அத்தியாயம் 12
இனியன் அன்று திட்டுவிட்டு சென்றதில் இருந்து ஒரு வாரம் ஆகியும், இன்று வரையில் அவனைப் பார்க்கவே இல்லை அழகி.
இனியனிடம் இருக்கும் தன் வீடியோ உள்ள பென்ட்ரைவ்வை அவனுக்கு தெரியாமல் எடுத்தப் பிறக்கே மீண்டும் அவன் முன் சென்று அவனைத் தொல்லைச் செய்ய வேண்டும் என்று எண்ணியவள். பலவாறு முயன்றும் அந்த பென்ட்ரைவ்வை இதுவரை அவளால் எடுக்க முடியவில்லை.
நாளை தீபாவளி என்னும் நிலையில், ஊரே கொண்டாட்டங்களில் திளைத்திருக்க. அழகி மட்டும் நாளை என்ன சறுக்கு கூறிவிட்டு சென்னைக்கு போவது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
மூளை ஒருபக்கம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும், வாய் பாட்டிற்கு மறுபக்கம் அன்னைச் செய்துக் கொண்டிருந்த தீபாவளி பலகாரங்களை எல்லாம் டேஸ்ட் பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அனைத்தையும் ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தது.
அந்நேரம் அழகியை நோக்கி ஓடி வந்த ஹரி, " அழகி! விஷயம் தெரியுமா?? நம்ம தங்கராசு சித்தப்பா வீட்டுகிட்ட ஒரே சண்டை... எல்லாரும் அங்கே தான் இருக்காங்க... நம்ம வேலு மாமா, மருதண்ணே, அமிழ்ந்தினியன் சார் எல்லாரும்" என்று கூற,
அழகியின் கண்கள் சிஞ்சான் கண்களைப் போல் பளபளக்க ஐடியா ஒன்று தோன்றியது அவளுக்கு. அந்த ஐடியாவை ஹரியிடம் கூறியவள், உடனடியாக அவனை அதை செயல் படுத்தவும் சொன்னாள்.
அழகி சொன்னது போலவே அச்சுப் பிசகாமல் செய்த ஹரி. தான் இவ்வளவு நேரமாகத் தேடிக் கொண்டிருக்கும் பொருள் கிடைக்காமல் போகவும், அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நின்றுக் கொண்டிருந்த அழகியை நோக்கி,
" ஹே அழகி! இங்க நீ சொன்ன அந்தப் பொருள் இல்லை புள்ள. நான் வேணும்னா இனியன் சார் கிட்ட எங்க இருக்குன்னு கேட்டுட்டு வரட்டா?? " என்றான் அங்கிருந்தேச் சத்தமாக.
'இவன் காரியத்தையே கெடுத்துடுவான் போல, சரியான மென்டல் பய' என்று முனுமுனுத்தவள்.
" டேய் ஹரி வேணாம்டா ! நீ இங்க வா. நாளைக்கு பார்த்துக்கலாம்.. அந்த பனைமரம் அசந்த நேரமா நானே அதை ஆட்டையைப் போட்டுடுவேன் ... நீ வா நாம கிளம்புவோம். என்கிட்டையே தில்லாலங்கடி வேலைச் செய்யுற அந்த பனைமரத்துக்கு இருக்கு " என்று கூறிக்கொண்டே திரும்பியவள், எதன் மீதோ மோதி நிற்க...
அது என்னவென்று நிமிர்ந்து பார்த்தவள் சத்தியமாக அங்கு அவனை எதிர்பார்க்கவில்லை.
" இப்போ பேசுங்க மேடம்ம்ம்ம்... பனைமரம் என்று இப்போ கூப்பிடுங்க" என்றான் இனியன் அவளைப் பார்த்துச் சிரித்தவாறு.
"இதுயெல்லாம் ரொம்ப தப்பு பனை.... ச்சே... இனியன் சார்ர்.. என்கிட்ட அந்த பென்ட்ரைவ்வை திரும்ப தந்திடுங்க..." என்றாள் எங்கோப் பார்த்தப்படி.
"ஹாஹா... அன்னைக்கு நான் சொன்ன அதே வசனம் போல இருக்கு... இதை தான் கர்மா இஸ் பூம்ராங் என்று சொல்லுவங்களோ மிஸ். மதியழகி" என்று இனியன் கூறவும்.... அழகியின் போன் 'தில்லுவாளே புச்சினேஜேயா ... ஓ .. ஓ...' என்று ஒளிக்கவும் சரியாக இருந்தது.
'இது வேற நம்ம மானத்தை கரெக்ட் டயம்ல வாங்குது' என்று முணுமுணுப்பாய் கூறியவள். மெல்ல இனியனை நோக்கி,
" என்னை நீங்க திட்டின அப்போவே நமக்குள்ள இருந்த டீலிங் எல்லாம் முடிஞ்சுப் போச்சு மிஸ்டர். அமிழ்தினியன்! அந்த பென்ட்ரைவ்ல இருக்க என் வீடியோவை டெலிட் பண்ணிட்டா நா உங்களை இனி எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் " என்றாள்.
"நாளைக்கு உன்னை சென்னைக்கு கூட்டிகிட்டி போக உன் அப்பாகிட்ட சம்மதம் வங்கியாச்சுன்னு சொன்னாலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே போவியா அழகி??" என்றான் இனியன் ஆழ்ந்த குரலில்.
"வாவ்!உண்மையாவா??" என்றவளின் குரலில் இருந்த மலர்ச்சியேப் போதுமானதாக இருந்தது, இனியனின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவிக்க.
"யெஸ் அழகி! நாளைக்கு மோர்னிங் 10.30க்கு பஸ். சீக்கிரம் எழும்பி ரெடியாகி இரு.." என்றான் மலர்ந்த முகத்துடன்.
"என்னால நம்பவே முடியல! தேங்க்யூ சோ மச் பனை ச்சே இனியன் சார்" என்றவள் சந்தோஷ ஆரவாரத்தில் என்ன செய்கிறோம் என்று உணராமலேயே இனியனை அணைத்துவிட்டு சென்றிருந்தாள் அழகி.
அவளின் இந்த திடீர் தாக்குதலில் உறைந்து நின்றது என்னவோ இனியன் தான்.
*************************
சென்னையில் வந்திறங்கியது முதல் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டாள் அழகி. புதுக்கோட்டையைத் தாண்டி இதுவரையில் எங்கும் வெளியில் சென்றிராதவள் முதல் முறை சென்னை வந்திருக்கிறாள். அதுவும் தனியாக, சொந்தப் பந்தங்களை விட்டு இனியனுடன்.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சென்னையின் சாலைகள் எல்லாம், தீபத்திருநாளான இன்று சாதாரணமாகவா காட்சியளிக்கும்?? எங்கு காணினும் புத்தாடை உடுத்தி மக்கள் மகிழ்வாக பட்டாசுகளை வெடித்து நிறைவாக இந்த தீபத் திருநாளைக் கொண்டாடிக் களித்துக் கொண்டிருந்தனர்.
அழகி இதுவரை இப்படியாப்பட்ட ஆரவாரங்களை எல்லாம் கண்டதே இல்லை. அழகூரிலும் வெடி எல்லாம் வெடிப்பார்கள் தான். இருந்தாலும் , இந்த அளவிற்கு பிரமாண்டமாக எல்லாம் இருக்காது. ஏன் திருவிழாக்களில் கூட இந்த அளவு வேட்டுச்சத்தங்களை கேட்டதே கிடையாது அழகி.
வானம் முழுவதும் வான வேடிக்கைகளாக நிறைந்திருக்க, அதை இனியனுடன் இணைந்து அவன் வீட்டு மொட்டை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும் ரசனையாகத் தான் இருந்தது அவளுக்கு.
"போதும் அழகி! இதுக்கு மேல இங்கே நின்னா புகை அதிகம் ஆகிடும்.. உள்ளே போகலாம் " என்ற இனியனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றாள் அழகி.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு அது. இனியன் அழகூரிற்கு செல்லும் முன்பு வரை இந்த வீட்டில் தான் வசித்தது.
"வீடு ரொம்ப அழகா இருக்கு இனியன் சார்!" என்றாள் வியப்பாய்.
"இன்னும் என்ன சார் மோர்ன்னு கூப்பிட்டுகிட்டு இருக்க?" என்றவனைப் பார்த்து சிரித்தவள்,
"அட! இப்போ சார் சொல்லுறது தான் ட்ரெண்ட் இனியன்... அதுவும் இப்படிக் கூப்பிடுவதும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குல..." என்றாள்.
"அதுவும் உண்மை தான். நீ கூப்பிடுற மாடுலேஷன் நல்லா இருக்கும்" என்ற இனியன்,
"அழகி அந்த லெப்ட் சைட்ல இருக்க ரூம்ல நீ தங்கிக்கோ. இந்த ரூம்ல தான் நா இருப்பேன்… ஏதாவது வேணும்னா தயங்கமா என்னை வந்து எழுப்பு" என்றான்.
இனியன் காட்டிய அறையினுள் சென்றவள், அலுப்புத் தீரக் குளித்துவிட்டு இரவு உடையை அணிந்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவள் கண்டது,சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இனியனை தான்.
அழகி அங்கு வந்ததை அப்போது தான் கவனித்த இனியன், "வா! வந்து உட்கார் அழகி" என்றான்.
அவள் அமர்ந்ததும்,"சாப்பிட என்ன ஆர்டர் பண்ணட்டும்??" என்றான் அழகியிடம்.
"எனக்கு எதுவும் வேண்டாம் இனியன் சார். வர வழியில சாப்பிட்டதே வயிறு ஃபுல்... உங்களுக்கு என்ன வேணுமோ அதை ஆர்டர் பண்ணுங்க" என்றாள்.
" எனக்கும் வயிறு ஃபுல் தான் அழகி" என்றான் சிரிப்பினுடே.
"அப்பறம்.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் இனியன் சார்" என்றாள் தயக்கமாக.
"என்ன??"
"அது, நாம கட்டாயம் தனித் தனி ரூம்ல தான் தூங்கனுமா??"
"பின்னே?? ஒன்னாவா தூங்க முடியும்" என்றான் சிரித்தவாறு.
"சே! நா அப்படி சொல்லல. அது வந்து எனக்கு தனியா தூங்கப் பயம்.. சோ ரெண்டுப் பேரும் இங்க ஹாலிலேயே தூங்கலாம?? ப்ளீஸ்.." என்றவளின் கோரிக்கையை மறுக்கவா செய்வான் இனியன். அவனும் சரியென்று சம்மதம் சொல்லிவிட,
"அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு இனியன் சார். நா தனியா இருந்தா பேய் வரும்னு நினைச்சு பயப்படுவேன். இப்போ நிம்மதியா நா போய் பிளாக் காபி போடுறேன்.. உங்களுக்கு அதுப் பிடிக்குமா ?? இல்ல க்ரீன் டீ போடடுமா??" என்றவளை இமைக்காமல் பார்த்தவன்,
"பிளாக் காபி?? அதுவும் இந்த டயம்ல" என்றான் கேள்வியாக.
"எனக்கு நயிட் தூங்குறதுக்கு முன்ன பிளாக் காபி குடிச்சத்தான் தூக்கம் வரும் இனியன் சார்!" என்றவள் சமயலறைக்கு சென்று பிளாக் காபி போட ஆரம்பித்தாள்.
"அப்போ எனக்கும் அதையே போடு அழகி!" என்று கூறியவன். ஹாலில் அமர்ந்து ஒவ்வொரு டிவி சேனல்களாக மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இனியனின் கைகள் எதர்ச்சியாக பாட்டு சேனல் ஒன்றை வைக்க. அதில் ஓடிய பாடலைக் கண்டதும் மீண்டும் சேனலை மாற்றினான் அவன்.
சமையலறையில் நின்றிருந்த அழகியின் செவிகளிலும் அந்த பாடலின் வரிகள் விழ, தனக்கொரு காபி கப்பும் இனியனுக்கு ஒரு கப்புமாக இரு கைகளிலும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு விரைந்து வந்தவள்,
"இப்போ ஒரு சாங் போச்சே … அந்த சேனல் வைங்க இனியன்!" என்றாள்.
"ஏன்??"
"வைங்களேன்" என்றவள் அவனிடம் இருந்த ரிமோட்டை வாங்கி அவளே அந்த சேனலிற்கு மாத்தியவள், இனியன் கையில் அவனுக்கான கப்பை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து அந்த பாடலை கேட்டு ரசித்தவள், அவளையும் அறியாமல் அந்த பாடலில் ஆழ்ந்து அதனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள் அழகி.
'வாழ்க்கை என்பது என்ன…
பள்ளிபாடமுமல்ல...
கற்று கொண்டதை மெல்ல முன்னேற...
காதல் என்பது என்ன...
புள்ளி கோலமுமல்ல...
காற்றில் கலையும் போது தள்ளாட...
எங்கோ எங்க ஓர் உலகம்…
உனக்காக காத்து கிடக்கும் …
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே ...
நதி காயலாம்…
நினைவில் உள்ள காட்சி காயுமா?? '
பாடும் அழகியையே இமைக்காமல் பார்த்திருந்தான் இனியன்.
பாடல் முடியவும் தான், தானும் அந்த பாடலுடன் இணைந்துப் பாடி இருக்கிறோம் என்பதை உணர்ந்த அழகி,
"இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்… தினமும் இதைக் கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும் இனியன். பர பர பட்டாம்பூச்சி சாங் .. கிட்டத்தட்ட எனக்கு ஒரு தாலாட்டு மாதிரி.." என்றுக் கூறியவளைப் பார்த்து,
"ரொம்ப அழகா பாடுற அழகி " என்றவன். அதை தாண்டி வேறேதும் கூறவில்லை அவளிடம்.
அழகி கேட்டுக் கொண்டதுப் போலவே இருவரும் சோபாவின் அருகே டிவியின் முன்பு பாயை விரித்து அதில் படுத்தப்படியே டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எப்போது எப்படி இருவரும் உறங்கினர் என்பது அவர்களுக்கே தெரியாது.
மறுநாள் காலை விடியவும், அழகி மெரூன் வண்ணப் பட்டு புடவையிலும், இனியன் நீல நிறச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டியிலும் தயாராகிப் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல, அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர் அழகியின் தோழி ரம்யாவும், அவள் காதலன் கோகுலும்.
பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிய, அவர்களுக்காக வாங்கிய பசிரிப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்திவிட்டு விடைப் பெற்றனர் அழகியும், இனியனும்.
"இவ்வளவு தூரம் வந்துட்டோம்… அப்படியே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா இனியன் சார்??" என்ற அழகியின் ஆசைகாக அவளை அங்கு அழைத்துச் சென்றான் இனியன்.
கோவிலில் ஒரு மூத்த தம்பதியரின் கால்களில் ஜோடி ஜோடியாக தம்பதியர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும், அது எதற்கு என்று எதையும் விசாரிக்காமலேயே இனியனுடன் சென்று அவர்களிடம் ஆசி வாங்கினாள் அழகி.
"இப்போ என்ன விஷயம்னு தெரியாம எதுக்கு அவங்க கிட்டப் போய் ஆசிர்வாதம் வாங்குன அழகி??" என்று இனியன் கேட்கவும், அவ்வளவு நேரம் இருந்த சுமுகமான சூழல் மறைந்து கடுப்பானாள் அழகி.
"ஏன் எல்லாரும் அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குறாங்கன்னு உங்களுக்குத் தெரியணும்
அவ்வளவு தானே??" என்றவள்.
அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, "ஆண்டி! ஏன் அந்த பெரியவங்க கால்ல விழுந்து எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குறாங்க?" என்றாள் கேள்வியாக.
"ஓ! அதுவா! அவங்களுக்கு இப்போ தான் சதாபிஷேகம் முடிஞ்சதும்மா…
அதான் அவங்க கிட்ட ஆசி வாங்கினா தம்பதியர் மன ஓற்றுமையோடு, நீண்டக் காலம் சேர்ந்து வாழ்வாங்கன்னு நம்பிக்கை. அதான் எல்லாரும் அவங்க கிட்ட ஆசி வாங்குறாங்க. உங்களைப் பார்த்தாலும் புதிதாக திருமணமான தம்பதி போல தான் தெரியுறீங்க. போங்க .. நீங்களும் போய் அவங்க கிட்ட ஆசி வாங்குங்க" என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அழகியை,
"இதுக்கு தான், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்னு சுத்தக் கூடாது அழகி" என்று அவளைக் கிண்டல் செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவன், அழகியுடன் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தான்.
கோவிலின் குளத்தருக்கே சற்று நேரம் நின்றிருந்தவர்கள். வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்புகையில் தான் அழகியின் கண்களில் பட்டது அந்த கடை … ரோஜாஸ் மினியேச்சர் ஷாப்.
அந்த கடையை கண்டதும், இனியனையும் அழைத்துக் கொண்டு கடையினுள் சென்றவள் தனக்கு பிடித்த குட்டிக் குட்டி கடாய், குட்டி அடுப்பு, குட்டி தோசை தவா என்று அனைத்தையும் வாங்கியவள், அந்த பைகளை எல்லாம் இனியனிடம் தந்துவிட்டு முகம்கொள்ளா புன்னகையுடன் நடந்து வந்தாள்.
"சோப்பு சாமான் விளையாடுற வயசா அழகி உனக்கு?" என்றான் இனியன் தன் கைகளில் இருக்கும் பைகளை பார்த்தப்படி.
"எதே!! சோப்பா?? இதுக்கு பேரு மினியேச்சர் குக்கிங் இனியன் சார்!! நாம ஊருக்கு போனதும் ஒரு தடவ உங்களுக்கு நானே இதுல குக் பண்ணித் தாரேன்" என்றவளை நோக்கி,
"உசுரு முக்கியம் பிகிலே!!" என்றான் இனியன்.
அவன் தோள்களில் இரண்டு அடியைப் போட்டவள், "கிண்டலாப் பண்றீங்க" என்று அவன் கைகளிலும் கிள்ளினாள்.
"கொலைகாரி.. கொல்ல பாக்குறா" என்று இனியன் போலியாக அலற. அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அழகி.
சிரிப்பும், கிண்டலுமாக வீட்டிற்கு வந்த இனியனும் அழகியும் வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டவர்கள், ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த புதுக்கோட்டை பஸ்சில் அமர்ந்ததும் தான் நிம்மதி பெருமூச்சையே விட்டனர்.
"உங்களை ரொம்ப தொல்லை பண்ணுறேன்ல சாரி.." என்ற அழகியைப் பார்த்து சிரித்தவன்.
"எனக்கு நிறைய அர்ஜெண்ட் வேலை இருக்கு அழகி. அதான் இவ்வளவு அவசரமா உன்னையும் கிளம்ப வச்சிட்டேன்.அதுக்கு நா தான் சாரி கேட்கணும். நிச்சயமா அடுத்த முறை நாம சென்னை வரப்போ நிதானமா உனக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுறேன்டா" என்றான் இனியன் சமாதானமாய்.
அதன் பிறகு, ஒரே ஹெட்செட்டை இருவரும் ஒரு ஒரு காதில் மாட்டிக் கொண்டு அழகியின் ஃபோனில் இருந்த காமெடிப் படம் ஒன்றைப் பார்த்துச் சிரித்தவாறே தங்களது பயணத்தை இனிமையாகத் தொடர்ந்தனர் இருவரும், தங்களிடம் தாங்களே அறியாமல் உருவாகி இருந்த அந்த இயல்பான நெருக்கத்தை பற்றி அறியாமல்.
இனியன் அன்று திட்டுவிட்டு சென்றதில் இருந்து ஒரு வாரம் ஆகியும், இன்று வரையில் அவனைப் பார்க்கவே இல்லை அழகி.
இனியனிடம் இருக்கும் தன் வீடியோ உள்ள பென்ட்ரைவ்வை அவனுக்கு தெரியாமல் எடுத்தப் பிறக்கே மீண்டும் அவன் முன் சென்று அவனைத் தொல்லைச் செய்ய வேண்டும் என்று எண்ணியவள். பலவாறு முயன்றும் அந்த பென்ட்ரைவ்வை இதுவரை அவளால் எடுக்க முடியவில்லை.
நாளை தீபாவளி என்னும் நிலையில், ஊரே கொண்டாட்டங்களில் திளைத்திருக்க. அழகி மட்டும் நாளை என்ன சறுக்கு கூறிவிட்டு சென்னைக்கு போவது என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
மூளை ஒருபக்கம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும், வாய் பாட்டிற்கு மறுபக்கம் அன்னைச் செய்துக் கொண்டிருந்த தீபாவளி பலகாரங்களை எல்லாம் டேஸ்ட் பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அனைத்தையும் ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தது.
அந்நேரம் அழகியை நோக்கி ஓடி வந்த ஹரி, " அழகி! விஷயம் தெரியுமா?? நம்ம தங்கராசு சித்தப்பா வீட்டுகிட்ட ஒரே சண்டை... எல்லாரும் அங்கே தான் இருக்காங்க... நம்ம வேலு மாமா, மருதண்ணே, அமிழ்ந்தினியன் சார் எல்லாரும்" என்று கூற,
அழகியின் கண்கள் சிஞ்சான் கண்களைப் போல் பளபளக்க ஐடியா ஒன்று தோன்றியது அவளுக்கு. அந்த ஐடியாவை ஹரியிடம் கூறியவள், உடனடியாக அவனை அதை செயல் படுத்தவும் சொன்னாள்.
அழகி சொன்னது போலவே அச்சுப் பிசகாமல் செய்த ஹரி. தான் இவ்வளவு நேரமாகத் தேடிக் கொண்டிருக்கும் பொருள் கிடைக்காமல் போகவும், அவன் இருக்கும் இடத்திலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நின்றுக் கொண்டிருந்த அழகியை நோக்கி,
" ஹே அழகி! இங்க நீ சொன்ன அந்தப் பொருள் இல்லை புள்ள. நான் வேணும்னா இனியன் சார் கிட்ட எங்க இருக்குன்னு கேட்டுட்டு வரட்டா?? " என்றான் அங்கிருந்தேச் சத்தமாக.
'இவன் காரியத்தையே கெடுத்துடுவான் போல, சரியான மென்டல் பய' என்று முனுமுனுத்தவள்.
" டேய் ஹரி வேணாம்டா ! நீ இங்க வா. நாளைக்கு பார்த்துக்கலாம்.. அந்த பனைமரம் அசந்த நேரமா நானே அதை ஆட்டையைப் போட்டுடுவேன் ... நீ வா நாம கிளம்புவோம். என்கிட்டையே தில்லாலங்கடி வேலைச் செய்யுற அந்த பனைமரத்துக்கு இருக்கு " என்று கூறிக்கொண்டே திரும்பியவள், எதன் மீதோ மோதி நிற்க...
அது என்னவென்று நிமிர்ந்து பார்த்தவள் சத்தியமாக அங்கு அவனை எதிர்பார்க்கவில்லை.
" இப்போ பேசுங்க மேடம்ம்ம்ம்... பனைமரம் என்று இப்போ கூப்பிடுங்க" என்றான் இனியன் அவளைப் பார்த்துச் சிரித்தவாறு.
"இதுயெல்லாம் ரொம்ப தப்பு பனை.... ச்சே... இனியன் சார்ர்.. என்கிட்ட அந்த பென்ட்ரைவ்வை திரும்ப தந்திடுங்க..." என்றாள் எங்கோப் பார்த்தப்படி.
"ஹாஹா... அன்னைக்கு நான் சொன்ன அதே வசனம் போல இருக்கு... இதை தான் கர்மா இஸ் பூம்ராங் என்று சொல்லுவங்களோ மிஸ். மதியழகி" என்று இனியன் கூறவும்.... அழகியின் போன் 'தில்லுவாளே புச்சினேஜேயா ... ஓ .. ஓ...' என்று ஒளிக்கவும் சரியாக இருந்தது.
'இது வேற நம்ம மானத்தை கரெக்ட் டயம்ல வாங்குது' என்று முணுமுணுப்பாய் கூறியவள். மெல்ல இனியனை நோக்கி,
" என்னை நீங்க திட்டின அப்போவே நமக்குள்ள இருந்த டீலிங் எல்லாம் முடிஞ்சுப் போச்சு மிஸ்டர். அமிழ்தினியன்! அந்த பென்ட்ரைவ்ல இருக்க என் வீடியோவை டெலிட் பண்ணிட்டா நா உங்களை இனி எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் " என்றாள்.
"நாளைக்கு உன்னை சென்னைக்கு கூட்டிகிட்டி போக உன் அப்பாகிட்ட சம்மதம் வங்கியாச்சுன்னு சொன்னாலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாம அப்படியே போவியா அழகி??" என்றான் இனியன் ஆழ்ந்த குரலில்.
"வாவ்!உண்மையாவா??" என்றவளின் குரலில் இருந்த மலர்ச்சியேப் போதுமானதாக இருந்தது, இனியனின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவிக்க.
"யெஸ் அழகி! நாளைக்கு மோர்னிங் 10.30க்கு பஸ். சீக்கிரம் எழும்பி ரெடியாகி இரு.." என்றான் மலர்ந்த முகத்துடன்.
"என்னால நம்பவே முடியல! தேங்க்யூ சோ மச் பனை ச்சே இனியன் சார்" என்றவள் சந்தோஷ ஆரவாரத்தில் என்ன செய்கிறோம் என்று உணராமலேயே இனியனை அணைத்துவிட்டு சென்றிருந்தாள் அழகி.
அவளின் இந்த திடீர் தாக்குதலில் உறைந்து நின்றது என்னவோ இனியன் தான்.
*************************
சென்னையில் வந்திறங்கியது முதல் மிகவும் உற்சாகமாய் காணப்பட்டாள் அழகி. புதுக்கோட்டையைத் தாண்டி இதுவரையில் எங்கும் வெளியில் சென்றிராதவள் முதல் முறை சென்னை வந்திருக்கிறாள். அதுவும் தனியாக, சொந்தப் பந்தங்களை விட்டு இனியனுடன்.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சென்னையின் சாலைகள் எல்லாம், தீபத்திருநாளான இன்று சாதாரணமாகவா காட்சியளிக்கும்?? எங்கு காணினும் புத்தாடை உடுத்தி மக்கள் மகிழ்வாக பட்டாசுகளை வெடித்து நிறைவாக இந்த தீபத் திருநாளைக் கொண்டாடிக் களித்துக் கொண்டிருந்தனர்.
அழகி இதுவரை இப்படியாப்பட்ட ஆரவாரங்களை எல்லாம் கண்டதே இல்லை. அழகூரிலும் வெடி எல்லாம் வெடிப்பார்கள் தான். இருந்தாலும் , இந்த அளவிற்கு பிரமாண்டமாக எல்லாம் இருக்காது. ஏன் திருவிழாக்களில் கூட இந்த அளவு வேட்டுச்சத்தங்களை கேட்டதே கிடையாது அழகி.
வானம் முழுவதும் வான வேடிக்கைகளாக நிறைந்திருக்க, அதை இனியனுடன் இணைந்து அவன் வீட்டு மொட்டை மாடியில் நின்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும் ரசனையாகத் தான் இருந்தது அவளுக்கு.
"போதும் அழகி! இதுக்கு மேல இங்கே நின்னா புகை அதிகம் ஆகிடும்.. உள்ளே போகலாம் " என்ற இனியனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றாள் அழகி.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தனி வீடு அது. இனியன் அழகூரிற்கு செல்லும் முன்பு வரை இந்த வீட்டில் தான் வசித்தது.
"வீடு ரொம்ப அழகா இருக்கு இனியன் சார்!" என்றாள் வியப்பாய்.
"இன்னும் என்ன சார் மோர்ன்னு கூப்பிட்டுகிட்டு இருக்க?" என்றவனைப் பார்த்து சிரித்தவள்,
"அட! இப்போ சார் சொல்லுறது தான் ட்ரெண்ட் இனியன்... அதுவும் இப்படிக் கூப்பிடுவதும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குல..." என்றாள்.
"அதுவும் உண்மை தான். நீ கூப்பிடுற மாடுலேஷன் நல்லா இருக்கும்" என்ற இனியன்,
"அழகி அந்த லெப்ட் சைட்ல இருக்க ரூம்ல நீ தங்கிக்கோ. இந்த ரூம்ல தான் நா இருப்பேன்… ஏதாவது வேணும்னா தயங்கமா என்னை வந்து எழுப்பு" என்றான்.
இனியன் காட்டிய அறையினுள் சென்றவள், அலுப்புத் தீரக் குளித்துவிட்டு இரவு உடையை அணிந்துக் கொண்டு ஹாலிற்கு வந்தவள் கண்டது,சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இனியனை தான்.
அழகி அங்கு வந்ததை அப்போது தான் கவனித்த இனியன், "வா! வந்து உட்கார் அழகி" என்றான்.
அவள் அமர்ந்ததும்,"சாப்பிட என்ன ஆர்டர் பண்ணட்டும்??" என்றான் அழகியிடம்.
"எனக்கு எதுவும் வேண்டாம் இனியன் சார். வர வழியில சாப்பிட்டதே வயிறு ஃபுல்... உங்களுக்கு என்ன வேணுமோ அதை ஆர்டர் பண்ணுங்க" என்றாள்.
" எனக்கும் வயிறு ஃபுல் தான் அழகி" என்றான் சிரிப்பினுடே.
"அப்பறம்.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் இனியன் சார்" என்றாள் தயக்கமாக.
"என்ன??"
"அது, நாம கட்டாயம் தனித் தனி ரூம்ல தான் தூங்கனுமா??"
"பின்னே?? ஒன்னாவா தூங்க முடியும்" என்றான் சிரித்தவாறு.
"சே! நா அப்படி சொல்லல. அது வந்து எனக்கு தனியா தூங்கப் பயம்.. சோ ரெண்டுப் பேரும் இங்க ஹாலிலேயே தூங்கலாம?? ப்ளீஸ்.." என்றவளின் கோரிக்கையை மறுக்கவா செய்வான் இனியன். அவனும் சரியென்று சம்மதம் சொல்லிவிட,
"அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு இனியன் சார். நா தனியா இருந்தா பேய் வரும்னு நினைச்சு பயப்படுவேன். இப்போ நிம்மதியா நா போய் பிளாக் காபி போடுறேன்.. உங்களுக்கு அதுப் பிடிக்குமா ?? இல்ல க்ரீன் டீ போடடுமா??" என்றவளை இமைக்காமல் பார்த்தவன்,
"பிளாக் காபி?? அதுவும் இந்த டயம்ல" என்றான் கேள்வியாக.
"எனக்கு நயிட் தூங்குறதுக்கு முன்ன பிளாக் காபி குடிச்சத்தான் தூக்கம் வரும் இனியன் சார்!" என்றவள் சமயலறைக்கு சென்று பிளாக் காபி போட ஆரம்பித்தாள்.
"அப்போ எனக்கும் அதையே போடு அழகி!" என்று கூறியவன். ஹாலில் அமர்ந்து ஒவ்வொரு டிவி சேனல்களாக மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இனியனின் கைகள் எதர்ச்சியாக பாட்டு சேனல் ஒன்றை வைக்க. அதில் ஓடிய பாடலைக் கண்டதும் மீண்டும் சேனலை மாற்றினான் அவன்.
சமையலறையில் நின்றிருந்த அழகியின் செவிகளிலும் அந்த பாடலின் வரிகள் விழ, தனக்கொரு காபி கப்பும் இனியனுக்கு ஒரு கப்புமாக இரு கைகளிலும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு விரைந்து வந்தவள்,
"இப்போ ஒரு சாங் போச்சே … அந்த சேனல் வைங்க இனியன்!" என்றாள்.
"ஏன்??"
"வைங்களேன்" என்றவள் அவனிடம் இருந்த ரிமோட்டை வாங்கி அவளே அந்த சேனலிற்கு மாத்தியவள், இனியன் கையில் அவனுக்கான கப்பை கொடுத்துவிட்டு சோபாவில் அமர்ந்து அந்த பாடலை கேட்டு ரசித்தவள், அவளையும் அறியாமல் அந்த பாடலில் ஆழ்ந்து அதனுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தாள் அழகி.
'வாழ்க்கை என்பது என்ன…
பள்ளிபாடமுமல்ல...
கற்று கொண்டதை மெல்ல முன்னேற...
காதல் என்பது என்ன...
புள்ளி கோலமுமல்ல...
காற்றில் கலையும் போது தள்ளாட...
எங்கோ எங்க ஓர் உலகம்…
உனக்காக காத்து கிடக்கும் …
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே ...
நதி காயலாம்…
நினைவில் உள்ள காட்சி காயுமா?? '
பாடும் அழகியையே இமைக்காமல் பார்த்திருந்தான் இனியன்.
பாடல் முடியவும் தான், தானும் அந்த பாடலுடன் இணைந்துப் பாடி இருக்கிறோம் என்பதை உணர்ந்த அழகி,
"இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்… தினமும் இதைக் கேட்டால் தான் எனக்கு தூக்கமே வரும் இனியன். பர பர பட்டாம்பூச்சி சாங் .. கிட்டத்தட்ட எனக்கு ஒரு தாலாட்டு மாதிரி.." என்றுக் கூறியவளைப் பார்த்து,
"ரொம்ப அழகா பாடுற அழகி " என்றவன். அதை தாண்டி வேறேதும் கூறவில்லை அவளிடம்.
அழகி கேட்டுக் கொண்டதுப் போலவே இருவரும் சோபாவின் அருகே டிவியின் முன்பு பாயை விரித்து அதில் படுத்தப்படியே டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு எப்போது எப்படி இருவரும் உறங்கினர் என்பது அவர்களுக்கே தெரியாது.
மறுநாள் காலை விடியவும், அழகி மெரூன் வண்ணப் பட்டு புடவையிலும், இனியன் நீல நிறச் சட்டை மற்றும் வெள்ளை வேட்டியிலும் தயாராகிப் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல, அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர் அழகியின் தோழி ரம்யாவும், அவள் காதலன் கோகுலும்.
பதிவுத் திருமணம் இனிதே நடந்து முடிய, அவர்களுக்காக வாங்கிய பசிரிப் பொருட்களைக் கொடுத்து வாழ்த்திவிட்டு விடைப் பெற்றனர் அழகியும், இனியனும்.
"இவ்வளவு தூரம் வந்துட்டோம்… அப்படியே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா இனியன் சார்??" என்ற அழகியின் ஆசைகாக அவளை அங்கு அழைத்துச் சென்றான் இனியன்.
கோவிலில் ஒரு மூத்த தம்பதியரின் கால்களில் ஜோடி ஜோடியாக தம்பதியர்கள் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவும், அது எதற்கு என்று எதையும் விசாரிக்காமலேயே இனியனுடன் சென்று அவர்களிடம் ஆசி வாங்கினாள் அழகி.
"இப்போ என்ன விஷயம்னு தெரியாம எதுக்கு அவங்க கிட்டப் போய் ஆசிர்வாதம் வாங்குன அழகி??" என்று இனியன் கேட்கவும், அவ்வளவு நேரம் இருந்த சுமுகமான சூழல் மறைந்து கடுப்பானாள் அழகி.
"ஏன் எல்லாரும் அவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்குறாங்கன்னு உங்களுக்குத் தெரியணும்
அவ்வளவு தானே??" என்றவள்.
அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த பெண்மணியை அழைத்து, "ஆண்டி! ஏன் அந்த பெரியவங்க கால்ல விழுந்து எல்லாரும் ஆசிர்வாதம் வாங்குறாங்க?" என்றாள் கேள்வியாக.
"ஓ! அதுவா! அவங்களுக்கு இப்போ தான் சதாபிஷேகம் முடிஞ்சதும்மா…
அதான் அவங்க கிட்ட ஆசி வாங்கினா தம்பதியர் மன ஓற்றுமையோடு, நீண்டக் காலம் சேர்ந்து வாழ்வாங்கன்னு நம்பிக்கை. அதான் எல்லாரும் அவங்க கிட்ட ஆசி வாங்குறாங்க. உங்களைப் பார்த்தாலும் புதிதாக திருமணமான தம்பதி போல தான் தெரியுறீங்க. போங்க .. நீங்களும் போய் அவங்க கிட்ட ஆசி வாங்குங்க" என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போய் நின்ற அழகியை,
"இதுக்கு தான், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்னு சுத்தக் கூடாது அழகி" என்று அவளைக் கிண்டல் செய்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவன், அழகியுடன் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தான்.
கோவிலின் குளத்தருக்கே சற்று நேரம் நின்றிருந்தவர்கள். வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்புகையில் தான் அழகியின் கண்களில் பட்டது அந்த கடை … ரோஜாஸ் மினியேச்சர் ஷாப்.
அந்த கடையை கண்டதும், இனியனையும் அழைத்துக் கொண்டு கடையினுள் சென்றவள் தனக்கு பிடித்த குட்டிக் குட்டி கடாய், குட்டி அடுப்பு, குட்டி தோசை தவா என்று அனைத்தையும் வாங்கியவள், அந்த பைகளை எல்லாம் இனியனிடம் தந்துவிட்டு முகம்கொள்ளா புன்னகையுடன் நடந்து வந்தாள்.
"சோப்பு சாமான் விளையாடுற வயசா அழகி உனக்கு?" என்றான் இனியன் தன் கைகளில் இருக்கும் பைகளை பார்த்தப்படி.
"எதே!! சோப்பா?? இதுக்கு பேரு மினியேச்சர் குக்கிங் இனியன் சார்!! நாம ஊருக்கு போனதும் ஒரு தடவ உங்களுக்கு நானே இதுல குக் பண்ணித் தாரேன்" என்றவளை நோக்கி,
"உசுரு முக்கியம் பிகிலே!!" என்றான் இனியன்.
அவன் தோள்களில் இரண்டு அடியைப் போட்டவள், "கிண்டலாப் பண்றீங்க" என்று அவன் கைகளிலும் கிள்ளினாள்.
"கொலைகாரி.. கொல்ல பாக்குறா" என்று இனியன் போலியாக அலற. அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அழகி.
சிரிப்பும், கிண்டலுமாக வீட்டிற்கு வந்த இனியனும் அழகியும் வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டவர்கள், ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த புதுக்கோட்டை பஸ்சில் அமர்ந்ததும் தான் நிம்மதி பெருமூச்சையே விட்டனர்.
"உங்களை ரொம்ப தொல்லை பண்ணுறேன்ல சாரி.." என்ற அழகியைப் பார்த்து சிரித்தவன்.
"எனக்கு நிறைய அர்ஜெண்ட் வேலை இருக்கு அழகி. அதான் இவ்வளவு அவசரமா உன்னையும் கிளம்ப வச்சிட்டேன்.அதுக்கு நா தான் சாரி கேட்கணும். நிச்சயமா அடுத்த முறை நாம சென்னை வரப்போ நிதானமா உனக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுறேன்டா" என்றான் இனியன் சமாதானமாய்.
அதன் பிறகு, ஒரே ஹெட்செட்டை இருவரும் ஒரு ஒரு காதில் மாட்டிக் கொண்டு அழகியின் ஃபோனில் இருந்த காமெடிப் படம் ஒன்றைப் பார்த்துச் சிரித்தவாறே தங்களது பயணத்தை இனிமையாகத் தொடர்ந்தனர் இருவரும், தங்களிடம் தாங்களே அறியாமல் உருவாகி இருந்த அந்த இயல்பான நெருக்கத்தை பற்றி அறியாமல்.
Last edited: