அத்தியாயம் 10
அங்கு மரகதவல்லி அவனிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்து விட்டு, 'இப்ப போறதா வேணாமா?' என யோசனையில் அமர்ந்திருக்க, அவனிடமிருந்து சாப்பிடும் சுயமி வந்தது.
"சாப்ட்டு கூப்பிட வர்றீங்களா? இல்ல நா கோவிலுக்கு கிளம்பி போய் வெய்ட் பண்ணவா?" அவளே சமாதானம் செய்யும் பொருட்டு கேட்க,
"அப்ப இங்க வரமாட்ட?" என்றான் வாய்ஸ் மெசேஜில்.
"அதான் சாப்பிடுறீங்களே பின்ன என்னதுக்கு நா அங்க வரணும்?" என்றனுப்பினாள். அவன் அவளை தானே சாப்பாடு வாங்கி வர சொல்லியிருந்தான் அதனால் அப்படி அனுப்பினாள்.
"அப்ப உன்மையாவே உன்ன சாப்ட தான் கூப்பிடுறேன்னு நினச்சுட்டியா?" என்றவன் பதிலில் போனை கொண்டே நங்கு நங்கென தலையில் தட்டிக் கொண்டாள்.
'உனக்கு பேச தெரியலையா இல்ல அவருக்கு பேச தெரியலையாடி? ஹிண்ட் குடுத்துட்டே இருப்பியா நீ?' அவளை அவளே திட்டிக் கொண்டிருக்க,
"பாதில ஓடித்தான் பழக்கமா உனக்கு?" என்றான் அடுத்த மெசேஜாக.
'பழசை கேட்கிறானோ? சாப்பிடும் போதும் வாய பாரு' என நினைத்தவள், "நீங்க பேசினதுக்கு என்னைய என்ன பதில் சொல்ல சொல்றீங்க?" என அனுப்பினாள்.
"சாப்பிடுங்க உங்களுக்கு இல்லாததான்னு கேக்கலாம், இல்ல இப்ப முடியாது எல்லாம் கல்யாணதுக்கு அப்றந்தான்னு வெக்கப்படலாம், எதும் சொல்லாம இருந்தா நா என்னுன்னு நினைக்குறது"
"வாய் வாய் என்ன வாய் இவருக்கு, இந்த வாய்தான் வலிக்குமா வலிக்காதா? என்னன்னு நா இவர சமாளிக்க போறேன்?" என புலம்பி, "நீங்க கிளம்பி வாங்க நா கோர்ட் வாசல்ல வெயிட் பண்றேன்" என பதிலை அடித்து அனுப்பிவிட்டு நிமிர, மற்ற மூவரும் இவளைத்தான் பார்த்திருந்தனர்.
"என்ன பார்வை?" என்றாள் அவர்களை முறைத்துப் பார்த்து.
"பொதுவா பொண்ணுங்க தானே புருஷன, பாய் ஃப்ரெண்ட புலம்ப விடுவாங்க இங்க என்ன ஏசிபி உன்ன புலம்ப விட்டுட்டாரு?" என்றான் மதன்.
"ஏசிபி ரொம்ப ஸ்டிரிக்ட்டோ என்னவோ. வக்கீல் மேடத்த எப்டி லாக் பண்ணணும்னு தெரிஞ்சுருக்குமா இருக்கும். அதான் புலம்ப விட்டு வேடிக்கை பாக்றாரு" என்றாள் வைஷ்ணவி.
"ஹே எங்களுக்கு எப்ப இன்ட்ரோ குடுக்க போற? ட்ரீட் கண்டிப்பா வேணும்" என்றான் தர்ஷன்.
"நானே அந்த மனுஷன எப்டி சமாளிக்கன்னு முழிபிதுங்கி போய் உக்காந்துருக்கேன் நக்கலா தெரியுதா உங்களுக்கு?"
"இத்தன நாள் உங்கப்பாவ சமாளிக்க முடியாதுன்ன இப்ப ஏசிபிய சொல்ற, உங்கப்பா அவர போலவே மாப்பிள்ளையையும் பாத்துட்டாரா?" என்ற மதனிற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை, இவள் தான் அடித்துவிட்ட பொய்க்கெல்லாம் அந்த அப்பாவி தகப்பனை காரணியாக்கியிருந்தாளே! இவளை அல்லவா அவர்கள் சமாளிக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த ஏசிபி அப்படியில்லையே, விடாகண்டன் ஆயிற்றே, தலையை தாங்கி அமர்ந்து விட்டவளை புரியாமல் பார்த்தனர் மற்ற மூவரும்.
அவள் அலைபேசி அடிக்க துவங்கவும் எடுத்துப் பார்த்தாள். அவன்தான், உடனே எடுத்தாள்.
"மரகதவல்லி என்ன பண்ற?"
"வந்துட்டீங்களா?"
"அங்க தான் வந்துட்ருக்கேன், வெளில வா நீ"
"சரி வரேன், நீங்க வாங்க"
"நா வர்ற வர பேசிட்டு இருடி"
"பைக் ஓட்டும் போது ஃபோன் பேச கூடாதுங்க. ரூல்ஸ் நீங்களே ப்ரேக் பண்ணாதீங்க, நா கேட்கிட்ட நிக்றேன் வாங்க" என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்க,
"என் பழைய காதலி மந்தாகினிட்ட இவ்வளவு அக்கறை இருக்காது தெரியுமா?" என்றதும், அவளுக்கு கண்கள் கலங்க துவங்கியது, அதற்குள் அவள் அம்மாவிடமிருந்து அழைப்பு வர,
"அம்மா கூப்பிடுறாங்கங்க, நா அவங்கட்டயும் சொல்லிட்டு கிளம்பணும் வைக்கிறேன்" என வைத்து விட்டாள். அவள் கலங்கிய குரலைக் கேட்டு திருப்திபட்டுக் கொண்டான் அந்த காவல்காரன்.
அவளும் தன்னைத் திடப்படுத்தி கொண்டு எழ, "அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனா இப்பவே உன் வீட்ல இல்ல அவர்ட்ட கூட பேசிடு மேகி" என வைஷ்ணவி அவள் தோளைத் தொட,
"என்னால அவர தவிர வேற யாரையும் இனி என் லைஃப்குள்ள கொண்டு வர முடியாது வைஷ்" என சிரிக்க,
"அப்றம் ஏன்டி அழுற மென்டல்" என்றாள் வைஷு கடுப்புடன்.
"அது அவர் பேச்சுக்கு பதில் பேச முடியாதனால வருதுடி"
"பேசி தொலையேன் ஏன் கடிச்சா திண்ணிடுவாரு"
"ம்ம் முழுசா முழுங்கிடுவாரு" என சைகையால் சொல்லிக் கண்ணடித்து கைபையுடன் கிளம்ப, மீண்டும் அழைத்தார் அகிலா. திறந்த வாய் மூடாமல் பார்த்து நின்றாள் வைஷ்ணவி.
"என்னம்மா சொல்லு"
"என்ன சொல்லு. உன் மாமியார் சொல்லுறாங்க, பொண்ண கோவிலுக்கு பையனோட வரசொல்லிருக்கேன்னு. நீ கேட்டியாடி போட்டுமான்னு?"
"போயிட்டு வீட்டுக்கு வந்து சொல்லிருப்பேன்மா"
"செஞ்சுட்டு தான் சொல்லுவியோ?"
"இதுவரை அப்டிதானம்மா?"
"இனி அப்டி இருக்க கூடாது அத மொத பழகு. எதுனாலும் உன் மாமியார்ட்ட வீட்டுக்காரர்ட்டன்னு சொல்லிட்டு தான் செய்யணும்"
"ம்மா நீயும் உன் பங்குக்கு படுத்தாதம்மா"
"நா சொல்றத தான் கேக்க மாட்ட, அவங்க சொல்றதையும் எதுத்து பேசி காரியத்த கெடுத்துறாத. கல்யாணம் முடியுற வர கம்முன்னு இருக்கணும். நல்ல புள்ளையா போனமா வந்தமான்னு இருக்கணும்"
"ஏன் கல்யாணத்துக்கு அப்றம் நா பேசினா பரவால்லையா?"
"அதுக்கப்புறம் அவங்களே தெரிஞ்சுப்பாங்க, அவங்களுக்கும் பழகிடும்" என்றார் உண்மையாகவே, இவளுக்கு தான் கடுப்பாகியிருந்தது.
"நிச்சயமா நீ என்ன தவுட்டுக்கு தாம்மா வாங்கிருக்க. வை போன நா வீட்டுக்கு வந்து பேசுறேன் உன்ட்ட" என கோபத்தோடு வைத்துவிட்டு வந்து வாசலில் நிற்க, மகிழும் வந்து நின்றான் சரியாக, அதும் அவளை இடிப்பதுபோல் வந்து வண்டியை அவள் முன் நிறுத்த, பதறி இரண்டடி அவள் தான் விலகி நிற்க வேண்டியிருந்தது.
"பயப்டாத மரகதம், உன் மேல வண்டி ஏத்திட்டு அப்றம் நா யார் மேல் ஏறுறது?" என்றதும் கண்ணை விரித்து அவனை முறைக்க,
"என்ன?" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி திமிராக.
"இப்ப என்ன கேட்டீங்க?"
"உன் மேல வண்டிய ஏத்திட்டா வண்டில யாரடி ஏத்துறது. சீக்கிரம் வா, கோவிலுக்கு போய்ட்டு நா ஸ்டேஷன் போணும்" என்றதும் அவள் குழப்பத்துடனே அவனைப் பார்த்தவாறு அவன் பின் ஏறி அமர்ந்தாள்.
"உன் ஸ்கூட்டிய என்ன செய்வ?"
"மதன் எடுத்துட்டு போயிடுவான்"
"அப்ப வீட்டுக்கு எப்டி போவ?"
"ஆட்டோ பிடிச்சு போயிடுறேன், இல்லனா அத்த கார்ல தானே வந்துருக்காங்க அவங்கள விட சொல்லிடுறேன்" அவள் அவனுக்கு வேலையிருப்பதாக சொன்னதால் சாதாரணமாகவே அதை சொல்ல,
"எனக்கு யாரையும் அப்டி பாதில விட்டு பழக்கம் இல்ல, சோ வீட்ல விட்டுட்டே போறேன்" என்றவனிடம் அடுத்து பேச முயலாமல் வாயை மூடிக்கொண்டாள்.
இருவரும் கோவிலுக்கு வந்திறங்க, பார்த்திருந்த மூன்று பெண்களும் வாயைப் பிளந்து விட்டனர் வெளிப்படையாகவே. முதல் முறையாக மகிழனை ஒரு பெண்ணுடன் பார்க்கும் அதிசயம் அவர்கள் முகத்திலேயே தெரிய, பல்லைக் கடித்தான், "காணாதத கண்டது கணக்கா மூணு பேரு பார்வையையும் பாரேன்" என முனங்கிக் கொண்டு தான் வண்டியை நிறுத்தினான், அவளும் பட்டென்று இறங்கி அவர்களுடன் சென்று நிற்க, மருமகள்கள் மூவரும் பேசத் துவங்கினர்.
"என்னம்மா பொண்ணு பாத்துருக்க நீ? வந்தாலே வான்னு நின்னு அடம்பிடிக்குறா. முடியாதுன்னா அழுறா. கிளம்பி குவாட்டரஸ் வந்துட்டா, நா அங்க இருக்கேன்னு நீதான் சொன்னியா? இப்படிலாம் பண்ணா எனக்கு பிடிக்காதுன்னு சொல்ல மாட்டியா? இதே லாஸ்ட்டா இருக்கணும் ஒவ்வொரு தடவையும் இப்டி பொறுமையா போயிட்ருக்க மாட்டேன் சொல்லிட்டேன். சீக்கிரம் வா எனக்கு ஸ்டேஷன் போகணும்" என்றவன் பேச்சைக் கேட்டு மொத்தமாக அதிர்ந்து தான் நின்றாள் மரகதவல்லி.
'கோர்த்து விடுறதுல மன்னனா இருக்காறே, இவங்களாம் என்னைய இப்ப என்ன நினைப்பாங்க' என பாவமாக விழித்தாள் மரகதவல்லி.
"டேய் புள்ளைக்கு பூ வாங்கி குடுக்கலையா? கல்யாணம் முடியுறவர தினமும் அவளுக்கு பூ வாங்கி குடுக்கணும் நீ, போய் பூ வாங்கட்டு வா மொத"
"ஏன் அதுக்கப்றம் நீங்க வாங்கி குடுத்துக்குறேன்றீங்களா?" என அவன் கடுப்பாக கேட்கவும்,
"இருக்கட்டும் அத்த நா நானே வாங்கிட்டு வரேன்" என மரகதவல்லி நகரப் போக,
"மரகதம் அதான் அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தாச்சுல்ல இந்த பூ வாங்கி குடுக்குறதுல என்ன எனக்கு பெரிய கஷ்டம்?" என சொல்லியே அவன் நகர, அவள் பெருமூச்சுடன் இவர்களைப் பார்க்க,
அவன் சென்றதை உறுதிப் படுத்திய வாசுகி, "என் சமத்து புள்ள, இப்படிதான் அவன வழிக்கு கொண்டு வரணும் சரியா. யாருக்கும் அடங்க மாட்டியான் கண்ணு எப்டியாது உன் கைக்குள்ள வச்சுக்கத்தா அவன. ஒண்டியா யாரும் அண்டாம எனக்கென்னன்னு ஆசபாசம் இல்லாம ஒரு வாழ்க்கை வாழுதியான் நீதேன் இனி அவேன நல்லா பாத்துகிடணும். உன் பொறுப்புதேன். எப்படியாவது அவன உன்ன லவ்வு பண்ண வச்சுபோடு கண்ணு" என்றதும் மறுபடியும் கண்ணை விரித்து நின்றாள்.
'அவர் ஒரு ரகம்னா அவர் குடும்பமும் ஒரு ரகம் போலயே' என்று தான் பார்த்திருந்தாள்.
"நீ ஒன்னும் கவலையேபடாத உனக்கு அவன ரொம்ப புடிச்சுருக்குன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. அதேன் விடாபிடியா நின்னு கூட்டியாந்துருக்க, அதேன் அவனையும் உன் பக்கம் வரவைக்க தினமும் பூ வாங்கி குடுக்க சொல்லிருக்கேன், அவன உன் பக்கம் விரட்டி விட நானும் என்னால ஆனதலாம் செய்றேன் கண்ணு" என அவள் கன்னம் பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவாறே போனில் யாருடனோ பேசியவாரு வந்தான்.
வந்தவன் அம்மா கையில் பூவை நீட்ட, "அவ கையில குடுடா" என்றதும், முறைத்துக் கொண்டே அவள் கையில் கொடுத்தான், 'என்ன நடிப்புடா சாமி' என நினைத்துக் கொண்டு தான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள், அதையும் பார்த்தே இருந்தான் அந்த மரகத கள்ளன்.
பின் எல்லாருமாக கோவிலினுள் செல்ல இவனைக் கண்டதும் கோவில் கமிட்டி ஆட்கள் ஓடிவந்து அழைக்க, அவர்களோடு மரியாதையாக ஓரிரு நிமிடங்கள் நின்று பேசியவன், அவர்களே அவனை ஸ்பெஷல் தரிசனத்தில் அழைத்துச் சென்று சாமி முன் நிறுத்தவும், குடும்பமாக மீனாட்சியை வணங்கி வெளி வந்தனர்.
மறுபடியும் அவனுக்கு அழைப்பு வர, "சொக்கு ஸ்பாட் போயிட்டீங்களா?" என பேசி செல்ல,
"ஆமா சார், காணாம போன மூணாவது பையன் தான், கொலை அதேபோல தான் நடந்துருக்கு"
"ரைட் மேல என்ன செய்யணுமோ செய்ங்க பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என வைத்தவன்,
"மரகதம் சீக்கிரம் வா" என வேகமாக வெளியேற,
"வீட்ல கொண்டு விட சொல்லு. பாத்து போய்ட்டு வா. உன்ன அவனோட சேத்து வைக்க வேண்டியது என் பொறுப்பு" என அவர் வாக்கு வேறு தர, மொத்தமாக தலையை உருட்டி வைத்து கிளம்பினாள்.
"எதுக்கு அப்டி சொன்னீங்க?" என்றாள் திரும்பி செல்லும் வழியில்.
"எப்டி மரகதம்?"
"நா அடம்பிடச்சு வந்தேன்னுலாம்?"
"பின்ன நா கூப்பிட்டும் வரலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?" அவனை அப்படியே ரெண்டு கொட்டு கொட்டும் வேகம் தான் ஆனாலும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளை அவள் வீட்டின் முன் இறக்கி விட்டவன் அப்படியே கிளம்பப் போக, "உள்ள வந்துட்டு போங்க" என்றாள்.
"கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தான் இங்க வரணும். அதுக்கு முன்ன வர்ற ஐடியா இல்ல எனக்கு. பாக்கலாம் பை மரகதம்" எனக் கிளம்பியவனைப் பார்க்க மாட்டான் என தெரிந்ததால் முடிந்த மட்டும் முறைத்தாள். ஆனால் அவன் அவளை கண்ணாடி வழி பார்த்துக் கொண்டே தான் சென்று மறைந்தான், அவன் உதட்டில் குறும்பு சிரிப்பு புதைந்து கிடந்தது.
அங்கு மரகதவல்லி அவனிடமிருந்து வந்த மெசேஜைப் பார்த்து விட்டு, 'இப்ப போறதா வேணாமா?' என யோசனையில் அமர்ந்திருக்க, அவனிடமிருந்து சாப்பிடும் சுயமி வந்தது.
"சாப்ட்டு கூப்பிட வர்றீங்களா? இல்ல நா கோவிலுக்கு கிளம்பி போய் வெய்ட் பண்ணவா?" அவளே சமாதானம் செய்யும் பொருட்டு கேட்க,
"அப்ப இங்க வரமாட்ட?" என்றான் வாய்ஸ் மெசேஜில்.
"அதான் சாப்பிடுறீங்களே பின்ன என்னதுக்கு நா அங்க வரணும்?" என்றனுப்பினாள். அவன் அவளை தானே சாப்பாடு வாங்கி வர சொல்லியிருந்தான் அதனால் அப்படி அனுப்பினாள்.
"அப்ப உன்மையாவே உன்ன சாப்ட தான் கூப்பிடுறேன்னு நினச்சுட்டியா?" என்றவன் பதிலில் போனை கொண்டே நங்கு நங்கென தலையில் தட்டிக் கொண்டாள்.
'உனக்கு பேச தெரியலையா இல்ல அவருக்கு பேச தெரியலையாடி? ஹிண்ட் குடுத்துட்டே இருப்பியா நீ?' அவளை அவளே திட்டிக் கொண்டிருக்க,
"பாதில ஓடித்தான் பழக்கமா உனக்கு?" என்றான் அடுத்த மெசேஜாக.
'பழசை கேட்கிறானோ? சாப்பிடும் போதும் வாய பாரு' என நினைத்தவள், "நீங்க பேசினதுக்கு என்னைய என்ன பதில் சொல்ல சொல்றீங்க?" என அனுப்பினாள்.
"சாப்பிடுங்க உங்களுக்கு இல்லாததான்னு கேக்கலாம், இல்ல இப்ப முடியாது எல்லாம் கல்யாணதுக்கு அப்றந்தான்னு வெக்கப்படலாம், எதும் சொல்லாம இருந்தா நா என்னுன்னு நினைக்குறது"
"வாய் வாய் என்ன வாய் இவருக்கு, இந்த வாய்தான் வலிக்குமா வலிக்காதா? என்னன்னு நா இவர சமாளிக்க போறேன்?" என புலம்பி, "நீங்க கிளம்பி வாங்க நா கோர்ட் வாசல்ல வெயிட் பண்றேன்" என பதிலை அடித்து அனுப்பிவிட்டு நிமிர, மற்ற மூவரும் இவளைத்தான் பார்த்திருந்தனர்.
"என்ன பார்வை?" என்றாள் அவர்களை முறைத்துப் பார்த்து.
"பொதுவா பொண்ணுங்க தானே புருஷன, பாய் ஃப்ரெண்ட புலம்ப விடுவாங்க இங்க என்ன ஏசிபி உன்ன புலம்ப விட்டுட்டாரு?" என்றான் மதன்.
"ஏசிபி ரொம்ப ஸ்டிரிக்ட்டோ என்னவோ. வக்கீல் மேடத்த எப்டி லாக் பண்ணணும்னு தெரிஞ்சுருக்குமா இருக்கும். அதான் புலம்ப விட்டு வேடிக்கை பாக்றாரு" என்றாள் வைஷ்ணவி.
"ஹே எங்களுக்கு எப்ப இன்ட்ரோ குடுக்க போற? ட்ரீட் கண்டிப்பா வேணும்" என்றான் தர்ஷன்.
"நானே அந்த மனுஷன எப்டி சமாளிக்கன்னு முழிபிதுங்கி போய் உக்காந்துருக்கேன் நக்கலா தெரியுதா உங்களுக்கு?"
"இத்தன நாள் உங்கப்பாவ சமாளிக்க முடியாதுன்ன இப்ப ஏசிபிய சொல்ற, உங்கப்பா அவர போலவே மாப்பிள்ளையையும் பாத்துட்டாரா?" என்ற மதனிற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை, இவள் தான் அடித்துவிட்ட பொய்க்கெல்லாம் அந்த அப்பாவி தகப்பனை காரணியாக்கியிருந்தாளே! இவளை அல்லவா அவர்கள் சமாளிக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த ஏசிபி அப்படியில்லையே, விடாகண்டன் ஆயிற்றே, தலையை தாங்கி அமர்ந்து விட்டவளை புரியாமல் பார்த்தனர் மற்ற மூவரும்.
அவள் அலைபேசி அடிக்க துவங்கவும் எடுத்துப் பார்த்தாள். அவன்தான், உடனே எடுத்தாள்.
"மரகதவல்லி என்ன பண்ற?"
"வந்துட்டீங்களா?"
"அங்க தான் வந்துட்ருக்கேன், வெளில வா நீ"
"சரி வரேன், நீங்க வாங்க"
"நா வர்ற வர பேசிட்டு இருடி"
"பைக் ஓட்டும் போது ஃபோன் பேச கூடாதுங்க. ரூல்ஸ் நீங்களே ப்ரேக் பண்ணாதீங்க, நா கேட்கிட்ட நிக்றேன் வாங்க" என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்க,
"என் பழைய காதலி மந்தாகினிட்ட இவ்வளவு அக்கறை இருக்காது தெரியுமா?" என்றதும், அவளுக்கு கண்கள் கலங்க துவங்கியது, அதற்குள் அவள் அம்மாவிடமிருந்து அழைப்பு வர,
"அம்மா கூப்பிடுறாங்கங்க, நா அவங்கட்டயும் சொல்லிட்டு கிளம்பணும் வைக்கிறேன்" என வைத்து விட்டாள். அவள் கலங்கிய குரலைக் கேட்டு திருப்திபட்டுக் கொண்டான் அந்த காவல்காரன்.
அவளும் தன்னைத் திடப்படுத்தி கொண்டு எழ, "அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லனா இப்பவே உன் வீட்ல இல்ல அவர்ட்ட கூட பேசிடு மேகி" என வைஷ்ணவி அவள் தோளைத் தொட,
"என்னால அவர தவிர வேற யாரையும் இனி என் லைஃப்குள்ள கொண்டு வர முடியாது வைஷ்" என சிரிக்க,
"அப்றம் ஏன்டி அழுற மென்டல்" என்றாள் வைஷு கடுப்புடன்.
"அது அவர் பேச்சுக்கு பதில் பேச முடியாதனால வருதுடி"
"பேசி தொலையேன் ஏன் கடிச்சா திண்ணிடுவாரு"
"ம்ம் முழுசா முழுங்கிடுவாரு" என சைகையால் சொல்லிக் கண்ணடித்து கைபையுடன் கிளம்ப, மீண்டும் அழைத்தார் அகிலா. திறந்த வாய் மூடாமல் பார்த்து நின்றாள் வைஷ்ணவி.
"என்னம்மா சொல்லு"
"என்ன சொல்லு. உன் மாமியார் சொல்லுறாங்க, பொண்ண கோவிலுக்கு பையனோட வரசொல்லிருக்கேன்னு. நீ கேட்டியாடி போட்டுமான்னு?"
"போயிட்டு வீட்டுக்கு வந்து சொல்லிருப்பேன்மா"
"செஞ்சுட்டு தான் சொல்லுவியோ?"
"இதுவரை அப்டிதானம்மா?"
"இனி அப்டி இருக்க கூடாது அத மொத பழகு. எதுனாலும் உன் மாமியார்ட்ட வீட்டுக்காரர்ட்டன்னு சொல்லிட்டு தான் செய்யணும்"
"ம்மா நீயும் உன் பங்குக்கு படுத்தாதம்மா"
"நா சொல்றத தான் கேக்க மாட்ட, அவங்க சொல்றதையும் எதுத்து பேசி காரியத்த கெடுத்துறாத. கல்யாணம் முடியுற வர கம்முன்னு இருக்கணும். நல்ல புள்ளையா போனமா வந்தமான்னு இருக்கணும்"
"ஏன் கல்யாணத்துக்கு அப்றம் நா பேசினா பரவால்லையா?"
"அதுக்கப்புறம் அவங்களே தெரிஞ்சுப்பாங்க, அவங்களுக்கும் பழகிடும்" என்றார் உண்மையாகவே, இவளுக்கு தான் கடுப்பாகியிருந்தது.
"நிச்சயமா நீ என்ன தவுட்டுக்கு தாம்மா வாங்கிருக்க. வை போன நா வீட்டுக்கு வந்து பேசுறேன் உன்ட்ட" என கோபத்தோடு வைத்துவிட்டு வந்து வாசலில் நிற்க, மகிழும் வந்து நின்றான் சரியாக, அதும் அவளை இடிப்பதுபோல் வந்து வண்டியை அவள் முன் நிறுத்த, பதறி இரண்டடி அவள் தான் விலகி நிற்க வேண்டியிருந்தது.
"பயப்டாத மரகதம், உன் மேல வண்டி ஏத்திட்டு அப்றம் நா யார் மேல் ஏறுறது?" என்றதும் கண்ணை விரித்து அவனை முறைக்க,
"என்ன?" என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி திமிராக.
"இப்ப என்ன கேட்டீங்க?"
"உன் மேல வண்டிய ஏத்திட்டா வண்டில யாரடி ஏத்துறது. சீக்கிரம் வா, கோவிலுக்கு போய்ட்டு நா ஸ்டேஷன் போணும்" என்றதும் அவள் குழப்பத்துடனே அவனைப் பார்த்தவாறு அவன் பின் ஏறி அமர்ந்தாள்.
"உன் ஸ்கூட்டிய என்ன செய்வ?"
"மதன் எடுத்துட்டு போயிடுவான்"
"அப்ப வீட்டுக்கு எப்டி போவ?"
"ஆட்டோ பிடிச்சு போயிடுறேன், இல்லனா அத்த கார்ல தானே வந்துருக்காங்க அவங்கள விட சொல்லிடுறேன்" அவள் அவனுக்கு வேலையிருப்பதாக சொன்னதால் சாதாரணமாகவே அதை சொல்ல,
"எனக்கு யாரையும் அப்டி பாதில விட்டு பழக்கம் இல்ல, சோ வீட்ல விட்டுட்டே போறேன்" என்றவனிடம் அடுத்து பேச முயலாமல் வாயை மூடிக்கொண்டாள்.
இருவரும் கோவிலுக்கு வந்திறங்க, பார்த்திருந்த மூன்று பெண்களும் வாயைப் பிளந்து விட்டனர் வெளிப்படையாகவே. முதல் முறையாக மகிழனை ஒரு பெண்ணுடன் பார்க்கும் அதிசயம் அவர்கள் முகத்திலேயே தெரிய, பல்லைக் கடித்தான், "காணாதத கண்டது கணக்கா மூணு பேரு பார்வையையும் பாரேன்" என முனங்கிக் கொண்டு தான் வண்டியை நிறுத்தினான், அவளும் பட்டென்று இறங்கி அவர்களுடன் சென்று நிற்க, மருமகள்கள் மூவரும் பேசத் துவங்கினர்.
"என்னம்மா பொண்ணு பாத்துருக்க நீ? வந்தாலே வான்னு நின்னு அடம்பிடிக்குறா. முடியாதுன்னா அழுறா. கிளம்பி குவாட்டரஸ் வந்துட்டா, நா அங்க இருக்கேன்னு நீதான் சொன்னியா? இப்படிலாம் பண்ணா எனக்கு பிடிக்காதுன்னு சொல்ல மாட்டியா? இதே லாஸ்ட்டா இருக்கணும் ஒவ்வொரு தடவையும் இப்டி பொறுமையா போயிட்ருக்க மாட்டேன் சொல்லிட்டேன். சீக்கிரம் வா எனக்கு ஸ்டேஷன் போகணும்" என்றவன் பேச்சைக் கேட்டு மொத்தமாக அதிர்ந்து தான் நின்றாள் மரகதவல்லி.
'கோர்த்து விடுறதுல மன்னனா இருக்காறே, இவங்களாம் என்னைய இப்ப என்ன நினைப்பாங்க' என பாவமாக விழித்தாள் மரகதவல்லி.
"டேய் புள்ளைக்கு பூ வாங்கி குடுக்கலையா? கல்யாணம் முடியுறவர தினமும் அவளுக்கு பூ வாங்கி குடுக்கணும் நீ, போய் பூ வாங்கட்டு வா மொத"
"ஏன் அதுக்கப்றம் நீங்க வாங்கி குடுத்துக்குறேன்றீங்களா?" என அவன் கடுப்பாக கேட்கவும்,
"இருக்கட்டும் அத்த நா நானே வாங்கிட்டு வரேன்" என மரகதவல்லி நகரப் போக,
"மரகதம் அதான் அடம்பிடிச்சு கூட்டிட்டு வந்தாச்சுல்ல இந்த பூ வாங்கி குடுக்குறதுல என்ன எனக்கு பெரிய கஷ்டம்?" என சொல்லியே அவன் நகர, அவள் பெருமூச்சுடன் இவர்களைப் பார்க்க,
அவன் சென்றதை உறுதிப் படுத்திய வாசுகி, "என் சமத்து புள்ள, இப்படிதான் அவன வழிக்கு கொண்டு வரணும் சரியா. யாருக்கும் அடங்க மாட்டியான் கண்ணு எப்டியாது உன் கைக்குள்ள வச்சுக்கத்தா அவன. ஒண்டியா யாரும் அண்டாம எனக்கென்னன்னு ஆசபாசம் இல்லாம ஒரு வாழ்க்கை வாழுதியான் நீதேன் இனி அவேன நல்லா பாத்துகிடணும். உன் பொறுப்புதேன். எப்படியாவது அவன உன்ன லவ்வு பண்ண வச்சுபோடு கண்ணு" என்றதும் மறுபடியும் கண்ணை விரித்து நின்றாள்.
'அவர் ஒரு ரகம்னா அவர் குடும்பமும் ஒரு ரகம் போலயே' என்று தான் பார்த்திருந்தாள்.
"நீ ஒன்னும் கவலையேபடாத உனக்கு அவன ரொம்ப புடிச்சுருக்குன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. அதேன் விடாபிடியா நின்னு கூட்டியாந்துருக்க, அதேன் அவனையும் உன் பக்கம் வரவைக்க தினமும் பூ வாங்கி குடுக்க சொல்லிருக்கேன், அவன உன் பக்கம் விரட்டி விட நானும் என்னால ஆனதலாம் செய்றேன் கண்ணு" என அவள் கன்னம் பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவாறே போனில் யாருடனோ பேசியவாரு வந்தான்.
வந்தவன் அம்மா கையில் பூவை நீட்ட, "அவ கையில குடுடா" என்றதும், முறைத்துக் கொண்டே அவள் கையில் கொடுத்தான், 'என்ன நடிப்புடா சாமி' என நினைத்துக் கொண்டு தான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள், அதையும் பார்த்தே இருந்தான் அந்த மரகத கள்ளன்.
பின் எல்லாருமாக கோவிலினுள் செல்ல இவனைக் கண்டதும் கோவில் கமிட்டி ஆட்கள் ஓடிவந்து அழைக்க, அவர்களோடு மரியாதையாக ஓரிரு நிமிடங்கள் நின்று பேசியவன், அவர்களே அவனை ஸ்பெஷல் தரிசனத்தில் அழைத்துச் சென்று சாமி முன் நிறுத்தவும், குடும்பமாக மீனாட்சியை வணங்கி வெளி வந்தனர்.
மறுபடியும் அவனுக்கு அழைப்பு வர, "சொக்கு ஸ்பாட் போயிட்டீங்களா?" என பேசி செல்ல,
"ஆமா சார், காணாம போன மூணாவது பையன் தான், கொலை அதேபோல தான் நடந்துருக்கு"
"ரைட் மேல என்ன செய்யணுமோ செய்ங்க பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என வைத்தவன்,
"மரகதம் சீக்கிரம் வா" என வேகமாக வெளியேற,
"வீட்ல கொண்டு விட சொல்லு. பாத்து போய்ட்டு வா. உன்ன அவனோட சேத்து வைக்க வேண்டியது என் பொறுப்பு" என அவர் வாக்கு வேறு தர, மொத்தமாக தலையை உருட்டி வைத்து கிளம்பினாள்.
"எதுக்கு அப்டி சொன்னீங்க?" என்றாள் திரும்பி செல்லும் வழியில்.
"எப்டி மரகதம்?"
"நா அடம்பிடச்சு வந்தேன்னுலாம்?"
"பின்ன நா கூப்பிட்டும் வரலன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?" அவனை அப்படியே ரெண்டு கொட்டு கொட்டும் வேகம் தான் ஆனாலும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளை அவள் வீட்டின் முன் இறக்கி விட்டவன் அப்படியே கிளம்பப் போக, "உள்ள வந்துட்டு போங்க" என்றாள்.
"கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு தான் இங்க வரணும். அதுக்கு முன்ன வர்ற ஐடியா இல்ல எனக்கு. பாக்கலாம் பை மரகதம்" எனக் கிளம்பியவனைப் பார்க்க மாட்டான் என தெரிந்ததால் முடிந்த மட்டும் முறைத்தாள். ஆனால் அவன் அவளை கண்ணாடி வழி பார்த்துக் கொண்டே தான் சென்று மறைந்தான், அவன் உதட்டில் குறும்பு சிரிப்பு புதைந்து கிடந்தது.
Last edited: