காம பதில் சொல்லிட்டு தூங்கிடுவ நீ. தெளிய வைக்க வேணாமா அதான் கத்தி எழுப்பினேன்"
"ரொம்ப சந்தோஷம். தெளிவா முழிச்சுட்டேன். இப்ப என்ன சாப்டீங்களான்னு கேக்கணுமா?"
"என்ன போனா போகுதுன்னு பேசுற? நீ ஒன்னும் கேக்கவே வேணாம் போடி. ரொம்ப தான் பண்றா" என்றவன் வைத்துவிட.
'ஏசிபி' என பல்லை கடித்து விட்டு மீண்டும் அவளே அழைத்தாள், "என்னடி?" என்றான் கடுப்புடன்.
"சாப்டீங்களா?"
"மேகி வந்தா தான?"
"என்னது?"
"மேகி வெந்தா தானடி சாப்ட முடியும்"
'டபுள் மீனிங் மன்னன்' என முனங்கியவள், "நாந்தான் இட்லி வச்சுட்டு வந்தேனே, நல்லா இல்லையா? ஹாட் பாக்ஸ் டைப்தான் கெட்டு போக வாய்ப்பில்லையே?" என அவள் பேசிக் கொண்டிருக்க,
"வீட்டுக்குள்ள எப்டி வந்த நீ?" என்றான் இப்போது போலீஸாக,
'அச்சோ!' என நாக்கை கடித்து கொண்டவள், "ஹேர்பின் வச்சு"
"அடி பிச்சுபுடுவேன்டி"
"சும்மா தள்ளுனேன் திறந்துட்டு"
"பொய் சொன்னா நேர்ல பாக்றப்ப வாய்லயே போடுவேன்டி"
"உங்கம்மா தான் சாவிய குடுத்து என்னைய போன்னு அனுப்பிவிட்டாங்க"
"கல்யாணத்துக்கு முன்ன அப்டிலாம் எங்கம்மா உன்ன இந்த வீட்டுக்கு அனுப்புற ஆள் இல்லையே" என்றவன் இட்லியை எடுத்து வைத்து உண்ண துவங்கினான்.
"புகுந்த வீடுன்னு அத்த வீடுதான் கணக்காம். போலீஸ் குவாட்ரஸ் கணக்கில்லையாம்"
"மரகதம் மேட்டர தெளிவா சொல்லுடி" என மிரட்ட,
'இதுக்குத்தான் வேணாம்னு சொன்னேன் கேட்டாங்களா இப்ப என் வாய்ல இருந்தே விஷயத்த கறந்துட்டு என்னையே போட்டு வறுத்தெடுப்பாரு இந்த ஏசிபி. நல்ல வந்து சிக்கிருக்கேன்' என அவள் புலம்ப,
"மரகதம்" என அழுத்தம் கொடுத்தான் அவன் அழைப்பில்,
"ம்ச் உங்கம்மா, ஷீலா, விசாலாட்சி மூணு பேரும் சாயந்தரம் வீட்டுக்கு வந்திருந்தாங்க, என் ஜாதகத்த குடுத்துட்டு அப்படியே பத்திரிகை டிசைனும் கொண்டு வந்திருந்தாங்க, அங்க அத்த வீடு இருக்க தெருல அம்மன் கோவில்ல திருவிழாவாமே அதுக்கும் அழைச்சுட்டு போலாம்னு வந்தாங்களாம்"
"ஓஹோ! சரி அப்றம்?"
"நீங்க சாப்பிடாம வேலை வேலைன்னு அலையறீங்கன்னு ஒரே புலம்பல், நைட்டுக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு குடுத்துட்டு வரீயான்னு கேட்டாங்க, நா சரின்னு கொண்டு வந்து வச்சுட்டு வந்தேன்"
"இப்பவும் வீட்டுக்குள்ள எப்டி வந்தன்னு சொல்லல"
"சாவிய கையோட கொண்டு வந்துட்டு தான டிஃபனே செய்ய சொன்னாங்க"
"என் குவாட்டரஸ் சாவிய அவங்க எதுக்கு கைல வச்சுட்டு சுத்தணும்? அப்ப வீட்ல இருந்தே உன்ன சாப்பாடு கொண்டு குடுக்க வைக்குற ப்ளானோட தான வந்துருக்காங்க?"
"ஆமா ஆமா"
"ஏன் அப்படி ப்ளான் பண்ணணும்? நீ கல்யாணதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு எதும் சொன்னியா?"
"ஏங்க நா ஏன் அப்டி சொல்லணும். பேலீஸ்காரர்னு நிரூபிக்றீங்க. எத்தன க்ராஸ் கொஸ்டீன்ஸ்"
"சரி வை நா அம்மாட்ட கேட்டுட்டு வரேன். உன்ட்ட கொஸ்டீன் பண்ணல"
"அதான் எல்லாம் சொல்லிட்டேனேங்க"
"இல்ல எனக்கு அவங்க ஏன் அந்த ப்ளானோட வந்தாங்கன்னு தெரியணும்" என்றான் விடாமல்.
அவளுக்கு இதற்கே மூச்சு வாங்கியது. விடுறாரான்னு பாரு, 'ரெண்டு இட்லிதான எடுத்து வச்சமா சாப்டமா படுத்து தூங்கினமான்னு இல்லாம, இந்த ஏசிபி' என நொந்து கொண்டு, "அது நீங்களும் நானும் லவ் பண்ணணுமாம் போதுமா" என்றாள் பட்டென்று.
"லவ்வா?" என்றவனுக்கு குறும்பு சிரிப்புதான் முகமெங்கும் வியாபித்திருந்தது. அதுவரை வேலையிலிருந்த அழுத்தமெல்லாம் பறந்தோடிச் சென்றிருந்தது.
"ஆமா" என்றாள் அந்தபக்கமிருந்தவள் பாவம் போல்.
"கல்யாணமே பண்ணிக்க போறோமே பின்ன லவ் பண்ண மாட்டோமாமா?"
"அது ஏதோ ஜோசியர் சொன்னாராம். காதலிச்சவங்களோட தான் இந்த ஜாதகங்களுக்கு கல்யாணம் நடக்கும் இல்லனா நடக்காதுன்னு. அதான் நம்மள லவ் பண்ண வைக்க போறாங்களாம்"
"யாரெல்லாம்?" என்றவனுக்குள் மீண்டும் அப்படியொரு சிரிப்பு.
"எங்கம்மா, உங்கம்மா, உங்க தம்பி பொண்டாட்டிங்க எல்லாம் மெயின் மத்தவங்களாம் ஹெல்ப்புக்கு"
"ஓஹோ! ஆனா பாரு மரகதம், நா லவ் பண்ண பொண்ணோட தான் கல்யாணம்னா எனக்கு மந்தாகினியோட தான நடக்கணும்? மரகதவல்லியோட எப்டி நடக்கும்?" என்றுவிட, அவளுக்கு தான் கண்கள் கலங்கிவிட்டது. அவன் அப்படி தான் கூறுவான் என முன்பே யோசித்தும் இருந்தாள், ஆனாலும் அவன் வாயால் கேட்கும் போது தான் வலிக்கிறது.
"மந்தாகினிய சொன்னா உனக்கு பிடிக்காதுல்ல சாரி" என்று வேறு சொல்லவும், வலி மறைந்து கோவம் வந்தது.
"அவங்கள பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டு அவங்கள தான் அதிகமா பேசுறீங்க"
"ஆமா விடு எதுக்கு ஏமாத்திட்டு போனவள பத்தி பேசிட்டு, நாம பச்ச சேரி மேகிய பத்தி பேசலாம் வா"
"சாப்டீங்களா?"
"இல்லையே இன்னும் பெர்மிஷன் கிடைக்கலையே. உனக்கு அதுக்குள்ள என்ன அவசரம், பொறுமைக்கு தான் ருசி அதிகம் மரகதம்" என்க, முதலில் புரியாமல் விழித்தவள், பின்னரே தன்னை சொல்கிறான் என புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள்.
அவனை அடிக்க முடியாததிற்கெல்லாம் சேர்த்து அவள் தலை தான் வீங்கி கொண்டிருக்கிறது.
"இப்படி பதில் சொல்லத்தான் என்ன சாப்டீங்களான்னு அடிக்கடி கேக்க சொன்னீங்களா?" என்றாள்,
"வக்கீல் மூளை இவ்வளவு ஸ்லோவா? நா உன்ன என்னமோன்னு நினைச்சேனே மரகதம்" என்றவன் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வந்து அறைக்குள்ளேயே நடை பயின்றான்.
"நிஜமா கேக்கணுமான்னு கேட்டதுக்கும் ஆமான்னு சொன்னீங்க"
"நீதான் கேக்கணும் உன்ட்ட மட்டுந்தான் கேக்க முடியும்னு சொன்னனே மரகதம்"
"இட்லி நல்லார்ந்ததா?" இவள் தான் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது.
"கொண்டு வந்தவ இருந்து பரிமாறியிருந்தா நல்லார்ந்துருக்கும்"
"ரெண்டு மணி வரைக்கும் இருந்தா?"
"எஸ். ஒரு ரெண்டு மணி வர வெய்ட் பண்ண மாட்டனா எப்டி லைஃப் லாங் எனக்காக வெயிட் பண்ணுவ? அண்ட் ஃபோன் பண்ணிருக்கலாமே?"
"நா மார்னிங் பண்ணேன். ஃப்ரீ ஆகிருந்தா நீங்களே என்ன வெறுப்பேத்தவே மறக்காம கூப்பிட்ருப்பீங்கன்னு தெரியும். நீங்க கூப்பிடல சோ பிஸின்னு தான் வச்சுட்டு வந்துட்டேன்"
"வெரி குட் இப்படி தான் அன்டர்ஸ்டாண்டிங் வைஃபா இருக்கணும் மரகதம். பட் வெயிட்டும் பண்ணிருந்தா இன்னும் ஹேப்பியா ஆகிருப்பேன்" என்றான்.
'வெறுப்பேத்துவீங்கன்னு சொல்றேன் பேச்சுக்குனாலும் இல்லன்னு வருதா பாரு. ஏசிபிபிபி' என மனதிற்குள் மட்டுமே பல்லை கடித்தாள்.
"சரி தூங்கலாம். இப்டிலாம் அன்டைம்ல எப்பவும் பேசணும்னு எக்ஸ்பெக்ட் பண்ண கூடாது ஓ.கேவா"
"சரிங்க" என்றுவிட்டாள் உடனே, அவளுக்கு தான் அவனை இப்போது நன்கு பழகிவிட்டதே, அவனும் அவளின் உடனடி ஒப்புதலில் குறும்பு சிரிப்புடனே அழைப்பை துண்டித்தான்.
"நடு சாமத்துல என்னத்த புடுங்கி தள்ளிறலாம்னு வெளில வந்தான் அவேன்? செத்து போயிருவோம்னு பயமே இல்லாம தான வந்துருக்கான் போய் சேரட்டும்" என அந்த இருட்டில் நின்று தாளித்து கொண்டிருந்தான் மகிழ், முதல் நாள் இரவு தேட துவங்கியது, போலீஸ் டிப்பார்ட்மெண்ட் மொத்தமும் களத்தில் இறங்கி மதுரையை சுற்றிவர பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் தேடிபார்த்தாகிற்று, சந்தேகபடும்படி வாகனங்கள் கூட கிடைக்கவில்லை.
இதோ மீண்டும் கடத்திய இடத்திற்கே வந்து நிற்க, கடுப்பில் கத்திக்கொண்டிருக்கிறான். உணவுமில்லை தூக்கமும் இல்லை என்கையில் வரும் எரிச்சலில் தான் அவனும் இருந்தான் மற்ற அனைவரும் கூட இருந்தனர்.
"ஒரு சிசிடிவில கூட சிக்காம எப்டி சார்? ஜாமர்லாம் வச்சு பண்றான்னா, செர்வீஸ்ட் கொலைகாரனா இருப்பானோ?" என்றான் தோய்ந்து அமர்ந்திருந்த சொக்கலிங்கம்.
"எங்க வச்சு கொலை பண்றான்? சிட்டிக்குள்ள சிட்டிக்கு வெளியன்னு எல்லா இடமும் இந்த டைம் செர்ச் பண்ணியாச்சு, எப்படி யார் கண்ணுலயும் படாம கொண்டு போய் கொண்டு வர முடியுது கில்லரால? எங்கையோ ஏதோ மிஸ்ஸாகுது" என பேசிக்கொண்டே தீவிரமாக யோசித்து நின்றான் மகிழ்.
அந்நேரம் கமிஷனரிடமிருந்து அழைப்பு வர, "பிடிக்க முடிஞ்சதா பாண்டியன்?" என்றார் அவர்.
"பிடிச்சுருந்தா நானே கால் பண்ணிருக்க மாட்டேனா சார்?" என்றான் இவன் கடுப்புடன்.
அவருக்கும் தெரியுமே, அவருமே பகலில் மொத்த மதுரையையும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார், ஏற்கனவே கைதாகி சிறையிலிருக்கும் கைதிகளிடம் கூட கொலை செய்ய ஏதுவாக அவர்கள் தேர்ந்தெடுக்குமிடங்கள் என விசாரித்து அதையும் சல்லடை போட்டாகிற்று, சிறு துரும்பும் சிக்கவில்லையே, பின் அவனிடம் சாடி என்ன செய்ய என நினைத்தவர், "என்ன செய்யலாம் பாண்டியன்?" என கேட்க
"எனக்கென்னவோ கில்லர் நம்ம டிப்பார்ட்மெண்ட் சேர்ந்தவனா இருப்பானோன்னு தோணுது சார்" என பாண்டியன் சொல்ல,
"ஏன்? யாருன்னு ஐடியா இருக்கா?"
"நம்ம எவ்வளவு தீவிரமா இறங்கி தேடுவோம்னு தெரிஞ்சும், இந்த டைம் ரிஸ்க் எடுத்துருக்கான், கேப்பே இல்லாம அடுத்தடுத்து செய்றான், அப்ப நாம அவன பிடிக்குறதுக்குள்ள எல்லா கொலையும் பண்ணிடனும்ன்ற அவசரம் அவன்ட்ட இருக்கு. இன்னும் மூணு பேரையும் நாம பிடிக்குறதுக்குள்ள கொண்ணுடனும்னு நினைக்கிறான். அதும் நாம எப்டிலாம் தேடுவோம் எங்கெல்லாம் தேடுவோம்னு எல்லாம் தெரிஞ்சுருக்கு, ஈசியா மூவ் பண்ணி போயிட்ருக்கான் சின்ன தடையம் கூட இல்லாம. சர்வீஸ்ட் கொலைகாரனா இருந்தா கூட எதாவது மிஸ் பண்ணுவான், இவன் அதுலயும் ரொம்ப கவனமா இருக்கான், சோ நம்ம டிப்பார்ட்மெண்ட் சைடா இருக்க வாய்ப்பு அதிகம்" அவன் யோசனை முழுவதும் இப்போது அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது என அனைவருக்கும் புரிந்தது.
"சரி எப்படின்னு அதையும் யோசிக்கலாம். நீங்க ஒரு டூ அவர்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க பாண்டியன்" என்றார் அவராகவே.
"எப்டியும் இந்நேரம் அந்த பையன கொன்னுருப்பான், திரும்ப கொண்டு பப்ளிக்ல தான போடணும், அப்ப நம்மட்ட சிக்கணும்ல? ஹேக் பண்றான் சோ இனி சிசிடிவி நம்பி யூஸ் இல்ல, நம்ம தான் நின்னாகணும்"
"ஆல்மோஸ்ட் எல்லாரும் ஃபீல்ட்ல தான் இருக்கோம். ஷிஃப்ட் மாத்தாம இருக்குற எல்லாரையும் மாத்திவிட சொல்லுங்க, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து வாங்க, அப்பதான் கில்லர் கண் முன்னால ஓடுனாலும் துரத்தி பிடிக்க முடியும்" என்கவும், அவனுக்கும் அந்த ஓய்வு தேவையாக இருக்க, சரி என கிளம்பிவிட்டான்.
வீட்டிற்கு வரும் வரையும் கூட அதே யோசனைதான், காணாமல் போன மாணவன் காதலியின் எண்ணிலிருந்து அழைத்து தான் அவனை வெளியே வரவழைத்திருக்கிறான் கில்லர். அவன் காதிலியின் மொபைல் தொலைந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது என்கிறாள் அந்த பெண், பத்து நாட்களுக்கு முன் அதெப்படி தொலைந்தது என்றால் தெரியவில்லை அவளுக்கு. தொலைந்த போனை பற்றி அவனுக்கும் தெரியாதாம், ஏனெனில் தொடர் கொலையால் பயந்திருந்தவன் பள்ளியில் வைத்தும் இவளிடம் சரிவர பேசவில்லையாம், அவனும் அவன் நண்பர்களுமாகவே ஏதோ வேலையாக சுற்றி திரிந்தனராம். இதெல்லாம் அந்த பெண்ணை விசாரித்ததில் தெரியவந்தவை. அவ்வளவு பயந்து இருந்தவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் ஏன் வெளியே வர வேண்டும்? ஏதோ எங்கயோ மிஸ் பண்ற மகிழ்? அந்த நீள முடி கண்டிப்பா கொலையான இடத்துக்கு ஒரு பெண் வந்து போறது கன்பார்ம் ஆகுது. ஆனா அந்த பொண்ணு தனியா செய்யல. கொலையாளி ஒரு பெண்ணா இருக்கலாம், இல்ல கொலையாளிக்கு ஒரு பெண் சப்போர்ட்டா கூட இருக்கலாம், கண்டுபிடிக்கனும். மத்த மூணு பேர முடிக்குற வர இன்னும் கவனமாதான் இருப்பாங்க, யோசியோசி என்ன பண்ணலாம்' அவன் அவனுக்குள் பேசிக் கொண்டே வர, வீடு வந்திருந்தது.
"குட் நைட் சார்" என்ற பரத்திற்கும், சொக்கலிங்கத்திற்கும் கையசைத்து சென்றுவிட்டான்.
வீட்டினுள்ளே நுழைந்ததுமே ஒரு புதுவித நறுமனம் குப்பென்றடித்தது. சட்டென்று சுதாரித்து வீட்டை சுற்றி நோட்டமிட்டான். எல்லா அறையிலும் விளக்கை ஒளிரவிட்டு சுற்றிவர தேடிவந்தவனுக்கு, சாப்பாட்டு மேசையை கடக்கையில் தான் ஒரு லஞ்ச் பேக் அதன்மேலிருப்பது அவன் கண்ணில் பட்டது. புருவம் சுருக்கி யோசனையாக பார்த்தவன், அதை திறக்குமுன்பே கையிலெடுத்து தட்டி அசைத்து பார்த்தான். நிச்சயம் உள்ளே சில்வர் கேரியர் தான் என வரிவடிவமாக புரிந்தது.
மீண்டும் மேசையில் வைத்துவிட்டு, லஞ்ச் பேக்கை திறந்து கேரியரை வெளியே எடுத்து திறக்க, மேலடுக்கில் இட்லியும், இரண்டாம் அடுக்கில் சாம்பாரும், மூன்றாம் அடுக்கில் சட்னியும் இருந்தது. கூடவே ஒரு மில்க் ஸ்வீட்டும். தனி தனியாக திறந்து வைத்துவிட்டு, இடுப்பில் கைவைத்து யோசித்தவனுக்கு, 'மரகதம் வந்திருக்க வாய்ப்பில்லையே!' என்ற எண்ணம் மட்டுமே.
சாவி அவனிடம் ஒன்று உண்டு மற்றொன்று அங்கு அவன் வீட்டில் தான் கேட்பாரின்றி எங்காவது கிடக்கும். அவன் அம்மா நிச்சயம் அவனை கேட்காமல் இதை செய்யமாட்டார், வேறு யாரும் அவனின் அனுமதி இன்றி வீட்டினுள் நுழைய வாய்ப்பில்லை, இதையெல்லாம் யோசித்தே சென்று குளித்து வெளி வந்தவன், தலையை துவட்டிக் கொண்டே அவளுக்கு தான் அழைத்தான்.
'அவள தவிர வேற யாருக்கு இந்த தைரியம் வரும். ப்ராடு இப்ப பவ்யமா பேசட்டும் வச்சுக்குறேன்' என நினைத்துக் கொண்டிருக்க, "ஹலோ" என்றாள் பாதி தூக்கத்தில் மரகதவல்லி,
"மரகதம்" என்றான் சத்தமாக, பதறி எழுந்தமர்ந்தாள் அவன் காதுக்குள் கத்தியதில்,
"என்ன என்னாச்சு?" என வேக மூச்சோடு கேட்க,
"தூங்கிட்டியா மரகதம்?" என்று வேறு கேட்க,
பாதி தூக்கம், அறையின் இருட்டு என பேந்த பேந்த விழித்தவள் அவன் கேள்வியில் தான் சுயம் பெற்றாள், "எதுக்கு கத்துனீங்க?" என இவளும் திட்டி கேட்க,
"பார்றா மரகதவல்லிக்கு வாய்ஸ் ரைஸ்லாம் ஆகுது" என்றதும், மொபைலை திருப்பி மணியை பார்த்தாள் மணி இரண்டு ஐந்து எ.எம் என்றிருந்தது அதில். 'சரியான ராப்பாடி. ஃபோன் பண்ணிருக்க நேரத்த பாரு' என திட்டியவள், "நீங்க ஏன் திடீர்னு கத்துனீங்க?" என்றாள் இப்போது மெதுவாக.
"நா பேசுறதே கேக்காம பதில் சொல்லிட்டு தூங்கிடுவ நீ. தெளிய வைக்க வேணாமா அதான் கத்தி எழுப்பினேன்"
"ரொம்ப சந்தோஷம். தெளிவா முழிச்சுட்டேன். இப்ப என்ன சாப்டீங்களான்னு கேக்கணுமா?"
"என்ன போனா போகுதுன்னு பேசுற? நீ ஒன்னும் கேக்கவே வேணாம் போடி. ரொம்ப தான் பண்றா" என்றவன் வைத்துவிட.
'ஏசிபி' என பல்லை கடித்து விட்டு மீண்டும் அவளே அழைத்தாள், "என்னடி?" என்றான் கடுப்புடன்.
"சாப்டீங்களா?"
"மேகி வந்தா தான?"
"என்னது?"
"மேகி வெந்தா தானடி சாப்ட முடியும்"
'டபுள் மீனிங் மன்னன்' என முனங்கியவள், "நாந்தான் இட்லி வச்சுட்டு வந்தேனே, நல்லா இல்லையா? ஹாட் பாக்ஸ் டைப்தான் கெட்டு போக வாய்ப்பில்லையே?" என அவள் பேசிக் கொண்டிருக்க,
"வீட்டுக்குள்ள எப்டி வந்த நீ?" என்றான் இப்போது போலீஸாக,
'அச்சோ!' என நாக்கை கடித்து கொண்டவள், "ஹேர்பின் வச்சு"
"அடி பிச்சுபுடுவேன்டி"
"சும்மா தள்ளுனேன் திறந்துட்டு"
"பொய் சொன்னா நேர்ல பாக்றப்ப வாய்லயே போடுவேன்டி"
"உங்கம்மா தான் சாவிய குடுத்து என்னைய போன்னு அனுப்பிவிட்டாங்க"
"கல்யாணத்துக்கு முன்ன அப்டிலாம் எங்கம்மா உன்ன இந்த வீட்டுக்கு அனுப்புற ஆள் இல்லையே" என்றவன் இட்லியை எடுத்து வைத்து உண்ண துவங்கினான்.
"புகுந்த வீடுன்னு அத்த வீடுதான் கணக்காம். போலீஸ் குவாட்ரஸ் கணக்கில்லையாம்"
"மரகதம் மேட்டர தெளிவா சொல்லுடி" என மிரட்ட,
'இதுக்குத்தான் வேணாம்னு சொன்னேன் கேட்டாங்களா இப்ப என் வாய்ல இருந்தே விஷயத்த கறந்துட்டு என்னையே போட்டு வறுத்தெடுப்பாரு இந்த ஏசிபி. நல்ல வந்து சிக்கிருக்கேன்' என அவள் புலம்ப,
"மரகதம்" என அழுத்தம் கொடுத்தான் அவன் அழைப்பில்,
"ம்ச் உங்கம்மா, ஷீலா, விசாலாட்சி மூணு பேரும் சாயந்தரம் வீட்டுக்கு வந்திருந்தாங்க, என் ஜாதகத்த குடுத்துட்டு அப்படியே பத்திரிகை டிசைனும் கொண்டு வந்திருந்தாங்க, அங்க அத்த வீடு இருக்க தெருல அம்மன் கோவில்ல திருவிழாவாமே அதுக்கும் அழைச்சுட்டு போலாம்னு வந்தாங்களாம்"
"ஓஹோ! சரி அப்றம்?"
"நீங்க சாப்பிடாம வேலை வேலைன்னு அலையறீங்கன்னு ஒரே புலம்பல், நைட்டுக்கு சாப்பாடு செஞ்சு கொண்டு குடுத்துட்டு வரீயான்னு கேட்டாங்க, நா சரின்னு கொண்டு வந்து வச்சுட்டு வந்தேன்"
"இப்பவும் வீட்டுக்குள்ள எப்டி வந்தன்னு சொல்லல"
"சாவிய கையோட கொண்டு வந்துட்டு தான டிஃபனே செய்ய சொன்னாங்க"
"என் குவாட்டரஸ் சாவிய அவங்க எதுக்கு கைல வச்சுட்டு சுத்தணும்? அப்ப வீட்ல இருந்தே உன்ன சாப்பாடு கொண்டு குடுக்க வைக்குற ப்ளானோட தான வந்துருக்காங்க?"
"ஆமா ஆமா"
"ஏன் அப்படி ப்ளான் பண்ணணும்? நீ கல்யாணதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு எதும் சொன்னியா?"
"ஏங்க நா ஏன் அப்டி சொல்லணும். பேலீஸ்காரர்னு நிரூபிக்றீங்க. எத்தன க்ராஸ் கொஸ்டீன்ஸ்"
"சரி வை நா அம்மாட்ட கேட்டுட்டு வரேன். உன்ட்ட கொஸ்டீன் பண்ணல"
"அதான் எல்லாம் சொல்லிட்டேனேங்க"
"இல்ல எனக்கு அவங்க ஏன் அந்த ப்ளானோட வந்தாங்கன்னு தெரியணும்" என்றான் விடாமல்.
அவளுக்கு இதற்கே மூச்சு வாங்கியது. விடுறாரான்னு பாரு, 'ரெண்டு இட்லிதான எடுத்து வச்சமா சாப்டமா படுத்து தூங்கினமான்னு இல்லாம, இந்த ஏசிபி' என நொந்து கொண்டு, "அது நீங்களும் நானும் லவ் பண்ணணுமாம் போதுமா" என்றாள் பட்டென்று.
"லவ்வா?" என்றவனுக்கு குறும்பு சிரிப்புதான் முகமெங்கும் வியாபித்திருந்தது. அதுவரை வேலையிலிருந்த அழுத்தமெல்லாம் பறந்தோடிச் சென்றிருந்தது.
"ஆமா" என்றாள் அந்தபக்கமிருந்தவள் பாவம் போல்.
"கல்யாணமே பண்ணிக்க போறோமே பின்ன லவ் பண்ண மாட்டோமாமா?"
"அது ஏதோ ஜோசியர் சொன்னாராம். காதலிச்சவங்களோட தான் இந்த ஜாதகங்களுக்கு கல்யாணம் நடக்கும் இல்லனா நடக்காதுன்னு. அதான் நம்மள லவ் பண்ண வைக்க போறாங்களாம்"
"யாரெல்லாம்?" என்றவனுக்குள் மீண்டும் அப்படியொரு சிரிப்பு.
"எங்கம்மா, உங்கம்மா, உங்க தம்பி பொண்டாட்டிங்க எல்லாம் மெயின் மத்தவங்களாம் ஹெல்ப்புக்கு"
"ஓஹோ! ஆனா பாரு மரகதம், நா லவ் பண்ண பொண்ணோட தான் கல்யாணம்னா எனக்கு மந்தாகினியோட தான நடக்கணும்? மரகதவல்லியோட எப்டி நடக்கும்?" என்றுவிட, அவளுக்கு தான் கண்கள் கலங்கிவிட்டது. அவன் அப்படி தான் கூறுவான் என முன்பே யோசித்தும் இருந்தாள், ஆனாலும் அவன் வாயால் கேட்கும் போது தான் வலிக்கிறது.
"மந்தாகினிய சொன்னா உனக்கு பிடிக்காதுல்ல சாரி" என்று வேறு சொல்லவும், வலி மறைந்து கோவம் வந்தது.
"அவங்கள பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டு அவங்கள தான் அதிகமா பேசுறீங்க"
"ஆமா விடு எதுக்கு ஏமாத்திட்டு போனவள பத்தி பேசிட்டு, நாம பச்ச சேரி மேகிய பத்தி பேசலாம் வா"
"சாப்டீங்களா?"
"இல்லையே இன்னும் பெர்மிஷன் கிடைக்கலையே. உனக்கு அதுக்குள்ள என்ன அவசரம், பொறுமைக்கு தான் ருசி அதிகம் மரகதம்" என்க, முதலில் புரியாமல் விழித்தவள், பின்னரே தன்னை சொல்கிறான் என புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள்.
அவனை அடிக்க முடியாததிற்கெல்லாம் சேர்த்து அவள் தலை தான் வீங்கி கொண்டிருக்கிறது.
"இப்படி பதில் சொல்லத்தான் என்ன சாப்டீங்களான்னு அடிக்கடி கேக்க சொன்னீங்களா?" என்றாள்,
"வக்கீல் மூளை இவ்வளவு ஸ்லோவா? நா உன்ன என்னமோன்னு நினைச்சேனே மரகதம்" என்றவன் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வந்து அறைக்குள்ளேயே நடை பயின்றான்.
"நிஜமா கேக்கணுமான்னு கேட்டதுக்கும் ஆமான்னு சொன்னீங்க"
"நீதான் கேக்கணும் உன்ட்ட மட்டுந்தான் கேக்க முடியும்னு சொன்னனே மரகதம்"
"இட்லி நல்லார்ந்ததா?" இவள் தான் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது.
"கொண்டு வந்தவ இருந்து பரிமாறியிருந்தா நல்லார்ந்துருக்கும்"
"ரெண்டு மணி வரைக்கும் இருந்தா?"
"எஸ். ஒரு ரெண்டு மணி வர வெய்ட் பண்ண மாட்டனா எப்டி லைஃப் லாங் எனக்காக வெயிட் பண்ணுவ? அண்ட் ஃபோன் பண்ணிருக்கலாமே?"
"நா மார்னிங் பண்ணேன். ஃப்ரீ ஆகிருந்தா நீங்களே என்ன வெறுப்பேத்தவே மறக்காம கூப்பிட்ருப்பீங்கன்னு தெரியும். நீங்க கூப்பிடல சோ பிஸின்னு தான் வச்சுட்டு வந்துட்டேன்"
"வெரி குட் இப்படி தான் அன்டர்ஸ்டாண்டிங் வைஃபா இருக்கணும் மரகதம். பட் வெயிட்டும் பண்ணிருந்தா இன்னும் ஹேப்பியா ஆகிருப்பேன்" என்றான்.
'வெறுப்பேத்துவீங்கன்னு சொல்றேன் பேச்சுக்குனாலும் இல்லன்னு வருதா பாரு. ஏசிபிபிபி' என மனதிற்குள் மட்டுமே பல்லை கடித்தாள்.
"சரி தூங்கலாம். இப்டிலாம் அன்டைம்ல எப்பவும் பேசணும்னு எக்ஸ்பெக்ட் பண்ண கூடாது ஓ.கேவா"
"சரிங்க" என்றுவிட்டாள் உடனே, அவளுக்கு தான் அவனை இப்போது நன்கு பழகிவிட்டதே, அவனும் அவளின் உடனடி ஒப்புதலில் குறும்பு சிரிப்புடனே அழைப்பை துண்டித்தான்.
Last edited: