அத்தியாயம் 5
வேலையில் இருந்தவனை அழைப்பு மேல் அழைப்பு விடுத்து, "பொண்ணு உன்ன பாக்கணும்னு அங்க கோர்ட்லயே காத்துருக்குது மூத்தவனே, ஒரு அஞ்சு நிமிஷந்தேன் ஓரெட்டு போய் பாத்துட்டு வந்துடுய்யா" என வாசுகி நச்சரித்ததில் எரிச்சலோடு கிளம்பியவனுக்கு வரதன் எண்ணிலிருந்து வந்த மரகதவல்லியின் ஃபோட்டோ சாந்தபடுத்துவதாக இருந்தது.
மீண்டும் அவனே அன்னைக்கு அழைத்து, "பொண்ணுக்கு பேரென்ன?" என்றிருந்தான்.
"நம்ம மீனாட்சி ஆத்தா பேருதேன். மரகதவல்லி வீட்ல பாப்பான்னு கூப்பிடுதாக" என அவளை பற்றி இன்னும் நாலு வார்த்தை அவர் சொல்வதற்குள் வைத்தவன், பைக்கை எடுக்க வெளியேறவும், அவன் சொந்த வேலையாக செல்கிறான் என ஸ்டேஷனே புரிந்து கொண்டது.
"மரகதவல்லி" என மீண்டும் அவள் முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டவன், போனை சட்டை பையில் போட்டுவிட்டு கிக்கரை உதைத்து இதோ இங்கு அவள் முன் வந்து நிற்கிறான். அவள் என்னவென்றால் போலீசை கண்ட திருடன் போல் விழித்து நிற்கிறாள்.
மரகதவல்லி, 'நிஜமாவே நேர்ல வந்துட்டாரா? இல்ல கனவா?' என கண்ணை கசக்கிவிட்டு பார்த்தவள், அவன் அங்கேயே நிற்பது தெரியவும், 'ஆத்தி நெஜமே தான்' எச்சிலை விழுங்கி கொண்டு எழுந்து நின்றாள்.
"மரகதவல்லி தானா உன் ஃபுல் நேம்?" என அதட்டலாக தான் ஆரம்பித்தான் மகிழ். அவளின் கண்களின் வழி அவனால் வேறொருவளை அல்லவா பார்க்க முடிகிறது, மேலும் அவள் முகத்தில் வந்து போகும் பாவனையிலேயே தன்னை கண்டு அரண்டு நிற்கிறாள் எனவும் புரிந்து விட்டது அவனுக்கு.
'என்ன நம்ம பேரு கூட தெரியாத மாதிரி கேக்குறாரு?' என்ற யோசனையில், "ஙே" என அவள் இன்னமும் விழிக்க,
அவன் அம்மாவிற்கு அவள் முன் நின்றே அழைத்தான், அந்த பக்கம் அவர் எடுத்ததும், "ம்மா பொண்ணு பேர் மரகதவல்லி தானே?" என கேட்க.
"எத்தன தடவையா கேப்ப? ஆமாய்யா. பொண்ணு போட்டோவ அவுக அப்பாட்ட வாங்கி அனுப்ப சொன்னேனே வரதன அவேன் அனுப்பலயோ?" என்றவர், "வரதா மூத்தவனுக்கு பொண்ணு ஃபோட்டவ அனுப்பினியா இல்லியா நீ? கூடவே பேரையும் எழுதி அனுப்பு" என்றார் அங்குமிருந்தவனிடம்.
"ம்ச் ம்மா, ஃபோட்டோ வந்தது உன் இம்சை தாங்க முடியாம பொண்ண பாக்க நேர்ல வந்தா, அந்த பொண்ணு பேய கண்டமாதிரி முழிக்குறா" என்றான்.
"அது நீ போலீஸ் உடுப்புல போனனாளாயா இருக்கும்யா. இல்லனா மாப்ளயே நேர்ல வந்து நிக்கவும் பதட்டத்துல அப்டி நிக்குமாட்டும் இருக்கும். நீ மொல்லாமா பேசப்பு, படபடன்னு நிக்காத"
"இந்த பொண்ணுக்கு காது கேக்குமானே தெரியல, நா பேர கேட்டா கூட பதில் சொல்ல காணும். சத்தமா பேசியே பதில் சொல்லல நீ மொல்லமா வேற பேச சொல்ற?"
"ஏங்க சம்பந்தி உங்க புள்ள ரொம்ப பயந்த சுபாவமோ? என் மகன் போய் பேசியும் அமைதியா நிக்குதாம்" வாசுகி அங்கு யாரிடமோ பேசுவது கேட்க, இங்கு இவன் தன்னெதிரில் நின்றவளை தான் பார்த்திருந்தான்.
அவன் பேசுவதை கேட்டு இன்னும் விழி விரித்திருந்தாள், 'அப்போ இவருக்கு என்ன அடையாளம் தெரியலையா? என்ன மறந்துட்டாரா நிஜமாவே? நா மட்டுந்தான் இத்தன வருஷமா இவர பத்தி நினைச்சு பயந்துட்ருந்தேனா? இல்ல போட்டு வாங்க பாக்றாரா? மீனாட்சி எந்த ஆங்கில்ல இவரு என்ன அப்ரோச் பண்றாருன்னு காமிச்சு தாங்களேன் ப்ளீஸ். நானும் அலர்ட் ஆகிப்பேன்ல?'. என அவள் நினைத்துக் கொண்டிருக்கையில் தான் அவன் வாசுகியிடம் பேசுவதே அவள் கவனத்திற்கு வந்தது.
"காது கேக்குமான்னு தெரியல" என்றெல்லாம் அவன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு, 'இந்த நக்கல் மட்டும் இன்னும் குறையல போல' என எண்ணிக்கொண்டு மூக்கை சுருக்கி பார்த்திருந்தாள். அப்போது அவள் மேசை மேலிருந்த போன் அதிர்ந்து ஒளிரவும், அம்மா எண்ணை பார்த்து விட்டு எடுத்தாள். இனி வேறு வழியில்லை யாரை பார்க்க பயந்து வீட்டிற்கு செல்லாமல் நின்றாளோ அவனே அவள் முன் வந்து நின்றிருக்க, இனி அவர்களை தவிர்த்து என்ன பயன், என்ற முடிவில் அம்மா அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
"ஹலோ ம்மா" என்ற இவளை அதற்கு மேல் பேசவிடாமல், "அறிவுகெட்ட கழுத, நா அவ்வளவு சொல்லியும் அங்க உக்காந்துட்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டல்ல? நீ வீட்டுக்கு வா வச்சுக்குறேன். எல்லாரும் இங்க வந்து காத்துகடந்தா நீ அங்க உக்காந்துட்டு போனயும் எடுக்க மாட்டேனுட்டன்னு தான், மாப்ளைய அங்க அனுப்பிருக்கோம். அவர்ட்டையும் மூஞ்ச தூக்கிட்டு நிக்றியாம். என்ன முடிவுல இருக்க? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்றியா இல்ல நாங்க லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போகவா?" என அவர் பொரிந்து தள்ளவும்.
"லூசம்மா ஃபோன வை" என கடுப்பாகி வைத்துவிட்டாள்.
அவன் இன்னும் வாசுகியிடம் பேசிக் கொண்டு தானிருந்தான், "சம்பந்தியம்மாட்ட பேசிட்டேன் மூத்தவனே, பொண்ணுக்கு போனு போட போயிருக்காக. நீயும் பிள்ளைய பயப்படுத்தாம பேசு. வக்கீல் புள்ளனாலும் பொம்பள புள்ள பாத்தியா நீ டிவிலலாம் வாரத பாத்து பயந்துருக்குமாட்டு இருக்கும். நீ பொறுமையா பேசி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிபுடு. மத்தத நா பாத்துகிடுதேன்" என்றார். சம்மதம் அவளிடம் கேட்க சொல்லாமல் இவனை சொல்லிவிட சொல்கிறார் அவர்.
"சரிம்மா, பேசிபாக்றேன் எனக்கு ஒத்து வருமான்னு" என்றான் இவனும் கெத்தாக.
"அதெல்லாம் வரும். நீ என்னத்தையாது சொல்லி காரியத்த கெடுத்துறாத. அம்மா உன்னைய கெஞ்சி கேட்டுகிடுதேன், இந்த புள்ளைய எப்டியாது கட்டிகிடணும் நீயி" அதற்குள் அகிலா இவளிடம் பேசி முடித்து வாசுகி முன் சென்று விட்டார் போலும், "என்ன மதினி பேசிட்டீகளா? அப்பச்சரி இனி அவுக பேசிகட்டும்" என அவரிடம் சொல்லிவிட்டு, "எய்யா பாத்து பேசு. அம்மா வைக்கேன்" என்றுவிட்டார்.
"ம்ம்" என வைத்துவிட்டு இவளை பார்த்து இரு புருவமும் உயர்த்தி, "ஆர்டர் வந்துடுச்சா? இனினாலும் பேசலாமா?" என கேட்க,
பயம் தான், படபடப்பு தான், தொண்டை வரை வார்த்தைகள் அடைத்து கொண்டு நிற்க, தலையை மட்டும் அசைத்தாள்.
"ஜீவானந்தம் சார் ஜுனியர் தானே?" என்றதும் தான், 'ஆமால்ல இவர் தான் அன்னைக்கே நம்மள பாத்துட்டாருல்ல? கல்யாணம், மாப்ளன்னு குழப்பி விட்டதுல மைண்ட்ல ஒரு மண்ணும் தங்க மாட்டேங்குது' என அவளை அவளே மானாவாரியாக திட்டிக்கொண்டாள்.
"எதாது தப்பு பண்ணிட்டியா நீ?" என்றான் அவளையே கூர்ந்து பார்த்து. அதற்கு மட்டும் வேகமாக, "இல்ல இல்ல ஏன் அப்படி கேக்கறீங்க?" என்றாள்.
"அப்போ போலீஸ பாத்து இவ்வளவு நெர்வஸ் ஏன்? ரொம்ப பயப்டுற நீ?"
"இல்ல திடீருன்னு நீங்க வந்து நிக்கவும் பயந்துட்டேன்"
"ஓ அப்டி? ரைட். உன் ஃபுல் நேமே மரகதவல்லி தானான்னு கேட்டேனே?"
"ம்ம்"
"சரி ஏன் மேரேஜ் வேணாம் உனக்கு?" என அடுத்த கேள்வி கேட்க,
"வேணாமா?" என்றாள் அதிர்ந்து,
"உனக்கு வேணாம் தான?"
"நா அப்படி எப்ப சொன்னேன்?"
"பின்ன பொண்ணு பாக்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க, போன எடுக்காம நீ இங்க உக்காந்துருக்கியே? என்ன வேற பாக்கணும்னு சொன்னியாம்?யாரையும் லவ் பண்றியா?" அவளை கூர்மையாக அளந்தது அவன் பார்வை. அவளுக்கு திக் திக் நிமிடங்கள் தான். பதில் சொல்ல தாமதபடுத்தினால் கண்ணால் பார்த்தே உண்மையை வாங்கி விடுவான் போலும். அதற்காகவே பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
"இல்ல. உங்கள மேரேஜ் பண்ணிக்க பயமா இருந்தது அதான் வீட்டுக்கு போகல"
"ஏன் நா போலீஸ்காரன்றதாலயா?"
"அதும் ஒரு காரணம். இப்படியே இருந்து பழகிட்டேனா அதனால கல்யாணம்னு சட்டுன்னு ஏத்துக்க பயமா இருந்தது" சமாளிப்பாக கூறினாள்.
"அப்ப கன்னியாஸ்திரியா போ போறியா?"
"ஹான்?" என்றாள் அவன் கேட்பதை புரிய முயன்று.
"எப்படியும் யாரையாவது மேரேஜ் பண்ணிக்க தானே போற? இல்ல அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்னு காவி கட்டி போ போறியான்னு கேட்டேன்?"
"அதுக்கு?"
"அதுக்கு என்னையே பண்ணிக்கோ. எனக்கு நீ ஓ.கே தான். நாம கல்யாணம் பண்ணிக்லாம் ஓ.கேவா. ஒரு லாயர் மாறி நடந்துக்கணும். ஆட்ட களவாண்ட திருடி மாறி நடக்க கூடாது புரியுதா?"
கோவம் வந்தது தான் ஆனாலும் பல்லை கடித்து பொருத்து தலையை எல்லா பக்கமும் உருட்ட, "வேறெதுவும் சொல்லணுமா?" என்றான். அவள் இல்லை என வேகமாக தலை அசைக்க, "எனக்கு சொல்லணும். சொல்லட்டா?" அவன் கேள்வியே அவளை நடுங்கச் செய்தது.
"என்ன சொல்லணும்?" என்றாள் பயத்தை காட்டாமல், ஆனால் அனைத்தையும் அவள் கண்ணில் படித்தான் அவன்.
"எனக்கு ஒரு லவ்வர் இருந்தா, அவ பேர் மந்தாகினி. எட்டு வருஷமாச்சு ப்ரேக்கப் ஆகி. இப்ப அந்த பொண்ணு சீன்லயே இல்லனாலும் உங்கிட்ட சொல்லிடலாம்னு தோணுச்சு. அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. பட் எனக்கு பாஸ்ட் உண்டு அது உனக்கு ஓ.கே தானே?" ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் முகத்தை தான் ஆராய்ந்தான். அவள் கண்கள் அவனை வசமிழக்க செய்து கொண்டிருந்தது.
'இல்லன்னு சொன்னா விட்ருவாறோ?' என நினைத்தாலும், "ஓகே தான்" என்றவள் குனிந்து மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். அவன் தெரிந்து அவளை பேச வைக்க முயல்கிறானா இல்லை உண்மையிலேயே தன்னை தெரியவில்லையா என்ற குழப்பத்தில் அவளால் எந்த பதிலையும் வாய்விட்டு கூற முடியவில்லை.
"உனக்கு அப்படி எதுவும் இல்லையா?"
நிமிரவே இல்லை அவள், குனிந்து அழுத்தமாக நின்று, "இல்ல" என தலையையும் ஆட்டி கூறிவிட்டாள்.
"குட். மேரேஜ்கு ரெடி ஆகிடுவ தான?"
இப்போது நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், "என்ன பிடிச்சுருக்கா உங்களுக்கு?" என்றாள் குழப்பத்துடன்.
"எஸ்" என்றவன் குனிந்து மேசையை கடந்து அவள் முகமருகே வந்தவன், "அன்னைக்கு க்ரீன் சேரீல பாத்தப்பவே பிடிச்சது, இப்ப இவ்ளோ கிட்டத்துல பாக்றப்போ இந்த கண்கள ரொம்ப பிடிச்சுருக்கு. இன்னும் பல எக்ஸ்ப்ரசன்ஸ இந்த ஐஸ் எப்டி காட்டும்னு பாக்கணும்னு இருக்கு. பாக்கலாம் சீக்கிரமே" என்றவன் பின்னால் நகர்ந்து நன்கு நிமிர்ந்து நின்று, "பை" என்க, அதிர்ந்து நின்றவளுக்கு தான் மொழி மறந்துவிட்டிருந்தது.
அவன் கிளம்ப போகையில் தான் உள்ளே வந்தாள் வைஷ்ணவி, அவளும் இவனை கண்டு அரண்டு விழிக்க, அவளையும் ஊடுருவும் பார்வை பார்த்தவன், அவ்வாறு பார்த்தவாறே கடந்து சென்றான்.
'மரகதவல்லி அதிர்ந்து நின்றதிலிருந்த அர்த்தம் அவனுக்கு புரிந்திருந்தது, ஆனால் வைஷ்ணவியும் அதே போல் ஏன் அதிர்ந்து நிற்க வேண்டும்?' யோசனையோடு வந்து வண்டியை கிளப்பிச் சென்று விட்டான். அவன் செல்வதை அலுவலக வாசல் வந்து இரு பெண்களுமே பார்த்து நின்றனர்.
வேலையில் இருந்தவனை அழைப்பு மேல் அழைப்பு விடுத்து, "பொண்ணு உன்ன பாக்கணும்னு அங்க கோர்ட்லயே காத்துருக்குது மூத்தவனே, ஒரு அஞ்சு நிமிஷந்தேன் ஓரெட்டு போய் பாத்துட்டு வந்துடுய்யா" என வாசுகி நச்சரித்ததில் எரிச்சலோடு கிளம்பியவனுக்கு வரதன் எண்ணிலிருந்து வந்த மரகதவல்லியின் ஃபோட்டோ சாந்தபடுத்துவதாக இருந்தது.
மீண்டும் அவனே அன்னைக்கு அழைத்து, "பொண்ணுக்கு பேரென்ன?" என்றிருந்தான்.
"நம்ம மீனாட்சி ஆத்தா பேருதேன். மரகதவல்லி வீட்ல பாப்பான்னு கூப்பிடுதாக" என அவளை பற்றி இன்னும் நாலு வார்த்தை அவர் சொல்வதற்குள் வைத்தவன், பைக்கை எடுக்க வெளியேறவும், அவன் சொந்த வேலையாக செல்கிறான் என ஸ்டேஷனே புரிந்து கொண்டது.
"மரகதவல்லி" என மீண்டும் அவள் முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டவன், போனை சட்டை பையில் போட்டுவிட்டு கிக்கரை உதைத்து இதோ இங்கு அவள் முன் வந்து நிற்கிறான். அவள் என்னவென்றால் போலீசை கண்ட திருடன் போல் விழித்து நிற்கிறாள்.
மரகதவல்லி, 'நிஜமாவே நேர்ல வந்துட்டாரா? இல்ல கனவா?' என கண்ணை கசக்கிவிட்டு பார்த்தவள், அவன் அங்கேயே நிற்பது தெரியவும், 'ஆத்தி நெஜமே தான்' எச்சிலை விழுங்கி கொண்டு எழுந்து நின்றாள்.
"மரகதவல்லி தானா உன் ஃபுல் நேம்?" என அதட்டலாக தான் ஆரம்பித்தான் மகிழ். அவளின் கண்களின் வழி அவனால் வேறொருவளை அல்லவா பார்க்க முடிகிறது, மேலும் அவள் முகத்தில் வந்து போகும் பாவனையிலேயே தன்னை கண்டு அரண்டு நிற்கிறாள் எனவும் புரிந்து விட்டது அவனுக்கு.
'என்ன நம்ம பேரு கூட தெரியாத மாதிரி கேக்குறாரு?' என்ற யோசனையில், "ஙே" என அவள் இன்னமும் விழிக்க,
அவன் அம்மாவிற்கு அவள் முன் நின்றே அழைத்தான், அந்த பக்கம் அவர் எடுத்ததும், "ம்மா பொண்ணு பேர் மரகதவல்லி தானே?" என கேட்க.
"எத்தன தடவையா கேப்ப? ஆமாய்யா. பொண்ணு போட்டோவ அவுக அப்பாட்ட வாங்கி அனுப்ப சொன்னேனே வரதன அவேன் அனுப்பலயோ?" என்றவர், "வரதா மூத்தவனுக்கு பொண்ணு ஃபோட்டவ அனுப்பினியா இல்லியா நீ? கூடவே பேரையும் எழுதி அனுப்பு" என்றார் அங்குமிருந்தவனிடம்.
"ம்ச் ம்மா, ஃபோட்டோ வந்தது உன் இம்சை தாங்க முடியாம பொண்ண பாக்க நேர்ல வந்தா, அந்த பொண்ணு பேய கண்டமாதிரி முழிக்குறா" என்றான்.
"அது நீ போலீஸ் உடுப்புல போனனாளாயா இருக்கும்யா. இல்லனா மாப்ளயே நேர்ல வந்து நிக்கவும் பதட்டத்துல அப்டி நிக்குமாட்டும் இருக்கும். நீ மொல்லாமா பேசப்பு, படபடன்னு நிக்காத"
"இந்த பொண்ணுக்கு காது கேக்குமானே தெரியல, நா பேர கேட்டா கூட பதில் சொல்ல காணும். சத்தமா பேசியே பதில் சொல்லல நீ மொல்லமா வேற பேச சொல்ற?"
"ஏங்க சம்பந்தி உங்க புள்ள ரொம்ப பயந்த சுபாவமோ? என் மகன் போய் பேசியும் அமைதியா நிக்குதாம்" வாசுகி அங்கு யாரிடமோ பேசுவது கேட்க, இங்கு இவன் தன்னெதிரில் நின்றவளை தான் பார்த்திருந்தான்.
அவன் பேசுவதை கேட்டு இன்னும் விழி விரித்திருந்தாள், 'அப்போ இவருக்கு என்ன அடையாளம் தெரியலையா? என்ன மறந்துட்டாரா நிஜமாவே? நா மட்டுந்தான் இத்தன வருஷமா இவர பத்தி நினைச்சு பயந்துட்ருந்தேனா? இல்ல போட்டு வாங்க பாக்றாரா? மீனாட்சி எந்த ஆங்கில்ல இவரு என்ன அப்ரோச் பண்றாருன்னு காமிச்சு தாங்களேன் ப்ளீஸ். நானும் அலர்ட் ஆகிப்பேன்ல?'. என அவள் நினைத்துக் கொண்டிருக்கையில் தான் அவன் வாசுகியிடம் பேசுவதே அவள் கவனத்திற்கு வந்தது.
"காது கேக்குமான்னு தெரியல" என்றெல்லாம் அவன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு, 'இந்த நக்கல் மட்டும் இன்னும் குறையல போல' என எண்ணிக்கொண்டு மூக்கை சுருக்கி பார்த்திருந்தாள். அப்போது அவள் மேசை மேலிருந்த போன் அதிர்ந்து ஒளிரவும், அம்மா எண்ணை பார்த்து விட்டு எடுத்தாள். இனி வேறு வழியில்லை யாரை பார்க்க பயந்து வீட்டிற்கு செல்லாமல் நின்றாளோ அவனே அவள் முன் வந்து நின்றிருக்க, இனி அவர்களை தவிர்த்து என்ன பயன், என்ற முடிவில் அம்மா அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
"ஹலோ ம்மா" என்ற இவளை அதற்கு மேல் பேசவிடாமல், "அறிவுகெட்ட கழுத, நா அவ்வளவு சொல்லியும் அங்க உக்காந்துட்டு அழிச்சாட்டியம் பண்ணிட்டல்ல? நீ வீட்டுக்கு வா வச்சுக்குறேன். எல்லாரும் இங்க வந்து காத்துகடந்தா நீ அங்க உக்காந்துட்டு போனயும் எடுக்க மாட்டேனுட்டன்னு தான், மாப்ளைய அங்க அனுப்பிருக்கோம். அவர்ட்டையும் மூஞ்ச தூக்கிட்டு நிக்றியாம். என்ன முடிவுல இருக்க? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்றியா இல்ல நாங்க லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போகவா?" என அவர் பொரிந்து தள்ளவும்.
"லூசம்மா ஃபோன வை" என கடுப்பாகி வைத்துவிட்டாள்.
அவன் இன்னும் வாசுகியிடம் பேசிக் கொண்டு தானிருந்தான், "சம்பந்தியம்மாட்ட பேசிட்டேன் மூத்தவனே, பொண்ணுக்கு போனு போட போயிருக்காக. நீயும் பிள்ளைய பயப்படுத்தாம பேசு. வக்கீல் புள்ளனாலும் பொம்பள புள்ள பாத்தியா நீ டிவிலலாம் வாரத பாத்து பயந்துருக்குமாட்டு இருக்கும். நீ பொறுமையா பேசி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிபுடு. மத்தத நா பாத்துகிடுதேன்" என்றார். சம்மதம் அவளிடம் கேட்க சொல்லாமல் இவனை சொல்லிவிட சொல்கிறார் அவர்.
"சரிம்மா, பேசிபாக்றேன் எனக்கு ஒத்து வருமான்னு" என்றான் இவனும் கெத்தாக.
"அதெல்லாம் வரும். நீ என்னத்தையாது சொல்லி காரியத்த கெடுத்துறாத. அம்மா உன்னைய கெஞ்சி கேட்டுகிடுதேன், இந்த புள்ளைய எப்டியாது கட்டிகிடணும் நீயி" அதற்குள் அகிலா இவளிடம் பேசி முடித்து வாசுகி முன் சென்று விட்டார் போலும், "என்ன மதினி பேசிட்டீகளா? அப்பச்சரி இனி அவுக பேசிகட்டும்" என அவரிடம் சொல்லிவிட்டு, "எய்யா பாத்து பேசு. அம்மா வைக்கேன்" என்றுவிட்டார்.
"ம்ம்" என வைத்துவிட்டு இவளை பார்த்து இரு புருவமும் உயர்த்தி, "ஆர்டர் வந்துடுச்சா? இனினாலும் பேசலாமா?" என கேட்க,
பயம் தான், படபடப்பு தான், தொண்டை வரை வார்த்தைகள் அடைத்து கொண்டு நிற்க, தலையை மட்டும் அசைத்தாள்.
"ஜீவானந்தம் சார் ஜுனியர் தானே?" என்றதும் தான், 'ஆமால்ல இவர் தான் அன்னைக்கே நம்மள பாத்துட்டாருல்ல? கல்யாணம், மாப்ளன்னு குழப்பி விட்டதுல மைண்ட்ல ஒரு மண்ணும் தங்க மாட்டேங்குது' என அவளை அவளே மானாவாரியாக திட்டிக்கொண்டாள்.
"எதாது தப்பு பண்ணிட்டியா நீ?" என்றான் அவளையே கூர்ந்து பார்த்து. அதற்கு மட்டும் வேகமாக, "இல்ல இல்ல ஏன் அப்படி கேக்கறீங்க?" என்றாள்.
"அப்போ போலீஸ பாத்து இவ்வளவு நெர்வஸ் ஏன்? ரொம்ப பயப்டுற நீ?"
"இல்ல திடீருன்னு நீங்க வந்து நிக்கவும் பயந்துட்டேன்"
"ஓ அப்டி? ரைட். உன் ஃபுல் நேமே மரகதவல்லி தானான்னு கேட்டேனே?"
"ம்ம்"
"சரி ஏன் மேரேஜ் வேணாம் உனக்கு?" என அடுத்த கேள்வி கேட்க,
"வேணாமா?" என்றாள் அதிர்ந்து,
"உனக்கு வேணாம் தான?"
"நா அப்படி எப்ப சொன்னேன்?"
"பின்ன பொண்ணு பாக்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க, போன எடுக்காம நீ இங்க உக்காந்துருக்கியே? என்ன வேற பாக்கணும்னு சொன்னியாம்?யாரையும் லவ் பண்றியா?" அவளை கூர்மையாக அளந்தது அவன் பார்வை. அவளுக்கு திக் திக் நிமிடங்கள் தான். பதில் சொல்ல தாமதபடுத்தினால் கண்ணால் பார்த்தே உண்மையை வாங்கி விடுவான் போலும். அதற்காகவே பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
"இல்ல. உங்கள மேரேஜ் பண்ணிக்க பயமா இருந்தது அதான் வீட்டுக்கு போகல"
"ஏன் நா போலீஸ்காரன்றதாலயா?"
"அதும் ஒரு காரணம். இப்படியே இருந்து பழகிட்டேனா அதனால கல்யாணம்னு சட்டுன்னு ஏத்துக்க பயமா இருந்தது" சமாளிப்பாக கூறினாள்.
"அப்ப கன்னியாஸ்திரியா போ போறியா?"
"ஹான்?" என்றாள் அவன் கேட்பதை புரிய முயன்று.
"எப்படியும் யாரையாவது மேரேஜ் பண்ணிக்க தானே போற? இல்ல அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்னு காவி கட்டி போ போறியான்னு கேட்டேன்?"
"அதுக்கு?"
"அதுக்கு என்னையே பண்ணிக்கோ. எனக்கு நீ ஓ.கே தான். நாம கல்யாணம் பண்ணிக்லாம் ஓ.கேவா. ஒரு லாயர் மாறி நடந்துக்கணும். ஆட்ட களவாண்ட திருடி மாறி நடக்க கூடாது புரியுதா?"
கோவம் வந்தது தான் ஆனாலும் பல்லை கடித்து பொருத்து தலையை எல்லா பக்கமும் உருட்ட, "வேறெதுவும் சொல்லணுமா?" என்றான். அவள் இல்லை என வேகமாக தலை அசைக்க, "எனக்கு சொல்லணும். சொல்லட்டா?" அவன் கேள்வியே அவளை நடுங்கச் செய்தது.
"என்ன சொல்லணும்?" என்றாள் பயத்தை காட்டாமல், ஆனால் அனைத்தையும் அவள் கண்ணில் படித்தான் அவன்.
"எனக்கு ஒரு லவ்வர் இருந்தா, அவ பேர் மந்தாகினி. எட்டு வருஷமாச்சு ப்ரேக்கப் ஆகி. இப்ப அந்த பொண்ணு சீன்லயே இல்லனாலும் உங்கிட்ட சொல்லிடலாம்னு தோணுச்சு. அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது. பட் எனக்கு பாஸ்ட் உண்டு அது உனக்கு ஓ.கே தானே?" ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் முகத்தை தான் ஆராய்ந்தான். அவள் கண்கள் அவனை வசமிழக்க செய்து கொண்டிருந்தது.
'இல்லன்னு சொன்னா விட்ருவாறோ?' என நினைத்தாலும், "ஓகே தான்" என்றவள் குனிந்து மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். அவன் தெரிந்து அவளை பேச வைக்க முயல்கிறானா இல்லை உண்மையிலேயே தன்னை தெரியவில்லையா என்ற குழப்பத்தில் அவளால் எந்த பதிலையும் வாய்விட்டு கூற முடியவில்லை.
"உனக்கு அப்படி எதுவும் இல்லையா?"
நிமிரவே இல்லை அவள், குனிந்து அழுத்தமாக நின்று, "இல்ல" என தலையையும் ஆட்டி கூறிவிட்டாள்.
"குட். மேரேஜ்கு ரெடி ஆகிடுவ தான?"
இப்போது நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், "என்ன பிடிச்சுருக்கா உங்களுக்கு?" என்றாள் குழப்பத்துடன்.
"எஸ்" என்றவன் குனிந்து மேசையை கடந்து அவள் முகமருகே வந்தவன், "அன்னைக்கு க்ரீன் சேரீல பாத்தப்பவே பிடிச்சது, இப்ப இவ்ளோ கிட்டத்துல பாக்றப்போ இந்த கண்கள ரொம்ப பிடிச்சுருக்கு. இன்னும் பல எக்ஸ்ப்ரசன்ஸ இந்த ஐஸ் எப்டி காட்டும்னு பாக்கணும்னு இருக்கு. பாக்கலாம் சீக்கிரமே" என்றவன் பின்னால் நகர்ந்து நன்கு நிமிர்ந்து நின்று, "பை" என்க, அதிர்ந்து நின்றவளுக்கு தான் மொழி மறந்துவிட்டிருந்தது.
அவன் கிளம்ப போகையில் தான் உள்ளே வந்தாள் வைஷ்ணவி, அவளும் இவனை கண்டு அரண்டு விழிக்க, அவளையும் ஊடுருவும் பார்வை பார்த்தவன், அவ்வாறு பார்த்தவாறே கடந்து சென்றான்.
'மரகதவல்லி அதிர்ந்து நின்றதிலிருந்த அர்த்தம் அவனுக்கு புரிந்திருந்தது, ஆனால் வைஷ்ணவியும் அதே போல் ஏன் அதிர்ந்து நிற்க வேண்டும்?' யோசனையோடு வந்து வண்டியை கிளப்பிச் சென்று விட்டான். அவன் செல்வதை அலுவலக வாசல் வந்து இரு பெண்களுமே பார்த்து நின்றனர்.
Last edited: