அத்தியாயம்-21
அழகியின் ஃபோன் சிக்னல் மணமேல்குடி என்னும் பகுதியில் தான் தற்போது செயலில் இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறிந்த இனியன் குழு அங்கு விரைந்துச் சென்றது.
ஜிபிஎஸ்சில் காட்டிய இடத்திற்கு வந்தவர்கள், அது ஒரு வாரச்சந்தை நடைபெறும் இடமாக இருக்கவும், இங்கே எதற்கு அந்த கடத்தல் காரர்கள் அழகியை அழைத்து வந்திருப்பார்கள்?? என்று குழம்பியப்படியே மீண்டும் அழகியின் அலைபேசி சிக்னல் இருக்கும் இடத்தைச் சரிப்பார்க்க. அதுவோ! இந்த இடம் தான் நீங்கள் தேடும் இடம் என்று அடித்துக் கூறியது.
அந்த இடத்தையே சுற்றிச் சுற்றித் தேடியவர்களின் கவனத்தை அங்கிருந்த ஒரு அட்டைப்பெட்டி ஈர்க்க... அதனைத் திறந்துப் பார்த்தால், அழகியின் அலைபேசி உள்ளிருந்து இவர்களைப் பார்த்து பல் இளித்துக் கொண்டிருந்தது.
இது தங்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதை ஒருவாறுப் புரிந்துக்கொண்டவர்கள், மேற்கொண்டு என்னச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர். அந்நேரம் இனியனின் அலைபேசியிற்கு அழைத்திருந்த மருதுவோ, யாரோ ஒருவர் ராஜனை ஜாமீனில் வெளியே எடுக்க, தங்களது அடையாலங்களை மறைத்து முயன்றுக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது என்று தெரிவித்தான்.
ராஜனை ஜாமீனில் எடுக்க முயல்வது யாராக இருக்கும் என்று யோசித்தவாறே சென்றவனின் கண்ணில் பட்டது ஒரு கைச் சங்கிலி, அழகியின் அலைபேசி இருந்த அட்டைப்பெட்டியின் அருகே.
அந்தக் கைச் சங்கிலியை கையில் எடுத்தவன், நெற்றிச் சுருங்க அதைச் சற்று நேரம் பார்த்துவிட்டு, தன் பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நேரே சென்றது அருணாச்சலத்தின் கோடவுனிற்கு தான்.
************************
தன்னை ஜாமீனில் எடுக்க முயன்றுக் கொண்டிருக்கும் நபரிடம் தனக்கு அதில் விருப்பமே இல்லை என்று ஒரேடியாக மறுத்தாகிவிட்டது தான். ஆனாலும், அவர் இத்துடன் இதை விட்டுவிடுவார் என்று நினைப்பதும் முட்டாள் தனம். சந்தேகமின்றி, நிச்சயம் திரும்பி வந்து அவர் இதே விஷயத்தை மீண்டும் கேட்ட கூடும். இத்தனை ஆண்டுகளில் இல்லாத பாசம் திடிரென்று நான் ஜெயிலில் இருக்கும் போது மட்டும் எப்படி வந்ததோ??. போதும்! இனி தனக்கு யார் நட்பும் தேவையில்லை, யார் பரிவும் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தவன். இனி, அவர் எத்தனை முறை வந்து கேட்டாலும், தனது முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான் ராஜன்.
இந்த யாருமற்ற தனிமை சிறையும் நன்றாக தான் இருந்தது ராஜனுக்கு. கடந்த சில வருடங்களாகவே ஓய்வு என்பது ஏதுமின்றி ஒரே ஓட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த ஓய்வு தேவையானதாகவே இருந்தது.
இந்த தனிமையில் நிறையவே சிந்திந்தவனிற்கு ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்ன்னு சும்மா ஒன்றும் சொல்லி வைக்கவில்லை என்று. தான் செய்தத் தவறை எல்லாம் எண்ணித் தன்னையே சுயப்பரிசோதனைச் செய்துக்கொள்ள இன்னும் கூட நாட்கள் வேண்டும் என்று தான் தோன்றியது அவனுக்கு.
ஆழ்ந்த யோசனையில் இருந்த ராஜனை, 'ராஜன் உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க' என்ற ஏட்டின் குரல் சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.
'தன்னை தேடி ஒரு பெண்ணா??யார் அது??' என்ற எண்ணிக்கொண்டே ஏட்டுடன் சென்றவன் அங்கு நின்றிந்தவளைக் கண்டுத் திகைத்து 'நீயா??' என்றான் அதிர்ச்சியாக.
சத்தியமாக அவளை இங்கே சற்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனின் திகைத்தக் குரலே கூறியது.
அவளுக்கோ மழிக்கப்பாடாத தாடியுடன், சற்றே இளைத்துக் காணப்பட்ட ராஜனைப் பார்க்க மாட்டாமல், கண்களில் வழியும் கண்ணீருடன் "நானே தான் ராஜன்!!" என்றாள்.
"இப்போ இங்க எதுக்கு வந்திருக்க??" சுல்லென்று எரிந்து விழுந்தவனிடம்,
"நான் வராமல் .. வேற யாரு வருவா ராஜன்?? ப்ளீஸ்.. அந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்களேன்" என்று கெஞ்சாதக் குறையாக கேட்டவளையே நிதானமாக ஆழ்ந்துப் பார்த்தவன், "நான் வெளிய வருவதில் உனக்கென்ன அவ்வளவு சந்தோஷம்??" என்றான் நிதானமாக.
"ஏன்னா நீங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியல ராஜன். நான் உயிரா நேசிக்கிற நீங்க இங்க துன்பத்தில் இருக்கும் போது நான் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?? நீங்க சந்தோஷமா வாழனும்னு தான் மனசு முழுக்க உங்க மேல காதல் இருந்தும் … உங்க விருப்பப்படி நீங்க அழகியை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு விலகி இருந்தேன்.. இப்போ தான் அதுவும் இல்லையே!! அப்புறம் ஏன் இன்னும் என்னை விலக்கி வைக்கிறீங்க ராஜன்.. என் காதல் தான் உங்களுக்கு புரியலை. சரி, பரவாயில்லை! ஆனா, ஏன் இப்படி உங்க மேல அன்பு வச்சிருக்க எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க.. நீங்க என் காதலை கூட ஏத்துக்க வேண்டாம். இந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்க ப்ளீஸ்…" என்றாள் கெஞ்சலாக.
"ஹே! ஜஸ்ட் ஷட் அப்! காதல் அது இதுன்னு இங்க நின்னு உளறிக்கிட்டு இருக்காம ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. நீ சொல்லுறது முதல்ல காதலே இல்லை.. அந்த வயசுல உனக்கிருந்த ஈர்ப்பை தான் நீ காதல்னு நினைச்சிட்டு இருக்க" என்றான் ராஜன் எங்கோப் பார்த்தப்படி.
"நீங்க சொல்லுற இந்த ஈர்ப்பு அந்த பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கு வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா, உங்களுக்கு அழகியை பிடிக்கும்னு தெரிஞ்சும் இத்தனை வருஷமா உங்களை மட்டுமே நினைச்சு வாழ்வதற்க்கு பேரு காதல் தான் ராஜன்.."
"இது காதல் இல்ல பைத்தியக்கார தனம். இனியாவது ஒழுங்கா உன்னோட வாழ்க்கையை வாழு.. நா உனக்கு கிடைப்பேன்னு நினைக்குறது எல்லாம் கானல் நீர் மாதிரி தான்.. புரிஞ்சிக்கோ.. அண்ட் அந்த ஜாமீனுக்கு நா சம்மதம் சொல்ல நோ சான்ஸ்.. அதுவும் அவர் ஜாமீன் எடுத்து தான் நான் வெளியே வரணும்னு எனக்கு அவசியமில்லை.." என்றான் இறுகியக் குரலில்.
" இதுக்கு பேரு விடண்டாவாதம் ராஜன்! நீங்க அவர் முழியமா வரும் ஜாமீன் வேண்டாம்னு சொல்லுறதுக்கு காரணம் மதியும் உங்க அப்பாவும் தானே??" என்றவளது கேள்வியில் திகைத்தவன்,
" மதியைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்??"பலவித உணர்ச்சி தலும்பல்கள் அந்த குரலில்.
"நீங்க சொன்னக் கதையை இந்த ஊர் வேணுமன்னா நம்பும். உங்களையே நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு உங்க சின்ன சின்ன மாற்றமும் தெரியும் ராஜன். அப்போ நா எப்படி அதை நம்புவேன். உங்க சுகத்துக்கத்தில் உங்க கூடவே இருக்கத் தான் ஆசைப்படுறேன் ராஜன். அது நடக்கலைனாலும் பரவாயில்லை… நீங்க வெளியே வந்தாலே போதும்" என்று தழுதலுத்தக் குரலில் கூறியவளைக் கண்டவனின் விழிகள் இரண்டும் மெல்ல கணிந்தன.
"நா என்ன பண்ணனும்னு நினைக்குற இப்போ??" என்றான் அவளையே பார்த்தவாறு.
"ஜாமீன் வாங்க ஒத்துக்கோங்க.. அது போதும்!!"
" அவர் கிட்ட ஏற்பாடு பண்ணச் சொல்லு.. அப்புறம் அது மட்டும் போதுமா உனக்கு??" என்றவனைப் புரியாமல் பார்த்தவள், 'புரியலை' என்றாள் விழித்தவாறு.
"நேரடியாவே கேக்குறேன்.. கல்யாணம் பண்ணிக்காலமா?? எனக்காக மட்டுமே இத்தனை வருஷம் நா உனக்கு கிடைப்பேனா இல்லையான்னு கூட நிச்சயம் இல்லாத போதும். எனக்காக காத்துகிட்டு இருந்து , இப்போ நா வெளியே வரணும்னு என்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கியே.. உன்னை மிஸ் பண்ணா என்ன விட பெரிய முட்டாள் வேற யாரும் இருக்க மாட்டாங்க" என்றான் ஆதூரமாக.
தான் கேட்பது உண்மை தானா?? என்று அவள் திகைத்து நின்றதெல்லாம் ஒரு கணம் தான். மறு கணமே, 'அது உண்மை தான்' என்று மூளை எடுத்துரைக்க ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலக் காதல் அவளுடையது. தன் காதல் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு வாழ்வதே வரம் என்று நினைத்து வாழ்ந்தவளுக்கு, இன்று தன் கனவு வாழ்வு கைகூடப் போகும் சந்தோஷத்தில் , தன்னையும் மறந்து கைகளை விரித்தவாறு துள்ளிக் குதித்தவளை கண்டுப் புன்னகை கூட எட்டிப்பார்த்தது ராஜனுக்கு.
"இது போதும் ராஜன் எனக்கு… வார்த்தைகளே வரலை.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேங்க்ஸ் ராஜன் ரொம்ப தேங்க்ஸ்.." என்றவள், ராஜனின் ஜாமீனுக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆயுதமானாள்.
*****************
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அழகி, தன் மீது எதுவோ ஈரமாக பட்டென்று படவும் பதறி எழுந்தாள்.
சுற்றி எங்கும் இருட்டாக இருக்க, இவள் கட்டிவைக்கப் பட்டிருக்கும் நாற்காலியின் மேல் மட்டும் ஒரு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் அந்த இருண்ட பகுதியில் யாரேனும் நின்றிருந்தாள் அவர்களால் அழகியைத் தெளிவாக பார்க்க முடியும். ஆனால், அழகியினால் தான் யாரையும் பார்க்க முடியாது.
தன் முகத்தில் இருந்து வழியும் நீரினைத் துடைக்க முடியா வண்ணம் கைகள் இரண்டும் பின்னோக்கி நாற்காலியுடன் கட்டி வைக்கப்பட்டிருக்க. மெல்லத் தன் தோள்களிலேயே முகத்தை துடைத்துக் கொண்டவள். தன்னை சுற்றியிருக்கும் காரிருளைக் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், செவிகளைக் கூர்மையாக்கி தன்னை சுற்றி கேட்கும் சின்ன சின்ன ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவளின் செவிகளைத் தீண்டியது அந்தக் குரல்.
"வெல்கம் டு அவர் பிளேஸ் அழகி" என்ற குரல் அழகிற்கு மிகவும் பரிச்சயமானது தான்.
இந்த குரலுக்குச் சொந்தக்காரன் தன் குரலை மறைக்க, ஏதோ குரலை மாற்றிக் காட்டும் கருவியைப் பயன்படுத்தி பேசுகிறான் போலும். ஆனால்! அந்தோ பரிதாபம்! அழகி கண்டு பிடித்துவிட்டாளே இது அவளுக்கு பரிச்சயமானக் குரல் தானென்று. யாருடைய குரல் என்பதை தான் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. மூளை ஒருவித மந்த நிலையிலேயே இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அது கடத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.
யாரிவன்?? எதற்காக என்னை கத்தினான்?? அந்த மயக்கத்தில் இருந்த ஆட்கள் என்னவானார்கள்?? இப்போது பேசுபவன் அந்த மாஸ்க் மனிதனா?? இல்லை மற்றவனா?? பலப்பல கேள்விகள் அழகியின் எண்ணங்களை வியாபித்திருந்தது.
"நம்மளை ஏன்டா தூக்கினாங்கன்னு யோசினையா அழகி??" என்ற குரலில், கனவில் இருந்து விழிப்பதைப் போல் ஒரு திடுக்கிடளுடன் தன்னிலை அடைந்த அழகி, "வாட்??" என்றாள் புரியாமல்.
"உன்னை கடத்தனும் நாங்க பிளான் பண்ணவேயில்லை. நீயா வந்து எங்க கிட்ட சிக்கியிருக்க… " என்று கூறிச் சிரித்தவன். பின் மெல்ல அவளருகே வந்தான்.
"உனக்கு இப்போ என்ன வேணும்?? என் கையை கழட்டி விடு… வலிக்குது.." என்றாள் வேதனையுடன்.
"அச்சோ.. உனக்கு கை வழிக்குதா.. சாரி அழகி .. சாரி.." என்றவன், நாற்காலியுடன் சேர்த்துக் கட்டியிருந்த அழகியின் கைகளை அவிழ்த்து விட்டு, தண்ணீர் பாட்டிலை அவளிடம் தந்து குடிக்கச் சொன்னான் பரிவாக. இருந்தும் அவனது உருவம் அந்த இருட்டில் தான் இருந்தது. கைகள் மட்டும் வெளிச்சத்திற்கு வந்து, அழகியின் கட்டைப் பிரித்துவிட்டது.
சந்தேகத்துடன் அதை அருந்தாமல், அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பார்த்து புன்னைத்தவன், "அதுல ஒன்னும் கலக்கவில்லை.. நீ பயமில்லாம் குடி" என்றான் மென்னகையுடன்.
இதோ! இந்த மென்மை, பரிவு இதெல்லாம் தான் அழகிற்கு சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
அதே சந்தேகப் பார்வையுடன் "யார் நீ??" என்றாள் .
"பிளாக் ஸ்பார்க்" என்றான் அவன் கர்வ புன்னகையுடன்.
"பிளாக் ஸ்பார்க்?? ஹே! யூ … என்னை ஏன்டா கடத்துன.. நீ தான் என்னை கடத்தினது இனியனுக்கு மட்டும் தெரிஞ்சது நீ செத்த.." என்று ஆக்ரோஷமாக பேசியவளைக் கண்டுச் சிரித்தவன்.
"யாரு உன் புருஷன் அந்த இனியனா?? என்னை கொன்னுடுவானா?? குட் ஜோக் மிசஸ். மதியழகி அமிழ்தினியன். நா பிளாக் ஸ்பார்க்!! என்னை அவ்வளவு சுலபமா யாரலையும் கண்டிப்பிடிக்க முடியாது.." என்று கர்வத்துடன் கூறிவனிடன்,
"அவ்வளவு நம்பிக்கை இருக்கிறவன், அந்த வாய்ஸ் சேன்ஞ் பண்ணுற டிவைஸ் இல்லாம பேசு பார்ப்போம்" என்றாள் அழகி சவாலாக.
"ஆஹான்! அதை அப்புறம் பார்ப்போம். இப்போ பாண்டிய ராஜன் உனக்கு நிச்சயம் அப்போ போட்டுவிட்டானமே அந்த மோதிரத்தை கழட்டிக் கொடு…" என்றான் கட்டளையாக.
"முடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவ?? முதல்ல நீ அந்த டிவைஸ் இல்லாம உன்னோட உண்மையான குரல்ல பேசு.. இல்லைனா உன் முகத்தை என் கிட்ட காட்டு.. அப்போ நான் அந்த மோதிரத்தை கழட்டி தரேன்" என்றாள் பிடிவாதமாக.
அழகியின் இந்த மறுப்பும், எதிர் பேச்சும் சற்றும் பிடிக்கவில்லை போலும் பிளாக் ஸ்பார்கிற்கு, " எதிர்த்து பேசாம அமைதியா நா கேட்டதை எங்கிட்ட தந்தா நல்லது. இல்லனா வீணா காயப்படுவ அழகி" எச்சரித்தான் அவன்.
"உன்னால முடிஞ்சதைப் பண்ணு. நீ எனக்கு தெரிஞ்ச யாரோ தான் … எனக்கு நல்லா தெரியும் … உன்னால என்னை காயப்படுத்த முடியாதுன்னு.." என்று அழகி கூறி முடிக்கவில்லை, அதற்குள் அவளின் கன்னத்தில் இடியென ஓங்கி அறைந்திருந்தான் பிளாக் ஸ்பார்க்.
இதை சற்றும் எதிர்பார்திராத அழகியோ திகைத்து விழிக்க, அவள் அருகில் வந்த பிளாக் ஸ்பார்க்கோ அவளின் கைகளைப் பற்றி வலதுக் கையின் மோதிர விரலில் அவள் அணிந்திருந்த சற்றே பெரிய அளவிலான பச்சை கல் மோதிரத்தை கழட்ட முயன்றான்.
ஆனால், அந்த மோதிரமோ 'நா அழகி கையில் இருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் .. உன்னால முடிஞ்சதை பாருடா' என்னும் விதமாக அசையாமல் இருக்க, கோபம் தலைக்கேறியது பிளாக் ஸ்பார்கிற்கு.
உடனே தன் கைகளில் அழுத்தத்தைக் கூட்டி மேலும் முயற்சித்தான். அப்போதும் அது வராமல் இருக்கவும்.
சற்றும் யோசிக்காமல் தனது சட்டைப் பையிலிருந்து சிறிய பேணா வடிவிலான கத்தியை எடுத்தவன், அழகிக்கு ராஜன் அணிந்திருந்த அந்த பச்சை வண்ண மோதிரத்தை அறுக்க ஆரம்பித்தான். மோதிரத்தை அறுக்கையில் அந்த கத்தி அழகியின் கைகளையும் நன்றாகவேப் பதம் பார்த்தது.
பதினைந்து நிமிடப் போராட்டதிற்கு பிறகு வெற்றிகரமாக அந்த மோதிரத்தை எடுத்தவன், "சாரி அண்ட் தேங்க்ஸ்" என்று அழகியிடம் கூறிவிட்டு அந்த மோதிரத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் பிளாக் ஸ்பார்க்.
கைகளில் இருந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்த அழகியை, அவன் மனிதியாக கூட கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன் வேலை முடிந்தது என்னும் ரீதியில் கிளம்பிச் சென்றிருந்தான் அவன்.
கைகள் வழியாக ரத்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்ல, லேசாக கண்கள் இருட்ட துடங்கியது அழகிற்கு.
மயங்கிவிட கூடாது! கூடாது! என்று தனக்குள்ளேயே உருப்போட்டவாறே அமர்ந்திருந்தாள் அவள்.
அழகியின் ஃபோன் சிக்னல் மணமேல்குடி என்னும் பகுதியில் தான் தற்போது செயலில் இருக்கிறது என்பதை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறிந்த இனியன் குழு அங்கு விரைந்துச் சென்றது.
ஜிபிஎஸ்சில் காட்டிய இடத்திற்கு வந்தவர்கள், அது ஒரு வாரச்சந்தை நடைபெறும் இடமாக இருக்கவும், இங்கே எதற்கு அந்த கடத்தல் காரர்கள் அழகியை அழைத்து வந்திருப்பார்கள்?? என்று குழம்பியப்படியே மீண்டும் அழகியின் அலைபேசி சிக்னல் இருக்கும் இடத்தைச் சரிப்பார்க்க. அதுவோ! இந்த இடம் தான் நீங்கள் தேடும் இடம் என்று அடித்துக் கூறியது.
அந்த இடத்தையே சுற்றிச் சுற்றித் தேடியவர்களின் கவனத்தை அங்கிருந்த ஒரு அட்டைப்பெட்டி ஈர்க்க... அதனைத் திறந்துப் பார்த்தால், அழகியின் அலைபேசி உள்ளிருந்து இவர்களைப் பார்த்து பல் இளித்துக் கொண்டிருந்தது.
இது தங்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதை ஒருவாறுப் புரிந்துக்கொண்டவர்கள், மேற்கொண்டு என்னச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கலந்தாலோசித்தனர். அந்நேரம் இனியனின் அலைபேசியிற்கு அழைத்திருந்த மருதுவோ, யாரோ ஒருவர் ராஜனை ஜாமீனில் வெளியே எடுக்க, தங்களது அடையாலங்களை மறைத்து முயன்றுக் கொண்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது என்று தெரிவித்தான்.
ராஜனை ஜாமீனில் எடுக்க முயல்வது யாராக இருக்கும் என்று யோசித்தவாறே சென்றவனின் கண்ணில் பட்டது ஒரு கைச் சங்கிலி, அழகியின் அலைபேசி இருந்த அட்டைப்பெட்டியின் அருகே.
அந்தக் கைச் சங்கிலியை கையில் எடுத்தவன், நெற்றிச் சுருங்க அதைச் சற்று நேரம் பார்த்துவிட்டு, தன் பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நேரே சென்றது அருணாச்சலத்தின் கோடவுனிற்கு தான்.
************************
தன்னை ஜாமீனில் எடுக்க முயன்றுக் கொண்டிருக்கும் நபரிடம் தனக்கு அதில் விருப்பமே இல்லை என்று ஒரேடியாக மறுத்தாகிவிட்டது தான். ஆனாலும், அவர் இத்துடன் இதை விட்டுவிடுவார் என்று நினைப்பதும் முட்டாள் தனம். சந்தேகமின்றி, நிச்சயம் திரும்பி வந்து அவர் இதே விஷயத்தை மீண்டும் கேட்ட கூடும். இத்தனை ஆண்டுகளில் இல்லாத பாசம் திடிரென்று நான் ஜெயிலில் இருக்கும் போது மட்டும் எப்படி வந்ததோ??. போதும்! இனி தனக்கு யார் நட்பும் தேவையில்லை, யார் பரிவும் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டிருந்தவன். இனி, அவர் எத்தனை முறை வந்து கேட்டாலும், தனது முடிவை மட்டும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான் ராஜன்.
இந்த யாருமற்ற தனிமை சிறையும் நன்றாக தான் இருந்தது ராஜனுக்கு. கடந்த சில வருடங்களாகவே ஓய்வு என்பது ஏதுமின்றி ஒரே ஓட்டமாக ஒட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த ஓய்வு தேவையானதாகவே இருந்தது.
இந்த தனிமையில் நிறையவே சிந்திந்தவனிற்கு ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்ன்னு சும்மா ஒன்றும் சொல்லி வைக்கவில்லை என்று. தான் செய்தத் தவறை எல்லாம் எண்ணித் தன்னையே சுயப்பரிசோதனைச் செய்துக்கொள்ள இன்னும் கூட நாட்கள் வேண்டும் என்று தான் தோன்றியது அவனுக்கு.
ஆழ்ந்த யோசனையில் இருந்த ராஜனை, 'ராஜன் உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்காங்க' என்ற ஏட்டின் குரல் சுயநினைவிற்குக் கொண்டு வந்தது.
'தன்னை தேடி ஒரு பெண்ணா??யார் அது??' என்ற எண்ணிக்கொண்டே ஏட்டுடன் சென்றவன் அங்கு நின்றிந்தவளைக் கண்டுத் திகைத்து 'நீயா??' என்றான் அதிர்ச்சியாக.
சத்தியமாக அவளை இங்கே சற்றும் அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனின் திகைத்தக் குரலே கூறியது.
அவளுக்கோ மழிக்கப்பாடாத தாடியுடன், சற்றே இளைத்துக் காணப்பட்ட ராஜனைப் பார்க்க மாட்டாமல், கண்களில் வழியும் கண்ணீருடன் "நானே தான் ராஜன்!!" என்றாள்.
"இப்போ இங்க எதுக்கு வந்திருக்க??" சுல்லென்று எரிந்து விழுந்தவனிடம்,
"நான் வராமல் .. வேற யாரு வருவா ராஜன்?? ப்ளீஸ்.. அந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்களேன்" என்று கெஞ்சாதக் குறையாக கேட்டவளையே நிதானமாக ஆழ்ந்துப் பார்த்தவன், "நான் வெளிய வருவதில் உனக்கென்ன அவ்வளவு சந்தோஷம்??" என்றான் நிதானமாக.
"ஏன்னா நீங்க கஷ்டப்படுவதை என்னால பார்க்க முடியல ராஜன். நான் உயிரா நேசிக்கிற நீங்க இங்க துன்பத்தில் இருக்கும் போது நான் மட்டும் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?? நீங்க சந்தோஷமா வாழனும்னு தான் மனசு முழுக்க உங்க மேல காதல் இருந்தும் … உங்க விருப்பப்படி நீங்க அழகியை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு விலகி இருந்தேன்.. இப்போ தான் அதுவும் இல்லையே!! அப்புறம் ஏன் இன்னும் என்னை விலக்கி வைக்கிறீங்க ராஜன்.. என் காதல் தான் உங்களுக்கு புரியலை. சரி, பரவாயில்லை! ஆனா, ஏன் இப்படி உங்க மேல அன்பு வச்சிருக்க எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க.. நீங்க என் காதலை கூட ஏத்துக்க வேண்டாம். இந்த ஜாமீனுக்கு மட்டும் ஒத்துக்கோங்க ப்ளீஸ்…" என்றாள் கெஞ்சலாக.
"ஹே! ஜஸ்ட் ஷட் அப்! காதல் அது இதுன்னு இங்க நின்னு உளறிக்கிட்டு இருக்காம ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. நீ சொல்லுறது முதல்ல காதலே இல்லை.. அந்த வயசுல உனக்கிருந்த ஈர்ப்பை தான் நீ காதல்னு நினைச்சிட்டு இருக்க" என்றான் ராஜன் எங்கோப் பார்த்தப்படி.
"நீங்க சொல்லுற இந்த ஈர்ப்பு அந்த பதினஞ்சு வயசுப் பொண்ணுக்கு வேணும்னா இருந்திருக்கலாம். ஆனா, உங்களுக்கு அழகியை பிடிக்கும்னு தெரிஞ்சும் இத்தனை வருஷமா உங்களை மட்டுமே நினைச்சு வாழ்வதற்க்கு பேரு காதல் தான் ராஜன்.."
"இது காதல் இல்ல பைத்தியக்கார தனம். இனியாவது ஒழுங்கா உன்னோட வாழ்க்கையை வாழு.. நா உனக்கு கிடைப்பேன்னு நினைக்குறது எல்லாம் கானல் நீர் மாதிரி தான்.. புரிஞ்சிக்கோ.. அண்ட் அந்த ஜாமீனுக்கு நா சம்மதம் சொல்ல நோ சான்ஸ்.. அதுவும் அவர் ஜாமீன் எடுத்து தான் நான் வெளியே வரணும்னு எனக்கு அவசியமில்லை.." என்றான் இறுகியக் குரலில்.
" இதுக்கு பேரு விடண்டாவாதம் ராஜன்! நீங்க அவர் முழியமா வரும் ஜாமீன் வேண்டாம்னு சொல்லுறதுக்கு காரணம் மதியும் உங்க அப்பாவும் தானே??" என்றவளது கேள்வியில் திகைத்தவன்,
" மதியைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்??"பலவித உணர்ச்சி தலும்பல்கள் அந்த குரலில்.
"நீங்க சொன்னக் கதையை இந்த ஊர் வேணுமன்னா நம்பும். உங்களையே நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு உங்க சின்ன சின்ன மாற்றமும் தெரியும் ராஜன். அப்போ நா எப்படி அதை நம்புவேன். உங்க சுகத்துக்கத்தில் உங்க கூடவே இருக்கத் தான் ஆசைப்படுறேன் ராஜன். அது நடக்கலைனாலும் பரவாயில்லை… நீங்க வெளியே வந்தாலே போதும்" என்று தழுதலுத்தக் குரலில் கூறியவளைக் கண்டவனின் விழிகள் இரண்டும் மெல்ல கணிந்தன.
"நா என்ன பண்ணனும்னு நினைக்குற இப்போ??" என்றான் அவளையே பார்த்தவாறு.
"ஜாமீன் வாங்க ஒத்துக்கோங்க.. அது போதும்!!"
" அவர் கிட்ட ஏற்பாடு பண்ணச் சொல்லு.. அப்புறம் அது மட்டும் போதுமா உனக்கு??" என்றவனைப் புரியாமல் பார்த்தவள், 'புரியலை' என்றாள் விழித்தவாறு.
"நேரடியாவே கேக்குறேன்.. கல்யாணம் பண்ணிக்காலமா?? எனக்காக மட்டுமே இத்தனை வருஷம் நா உனக்கு கிடைப்பேனா இல்லையான்னு கூட நிச்சயம் இல்லாத போதும். எனக்காக காத்துகிட்டு இருந்து , இப்போ நா வெளியே வரணும்னு என்கிட்ட வந்து கெஞ்சிக்கிட்டு இருக்கியே.. உன்னை மிஸ் பண்ணா என்ன விட பெரிய முட்டாள் வேற யாரும் இருக்க மாட்டாங்க" என்றான் ஆதூரமாக.
தான் கேட்பது உண்மை தானா?? என்று அவள் திகைத்து நின்றதெல்லாம் ஒரு கணம் தான். மறு கணமே, 'அது உண்மை தான்' என்று மூளை எடுத்துரைக்க ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலக் காதல் அவளுடையது. தன் காதல் தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு வாழ்வதே வரம் என்று நினைத்து வாழ்ந்தவளுக்கு, இன்று தன் கனவு வாழ்வு கைகூடப் போகும் சந்தோஷத்தில் , தன்னையும் மறந்து கைகளை விரித்தவாறு துள்ளிக் குதித்தவளை கண்டுப் புன்னகை கூட எட்டிப்பார்த்தது ராஜனுக்கு.
"இது போதும் ராஜன் எனக்கு… வார்த்தைகளே வரலை.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தேங்க்ஸ் ராஜன் ரொம்ப தேங்க்ஸ்.." என்றவள், ராஜனின் ஜாமீனுக்கு வேண்டிய வேலைகளை செய்ய ஆயுதமானாள்.
*****************
ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த அழகி, தன் மீது எதுவோ ஈரமாக பட்டென்று படவும் பதறி எழுந்தாள்.
சுற்றி எங்கும் இருட்டாக இருக்க, இவள் கட்டிவைக்கப் பட்டிருக்கும் நாற்காலியின் மேல் மட்டும் ஒரு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் அந்த இருண்ட பகுதியில் யாரேனும் நின்றிருந்தாள் அவர்களால் அழகியைத் தெளிவாக பார்க்க முடியும். ஆனால், அழகியினால் தான் யாரையும் பார்க்க முடியாது.
தன் முகத்தில் இருந்து வழியும் நீரினைத் துடைக்க முடியா வண்ணம் கைகள் இரண்டும் பின்னோக்கி நாற்காலியுடன் கட்டி வைக்கப்பட்டிருக்க. மெல்லத் தன் தோள்களிலேயே முகத்தை துடைத்துக் கொண்டவள். தன்னை சுற்றியிருக்கும் காரிருளைக் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், செவிகளைக் கூர்மையாக்கி தன்னை சுற்றி கேட்கும் சின்ன சின்ன ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவளின் செவிகளைத் தீண்டியது அந்தக் குரல்.
"வெல்கம் டு அவர் பிளேஸ் அழகி" என்ற குரல் அழகிற்கு மிகவும் பரிச்சயமானது தான்.
இந்த குரலுக்குச் சொந்தக்காரன் தன் குரலை மறைக்க, ஏதோ குரலை மாற்றிக் காட்டும் கருவியைப் பயன்படுத்தி பேசுகிறான் போலும். ஆனால்! அந்தோ பரிதாபம்! அழகி கண்டு பிடித்துவிட்டாளே இது அவளுக்கு பரிச்சயமானக் குரல் தானென்று. யாருடைய குரல் என்பதை தான் அவளால் சரிவர சிந்திக்க முடியவில்லை. மூளை ஒருவித மந்த நிலையிலேயே இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அது கடத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.
யாரிவன்?? எதற்காக என்னை கத்தினான்?? அந்த மயக்கத்தில் இருந்த ஆட்கள் என்னவானார்கள்?? இப்போது பேசுபவன் அந்த மாஸ்க் மனிதனா?? இல்லை மற்றவனா?? பலப்பல கேள்விகள் அழகியின் எண்ணங்களை வியாபித்திருந்தது.
"நம்மளை ஏன்டா தூக்கினாங்கன்னு யோசினையா அழகி??" என்ற குரலில், கனவில் இருந்து விழிப்பதைப் போல் ஒரு திடுக்கிடளுடன் தன்னிலை அடைந்த அழகி, "வாட்??" என்றாள் புரியாமல்.
"உன்னை கடத்தனும் நாங்க பிளான் பண்ணவேயில்லை. நீயா வந்து எங்க கிட்ட சிக்கியிருக்க… " என்று கூறிச் சிரித்தவன். பின் மெல்ல அவளருகே வந்தான்.
"உனக்கு இப்போ என்ன வேணும்?? என் கையை கழட்டி விடு… வலிக்குது.." என்றாள் வேதனையுடன்.
"அச்சோ.. உனக்கு கை வழிக்குதா.. சாரி அழகி .. சாரி.." என்றவன், நாற்காலியுடன் சேர்த்துக் கட்டியிருந்த அழகியின் கைகளை அவிழ்த்து விட்டு, தண்ணீர் பாட்டிலை அவளிடம் தந்து குடிக்கச் சொன்னான் பரிவாக. இருந்தும் அவனது உருவம் அந்த இருட்டில் தான் இருந்தது. கைகள் மட்டும் வெளிச்சத்திற்கு வந்து, அழகியின் கட்டைப் பிரித்துவிட்டது.
சந்தேகத்துடன் அதை அருந்தாமல், அமைதியாக அமர்ந்திருந்தவளைப் பார்த்து புன்னைத்தவன், "அதுல ஒன்னும் கலக்கவில்லை.. நீ பயமில்லாம் குடி" என்றான் மென்னகையுடன்.
இதோ! இந்த மென்மை, பரிவு இதெல்லாம் தான் அழகிற்கு சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
அதே சந்தேகப் பார்வையுடன் "யார் நீ??" என்றாள் .
"பிளாக் ஸ்பார்க்" என்றான் அவன் கர்வ புன்னகையுடன்.
"பிளாக் ஸ்பார்க்?? ஹே! யூ … என்னை ஏன்டா கடத்துன.. நீ தான் என்னை கடத்தினது இனியனுக்கு மட்டும் தெரிஞ்சது நீ செத்த.." என்று ஆக்ரோஷமாக பேசியவளைக் கண்டுச் சிரித்தவன்.
"யாரு உன் புருஷன் அந்த இனியனா?? என்னை கொன்னுடுவானா?? குட் ஜோக் மிசஸ். மதியழகி அமிழ்தினியன். நா பிளாக் ஸ்பார்க்!! என்னை அவ்வளவு சுலபமா யாரலையும் கண்டிப்பிடிக்க முடியாது.." என்று கர்வத்துடன் கூறிவனிடன்,
"அவ்வளவு நம்பிக்கை இருக்கிறவன், அந்த வாய்ஸ் சேன்ஞ் பண்ணுற டிவைஸ் இல்லாம பேசு பார்ப்போம்" என்றாள் அழகி சவாலாக.
"ஆஹான்! அதை அப்புறம் பார்ப்போம். இப்போ பாண்டிய ராஜன் உனக்கு நிச்சயம் அப்போ போட்டுவிட்டானமே அந்த மோதிரத்தை கழட்டிக் கொடு…" என்றான் கட்டளையாக.
"முடியாதுன்னு சொன்னா என்னப் பண்ணுவ?? முதல்ல நீ அந்த டிவைஸ் இல்லாம உன்னோட உண்மையான குரல்ல பேசு.. இல்லைனா உன் முகத்தை என் கிட்ட காட்டு.. அப்போ நான் அந்த மோதிரத்தை கழட்டி தரேன்" என்றாள் பிடிவாதமாக.
அழகியின் இந்த மறுப்பும், எதிர் பேச்சும் சற்றும் பிடிக்கவில்லை போலும் பிளாக் ஸ்பார்கிற்கு, " எதிர்த்து பேசாம அமைதியா நா கேட்டதை எங்கிட்ட தந்தா நல்லது. இல்லனா வீணா காயப்படுவ அழகி" எச்சரித்தான் அவன்.
"உன்னால முடிஞ்சதைப் பண்ணு. நீ எனக்கு தெரிஞ்ச யாரோ தான் … எனக்கு நல்லா தெரியும் … உன்னால என்னை காயப்படுத்த முடியாதுன்னு.." என்று அழகி கூறி முடிக்கவில்லை, அதற்குள் அவளின் கன்னத்தில் இடியென ஓங்கி அறைந்திருந்தான் பிளாக் ஸ்பார்க்.
இதை சற்றும் எதிர்பார்திராத அழகியோ திகைத்து விழிக்க, அவள் அருகில் வந்த பிளாக் ஸ்பார்க்கோ அவளின் கைகளைப் பற்றி வலதுக் கையின் மோதிர விரலில் அவள் அணிந்திருந்த சற்றே பெரிய அளவிலான பச்சை கல் மோதிரத்தை கழட்ட முயன்றான்.
ஆனால், அந்த மோதிரமோ 'நா அழகி கையில் இருந்து ஒரு இன்ச் கூட நகர மாட்டேன் .. உன்னால முடிஞ்சதை பாருடா' என்னும் விதமாக அசையாமல் இருக்க, கோபம் தலைக்கேறியது பிளாக் ஸ்பார்கிற்கு.
உடனே தன் கைகளில் அழுத்தத்தைக் கூட்டி மேலும் முயற்சித்தான். அப்போதும் அது வராமல் இருக்கவும்.
சற்றும் யோசிக்காமல் தனது சட்டைப் பையிலிருந்து சிறிய பேணா வடிவிலான கத்தியை எடுத்தவன், அழகிக்கு ராஜன் அணிந்திருந்த அந்த பச்சை வண்ண மோதிரத்தை அறுக்க ஆரம்பித்தான். மோதிரத்தை அறுக்கையில் அந்த கத்தி அழகியின் கைகளையும் நன்றாகவேப் பதம் பார்த்தது.
பதினைந்து நிமிடப் போராட்டதிற்கு பிறகு வெற்றிகரமாக அந்த மோதிரத்தை எடுத்தவன், "சாரி அண்ட் தேங்க்ஸ்" என்று அழகியிடம் கூறிவிட்டு அந்த மோதிரத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றான் பிளாக் ஸ்பார்க்.
கைகளில் இருந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்த அழகியை, அவன் மனிதியாக கூட கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன் வேலை முடிந்தது என்னும் ரீதியில் கிளம்பிச் சென்றிருந்தான் அவன்.
கைகள் வழியாக ரத்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே செல்ல, லேசாக கண்கள் இருட்ட துடங்கியது அழகிற்கு.
மயங்கிவிட கூடாது! கூடாது! என்று தனக்குள்ளேயே உருப்போட்டவாறே அமர்ந்திருந்தாள் அவள்.