அத்தியாயம் 16
டைரியின் பக்கங்கள்:
“ராஜ்ஜ்ஜ்…”
“சொல்லு பேபி…”
“எழுதுங்க ராஜ்…”
“என்ன எழுதணும்டா…”
“டைரி தான்…”
“நாளைக்கு எழுதுறேன் பேபி… லவ்வர் பக்கத்தில் இருக்கும் போது எவனாவது அந்த வாய்பை விட்டுவிட்டு டைரி எழுதுவானா??”
“அப்போ நான் பாசமில்லையா?? நா சொன்னா பண்ண மாட்டிங்களா??”
“ச்சே… ச்சே… என் தேவதை குட்டி சொல்லி நான் அதை பண்ணாமல் இருப்பேன்னா… அதுவும் இன்றைக்கு வேற நமக்கு ரொம்பவே ஸ்பெஷலானா நாள். என் தேவதை வேற பக்கத்தில் இருக்கும் போது. எப்படி இந்த அழகான தருணத்தை மிஸ் பண்ணுவேன். நிச்சயம் பதிவு பண்ணியே ஆகவேண்டுமே …”
பிப்ரவரி 14, 2015
இன்று காதலர் தினம்… காதலர்களுக்காகவே ஆன தினம். இந்த நாள் பொதுவாகவே எல்லாக் காதலர்களுக்கு மிகவும் ஸ்பெசலான நாளாக இருந்தாலும், எனக்கும் என் தேவதைக்கும் இது இன்னும் இன்னும் ஸ்பெசலான நாள்.
"ராஜ்! நீங்க இன்னைக்கு ஃபிரீயா??" என்ற என் தேவதையின் அழைப்பில் துடங்கியது இன்றைய மாலைப் பொழுதிற்கான இன்ப நேரம்.
இன்று காலையில் இருந்தே, நானும் சரி! அவளும் சரி! நேரில் என்ன? ஃபோனில் கூட பேசிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இருவரும் வேலையில் படு பிஸி இன்று.
ஆனால், இதற்க்காகவெல்லாம் எப்படி இன்றைய கொண்டங்களை விடுவது? அதுவும் இது எங்க தல லவ்வர்ஸ் டே வேற! ஜாமாய்சிடமும் இல்லையா? அதனால் தான் நான் ஒரு பிளான் போட்டு, என் தேவதையை சர்ப்ரைஸ் செய்ய எண்ணினேன். ஆனால், என்னச் செய்வது? எப்படிச் செய்வது? என்பதில் எனக்கே இன்னமும் சரியான தெளிவில்லை.
எனவே, என் தேவதையின் கேள்விக்கான விடையாக, "எஸ் மதிமா! நா இப்போ ஃப்ரி தான்டா" என்றேன் கூலாக இருப்பது போல் காட்டிக்கொண்டு. ஆனால், உள்ளுக்குள் மூளை அதுப்பாட்டிற்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருந்தது.
“அப்போ! நாம ரெண்டு பேரும் ஒரு லாங் டிரைவ் போகலாமா? இன்னைக்கு வேற ஸ்பெஷல் டே.. சோ, அப்படியே ஒரு ஸ்பெஷல் டின்னர் முடிச்சிட்டு… பீச்சுக்கும் போகலாம் ராஜ்” என்று குதுகலமாய் என் தேவதை கேட்கவும். அதற்கு மறுப்பேனா நான்??
“போகலாமாவா?? கண்டிப்பா போறோம். எனக்கு ஒரு அரை மணிநேரம் மட்டும் டயம் கொடுப் பேபி… நானே உன்னை ஹாஸ்டல வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” என்றேன் புன்னையுடன். என் தேவதைக்கான இன்றைய என் சர்ப்ரைஸ் என்னவென்று முடிவெடுத்துவிட்ட மகிழ்ச்சியில்.
சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில், செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் செய்து முடித்துவிட்டு. என் தேவதையை அழைக்க அவள் ஹாஸ்டலிற்கு சென்றேன்.
செவ்வூத நிறத்தில் புடவை கட்டி, தேரென நடந்து வந்த என் தேவதையை பார்த்து அசந்துப்போய் அப்படியே அசைவற்று நின்ற என்னிடம் நெருங்கி வந்து, என் முகத்தின் முன் கைகளை ஆட்டி என்னை நினைவிற்கு கொண்டு வந்தாள் என் தேவதை. புடவையில் அவளை தூரத்தில் பார்த்தப்போதே மயங்கியவன். அந்த மதிமுகத்தை அருகில் கண்டதும், என்னையே அறியாமல் என் இதழ்கள் பாட ஆரம்பித்தன என் தேவதையைப் பற்றி,
‘ தேவதை அவளொரு தேவதை…
அழகிய பூமுகம் காணவே …
ஆயுள் தான் போதுமோ!!!
காற்றிலே அவளது வாசனை …
அவளிடம் யோசினை கேட்டு தான்...
பூக்களும் பூக்குமோ !!! ’
“அடடா! சார் அவரோட தேவதையைப் பார்த்ததும் தேவதைப் பாட்டேயே பாடிடாரே!!” என்று கூறிவிட்டு என் முகம் பார்த்து நின்றாள் குறுஞ்சிரிப்புடன்.
அவளின் சிரிப்பைக் கண்டதும் தான், அவள் தேவதை என்று தன்னையேக் கூறிக்கொண்டது நியாபகம் வந்தது எனக்கு.
“ஹே! இப்போ என்ன சொன்ன பேபி" என்றேன் ஆச்சரிய குரலில்.
"ஒன்னுமில்லை.. நா உங்க தேவதைன்னு சொன்னேன்.. வண்டியை எடுங்க"
"உனக்கு எப்படித் தெரியும்.. நீ தான் என் தேவதைன்னு??" என்றக் கேள்வியை கேட்டதும் தான், எனக்கே ஞாபகம் வந்தது. என் டைரியை காணாமல் நா தேடித் திரிந்தது.
"எங்கே என் டைரி??"
"என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும் ராஜ்ஜ்ஜ்ஜ்…" என்றவள் ரகம் பாட.
"சரி! நானும் பாக்குறேன் எங்கே தான் அதை நீ வச்சி இருக்கன்னு" என்றேன் சிரிப்புடன்.
"அதை அப்புறம் பார்பீங்க... இப்போ முதல்ல ஒழுங்கா ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க"
"எப்படியும் என்கிட்ட தான் கடைசியா அது வரும்" என்றுவிட்டு வண்டியை கிளப்பினேன்.
இருவரும் நேரே சென்றது முதலில் பீச்சிற்குத் தான். அதுவொரு பிரைவேட் பீச். பொது மக்கள் வர அங்கு அனுமதியில்லை.. அங்கு வரவேண்டும் என்றால் வருவதற்கு முன்பே நம் பெயரில் அந்த இடத்தைப் பதிவுச் செய்திருக்க வேண்டும்.
அங்கு சும்மாவே நிரம்பி வழியும் கூட்டம் இருக்கும்.. இன்றோ காதலர் தினம்… கேட்கவா வேண்டும்… நான் பதிவு செய்யும் முன்னமே அனைத்து இடங்களும் புக் செய்யப்பட்டிருக்க. என் நண்பர்களின் நண்பர்கள் மூலம் பேசி எங்களுக்கான இடத்தைப் பதிவு செய்திருந்தேன் நான்.
வண்டியில் இருந்து இறங்கி, மெல்ல முன்னோக்கி இருவரும் நடக்க.. நா முன்னமே ஏற்பாடு செய்து வைத்ததுப் போல் அங்கே பிங்க்கும் வெள்ளையும் கலந்த வெல்வெட் துணிகளும், பிங்க் மற்றும் வெள்ளை நிறப் பூக்களாலும் அமைக்கப் பட்டிருந்த ஆர்ச் போல் வேலைப்பாடுகளுடன் இருந்த இடத்தை நோக்கி என் தேவதையை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும், எங்களைச் சுற்றி அமைக்கப் பட்டிருந்த இதய வடிவிலான மின்விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்தன… அப்போது, என் தேவதையின் முகத்தில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு... இன்னமும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
இருவரும் அந்த ஆர்ச் அருகில் சென்றதும்.. எங்களை சுற்றி அதே பிங்க் மற்றும் வெள்ளை நிற பலூன்கள் பறந்தன. இதுவும் என் தேவதைக்கு ஆச்சரியம் தான்… இத்தனை ஏற்பாடுகளை அவள் எதிர்ப் பார்த்திருக்கவில்லை போலும். அந்த பலூன்களைக் கண்டுக் குழந்தையாய் ஆர்ப்பரித்தவளை வாஞ்சையுடன் பார்த்திருத்தேன் நான்.
"ராஜ்! இவ்வளவும் எனக்காக ஏற்பாடு பண்ணுனீங்களா?? அதுவும் இவ்வளவு கம்மியான நேரத்துல…" என்று கேட்ட என் தேவதையின் விழிகள் இரண்டும் கணிந்திருந்தன.
மெல்ல அவள் முன் மண்டியிட்ட நான், " மதிமா! மை ஒன்லி ஏஞ்சல்! எனக்கு ப்ரொபோஸ் பண்ணத் தெரியாது… அதுனால, எனக்கு தெரிந்த வகையில் தெரிந்த மாதிரி பண்ணுறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. உன்னைப் பார்த்த அந்த செகண்ட்ல இருந்து உன்னை மனசார விரும்புறேன். ரெண்டு மனமும் புரிந்து இணைந்த பிறகு எதுக்கு அதை சொல்லிக்கிட்டுன்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் என் காதலை உன்கிட்ட சொன்னதில்லை. ஆனா, நாம எந்த அளவுக்கு ஒருத்தரை நேசிக்கிறோமோ … அதே அளவிற்கு நாமலும் அவங்களால நேசிக்க.. படுறோம்னு தெரியும் போது அப்படியொரு சந்தோசம் வரும். அந்த சந்தோஷத்தை என் தேவதையும் அனுபவிக்கணும்னு நினைச்சேன் அதான் இந்த ப்ரொபோசல்" என்று கூறியப் படியே என் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய இதய வடிவிலான பெட்டியை எடுத்து, அதனுள் இருந்த RM என்ற எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியிலான மோதிரத்தை கையில் எடுத்து, என் தேவதையின் விழிகளை நோக்கி ,
"இனி என் வாழ்க்கையில் நா கடக்கப் போற எல்லா சுகத் துக்கத்திலும் என் கூடவே இருந்து.. நா தப்பு செய்யும் போது எல்லாம்.. இதே மாதிரி என்னைக் கண்டிச்சு .. ஒழுங்கப் படுத்தி .. என் கூட சேர்ந்து பிளாக் காபி குடிச்சு…. அந்த மாலைப் பொழுதை ரசிச்சு.. இனி வாழப் போற வாழ்நாள் பூராவும் என்கூடவே பயணிச்சு … என் வாழ்க்கை… என் வீடு .. என்ற சொற்களை எல்லாம் இனி நம் வாழ்க்கை , நம் வீடு என்று மாற்றி ஒரு அழகான எதிர்காலத்தை என்னோட பகிர்ந்துக்க வருவியா மதிமா.." என்றேன் ஆழ்ந்த குரலில்.
என் ஒவ்வொரு வார்த்தைக்கும் என் தேவதையின் கண்களின் இருந்து கண்ணீர் வழிந்தது. சோகத்தில் மட்டும் தான் கண்ணீர் வருமா என்ன?? சந்தோஷத்திலும் வரும் என்று கூறாமல் கூறியது என் தேவதையின் கண்ணீர் துளிகள்.
"சம்மதமா??" என்ற என் கேள்விக்கு விடையாக, கண்களில் கண்ணீரும், இதழ்களில் புன்னையுடனும் 'சம்மதம் ' என்று புன்னகைத்தாள் என் தேவதை.
நான் கையில் வைத்திருந்த மோதிரத்தை, என் தேவதையின் பட்டுப்போன்ற விரலில் அணிவித்து விட்டு.. அந்த அழகிய விரல்களில் என் இதழ்களைப் பதித்து.. மென்மையாக முத்தமிட்டப் படியே "ஐ லவ் யூ பேபி" என்று என் காதலை தெரிவித்தேன் மென்மையாக.
நா எழவும், என் முன் மண்டியிட்ட என் தேவதையோ, நானே எதிர்பார்க்கா வண்ணம் அவள் பையினும் இருந்து, நான் வாங்கியது போலவே அதே RM என்ற எழுத்துக்கள் இணைந்தது போன்ற வேலைப்பாடுகள் கொண்ட மோதிரத்தை எடுத்தவள்,
"உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நா நினைச்சேன்.. ஆனா, நீங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க ராஜ்.. நீங்க சொன்ன அனைத்துமா இருந்து என் வாழ்க்கை முழுமையும் நீங்க வேணும்னு ஆசைப் படுறேன் ராஜ்… நிறைய நிறைய உங்களை காதலிச்சு.. சந்தோஷமா இனி வாழவிருக்கும் வாழ்க்கை முழுசும் உங்க காதலோட வாழனும்னு நினைக்குறேன்… லவ் யூ எல்லாம் ரொம்ப சுலபமான வார்த்தைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனா, அந்த மூணு வார்த்தையை சொல்ல நமக்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கு… இனியும் தாமதிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்... " என்றவள். என் விரலில் மோதிரத்தை அணிவிதந்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டவள், நா இத்தனை நாட்களாக கேட்க தவிக்கும் அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையை உதிர்த்தாள் என் தேவதை.
"ஐ லவ் யூ ராஜ்" என்ற அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் வானத்தில் பார்க்கின்ற உணர்வு எனக்கு.
அதன் பிறகு இருவரும் வெகு நேரம் அந்த கடலைப் பார்த்தவாறே மணலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
என் தேவதைக்கு என்னத் தோன்றியதோ என்னமோ, திடிரென்று என்னிடம் திரும்பியவள் " ராஜ்! எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்.. வரும் போது பாடுனீங்களே .. அவ்வளவு அழகு உங்க குரல்.. அந்த குரல்ல எனக்காக ஒரு பாட்டு.. ப்ளீஸ்" என்று ஆவலே உருவாக என் தேவதை கேட்கும் போது பாடாமல் இருப்பேனா நான்.
முதன் முதலில் என் தேவதையை நான் சந்தித்த அன்று அவள் பாடிய அதே பாடலை அவளுக்காக மீண்டும் இன்று நான் பாடினேன்.
'வாழ்க்கை என்பது என்ன...
பள்ளிபாடமுமல்ல...
கற்று கொண்டதை மெல்ல முன்னேற...
காதல் என்பது என்ன…
புள்ளி கோலமுமல்ல...
காற்றில் கலையும் போது தள்ளாட...
எங்கோ எங்கோ ஓர் உலகம்...
உனக்காக காத்து கிடக்கும்…
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே…
நதி காயலாம்…
நினைவில் உள்ள காட்சி காயுமா???'
நான் பாடி முடிக்கவும், மிகுந்த மகிழ்ச்சிழியுடன் என் கன்னத்தில் முத்தமிட்ட என் தேவதை,
"இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ராஜ்! லைக் அ தாலாட்டு போர் மீ.. அதிலும் அந்த வரிகள் எனக்கே எனக்காகவே எழுதின மாதிரி தோன்றும்… இந்த பாட்டை எனக்காக பாடினதுக்காக... உம்மா.." என்றவள் மீண்டும் என் கன்னங்களில் முத்தமிட்டாள்.
ஏதோ ஜென்மம் பயன் அடைந்துவிட்ட திருப்தி எனக்கு என் தேவதை தந்த அந்த ஒற்றை முத்ததில்.
நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றும் என் தேவதை என்னுடன் என் வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்யப் பட இருவரும் வீட்டை நோக்கி சென்றோம்.
வீட்டினுள் சென்றதுமே, காதலர் தினப் பரிசாக என்னுடைய டைரியை எனக்கே கொடுத்தவள், அந்த டைரியில் இன்றைய நிகழ்வுகளை இப்போதே அவள் முன்னே எழுத வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டாள்.
அவள் சொல்லியதற்காக இங்கு நான் மாய்ந்து மாய்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்க , என் தேவதையோ எனக்கும் அவளுக்குமாக ரோட்டில் விற்கும் தள்ளுவண்டிக் குல்பியை வாங்கி வர சென்றுவிட்டாள்.
சில உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.. மறக்கவும் முடியாதவை. அதைப் போன்ற உணர்வு தான் எங்களுக்கு இன்று. அதே போல் இந்த நாள் வாழ்க்கை முழுவதும் எங்களால் மறக்க முடியாத நாளும் கூட.
இந்த நிமிடம் இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
இந்த இனிய உணர்வை இன்னும் அதிகமாக உணரவைக்க என் தேவதையும் இருக்கிறாள் என்னுடன் .
படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???
டைரியின் பக்கங்கள்:
“ராஜ்ஜ்ஜ்…”
“சொல்லு பேபி…”
“எழுதுங்க ராஜ்…”
“என்ன எழுதணும்டா…”
“டைரி தான்…”
“நாளைக்கு எழுதுறேன் பேபி… லவ்வர் பக்கத்தில் இருக்கும் போது எவனாவது அந்த வாய்பை விட்டுவிட்டு டைரி எழுதுவானா??”
“அப்போ நான் பாசமில்லையா?? நா சொன்னா பண்ண மாட்டிங்களா??”
“ச்சே… ச்சே… என் தேவதை குட்டி சொல்லி நான் அதை பண்ணாமல் இருப்பேன்னா… அதுவும் இன்றைக்கு வேற நமக்கு ரொம்பவே ஸ்பெஷலானா நாள். என் தேவதை வேற பக்கத்தில் இருக்கும் போது. எப்படி இந்த அழகான தருணத்தை மிஸ் பண்ணுவேன். நிச்சயம் பதிவு பண்ணியே ஆகவேண்டுமே …”
பிப்ரவரி 14, 2015
இன்று காதலர் தினம்… காதலர்களுக்காகவே ஆன தினம். இந்த நாள் பொதுவாகவே எல்லாக் காதலர்களுக்கு மிகவும் ஸ்பெசலான நாளாக இருந்தாலும், எனக்கும் என் தேவதைக்கும் இது இன்னும் இன்னும் ஸ்பெசலான நாள்.
"ராஜ்! நீங்க இன்னைக்கு ஃபிரீயா??" என்ற என் தேவதையின் அழைப்பில் துடங்கியது இன்றைய மாலைப் பொழுதிற்கான இன்ப நேரம்.
இன்று காலையில் இருந்தே, நானும் சரி! அவளும் சரி! நேரில் என்ன? ஃபோனில் கூட பேசிக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு இருவரும் வேலையில் படு பிஸி இன்று.
ஆனால், இதற்க்காகவெல்லாம் எப்படி இன்றைய கொண்டங்களை விடுவது? அதுவும் இது எங்க தல லவ்வர்ஸ் டே வேற! ஜாமாய்சிடமும் இல்லையா? அதனால் தான் நான் ஒரு பிளான் போட்டு, என் தேவதையை சர்ப்ரைஸ் செய்ய எண்ணினேன். ஆனால், என்னச் செய்வது? எப்படிச் செய்வது? என்பதில் எனக்கே இன்னமும் சரியான தெளிவில்லை.
எனவே, என் தேவதையின் கேள்விக்கான விடையாக, "எஸ் மதிமா! நா இப்போ ஃப்ரி தான்டா" என்றேன் கூலாக இருப்பது போல் காட்டிக்கொண்டு. ஆனால், உள்ளுக்குள் மூளை அதுப்பாட்டிற்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருந்தது.
“அப்போ! நாம ரெண்டு பேரும் ஒரு லாங் டிரைவ் போகலாமா? இன்னைக்கு வேற ஸ்பெஷல் டே.. சோ, அப்படியே ஒரு ஸ்பெஷல் டின்னர் முடிச்சிட்டு… பீச்சுக்கும் போகலாம் ராஜ்” என்று குதுகலமாய் என் தேவதை கேட்கவும். அதற்கு மறுப்பேனா நான்??
“போகலாமாவா?? கண்டிப்பா போறோம். எனக்கு ஒரு அரை மணிநேரம் மட்டும் டயம் கொடுப் பேபி… நானே உன்னை ஹாஸ்டல வந்து பிக்கப் பண்ணிக்குறேன்” என்றேன் புன்னையுடன். என் தேவதைக்கான இன்றைய என் சர்ப்ரைஸ் என்னவென்று முடிவெடுத்துவிட்ட மகிழ்ச்சியில்.
சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில், செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் செய்து முடித்துவிட்டு. என் தேவதையை அழைக்க அவள் ஹாஸ்டலிற்கு சென்றேன்.
செவ்வூத நிறத்தில் புடவை கட்டி, தேரென நடந்து வந்த என் தேவதையை பார்த்து அசந்துப்போய் அப்படியே அசைவற்று நின்ற என்னிடம் நெருங்கி வந்து, என் முகத்தின் முன் கைகளை ஆட்டி என்னை நினைவிற்கு கொண்டு வந்தாள் என் தேவதை. புடவையில் அவளை தூரத்தில் பார்த்தப்போதே மயங்கியவன். அந்த மதிமுகத்தை அருகில் கண்டதும், என்னையே அறியாமல் என் இதழ்கள் பாட ஆரம்பித்தன என் தேவதையைப் பற்றி,
‘ தேவதை அவளொரு தேவதை…
அழகிய பூமுகம் காணவே …
ஆயுள் தான் போதுமோ!!!
காற்றிலே அவளது வாசனை …
அவளிடம் யோசினை கேட்டு தான்...
பூக்களும் பூக்குமோ !!! ’
“அடடா! சார் அவரோட தேவதையைப் பார்த்ததும் தேவதைப் பாட்டேயே பாடிடாரே!!” என்று கூறிவிட்டு என் முகம் பார்த்து நின்றாள் குறுஞ்சிரிப்புடன்.
அவளின் சிரிப்பைக் கண்டதும் தான், அவள் தேவதை என்று தன்னையேக் கூறிக்கொண்டது நியாபகம் வந்தது எனக்கு.
“ஹே! இப்போ என்ன சொன்ன பேபி" என்றேன் ஆச்சரிய குரலில்.
"ஒன்னுமில்லை.. நா உங்க தேவதைன்னு சொன்னேன்.. வண்டியை எடுங்க"
"உனக்கு எப்படித் தெரியும்.. நீ தான் என் தேவதைன்னு??" என்றக் கேள்வியை கேட்டதும் தான், எனக்கே ஞாபகம் வந்தது. என் டைரியை காணாமல் நா தேடித் திரிந்தது.
"எங்கே என் டைரி??"
"என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும் ராஜ்ஜ்ஜ்ஜ்…" என்றவள் ரகம் பாட.
"சரி! நானும் பாக்குறேன் எங்கே தான் அதை நீ வச்சி இருக்கன்னு" என்றேன் சிரிப்புடன்.
"அதை அப்புறம் பார்பீங்க... இப்போ முதல்ல ஒழுங்கா ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க"
"எப்படியும் என்கிட்ட தான் கடைசியா அது வரும்" என்றுவிட்டு வண்டியை கிளப்பினேன்.
இருவரும் நேரே சென்றது முதலில் பீச்சிற்குத் தான். அதுவொரு பிரைவேட் பீச். பொது மக்கள் வர அங்கு அனுமதியில்லை.. அங்கு வரவேண்டும் என்றால் வருவதற்கு முன்பே நம் பெயரில் அந்த இடத்தைப் பதிவுச் செய்திருக்க வேண்டும்.
அங்கு சும்மாவே நிரம்பி வழியும் கூட்டம் இருக்கும்.. இன்றோ காதலர் தினம்… கேட்கவா வேண்டும்… நான் பதிவு செய்யும் முன்னமே அனைத்து இடங்களும் புக் செய்யப்பட்டிருக்க. என் நண்பர்களின் நண்பர்கள் மூலம் பேசி எங்களுக்கான இடத்தைப் பதிவு செய்திருந்தேன் நான்.
வண்டியில் இருந்து இறங்கி, மெல்ல முன்னோக்கி இருவரும் நடக்க.. நா முன்னமே ஏற்பாடு செய்து வைத்ததுப் போல் அங்கே பிங்க்கும் வெள்ளையும் கலந்த வெல்வெட் துணிகளும், பிங்க் மற்றும் வெள்ளை நிறப் பூக்களாலும் அமைக்கப் பட்டிருந்த ஆர்ச் போல் வேலைப்பாடுகளுடன் இருந்த இடத்தை நோக்கி என் தேவதையை அழைத்துச் சென்றேன்.
அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும், எங்களைச் சுற்றி அமைக்கப் பட்டிருந்த இதய வடிவிலான மின்விளக்குகள் ஒவ்வொன்றாக ஒளிர்ந்தன… அப்போது, என் தேவதையின் முகத்தில் ஏற்பட்ட அந்த பிரமிப்பு... இன்னமும் என் கண்ணுக்குள் நிற்கிறது.
இருவரும் அந்த ஆர்ச் அருகில் சென்றதும்.. எங்களை சுற்றி அதே பிங்க் மற்றும் வெள்ளை நிற பலூன்கள் பறந்தன. இதுவும் என் தேவதைக்கு ஆச்சரியம் தான்… இத்தனை ஏற்பாடுகளை அவள் எதிர்ப் பார்த்திருக்கவில்லை போலும். அந்த பலூன்களைக் கண்டுக் குழந்தையாய் ஆர்ப்பரித்தவளை வாஞ்சையுடன் பார்த்திருத்தேன் நான்.
"ராஜ்! இவ்வளவும் எனக்காக ஏற்பாடு பண்ணுனீங்களா?? அதுவும் இவ்வளவு கம்மியான நேரத்துல…" என்று கேட்ட என் தேவதையின் விழிகள் இரண்டும் கணிந்திருந்தன.
மெல்ல அவள் முன் மண்டியிட்ட நான், " மதிமா! மை ஒன்லி ஏஞ்சல்! எனக்கு ப்ரொபோஸ் பண்ணத் தெரியாது… அதுனால, எனக்கு தெரிந்த வகையில் தெரிந்த மாதிரி பண்ணுறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.. உன்னைப் பார்த்த அந்த செகண்ட்ல இருந்து உன்னை மனசார விரும்புறேன். ரெண்டு மனமும் புரிந்து இணைந்த பிறகு எதுக்கு அதை சொல்லிக்கிட்டுன்னு நினைச்சு தான் இவ்வளவு நாள் என் காதலை உன்கிட்ட சொன்னதில்லை. ஆனா, நாம எந்த அளவுக்கு ஒருத்தரை நேசிக்கிறோமோ … அதே அளவிற்கு நாமலும் அவங்களால நேசிக்க.. படுறோம்னு தெரியும் போது அப்படியொரு சந்தோசம் வரும். அந்த சந்தோஷத்தை என் தேவதையும் அனுபவிக்கணும்னு நினைச்சேன் அதான் இந்த ப்ரொபோசல்" என்று கூறியப் படியே என் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய இதய வடிவிலான பெட்டியை எடுத்து, அதனுள் இருந்த RM என்ற எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைந்த மாதிரியிலான மோதிரத்தை கையில் எடுத்து, என் தேவதையின் விழிகளை நோக்கி ,
"இனி என் வாழ்க்கையில் நா கடக்கப் போற எல்லா சுகத் துக்கத்திலும் என் கூடவே இருந்து.. நா தப்பு செய்யும் போது எல்லாம்.. இதே மாதிரி என்னைக் கண்டிச்சு .. ஒழுங்கப் படுத்தி .. என் கூட சேர்ந்து பிளாக் காபி குடிச்சு…. அந்த மாலைப் பொழுதை ரசிச்சு.. இனி வாழப் போற வாழ்நாள் பூராவும் என்கூடவே பயணிச்சு … என் வாழ்க்கை… என் வீடு .. என்ற சொற்களை எல்லாம் இனி நம் வாழ்க்கை , நம் வீடு என்று மாற்றி ஒரு அழகான எதிர்காலத்தை என்னோட பகிர்ந்துக்க வருவியா மதிமா.." என்றேன் ஆழ்ந்த குரலில்.
என் ஒவ்வொரு வார்த்தைக்கும் என் தேவதையின் கண்களின் இருந்து கண்ணீர் வழிந்தது. சோகத்தில் மட்டும் தான் கண்ணீர் வருமா என்ன?? சந்தோஷத்திலும் வரும் என்று கூறாமல் கூறியது என் தேவதையின் கண்ணீர் துளிகள்.
"சம்மதமா??" என்ற என் கேள்விக்கு விடையாக, கண்களில் கண்ணீரும், இதழ்களில் புன்னையுடனும் 'சம்மதம் ' என்று புன்னகைத்தாள் என் தேவதை.
நான் கையில் வைத்திருந்த மோதிரத்தை, என் தேவதையின் பட்டுப்போன்ற விரலில் அணிவித்து விட்டு.. அந்த அழகிய விரல்களில் என் இதழ்களைப் பதித்து.. மென்மையாக முத்தமிட்டப் படியே "ஐ லவ் யூ பேபி" என்று என் காதலை தெரிவித்தேன் மென்மையாக.
நா எழவும், என் முன் மண்டியிட்ட என் தேவதையோ, நானே எதிர்பார்க்கா வண்ணம் அவள் பையினும் இருந்து, நான் வாங்கியது போலவே அதே RM என்ற எழுத்துக்கள் இணைந்தது போன்ற வேலைப்பாடுகள் கொண்ட மோதிரத்தை எடுத்தவள்,
"உங்களுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு நா நினைச்சேன்.. ஆனா, நீங்க என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க ராஜ்.. நீங்க சொன்ன அனைத்துமா இருந்து என் வாழ்க்கை முழுமையும் நீங்க வேணும்னு ஆசைப் படுறேன் ராஜ்… நிறைய நிறைய உங்களை காதலிச்சு.. சந்தோஷமா இனி வாழவிருக்கும் வாழ்க்கை முழுசும் உங்க காதலோட வாழனும்னு நினைக்குறேன்… லவ் யூ எல்லாம் ரொம்ப சுலபமான வார்த்தைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனா, அந்த மூணு வார்த்தையை சொல்ல நமக்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கு… இனியும் தாமதிக்க கூடாதுன்னு நினைக்கிறேன்... " என்றவள். என் விரலில் மோதிரத்தை அணிவிதந்துவிட்டு, என்னை அணைத்துக் கொண்டவள், நா இத்தனை நாட்களாக கேட்க தவிக்கும் அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையை உதிர்த்தாள் என் தேவதை.
"ஐ லவ் யூ ராஜ்" என்ற அந்த மந்திர வார்த்தைகளைக் கேட்டதும் வானத்தில் பார்க்கின்ற உணர்வு எனக்கு.
அதன் பிறகு இருவரும் வெகு நேரம் அந்த கடலைப் பார்த்தவாறே மணலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
என் தேவதைக்கு என்னத் தோன்றியதோ என்னமோ, திடிரென்று என்னிடம் திரும்பியவள் " ராஜ்! எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்.. வரும் போது பாடுனீங்களே .. அவ்வளவு அழகு உங்க குரல்.. அந்த குரல்ல எனக்காக ஒரு பாட்டு.. ப்ளீஸ்" என்று ஆவலே உருவாக என் தேவதை கேட்கும் போது பாடாமல் இருப்பேனா நான்.
முதன் முதலில் என் தேவதையை நான் சந்தித்த அன்று அவள் பாடிய அதே பாடலை அவளுக்காக மீண்டும் இன்று நான் பாடினேன்.
'வாழ்க்கை என்பது என்ன...
பள்ளிபாடமுமல்ல...
கற்று கொண்டதை மெல்ல முன்னேற...
காதல் என்பது என்ன…
புள்ளி கோலமுமல்ல...
காற்றில் கலையும் போது தள்ளாட...
எங்கோ எங்கோ ஓர் உலகம்...
உனக்காக காத்து கிடக்கும்…
நிகழ்காலம் நதியை போல...
மெல்ல நகர்ந்து போகுதே…
நதி காயலாம்…
நினைவில் உள்ள காட்சி காயுமா???'
நான் பாடி முடிக்கவும், மிகுந்த மகிழ்ச்சிழியுடன் என் கன்னத்தில் முத்தமிட்ட என் தேவதை,
"இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ராஜ்! லைக் அ தாலாட்டு போர் மீ.. அதிலும் அந்த வரிகள் எனக்கே எனக்காகவே எழுதின மாதிரி தோன்றும்… இந்த பாட்டை எனக்காக பாடினதுக்காக... உம்மா.." என்றவள் மீண்டும் என் கன்னங்களில் முத்தமிட்டாள்.
ஏதோ ஜென்மம் பயன் அடைந்துவிட்ட திருப்தி எனக்கு என் தேவதை தந்த அந்த ஒற்றை முத்ததில்.
நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தினால், இன்றும் என் தேவதை என்னுடன் என் வீட்டிலேயே இருப்பதாக முடிவு செய்யப் பட இருவரும் வீட்டை நோக்கி சென்றோம்.
வீட்டினுள் சென்றதுமே, காதலர் தினப் பரிசாக என்னுடைய டைரியை எனக்கே கொடுத்தவள், அந்த டைரியில் இன்றைய நிகழ்வுகளை இப்போதே அவள் முன்னே எழுத வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் இட்டாள்.
அவள் சொல்லியதற்காக இங்கு நான் மாய்ந்து மாய்ந்து டைரி எழுதிக் கொண்டிருக்க , என் தேவதையோ எனக்கும் அவளுக்குமாக ரோட்டில் விற்கும் தள்ளுவண்டிக் குல்பியை வாங்கி வர சென்றுவிட்டாள்.
சில உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.. மறக்கவும் முடியாதவை. அதைப் போன்ற உணர்வு தான் எங்களுக்கு இன்று. அதே போல் இந்த நாள் வாழ்க்கை முழுவதும் எங்களால் மறக்க முடியாத நாளும் கூட.
இந்த நிமிடம் இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான மனிதன் நானாக தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
இந்த இனிய உணர்வை இன்னும் அதிகமாக உணரவைக்க என் தேவதையும் இருக்கிறாள் என்னுடன் .
படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இந்த கருத்து திரியில் ஜொல்லுங்க மக்களே ???