அத்தியாயம் 40
"உங்களுக்கு இதுல பங்கில்லையா மந்தாகினி?" என்றாள் இப்போது அவளிடம் திரும்பி,
மந்தாகினி திரும்பி வைஷ்ணவியை பார்க்க, அவள் இவள்புறம் திரும்பவே இல்லை, "அவங்கள ஏன் பாக்றீங்க? உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லணும். உண்மைய சொன்னதான் தண்டனைகள் குறையும், இல்லனா நிரபராதி கூட பாதிக்கப்படலாம். உங்க மேல தப்பில்லன்னா நீங்க தைரியமா பேசலாம் மந்தாகினி" என்றாள்,
ஏசிபி கையை நாடிக்கு கொடுத்து தாங்கியவாறு அவன் மரகதத்தை தான் பார்த்திருந்தான். அவனுக்கு உண்மை முழுவதும் தெரியும். அவனுக்கு தெரியும் என தெரிந்தும் அவனிடம் எதையும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் அவளே தான் அனைத்தையும் விசாரித்தாள். வைஷ்ணவி மந்தாகினி இருவரையும் தனி தனியே கடந்த பத்து நாட்களில் பார்த்து பேசியுமிருந்தாள். தெரிந்ததை அவனிடம் பகிர்ந்து கொள்ளவுமில்லை அவள்.
"நாந்தான் செஞ்சேன்னு ஒத்துகிட்டேன்ல அப்றமு அவள கேட்டு குழப்ப பாக்றீங்க? என் கூட பொறந்த தம்பி விஷ்ணு, என்னவிட பனிரெண்டு வயசு சின்னவன், அவன அதிகமா பாத்துகிட்டது நானு. எங்கம்மாக்கு லேட்டா பிறந்ததால அதிக இம்யூனிட்டி இல்லமாதான் பொறந்தான், லேசானாலும் ஃபீவர், கோல்டுன்னு படுத்துப்பான். ஃபீவர் இல்லாம ஒரு மாசத்த கடத்துனாலே எனக்கு அது பெரிய விஷயம். பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சுட்ருந்தவன, சித்தி இருக்காங்க அண்ணன் இருக்கான் பாத்துப்பான்னு இங்க மாத்துனது என் தப்பு தான். அப்றமு அவன் கொஞ்சம் ஸ்லிப்பாகுறான்னு தெரிஞ்சதுமாது அங்கிருந்து மாத்திருக்கணும், நா அதபத்தி யோசிச்சு முடிக்றதுக்குள்ளயே அவன் செத்து போயிட்டானே. கோவத்த யாருமேல காட்ட முடியும், அவன இப்டி சாவடிச்சவனுங்க இன்னும் எத்தனபேர இப்டி கொல்லுவானுங்களோ! இவனுங்களாமா நாளைக்கு நம்ம நாட்ட காப்பாத்த போறானுங்க? நா கொன்ன அஞ்சுபேரும் நாளைக்கு சையின்டாஸ்டாவா ஆகி வெளியவருவானுங்க? ரவுடி பொறுக்கி தீவிரவாதின்னு தான் ஆக போறானுங்க, அத்தோட போகாது கும்பல் கும்பலா உருவாக்குவானுங்க, இப்பவே அந்த ஸ்கூல்ல எத்தன பேருக்கு பழக்கி விட்ருக்காங்களோ தெரியல, அது கேஸாகுற வர போலீஸ் அத விசாரிக்க மாட்டாங்க, போலீஸ் அங்க எவனையாவது புடிச்சு கொண்டு நிறுத்துறவர கோர்ட்லயும் அத விசாரிக்க மாட்டாங்க. இதுதான் நம்ம சர்கிள், ஆனா பாதிக்க பட்டவங்க வேடிக்கை பாத்துட்டே இருக்கணுமா? அதான் கொன்னேன் அவனுங்க இந்த நாட்டுக்கு தேவையில்லன்னு நானே டிசைட் பண்ணி கொன்னேன்"
"என்ன சார் இப்படி பேசுறா பாத்துட்ருக்கீங்க, எங்கட்ட விடுங்க சார், என்ன செய்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம், நாங்க ஆச ஆசையா பெத்து வளர்ப்போமாம் இவ தேவையில்லன்னு கொல்லுவாளாம். உன்ன சும்மா விட்டேனா பாருடி. நீயெல்லாம் பொம்பளையா? கொஞ்சம் கூடவா இரக்கம் வரல. மென்டலா நீ? எம்புள்ளைய அப்படி கொதறி போட எப்டிறி மனசு வந்தது" என இறந்த பையன்களின் பெற்றோர் கொதித்து எழ, ஆளாளுக்கு கத்த துவங்க, "சைலன்ஸ்" என்றார் நீதிபதி.
"சோ நீங்க தான் கொன்னீங்க இல்லையா?" என்றாள் மறுபடியும்.
"ஆமா"
"எப்டி கொன்னீங்க?"
"என்ன அவனுங்களுக்கு நல்லா தெரியும். என்ட்ட மந்தாகினிட்ட நல்லா பேசுவானுங்க, அதவச்சு ஒவ்வொருதனையும் தனியா வரவச்சு, தூக்குனோம், எங்களுக்கு தெரிஞ்ச எங்க மாமாவோட கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி ஒன்னு இருக்கு, அங்க மெஷின் சத்தம் கேட்டுட்டே இருக்கனால யாருக்கும் சந்தேகம் வரல, அங்கவச்சு தான் கொல்லுவோம். முக்கியமா நா லாயர்ன்றதாலயும் அடிக்கடி அங்க போயிட்டு வருவேன்றதாலயும் யாரும் எதும் தப்பா யோசிக்கல, கடத்தி ஊருக்குள்ளயே சுத்திட்ருந்துட்டு இருட்டுற நேரத்துல தான் உள்ள போவோம், கொலை பண்ணி விடியுற நேரத்துல வெளில கொண்டு வந்துருவோம்"
"போவோம், வருவோம், செய்வோம்னு சேத்து சேத்து சொன்னீங்களே அது யாரெல்லாம்?" என்றாள் மரகதவல்லி.
பேசிக் கொண்டே வந்ததில் தனியாக செய்ததாக சொல்ல வேண்டியதை எப்படி செய்தார்களோ அப்படியே சொல்லியிருந்தாள் வைஷ்ணவி, மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டு, "எனக்கு ராமனும் ஹெல்ப் பண்ணுவான்"
"எல்லா கொலைக்கும் ஹெல்ப் பண்ணானா?"
"ஆமா" என்றாள் சற்று தடுமாற்றமாக,
"ஹெல்ப் மட்டுந்தான் பண்ணாணா? இல்ல கொலையே அவன்தான் பண்ணாணா? ஏன் கேட்குறேன்னா போஸ்ட்மார்ட்டம்ல நகக்கீரலோட அழுத்தம் ஒரு ஆணுக்குரியதுன்னு இருக்கு"
"அது யூகமா சொல்றது தானே? ஏன் ஒரு பெண்ணுக்கு ஆணுக்குரிய அழுத்தம் இருக்க கூடாதுன்னு இல்லையே?"
"இருக்கலாமே? வொய் நாட்? சரி எம்.எல்.ஏ விஜயம் அவரோட மருமகனுக்கு மந்தாகினி மேல லவ்வாமே? ப்ரபோஸ் பண்ணி ரிஜெக்ட்லாம் ஆச்சு இல்லையா மந்தாகினி?" என்றாள் அவளிடம்.
"ஆமா, என்னவிட சின்ன பையன், என் தம்பி கூட படிக்றவனுக்கு என் மேல லவ்வுன்னா நல்லா இல்லதானே? எனக்கு பிடிக்கல அதனால வேணாம்னு சொல்லிட்டேன்" என்றாள் மந்தாகினி, அதுதான் உண்மையும் என்பதால் திக்காமல் திணறாமல் சொல்லிவிட்டாள்.
"உடனே கேட்டுக்கிட்டானா அவன்? டார்ச்சர் எதும் பண்ணலையா?"
"நா எங்கம்மாட்ட சொல்லி கண்டுச்சுட்டேன்"
"உங்கம்மா சொன்னதும் கேட்டுகிட்டானா அவன்?"
"அது எனக்கு தெரியல ஆனா அடுத்து எங்கிட்ட வம்புக்கு வரல"
"ரைட். ஸ்டேஷன்ல இருந்த உங்க தம்பி இன்னைக்கு காலைல சூசைட் பண்ணிட்டானாம் தெரியுமா?" என்றதும் மந்தாகினி அதிர்ந்து கண்ணை விரித்தாள், வைஷ்ணவி திரும்பி ஏசிபியாக அமர்ந்திருந்தவனை மட்டுமே பார்த்தாள்.
ஒரு கையை சாய்வாக குடுத்து, நிமிர்ந்து அமர்ந்து அவர்கள் விசாரணையை கூர்ந்து கவனித்திருந்தவன், வைஷ்ணவி பார்வையில் அவளை இன்னும் கூர்மையாக பார்க்க, பட்டென்று திரும்பி கொண்டாள் அவள்.
"தெரியாதா?"
"இல்ல எங்களுக்கு யாரும் சொல்லல" என்ற மந்தாகினி அழுகையை அடக்கிக் கொண்டு அவள் தகப்பனை தான் பார்த்தாள், கண்ணீர் வற்ற அமர்ந்தார் அந்த மனிதர், அவ்வளவு தளர்ச்சி அவரிடம். வைஷ்ணவி அம்மா மட்டுமே குலுங்கி அழுது கொண்டிருந்தார்.
"நீங்க போலாம்" என்றவள், நீதிபதியிடம் திரும்பி, "இந்த கேஸை ஆய்வு செய்த போலீசாரை விசாரிக்க வேண்டும் மை லார்ட்" என்றதும், சொக்கலிங்கம் அவன் செல்வதா இல்லை பாண்டியன் செல்வானா என பார்த்திருக்க, அவன் சொக்கலிங்கத்திற்கே கண்ணை காட்ட, அவன் எழுந்து வர, "ஏசிபி சாரே வந்துருக்காரே, அவர் விளக்கம் குடுக்கட்டுமே?" என்றாள் மரகதம், குனிந்து எழுதி கொண்டிருந்த நீதிபதியே சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தார், அவளை பார்த்தவாறே எழுந்து வந்தான் அவளிடம், சொக்கலிங்கமும் உடன் வந்து நின்று கொண்டான்.
"தொடர் கொலை வழக்கு முடிவுக்கு வந்துட்டா ஏசிபி சார்?" என்றாள் எடுத்ததும்.
"ம்ம் எதிர் சைடு ஆளே இல்ல எட்டும் அவுட்டு"
"ஏசிபி சார்" என அவள் முறைக்க,
"சொல்லுங்க லாயர் மேடம்"
"இங்க நக்கலா பதில் சொல்ல கூடாது. கேட்குறதுக்கு மட்டும் கரெக்ட்டா பதில் சொன்னா போதும்"
"தப்பாவா சொன்னேன் நானு? எட்டுல ஒன்னுகூட பேலன்ஸ் இல்லல்ல சொக்கு?" என்க,
"பாண்டியன்" என்றார் நீதிபதி,
"சொல்லுங்க சார்"
"கில்லர் யாருன்னு கன்பார்ம் பண்ணீங்களா? அந்த ரிப்போர்ட்ஸ் எங்க?"
"லாஸ்ட்டா இறந்து போன பையன் ராமன், அவங்க அக்காதான் கொலை பண்ணதா வாக்குமூலம் குடுத்துருக்கான், அவன் அக்கான்னு பாத்தா மந்தாகினி தான் கில்லர், பட் வைஷ்ணவி பெரியம்மா பொண்ணு முறைல அக்காவா வர்றாங்க, அவங்க அவங்களே தான் கில்லர்னு சுய வாக்குமூலம் குடுத்துருக்காங்க"
"அப்ப கில்லர் ஒருத்தரா இல்ல ரெண்டு பேருமா?"
"மூணு பேரு சார்"
"இன்னொருத்தரா? அது யாரு?"
"விநாயகம், இந்த பொண்ணுங்களோட அண்ணன், விவிகே ஸ்கூல் பிடி வாத்தியார்"
"எப்டி சொல்றீங்க?"
"இந்த பசங்க அவரோட பொண்ண நியூட் வீடியோ எடுத்து மிரட்டுவோம்னு பயமுறுத்தினதா அவரே வந்து சொன்னாரு, அப்டியான்னு அவர ஃபாலோ பண்ணதுல, அவரு பொண்ணுக்கு அஞ்சு வயசுதான் ஆகுது, அவர் பொண்ணா சொன்னது அவரோட தங்கச்சி மந்தாகினியன்னு அப்றமா புரிஞ்சது"
"தெளிவா சொல்லுங்க"
"அது தான் விசாரிச்சுட்ருக்கோம். விநாயகத்த கஸ்டடில எடுக்க நீங்க தான் ஆர்டர் தரணும்"
"ஓகே, நெக்ஸ்ட் வீக் வர டைம், எனக்கு ஃபுல் டீடெயில்ஸ் வேணும், இனியும் இழுத்தடிக்க கூடாது"
"ஸுயர் சார்"
"ஃபாலோ பண்ணிக்கோங்க மேகி. நெக்ஸ்ட் ஹியரிங்ல ஃபைனல் ஆகணும்"
"ஓகே சார்" என்றுவிட்டாள். அவ்வளவு தான் அடுத்த கேஸை விசாரணை செய்ய அழைத்து விட்டார் நீதிபதி. இவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
"சொக்கு லேடீஸ் ரெண்டு பேத்தோட வண்டில ஏத்துங்க, விநாயகத்த கஸ்டடில எடுக்க ஆளனுப்புங்க" என இவன் சொல்லிக் கொண்டிருக்க,
"நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடி" என வைஷ்ணவியை ஒரு மாணவனின் தாயார் எட்டி அடித்தேவிட்டார், அவரை தடுத்துபிடித்து, இரு பெண்களையும் வண்டியில் ஏற்றுவதற்குள் பெரும் போராட்டமாகி இருந்தது.
"லேடீஸ் எல்லாம் இப்படி வையைன்ஸ்ல இறங்கிட்டா எங்க நிலைமை என்னடி?" என்றான் மரகதத்திடம்.
"கேஸ் ஃபுல்லா தெரியுந்தான உங்களுக்கு? அப்றமு ஏன் விநாயகம் அண்ணன உள்ள கொண்டு வந்து, நெக்ஸ்ட் வீக் டைம் வாங்கிருக்கீங்க?"
"நீ இன்னும் நல்லா விசாரிச்சு முழு உண்மையவும் தெரிஞ்சுக்கோ மரகதம். நானும் ஒருக்கா க்ளியர் பண்ணிக்றேன்"
"ஏதும் விட்ருக்கேனா?"
"இந்த ஏழு கொலைகளுக்கு நடுவுல எம்எல்ஏ தற்கொலை ஏன் வரணும்?"
"அவரும் இந்த கேஸ்ல இருக்காரா?"
"கண்டுபிடிடி"
"ஏங்க அது உங்க வேலைங்க. தண்டனை வாங்கி குடுக்குறது தான் எங்க வேலை"
"அப்ப நா கண்டுபிடிச்சத சொல்லி தந்தா எனக்கென்ன தருவ?"
"லஞ்சமே தப்பு அதையும் கோர்ட் வாசல்ல நின்னு கேட்குறது ரொம்ப தப்புங்க" என்றவள் அவள் அலுவலக அறைக்கு நடக்க துவங்க,
"அப்ப நீயே கண்டுபுடி. ஏய் நில்லுடி"
நின்றவள் திரும்பி, "சரி அப்ப நா கமிஷனர பாத்து பேசிக்கிறேன்" என்றாள்,
"கேளு, நானும் ஆள் மாறாட்டம் பண்ணி, ஏமாத்துனதுக்கு உள்ள தூக்கி வைக்க சொல்றேன்" என்றவன் மெல்ல அவள் பின்னே நடக்க,
"இனி நீங்க ஏமாந்ததா சொல்ல முடியாது, கல்யாணம் பண்ணி கூடவே வச்சுகிட்டு ஏமாந்தேன்னு வேற சொல்லுவீங்களா?" என்றவளும் சற்று மெதுவாக அவனுடன் சேர்ந்து நடக்க துவங்க,
"அன்னைக்கு ஏமாத்துனல்ல? பாதில விட்டுட்டு ஓடுனல்ல? இப்பவும் எஸ்கேப் ஆக தான் பாத்த, உன் கண்ணு காமிச்சு குடுத்ததுனால சிக்கிட்ட"
"பாஸ்ட்லயும் நாம நல்லத மட்டும் பேசலாங்க. என் கண்ண எப்டிங்க அவ்வளவு ஞாபகம் வச்சுருந்தீங்க?"
"நீ ஃபேஸ்புக் ப்ரொஃபல அத மட்டுந்தான் வச்சுருந்த, டவுன்லோட் பண்ணி எத்தனையோ நாள் விடிய விடிய பாத்துட்டே இருந்துருக்கேன்"
"அவ்வளவு பிடிச்சதா உங்களுக்கு?"
"இல்லடி மரகதம் நீ அப்படி எஸ்கேப் ஆகிடுவன்னு என்னோட போலீஸ் மூளைக்கு தெரிஞ்சுருக்கு, அதான் டீப்பா பாத்து மனசுல ஆக்கிருக்கேன் போல. பாத்தியா எட்டு வருஷம் கழிச்சும் வளைச்சு புடிச்சுட்டேன்"
"நீங்களாம் சரியான அழுத்தம் தெரியுமா?"
"ஏன் அதனால மந்தாகினிய மறக்க வைக்க போறியா?"
"முடியலங்க, ஒருநாள் நாலும் பாவம் பாத்து பேசிட்டு போன்னு விட்டு குடுக்றீங்களாங்க?"
"ஏன்டி அங்கிருந்து இங்க வர பேசிட்டே தான வந்த? கல்யாணத்துக்கு முன்ன எம்புட்டு பவ்யமா இருந்த இப்ப வாய் எவ்வளவு வருது?"
"அது சேர்க்கை அப்டிங்க"
"பாத்தியா நீ குசும்பின்னு ஃப்ரூப் பண்ற? நா ரொம்ப வெள்ளந்தியானவன் அதான் மனசுல எதும் வச்சுக்காம பேசுறேன்"
"சாப்பிட வாங்க, மூச்சு வாங்குவது எனக்கு. சத்தியமா என்னால முடியல"
"ஒன்னும் பண்ணாமயே மூச்சு வாங்கிடும் உனக்கு. சாப்பாடு எனக்கும் கொண்டு வந்தியா?"
"ஆமா அதுக்கு தான் கோர்ட் வருவீங்களான்னு கேட்டேன்"
"நீ பெர்ஃபெக்ட் பொண்டாட்டி தான் மரகதம்" என்றவன், சொக்கலிங்கத்தை கிளம்ப சொல்லிவிட்டு இவளுடன் கேன்டீனில் சாப்பிட அமர்ந்தான், ஆனால் இவர்களுக்கு தனிமை தர மனமற்று அவனிடம் பேச என அடுத்தடுத்து ஆட்கள் வந்தமர்ந்து கொண்டனர்.
அவனுக்கென எடுத்து வந்ததை கொடுத்து விட்டு அவளும் அமர்ந்து கொள்ள, ஏற்கனவே அவளால் மனது நிறைந்திருக்க, அவள் கொடுத்த உணவு அவன் வயிற்றையும் நிறைத்தது. அவன் பேச்சை எல்லாம் அசைபோட்டவாறு, 'வாலு மட்டுந்தான் இல்ல இந்த ஏசிபிக்கு, இப்பவே இப்டினா சின்ன வயசுல எப்டியோ அத்த எப்டி சமாளிச்சாங்களோ? கோவில் தான் கட்டணும் அந்த தாய்க்கு' என நினைக்க நினைக்க அவனையே பார்த்திருந்தவளுக்கு சிரிப்புதான், சாப்பாட்டை விழுங்கி சிரிப்பையும் விழுங்கிக் கொண்டாள்.
"உங்களுக்கு இதுல பங்கில்லையா மந்தாகினி?" என்றாள் இப்போது அவளிடம் திரும்பி,
மந்தாகினி திரும்பி வைஷ்ணவியை பார்க்க, அவள் இவள்புறம் திரும்பவே இல்லை, "அவங்கள ஏன் பாக்றீங்க? உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லணும். உண்மைய சொன்னதான் தண்டனைகள் குறையும், இல்லனா நிரபராதி கூட பாதிக்கப்படலாம். உங்க மேல தப்பில்லன்னா நீங்க தைரியமா பேசலாம் மந்தாகினி" என்றாள்,
ஏசிபி கையை நாடிக்கு கொடுத்து தாங்கியவாறு அவன் மரகதத்தை தான் பார்த்திருந்தான். அவனுக்கு உண்மை முழுவதும் தெரியும். அவனுக்கு தெரியும் என தெரிந்தும் அவனிடம் எதையும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் அவளே தான் அனைத்தையும் விசாரித்தாள். வைஷ்ணவி மந்தாகினி இருவரையும் தனி தனியே கடந்த பத்து நாட்களில் பார்த்து பேசியுமிருந்தாள். தெரிந்ததை அவனிடம் பகிர்ந்து கொள்ளவுமில்லை அவள்.
"நாந்தான் செஞ்சேன்னு ஒத்துகிட்டேன்ல அப்றமு அவள கேட்டு குழப்ப பாக்றீங்க? என் கூட பொறந்த தம்பி விஷ்ணு, என்னவிட பனிரெண்டு வயசு சின்னவன், அவன அதிகமா பாத்துகிட்டது நானு. எங்கம்மாக்கு லேட்டா பிறந்ததால அதிக இம்யூனிட்டி இல்லமாதான் பொறந்தான், லேசானாலும் ஃபீவர், கோல்டுன்னு படுத்துப்பான். ஃபீவர் இல்லாம ஒரு மாசத்த கடத்துனாலே எனக்கு அது பெரிய விஷயம். பாய்ஸ் ஸ்கூல்ல படிச்சுட்ருந்தவன, சித்தி இருக்காங்க அண்ணன் இருக்கான் பாத்துப்பான்னு இங்க மாத்துனது என் தப்பு தான். அப்றமு அவன் கொஞ்சம் ஸ்லிப்பாகுறான்னு தெரிஞ்சதுமாது அங்கிருந்து மாத்திருக்கணும், நா அதபத்தி யோசிச்சு முடிக்றதுக்குள்ளயே அவன் செத்து போயிட்டானே. கோவத்த யாருமேல காட்ட முடியும், அவன இப்டி சாவடிச்சவனுங்க இன்னும் எத்தனபேர இப்டி கொல்லுவானுங்களோ! இவனுங்களாமா நாளைக்கு நம்ம நாட்ட காப்பாத்த போறானுங்க? நா கொன்ன அஞ்சுபேரும் நாளைக்கு சையின்டாஸ்டாவா ஆகி வெளியவருவானுங்க? ரவுடி பொறுக்கி தீவிரவாதின்னு தான் ஆக போறானுங்க, அத்தோட போகாது கும்பல் கும்பலா உருவாக்குவானுங்க, இப்பவே அந்த ஸ்கூல்ல எத்தன பேருக்கு பழக்கி விட்ருக்காங்களோ தெரியல, அது கேஸாகுற வர போலீஸ் அத விசாரிக்க மாட்டாங்க, போலீஸ் அங்க எவனையாவது புடிச்சு கொண்டு நிறுத்துறவர கோர்ட்லயும் அத விசாரிக்க மாட்டாங்க. இதுதான் நம்ம சர்கிள், ஆனா பாதிக்க பட்டவங்க வேடிக்கை பாத்துட்டே இருக்கணுமா? அதான் கொன்னேன் அவனுங்க இந்த நாட்டுக்கு தேவையில்லன்னு நானே டிசைட் பண்ணி கொன்னேன்"
"என்ன சார் இப்படி பேசுறா பாத்துட்ருக்கீங்க, எங்கட்ட விடுங்க சார், என்ன செய்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம், நாங்க ஆச ஆசையா பெத்து வளர்ப்போமாம் இவ தேவையில்லன்னு கொல்லுவாளாம். உன்ன சும்மா விட்டேனா பாருடி. நீயெல்லாம் பொம்பளையா? கொஞ்சம் கூடவா இரக்கம் வரல. மென்டலா நீ? எம்புள்ளைய அப்படி கொதறி போட எப்டிறி மனசு வந்தது" என இறந்த பையன்களின் பெற்றோர் கொதித்து எழ, ஆளாளுக்கு கத்த துவங்க, "சைலன்ஸ்" என்றார் நீதிபதி.
"சோ நீங்க தான் கொன்னீங்க இல்லையா?" என்றாள் மறுபடியும்.
"ஆமா"
"எப்டி கொன்னீங்க?"
"என்ன அவனுங்களுக்கு நல்லா தெரியும். என்ட்ட மந்தாகினிட்ட நல்லா பேசுவானுங்க, அதவச்சு ஒவ்வொருதனையும் தனியா வரவச்சு, தூக்குனோம், எங்களுக்கு தெரிஞ்ச எங்க மாமாவோட கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி ஒன்னு இருக்கு, அங்க மெஷின் சத்தம் கேட்டுட்டே இருக்கனால யாருக்கும் சந்தேகம் வரல, அங்கவச்சு தான் கொல்லுவோம். முக்கியமா நா லாயர்ன்றதாலயும் அடிக்கடி அங்க போயிட்டு வருவேன்றதாலயும் யாரும் எதும் தப்பா யோசிக்கல, கடத்தி ஊருக்குள்ளயே சுத்திட்ருந்துட்டு இருட்டுற நேரத்துல தான் உள்ள போவோம், கொலை பண்ணி விடியுற நேரத்துல வெளில கொண்டு வந்துருவோம்"
"போவோம், வருவோம், செய்வோம்னு சேத்து சேத்து சொன்னீங்களே அது யாரெல்லாம்?" என்றாள் மரகதவல்லி.
பேசிக் கொண்டே வந்ததில் தனியாக செய்ததாக சொல்ல வேண்டியதை எப்படி செய்தார்களோ அப்படியே சொல்லியிருந்தாள் வைஷ்ணவி, மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டு, "எனக்கு ராமனும் ஹெல்ப் பண்ணுவான்"
"எல்லா கொலைக்கும் ஹெல்ப் பண்ணானா?"
"ஆமா" என்றாள் சற்று தடுமாற்றமாக,
"ஹெல்ப் மட்டுந்தான் பண்ணாணா? இல்ல கொலையே அவன்தான் பண்ணாணா? ஏன் கேட்குறேன்னா போஸ்ட்மார்ட்டம்ல நகக்கீரலோட அழுத்தம் ஒரு ஆணுக்குரியதுன்னு இருக்கு"
"அது யூகமா சொல்றது தானே? ஏன் ஒரு பெண்ணுக்கு ஆணுக்குரிய அழுத்தம் இருக்க கூடாதுன்னு இல்லையே?"
"இருக்கலாமே? வொய் நாட்? சரி எம்.எல்.ஏ விஜயம் அவரோட மருமகனுக்கு மந்தாகினி மேல லவ்வாமே? ப்ரபோஸ் பண்ணி ரிஜெக்ட்லாம் ஆச்சு இல்லையா மந்தாகினி?" என்றாள் அவளிடம்.
"ஆமா, என்னவிட சின்ன பையன், என் தம்பி கூட படிக்றவனுக்கு என் மேல லவ்வுன்னா நல்லா இல்லதானே? எனக்கு பிடிக்கல அதனால வேணாம்னு சொல்லிட்டேன்" என்றாள் மந்தாகினி, அதுதான் உண்மையும் என்பதால் திக்காமல் திணறாமல் சொல்லிவிட்டாள்.
"உடனே கேட்டுக்கிட்டானா அவன்? டார்ச்சர் எதும் பண்ணலையா?"
"நா எங்கம்மாட்ட சொல்லி கண்டுச்சுட்டேன்"
"உங்கம்மா சொன்னதும் கேட்டுகிட்டானா அவன்?"
"அது எனக்கு தெரியல ஆனா அடுத்து எங்கிட்ட வம்புக்கு வரல"
"ரைட். ஸ்டேஷன்ல இருந்த உங்க தம்பி இன்னைக்கு காலைல சூசைட் பண்ணிட்டானாம் தெரியுமா?" என்றதும் மந்தாகினி அதிர்ந்து கண்ணை விரித்தாள், வைஷ்ணவி திரும்பி ஏசிபியாக அமர்ந்திருந்தவனை மட்டுமே பார்த்தாள்.
ஒரு கையை சாய்வாக குடுத்து, நிமிர்ந்து அமர்ந்து அவர்கள் விசாரணையை கூர்ந்து கவனித்திருந்தவன், வைஷ்ணவி பார்வையில் அவளை இன்னும் கூர்மையாக பார்க்க, பட்டென்று திரும்பி கொண்டாள் அவள்.
"தெரியாதா?"
"இல்ல எங்களுக்கு யாரும் சொல்லல" என்ற மந்தாகினி அழுகையை அடக்கிக் கொண்டு அவள் தகப்பனை தான் பார்த்தாள், கண்ணீர் வற்ற அமர்ந்தார் அந்த மனிதர், அவ்வளவு தளர்ச்சி அவரிடம். வைஷ்ணவி அம்மா மட்டுமே குலுங்கி அழுது கொண்டிருந்தார்.
"நீங்க போலாம்" என்றவள், நீதிபதியிடம் திரும்பி, "இந்த கேஸை ஆய்வு செய்த போலீசாரை விசாரிக்க வேண்டும் மை லார்ட்" என்றதும், சொக்கலிங்கம் அவன் செல்வதா இல்லை பாண்டியன் செல்வானா என பார்த்திருக்க, அவன் சொக்கலிங்கத்திற்கே கண்ணை காட்ட, அவன் எழுந்து வர, "ஏசிபி சாரே வந்துருக்காரே, அவர் விளக்கம் குடுக்கட்டுமே?" என்றாள் மரகதம், குனிந்து எழுதி கொண்டிருந்த நீதிபதியே சிரிப்புடன் நிமிர்ந்து பார்த்தார், அவளை பார்த்தவாறே எழுந்து வந்தான் அவளிடம், சொக்கலிங்கமும் உடன் வந்து நின்று கொண்டான்.
"தொடர் கொலை வழக்கு முடிவுக்கு வந்துட்டா ஏசிபி சார்?" என்றாள் எடுத்ததும்.
"ம்ம் எதிர் சைடு ஆளே இல்ல எட்டும் அவுட்டு"
"ஏசிபி சார்" என அவள் முறைக்க,
"சொல்லுங்க லாயர் மேடம்"
"இங்க நக்கலா பதில் சொல்ல கூடாது. கேட்குறதுக்கு மட்டும் கரெக்ட்டா பதில் சொன்னா போதும்"
"தப்பாவா சொன்னேன் நானு? எட்டுல ஒன்னுகூட பேலன்ஸ் இல்லல்ல சொக்கு?" என்க,
"பாண்டியன்" என்றார் நீதிபதி,
"சொல்லுங்க சார்"
"கில்லர் யாருன்னு கன்பார்ம் பண்ணீங்களா? அந்த ரிப்போர்ட்ஸ் எங்க?"
"லாஸ்ட்டா இறந்து போன பையன் ராமன், அவங்க அக்காதான் கொலை பண்ணதா வாக்குமூலம் குடுத்துருக்கான், அவன் அக்கான்னு பாத்தா மந்தாகினி தான் கில்லர், பட் வைஷ்ணவி பெரியம்மா பொண்ணு முறைல அக்காவா வர்றாங்க, அவங்க அவங்களே தான் கில்லர்னு சுய வாக்குமூலம் குடுத்துருக்காங்க"
"அப்ப கில்லர் ஒருத்தரா இல்ல ரெண்டு பேருமா?"
"மூணு பேரு சார்"
"இன்னொருத்தரா? அது யாரு?"
"விநாயகம், இந்த பொண்ணுங்களோட அண்ணன், விவிகே ஸ்கூல் பிடி வாத்தியார்"
"எப்டி சொல்றீங்க?"
"இந்த பசங்க அவரோட பொண்ண நியூட் வீடியோ எடுத்து மிரட்டுவோம்னு பயமுறுத்தினதா அவரே வந்து சொன்னாரு, அப்டியான்னு அவர ஃபாலோ பண்ணதுல, அவரு பொண்ணுக்கு அஞ்சு வயசுதான் ஆகுது, அவர் பொண்ணா சொன்னது அவரோட தங்கச்சி மந்தாகினியன்னு அப்றமா புரிஞ்சது"
"தெளிவா சொல்லுங்க"
"அது தான் விசாரிச்சுட்ருக்கோம். விநாயகத்த கஸ்டடில எடுக்க நீங்க தான் ஆர்டர் தரணும்"
"ஓகே, நெக்ஸ்ட் வீக் வர டைம், எனக்கு ஃபுல் டீடெயில்ஸ் வேணும், இனியும் இழுத்தடிக்க கூடாது"
"ஸுயர் சார்"
"ஃபாலோ பண்ணிக்கோங்க மேகி. நெக்ஸ்ட் ஹியரிங்ல ஃபைனல் ஆகணும்"
"ஓகே சார்" என்றுவிட்டாள். அவ்வளவு தான் அடுத்த கேஸை விசாரணை செய்ய அழைத்து விட்டார் நீதிபதி. இவர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
"சொக்கு லேடீஸ் ரெண்டு பேத்தோட வண்டில ஏத்துங்க, விநாயகத்த கஸ்டடில எடுக்க ஆளனுப்புங்க" என இவன் சொல்லிக் கொண்டிருக்க,
"நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடி" என வைஷ்ணவியை ஒரு மாணவனின் தாயார் எட்டி அடித்தேவிட்டார், அவரை தடுத்துபிடித்து, இரு பெண்களையும் வண்டியில் ஏற்றுவதற்குள் பெரும் போராட்டமாகி இருந்தது.
"லேடீஸ் எல்லாம் இப்படி வையைன்ஸ்ல இறங்கிட்டா எங்க நிலைமை என்னடி?" என்றான் மரகதத்திடம்.
"கேஸ் ஃபுல்லா தெரியுந்தான உங்களுக்கு? அப்றமு ஏன் விநாயகம் அண்ணன உள்ள கொண்டு வந்து, நெக்ஸ்ட் வீக் டைம் வாங்கிருக்கீங்க?"
"நீ இன்னும் நல்லா விசாரிச்சு முழு உண்மையவும் தெரிஞ்சுக்கோ மரகதம். நானும் ஒருக்கா க்ளியர் பண்ணிக்றேன்"
"ஏதும் விட்ருக்கேனா?"
"இந்த ஏழு கொலைகளுக்கு நடுவுல எம்எல்ஏ தற்கொலை ஏன் வரணும்?"
"அவரும் இந்த கேஸ்ல இருக்காரா?"
"கண்டுபிடிடி"
"ஏங்க அது உங்க வேலைங்க. தண்டனை வாங்கி குடுக்குறது தான் எங்க வேலை"
"அப்ப நா கண்டுபிடிச்சத சொல்லி தந்தா எனக்கென்ன தருவ?"
"லஞ்சமே தப்பு அதையும் கோர்ட் வாசல்ல நின்னு கேட்குறது ரொம்ப தப்புங்க" என்றவள் அவள் அலுவலக அறைக்கு நடக்க துவங்க,
"அப்ப நீயே கண்டுபுடி. ஏய் நில்லுடி"
நின்றவள் திரும்பி, "சரி அப்ப நா கமிஷனர பாத்து பேசிக்கிறேன்" என்றாள்,
"கேளு, நானும் ஆள் மாறாட்டம் பண்ணி, ஏமாத்துனதுக்கு உள்ள தூக்கி வைக்க சொல்றேன்" என்றவன் மெல்ல அவள் பின்னே நடக்க,
"இனி நீங்க ஏமாந்ததா சொல்ல முடியாது, கல்யாணம் பண்ணி கூடவே வச்சுகிட்டு ஏமாந்தேன்னு வேற சொல்லுவீங்களா?" என்றவளும் சற்று மெதுவாக அவனுடன் சேர்ந்து நடக்க துவங்க,
"அன்னைக்கு ஏமாத்துனல்ல? பாதில விட்டுட்டு ஓடுனல்ல? இப்பவும் எஸ்கேப் ஆக தான் பாத்த, உன் கண்ணு காமிச்சு குடுத்ததுனால சிக்கிட்ட"
"பாஸ்ட்லயும் நாம நல்லத மட்டும் பேசலாங்க. என் கண்ண எப்டிங்க அவ்வளவு ஞாபகம் வச்சுருந்தீங்க?"
"நீ ஃபேஸ்புக் ப்ரொஃபல அத மட்டுந்தான் வச்சுருந்த, டவுன்லோட் பண்ணி எத்தனையோ நாள் விடிய விடிய பாத்துட்டே இருந்துருக்கேன்"
"அவ்வளவு பிடிச்சதா உங்களுக்கு?"
"இல்லடி மரகதம் நீ அப்படி எஸ்கேப் ஆகிடுவன்னு என்னோட போலீஸ் மூளைக்கு தெரிஞ்சுருக்கு, அதான் டீப்பா பாத்து மனசுல ஆக்கிருக்கேன் போல. பாத்தியா எட்டு வருஷம் கழிச்சும் வளைச்சு புடிச்சுட்டேன்"
"நீங்களாம் சரியான அழுத்தம் தெரியுமா?"
"ஏன் அதனால மந்தாகினிய மறக்க வைக்க போறியா?"
"முடியலங்க, ஒருநாள் நாலும் பாவம் பாத்து பேசிட்டு போன்னு விட்டு குடுக்றீங்களாங்க?"
"ஏன்டி அங்கிருந்து இங்க வர பேசிட்டே தான வந்த? கல்யாணத்துக்கு முன்ன எம்புட்டு பவ்யமா இருந்த இப்ப வாய் எவ்வளவு வருது?"
"அது சேர்க்கை அப்டிங்க"
"பாத்தியா நீ குசும்பின்னு ஃப்ரூப் பண்ற? நா ரொம்ப வெள்ளந்தியானவன் அதான் மனசுல எதும் வச்சுக்காம பேசுறேன்"
"சாப்பிட வாங்க, மூச்சு வாங்குவது எனக்கு. சத்தியமா என்னால முடியல"
"ஒன்னும் பண்ணாமயே மூச்சு வாங்கிடும் உனக்கு. சாப்பாடு எனக்கும் கொண்டு வந்தியா?"
"ஆமா அதுக்கு தான் கோர்ட் வருவீங்களான்னு கேட்டேன்"
"நீ பெர்ஃபெக்ட் பொண்டாட்டி தான் மரகதம்" என்றவன், சொக்கலிங்கத்தை கிளம்ப சொல்லிவிட்டு இவளுடன் கேன்டீனில் சாப்பிட அமர்ந்தான், ஆனால் இவர்களுக்கு தனிமை தர மனமற்று அவனிடம் பேச என அடுத்தடுத்து ஆட்கள் வந்தமர்ந்து கொண்டனர்.
அவனுக்கென எடுத்து வந்ததை கொடுத்து விட்டு அவளும் அமர்ந்து கொள்ள, ஏற்கனவே அவளால் மனது நிறைந்திருக்க, அவள் கொடுத்த உணவு அவன் வயிற்றையும் நிறைத்தது. அவன் பேச்சை எல்லாம் அசைபோட்டவாறு, 'வாலு மட்டுந்தான் இல்ல இந்த ஏசிபிக்கு, இப்பவே இப்டினா சின்ன வயசுல எப்டியோ அத்த எப்டி சமாளிச்சாங்களோ? கோவில் தான் கட்டணும் அந்த தாய்க்கு' என நினைக்க நினைக்க அவனையே பார்த்திருந்தவளுக்கு சிரிப்புதான், சாப்பாட்டை விழுங்கி சிரிப்பையும் விழுங்கிக் கொண்டாள்.